Saturday, October 28, 2017

என்ன செய்யலாம் இவர்களை எல்லாம் கொன்று விடலாமா? கவிஞர் தணிகை

என்ன செய்யலாம் இவர்களை எல்லாம் கொன்று விடலாமா? கவிஞர் தணிகை
Related image



1. சாலையில் போய்கொண்டே எச்சில் துப்புவார்களை தினமும் பார்க்கிறேன் சேலம் 5 வழிச் சாலையில் ....

2. பேருந்தில் வாசல் படிக்கட்டில் நின்றபடியே நடத்துனர் சாலையில் உமிழ்ந்தபடியே இருக்க பேருந்து ஊர்கிறது

3. துப்புரவு பணியாளர் குப்பையைக் கூட்டி... பெண் தான்.... பெரும் சாக்கடைக்கு வைக்கப்பட்டுள்ள மழை நீர் புக வேண்டிய மூடப்பட்ட கான்க்ரீட் பெரும் துளையுள் தள்ளுகிறார் தினமுமே...

4. பெரும்பாலானவர் ஆங்காங்கே குப்பையை , காகிதங்களை, அதுவும் பிளாஸ்டிக் காகித நெகிழிகளை ஆங்காங்கே விசிறி எறிந்து மறந்து போய்க் கொண்டே இருக்கிறார் அதனால் என்ன விளைவுகள் என அறிய, புரிய, தெரிய நேரம் ஒதுக்காமல்...

5. விற்காத ஃப்ரூட்டி காலாவதியான ஒரு லிட்டர் பாட்டில்களை கேஸ் கேஸாக பெரும் அட்டைபெட்டி பேக்கிங்களுடன் சின்ன யானை வண்டியில் வந்து எமது புதுசாம்பள்ளி சுடுகாட்டில் கழட்டி ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள்

6. அந்த சுடுகாடு எல்லாம் ஒரே குப்பைகளின் நகரமாக நரகாக‌  எங்கு எப்போது எதுவானாலும் பஞ்சாயத்து, ஊர், தனியார் இப்படி பாகுபாடின்றி எல்லாக் குப்பைகளுமே ஏற்கும் ஒரு குப்பை மாநகராக நாய்களுக்கு ஏற்ற இடமாக மாறி விடச் செய்துவிட்டார்கள்

7. அது அதிகாலை அழகிய விடியற்காலம் ஆறுமணிதான் கடந்து இருக்கும் அதற்குள் வாயில் துர்நாற்றத்துடன் பீடியை பிடி பிடி என்றும் சிகரெட்டை திகட்டாத அணயாமல் சுடராக புகையை சுவாசித்து அனைவரும் சந்திக்கும் பொது இடம் பற்றிய துளி சிந்தனையுமின்றி அவர்களும் கெட்டு அடுத்தவரையும் கெடுக்கிறார்களே...

8.தினமும் ஒரு நாள் காலை ஒருவர் படித்தவராக, பணி இருப்பாராக பார்வைக்குத் தெரிவார், ஒரு ஒயர்கூடையுடன் பால் வாங்க வாயில் பிரஸ் வைத்து பல் (விளக்க சரியாகத் தெரிந்து கொண்டாரா...ம்..கேட்கக் கூடாது) விளக்கியபடியே அந்த பேஸ்ட் எச்சிலை சாலையில் ஆங்காங்கே துப்பியபடியே வருவார்... துப்பியபடியே சென்று பாலும் வாங்குவார் மறுபடியும் துப்பிக் கொண்டே புறப்படுவார், வீட்டிலிருந்து பால் வாங்கி வரும் வரை அதற்குள் பல் துலக்கி விடும் திட்ட மிட்ட பிழைப்பாம்...

9. சாலை என்றும் பொது இடம் என்றும் பாராமல் கண்ட இடத்தில் எல்லாம் சிறு நீர் கழிக்கும், மலம் கழிக்கும் ஆண்களும் பெண்களும், குழந்தைகளை கழிக்க வைக்கும் பெற்றோரும்...

 10. அதே போல பொதுக்கழிப்பறைகளை உபயோகித்து விட்டு சுத்தம் செய்யாமல் சென்று பழகிடும் விஷக்கிருமிகள், பொது இலவசக் கழிப்பறைகள் என சொல்லிக் கொண்டு அரசு பராமரிப்பே செய்யாத நோய் உற்பத்திச் சாலைகள்...அதை நடத்தும் ஆட்சிமுறைகள், ஆட்சியாளர்கள், மனிதர்களாக இல்லாத மிருகங்கள், எவரையுமே மனிதராக எண்ணாமல் பதர்களாக எண்ணும் அரசியலும், ஆட்சியும், நிர்வாகமும்...அதன் வழி சுயநலப்பயனடைவோரும்...

ஸ்வச் பாரதத்திற்கு ஸ்மிர்தா இராணி கூட்டி போஸ் கொடுத்த போட்டோ ரம்ப நன்றாக வந்திருந்தது , ஆண்டுகள் பல ஆயிற்று நாடும் குப்பையும் அசுத்தமும் மிக நன்றாக வளர்ந்திருக்கிறது...


இப்படியேதான் போய்க் கொண்டிருக்கிறது நம் நாடு,,,அதற்காக இவர்களை எல்லாம் என்ன கொன்று விட முடியுமா?

எமது ரோகினி நல்ல மாவட்ட ஆட்சித் தலைவர்தாம்,முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்த காரியத்தில் இது ஒன்று தமது மாவட்டத்திற்கு ஒரு நல்லவரை ஆட்சி நிர்வாகம் ஏற்கச் செய்திருக்கிறார். ஆனால் அவர் மட்டுமென்ன எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அது அரசு விழாவா கட்சி விழாவா எனத் தெரியாமலே பணி புரிந்துதான் ஆக வேண்டும்... மேலும் தீபாவளிக்கு டாஸ்மார்க் வசூல் ஏன் எதிர்பார்த்த இலக்கை எட்டாமல் சற்றும் எதிர்பாராமல் குடிகாரர் விழுவது போல் விழுந்தது என்றும் ஆராய வேண்டும், படு சுறு சுறுப்புதான்

ஆனால் ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள்  தனியார் நிறுவனங்கள் பேருந்து நிறுவனங்கள் எல்லாவற்றிலும் சென்று டெங்கு பரவ நீங்கள் எல்லாம் ஒத்துழைக்க வில்லை என பல இலட்சங்கள், பல ஆயிரங்கள் அபராதம் விதிக்க வேண்டும்... சகாயம் கோஆப் டெக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும்போது அது இலாபம் ஈட்டியதாம்... ஆனால் அது போல 64 பொது தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறதாம் அரசின் சரியான ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகளால்..

எனவே டாஸ்மார்க் மூலமும், இது போன்ற அபராதங்கள் மூலமும் நிதி திரட்ட ஆரம்பித்து விட்டார்கள்...டெங்குவின் உண்மைச் சேதியை திசை திருப்ப...அரசுப் பணியாளர்கள் சரியாக தம் பணியைச் செய்யாததாலே எல்லா அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் எல்லாம் ஏகப்பட்ட சுமக்க முடியா அழுக்கை, சுமையை வைத்துக் கொண்டு தனியார் மேல் மட்டும் நடவடிக்கைகள்...

இன்னும் 5 வழிச்சாலையில் ரத்னா காம்ப்ளக்ஸ் அருகே உள்ள பெரு வாய்க்கால் போன்ற சாக்கடையே இன்னும் குப்பைகளால் மூடி மேல் செடிகள் எல்லாம் முளைக்க ஆரம்பித்து விட்டன. ஆனால் அரசின் எந்த செயல்பாட்டையும் காணோம். இத்தனைக்கும் நான் எனது சொந்தக் காசில் ஒரு கடிதம் எழுதினேன் மாவட்ட ஆட்சியருக்கு அது அவரால் படிக்கப்பட்டதா அவருக்கு சேர்ந்ததா என்றே தெரியவில்லை....ஆனால் அந்த பெரும் சாக்கடை அப்படியே இருக்கிறது. சேலத்தின் இதயப்பகுதியில்

எவருமே அலுவலர்கள் நல்லவராக வந்தாலும் இவர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை எந்தரத்தனமாக அரசு என்ற பிரோக்கிரட் செட் அப்புக்குள் அழுத்தி மூழ்க அடித்து விடுவார்கள்...

ஆக அரசுப் பணியில் ஏகப்பட்ட ஊதியத்தில் பணி செய்துவரும் பணியாளர்களை, உடைய நிறுவனங்கள் எல்லாம் அப்படியே கிடக்க... தனியார் நிறுவனங்களில் மிகவும் சொற்ப ஊதியத்துக்கு பணி புரிவார் பணி செய்யும் இடங்களில் எல்லாம் இவர்கள் இப்படி அபராதம் விதிப்பது தனியார் நிறுவன முதலாளிகளை முறுக்கி விட்டு தமது நிறுவனத்தில் பணி புரியும் எளியவர்களை மேலும் மேலும் அடக்குமுறைக்கு உள்ளாவது இந்த ஆட்சியாளர்க்கு தெரியவில்லையா?

இவர்களால் ஒரு தொழிலாளிக்கு அவர் தனியாராக இருந்தாலும் வாழ்க்கை உத்தரவாதமாக குறைந்த பட்ச மாத ஊதியமாக 15,000 அல்லது 20,000 பெற்றுத் தர முடியுமா? பிறகு அவர் மட்டும் இந்த விலைவாசி உச்சத்தில் இருக்கும் காலக் கட்டத்தில் எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் எப்படி பிழைப்பர்>? இதெல்லாம் அரசுக்கும் நிர்வாகத்துக்கும் தெரியாதா?

மோடி மகராஜ் சொல்கிறார் இனி விலைவாசீ இறங்கும் என....கடவுளுக்கே இயற்கைக்கே வெளிச்சம்.

இவர்கள் டெங்குவின் இழப்பையும், சரக்கு மற்றும் சேவை வரியின் பாதிப்பையும் மெர்சல் போன்ற சினிமாபற்றி பேசி திசை திருப்புவதும், தனியார் நிறுவனங்களை பயமுறுத்தி அபராதம் விதிப்பதுமாக வேடிக்கை காட்டிக் கொண்டு வருகிறார்கள் ஊடகத்திற்கு பெரும் தீனிபோட்டு மக்களை எல்லாம் அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து எல்லாம் திசை திருப்ப....
Image result for spitters , smokers, drinkers, money swindlers in tamil nadu and india

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Lakshmanan Marimuthu

8:01 AM (7 hours ago)
to Chinnu, bcc: me

Translate message
Turn off for: Tamil
மோடியின் சாமர்த்தியம்
As Received:
ஊரான் வூட்டு நெய்யே... ஏம் 
பொண்டாட்டி கையே...
--------------------------------------------
டாட்டாவும்,அம்பானியும் 10 வருடங்கள் முன்பு சென்டரல் வங்கியில் 45 ஆயிரம் கோடி கடன் பெற்றனர்.
எதற்காகக் கடன் பெற்றார்கள்?
அணுமின் நிலையம் தொடங்குவதற்கு. எதற்காக? மின் உற்பத்தி செய்வதற்காக.
ஆனால் கடந்த பத்து வருடங்களாக தொடங்கவில்லை.
பத்துவருடமாக தொடங்காதவர் இப்போது தொடங்குகிறோம் என இருவரும் கூறுகிறார்கள்.
ஆனால் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஒரு டன் ரூபாய் 2500 க்கு தர வேண்டும் என கண்டிசன் போடுகிறார்கள்.
ஒரு டன் நிலக்கரி 25ஆயிரம் விலை இருக்கும்போது எப்படி 2500 க்கு கொடுப்பது என கோல் இந்திய சேர்மன் மறுத்துவிடுகிறார்.
உடனே பிரதமர் தலையிடுகிறார். பிரதமர் மோடி தலைமையில் டாட்டா அம்பானி ,கோல்இந்திய சேர்மன் பேச்சுவார்த்தை நடந்த்து.
உலகப் பணக்காரர்களுக்கு ஆதரவாக மோடி முடிவெடுத்தார். அதாவது இந்திய மக்கள் வரிப்பணத்தில் இயங்கும், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் ஒரு டன் நிலக்கிரியை 25ஆயிரத்திற்கு ஆஸ்திரேலியா,இந்தோனிசியா ஆகிய இரு நாடுகளிலிருந்து வாங்கி ரூபாய் 2500 க்கு டாட்டாவுக்கும், அம்பானிக்கும் கொடுப்பதாக.
மக்கள் வரிப்பணத்தை யாரிடமிருந்து பிடுங்கி ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி யாரிடம் கொடுக்கிறார் என்பதை இந்த நாட்டின் கோவணங்கட்டி விவசாயிகளும், நடுத்தர வர்க்க முழி பிதுங்கிகளும் தெரிந்து கொண்டீர்களா?
இத்தோடு கதை முடியவில்லை. இனிதான் இருக்கிறது உச்சகட்டம். அது என்னான்னு கேக்குறீங்களா? பொறுங்க... சொல்றேன்...
கோல் இந்தியா நிறுவனம் டாட்டாவுக்கும், அம்பானிக்கும் டன் ரூ.2500 விலையில் தருவதற்காக டன் ரூ.25000க்கு ஆஸ்திரேலியா, இந்தோனீசியா நாடுகளிலிருந்து வாங்குகிறதில்லையா?
அந்த ஆஸ்திரேலியா, இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளிலும் நிலக்கரியை வெட்டி எடுக்கிற கான்டிராக்ட் பணியை அம்பானியும்,டாட்டாவும் செய்கிறார்கள். இப்போது கூடுதலாக அதானியும் அதில் சேர்ந்துள்ளார்.
அதாகப்பட்டது, டாட்டா,அம்பானி ஆகிய இருவரும் வெட்டி எடுக்கிற நிலக்கரியையே, இருவரிடமிருந்துமே ஒரு டன் ரூபாய் 25ஆயிரத்திற்கு கோல் இந்தியா நிறுவனம் வாங்கி, அதே டாட்டா, அம்பானி முதலாளிகளுக்கு நிலக்கரியை ஒரு டன் ரூபாய் 2500-க்குக் கொடுக்கிறார்கள்.
ஊரான் வூட்டு நெய்யே, ஏம் பொண்டாட்டி கையேன்னு சொம்மாவா சொன்னாங்க?
100 வருசத்துல இந்தியப் பெருமுதலாளிகளோட சொத்து 26% உயர்ந்திருக்குன்னா, எம்மாம் வேர்வை சிந்த உழைச்சிருக்கானுங்க!
நீங்கள்ளாம் இந்து... காக்கி முழுடவுசர் போட்டுட்டு, கையில கத்தியோ சூலாயுதமோ தூக்கிக்கிட்டு, ராமா ராமான்னு கத்திக்கினே ஊர்வலத்துல பசுமாட்டப் பத்தி கத்திக்கினு போய்க்கிட்டே இருங்கப்பூ...
Image result for spitters , smokers, drinkers, money swindlers in tamil nadu and india


--
M.Lakshmanan.
00919080213233
00919344455566

Skype id:  lakshmanan17
Twitter: lakshmanan17


6 comments:

  1. என்ன செய்யலாம் இவர்களை எல்லாம் கொன்று விடலாமா? கவிஞர் தணிகை - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Tanigai Ezhilan Maniam

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback and sharing of this post sir. vanakkam.

      Delete
  2. இவர்கள் கொடுமைகள் சகிக்க முடியல்ல தான்.

    ReplyDelete
    Replies
    1. thanks for your expression on this post and likemindedness

      Delete