Thursday, June 29, 2017

நீ(ர்) மதிப்பறிய: கவிஞர் தணிகை

 நீ(ர்) மதிப்பறிய: கவிஞர் தணிகை

Image result for water water everywhere. drinking water crisis

தண்ணீர்தான் உணவுகளின் அரசன்

தோண்டத் தோண்ட தண்ணீர் சுரக்காது

நல்ல தண்ணீர்ல் 70% விவசாயத்துக்கு..

கனடா நாடு தண்ணீரை ஏற்றுமதி செய்கிறது

உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு
தண்ணீர் பற்றாக்குறை.

கி.பி.2025ல் மூன்றில் இரண்டு பேருக்கு தண்ணீர் பற்றாக்குறை

தினசரி ஒரு மனிதனின் நீர்த்தேவை குறைந்தபட்சம் 50 லி.

சுத்தமான தண்ணீர் உலகின் முதன்மையான மருந்து

குடிநீரின்றி துன்புறுவோர் 100 கோடி பேர்

பாதுகாப்பற்ற தண்ணீரால் ஆண்டுக்கு 50 இலட்சம் பேர் பலி

இனி வரும் போர்களுக்கு தண்ணீர் காரணமாகும்

தண்ணீர் இல்லையெனில் கண்ணீர்தான்

எண்ணெயின் மதிப்பை விட தண்ணீரின் மதிப்பு உயரும்

கனடா நாடு தண்ணீரை ஏற்றுமதி செய்கிறது.

தேவையான தண்ணீர் தர வேண்டியது அரசின் கடமை

காலமும் வெள்ளமும் எவருக்கும் காத்திருப்பதில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, June 28, 2017

சூரியன் அவியும் வரை மனிதம் தொடரும் வரை என் வார்த்தைகள் வளரும்....கவிஞர் தணிகை.





வீண் வார்த்தைகளால் உங்களை
யாரும் ஏமாற்ற விடாதீர்கள்.

பொன்னையும் முத்துகளையும் விட‌
அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்

தக்க வேளையில் சொன்ன சொல்
வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனி(க்குச் சமம்)

மட்டுக்கு மிஞ்சின பேச்சு
அளவற்ற தீமைகளை விளைவிக்கும்

நினைவு அரும்பும்போதே முடிவு சொல்வதே
இறை வாக்கு

வார்த்தை என்பது குறியீடு

ஞானிகளின் அறிவுரை வாழ்வளிக்கும் நீருற்று.

பொய்யர்களை விட திருடர்கள் மேலானவர்

சத்தமாகப் பேசுவது சக்தியை இழப்பது

சூரியன் அவியும் வரை மனிதம் தொடரும் வரை
என்/இந்த வார்த்தைகள் வளரும்....

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Tuesday, June 27, 2017

நேர்மையான நடத்தையே சாவுக்குத் தப்புவிக்கும்:கவிஞர் தணிகை.



Related image

வலிமை உடையவரை விடப்
பொறுமை உடையவரே மேலானவர்.

உலகை அடக்குகிறவரை விட‌
தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்

வழக்கில் பிரதி வாதி குறுக்கிடும் வரை
வாதி கூறுவது நியாயமாகவேத் தோன்றும்
Related image


பணக்காரர் இறையருள் பெறுவது
ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது

தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்
ஆனால் என்றும் அவர்கள் அழிவுக்கு உரியவரே.

கடவுளின் சினம் வெளிப்படும் நாளில்
செல்வம் பயன்படாது

நேர்மையான நடத்தையே சாவுக்குத் தப்புவிக்கும்

குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும்
நேர்மையானவர் உலகில் இல்லை

பொருள் ஆசையே எல்லா தீமைகளுக்கும்
ஆணி வேர்.

Related image

கோழையாய் இருப்பதை விட‌
ஏழையாய் இருப்பதே மேல்.

....சில நல் மொழிகள், சில நல் வழிகள்

முன்னோரின் முன் மொழிகளும்
தணிகையின் மணி மொழிகளும்

நூலிலிருந்து இறக்குமதி....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, June 26, 2017

ரம்ஜான் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை

ரம்ஜான் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை


Related image

திரு நாள் விடுமுறை இந்தியாவில். பாகிஸ்தானில் பெட்ரோல் டேங்கர் வெடித்து 150 பேர் கருகி மரணம், 117 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மிகப் பெரும் சோகத்தில் பாகிஸ்தான் இரம்ஜான் தினம். மோடி அமெரிக்காவில் பாகிஸ்தானின் தீவிரவாதம் பற்றி  தாக்கிப் பேசி உள்ளார். அங்குள்ள பெரும் நிறுவன தலைவர்களை எல்லாம் இந்தியாவில் தொழில் துவங்க வருமாறு அழைத்துள்ளார் ஆனால் இவருக்கு விசா வழங்க அமெரிக்காவில் மதவெறியர் என அமெரிக்காவுள் நுழைய தடை இருந்ததை எல்லாம் நாம் மறந்து போவோமாக...

எனக்குத் தெரிந்த ஆரிப் முகமது என்ற முகமதிய நண்பர் ஒருவர் நாங்கள் எல்லாம் இந்த நோன்பு , உண்ணாமை எல்லாம் கடைப்பிடிப்பதில்லை, இதெலாம் ஒரு ஏமாற்று நாங்கள் எல்லா மனிதர்களுடனுமே கலந்து பழகுகிறோம் சேர்ந்து உண்ணுவோம் என்றதுடன், அவரின் பக்கத்து வீட்டில் ஒரு இளைய ஏழை தம்பதியர் இந்த நோன்பை கடைப்பிடித்து கணவர் வெளியே சென்றிருந்தபோது மனவி மயக்கம் அடைந்து நிலை வெகுவாக கவலைக்கிடமாகி சீரியஸ் என்றால்தான் அனைவருக்கும் புரிகிறது...கணவருக்குத் தெரிவித்து விட்டு அண்டை வீட்டுக்காரர் எல்லாம் ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் அனுமதித்து குளுக்கோஸ் எல்லாம் ஏற்றிய பிறகு மருத்துவர்...டாக்டர் சொன்னது: வெறும் வயிறு, கொலைப்பட்டினி முதலில் இவரை சாப்பிடச் சொல்லுங்கள் ஏதாவது இட்லி போன்ற எளிதில் செரிக்கும் உணவை வாங்கிக் கொடுங்கள் என்றாராம்.

நான் கூட மருத்துவம் படிக்கும் பல மாணவியரைப் பார்த்தேன் எல்லாம் சோர்ந்து போய் வாடி வதங்கிக் கொண்டிருந்தனர். மதம் என்ற பேரால் இது போன்ற நீண்ட உண்ணா நோன்பு தேவையா என்றால் மதத்தில் மூழ்கியோர் எல்லாம் ஆட்சேபணை தெரிவிப்பார்கள்.

எண்ணெய் வள நாடு ஒன்றில் எனது தியான வழிச் சீடர் ஒருவர் பணி புரிகிறார் அங்குள்ளோர் எந்த மதத்தினராயிருந்தாலும் பொது இடத்தில் வந்து
எச்சில் விழுங்கினாலோ, நீர் பருகினாலோ கூட இராஜ தண்டனை, அரசாங்கக் குற்றம் என அவர்களுக்கு பெரும் தண்டனை பொறுக்க முடியாத தண்டனை வழங்கப்படுமாம் அந்தப் பகல் நாட்கள் மிகவும் கொடூரமானைவை. இரம்ஜான் தினம் வரும் வரை. நல்ல வேளை இரம்ஜான் தினம் வந்து விட்டது நோன்பு எல்லாம் முடிந்து விட்டது.

மதம் என்ற பேரில் அது சொன்னது என்றால் அது இப்படித்தான் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியுமா? செய்யக் கூடுமா? செய்யலாமா? மனித அறிவை பயன்படுத்த வேண்டாமா என்று கேட்பது நானல்ல அந்த முகமதிய நண்பர். அவர் ஒரு அ.இ.அ.தி.மு.க கவுன்சிலராக இருந்த கட்சி விஸ்வாசி.

எல்லா மதங்களிலும் சில நல்ல கருத்துகள் அடங்கியுள்ளன. பெரும்பாலும் பொருளற்ற தீயக் கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றைப்பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு அவற்றை கற்றுக் கொண்டு அவற்றிலிருந்து எல்லாம் மீளத்தெரிந்து கொள்ள் வேண்டியதுதான் மனிதம். அப்போதுதான் மனித குலம் தழைக்கும். அல்லது மதம் என்பது கலாம், தெரஸா, காந்தி போன்றோர் கடைப்பிடித்த சொந்த தனிப்பட்ட கொள்கையாக இருக்கலாம் ஆனால் பொதுவுக்கு அவை வரவழைக்கப்பட்டு நிர்பந்தங்கள் ஏற்படுத்தலாகாது.

என்னிடம் பைபிள், குரான், கீதை, புத்தம், ஜைனம் போன்ற எல்லாவிதக்கருத்துகளுக்கும் இடம் உண்டு. ஏன் என்னிடம் பைபிள், குரான், கீதை போன்ற புத்தகங்கள் உண்டு. அவற்றில் உள்ள நல்ல கருத்துகளையும் என்னால் சுட்டிக் காட்ட முடியும், தீயவை பற்றியும் பறை சாற்றவும் முடியும்.

பேராசை காரணமாகவே பெட்ரோல் டேங்கர் சாய்ந்து வெடித்துச் சிதறுகையில் பெட்ரோல் பிடிக்க ஓடிய 150க்கு மேற்பட்ட‌ பேரும் கருகி இருக்கின்றனர். 117 பேரும் படுகாயம் தீக்கிரையாகி தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர் பாகிஸ்தானில் Bahawalpur  என்னும் ஊரின் மசூதி இந்த லாரி கவிழ்ந்தைப் பற்றி அறிவிப்பு செய்ததால்தான் அதிகம் மக்கள் அங்கு சென்று பெட்ரோல் பிடிக்க முயன்றுள்ளனர் தங்களது பாட்டில் மற்றும் பாத்திரங்களில் என்கிறது அங்கு முதலில் சென்று சேர்ந்த காவலர் அறித்த செய்தியில்.

மதம் என்னவெல்லாம் எப்படி எல்லாம் செய்கிறது பாருங்கள். எல்லா மதங்களிலுமே பேராசை பெரு நஷ்டம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு எதுவுமே விலக்கல்ல..

பெண்களின் பர்தா, தலாக் மூன்று முறை சொல்லி விவாக ரத்து, ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி, பல தார விவாகம், நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளல் இப்படி நிறைய வியாகூலங்கள் உள்ள மதம் இதுதான் கடைசியில் தோன்றிய மதமாக இளைய மதமாக இருக்கிறது. நிலா என்னும் துணைக்  கோளைக் கொண்டே புனித நாட்கள், மாத நாட்களை கணக்கில் கொள்கின்றனர்...அரேபிய நாடுகளில் நேற்றே ரம்ஜான் முடிந்து விட்டது, பாகிஸ்தான் இந்திய நாடுகளுக்கு நேற்று 3ஆம் பிறை இன்று ரம்ஜான்... உண்ணா நோன்பு இருந்து வரும் ஒரு படித்த பெண்ணிடம் வஹி என்றால் தெரியுமா அம்மா அதற்காகவே குரானை நான் தேடி வாங்கினேன் என்றேன். வஹி என்றால் அந்த பெண்ணுக்குத் தெரியவில்லை..அரபி தமிழ் மொழிபெயர்ப்புடன் உள்ள குரான் தர்ஜமா என்னிடம் உள்ளது பற்றி சொல்லி வஹி என்றால் முகமது நபிக்கு கிடைத்த இறையின் வாக்கு... அதன் தொகுப்புதானே குரான்... நிறைய முகமதியர்கள் உடலால் வயிற்றுப் பிழைப்புக்கு உழைத்து வரும் தோழர்களிடம் குரான் முக்கியமானவை சென்றடையவில்லை ஆனால் தேவையில்லாத மதமாச்சரியங்கள் எல்லாம் சென்று சேர்ந்திருக்கின்றன.

ஆனால் பாருங்கள் கரூரில் ரிஃபாத் என்னும் முகமதிய இளைய மைந்தரின் தலைமையில்தான் 64 கிராம் எடையுள்ள செயற்கைக் கோள் உருவாகி நாசாவால் விண்ணுக்கு அனுப்பப் பட்டிருக்கிறது... அவர் தந்தை ஒரு விஞ்ஞானியாம் அவர் இப்போது இல்லையாம். தாய் தம் மகனைப் பற்றி உருகியிருக்கிறார். இந்த மாணவர் ப்ளஸ் டூ தேர்வில் 1200க்கு 750 மதிப்பெண் பெற்றவரே...

எமது அரிய ரம்ஜான் வாழ்த்துகள் ரிஃபாத்துக்கும் அவரின் அந்த அறிவியல் நண்பர்களான: தேடித் தேடிப் பார்க்க வேண்டியதாகிறது அந்த மற்ற 6 பேரின்  பேரையும் அவர்கள் யாவருக்கும் எம் வாழ்த்துகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, June 25, 2017

கோவிந்தா கோவிந்தா இராம் நாத் கோவிந்தா: கவிஞர் தணிகை

கோவிந்தா கோவிந்தா இராம் நாத் கோவிந்தா: கவிஞர் தணிகை

ஜெயது ஜெயது மந்திரம் ஜென்ம சாபல்ய மந்திரம்
ஜனன மரண விச்சேத பேத கிலேச மந்திரம்
சகல நிகம மந்திரம் சர்வ சாஸ்த்ரிக மந்திரம
இரகுபதி நிஜ மந்திரம் இராம ராமேதி மந்திரம்.


Image result for GOVINTHA...
என்ன இது என்கிறீர்களா? எல்லாம் உங்களை திசை திருப்பத்தான்.அடல் பிஹாரி வாஜ்பேயிக்கு அப்புறம் லால் பிஹாரி அத்வானி அட பேரையே மறக்கடித்து விட்டார்களே... லால் கிருஷ்ண அத்வானி நாட்டின் 9 ஆவது துணைப் பிரதமராக இருந்தவர் இன்று வயது 89வயதுடன் ஏமாந்து நிற்கிறார் இராமர் பாபர் மஜீது இடிபாட்டு வழக்கின் மூலம் இவருக்கு குடியரசுத் தலைவராக தகுதி இல்லையென. வாஜ்பேயிக்கு அடுத்து இதே கட்சீ வென்றிருந்தால் இவர்தான் பிரதமர் ஆகி இருக்க முடியும்...அதை அடுத்து காங்கிரஸ் 10 ஆண்டும், மன்மோகன் சிங் காலமும் மோடியை கேள்வி கேட்பாரற்ற தலைமையாக பிரதமராக்கி விட்ட காலத்தில் இவ்ர் தனக்குப் பிடித்தமாறு கட்சியை நகர்த்தி வருகிறார் அமித் ஷா , வெங்கய்யா போன்றோர் வலது இடது கையாக... எனவே எல்.கே. அத்வானிக்கு நோ சான்ஸ். அட இந்த ஸ்டாலினுக்கும் இவருக்கும் கொஞ்சம் கூட லக்கே இல்லையே....அதெற்கெல்லாம் ரிலையன்ஸ் மச்சம் வேண்டுமப்பா...குறைந்தது ஜியோ மிச்சமாவது வேண்டாமா..?

இந்த நாட்டில் குடியரசுத் தலிவர் தேர்தல் வர்ப்போகிறது என்ற உடன் இது போல சம்பவங்கள் அரங்கேறும் என எல்லாம் எதிர்பார்த்ததுதான். ஆனால் முதலில் ஒரு முன்னால் உச்ச நிதிமன்ற நீதிபதி சதாசிவம் என்றவர்கள், அதன் பின் திரௌபதி மர்மு என்றார்கள், அந்தப் பேருக்காகவே கொண்டு வந்தாலும் வருவார்கள் என எதிர்பார்த்தோம், ஆனால் அதை விட நல்ல பேர் இந்த இராம் நாத் கோவிந்த் என்பது உலகெங்கும் ஒரு இந்து நாமமாக எதிரொலிக்கட்டும் என கொண்டு வந்திருப்பார்களோ...
Image result for GOVINTHA...


சதா சிவம், திரௌபதி மர்மு, இராம் நாத் கோவிந்த், சிவ சிவா...இதெல்லாம் தான் இரம்ஜான் திருநாளின் முபாரக் வாழ்த்தாக நாம் தந்திருக்கிறோம்.

இவர் இதன் பின் வரும் பி.ஜே.பியின் இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் எந்த வகையான மசோதா சென்றாலும் கருத்து வேறுபாடில்லாமல் கையெழுத்திரும் ஒரு நல்ல எந்திரமாக பயன்படுவார் முப்படைத் தளபதியாக. அடுத்த மக்களாட்சி தேர்தல் மறுபடியும் யாரைக் கொண்டு வருமோ? எந்தக் கட்சி ஆளுமோ? என்னவெல்லாம் ஆகுமோ? மாறுமோ?

மேலும் இதை நமது சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தினகரன், திவாகரன் எல்லாமே ஆதரித்து டெல்லியில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய கூடி நிற்பார்கள், மோடி வெளிநாடு வலம் செல்வார், ஜக்கி ஈஸா வாசுதேவ் நதிகளை காக்க நாடெங்கும் புறப்படுவார். இதில் எல்லாம் ஒரு உள் நீரோட்டம் இருப்பதை சிற்றறிவு படைத்தோர் கவனிக்கலாம்.

மீரா குமார் , ஜெகஜீவன் ராம் மகள் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர், இவர் சபாநாயகராக இருந்தபோது சபாநாயகருக்கு என அளித்த பரிசுப் பொருட்களை எல்லாம் தம் வீட்டுக்கு அந்த வீட்டை காலி செய்யும்போது பதவி முடிந்தபோது கொண்டு சென்று விட்டாராம் பத்திரிகை செய்தி படித்த எமது எம்.ஜி.ஆர் கட்சி அன்பரின் அங்கலாய்ப்பு அதனால்தான் அவரை ஆதரிக்கக் கூடாதாம். இராம் நாத் கோவிந்தா மறைமுகமாக தேர்வு செய்யப்படும் நாட்டின் தலைமைப்பதவிக்கு வழக்கம்போல் வருபவர்.

இதே எம்.ஜி.ஆர். கட்சி அன்பர் ஜெ அம்மையாரின் இன்னும் என்ன ஆயிற்று என்றே தெரியாத 10500 சேலைகள்,750 செருப்பு ஜோடிகள்,500 வைன் கிளாஸ்கள் பற்றி எல்லாம் மறந்து விட்டு அவரது நினைவிடத்தை கடவுளாக்கி மக்கள் ஈயாக மொய்க்கிறார்கள், அவருக்கு எல்லா அரசு அலுவலகங்களிலும் படம் மாட்டப்பட வேண்டும் ஓர் உண்மையான தீர்ப்பு அளிக்கப் பட்ட குற்றவாளிக்கு  என்ற உண்மையை எல்லாம் அப்படியே தம் வசதிக்காக மறந்து விட்டார்.

Image result for GOVINTHA...

இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படல் வேண்டும்.அப்போது அது சொல்லும் சொல்லட்டும் யாருக்கு அந்த வசதி வாய்ப்புகள் சென்று சேரவேண்டியதென்று...வேறு என்ன அதில் இருக்கிறது?

INDIA IS AN NON POLITICAL, NON RELIGIOUS, SECULAR COUNTRY...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, June 23, 2017

டென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை

டென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை
Related image



டென்மார்க் பற்றி ஒரு பதிவை சில நாளுக்கும் முன் எமது வலைப்பூவில் பூக்க வைத்திருந்தேன். அது ஒரு சிறு பதிவுதான். அதில் விடுபட்டுப் போன செய்தி ஒன்று ஆனால் அதுவே உலகிற்கு முக்கியமான ஒன்றும் கூட. எனவே இன்று பதிவு செய்ய மறந்ததை பதிவு செய்ய இந்தப் பதிவு

அங்கு குடும்பக் கட்டமைவு இல்லை. ஆணும் பெண்ணும் விரும்பும் வரை சேர்ந்து வாழலாம், கருத்து வேறுபட்டுப் போனால் பிரிந்து விடலாம். தடையில்லை. மறுபடியும் வேறு நபர்களுடன் இணைந்து வாழலாம். இதுதானே மேலை நாடெங்கும் விரிந்திருக்கும் கலாச்சாரம். இதில் என்ன புதிமை அல்லது சொல்ல இருக்கிறது என்கிறீர்களா? இப்படி இல்லாமல் இருந்தால் தான் அதைப் பற்றி சொல்ல வேண்டும்.

எனவே சிறுவர் சிறுமியாய் அதாவது 12 வயது 13 வயதில் இருக்கும்போதே பிள்ளைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறார்கள். தாய் தந்தையின் அரவணைப்பே அதற்கும் பின் அவர்களுக்கு இல்லை. ஏன் எனில் பொருளாதார பின்புலத்தை, ஒத்துழைப்பைத்தான் அரசாங்கம் தந்து விடுகிறதே எனவே அப்போதே இணை ஜோடிகளைத் தேடிக் கொண்டு வாழ்வை ரசிக்கிறேன், ருசிக்கிறேன் என அனுபவித்து குடும்ப உறவுகளுக்குள் வேண்டி விரும்பியே சிக்கிக் கொள்கின்றனர்.

அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு. இது நம் நாட்டில் மலை வாழ் மக்களிடம் இள வயது திருமணம் இன்னும் உள்ளதை நினைவு படுத்துகிறது. ஆனால் இவை எல்லாம் பாலியல் உறவில் வெவ்வேறு தளங்களுக்குள் இவர்களை எல்லாம் இட்டுச் சென்று நிம்மதியின்மையை ஏற்படுத்தி விடுகிறது.

அதைப் பொறுத்த வரை இன்னும் இந்தியா மேலை நாடுகளுக்கு முன் மாதிரியாக வழிகாட்டியாக தாய் தந்தையர் அரவணைப்பில் பணிக்கு செல்லும் வரை குறைந்த பட்சம் மணமுடியும் வரை அல்லது 20 அல்லது 25 வயது வரையிலாவது குடும்ப அரவணைப்பில் வாழ்வது பாராட்டத் தக்கதே.

ஆனால் உறவுச் சீரழிவுகள் இப்படி இருந்தபோதும் அந்த நாடுகளில் ஆட்சி முறைகள் நல்ல முறையில் இருப்பதால் அந்த நாடுகள் முன்னேறிய நாடுகளாக பொருளாதார நிலையில் உள்ளன. பிரதானமான காரணமாக நேரந்தவறாமை, கடின உழைப்பு, பொய், களவு, சூது, கபடம், வஞ்சகம் இவை இல்லாமையால் என்றும் சொல்லலாம்.

மேலும் அவர்கள் நாட்டில் அவர்கள் மொழியறிவே உள்ளது, ஆங்கிலம் போன்ற பிறமொழியின் ஆதிக்கம் அங்கு நிலவே வழி இல்லை என்பதும் அனைவரும் கவனிக்க வேண்டிய செய்தி. தாய்மொழிக்கல்வியில் பலமாக இருக்கும், சீனா,ஜப்பான், ஜெர்மனி, போன்ற நாடுகளிலும் இதே மொழி பாதிப்புகள் தான் நிலவி வருகின்றன . இந்தியாவில் மட்டும் ஏகப்பட்ட மொழிகளும், பிரிவுகளும் அதில் இந்தி மொழியை எப்படி புகுத்துவது என இப்போது பாஸ்போர்ட்டில் வைக்கப் போவதாக சுஸ்மா சுவராஜின் அறிக்கை...

மறுபடியும் பூக்கும் வரை:
கவிஞர் தணிகை.

எனது காலடி ஓசை மட்டுமே கேட்கும்
எனக்கு விருப்பமான அமைதியுடன்
பறவைகளின் கீச்சொலி சங்கீதம்
என்றும் எனக்கு கிடைக்க தினம் நடையரசனாக‌
இயற்கையே எனக்கு அருள் செய்வாயாக!


Thursday, June 22, 2017

டென்மார்க் கோபன்‍ஹேகனில் சில சிந்தனைத் துளிகள்: கவிஞர் தணிகை

டென்மார்க் கோபன்‍ஹேகனில் சில சிந்தனைத் துளிகள்: கவிஞர் தணிகை



டென்மார்க்கில்  வருமான வரி 46% அதில் குழந்தை வளர்ப்பு, கல்வி, மருத்துவம், வேலையில்லாதார்க்கு வாழ்க்கை பராமரிப்பு செலவு ஆகியவை அரசை சார்ந்தது.



திருடன் திருட்டு பயமில்லாததால் எவரும் வீடுகளை பூட்டி செல்ல வேண்டிய அவசியமில்லை அந்தக் கால தமிழர் பரம்பரையில் சொல்வது போல. எந்த நிறுவனத்துக்கும் பாதுகாவலர் இல்லை. அவரவர் குறித்த நேரத்தில் வந்து குறித்த நேரத்தில் செல்கின்றனர். வாரம் 5 நாள் வேலை. கடுமையான உழைப்பு. மீதம் 2 நாளை அவர்களை பிடிக்கவே முடியாது.

டேனிஷ் மொழி தெரியாமல் அங்கு வாழ்வது மிகவும் கடினம். தொடர்பு மொழி என்று ஆங்கிலம் எல்லாம் இல்லவே இல்லை. மிகவும் முன்னேறிய நாடுகளில் இந்த ஐரோப்பிய நாடும் இருக்கிறது.

இந்த நாட்டுக்கு குடியேறும் தென் ஆப்பிரிக்க நாடுகளை சார்ந்த சிலர் மட்டுமே குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சொல்கிறார்கள். அதிகபட்சம் அனைவரும் மிதிவண்டியில் பயணம் செய்ய தனிப்பாதை இருக்கிறது. ஒரு மிதி வண்டியின் விலை இந்தியப் பணத்தின் படி 16 ஆயிரம் ரூபாய். சில மிதிவண்டிகளில் எந்த பாகமும் இருக்காது நாமாக வாங்கி பொருத்திக் கொள்ள வேண்டும் மிதிக்கும் பெடல் உட்பட.

அரசியல் கட்சிகள் உண்டு என்ற போதிலும் மற்ற கட்சிகள் ஆளும்போது கொண்டு வந்த நல்ல திட்டங்கள் பொறாமையால் நீக்கப்படுவதில்லை. மக்களுக்கு பயன்படும் என்றால் அது எல்லாத் திட்டங்களையும் அமல்படுத்தும்.

குடியுரிமை பெறுவதற்கு வழக்கம்போல மற்ற நாடுகளைப் போலவே முறைகள் உண்டு.

2013ல் செல்லும்போது வாங்கிய தயிர் ஒரு கப் விலை 10.95 என்றது இந்த ஆண்டும் 2017லிலும் அப்படியே மாறாமல் உள்ளது. கொஞ்சம் கூட பணவீக்கம் எல்லாம் இல்லை அப்படிப்பட்ட ஆட்சி முறைகள்.

மேலும் தகவல் தெரிந்து சொல்வேன்

எனது தங்கை மகள் காருண்யாவும் அவரது கணவர் ஜனார்த்தனன் மற்றும் அவர்களது குழந்தை கார்ணீஷ் அங்கு இப்போது வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடமிருந்து பேசும்போது தெரிந்து கொண்டதே மேற் சொன்ன தகவல்கள்.
Image result for denmark copenhagen


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, June 21, 2017

இந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்......கவிஞர் தணிகை

தமிழக இலட்சியக் குடும்பங்களுக்காக 02.10.2002ல் காவிரி நீர் வேண்டியும், நதிகளை தேசியமயமாக்கக் கோரியும் நதி நீர் இணைப்பு வேண்டியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நான் பேசிய பேச்சு சிறு கையேடாக வெளிவந்தது அனைவர்க்கும் வழங்கப் பட்டது.




உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
தள்ளினும் தள்ளாமை நீர்த்து....

சுருக்கமாகச் சொன்னால் எண்ணியது கைகூடாவிட்டாலும் எண்ணுவதை மட்டும் கைவிடவே கூடாது...

நமது சுதந்திரப் போராட்டத்திற்கு எப்படி ஒரு 200 ஆண்டு கால மகத்துவம் உண்டோ அப்படி  நதிகளை தேசியமயமாக்கு, கங்கை காவிரியை இணை, நதிகளை இணை என்ற கோரிக்கைகளுக்கும் 200 ஆண்டு கால சரித்திரம் உண்டு. ஆனால் இன்னும் நாம் அந்த குறிக்கோளை எட்ட முடியவில்லை. என்றாவது ஓர் நாள் அந்த இலக்கு எட்டப்படும் என்பதற்கான ஒரு சிறிய முயற்சியே இந்த சொல் வீச்சு.எழுத்துப் பதிவு.

காவிரியில் கல்லணையை கட்டிய கரிகால் பெருவளத்தான் முதல் நூற்றாண்டிலேயே பெரும் நோக்கோடு அதைக் கட்டியுள்ளார். அந்த சோழ மன்னனின் அக்கறை இன்றும் பொறியியல் துறையின் வல்லமையை நின்று உலகுக்கே பறை சாற்றுகிறது தமிழரின் பெருமையை.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயரே நமது இந்திய தேசத்த்ஹு நீர்ப்பாசனத் தந்தையாவார். அவர் முதல் விடுதலை இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட விஞ்ஞானி விஸ்வேஸ்வரையா , மத்திய மின்சார மற்றும் நீர்ப்பாசனத் துறை மத்திய மந்திரியாய் இருந்த டாக்டர்.கே.எல்.ராவ், கேப்டன் தின்ஸா தஸ்தூர், சில்வர் டங் சீனிவாச அய்யங்கார் , சர் . சி.பி. இராமசாமி அய்யர் போன்றோர் இதன் முன்னோடிகளாவார்.

தற்காலத்தில் கூட பல்வேறு இயக்கங்களும் தலைவர்களும் இது பற்றிய முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தத் தலையாயப் பணிக்காக பேதமின்றி  இணைவதும் , பணியாற்ற வேண்டியதும் தாயகத்தின் கடமையாகும். மறைந்த‌ காந்திய நெறி சிந்தனையாளர் தொழிலதிபர் என். மகாலிங்கம் அவர்கள் கூட பல காலம் இதற்காக முயன்றது குறிப்பிடத்தக்கது.

100 ஆண்டுகளுக்கு முன்பே மகாக் கவி பாரதி
வங்கத்தின் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்    என்றார். ஆனால் அது இன்னு ஓர் இலட்சியக் கனவே. ஆனால் அவர் எழுதிய சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்  என்ற பாடிய கூற்று நிதர்சனமாக நடந்து விட்டது. அவ்வளவு ஏன்? ஸ்டீபன் ‍ஹாக்கிங் என்ற அறிவியல் அறிஞர் தற்காலத்தில் கூட பூமி மனிதர் வாழத் தகுதியற்றுப் போய்க் கொண்டிருக்கிறது அதை மாற்ற முடியாது மாறாக வேறு கிரகத்திற்கு மனிதர்கள் குடி போவதுதான் நல்லது என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

வேறு கிரகத்திற்கு சென்று அதை மனிதர் வாழ ஏற்ற இடமாக மாற்றுவதை விடவா இந்த இந்திய நதி நீர் இணைப்பு மிகவும் பெரிதான கடினமான முயற்சியாய் இருந்து விடப் போகிறது? செவ்வாய்க் கிரகத்துக்கும் குடிபோக திட்ட முன்வடிவுகள் தயாராகிக் கொண்டுதானே இருக்கின்றன...

அவ்வாறெல்லாம் இருக்கும் போது கங்கை காவி இணைப்பு மட்டும் அப்படியே கனவாகவே உள்ளது ஏன்? ஏன் நதிகளை இணைக்க முடியாது?

கவிஞனின் தீர்க்க தரிசனம் பொய்யாகாது. இந்தக் கனவும் மெய்ப்படும். ஆனான் என்று?நம்மால் முடியாதென்றால் யாரால் முடியும்? இப்போது முடியாதென்றால் எப்போதுதான் முடியும்? நாம் வாழும் இந்தக் காலக்கட்டத்திலேயே இதை செய்து முடித்து புகழடையப்போகிறோமா? நமக்குப் பின் கலியுகத்தில் அறிவார்ந்து சிறந்து வரும் நம் இளைய தோள்களுக்குப் பொறுப்பை மாற்றிவிட்டு நமது முன்னோர்களைப் போல சென்று சேரப்போகிறோமா இதுவே நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி.

1974ல் கேப்டன் தின்ஸா தஸ்தூர் கங்கை காவிரி இணைப்பின் மதிப்பீடு 7000 கோடி என்றார். கங்கை காவிரியை இணைத்து வைகை , தாமிர பரணி வரை 1200 மைல் நீளம் கொண்டு வரலாம் என ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். தற்போது 3 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி வரை திட்ட மதிப்பீடு இருக்கும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போன்றோர் குறிப்பிட்டிருந்தனர்.

நேரு காலத்ட்ல் " தனக்கு முழுப்பொறுப்பும் கொடுத்தால்" கங்கை காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி வைப்பதாக இந்தியாவின் சிறந்த பொறியியல் விஞ்ஞானி விஸ்வேஸ்வரைய்யா  1962 ல் குறிப்பிட்டுள்ளார். இது போல எத்தனையோ வாய்ப்புகள் கை நழுவின.எனவே 5 இலட்சம்கோடி என்றாலும் கூட இந்தியா போன்ற ஓர் உபகண்டத்திற்கு அதுவும் இது போன்றதொரு உயிர் நாடியான இரத்த நாளமான திட்டத்திற்கு சேர்க்க முடியாத தொகையல்ல...சேர்த்து குவிக்க வேண்டியது போர்க்கால அடிப்படையிலான உயிர் காக்கும் முயற்சியாகும்.

1971ல் ஐக்கிய நாடுகள் சபையின் நீர்ப்பிரிவின் தலைவர் பொருளியல் நிபுணர் டாக்டர் பார்னியா என்பவரின் தலைமையில் இந்தியா வந்த திட்டக்குழுவும் இந்தத் திட்டம் எவ்வளவு பொருள் செலவுடையதாக இருப்பினும் எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருப்பினும் நிறைவேற்றப் பட வேண்டியது அவசியம் என்று மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அது மட்டுமின்றி இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லையெனில் 2000 ஆண்டுக்கும் மேல் இந்தியா நீர்ப்பற்றாக்குறையில் தவிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

நாம் தவிக்கிறோம்
தேவையை விட 10 மடங்கு தண்ணீர் அதிகம் உள்ல நம் தாய்த்திருநாட்டில்
குடி நீருக்காக. செந்நீர் சிந்தி நாம் தவித்துக் கொண்டுள்ளோம்.

சரி 5 இலட்சம் கோடியை எப்படிப் பெறலாம்? அல்லது திட்ட மதிப்பீடு எத்தனை இலட்சம் கோடியானாலும் அதை எப்படிப் பெறலாம் எனில்:

1. 100க்கு 66 கம்பெனிகளை குடும்பக் கம்பெனிகளாக நடத்தி வருபவரிடம் பெறலாம்.

2. 71% ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சேர்களை (பங்குச் சந்தையில் பங்குகள்) வைத்திருக்கும்  சில குடும்பங்களிலிருந்து பெறலாம்

3. எது எதெற்கோ கையேந்தி ஐ.எம்.எப், (இண்டர் நேஷனல் மானிட்டரி பண்ட், உலக வங்கி ..சர்வ தேச நிதியம்   ஆகியவற்றிலிருந்து  பெற்ற பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறோமே அந்த நிறுவனங்களிடம் இந்த நல் காரணத்துக்காக கையேந்தலாம்.

4. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அரேபிய எண்ணெய் வள நாடுகளிடம் இந்த அற்புதத் திட்டத்திற்காக கையேந்தலாம்.

5. காந்தி விடுதலைப் போராட்டத்தில் நமது மக்களிடம் கையேந்திய போது தாலி முதல் கழட்டிக் கொடுத்தார்களே நம் தாய்மார்களை நம்பி அந்த நாணயம் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவோரிடமும் இருந்தால் நமது இந்திய தேசத்து குடிமக்கள் ஓவ்வொருவரிடமும் ஏதாவது பங்கீடு அளித்தேயாக வேண்டும் எனக் கையேந்தலாம்.

6. அவசியமில்லாது வேறும் ஆடம்பரத்துக்காக திட்டமென்றும், விழாவென்றும் விரயம் செய்யும் பணம் யாவற்றையும் மத்திய மாநில அரசுகள் வடிகட்டி மடைமாற்றம் செய்து பயனாக்கலாம்.

7. தேவையேற்பட்டால் தேர்தல் மேளா, மக்கள் கூத்து, புகை, மது, போதை போன்ற சராசரிப் பணிகளை எல்லாம் நிறுத்தி வைத்தும் கூட திட்டம் முடியும் வரை பயன்படுத்தலாம்.

8. மத்திய மாநில அரசுப்பணிகளின் அமைச்சகங்கள், செலவினங்கள், ராணுவத்தின் பயன்பாடு, பிற துறைகளின் உழைப்பு ஏன் இந்த நாட்டு மக்களின் எல்லாருடைய உழைப்பு மற்றும் மாத சம்பளம் வாங்குவோரின் ஒரு மாத சம்பளம் போன்றவற்றை அர்ப்பணிக்கலாம்.

9. வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களுக்காக ஆண்டுக்காண்டு செலவளிப்பதாக சொல்லிக் கொண்டு... சொல்லிக் கொள்ளும் பணத்தை திட்டம் முடிவு பெறும் வரை இதற்கே திருப்பி விடலாம்.(தென்பகுதி வறட்சியும் வடபகுதி வெள்ளமும் தீர்க்கும் அரு மருந்தாயிற்றே இந்தஹ்ட் திட்டம் என்பதால்)

10. தொழிலதிபர்கள், பெரும் முதலாளிகள், கார்ப்ரேட்கள் போன்றோரை குறிப்பிட்ட அளவு பணிகளை ஒப்படைத்து முடித்துக் கொடுத்தவர் பெயரை அந்த நீளம் வரை சூட்டிக் கொள்க என்றும் பயன்படுத்தலாம்

11. திருப்பதி, காஞ்சி, காசி, சிருங்கேரி போன்ற மடங்கள், தேவாலயங்கள், மசூதிகள்,கட்சிகள், பொது சேவை நிறுவனங்கள், மடாலயங்கள், கோவில்கள் ஈஷா,வேலூர் தங்கக் கோயில், வாழும் கலை, அமிர்தானந்த மயி, மேலமருவத்தூர், சத்ய சாயி போன்ற நாடெல்லாம் உள்ள ட்ரஸ்ட் என்னும் அறக்கட்டளைகள் அதில் வீரமணியின் மணியம்மை ட்ரஸ்ட் உட்பட அனைத்து பெரு நிதியையும் இதற்கு வர வழிவகுக்கலாம்.

12. விவசாயிகளிடம் பங்கு பத்திரங்கள் விற்பனை செய்யலாம்

13. இப்படி இலட்சோப இலட்சம் வழிகள் , சிந்தித்துப் பார்த்து செயல்படும்போது 130 கோடி மூளைகளிலிருந்து புறப்படும் அவற்றையெல்லாம் சீர்படுத்தி பயன்படுத்தினால் இந்தியாவில் கங்கை காவிரியை மட்டுமா இந்தியாவில் இணைக்க முடியும்? நிலவுக்கும் சூரியனுக்குமே  பாலம் கட்டிவிட முடியும். ஆனால் நமது மக்கள் யாவரும் உறங்கிக் கிடப்பதாக பாசாங்கு செய்து குப்புறப்படுத்துக் கிடக்கின்றனர். படுத்துக் கிடப்பாரை விழிக்க வைப்போம். விழித்தெழுந்து நாட்டை செழிக்க வைப்போம்

திட்டம் செயல்படுத்தப் பட்டால்?

1. அரேபிய நாட்டின் எண்ணெய்ச் செல்வத்தை விட நம் தண்ணீரால் அதிக செல்வம் பெற முடியும்.

2. பாலைகள் எலலம் சோலைகள் ஆகும்

3. 30 கோடி ஏக்கர் அடி கங்கை நீர் கடலில் வீணாவதில் பாதியை தடுத்தால் போதும் 2 காவிரிகளுக்கு முழு கொள்ளளவுக்கு சமமான நீர் பெறலாம்.

4. பல கோடி ஏக்கர் பாசன வசதி பெற முடியும்

5. நதி நீர் இணைப்புப் பணிக்காக பல்லாயிரம் பொறியாளர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பணி பெறுவார்கள்

6. ஏரி, குளம், குட்டை , கிணறு போன்றவற்றில் நிலத்தடி நீர் ஊற்றெடுக்கும்.

7. கோடிக்கணக்கான பேர் வேலை வாய்ப்பை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு  பெறுவர்.

8. நாட்டில் இரயில் பாதையை விட இணைப்புக் கால்வாய்கள் மூலம் நீர் வழித்துறை மேன்மை பெறும்.

9. 9 வகையான இணைப்பில் 10,000 மைல் நீளம் இணைப்புக் கால்வாய் பெறலாம்

10. ஏறத்தாழ எழுபது இலட்சம் கிலோவாட் மின்சாரம் குறைந்த பட்ச செலவில் அதிகபட்சம் தயாரிக்க முடியும்

11. போக்குவரத்துத் துறை, மின் துறை, நெடுஞ்சாலை, மீன் வளம் மேம்படும்

12. கால்வாய் வெட்டும்போது கிடைக்கும் கருங்கற்களின் மதிப்பு பல்லாயிரம் கோடிகள் இருக்கும்

13. விந்திய சாத்பூராக் காடுகள், ராயலசீமா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டி முழுப்பயனையும், பிற மாநிலங்கள் பெருமளவிலான பயனையும் பெறும்

14. இந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்

15. மொத்தத்தில் வறுமையற்ற பாரதம் உலக அரங்குக்கு உன்னத வழிகாட்டும். பாரதியின் கூற்றுப் படி.

பிறகு ஏன் இப்படிப்பட்ட காமதேனுவை , கற்பக விருட்சத்தை கையில் வைத்துக்கொண்டுள்ள இந்தியா திட்டத்தை செயல்படுத்தாமல் கையேந்தியப்டியே நிற்கிறது? பி.எஸ்.என்.எல்லை நலிவடையவிட்டு தனியாருக்கு 2ஜி, 3 ஜி, 4,ஜி, என அலைக்கற்றை அகன்ற அலைவரிசை யாவற்றையும் விற்று விட்டு நட்டப்பட்டுக் கிடப்பது போல...தனியார் போக்குவரத்தை தனியார் முதலாளிகளை வளரவிட்டு அரசு நிறுவனங்களை சைபர் ஆக்குவதும் அரசு புரிவோரின் கொள்கையாகிவிட்டது.

கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி இருந்தும் பஞ்சம் என்றால் அது இயற்கையோ, விதியோ அல்ல , மனித சதியே..

முதலாம் நூற்றாண்டிலேயே கல்லணையைக் கட்டிக் கொண்ட தமிழகத்தில் அப்போதே 37ஆயிரம் ஏரிகள் இருந்ததாக சரித்திரம் சொல்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வது நூற்றாண்டில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட 27 கி.மீ நீளமுள்ள குளம் இன்றும் பயன்படுகிறது.

ஆனால் மனித நாகரீகம் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு பின்னேறிவரும் சான்றுகளையே இப்போதும்  பார்க்கிறோம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறையை வேண்டுமென்றே புறக்கணித்தார்கள் "ஒன்றும் செய்யாதே" பஞ்சம் வந்தாலும் மடியட்டும் என்பதே ஆங்கிலேய ஆட்சியின்ன் தாரக மந்திரமாக இருந்தது.

1834ல் சர் ஆர்தர் காட்டன் காவிர்யின் திருச்சி முக்கொம்பில் மேலணையக் கட்டினார். அதே 1834ல் மேட்டூர் அணையக் கட்டும் திட்டமும் வகுத்தார். ஆனால் ஒரு நூற்றாண்டு கழிந்து 1934ல் ஸ்டேன்லி என்பவர் அணையைக் கட்டி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1847ல் அந்திரத்து கோதாவரியில் அணைகட்டி 7 பிரிவுகளாகப் பிரித்து தற்போதைய கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் வளங் கொழிக்கச் செய்தார். கிருஷ்ணா நதியிலும் அணைகட்ட திட்டம் கொடுத்தார். ஆனால் 1863ல் கேப்டன் ஓர் என்பவரால் திட்டம் துவங்கப்பட்டு 1953ல் நிறைவு பெற்றது.

சர். ஆர்தர் காட்டனின் சிலை கோதாவரி அணையில் உள்ள்து. சுமார் 4 இலட்சம் ‍ஹெக்டார் நிலப்பாசன  வசதிக்கு உதவிய அவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆந்திர மக்கள் விழா எடுத்து மாலையணிவித்து மரியாதை செய்கின்றனர்.

பஞ்சாப் நதிகளை இணைக்கத் திட்டம் அளித்தவரும் 9 வகையான முறைகளில் கால்வாய்ப் போக்குவரத்தை ஏற்படுத்தினால் அது இரயில் போக்குவரத்தை வுட சிக்கனமாகும் எனத் திட்டமிட்ட இவரை ஆங்கிலேய அரசு பணியிலிருந்து இங்கிலாந்துக்கு திரும்ப அழைத்து, ஆங்கில அரசுக்கு அதிகம் செலவு வைத்தவர் என்றும், அரசோடு ஒத்துழையாதவர் என்றும் தண்டைனையும் அபராதமும் விதித்தது. இவற்றை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அவருக்கும் பின் வந்ஹ பலராலும் பல வகையான இணைப்பு மற்றும் கால்வாய்த் திட்டங்களும் பரிந்துரைக்கப்பட்டன அவற்றுள் சில:
1. டாக்டர் கே.எல். ராவ் அவர்களின் கங்கை பாட்னாவிலிருந்து பிரிக்கப்பட்டு நர்மதை வழியாக கோதாவரி, கோதாவரியிலிருந்து காவிரி மேட்டூர் அணை வரை கிட்டத்தட்ட 2200 மைல் அல்லது வேறு வழியாக 1600 மைல்...

2. கேப்டன் தின்ஸா தஸ்தூர் :
     1. மகா இமாலயக் கால்வாய்த் திட்டம்: கங்கையிலிருந்து யமுனை யமுனையிலிருந்து பிரம்ம புத்திரா...
      2. பூமாலைக் கால்வாய்த் திட்டம்: இணைப்புகளில் ஹெர்ரிங்க் போன் சிஸ்டம் எனப்படும் மீன் முள் அமைப்புடன்:  சிந்து மேற்குக் கடற்கரை வழியாக‌

3. எம்.ஏ. திருநாராயணன்: சேது கங்கா இணைப்பு

4. திரு மோகன கிருஷ்ணன் அறிக்கை: தீப கற்ப நதிகளின் மேம்பாடு போன்றவை மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.

மேலும்
1958 முதல் 1987 ல் 649 கி.மீ நீளமுள்ள  கால்வாய்கள் அமைத்து ராஜஸ்தானின் வறண்ட நிலத்டை வளமாக்கி இருப்பது கால்வாய்த்திட்டம் பலனளிக்கக் கூடியதே என்பதற்கான சான்றாகும்.

இப்போது சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் இரு பெரும் நதிகளான கோதாவரி கிருஷ்ணாவை இணைத்து பெரு வெற்றி பெற்றுள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டம், கிழக்கு கோதாவரி மாவட்டம் இன்னும் பல மாவட்டங்களில் நீர்ப்பாசனத் தடைகளை தகர்த்தெறிந்துள்ளார்.

ஆனால் மத்திய அரசு நதி நீர் இணைப்புத் திட்டத்தை கிடப்பில் போடக் காரணங்களாகக் காட்டுவது:

1. நிதி ஆதாரமின்மை மற்றும் செலவை தாக்குப் பிடிக்க முடியாமை

2. விந்திய சாத்பூரா மலை தடையாக உள்லதால் 1650 அடி நீரை உயரம் தள்ளத் தேவையான மின்சக்தியின்மை என்பதே.

இது போன்ற பதில்கள் 2000 ஆண்டுகளுக்கும் முன் கூட ஏற்புடையதாகக் கருதப்படவில்லை. இப்போது இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை, விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வானளவு உயர்ந்துள்ளன. ஏன் எனில்
1. அமெரிக்கா 3700 அடி நீரை உயரே ஏற்றித் தள்ளி மிசிசிபி நதியின் நீரை மேற்கு டெக்ஸாஸ் மற்றும் கிழக்கு மெக்ஸிகோ மாநிலங்கள் பயனுறச் செய்திருக்கிறது

2. ரசியாவில் வால்கா டான் 4000 அடிகளுக்கு மேல் நதி இணைப்பு இதை விடப் பெரிதாக நடந்தேறியிருக்கிறது.

3. ஐரோப்பிய நதிகள் இணைக்கப்பட்டு இன்று ஐரோப்பிய  பொருளாதாரச் சமூகம் ஏற்பட்டு ஈஈசி, பொதுவான பணத்தாளையும் நல்ல பொருளாதாரத் திட்டங்களையும் தக்க வைத்துள்ளது.

4. இந்தியாவை விட தட்பவெப்ப சூழலில், இயற்கை வளத்தில், மனித சக்தியில் மூளை முயற்சியில் தாழ்ந்த  தேசமெல்லாம் முன் நிற்க, நாம் ஏன் பின் நிற்கிறோம்?
நதிகளின் இணைப்பில்லாததால்தான்
நதிகளை தேசியமயமாக்காததால்தான்
கங்கை காவிரியை இணைக்காததால்தான்
அதற்கான முயற்சிகளை உதறித் தள்ளுவதால்தான்,
நதி நீரை கடலில் விரயமாக்குவதல்தான்.

உயர்வாக எண்ணு, வானமே இலக்கு என்ற சிந்தனையுடைய தானைத்தலைவர் , டாக்டர் அப்துலகலாம் இது பற்றி நிறைய அறிவுச் சேகரம் செய்துள்ளார். அவற்றை எல்லாம் பரப்ப படிக்க வேண்டும்.

தமிழகத்தில் 40% நிலம் நீர்ப்பாசனத்தை சார்ந்தது. 60% நிலம் வானம் பார்த்தது. மழை பொய்த்துவிட்டால் சுமார் 40,000 ஏரி, குளம், கண்மாய்கள் வறட்சியால் பாதிப்புற்று நிலத்தடி நீரும் இன்றி அதோகதியாகிவிடுகிறது.

அந்த 40% நீர்ப்பாசன நிலத்தில்80% கால்வாய்ப் பாசனத்துடன்  இறவைப்பாசனமாக உள்ளது. இதெல்லாம் பழைய புள்ளி விவரங்கள். இப்பபோது மாறியும் இருக்கலாம்...20 இலட்சம் கிணறுகளில் பாதி சுமார் 10.5 இலட்சம் கிணறுகள் பம்ப் செட்ட் இணைப்பில். இவற்றில் எல்லாம் சுமாரான வறட்சியின் போதே 2 மணி நேர நீர் இறைப்புக்குக் கூட நிலத்தடி நீர் இருப்பதில்லை. கடுமையான வறட்சி என்றால் சொல்லவே வேண்டாம். இதனிடையே ஏரிகள், குளங்கள், யாவும் பட்டா நிலங்களாகி வீடுகளாகி விடுவது வேறு அபாயகரமான வேடிக்கை. இரசாயன ஆக்ரமிப்பால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு கிணற்று நீரே பயன்படாது போவதும் அன்றாட வாழ்க்கை.

எனவே வரும் தலைமுறை வாழ வேண்டுமானால் நமது சங்கிலித் தொடர் சந்ததிகளுக்கு குடிக்க நீர் வேண்டுமானால் நதிகளை இணைப்பது தவிர வேறு மார்க்கம் இல்லை.வறுமையை ஒழிக்கப் பாடுபடுவது, சாதிமதம் ஒழிக்கப் பாடுபடுவது, கட்சிகள், அரசுகள், இயக்கங்கள், சேவை நிறுவனங்கள் இன்ன பிற சக்திகள் யாவுமே இணைந்து இந்த ஒரு மகத்தான பண்யை மட்டும் இந்தியாவில் நிறைவேற்றி விட்டால் மட்டும் போதும். இந்தியா அதன் பின் வரும் முதல் 10 ஆண்டிலேயே அமெரிக்காவை பின் தள்ளி உலகில் தனிப்பெரும் நாடாக சீனாவை எல்லாம் ஏன் என்று கேட்கும்.உலகை முதல் நாடாக நின்று வழி நடத்தும். இதில் எள்ளளவும் ஐயமில்லை. பாரதியின் கனவும், நேருவின் கனவும்,கலாமின் நினைவும் அற்புதமாக நிறைவேறும் மகாத்மாவின் பொற்பாதங்களில் உண்மையான சுதந்திரமும் அர்ப்பணமாகும்.

ஏதேதோ வழிகளில் நாட்டுக்கு உழைக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் கூட  இந்த ஒரு இணைப்புப் பணியில் இணைந்தால் பெருமையே மிகும்.


ல் பாராளுமன்றம், சட்ட மன்றங்களை எல்லாம் அஹிம்சை வழியில் உலுக்கி எடுத்து இந்த உன்னத அரிய அற்புதமான அமுதசுரபித் திட்டம் உருவாக செயலாக நிறைவேற உழைக்க வேண்டும்.
ஆம் உயிருள்ளவரை உழைக்க வேண்டும்.
அன்பர்களே வாருங்கள்!
விரயமாகும் நீரைத் திருப்பி திரவியமாக்குவோம்!.
வணக்கம். நன்றி...................கவிஞர் தணிகை.


...கவிஞர் தணிகை

ஆதாரஙகள்:
1. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்ட 1986ன் "கங்கை காவிரி இணைப்பு" கட்டுரைத் தொகுப்பு‍‍‍‍‍   திரு ஆர். நல்லகண்ணு.

2. விடுதலைப்போரும் திராவிட இயக்கமும். திரு பி. இராமமூர்த்தி

3. INDIA'S WATER WEALTH

4. தினமணி, இந்து, இல்லஸ்ட்ரேட் வீக்லி,பிளிட்ஸ் மற்றும் கிஸான் வேர்ல்ட் பத்திரிகைகள் 50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட குறிப்புகள்
5. NDTV
6. ETC...

Tuesday, June 20, 2017

எனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை

எனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை





கமல் தொலைக்காட்சிக்கு வரமாட்டேன் என்றவர் ஜூன் 25 முதல் வந்து பிக் பாஸ் நடத்துகிறார் பணத்துக்காக என்று அவரே சொல்லுமளவு மாற்றம்

பாகிஸ்தான் அணி இந்திய கிரிக்கெட் அணியை இறுதி ஆட்டங்களில் வென்றதேயில்லை என்ற வரலாற்றை பொய்ப்பித்து சாம்பியன் கப்பை வென்ற மாற்றம் சில தினம் முன்

சமூக சேவகராயிருந்த பராக் ஒபாமாவை அமெரிக்க ஐக்கிய நாடு 8 ஆண்டு குடியரசுத் தலைவராக போற்றியதை ஒரு பிஸினஸ் மேனாயிருந்த ட்ரம்ப் மாற்றி அந்த நாட்டின் குடியரசுத் தலைவரானது மாற்றம்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நிறுவனத்துக்குமே பணிக்கு செல்லாத நான் கடந்த ஓராண்டுக்கும் மேல் பணிக்கு சென்று வருவது எவரும் எதிர்பாராத மாற்றம்...

இப்படி மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம் என்னும்போது ஏன் நதி நீர் இணைப்பு மட்டும் இந்தியாவில் நிகழாது? அதுவும் நிகழும்தானே?

குருவித் தலையில் பனங்காய் வைப்பதாக ஒரு பக்கமும், ஏன் எடப்பாடி, மோடி, ஓ.பி.எஸ் போன்றவர் எல்லாம் மாநிலம், நாடு ஆகியவற்றை ஆளும்போது எனக்கு அந்தத் தகுதி இல்லையா? எனக் கேட்டுப் பார்த்தேன்
நதிகள் இணைப்புக்கு ஏன் நான் தலைவனாகக் கூடாது என்றுக் கேட்டுப் பார்த்தேன் நண்பர் ஒருவர் தலைவரை வேறு எங்கும் தேடாதே, நீ தான் தலைவர் என்றார். அன்று இரவு உறக்கமில்லை. உறங்கிக் கிடந்த நெருப்பு விழித்துக் கொண்டது



நதிகள் நீர் இணைப்பு இயக்கம்
நதிகள் நீர் இணைப்பு இயக்கம் பேஜ், குரூப் என முக நூலில் ஒரு சமூகத் தளத்தை ஏற்படுத்தி உள்ளேன். இணைவார் இணையட்டும். கலைப்பார் கலைக்கட்டும், போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்.

தாழ்வான இலக்கு என்பதே குற்றம் என்பார் எனக்கு முன் மாதிரியான தலைவர் டாக்டர். அ.ப.ஜெ.அப்துல் கலாம்.

இன்பினிட் ஜீல் மனிதருள் அளப்பரிய ஆற்றல் அளப்பரிய சக்தி புதைந்து கிடக்கிறது என்பார் விவேகானந்தர். அப்படி தோண்டிக் கொண்டே இருப்போம் அந்த இலக்கை நோக்கிய கிணற்றை ஊற்று என்றாவது கிளம்பட்டுமே..

வயது எப்போது இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கும் அதன் இலக்கை\
அது எனக்கு இப்போதிருந்து என்று எடுத்துக் கொள்ளலாமே...

எம்மால் முடிந்த வரை செய்து வைக்கத் தவறமாட்டோம்,அந்த நதி நீர் இணைப்பு என்பது அண்டைய நாடுகளுடன் தொடர்பு என்று இருந்தாலும் சரி, பிற மாநிலங்களுடன் தொடர்பு இருப்பதானது என்று இருந்தாலும் சரி, அரசு, கட்சிகள், நிர்வாகம், அறக்கட்டளைகள், கோவில்கள், சமஸ்தானங்கள், மாபெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள்  ஆகியவற்றுடன் மாற்றுக் கருத்துகள் கொண்ட எதிர்ப்புகளுடன் இருந்தாலும் சரி

இந்த நாட்டின் இந்த தமிழ் நாட்டின், இந்த காவிரிக் கரையின் மேல் பிறந்து காவிரி நீரைக் குடித்து வளர்ந்ததற்கு ஏதாவது நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா, யாராவது இப்படி குடிநீருக்கு இல்லாமல், பாசன நீர் இல்லாமல் இருப்பது  பற்றி அன்றாடம் பிரார்த்தனை செய்து இயற்கையிடம் இறைஞ்சியிருக்கிறீர்களா? அப்படி இருந்தால் அவர்களுடன் நானும் இருக்கிறேன்.

கண்களில் கண்ணீர் சிந்த நெக்குருகி அழுது, இராமலிங்க வள்ளல் தம் பாடலில் சொல்லியபடி வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிகவாடினேன் என்று சொல்வது போல  நான் உருகி இருக்கிறேஎன்.

இந்தத் திட்டம் மட்டும் நிறைவேற்றி விட்டால் அந்தத் தலைவர்
ரஷியாவின் லெனின் போல‌
வியட்நாமின் ‍ஹோசிமின் போல‌
கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ போல‌
சீனாவின் மாவோ போல‌
சிங்கப்பூரின் லீ குவான் யூ போல‌
இந்தியாவில் தேசத் தந்தை என இருக்கும் மகாத்மா காந்தியை பின் தள்ளி இந்த இந்திய நாட்டை கட்டமைத்த மாபெரும் தலைவராக கொண்டாடப் படுவார் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

அமெரிக்காவில் இந்தத் திட்டம் நடந்திருக்கிறது
ஐரோப்பிய நாடுகளில் இந்தத் திட்டம் நடந்திருக்கிறது
ஏன் நம் நாட்டிலேயே ராஜஸ்தானில் நடந்திருக்கிறது
ஆந்திரத்தில் சந்திரபாபுவால் நடத்தப்பட்டிருக்கிறது
இப்படி எல்லாம் நடத்தப்பட்டிருக்கும்போது ஏன் இந்தியா முழுதும் நடக்கக் கூடாதா? அந்த இந்தியாவின் நீர்ப்பாசனத் தந்தையான சர் ஆர்தர் காட்டன் 200 ஆண்டுக் கனவு மட்டும் நிறைவேறும் மாற்றம் வராதா என்ன? இந்த சர்தர் ஆர்தர் காட்டன் நம் நாட்டுக்கு செய்த சேவைக்காக அந்த ஆங்கிலேயெ நாட்டில் தண்டனை பெற்றதும் குடும்பத்தோடு விசாரணைக்குட்படுத்தப்பட்டு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டதும் சரித்திரம். அதன் அலை ஓயவே போவதில்லை வெற்றி என்ற இலக்கை எட்டும் வரை

நல்லவர்க்கு இறப்பே இல்லை



எனவே அவ்வப்போது அலையாக அலை அலையாக அனைவருள்ளும் எழுந்து அடங்கிக் கொண்டு போகும் இந்த மாபெரும் எழுச்சிக்கான முயற்சி அடங்காமல் சென்று  ஒரு நாள் நிறைவேறியே ஆக வேண்டும்தானே?

இந்தியாவில் உலகிலேயே மாபெரும் இளைஞர் சக்தி இருக்கிறது என்பதும், நமது நாட்டில் உள்ள இராணுவம், கப்பற்படை, விமானப்படை எல்லாம் 70 ஆண்டுமுன் இப்படியா இருந்தது இவை இன்று உலகிலேயே பெரும் சக்தியாக விளங்க வில்லையா? அவற்றை எல்லாம் பயன்படுத்தினால் சரியாக பயன்படுத்தினால் அதற்காகவே பயன்படுத்தினால் இந்த இலக்கை அடைய முடியாதா? நாங்கள் அவ்வப்போது இதைப்பற்றி எழுதினோம், பேசினோம், ஆனால் அதை ஒன்றை மட்டுமே பேசியும் எழுதியும் வந்திருந்தால் இந்த 17 ஆண்டுகளில் சில படிகள் ஏறியிருப்போம். ஆனால் ஆங்காங்கே விட்டு விட்டோம் ஆனால் இனி எமது மரணம் வரை இந்த தாகம் ஓயாது

எனக்கு ஏன் அந்தத் தகுதி இல்லையா? என உங்களுக்கு சான்றாக எனது சில குறிப்புகளை என்னப் பற்றிய குறிப்புகளைத் தருகிறேன். இந்த ஒரே கோரிக்கை மட்டும் நிறைவேற்றிவிட்டால் நிறைவேறி விட்டால் அதனுள் எல்லா கோரிக்கையும் அடங்கி விடும் நிறைவடைந்து விடும் என்பதால் இனி எங்கும் எப்போது இது பற்றியே மூச்சு விடத் தலைப்படுவோம். மூச்சும் பேச்சும் இனி அதுவாக இருக்கட்டும் .இல்லையேல் அந்த மூச்சும் பேச்சும் அதற்காகவே அடங்கிப் போகட்டும் என் கன்றின் கன்று எதிர்க்கட்டும், மறுபடியும் பூக்கட்டும்.... எனக்குள்ளும் குறை நிறை எல்லா மனிதரைப் போலவே இருக்கும் ஆனால் எடுத்திருக்கும் இந்த முயற்சி அதற்கான காரணம் அப்பழுக்கற்றது...வாருங்கள் அனைவரும் இந்தியாவை வளப்படுத்தும் ஒரு முழு முயற்சியை மேற்கொள்வோம், ஒரே எளிய முயற்சியை அடைய அடி எடுத்து வைப்போம்.

நன்றி வணக்கம்.

எனைப்பற்றிய சுய விவரம் இதோ:

கவிஞர் தணிகை
கவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்..பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து

இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி

11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து ஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த…. 
±É ¯Õš츢 ¯ÕÅ¡¸¢...

தெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்

முதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று

இந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு

நேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....

வேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...

இப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...

3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,

¦¾¡¨Ä측𺢸û, Å¡¦É¡Ä¢ Àò¾¢¡¢¨¸¸û °¼¸í¸Ç¢ý ¦ÅÇ¢îºõ ÀÄÓ¨È ¦ÀüÚ...

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...

சுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.