Monday, December 31, 2018

இயக்கத்தின் துவக்கம்: கவிஞர் தணிகை

இயக்கத்தின் துவக்கம்: கவிஞர் தணிகை





இங்கு வரவேண்டும் என்று நினைத்தீர்கள்
வந்தீர்கள்
கூடினோம்.

நினைவில் விதைகளை விதைக்கிறோம்
நினைவுகளுடன் கலைந்து செல்கிறீர்கள்
வாழ்க்கைப் புலத்துக்கு

நினைவுடன் வாழ்கிறீர்கள்
நினைவுதான் வாழ்க்கை
இயக்கம் அதன் சேர்க்கை.

ஒருமித்துக் குவியும் நினைவின் முனையில்
இலக்கை மறைக்கும்
எதிர்ப்புகள் பொசுங்கும்

நீங்கள் நினைவின் கேந்திரங்கள்
நல்லதை நினையுங்கள்
நம்மை நல்லவர் நினைக்கும்
காலம் தொடரும்
நாமிருப்போம் உடலின்றியும்!

             கவிஞர் தணிகை

இது எனது மனச்சிகரங்கள் கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு துளி.

நான் ஏன் இங்கு?
எதற்காக இந்த விருதுகள், புத்தகங்கள்
என்ற கேள்விகளை எனக்குள் கேட்டுக் கொண்டேன்
பயனாக‌

இந்தப் பின் வரும் கவிதையை
உங்களுக்காக‌
இந்நன்னாளின் நினைவுகளுடன்
படைக்கிறேன்.

30 01 1993....01. 01. 2019

தியேட்டர்களையும் தொலைக்காட்சிகளையும்
வணங்கும் நாடு  எங்கள் திருநாடு.

ஷோ கேஸ்களுக்கு
இதயத்தைக் கொடுத்துவிட்டு
உண்மைக்கும் மேன்மைக்கும்
புற முதுகு காட்டும் பூமி
எங்கள் பூமி

காக்கை குருவி கூட எங்கள் ஜாதி
என்று சொன்ன எம்மண்ணிலே
ஜாதி, மத, மொழி, இனங்கள் சொல்லி
செயற்கை பூகம்பங்கள்
நடத்தும் கூட்டம் எங்கள் கூட்டம்.

சீமைச் சாராயக் கடைகளுக்கு
நாட்டை எடை போட்டு
ஏழைகளின் தலைகளைக் கொடுத்துவிட்டு
மீட்க வழியின்றி " நீங்க நல்லா இருக்கணும்" சாமி
என சினிமாவாலேயே வாழ்த்துப் பாடும் துயரம்
எமது துயரம்

திரை நிழல்களிடம் நீதியை தொலைத்து விட்டு
வீரத்தையும், காருண்யத்தையும் காதலையும்
வாழ்விலிருந்தே விலக்கி வைத்த
நடைமுறை எங்கள் வாழ்வின் முறை.

எங்களுக்கு சினிமா அரசியலானது
(அரசானது)
சினிமா இலக்கியமானது
சினிமா வாழ்க்கையாகுமா?

இந்நிலையில்
நான் புத்தகங்களுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
ஒரு புத்தகம் வாங்கும் காசில் ஒரு சினிமா பார்க்கலாம்
என்கிறது கல்லூரி எம் கல்லூரி.

வருடத்தில் வெளியான 156 ...1992ல்
2018ல் 184 தோல்வியானாலும் வெற்றியானாலும்
இது ஒரு முன்னேற்றம்
எங்கள் இளமைக் கனவுகளில்

வேர்களைப் பற்றித் தெரியாது
மண் சாரம் பற்றிப் புரியாது
வெள்ளைக் காலர் வேலைக்காகவே
அடம் பிடித்து அழும் குழந்தைகள்
நம் குழந்தைகள்

ட்யூசன் நடத்த ஆள் பிடிக்கவே
பயன்படும் பள்ளிகள்
எம் பள்ளிகள்

எளிய முறையில் ஏமாற்றும் லாட்டரிக்கடைகள்
எம் கல்வி நிறுவனங்கள்

நீதியால் அநீதி செய்யப்படும் நாட்டில்
சட்டம் சம்பாதிக்கும் திட்டத்தில் ஒளிந்து கொண்டது

பறவைகளும் விலங்கும் கூட‌
இனவிருத்தி செய்கிறது
இளையதை ஈடேறும் வரை அரவணைக்கிறது

மனித ஜீவனிடம்தான்
தெரிந்ததை பிறர்க்கு சொல்லவும்
அனுபவத்தை பகிர்ந்து தரவும்
பிறர்க்கென வாழ்வதும்
சாத்யமாகிறது

நினைவுகளை பூமி ரேகைகளுடன்
இட்டுச் செல்ல , பின்பற்ற விட்டுச் செல்ல‌
நூதன ஊடகங்கள் பல‌

அதில் ஒன்று எழுத்து
இறந்த காலத்தின் அனுபவத்தை
நிகழ்காலத்துடன் பொருத்தவும்
நிகழ்காலத்தை நெஞ்சில் இருத்தவும்
எதிர்காலத்தை திருத்தவும்

எனவே உண்மையோடும் மானுட நேயத்தோடும்
உங்கள் முன் நிற்கிறேன் என் புத்தகத்தோடு
அன்புத் தாகத்தோடும்.

காலவெளியில் என் சுவடும் பதிய வேண்டுமென்றும்
கவிதை மாநதியில் என் படகும் வலியதேயென்றும்....

இந்த விருதுகள், விழாக்கள், புத்தகங்கள்
வெளியீட்டின் உள்ளீட்டில்
ஒரு தாயின் காருண்யம்
ஒரு தனயனின் உழைப்பு
இரு பூவிழிகளின் புரிதல்
சம்மணமிட்டு அமர்ந்து மலர்ந்து சிரிக்கிறது.

 இந்தக் கவிதை சார்ந்த கரு...
எனது மறுபடியும் பூக்கும் முதல் நூல் வெளியீட்டு விழாவில்
30 01 1993ல் சற்று வேறுபாடுகளுடன் மேடைக்கவிதையாய் வெளிப்பட்டதே...

 கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை....


Saturday, December 29, 2018

சேலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரியில்: கவிஞர் தணிகை

 சேலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரியில்: கவிஞர் தணிகை

Image result for salem 8 arts college


கடந்த 27.12/2018 வியாழன் அன்று சேலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரியில் பல் பரிசோதனை முகாம் நடத்த சென்றிருந்தேன்.
அந்த முகாமை எங்களது விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியும் சேலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டமும் சேர்ந்து நடத்தியது.

முனைவர்: ஸ்ரீவித்யா, முனவைர் புனிதப் பிரியா இருவரும் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் மிக அக்கறையுடன் அந்தப் பணியை விரும்பி ஏற்றிருந்தனர். செய்து முடித்தனர்.

எங்கள் கல்லூரியின் சார்பாக பேரா.மரு. வினோலா துரைசாமி அவர்கள் என்னிடம் முதலில் தொடர்பு கொண்டு இந்த ஆண்டு முடிவிற்குள் நமது கல்லூரியின் முதல்வர், தேசிய சிறுவர் பல் மருத்துவ சங்கத்தின் தலைவர், பேரா.மரு.பேபிஜான் ஒரு பல் பரிசோதனை முகாமை நடத்தவும் தேசிய வாய் மற்றும் பல் பரிசோதனை கணக்கெடுப்பு ஒன்றை நடத்திடவும் கேட்டுக் கொண்டார் என அப்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க  அடியேனும் பொது சுகாதாரத் துறைத் தலைவர் மரு.என்.சரவணன் அவர்களிடம் பேசி கருத்தொருமித்து ஒரு நாளை நியமித்து சென்று முகாமை நடத்திக் கொடுக்கத் திட்டமிட்டோம்.
Image may contain: 4 people, people sitting
மரு. பரத் தலைமையில் 20 மருத்துவர்கள் சென்று சுமார் 1200 மாணவியர்க்கு பற்பரிசோதனை செய்து, முகாம் அனுமதி அட்டைகள் கொடுத்து அவை பெரும்பாலும் இலவச சிகிச்சைக்கு அவர்களுக்கு அனுமதி தருவதாகும்.

மேலும் சிறுவர் பல் மருத்துவம் சார்ந்த ஒரு கணக்கெடுப்பு படிவமும் கொடுக்கப் பட்டு அனைத்து மாணவியரிடமும் கேள்விகளுக்கு பதில் டிக் செய்து  திரும்பி பெறப்பட்டது.
Image may contain: 3 people, people sitting and indoor
இளங்கலை ஆங்கில பிரிவு மாணவியரிடையே முதன் முதலாக விழாவாக முகாம் துவக்கி வைக்கப்பட்டது. அதில் அரசினர் பெண்கள் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்: முனைவர். ரங்கசாமி இவர் ஒரு பார்வையற்றவர் என்பதும் அவரை அவர் மகளே உடனிருந்து கவனித்து தேவையான பார்வை தருகிறார் என்பதும் எம்மை பெரிதும் கவனத்தை ஈர்த்த நிகழ்வாக இருந்தது. அவர் துவக்க உரையாற்றிட, பேரா.மரு.வினோலா துரைசாமி, டாக்டர் பரத் மற்றும் பொது உறவு அலுவலர் என்ற முறையில் சு. தணிகாசலம் ஆகியோர் மாணவியரிடை சிறிய அளவிலான நேரத்தில் தமது கருத்துகளை பல் மருத்துவக் கல்லூரியின் சேவை பற்றிய வாய்ப்புகள் மாணவியர்க்கும் முகாம் பங்கெடுப்பாளர்க்கும் பகிர்ந்து கொள்ள...

காலையில் சுமார் 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முகாம் சற்றேறக் குறைய 4 மணி வரை தொடர்ந்தது.
Related image
மதிய உணவு, மற்றும் இதர உபசாரங்களை நாட்டு நலப் பணித்திட்டம் ஏற்றுக் கொண்டு செய்திருந்தது. பெண்கள் விடுதியின் உணவகத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகவும் இதம் தருவதாகவும் மனதை தொடுவதாகவும் அன்புடன் அவர்களின் விருந்தோபசாரம் இருந்ததை வந்திருந்த மருத்துவர்கள் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டு நன்றி பாராட்டினர்.

ஒரு முகாம் நடைபெற பல்வேறுபட்ட முயற்சியும் இணைய வேண்டி உள்ளது அதிலும் அது இது போன்று மனதில் இடம்பெறும் வெற்றியுடன் நடைபெற வேண்டுமென்றால அனைவரின் ஒத்துழைப்பும் மனமுவந்து வேண்டி இருக்கிறது.
Image may contain: 4 people, people standing and indoor
வாகன ஏற்பாடு செய்து தந்த எங்கள் வாகனத் துறையின் பிரிவு பொறுப்பாளர் பிரபு, ஓட்டுனர் சித்தார்த், நாட்டு நலப்பணித்திட்ட செவ்வரி ஆடை அணிந்த மாணவியர், தேசிய நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், இரு கல்லூரியும் சார்ந்த முதல்வர்கள் துறைத்தலைவர்கள் என். சரவணன், டாக்டர் சுரேஷ்குமார், பேராசிரியர் வினோலா , தேவையான பொருட்களை மறவாமல் எடுத்து வைத்த உதவியாளர் சித்ரா, அதற்கு ரெடிமேடாக சிறுவர் பிரிவுக்கான ப்ளக்ஸை அடித்துக் கொடுத்த எமது நிர்வாக அலுவலர்  நடராஜன் அவர்கள்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவை யாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரு முகப்பார்வையுடன் இருக்கும் அனைவரின் அன்பும் தேவைபடுகிறது வந்திருந்து சளைக்காமல் பணி புரிந்த மருத்துவர்கள் அமித் அஞ்சுஜா, ரிஷாந்த்,இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

ஒரு பேராசிரியர் ஒரு காரில் தமது பணி முடிந்து வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தார், இவரைப் பாருங்கள் என்றார் முனைவர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான ஸ்ரீ வித்யா...பார்த்தோம். அவர் சொன்னார் அவர் ஒரு கையால் மட்டுமே தனது காரை இயக்கிச் செல்கிறார் . ஏன் எனில் அவருக்கு இன்னொரு கை கிடையாது என...

இப்படி அந்தக் கல்லூரி நல்ல புதிய நினைவில் பதியும்படியான எண்ண அலைகளை உற்பத்தி செய்ய களமாக அமைந்திருந்தது. நிறைய அடர்ந்த மரங்கள்...ஒழுக்கக் குறைவு என்பது எங்கேயும் இல்லை...மரத்தடியில் மாணவியரை குழுவாக வைத்தும் பாடம் நடந்தபடி இருந்தது...

பாரதி கண்ட காண விரும்பிய புதுமைப்பெண்டிர் நிறைந்த களம் அங்கு சத்தமில்லாமல் உருவாகி வருவதை காணமுடிந்தது. அங்கு பல தனியார் நிறுவனங்களும் அங்கு அந்த பெண்களுக்கு பணி தர வருகிறார்கள் என்பதை அங்கிருந்த பதாகைகள் சொல்லியபடி இருந்தன....சுற்றுச் சுவருக்கு அடுத்த கட்டடம் சேலத்தின் வேலைவாய்ப்பு அலுவலகம்.

சேலம் 8  அரசினர் கலைக்கல்லூரி என்பது இந்த பெண்கள் கலைக்கல்லூரி பற்றியே குறிப்பிடுகிறது. சேலம் 7அரசினர் கலைக்கல்லூரி என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் பொதுவாக நடப்பது. அது ஏற்கெனவே பல காரணம் பற்றி சென்று வந்திருக்கிறேன் என்றாலும் இந்தக் கல்லூரிக்கு சென்றது இதுவே முதன்முறை இந்த வாய்ப்பை எனது பணி சார்ந்த நட்புகள் தந்திருப்பது பற்றி உளபடியே பெருமையும் மகிழ்வையும் அடைகிறேன் மறக்க முடியா நாட்களில் அதுவும் ஒன்று. எல்லாமே புதிதாக புது பொலிவுடன் இருந்தது தெரிந்தது எனது பார்வையில்.
Image may contain: 3 people, people sitting and indoor
கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை...

Tuesday, December 25, 2018

இது போன்று நடந்து விடக்கூடாதே என்றுதான்...கவிஞர் தணிகை

இது போன்று நடந்து விடக்கூடாதே என்றுதான்...கவிஞர் தணிகை

Image result for road accidents are very huge numbers in india
"எப்போதாவது இது போல் நடந்து விடக் கூடாதே என்றுதான் எப்போதும் பெற்றோர்களும் ஆசிரியப் பெருமக்களும் பிள்ளைகளுக்கு வலியுறுத்தி சொல்லி வருகின்றனர். என்றாலும் இது போன்று சிலரின் வாழ்க்கை செய்திகளாகி விடுகின்றன. இந்தியாவில் வியாதிகளால் இறப்பவர்களை விட விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையே மிக அதிகம்.
எனவே எப்போதும் விழிப்புடன் இருங்கள் எப்போதும் கவனமாக இருங்கள்..."நன்றி வணக்கம்.

மேற் குறிப்பிட்ட வாசகங்கள்தாம் ஒரு தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து விபத்தில் இறந்த மாணவர் ஒருவரின் இரங்கல் கூட்டத்தில் நான் பகிர்ந்து கொண்ட சொற்கள்.

அந்த மாணவர் பல் மருத்துவக் கல்லூரி மாணவர். அவர் தந்தை எண்ணெய் வள நாடுகள் ஒன்றில் பணி புரிகிறார். மிகவும் சிறிய வசதியான குடும்பம்.அந்த மாணவர்க்கு இரு சக்கர மோட்டார் பைக் ஓட்டுவது என்றால் மிகவும் ஒரே பைத்தியம். அப்படிப்பட்ட அவருக்கு அவர் தந்தை கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கல்லூரியில் சில நாட்கள் வைத்திருந்து விட்டு தமது சொந்த ஊருக்குப் போய் பேருந்து நிலையத்திலிருந்து தமது தாயை வீட்டுக்கு அழைத்து வருகிறார். காரில் வரும் வழியில் கார் விபத்துக்குள்ளாகி இவர் அந்த இடத்திலேயே இறந்து விட இவரது தாய் ஐ.சி. யு... இன்டன்ஸிவ் கேர் யுனிட்...தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது ஒரு உண்மைச் சம்பவம். இதற்காகவே நான் முன் சொன்னது பேசியது.எது எப்போது எப்படி நடக்கிறது என்பது தெரியாமலே நடந்தேறிவிடுகிறது எனவே எப்போதும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியமாகிறது.

அந்த பேச்சை அந்தக் கல்லூரி துணை முதல்வர்கள் இருவர்,செக்யூரிட்டி, ஓட்டுனர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இரசித்து பாராட்டினர். ஆனால் பாராட்டு பெறுவதை விட அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்க்கு இனி இது போன்று நடந்து விடக்கூடாது என்று ஏற்படும் எண்ணம் ஏற்படுவதன்றோ சிறந்தது...

ஒரு மாணவி அன்று நீங்கள் பேசியதை வைத்தே நான் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது என வந்து நட்பு பாராட்டினார்

நேற்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன் அது ஒரு கிராமியப் பாதைதான். அங்கு ஒரு பெரிய பாலம் உண்டு. அதில் சுமார் 4 வாகனத்துக்கும் மேல் ஒரே நேரத்தில் பயணிக்கலாம் அவ்வளவு பெரிது. நான் இடது பக்கம் பாலத்தின் கைப்பிடி சுவர் அருகே வந்தபடி இருக்கிறேன் . அது இரவு நேரமும் கூட. திடீரென ஒரு இளைஞர் அவ்வளவு பெரிய சாலையில் வேறு வாகனம் ஏதும் இல்லாத நிலையிலும் எனக்கும் அந்த கைப்பிடிச் சுவருக்கு இடையே வந்து புகுந்து செல்கிறார். எனக்கோ பேரதிர்ச்சி.

அவர் குடிகாரரா, வேண்டுமென்றா செய்தாரா, தெரியாமல் செய்தாரா,  திட்டமிட்டு செய்தாரா,அவர்  எங்காவது மோதி சிதைந்து விடுவாரா என்றெல்லாம் என்னுள் எண்ண அலைகள்... இப்படி வாகனம் ஓட்டுகிறோம் என்ற பேரில் இந்த இளைஞர்கள் செய்யும் அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமல்ல...

இனி வரும் ஆங்கிலப் புத்தாண்டு செவ்வாய் இரவு இது போன்ற ஏராளமான விபத்துகளை காவல் துறை கையாள வேண்டி வரும். எனவே இது போன்ற ஆங்கிலப் புத்தாண்டில் இரவு நேரக் களியாட்டங்களுக்கு எல்லாம் தடை கூட விதிக்கலாம் . அதில் ஒன்றும் பெரிய தவறல்ல. அது ஒன்றும் நமது கலாச்சார விழாவல்ல.... ஆனால்  நல்லது சொல்வதை இந்த நாட்டில் யார் கேட்கப்போகிறார்கள்...தீபாவளி ஓரளவு கட்டுக்குள் இந்த ஆண்டு வந்துவிட்டது. அது போல் இது போன்ற திமிராட்டங்களும் கையாளத் தகுந்தபடி கட்டுக்குள் கொண்டு வரப்படல் வேண்டும்.

கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை.

Monday, December 24, 2018

ஏன் இப்படி நடக்கிறது? சாஸ்தாவா சென்னையா ஸ்ரீ சாஸ்தாவா? கவிஞர் தணிகை

ஏன் இப்படி நடக்கிறது? சாஸ்தாவா சென்னையா ஸ்ரீ சாஸ்தாவா? கவிஞர் தணிகை

Image result for private college, company and government ...

ஏற்கெனவே ஸ்டெரிலைட் முதலாளிகள் இப்படி எல்லாம் செய்வார்கள் என்றும், அரசின் காவல்துறை தலையிலும், வாயிலும் காதிலும் அரசுப் பணி என‌ குறி வைத்து பொதுமக்களைச் சுடுவார்கள் என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மருத்துவமனைகளில் சொல்ல‌, விஜய்காந்த் கட்சியை எந்த அணியுமே சேர்த்துக் கொள்ளத் தயாரில்லை என்பதும், ரஜினி புதிய தொலைக்காட்சி ஆரம்பிக்கிறார் என்பதும், மேகதாது மேக்கே தாட்டு ஆடு தாண்டும் கால்வாய் பக்கம் வழிமறித்து கர்நாடாகா அணையை தமிழக அனுமதி இல்லாமல் கட்ட முடியாது என நிதின் கட்காரி சொல்வார் என்பதையும் ( மத்திய அரசு அதற்கு வரைவுக்கான அனுமதி அளிக்கப்பட்டும் கூட) ஆஸ்திரேலியாவின் அணிக்கு அரிதான இருதய நோய் உள்ள சிறுவன் பதினைந்தாம் நபராக இருந்து அணிக்கு உதவித் தலைவராக இருந்து உதவி செய்வான்  தெலுங்கானா எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் ஆஸ்திரேலியா சிகரத்தை தொட்டு விட்டான் என்றும் பல்வேறுபட்ட செய்திகளின் தாக்கத்திடையேயும் ஒரு கேள்விப்பட்ட உண்மைச் செய்தி நெஞ்சை  விட்டு விலகவே மறுக்கிறது...

எம்.ஐ.டியில் படித்த அந்த அரிதான மாணவர் விரிவுரையாளர் பணிக்காக சென்னை ஸ்ரீ சாஸ்தா என்னும் பொறியியல் கல்லூரியில் விண்ணப்பிக்கிறார். பணி கிடைக்கிறது இவரது அசல் சான்றிதழ்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு பணியில் சேர்ந்து சுமார் 20 நாளில் இவருக்கு தாம் படித்த அதே எம்.ஐ.டியில் பணி ஆணை கிடக்கிறது அங்கு இவரால் நகல் சான்றிதழ்களை மட்டுமே சமர்ப்பிக்க முடிகிறது.

இனிதான் கதை ஆரம்பம். இந்தக் கல்லூரியை விட்டு இவர் அரசுக் கல்லூரி என்பதால் அங்கே வேலைக்கு மாறி செல்ல சென்று சேர‌ முனையும்போது அந்த தனியார் கல்லூரி 3 மாத ஊதியத்தைக் கேட்டிருக்கிறது . அதாவது பணி புரிந்த ஒரு மாதம் கழிந்தால் கூட இரண்டு மாத ஊதியத்தைக் கட்ட வேண்டும் என்கிறது.அப்போதுதான் அசல் சான்றிதழ்களைத் தர முடியும் அந்த நபர் பெற முடியும் என்கிறது

எம்.ஐ.டியோ விரைந்து உடனே அசல் சான்றிதழ்களை வந்து சமர்ப்பிக்கச் சொல்கிறது பணியில் சேர்ந்து கொண்டு எம்.ஐ.டியில் சற்று கால அவகாசம் கேட்டபடி இவர் முன் சேர்ந்த தனியார் கல்லூரியில் தமது ஏழமையை விளக்குகிறார்.

அதெல்லாம் இல்லை....முடியாது கட்டி விட்டு அசல் சான்றிதழ்களை பெற்றுச் செல்லுங்கள் என்கிறார்கள்... வீட்டுச் சூழ்நிலையோ என்னவோ, எவரிடமும் கடன் பெறவும் தயங்கிய அந்த படித்த மேதை  இந்தப் பொடித்தாக்குதலை சமாளிக்க முடியாமல்...
Image result for suicide
தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு வேளை காதல் தோல்வியாக இருக்குமா... எப்படியோ என்ன என்னவோ யோசித்து காரணம் சொல்லலம்...ஆனால் காரணம் இந்த அரசு தனியார் தனி மனித எதிர்ப்புக்கான தாக்குதல்தாம்.

எப்படியோ அந்த மேதையின் இழப்பு...ஒரு சட்டத்தை உருவாக்கி  இருப்பதாக செய்தி ...அதாவது இனி கல்லூரிகள் பணியில் சேர்வாரிடை அசல் சான்றிதழ்கள் கோரி கட்டாயப்படுத்தக் கூடாது என்று...வழிகாட்டிச் சென்றிருக்கிறார் இந்த மேதை தம் உயிரீந்து...டேய் நீ எல்லாம் பூமிக்கே பாரமடா...போய்ச் சேர்ந்ததே சரிதான்...வாழ்வே அனுபவம். போராட்டக் களமே வாழ்க்கை...

உன்னை நம்பிய குடும்பம், பெற்றோர் எல்லாம் என்னதான் செய்வார்கள்...

என்றுமே ஏட்டுச் சுரைக்காய்கள் கறிக்குதவுவதில்லை...

சரி அதை விடுங்கள்...இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றன...ஒருவர் இறந்து செய்தி ஆன பின் தாம் இவை விழிக்குமா...தனியார் மயத்தால் என்ன என்ன விளைவுகள் என உண்மையிலேயே இதற்குத் தெரியாதா...
Related image
ஒரு பாமரன் என்னுடன் பேருந்தில் கோவையில் இருந்து சேலம் வந்தவர் சொல்கிறார் தனியார் இல்லை எனில் இலஞ்ச ஊழலில் முழுதுமே நாடு திருந்தி விடும் என்கிறார் அறியாப் பிள்ளை. ஆனால் அவர் கருத்து ஒன்றும் அப்படியே பிழையும் இல்லை.

கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை.


இப்படியும் சிலர் இருக்கின்றனர்:கவிஞர் தணிகை

இப்படியும் சிலர் இருக்கின்றனர்:கவிஞர் தணிகை

Image result for mentally disturbed
அவர் ஒரு நாகஸ்வர வித்வானாக இருந்து பார்த்திருக்கிறேன். நிறைய முறை அவர்களின் குழுவினருடன் பக்கத்து ஊர்களுக்கு எல்லாம் பயணம் செய்வதையும் பார்த்திருக்கிறேன். இப்போது அங்குலம் அங்குலமாக மட்டுமே காலை நகர்த்தி நடந்து வரும் முதுமை. அப்போதும் விடாமல் அதிகாலையில் எங்களது பேருந்து நிறுத்தத்தில் இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் சாலையைக் கடந்து வருகிறார் வாகனசாரிகளுக்கும் இவர் மேல் ஏதாவது வாகனம் மோதி விடப் போகிறதே என பார்ப்பவர் மனதில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வண்ணமும் அந்த அபாயம் நேர்ந்து விடக்கூடாது என்றபடி துடித்துக் கொண்டிருக்க...
Image result for mentally disturbed
இப்படி சாலையைக் கடப்பது மட்டுமல்ல பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் இப்படி காலை நகர்த்தி நகர்த்தி ஊர்ந்து வருகிறார். கையில் ஒரு தடி. ஏதாவது நாணயம் தென்பட்டால் கீழ் இருப்பதை குனிந்து எடுத்து பத்திரப்படுத்திக் கொள்கிறார். கீழ் தென்படுவது மட்டுமல்ல மண் புழுதியில் உள் புகுந்து கிடந்தாலும் அது அங்கே பேருந்துக்கு சில நிமிடம் காத்திருக்கும் நமக்குத் தெரிவதில்லை இவருக்குத் தெரிந்து அதை எடுத்து ஊதி எடுத்து வைத்துக் கொள்கிறார்.

பிறகு தான் அதை நம்மால் ஊகிக்கவே முடிந்தது. இந்தப் பெரியவர் இதற்காகவே பேருந்து நிறுத்தத்தில் விடாமல் ஊர்ந்து கொண்டிருக்கிறார் என்பதே.

புதிதாக பார்ப்பவர்கள், அல்லது அடிக்கடி பார்ப்பவர்கள் இந்தக் கிழவன் ஏய்யா இப்படி தினமும் நடந்து கொள்கிறான், என்னைக்காவது ஒரு நாள் வாகனத்தால் அடிபட்டு செத்து தொலைக்கப் போகிறான் பாரு என்று பலரது வாயிலும் வர ....ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர் தொடர்ந்தபடியே இருக்கிறார்.
Image result for mentally disturbed
இது இப்படி என்றால்: சேலத்தில் ஐந்து வழிச் சாலையில் நான் அடிக்கடி அல்லது தினமுமே ஒரு கட்டையான குட்டையான மிகவும் ஆரோக்யமான நல்ல உடல் வலுவுள்ள நடுத்தர வயதுள்ள மனிதர் ஒருவர் மஞ்சள் ஆடையை அணிந்து கொண்டு வலது கையில் கங்கணம் எனப்படும் மஞ்சள் துணியைக் கட்டிக் கொண்டு ஒரு பித்தளைச் செப்புக் குடத்துடன் பேருந்துக்கு நிற்பாரிடையே வந்து அம்மன் காணிக்கை கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு தினமும் அம்மன் அருளும் திருவிழாவும் உண்டு.

இன்னொரு முதியவள் தினமும் இந்தப்பக்கமிருந்து வரிசையாக கேட்டுக் கொண்டே செல்வார். தினமும் இது வாடிக்கையாக நடக்கும்

இன்னொரு நபர் இங்கு எங்கள் குடும்பத்திற்கெல்லாம் அவர்கள் குடும்பமே தெரியும் அவர் அந்தக் குடும்பத்தின் கடைசி ஆண்பிள்ளை. கூன் வளைந்து மிகவும் கரிய நிற ஆடையுடன் தூக்க முடியா ஒரு பை மூட்டையை தூக்கியபடி எங்கள் ஊருக்கு வருவார், அதாவது அவரது பிறந்த ஊருக்கு வருவார் மேட்டூர் அணை நோக்கி செல்வார். யாரையும் பிச்சை கேட்டும் பார்த்ததில்லை. ஆனால் தினமும் அவர் பாடு நடந்தபடியே இருக்கிறது. ஏதோ பேசிக் கொண்டே இருப்பார். ஒரு நாள் மகனது விளையாட்டு சீருடை ஒர் செட் எடுத்துக் கொண்டு சென்று போட்டுக் கொள்ளேன் என்றதற்கு வேண்டாம் பெரிய இவனா, கொண்டு வந்து கொடுக்கிறானாம், இவன் எல்லாம் கொடுத்து நான் போடுவேனா...என என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார் அந்த மனிதர்.

இது போல எல்லா நாடுகளிலுமே இருக்கிறார்களாமே...முன்னேறிய் நாடுகள் முன்னேறாத ஏழை நாடுகள் என்ற கணக்கு எல்லாம் இதற்கில்லை போலும்...

அடிப்படை உறவுகளின் பாதிப்புகள் தாம் இதற்கெல்லாம் காரணமோ...குடும்பமோ காதலோ குழப்பமோ என்னவோ போங்கள்...தெரிந்தவர் தெளிந்தவர் பிச்சை எடுக்க, குழம்பியவர் வீம்பில் மறுக்க அவர்களையும் எடுத்துக் கொண்டு இந்த் பூமியின் சுழலோட்டம்...
Related image
கவிஞர் தணிகை.

மறுபடியும் பூக்கும் வரை

Wednesday, December 19, 2018

என் தாய்த் திருநாடே நேசமிகு வீடே:


என் தாய்த் திருநாடே நேசமிகு வீடே:
வணக்கம்

Image result for I love india

சுமார்   135 கோடி புதல்வர்களாம் உனக்கு. இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கமல்ல நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் வீரியமற்ற மக்கள் தொகைப் பெருக்கமே காரணம்/
சாலையில் வீதியில் செரிமானத்துக்கு உணவுடன் கலந்து விழுங்க வேண்டிய உமிழ் நீரை துப்பி விட்டு அதைப்பற்றிய விளைவை அறியாமல் சுய நினைவில்லாமல் உனது மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்

விடியற்காலையில் பற்களைத் தேய்த்தபடியே பால் வாங்க வருகிறார் ஒரு அரசு அலுவலர் எச்சிலை துப் துப் என தார்ச்சாலையில் துப்பியபடியே ...
அந்த அதிகாலையிலேயே டீசல், கரி எஞ்சின் மாதிரி பீடியும், சிகரெட்டுமாக புகைத்து பொது இடத்தில் எவர் இருக்கிறார் இல்லை என்ற நிலை துளியுமின்றி இருக்கும் இடத்தை புகைமண்டலமாக்கி அடுத்தவரையும் நோயாளியாக்குகிறார் உங்கள் மக்கள்

எங்கள் ஊர் சுடுகாட்டருகே அரசு டாஸ்மாக் மதுபானக் கடை என்றும் ஜெ ஜெ என்று இருக்கிறது பக்கத்திலேயே சுடுகாடு இருப்பது ஒர் நன்மைக்கே
கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி பெற்றோர்க்கு பிள்ளையில்லமலே ஆகி விடுகிறார்கள். இதெல்லாம் உண்மைகள் கூச்சப்படாமல் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைகள்...

மகாத்மா ஆரம்பித்து வைத்த இந்த தூய்மை பாரதத்திட்டம் அவரைப்போலவே கிழடு தட்டிப் போய்விட்டதோ? இந்தக் கட்சிக்காரர்கள் எல்லாமே எல்லா கீழ் தட்டு மக்களுக்கும் நன்மை செய்வதாகச் சொல்லித்தானே பதவிக்கு வருகிறார்கள்...அதை எல்லாமே வாக்கு விகிதாச்சார முறைகளில் ஏன் பதவியையும் பிரித்துக்கொண்டு ஆளவரக்கூடாது? இவர்கள் ஆள்பவராக நாங்கள் இன்னும் ஆளப்படுபவராகவே இருக்கிறோம். எப்போது பதவிக்கு வருவது சேவை செய்ய  வருவதுதான் என உணர்தலும் புரிதலும் ஏற்படுகிறதோ அப்போது இந்தியா மேலும் உன்னத நிலை அடையும்.

இந்த பாரத நாட்டில் சிறுமிகளும், பெண்களும் வயது வேறுபாடின்றி பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொன்று குவிக்கப்படுகிறார்கள்.  இரையாகிறவர்களும், இரைக்கு குறிவைத்து வேட்டையாடுபவர்களும் உனது பிள்ளைகளே
Image result for I love india
பொருளாதாரத்தில் நான் மிகவும் பின் தங்கிய நிலையில்தான் வாழ்கிறேன் காமராசர், கக்கன், ஜீவா போல.எனது உடலுக்கு சேவை செய்ததன் காரணமாக ஏற்பட்டிருக்கும் பிணி என்னுடன் தொடர்கிறது. இப்போது என் உடலுக்கு ஏதாவது என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் மருத்துவக் கல்வி சார்ந்த தனியார் கல்லூரி ஒன்றில் பணி புரிந்து வருகிறேன். ஆனாலும் என்னிலையிலிருந்து நான் வீழ்வேன் என நீ நினைத்தாயா?

இந்த நாட்டின் ஆதிவாசிகளுக்கு , பழங்குடிகளுக்கு, மலைவாழ் மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் தம் வாழ்வை மேம்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத இன மொழி பேதமின்றி 1985 முதல் 1995 வரை மட்டுமல்ல ஏன் இன்று வரை கூட உழைத்து வருகிறேன். அப்படி கடுமையாக உழைத்ததன் விளைவாக தொழுநோய் முதல், மலேரியா, டைபாய்டு, உணவுக் குழல் தழற்சி, மூலம்  குடல்புண் இப்படீ தொடர்ந்த பிணிகளால் பாதிக்கப்பட்டு உடல் ஒத்துழைக்க மறுப்பதும் பேருந்துகளில் பணி முடித்து நின்று கொண்டு வருவதும் துன்பமாகத்தான் இருக்கிறது.

எனது இளமைப்பருவம் 25 வயது முதல் 35 வயது வரை நாட்டின் மிக உச்சமான சேவைக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 24 மணிநேரமும் அதற்கே செலவளிக்கப்பட்டது.அதற்காக நான் கடந்த ஆறுகளும், மலைகளும் துன்பங்களும், துயரங்களும் வெகு அதிகம். என்றாலும் டாக்டர் மாதவன் M.B.B.S. D.O,  எம்.பி.பி.எஸ் .டி.. என்ற நாமக்கல்லில் இருந்து வந்த மருத்துவர் ஒருவர் 1988ல் எல்லாப் புகழுரைகளையும் மீறி அப்போது அவர் கண்ட எனது உழைப்பை பாராட்டி வருகையாளர் பதிவேட்டில் இவருடைய உழைப்பும் மகாத்மா காந்தி , மதர் தெரஸா உழைப்பை போன்றதுதான் என வழங்கிய பாராட்டுச் சான்று நான் பெற்ற பாராட்டுகளிலே மகுடம் வைத்தது போலானது.

நான் இந்தியக் குடியரசுத் தலைவர் மக்கள் குடியரசுத் தலைவர் மேன்மைமிகு டாக்டர் ..ஜெ அப்துல் கலாம் அவர்களிடமிருந்து இலஞ்ச ஒழிப்பு பற்றிய அறிவுரையை கடித வழியாகப் பெற்றதும்,  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மேன்மை மிகு பி.என் . பகவதி அவர்கள் வீற்றிருந்த சபை மேடையில் கிராம முன்னேற்றப் பணிகளில் அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பு நிலை பற்றி சில நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசியதும் அதன் பின் அவருடன் ரிட்ஜ் நட்சத்திர அந்தஸ்து உணவகத்தில் உணவுண்டு கலந்தளாவியதும் எனது சேவைக்கு கிடைத்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள்.
Image result for I love india
இவை எல்லாம் பெரிய சாதனைகளா? என எவர் வேண்டுமானாலும் கேட்கலாம், இந்த நாட்டின் உண்மைக்குடி மக்களுடன் ஒரு உண்மையான குடிமகன் சந்திப்பதும், பேசுவதும், எழுதிக் கடிதங்கள் பரிமாறிக் கொள்வதும் நாட்டின் கிராம முன்னேற்றம் பற்றி சிந்திப்பதும் மிகவும் அவசியமானத்தேவைதான்.

நாட்டில் ஒவ்வொரு இளைஞரையுமே இது போல ஓரிரண்டாண்டாவது கிராம முன்னேற்றத்திற்கு உழைக்கச் சொல்லி பயிற்சி அளிக்க வேண்டும். அது இராணுவத்தில் சேருவதாக இருந்தாலும் சரி அதையே முன் தகுதியாகக் கொள்ள வேண்டும்.

இந்தியக் கிராமங்களில் இன்னும் வசதி வாய்ப்புகள், தொழில் நுட்பங்கள், தகவல் பரிமாற்றங்கள்,கலாச்சார நாகரிகம் எல்லாம் குறைவாகவே நகர் புறம் சார்ந்தே மருத்துவம் கல்வி போன்ற மனித வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையனைத்தும் பிரமிட் வடிவத்தில் குவிந்து கிடக்கின்றன.
எனவே அங்கே ஒவ்வொரு படித்த இளைஞரை, பெண்களை கொண்டு சென்று வாழும் நிலையைப் பற்றி பகிர்ந்து புரிந்து கொள்ள பொருளாதார்த்தில் கடைசித்தட்டு வாழ்வு எத்தகையது எனக் காட்டிக் கொடுக்க வேண்டும்...அங்கு சித்ரவதைப்பட்டுக் கொண்டிருக்கிற மக்களுக்கு எதாவது செய்ய முடியுமா என அவர்களை யோசிக்க வைக்க வேண்டும். சிந்திக்கட்டும் ஏதாவது செய்ய முயற்சிக்கட்டும் உழைக்கட்டும் பிறகு என் போன்றோரைப் பார்த்து எந்தக் கேள்வி வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் கேட்கட்டும்.

ஏன் இப்படி சொல்கிறேன் எனில் இன்று மக்களுக்கான சேவை செய்வதும், கிராம முன்னேற்றம் செய்ய முயற்சிப்பதும் அத்தனை கடினமான பணியாகியிருக்கிறது. ஆனால் இது இராணுவ பாதுகாப்புப் பணிகளை விட மிக முக்கியமானது. அப்படி சேவைக்கு தமது வாழ்வில் ஒரு பகுதியாவது செலவு செய்வாரை மட்டுமே உனது குடிமக்களாக நினைக்க வேண்டும் என்பதுதான் நான் சொல்வது அவ்ர்களைத்தான் மதிப்பிற்குரிய மக்களாகவே கருத வேண்டும்.Image result for I love india

மற்றபடி உன்னிடம் மாறுபட்ட கலாச்சாராம், மதங்கள், இனங்கள், மொழிகள், வித்தியாசமான காடுகள், மலைகள்,மண்வளங்கள், நீர் நிலைகள், விண்ணியல் சாதனைகள் , உலக அதிசயங்கள், விண்ணை முட்டும் கோபுரங்கள்,வானளாவிய கட்டடங்கள் இதெல்லாம் பெருமைக்குரியதுதான் ஆனால் அதன் மதிப்பை அறியாத மூட மாந்தரை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும்...பழங்கால சிற்பங்கள் மேல் சுண்ணாம்பை , வண்ணத்தை தீட்டி அதன் அருங்கலையை மூடி மறைப்பாரை என்ன வார்த்தை சொல்லி பாராட்ட இயலும்?

அடுத்து இந்த நாட்டின் பொருளாதார அமைப்பு என்பது சில மனிதர்களிடம் செல்வம் குவிந்து செல்வதும் அரசியலாரைக் கொண்டு அவர்கள் குனிந்து கொள்ளவும் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு நீக்க முடியாத பந்தம் உருவாகி நாட்டின் ஏழ்மை நிலையை மாற்ற முடியாது வளர்ந்து வருவதும்
தவிர்க்க முடியாததாகி உள்ளது.  எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வெண்மைபுரட்சி, பசுமைப்புரட்சி நீலப்புரட்சி என்றெல்லாம் செய்தாகிவிட்டது. அதனால் நமது இந்திய பாரம்பரிய விதிகளும், விதைகளும் நாசமாகிவிட்டன. நமது மஞ்சளை வாங்கி மவுத் வாஷில் கலந்து புதிய பிராண்டாக அமெரிக்க நாடு நமக்கே விற்பனை செய்து வருகிறது...இப்போது விவசாயத்துக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை. மாபெரும் ஆலைகளுக்கும் பன்னாட்டு நிறுவனஙக்ளுக்கும் அதன் முதலாளிகளுக்குமே வங்கிகளும், அரசுகளும் படியளக்கின்றன. அவை திரும்பி வராது என்று தெரிந்தே இவை நடக்கின்றன

இசையில் பெரும் சாதனை, சினிமாவில் சாதனை இவை எல்லாம் கீழ் மட்டத்தில் இருக்கும் பசியால் துடிக்கும் வயிறுகளுக்கு உணவாகிவிடப் போவதில்லை. பெட்ரோல் விலையும் பொருட்கள் விலையும், போக்குவரத்து கட்டணங்களும், சரக்கு வாகன வாடகையும் மிகவும் உச்சமாக உயர்ந்து வருகின்றன ஆனால் தனியார் கம்பெனி முதலாளிமார்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் பணி புரிவார்க்கு ஒரு பைசா கூட ஏற்றுவதாக இல்லை. மேலும் மனித வர்க்கத்துள் ஒரு சாரர்க்கு கற்பனை செய்ய முடியா மாத வருமானமும், பெரும் உடல் சார்ந்த உழைப்பை நம்பிய பிரிவினர்க்கு மிகவும் குறைவான கேவலமான மாத வருமானமும் கிடைக்கின்றன.

மனித உழைப்பும், மனித உயிர்களின் மதிப்பும் மிகவும் தாழ்ந்துவிட்டன.
மலிந்து காணப்படுகின்றன. சுயநலம் அனைவர் வாழ்விலும் ஊறிவிட்டது. தியாகச் சுடர்கள் ஏற்றி வைத்த சுதந்திர ஜோதி அணைந்து வெகுகாலம் ஆகிவிட்டது. உலகிலேயே மாபெரும் சிலையை வைக்க முடியும் நம்மால் சாதாரண மனிதருக்கு இன்னும் குடி நீரே கொடுக்க முடியவில்லை.

எதை எடுத்தாலும் வியாபாரம் என்றாகிவிட்டது. குடிநீரை விற்பனை செய்வது மது விற்பனையை விட பேராபத்து என்று அரசு அனைவர்க்கும் உணர்த்தும் நிலையில் அல்லாது அதுவே தவறான வழியில் சென்று கொண்டு அனைவரையும் தவறான வழிகளிலேயே செலுத்தி கேட்பாரற்ற சாம்ராஜ்யமாக நாட்டை மாற்றி வருகிறது.

எங்கு பார்த்தாலும் தனியார் மயம், உலக மயம் ஏற்பட்டு இந்தியா என்ற நாட்டின் தனித்துவம் அடியோடு அழிந்து பட்டுப் போய் விட்டது.
இந்த நாட்டின் நதிகளை இணைப்போம் என்று எப்போதுமே சில பெரியவர்கள் முயற்சி செய்தபடியே இருக்கிறார்கள். ஆனால் அதை இணைப்பது சாத்தியமற்றது என்றும், அப்படி இணைப்பது சுற்றுச் சூழலுக்கு ஆகாது என்று மற்றொரு குரல்கள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த நாட்டின் தேசப்பிதா மகாத்மா போன்றோர் கண்ட இராமராஜ்ஜியக் கனவில் மதமாச்சரியமற்ற பொருளாதாரத்தில் வறுமை யில்லா, போதைக்கு அடிமையாகாத பெண் சுதந்திரம் மற்றும் எல்லா மனிதர்களும் பாரதி சொன்னபடி ஒரே விலை ஒரே நிறையுடன் இருக்க வேண்டும் அதுதான் அவர்கள் நம் நாட்டின் அடிப்படைக்கு செய்த தியாகத்துக்கு பொருள். அது அடையாதவரை இங்கு நடப்பது எல்லாம் ஏமாற்று வேலை. அதற்கு ஒரே தீர்வு அதே பாரதி சொன்னபடி நதி நீரை இணைப்பது ஒன்றுதான்

அப்படி எந்த மகான் செய்கிறாரோ அவர் பேர் மகாத்மாவின் பேரையும் பின்னுக்குத்தள்ளும் இந்தநாட்டின் வலுவான தலைவர் என்ற பேரை படேலையும்விட நேருவையும் விட மக்கள் மனதில் சொல்லும்.
இந்த இந்திய  நாட்டின் நீர்ப்பாசனத் தந்தையாக விளங்கி தமது சொந்த நாடான இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று அபராதமும் தண்டனையும் பெற்ற சர் ஆர்தர் காட்டன் கனவு நிறைவேறினால் மட்டுமே அந்தப் பொருளாதாரச் சுதந்திரத்தை இந்திய மக்களாகிய உனது பிள்ளைகள் அனைவரும் எட்ட முடியும் இல்லாவிட்டால்  மாதமொன்றுக்கு 300 கோடி அம்பானிமார்கள் ஈட்டிக்கொண்டிருக்க தமது கோடீஸ்வர மதிப்பில் உயர்ந்தபடியே இருக்க எம் போன்ற சேவை செய்யும் நாட்டுப் பற்றாளர்கள் செத்து சுண்ணாம்பாய் ஆவதுதான் எப்போதும் நடந்தபடி இருக்கும். இதுதான் உனக்குத் தேவையெனில் பாரத நாடே, தாய்த்திரு நாடே இப்படியே நீ எதையும் கண்டுகொள்ளாதிருக்கும் நீதி தேவதை போல நீயும் கண்டும் காணாதிரு. உறங்கிக் கொண்டே இரு...

சு. தணிகாசலம்