Saturday, September 29, 2018

என் தாய்த் திருநாடே உனக்கு ஒரு கடிதம்: கவிஞர் தணிகை

அஞ்சல் வழி தபால் போட்டியும்,தொலைத் தொடர்புத் துறையும்: கவிஞர் தணிகை

Related imageஎன் தாய்த் திருநாடே உனக்கு ஒரு கடிதம்

 அது ஒரு காலம் தகவல் தொடர்புத் துறை என்ற ஒரு துறையின் கீழ் தபால் தந்தி துறையும், தொலைத் தொடர்புத் துறையும் இருந்தன. வானொலிக்கு லைசன்ஸ் கட்டுவது அங்கேதான், சைக்கிளுக்கு பாஸ் போடுவதும் அங்குதான் ஆரம்பத்தில் இருந்தது. அதன் பின் தான் அதை ஊராட்சிக்கு மாற்றியதாக நினைவு. டெலிபோன் பில் கட்டுவது அங்கேதான், அப்போது டெலிபோன் வைத்திருப்பார் என்றால் அவர் சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் உள்ளவர் என்று அர்த்தம். போன் பேசுவதே மிகப் பெரிய செயல்...ஆனால் அவை எல்லாம் காலப்போக்கில் மாறி ஒவ்வொருவரும் ஒரு காமிராவை கையில் வைத்தபடியே எங்கிருந்தாலும் அவரை நேரடியாக பார்ப்பது போலப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருக்குமளவு மிக முன்னேறி இருக்கின்றன தகவல் தொழில் நுட்பங்கள் இந்த மொபைல் செல்பேசி காலத்தில்.

Related image

 தபால் அலுவலகத்தில் அப்போதெல்லாம் பல பணிகள் இருக்கும் அதில் இப்போது தந்தி என்ற பணி  இல்லை. தபால் துறை அதாவது அஞ்சல் வழி தொடர்புத் துறை தனியாகவும், தொலைத் தொடர்புத் துறையில் பி.எஸ்.என்.எல் மட்டும் அரசு சார்ந்த நிறுவனமாக இருக்க...மற்றெல்லாம் தனியார் வசம்.  அதற்கும் அடுத்த நிலையில் ஊடகத்தில் பத்திரிகை, வானொலி,தொலைக்காட்சி இவை எல்லாம் செய்தி ஊடகத்துறையில் இருக்க, பத்திரிகை யாவும் வியாபாரம், மார்க்கெட்டிங் என ஆலாய்ப் பறந்து ஃபிட்டஸ்ட் ஈஸ் சர்வைவல் என படாத பாடு பட்டுக் கொண்டிருக்க‌
Image result for postal department functions are reducing day by day
 அதில் இப்போது சமூக வலை தள ஊடகங்கள் ஊடுருவி எல்லாவற்றையும் மாறுதல் செய்து விட்டன. மின்னஞ்சலும் கூரியரும் தபால் துறையை மிகவும் தேய்த்துவிட்டன. பொங்கல் மற்றும் வாழ்த்து பரிமாற்றங்கள் எல்லாம் ஒரு காலத்தில் தபாலில் தான் நடைபெற்றன. அப்போது விழாக்காலங்களில் உரிய நேரத்தில் தபால்காரரை பிடிக்க முடியாது. எப்போதுமே அவரை கையில் பிடிக்க முடியாது. இப்போதும் ஓய்வூதியதாரர்களிடம் இவர்கள் பணி இருக்கிறதோ என்னவோ...தெரியவில்லை. இந்நிலையில்:

 30.09.18 அன்று கடைசித் தேதி: என் தாய்த் திருநாடே உனக்கு ஒரு கடிதம் என்ற உள் நாட்டு அஞ்சல் கவரில் 500 வார்த்தைகள் அளவில் எழுதி அனுப்பவும் அதற்கு மேல் கவரில் எழுதி அனுப்ப 1000 வார்த்தைகளிலும் எழுதலாம் என்று பெரும் பரிசுகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் உண்டு என‌  சேலம் ரயில்வே சந்திப்பின் அருகே உள்ள சூரமங்கலம் தலைமைத் தபால் நிலையத்தில் ஒரு விளம்பர பதாகை பார்த்தேன். நாம் தபால் காலத்தில் இருந்து வளர்ந்தவராயிற்றே...எனவே

உடனே அதை செயலாக்க எண்ணினேன். மறு நாள் சென்று ஒரு கவர், மற்றும் ஒரு இன்லேன்ட் கவர் உள் நாட்டு தபால் கவர் வாங்க கல்லூரி நேரம் முடிந்து ரயில் ஏறும் நேரத்துக்குள் வாங்கிக் கொள்ளலாம் எனக் காத்திருந்தேன். எனது 10 ரூபாயை செலவளிக்கவும் அதற்காக எழுதி அனுப்பவும் மனதளவில் என்னை நானே தயார் செய்தபடி இருந்தேன்.

26 அன்று மாலை தபால் நிலையம் உள் சென்று தபால் கவர்கள் வாங்க முற்பட்டேன்.

அந்த தபால் தலை மற்றும் கவர் விற்பனையின் வழக்கமான இருக்கை காலியாக இருக்க மற்றொரு இருக்கையிலிருந்தவர் வேறொரு இருக்கையை சுட்டிக்காட்டினார். அதுவும் காலியாக இருக்க காத்திருந்தேன் . நேரம் மாலை 5 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

நல்ல வேளை அந்த முன் சொன்ன நபரே வந்து என்ன வேண்டும் என எடுத்துக் கொடுத்தார். மனமுவந்து ஒரு காலத்தில் பல செய்திகளையும் தபால் மூலமே பெற்று வாழ்வை நகர்த்த தபால் தந்தி துறையை பெரிதும் சார்ந்து வாழ்ந்து இருந்ததால் நன்றிக்கடனாக 10 ரூ செலவு செய்வதுடன் அதற்காக எழுதி அனுப்பவும் தயார் செய்தேன். 500 வார்த்தை மற்றும் 1000 வார்த்தைப் பிரிவு இரண்டிலுமே கலந்து கொள்ள எழுதியதை எடுத்துக் கொண்டு அத்துடன் மற்றொரு பார்சலையும் எடுத்துக் கொண்டு 28.09.18 அன்று உள்ளூரில் உள்ள தபால் நிலையம் சென்று பார்த்தால் அந்த சேட்டிலைட் போஸ்ட் ஆபிசில் அந்த அம்மா டிவி பார்த்தபடி எந்த அஞ்சல் வில்லையும் கிடைக்காது என்றார். ஏதோ வேலைநிறுத்தம் போலும். இராமன்நகரிலும் இருக்காது என்றார். அதுதான் அவரது தலைமையகம்.

எனவே மேட்டூர் ஆர்.எஸ் போங்கள் என்றார். அங்கே சென்று வர எனக்கு டவுன் பஸ்ஸில் ரூ 10 இதர செலவு அது வேறு.

அங்கே சென்றால் பெட்டியில் நமது தபாலை போடமுடியாதபடி யுனைட்டெட் இன்சூர்ன்ஸ் தபால்கட்டுகள் முட்டிக் கொண்டிருந்தன. என்றாலும் அதிலேயே போடச் சொன்னார்கள்...அவ்வளவு பெரிய அலுவலகமாக இருந்த அது  சிறுத்து மாடியில் முதியவர் எவருமே ஏறி எளிதில் போகமுடியாதபடி  சிறியதாகி இருந்தது.

ஒரு காலத்தில் கெமிகல் கம்பெனி வளாகத்தில் கொடி கட்டிப்பறந்த அந்த தபால் நிலையத்தில் எவருமே இல்லை.நான் சென்று அஞ்சல் பொட்டலம். அதாங்க ரீஜீஸ்டர்ட் பார்சல் என்றேன். அவர் செல்பேசியை பார்த்தபடி இருந்தவர் தபால் கவரை ஆட்டினார், எனது பழைய கவர் ஆதலால் உடனே கிழிந்து போய்விட்டது...அது உடனே 30.09.18க்குள் போகவேண்டி இருப்பதால் அவசரம் ஆத்திரமாக பதற்றத்தில் புத்தகங்களை கடிதத்துடன் சேர்த்து ரப்பர் பேண்ட் போடாதது உறுத்திற்று.

நான் நிலையை விளக்கிச் சொன்னதால் அது நான் தேடி வந்திருக்கும் 3 வது அலுவலகம் என்றும் டவுன்பஸ்ஸில் மீண்டும் சென்று திரும்ப வேண்டும் என்றதாலும் அவரே ஒரு உதவிப் பெண் பணியாளரை அனுப்பி சலஃபான் டேப் ஒட்ட வைத்து சரியாக கிழிந்த இடத்தில் எல்லாம் ஒட்ட வைத்து பார்சலை பெற்றுக் கொண்டார். அது ஒழுங்காக போய்ச் சேருமா என இன்னும் எனக்கு சந்தேகம் உள்ளது..

பரிசு கிடைத்தாலும் இல்லையென்றாலும் நினைத்த பணியை முடித்தால்தான் எனக்கு ஒரு நிறைவு திருப்தி தூக்கமே வரும்...
Image result for postal department functions are reducing day by day
முன்னால் தெரிவதையெல்லாம்
முகம்
என்று நம்பிய‌
நான்
தற்போது
தபால் பெட்டியையும்
சந்தேகிக்கிறேன்

எப்போதோ தணிகை எழுதிய சில வரிகள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு.: நிலை இவ்வாறு இருக்க நமது பி.எஸ்.என்.எல் நாயகர்கள் தினமும் 24 மணி நேரம் வாய்தா வாங்கியபடியே காலம் தள்ளி வருகிறார்கள் அந்த எடுத்த எனது 7 ரூபாயை எனது கணக்கில் கட்டுவதற்கு..

சேலம் ரயில்வே சந்திப்பின் வணிக மேலாளரிடமிருந்து எனது மேட்டூர் பயணிகள் ரயில் நேரமாறுதல் குறித்தான  புகாருக்கு பதில் வந்திருக்கிறது

Friday, September 28, 2018

இந்தியக் காமக் கதவு மேலை நாடுகளின் போக்கிலே முற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது: கவிஞர் தணிகை

இந்தியக் காமக் கதவு மேலை நாடுகளின் போக்கிலே முற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது: கவிஞர் தணிகை

Image result for indian sex gateway today opened

நிறைய போராடுகிறார்கள் அவர்கள் எல்லாம் அமெரிக்க கைக்கூலிகள் இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் ஊறு செய்யும் அவர்களை ஒதுக்கி விட வேண்டும் என்றார் நண்பர். ஆனால் ஓரினப்புணர்ச்சி ஏற்புடையது, என்றும் மணத்துக்கு மாறிடும் மாற்று உறவு குற்றமாகாது என்னும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கவனித்தால் அது அமெரிக்கா ஐரோப்பிய வழிகளில் செல்ல ஆரம்பித்துள்ளதை தெளிவாக உள்ளங் கை நெல்லிக்கனியாகவே காணலாம்.

அய்யப்பன் கோவிலுக்கு அனைவரும் செல்லலாம் என்ற தீர்ப்பை வரவேற்கும் அதே சமயம்...இந்த  கள்ளக் காதல், நல்ல காதல் , திருமணம் பந்தம் மீறி பிறர் மனை சாரும் காதல் தவறல்ல ...தற்கொலைக்கு இட்டுச் செல்லும் வரை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி பேசாதார் இல்லை. இன்றைய ஊடகத்தின் டாக் ஆப் தி சப்ஜெக்டே முக்கியமாக இதுதான். நானும் ஏதாவது சொல்ல வேண்டுமே...எனது சொந்தக் கருத்து எப்படி இருந்தாலும் ஒரு சமுதாயம் ஒழுங்காக இருக்கும் சிறப்பை தக்க வைக்க வேண்டுமெனில் தியாகம் அவசியம்,அதன் வழிகாட்டுதல் நல்ல மேம்பட்ட அமைப்புக்கு இட்டு செல்ல வேண்டியதாகவும் இருக்க வேண்டும். அதை சுட்டிக் காட்டும் கடமை ஆள்வோர் அமைப்புக்கு உண்டு. அதுதான் நல்லாட்சி, நல்ல தீர்ப்பு.

சந்தேகம் வரும்போதெல்லாம் நாம் திருவள்ளுவனை திருப்பிப் பார்ப்பது, திரும்பிப் பார்ப்பது வழக்கம்.

Related image

அதில் பிறனில் விழையாமை என்ற அதிகாரம் எண் 15 இதைப்பற்றிய பத்து குறளில் வித விதமாகச் சொல்லும்.குறள் எண் 141 முதல் 150 வரை. அதில் ஒரு குறள்: பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு என்பார் பொருள் : பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை,சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று நிறைந்த ஒழுக்கமாகும் என்பது.

 அது சரி அது சான்றோர்க்குத் தானே. நமக்கென்ன நாம் சான்றோரா என்றும் கேள்விகள் இருக்கும்.

இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் காலக்கெடுவுக்குள் இப்படி முடித்திருக்கவே தேவையில்லை . மாறாக இது பற்றி ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கவே வேண்டாம். அவற்றை பேரறிவாளன் மற்ற 7 பேர் வழக்கை விட்டதுபோல கை கழுவி விட்டிருக்கலாம். அதன் பொறுப்பை எல்லாம் கை கழுவி  விட்டு விட்டு இது போன்ற வழக்கில் திட்ட வட்டமாக வரையறுத்து தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள்.

அது ஒன்றும் நடக்காமல் இல்லை. அறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்டவரிடமும் கலைஞர் என்று அழைக்கப்பட்டவரிடமும், பெரியார் மற்றும் அவரது கழக வாரிசுகள் அனைவரிடமும் மட்டுமல்ல எம்.ஜி.ஆர், ஜெ ,மோடிஜி எல்லாருமே குடும்ப வட்டத்தை மீறிய கட்சிகளின் தலைமையில் இருந்தாரே..நாட்டின் தலைமைப்பதவியிலும் இருந்தாரே...

    .பொதுவாகவே எல்லாத் தரப்பிலுமே, துறைகளிலுமே பொது மக்களிடமும் நடந்து வருவதுதான். இருந்தாலும் இலை மறை காய் மறையாக இருந்ததை இப்போது பெரு வாயிலை திறந்து விட்டது போல விட்டு விட்டார்கள். நாட்டுக்கு இருந்த பெரும் பொறுப்பு புகைப்பது, மது குடிப்பது, ஆகியவற்றின் மேல் இருப்பதை கை கழுவி விட்டது போல மக்களுக்கு வழி காட்ட வேண்டிய நெறியாள்கை செய்ய வேண்டிய அரசமைப்பின் உச்ச அதிகார அமைப்பும் இதையும் பொறுப்பில்லை என தட்டிக் கழித்து இன்று வாசலை நன்றாக அகலமாக திறந்து விட்டுள்ளது.

இது பாரதிய ஜனதா அரசு என்று சொல்லும் அரசாட்சிக்கு ரஃபேல் விமான வியாபாரத்தில் கிடைத்தது போன்ற பெரிய அடி.... பெரும் தோல்வி. கலாச்சாரக் காவலர்கள் காதலர் தினத்தில் போய் அடித்து அசிங்கமாக நடந்து கொள்வார் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்...

இந்தியாவில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டு இதன் மூலம் அவிழ்க்கப்பட்டு விட்டது சட்ட ரீதியாக நீதி வழியாக. ஆனால் அவரவர் தனி மனித சுபாவம் பற்றி அவரவர் ஒழுக்க நியதிக்கேற்ப இது அமையும் என்றலும் இரண்டு பேரும் ஒத்துப் போனால் யாரும் எதுவும் செய்ய முடியாது...என்பார்கள் மதில் மேல் பூனை போல எதற்கும் துணிய முடியாதார் ஏமாந்த சோகத்தை தாங்கி தோல்வி பெற்ற வாழ்வு வாழ்ந்த விரக்தியில் வாழலாம் அல்லது சாகலாம். அல்லது அவரும் வேறொரு ஜோடி தேடலாம் இதையும் செய்ய முடியாது அதையும் செய்ய முடியாது இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தெ முடியலாம். இப்படி இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கும்போது நீ எது வேண்டுமானலும் செய் ஒன்றும் தப்பில்லை என தவறு செய்வதற்கு ஊக்கம் கொடுப்பதா நல்ல தீர்ப்பு? பெற்றோர்கள் பிள்ளைகளை கொஞ்சம் பயமுறுத்தி வைப்பது போல அல்லவா தீர்ப்பு இருந்தால் நல்லது.
Related image


இலக்கியத்தின் வழியே அவளுக்கும் அவனுக்கும் ஒத்துப் போனால் அது ஒரு பசி தீர்ப்பது போல்தான், தாகம் தணிப்பது போல்தான் தண்ணீர் குடிப்பதுபோல்தான் அதை செய்வதில் ஒன்றும் தவறில்லை என்ற எழுத்துகள் நிறைய உண்டு. அதன் வழியேதான் இந்த  தீர்ப்பும் தீப்பற்றியது போல வந்து நின்று இருக்கிறது இன்று.

ஆன்லைனில் மருந்து விற்கிறான் எங்களுக்குத் தொழில் பாதிக்கிறது என மருந்துக் கடைக்காரர் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து கடை மூடி இருக்கும் பிரச்ச்சனையை விட இது மிக முக்கியமாகப் போய்விட்டது...

அதுவும் வெளி நாட்டிலிருந்து ஒருவர் போட்ட வழக்கு இன்று முடிவுக்கு வந்து விட்டது... அதுக்காக அடிச்சிக்கிட்டு சாகாதீங்கடா, சரி சரி என‌ விட்டு விட்டுப் போங்களேன் போய் வாழுங்கள் எப்படியோ என்று சொல்லி இருக்கிற தீர்ப்பைப் பற்றி இன்று ஹல்லோ எப்.எம்மில் நேயர்களுடன் காலையில் கலந்துரையாடல்... ஆனால் காலை முதல் மதியம் வரை கமல் பாடல்களே ஒலித்துக் கொண்டிருக்கின்றன...அப்படி ஒலிபரப்பி வருகிறார்கள்... சட்டமும் நீதியும் சொல்லி விட்டால் மட்டும் என்ன இவர்கள் விட்டு விடப்போகிறார்களா என்ன?

குடும்ப அமைப்பு என்ற ஒன்றுதான் இந்த நாட்டிலே வலுவாக இருந்தது அதையும் இன்று சட்ட ரீதியாக நீதி வழியாக அடித்து துவம்சம் செய்து விட்டார்கள்...மகனும் மகளும் தாயை தந்தையை வேறு ஒருவருடன் தொடர்பு படுத்தி பார்க்க வேண்டிய தேவையை சொல்லி இருக்கிற தீர்ப்பு.
மணி ரத்தினம், பாலச்சந்தர் , பாரதிராஜா போன்ற பிரபல சினிமாத்தயாரிப்புகளும் ஏற்கெனவே செய்த சினிமா நீதி இன்று நாட்டின் சட்ட நீதியாகவே ஆகிவிட்டது.

அனைவரும் மகிழ்ச்சி அடையலாம்...

வேலை இல்லாதவனுக்கு வேலை கொடுக்க , சம்பளம் குறைவாக இருப்பார்க்கு சரியான சம்பளம் கொடுக்க , கல்வி மருத்துவம் அனைவர்க்கும் ஒழுங்காக கொடுக்க ஒங்க சட்டம் நீதி ஒன்றுமே சொல்லவில்லையே சொல்லி இருந்தாலும் செய்ய வில்லையே..அதற்கும் எதற்கும் ஒரு 70 அல்லது 80 ஆண்டுகள் எவராவது வழக்கு நடத்தி முடிவு கண்டால் விடிவு வருமோ...
Related image
ஜெ வழக்கு கர்நாடகாவுக்கு தோல்வி...ஜெவை குற்றவாளி என அறிவிக்க முடியாது என.. உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளதாம். அவர் இல்லாததால்... அந்த வழக்கின் முடிவையும் கவனியுங்கள் அதெப்படி அவர் குற்றவாளி ஆக இல்லாதபோது சசியும் இன்னொருவரும் பத்து கோடி அபராதமும் ஜெயில் தண்டனையும் பெற்று அனுபவிப்பது சரியாக இருக்க முடியும்...எங்கேயோ இடிக்கிதே... அவங்களையும் வெளியே அனுப்பி விடுங்களேன்...

 பெற்றவரே இப்படி நடந்து கொள்கிறார் என்னும்போது நாம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் எனப் பிள்ளைகளுக்குத் தோன்றுவதில் வியப்பென்ன இருக்க முடியும்? அல்லது அவர்களை இனி எவர் கட்டுப்படுத்தி நேரிய வழியில் செல்க என வழிகாட்ட முடியும்? இனி நாட்டால் அரசால் சட்டத்தால் நீதியால் எல்லாம் ஒன்றும் விளையப்போவதில்லை அவரவர் தனிமனித ஒழுக்கம் பேணாவிட்டால் எல்லாம் அரோகராதான்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, September 22, 2018

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL 7 ரூபாய் மோசடி VS KAVIGNAR THANIGAI.

 பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL VS KAVIGNAR THANIGAI.
 எனது யுத்தமும்  BSNL 7 ரூபாய் மோசடி & மோடி அரசின் நாணய வீழ்ச்சி காலமும்.  : கவிஞர் தணிகை
Related image


பல ஆண்டுக்கும் முன் பி.எஸ்.என்.எல் லுக்கும் எனக்கும் வலுவான மோதல். வெற்றி என் பக்கம் தான் ஏன் நியாயம் என் பக்கம்தான். அப்போதே சொன்னேன் ஒழுங்கா வேலை செய்யலைன்னா உருப்பட வழி இல்லைன்னு...இன்னும் அதன் செயல்பாடுகள் அப்படியேதான் உருப்பட வழி இல்லாம போன பின்னாலும்...

வெட்ட வெட்டக் குறையாத வருவாய்ச் சுரங்கத்தை தனியார்க்கு தாரை வார்த்துவிட்டு, சரியாக வேலை செய்யாமல், சரியாக நிர்வாகம் செய்யாமல் சரியான திறமின்றி பார்த் சஞ்சார் நிகாம் லிமிடெட்  தத்தளித்துக் கொண்டிருக்கிறது...

அப்போது ஒரு வில்போன் என்று கொடுத்தார்கள் ஏற்கெனவே ஒரு நிலவழித் தொடர்பு  தொலைபேசி இருந்தும் வாங்கிக் கொண்டேன். ஆனால் அது சரியாக எடுக்கவில்லை எனது வீடு பள்ளத்தில் இருந்ததால். உடனே அதைத் திருப்பிக் கொடுத்து விட்டேன். ஆனால் அதை வாங்கி வரவு வைக்காமல் குளோசர் செய்யாமல் பில் அனுப்பியே நோகடித்தார்கள். அத்துடன் யுத்தம் ஆரம்பித்தது...அது மண்டல மாநில அக்கவுண்ட்ஸ் மேலாளர்கள் கொண்ட குழுவினருடன் நீள்வட்ட மேஜை மாநாடாக...

பி.எஸ்.என்.எல்லின் அப்போதைய நடவடிக்கைகளை கடிதத்தில் சொல்லி இருந்தேன் அவர்களால் பதில் சொல்ல வழியின்றி. நான் சொன்ன தகவல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு கட்டிய பணத்தை திருப்பித் தந்துவிட்டனர்.

அதை அடுத்து அந்த வெறுப்பில் அகண்ட அலை வரிசை எண்ணையும் அதிலிருந்து அதை விட பில் கட்டணம் குறைவாக கொடுத்த ஒரு தனியார் கம்பெனிக்கு மாற்றிக் கொண்டேன். அதாவது அதை குளோஸ் செய்து.

மறுபடியும் அந்த தனியார் கம்பெனி அந்த சேவையை அந்த இடத்தில் தொடர முடியாததால் பி.எஸ்.என்.எல் சேவைக்கே புதிய சேவை எண்ணை பெற்றுத் தொடர்ந்து வருகிறேன்.

இது வரை சரிதான். அதன் பின் ஒரு செல்பேசிக்கான எண்ணையும் பெற்றேன். ஒழுங்காகவே சென்று கொண்டிருந்தது. திடீரென 18 ஆம் தேதி ஒரு கால் அது 114 என்ற முதல் 3 எண்களுடன் ஆரம்பித்திருந்தது...நான் கூட அது ஒரு டில்லி கால் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் ஏன் எனில் அது மோடீஜி சுவச் பாரத், சுச் கல்யாண், மன்கிபாத் போல ஹை ஹி என்று இருந்தது..நான் நேற்றே டில்லி என்றால் ஏமாற்றுதானா? என்ற பதிவில்  சொல்லியது போல ...இது அந்தக் கல்லூரியின் நோடல் ஆபிசராக கோடை உறைவிட தூய்மை பாரதப்பணியை பாலமலையில் 20 பல் மருத்துவரைக் கொண்டு செய்திருந்ததால்...அது குறித்து ஏதாவது இருக்கலாம் என நினைத்து அட்டன்ட் செய்தால்...அது ஹிந்திக்கு ஒன்று, தெலுங்குக்கு 2  என தமிழுக்கு 5 என வந்து  சொல்லிக் கொடுத்து வர நாம் தாம் கவிஞர் ஆயிற்றே புத்தக எழுத்தாளர் ஆயிற்றே... தமிழ் என்றவுடன் எண்ணை 5 அழுத்தி விட...உடனே 7 ரூபாய் பிடிக்கப்பட்டு விட்டது...அதாவது அவர்கள் கால் செய்து நமது எண்ணிலிருந்து கணக்கிலிருந்து காசை எடுத்துக் கொள்வாராம்.

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.. என்ன இது இப்படி ஆகிவிட்டதே என பொருமிக் கொண்டே இருந்தேன் இது ஏதோ டில்லி விவகாரம் என கனன்று கொண்டிருந்தேன்.

பிபின் என்ற எனது கல்லூரி மருத்துவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அதை சொன்னேன். சார் அது பி.எஸ்.என்.எல் விவகாரம்தான் அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்றார்...ஒ ஹோ...அப்படியா பார்த்துக் கொள்ளலாம் என...முடிவு செய்திருக்கும் வேளையில்...
Image result for confession


எனது மகனிடமிருந்து கோவையில் இருக்கிறார். ஒரு கால் வந்தது...உடனே அதை டச் ஸ்க்ரீன் தான்...எடுக்க முடியாமல் இந்த பி.எஸ்.என்.எல் லின் செய்தி மூடி இருக்க அந்த செய்தியில் உங்கள் 7 ரூபாய் 5 நாளுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது இதற்கு ஓ.கே கொடுங்கள் என்றிருந்தது...கொடுத்தவர்கள் ஓகே அல்லது நாட் அல்லது நாட் ஓகே என்று வாய்ப்பும் கொடுக்க வேண்டுமல்லவா...அதில் ஓகே கொடுங்கள் என்பது மட்டும் இருந்தது. அதை செய்தால் தாம் காலே நாம் அட்டன்ட் செய்து பேச முடியும் என்ற நிலை...

மகனுடன் என்ன ஏதோ, முக்கியமான விஷயமோ என அதை ஓக்கே கொடுத்து நகர்த்திவிட்டு காலைப் பேசி முடித்தேன்.

நான் 0.00 பேசியதாகவும் அதற்கு 7 ரூ எடுக்கப்பட்டிருந்ததாக இருந்து வந்த செய்தி என்னை உறுத்தியபடி உலுக்கியபடி இருந்தது..இதற்கெல்லாம் காரணம் எப்போதும் மிகக் குறைவாகவே இருக்கும் எனது செல்பேசியில் சில நாட்கள் முன்னால் எனது துணைவியார் ஒரு 15 அல்லது 20 ரூ போட்டு ஒரு 35 ரூ இருந்ததுதான்.

Image result for confession

ஆக அந்த 7 ரூ போக எனது கணக்கில் இப்போது 28 ரூ இருக்கிறது...இந்நிலையில் நான் 1500 வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொண்டேன் வழக்கம்போன்ற இழுத்தடிப்புக்கும் பின் அந்த பெண் இது லேன்ட் லைன் தொடர்பு வாடிக்கையாளர் பிரிவு சார் இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்றும் நீங்கள் 1503 எண்ணைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்

அதில் தொடர்பு கொண்டேன். உடனே வழக்கம்போல் தலையைச் சுற்றி காதைத் தொட்டு பேசினேன்...அவர் என்னால் எங்களால் ஒன்றும் முடியாது இதெல்லாம் மார்க்கெட்டிங் பிரிவுதான் சார் என்று சொல்லி விட்டு கன்ஃபெஷன் என்றால் என்ன என்றே தெரியாது என்று சொல்லி அவருக்கும் மேல் உள்ள ஒரு பெண் அலுவலருடன் தொடர்பு ஏற்படுத்தினார். காத்திருந்து பிறகு அவருடன் சத்தமுடன் ஒரு யுத்தம் நடத்தினேன்...உடனே புகாரைப்பதிவு செய்து கொண்டு 48 மணி நேரம் கால இடைவெளிக்குள் உங்களின் 7 ரூ வரவு வைக்கப்பட்டு விடும் என்று வேறு ஏதேனும் விளக்கம் வேண்டுமா என்று கேட்டு முடித்துக் கொண்டார். அந்த  புகார் எண்ணையும் குறித்துக் கொள்ளச் சொன்னார்கள். அது குறுஞ்செய்தியாகவும் வந்திருந்தது... கல்லூரியில் எனது உரையாடலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் கேட்டார்கள் விவரம் சொன்னேன்.

48 மணி நேரம் போயிற்று....ஆனால் அதற்குள் எந்த மாற்றமும் இல்லை எனவே அதற்கும் முன்பாகவே இவர்கள் வரிசை ஏற்கெனவே எனக்கு நன்கு தெரியும் ஆதலால் ஒரு மின்னஞ்சலும் வாடிக்கையாளர் பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை இல்லை எனில் தொலைத்தொடர்பு மற்றும் பி.எஸ்.என்.எல் நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் விவரம் கொடுக்கப்படும் என்றும் சொல்லி இருந்தேன்
Image result for confession
48 மணி முடிந்ததும் இன்று பார்த்தால் மறுபடியும் அவர்களிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி மறுபடியும் ஒரு 7 ரூ எடுத்துக் கொள்ள ஒரு 5 நாள் டைம் தருகிறோம் கன்ஃபெசன் சர்வீஸ் புதுப்பித்துக் கொள்க என்றும் இல்லை எனில் 155223 என்ற எண்ணில் தொடர்பு கொள்க என்று...

மறுபடியும் தொடர்பு கொண்டேன்...அந்த பெண் எனக்கு இதெல்லாம் தெரியாது சார், மேலிடத்துக்கு கொடுத்து தொடர்பு செய்கிறோம் விட்டு விடுங்கள் என்றும் கன்ஃபெசன் சர்வீஸ் என்றால் எனக்கு என்ன என்றே தெரியாது என்றும் சொல்லி விட்டார்.

இப்போது மறுபடியும் ஒரு ஆண் குரல்...அதே சத்த யுத்தம் அத்துடன் விவரம் கேட்டேன் 1.  48 மணி நேரம், 2. புகார் எண் என்ன ஆயிற்று...ஏன் 3 இப்படி மறுபடியும் குறுஞ்செய்தி என  அவர் முன்பு கன்ஃபெஷன் என்றால் என்ன என்றே தெரியாது என்று சர்வீஸ் விவரம் சொன்னவர் அப்படி சொல்லவில்லை அது ஒரு விளையாட்டு... என்றார். நான் பேசுவது பதிவு செய்யப்படுவதால் அலுவலகம் என்பதால் சற்று மட்டுப்பட்டு பேசச் சொன்னார்.

பேருந்தில் , ரயிலில் அவர் செல்லும்போது அவரது பணத்தை ஒரு திருடன் பிக் பாக்கெட் அடித்து விட்டு அவர் கையும் களவுமாக பிடித்து விட்டால் அவருடன் எப்படி பழகுவார் நானாவது காந்தியம் படித்ததனால் சற்று மிதமாக பேசுகிறேன்...

நான் எனது தரப்பு நியாயம் எல்லாம் சொன்னபிறகு அவர் அதை எல்லாம் ஏற்றுக் கொண்டு மறுபடியும் 24 மணி நேரம் தாருங்கள் சரி செய்து கொடுத்து விடுகிறோம் என கால அவகாசம் கேட்டுக் கொண்டார். நான் கேட்பதெல்லாம் அந்த 48 மணி நேர அவகாசமும்,முதல் புகார் எண்ணும் என்ன ஆயிற்று? அந்த மின்னஞ்சல் புகார் என்ன ஆயிற்று...அதெல்லாம் பயனின்றி..மறுபடியும் காசு எடுக்க அதுவும் நான் அந்த சர்வீஸ் கால் வரும்போதெல்லாம் அதைக் கட் செய்த பிறகும் மறுபடியும் புதுப்பித்துக் கொள்ளுங்கள் அல்லது இந்த எண்ணுக்கு அது டோல் ஃப்ரீயாம் பேசுங்கள் என்பதெல்லாம் என்ன கதை? என்ன குறுஞ்செய்தி...என்ன தகவல்கள்...

படிக்காத பாமரன், மொழியறிவு இல்லாதவன் , என்ன செய்வான்? என்ன பி.எஸ்.என்.எல் கொள்ளையடிக்கும் கூட்டத்தில் சேர்ந்து மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டதா?

விடவே மாட்டேன் அந்த 7 ரூபாய் கிடைக்காவிட்டால் இந்த செய்தியை  நாடு முழுதும் கொண்டு செல்வேன் அதற்குரிய மந்திரிக்கும் அதை தெரிவிப்பேன் கடைசி வரை போராடியே வெல்வேன் என்றும் இந்தப் பதிவை செய்கிறேன்
Image result for confession
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

P.S:

கன்ஃபெஷன் என்றால் விளையாட்டாம்...விளையாடிக் கொண்டிருக்க அதுவும் செல்பேசியில் விளையாடிக் கொண்டிருக்கத்தான் எங்களுக்கு நேரம் இருக்கிறதாம். அதுவும். காசு செலவு செய்தபடி...கன்ஃபெஷன் என்றால் வாக்குமூலம் ஒரு வேளை போனில் இவர்களுக்கு திருட்டு, கொள்ளை, நகை பறிப்பு, கற்பழிப்பு, கொலை செய்தவர்கள் இப்படிப் பட்டவர்கள் தங்கள் காசை செலவு செய்து வாக்கு மூலம் பாவ மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ பி.எஸ்.என்.எல் வழி செய்கிறதோ...நாடு திருந்த நல் மார்க்கம் காண்பிக்கிறதோ...பி.எஸ்.என்.எல்...தான் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாவிட்டாலும் இது போன்ற சேவையால்..இது சேவையா காசு பிடுங்கியபடி செய்யும் எதுவும் சேவையே ஆகாது...அது வேறு...நாட்டை நல்ல மனிதரை காப்பாற்ற...தீயவரை பாவ மன்னிப்பு கேட்க வைக்க சிறந்த சேவை அளிக்கிறதோ?..

கயமை இது டாக்டர் மு.வ வின் கதை அல்ல: கவிஞர் தணிகை

கயமை இது டாக்டர் மு.வ வின் கதை அல்ல: கவிஞர் தணிகை

Related image

Related image


மணி தினமும் அந்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக கடைசிப் பெட்டியில் கடைசி இருக்கையில் அமர்ந்து கொள்வதே வழக்கம்.
முன்பெல்லாம் கோவை , நாகை விரைவு வண்டிகளில் வரும் சோமு, மணிகண்டன், மாது, மிலிட்டரிக்காரர் ஆகியோர் அந்த பதினைந்து நிமிட பயணத்துக்காக அவனுடன் வந்து பேசிக் கொண்டிருந்து விட்டு ஓமலூரில் இறங்கிக் கொள்வதும் அதை அடுத்து மின் வாரியத்தில் பணி செய்யும் மாற்றுத் திறனாளி குப்புவும், மகளிர் அமைப்பில் எம்.டி ஆக இருக்கும் சந்திரகுமாரும் கடைசி வரை கம்பெனி கொடுப்பதாகவும் இருக்கும். ஆனால் இந்த ரயிலின் நேரம் இந்த சுதந்திர நாளுடன் மாற்றி முன் 5 மணிக்கு என்றாகி விட்டதால் எல்லா கூட்டணியும் சிதறி விட்டது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் போல.

கல்லூரி மாணவர்கள் மணிக்காக அந்த இடத்தை ஒதுக்கி விட்டு வேறு இடத்தின் உள்ள இருக்கைகளில் சென்று அமர்ந்து விடுவதும் வாடிக்கையான ஒன்று ...இப்போது நேர மாறுதல் காரணமாக அவர்களும் அதிகமாக காணப்படுவதில்லை.

அந்த நல்ல உயரமான உடல் வலுவான‌ அந்த மனிதன் வந்து அமர்ந்தான். வாயில் வெற்றிலைப்பாக்கு புகையிலை மெல்லுதலுடன். வந்தவுடனே என்ன சார் முருகன் வந்தானா? அவன் நேற்று நம்மிடம் வந்து வாங்கி சரக்கு அடித்து விட்டு சென்றிருக்கிறான், இன்று அவன் வாங்கித் தர வேண்டுமல்லவா? என்று அவனாகவே பேச ஆரம்பித்து விட்டான்

அவனைப் பார்த்தாலே மணிக்கு ஏதோ பிடிக்கவில்லை...

அவன் அரசு உத்தியோகத்தில் இருக்கிறானாம். ஒரு இலட்சம் மாசம் கிடைக்கிறதாம், இப்போது கூட கலெக்டர் மீட்டிங்கிற்கு சென்று வருகிறனாம்.

ஒரு இலட்சம் வாங்குகிறவன் ஒரு கூலிக்கு கோர்ட்டர் வாங்கி கொடுத்து சேர்ந்து குடித்து விட்டு, இன்று அவன் வாங்கித் தரவேண்டுமே எனத் தேடிக்கொண்டிருக்கிறாயே?

அவன் ஞாயிற்றுக் கிழமையில் கூட சென்று ஒரு கடையில் நிறுத்தல் அளவுகள் சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மாவட்ட ஆட்சியர் வந்து அவனை அவனது வேலையை என்ன எனப் பார்த்துவிட்டு அவனை அப்படியே அவரின் காரிலேயே கூட்டிக் கொண்டு சென்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்ததாகவும் ஞாயிற்றுக்  கிழமைகளில் கூட பணி செய்யும் இவனது பணி ஆர்வத்தை பாராட்டி அனைவருக்கும் சென்று சொல்லிப் புகழ்ந்ததாகவும் அளந்தான்.

மேலும் இவன் இலஞ்சம் ஏதுமே வாங்கவும் மாட்டானாம். முன்னாளில் மிலிட்டரியில் பணியில் இருந்தானாம். அந்த கசங்கிப் போன ஒரு தாளின் நகலைக் காண்பித்தான் அதில்...இவன் பேர் தவறாக இருந்ததைப் பார்த்தான்.

அது இந்திக்காரன்களுக்கு பேர் சரியாகத் தெரியாதில்லையா ...அதனால் இப்படி எழுதி விட்டார்கள். இதையும் கலெக்டரிடம் காண்பித்தேன் என்றான்/

ஒருவருக்கு கரும்புக்கடைத்திடல் செல்பேசி...நான் வருகிறேன்,எந்த ஆண்டில் புதுப்பித்தது, அந்த சான்றை என்னிடம் காண்பியுங்க‌ள்..எல்லாம் நான் செய்து தருகிறேன், உங்க பெண் குழந்தை கொடுத்த எண் ஆறுக்கு பதிலாக ஒன்பது போட்டேன் சரியாக தொடர்பு கிடைத்துள்ளது...நான் வருகிறேன் காலையில் வந்து பார்க்கிறேன்...என  ஒரு புறம் மிரட்டல்,ஒரு புறம் உதவுவது போன்ற நடிப்பு, இரையை சரியாக கவ்விப் பிடிக்கும் மிருகமாக எல்லாப் பக்கங்களிலும் அடைப்புக்குறிகளை அடைத்து சிக்கிய இரை தப்பி விடாமல் இருக்கும்படி மிகவும் சாதுரியமாகப் பேசினான்.

Image result for cheat corruption and bribe persons

நான் அங்கு தான் குடி இருக்கிறேன் என மணிக்குத் தெரிந்த ஊரையும் சொல்லி அடையாளப்படுத்திக் கொண்டான்...நீங்கள் என்ன ரயில்வேவா எனக் கேட்டான்....பொய் சொல்லவே விரும்பாத மணி அவனிடம் கல்வித் துறை என்று சொல்லி விட்டு மேலும் அவனுடன் பேசப் பிடிக்காமல் தமது இடத்தில் ஓடிக்கொண்டிருந்த போதே ரயிலில் இருந்து இறங்கத் தயாரனான்.


Image result for cheat corruption and bribe persons

இவனை ஏன் நாம் வெறுக்கிறோம் இவனுக்கும் நமக்கும் என்ன? இப்படி இருந்தால் எப்படி அனைவரையும் திருப்தி செய்து, அனைவர் ஒத்துழைப்பையும் பெற்று நாம் நாடாள்வது? தெரஸா சொன்னது போல ஒருவரின் குற்றத்தைக் காண ஆரம்பித்தால் அவரை நேசிக்கவே முடியாதே...

கருவறுக்க வேண்டும் களைகளை...நாடு நாடாக இருக்க வேண்டுமானால்...

ஒரு புறம் தெய்வீகமும் காந்தியமும், இன்னொரு புறம்...கம்யூனிசமும் அலையோட....மக்களுக்கு நீதி வழங்க இரண்டுக்கும் இடையே மைய்யத்தில்  இருப்பதாக இருபுறமும் இல்லாதிருந்தான்...

Image result for cheat corruption and bribe persons


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, September 18, 2018

டில்லின்னாவே ஏமாற்றுதானா? கவிஞர் தணிகை

டில்லின்னாவே ஏமாற்றுதானா? கவிஞர் தணிகை



114 என்று ஆரம்பிக்கும் எண்களிலிருந்து ஒரு கால் வந்தது...தெரியாத எண் எனவே வேண்டாம் என நினைத்தும், இப்போதுதான் தூய்மை பாரதத் திட்டம் அது இது என டில்லி செய்யச் சொல்லிக் கொண்டே இருக்கிறதே...எங்கள் கல்லூரியில் அந்த தூய்மை பாரதத் திட்ட கோடை உறைவிடப் பயிற்சிக்கு  அடியேன் தான் எங்கள் கல்லூரியில் நோடல் ஆபிசர், அது மட்டுமல்ல‌ மன் கி பாத் அது இது என தமிழகத்தை குறி வைத்து ஏதேதோ நடக்கிறதே எனவே இந்தியில் பேசிய அதன் குரல் புரியவில்லை என்றாலும் கூட என்ன எனக் கேட்க ஆரம்பித்தேன்.. இந்திக்கு ஒன்று, தெலுங்குக்கு இரண்டு தமிழுக்கு 5என செல்ல ஆரம்பித்தது. தமிழ் நமது ஜீவனாயிற்றே எனவே எண் 5 ஐ தொட்டோம். உடனே இந்த கால் கட்டணம் பற்றி சொல்லும் முன்னே உடனே தொடர்பை துண்டித்து விட்டேன்.

என்றாலும் அடுத்த அழைப்பு வரும்போது  ஓகே என்று திரையில் காண்பித்து 7 ரூபாய் கழிக்கப்பட்டிருந்தது என் கணக்கிலிருந்து அது மட்டுமல்லாமல் அது ஒரு கன்வெஸ்ஸன் என்று வேறு இருந்தது.

திருட்டுப் பயல்களை செருப்பால் அடித்தாலும் தவறில்லைதானே....

இதை எப்படி அவர்கள் உபயோகித்து அவர்களாக நம்மை அழைத்து நமது கணக்கிலிருந்து காசை எடுக்கிறார்கள், எப்படி நமது கணக்கிலிருந்து கழிக்கிறார்கள்? இதுதான் எனக்குப் புரியவில்லை...

ஆனால் அனைவரும் விழிப்புடன் இருங்கள் எனக்கு ஏற்பட்ட இழப்பு உங்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கான பதிவே இது.

நேற்று ஒரு சம்பவம் கல்லூரியில் நடந்தது... டில்லியிலிருந்து இரண்டு இந்திக்கார இளைஞர்கள் வந்து கல்லூரி முதல்வரை சந்தித்து வீணாகும் பேப்பரில் இருந்து கை வினை அழகுப் பொருட்கள் செய்து காண்பதற்கு அனுமதி வேண்டி முதல்வர் இல்லாத போது சில முறை  முன் நாட்களில் வந்து நச்சரித்திருந்தார்கள்.

நேற்று காலையும் வந்து முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு அமர்ந்திருந்தார்கள். முதல்வரின் உதவியாளர் நான் வேறு பணிகள் நிமித்தம் அவரை சந்திக்கச் செல்லும்போது இவர்கள் வந்திருப்பதையும் தெரிவிக்கச் சொன்னார்.

நானும் எந்தவித ஆட்சேபணையுமின்றி இதில் என்ன வந்து விடப் போகிறது எனச் சொன்னேன். முதல்வரும் நீங்களே நடத்திக் கொடுத்து விடுங்கள் மாணவர் செயல்பாடுகள் என நமக்கும் ஒரு அறிக்கைக்கான சான்றுகள் கிடைக்கும் என்றார்.

உடனே அவர்களை அன்றே மதியம் இரண்டு முப்பது மணிக்கு வரச் சொல்லி விட்டு அன்று நிறுவனர் கூட்ட அரங்கில் தேர்வு எனத் தெரிந்து கொண்டு டி. எம் ஹாலில் ஏற்பாடு செய்து அது தொடர்பான அனைத்து ஆசிரியர் மற்றும் மாணவ மாணவியரிடமும் தெரிவித்துக் காத்திருந்தால் மணி இரண்டு, இரண்டே கால், இரண்டரை என ஓடிக் கொண்டே இருக்க இந்த இந்திக்கார இளைஞர்கள் வரவேயில்லை. அவர்கள் பதிவேட்டில் குறித்து வைத்த  செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டால் அது ஒன்று ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவுட் ரீச்சில் உள்ளது என பதில்...
பார்க்கும் வரை பார்த்து விட்டு இரண்டே முக்கால் மணி அளவில் காத்திருந்த மாணவ மாணவியரை கலைந்து போகச் சொல்லி விட்டோம்.
அந்த இந்திக்கார கைவினை செய்து பழைய பயன்பட்ட காகிதத்திலிருந்து பயனாகும் கலை அழகுப் பொருட்கள் செய்து காண்பிக்க வருவதாக்ச் சொல்லிச் சென்ற அவர்கள் வரவேயில்லை...

அதை முதல்வரிடம் தெரிவித்தால், அவரோ மிக மென்மையாக உங்களுக்கு யார் எப்படி என கணிக்கத் தெரியவில்லையோ என்ற பொருள்படும்படியான ஒரு வார்த்தையை பயன்படுத்தி விட்டார் என்னிடம்.

எனக்கு அந்த உணர்வுகள் அடங்க வெகு நேரமாகியது. ஏன் எனில் அந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் கல்லூரிக்கும், மாணவ மாணவியர்க்கும், எனக்கும், அதை செய்து காண்பிக்க வந்ததாகச் சொன்ன அவர்களுக்கும் உற்சாக மனநிலை ஏற்பட்டிருக்கும்...அது ஒரு ஏமாற்றமாக முடிந்து விட்டது. அவர்கள் ஏன் வரவில்லை என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள அவர்கள் தொடர்பில் இல்லை.

முன் ஒரு காலத்தில் டில்லியிலிருந்து மிக்ஸி, சட்டை, பேன்ட் துணிகள், மின் விசிறி ஆகியவை குறைந்த விலைக்கு கொடுக்கிறோம் ஆர்டர் எடுத்து பணம் அனுப்புங்கள் என ஒரு பணி வந்தது. செய்ய முய்ற்சி செய்தேன். அவர்கள் அனுப்பிய பொருட்கள் எல்லாம் தரம் குறைந்து குறுகிய காலத்தில் என் பேரைக் கெடுப்பதாகவே இருந்தன. மின் விசிறி, மிக்ஸி, துணி மணி வாங்கிய அனைவர்க்கும் எனது இழப்பீடு கொடுப்பதாகவே அமைய அந்த பணியை விட்டால் போதும் என நிறுத்தி விட்டேன்.

அட அதெல்லாம் சரிங்க...டில்லியின் ராஜா மோடி நடு ராத்திரியில் ஆயிரம்  செல்லாது என்று சொல்லி இப்போது இர்ண்டாயிரம் நோட்டு அடித்து நம்மை எல்லாம் கொஞ்ச காலம் பணம் பணம் என்று அதன் பின்னாலேயே அலையவைக்கவில்லையா..

அவரே பெட்ரோலியப் பொருட்கள், சமையலெரி வாயு, போன்றவற்றில் விலையி அவ்வப்போது கூட்டியபடியே ஆளவில்லையா?

உச்ச நீதிமன்றம் அந்த 7 பேருக்கு தீர்ப்பை ஏமாற்றி மாநிலமே முடிவு செய்து கொள்ளலாம் எனச் சொல்லவில்லையா

அல்லது ஜெ இறந்த பின்னே அவர் குற்றவாளிதான் என்று சொல்லவில்லையா

இருபது முப்பது ஆண்டுகள் கழித்து நெல்லையின் அறிவியல் விஞ்ஞானி நம்பி ராஜன் அப்பழுக்கற்றவர் அவரை கேரள அரசு படாடத பாடு படுத்தியது தவறு என இழப்பீடாக ஐம்பது இலட்சம் வழங்க வேண்டும் என்று சொல்லவில்லையா?

இப்படி டில்லின்னாவே ஏமாத்தறது தானா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, September 17, 2018

இருளும் ஒளியும்: கவிஞர் தணிகை

இருளும் ஒளியும்: கவிஞர் தணிகை

இன்று பெரியார் 140 வது பிறந்த நாளைக் குறிக்கும் பொருட்டு ஒரு போஸ்டரில் பெரியார் சொல் அல்ல பகை முடிக்கும் ஆயுதம் என்றிருந்தது. பெரியார் பெயர் அல்ல பகை முடிக்கும் ஆய்தம் என்றிருக்கலாமோ என்று தோன்றியது.
Related image



குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்னும் குறள்.

இருள் என்றால் என்ன மிகவும் குறைந்த ஒளிதானே என்னும் அறிவியலும் பாரதியும்.

காமராசருக்கு இருளும் ஒளியும் ஒன்றாகவே இருந்தது. அதாவது எல்லாருக்கும் இரண்டு பக்கம் என்று சொல்வார்கள் அல்லது அனைவருக்குமே மறுபக்கம் ஒன்று உண்டு என்று சொல்வார்கள்.

மேலை நாடுகளின் ஊடகம் யாவும் எல்லாவற்றையும் தூண்டித் துருவி தனிப்பட்ட வாழ்வை அலசினாலும் அவற்றை அவர்களின் பொது வாழ்வின் செயல்பாடுகளுடன் சேர்த்து வைத்து எடை போடுவதில்லை அப்படிப் போட்டிருந்தால் அமெரிககாவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்க முடியாது.

ஆனால் இந்தியாவில் தமிழகத்தில் புற வாழ்வு அக வாழ்வு இரண்டுமே ஒழுக்கம் சார்ந்து இருக்க வேண்டும்... என்றே சான்றோர் விரும்புவர் போற்றுவர்

 அதன் படி பார்க்கப் போனால் காமராசருக்கும் பின் வந்த அண்ணா கூட அவள் ஒன்றும் பத்தினியும் கிடையாது நானொன்றும் புத்தனும் கிடையாது என்று பாடல் இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, திரைக்கதை என அனைத்துத் துறைகளிலும் திரைப்படத்தில் சுவாசித்த பிரகாசித்த ஜொலித்த பானுமதியைப் பற்றியும் தன்னைப்பற்றியும் சொன்னதாக ஏடுகளில் வந்ததாக சொல்வார்கள்...

கலைஞர் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களின் வெளி வாழ்வு போற்றப்பட்ட நிலையில் இருந்த போதிலும், அறிவுக் கூர்மையைப் பற்றி அனைவரும் மெச்சிய போதிலும் இவரது குடும்ப அரசியல், பெண் வழிச் சாரல் எம்.ஜி.ஆர் என்னும் மனிதரிடம் ஆதரவு கேட்டு பெற்று முதல்வராகி அதன்பின் அவரையே கட்சியை விட்டு அனுப்பி அவர் உருவான  அவரை உருவாக்கிய வரலாற்றின் காரணம் இவரது சுய நலம்...மேலும் கலாமை மறுபடியும்  குடியரசுத் தலைவராக்க ஒத்துழையாமை, மூப்பனாரை பிரதமர் பதவியில் காண மறுத்தது, கலாமை செம்மொழி மாநாட்டுக்கு அழைக்காமல் விட்டது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எம்.ஜி.ஆர் மக்கள் திலகம். ஏழைகளை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறி ஆட்சிக்கட்டில் ஏறியவர்...பொன்மனச் செம்மல், கொடுத்து கொடுத்தே சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என்று பேர் பெற்றவர் பகைத்துக் கொண்டால் அழித்தும் விடுவார் என அனைவரும் பயந்தவர்கள் நிறைய பேர்.
ஆனால் பகை இல்லாமலே சந்திரபாபு, அசோகன் ஆகியோருக்கு கால்ஷீட் கொடுக்காமலேயே கொன்றவர் . ஜெ வை சுய நலக் காரணங்களுக்காக வளரவைக்கவும் முடியாமல் வெளியேற்றவும் முடியாமல் கட்சியை நடத்தியவர்...ஒரு ஐந்து ஆண்டுக்காலம் நல்ல முறையிலும் மறு ஐந்தாண்டுக்காலம் மந்திரி பிரதானிகளை கட்டுக்குள் வைக்காமலும் வைக்கமுடியமலும் நோயில் வீழ்ந்தவர்...

ஜெ ஒன்று பணபலம் இல்லையேல் படை பலம். பாத்திமா பீவி முதல் இந்து என் ராம், தேர்தல் தலைமைக் கமிஷனர் சேஷன், மணி சங்கர அய்யர்
வழக்கறிஞர் சண்முக நாதன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் , சந்திரலேகா ஐ.ஏ.எஸ் இப்படி ஒரு பட்டியலே நீண்டு போகும் இருளிலும் ஒளியிலும்.

ஆக ஆண்டவர்கள் வெளி வந்த ஒளி வட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி ஆட்சியாளர்களாக விளங்கிய போதிலும்...இருள் உள்ளத்திலும் வாழ்ந்து வந்தனர்.

 பெரியாரும் அண்ணா, கலைஞர் ஆகிய தம்பிமார்களுடன் எல்லா ஊர்க்ளிலும் சென்று பேசி அதையே மூலதனமாக்கி அறக்கட்டளை எல்லாம் செய்து, தள்ளாத முதுமையிலும் பழுத்த பழமாய் சுழன்றாடியவர்...

ஆனால் அவர் தம்பி மார்களே அல்லது கண்ணீர்த் துளிகளே ஏற்க முடியாமல் மணியம்மையை ஏற்க அதிலிருந்து வீரமணி என அறக்கட்டளை என அதுவும் பிரிந்து கொள்ள...இப்போது திராவிடர் கழகமும் இரண்டு மூன்றாக பிரிந்து கிடக்கிறது...

 மற்ற இருள் பற்றி எல்லாம் எழுதும் எண்ணம் ஏதுமில்லை. ஏன் எனில் அவர்களிடம் எல்லாம் இருளும் இருந்தது, ஒளியும் இருந்தது...இனி வரும் இவர்களிடம் எல்லாமே இருள்தாம்...

வாஞ்சி நாதன் கதையும், காந்தியிடம் கொடுத்தனுப்பிய் தமிழர் பணம் செக்கிழுத்த செம்மலை சென்றடையாத பணம் என்றெல்லாம் செய்திகள் புதிய சிந்தனையை ஒளியில் கிடைக்கச் செய்கின்றன. இவற்றைப் பற்றி எல்லாம் ஏற்கெனவே ஒரு நண்பர் என்னிடம் குறிப்பிட்ட இருளின் கதைகள் இவை என்பதும் நினைவிற்கு வருகிறது.


Image result for periyar kamaraj kalaignar MGR J etc
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Sunday, September 16, 2018

எனது இளமையின் மழை மறைவுப் பிரதேசங்கள்: கவிஞர் தணிகை

எனது இளமையின் மழை மறைவுப் பிரதேசங்கள்: கவிஞர் தணிகை




வசந்தம் சென்று விடும் ஆனால் பூக்கள் திரும்ப மலரும்
யௌவனம் சென்று விடும் அந்த நாட்கள் திரும்பி வரா.

இந்த வரிகள் 1978ல் டைரி என்ற பேரில் அந்தக் கல்லூரி நிர்வாகம் கொடுத்த ஒரு பச்சை அட்டை போட்ட கோடு போட்ட 80 பக்க நோட்டில் எழுதப்பட்டிருந்தது. அது இன்னும் அப்படியே இருக்கிறது.

அறையைப் பகிர்ந்து கொண்டோம், ஆடையை மாற்றி பயன்படுத்தினோம். ஆனால் துன்பத்தை கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளும்போது யார் இருக்கிறார்கள்? எல்லாம் அனுபவத்து விட்டு இன்று கடைசி சுற்று என் நினைத்துக் கொண்டு மகனைப் படிக்க வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.

நாம் 3 ஆண்டுகள் சேர்ந்தும் பிரிந்தும் இருந்தோம்

அந்தப் பருவம் ஒரு இரண்டுங்கெட்டான் பருவம். எதையுமே அப்போது நான் சரியாக செய்ததாக நினைவில்லை. சினிமா சேர்ந்து பார்த்தோம், சிலருடன் பயணமும் சேர்ந்து செய்தோம்...அனால் வாழ்வு வழி மாறி மாறிச் சென்று விட இன்று சேர்ந்து பார்க்கத் துடித்திருக்கின்றன சில நல்ல உள்ளங்கள்

உடலும் நமது சொந்தமில்லை எனவே அதை சரியான வழியில் பயன்படுத்தி புகைத்தல், மது அருந்தல் போன்றவற்றிடமிருந்து விடுபட்டு நோய் நொடியின்றி அனைவரும் முழு வாழ்வாக நிறை வாழ்வு வாழ அதாவது குறைந்த பட்சம் 80 ஆண்டை மீறிடும் பேறு பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் முதலில்.

Image may contain: 2 people, people smiling, people standing

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

முக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பதே நட்பு.

நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்றிடித்தற் பொருட்டு.

இந்தக் குறள்களுடன் தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
 40 ஆண்டுக்கும் முன் பார்த்த உங்களை எல்லாம் மறுபடியும் இன்று பார்க்க சந்திக்க எனது வாழ்வில் எல்லா மைல்கற்களிலும் என்னுடன் பயணம் செய்யும் ஒரு நட்பு உதவியிருக்கிறது.

அது நன்றியை எதிர்பார்க்காத நட்பு எனவே நீங்களும் நானும் நன்றி சொல்லத் தேவையில்லை. அந்த நட்புக்கு இன்றைய நடப்பாய் பாட(ல்) பிடித்திருக்கிறது.

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
( அதை நான் நீதிக்கும் பதிலாக மீதி என்றும் பாடுட்கிறேன்)
சொல்லில் வருஅது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி.
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை.

தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலைதான்.
உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை.
உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை.

தண்ணீர் தணல் போல் எரியும், செந்தணலும் நீர் போல் குளிரும்
தண்ணீர் தணல் போல் எரியும், செந்தணலும் நீர் போல் குளிரும்
 நண்பனும் பகை போல் தெரியும் அது நாட்பட நாட்படப் புரியும்
அது நாட்பட நாட்படப் புரியும்...

உள்ளம் என்ப்து ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி..
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை...

எனது கதை பட்டுக் கோட்டையின் கதை போல‌
Image may contain: 1 personImage may contain: 1 person, standing
பட்டுக்கோட்டையை பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிகை நண்பரிடம்
அவர் நடந்து, சைக்கிளில் கொஞ்சம் சென்று, ஆட்டோவில் ஏறி சிறிது தொலைவு சென்று அதன் பின் டாக்ஸியில் ஏறி பாட்டு எழுத ஸ்டுடியோ சென்றாராம்...பேட்டி கேட்டவர் சார் என்ன பேட்டி ஆரம்பிக்கலாமா என்றதற்கு பேட்டி முடிந்துவிட்டது இது தான் என் வாழ்க்கை என்றாராம்.

அது போல சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில்: சாலையின் ஓரத்தில் படுத்துறங்கியது முதல் உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதியுடன் அமர்ந்துண்டு அரை நாள் அளாவளாவியது வரை...

உண்மை, தியாகம், சத்தியம், நேர்மை என்பர்க்கெல்லம் கிடைப்பதென்னவோ ஒரே பரிசுதானே! அது ஏழ்மை, வறுமை, பொருளிண்மை, உடற்பிணிகள்.

எங்களது ஓட்டு வீட்டின் முகடுக்ள் தொங்கிய்படி கிடக்க நான் நாட்டை சீர் செய்வது பற்றிக் கவலைப்ப்ட்டுக் கொண்டிருக்கிறேன்.
பலிகடாவாக அல்ல களப்பலியாக ...களப்பலிகள் எப்போதும் அப்படித்தான் யோசிக்கும். கேப்டன்கள் அப்படித்தான் இருப்பார்கள் நான் விஜய்காந்தைச் சொல்லவில்லை


பிடல், சே, ஹோசிமின், லெனின், கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ், தற்போதைய ரோட்ரிகோ ட்யூட்ரெட், அருணிமா சின்ஹா, சிவாங்கி பதக், மாலவத் பூர்ணா, மகாத்மா, சுபாஷ், பகத், கலாம், தெரஸா, அம்பேத்கர் இன்ன பிற நாட்டுக்குத் தெரிந்த மாபெரும் மனிதர்கள்...

ஹோசி மின் பாறை மேல் படுத்துறங்கி, உணவகங்களில் எச்சில் தட்டு கழுவியவர் வியட்நாமின் தலைவிதியை மாற்றி எழுதியதாக சரித்திரம்..

கைக்குழந்தைக்கு பாலில்லா மாரும் உணவில்லா ஏழமையும் மார்க்ஸ் ஜென்னியிடம் இருக்கும்போதெல்லாம் அந்தக் குடும்பத்திற்கு ஏங்கெல்ஸ் உதவியதாகவும் அவருக்கு மட்டுமே மார்க்ஸ் அதை எழுதிக் கேட்டு வாங்கிக் கொண்டதாகவும் சரித்திரம்...அதுவும் மாறுபடா தத்துவம்..

கர்ண துரியோதன நட்பு மஹாபாரதக் கதையில் துரியோதனன் மனைவியின் சேலையைப் பிடித்து இழுத்து முத்துக்கள் சிதறி தெறித்து ஓட அங்கு வந்த துரியோதனன் எடுக்கவா கோர்க்கவா என்ற சந்தேகம் வரா நட்பூ...

கண்ணனின் நட்பு குசேலனிடம்  அழுக்குத் துணியில் கட்டி வந்த அவலை வாங்கி மன்னன் கண்ணன் தின்றதாக...

இராமயணத்தில் இராமனின் நட்பு ஜடாயு, சபரி, விபீஷணன், அனுமன் என..

1978 முதல் 2018 வரை மாபெரும் வாழ்வின் பயணம். பெற்றோரை இழந்து, குடும்பம் என்றாகி சகோதர சகோதரிகள் இடைவெளியுடன்...உறவு நாடாண்ட நட்பு, போராட்டம் என உருண்டு...

எப்படி இப்படி ஒரு பிழை நடந்தது..

கல்லூரி நிர்வாகத்தின் திணித்த பிழையா?
மூத்தார் எனப் படித்த மாணவர் செய்த திருகலா?
தன்னுணர்வில்லா முடிவா?
பெற்றோரை குடும்பத்தை கலந்து செய்யாத முடிவா?
தவறுதான் நிகழ்ந்து விட்டது விதியின் கைகள் மேற்சென்று எழுதிவிட்டது..

என்னிடம் 1981ல் இருந்த  இருந்த  அந்தக் கல்லூரியின் ஒலிபெருக்கியின் யூனிட்  ஒன்றை பாலமலை மக்களுக்கு அங்கே பொது ஊராட்சி ஒன்றியத்தின் ரேடியோ மற்றும் ஒலிபெருக்கியை தம் வீட்டுக்கு பயன்படுத்தி வந்த முன்னால் உதவி ஊராட்சித்தலைவர் ஒருவரிடமிருந்து மக்களை தயார் செய்து போராடி பெற்று இந்த யூனிட்டை அதற்கு தானமாக கொடுத்து மக்களுக்கு ரேடியோ ஒலிபெருக்கி அமைப்பை ஊருக்குப் பொதுவாக‌ ஏற்படுத்திக் கொடுத்து ....

காந்தி தம் பாட்டியிடம் இருந்த தங்கக் காப்பைத் திருடினார் தீயப்பழக்கத்துக்கு, வான்மீகி வழிப்பறிக் கொள்ளையனாக இருந்தார், நானும் அந்த யூனிட்டை கட்டிய கட்டணத்துக்கு பதிலாக எடுத்து வந்தபோதும் அதுவும் தவறுதான்...எனவே தவறுகளிலிருந்துதான் சரி பிறக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை.

திரு நீறு பட்டையாக நெற்றியில் போட்டபடி காமன்ரூம் விளையாட்டு அறையின் பொறுப்பாளராக  அந்த இரண்டாமாண்டு படிக்கும்போதே பகுதி நேர பணி புரிந்தவன்..அப்படி எல்லாம் இருந்த எனக்கு கல்லூரி நிர்வாகம் தந்த பேர் ... வேறு

ஆண்டு விளையாட்டுப் போட்டியில் எவருமே கலந்து கொள்ளாமல் 3 பேர் மட்டுமே கலந்து கொள்ள அவர்களுக்கே 3 பரிசுகள்...என மாணவர்கள் அனைவருமே அந்த‌ விளையாட்டுப் போட்டியை புறக்கணிக்க நடத்தியே தீருவோம் என நிர்வாகம் பிடிவாதத்துடன் எவரும் கலந்துகொள்ளாமலேயே போட்டிகளை நடத்தி முடித்து எஸ்கேசி ஸ்வீட் காரம் காபி கூட கொடுக்காமல் கல்லூரியின் தாளாளர் நாட்டின் முக்கிய் பிரமுகரை அழைத்து அதுவும் விடுதியின் உள் அரங்கு அமைக்க பந்தல் அமைத்து ஒலிபெருக்கி எல்லாம் கட்டி முதல் நாளே தயார் செய்து வைத்திருந்தது மறு நாள் அனைவரும் காலை எழுந்து பார்க்கும்போது காணாது போயிருக்க...

நாட்டின் முக்கிய பிரபலம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வு நடக்காமல் ரத்தாகிவிட...அதுவும் மேடை துவம்சம் செய்தது போலாகிவிட்டால் சும்மா விடுவார்களா?

 ஆரம்பித்தது. அனைவர் வாழ்விலும் அதன் பாதிப்புகள்...கல்லூரியின் ராஜதந்திரத்தின் முடிவில் பெற்றோர்களும் மாணவர்களும் ஈடு கொடுக்க முடியவில்லை...

 விதை போடப்பட்டது..விதி தொடர்ந்தது...திட்டமிட்டார் தூங்கி விட விதி எழுப்பியது...வினை செய்ய ...

உழைப்பு என்ற தலைப்பில் எழுதிய கவிதை கல்லூரியிலும் கோவை வானொலிப் பதிவிலும்... இடம்பெற அதே நண்பன் சேர்க்க வேண்டிய இடம் சேர்த்து  உதவினான் நேரில் சென்று தான் கொடுக்காமல் பழனி சென்று விட

 உழைப்பிற்கு உரு கொடுத்தோர் கொடுத்த தலைப்புக்கு கரு எடுத்து
இத் தலைப்புக்கு உயிர் தருவேன் முன் களைப்புக்கு விடை கொடுத்து
கவிதைக்கு செவி மடுப்பீர் என முதலிலும் கடைசியில் உயிர் தந்தேன், செவி மடுத்தீர் என்றும் முடிவிலும் இருந்த மரபுக் கவிதை...

இலஞ்ச ஊழல் எதிர்ப்பு, மது விலக்கு போராட்டம் வறுமைப் பிணி அகற்றி சமதர்ம சமுதாயப் பூங்காவாக நாட்டை  மாற்றி சமத்துவ சமுதாயப் பணியில் 3 இயக்கங்களிடை தலைமைப் பொறுப்புகளில் வழிகாட்டி, சசிபெருமாள், சின்ன பையன் போன்றோரை இயக்க கருவிகளாக்கி, நிறையப் பட்டோம் இடையில் ஏற்பட்டதுதான் பாரதக் குடியரசுத் தலைவராக விளங்கிய மேன்மை மிகு அப்துல் கலாம் அவர்களின் தொடர்பு...



எல்லாத் துறைகளிலும் இலஞ்சத்துக்கு எதிராக போராடியதன் விளைவாக பல விழுப்புண்கள் பெற்று...மேல் படிப்புக்கு என மதுரை காமராசர் பல்கலைக்கு சென்ற சான்றிதழ் திரும்பி வரவே இல்லாமல் போக...

40 ஆண்டு கால பிரேதப் பரிசோதனை தேவையா...சேமிப்பை சம்பாதிக்கலாம்  என பிறரிடம் கொடுத்து ஏமாந்த கதை சொல்லவா?
Image may contain: 2 people, people standing
1983 முதல் 1984 வரை நேரு யுவக்கேந்திராவில் தேசியத் தொண்டராக சேவை செய்த கதையில் பிரிபடாத சேலம் மாவட்டம் எங்கும் திரிந்து கவிதை பாடி, பேருரையாற்றி பெருவிழிப்பூட்டிய கதை சொல்லவா?

1985 முதல் 1995 வரை திட்ட அலுவலராக இந்தியாவெங்கும்  மலை வாழ் மக்களுக்காக மேம்பாடு செய்ய பணிச்சேவை புரிந்த கதை சொல்லவா?

அதில் உச்ச நீதிமன்ற நீதிபதியை சந்தித்து, அவர் மேடையிலேயே பேசி அவருடன் உணவு உண்டு முன்னேற்றப் பணி பற்றிப் பேசி கலந்து அரை நாள் கலந்தளாவிய கதை சொல்லவா?
Image may contain: 2 people, people smiling, people sitting
1997ல் டிசம்பர் 4ல் இந்தியாவின் பொன் விழா ஆண்டில் வேலை இல்லாமலே திருமணம் செய்து   1998 டிசம்பர் 16ல் மகனைப் பெற்றதைச் சொல்லவா

1986ல் தந்தையை இழந்த கதையை சொல்லவா, 2006ல் தாயைப் பறி கொடுத்த கதையை சொல்லவா, தந்தையை இழந்து சுமார் 20 ஆண்டுகள் தாயுடன்  வாழ்ந்த கதை சொல்லவா?

1995 முதல்  2015 வரை நிறைய எழுதி, நிறையப் பேசி, நிறைய போர் புரிந்து, நிறைய இரு நாளுக்கொரு சேதி எழுதி போவோர் வருவாரை எல்லாம் மகிழ‌ வைத்து சிந்திக்க வைத்து, சிரிக்க வைத்து..வாழ்ந்த கதை சொல்லவா?

மறுபடியும் மகனைப் படிக்க வைக்க 2016ல்  கல்லூரிப் பணிக்கு சேர்ந்த கதை சொல்லவா?

அதனிடையே 1985 முதல் தியானம் கற்று தியான குருவாகி பலருக்கும் தியான வகுப்பு எடுத்த கதை சொல்லவா? 1985 முதல் இன்று வரை அதாவது 2018க்கும் மேல் 34 ஆண்டுக்கும் மேலாகியும் அதை தொடரும் கதை சொல்லவா?


இன்று 40 ஆண்டு கழித்து மறுபடியும் உங்களுடன்

என்ன செய்யப் போகிறீர்? என்ன சொல்லப் போகிறீர்?

இடையில் இரண்டு..

உள்ளம் என்பது ஆமை..அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி...நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி..

சொல்லில் வருவது பாதி ...நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதீ..மீதீ...

காதல் என்றால் அது காதல்
இல்லை என்றாலும் இல்லை சாதல்
உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இந்தப் பதிவு எனது மகன் மணியம் மற்றும் என்னை நேசிக்கும் தோழர்க்கு சமர்ப்பணமாக...

15.06.1988 in my Visitor's Note

BROTHER DHANIKACHALAM WORK IS AN JUST LIKE THE WORKS OF MAHATMA GANDHI AND MOTHER THERESA. I APPRECIATE HIS WORK. I WISH HIM SUCCESS.

signed

Dr.. V. SUBRAMANIAN M.B.B.S ; D.O
ASSISTANT SURGEON\
GOVT. HOSPITAL
NAMAKKAL.....DATED; 15.6.88




Saturday, September 15, 2018

எடப்பாடி பழனி சாமி அரசின் எனக்குத் தெரிந்த இரண்டு நன்மைகள்: கவிஞர் தணிகை.

எடப்பாடி பழனி சாமி அரசின் எனக்குத் தெரிந்த இரண்டு நன்மைகள்: கவிஞர் தணிகை.

Related image

உடனே இந்த அரசைப் பற்றி நான் கொண்டாடுகிறேன் என்பதெல்லாம் இல்லை. அதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.

சேலத்தில் மேம்பால வேலைகள் நடந்து வருகின்றன நான் ஒரு கட்டடவியல் பொறியாளரோ ஒப்பந்ததாரரோ அல்லது அது போன்ற அனுபவம் பெற்றவனோ இல்லை...அதை எத்தகையது எவ்வளவு பட்ஜெட்...எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது எவ்வளவு தவறான வழியில் போகிறது என்பது பற்றி எல்லாம் சொல்ல இந்தப் பதிவு அல்ல.

1. அந்த மேம்பாலத்தின் அடியில் இரண்டு இடங்களில் அதாவது குரங்குச் சாவடி முதல் ஏவி ஆர் ரவுண்டானா அல்லது எஸ் பி ஐ காலனி முதல் பேருந்து செல்லும்போது கவனித்தேன் அந்த மேம்பாலத்தின் அடியில் காலையில் நடைப்பயிற்சி செய்ய, உடற்பயிற்சி செய்ய என பாதை போடப்பட்டு புற்கள் நடுவே வளர்க்கப்பட்டு நிறைய சேலம் நகர் சார்ந்த மனிதர்களுக்கு  வசதி வாய்ப்பு செய்யப்பட்டுள்ளது. எவரின் தயவும் அனுமதியுமின்றி யார் வேண்டுமானாலும் நடந்து பயிற்சி செய்யலாம். செய்கிறார்கள். பார்க்க சுவையாக இரசிக்கத் தக்கதாக இருக்கிறது.

2. கல்வித் துறையில் க.ப. செங்கோட்டையன் நல்ல முறையில் செயல்படுவதாக தற்போது கூட பள்ளி மேனிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களின் சுமை தீர்த்து மதிப்பெண்ணை 600க்கு கொண்டு வந்ததாகவும் செய்திகள் வருகின்றன...

மற்றபடி மின் வெட்டு அருகாமையில் இருக்கிறது என்ற செய்தியும் அந்த பதவி பறி போன எம்.எல்.ஏக்களின் வழக்கு ஏன் இன்னும் தீர்ப்பை அடையவில்லை என்பதையும் குட்கா வழக்கையும், அந்த 7 பேரின் தலைவிதியை நிர்ணயிப்பதிலும் ஏன் இந்தக் குளறுபடிகள் என்பவை எல்லாம் இந்த அரசுக்கு நன்மை பயப்பதாய் இல்லை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு
ஒரு நாள் பாலம் இடிந்து கீழே நடைப்பயிற்சி செய்பவர் மேல் விழுந்து உயிர்ச் சேதம் ஏற்படாதிருக்க எல்லாம் வல்ல இயற்கையையும் வேண்டுகிறேன். பிரார்த்திக்கிறோம். அதைக் கட்டிய வல்லுனர்கள் அதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்படியாகவும் வேண்டுகிறேன் ஏன் எனில் புதிது புதிதாக கட்டிய பாலம் கூட உடனே சிதைந்து விடுகின்றன என்ற செய்திகளும் வந்ததே.. அதே வேளையில் பாலத்தின் மேல் செல்லும் வாகனத்தை எந்தக் குடிகார ஓட்டுனரும் தாறு மாறாக ஓட்டி மேலிருந்து கைப்பிடிச் சுவரை இடித்துத் தள்ளி கீழே செல்வோர் மேல் விபத்தை ஏற்படுத்தாதிருக்கவும் நாம் வேண்டிக் கொள்கிறோம்.

Thursday, September 13, 2018

2.O சினிமாவில் வேடிக்கை: கவிஞர் தணிகை

 2.0 சினிமாவில் வேடிக்கை: கவிஞர் தணிகை

Image result for 2.o teaser

டூ பாய்ண்ட் ஓ ஒரு நிமிடம் மற்றும் 30 செகண்டுகளுக்கு அதாவது 90 செகண்டுகளில் ஒரு டீசர் வெளியிட்டிருக்கிறது சங்கர் லைக்கா ப்ரொடக்ஸன்ஸ். ஏ. ஆர் ரஹ்மான் இசை. ரஜினிகாந்த், அக்சய குமார், ஏமி ஜாக்ஸன் ஆகியோர் நடிக்க‌  மிகவும் பெரிய பொருட்செலவில் 500 கோடி செலவிட்டு 3000 பேர் பணிபுரிந்து படம் எடுத்து விசூவல் எபக்ட்ஸ் மட்டும் ஓராண்டுக்கும் மேல் பணி எனச் சொல்லப்படும் இந்த ஆண்டின் இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படம்.

ரோபோ, செல்போன் பறப்பது, அதே அறிவியல் அமைப்புடனான கதை, எந்திரன் போலவே.... ஒரே நேரத்தில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய அனைத்து பிரதான மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வெளி வர இருப்பதன் ஒரு முன்னோட்ட வெளியீடு இன்று பெரும் எதிர்பார்ப்புடன் நடந்தேறி இருக்கிறது

படத்துக்கு 50 முதல் 60 கோடி வாங்கும் சூப்பர் ஸ்டார் எனப்படும் ரஜினிகாந்த் அதே போல உ ஊ எனக் கத்தியபடி வயதில் இளையவராகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்.  எல்லாப் பக்கங்களிலும் சுடும் துப்பாக்கி ஒரு மனிதனை சுற்றி எதிர் வரும் ஆயிரக்கணக்கான எதிரிகளையும் சுட்டுத்தள்ள...

பிரும்மாண்டம் என்ற பேரில் எல்லாத் தரப்பையும் வியப்பில்  ஆழ்த்தி  வசூலை  3 டி 2 டி என எடுத்து விடுவார்கள்...காமிக்ஸ் கதை இரும்புக் கை   மாயாவியின் கதையை சிறுவனாக இருக்கும்போது விரும்பிப் படிப்பது போல அனைவரும் பார்க்கலாம். தியேட்டருக்கு அனைவரையும் இழுக்கும் ஒரு அரிய முயற்சி.
Image result for 2.o teaser
படம் வரட்டும் முழுதும் பார்த்துவிட்டு இன்னும் பேசலாம்.

இதற்கு அடுத்து வர இருக்கும் இந்தியன் 2 பார்ப்பதற்குள் தேர்தல் வந்து நிற்கும் என்றே நினைக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பொறுப்பற்ற தீர்ப்புகளில் இதுவும் ஒன்று: கவிஞர் தணிகை

Image result for supreme court of india




ஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்.

ராஜிவ் காந்தியின் கொலைக்குற்றத்தில் தொடர்புடையதாக 25 ஆண்டுக்குக்கும் மேல் தண்டனையை அனுபவித்த அந்த 7 பேர் விடுதலையின் பேரில் உச்ச நீதிமன்றம் மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற தீர்ப்பு வழங்கியுள்ளது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதான தீர்ப்பாகவே விளங்குகிறது.

பந்தை மாநில அரசுக்கு அடித்து விட்டு எனக்கு ஒன்றும் தெரியாது என்பதாக உள்ளது.

இவர்கள் விடுதலை செய்யச் சொல்லி தீர்மானித்து சட்டசபையில்/ அமைச்சரவையில் தீர்மானித்து ஆளுனரின் அனுமதிக்கு அல்லது அங்கீகாரத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் அதை ஏற்றே ஆகவேண்டும் என இவர்கள் தரப்பில் சொல்ல, சு.சாமி மற்றும் உள் துறை ஆகியவை அதை அனுமதிக்க மாநில ஆளுனருக்கு அதிகாரம் இல்லை எனச் சொல்லிவருவதும் சாதாரண என் போன்ற பாமரனுக்கெல்லாம் குழப்பத்தை ஏற்ப‌டுத்துகிறது.  அதனால் தேவையற்ற கால தாமதமும் ஏற்பட்டுள்ளது

ஜெ தீர்ப்பு அவர் முடிவுக்கும் பின் வந்தது போல, ஓரினச் சேர்க்கை சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படும் நாடுகளுள் 25 வது நாடாக சென்று சேர்ந்து கொண்டது போல ஏதாவது ஒரு தீர்ப்பை உறுதியாக வழங்கி இருக்க வேண்டும் இந்தியாவில் நிலைப்பாடு அந்த 7 பேர் வாழ்க்கை மீது.

அதை விடுத்து இப்படி நழுவி இருப்பது எந்த உட்பொருளுடன் இந்த செயல்பாடு கையாளப்படுகிறது என்றே எம் போன்ற ஞான சூன்யங்களுக்கு விளங்கவில்லை.

அப்பா, அம்மா பிள்ளை செய்வது ஒன்று தவறு, அல்லது சரி என ஓர் நிலையில் நின்றே சொல்வார்கள் அது வருத்துவதாக இருந்தாலும், உறுத்துவதாக இருந்தாலும்...

எல்லாவற்றிலுமே யாருக்கு எதனால் அடுத்து வரும் தேர்தலில் வாக்கு வங்கி குறைந்து விடுமோ என்ற போக்கே நிலவுகிறது. நடப்பது எவருக்குமே எதுவுமே தெரியாத போதும். இவை எல்லாம் முன்னெச்சரிக்கை. விளையாட்டாகவே இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, September 11, 2018

முப்பெரும் நினைவும் மூன்றாம் விளைவும்: கவிஞர் தணிகை

முப்பெரும் நினைவும் மூன்றாம் விளைவும்: கவிஞர் தணிகை

Image result for age of vivekananda

38 வயதில்  மறைந்த பாரதியின் நினைவு நாளும், 39 வயதே வாழ்ந்தும் 1893ல் சிகாகோவில் சர்வ சமய ஆராய்ச்சிக் கழகத்தில் அமெரிக்க சகோதரி சகோதரர்களே என ஆரம்பித்த பேச்சு என்றும் நிலை பெற்றதாகிவிட்ட நாள் மேலும் அமெரிக்காவின் வணிக இரட்டை கோபுரங்களை தகர்த்த நாளும் இதுதான்.



பின் லேடன் பிணத்தை கடலுள் கொண்டு ஆழ்த்திய அமெரிக்கா அவர் ஒளிந்திருந்த பாகிஸ்தானுடன் இன்னும் நல்லுறவையும் ஆய்த விற்பனையையும் சுமூகமாகவே செய்து வருகிறது. எல்லாவற்றுள்ளும் ஒரு சுயநலம்.

பாரதியின் நினைவு நாள் பின்னால் வந்தது விவேகானந்தர் அமெரிக்கப் பிரசங்கம் செய்த நாள் 1893 செப்டம்பர் 11 முன்னால் வந்தது. இவற்றுள் எல்லாம் ஒரு பிணைவு நிகழ இயற்கையின் இயல்பான காரணங்கள் ஏதும்  இருக்கின்றனவோ என்னவோ..

மூன்றாம் பிறையை தனிக் கீற்றாக அறிவியல் அறிந்தவரால் பார்க்க முடிவதில்லை. அதன் முழு வடிவில் அதன் முழு உருண்டையை குறைந்த பட்சம் ஊகித்து கற்பனையாக அல்லது லேசாகத் தெரிவதை வைத்து தெரிந்து கொள்ள முடிகிறது. சூரியனின் சிறு அளவான ஒளி அதன் மேல் படுவதை, அல்லாமல் படாமல் இருப்பதையும் சேர்த்து நம்மால் கவனிக்க முடிகிறது.

நண்பர் பாரதியின் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை அளிக்கலாமே என்கிறார். அவற்றை எல்லாம் விட அவரின் சமத்துவ கனவை நினைவாக்க குறைந்த பட்சம் ஒரு உயிருக்கு/ சில உயிருக்கு அதிக பட்சம் ஒரு கிராமத்துக்கு உங்களால் முடிந்த நன்மையை செய்யுங்கள் அவரின் பார்வையில் அந்தக் கோணத்தில். அந்த மனிதர் எவ்வளவோ பிற்காலத்தில் வாழ வேண்டிய வாழ்வை எல்லாம் முன்னரே வாழ்ந்ததால் ஒரு கோமாளி போல கருதப்பட்டார். ஒரு பைத்தியக்காரன் போல் சித்தரிக்கப்பட்டார். அவர் ஒரு கஞ்சாப் பேர்வழி எப்போதும் போதையில் இருப்பார் என பாரதி தாச விரும்பிகள் அவரை மறுப்பதுண்டு வேரை விட்டு விட்டு கிளையின் பூக்களைக் கண்டு இரசிப்பது போல பாரதியை விட்டு விட்டு பாரதி தாசனை மட்டும் பார்த்துக் கொண்டு...

காலம் சரியாக கை கொடுக்க மறுக்கிறது . உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கினால், தியானத்துக்கென நேரம் ஒதுக்கினால் எழுதுவதற்கும் படிப்பதற்கும் நேரம் கிடைக்கவில்லை...இதற்கு என நேரம் ஒதுக்கினால் நடைப்பயிற்சியும் தியான நேரமும் முடக்கப்பட்டு விடுகிறது.

எனவே விரிவாக பின்னொரு காலம் பேசட்டும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Image result for twin tower attack


Sunday, September 9, 2018

ஓரினப் புணர்ச்சி இயற்கை மரபுக்கு எதிரானது, மனித குலத்தின் சீர் கேடானது: கவிஞர் தணிகை.

 ஓரினப் புணர்ச்சி இயற்கை மரபுக்கு எதிரானது, மனித குலத்தின் சீர் கேடானது: கவிஞர் தணிகை.

Related image



மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு..
THIRUKKURAL ...THIRUVALLUVAR.



இந்திய உச்ச நீதிமன்றம் மனித குலத்தின் இந்தியக் குடிமக்களின்  கலவி ஒழுக்கம் பற்றிய‌ சட்ட திட்டங்களுக்காக தற்போது வழங்கியிருக்கும் தீர்ப்பை 6 வண்ணக் கொடி ஏந்தியவர்கள் பாராட்டி கொண்டாடி வரும் அதே காலக் கட்டத்தில் நான் மறுபடியும் ஒரு பாலியல் விழிப்புணர்வு நூல் 2 வெளியிட உத்தேசிக்கிறேன்.

ஆணுடன் ஆண், பெண்ணுடன் பெண், மிருகங்களுடன் இப்படி வேறுபட்ட முறைகளில் பாலியல் கொள்வது இயற்கை விதிகளுக்கு முரணானது. அது மனிதகுலத்துக்கு மட்டுமல்ல மொத்த இயற்கைக்கே கேடு விளைவிக்கக் கூடியது. அடுத்து கன்றுகுட்டியை, எருமையை , பசுமாட்டை வன்புணர்ச்சி செய்வதும் கூட சரிதான் அந்த வட நாட்டு இளைஞர்களால் வேறு எப்படி தமது உணர்ச்சிகளுக்கு வடிகால் தேட முடியும்>? சிறுமியரை, வேறு பெண்களை கற்பழிக்காமல் , வன்புணர்ச்சி செய்யாமல் இருந்தால் போதும் என்றும் கூட தீர்ப்புகள் எழுதப்படலாம்,.

சட்டமும் நீதியும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஒருநாட்டில் ஒருவனுக்கு ஒருத்திதான் மனைவி மேலும் மற்றொரு மனைவி என்றால் அது சட்டப்படி நீதிப்படி குற்றம் எனச் சொல்லும் அதே நாட்டில் மற்றொரு மதம் சார்ந்தார் எத்தனை மனைவி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் அதுவும் எத்தனை வயதில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிறது.  அதே போல குழந்தைகள் பெறும் எண்ணிக்கையிலும். அதே போல நாட்டுக்கு நாடு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம், தனிமனிதரிடம் துப்பாக்கி இருக்கலாம்,  பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம், மனைவிகள் வைத்துக் கொள்ளலாம்,  சொத்துக்களை சேர்த்துக் கொள்ளலாம் இலஞ்சம் வாங்கலாம் வாங்கக் கூடாது....இப்படி எப்படி வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் கூட ஒழுங்காக அமல்படுத்துகிறதா என்பதுதான் கேள்வி. அவிக சிறுபான்மையினர் அவர்களுக்கு ஒரு சட்டம், இவிக பெரும்பான்மையினர் இவிகளுக்கு ஒரு சட்டம்.

குடும்பத்தில் தம்பிமார்களுக்கு சற்று கருணையை பெற்றோர் அதிகம் காண்பிப்பதும், அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு வேறு சலுகைகள் அதிகம் கொடுக்கப் பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாட்டிலும் முன்பு சட்டஙகள் நீதி செய்தன.. ஆனால் இந்த பாலியல் கலவி முறைகளில் உள் புகுவது மாநிலத்தில் மட்டுமல்ல, குடும்பத்துள் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதருள்ளும் புகுவது..

.ஒவ்வொருவரும் ஆடை, உணவு, வீடு இப்படித்தான் இருக்க வேண்டும் என நிர்பந்திக்க முடியாது ஆனால் வழிகாட்டலாம் வழிகோல் வகுக்கலாம். இதெல்லாம் குலைந்து போகும் நிலையில்தாம் இயற்கை மீறிய நிலையில் வெள்ளப்பெருக்காயும், குளிர்காலம் வரும் காலத்தில் தகிக்க சகிக்க வொண்ணாத வெயிலுமாக மனிதர்களும் மற்ற உயிர்களும் அல்லாட வேண்டியதாகிறது. இயற்கையை அழிக்கும் பெரும் சக்தியாய் மனிதம் போய்விட்டது.இன்று இந்த செப்டம்பரில் வெயில் இப்போது சுமார் 100 டிகிரி பாரன்ஹீட்.

ஆணுடன் பெண் இணையும் வாழ்க்கை மறு உற்பத்திக்கும் உலகு வழி நடக்கவும் ஏற்றது. இதனிலிருந்து மாறுபட்ட உறவுகள் வேறு எந்த உயிரினத்திலும் இல்லை மனித இனத்தைத் தவிர.

எந்த மிருகமும் கற்பழித்ததாக இல்லை. மனித குலத்தில் மகா கேவலமான அயோக்யத்தனமான வார்த்தையில் கொண்டு வரமுடியா நிகழ்வுகள் இன்பம் துய்ப்பதாய் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. ஒரு பெண் நாயை பல ஆண் நாய்கள் தெருவில் புணர தயாராக இருக்கும், அதற்கான ஒரு நாய்கள் கூட்டம் இருக்கும் இதை தெருக்களில் கண்டிருக்கலாம்...அதை மனிதர் செய்தால் அதன் பேர் க்ரூப் செக்ஸ்.  அந்தக் காலத்திலேயே கீ  அதாங்க கார் சாவியை மாற்றிக் கொள்ளுதல் அதன் படி மனைவியை மாற்றிக் கொள்ளுதல் இருந்திருக்கிறது பொது விழாவாக என கண்ணதாசன் எழுதியிருப்பதைப் படித்த நினைவுகள் எல்லாம் இப்போது என் நினைவில் ஓடுகின்றன. அதன் படி மேலை நாட்டினரின் கலாச்சாரம் என்ற பேரில் நடிகர் நடிகையர், பெரும்பணக்காரர்கள், அரசியல்பிரமுகர்கள் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களில் எல்லாம் இவை தெளித்து விடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் எழுத்துகள் உள்ளன. மொத்தத்தில் பெரும் பணம் படைத்தவர்களின் கரைக்க முடியா கொழுப்பில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்... இவை சாதாரண மனிதர்க்குள்ளும் ஊடுருவி கலந்து பரவ இந்த தற்போதைய ஊடகங்களில் புழக்கமும் புழுக்கமும்,  அரசின் ஆட்சி முறை மற்றும் சட்டமும் நீதியும் பெரிதளவில் உதவுகின்றன. ஏழ்மை இல்லா நாடுகள் வரிசையில் இடம் பிடிப்பதுதானே இந்தியா...இதில் மட்டும் ஏன் இடம் பிடிப்பானேன்?

பெற்ற தகப்பனே மகளை, வயதான ஆண் , பெண் வயதுக் குறைவானவர்களை, ஏன் ஒரு மதத்தில் குழந்தைகளையே கூட மணம் கொள்ளலாம் என்றும், மருமகன் மாமியாரையும், மருமகள் மாமனாரையும், மாமனார் மருமகளையும் , மாமியார் மருமகனையும் , சகோதர் சகோதரிகளையும் இப்படி வரையறை விட்டு வெளியே உறவு முறை என்றெல்லாம் இல்லாமல் கற்காலத்தில் மனித குலம் நாகரீகம் அடையாக் காலத்தில் இருந்தாற்போல் ஆண் பெண் என்ற இரண்டு பார்வைகளுடன் மட்டுமே இயங்கி வர அவை எல்லாம் மனிதம் வளர வளர நீங்கி, மாசின்றி நல் முறைக்கு மாறி வரும் காலக்கட்டத்திலும் அரசல் புரசலாக இலை மறை காய் மறையாக குற்றம் தவறு என தப்பும் தவறுமான விதிவிலக்கான உறவு முறைகள் இருக்கவே செய்தன.

இதெல்லாம் தாய் வழிச் சமுதாயம் என்று பெண் தலைவியைச் சுற்றியே வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் மனித குலத்தில் ஏற்பட்ட மாற்றம் தந்தை, தாய் சகோதர சகோதரிகள், அதன் மூலம் நிறைய உறவுகள் ஏற்பட வழிவிட்டன வழி வகுத்தன.

இதெல்லாம் தெரியாமல் இல்லாமல் இருக்கும் நிலையில் விதி விலக்காக  திரு நங்கை என்னும் ஆணும் பெண்ணுமல்லாத  3 ஆம் பால் ஏற்பட்டன அவைகூட வாழ்வின் போக்குக்காக எதையாவது ஒன்றி பற்றிக் கொண்டன.

ஆனால் பிறப்பிலேயே மனோபாவமே ஆணாக இருப்பார்க்கு பெண்ணாகவும், பெண்ணாக இருப்பார்க்கு ஆணாகவும் இருந்தன என்ற ஒரு பிரிவில் உறவின் திரிபுகள் திருகல்கள் ஏற்பட ஆரம்பித்தன.

இவை அமைதியாக இருந்து விட்டுப் போகட்டும் இவற்றை எவரும் தொந்திரவு செய்யாதிருக்கவே இந்த தீர்ப்பு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த தீர்ப்பு சமுதாயத்திற்கு முன்னெடுத்துச் செல்ல வழிகாட்டும்  அம்புக்குறியாக அமைந்து விடக்கூடாது. அமைந்து விட முடியாது.

ஆணும் ஆணும் மணந்து கொண்டு வாழ்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.  அதே போல பெண்ணும் பெண்ணும் மணந்து கொண்டு வாழ்வது என்பதும் தான். இதெல்லாம் பொதுவாக முன்னேறிய மேலை நாட்டிலிருந்து இறக்குமதியான பாலியல் ஊடகங்கள் திறந்து காட்டிய சமாச்சாரங்கள். அழிவை நோக்கிய பாலியல் படங்கள் முதலில் பார்க்க திறந்து விடப்பட்டன, அதன் பிறகு அதன் வக்ரமாக உச்சகட்டமாக ஆண் ஆணைப் பின் வழியாகப் புணர்தல், ஒரு ஆண் ஆணாக மற்றொரு ஆண் பெண் பாவத்துடன் இருப்பதாக பாவிப்பதாகவும் வக்ரமான பாலியல் செயலில் ஈடுபடுவதாகவும் இருப்பது இதெல்லாம் சுகம் தருவதல்ல...பிணி தருவது...அதேதான் பெண்ண்ணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் நிகழ்வுகளும்.

இவர்கள் தங்களது  பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் விளைவே இது. குழந்தை என்று ஒன்று பிறந்து விட்டால் அதற்காக வாழவேண்டும் அதை உருவாக்க தியாகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்து கொண்டு அவற்றில் இருந்து எல்லாம் விடுபட்டுக் கொள்வது.

கேட்டால் நாங்களும் தத்து எடுத்துக் கொள்கிறோம் என்பார்கள், அல்லது வயிற்றில் வேறொருவர் கருவை அல்லது அடுத்தவர் கருவை அறிவியல் மருத்துவ உதவியுடன் உட் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதாகவும் கூறுவர். செயற்கை முறையில் கருத்தரித்தல் மனிதகுலத்திற்கு கிடைத்த உதவி அதையும் தவறான தங்கள் முறைக்கு மாற்றிக் கொள்வது யாவுமே மனித வரையறைக்கு மிஞ்சியது. வரம்பை மீறியது.

 இவர்களே இப்படி என்றால் இவர்கள் இயற்கைக்கு மாறாக உரிமை கொண்டாடும் இவர்களின் மறு தலைமுறை எப்படி இருக்கும் எனச் சொல்ல முடியாது. மேலும் இவர்களுக்கு மறு தலைமுறை பற்றி எல்லாம் எந்த எண்ணமும் இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் இன்று நாட்டில் சமூகத்தில் நடக்கும் அவலக்கேடுகள் பற்றி எல்லாம் மனிதராய் நின்று பார்க்கவும் பிறர் துயர் துடைக்க எண்ணவும் நேரமில்லை. அதை எப்படி ஒரு உறவு என்று சொல்கிறார்கள் என்பதே நல்லோர்க்கு புரியாத ஒன்று. அதற்கு தூபம் போட ஊடகங்கள் சினிமாக்கள் எல்லாம். நல்ல செய்தியைப் போடுங்கடா என்றால் போட மாட்டான்கள்... பிரியாணிக் கடைக்காரன் அவனும் ஏற்கெனவே மணமானவன் அவனுக்காக தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றவள் மகா செய்தியாகிறாள் ஊடகத்திற்கு....எல்லாமே திருட்டுத்தனம் செய்ய எண்ணுமளவு...மாட்டிக்கிட்டா திருட்டு...மாட்டாதவரை அனைவரும் உத்தமரே...பாலியல் வல்லுறவுகள் பற்றிய தெளிவு பிள்ளைகளுக்கு பெற்றோரால் கொடுக்கப்படல் வேண்டும்...

 தீ ...அனல்போல் காய்க...அளவுக்கு மிஞ்சினால்... இதையே விந்தை விட வேண்டாம் நொந்தும் கெட வேண்டாம் என சித்தர்களும், பிரமசாரி விரதம் என்றும், பெரியோர் உறவை மாதமிருமுறை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ் முறைகளும் மறைகளும் சொல்லி வருகின்றன. தமிழ் வாழ்வியல் உலகுக்கே வழிகாட்டி.

இன்று உலகு தமிழ் மண்ணுக்கு அதன் மைந்தர்க்கு வழிகாட்டினால் அது அப்படித்தான் இருக்கும். எப்போதுமே உச்ச நீதி மன்றம் மக்களுக்கான இந்தியப் பெருநாட்டின் குடி மக்களுக்கான வாழ்வியலை மேம்படுத்த நல்லதொரு தீர்ப்பை வழங்கியதாக இல்லை. ஜெ இறக்கும் வரை அவர் குற்றவாளி என்று சொல்லவே இல்லை . இதிலிருந்தே உச்ச நீதிமன்றத்தின் ஆளுமை என்ன எனத் தெரிந்து கொள்ளலாம். அதே உச்ச நீதிமன்றம் என்றாவது மனித குலத்தை மாட்சிமை படுத்துமளவு நெறிப்படுத்த தீர்ப்பு வழங்கி இருக்கிறதா, அப்படி வழங்கி அதை அமல் படுத்தா அரசுகளை அமல் படுத்த நெருக்கிப் பிடித்திருக்கிறதா? என்றால் இல்லை.

 பிறகு ஏன் இந்த தீர்ப்பில் இவ்வளவு நாட்டம். உலக அரங்கில் 25 நாடுகளில் இதுவும் பேராம். இன்னும் தூக்கு தண்டனை பற்றி ஒரு முடிவுக்கு வரவில்லை. இன்னும் இந்திய ஏழை மக்களின் துயர் துடைக்க என்ன என்ன வழி வகை செய்வது என வார்த்தை கொடுக்க் வில்லை. இன்னும் குடி நீருக்கும், மருத்துவத்துக்கும், வீடுகளுக்கும், ஆடைக்கும், கல்விக்கும் , வேலைவாய்ப்புக்கும் மனிதம் தடுமாறிக் கொண்டிருக்க இந்த தேவை எல்லாம் நிறைவேறி விட்டாற்போலவும் எல்லாம் காமக்க‌டலில் மூழ்கி நீந்தத் தெரியாம‌ல் இவர்களிடம் வழிகேட்டதால் இவர்களை அன்றி வேறு எவருமே இதற்கு வழி சொல்லத் தெரியாதார் போலும் உச்ச நீதிமன்றம் ஒன்று மட்டுமே வழிகாட்ட இருப்பதாகவும் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது...

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எவரும் பெரிதாக எடுத்த்க் கொள்ளத் தேவையில்லை.  கர்நாடகம் காவிரியில் நீர் விடுவது பற்றி எடுத்துக் கொள்வது போல...சாலையோரங்களில் மதுக்கடைகள் எடுப்பது பற்றி தமிழக அரசு கடைப்பிடிப்பது போல.

முதலில் பொருளாதார மேம்பாடு, இருக்க வீடு நல்ல உணவு, நல்ல மருத்துவம், நல்ல கல்வி மானம் காக்க ஆடை, குடி நீர் இவற்றிற்கு எல்லாம் உத்தரவாதம் செய்யும் நல்லாட்சி அதன் பின் காமம் பேசும் அமைப்புகள் அதுவும் அந்த மண்ணுக்கு அந்த நாட்டின் வரலாற்றுக்கு அந்த நாட்டின் பெருமக்கட் தொகைக்கு ஏற்ற நீதி செய்யட்டும்/.

புகைக்காதே, மது குடிக்காதே, முறையில்லா உறவு கொள்ளாதே என்றெல்லாம் சட்டம் நீதி செய்யாத அரசெல்லாம் அரசேயல்ல அந்த சட்டம் நீதி எல்லாம் நீதியல்ல...

விபச்சாரம் ஒரு இடத்தில் சட்டத்தின் அனுமதியுடன் நடக்கலாம். இன்னொரு இடத்தில் அது நடக்கக் கூடாது என்பது. நம் நாட்டில் சட்டம் நீதி யாவுமே ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், வேறுபட்டவை.

எனவே நல்ல மனிதராய் நீ சமுதாயத்தை வழி நடத்த வேண்டுமெனில் இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாதே.... நல்ல பெண்ணுக்கு நல்ல ஆண் கிடைத்து அவர்கள் வாழ்வு வாழையடி வாழையாக வளரட்டும் மலரட்டும் மனித உறவு என்பது மகத்தானது. இருக்கும் உயிர்களில் மனித உயிர்கள்தான் அபூர்வமானவை. பிரபஞ்சத்தில் இன்னும் இந்த நீலகிரகமான பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் கண்டறியப் படவில்லை. இந்த சட்டமும் நீதியும் அந்த பிரபஞ்ச விதிகளுக்கு இயற்கைக்கு முரணானவை. முன்னேற்றம்,  நாகரீகம் என்ற பேரில் செய்யும் மூடத்தனம், முட்டாள்தனம்.
இவை விதிவிலக்குகளுக்கு நீங்கலாக...

 இவை போன்ற வாழ்வில் அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், விளையாட்டு வீராங்கனைகள் சிலர் தேர்ந்தெடுத்து வாழ்ந்ததாக உண்டு...ஆனால் அவை யாவும் விதிவிலக்குகள். சமூக நீரோட்டத்துக்கும் நல்ல‌ வாழ்வுக்கும் ஒத்து வராமல் வீழ்ச்சி செய்பவை. அதற்கு கலாம், காமராஜர், வாஜ்பேய், விவேகானந்தர் போன்ற பிர்மசார்ய வாழ்வு வாழ்ந்தோர் வாழ்வோர் கோடி மடங்கு உயர்ந்தோர்... தாம்பத்தியம் மிக உயர்ந்த வாழ்வின் ஒழுக்க மயமானது என்ற வள்ளுவரின் வாக்கே உலகுக்கு மூத்த வாக்கு.

 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது...
THIRUKKURAL ...THIRUVALLUVAR.

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

என்னிடம் ஓரினப்புணர்ச்சி பற்றிய நீதியின் தீர்ப்பை ஊடகத்தில் பார்த்த எனது மகன் மணியம் கேட்ட கேள்விக்கு பதிலாக அவர்க்கும் அனைவர்க்குமான பதிவு இது.. அர்ப்பணம்.

Saturday, September 8, 2018

என்ன சொல்லி(ல்) வாழ்த்துவது எப்படி பாராட்டுவது? கவிஞர் தணிகை.

என்ன சொல்லி(ல்) வாழ்த்துவது எப்படி பாராட்டுவது? கவிஞர் தணிகை.




ஓரின சேர்க்கையாளர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ராஜிவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் விடுதலை குறித்த தமிழக நிலை   பத்தாம் தேதி பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏற்றம் பற்றிய நாடு தழுவிய வேலை நிறுத்தம் இவை போன்ற செய்தி  நிகழ்வுகளில் நாடு மூழ்கிக் கிடக்கையில் நாம் ஒரு நல்ல மனிதரைப் பற்றிய அன்பை நன்றியறிதலாய்ப் பகிர்ந்து கொள்கிறோம்.

1978ல் இதே போல கல்லூரி ஆரம்பமான ஜூன் ஜுலை போன்ற மாதங்களில் இந்த நபரை நான் சந்தித்திருக்கிறேன். அப்போது கல்லூரியில் ஒரு கவிதைப் போட்டி வைத்தார்கள் உழைப்பு என்ற தலைப்பில் 40 வரி எழுதச் சொல்லி.

அந்த உழைப்பு என்ற தலைப்பில்:
உழைப்புக்கு உரு கொடுத்தோர் கொடுத்த தலைப்புக்கு கரு எடுத்து ... என்ற முதல் வரியுடன் எழுதி இருந்தேன். அதில் கவனக் குறைப்புக்கு இறை ஈடு செய்யும் கவளச் சோற்றுக்கு என்ன செய்யும் படி அளக்குமா: செவிப்பறை கிழியும் மட்டும் போர்ப்பறை ஒலிக்கட்டும், பெரியார் அண்ணா வழியில்..என்றெல்லாம் எழுதி அதே முதல் 4 வரியையே மாற்றி கடைசி நாலு வரியாக மாற்றியும் கவிதை முடிந்திருக்கும்...

தற்போது விடியல் குகன் எனச் சொல்லப்படும் எனது நண்பன் அவருடைய கவிதை அத்துடன் எனது கவிதையையும் அவர் எடுத்துச் சென்று போட்டி நடத்தும் நிர்வாகிகளிடம் சேர்த்தார். நான் அப்போது சில நண்பர்களுடன் சேர்ந்து பழனி சென்றிருந்தேன். நாங்கள் அனைவரும் அப்போது பொள்ளாச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தோம்.

அந்தப் போட்டியில் எனது பெயரும், எனது கவிதையும் முதலாக தேர்வு செய்யப்பட்டு அறிவிப்புப் பலகையில் இடம் பெற்றிருந்தது. அதன் பின் கோவை வானொலி நிலையம் சார்பாக எமது கல்லூரியில் நடைபெற்ற ஒரு பதிவு நிகழ்விலும் அந்தக் கவிதையை வாசிக்கச் சொல்லி பதிவு செய்துகொண்டன‌ர்.

அதன் பிறகு நண்பர் என்னை இணைத்துக் கொண்டு விடியல் என்ற ஒரு கையெழுத்துப் பிரதியை வெளியிட்டார் அல்லது வெளியிட்டோம். அதன் பிறகும் அவர் விடாமல் கல்லூரியிலிருந்து பிரிந்து சென்ற பிறகும் அதை அச்சாக்கப் பிரதியாக தமது நாமக்கல் ஊரில் இருந்தபடியே வெளியிட்டு புத்தகத்தை தபாலில் அனுப்பி நண்பர்களுக்கு விற்பனை செய்யச் சொல்வார். என்னடா இவன் விடவே மாட்டேன் என்கிறான், அதில் ஒரு கவிதை அல்லது ஒரு பதிவு என்னுடையதும் இருக்கும்...என்றாலும் எவரிடமும் சென்று விலைக்கு அந்தப் சிறு நூலை விற்பனை செய்து தருவதில் எனக்கு மகாத் தடங்கலாக மனசு கோணிக்கொண்டிருக்கும். கவிஞர் என்பவர்களுக்கும் விற்பனைக்கும் எப்போதும் பெரும் இடைவெளி இருந்து கொண்டு இருப்பது இயல்புதானே..

அத்துடன் கல்லூரியில் படிக்கும்போதே அகில இந்திய வானொலி நிலையத்தில் பகுதி நேர ஊழியராக அப்போது கவிஞர் இளைய பாரதி என்ற பேர் இளைய பாரதி என்ற பேர் பலருக்கும் இருப்பதால் தனது கி. ராஜேந்திரன் என்ற பேரில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி அப்போதும் இப்போதும் பெரிய பதவியில் இருக்கும் இருந்த அந்த நண்பர் விடியலைத் தேடி என்ற ஒரு நூலை வெளியிட்டிருந்தார்...அவர் வீட்டுக்கு என்னை இவர் கூட்டிச் சென்று இருவரும் ஓரிரவு தங்கினோம். நிறைய பேசினோம்...காலையில் எழுந்தும் எங்கோ நடந்து பேசிச் சென்று வந்தோம்.

 அது மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களின் காலம், அது நா. காமராஜனின் கறுப்பு மலர்களின் காலம், அது வைரமுத்துவின் திருத்தி எழுதிய தீர்ப்புகளின் காலம், அது மீராவின் கனவுகள் + கற்பனைகள்+ காகிதங்கள் காலம் இப்படி அப்துல் ரகுமான் கொடி கட்டிப் பறந்த காலம்...இப்படி சொல்லிக் கொண்டே போன காலத்தில் நாங்கள் எங்கள் ஆரம்பத்தை துவக்கி இருந்தோம்...


எங்களது கல்லூரிப் படிப்பு 3 ஆண்டு நிறைவுக்கு வந்த பிறகும் நண்பர் 7 ஆண்டுகள் தொடர்ந்து படித்து இன்று நீதிபதி ஆகிவிட்டார். அது வரை நிறைய வாழ்க்கைப் பயணம் இருவரிடமும் இருவர் வாழ்விலும்.

 அவர் திருமண்த்தின் போது தேக்கம்பட்டி சென்று இரட்டைக் கிளவி படர்ந்திருக்குமாறு ஒரு வாழ்த்தை பரிசளித்தேன்... பேர்ப்பொருத்தமும் அபாரமாக இணைந்திருந்தது. எனது நண்பர்க்கும் அவரது துணைவிக்கும் அப்போது அவர் ஒரு வழக்கறிஞர்தாம்.

நான் அப்போது திட்ட அலுவலராக, நேரு யுவக்கேந்திரா தொடர்புடன் , நண்பர் கொ. வேலாயுதம் தொடர்புடன் சசிபெருமாள், சின்ன பையன், தமிழரசு போன்ற இளைஞர்களை உருவாக்கிக் கொண்டிருந்த பேர்கள் 3 முறை மாற்றம் பெற்ற ஒரு இயக்கத்தின் முன்னோடியாக செயல்பட்டு வந்தேன். ஏன் அப்போதும் கூட சேலம் மக்கள் கலைப் பண்பாட்டுக் கழகம் என்ற ஒரு நல்லியக்கத்தின் தலைமைப் பொறுப்பில் கவிஞர் இன்குலாப் போன்ற கவிஞர்களுடன் கூட கவிதை கவியரங்கம் செய்தேன். அந்த கவியரங்கில் எனக்கு கிடைத்த தலைப்பு: நீதி. அப்போது தலைமைக்கவிஞராக இருந்த இன்குலாப் எனது கவிதையை நீதியின் தீர்ப்புக்கு ஒப்பிட்டு பேசியதும் நினைவிருக்கிறது.

இது போன்ற தருணங்களில் எல்லாம் கூட நண்பர் என் தொடர்பிலிருந்தார்.
 நாங்கள் பல்வேறுபட்ட கருத்து நெறிகள் குறித்து அவ்வப்போது கடிதப் பரிமாற்றம் செய்தபடி இருந்தோம்.இருப்போம். அப்போதெல்லாம் தொலைபேசி எல்லாம் அவ்வளவாக இல்லை.

நான் முதல் கவிதை நூலை வெளியிட்டேன், அதற்கு மீண்டும் மலரும் என்று பெயரிடலாம் என தமது கருத்தை முன் வைத்தார் நான் கேட்கவில்லை: அது மறுபடியும் பூக்கும் என்ற பேரிலேயே வெளிவந்தது.

அவர் எங்கிருந்த போதும் எனது வாழ்வில் ஒரு பகுதியாக முக்கியமான கட்டங்களில் எல்லாம் சேர்ந்தே இருந்தார். இருக்கிறார். எனது தந்தை இடுப்பெலும்பு முறிந்து சேலம் மருத்துவ மனையில் இருந்த போது, நான் ஹைதராபாத் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் சேவை புரிய சென்றிருந்த காலக் கட்டத்தில் கூட நான் வரும்போது அவரும் அங்கு சேலம் வந்து தந்தையைப் பார்த்து விட்டு... சற்று முன் நான் புறப்பட்டு விட அவர் நான் அங்கு மறதியாக தவற விட்ட எனது சாவிக் கொத்து ஒன்றை தபாலில் அனுப்ப அது என் கைக்கு வராமலே வாழ்வுப் படி மேலேறிச் சென்றுவிட்டது.

எனது தங்கையை நாமக்கல் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் சேர்த்து விட்டு அவரை விடுதியில் விட்ட பிறகு விஜய்காந்த் படமான வைதேகி காத்திருந்தாள் படம் பார்த்தோம்...அவர் இருப்பிடக் கிராமம் செருக்களை புதுப்பாளையத்துக்கு நான் நேரு யுவக்கேந்திராவில் பணி புரியும் காலக்கட்டத்தில் நாமக்கல் பக்கம் செல்லும்போது சென்று அவரை சந்திப்பது வழக்கம்.அவரது தங்கை சேலம் பொது அரசு மருத்துவ மனையில் விடுதியில் இருந்து கொண்டு செவிலியர் பயிற்சி எடுக்கும்போதும் இருவரும் அங்கு சென்றோம் பார்த்து வந்தோம்.

அவரும் எனது வீடு வந்து ஒரு நாள் தங்கிச் சென்றது இன்னும் நினைவிருக்கிறது. அப்போது நிறைய காதல் விஷ(ய)ங்களைப் பரிமாறிக் கொண்டு பேசியது நினைவிருக்கிறது.

அதன் பின் எனக்கும் நான் பணி புரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டபோது ஒரு வழக்குத் தொடரலாமா நடத்துகிறாயா என்று கேட்க அவரின் நாமக்கல் அறைக்கு ஒரு நாள் அவர் நீதிமன்றம் செல்லும் முன் காலையில் சென்று சந்தித்தேன். அவர் அதை ஏற்றுக் கொள்ள்வில்லை. மௌனம் சாதித்தார். நானும் விட்டு விட்டேன்.

 அதன் பின் அவர் பெரும் பாடுபட்டு நீதிபதி ஆகிவிட்டார். ஆனாலும் அவருக்கும் எனக்கும் இருக்கும் நட்பில் ஏதும் இடைவெளி இல்லை. இருவரும் ஒரே கொள்கையில் பயணம் செய்வதாகவே தோன்றுகிறது. மேல் படிப்பு படிக்க என் பெரும் குடும்பத்தின் சூழல் ஒத்துழைக்காத போது தனது சகோதரர் மூலம் நிதி உதவி செய்ய தயாராக இருந்தார்  என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

அதன் பின்னும் நாங்கள் பல படிகள் வாழ்வின் வழியில் கடந்து மேல் ஏறினோம். மணந்தோம். தந்தையானோம். குடும்பம் நடத்துகிறோம். அவருக்கு இரண்டு பாரதிகள் அருண், நவீன் என எனக்கு ஒரு சுப்ரமணியம்...

அதிலிருந்து ஒவ்வோரு புத்தகம் போடும் போதெல்லாம் தன்னால் ஆன பங்களிப்பை செய்யத் தவறியதேயில்லை. மேலும் அந்தப் புத்தகம் விற்பனை செய்ய தாம் பின்னிருந்து செய்யும் கூட்டத்தில் எல்லாம் என்னை அழைத்து பேசச் சொல்லி, உரை வீச்சு செய்யச் சொல்லி, புத்தகம் விற்பனையாக நல்ல ஒரு மேடையை எனக்கு அமைத்துத் தந்த வண்ணம் இருக்கிறார். எனக்கு எனதுசேவையை பாராட்டி எவரும் ஒரு விருதும் தர முன்வராத போது நான் முன் விழையாத போதும் எனக்கு வாழ்வியல் வழிகாட்டி நட்புச் சூரியன் என்ற விருதை எல்லாம் பெற்றுத் தர காரணமாகி இருக்கிறார்.

 ஒரு நாள் இரவில் வந்து பழனி செல்ல குடும்பத்துடன் அழைத்தார் ஏனோ அப்போது அந்த நள்ளிரவில் எனது தியான ஆன்மாவின் குரல் தடுத்து விட நான் அவருடன் இணைந்து வர வில்லை என்று அவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தாரையும் சற்று ஏமாற்று குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தேன். அப்போது எனது தாயும் என்னுடன் இருந்தார்.

எனக்குள் ஒரு கற்பனை இருந்தபடி இருக்கும் நான் மார்க்ஸ் போல அவர் எங்கெல்ஸ் போல...ஏழ்மை மார்க்ஸ் பக்கம்..எனவே...

நாட்டுக்கும் நட்புக்கும் பெரிய அமைதிப் பாலமிட ஆக்கபூர்வமான செயல்கள் புரிய தன்னால் ஆன செயல்களைச் செய்து வருகிறார். இவர் நல்ல உழைப்பாளி. என்னை விட ஆமாம் என்னை விட. எனவே நிறைய எழுதுவர். நான் அவரை ஒப்பிட்டால் படு சோம்பேறி... நான் தியானம், நடைப்பயிற்சி எழுத்து பேச்சு என நிறைய பயணம் செய்தபோதும்...

அவர் கதை எல்லாம் எழுதுவார். நான் கதை பெரிதாக எதையும் எழுதியதாக நினைவில்லை. அவரும் கவிஞர். அவரது ஆலோசனகளை அவ்வப்போது எடுத்துக் கொண்டுமிருக்கிறேன்..ஏற்காமலும் இருந்திருக்கிறேன். ஆனாலும் என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்

இப்போது எங்களது அடுத்த தலைமுறையையும் இணைந்து பிணைந்து  பயணம் செய்ய முயற்சிக்கிறார். குடும்பம், நட்பு எல்லாவற்றிலுமே தம் இதழ்களை விரித்தபடி...தம் கிளைகளை பரப்பியபடி... தட்சிணா மூர்த்தி  என்ற பேர்தானே கருணாநிதி என்ற பேராகியது தமிழில் சொல்ல அமைதிக் கீற்றுடன்....

அப்துல் கலாம் இயக்கம் நடத்தும்போதும், கபாலீஸ்வரர் கோவில் கட்ட நான் சுமார் பதினெட்டு மாத காலம் எவ்வித ஊதியமும் இன்றி உழைத்த போதும் எனது பகிர்வை பகிர்ந்து கொண்டார்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சுருங்கச் சொல்லின் எனது வாழ்வின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் தமது பங்கெடுப்பை இவர் தவறாமல் எடுத்துக் கொண்டே இருக்கிறார். இவரை என்ன சொல்லி(ல்) வாழ்த்துவது எப்படி பாராட்டுவது?

எங்கிருந்து இவ்வளவு பெரிய மனது, பரந்த மனப்பான்மை உன்னிடம் வந்தது...நான் இன்னும் கர்ஜிக்கும், ரௌத்திரம் பழகிய சிறுவனாகவே இருக்கிறேன்...நீ அமைதியான ஆழ்கடலாகி புன்முறுவலுடன் மட்டுமே காட்சி தருகிறாய்...எப்படி இவ்வளவு பெரிய ஆள் உன்னுள் வந்து உட்கார்ந்திருக்கிறான் நண்பா.. உண்மையிலேயே நீ பெரிய ஆள்தான், அரிய மனிதன் தான், அபூர்வமான நல்ல மனிதர்தான். மனிதரை இருக்கும்போதே நினைக்கும்போதே பாராட்டி விட வேண்டும். அதற்கானதே இந்தப் பதிவு...உனக்கு என் மேல் துளி கூட பொறாமையே வரவில்லையே..

.நீ பல நேரங்களில் நீ பெரு முயற்சி செய்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வாய் நான் வந்து அந்த இடத்தை ஆக்ரமித்து பெரும்பயன் அடைந்து பேர் பெற்று சென்று விடுவேன்... ஆனாலும் நீ மறுபடியும் என்னை அழைத்தபடியே இருக்கிறாய், என்னை அணைத்தபடியே இருக்கிறாய்...என்னை தூக்கி வைக்கவே என்னை எனது கருத்துகளுக்கு தோள் கொடுக்கவே, கை கொடுக்கவே நீ ஏற்பாடு செய்கிறாயோ என்றெல்லாம் தோன்றும்... ஆனாலும் நமது உழைப்பு  நாடு மேம்பட...நாம் நல்ல விதைகள்...பேர் சொல்லும் நம் பேர் சொல்லும் நம் பெற்றவர் பேர் சொல்லும், நம் பிள்ளைகள் பேர் சொல்லும் இந்த பூமி...

உனக்காகவே கரூரில்  நெட்டைமரங்களென நின்றார் என்றும், உனக்காகவே பழனியில் உடல் வளர்ப்போம் உயிர் வளர்ப்போம் என்றும் உனக்காகவே திண்டுக்கல்லில் புறம் கட உள் பார்க்க புறம் கட கடவுள் பார்க்க என்றெல்லாம் வந்து உரை வீச்சு செய்தேன் எனது உடல் நலிவை எல்லாம் கூட பொருட்பட்டுத்தாமல்..செப். 02ல் உனக்காகவே கோவையிலும் நம்முடன் படித்த நபர்களுடன் ஒருவனாய் வந்து சேர்ந்தேன் உனது வேண்டுகோளின் படி மகனையும் அங்கழைத்து வந்து சேர்த்து... அங்கு ஒருங்கிணைப்பு செய்தேன் என்றாலும் அது வேறு தளமாக இருந்ததால் பெரிதான நிறைவில்லாத போதும் அங்கும் எனது நோக்கம் நிறைவேற சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டு நான் மனம் கோணி விடக்கூடாது என்று புத்தக விற்பனைக்கும், மேடையில் எனை இடையுற்ற நண்பர்களையும் ஆற்றுப் படுத்தி என்னை மேன்மைப்படுத்தினாய். அவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்...பொருளாதார நிலை மட்டும் உயர்ந்திருக்க, வயது மட்டும் கூடியிருக்க, உடல் மட்டும் தளர்ந்திருக்க....சமுதாயப் பார்வை அவர்களுள் இன்னும் வந்தமரவில்லை... அவர்கள் யார் சொல்வதையும் எவர் சொல்வதையும் எதற்காகவும் கேட்கும் மன நிலையிலும் இல்லை... அவர்களுடன் வெகுவாக மாறி வெகுதூரம் சென்ற என்னையும் ஏன் கொண்டு வைக்கிறாய் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.....

கடைசியில் ஒரு காமெடி: எனது வீட்டின் கூரையின் ஓடுகள் தொங்கிக் கொண்டிருக்க நண்பர்கள் எல்லாம் சேர்ந்து எனது வீட்டைக் கட்டித்தர ஒரே ஏகோபித்த குரலில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றி கட்டித்தருவதை அறிவிப்பார்கள் என்றிருந்தேன் அந்த அறிவிப்பும் வரவில்லையே..

கடைசியில் பற்றாக்குறை வரவு செலவில் ஏற்பட்டு அனைவரும் பங்கிட்டுக் கொண்டதை அறிந்தேன். அனேகமாக அங்கு வந்ததில் பெரும்பயன் பெரும்பலன் அடைந்தவன் நானாகவே இருப்பேன், அதை தந்தவன் நீயாகவே இருக்கிறய்.

நிறைய தவறுகள் இருக்கின்றன ஆனாலும் அங்கு நீ இருந்தாய் என்ற நிறைவும் இருந்தது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






Thursday, September 6, 2018

பயணம் செய்த சக்திகளாக விளங்க முடியும்...மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை.

 ஒரு நல்ல தலைமையும் ஒரு நல்ல மக்களுக்கான ஆட்சியும் இருந்தால் போதும் அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். அல்லல்கள் தீரும் என்பதை வரலாறுகள் சொல்கின்றனவே...

Related image

முதலில் இங்கிருக்கும் எல்லாத் துறைகளையும் அரசின் கட்டுப்பாட்டுடன் எல்லோருக்குமான பொது உடமையாக்கப்பட வேண்டும்.

 போக்குவரத்து, கல்வி, மருத்துவம், பெட்ரோலியப் பொருட்கள் ,குடி நீர் அடங்கிய மண்ணை பூமியை எல்லாவற்றையுமே அரசுடமை பொதுவுடமை ஆக்க வேண்டும்...அது பெரிய நாடு என்றிருந்தாலும் இருக்கட்டுமே..ஓரிரவில் பண‌த்தை செல்லாக்காசாக்கி சொந்தக் காசைப் பெற இரவிலும் பகலிலும் சாலையோர வங்கிகளில் வரிசையில் நின்றே ஏழை மாந்தர் ஏமாந்த கதையும் அதிலும் வங்கி ஊழியர் இடைத்தரகராய் இருந்ததும், அந்த நேரத்திலும் எந்த பிரபல அரசியல் பிர‌முகரும், எந்த பணமுதலைகளும் அந்த வரிசைக்கு வந்து நின்றதாக நாம் பார்க்கவில்லையே...அதெல்லாம் செய்யும்போது ஓரிரவில் இவ்வளவு பெரிய நாட்டில் நல்லதுக்கு செயல் திட்டம் தீட்ட முடியாதா வழி இல்லையா? அதற்கான சட்ட திட்டம் செய்ய முடியாதா?

புகைக்காதே என்று சொல்லும் முன் பீடி சிகெரெட் ஆலைகளை தடை செய்வது, குடிக்காதே என்று சொல்லும் முன் மதுபான ஆலைகளுக்கு நிரந்தர சீல் வைப்பது, விற்காதே என்று சொல்லும் முன் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளை இழுத்து மூடுவது இதெல்லாம் செய்ய முடியாதா அல்லது செய்யும் அரசுகள் வர முடியாதா...

ஏதாவது ஒரு முன் மாதிரி பற்றிச் சொல்லப்போனால் அது சிங்கப்பூர், அது ரஷ்யா, அது வியட்நாம், அது கியூபா இது இந்தியா என்ற எதிர்வாதம் செய்வதில் என்ன இருக்கிறது...

இங்கிருக்கும் நிலையில் இங்கிருக்கும் சுரண்டல் பேர்வழிக்கெதிராக இயங்கிய இயக்கத்தை சொல்ல ஆரம்பிக்கும்போதே செவி சாய்க்காமல் வேறு வேறு வாதம் புரிந்து பேச்சை மடைமாற்றம், திசைதிருப்பினால் என்னதான் யார்தான் சொல்ல முடியும்?

மக்கள் சரியாக வெகு காலம் ஆகும்...ஆனால் அவர்களால் மட்டுமே ஒரு நல்லாட்சிக்கு வித்திட முடியும் என்பது உண்மைதான்...ஆனால் அப்படிப்பட்ட மக்களை மக்கள் சிந்தனை உடைய ஒரு நல்லாட்சி நல்லரசுதான் உருவாக்கவும் முடியும்...

கோழி முதலிலா, முட்டை முதலிலா , காற்று வந்ததும் கொடி அசைந்ததா? கொடி இலை தழைகள் மரம் எல்லாம் அசைந்ததால் காற்று வந்ததா என்ற கேள்விகள் தொன்று தொட்டே உண்டு...

கலைஞர் கருணாநிதி போன்ற அதிமேதாவிகள் கோழி விற்பனை செய்வார்க்கு கோழி முதலில், முட்டை விற்பனை செய்வார்க்கு முட்டை முதலில் என்ற சிலேடையில் பதில் பேசிக்கொண்டே கட்சியை தமது குடும்பத்தின் போக்கிலும் நாட்டை குட்டிச்சுவராக்கிய வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கிய பெருமையும் உண்டு...

ஆனால் சிறு சிறு குழுக்கள் கூட எழுச்சி பெற்று எழுந்து மக்களுக்கு ஆதரவாக நாட்டின் ஆட்சியைப் பிடித்து நல்லாட்சி தந்த வரலாறுகள் உண்டு.அதை சொல்லப்போனால் உடனே அது அந்நிய வரலாறு என்று ஏற்க் மறுப்பதுவும், அதற்கு எதிர்வாதமாக எதை எதையோ பேசுவதும் எந்த பயனையும் அளிக்கும் தீர்வைத் தராது...

பிடல் சே இருவரும் தமது நண்பர்கள் அடங்கிய குழுவினருடன் தோல்விமேல்  தோல்வியுடன் தாம் அந்த கியூபா நாட்டின் வரலாறை எழுதி இன்று உலகின் சர்க்கரைக் கிண்ணமான நாட்டில் அனைத்து மக்களுக்கும் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை உயர் தரத்துடன் இலவசமாக வழங்கிடும் ஆட்சிக்கு வித்திட்டனர். மேலும் உடல் ஆரோகியம் சிறந்துற உலக விளையாட்டரங்கில் அந்த வீரர்களும் வெற்றி வாகை சூடுகின்றனரே...ஆம் அதுசிறிய நாடுதான்.

சிங்கப்பூரில் ஒரு ஆழ்துளைக் கிணறு கூட எவரும் அரசுக்குத் தெரியாமல் தோண்டி விட முடியாது...வீடுகளுள் கூட ஒரு சிறு மாற்றம் கூட அரசுக்கு தெரியாமல் நடத்தி விட முடியாது...

ஹோசிமின் என்ற ஒரு சர்வ சாதாரண மனிதர் பாறை மேல் படுத்துறங்கி எதிரிக்கு பயந்து இரவில் காடு மேடுகளில் திரிந்து எச்சில் தட்டை உணவகங்களில் கழுவி தொழில் செய்தவர் அந்த வியட்நாம் நாட்டின் தலைவிதியை மாற்றினார் என சரித்திரம் சொல்கிறது.

மாபெரும் நிலப்பரப்புடன் இருந்த சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக் லெனின் மூலம் மார்க்ஸ் கொள்கைப்படி மலர்ந்த வரலாற்றை உலகு என்றுமே மறந்து விட முடியாது...

அந்த லெனின் தான் சொல்வார்  கோடிக்கணக்கான மக்கள்  இனியும் ஒரு நொடி கூட பொறுக்க முடியாது என வெகுண்டு எழும்போது வருவதுதான் புரட்சி என்பார்.

அப்படி கோடிக்கணக்கான மக்கள் வெகுண்டெழுவது கட்டுப்பாட்டுடன் இயக்கரீதியாக மலருமா  மலராதா என்பதெல்லாம் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை

ஏன் எனில் அதற்கு உறுதியான பதிலை இதுதான் இப்படித்தான் என்றெல்லாம் சொல்லில் விட முடியாது.

விதை உடனே விருட்சமாகிவிட முடியாது என்று சொல்வதையும் காது கொடுத்து கேட்கவில்லையெனில் அங்கே எப்படி ஆரோக்யமான விவாதம் நடைபெற முடியும்?

சீனா இன்னும் அந்த கொள்கைப்பிடிப்புடனான ஆட்சியுடன் தானே உலகின் முதல் நிலை வல்லரசாய் மாறி வளர்ந்து வருகிறது.

முதலாளித்துவ முதல் நிலை நாடான அமெரிக்க ஐக்கியக் குடியரசில் கூட சமூக சமுதாயப் பணியில் பேர் வாங்கிய பராக் ஒபாமா இரு முறை ஆட்சிக் கட்டில் அமரவைக்கப்பட்டாரே...

Related image


இங்கு தேவையெல்லாம் ஒரு நல்ல தலைமைதான். அது அமைந்து விட்டால் நநி நீரைக்கூட இணைத்து விடலாம். இந்தியாவின் பொருளாதார வளத்தை முன்னேற்றினார்கள் என்றாலே பாதி தொல்லை துயர் எல்லாம் தீருமே...இடைவெளிகள் குறையுமே... இங்கும் கல்வி, மருத்துவம், குடிநீர் எல்லாம் இலவசமாகவே தரமுடியுமே...குடிநீரை விற்பனைக்கு என விற்கும் கயவர் கூட்டத்துக்கு எவர் அனுமதி தந்தது குடிமக்களுக்கு கொடுக்காமல் அவர்கள் ஆலை நடத்த எவர் அனுமதித்தது... குடிநீர் விற்பனையைத் தடுக்க முதலில் இந்த ஆலைகள் எல்லாம் அனுமதியின்றி இரத்து செய்யப்பட வேண்டியது அவசியமானதல்லவா...அதை செய்யும் ஆட்சி அதை செய்யும் மக்கள் தாமே நாட்டை மேம்படுத்தும் வழியில் பயணம் செய்த சக்திகளாக விளங்க முடியும்...

டென்மார்க் ஆட்சியில் பல வருடம் ஆகியும் பொருட்களின் விலை அப்படியே இருக்கிறது...இங்கே உரூபாவின் மதிப்பு வீழ்ந்து கொண்டே போய் டாலருக்கு 100 என்றும் வந்து நிற்கலாம்...பெட்ரோல் விலை 100 என்றும் ஆகலாம்...

முதலில் மனிதரை நல்லது செய்ய முனையும் மனிதரை சமூகத்துக்கு விதைகளை விதைக்க விரும்பும் மனிதர்களை இதெல்லாம் முடியாது அதெல்லாம் முடியாது அதை  ஏன் செய்கிறீர் இதை ஏன் செய்கிறீர் என்பதை நிறுத்தி விடுங்கள் அப்படி எல்லாம் சொல்வதிலிருந்து விடுபடுங்கள்... விட்டுவிடுங்கள்


இந்திய பூமியும் அப்படி ஒன்றும் சாதரண பூமியல்ல, இதுவும் ஒரு தியாக பூமிதான் இங்கும் தியாகத்தலைவர்கள் எண்ணற்று மலர்ந்திருக்கின்றனர். தளராமல் முயன்றிருக்கின்றனர். எனவே அவர்கள் உழைப்பெல்லாம் வீணாகிடக் கூடாது...நம்மால் ஆனதை செய்வோம்..செய்து கொண்டே இருப்போம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.