Tuesday, December 31, 2019

அந்த ஒரு நொடியில் தான்: கவிஞர் தணிகை

அந்த ஒரு நொடியில் தான்: கவிஞர் தணிகை

விடை தெரியாக் கேள்விகள்.

Image result for at that moment"


எல்லா முடிவுகளுமே அந்த ஒரு நொடியில் ஏற்படுவனதான். அது நேர்மறையாக அல்லது எதிர்மறையாக மனித வாழ்வை, உயிர்கள் வாழ்வைவிளைவுகளை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும்  கொண்டு செல்லும் வண்ணம் அமைந்து விடுகின்றன அமைத்து விடுகின்றன‌.

நட்பிற்கு மட்டுமே நிபந்தனையோ நிர்பந்தமோ இல்லை.

கடந்த 25 கிறிஸ்மஸ் தினமன்று நண்பர் குகன்( எப்படி பொருத்தமான பெயர் இவர் அமைத்துக் கொண்டார்.எப்போதும் நான் வியக்கும் வண்ணம் அந்த இராமாயண குகனைப்போன்றே) என்னை விட்டு விடவே கூடாது என்று நாமக்கல் விதை சிகிச்சை பயிற்சி முகாம் நடைபெற அழைத்திருந்தார்.நானும் எவ்வளவோ 24 இரவு 10 மணி வரை அதை இதை சொல்லி தவிர்த்துவிடவே முயன்றேன் எனினும் நட்பு என்னை தவறவிடவே இல்லை.

எனவே வழக்கம்போல 25  அன்றும் அதிகாலை (அதுதான் விடுமுறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் எழுந்து கொள்ளும் பழக்கம் நம்மை 4 மணிக்கு எழுந்தே பழக்கமானதால் தூங்க விடுவதே இல்லையே) 4 மணி முதல் புறப்பட ஆரம்பித்தேன். நிகழ்வு 10 மணிக்கு என ஏற்பாடு. (9.30 மணிக்குள் நாமக்கல் பேருந்து நிலையம் சென்றடைந்துவிட்டேன் என்பது வேறு)

பிரார்த்தனை நேரம் முடிவதற்குள் யேசு யோவானிடம் ( யோவானா அல்லது வேறு ஒரு தலைமைச் சீடரோ அவர் பேர் எனக்கு இப்போது நினைவில் சரியாக இல்லாமலும் இருக்கலாம்)சேவல் கூவும் முன் 3 முறை மறுதலிப்பாய் என்பது போல வேண்டாம், வேண்டாம் , போக வேண்டாம் என 3 முறை தனித்தனியாக ஒலியற்ற வார்த்தைகளாக சொல்லப்பட்டது. (இந்த வார்த்தைகள் எங்கிருந்து, யாரிடமிருந்து எனக்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றன அல்லது ஆன்மாவின் குரல் தியான வளத்தால் அதிமாக கிடைக்கிறதா இதெல்லாம் பேராய்வுக்கு உட்படுத்தி ஆயுளை முழுதும் அர்ப்பணித்தாலும் விடை காண முடியாக் கேள்விகள்....தலைப்பு வந்து விட்டதல்லவா?)

எப்படி நண்பருக்கு கொடுத்த வார்த்தையை மாற்றி நம்பிக்கை ஏமாற்றம் அளிப்பது...சென்று வருதலால் எனக்கும் நன்றிக் கடனுக்கு செய்ய வேண்டுமான கைம்மாறு மட்டுமல்ல‌ சிறு பொருளாதார ஈடு உண்டு நானிருக்கும் நிலைக்கு அது உதவியும் கூட ( ஆனால் அதை எல்லாம் எதிர்பார்த்து இந்த முறை நான் சென்று கலந்து கொள்ள எண்ணமிடவில்லை) நண்பரை எப்படி மறுப்பது என அந்த இயற்கை வார்த்தைகளை மீறி சொன்னபடி சென்றேன். நிகழ்வு நல்ல படியாக நடந்தது. என்னால் ஆன உதவிகள் செய்தேன் வழக்கமான விவாதப் போக்கை கைவிட்டு.

வீடு திரும்புகையில் சுமார் 4 அல்லது 5 மணி பயணம்... இரவு 8மணிக்கும் மேல் இருக்கும் சேலம் பேருந்து நிலையத்துள் பேருந்து புகுந்து நிலைப்பாட்டுக்கு வருவதற்கு சில நிமிடங்கள் முன் பேருந்து செல்லச் செல்ல ஒருவர் இறங்கினார் சற்று வேகம் எனவே ஓடி சமாளித்தார் நான் அவரை ஏன்  பார்த்து பார்த்து என வாய்விட்டே எச்சரித்தேன்.

அடுத்து வீடு செல்லும் பேருந்தை பிடிக்க எனக்கு அவசரமோ...அதுவும் சுமார் ஒன்னரை மணி நேரப் பயணத்துடன் இருக்கும்...

அடுத்து இன்னும் சற்று தூரத்தில் நானும் இறங்கத் தயாராகி படிக்கட்டில் நின்றபடி வந்தவன் பேருந்து ஒரு வேகத்தடையின் மேல் ஏறவும் நான் அதுவரை பொறுமை காத்தவன் என்ன தோணியது என்று நினைக்கும் நொடிக்குள் வேகத்தடை என்றால் பேருந்து இன்னும் மெதுவாகவே தானே போகும் என எட்டி குதித்திருக்கிறேன். நல்ல வேளை எட்ட எட்டி குதித்திருக்கிறேன். பேருந்து ஒரு ஜெர்க் ஆக ஒரு இடறல் ஆக நானும் எனது கால் பாதமும் அந்த வேகத்தடையின் முன் பாகத்தின் சாய்வில் சரியாக நிலைத்து நிற்க முடியாமல் கீழே விழுந்தேன். பேருந்து போய்விட்டது.

நான் உடனே ஒன்னுமில்ல ஒன்னும் ஆகலை எனச் சொல்லியபடியே எழுந்து கொண்டேன், செல்பேசி வேறு( Shirt pocket) பாக்கெட்டில் இல்லை எப்படியோ விழும்போது தவறி விட்டதோ என பயம் வேறு நல்ல வேளை அது எப்படியோ கையில் இருந்த ஒயர் கூடையுள் இருந்தது, விழுந்திருந்ததோ அல்லது நான் வைத்து இருந்தேனோ அதுவும் மறந்து விட்டது. நல்ல வேளை. இடது கை முட்டி சற்றும் இடது முழங்கால் முட்டி சற்றும் சாலையில் பட்டு அழுத்தப் பதிவைக் காட்டியது. நல்லவேளை பெருத்த காயம் ஏதும் இல்லை. சிறு சிராய்ப்புதான் இடது கை முட்டியில்...அருகே வந்து கொண்டிருந்த ஒரு இளைஞர் சார் பார்த்து இறங்க வேண்டும் சார் பின்னால் சக்கரத்தில் சிக்கி இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்றார். உண்மைதான் அவர் சொல்லியது.

நானும் சிறிது நிலை உணர்ந்து கவலை அடைந்தேன். அனைவர்க்கும் அறிவுரை சொல்பவன் நானே இப்படி நடந்து கொண்டது எனக்கு சற்று கூச்சமாகவும், அவமானமாகவும் சொல்லத் தகாததாகவும் உணர்ந்தேன்.எப்போதும் சிறு வயதாகவே நினைப்பில் இருக்கும் எனக்கு ஓ! கலாம் சொன்னது போல நானும் இந்த பூமியுடன் சூரியனை 58 முறை சுற்றி விட்டேனே...என்னதான் சொன்னாலும் உடலுக்கு வயது என்பது ஒரு அடையாளமாகவே இருக்கிறது. உடல் திடம் குறைந்து விட்டது என்பது உறைக்க ஆரம்பித்தது. என்றாலும் நான் அதை அவ்வப்போது துடைத்து போட்டு போய்விடுபவன் என்பது வேறு. என்னதான் கெட்ட பழக்கம் இல்லாவிட்டாலும் என்னதான் நான் இளைமையாகவே உடலை பராமரிக்கிறேன் என்று சொன்னவர்க்கு எல்லாம் கூட....

 அடுத்த பேருந்து ஏறி அமர்ந்தேன். வீடு வந்து சேரும்போது அமாவாசையும் மின் வெட்டுமாக ஒரே இருட்டு. செல்பேசியின் டார்ச் லைட் வெளிச்சத்தில் தான் தடம் பார்த்து பேருந்து நிறுத்தத்திலிருந்து வர முடிந்தது. அந்த இரவில் மின் நிலைய தீ விபத்தால் சுமார் 4 மணி நேரம் மின் விநியோகம் பாதித்தது என அறிக்கை. அடுத்த நாள் உள்ளாட்சித் தேர்தலின் முன் நாள்.


இராமசாமி என்னும் எனது ஒரு இளைய தம்பி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட ட்ரெஸ் என்னும் ஆயின்மென்ட் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது அப்போது இதேபோல ஒரு டிசம்பர் மாதம் தான் என நினைக்கிறேன். புத்தாண்டு அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் முன் இப்படி ஏதாவது நேர்ந்து விடுவது எனக்கு வழக்கம் தான்.இதை பல ஆண்டாக நான் கவனித்து வருகிறேன்.அப்போது எனது சிறுவனாக இருந்த மகனுக்கு நீ ஓடும்போது ஏன் உடலை முன்னோக்கித் தள்ளியபடி ஓடுகிறாய் அப்படி ஓடினால் விழுந்து விடும் நிலை ஏற்படும் என ஓடிக்காட்டி எங்கள் வீட்டுப் பின் கட்டு இரும்புத் தகரக் கதவு மூடி இருக்க அதன் மேல் முட்டி அது திறந்து கொண்டு நான் கீழே விழுந்து முட்டியில் நல்ல காயம் ஏற்பட்டிருந்தது.அப்போது அது சீழ் பிடிக்காமல் இருக்க ட்ரெஸ் போடுங்கள் அண்ணா என ராமசாமி அறிமுகப்படுத்தினான்.அதையே இன்றும் சற்று இடது கை முட்டியில் தடவி வருகிறேன் பெரிதான காயமாக இல்லாதபோதும்
Image result for at that moment"
இப்படித்தான் 2000 ஆண்டுக்கும் முன் ஒரு கிறிஸ்மஸ் தின முன் நள்ளிரவில் பல்லாண்டுகளாக துணையுடன் சென்று சாலையோரத்தில் படுத்துக் கிடக்கும் அனாதைப் பிச்சைக்காரர்களுக்கு  நடுங்கும் குளிர் தவிர்க்க போர்வை கொடுத்து/போர்த்தி  வந்த நிகழ்வுகளில் அன்று அந்த ஆண்டு ஒருவரும் துணைக்கு சேராத நிலையில் தன்னிச்சையாக தானே ஒருவனே தனியாக சென்று பணி முடித்து திரும்புகையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து நல்ல வேளை வீட்டருகே வந்து விழுந்து இடது கை முழங்கை மூட்டை இடம் பெயரச் செய்து கொண்டு அந்த நிலையிலேயே தாரமங்கல அரட்டை அரங்க விசுவின் நிகழ்வில் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டிருந்தேன் கைக்கட்டுடனேயே.

எனவே ஆங்கிலப் புத்தாண்டு, ஆடி மாத வாக்கில் எல்லாம் சற்று நிதானத்துடன் எச்சரிக்கையாகவே இருப்பது வழக்கம். ஏனோ அவை  எனக்கு எப்போதும் நடந்தே விடுகின்றன புத்தி புகட்டுகின்றன‌.

நேற்று ஒரு செய்தி பார்த்தேன் சேலத்திலிருந்து குடும்பத்துடன் திருப்பதி செல்ல ரயில் ஏறுகையில் முன்பதிவில்லாப் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருக்க எல்லாம் ஏறிக் கொள்ள பெற்ற தாயை தன் மகன் ஏறிக் கொள் என அவசரப்படுத்த ரயில் எடுக்க அவரால் ஏற முடியாமல் நடைமேடை இடைவெளி மற்றும் ரயிலின் புறப்பாடு காரமாக விழுந்து திருப்பதி செல்ல வேண்டிய 50 வயது தாய் பர‌லோகம் சென்றடைந்ததாகப் படித்தேன். கட‌வுளை நாம் நமக்குள் தேடலாம் அது மேலும் நமது மனிதத்துக்கு சிறப்பு சேர்க்கும்.

இப்படி நாம் ஏதோ ஒரு சிறு நொடியில் நிதானமிழந்து அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் நம்மை பெரும் துயரத்திலும் ஆழ்த்தி விடுகின்றன. எனவே எப்போதும் பெரியோர் சொன்ன நிதானமே எல்லாவற்றிலும் தானங்களில் எல்லாம் சிறந்ததாக கருதப்படுகிறது.

இந்தப் பதிவு படிக்கும் எல்லாருமே அதை நினைவில் கொள்ள வேண்டியதும் எல்லா நேரங்களிலும் அதைக் கடைப் பிடிக்க வேண்டியுமே இதை எழுதுகிறேன்.

அன்று இரவு நண்பர் செல்பேசியைக் காணோம், உடல் நலத்துக்காக தாய்க்கு வாங்கிய  திரிபலா பல் பொடி காணோம், தொந்தி குறைய வாங்கிய முட்பந்தைக் காணோம் மறந்து விட்டேனே நிகழ்ச்சி நடந்த இடத்திலேயே மறந்து விட்டு விட்டேனே என புறப்பட்ட பிறகு காரில் அலைக்கழிந்தபோது அவருக்கு நான்  அவர் என்னை பேருந்து நிலையத்துக்கு அழைத்து  வழியனுப்ப வரும்போது சொன்ன வார்த்தை எதிலும் ஒரு நிதானம் இருக்கட்டும் அவசரப்பட்டாலே மறதி வரும்...என்றேன். அனைவரிடமும் பிரிந்து அவர்களை வழியனுப்பும்போது நான் டேக் கேர் எனச் சொல்வதும் வழக்கம்.
Image result for at that moment"
அவருக்கு சொல்லிய நான் அன்றைய சில மணி நேரங்களுக்கும் பின்னே நிதானம் இழந்து கீழே விழுந்து எழுந்திருக்கிறேன்... டேக் கேர் இல்லாமலும் நிதானமில்லாமலும்.

இப்படித்தான் ஒரு சிறு நொடிப்பொழுதில் மரணங்களும் நிகழ்ந்து விடுகின்றன‌

எனவே 2020ன் புத்தாண்டுச் செய்தியாக நான் சொல்ல விரும்புவது நிதானமாக இருப்போம் நமது செயல் முடிவுகளில் திடமாக இருப்போம் விபத்தை தவிர்ப்போம்  மேலும் மேலும் வளரும் உலகை ரசிப்போம்.

நன்றி
வணக்கம்
அனைவர்க்கும் எனது 2020ன் வாழ்த்துகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Saturday, December 28, 2019

தானியப் பயிர்கள் மூலம் மருத்துவ சிகிச்சை: கவிஞர் தணிகை

தானியப் பயிர்கள் மூலம் மருத்துவ சிகிச்சை: கவிஞர் தணிகை


Image may contain: one or more people, people sitting and indoor

Image result for seed therapy"

மன வளக் கலை அறிவுத் திருக்கோயில் மஹரிஷி வேதாத்திரி அவர்கள் பயிற்சி மூலம் நிறைய பேர் உருவாகி இருக்கிறார்கள். அவர்கள் மனித நலம் பேண தங்களால் ஆன முயற்சியை மேற்கொள்கிறார்கள். அதில் ஒரு பகுதி சு ஜோ தெரபி அதாவது சு என்றால் கை ஜோ என்றால் கால் உடலின் எல்லாப் பகுதிகளும் கை மற்றும் கால் பகுதிகளில் அதாவது உள்ளங்கை மற்றும் பாதத்தின் புள்ளிகளில் இணைகின்றன. எனவே அந்த பகுதிகளில் அக்குப் பஞ்சர் , அக்குப் பிரச்ஷர், போன்று இடத்தை ஆய்ந்து கண்டுணர்ந்து நோய்க்கு வெந்தயம், மிளகு, பச்சைப் பயிறு. பச்சைப் பட்டாணி, சோயா பீன்ஸ், மிளகாய் விதை போன்ற பயிறு வகைகளைப் பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்கள்.
Image result for seed therapy"
அதன் படி கம்பம் பகுதி சார்ந்த பாண்டிய ராஜன் என்னும் மனவளக்கலை பேராசிரியர், விடியல் குகன் அழைப்பின் பேரில் கடந்த கிறிஸ்மஸ் தினமான 25.12.19 புதன் கிழமை நாமக்கல் நகரில் இந்தப் பயிற்சியை நடத்தினார். சுமார் 30 பேர் கொண்ட ஆர்வமுள்ள நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இந்தப் பயிற்சி நடைபெற நெறிப்படுத்தும்  பணி விடியல் நண்பர்கள் குழுவின் சார்பாக எனக்கு கிடைத்தது.  நிகழ்ச்சிக்கு விடியல் குகன் தலைமை தாங்கி அனைவருக்கும் தகவல் கொடுத்து ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
Image result for seed therapy"
உடற்கூறுகள் பற்றியும், அதற்குத் தக்க மருத்துவ சிகிச்சை பற்றியும் மிகவும் விளக்கமாக எடுத்துக் கூறியதுடன் நடைமுறைப்படுத்தி பல்வேறுபட்ட நோய்களுக்கும் எப்படி சிகிச்சை அளிப்பது என செயல் விளக்கம் செய்தார் மனவளக்கலை பேராசிரியர் பாண்டியராஜன்.

இந்தக் கலை பார்க் டே ஊ என்ற சீனர் வழியாக இங்கு வந்திருக்கிறது என்றும் இதில் வர்ண சிகிச்சை, தொடு வர்மம், தானிய விதை சிகிச்சை போன்றவை இடம் பெறுகின்றன.
Image result for seed therapy"
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
Image may contain: one or more people, people sitting and indoor


Image may contain: one or more people and people sittingImage may contain: 1 person, sitting
Image may contain: one or more people, people sitting, table and indoor

Sunday, December 22, 2019

முதலில் அரசுகள் ஆவணங்களைப் பிழையின்றி தர முயற்சி செய்யலாமே? கவிஞர் தணிகை

 முதலில் அரசுகள் ஆவணங்களைப் பிழையின்றி தர முயற்சி செய்யலாமே? கவிஞர் தணிகை

Image result for cab riots"

சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி இந்த அரசுகள் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடுருவல்காரர்களை கண்டுபிடிக்க சிறந்த யுத்திகளை கடைப்பிடிப்பதை விட்டு விட்டு இந்தியா என்ற மாபெரும் நாட்டில் உள்ள அத்தனை 136 கோடி மக்களுக்கும்  பொதுவான ஒரு சல்லடையை ஏன் உருவாக்க வேண்டும்?

கொடுத்துள்ள கொடுத்த கொடுக்கிற வாக்குரிமை அட்டை, ஆதார் அட்டை, குடும்ப ஸ்மார்ட் கார்ட், பாஸ்போர்ட் போன்றவற்றை கொடுக்கும் தகவல்களை பிழையின்றி அச்சடித்து தரும் யோக்யதை அடையாத நாடு இது. எனது மனைவிக்கு மட்டும் 5 முறை மாற்றி மாற்றி பிழை திருத்த வேண்டி வாக்குரிமைக்கு விண்ணப்பித்து அட்டை வாங்க வேண்டி வந்தது பிழை திருத்த என்று கடைசியில் நகல் வாக்குரிமைச் சீட்டு என்ற ஒன்றைத்தான் பெற்று வைத்திருக்கிறோம். அதற்குள் ஏகப்பட்ட அலைச்சல் . வீட்டில் உள் பூசல். குழப்பம்.
Image result for cab riots"
சரியான விலாசம் அரசு பதிவுகளில் ஏற்படுத்த எத்தனை முறை முயன்றாலும் சாதாரண ஒரு கீழ் மட்ட மக்கள் பிரதிநிதி தனது சாதிப்பிரிவுடன் அந்தப் பகுதியில் உள்ள மக்களின் அடையாள அட்டைகளில் வீதி பெயர் இடம் பெற்றிருந்ததை மாற்ற முயல்வதை தடுக்க முடிகிறது என்னும் இந்த நாட்டில் இந்த அரசு என்ன செய்ய முடியும் எனக் கேள்விகள் நிறைய உண்டு.

 அவர்கள் அச்சடித்துக் கொடுத்த அரசின் விவரம் அடங்கிய நமது அதே குறிப்பு அட்டைகளில் அது நொள்ளை இது சொள்ளை என்னும் அரசு மக்களுக்கு எந்தவித அலைச்சலும் இல்லாமல் சாலைகளில் பொது அரசு அலுவலகங்களில் எல்லாம் மக்களை காயவைத்து சாகடிக்காமல் இது போன்ற குடியுரிமை,பதிவேட்டுப்பணிகளை வீடு வந்தே பெற்றுச் செல்ல முடியுமா? பெற்றுச் செல்ல முடியாதா? நள்ளிரவில் இந்தியப்பணத்தை செல்லாது அதனால் டிஜிட்டல் மயம் ....மயம் என்று சொன்ன அரசால் ஒரு படியும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படுத்துவதில் தோல்வி மட்டுமின்றி பின்னடைவும் ஏற்படுத்தி விட்டது என்று வரலாறு நிரூபித்து விட்டது...இன்னும் இந்த அரசு திருந்தியபாடில்லை.
Image result for cab riots"
பாஸ்ட் டேக் என்னும் ஒரு சின்ன வெங்காயத்தை சொல்லி அறிவித்து விட்டு அறிவித்த தேதியில் அதை அமல் படுத்த யோக்யதை இல்லாத அரசு... டோல்கேட் தேவையில்லாமல் எத்தனையோ சாலைகள் இருக்க அத்தனையிலும் தனியாரும் அரசின் கூட்டில் அரசியல்  செய்தபடி இருக்கிற சூழல்கள்.

 ஔரங்க சீப்பால் செய்ய முடியாததை, ஆங்கிலேயரால் செய்ய முடியாததை  ஒரே இந்தியா,ஒரே ஆட்சி, ஒரே குடும்ப கார்ட்,  இப்போது குடியுரிமைச் சட்ட மசோதா என்றெல்லாம் ஏற்படுத்த முனைகிறார்கள்...அவர்கள் கட்சி அஜென்டா மட்டுமே அவர்கள் இலக்கு, குறிக்கோள் , நோக்கமாக இருக்கிறதே ஒழிய மக்களுக்கான அரசாக இல்லை இது. வீணாய்ப் போன மக்களும் காங்கிரஸ்ஸை தூக்கி எறிய மதரீதியான முனைப்பில் மட்டுமே யோசித்து மறுபடியும் இவர்களை வரவழைத்து விட்டார்கள். இப்போது மறுபடியும் உயிர்ப்பலிகள். நீங்கள் போராடிக் கொண்டே இருங்கள் நாங்கள் எங்கள் பணியை தொடர்கிறோம் என்கிறார் மத்திய உள் துறை அமைச்சர் சற்றும் மக்களைப் பற்றிய கவலை இல்லாமல்

மாநில அரசின் துறைகளில் பங்கு கொண்டு மத்திய அரசின் ஆட்சி நாட்டாண்மையை மாநிலத்தின் ஆள்வோரின் அவரவரின் பலஹீனம், குறைபாடு, ஊழல், வருவாய்க்கதிகமான சொத்து போன்றவற்றின் மூலம் காயடித்து மத்திய ஆட்சியின் வல்லமையை பிரயோகித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
Image result for cab riots"
 விலைவாசி ஏற்றம்,வேலைஇல்லாத் திண்டாட்டம், நதி நீர் இணைப்பு, மருத்துவம் கல்வி, உணவு விவசாயம் ஜிஎஸ்டி பொருளாதாரப் பின்னடைவு போன்ற நாடு தழுவிய பிரச்சனைகளை  எல்லாம் மறைத்து விட்டு இராமர் கோவில் கட்டுகிறோம் பாராளுமன்றம் கட்டுகிறோம்  எனச் சிட்டாள் வேலைகளில் எல்லாம் கவனம் செலுத்தி மக்களை திசை திருப்பி வருகிறது இந்தியா என்னும் மாபெரும் ஜனநாயகப் பேரரசு. உலகிலேயே மாபெரும் நாடு மற்ற நாடுகளுக்கு எல்லாம் இந்தியப்பணத்தைப் படி அளந்து விட்டு இந்திய உழைப்பாளிகளின் பணத்தை சுரண்டி பெருந்துன்பம் இழைத்துவருகிறது. இதற்கு ஊடகம் எல்லாம் துணையாய் நிற்கிறது.
Image result for cab riots"
சசிகலா மேடம் 500 1000 ரூபாய் பண நோட்டு செல்லாது எனச் சொன்ன போது வாங்கிய சொத்துகளையே இப்போதுதான் 3 ஆண்டு கழித்து இப்போதுதான் வெளிப்படுத்தி இருக்கிறது. மேலும் பதுக்கிய பதுக்க விட்ட அத்தனை பெருமுதலாளிகளும் அரசு தொடர்புடையவர்களாகவே இருந்தார்கள் என்னும் பெரு உண்மை எந்த விளைவையும் ஏற்படுத்தாத பணச் செல்லா செயலுடன் மறைக்கப்பட்டு விட்டது. ஏழைகள் தம் பணத்தை வங்கிகளில் செலுத்தவும் திரும்ப பெறவும் உயிரை விட்ட கதையும் நீண்ட க்யூ வரிசையில் நின்ற கதையும் தமது ஊதியத்தை எடுக்கவே உழைப்பை செலுத்தி வியர்வை வழியே எட்டிய பணத்தையும் எட்ட விடாமல் செய்த அரசு ஐபிஎல்  லலித் மோடி, நீரவ் மோடி, விஜய் மல்லையா, போன்ற பெரு முதலாளிகளிடம் அனைவரிடமும் திரட்டிய பணத்தைக் கொடுத்து விட்டு வங்கிகள் ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. அத்தனையும் அரசின் செல்லம். மக்களின் செல்வம்.
Image result for cab riots"
இந்த நாட்டின் ஜியோ முதலாளிகள், பெட்ரோலிய முதலாளிகள், பிளாஸ்டிக் முதலாளிகள் எல்லாம் ரிலையன்ஸ் என்னும் நாட்டின் முதல் பணக்காரர் கையில் கொண்டு சென்று முடக்கப்பட்டதாய் மாறி இருக்கிறது.

அரசு என்னும் பதவிக்கு வந்து விட்டால் இவர்கள் செய்வதை எல்லாம் மக்கள் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற கருத்துக்கு எதிரான மோதல்களில் தான் இத்தனை உயிர்கள் போயிருக்கின்றன. இன்னும் பிப்ரவரி பட்ஜெட்டில் என்ன என்ன  இருக்கின்றனவோ...நாட்டில் சாந்தி நிலவ ஆட்சி புரிவது ஒரு வகை...நாட்டில் மக்களை நிம்மதி இல்லாமல் எப்போதும் நெருப்பைக் கட்டிக் கொள்ள மிரட்டியே ஆள்வது மறு முறை. இந்த ஆட்சி இரண்டாம் முறை என சொல்லத் தேவையில்லை. பணம் படைத்தவ‌ர்களுக்கான கார்ப்ரேட் அரசு அப்படித்தான் இருக்கும்.இருக்கிற ஜி.எஸ்.டி போதாமல் இன்னும் கூட ஏற்றிப் போவதாகவும் பேச்சு இருக்கிறது.நடக்கட்டும் நடக்கட்டும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை






Wednesday, December 18, 2019

என் இலக்கியப் பிணி: கவிஞர் தணிகை

என் இலக்கியப் பிணி: கவிஞர் தணிகை

Image result for country home and literature and culture with personal welfare"

குடியுரிமை திருத்த மசோதா...இருபக்கம் 1955க்கும் பின் இந்த அரசுதான் கையில் வெற்றிகரமாக எடுத்திருக்கிறது என ஒருப் பக்கம் மற்றொரு பக்கம் இலங்கை தமிழ் மக்கள், முகமதிய மக்கள் இரண்டு மதம் சார்ந்த இனமும் வேண்டுமென்றே புறம் தள்ளி அவர்களுக்கு பாதகம் செய்யும் மசோதா என்ற மறுபக்கம்... இன்னும் இது பற்றி நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. ஆமாம் இதெல்லாம் தான் மக்களின் பிரதான பிரச்சனைகள் என அரசும் கட்சிகளும் ஊடகமும் சொல்கின்றன...என் வீட்டில் வெங்காயம் வாங்க 100 ரூபாய்..நீ யெல்லாம் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்திருக்கலாம், என்ன சுகத்தைக் கண்டோம் இந்தக் குடும்பத்தில் என காலை கடவுளான எனக்கு அர்ச்சனை..ஊராட்சி தேர்தல் , பொதுமக்கள் காவல் துறையால் ஒதுக்கி நிறுத்தப்பட மக்களை சந்திக்க வரும் நிலையில் இருக்கும் மந்திரிமார்களின் கார் சர் சர் என 100 கி.மீ வேகத்துக்கும் அதிகமான வேகத்துடன் சாலைப்பயணம்... சாலையெங்கும் காவல் தலைகள்... இதனிடையே..

எனக்கு எழுத்து ஒரு தவம், வேள்வி, உண்மைச் சுடர் , ஊனமிலாப் பெரு வாழ்வு.ஆனால் இப்போதோ அது எட்டாக் கனி.ஏன் எனில் கடந்த காலத்தில் வாழ்வின் போக்கில் எழுதுவதை பேசுவதையே பெரும்பணியாய்க் கொண்டிருந்தேன். நிறைய எனது வலைப்பூக்களுக்கான வாசமும் இருந்தது ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் அந்த நாட்டிலிருந்து படித்தார்கள் இந்த நாட்டிலிருந்து படித்தார்கள் என உலகெலாம் புவியெலாம் பூகோளமெல்லாம் படித்ததைப் பிடித்து மாறிவிட நானும் ஒரு கருவியானேன் என்று எண்ண காரணமெலாம் இருந்தது. அது எத்துணை போலியானது என்பது அறிந்தபோதும்.

சுய வாழ்வு தேகம், ஆரோகியம், சுவர் இருந்தால் தான் சித்திரம், உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே திருமூலர் ஒரு பக்கம். குடும்ப நலம் மறுபக்கம் நாட்டுச் சேவை 3 பக்கம் நெற்றிக் கண் போல. இரண்டு கண்ணில் ஒரு கண் இருண்டிருந்தாலும் சரியாகப் பார்க்க முடியவில்லை.

முதலில் உடல் நலம் போயிற்று. அதைக் காக்க என்றும் குடும்ப நலம் காக்க என்றும் பணி எதையுமே அதாவது ஊதியம் என்று எதையும் நாடாமலேயே வாழ்வு போயிற்று...அப்போதும் உடல் நலம் கெடும் அதிவிரைவில் தேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு விடும்.

2016ல் புத்தரின் மகனைத் தாய் புத்தர் செல்லும் வழியில் எல்லாம் நிறுத்தி பெற்றாயே இந்த மகனுக்கு என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டது போல குடும்பம் கேட்டது. மாத ஊதியத்துக்கு கல்வி மருத்துவத் துறை என சென்றமைந்து விட அதில் எத்தனையோ போராட்டத்திற்கும் பின் அமைந்தது என்றாலும் அதற்காக அதிகாலையில் 4 மணிக்கே துணைவியும் துயில் எழுந்து உணவு தயாரித்து அளிக்க காலை  2 மணி நேரம் என்றும் மாலை 2 மணி நேரம் என்றும் 4 மணி நேரம் பிரயாணம்.

இதனிடையே வந்து விழும் வாராந்திர அல்லது விடுமுறை நாட்களில் வீட்டில் தேங்கி நிற்கும் பணியை முடுக்கி விட ...நாள் போனது மாதம் போனது ஆண்டுகளும் போனது எழுத்தும் போனது...

எப்படி எனில் பணிச் சுமை அல்ல பணி நெருக்கம் அதன் பின் பயணம், அதன் பின் உடல் பேண நடைப்பயிற்சி அது முடிந்தால் குளித்து இரவு  உணவருந்த உறக்கம் அதன் பின் 4 மணிக்கு செல்கோழி கூவும் முன்னே விழிப்பு இப்படியாக சுழற்சி...

இதிலும் வந்து விழுந்தது ஒரு கல் என...

ஒரு சனிக்கிழமை சாய்ந்திருந்த சப்போட்டா மரக் கிளைகளையும், அடர்ந்து ப‌டர்ந்திருந்த தாவரப் புதர்களையும் அப்புறப்படுத்த வேண்டிய பணி...வழக்கம்போல தலையில் நல்லெண்ணெய், உடல் எங்கும் தேங்காய் எண்ணெய் .... காலை மதியமாகும் நேரம் 11.45 மணிக்கு குளித்து முடிக்கும் வரை அந்த தோட்டப்பணி அயராமல்.

ஞாயிறு முடிந்தது, திங்களும் முடிந்தது...செவ்வாயில் அதன் பாதிப்பு குளிர் காய்ச்சலுடன் கல்லூரியில் இருக்க முடியவில்லை தலையில் உடலில் எல்லாம் வலி
புதன் கிழமை விடுமுறை எடுக்க வேண்டிய நிர்பந்தம். காலை கடும் குளிரில் இப்படி பயணத்துடன் வாழ்வை உடல் கெட்டாலும் செலுத்த வேண்டியிருக்கிறதே என துணைவியின் பாடலுடன் ஒரு முழு வாரமும் ஓட இடையே 3 முறை நிலவேம்புக் கஷாயம், தொண்டைப் புண் உள் வலிக்கு திரிபலா அதன் பின் கொஞ்சம் ஹோமியோபதி பாடியகா, பல்சேட்டிலா இப்படி என்றாலும் பிணி விட்டபாடில்லை.

உடலை, உயிரை வாங்கும் நச்சு இருமல் திடீரென எப்போதாவது , மூக்கில் இருந்து நீராகவும், நெஞ்சுப் பகுதியிலிருந்து மஞ்சள் கட்டியாகவும் சிறிதளவு மட்டுமே வந்து கொண்டிருந்தது. இனி அதிகாலையில் ஊற வைத்த வெந்தயம், கருஞ்சீரகம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் அதுவும் சளிக்கு பெரும் காரணம் என்றார் இடையே...நடைப்பயிற்சி நிறுத்தப்பட்டது அத்துடன் சாப்பிடும் சில வில்வ இலைகள், 10 ஆவாரம்பூ மொட்டுகள், 3 ஆடுதொடா இலை ஆகியனவும் நிறுத்தப்பட்டன. அதனிடையே தொடையில் ஏற்பட்ட நமைச்சலுக்கு சிறிய வெங்காய தேங்காய் எண்ணெய் காயவைக்கப்பட்ட ஊறலுடன், பார்லிக் கஞ்சியும் இயற்கை  மருத்துவர் சொன்னார் என்று எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்ப்ட்டிருந்தது.
Image result for country home and literature and culture with personal welfare"
எது எதனாலோ உடல் நிலைமத்துக்கு வரவில்லை.

அதிகபட்ச விலையுடன் என் துணைவி 4 தினுசான மாத்திரைகள் வாங்கி வர 2 வேலைக்கு உட்கொள்ள யாவும் அப்படியே இறுக்கப்பட்டது. தெரியும் கெடுதல் என்று என்ன செய்வது உடல் உபாதை உயிரை எடுத்து விடும் போலிருக்கிறதே...

அதன் பின் 24 மணி நேரத்தில் 6 முறை மலக்கழிவு திரவ நிலைக்கு செல்லும்படியாக அதற்கு எலக்ட்ரால் பவுடரை வாங்கி ஒரு லிட்டர் நீரில் கரைத்து  குடித்து விட்டாகி விட்டது. சற்று பரவாயில்லை . என்றாலும் உடல் சூடு அப்படியே இருப்பதும், மலக்கழிவு சரியாக நின்றுவிடுமா என்ற பதற்றமும் அப்படியே இருக்க...மலம் அது போன்றே கழியட்டும் அது நல்லது என விட்டுப் பிடிக்கலாம் இல்லை எனில் இருக்க வே இருக்கிறது சப்போட்டா பிஞ்சுகள் அதை அரைத்து தயிரில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் வயிற்றுப் போக்கும் நின்று விடும் என தெம்பாகிவிட்டேன்

எனவே மறுபடியும் எழுத்துப் பிணியுடன் எனது இலக்கியச் சேவையை செய்ய  ஆரம்பித்திருக்கிறேன். சகித்துக் கொள்ளுங்கள்...நீ எங்கள் வலைப்பூவுக்கு வந்து எங்களது எழுத்தை படித்தால் தான் நான் உங்கள் எழுத்தைப் படிக்க வருவோம் எனச் சிலர், நீ என்ன பெரிய இவனா...உனது எழுத்து என்ன பெரிய இதா...என..இது என்ன கிழித்து விடப்போகிறது என‌ச் சிலர். இப்போதெல்லாம் இதெல்லாம் ஒன்னுமில்ல...எவர் படிக்கிறார் எல்லாம் வீடியோவில் பார்த்து விட்டு சாட் செய்து விட்டுப் போய் விடுகிறார் என பலர்.

இருந்தாலும் நான் எழுதுவதை விடப் போவதில்லை...இன்னும் நான் பயணம் புக வேண்டியதில் எனது ஹைக்கூ, டான் பேஜஸ் போன்ற தளங்கள் இருக்கின்றன. வருகிறேன். மறுபடியும்....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, December 6, 2019

ஒன்றை மறந்து விடக் கூடாது: கவிஞர் தணிகை

ஒன்றை மறந்து விடக் கூடாது: கவிஞர் தணிகை



ஹைதராபாத் அருகே நடந்த கால் நடைப் பெண் மருத்துவர் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் நால்வரையும் என்கவுன்டரில் காவல்துறையினர் போட்டுத் தள்ளி இருப்பதைப் பாராட்டி பொதுமக்கள் இனிப்பு ஊட்டி, தூக்கி வைத்துக் கொண்டாடி ,மலர் தூவி வாழ்த்து தெரிவித்தவாறு இருக்கிறார்கள் என்பதெல்லாம் செய்தி.காவலர்களுக்கு ராக்கி கட்டி பெண்கள் நடத்துக் காட்சிகளும்

அதே பெண்ணின் பெற்றோர் இப்போது அந்தப் பெண்ணின் ஆன்மா சாந்தி அடையும் என்றெல்லாம் சொல்லி இருப்பதாகவும் செய்தி...சரி...அதே பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என புகார் தெரிவித்த போது அந்தப் புகாரை பதிவு செய்து உரிய நேரத்தில் தேடி அந்தக் குற்ற வன்முறையை தடுக்க முயற்சி எடுக்காமல் காலம் தாழ்த்தினர்...   அசட்டையாக இருந்தனர் என்பதையும் அந்தப் பெற்றவர்களே பதிவு செய்திருப்பதை, முன்னர் ஊடகங்கள் வெளியிட்டதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.

எனவே மக்கள் ஒன்று ஒரே கூட்டமாக எதை வேண்டுமானாலும் உணர்ச்சி பூர்வமாக செய்வர் ஆனால் அறிவு பூர்வமாக சிந்திக்க மாட்டார் என்பதற்கு இந்த சம்பவத்தை நாம் எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.
Image result for encounter celebrations in hyderabad"
அதை அடுத்து வருவதே எப்படி அந்தப் பெண் உயிரும் உடலும் உருக்குலைக்கப் பட்டதோ அது எப்படி மாபெரும் குற்றமோ அதேபோல் ஒரு ஜனநாயக நாட்டில் அது போன்ற ஒரு மாபெரும் குற்றம் நடப்பதுமே ஒரு ஜனநாயகப் படுகொலைதான். அதை அடுத்து இப்படி கேள்வி முறையின்றி அது சட்டம் நீதி வழி சென்றால் நாளாகுமே என காவல் துறையும் சுட்டுத் தள்ளுவதும் கூட மனித மாண்புகளுக்கும் இறையாண்மை உள்ள ஒரு ஜனநாயக நாடு எனச் சொல்வதற்கும் இழுக்குதான்.
Image result for encounter celebrations in hyderabad"
கடுமையான விரைவான சட்ட நீதி மாண்புகள் மக்களைப் பாதுகாக்க  அவசியம் தேவைதான். ஆனால் அது இதுவல்ல...
 அந்த மாக்கா பசங்க மூஞ்சுகளைப்  பார்த்தீர்களா அதில் ஒருவன் மட்டுமே வயது வந்தது போல இருக்கிறான். மற்ற மூவரும் தறுதலையான சிறுவயது பதர்கள்.. இவர்களை முறைப்படுத்தாத நெறிப்படுத்தாத கல்வி முறை பெற்றோர் சமூகம் நாடு ஆட்சி, அரசு, மக்கள் யாவருமே தண்டனைக்குரியர்தாம். நல்ல பிள்ளையைப் பெறாத பெற்றோர் என்ன பெற்றோர்? நல்லபடியாக வளர்க்காத பெற்றோர் என்ன பெற்றோர்? என்ன கல்வி என்ன பள்ளி? என்ன சமூகம் சுற்று வட்டம், என்ன அரசு என்ன நாடு, என்ன ஆட்சி...எல்லாம் பண்படுத்தப்பட வேண்டும்.

நல்லாட்சி தர வேண்டிய மக்களும், நல்லரசியலை தரவேண்டிய கட்சிகளும் ஆட்சி முறைகளுமே இது போன்ற குற்றங்களை நடைபெறாமல் தடுக்கும். முன் நடவடிக்கை அவசியம் நடந்து முடிந்த பின்னே செய்யப்படும் இது போன்ற என்கவுன்டர்கள் ஒரு சாதனயே அல்ல. அதை அது போன்ற ஒரு சாதனையை நல்லாட்சி என்பதே தரும்  அப்போது காவல் நிலையம் புகாரை வாங்கி நிமிட நேரங்களில் குற்றவாளியை குற்றம் செய்வதிலிருந்து தடுக்கும் அப்பாவிகளைக் காக்கும். அது ஒரு கனவா கானலா...இல்லை அது போன்ற ஒரு தலைமையும் நாடும் ஆட்சியும் அரசும் ஒரு நாள் வரவேண்டும் வந்தே தீரும்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Thursday, December 5, 2019

ஏன் இந்த மனிதர்களுக்கு இப்படி துணிச்சலற்றுப் போயிற்று? கவிஞர் தணிகை

ஏன் இந்த மனிதர்களுக்கு இப்படி துணிச்சலற்றுப் போயிற்று? கவிஞர் தணிகை

Image result for brainless human beings

ஏன் இந்த மனிதர்க்கு இப்படி உணர்ச்சியற்றுப் போயிற்று?
ஏன் இந்த மனிதர் இப்படி மரத்துப் போனார்கள்?

மனிதகுல வரலாற்றை சற்று திரும்பி திருப்பிப் பார்த்தோமானால் மனிதர்கள் நெருப்புக்கு இடிக்கு மின்னலுக்கு மழைக்கு வெள்ளத்துக்கு மிருகங்களுக்கு இப்படி எல்லாம் பயந்து பாதுகாப்பு தேடிக் கொண்டார்கள் மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் குகைகளிலும் என்பதை அறிந்திருக்கிறோம்.

அது போன்ற இன்னல்கள் பலவற்றிலிமிருந்து கற்றுக் கொண்டு இன்று உயிர்களிலேயே தலைமை ஏற்றிருக்கும் மனிதம் உலகுக்கும் எல்லா உயிர்களுக்கும் பூமிக்கும் நன்மை செய்வதற்கு மாறாக இப்படி பொய், புனைசுருட்டு, அட்டூழியங்களில் அழிந்து வருவதைக் கண்கூடாக காண முடிகிறது.

அதிலும் பல மனிதர்களும் முகத்துக்கு நேராக ஒன்றும், நாம் அவ்விடத்தில் இல்லாதபோது நமைப்பற்றி அவர்களை நாமும் நம்மை அவர்களும் அணுகிய விதம் பற்றி பல வாறாக அவதூறாகப் பேசுவதை ஒவ்வொரு நாளிலும் காண முடிகிறது.

அப்படி ஒரு நபரின் உண்மை வடிவத்தை இன்று பார்த்ததன் வியப்பே இந்த பதிவும். ஆனால் இந்தப் பதிவின் நோக்கம் மாபெரும் ஆற்றலை தன்னுள்ளே கொண்டுள்ள மனிதம் ஏன் கட்சி, சாதி, மதம், இனம் மொழி என்பதில் எல்லாம் பிரிந்து தீயவை தீய பயத்தலால் தீயவை தீயுனும் அஞ்சப்படும் என்ற குறள் நெறிக்கு மாறாகவே சென்று கொண்டிருக்கிறது...

ஒரு குடும்ப அரசியல் செய்யும் கட்சி ஒரு புறம்,
ஒரு கொள்கை நெறியற்ற கட்சி ஒரு புறம்
மதம் சார்ந்த கட்சி ஒரு புறம்
நடிகர்கள் மட்டுமே நாடள தகுதி படைத்தவர் என்ற அலைகள் ஒரு புறம்...

இப்படி எப்படி அதன் பின் மக்கள் அலை அலையாய் மாபெரும் கூட்டமாய் போகமுடிகிறது. அப்படி எனில் அது எப்படிப் பட்ட அறிவு மிக்க கூட்டமாக இருக்க முடியும் என்பதைப் பாருங்கள். இது போன்ற மக்களால் அமையப்பெற்ற அரசு எப்படி இருக்கும்?

மது ஆலையில் தயாரிப்பை நிறுத்தாமல் மது நுகர்வோரை மது விலக்கச் சொல்கிறோம்
புகை தயாரிக்கும் ஆலையை அரசு தடை செய்யாமல் புகைப்பது உடல் நலத் தீங்கு என புத்தி சொல்கிறோம்
பான் பராக் குத்கா தயாரிப்பை நிறுத்தாமல் அது புற்று நோய் தரும் என நெறி பேசுகிறோம்
குடிநீரை அடைத்து விற்கும் ஆலைகளை தடை செய்யாமல், அவர்களுக்கு உரிமம் கொடுத்து விட்டு குடிநீர் விற்பனை கொடுமை எனக் கட்டியம் பேசுகிறோம்

ஒரு முறை தயாரிக்கும் நெகிழி என்பதே இல்லையாம். பொதுவாக அதைத் தயாரித்த அறிவியலாளர் அதை பன்முறை பயன்படுத்தவும் அதை எப்போதும் கிழியாதிருக்க அப்படி செய்தாராம். ஆனால் அது காலப்போக்கில் அதன் பொருள் மாற்றம் பெற்று ஒரு முறை பயன்படுத்திய பிறகு தூக்கி எறிவதால் புவியின் மேனியில் நீரை கீழ் இறக்க விடாமல் பூமியை மலடாக்கி விடுகிறது என்று  செய்திகள்

சரி அது எப்படி இருந்தாலும் தீமை செய்யும் ஆலையை அப்படியே தடுத்துவிடாமல்
தயாரிப்பை முடுக்கி விட்டு பயன்பாட்டை முடக்கி வைப்பது எந்த நியாயம்...

அது போல இந்த 3 எண் லாட்டரியை யார் செய்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதை அங்கேயே தடுக்காமல் அதை மக்களை விளையாட வைத்து குற்றவாளியாய் அவர்கள் சட்டத்துக்கு புறம்பானவர்கள் என காட்சிப்படுத்துவது எப்படி நியாயமாக இருக்க முடியும்...

பொருள் முதல் வாதம் என்ற அடிப்படையில் ஒர் பொருள் இருந்தால் தான் அது எதற்கு வேண்டும் எப்படி பயன்படும் எப்போது தேவை என்பது போன்ற கேள்விகள் எழும் அது இல்லையென்றால் அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை. அது போல அரசே தடுத்துவிட்டால் மக்களால் எப்படி நுகர முடியும். அதற்கு சீனா ஜப்பான் போன்ற நாடுகள் முன்னுதராணம்.

சிறு குழந்தையாய் இருக்கும்போது பள்ளிச் செல்லும் குழந்தைகள் வழியில் உள்ள மிட்டாய்க் கடையைப் பார்த்த உடன் அம்மா மிட்டாய் என அடம் பிடித்து அழுவதை நாம் கண்டிருக்கலாம். பள்ளி செல்லும் வழியில் மிட்டாய்க் கடையே இல்லையெனில் அந்தக் குழந்தைக்கு அதைக் கேட்க தோன்றியிருக்காது. விளையாட்டுச் சாமான் கேட்பதும் அப்படித்தான்.

மதுவைக் குடிப்பதும், புகைப்பதும் எல்லா தீயபழக்கங்களும் அப்படித்தான்.

இப்போது அது சரியானதுதான் என்றாலும் கேள்விகள் எழுகின்றன...கடந்த இரண்டு நாளாக சிறுமி வன்புணர்ச்சி, ஆபாசப் படங்கள் டவுன்லோட் செய்தவரும் ஷேர் செய்தவரும் 1500 பேரும் அருகிருக்கும் காவல்நிலையத்துக்கு பட்டியல் அனுப்பப் பட்டு அவர்களுக்கு தண்டனையும் கவுன்சிலிங்கும் அளிக்கப்படும் என்ற செய்திகள்.

நாம் இந்த செயல்பாட்டை எதிர்க்கவில்லை. அந்த செயல்பாட்டை ஆதரிக்கவும் இல்லை. ஆனால் இதை டவுன்லோட் செய்வாரை கவனிப்பதற்கும் முன் ஏன் அப்லோட் செய்வாரைக் கண்டறிந்து அப்போதே முளையிலேயே கிள்ளி அதை வரவிடாமல் செய்தால் அது சரியானதாக இருக்காதா? அதை எப்படி அதன் பின் அவர்கள் ஷேர் செய்ய முடியும்? அதற்கான திட்டவட்டமான நடவடிக்கையை அரசு கடுமையான கண்டிப்புடன் நடைமுறைப் படுத்தி ஒரே போக்குடன் தடைப்படுத்தி விடலாமே. எல்லாவற்றுக்கும் ஒர் முடிவாகிவிடுமே அதற்கு மாறாக நுகர்வோரைக் கண்டு பிடித்து செய்வது எல்லாம் அவர்களிடம் இருந்து கையூட்டு பெற வழி வகையே செய்யுமேயன்றி  உண்மையிலேயே காவல்துறையும் அரசு நடவடிக்கைகளை அமல்படுத்தும் துறைகளும் சரியாக இதை செய்ய வேண்டுமே என்ற கேள்விகள் எழாமல் இல்லை. ஏன் எனில் சில நிதி நிறுவனங்கள் மோசம் செய்வதாக வந்து  அள்ளிச் சென்ற கோடிக்கணக்கான‌ ரொக்கமும், கணக்கிலடங்கா சொத்துகளும் பற்றி மறுபடியும் தகவலே இல்லை என்ற செய்திகள் இருக்கின்றன.
Image result for ramalinga vallalar
நள்ளிரவில் இந்தியப்பணத்தை செல்லாக் காசாக்கி நாடெங்கும் ஒரே இரவில் பெரும் அவலத்தை ஏற்படுத்திய துணிச்சல் உள்ள அரசுகளால் எதையுமே செய்ய முடியும் இவர்கள் இதை இப்படி செய்யட்டுமே பாராட்டலாம். ஏழைக்கொரு நீதி பணத்துக்கு மறு நீதி என்று அம்பேத்கரின் சாசன நீதியையும் சாதாரண நீதியாக்கி நாட்டை ஆளுக்கு தகுந்த மாதிரி வாய்ப்பை நடத்திக் கொண்டிருக்கும் அரசை எஸ்.வி சேகரை , ஹெச் ராஜாவை சிதம்பரம் கோவில் அர்ச்சகரை எல்லாம் காவல்துறை தீண்டாமல் சாதரண மனிதராக இருந்தால் கேவலப்படுத்திடும் அரசல்லவா இது...

பொன்மாணிக்க வேல் , சகாயம், ட்ராபிக் ராமசாமி, போன்றோர் காயடிக்கப்பட்ட கதை எல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை...

கொள்வார் இல்லையேல் கொடுப்பார் இல்லை என்பது அறம். ஆனால் அதற்கு ....அனைவரும் திருந்த வேண்டுமெனில் அவர்களாகப் பார்த்து அவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு பல நூறாண்டு ஆகுமே...அப்படி ஆனாலும் நடக்காதே...அதற்கு மாறாக மக்களின் அரசு என்பதே அதற்குத்தானே அது மக்கள் நலம் வேண்டுமெனில் தடைப்படுத்தலாமே...

கடை விரித்தேன் கொள்வாரில்லை....இராமலிங்க வள்ளல்.
Image result for ramalinga vallalar
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை



Wednesday, December 4, 2019

தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையையும் செய்தால் டாஸ்மாக் போல வருவாய் வருமே: கவிஞர் தணிகை

தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையையும் செய்தால் டாஸ்மாக் போல வருவாய் வருமே: கவிஞர் தணிகை


Image result for kerala lottery result 30.11.19"
கேள்விப்படும் மேட்டூர், சின்னப்பம்பட்டி, அரியானூர் போன்ற இடங்களில் எல்லாம் 3 எண் லாட்டரி சீட்டு பரபரப்பாக விற்கப்படுகிறது. ஒரே நாளில் 11 மணிக்கு, 1 மணிக்கு 3 மணிக்கு என பல முறை குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. தமிழக அரசு லாட்டரி சீட்டு நடத்துவதில்லை தடைப்படுத்தி இருக்கிறது என்பதற்கு மாறாக.

கேரள மாநிலத்தில் இருந்து இது புறப்பட்டு இருக்கிறது. எந்தவித பேரோ ஆதாரமோ இல்லாமல் சீட்டு கொடுக்கப்படுகிறது. கணினி வழியில் ஒரு காகிதத்தில் ஒரு ப்ரிண்ட் கிடைத்தது அதில் நவம்பர் வரை எந்த நேரத்தில் குலுக்கப்படுகிறது எவை பரிசுக்குரிய எண்கள் என்றெல்லாம் தேர்ந்தெடுக்க வசதியாக பல எண்களும் அதில் இருக்கின்றன.

ஒரு சிறிய சீட்டில் வரிசை எண் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது, அதில் தேதி, எத்தனை மணிக்கு குலுக்கல் என எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன் எண் குறிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆர்வமாய் இருப்பார் எல்லாம் படிப்பறிவு குறைந்த ஏழைகள்...

இது அரசுக்கு தெரியாமல் விற்பனை செய்ய வழியே இல்லை. ஏன் எனில் அதற்கு ஒரு அலுவலகமே அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. உடனே எழுதிய என்னிடம் சாட்சி இருக்கிறதா ருசுப்பிக்க முடியுமா என மட்டைக் கேள்விகள் கேட்டு பயனில்லை.

செய்யும் தொழிலே தெய்வம் திறமைதான் அதில்  நமது செல்வம்
கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைதான் நமக்கு பதவி என்னும் பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள் நமதுபதவி  நாற்காலியின் ஒரு கால் என்ற தலைவர்கள் ஆண்ட தமிழக வரலாற்றில் உழைப்பை கேவலப்படுத்தி வெறும் அதிர்ஷ்டம் என நம்பி இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு இழந்து போவது சாதாரண ஏழை மக்களின் பணமே என்ற ஆதங்கத்தில் மட்டுமே இதை பதிவு செய்ய வேண்டியதாகிறது.

மற்றபடி இது போன்ற முட்டாள்தனங்களில் எல்லாம் எப்போதுமே என் போன்றோர் ஈடுபடமாட்டார்.

மேலும் அரசுக்கு வருவாய் வரும் வண்ணம் இந்த திருட்டு லாட்டரியை முறைப்படுத்தி அரசே எடுத்து நடத்தினாலும் டாஸ்மாக் போல இதுவும் அரசின் கஜானாவுக்கு வருவாய் ஊட்டிடும் ஒரு செயலாகிவிடும் ஏன் எனில் ஒவ்வொரு ஊரிலும் குறைந்த பட்சம் ஏறத்தாழ 500 பேர் ஈடுபட்டு பாழாகி வருகிறார்கள் என்பதையும் அதில் ஈடுபடும் பத்துக்கும் மேற்பட்ட நபர்களை நான் சந்தித்ததன் விளைவே இந்தப் பதிவு என்றும் இதன் மூலம்  தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

அறிஞர் அண்ணா பரிசு விழுந்தால் வீட்டுக்கு இல்லையேல் நாட்டுக்கு என்று லாட்டரி சீட்டை தமிழக அரசு லாட்டரி சீட்டு நடத்த கூறினார். லாட்டரி சீட்டு நடத்துவது குற்றம் என தடை செய்யப்பட்ட நிலையில் இப்படி திருட்டு லாட்டரி எல்லா பொருளாதாரத்தையும் எடுத்துக் கொண்டு வேறு மாநிலத்துக்கு செல்வதற்கு மாறாக தமிழகத்துக்கே கிடைக்கட்டுமே...

மேலும் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது பற்றி எமது கொள்கை எல்லாம் தேவையில்லை என்பதே. அது வேறு.

கேரளாவின் சபரிமலை அய்யப்பன் நாள் ஒன்றுக்கு தமிழக பக்தர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் வசூல் செய்துவருவதும், திருப்பதி வெங்கடாஜலபதியும் தமிழக பக்தர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கொண்டு போவதையும் அடுத்து இந்த லாட்டரியும், பான்பராக்கும், மதுவும் தமிழக மக்கள் நிலை அதோகதியாகிக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசு லாட்டரி சீட்டு நடத்த வேண்டும் அல்லது இவற்றை எல்லாம் உண்மையாகவே தடை செய்ய வேண்டும்...பொது இடத்தில் மதுவும், புகையும் அனுமதிப்பது போல இதை கண்டுங்காணாமல் அனுமதிப்பது என்பது எல்லா அட்டூழியங்களுக்கும் வழி வகுத்து ஏமாற்று செய்வதாகவே இருக்கிறது. கஞ்சாவும் போதை வஸ்துக்களும் இளையோரை விட்டு வைப்பதாக இல்லை என செய்திகளும் வருகின்றன. அதற்கு மேல் நமது நித்தியானந்தா கைலாஸா.உலகமும் இப்போது தனித் தீவில் புறப்பட்டிருப்பதை எல்லாம் கவனிக்க வேண்டும்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, November 30, 2019

இசையமைப்பாளர் இளையராஜாவும் பிரதமர் நரேந்திர மோடியும் இப்படி பண்ண‌லாமா? கவிஞர் தணிகை

இசையமைப்பாளர் இளையராஜாவும்  பிரதமர் நரேந்திர மோடியும் இப்படி பண்ண‌லாமா? கவிஞர் தணிகை

Image result for modi and ilayarajaImage result for modi and ilayaraja"

பிரசாத் ஸ்டுடியோவில் இசை அமைக்க இடம் இது வரை இளையராஜாவுக்கு இருந்ததாகவும் இப்போது அந்த இடம் அவர்களுக்கே தேவைப்படுகிறது என அவரை காலி செய்யச் சொல்லியதாகவும் அதற்கு அவருக்கு ஆதரவாக பாரதிராஜா மற்றும் திரைப்படம் சார்ந்தவர் அங்கே சென்று அதை மறுத்து முதலில் பேசி அதன் பின் பேச்சு வார்த்தையில் போதிய கால அவகாசம் தந்து வெளியேறச் சொல்லலாமே என்றுதான் கேட்கிறோம் என்றெல்லாம் ஊடகச் செய்திகள்...ஊடகத்தை முதலில் எந்த அளவு நம்புவது என்றே நம்மால் முடிவுக்கு வர முடியாது ஏன் எனில் ஊடகங்களின் நிலை எல்லாம் அப்படி உரு மாறியுள்ளது.

என்றாலும் அந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் இளையராஜா அன்னக்கிளி மூலம் சினிமாவில் பிரவேசித்த ஆண்டு 1976 அது முதல் சுமார் 40 ஆண்டுக்கும் மேலாக இந்த துறையில் கொடி கட்டி பறப்பவர் தனக்கென ஒரு ஸ்டுடியோவை ஏற்படுத்திக் கொள்ளாமல் ப்ராசாத் விட்டு விட்டார் என்பதற்காக அதிலேயே இருந்து விடலாம் என கடைசி வரை நினைத்தது எப்படி நியாயமாக இருக்கும், நீதி, தர்மம் என்று பார்த்தாலும் உரியவர்கள் கேட்கும்போது வெளியேறித்தானே ஆக வேண்டும். அதுதானே சரியாக இருக்கும்.

அதற்கு  மாறாக அவர் வெளியேறாமல் அதற்கு சப்பைக் கட்ட ஒரு குழுவினரும் போய் தவறுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். உழுபவனுக்கு நிலம் சொந்தம், குடியிருப்பவனுக்கு வீடு சொந்தம், அனுபவிப்பார்க்கு சொத்து  சொந்தம் என்ற கதையாகவே இது இருக்கிறது. மேலும் இப்போது வடநாட்டு இந்தியர்கள் தமிழ் நாட்டில் குடியேறி தமிழ் நாட்டு இளையவர்களின் வேலை வாய்ப்பை பறித்து தமிழ் நாடு என்பது எங்கள் சொந்தம் என்று சொல்ல வழிவகை செய்ய மத்திய அரசும் மாநில அரசும் செய்து வரும் தகிடு தத்தம் போன்றது இந்தக் கதையும்.

இசை ஞானி இவரது பாடல் மேடையில் பாடுவதற்கே ராயல்டி கேட்டவர், அதிலும் முக்கியமாக வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்க்கு கிடைக்கும் பொருளாதார  நலன்களில் தனது பாடல் இருக்குமனால் அதற்கு தனக்கும் பங்கு உண்டு எனக் கேட்டவர்,

இவர் ஏன் இவருக்கும் பின்னால் வந்தவர்கள் எல்லாம் தமக்காக ஸ்டுடியோ ஏற்படுத்திக் கொண்டு இசை அமைத்து வரும்போது இதிலேயே இருந்து வந்தார் என்பதை தெரிந்து கொள்ளும்போதே வியப்பாக இருக்கிறது கேட்கவே. இவர் படங்களுக்கெல்லாம் இலவசமாகவே இசையும் பாடலும் செய்கிறாரோ...வருவாய் மிகவும் குறைவோ என்றெல்லாம் கேட்கலாம் ஆனால் அது அவர் திறம், அவர் களம். அதெல்லாம் சரிதான். ஆனால் இந்த செய்தி நெருடலாகவும் முரணாகவும் உள்ளது. ஏன் எனில் சொந்தக்காரர் சொன்னால் தனக்கே அந்த இடம் வேண்டுமென்றால் இவர் வெளியேறிவிடுவதுதான் நமக்கு தெரிந்த நியாயம்.

அடுத்த நமது நாட்டின் மன்கி பாத் தலைவரும் நள்ளிரவில் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து நாட்டையே டிஜிட்டல் மயமாகவும் பொருளாதார உதயமாகவும் மாற்றி படித்த படிக்காத இளையவர் யாவருக்கும் தொழில் வாய்ப்பு கொடுத்து பிரமாதமாக நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் ....பாரதம் என ஏன் இன்னும் சொல்லாமல் இந்தியா என்று சொல்லி வருகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்திய வம்சாவளியினரை தமிழ்க் குடிமக்களை இலட்சக்கணக்காக படுகொலை செய்த ஒரு இனத்தின் பிரதமரை வரவேற்று 3228 கோடி பணத்தை வாரி இறைத்திருக்கிறார். அந்த நாட்டை முன்னேற்றுகிறாராம். இந்த நாட்டை ஒழித்துக் கட்டி.

வைகோ ஒருவர்தாம் எதிர்க்குரல் கொடுத்திருக்கிறார்.
அந்த புத்தமதம் சார்ந்த அந்த புத்தமதக் கருத்துகளுக்கு எதிரான இலங்கை அதிபர் வரவு இந்திய நாட்டுக்கு நட்டம்.அவர்களுக்கு இலாபம்.கேட்டால் உலக ராஜாங்க முறைகள் சொல்லப்படும், சீனாவின் பால் சாராமல் இருக்க இந்தியா இப்படி செய்கிறது மேலும் அவர் பதவி ஏற்றதும் இந்தியாதானே முதலில் வந்தார் என்றெல்லாம்

இந்தியாவின் ஒன்னேமுக்கால் கோடி பேர் வெளி நாட்டில் சென்று வேலை செய்து கொண்டு வந்து கொட்டும் பணத்தைக் கூட விட்டு விடாமல் வரி கட்டிய இந்திய பணத்தை ஜி.எஸ்.டி மூலம் வசூலான பணத்தை, ஏழை எளியவர்கள் பணத்தை எல்லாம் வாரி வாரி கார்ப்ரேட் முதலாளிகளுக்கு வங்கிக் கடன் என்ற பேரில் கொடுத்து விட்டு திவால் செய்வது, அந்நிய நாடுகளுக்கு வாரி விடுவது, வெளிநாட்டு மண்ணிலேயே வாழ்ந்து விடலாம் என பறந்துகொண்டே இருப்பது ...சொந்த மண்ணுக்கு சூன்யம் அந்நிய மண்ணுக்கு மான்யம் என்றபடி நாட்டை வழி நடத்துகிறீரே தாழ்த்தப்பட்ட இனம், ஒதுக்கப்பட்ட இனம், மிகவும் பிற்படுத்தப் பட்ட இனம், பொருளாதாரத்தில் நலிவடைந்தார் ஒதுக்கீடு என பிற்படுத்தப்பட்ட இனத்து படித்த இளைஞர்களின் வாழ்வை கேள்விக் குறியாக்கும் இந்த பிரதமரின் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் குடும்பத்துக்கு இழப்பீடு தர சட்டத்தில் இடம் இல்லையாம்.

விலைவாசி பொருள்களை வாசிக்கவும் வாங்கிட யோசிக்கவும் விடாமல் சுவாசிக்கும் காற்றுக்கும் முதல் தேவைப்படும் நாடாக முதலாளிகளின் நாடாகவே மாறிட மிக அருமையான ஆட்சி...உங்கள் ஆட்சிதான் பிரதமரே...  இது ஒரு வரிகட்டும் குடிமகன் ஒரு நாட்டின் தலைவனுக்கு தெரிவிக்கும் ஆதங்கம் அவ்வளவுதான். எவருமே இதில் உண்மை இல்லை என்றால் வந்து கலந்து பேசலாம்.
Image result for modi and ilayaraja"
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, November 29, 2019

24.11.19ல் பாலமலையில் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை

24.11.19ல் பாலமலையில் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை

Image may contain: 1 personImage may contain: one or more people, outdoor and nature


கடந்த ஞாயிறு 24.11.19 அன்று எங்களது 12 பேர் கொண்ட மருத்துவக் குழுவினருடன் பாலமலைக்கு மருத்துவ முகாம் நடத்த சென்றிருந்தோம்.அதில் சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் குழுவினருடன் எங்களது சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்த முகாமை பொது உறவு அலுவலர் பி.ஆர்.ஓ என்ற முறையிலும் பாலமலையுடன் 34 ஆண்டுகள் தொடர்புடையவன் என்ற முறையிலும் அடியேன் ஒருங்கிணைப்பு செய்து நடத்தினேன். இந்த முகாமிற்கு பாலமலையில் உறுதுணையாக இளைஞர் ஆசீர் வாத இயக்கம் என்ற சேவை நிறுவனமும் தனது  பங்கு பணியை சிறப்பாக யுவராஜ் திருமதி யுவராஜ் ஆகியோரை வைத்து நடத்திட துணை புரிந்தது.
Image may contain: 2 people, people sitting
சேலம் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர் பேபிஜான் இந்த மருத்துவ முகாமை நடத்திட முன் மொழிந்து முடுக்கி விட்டுக் கொண்டே இருந்தார் அதற்கு வழிமொழிதலுடன் சமூக பல் மருத்துவத் துறையின் பேராசிரியர் மருத்துவர் என். சரவணன் அவர்களும் ஒத்துழைப்பு செய்தார்.
Image may contain: one or more people and people sittingImage may contain: 1 person, sitting and closeup
மருத்துவக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் மருத்துவர் சண்முகம் மற்றும் சமூக மருத்துவத் துறைத் தலைவர் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் அந்தக் கல்லூரியின் மருத்துவர் ரூபேஷ், அங்கயற்கண்ணி, மற்றும் மருத்துவர்களும்  பல் மருத்துவக் கல்லூரியின் ஸ்ரீநாத், ராம்குமார் ஆகிய மருத்துவர்களும் பேரார்வத்துடன் வந்து முகாமை நடத்திக் கொடுத்தனர்.
Image may contain: one or more people and people sittingImage may contain: one or more people and people sitting
அது பெருமழைக்காலம் என்பதாலும், பெரும்பாலான மக்கள் கீழே கூலி வேலைக்கு சென்றுவிட்டதாலும், முறையான அறிவிப்பு இருந்த போதிலும் சுமார் 50க்குள்ளான பாலமலை கிராம மக்களே வந்திருந்து பயன்பெற்றனர் என்ற போதிலும் அந்த மலைக்குச் சென்று தொலை தூரப் பணித் திட்டம் சார்பாக மாதம் தோறும் இந்த மருத்துவ முகாமை நாலாம் ஞாயிறுகளில் செய்துவரும் பல்மருத்துவக் கல்லூரியின் பணிகளில் முதன் முறையாக சேவையில் மருத்துவக் கல்லூரியும் இணைந்து செயல் பட்டதும் இனி வரும் காலங்களில் செயல் பட இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
Image may contain: one or more people and people standing

முதலில் அன்றைய தினத்தில் பாலமலையில் ஏறுவதே பெரும்பாடாகியது. தனி மலையேறும் ஜீப்பில் அனைவரும் சென்றோம். அதற்கு முன் ஒரு ஜீப் மரத்தில் மோதியதால் பாதை தடைபட்டிருந்ததை  பெருரக வாகனங்கள் தலையிட்டு அவற்றை எடுத்து விட்டு சரி செய்து அதன் பின் சென்றோம். இந்த செய்தியை முதலில் சொல்லி இருந்தால் எமது மருத்துவர்கள் பயந்து விடுவார் எனச் சொல்லவே இல்லை. மறுபடியும் இறங்கும்போதும் அந்த மண்பாதை செப்பனிடும் பணி நடந்ததால் வன இலாகா சங்கிலி இட்டு பாதையை தடுத்திருந்தது வாகன போக்குவரத்து நடைபெறாமல்.
Image may contain: one or more people and people sitting
நாங்கள் முகாமை நடத்தி விட்டு வந்த பின் மருத்துவர்கள் அவசரப்பட்டு சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தனர். மேல் ஏறி வந்த மலையிலேயே தங்கி பணி புரியும் விருது பெற்ற நர்ஸ் இனி வாகனப் போக்கு வரத்து இரவு 7 மணிக்கு மேல் இருக்கலாம் என தாம் கேள்விப்பட்ட தகவலை பரிமாறினார்.
Image may contain: one or more people and people sitting
நல்ல வேளை அப்படி எல்லாம் இல்லாமல் நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்த ஜீப் மறுபடியும் வந்து எங்களை ஏற்றிக் கொண்டு கீழ் இறக்கிவிட்டது. சாலை தார் சாலையாக அரசு ஆணை திட்டம் எல்லாம் வந்து விட்டது இன்னும் 6 மாதத்திலிருந்து ஒரு ஆண்டுக்குள் இந்த சாலை வசதி மேம்படலாம் என்ற வாய் வழிச் செய்தியும் கிடைத்தது.
Image may contain: one or more people and outdoor
அங்கே சென்றுவிட்டால் இணையம், தகவல் தொடர்பெல்லாம் இருக்காது. சுண்டக் காடு என்னும் இடம் வந்தால் மட்டும் சில பி.எஸ்.என்.எல் போன்ற இணைப்புகள் கிடைக்கலாம். அல்லது அதுவும் கிடைக்காமலும் போகலாம்.
Image may contain: one or more people, people sitting and indoor
மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 3924 அடி உயரத்தில் இருக்கிறது என்பதாலும் அங்கே சிறு சிறு கிராமங்களாக 20க்கும் மேல் இருப்பதாலும் சுமார் மக்கள் தொகை 4000க்கும் மேல் இருப்பதாலும் அந்த மலையை அந்த பாலமலை வருவாய்க் கிராமத்தை தவிர்க்க முடியாமல் பணிகளைச் செய்ய வேண்டி இருக்கிறதே என அரசு செய்தும் செய்யாமலும் இருக்கிறது.
Image may contain: one or more people, people sitting and phone
அப்படிப்பட்ட இடத்தில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி ஒரு சேட்டிலைட் மையத்தை ஏற்படுத்தி மருத்துவ உதவிகளை தேவைப்படுவார்க்கு கொண்டு சேர்த்து வருவது மனிதகுல சேவையன்றி வேறில்லை. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய மக்கள்தாம் சாதி என்றும், மதம் என்றும் கட்சி என்றும் பிரிந்து போய் ஒன்று சேராமல்  முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ ? என பாழ்பட்டுக் கிடக்கிறார்கள் இன்றைய எல்லா கிராமங்களிலும் போய்ச் சேரவேண்டிய நன்மைகளுக்கு முட்டுக் கட்டை போடுவது எல்லாப் பக்கங்களிலும் வழக்கமாக இருக்கிறது ஆனால் அதே நேரத்தில் தீய பழக்கங்கள் தவறாமல் சென்றடைந்து மனித குலத்தையே நாசம் செய்து வருகிறது.
Image may contain: one or more people, people sitting, table and indoor
நிலை தேற வேண்டி மனித குலம் மேம்பட வேண்டி எம்மாலானதை செய்கிறோம் நம்மாலானதை செய்வோம் என்ற நம்பிக்கையுடன்.
Image may contain: 3 people, people smiling, people sitting, sunglasses and closeup
என்றும்
Image may contain: one or more people and people sittingImage may contain: 2 people, people sitting
மறுபடியும் பூக்கும் வரை

உங்கள்

கவிஞர் தணிகை. 
Image may contain: one or more people and people sittingImage may contain: outdoor and nature

Monday, November 25, 2019

ஒரு துளி உண்மையில் பேரொளி மயம்

ஒரு துளி உண்மையில் பேரொளி மயம்

Image result for one small drop of truth expands as universe"

இல்லாததால் நீ
இன்னும்
அழகாய்த் தெரிகிறாய்!

மேகமாய் அலைகிறேன்

மேடு பள்ளம் இல்லை
மேற்கு கிழக்கு இல்லை

உலகின் மாயம்
உயிரின்  நியாயம்...

   மறுபடியும் பூக்கும் வரை
      கவிஞர் தணிகை.

Friday, November 22, 2019

வார்த்தைகளின் கனம்: கவிஞர் தணிகை

வார்த்தைகளின் கனம்: கவிஞர் தணிகை

Image result for strength of uttering words"

வாளை விட எழுத்துக்கு வலிமை அதிகம். எழுத்துகளை விட நல்ல சொற்களுக்கு அதுவும் மேடையில் எழுச்சி ஊட்டும் பேச்சாக வெளிப்படும் சொற்களுக்கு அதிக வலிமையுண்டு. சொற்களே பெரும்பாலும் உறவுகள் நட்பிடையே பிரிவையும் ஒட்டுதலையும் ஏற்படுத்துகின்றன.

சில சமயங்களில் சொற்களை சொல்லாமல் விடுவதாலும் அந்த சொல்லாமல் விடப்பட்ட சொற்களும் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன மௌனமாக இருந்த போதும்.

பொதுவாகவே சொற்களை அதன் வேர்களிலிருந்து, அதன் பிறப்பிலிருந்து அதன் பிறப்பிடத்திலிருந்து அதாவது அதன் பின் உள்ள எண்ண அடித்தளம் என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்வதிலிருந்து முடிவுகள் மேற்கொள்ளப் படும்போது அவை ஒரு போதும் பிசகுவதில்லை.

 தக்க வேளையில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம் என்கிறது விவிலியம். விவிலியத்தின் மேல் அட்டையில் , வார்த்தை கடவுளாயிருந்தார் என்ற யோவானின் வசனம் நமது மொழியில் சொன்னால் வார்த்தை இடம் பெற்றிருக்கிறது.

முகமதியத்தில் கூட வார்த்தைக்கு பெருமதிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அதை ஓதுவது பெரும் பணியாய் வைக்கப்பட்டிருக்கிறது.

பகவத் கீதையில் மட்டுமல்ல எல்லா வாழ்க்கை வழிகளிலுமே வார்த்தைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

என்றாலும் முகமதியர்கள், கிறித்தவர்கள் வார்த்தைக்கு அளிக்கும் மதிப்பை விட பல தெய்வ வழிபாட்டைக் கையாள்வோர் வார்த்தைகளை அவ்வளவாக மதிப்பதில்லை. ஆனால் குருமார்கள், சித்தர்கள், ஞானிகள், தவசீலர்கள் துறவிகள் அனைவருமே சொல்லிய வார்த்தைகளை பதியவைக்க கல்வெட்டுகள், புத்தகங்கள், கோவில்கள் என பயனபடுத்தியவை வரலாறாக உள்ளன.

புத்தர் பிறர் கூறும் நீச வார்த்தைகள் தன் மேல் பொழிவதாக இருந்த போதும் அவை தம் மேல் படாதவை என உதறி சென்றுவிட்டால் கோபம் என்ற உணர்வலைகளில் சிக்க வழியே இல்லை என்கிறார். ஆனால் எல்லா நேரங்களிலுமே அப்படி மனிதர்கள் இயங்க முடிவதில்லை. புத்தமும், ஜைனமும் கற்க வேண்டியவைதான்.

என்றாலும் எல்லாவற்றிலும் முரண் இருக்கிறது. ஜைனம் உயிர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது என சாலையெங்கும் பெருக்கிக் கொண்டு போவதும், மூச்சுக் காற்றால் கூட சுவாசத்தில் இருக்கும் உயிரணுக்கள் மடிந்துவிடக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகின்றன. பூண்டு, வெங்காயம் போன்றவற்றையும் மசாலாப் பொருட்களையும் கூட உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் உழவு நடக்க வேண்டுமானால் களைகள் பிடுங்கி எறியப்பட வேண்டும். கொசுக்களை அழிக்க வில்லையென்றால் நிறைய வியாதிகள் பரவி மனிதகுலத்திற்கே கேடாய் முடியும்...இப்படி எல்லாமே ஒன்றுக் கொன்று முரண்கள்.

 ஒருவர் எதைச் சொல்லி இருந்தாலும் அதை பிறரிடம் சொல்ல வேண்டியதை மட்டுமே சொல்லி சொல்லக் கூடாததை சொல்லாமல் விடக்கூடிய அறிவு என்பது அனைவர்க்கும் வாய்ப்பதில்லை. அப்படிப்பட்ட அறிவு மிக்காரையே  நாம் ஞானிகள் என்று சொல்லி விடலாம்.

யாகாராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர்
சொல்லி ழுக்குப் பட்டு.
 என்ற குறள் சொல்வது போல யாரிடமும் வார்த்தைகள் கட்டுப்பாட்டுடன் இருப்பது பொறுமையை கற்றுக் கொடுக்கும் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும்.

வார்த்தைகள் சில உறவுகளை ஆயுள் வரை பிரித்தே வைத்திருக்கின்றன. தூதாகப் போய் வருவார்க்கு உரிய இலக்கணமாக நிறைய சொல்லப்படுகின்றன. ஆனால் அதை எல்லாம் அறிந்து செய்வார் எவரும் இல்லை. இராமாயணத்தில் அனுமன் ஒரு நல்ல தூதனாக விவரிக்கப்படுகிறார். அவரை சொல்லில் செல்வன் அழைக்கிறார்கள். முருகனின் தூதராக வீரபாகு என்னும் கதாபாத்திரம் சொல்லப்படுகிறது.

சொற்களின் கனம் தாளாமல் நிறைய வாழ்க்கை சீர் கெட்டுப் போயிருக்கிறது. அழிக்கப்பட்டிருக்கிறது. ஏன் காதல் என்பதெல்லாம் கூட சேரமுடியா வாழ்வின் கரையோரம் சென்று ஒதுங்கி காணாமல் போயிருக்கிறது.

வார்த்தைகளை மதிக்கக் கற்றுக் கொள்வோமே!.

அதே போல கொடுத்த வாக்குறுதிகளை, வார்த்தைகளை தவறாமல் காப்பாற்றக் கற்றுக் கொள்வேமே...மனிதம் மலரட்டும் அதனுள் கடவுள் உணர்வெலாம் செழிக்கட்டும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Wednesday, November 20, 2019

சாக்குண்ணி என்னும் எனது சீடர் வயது 96: கவிஞர் தணிகை

சாக்குண்ணி என்னும் எனது சீடர் வயது 96: கவிஞர் தணிகை

Image result for big banyan tree"


மனிதர் குடையை ஊன்றிக் கொண்டே மெல்ல மெல்ல நடந்து என்னை நாடி வருவார். அவருக்கு முதலில் நான் செய்து கொடுத்ததை நீண்ட தாளில் முழுதுமாக அச்சடித்து அந்த மின்னகரம் முழுதுமே விநியோகித்தார். அது ஒரு கலைக்கல்லூரி இல்லாத நகரில் அது பற்றி பேசவும், பெரியவர் சிறியவர் என்ற வயது வித்தியாசக் குறைபாடான பண்பாடு கலாச்சார விதிமீறல்களை சுட்டிக் காட்டுவதாகவும் சமுதாய அமைப்பு, குடும்ப நட்பு உறவுகளை செம்மைப்படுத்தி நட்புறவுடன் விளங்கவும் தமது குரலை மட்டுமல்ல அது போன்ற கருத்தொருமித்த பலரின் கருத்தையும் பிரதிபலிப்பதாய் அந்த காலத்தில் அனைவரிடமும் அது ஒரு பேசு பொருளானது.



 அது மட்டுமல்ல அடுத்த முறை நான் அவருக்காக எழுதிய அதாவது அவர் சொல்ல விரும்பியதை பெரிதாக்கி எழுதிக் கொடுத்ததை தையல் கலைஞன் என்ற அவர்களது நூலில் வெளியானது என கொண்டு வந்து காண்பித்தார்.

அதை அடுத்து சில சில சிறு சிறு கையால் எழுதப்பட்ட தப்பும் தவறுமான பிரதிகளைக் நுணுக்கி நுணிக்கி எழுதிக் கொண்டு வந்து படித்துப் பாருங்கள் கருத்தை சொல்லுங்கள், அதை சீர் செய்து எழுதித் தாருங்கள் என எழுதி எடுத்துச் செல்வார்.

அவர் ஆர்வத்தில் நல்ல இளைஞராக இருந்தார். அவரது மகன்களும் மகள்களும் ஆசிரியப் பணி, மேலாண்மைப் பணி போன்றவற்றில் பணி செய்து ஓய்வடையும் நிலையில் இருந்தனர். அவரது துணைவியார் ஏற்கெனவே மறைந்து விட்டார்.

தோட்டவேலை செய்வது, படிப்பது, நடந்தே என்னை வந்து பார்ப்பது அதன் பின் செல்லும்போது எவருடைய இரு சக்கர வாகனத்திலாவது அவரைக் கொண்டு அவரது வீட்டில் விடச் செய்வது இப்படியாக காலத்தை பயன்படுத்தி வந்தார்.

அவரது புதல்வர்களுள் கூட ஒரிருவர் இவருக்கும் முன்னே விபத்திலும், உடல் நலக் குறைவென்றும் மறைந்து விட்டனர். தனது பிள்ளைச் செல்வம் இல்லா தம்பதி புதல்வரைப் பற்றி பேசும்போது கோழி இணைவது போல இணைந்தால் எப்படி பிள்ளை பிறக்கும்,கலவியை உரிய பலத்தோடு செய்ய வேண்டுமல்லவா என அப்பட்டமாகப் பேசுவார்.

அவர் சொல்வதற்கேற்ப அவருக்கு பல பெண் மகவுகளும், பல ஆண்மக்களும் இருந்தனர். அவர் வெறும் ஊசி நூலுடன் மட்டுமே வந்தாரை வாழ்வைக்கும் தமிழகத்தில் குடியேறிய கதையைச் சொல்வார்.

அதன் பின் கையால் தைத்து, தையல் இயந்தரத்தில் தைக்க ஆரம்பித்து, அதன் பின் அவரின் கீழ் சில தையல் கலைஞர்களை பணிக்கமர்த்தி, அதன் பின் சிறிய ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி அதன் வருவாயில் அவருடைய பிள்ளைகளை எல்லாம் நல்ல ஒரு பொருளாதார நிலையை எட்டும் வண்ணம் பணி பெறச் செய்து குடும்பமாக்கி விட்டார்.

அவர் மொழியும் மதமும் மாநிலமும் வேறு என்ற போதும் இந்த மண்ணிலேயே வேர் விட்டார் பூத்துக் குலுங்கினார், காய் கனிகளுடன் நிறைய பெரிய பரப்புகளுடன் விரிந்து பரந்த மரமானார். ஒரு மரம் பல விதைகள் பல மரங்கள் பல பறவைகள் பல குடும்பங்கள்....


அதல்லாமல் ஒரு சொந்த வீடும் கட்டி விட்டார். அதில் தான் சில தினங்களுக்கும்  முன் அவர் வாழ்வு நிறைவடைந்தது. அது ஒரு நிறைவான வாழ்வு. வருத்தப் பட ஏதுமில்லை என்பதே எனது எண்ணம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை