Sunday, December 31, 2017

நானும் அசை போடுகிறேன் உழவு மாடு செக்கு மாடாய்: கவிஞர் தணிகை

 நானும் அசை போடுகிறேன் உழவு மாடு செக்கு மாடாய்: கவிஞர் தணிகை

Image result for goodbye 2017


2018ல் அனைவரும் அடி எடுத்து வைக்கிறோம் நாளை அதாவது இன்றிரவு 12.01 மணியிலிருந்து. 2018 மிக நல்ல தருணங்களை அனைவரது வாழ்விலும் விளைவிக்க வாழ்த்து சொல்லி இந்தப் பதிவில் நுழைகிறேன். இது ஆங்கிலப் புத்தாண்டு,ஆனாலும் நல்லவைக்கு வாழ்த்து சொல்வதும் தீயவற்றை வீழச் சொல்வதும் தமிழர் மரபுதானே. எனவே உயிரில் தமிழும், உணர்வில் தமிழும் நாம் இருக்கிறோம் ஆனாலும் உடலளவில் ஆடையில் ஆங்கிலமுமாக உலகே மாறிக் கொண்டிருக்க அவர்களுக்கு வாழ்த்து சொல்வதில் ஒரு குறையும் நேர்ந்துவிடப் போவதில்லைதான். அத்தோடு இந்த கடந்த ஆண்டில் என்ன என்ன நிகழ்வுகள் என எனது எண்ண ஓட்டத்தையும் பின்னோக்கி செலுத்த முயற்சிக்கிறேன்.

இதே போல கடந்த ஆண்டின் ஜனவரியில் எனக்கு ஒரு காலண்டரை அதில் இந்துமதக் கடவுளான பள்ளி கொண்ட ரங்கநாதர் இருக்கிறார் எனவும் தாம் கிறித்தவ மதம் சார்ந்தவர் மேலும் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர் மேலும் கம்ப்யூனிஸ்ட் தொடர்பு எல்லாம் உள்ளவர் என்று சொல்லிக் கொண்ட எமது கல்லூரியின் பேருந்து ஓட்டுனர் ஒருவர் கொடுத்தார். அந்தக் காலண்டர் இன்றுடன் முடிந்துவிட்டது. அது ஒரு தினசரிக் காலண்டர். ஆனால் அந்த நபர் எமது கல்லூரி பணியை முறித்துக் கொண்டு சென்று சில மாதங்களாகிவிட்டது. அதை அடுத்து கல்லூரி அருகே இருக்கும் இண்டியன் காபி ஹவுஸ் காலண்டரை அனைவர்க்கும் வாரி வாரி வழங்கியது இந்த ஆண்டு காலண்டரை போடவில்லை. இந்த ஆண்டு பொதுவாகவே காலண்டர் பிரிண்டிங்க் 40 சதம் குறைந்து விட்டதாக அறிவிக்கைகள் வெளிவந்தன.

இந்த ஆண்டு இன்னும் காலண்டர் கிடைக்கவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக நன்றாகவே இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.

பொங்கல் வழக்கம் போல முடிந்தது. கல்லூரியில் அந்தப் பொங்கல் பை பரிசாக ஒன்று அனைவர்க்கும் கொடுக்கப்பட்டது ,...அரிசி, பொங்கல் வகை பொருட்களுடன் தாம்...கடந்த ஆண்டில் அரசு எதுவும் கொடுக்கவில்லை. இந்த ஆண்டில் பொங்கல பை ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ அஸ்கா சர்க்கரை, முந்திரி, திராட்சை ஏலக்காயுடன் இரண்டு அடி நீள கரும்புத் துண்டும் தருவதாக ஜனவரி 5 முதல் சுமார் 2 கோடி பேருக்கு 2 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு தர இருப்பதாக அறிவித்துள்ளது அரசு தமிழ் நாடு அரசு.

கல்லூரியில் ஆய்வு நடத்த வந்த ஒரு முன்னால் துணை வேந்தர் நன்றாக இன்னும் எழுதுங்கள் கல்லூரிக்காகவும் எழுதுங்கள் என்று சொல்லிச் சென்றார். கல்லூரி என்னை முகாம் மற்றும் பொது மக்கள் தொடர்பு அலுவலர் என பி.ஆர்.ஓ என பெயர்ப் பலகை, ஐ.டி.கார்ட், விசிட்டிங் கார்ட் எல்லாம் அடித்து தந்து வருகைப்பதிவேடு மற்றும் அலுவலக பதிவுகளிலும் மாற்றித் தந்தது.

மகன் வேறு ஒரு கைபேசி ஆன்ட்ராய்ட் வாங்கிக் கொண்டு அதாவது அவனுக்கு கிடைத்த கல்வி உதவித் தொகையில் வாங்கிக் கொண்டு எனக்கு அவன் உபயோகித்த கை பேசியைக் கொடுத்தான் அது முதல் நானும் வாட்ஸ் ஆப் வாசிக்க ஆரம்பித்து தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன்.

உடனே எனது கல்லூரித் தோழர் நீதிபதியாக இருப்பவர் கரூர் ஒரு அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்ட நிகழ்வில் பேச அழைத்து 5000 ரூபாய் கொடுத்து என்னை உறுதிப்படுத்திக் கொண்டார். அதை அடுத்து சேலத்து ஜங்சன் அருகே உள்ள ஒரு ஹோட்டலிலும் பெயர் மறந்து விட்டது ஒரு கல்லூரி நிகழ்வு சந்திப்பிலும் சென்று கலந்து கொண்டேன்.

நதி நீர் இணைப்பு தொடர்பாக சேலத்தில் ஒரு கூட்டத்திற்கு நண்பரும் நானும் முயற்சி செய்து நடத்தினோம். அதன் தொடர்பாக குளித்தலையில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் நீர் மேலாண்மை பொறியாளர் ஏ.சி.காமராஜ் அவர்களுடன் கலந்து கொண்டு ஒரு கூட்டத்தில் பேசினேன்.

ஆனால் அவர் சேலம் சட்டக் கல்லூரிக்கு வந்து கலந்து கொண்டபோது நான் கலந்து கொள்ள இயலவில்லை. ஆர்வம் காட்டவில்லை. மேலும் அது உடலியல் ரீதியாக முடியாத காரியாமாகிவிட்டது.

பழைய நண்பர்கள் பலர் இணைந்தனர் . எனது சகோதர நண்பர் கொ.வேலாயுதம் அவர்களின் சொத்தை கை மாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

என்னை ஏமாற்றிச் சென்ற துளஸி எங்கிருக்கிறார் எனத் தெரிந்து கொண்டபின் அவர் ஐயாயிரம் ஐயாயிரமாக 3 முறை கொடுத்து விட்டு மறுபடியும் சென்று பதுங்கிக் கொண்டார். அவரது துணைவியார் அவ்வளவு நல்லவராக இருக்கிறார்.

வழக்கம் போல இந்த ஆண்டும் திருவில்லிப்புத்தூர் ரத்தினவேல் அய்யா அவர்கள் ஒரு தொகையை அவர் அதை வெளீயில் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு எனது மகன் கல்விச் செலவுக்கு பயன்படுத்துக என நான் கேட்காமலே எனது வரவு வங்கிக் கணக்கில் வரவு வைத்து புளகாங்கிதமடைய வைத்திருந்தார்.

ஏன் இதை எல்லாம் நான் தெரியப் படுத்துகிறேன் எனில் மனித வாழ்வில் எதுவுமே எப்படியும் நடக்கலாம் எனது பெரிய சகோதரி ஒருவர் மறைந்தது போல...எனவே இதை எல்லாம் பதித்து விட்டால் நின்று விடும் என்பதற்காகத்தான்.

எனது தியான வழிச் சீடர் தங்கவேல் பிரவீன்குமார் திருமணம் பிப்ரவரி 6 ஆம் தேதி அருமையாக நடந்தது. அதற்கு எனது மனநிறைவுடன் ஈடுபட்டு எனது பங்கை ஆற்றினேன் மனநிறைவுடன் சில பரிசுகளையும் அளித்தேன்.

அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயம் மற்றும் சீரகம் ஊறவைத்த நீர் வடித்த முளை வந்திருக்கும் பயிரை சில ஸ்பூன்கள் அனேகமாக இரண்டு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட ஆரம்பித்தது நல்ல பலனளிக்க ஆரம்பித்தது கல்லூரி சென்று நீரிழிவு வியாதி வாங்கியதை நன்றாக கட்டுப்படுத்திக் கொண்டேன்.

நடைப்பயிற்சியை, தியானத்தை முடிந்தளவு கைக்கொண்டு விட்டு விடாமல் செய்தே வருகிறேன். ஆனாலும் கல்லூரி செல்லும் நாட்களில் அதை பெரிதும் செய்ய முடிவதில்லை. சேலம் நடைமேடையில் என்னதான் நடந்தாலும் அது திருப்தி அளிக்கவில்லை. மேலும் தியானம் செய்யவோ , எழுதவோ பெரும்பாலும் நேரம் கிடைக்காதபோதும் அவ்வப்பொது எழுதி வருகிறேன் இந்தப் பதிவையும் சேர்த்து சுமார் 195 பதிவுகளை இட்டுள்ளேன். நிறைய சினிமாக்கள் பார்த்தேன். அதில் தற்போது வந்துள்ள அருவி, வேலைக்காரன், தீரன் போன்ற படங்களும், சிறு சிறு பட்ஜெட்டுடன் எடுக்கப்பட்ட படங்களும் மிக நன்றாகவே இருந்தன.

ஓமலூர் வரை சனிக்கிழமைகளில் என்னை மதியம் வீடு வரும்போது கொண்டுவந்து விட்டுக் கொண்டிருந்த சண்முகம் டாக்டர் படித்து முடித்து சென்று விட்டதால் அரை வேலை நாள் முடிந்ததும், இனி என்ன செய்வதென்று யோசித்து வருகிறேன். ஏன் எனில் சனி நீராட எண்ண்ய்க் குளியல் நடத்த வேலை நாளில் முடிவதே இல்லை பணிக்கு சென்று வந்து சனி நீராட மாலை சுமார் மாலை 5.45க்கு மேல் ஆகிவிடுவதால் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் முடிவதில்லை. ஒன்று எழுத வேண்டியது அல்லது நடைபயிற்சி மேற்கொள்ள‌ வேண்டியது மட்டுமே இதுவரை இரண்டில் ஒன்றை மட்டுமே செய்ய முடிகிறது இனி எப்படியோ?

கல்லூரியில் கல்லூரி முதல்வர் கல்லூரியில் தினம் அல்லது இரு நாளுக்கொருமுறை அல்லது சில நாளுக்கொருமுறையாவது பொன்மொழிகள் எழுத வேண்டிக்கொண்டார் எனவே அந்தப் பிடித்தமான பணி தொடர்கிறது இது 2018ல் மேலும் மேலும் பல படிகள் உயர உயரச் செல்லும் என நினைக்கிறேன்.

இந்த ஆண்டில் மகன் மணியம் இரண்டாம் செமஸ்டரையும் மிகவும் டஃபாக இருந்ததாகவும் எனினும் இவன் தேறிவிட்டது திருப்தியையும் 3 ஆம் செமஸ்டரிலும் கடந்த வாரத்தில் தேறி விட்டதும் நடந்தேறியது. மற்றபடி இன்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொல்லி உள்ளது ஊடகத்தை அலை பாய வைத்துள்ளது.

ஊராட்சி தேர்தலை நடத்தாமலே தமிழக அரசு காலம் கடத்த இப்போது தெருவிளக்குகள் எல்லாம் எரியாமல் இருட்டில் இருந்தாலும் அவை அப்படியே கிடக்கின்றன அந்தளவு நல்லாட்சி நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், தினகரன் எம்.எல்.ஏ ஆனதும் இந்திய ஜனநாயகம் கேலிக்கூத்தானதும், தேர்தல் ஆணையம் வெறும் வேடிக்கை பார்க்கும் நிலையிலிருந்து தேர்தல் நடத்தியதும் இந்த ஆண்டில்தான்.

வேறு ஒன்றும் நினைவுக்கு எட்டவில்லை எனவே இத்துடன் விட்டு விட வேண்டியதுதான் இந்த ஆங்கில 2017ஆம் ஆண்டை இனி 2018ல் இதை விட மிக மிக நல்ல பதிவுகளுடன் சந்திக்கிறேன்...என்ற உறுதியோடு.

உங்கள் அனைவர்க்கும் எனது வணக்கங்களும், வாழ்த்துகளும்  வழக்கம்போல எப்போதும் போல‌...உரித்தாகின்றன...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல்?!... கவிஞர் தணிகை

 ஆன்மீக அரசியல்?!... கவிஞர் தணிகை

https://youtu.be/Zr6NCKPyu-E

https://www.youtube.com/watch?v=Zr6NCKPyu-E


Image result for rajinikanth speech on 31 march 2017

ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனால் தொடர்பு படுத்தி ரஜினிகாந்த் என்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட் சொல்லி இருக்கிறார். நன்று.ஆனால் அபிராம பட்டர் தமது அபிராமி அந்தாதியில் 16 செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழச் சொல்லும் வாழ்த்தில் கோணாத கோலும் என்ற ஒரு செல்வத்தை சொல்லி இருக்கிறார். அது வளையாத நேர்மையான ஆட்சி என்ற பொருள் படும்.

அதையே ரஜினிகாந்த்

 உண்மையான ஆட்சி, நேர்மையான ஆட்சி, நாணயமான ஆட்சி, வெளிப்படையான ஆட்சி, சாதி சமயமற்ற ஆட்சி என்று

  கூறி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று இன்று நெடுநாளைய கேள்விக்கு பதில் சொல்லி முடிவு கட்டி விட்டார். ஒவ்வொரு தனிமனிதருக்குமே அரசியல் ஈடுபாடு இருக்க வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ அவரவர் தனிப்பட்ட சொந்த வாழ்வில் அரசியல் பங்கீடு இருந்தேதான் ஆகிறது. அதை எல்லாம் உணராமல் மாக்களாக இருந்து மடிந்து போவார் தவிர மற்ற அனைவருமே இந்த தாக்கத்திலிருந்து தப்பித்து விட முடியாது. அல்லது அவர் ஒரு ஆன்மீக வாதியாக இருந்தால் இது பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியிருக்காது. ஆனாலும் அவர்களுமே கூட மக்கள் நல்வாழ்வில் ஆட்சி புரியும் நல்ல ஆட்சியாளர்களை சந்தித்து குருவாக விளங்கியதுமுண்டு.

ஆனால் இங்கு ஆன்மீகமும் அரசியலும் இணைப்பதாகச் சொல்லி இருக்கிறார் காவலர்கள் வேண்டும் என்றும்...அவர்களின் உழைப்பால் ஆட்சி அமைத்தால் அந்தக் காவலர்கள் மக்களுக்கு எல்லாத் திட்டங்களும் சென்றடைய வைப்பார்கள் என்றும், தட்டிக் கேட்கும் இந்தக் காவலர்களை கண்காணிக்கும் ஆள் தான் நான் என்றும் அந்த ஆட்சி சரியில்லை என்றால்  3 ஆண்டுகளில் வெளியேறிவிடுவதாகவும் சூளுரைத்திருக்கிறார்.

இவர் சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது பெரிதாக ஏதும் செய்யவில்லை, இலங்கைத் தமிழர் கொலையுண்டபோது என்ன செய்தார் என சீமான் கேட்பது போல குரல் கொடுக்கவில்லை, அன்புமணி ராமதாஸ் எம்.பி சொல்வது போல காவிரி நீர் மேலாண்மை பற்றி குரல் கொடுப்பாரா என்று கேட்பது போல குரலும் கொடுக்கவில்லை.

இப்போதும் கூட தமது இரசிகர் மன்றத்தின் இரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றி இருக்கிறார். தமது இரசிகர் மன்றத்தை பதிவு பெற்றவற்றுடன் பதிவு செய்யாதவற்றை பதிவு செய்து இணைக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன், நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் என்பதுதான் நமது கொள்கை,  உண்மை, உழைப்பு, உயர்வு என்ற மந்திரம் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

மகாத்மா காந்தியின் சத்யாகிரக இயக்கமே இதில் வெற்றி பெறவில்லை.காந்தியை மீறி வன்முறை வெடித்தது இந்திய சுதந்திரப்போரில்.

ஒவ்வொரு தனிமனிதருக்குமே அரசியல் பொறுப்பு உண்டுதான். ஆனால் ரஜினிகாந்த் சினிமா பிரபலத்தை , அந்த லைம்லைட்டை, விளம்பரத்தை மூலதனமாக்கி அரசியல் பிரவேசம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு நிகழ்ந்தது இவருக்கு நிகழுமா என்பது கேள்விக்குறிதான்.

வரக்கூடாது என்பதெல்லாம் இல்லை. வரலாம் ஆனாலும் இவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் என்போன்ற மக்கள் பணியாளரின் கருத்து.

இந்த நாட்டில் சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயில் கவ்வி, ஸ்டைல் செய்து, தமக்கு டான்ஸ் ஆடத் தெரியாததையும், சோகத்தில் நடிக்கத் தெரியாததையும் மறைக்க காட்சிகள் வைக்கச் செய்ததை அதை வீரம் என்று நம்பிய‌ இரசிகர்கள் கூட்டம் இன்று இவரை நாடாள வர கேட்டுக் கொண்டுள்ளது. இவர் எப்போதுமே இவரது படங்கள் வெளியிடத் தயாராக இருக்கும்போதெல்லாம் இதே போன்றுதான் பேத்தல் நடத்துவார் தம் படங்கள் ஓடுவதற்காக என்றும் அது போல இதுவும் இருந்து விடக் கூடாது என்றும் முணுமுணுப்புகள் கேட்காமல் இல்லை.

இவர் தமது சினிமா வாய்ப்புகளையே தக்கவைக்க ஆன்மீகம் உதவியது. ஒரு கட்டத்தில் மனநிலை குழம்பி இவர் சிதைந்து கொண்டிருந்த நேரத்தில் கை தூக்கி விட்ட தியானமும் ஆன்மீகமும் பெரிதும் உதவியது ஆனால் அதே ஆன்மீகம் இவரை அரசியலில் போற்றப்பட வேண்டியவராக மாற்றுமா என வரும் நாட்கள் சொல்லி விடும்.

இவருக்கு சிஸ்டம் மாற்ற எல்லாம் எந்த பயிற்சியுமே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Related image


மிக நல்ல மாந்தர்களை எல்லாம் செத்துப் போனால், செத்துப் போன பின்னால்தான் அங்கீகரிக்கும் இந்த நாடு...பாரதிக்கு இறந்த பின் சிலை, காந்தி சுடப்பட்ட பின் பெரும் புகழ், இன்குலாப் போன்ற கவிஞர்க்கு இறந்த பின்னேதாம் சாஹித்ய அகாடமி விருது, சசிபெருமாள் செத்த பின் தாம் மதுவிலக்குப் போர் கோவன் பாடல் மூலம் எழுச்சி பெற்று இன்று மதுவிலக்குக்கு ஆதரவு...

இப்படி எம் போன்ற உழைப்பாளர்கள், உண்மையாளர்களுக்கு எல்லாமே இறந்து இல்லாமல் போனால்தாம் பெரிதும் போற்றப்பட்டு பேசப்படுகிறார்கள் அங்கீகாரம் பெறுகிறார்கள்.

ஆனால் கருணாநிதிக்கும், ஜெவுக்கும் இருக்கும்போதே சிலை வைத்து விடுகிறார்கள். அப்துல்கலாம் போன்றோர் மேலும் சேவை செய்ய நாட்டுக்கு நல்லது செய்ய நினைத்தாலும் கலைஞர் கருணாநிதி போன்றவர்களால் அரசியல் நிலைப்பாட்டை வைத்து தடுத்து விட முடிந்திருக்கிறது...மேலும் பிரதமர், முதல்வர்கள் ஆகியோரைக் கூட வாக்கு வங்கி அரசியல் மூலம் தடுத்து விட முடிந்து இருக்கிறது.

இன்று இராதாகிருஷ்ணன் நகர் தேர்தலும், ஜெ வின் வெற்றிடமும் இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகி காலம் கனியவைத்திருக்கிறது. தகுதியான மனிதர்களை எல்லாம் விட்டு விட்டு, தகுதிகளை வளர்த்துக் கொள்ளாத மனிதர்கள் பின் கூட்டம் திரள ஆரம்பித்து விடுகிறது. இது தமிழகத்தின் தலைவிதி. அது எம்.ஜீ.ஆர், கலைஞர், ஜெ இப்படி இவர்கள் எல்லாம் வந்த கதை.

ரஜினி வரட்டும் கமல் வரட்டும், ஏன் விஜய் கூட வரட்டும் வாக்குகள் எல்லாம் பிரிந்து சிதறட்டும், தமிழகத்தின் தலைவிதி தலைவிரி கோலமாக மாறட்டும். அதன் பின்னாவது ஒரு நிலைத்த அரசியல் புரிதல்கள் நிகழட்டும் என் போன்ற சேவையாளர்களுக்கு மட்டுமே அது பொருந்தும் எனத்தெரியவரட்டும் அதுவரை காலத்தின் பயணம் இதே போன்று தொடரட்டும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

வெளிப்படைத்தன்மை , புதிய சீரமைப்பு என்ற நிலைப்பாட்டில் ப்ரஸ்த்ராய்க்கோ,கிளாஸ்நாத் என்ற கொள்கையில் கோர்பச்சேவ் நோபெல்பெற்ற ரசிய ஆட்சியாளரே வீழ்ந்த கதை எல்லாம் உலகில் உண்டு. இவர் எவ்வளவு வெளிப்படைத்தன்மை கொண்டிருப்பார் என லாஸ் வேகாஸ் சூதாட்ட கிளப்களும், கட்டிய பல்வரிசை செட்டிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம் ஆனால் அதை எல்லாம் ஓரம் கட்டி விட்டு நல்லாட்சி தந்தால் எமக்கெல்லாம் மகிழ்ச்சி. யோவ் முதல்ல சிகரெட், மது இதிலிருந்து வெளியே வாங்கப்பா... ஊடகங்களை எல்லாம் கவனிக்க வேண்டும் ஏன் எனின் அவைதாம் இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் பலூனாக ஊதிபுடைக்க வைப்பதே...நல்லதுக்கெல்லாம் ஒரு சிறு பெட்டியளவு கூட ஒதுக்காமல் இது போன்றவைக்கெல்லாம் நாளெல்லாம் முழுப்பக்கமெல்லாம் ஒதுக்குவதுதான் அவற்றில் வியாபார உத்தி.

Saturday, December 30, 2017

தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள்:= கவிஞர் தணிகை

தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள்:= கவிஞர் தணிகை
Image result for kalavaadiya pozhuthugal


தீரன், அருவி, வேலைக்காரன் போன்று விறுவிறுப்பு இல்லை என்று இரசிகர்கள் பார்க்காமல் விட்டு விடாதீர்கள். தங்கர் பச்சான் போன்ற ஒளி ஓவியர்களை அவசியம் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அதற்காகவாவது இது போன்ற படத்தை நாம் பார்த்து பரிமாறிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இது போன்ற ஒரு கதை பின்னால் ஒளிந்திருக்கும். அதை எல்லாம் மறந்து விட்டும் மறந்து விடாமலும் தாம் வாழ்வை நகர்த்திக் கொண்டிருப்பார்கள். அதை ஒரு அழகிய கவிதையாக நமக்கு உண்மையும் கற்பனையும் கலந்து உண்மையான கலைஞராக நின்று வழங்கி இருக்கிறார் தங்கர் பச்சான்.

இது போன்ற படங்களில் ஒரு வேகம் இருக்காது என்றாலும் பார்க்கும்படியாகவே இருக்கும் ஆனால் இது போன்ற படங்களைப் பார்க்க நமது இளந்தலைமுறைக்கு ஆர்வமும் பொறுமையும் இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் எனக்கு பிடித்திருக்கிறது.

சத்யஜித் ரே, மூன்றாம் பிறை தந்த பாலு மகேந்திரா, மகேந்திரன் போல இந்த தங்கர் பச்சானின் படமும் ஒரு தனிப்பட்ட ரசனையோடு பார்க்க வேண்டியிருக்கும். இவரின் பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி போன்ற படங்களின் தொடர்ச்சியாக இந்த படத்தையும் சொல்லலாம்Related image



அந்த படங்களில் எல்லாம் அவ்வப்போது ஒரு திருப்பு முனை நிகழ்ந்து படத்தை வேறுபட்ட தளங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கும் ஆனால் இதில் காதல். மிகவும் சாதுர்யமாக கம்பி மேல் நடப்பது போல அழகாக கையாள வேண்டிய கருப்பொருள். அதை அழகாக செய்து வெற்றி பெற்றிருக்கிறார் தங்கர்.

மிகையாகப் போனாலும் பாலுணர்வை சொல்வது போன்றதாகிவிடும், குறைவாகவும் சொல்ல முடியாது மிகவும் அருமையாக பிரபு தேவா, பூமிகா அடித்துள்ளனர் அவர்கள் தோள் மேல்தான் எல்லா பொறுப்பும். பிரகாஷ்ராஜ்க்கு எப்போதும்போல் ஒரு ஜென்டிலான கேரக்டர்.சத்யன் வழக்கம் போல் அதிகம் வராமலே படத்தின் முக்கியமான கட்டத்தில் படத்தின் முடிச்சை அவிழ்த்து கணவனான பிரகாஷ்ராஜ்க்கு அதாவது சௌந்தர்ராஜனுக்கு மனைவியான பூமிகா ஜெயந்தி ஏற்கெனவே பொற்செழியன் பிரபு தேவாவின் காதலிதான் என்று வெளிப்படுத்தி விடுகிறார்.

ஜெயந்தி இருக்கிறாளா, இறந்து விட்டாளா என நமக்குத் தெரியாதது போல பொற்செழியனும் தெரியாமலே செல்பேசியின் சிம் கார்டையும் கிழித்து போனையும் வீசி எறிந்து விட்டு பயணத்தை மேற்கொள்கிறார்.
Related image


இரண்டு காதலர்களின் ஊசலாட்டத்தை அகடு முகடாக மாற்றி மாற்றி அழகு படுத்தி உண்மையான அலைபாய்தலை சில காட்சிகளால் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர். பார்க்க வேண்டாம், பேச வேண்டாம் என்று கட்டுப் பாட்டுடன் இருக்கும் பொற்செழியன் திடீரென தமது காரை ஜெயந்தி செல்லும் காரை சென்று மறித்து அவளை தனது காரில் ஏறச் சொல்லி அவளது லக்கேஜ்களை எடுத்து வரும்போதும்,

பின்னால் அமர்ந்தே பயணம் செய்யும் ஜெயந்தி ஒரு கட்டத்தில் தாமாகவே வந்து முன் இருக்கையில் அமர்ந்து வருவதும் இப்படி சில இடங்களில்...

கடைசியில் இருவருமே கட்டு மீறிப் போய்விடுவோமோ என்று பிரிந்து சென்றாகவேண்டும் என முடிவெடுக்கிறார்கள். வாழ்வது மிகவும் கடுமையாக கொடுமையாக இருப்பதும், நான் செத்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியாதா ஜெயந்தி என பொற்செழியன் சொல்வதும் படத்தை நமக்கு உணர்த்தும் சொல்லாக...
Related image



ஏண்டாப்பா இந்த சௌந்தரைக் காப்பாற்றினோம் என ஜெயந்தியைப் பார்த்து துடிப்பதும் நடிப்பதுமாக நல்ல மாறுபட்ட கதாபாத்திரத்தில் பிரபு தேவா நன்றாக செய்திருக்கிறார்.

நல்ல கதை எல்லார் வாழ்விலும் ஜீரணித்தும் ஜீரணிக்க முடியாமலும் இருக்கும் கதையை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குனர். கொஞ்சம் கம்யூனிசம், கொஞ்சம் பெரியாரிசம், என ஜீவா, பெரியார் எல்லாம்மேடையேற்றி எப்போதும் போல தமது கூத்துப் பட்டறைக் காட்சியையும் கொண்டு வந்திருக்கிறார்.

மக்கள் எல்லம் ஆட்டம் பாட்டம் என ஒவ்வொரு வீட்டையும் தியேட்டராக மாற்றி தொலைக்காட்சி அடிமைகளாக மாறிவிட்டதையும், மது அடிமையாக நாடு மாறி வருவதையும் சொல்ல முயன்றிருக்கிறார்.

கதையின் ஆழத்தில் இந்தப் பிரச்சாரம் எல்லாம் மிகவும் லைட்டாகவே இருக்கிறது... சத்யராஜின் பெரியார் வசனங்கள் மிகவும் செயற்கையாக ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க இந்த கஸ்ட் ரோலில் சத்யராஜ்...மிகையான நடிப்பில் சொதப்பல்.

மற்றபடி பார்க்க வேண்டிய படம். உணர வேண்டிய படம். எல்லம் கடந்து வந்த பாதை தானே....ஒரு கவிதை.
களவாடிய பொழுதுகள் நல்ல தலைப்பு. நூற்றுக்கு 50 மதிப்பெண் நமது மதிப்பீடாக.
Related image



பாக்யராஜின்  அந்த 7 நாட்கள் வேறு மாதிரி இருக்க இது முற்றிலும் காதல், திருமணத்துக்கும் பின் இருவரின் சந்திப்பு அதனால் கெடாத கெடுத்துக் கொள்ள முடியாத நெருப்பின் முனையாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
P.S:
இருவரும் முகநூலில் நண்பர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் மேட்டூரில் எனக்குத் தெரிந்த இடத்துக்கு வரும் நாளில் வருக சந்திக்கலாம் என்று சொல்லியும் அன்று என்னால் போக முடியாததற்காக இன்னும் வருந்தியபடியே இருக்கிறேன். சாரி தங்கர் பச்சான்.

Friday, December 29, 2017

எனக்குப் பிடித்த ஐந்து:‍‍‍ ...கவிஞர் தணிகை.

எனக்குப் பிடித்த ஐந்து:‍‍‍

காற்று

இடத்தின் பேரை எழுதிச் செல்கிறது
வாசத்தால்
Related image
ஜீவன் ஓடிக் கொண்டிருக்கிறது
சுவாசத்தால்..

நீரின் ஒவ்வொரு துளியும் அமுதம்
அளவின்றி பிரளயமானால்
அதுவும்
எதுவும்
விஷம்


Image result for water from air


வடுவற்ற நிலம்
வஞ்சியின் முகமாக‌
காயம்படாத இதழாக‌

Related image


தீயின் தாகம்
தீராத பசியின் மோகம்

Image result for fire land

சொல்ல முடியாது சொல்லில்
விண்ணின் வியாபகம்...

  ...கவிஞர் தணிகை.


Image result for sky

Tuesday, December 26, 2017

தேர்தல் சீர்திருத்தம் செய்யவும் திரும்ப அழைக்கும் முறையும் கொண்டு வர இதுவே நல்ல தருணம்.: கவிஞர் தணிகை

தேர்தல் சீர்திருத்தம் செய்யவும் திரும்ப அழைக்கும் முறையும் கொண்டு வர இதுவே நல்ல தருணம்.: கவிஞர் தணிகை

Image result for election reformation in india


சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே தேர்தல் வாக்குகளுக்காக ஒரு வாக்குக்கு ஒரு ரூபாயை புதிய நோட்டுக் கட்டிலிருந்து பிரித்து வரிசையாக கீழ்த் தட்டு மக்களுக்கு கொடுத்ததை நான் பார்த்தபோது எனது வயது 5 இருக்கும்.

எனவே தினகரன் சுயேட்சை வேட்பாளர், குக்கரில் வெந்து போன இரட்டை இலை, தாமரைப்பூ, வெளிச்சமில்லா சூரியன், வாழைப்பழத்துள் நோட்டுகள், டோக்கன்ன் சிஸ்டம், இருபது ரூபாய்க்கு இன்னும் வர வேண்டிய பத்தாயிரம் இன்னும் வராததால் வாக்களித்தவர்கள் கொடுப்பதாக வாக்களித்தவர் வீட்டு முன் முற்றுகை, ராதாகிருஷ்ணன் நகர், மத்திய அரசு, மாநில அரசு, கட்சி...தேர்தல் ஆணையம் இது பற்றி எல்லாம் எழுதியும், மக்கள் நாணயமின்றி இருந்தால் தேர்தலும், ஆட்சியும் நாணயமின்றித்தான் இருக்கும் என்பது பற்றி எல்லாம் எழுத வேண்டிய அவசியமில்லை.

மேலும் எந்திரத்தில் ஓட்டு அளிக்கும் முறையிருக்கும் வரை பாரதிய ஜனதாவை வீழ்த்த வழியில்லை, ஏன் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவே அப்படித்தான் வென்றிருக்கும் எனச் சொல்லிக் கொண்டிருப்போர் யூகங்கள், சந்தேகங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு தேர்தல் முறைகளில் ஒரு வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்.


தேர்தலில் வெல்லும் வாக்காளர்கள் சரியில்லை என பெரும்பான்மையான வாக்களர்கள் கருதி திரும்ப அழைக்கும் உரிமையை பயன்படுத்த நேர்கையில் அவர்கள் பதவி பறிக்கப்பட்டே ஆக வேண்டும்.

தேர்தல் ஆணையம் அல்லது அரசே தேர்தல் செலவை ஏற்க வேண்டும். வேட்பாளர்களோ கட்சிகளோ தேர்தலுக்கு எந்தவகையிலும் தேர்தல் செலவை ஏற்க செய்ய விடக் கூடாது.

இனியும் சின்னம், அதற்குத்தான் மதிப்பு என்ற கோட்பாடு இனியும் தேவைப்படாத ஒன்றாக மாறிவிட்டதால், கட்சி, வேட்பாளர் பெயர் மட்டுமே இடம்பெற்றிருக்கும் தேர்தல் எந்திரம் அல்லது வாக்களிக்கும் அச்சிடப்பட்ட பேப்பர் பயன்படுத்தப் பட வேண்டும்.
Image result for election reformation in india

மேலும் ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார முறைகளில் அதன் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு கூட்டாட்சி தத்துவம் வர வழி வகை செய்ய வேண்டும்.

இதை எல்லாம் செய்தாக வேண்டிய கட்டத்தில் இந்தியத் தேர்தல் முறைகள் வராவிட்டால் தேர்தல் நடத்துவது என்பதெல்லாம் விரயம். பயனில்லா பெரும் விரயம்.

தேர்தலும் வாக்களிப்பதும் இது போன்ற ஜனநாயக முறைகளும் கேலிக்கூத்து என பெரியார் கொள்கைகளும் சில கட்சிகளும் கொள்கையாக கொண்டு செயல்பாடுகளை நடத்தி வருவதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது.

இலஞ்சம், ஊழல், என்ற சுரண்டல் வர்க்கத்தின் கொள்கை, முதலாளித்துவ சார்பான நிலைபாடு, தனியார் மயம், தாராளமயம், உலக மயம் போன்ற மேலை நாட்டு மேற்கத்திய நாடுகளின் வழிமுறை செயல்பாடுகளில் நாடு நடப்பதும் மதவாதம், அறக்கட்டளைகள், சாமியார்களின் பிடிகள்  இதில் இருந்து எல்லாம் வெளியேறி மக்களுக்கான அரசாக மாற வேண்டும் எனில்

வேறு வழியே இல்லை...இது போன்ற தேர்தல் முறைகள் இலஞ்சம் உள்ளளவும் முறைகேடாகவே இருக்கும். கடல் உள்ளளவும் உப்பு இருக்கும் என்பது போல...

அடிப்படையான இந்த நிலையை சரி செய்யாமல் வெறும் தேர்தல் நடத்தி அதில் வெற்றி தோல்வி, தலைமை அமைச்சரவை, ஆட்சி என்பதெல்லாம் ஏமாற்று வேலைகளே.


 நாடெங்கும் ஒரே காலக்கட்டத்தில் பாராளுமன்றம், சட்டமன்றம், ஊராட்சி தேர்தல்கள் எல்லாம் ஒருசேர நடத்தப்பட வேண்டும். எம்.எல்.ஏ, எம்.பி., மக்கள் பிரதிநிதிகளுக்கு சம்பளம், சலுகைகள், ஓய்வுதியம் எல்லாம் கொடுக்கப்படக் கூடாது...Related image


தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய நாடு முழுதுமே தேர்தல் மாறுதல்களும், சீர் திருத்தங்களும், தொகுதி ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு, சாதிய ஒதுக்கீடு, போன்ற அனைத்து வகையான ரிசர்வேசன் பற்றி எல்லாம் கூட மறு பரிசீலனை செய்வதற்குண்டான நேரம் இதுவே....இனியும் தேர்தல் ஆணையம் இதைப்பற்றி எல்லாம் நெறிப்படுத்தக் கொள்ள வில்லை எனில் ....ஒன்றுக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப் என குடியரசுத் தலைவரைச் சொல்வது போல இதையும் சொல்வதில் தவறு இல்லை.

 இத்தனை படை பரிவாரத்தை எல்லாம் வைத்துக் கொண்டு, இராணுவம், காவல்துறை, அரசு அலுவலர்கள், ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஆகியோரை வைத்துக் கொண்டு  ஒரு தொகுதியில் நடந்த தேர்தலையே நடத்த முடியாத அரசாங்கம் எல்லாம் என்ன அரசாங்கம்? மத்திய அரசு, மாநில அரசு யாவுமே ஆள அருகதை இல்லை என ஆட்சிக் கட்டில் இருந்து கீழ் இறங்க வேண்டும் அதுவே நேர்மை. நேர்மையான ஆட்சி பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாமல் நன்றாக தேர்தல் நடப்பு , பணப் பட்டுவடா எல்லாம் தெரிந்தே இந்த தேர்தலை நடத்தி இருப்பது உள் நோக்கம் கொண்டது. அதிலும் தி.மு.க இரண்டாம் அலைக்கற்றை வழக்கில் அனைவரையும் அதே நாளில் விடுவித்து சமரசம் செய்து கொண்டதும், அவர்களும் அரசியலில் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும், பிரபாகரன் இலங்கையில் கொல்லப்படும் நாள் தேர்தல் நாள் வரை நடக்காமல் இருக்கட்டும் என காங்கிரஸ் தி.மு.க கூட்டு நீடிக்கட்டும் என இருந்தது போல நாம் வழக்கிலிருந்து விடுதலை பெற்றால் போதும், மேலும் நம் மேல் வருமான வரி வழக்குகளும் சோதனைகளும் இல்லாமல் இருந்தால் போதும் என்று சமாதானமாகி மக்களை எமாற்றிக் கொண்டிருக்க இந்த மடமையான மக்கள் துணித்துவிட்டார்கள் வாக்குக்கு மதிப்பு இருபதாயிரம் பெறும்வரை... வாக்கு ஜனநாயகம் எல்லாம் துப்பாக்கியின் பின் அசைவு போல ஜனநாயகத்தை வந்து தாக்கி விட்டது.

மறுபடியும் பூக்கும் வரை.

கவிஞர் தணிகை.





Sunday, December 24, 2017

வேலைக்காரன் சக்கை போடு போடு ராஜா: கவிஞர் தணிகை

வேலைக்காரன் சக்கை போடு போடு ராஜா: கவிஞர் தணிகை
Image result for velaikkaran full movie wikipedia


தினகரனின் குக்கர் வெற்றி பெற்றதாக அறிவிப்புகள் வந்திருக்கும் ஊடகங்களின் செய்திகளின் ஊடாக இந்த சினிமா பற்றி ஏன் எழுதுகிறேன் எனில் இது என்னதான் வியாபார நோக்கில் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் அதில் கொஞ்சம் நுகர்வோர் விழிப்புணர்வை தந்திருப்பதாலும், நுகர்வோர் என்போர் நாம் தான் பல் வேறு களங்களில் தொழில் முனைகளில் பணி செய்யும் வேலை செய்வோராகிய நாம் தாம் என்று கொலைகாரன் பேட்டை அல்லது கூலிக்காரன் பேட்டையிலிருது வித்தியாசமாக கதை நகர ஆரம்பிக்கிறது.

ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து, வாக்குகள் பணத்துக்காக விற்கப்படும் என்ற ஒரு இந்திய நாட்டில் இலஞ்ச ஊழல் இலாவண்யங்கள் செய்யும் அரசுகள் இருக்கும் வரை இந்த வாக்குகளுக்கு பணம் பெறுவதும் இருக்கும் இதில் தவறு ஏதுமில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதை இந்த இடைத்தேர்தல் காண்பித்து விட்டது. மேலும் வாக்குகளுக்கு இவ்வளவு பணப் பரிமாற்றம் நடப்பது தெரிந்திருந்தும் இந்த தேர்தலை நடத்தி முடித்திருப்பது எவ்வளவு கேவலமான செயல் இந்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மாநில அரசுகள் என்பதும் எல்லாம் அசை போட வேண்டிய விஷயங்கள்.

சிவ கார்த்திகேயன் போடி அப்பன் சொன்னான் ஆட்டுக்குட்டி சொன்னான் என பேசித் திரிந்தவர்க்கு ஒரு நல்ல மெச்சூர்டான கேரக்டர். பாராட்டலாம். அமைச்சூராக கம்யூனிட்டி ரேடியோ என்று சொல்லித் திரிந்தவர் வேலை என்று கார்ப்ரேட் கம்பெனிக்கு அடிமையாகிறார். அதன் பின் பிரகாஷ் ராஜ் என்ற கசாப்புக்கடைக்கார போதிமரத்திடம் ஞானம் பெற்று வேலைக்காரர் என்று சொல்லப்படும் நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஊட்டப் போராடுகிறார்.

ஸ்னேகா நல்ல நடிகை என நீண்ட நாள் கழித்து மறுபடியும் நிரூபத்திருக்கிறார். அதிபன் மாதவ் என ஆதி என்றும் ஃபாஹத் பாசில் என்னும்  நடிகர் தனி ஒருவன் அரவிந்த் சாமியை நினைவூட்டி இருக்கிறார். மிகவும் நல்ல இயல்பான போட்டி நெகடிவ்வான கேரக்டரில் நல்ல நடிப்பு. ஒரு நல்ல நடிகர் கிடைத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

Related image

அவர் சூபர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர் பற்றி சொல்வது எல்லாம் மிகவும் அற்புதம். இதுபோன்ற தூண்டல்களுக்கு எல்லாம் அடி பணிந்து விடுவார் ஆனால் நான் இன்னும் ரிலையன்ஸ் போன்ற சேலத்து மால் களுக்கு செல்லும் போதும் எனக்குத் தேவையான வேறு எங்கும் எளிதில் கிடைக்காத டாட்டா சோடியம் சால்ட் போன்ற எனக்குத் தேவயான பொருட்களை மட்டுமே வாங்கி வருவேன் என்பது எனக்கு நானே அளித்துக் கொள்ளும் சான்று. இந்தப் படத்தின் மூலம் எனக்கு நினைவில் தோன்றியது.

நிறைய நடிகர்கள் கூட்டம். 40 கோடி ரூபாய் செலவில் எடுத்துள்ளார்கள். சவ்வரான் என்ற கம்பெனி என்ற நுகர்வோர் பொருளை மையமாக வைத்து. நயந்தாரா, இராமைய்யா , ரோகினி, சார்லி போன்றோர் அளவாக தேவையான அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அதில் ரோகினி நன்றாக செய்திருக்கிறார்

உண்மையாகவே மோகன் ராஜா என்பவர் இயக்கி எழுதி இருக்கிறார். அதை நாம் அவரை நாம் பாராட்டத்தான் வேண்டும். சுபா பாஸ்கரன் என்ற இருவருக்கும் அந்தக் கதை உண்டு பண்ணியதில் உதவியிருக்கிறார்.

நல்ல கதை அமைப்பு. நல்ல தயாரிப்பு, நல்ல திட்டமிட்ட சோடை போகாத நல்ல மக்களுக்குத் தேவையான கருத்தை வியாபார நோக்கத்திலும் கூட சொல்லி வென்றிருக்கிறார்கள்.

Related image

உலகத்தின் மாபெரும் சொல் செயல்
நல்ல வார்த்தை.

Image result for sakka podu podu raja

அடுத்து சக்கை போடு போடு இராஜா சந்தாவுக்கு ஒரு படம் அவ்வளவுதான். எதற்கு இவ்வளவு செலவு செய்து ஒரு லௌக்யா என்ற படம் அது தெலுங்கு படத்தை ரீ மேக் செய்ய வேண்டிய புதிய கதையா...எப்படியோ சன்டா ஒரு கதாநாயகனக ஆள் வேண்டுமானால் நன்றாகவே ஹீரோவாக தெரிகிறார் ஆனால் படம் ஜீரோதான். நல்ல கட்டான தேகத்தோடு கதாநாயகி நடிகை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, December 17, 2017

தலையில் ஒரு கருப்புப் பொட்டு: கவிஞர் தணிகை.

தலையில் ஒரு கருப்புப் பொட்டு: கவிஞர் தணிகை.

Related image

பரணிக்கு தன் தாய் இறந்தது பேரதிர்ச்சி. சுமார் இரண்டாண்டுகள் வெளியில் வாய் திறந்தே பேசவில்லை.கிறித்தவத்தில் சோகத்தில் தாவீது சாக்கிலான ஆடையை அணிந்திருந்தான் துக்க காலத்தில் என்பது போல எந்தவித ஆடை அலங்கார ஒப்பனைகளில் கவனமின்றி காலம் செலுத்தி வந்தான். தான் இறந்திருந்தால் கூட அவ்வளவு துன்பமாய் இருந்திருக்க வழியில்லை என்றே இருந்தது அவனுக்கு.

சாப்பிடும்போதெல்லாம் அந்த நினைவு தாக்கியது வாய் விட்டும் அழுவான்,எப்படி இந்த மரணம் இப்படி சொல்லி வைத்தபடி நிகழ்ந்தது என்றே ஆச்சரியப்பட்டான். ஏன் எனில் தந்தையின் ஆண்டு நினைவு தினத்தின் போது அடுத்த ஆண்டு இவ(ள்) இருக்க மாட்டா(ள்)  என்ற ஒரு அசரீரியா, ஆன்மாவின் குரலா ? தியான வழிகாட்டுதலாம் தமக்கு கிடைத்த வரமா அதிலிருந்து கிடைத்தது அப்படியே பலித்தது. அவள் இறந்த முன் தினத்தில் தாம் கண்ட கனவை தாயிடமே பகிர்ந்து கொண்டதும் அந்த ஆட்டுக் கிடாயை தூக்கிய மீசைக்கார கறுப்பு மனிதன் கதவைத் தள்ளி அவன் உள் நுழைய பரணி அதைத் தடுக்க முயல இந்தப் போராட்டத்தில் மீசைக்காரன் வென்று விட்டான் என்றும் சொல்கிறான். அதற்கு அம்மா அது வேறு ஒன்னுமில்லடா அக்கா வீட்டில் இன்னைக்கு மாரியம்மன் பண்டிகை, கெடா வெட்டுவாங்க இல்ல அதான்..எனச் சொல்லி முடித்தது நேற்று நடந்தது போல் அப்படியே இருக்க‌

அவள் பயன்படுத்திய கை விசிறி இன்னும் சேதமாகாமல் இருக்க..அவள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் அப்படியே இருக்க அவள் இல்லையே...தந்தைக்கும் பிறகு 20முழு ஆண்டுகள் அப்படியே நம்முடன் வாழ்ந்தாளே இன்று இல்லையே சென்று இரண்டாண்டு போயிற்றே...என்று விரக்தியில் இருந்தான். திருமணம் முடித்தபின் பரணி மனைவியும் ஓராண்டின் நிறைவில் ஒரு மகனுமாக இருக்க மணம் செய்த ஒன்பதாண்டுகள் முடிந்தவுடன் இவளும் விடை பெற்று விட்டாளே...

அவள் கடைசி ஆசை என பெயரனுக்கு ஒரு வெள்ளித் தட்டை வாங்கித்  தர ஆசைப்பட்டாளே. அதை இன்னும் நிறைவேற்றவில்லையே...அவள் கடைசியாக ஆசைப்பட்டாள் என அவள் பட்டு சேலை கட்டிக் கொண்டு வெள்ளிக்கிழமை செல்லும் மாரியம்மன் கோவிலுக்கு ஒரு பெரிய மணியை சேலம் செவ்வாய்ப் பேட்டையில் வாங்கி வந்து ஒரு பூஜை செய்து கோவிலில் கட்டி விட்டு வந்து விட்டான் குடும்ப சகிதமாக சென்று...ஆனால்  இந்த வெள்ளித் தட்டு ஆசை அப்படியே இருந்தது.

அதற்கும் ஒரு நாள் முடிவு கண்டு விடலாம் என சுமார் ஏழாயிரத்து எண்ணூறு ரூபாயும் பிய்ந்து போயிருந்த அரை ஞாண் கொடியையும்  சுமார் 3 வயதேயான  தரணியையும் கூட்டிக் கொண்டு சேலம் புறப்பட்டான் ஒரு வெள்ளித்தட்டை வாங்கிக் கொண்டு வந்து விடலாம் என.

எம்.ஆர்.பி என்ற ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டான், பாலகனையும் ஏற்றிக் கொண்டான் அவனுக்கு ஜன்னலோரம் சீட்டைக் கொடுத்து வெளியே வேடிக்கை பார்க்க அமர்த்தி விட்டு அந்த மூன்று பேர் அடங்கிய சீட்டில் அமர்ந்து கொண்டான். பேருந்தில் நல்ல கூட்டம். மேச்சேரி வந்தது. ஒரு கரும் பூதமான குண்டாக ஒரு பெண் ஒரு நடக்கும் வயதில் உள்ள ஒரு பையனுடன் வித்தியாசமாக  கையில் இடுப்பில் எடுத்து வந்தாள், இவனருகே வந்து நகர், என்றாள்.
Related image


இவனும் கம்யூனிச சிந்தனை உள்ளவன் என்பதால் எவருடன் வேண்டுமானாலும் பாவம் என அமர்ந்து கொண்டு உதவிகளும் செய்வான் எனப்தால் அது ஒரு வித்தியாசமாகத் தெரியவில்லை. அவளுக்கு நகர்ந்து இடம் கொடுத்தான். தமது வலது பக்கத்தில் உள்ள மகன் மேல் ஒரு கண்ணை வைத்திருந்தான். ஏன் எனில் அவன் துறு துறு வென சுட்டிப் பையன் என்பதால் . ஏற்கெனவே மூக்கில் சிலேட் பெனிசிலை போட்டுக் கொண்டு தூக்கி ஓடி மருத்துவமனை சென்று எடுத்த வந்த கதையும், பள்ளியில் விளையாடி ஸ்டீல் சேர் டேபுள்மேல் விழுந்து இடது கண் புருவத்தில் வெட்டப்பட்டு விழி திறந்தது போன்ற ஒரு வெட்டு நடந்து தையல் போட்டது அது சற்றுத் தவறி பட்டிருந்தாலும் கண் போயிருக்கலாம், சற்றுத் தள்ளிப் பட்டிருந்தாலும் பொறியில் பட்டு உயிருக்கே ஆபத்தாக இருந்திருக்கலாம் என்பதாலும் அவன் மேல் கவனமாக இருந்தான்.

இந்த கருமலை போன்ற பூதமான பெண் அவள் மஞ்சள் பையில் இருக்கும் காசை எடுத்து கொடுக்கச் சொன்னாள் டிக்கட் வாங்க அதையும் செய்தான். வண்டி ஓமலூர் தாண்டி  சேலம் செல்லும் வழியில் குரங்கு சாவடியில் அந்தப் பெண் இறங்கிக் கொண்டாள்.

பரணி தரணியைக் கூட்டிக் கொண்டு வெள்ளித் தட்டு வாங்கும் முன் அண்ணா பூங்கா சென்று ரோலர் வீல் ஏறி சிறுவனுக்கு வேடிக்கை காட்டினான் அதன்பின் புறப்படும்போது கைப்பையை திறந்து பார்த்தான் அரை ஞாண் கொடியும் பணம்  7,800 ரூபாயும் அந்தப் பையில் இல்லை.

உடனே வீட்டுக்குத் துணைவியிடம் பேசி பணம் பறி போயிற்று வெள்ளித் தட்டு எல்லாம் வாங்க வில்லை. வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டான்.

இதைப்பற்றி மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது அட, அதை உடனே காவல் நிலையம் சென்றிருந்தால் பிடித்திருக்கலாமே அவள் குரங்கு சாவடியில் இறங்கிய அந்தக் கருங்குண்டிதான் எடுத்திருக்கிறாள்.  அந்த பையனை சேலைக்கடியில் விட்டு கூடையில் வைத்திருந்த கைப்பையில் இருந்து பணத்தையும், அரை ஞாணையும் எடுக்க வைத்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். ஆனால் அவன் காவல் நிலையமே செல்ல வில்லை.

வீட்டுக்கு வந்த பிறகு அவனை தலைக்கு குளிக்கச் சொல்லி மனைவி அறிவுறுத்த அவன் சொட்டை விழுந்து கொண்டிருந்த அவன் தலையில் ஒரு கறுப்பு பொட்டு சுமார் ஒரு சிறு வட்டமாய் பொட்டாக வைக்கப்பட்டிருந்தது மையில். அதைத் தேய்த்து சுரண்டி எடுத்து விட்டு தலைக்கு தேய்த்து குளிக்க வைத்தாள்

பணத்தை எடுத்துக் கொண்டு பணி நிமித்தம் இலட்சக்கணக்கில் எல்லாம் பயணம் செய்து 100லிருந்து 150 கி.மீ எல்லாம் சென்று மலை வாழ் மக்களுக்கு எல்லாம் விநியோகம் செய்த காலம் , நாடெங்கும் சுற்றித் திரிந்து  சென்று பணத்துடன் புழங்கிய காலம் எல்லாம் கண்ணில் வர எனக்கா இப்படி நடந்தது என மலைத்து வந்தான்.

அதன் பின் அதே சேலத்தில் சொற்ப பணத்துடன் ஒரு ஜர்னலிஸ்ட் அடையாள அட்டையுடன் டவுண் பஸ்ஸில் பாக்கெட் அடிக்கப்பட்டதும், அதன் பின் புத்தகம் போடும் முயற்சியின்போது சேலம் பால் மார்க்கெட்டில் இறங்கி செவ்வாய்ப் பேட்டை பிரஸ் பைன்டிங் பணிகளுக்கு சென்ற போது புத்தகம் வைத்திருந்த ஏ.வீ. ஆரில் கொடுத்த லெதர் பை அடியில் பிளேடால் கிழிக்கப்பட்டு உள்ளே கையை விட்டு தேடப்பட்டிருந்ததும், அட சொல்லி இருந்தால் நானே எழுதி இருக்கும் ஒரு புத்தகத்தை கையில் கொடுத்திருப்பேனே என்றும்,

அதன் பின் அவனும் அவரது நண்பரும் பிரஸ். பைண்டிங் நபருக்கு கொடுக்க வேண்டிய சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு சத்திரம் ரெயில்வே கிராஸ் செய்து இரவு நேரத்தில் செவ்வாய்ப் பேட்டைக்கு போகாமல் பணம் பெற வேண்டியவரையே போன் செய்து வந்து வாங்கிக் கொள்ளுங்கள் நாங்கள் இங்கிருக்கிறோம் என அழைக்க அவரும் வராமல், இவர்களும் செல்லாமல் மற்றொரு நாள் கொடுத்துக் கொள்ளலாம் என திரும்பியதும் படச் சுருளாக ஓடின.
Related image


சேலம் நாலு ரோடு, செவ்வாய்ப் பேட்டை, லீ பஜார், சத்திரம் ரெயில்வே லைன் போன்ற இடங்களில் எப்போதுமே இது போன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு இதெல்லாம் காவல் துறைக்கும் தெரியும் என்ற செய்திகளும் பரிமாறப்பட்டன‌

இதே போல மளிகைக் கடை ஜீவா தமது பங்குக்கு ஒரு பணம் பறிப் போன கதையை சொன்னான். இதை எல்லாம் கண்காணிக்க எடுக்க பறிக்க எடுத்துச் செல்ல ஒரு நெட் ஒர்க் இருக்குமோ என்றெல்லாம் எண்ணினான்.

அதிலிருந்து பணத்திற்கான பை ஏதுமே எடுத்துச் செல்லக் கூடாது என்றும் முடிவுக்கு வந்தான்.

ஆனால் இந்த கருப்பு மை, சுடுகாடு, மண்டையோட்டு மை, நள்ளிரவு பூஜைகள், வசிய மை,   போன்றவை பற்றி எல்லாம் பில்லி சூனியம், மந்திரம், மாந்திரீகம் போன்றவை எல்லாம் அறிவியலுக்கு எட்டாமல் இருந்தபோதும் கேரளாவில் குட்டிச் சாத்தான், மாந்திரிகம் மந்திரம் எல்லாம் பகவதி அம்மன் எல்லாம் இப்படி அப்படி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே என்றாலும் தெளிவில்லை.

ஆனாலும் நகையை தாமாக கழட்டிக் கொடுத்த பெண்கள் எல்லாம் இருக்கிறார்கள், கொண்டு போனவற்றை எல்லாம் இழந்து விட்டு சுய நினைவே இன்றி வேறெங்கோ சென்றபடி இருப்பார் எல்லாம் உண்மையாகவே இருக்கிறார்கள்.

மனித அறிவுக்கு எட்டாத இப்படிப்பட்ட புதிர்கள் இன்னும் எழுதப் படிக்கத் தெரியாத மனிதர்களால் எழுதப் படித்த மனிதர்களிடை மேல் கூட பிரயோகம் செய்தபடி...இதன் தொடர்ச்சியாக அரசியல், தொழில், வியாபாரம் ஏன் காதலைக் கூட பிரிக்கவும் சேர்க்கவும் இந்த வசியக் கலை உதவுவதாகவும் செய்திகள் இருக்கின்றன நம்பவே முடியவில்லை என்ற போதும் அவரவர்க்கு நடந்தபோது நம்பியே ஆக வேண்டிய நிலையில் உண்மையாகவே நடந்திருப்பதால்.

ஏன் இங்கிலாந்தில் சந்திராசாமி தாட்சருக்கு செய்த கதை எல்லாம் கூட நமது சுய வரலாறில் எழுதப்பட்ட சான்றுகளை ஒரு வெளி நாட்டு தூதராயிருந்தார் எழுதி இருக்கிறாரே...



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அருவி: கவிஞர் தணிகை

அருவி: கவிஞர் தணிகை

Image result for aruvi movie


நீண்ட நாள் கழித்து குடும்பத்தின் அனைவரும் சேர்ந்திருந்து பார்க்க வேண்டிய படமாக அதிதியாக அருவி... அருவியாக அதிதி


எப்படிப் பாராட்டினாலும் தகுதியுடைய ஒரு படம் தமிழ் பட உலகுக்கு கிடைத்திருக்கிறது . ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து சமூக அக்கறையுடன் செதுக்கி உள்ளனர்.அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

ஜோக்கர் சகுனி கஷ்மோரா ஆகிய படங்களைத் தயாரித்த அதே பட நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயரிப்பில் அருண் பிரபு புருசோத்தமன் என்ற இரண்டு நபர்கள் இயக்கி வெளி வந்திருக்கும் படம். ஏற்கெனவே சீனா ஷாங்காய் பட விழாவுக்கு சென்று வந்து இங்கு டிசம்பர் 15ல் வெளி வந்துள்ளது சுமார் 130 நிமிடங்கள் வீண் போகாத படம்.

அதிதி பாலன் என்ற வழக்கறிஞரை 600 பேரிலிருந்து இதன் கதாநாயகியாக தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் இந்தப் படத்தை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். ஜோக்கருக்கு அடுத்து சமூகத்தை ஒவ்வொரு கட்டத்திலும் சாட்டையால் வெளுத்திருக்கும் பாடம்.

ஊடகம், அரசியல், சினிமா, தொலைகாட்சித் தொடர்கள், அரசு, காவல்துறை, தம் பிள்ளைகளையே நம்பாத பெற்றோர், கிராம வாழ்க்கையிலிருந்து நகர வாழ்க்கைக்கு  புலம் பெயர்தலால் கிடைக்கும் பரிசு இப்படி ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் இரசிக்கும்படியாக காட்சிக்கு காட்சி பாராட்டும்படியாக நன்றாக பார்வைக்கு வந்திருக்கும் படம். இது போன்ற படங்கள் தாம் உண்மையிலேயே சமூகத்திற்கு அவசியத் தேவை.

இதில் நடித்துள்ள நபர்கள் யாருமே பெரிய ஆட்கள் ரஜினி, கமல் எல்லாம் கிடையாது ஆனால் இதுவரை அவர்கள் எல்லாம் கூட தொடாத பிரதேசத்தை தொட்டுச் சொல்லி இருக்கும் படம் . கடைசியில் கண்ணீரை வராமல் இந்தப் படத்தை நிறைவு செய்யவே முடியாது.

வாழ்க்கையில் இறப்பு எப்போது என்ற பயம் இருக்கும்போது அனைவர்க்கும் நன்மை செய்யவே தோன்றும் அந்த பயம் இருந்தால் நாம் எவருமே தவறு செய்ய மாட்டோம் என்பதில் இரகசிய நீரோட்டமாக இழையோடவிட்டு,

எய்ட்ஸ் நோய், பற்றி எடுத்துச் சொல்லி திருநங்கை பாத்திரத்தை எல்லா திருநங்கை வர்க்கமுமே பெருமப்படும் வண்ணம் அழகுபடுத்தி அவரே எய்ட்ஸ் வந்த அருவியை அருவருக்காமல் உடன் வரும் தோழியாக கடைசி வரை நிற்கிறார் என்று காட்டி,,
Related image


ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் என்ன என்ன வெட்டி பந்தா இருக்கும் என்று தெள்ளத்தெளிவாகச் சொல்லி, அதில் காட்சியை தொகுப்பவராக நடத்துபவராக இலட்சுமி கோபால் சாமியையும் தொடர் இயக்குனராக கவிதா பாரதியையும் உதவி இயக்குனராக, அவருக்கு ஒரு உதவியாளராக இப்படி பல அடுக்குகள் கொண்ட நிலையை நன்கு விளக்கி சொல்லி இன்டஸ்ட்ரியின்ன் காலில் விழும் கலாச்சாரத்தை சாடி, அந்தக் காட்சிகள் எப்படி உள்ளிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை எல்லாம் சொல்லி...இது பற்றி கவண், மற்றும் ஊமை விழிகள் ஆரம்பித்து பல படங்களில் ஒன்றில் ஜீவா கூட நடித்திருந்தாரே அது போல பல படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் இவ்வளவு நேர்த்தியாக அவர்களை எல்லாம் விட தேர்ந்த மனிதர்கள் வெளியில் இருக்கிறார்கள் வாய்ப்பின்றி என்பதை அழகாக  அதிதி பாலன் என்னும் அருவி உணர்த்துகிறார்.

சாதரணமாக ஆனந்த யாழை மீட்டுகிறாள் என அப்பா மகள் கதை சொல்லப்போகிறார்களோ என்று நினைத்து மீள்வதற்குள் அருவி வயதுக்கு வந்து பெரியவளாகி,காதல் இல்லாமலே போய் அதன் பிறகு கதை போகிறது பயணம் உச்சத்திற்கு, உச்சி சிகரத்துக்கு, என்னதான் இருந்தாலும் பெற்ற பிள்ளைகளையெ நம்ப முடியாத பெற்றோர்க்கும் இது தரும் பாடமும்.. வாழ்க்கை எப்படி எல்லாம் திசை மாறுகிறது ஒரு மருத்துவ அலட்சியத்தால் எவரோ செய்யும் ஒரு பிழை எப்படி சமூகத்தை ஆட்டி கலக்கு கலக்குகிறது அதை நன்றாக உணரும்படி செய்திருக்கிறார்கள்.

நினைப்பதை நினைத்ததை எல்லாம் காட்சியாக்கி மிகவும் இயல்பான வாழ்க்கையை நம் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். நான் எடுத்தால் இது போன்றுதான் படம் எடுக்க வேண்டும் என ஆசைப்படுவேன். அதற்கு பதிலாக இவர்கள் தாமெடுத்து விட்டார்களே. தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்து விட்டார்கள்.

கற்பழிப்பு, கொலை, நிர்பயா போன்றவற்றையும் தொட்டு விட்டு அவர்களையும் மன்னிக்கச் ச்சொல்லி,  ஊடகம் பிரச்சனையை ஊதிப் பெருசாக்குவதற்கு மாறாக நினைக்காத கோணங்களில் எல்லாம் படம் படையெடுக்கிறது லைவ் டெலிகாஸ்ட்டில் இருவருக்கும் எய்ட்ஸ் பாஸிட்டிவ் என்று சொன்னதிலிருந்து...

அனேகமாக‌ 2017 முடியப் போகிற போக்கில் ஒரு சிறந்த படத்தை , இதுதான் இந்த ஆண்டின் சிறந்த படம் என்ற போக்கில், அதிதி பாலன் தாம் சிறந்த நடிகை என்ற கோணத்தில் ...ஏன் 2017, தமிழ் பட வரலாற்றிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் இது நிச்சயம் இடம் பெறும் என்று சொல்லலாம்.

சங்கர், மணி ரத்னம் போன்றோர் இன்னும் பிரம்மாண்டம் என்று சொல்லி மகக்ளை ஏமாற்றும் நிலை விட்டு இது போன்ற நல்ல நேர்மறையான படங்கள் நோக்கி திரும்பிப் பார்க்கலாம்...

அருமையான திரைக்கதை, கூர்மையான வசனம், நல்ல காட்சி அமைப்பு, ஆக்சன் என கவிதா பாரதி சொல்லிய மறு குரலாக ரோலிங் சார் என்ற குரல் நகைச்சுவையுடன் இப்போது கூட ரீங்காரம் செய்வதை கேட்க முடிகிறது...இந்தப் படத்தை ஒரு முறை மட்டுமல்ல இரண்டாவதும் சினிமாத்தியேட்டரில்  அமர்ந்து பார்த்து பாராட்டி அழத் தோன்றுகிறது. \

நிறைய இடங்களில் காட்சி அமைப்புகளும், வசனங்களும் மஞ்சப்பையில் செருப்பை போட்டு அடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா அது போல சமூகத்தை அதன் அவலத்தை  முட்டாள் தனத்தை அடித்து நொறுக்கி விடுகிறது...
Image result for aruvi movie


அதிதி பாலன் உருக்கி விடுகிறார். சிரிக்க வைக்கிறார் மகிழ்ச்சி அடைய வைக்கிறார் அழவும் வைக்கிறார்.  யார் சொன்னாலும் ஏன் என்று கேட்க வேண்டும் , அனைவருடனும் அன்பாய் இருக்க வேண்டும் என நீங்கள் தாம் சொன்னீர்களே அப்பா எனக் கேட்கிறாய் படத்தின் கரு இதுதான்...அருவி உயரே இருந்து கொட்டுகிறது ஆர்ப்பரிக்க சுழித்து ஓடுகிறது...

கமல் பெற்றால் தான் பிள்ளையா என்ற பண்பலைக் குரலை விட எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்தப் படம் ஒரு வரம். தமிழ் பட உலகுக்கு ஒரு நல்ல பரிசு.

வாழ்த்துகள்
வணக்கங்கள்
எ க்ரேட் சல்யூட் டு தி டீம்.

Image result for aruvi movie


நூற்றுக்கு 80 தரலாம் தாராளமாக.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
\
எப்போதுமே குடி மதுக்குடி வரும் படங்களை நான் சாடுவது வழக்கம் இதிலும் பீர், வைன் எனக் குடிப்பது போல காட்சிகள் வருகின்றன ஆனால் சாகப்போகிற நாள் நெருங்குகிற நபர் குடித்தால் கூட தவறில்லை அதை பெரிதாக விமர்சிக்க ஒன்றுமில்லை என நினைக்கிறேன். அப்படித்தான் கண்ணதாசன் தாம் ஒருவரே எல்லா மதுவையும் குடித்து மதுவிலக்கு அவசியம் நாட்டுக்குத் தேவை என்று சேவை செய்தாரோ என்னவோ? இதெல்லாம் சொல்லத் தோன்றியது..



Saturday, December 16, 2017

நம்பத்தான் முடிவதில்லை ஆனால் நடந்தது உண்மையாயிற்றே? கவிஞர் தணிகை.

நம்பத்தான் முடிவதில்லை ஆனால் நடந்தது உண்மையாயிற்றே? கவிஞர் தணிகை.

Image result for tharamangalam kailasanathar kovil

அவர் 6 அடிக்கும் மேல்4 அங்குலம் உயரமாக‌ இருக்கும் மிகவும் பலமான எரக்டான தேக அமைப்புடன் இருப்பார்  மிலிட்டரியில் இருந்து ஓய்வு பெற்றவர் விக்னேஷ்வரன் என்றாலே எல்லா ஓய்வு பெற்ற ராணுவத்தார்க்கும் தெரியும்.அது மட்டுமல்லாமல் ஊரில் அனைவர்க்கும் தெரியும். சரியான உயரம் அதற்கேற்ற பருமன். ஸ்ட்ராங்கான தேகம். அவரைப் பார்ப்பார் மற்றொரு முறை பார்க்கும் அளவு மனிதர் இருப்பார். . எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.

அவர் மிலிட்டரி  சர்வீஸ் முடிந்த கையுடன்  தமது சொந்த ஊரில் ஒரு ஹோட்டலை நடத்த ஆரம்பித்தார். அதற்கு  மல்லிகை அதுதான் அவர் துணைவியின் பெயர் ...எல்லாவகையிலும் ஹோட்டல் தொழிலில் உறுதுணையாக இருந்தார். அவரின் வளர்ப்புத் தந்தை அண்ணாமலை என்பதாலும் அந்த ஊர் தி.மு.க , அ.தி.மு.கவுக்கு பெரும் பற்றுடன் அறிஞர் அண்ணா அங்கு வந்து தங்கி சென்ற பெருமை பெற்றதாலும் அந்த ஹோட்டலுக்கு அண்ணா ஓட்டல் என்றே பேர் வைத்தார். அது இப்போது மல்லிகை மளிகை என்று காலத்தால் மாறி இருக்கிறது. ஆனால் அது என்னதான் அண்ணா ஓட்டல் என்று பேர் இருந்தாலும் மிலிட்டரிக்காரர் ஓட்டல் என்றுதாம் அந்த ஊர் மக்களிடையே பிரபலம்.

 அந்த ஊர் பெரும்பாலும் நெசவுத் தொழிலை மையமாகவே வளர்ந்து வளர்த்த ஊர். மிகவும் பிரசித்த சிவத்தலமான கைலாய நாதர் ஆலயம் அங்குதான்  உள்ளது .தாரமங்களம் என்பது அந்த ஊரின் பேர்.அங்குள்ள மக்களுக்கு காலையில் தேநீர் அருந்த வில்லை எனில் நாள் விடிந்ததாகவே இருக்காது. ஆளொன்றும் தேநீர் வீட்டுக்கு வாங்குவதற்கு சொம்பு ஒன்றுமாகவே இருப்பார்கள். ஹோட்டல் மற்றும் தேநீர்க் கடைகளில் ஆண்கள் , பெண்கள், சிறுவர் கூட்டம் நிரம்பி வழியும்.

Related image

அந்த ஊரில் உள்ள கைலாய நாதர் ஆலயம் மிகவும் பெருமை உடையது.கெட்டி முதலியார் என்ற ஒரு சிற்றரசரால் கட்டப்பட்டது. அதில் உள்ள யாழி வாயில் கல், சுழலும் கல்லாலான விதானத்தின் உச்சியில் இருக்கும் ஆகயத் தாமரை, ரதி மன்மதன் சிலை, ஆயிரம் லிங்கேஸ்வரர், மாபெரும் வரவேற்கும் கல்லால் ஆன இரண்டு யானைகள், சூரியனின் கதி தை மாதத்தில் சிவலிங்கத்தின் மேல் விழும் ஒளிக் கீற்று மூலஸ்தானம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அதல்லாமல் ஒரு எண் கோண வடிவ குளமும் அந்த ஊரின் பிரபலமான இடம்...அது மட்டுமல்லாமல் மற்றும் ஒரு காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அந்தக் காலத்தில் அனைவரும் காலைக்கடன் முடித்து விட்டு வந்து கால் அலம்பிச் செல்லும் இடமாக குளமாக இருந்த அந்தக் குளம் கூட மிகுந்த கற் சிலை வேலைப்பாடாகவே அமைந்திருந்தது.

அன்றைய சிற்பிகள் எல்லாம் எந்தக் கோவில் வேலைக்கு சென்றாலும் தாரமங்கலம், தாடிக்கொம்பு வேலை தவிர மற்ற எந்த சிறப்பான சிற்ப வேலைகளும் செய்து தரப்படும் என்ற ஒப்பந்தம் இட்டுத்தான் கோவில் திருப்பணிகளை ஆரம்பிப்பார்களாம். அப்படிப்பட்ட ஊர் ஆனால்  இங்கு நமது கதாநாயகர் பற்றி சொல்ல வந்து விட்டு ஊர் புராணம் பாட ஆரம்பித்து விட்டால் அது நல்லா இருக்காது அல்லவா?

விக்னேஸ்வர் தமது வளர்ப்புத் தந்தை கொடுத்த இடத்தை ஹோட்டல் தொழிலுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார் . மர பெஞ்ச்கள் மர டேபிள்கள்தான். ஒரு மர பீரோவும் கண்ணாடி இடப்பட்டு ஈ கொசு மொய்க்காமல் உணவுப் பொருளை வைக்க நடுவில் நிறுத்தப்பட்டு இருக்கும். டீ போடும் மேஜை முன்னால் இருக்கும் அதற்கும் பின்னால் மற்றும் இரு டேபுள்கள் அதன் மேல் காலையில் இடப்படும் வடை, தயிர் வடை போன்றவையும், பட்டானி சுண்டல் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். மலை போல சுட்டு வைத்திருப்பார்கள் மட மட வென காலி ஆகி விடும்.

அந்த பீரோவுக்கு பின் வரும் வாயில் வழியே பின்னால் வந்தால் பெரிய ஒரு உணவு தயாராகும் அடுப்படி.மாதேஸ் டீ மாஸ்டர், நாயர் சரக்கு மாஸ்டர், 4 அண்ணாமலை, பச்சையப்பன், படிமானம், இடிச்ச புளி அதல்லாமல் அப்போதெல்லாம் அரிசி , உளுந்து ஆட்ட என்ற பெரிய உரல்களில் மாவு ஆட்ட இரண்டு பெண்கள், அவர்களுக்கு உதவ கமலா என்ற சிறுமி இதுதான் இவர்கள் ஓட்டல் டீம் . அதன் பின் கொஞ்ச காலத்தில் கோவையிலிருந்து அரிசி உளுந்து ஆட்ட பெரிய இரண்டு கிரைண்டர்களை தருவித்துக் கொண்டார் . அந்த பணிக்கூடத்தை அடுத்து ஒரு ஸ்டோர் ரூம். சரக்கு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருக்கும்.அதுதான் பெரும்பாலும் அந்தக் குடும்பத்தின் படுக்கை அறையும். அவரும் அவரது மனைவி மல்லிகையும், ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண்குழந்தையும் அதுதான் அவரது குடும்பம். மற்றபடி உற்றார் ஊரார்க்கு எல்லாம் குறைவே இல்லை. அவர்களுடன் அவ்வப்போது பள்ளி விடுமுறையில் எல்லாம் மல்லிகையின் தம்பி பேரரசு வந்து அவரகளுக்கு உதவுதலும் உண்டு.

திடீர் திடீர் என டீ மாஸ்டர் வர மாட்டான், உடனே இவரே சைக்கிள் எடுத்துக் கொண்டு போய் அவன் இருககானா வருவானா வரமாட்டான என்று பார்த்துவிட்டு வந்து டீ போட ஆரம்பித்து விடுவார். அவ்வளவு பெரிய ஜெய் ஜாண்டிக்காக இருப்பார் சைக்கிளில் போவது பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவே மாட்டார். 10 மணியாகிவிடும்  கடையை 8 மணிக்கெல்லாம் மூடிவிட்டாலும் காலை 3 மணிக்கே எழுந்து பாய்லர் வைத்து நெருப்பு போட ஆரம்பித்து விடுவார். சமையலரையில் முக்கியமான வேலைகள் எல்லாம் நடக்க ஆரம்பித்து விடும். 

புதன் , வியாழன் , ஞாயிறு  ஆகிய நாட்களில் அசைவ உணவும் உண்டு. அது ரொம்ப ஃபேமஸ். காரணம் அந்த அசைவ உணவை மட்டனை  குழம்பை மல்லிகையே தமது கை வண்ணத்தில் சமைத்துக் கொடுப்பார். மதியம் 2 மணிக்கெல்லாம் 12 மணிக்கு ஆரம்பிக்கும் அசைவக் கறி விற்பனை எல்லாம் முடிந்து தீர்ந்து விடும். அதன் பின் வருவார்க்கு இலவசமாக குழம்பு மட்டும் கிடைக்கும்.

அந்த சரக்கு மாஸ்டர் நாயர் கூட திடீர் திடீர் என லீவு எடுத்துக் கொள்வார் அப்போதெல்லாம் இவரது துணைவி மல்லிகையே கமலா போன்ற பெண்களின் உதவியோடு சமைத்தும், முன்னால் உள்ள சப்ளையர், மாஸ்டர்கள் உதவியுடன் சாப்பாடு, டிபன், எல்லாம் தயார் செய்து கொடுத்து விடுவார். ஆனியன், முட்டை ரோஸ்ட், ரோஸ்ட், தோசை, இட்லி , ஆம்லெட் எல்லாமே பறக்கும் நிற்காது...

அந்த ஊரில் உயர் நிலைப்பள்ளி, அங்கு நடக்கும் என்.சி.சி. மாணவர்களுக்கான பரேட் நடக்கும்போது உணவு எல்லாமே மிலிட்டரிக்காரர் கடையிலிருந்துதான் சப்ளை. ஊரில் எந்த விஷேசம் நடந்தாலும், எந்தக்கட்சிக்காரர் வந்தாலும் முகம் கோணாமல் நன்கொடை கொடுப்பதும் வேலை செய்வார்க்கு கொடுத்து விடுவதும் இவரது நற்பண்புகள்....என்னங்க இப்படி என இவரது மனைவி தடுத்தாலும் அப்பதான் வேலை செய்ய வருவாங்க அதற்கெல்லாம் தயங்கவே கூடாது என்பார்.

எப்போதும் லீ பஜார், செவ்வாய்ப்பேட்டை எல்லாம் சென்றுதான் சரக்கு எடுத்து வருவார். ஆர்டர் கொடுத்து வந்து விட்டால் மூட்டை மூட்டையாக அப்போதெல்லாம் மாட்டு வண்டியில் வந்து இறங்கும், அதன் பின் கொஞ்ச காலத்தில் மாட்டு வண்டிப் பழக்கம் குறைந்து லாரிகள் அந்த வேலையை செய்ய ஆரம்பித்தன. அந்த மூட்டை தூக்குவார் எல்லாம் கூட இவரது கடையில் தான் சாப்பிடுவார்கள், மேலும் போர்வெல் போடுவார் வன இலாகாவினர் இப்படி எல்லாமே. அங்குதான் அக்கவுண்ட் எல்லாம் வைத்துக் கொள்வார்கள்.Image result for tharamangalam kailasanathar kovil



இப்படி சென்று கொண்டு இருக்கும் காலத்தில்  ஒரு நாள் ரூபாய் தொண்ணூறு ஆயிரத்துடன் சரக்கு எடுக்க லிங்கன் வண்டியில் சேலம் சென்றவர் மறுபடியும் வீடு, கடைக்குத் திரும்பவேயில்லை...காரணம் எவருக்கும் தெரியவுமில்லை.

நாட்களும் நேரமும் செல்வது பெரும்பாடாக இருந்தாலும் மல்லிகை கடை நடத்துவதை மட்டும் விடாமல், பள்ளிகளுக்கு பிள்ளையை அனுப்புவதும் இடைப் படாமல் தமது தம்பிகளை அழைத்து பிரச்சனையை அணுகச் சொல்ல  முதலில் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது அதன் பின் தினசரிகளில் படம் கொடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது.

ஒரு நாள் சென்னைத் தொலைக்காட்சியில் தூர்தர்ஷனில் அவரது படத்தை வெளியிட்டு காணாதார் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட அந்த நேரத்தில் எங்கோ சென்றிருந்த அவர் தாமாகவே வீடு வந்து சேர்ந்து அந்த விளம்பரத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

இடையில் ஏற்பட்டது என்ன என்பது தெரியவில்லை என்றும், அவருக்கு சுய நினைவு வந்தபோது அவர் டில்லி அருகே ரெயிலில் சென்று கொண்டிருந்ததாகவும் அதன் பின் எல்லாம் சுய நினைவு வர அங்கிருந்து மிலிட்டரிக்காரர் என்பதாலும் மொழிப்பிரச்சனை இல்லை என்பதாலும் சுலபமாக வீடு திரும்பி விட்டார் என்றும் அவர் சொன்னார். ஆனால் அவர் கொண்டு சென்ற பணம் 90 ஆயிரம் போனது போனதுதான்.

இடையில் சேலம் காவல் நிலையம், நாலு ரோடு, அன்டர் கிரவுண்ட் வோர்ல்ட் , பிக் பாக்கெட் நபர்கள் கூட்டம் அனைவரிடமும் தொடர்பு கொண்டு இவரைப்பற்றி அலசி அலசிப் பார்த்தும் இவரைப்பற்றி துப்பு ஏதுமே கிடைக்காமல் போயிருந்தது. பக்கத்தில் உள்ள பூக்கடைக்காரர்கள், சைக்கிள் கடைக்காரர்கள் எல்லாம் கூட இவரது மைத்துனர் பேரரசுவின் யமஹா பைக் ஓய்வில்லாமல் அலைந்தது பற்றி மலைத்துப் போனார்கள். ஆனால் அவரது போட்டிக் கடைக்காரர் எல்லாம் மனதுள் மகிழ்ந்தாலும் மிலிட்டரிக்காரர் பற்றி நல்ல எண்ணமே வைத்திருந்ததால் வருத்தப்படுவதாகவே காணப்பட்டார்கள்.

ஆனால் அந்தக் கட்டத்தை மிகவும் துணிச்சலுடன் சமாளித்த அவரது துணைவியார் மல்லிகையை எவருமே பாராட்ட அவர் இடம் கொடுக்கவில்லை என்றாலும் ஆண்கள் பலமிழக்கும்போது குடும்பத்தை பலத்துடன் கட்டிக் காக்க வேண்டியவர்கள் பெண்கள்தாம் என்பதை ஒரு வீரமங்கையாக தைரியத்துடன் அந்தப் பெண் கையாண்டிருக்கிறார் அந்த ஒரு ஆபத்தான கட்டத்தை.Image result for tharamangalam kailasanathar kovil



ஆனாலும் அது எப்படி நடந்தது? அவருக்கு அன்று என்ன நடந்தது என்பது எவருக்குமே தெரியவில்லை.

மறுபடியும் பூக்கும் வரை.

கவிஞர் தணிகை



Thursday, December 14, 2017

நம்பினால் நம்புங்கள்: கவிஞர் தணிகை

நம்பினா நம்புங்கள்: கவிஞர் தணிகை


ஒரு மனிதருக்கு 31 யானைகள் செலுத்திய அஞ்சலி! #FeelGoodStory

உன்னை அறிந்தால்
சில நினைவுகள் மறக்க முடியாதவை; எப்போது நினைத்தாலும் உயிர்ப்போடு இருப்பவை; இதயத்தைத் தொடுபவை’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல பிசினஸ்மேன் ஜோசப் பி வ்ரித்லின் (Joseph B. Wirthlin). அதுபோன்ற நினைவுகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும். ஒரு பெரிய பிரச்னை, ‘தலை மேல் கத்தி’ என்பார்களே... அதுபோன்ற ஆபத்து... நம்மை அதிலிருந்து காப்பாற்றுகிறார் ஒருவர். அவரை, அந்த உதவியை நம்மால் மறக்க முடியுமா? அதற்காகக் காலம் பூராவும் அவருக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருப்போம். `நன்றி செலுத்துதல்’ குணம் நமக்கு மட்டுமானதல்ல... எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும் பொதுவான ஒன்று. ஒரு பேராபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிய மனிதருக்கு நன்றி செலுத்த, யானைகள் கூட்டமாக நடந்துசென்ற கதை கொஞ்சம் நெகிழ்ச்சியானது. பார்க்கலாமா?
யானை
அது, 2012-ம் ஆண்டு. அந்த அபூர்வமான நிகழ்வு நடந்தது, தென்னாப்பிரிக்காவில்! ஒன்று, இரண்டல்ல... மொத்தம் 31 யானைகள். எல்லாம் சேர்ந்து ஒரு பயணம் நடத்தின. விஷயம் வேறு ஒன்றுமில்லை. அந்த யானைகளுக்குப் பிரியமான ஒரு மனிதர் இறந்துபோனார். அவருக்கு நன்றி செலுத்துவதாக யானைகள் எல்லாம் ஒரு பெண் யானையின் தலைமையில் ஒன்று சேர்ந்தன. சரி... அவற்றுக்கு எப்படி அவர் இறந்துபோன விவரம் தெரியும்? இதற்கு இயற்கையைக் கையைக் காட்டுவதைத் தவிர வேறு பதிலில்லை. மனிதர்களைவிட யானைகளுக்கு கூர்மையான அறிவும் புலனுணர்வும் உண்டு. தங்களையும் பல விலங்குகளையும் காப்பாற்றிய ஹீரோ அவர் என்று யானைகள் நம்பிக்கை கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கைதான், லாரன்ஸ் அந்தோணி (Lawerence Anthony) என்ற பிரியத்துக்குரிய அந்த மனிதர் இறந்துபோனதை அவற்றுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.
லாரன்ஸ் அந்தோணி, எழுத்தாளர், சூழலியலாளர், யாத்ரீகர். தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் 1950-ம் ஆண்டு பிறந்தார். அவருடைய தாத்தா காலத்தில் அவரின் குடும்பம் இங்கிலாந்திலிருந்து சுரங்க வேலையின் பொருட்டு ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்திருந்தது. லாரன்ஸ் அந்தோணியின் தந்தை இன்ஷூரன்ஸ் வேலை செய்துகொண்டிருந்தார். அந்தோணி, ஜாம்பியா, மாலாவி, ஜூலுலேண்ட்... என ஆப்பிரிக்காவின் பல ஊர்களில் வளர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவைப்போலவே இன்ஷூரன்ஸ் வேலை செய்தார். கூடவே ரியல் எஸ்டேட் பிசினஸும் செய்துகொண்டிருந்தார்.
அவர் இருந்தது அடர்ந்த காட்டுப்பகுதி. ஒருமுறை ஒன்பது யானைகள் கொண்ட குழுவை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றி, பத்திரமாகக் காட்டுக்குள் அனுப்பிவைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அது மட்டும் நடக்கவில்லையென்றால், அவை வேட்டையாடப்பட்டு, இறந்துபோயிருக்கும். அதுதான் அவர் வாழ்க்கையில் மிக முக்கியமான புள்ளி. அன்றைக்கு யானைகளை காட்டுக்குள் போகச் சொல்ல, தன் உடல்மொழியையும் குரலையும் பயன்படுத்தினார். அந்த அனுபவத்தை மையமாக வைத்துத்தான் பின்னாளில் `எலிஃபென்ட் விஸ்பரர்’ (Elephant Whisperer) என்ற நூலாக எழுதினார். அது விற்பனையில் சக்கைபோடுபோட்ட `பெஸ்ட் செல்லர்’ புத்தகம்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யானைகளுக்கு, மனிதர்களால் எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்க ஆரம்பித்தார். பல யானைகளையும், விலங்குகளையும் காப்பாற்றினார். யானைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்தார். அவற்றில் முக்கியமான ஒரு சம்பவமும் உண்டு. 2003-ம் ஆண்டு அமெரிக்கா, ஈராக்மீது படையெடுத்தபோது, பாக்தாத் நகரில் இருந்த ஜூ-வில் இருந்த விலங்குகளைக் காப்பாற்ற ஓடினார். அந்த ஜூ, மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே மிகப் பெரியது. அங்கே சுமார் 700 விலங்குகள் இருந்தன. அமெரிக்கா குண்டு வீசியதில், 35 மட்டுமே உயிர்பிழைத்திருந்தன. கூண்டுகளில் தண்ணீரும் உணவும் இல்லாமல் கிடந்த அந்த விலங்குகளில் சிங்கம், புலி, கரடி போன்றவையும் அடக்கம். அமெரிக்க எதிர்ப்பையும் மீறி, தைரியமாக அவற்றைக் காப்பாற்றினார். 2012, மார்ச் மாதம் லாரன்ஸ் அந்தோணி இறந்துபோனார்.
லாரன்ஸ் அந்தோணி
காட்டில் இரண்டு குழுக்களாக அந்த யானைகள் பிரிந்திருந்தன. தாங்கள் நேசித்த, தங்களை நேசித்த ஒரு மனிதரின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவை அமைதியாக, அந்த மனிதரின் வீடு நோக்கி நடந்தன. தென்னாப்பிரிக்காவில் இருந்த லாரன்ஸ் அந்தோணியின் வீட்டுக்கு அவை 12 மைல் தூரம் நடந்தே சென்றன. வழியில் எந்த மனிதரையும் அவை கவனிக்கவில்லை. மனிதர்கள்தான் இவற்றைக் கவனித்தார்கள். கூட்டமாக, துளிச் சத்தமில்லாமல் இவை எங்கே போகின்றன என்று ஆச்சர்யப்பட்டார்கள்; சிலர் பின்தொடர்ந்தார்கள்.
31 யானைகளும் வரிசையாக, ஒரே சீராக நடந்தன. தங்கள் நண்பருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்கிற ஒரே எண்ணம் மட்டும்தான் அவற்றுக்கு இருந்திருக்க வேண்டும். அந்தோணியின் வீட்டை அடைந்ததும், அமைதியாகச் சுற்றி நின்றுகொண்டன. அந்த யானைகள் வீட்டை ஏதாவது செய்துவிடுமோ, தங்களைத் தாக்கிவிடுமோ என்று அங்கிருந்த சிலர் பயந்தார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. இரண்டு பகல், இரண்டு இரவுப் பொழுதுகள்... அந்த யானைகள் துளி புல்லைக்கூடச் சாப்பிடாமல் அங்கேயே இருந்தன. பிறகு, மிக அமைதியாக தங்கள் காடு நோக்கித் திரும்பிச் சென்றன.
அவை போன பிறகு, அந்தோணியின் மனைவி, ஃபிரான்கோய்ஸ் மால்பி (Francoilse Malby) சொன்னார்... “இதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு எந்த யானையும் வந்ததில்லை. இதுங்களுக்கு எங்க வீடு எப்படித் தெரியும்னு ஆச்சர்யமா இருக்கு.”



இன்றைய சேதி:

ராதா கிருஷ்ணன் நகர்

ஜனநாயக கேலிக்கூத்து இந்த ஆர்.கே நகர் தேர்தல். தேர்தலை நிறுங்க, அல்லது இப்படிப் பட்ட ஜனநாயகத்துக்கு மாறாக மாற்று வழி என்ன என யோசியுங்க, செயல்படுத்த...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Wednesday, December 13, 2017

இராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் தடை நோக்கியா? கவிஞர் தணிகை

இராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் தடை நோக்கியா? கவிஞர் தணிகை



Image result for rajanayagam loyola college
லயோலாவின்  இராஜநாயகம் தினகரன் வெல்வார் என்றும் 33.5 சதம் வாக்கு அவருக்கு என்றும் அடுத்து தி.மு.க வேட்பாளர் இரண்டாம் இடத்திலும், அ.இ.அ.தி.மு.கவின் மதுசூதனன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்போவதாகவும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

கருத்து கணிப்பில் 91.6 சதம் மக்கள் தினகரனின் குக்கர் சின்னத்தை அடையாளம் கண்டதாகவும் மற்ற கட்சிகளின் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டது சுமார் சற்றேறக் குறைய 80 சதமாகவே இருந்தது என்கிறது.

இதனிடையே ஆளும் எடப்பாடி அணியினர் குறைகளை சொல்ல ஒரு புதிய ஏற்பாடாக தொலைபேசி எண்ணையும், ஒரு வெப்சைட்டையும் ஆர்கேநகர் என்ற பேரில் ஏற்படுத்தி உள்ளனர்.

அது மட்டுமல்லாமல் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு இருபது இலட்சம் வாரிக் கொடுப்பதும், இராஜஸ்தானில் கொல்லப்பட்ட எ.ஸ்.ஐக்கு கோடிக்கணக்கில் நிவாரணமும், மீனவர் குடும்பத்துக்கு வீட்டுக்கொருவர்க்கு அரசுப் பணி என்றும் வாரி வழங்குவது ஆர். கே நகர் தேர்தல் பயத்தாலா? என்பது அறிய முடியவில்லை ஆனால் ஊகித்தறிய முடிகிறது. தெரிய முடிகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பு தவறாக இருந்து தி.மு.கவே கூட வெற்றி வாகை சூடலாம் என்றாலும் அப்போதும் எடப்பாடி அரசுக்கு அது அதிர்வேட்டுதான்.

பேசாமல் யாருக்கும் இன்றி இந்த முறையும் பணம் பட்டுவடாவை கண்காணிக்க முடியவில்லை என எக்கச் சக்கமாக புழங்குவதைக் காரணம் காட்டி தேர்தலை நிறுத்தி வீடுவது எடப்பாடி அணியினர்க்கும், பாரதிய ஜந்தா கட்சியினர்க்கும் நல்ல முடிவாயிருக்கும்.

ஆனால் எப்போதும் போல தி.மு.க தலையை தொங்கப்போட்டுக் கொண்டே போக வேண்டியதுதான். ஆனால் எல்லாக் கட்சியினருமே வாக்குக்கு பெரும்பணத்தை வாரி இறைத்து வருகின்றனர் என்பது அனைவர்க்கும் தெரியும் தேர்தல் ஆணையத்துக்கே தெரியும். இதை எல்லாம் சொல்லப்போனால் நம்மை ஆதாரம் கொண்டு வா என்று சொன்னாலும் சொல்வார்கள்...

Related image

இதுவரை எந்தக் கட்சியும், எந்த நபரும் என்னிடம் வந்து எந்தத் தேர்தலுக்குமே பணமோ பொருளோ கொடுத்ததே இல்லை....ஏன் எனில் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் எங்கு கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் , எப்போது கொடுக்க வேண்டும் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதெல்லாம்...

எனவே இப்போதும் அப்படித்தான் நடக்கிறது. இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ள நிலையில் தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கும்...அதற்குள் தேர்தல் நிறுத்தச் செய்தியை எதிர்பார்க்கலாமா? அதற்குள் ஆளும் கட்சி நிலையை மாற்றி விட்டாலும் விடும் அதையும் சொல்வதற்கில்லை. எதையும்ம் சொல்வதற்கில்லை. ...அதனால்தாம் அரசியல் பற்றி எல்லாம் இப்போது யாம் எழுத தலைப்படுவதேயில்லை . அங்கே மோடீ மாடி என...இங்கே அம்மா சும்மா எனவும் எல்லா காலமும் மலையேறியே ஆக வேண்டும்.

அதற்காக இராஜநாயகம் லயோலா கல்லூரி டீம் தந்த செய்தி அப்படியே நடந்து விடும் என்றெல்லாம் சொல்வதற்குமில்லை..


இந்நிலையில் வாக்களிக்கும் எந்திரம் வைத்து தேர்தல் நடத்தினால் ஆளும் கட்சியே வெல்கிறது. பழையபடி பேல்லட் பேப்பர் முறை வரவேண்டும் என்றும் கருத்துகள் நிலவுவதையும் நாம் கவனிக்க வேண்டும்..


மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

Tuesday, December 12, 2017

ஆண்டு தோறும் மேட்டூரில் கார்த்திகைத் திருவிழா: கவிஞர் தணிகை

ஆண்டு தோறும் மேட்டூரில் கார்த்திகைத் திருவிழா: கவிஞர் தணிகை
Related image



பாஹு பலியைப் போல, கோமதீஸ்வரர் போல இரண்டும் ஒன்றுதானே? அது போல அண்ணாமலை திப்பு சுல்தான் கரட்டின் உச்சியில் நின்று எரிந்து கொண்டே நின்ற தினமான கார்த்திகைத் தீபத்தன்று ஆண்டுக்கு ஆண்டு தவறாமல் இலட்சக்கணக்கான கூட்டம் சென்று விளக்கேற்றி வழிபடுகிறது.

நினைத்த வேண்டுதல் அப்படியே அடுத்த ஆண்டுக்குள் நிறைவேறிவிடுவதாக திருமணமான ஆண்களும் பெண்களும் மகிழ்ந்து குலாவி இந்த செய்தியை பரப்பி வருகிறார்கள். கட்சிக்காரர்களும் பணக்காரர்களும் அங்கே ஒரு மண்டபம் எழுப்பத் திட்டமிட்டு மாபெரும் ஒரு மண்டபத்தை எழுப்பியும் விட்டார்கள். அதில் தங்கள் பெயர்களை விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். இதில் என்ன ஒரு வேடிக்கை எனில் அண்ணாமலை நன்கொடை கேட்டபோது இல்லை என மறுத்தவர்கள் எல்லாம் கூட அவனை கடவுளாக நினைத்து பேர்களை இணைத்துப் போட்டுக் கொண்டார்கள் அவன் சேவைக்கு இவர்கள் அடிமையாகி. இலவச‌ நீர் மோர், தண்ணீர்ப் பந்தல்கள், அன்ன தானக் கூடங்கள், குளிர்பான விற்பனைகள் என ஆண்டுக்கு ஆண்டு கடைகள் போட ஆரம்பித்து விட்டனர். மினி அண்ணாமலையாக சில ஆண்டுகளில் எழுந்த அது திருவண்ணாமலையின் கூட்டத்தை ஒரு நாள் மிஞ்சும் எனப் பேசிக்கொண்டார்கள்.

திருவண்ணாமலையில் கிரி வலம் போய் வருவது போல இங்கு அணையைச் சுற்றி ஒரு வலம் வந்து வேண்டுகோளை வைத்து இந்த அண்ணாமலை மறைந்து எரிந்த பாறையருகே வந்து பெரிதும் பிரார்த்தனை செய்தார்கள் ...அவர்களுக்கு இங்கு கேட்டதெல்லாம் கிடைத்தது என புகழ் பரவ ஆரம்பிக்க மாநில முதல்வர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட தனிப்பட்ட பயணம் வந்து செல்ல ஆரம்பித்தனர். இதை அரசு சார் விழாவாக மாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை என இதற்காக அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்திய மேட்டூர் தொகுதி உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும், மந்திரிகளும் கட்டியம் கூறினார்கள்.


Related image

ஆனால் இது ஆரம்பித்த கதை என்ன வென்றால் அண்ணாமலை எரிந்து நின்றுபோன மறு ஆண்டில் அவரது நண்பர்கள் கார்த்தி, பார்த்தி, பாரதி போன்ற விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே அங்கு வந்து ஒரு தீப்பந்தத்தை ஏற்றி விட்டு இரவு முழுதும் அங்கேயே தங்கி இருந்து அது என்ன காற்றடித்தாலும் அணையாமல் நிறைய எண்ணெய் விட்டு திகு திகு என எரிய பார்த்தபடி அந்த நாளை நினைத்தபடி அன்றைய இரவு முழுதும் அங்கேயே கழித்தனர்.

மறு ஆண்டில் ஒரு அண்டாவை எடுத்து வந்து அதில் நெய்விட்டு சீலைத் துணியை நினைத்து பற்ற வைக்க ஆரம்பித்தார்கள்...இவர்கள் ஏற்றிய தீபம் மேட்டூரைச் சுற்றி சுமார் 35 கி.மீ தெரிவதாக பேச்சுகள் பரவி பல மாவட்டஙக்ளில் இருந்தும் மக்கள் கூட ஆரம்பித்தனர், திருவண்ணாமலைக்கு அவ்வளவு தூரம் செல்ல முடியாதார் எல்லாம் இங்கு வர ஆரம்பித்துவிட்டு அதை விட இதே நன்றாக இருக்கிறது. கேட்டதெல்லாம் நிறைவேறுகிறது என வாய் ஓயாமல் பேசிக் கொண்டார்கள்.

Related image

அவர்களின் உறவு, நட்பு என வட்டம் மிகவும் குறைந்த காலத்தில் விரிவடைந்தது

அடுத்த வருடம் இந்தத் திருவிழா நடக்கும்போது வந்து பாருங்கள். உங்களுக்கும் தேனும் தினைமாவும் தவறாமல் கிடைக்கும். இந்த விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவர்க்கும் திருவிழாக்குழு தேனும் தினைமாவையும் தவறாமல் கொடுக்க ஏற்பாட்டை விரிவாக விரிவாக்கி ஆண்டுக்கு ஆண்டு செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நிறைய காடு தோட்டம் எல்லாம் வாங்கி தினையரிசி மட்டுமே பயிரிட்டு வருகிறது. தேன் மட்டும் இதற்கு கொல்லிம்லையிலிருந்து தவறாமல் வந்து சேர்ந்து கொள்கிறாது. பக்கத்திலேயே காவிரி நதி தீரம் இருப்பதால் இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு ஓடம், பரிசல் போக்குவரத்தும் பௌர்ணமி இரவு முழுதும் நிற்காமல் நடக்கிறது.

Image result for mettur karthigai deepam


கேரளாவுக்கு அய்யப்பான் , திருவனந்தபுரம், ஆந்திராவுக்கு திருப்பதி போல தமிழகத்துக்கு பழனியோ, திருவண்ணாமலையோ திருவரங்கமோ அல்லாமல் மேட்டூர் கார்த்திகை எல்லாவற்றையும் மிஞ்சத்தான் போகிறது...

அட நீங்களும் தாம் வந்து கலந்து கொண்டு வேண்டித்தான் பாருங்களேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, December 10, 2017

சத்யாவும் ரிச்சியும்: கவிஞர் தணிகை.

சத்யாவும் ரிச்சியும்: கவிஞர் தணிகை.

Image result for sathya movie


மஹேஸ்வரி சத்யராஜ் தயாரிப்பில் தமது மகனுக்காக தயாரித்தளித்திருக்கும் படம். நல்ல முயற்சிதான். நல்ல கதைதான் ஆனால் இவ்வளவு நேரம் பொறுமையாக அமர்ந்து பார்க்க முடியுமா என பிற்பகுதியில் தோன்றுகிறது.

ஒரு குழந்தை காணாமல் போய்விடுகிறது அது பற்றிய எந்த தடயங்களுமே இல்லை. முன்னால் காதலனை காதலி தற்போது இன்னொருவன் மனைவியானவர் அழைத்து தம் குழந்தையை தேடப் பணிக்கிறாள்.

தேடும்போது அவளுக்கு குழந்தையே இல்லை என்கிறார்கள் அனைவரும். காவல் துறை உட்பட. அவளுக்கு கோமா நிலைக்கு விபத்தின் காரணமாக சென்றது முதல் நினைவு இல்லை. மனநிலை சரி இல்லை என்கிறார் அவர் கணவரே. அக்கம் பக்கத்தில் உள்ளாரையும் அவர் வேண்டி அப்படியே சொல்ல வைக்கிறார்.

ரெம்யா வா ரம்யா நம்பீசனா அவருக்கு நல்ல வாய்ப்பு நன்றாக செய்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் போலீஸ் ஆபிசர். போலீஸ் ஆபிசராக இருந்தால் வாயைத் திறந்து கூட பேசமாட்டார்களா என்ன? இன்னும் நன்றாக செய்திருக்கும் வாய்ப்பை கோட்டை விட்டிருக்கிறார். அருமையான வில்லி வேடம். சொதப்பி விட்டார்.

ஆனந்த் ராஜ் நீண்ட நாளுக்கும் பின் கல கலக்க வைக்கிறார் அளவான நேரம்ம் தமக்கு கொடுக்கப்பட்டிருந்தும் கூட.

சதீஷ் பாபு கானாக வந்து பாதி வில்லனாகி மீத கதாநாயகனுக்கு துணையாகி இறந்தும் தமக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவேற்றி இருக்கிறார். நிழல்கள் ரவியும் வழக்கமான  அப்பா ரோல்.

சிபிராஜ் ஒரே தாடி மீசை அதே கெட் அப். ஆனால் நன்றாக நடித்திருக்கிறார். இவருக்கு தந்தை நல்ல படங்களைக் கொடுத்து நிலை நிறுத்த முயல்கிறார். நல்ல முயற்சிதான். ஆனால் இன்னும் அதிக முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முன் வந்த நாய் தோழனாயிருக்கும் படம் இதை விட இவருக்கு நன்கு பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்தது அந்தப்படம் ஆனாலும் இந்தப்படத்தை பார்க்கலாம்.

ரிச்சி:
Image result for richi.


வேறு ஆளே தமிழில் இல்லை நிவின் பாலி என்னும் பிரேமம் படத்தில் நடித்த  மலையாள நடிகர். ஒரே மாதிரியான முகமும் தோற்றமும். கிறிஸ்மஸ் வருகிறதை நினைவூட்ட. இந்தப் படம் கடற்கரை மீனவ சமுதாயம் சர்ச் பாதர். என்று வலம் வருகிறது.

சிறுவர்களாக இருக்கும்போது ஒரு சிறுவனை மற்றொரு சிறுவன் குத்தி விட்டு தப்பி விடுகிறான். இந்த சகாயம் என்னும் ரிச்சி மாட்டிக்கொள்கிறான். அதிலிருந்து தந்தை பாதார் பிரகாஷ் ராஜ் இவனை தம் மகனாக சொல்வதில்லை. ஆனால் இவன் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தண்டனை முடிந்து வந்து அந்தக் கிராமத்தின் மீனவர்களை அடக்கி ஆளும் ஒருவருக்கு தலைமை அடியாளாக வேலை பார்த்து அனைவர்க்கும் அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறான் தமது முரட்டுக் குணத்தால் அடிதடியால் கொலை  போன்ற வன்முறைகளால்...

இவனது நண்பன் செய்த குற்றத்திற்கு இவன் அனுபவிக்கும் தண்டனையை மனதில் வைத்துக் கொண்டு அனைவரையும் தண்டிக்கிறான். கடைசியில் அப்படிஓடிய நண்பனையும் கொன்று, தாமும் செத்து இப்படி போகிறது படம்.

ஆனால் அதற்குள் பட ஆரம்பத்தில் இமாலய பில்ட் அப்... அப்படி இப்படி என பத்திரிகை வெளியீடு, உலகையே உலுக்கப் போவதாக..உலைகையே அழிக்கப்போவதாக உலகையே திரும்பிப் பார்க்க வைக்கப் போவதாக, பிரமிக்க வைக்கப் போவதாக எல்லாம் புஸ்....

தேவையில்லாத தோரணங்கள் ...ரிச்சி சாதாரண ஒரு சினிமாத் திரைக்குச்சி. ஒரு பூச்சி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

கொடிவீரனா முடி வீரனா? சசிக்குமாரும் அசோக்குமாரும்: கவிஞர் தணிகை

கொடிவீரனா முடி வீரனா?
சசிக்குமாரும் அசோக்குமாரும்: கவிஞர் தணிகை

Related image


படம் வெளியீடான அன்றே இணையத்தில் வெளி வந்துவிட்டது இந்தப் படம்.
எடுத்த உடனே ஒரு பெண் புளியமரத்தில் தூக்குப் போட்டுக்கொள்ள அவளிடமிருந்த குழந்தை கீழே பிறந்து வீழ்கிறது.

ஒரு பெண் மொட்டை அடித்துக் கொள்கிறாள் அண்ணன் பழி வாங்க வேண்டி சூளுரைக்கிறாள்..அதுதான் பூர்ணா கேரக்டர்.

பழிக்குப் பழி இரத்தத்துக்கு இரத்தம்...சசிகுமார் அதே தாரை தப்பட்டை மூஞ்சி. அதே முடிவீரனாக சாரி கொடி வீர்னாக...இவர் யாருன்னு நினைச்சீங்க என்ற உடன் அடுத்தநாள் சாமியாடியாக வருகிறார்.

பசுபதிக்கு ஒரு வில்லன் சமமாக சசிக்குமாருக்கு இணையாக.

இந்த இயக்குனரின் கொம்பன் தேறி விட்ட படம். ஆனால் இந்த சசிக்குமார் தயாரிப்பில் அசோக்குமா நிதிப் பிரச்சனையில் மாட்டி உயிரை விடக் காரணமாக இருந்த படம். சசிக்குமார் மாபெரும் ஆளாக மதிக்கப்பட வேண்டும் என்ற  சினிமா கிளாமருக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்.

படம் படுதோல்வி. இவர் எல்லாம் தாமெடுத்த படத்தை முதலில் தாம் பார்த்துவிட்டுத்தான் வெளியுலகுக்கு கொண்டு வருகிறாரா என்பது தெரியவில்லை.

வன்முறையும், கொடுமையும் எல்லையில்லாமல் காட்டிவிட்டு அதற்கு பழிவாங்குவது போல கதாநாயகர்கள் நடிப்பதை எத்தனை முறைதான் பார்ப்பது சசிக்குமாரிடம்...கிடாவும் இப்படித்தான்...

மஹிமா நம்பியார், விதார்த்,சனுசா, பால சரவணன், பூர்ணா என்ற ஒரு பட்டாளமே இருந்து கடன் பண்ணி அசோக்குமார் பைனான்சியரை டிஸ்ட்ரிப்யூட்டரை தற்கொலைக்கு கொண்டு சென்றிருக்கும் படம்.

அசோக்குமாரை சொந்த மாமன் மச்சானாக இருந்தும் ஏன் இந்த ஹீரோ சசிக்குமாரால் காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான கேள்வி.

அண்ணன் தம்பி அண்ணன் தங்கை சென்டிமென்ட் எதிரும் புதிருமாக‌ படம் எல்லாம் அதுதான்.

அந்தக் காலத்தில் எந்தப் படமானாலும் எதிர்மறையான கருத்துகளை பக்குவமாக சொல்வார்கள் காட்சிகளை துக்கத்திலிருந்து ஆரம்பிக்கவே மாட்டார்கள். இந்தப்படத்தில் எல்லாம் பொணம், ஒரே பொணம், ஒப்பாரி அழுகை , என அசோக்குமாரை கொள்ளை கொண்டு போனது போல..

சுபம் என கடைசியிலும், முதலில் சுபமான காட்சிகளுடன் மட்டுமே ஆரம்பிப்பார்கள் இதில் எல்லாமே இறப்பு அதன் எல்லைக்கப்பால் சென்றுவிட்டது.

எம்.ஜி.ஆர் படங்கள் வென்றதும், அவர் நாட்டை ஆண்டதற்கும் கூட இந்த நேர்மறைக் காட்சி அமைப்புகளே காரணம்.

சிவாஜி என்னதான் நடிப்புலக மேதையான போதும் தோற்றது எதிரான சோகமயமான காட்சிகளைக் கொண்டதுதான்.

அதே போல ரஜினிக்கடுத்து கமலை சொல்வதும் கூட இதன் அடிப்படையில்தாம்

மக்கள் இருக்கும் பிரச்சனையை மறுபடியும் திரையிலும் பார்க்க சகிக்காமல் அதில் கொஞ்ச நேரம் கவலை மறந்து கலகலப்பாக இருப்பதற்குமே நகைச்சுவை காட்சி எல்லாம் வைப்பார்கள்...அப்படி எல்லாம் இதில் ஏதும் இல்லாதது பெரும் குறை.

இந்தப் படத்தை கணக்கு காண்பிக்க பெரும் செலவு எனக் காட்டி எடுத்திருக்கலாம் ஆனால் இப்படி கடன் வாங்கி உயிரை விட்டு எல்லாம் எடுக்க அவசியமே இல்லை. அதை நீங்கள் பார்க்க வேண்டிய  அளவு இதில் எதுவுமே இல்லை.

தம்மை திரையுலகில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும், தாமும் ஒரு ஹீரோதாம் என்றும் புகழ் ஆசையில் சறுக்கி விழுந்தார் நிறைய பேர் அதில் சசிக்குமார் பேரும் இப்படியே போனால் நிச்சயம் இடம்பெறும்.

மன்சூர் அலிகான் படத்தை ஆரம்பித்த கதை எல்லாம் அனைவரும் அறிவர்.அதே போல மிக நீண்ட டைட்டில் வைப்பதாகவும் அவர் பெருமப்பட்டுக் கொண்டார். ஆனால் அவர் எல்லாம் எங்கிருக்கிறார் என்பதை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். புகழ் ஒரு போதை புதைகுழி.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

சுடர் விட்டு நின்றெரியும் விளக்கானாய்:= கவிஞர் தணிகை.

சுடர் விட்டு நின்றெரியும் விளக்கானாய்:= கவிஞர் தணிகை.

Image result for andhra pradesh cold in winter early morning


எழில் வேந்தனுக்கு அது 23 வயது . ஆந்திரப் பிரதேசம்  அப்போது தெலுங்கானாவாகவும் ஆந்திராவாகவும் பிரியவில்லை. 1985 ஜனவரிக் குளிர் காலை 4 அல்லது 5 மணிக்குள் நிலவொளியில் பெரும் பெரும் பானைகளில் இருக்கும் ஜில்லென்ற நீரை எடுத்து குளிக்க வேண்டும். சுறு சுறுப்பு உதடு பல் எல்லாம் உதற காலிலிருந்து தலைவரை பரவும்.

அதன் பின் தியான வகுப்பு, அங்கு தான் ஓம் பூர்புவஸ்ஸுவ‍ஹ் தத்ஸ விதுர் வ்ரேண்யம் பர்ஹோ தேவஸ்ய தீமஹு த்யோயந  ப்ரஸோயாதாயாத் என்ற பாடல் சொல்ல வருவது காயத்ரி ஜெபம் என்றும், ஓம் ஸகனாவவது ஸகனோபுனத்து சகவீரியம் கருவாவஹே.. என்ற பாடல்களையும் பொருள் தெரிந்து சொல்லக் கற்றுக் கொண்டான்.  ஆனால் சந்திரசேகரேந்திரர்  சங்கராச்சாரியார்தான் தமிழை நீச மொழி என்றதால் சமஸ்கிருதம் மட்டுமே கடவுளுக்குத் தெரிந்த மொழியாக ஒருபோதும் விளங்கமுடியும் என்பதை எப்போதுமே அவன் ஏற்றுக் கொண்டதே இல்லை.

முதலில் கம்யூனிச மேடைகளில் முழங்கித் திரிந்து இரவு நள்ளிரவில் எல்லாம் எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருந்த அவனுக்கு அது எட்டிக்காயாகவே தெரிந்தது.

கம்பயூனிசமும் காந்தியிசமும் ஒன்னுதான் என அங்கு அவனுக்கு ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார் எல்லாமே எல்லா மனிதர்களுக்கு நன்மை செய்யத்தானே சொன்னது. அதில் மேல் இருக்கும் சிலர்தானே எல்லாவற்றையும் எல்லாருக்கும் செல்வதை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றுதானே இரண்டும் சொல்கிறது ஆனால் ஒன்றில் அஹிம்சை மற்றொன்றில் நீ எந்த ஆய்தம் ஏந்த வேண்டுமென்பதை உன் எதிரிதான் தீர்மானிக்கிறான் என்றது.

இந்த சமஸ்கிரத ஸ்லோகங்களை எல்லாம் மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற பஜனை எல்லாம் வேண்டாம் என்று இருந்தான் . எதுவானாலும் பொருள் தெரிந்து மற்றவர்க்கும் தெரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தான். பொருள் தெரியாமல் ஒரு பாடலை பாடவே கூடாது.  ஒரு நாள் இங்கு கடவுள் மறுப்பு சிந்தனையாளர் யாரெல்லாம் என சபையில் கேள்வி எழுப்பப் பட்டபோது இவன் ஒருவன் மட்டுமே எழுந்து நின்றான் அந்த எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டிருந்த 150 பேரில்.

அவர்கள் மேற்கொண்டு வேறு ஏதும் கேட்கவில்லை. வகுப்புகள் சுமார் ஒன்னரை மாத காலம் அப்படியே சென்றது . நிலவொளிக்குளியல், தியான வகுப்பு, முடிந்ததும் எளிய உணவு நிலக்கடலை எல்லாம் போடப்பட்ட தாழித்த உணவு...மதியம் முழுச் சாப்பாடு, இரவு சில ரொட்டிகள் அல்லது சாப்பாடு எளிய உணவு. அரிஜன சமையல்காரர்கள் மூலம் செய்தது. சுவை எல்லாம் எதிர்பார்க்க முடியாது, சுகாதாரம் கூட சற்று குறைவாகவே இருப்பதுதான் ...அது அப்படி இப்படித்தான் இருக்கும்.

Related image

காலையும் மதியமும் வகுப்புகள் நடந்தன பல்வேறு நாட்டு முன்னேற்றம், கிராமிய முன்னேற்றம் பற்றி. பல்கலைக் கழக கோல்டு மெடல் வாங்கிய நபர்களிலிருந்து நிறைய பிரிவு பாடங்களைத் தேர்ந்து படித்தார் எல்லாம் அங்கே குழுமியிருந்தனர். பயிற்சிக்காகவும் பணிக்காகவும்.

எழில் வேந்தனுக்கு இரண்டாண்டு தேசிய அளவிலான பயிற்சி, இவனை போல 15 பேர்தாம் மாநிலத்துக்கு ஒருவராக. மற்றவர் யாவரும் ஒன்னரை மாதத்தில் பயிற்சி முடித்து சுமார் 20 கிராமங்களுக்கும் மேல் சென்று கிளஸ்டர் டெவலப்மென்ட் ஆபிசர் என்ற பணிப் பொறுப்பை ஏற்றாகவேண்டும்.

அதில் ஒரு மதுரைக்கார சௌராஸ்ட்ரா நண்பன் தமிழ் பேசியவன் கிடைத்தான் அவன் பேர் கணேஷ் சந்திரா. சரியாக கண் தெரியாது. கண்ணாடியைக் கழட்டி விட்டால். நல்ல மொத்தமான ப்ரேம் மற்றும் கண்ணாடி. அவன் முதுகலை பட்டம் பெற்றிருந்தான்.

அவன் ஒன்னரை மாதப் பயிற்சி முடித்து ஜங்காரெட்டி கூடம் என்ற பகுதிக்கு அலுவலராக நியமிக்கப்பட்டான். அந்தப் பகுதி யாவும் ஒன்று காடு அல்லது காட்டைச் சார்ந்த பகுதி, அல்லது மலை அல்லது மலை சார்ந்த பகுதி அல்லது சமவெளியாய் இருந்தால் அது ஹரிஜனப் பிரிவினர் அன்று அது அவர்கள் பேர் அதுதான் இன்று தலித் என்று சொல்லப்படுகிறார்கள்.அங்கே கூட்டத்தில் ஹரிஜன் கிரிஜன மஹிலா மண்டலாரா என்றெல்லாம் பேசுவார்கள்... அங்கே நக்ஸலைட்கள் எல்லாம் கூட பாடலைப் பாடிக்கொண்டு வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.

பயிற்சியின் போது ஆங்காங்கே களப்பயிற்சிக்கு செல்லும்போதே உணவு தயாராகும் வரை அங்குள்ள புதர் அல்லது காலி இடங்களில் கற்ற பயிற்சியை பயன்படுத்திப் பார்க்கலாம் என எழில் அமர்ந்து பார்த்து வந்தான்.அப்போது எல்லாம் நீண்ட நேரம் நாள் முழுதும் நடக்க வேண்டும் காடுகளிடை செல்லும் அடவிப் பகுதிகளில். மிகவும் தள்ளித் தள்ளித்தான் கிராமங்கள் இருக்கும் அதுவும் மரத்தில் மூங்கிலால் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும்.  எங்காவது சென்று தங்கும் இடத்தில் உணவு தயாரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

Related image

அப்படி செல்லும்போது உடன் அழைத்து வரும் ஆர்கனைசர் எனப்ப்படும்  அமைப்பாளர்கள் அவர்கள் விருப்பப்படி எல்லாம் செய்து வந்தார்கள். கொடுத்திருந்த பணத்தை என்ன செய்தார்கள் எப்படி செய்தார்கள் என்றே தெரியாது ஆனால் அந்தக் கிராமத்தாரின் வீடுகளில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். அது எந்நிலையிலிருந்தாலும் உண்ண வேண்டும். அப்படித்தான் குடல் புண் வந்திருக்கும். மாங்கா வடுவும் மிளகாய் சாரமும் அடங்கிய சாரத்தில் அரிசிச் சோற்றை கலந்து உண்ண வேண்டும். அது மிகவும் ருசியாக இருக்கும்.ஏன் எனில் நாளெல்லாம் பசியுடன் இருந்தால் எதுவுமே தின்னக் கிடைத்தால் ருசிக்கத்தானே செய்யும்.

கொர்ரய்யா என்ற அமைப்பாளர் ஒரு முறை கொர் கொர் என தூங்கிக் கொண்டே, எழில் வேந்தனுக்கு ஒரு கோரைப்பாய் கூட கொடுக்க விடாமல் கீழே படுக்க வைத்தான் கொஞ்சம் நகர்ந்து படுத்திருந்தாலும் கோழிகளின் எச்சம் தலை முழுதும் பூசிக் கொள்ள வேண்டியதுதான், கோழிகளுடன் உறக்கம்.அப்படி அங்கே அனுபவம் எல்லாம் கிடைத்ததால் தான் இவனுக்கு இவனேத் திட்ட அலுவலராகத் திட்டத்தை துவங்க ஆரம்பிக்கும்போது கிராம மக்கள் நம்பாமல் கொடுத்த ஆட்டுக் கொட்டிலும் மாட்டுக் கொட்டிலும் மலைக்கிராமங்களில் இவனுக்கு இரவு தங்க இடமானபோதும் அதைப்பற்றி எல்லாம் துளியும் கவலை ஏற்படவே இல்லை. வசதியாகவேத் தெரிந்தது.

இதை எல்லாம் விட ஒரிஸ்ஸாவின் மல்க்கங்கிரி, காளி மேளா கோராபுட் மாவட்டம் செல்லும்போது சாலையின் ஓரம் எல்லாம் படுத்துறங்கி ஓய்வெடுத்து அடுத்த பேருந்து வரும் வரை தூங்கவும் அதில் எல்லாம் ஒன்றும் இல்லை எல்லாம் நாடோடி வாழ்வில் சகஜமாகிப் போனது.

பாலமலை கழிப்பறைகளை சுத்தம் செய்து மக்களைப் பயன்படுத்த பழக்கப்படுத்திய கதையை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தேர்வு நிலையில் இதைப் பற்றி எல்லாம் சொல்லும்போது பாஸ்கரராஜ் என்னும் தொலைக்காட்சி காட்சி இயக்குனர் அது ஏழரை சனியாக காலம் இருந்திருக்கும். இதை எல்லாம் சொல்லுங்கள் நமது பெண்கள் அதை எல்லாம் பெரிதாக‌ எண்ணாமல் அவரவர் வீட்டுக்கு கழிப்பறையைக் கழுவ கூப்பிட்டுவிடுவார்கள் என்றார். அவரே அவனது புத்தகம் ஒன்றைப் படித்து விட்டு தமது வாழ்விலும் அதைப் பயன்படுத்த வேண்டும் இவை எல்லாம் உண்மைதானா என பாலியல் விழிப்புணர்வு நூலை ஒன்றைப் படித்து விட்டு பயன்படுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இப்படி எல்லாம் அவனுக்கு கிடைத்த அனுபவமே பிற்காலத்தில் எவ்வளவு விடியலில் 4 மணிக்கே எழுந்தாலும் அவனுக்கு அதெல்லாம் பயிற்சி கொடுத்த பாடமாகவே இருந்தது பயன்பட்டது.

இதையெல்லாம் விட பயிற்சியின் போது கற்ற தியான வகுப்பு பற்றி எல்லாம் தொடர்பை விட்டு விடலாம் என இருக்கும்போது ஒரு நாள் ஜங்காரெட்டி கூடம் சென்றான் அவனது நண்பர் கணேஷ் சந்திராவைக் காண. கதவைத் தட்டி காத்திருந்தான், கணேஷ் சந்திரா கதவைத் திறக்க அங்கே ஒரு வேட்டி விரிப்பு கிடந்தது, என்னடா கணேஷ் என்ன செய்றே,? தியானம்...

ஆக இவன் எல்லாம் செய்யும் போது நாம் எல்லாம் செய்ய முடியாதா என்ற உந்தல் ஏற்பட அந்த 1985 ஜனவரியில் ஏற்பட்ட வழக்கத்தை வாழ்வில் மனதை எரிக்க தியானத்தையும், அதற்கு முன்பே கைக்கொண்டிருந்த உடலுக்கான நடைப்பயிற்சியையும் வாழ்க்கையில் பின்னிப் பிணைய ஒன்றிணைய எடுத்துக்கொண்டு 33 வருடங்களாக பயணம் சென்று கொண்டே இருக்கிறான் சுடர் விட்டு நின்றெரியும் விளக்காக... பத்தாயிரம் மணி நேரம் ஈடுபட்டிருந்தால் எந்த செயலுமே அது அப்படி செய்தாரை மேதையாக்கி அவருக்கு புகழ் சேர்க்குமாம் அந்த அறிவியல் உண்மையை தாமும் மேடையெங்கும் சொல்வதும் பிறர்க்கும் சொல்வதும் வழக்கமான அவனுக்கு அப்போது அவை பற்றி ஏதும் தெரியாது...ஆனால் இப்போது கணக்கிட்டிருந்தால் அவை சுமார் 12000 மணி கூட வந்திருக்கும்...

Image result for andhra pradesh cold in winter early morning

ஆனால் அதற்குள் அவன் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்கள் தாம் எத்தகையது? எப்படிப்பட்ட மாந்தர்கள் எல்லாம் அவனது வாழ்வுடன்? 20க்கும் மேற்பட்டோர் அவனிடமிருந்து அந்தப் பயிற்சியை கற்றுக் கொண்டார்களாக உலகெங்கும் பிரிந்து கிடந்து பயணம் செய்து கொண்டிருக்க...

தியானத்துக்கும் முன், தியானத்துக்கும் பின் என இரண்டு வாழ்வு இருக்கிறது என அவனுக்கு தெரிந்ததை அனைவர்க்கும் சொன்னான். ஆனாலும் யாவர்க்கும் நன்மை செய்தே தீரும் மார்க்கம் காணும் முயற்சியும் அவனை விட்டு சென்ற பாடில்லை. அது ஒரு தாகம். இது ஒரு வேகம் கட்டுப்படுத்தும் முயற்சி.

இவனுக்கு இப்போது கடவுள் இருப்பு பற்றி எல்லாம் கேள்வி எல்லாம் இல்லை அது தேவையுமில்லை. எங்கும் இருப்பான் ஏகாந்த மூர்த்தி என இந்து எல்லாவற்றிலும் கடவுளைப் பார்ப்பதாயிருக்கும் சிந்தனையும், அடுத்தவரை உன்னைப் போல் நேசி என்னும் கிறித்தவ சிந்தனையும், அல்லா கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது என்னும் முகமதிய சிந்தனையும், ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு என்னும் புத்தம், ஆற்றல் மாறாக் கோட்பாடான : ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது அது ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித்தோன்றும் என்ற அறிவியல் பார்வையுடன் இணைந்திருக்கிறது என்ற புரிதலுடன், வள்ளலாரின் வாடிய பயிரைக் கண்டபோதெலாம் மனம் மிக வாடினேன் என்ற காருண்யத்துடன், மஹாவீரர் காட்டிய பிற உயிர்க்கெலாம் தீங்கு செய்யா துன்புறுத்தல் இலா வாழ்வு பற்றிய ஜைன மதம் பற்றியும் இப்படி உலகுக்கு உவந்த எவைபற்றியுமே பெரிய மாறுபாடு இருப்பதாகவோ அல்லது எந்த ஒன்றில் மட்டுமே மிகவும் முழுமையடைந்த நிலை உள்ளதாகவோ எண்ணுகிற நிலை எல்லாம் போய் விட...

ஒரு வீட்டில் மொட்டை அடித்து குழந்தைக்கு காது குத்தும் நிகழ்வும், அடுத்த வீட்டிலேயே சவமாய் ஒரு மரணம் சடலம் எடுக்கும் நிகழ்வையும் ஒரு சேர பார்த்தபடியான ஞானம்... சித்தர் வழிப்பாடலாய் இறங்கியபடியே இருக்க...

எல்லா மனிதருமே வயது முதிர்ந்து மூப்படைந்து தாமாக உதிரும் வெள்ளரிப்பழமாகவே இருக்க வேண்டும் என்பதுவே அவனது விருப்பமும் பிரார்த்தனையாகவும் இருக்கிறது... ஆனால் அவை எல்லாம் சாத்தியமா"

உயிர் வழங்கும் மந்திரம் என்பது : ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருஹ மிவபந்தனாத் ம்ருத்யுர் முச்ய மாம்ருதாத்...என்பது என்ன வெனில் எந்த ஒரு விபத்திலும், இடி,மின்னல், போன்ற இயற்கை அல்லது செயற்கை விபத்திலும் உயிர் போகாமல் ஒரு வெள்ளரிக் கொடியிலிருந்து பழுத்த வெள்ளரிப்பழமானது இயல்பாக உதிர்ந்து நிற்குமோ அது போல இயல்பாக போகவேண்டும் அதற்கு சிவபெருமானே அதற்கு நீ அருள் புரிய வேண்டும் என்பது அந்தப் பாடலின் பொருள்...ஆனால் அந்த சிவ பெருமானுக்கு பதிலாக எந்த இறைச் சக்தி அல்லது இயற்கைச் சக்தியின் பேரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். அதுபோலவே காயத்ரி ஜெபம் என்பதும் கூட பிரபஞ்சத்தைப் படைத்த பரம்பொருளான உங்களை தியானிக்கிறேன் என் உள்ளத்திலிருந்து என்னை ஒளிரச் செய்வீராக என்பதுதான்...

நிதமும் பத்மாசனத்தில் குதம் குய்யம் இரண்டிடையே இடது குதி காலை வைத்து அமர்ந்தபடி இருந்து சின் முத்திரை இட்டு  நெற்றிப் பொட்டில் நினைவை நிறுத்தி இமையும் விழி விளம்புகளும்  அசையாமல் கண்கள் பாதி திறந்த நிலையில்  மூக்கின் நுனியைப் பார்த்தபடி அமர்ந்து

சுடர் விட்டு நின்று எரியும் விளக்காக இருக்கிறான்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.