Sunday, September 12, 2021

பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள்: கவிஞர் தணிகை

 பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள்: கவிஞர் தணிகை



நாகப் பாம்பு செய்தி எனக்கே வியப்பூட்டுவதாக இருந்தது ஆனால் உண்மை பொய் அல்ல‌

மின் கசிவின் காரணமாக மழை நீரில் இறந்ததும்,

துணி காயவைக்கச் சென்ற குடும்பத்தில் இருவர் இறந்ததும்

ஒருவர் தூக்கி விசிறப்பட்டதும் செய்திகள்


மேலும் சாலையில் ஒருவரை அடித்தே கொன்றதும் காணொளிக் காட்சி வடிவிலான ஊடகச் செய்தி


மதம், மொழி, இனம், பேதம் இருக்கும் வரை

எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஒர் விலை என்பது சாத்தியமில்லை


நீங்கள் யார் ?

மனிதர் என்ற நிலையில்

எல்லா உயிர்க்கும் நன்மை செய்த போதுதான் அது நிறைவுக்கு வரும்

இராமலிங்க வள்ளலாரும் பாரதியும் பார்த்த பார்வை ஞானம்


எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...தாயுமானவர்



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை