Wednesday, December 7, 2022

தணிகைச் சித்தரின் பொன்மொழிகள்: 1.

 தணிகைச் சித்தரின் பொன்மொழிகள்: 1.



1. மனிதம் கடவுள்/ (இயற்கை) தந்த வாய்ப்பு


2. துள்ளிக் குதிக்குது மனம் அமைதி அடைய வைப்பாய் தினம்...தியானம்


3. கடவுளின் மொழி மௌனம்


4. அமைதி வேறு மௌனம் வேறு தியானம் வேறு/(வேர்)


5. உள் இருப்பதைக் காணா(து) உலகு


6. உருவம் அற்றாரே உருவில் உள்ளாரே!


7. நல்லது அல்லது (இரு) முரண்


8. ஒவ்வொரு உயிருமே அதிசயம்தான்.


9. வாழ்வின் கடைசித் துளியும் பொதுநலத்துக்காய் இருக்கட்டும்


10. எல்லாமே உடனே நடக்காது.


 


Friday, November 25, 2022

பொய்யா மொழி பொய்த்ததுவோ? கவிஞர் தணிகை

 பொய்யா மொழி பொய்த்ததுவோ? கவிஞர் தணிகை



 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் 

கல்லார் அறிவிலா தார்


இது போல புலால் மறுத்தல், சூது, கள்ளுண்ணாமை போன்ற குறள்கள் எல்லாம் காலத்தால் பின் தள்ளப் பட்டு விட்டதோ என்ற தற்காலம்...


இது போல முழுத் திருக்குறளையும் அலசிப் பார்த்தால் இன்னும் கூட சில பல‌ குறள்கள் கூட இருக்கலாம்.


பெரும்பாலான மதுப் பிரியர்களோடு நாமும் சேர்ந்து கொள்ள முடியுமா? உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்னும் குறள் படி 100க்கு 99 பேர் புலால் உண்ணுவாராக இருக்கும் போது அப்படியே நாமும் ஆக முடியுமா?


உண்ணுவது செரிமானம் ஆன பிறகு  திரும்ப உண்டால் உடலுக்கு பிணி இல்லை அதற்கு மருந்து தேவையில்லை என்ற குறளை இந்த உலகு பின் தள்ளி விட்டது என்றே சொல்ல முடியும் வண்ணம் எல்லா உணவுமே இரசாயனக் கலவையுடன் இருப்பதுவும், நோய் இல்லா மனிதரோ உயிரோ இந்த உலகில் இருப்பது தற்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம்...எனவே...


கருத்துகள் வரவேற்கப்படுகின்றன‌


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Thursday, November 24, 2022

புரூஸ் லீ மரணம் குறித்த‌ உண்மை 50 ஆண்டுகள் ஆன பின் வெளி வந்துள்ளது: கவிஞர் தணிகை

 

புரூஸ் லீ மரணம் குறித்த‌ உண்மை 50 ஆண்டுகள் ஆன பின் வெளி வந்துள்ளது: கவிஞர் தணிகை

1973ல் மரணம் அடைந்த புரூஸ் லீயின் சாவு குறித்த பல் வேறுபட்ட செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தன. அத்தனைக்கும் முற்றுப் புள்ளி வைத்தாற் போல இன்று ஒரு செய்தி வந்து அவருடைய மரணம் இயல்பானதுதான், அவருடைய சிறு நீரக காயம், அதனால் ஏற்பட்ட விளைவு காரணமாக அவருடைய மூளை வீக்கம் சுமார் 175 கிராம்(க‌டுமையான பெருமூளை வீக்கத்தால் 1,400 கிராம் எடை இருக்க வேண்டிய மூளை 1,575 கிராம் எடைக்கு இருந்தது.)

மேலும் அதிக தாக்கம் ஏற்படுத்தும் கஞ்சா, மதுபானப் பழக்கங்கள் அவரிடம் இருந்தன என்றும் புரூஸ் லீ மூளை வீக்கத்தால் ஏற்பட்ட ஹைபோநெட்ரீமியாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இறந்த நாளில் கூட அவ‌ருடைய உடலில் கஞ்சா உபயோகத்திற்கான சான்றுகள் இருந்திருக்கின்றன.வயிற்றில் கஞ்சாவின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

புரூஸ் லீயின் மரணம் எக்வாஜெசிக் மாத்திரைக்கு அதிக உணர்திறன் கொண்டிருந்ததால் ஏற்பட்ட பெருமூளை வீக்கம் தான் காரணம் என்று அதிகாரபூர்வமாகத் தீர்மானிக்கப்பட்டது.சான்றுகள் இருந்திருக்கின்றன. ஆக ஒரு மரணத்திற்கான் உரிய காரணம் வெளி வந்து இருக்கிறது. கடைசி நாளில் அவர் டப்பிங் பணியில் இருந்த போது அவரால் சரியாக நிற்கவும் முடியவில்லை என்றும் அவர் அதிக நீர் குடிக்க வேண்டிய நிலை பற்றி அவரது மனைவி குறிப்பிட்டதாகவும் உள்ளன.

தண்ணீரை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்கு மேற்குறிப்பிட்ட காரணங்கள் போக, “லீயின் மனைவி லிண்டா, அவருடைய அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுமுறை குறித்தும் கூறியுள்ளார்.

அவர் உயிரிழந்த நாளிலும் போல்லி, அவர் அதிகளவு தண்ணீர் அருந்தியதைப் பற்றி பேசினார்,” என்று குறிப்பிடும் இந்த ஆய்வுக்கட்டுரையில், புரூஸ் லீ மூளை வீக்கத்தால் ஏற்பட்ட ஹைபோநெட்ரீமியாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக அரை நூற்றாண்டுக்கும் பின் உண்மை வெளி வந்திருக்கிறது. உண்மை வர பல காலம் தேவைப்படுகிறது.பொய்களும் வதந்திகளும் அரை நொடியில் உலகை வலம் வந்து விடுகின்றன என்பது எவ்வளவு பெரிய உண்மை.

பாரதியிடமும் கஞ்சா பழக்கம் இருந்ததாக சொல்லப் படுகிறது. விவேகானந்தா கூட புகைப் பழக்கத்தில் இருந்ததாக புத்தகங்கள் சொல்கின்றன.

நமது சுபாஷ் சந்திர போஷ் மறைவு பற்றியும் உண்மை என்றாவது ஒரு நாள் வெளிவரும். ஆனால் அது நமது காலத்துக்குள் வருமா என்பதுதான் கேள்விக்குறியே..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


பி.கு: ஆனால் புரூஸ் லீயின் மகன் பிராண்டன் லீ டம்மி தோட்டாக்களுக்கு பதிலாக திரைப்படத் தயாரிப்பரங்கிலேயே உண்மையான தோட்டாக்கள் போடப் பட்டு சுடப்பட்டு இறந்தது உலகறிந்தது.
thanks:BBC





Tuesday, November 22, 2022

தமிழக அரசே தமிழக அரசே பேருந்து நடத்துனர்களும் மனிதர்கள்தாம்: கவிஞர் தணிகை

 தமிழக அரசே தமிழக அரசே பேருந்து நடத்துனர்களும் மனிதர்கள்தாம்: கவிஞர் தணிகை



மிகவும் சுருக்கமாக:

வழித் தடம் எண்: 37 மேட்டூரிலிருந்து தாரமங்களம் சென்றேன் 21.11.22  மதியம் சுமார் 3 மணி ஓட்டத்தில். பிரச்சனை ஏதுமில்லை. உடனே தாரமங்களத்தில் இருந்து சுமார் 4 மணிக்கு மேட்டூருக்கு எடுத்து விடுகிறார்கள். எனவே என்னால் சில நிமிடங்களில் திரும்ப முடியவில்லை திரும்பி விடலாம் என்று எண்ணிய போதும்.


அன்று அதற்கு முன்பு வரவேண்டிய மதியம் சுமார்.2.50க்கு வரவேண்டிய இலட்சுமி விலாஸ் என்ற தனியார் வண்டி இல்லாததால் அதன் தொடர்ச்சி பெரிதும் எதிரொலித்தது.


மறுபடியும் சுமார் 5.45 அல்லது 6 மணிக்குள் 32 பேருந்து  தாரமங்களத்தில் இருந்து மேட்டூர் திரும்பி வர.

பள்ளிப் பிள்ளைகள் கூட்டம் சுமார் 3 அல்லது 4 பேருந்துகளுக்குள் அடைக்கும் வண்ணம்...எப்படியோ நானும் ஏறி விட்டேன். ஏன் எனில் அதை விட்டால் அடுத்த அந்த தடம் வழியாகப் பேருந்துக்கு சுமார் 7 மணிக்குத் தானாம்.


எனக்கு ஒரு பள்ளிப் பையன் அவனது பள்ளிப் பையை எடுத்துக் கொண்டு எனது வேண்டுகோளுக்கு செவி சாய்த்து இடம் அளித்தான் சன்னலோர இருக்கை அருகே ஒரு பணிக்கு சென்று வந்த பெண். நல்ல வேளை அந்தளவாவது படிக்கும் பிள்ளைகளின் மனதில் ஈரம் இருப்பது பற்றி மெச்சலாம். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் எனில் எனது சொந்தப் பிரச்சனைக்கான பதிவு இது இல்லை என்பதை தெளிவு படுத்தவே...


கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம் எல்லாம் அதிக பட்சம் பெண்பிள்ளைகள் தாம். பையன்கள் கூட்டமும் எண்ணிக்கையும் ஒப்பிட்டால் மிகவும் குறைவுதான்.


மாரிமுத்து என்னும் பையன் எனக்கு இருக்கை அளித்தவன் தாம்...டயர் வெடிக்கப் போவுது, வண்டி கவிழப் போவுது என அபசகுணமாகப் பேசிக் கொண்டிருந்தான்...அங்கிருந்த சில பெண்களும் ஏன் நானும் கூட அப்படி எல்லாம் பேசக் கூடாது என எச்சரித்தபடியே வந்தோம். அதையும் ஒரு பள்ளி பயிலும் சிறு பெண் இரசித்தபடி முகமெல்லாம் பூரிக்க இருந்தாள் அவளுக்கு காதலுக்கு மரியாதை 35 துண்டுகள் என்னும் செய்தி இன்னும் தெரியவில்லை போலும்... சிறு வயது இளம் பருவக் கோளாறு வேறு நிறைய கண்ணில் பட்டது. ஒரு பையன் இன்னொரு பெண்ணை அருகே வந்து நில் என்று கேட்டுக் கொள்ள அந்த பெண்ணும் அதைச் செய்தாள்...


வண்டி ஊர்ந்தது...சாய்ந்தபடியே...சாய்ந்து கொண்டபடி வருகிறது என்றாள் ஒரு பெண்ணும். பாரக்கல்லூர் என்னும் பேருந்து நிறுத்தம் தாரமங்களத்திலிருந்து கூப்பிடு தொலைவு அல்லது ஓரு கிலோமீட்டரும் இருக்காது என்றே கருதுகிறேன். அதற்கும் பேருந்து என பள்ளிப் பிள்ளைகள் காத்திருந்து ஏறி வருகிறார்கள். ஏதாவது ஆபத்து நேர்ந்தால் என்ன ஆவது எதுவும் எவர் கையிலும் இல்லையே....


நான் கல்லூரி பணிக்கு செல்லும் போது கவனித்திருக்கிறேன் காவேரி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து இடம் இருக்க இருந்தாலும் கல்லூரி இளைஞர்கள் ஏற மாட்டார்கள், அதுவே தனியார் பேருந்து என்ன கூட்டமிருந்தாலும் அதில் தாம் ஏறி வருகிறார்கள்...பெற்றோர்களே பிள்ளை வளர்ப்பில் நிறைய கவனம் தேவைப்படுகிறது எச்சரிக்கையாக இருங்கள்...


ஏனோ நாங்களும் பள்ளி சென்ற போது தினமும் 4 கி.மீ நடந்து சென்று படித்தது நினைவு வர, நடத்துனரும் நாங்கள் கூட பல மைல் தொலைவு நடந்து சென்றுதாம் படித்து வந்தோம் சார் என்றார்.


இது போன்ற இக்கட்டான தருணங்களில் மற்றும் ஒரு மாற்றுப் பேருந்துக்கு அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

ஆனால் நடத்துனர் என்ன சொன்னாலும் எங்கள் மேலிட நிர்வாகிகள் கண்டு கொள்வதில்லை சார், எப்படி சார் நாங்களும் நடந்து கொள்வது என்று என்னிடம் கூற, எனக்கு எழுத மட்டும் தான் தெரியும் முயற்சி செய்கிறேன் சார் என்று எழுதுகிறேன்...


அவரால் முன் பின் எங்கும் வந்து ஆளுமை செய்ய வழி இல்லை...சுமார் 10 கி.மீ வரும் வரைதான் இந்த தள்ளாட்டம் அதாவது பைப்பூர், குள்ளானூர் வரும் வரை. அதன் பின் நங்கவள்ளி நெருங்குகையில் பேருந்து பாதி காலியாக இருக்கும் சூழ்நிலை.


ஆவன செய்யுங்கள் அரசுப் பேருந்து நிர்வாகிகள்...

பேருந்து நடத்துனர்களும் மனிதர்கள்தாம்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

*பெண்களுக்கு இலவசம் என்று சொன்னாலும் சொன்னீர்கள் நகர்புற கிராமப் புற பேருந்து யாவிலும் பெண்கள் கூட்டமே அலை மோதுகிறது.



Sunday, November 20, 2022

எண்ணூறு கோடியில் ஒருவன்: கவிஞர் தணிகை

 எண்ணூறு கோடியில் ஒருவன்: கவிஞர் தணிகை



லேட் பட் லேட்டஸ்ட் என்றால் அது பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்த எண்ணூறு கோடியைத் தொட்ட குழந்தைதான்.


எமது குடும்பத்தில் அடியேன் கூட எட்டாவது குழந்தைதான்.புதியதாகத் தோன்றிக் கொண்டிருக்கும் அணுக்கள் எண்ணிக்கையில் குறைபடுவதும் உரு சிதை மாற்றமும், வளர் சிதை மாற்றமும் வளர்தலில் தளர்தலும் நிகழும் மனிதம் என்பது இயற்கையின் கொடை, பரிசு, பதிப்பு, வாய்ப்பு.


18.11.22 வ.உ.சியின் நினைவு நாள் மட்டுமல்ல எனது தந்தையின் நினைவு நாளும் கூட. அன்று பெற்றவர்களை ஒட்டு சேர்த்து வணக்கம் செலுத்திய நாள். அன்று மட்டுமா? என்றுமே எப்போதுமே நாம் அவர்தம் பிரதிதானே?மனிதச் சங்கிலி நீள்கிறது விவேகானந்தா சொல்லியது போல மனித அலை ஒன்றின் தொடர்ச்சியாய் மற்றொன்று தொடரும்...


என்னுள் இருக்கும் அணுக்களும் வெடித்துச் சிதறும் முன்னே ஒரு பதிவவசியம். தாயிடம் இருந்து வந்த பிண்டமும் தந்தை கொடுத்த விந்தணுவும் வளர்கிறது உருப் பெருகிறது. பாரதி சொல்லி இருப்பது போல ...


நான் என்றோர் தனிப் பொருள் இல்லை

நானெனும் எண்ணமே வெறும் பொய்.


என்னுள் இருக்கும் பெற்றோர், உற்றார், உறவுகள்,சகோதர சகோதரிகள், வாழ்க்கைத் துணை, நட்பு ஊர்கள் இப்படி எல்லாவற்றின் கலவையும் சேர்ந்தே இருக்கிறது பிறப்பால் விளைந்த இரத்தம் சதை அணுக்களுக்கும் அப்பாற்பட்டு அல்லது உள்ளடங்கியும் குறிப்பிட்டுச் சிலரை சொல்ல வேண்டுமெனில் வேலாயுதம் , மாதவன் , மல்லிகா, மணியம், குகன்,பிரவீன்,இரத்தினவேல்,ஒரே தங்கை இப்படி என்னுயிருக்கு உறுதுணையாக இருந்து பிரிந்து போகாமல் இன்னும் இருக்கும்படி அந்த அந்த காலக் கட்டத்தில் முக்கியமாகத் தெரிந்து அதன் பின் தொலை தூர இடைவெளியுடன் இருந்த இருக்கும் நிறைய முகங்கள் இருக்கின்றன...


எவற்றை நான் விடுவது? எவற்றை எல்லாம் நான் எப்படிக் குறிப்பிடுவது...நினைவோட்டம் உங்கள் நேரத்தை வீணாக்கும் எனவே விட்டு விடுகிறேன்.


இந்தியா மக்கள் தொகையில் இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை விஞ்சும்...இந்தியாவும் சீனாவும் சேர்ந்தால் எண்ணூறு கோடியில் முன்னூறு கோடிக்கும் மேலாகிவிடுகிறது. இந்த மனிதத்தில் தான் எத்தனை இனம், இரகம், நிறம், மாறுதல்களுடன்...


செயலே புகழ் பரப்பும்... வாய் அல்ல...


தாயைப் போல நிறத்தில் இருக்கும் எனை கிறித்தவன், முகமதியன், தலித், இப்படி நிறைய காலக் கட்டங்களில் கலகக் கட்டங்களில் நிறைய பேர் சொன்னதும் உண்டு நினைத்ததும் உண்டு.ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நீ யார் என்ற கேள்விக்கு மனிதன் என்றே இருக்க வேண்டும் என்பார் அது போல...நான்.


இந்திய இனம், ஆப்பிரிக்க இனம், இப்படிப் பார்க்கப் போனால் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, அமெரிக்காவில் இருக்கும் இனம் யாவற்றின் பிறப்பிடம் பெரும்பாலாக பொதுவாகப் பார்க்கப் போனால் இங்கிலாந்து. அதன்றி மீதி இருக்கும் எல்லா இனத்தின் கூட்டுத் தொகையைக் கணக்கிட்டால் அது மிகவும் குறைவே.


கறுப்பு நிறத் தோலை இன்னும் மனிதம் மகத்துவமாக எளிதில் நினைக்க மறுக்கிறது. மகாத்மா கூட ஒரு கறுப்பர்தாம். எனினும் விதிவிலக்குகளும் அடர்த்தியான அங்கீகாரமும் கவர்ச்சித் தோற்றத்திற்கு இன்னும் சிவப்பு, வெள்ளைத் தோலை நம்பிக் கொண்டிருக்கின்றன.35 துண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நல்ல நிறக் காதலியை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பார்க்கிற நிலையில் மனித இனம் இழிந்து போகும் நிலையில் தோற்றத்தில் ஒன்றும் இல்லை செயலில் யாவும் இருக்கிறது என்ற அறிதல் புரிதல் தெரிதல் தெளிதல் பட்டறிவு கூட இல்லாதார் மனிதர்.


மேலை நாடுகளில் இன்னும் கழிப்பிட ஊன் தூய்மை உடல் தூய்மை பாலின இணைதல் தூய்மை, ஏன் திருமூலர் சொல்லியபடி ஊனுடம்பு , உன்னுடம்பு ஆலயம் எனும் நினைப்பு வர வழியே இல்லாதிருக்கிறார்கள்...மேலும் கள்ளப் புலனைந்தும் காணா மணிவிளக்கு, காளா மணி விளக்கு என்பதறியாத படியே மனிதம் பிறந்து மறைந்து வருகிற நிலையில் இராமலிங்கர் போன்ற ஞானிகள் சிலரே திருமூலர் போன்ற சில அரியரே உடல் எப்படிப் பட்டது என்ற உண்மையை உலகுக்களிக்கின்றனர்.


சொல்லப் போனால் தமிழர் என்ற ஒரு இனத்திற்கே அறிவு சார்ந்த தொன்மை சிறப்புகள் நிறைய உண்டு.

எனைப் பார்த்து பழகியவரில் ஒருவர் நான் பள்ளியில் ஒரு முறை பழைய ஆடையை உடுத்த வேண்டிய நிலை வந்தது என்ற உண்மையைக் குறிப்பிட்டதால் பழைய ஆடையை என்றுமே உடுத்துபவன் என்று தப்புக் கணக்கு போட்டு கேட்டதுண்டு... கல்லூரியில் பணி புரிந்த காலத்தில் எனது ஆடைகள் தரட்டுமா என்று? நான் அந்த ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நாளில் ஏழைகளுக்கு புத்தாடை குளிர் நீக்க வழங்கி உயர்ந்த நிலையிலும்....நாம் பேசும் பலவற்றை செய்யும் பலவற்றை வாய்ப்பாக சிலர் மறந்து விடுகிறார்கள்.அறிவாளிகளா? அறிவிலிகளா?


பிறப்பால் இயல்பாக அமைந்த சகோதரிகளையும்,அவர் தம் நிறத்தையும்( தந்தை வழி பெண்கள் எங்கள் வீட்டின் வண்ணங்கள்) அவர்தம் பொருள் பலத்தையும் காண்பித்தால் மட்டுமே ஓ! இவரும் உயர்ந்த மேனிலையாளர்தாம் பூவோடு சேர்ந்த‌ நாரும் மணக்கும் என்ற புரிதலே சுருக்கமாக சில மனிதர்க்கு வருகிறது போலும்...ஆனால் அந்தக் காலக் கட்டங்கள் எல்லாம் விரைவாக ஓடி மறைந்தன அவை குறிப்பது அவர்க்கு இருக்கும் குறுகிய மனம் பற்றியதே, அறிவின் சுருக்கம் பற்றியதே அன்றி எமை அவை யாவும் பாதிக்காது... விரிவாக அவை பற்றி சொல்ல ஏதுமில்லை...


பூக்களுக்கு விலையுண்டு நார்களுக்கும் வேர்களுக்கும் மதிப்பு இல்லை அவையே  மருந்தாகும் என்ற நிலையை தெரியும் ஞானம் வரும் வரை...


18.11.2022 அன்று துணைவியின் செல்பேசி சீராகி விட்டதா என கடையில் விசாரித்தேன்... அங்கிருந்த கடை சார்ந்த ஒரு பெண் எனக்கு அறிமுகம் இல்லார், நீங்கள் தாமே அந்த சுவர் வாசகம் எல்லாம் எழுதுவது , முட்டைக்காரர் கம்பெனியில் பணிபுரிந்து இப்போது மின்வாரியத்தில் பணி புரியும் வனிதா அக்கா உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறார்... அந்த கபாலீஸ்வரர் கோவில் உருவாக்கத்திற்கே நீங்கள் தாம் முக்கிய காரணம் என்றும் சொல்லி இருக்கிறார், தொப்பியும், கண்ணாடியும் அணிந்திருப்பார் என்றார், நான் நீங்கள் நடைப்பயிற்சி செல்லும் போது தினமும் ஒரு முறையாவது எங்காவது பார்க்கும் வாய்ப்பு இருக்கும் எனவே கேட்கிறேன் என்றார்.


மேலும் கடையின் உரிமையாளர் பெண்: எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததற்கே இவர் தாம் காரணம் இவர் எழுதிய புத்தகமே எங்களுக்கு வழிகாட்டி. நிறைய புத்தகம் எல்லாம் எழுதி இருக்கிறார், வாங்கிப் படித்துப் பார் எல்லாம் தெரியும் என்றார்...


அடியேன் தாம்...அது...கலாம் அவர்கள் தொடர்பில் இருந்திருக்கிறேன்...அவர் எனக்கு கடிதமே கூட எழுதி இருக்கிறார், 


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவையில் பேசுமளவு வாய்ப்பெல்லாம் கிடைத்தது.


இந்த நாட்டில் மலை வாழ் மக்கள் மேம்பாட்டுக்காக‌ சுமார்  பத்தாண்டுகள்  உழைத்திருக்கிறேன் திட்ட அலுவலராக என்று சிறு குறிப்பளித்தேன். எனைப் பற்றி சொல்லிக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்ற போதிலும்...


அவர்கள் எனக்கு பெரும் தொகை எதையும் தரவில்லை, நானும் அவர்க்கு தரும் நிலையில் இல்லை... ஆனால் நான் தொய்வடையும் கால நேரத்தில் எல்லாம் இயற்கை இப்படி எதையாவது காட்டி எனது பிறப்பை இருப்பை வாழ்வை பொருள் பொதிந்ததாக மாற்றி விடுகிறது...


நல்லதை மட்டும் செய்வோம் அடையாளம் தெரியா நபர்களாலும் அடையாளம் காணப் படுவோம்.செல்கையில் எவரும் அறியாமல் சென்று சேர்வோம்... நமது வாழ்வு என்றும் எங்காவது தொடர்ந்தபடியே இருக்க...


அல்லவை தேய அறம் பெருகட்டும்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



 



Tuesday, November 8, 2022

இன்டன்ஸிவ் கேர்/கடைசி ரொட்டித் துண்டு. : கவிஞர் தணிகை.

 எதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக எதை எல்லாம் செய்யக் கூடாது என்பதில் தெளிவு வேண்டும்.உண்மைதான்

ஆனால் சில போக்கிரிகளும், குறும்பர்களும் எதை எல்லாம் செய்யக் கூடாது என்று தெளிவு படுத்தப் படும்போது எதை எல்லாம் செய்யக் கூடாது என்பவற்றை செய்து பார்த்து விடுவதும் படிப்பினை என்று செய்யக் கூடும். அதன் பிறகுதான் நாங்கள் அவற்றை செய்வதிலிருந்து விடுபட முடியும் என்றும் செய்வதும் சொல்வதும் உண்டு. Learning process.அப்படித்தான் அறிவியல் விஞ்ஞானிகளும் உருவாகிறார்கள் ஆனால் அது எது வரை எந்த வரையறை எவற்றுக்கு எல்லாம் பொருந்தும் என்பதில் கவனம் வேண்டி இருக்கிறது.



பலர் அப்படி வீழ்ந்து போய் விடுவதும் உண்டு. ஆனால் அதை எல்லாம் மீறி நாம் இங்கு சொல்லப் புகுவது:


வேண்டாத பகுதிகளை வெட்டித் தள்ளும்போதுதானே அழகிய உருவச் சிலைகளும், விக்கிரங்களும், அதே போல குரோட்டன்ஸ் செடிகளும்...உருவம் கொள்கின்றன... சரி சொல்ல வேண்டியதை சொல்லும் கவனத்துக்கு வருவோம்...


முதலுதவி என்ற பேரில் தண்ணீர் தெளிப்பது, தண்ணீர் குடிக்க வைப்பது மயக்க நிலையில் உள்ளவர்க்கு செய்யக்கூடாது என்றது நல்ல செய்தியாக இருந்தது.


 ஒரு சிறு காணொளி மூலம் 1. மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு, 2.உடலில் அடிபட்டு இரத்தக் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளிச் செல்லும் நிலையில் உள்ளார்க்கு,3,தலையில் அடிபட்டு இரத்தப் போக்கு உள்ளார்க்கு, 4, தீக்காயம் ஏற்பட்டு தண்ணீர் தண்ணீர் என கத்திக் கொண்டிருப்பார்க்கு,5 மாரடைப்பு ஏற்பட்டு உள்ளவர்க்கு குடிநீர் கொடுக்கக் கூடாது என்று அந்த முதலுதவி பயிற்றுநர் சொல்லியதைக் கேட்டபோது எனக்கு எனது தாய் மாரடைப்பு என சிகிச்சை முனையில் இருந்த போது நாங்கள் அளித்த கடைசித் தண்ணீரும், ஒரு சிறிய ரொட்டித் துண்டு அளித்தது பற்றிய நினைவும் வந்தது. 16 ஆண்டுகள் கழித்து  நாங்கள் செய்த தவறு இப்போதுதான் புரிந்தது.


ஏன் எனில் நுரையீரலுக்குள் நீர் புகுந்தால் உடன் மரணம் என்கிறார் இவர். அப்படித்தன் நடந்தன, நடக்கின்றன.

அதனால் தான் சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட வேண்டுமென்பார் பெரியார். சுவாசக் குழாய் எப்போதும் தன் வேலையை செய்ய, உணவுக் குழாய் தேவையான போது திறந்து மூட வேண்டும் என்பதால்...அதனால் தான் படுத்துக் கொண்டே சாப்பிடக் கூடாது என்பர்

கட்டில் மேல் நோயாளிதான் அமர்ந்து சாப்பிடுவர் எனவே கட்டில் மேலும் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பர் காரணம் தெரியாமலேயே நமது பெரியோர்.


காற்றுப் பைகள் காற்றை நிரப்புவதற்கு பதில் நீரை நிரப்பினால் நடப்பதுதான் அசம்பாவிதம்...


ஆனால் இரைப்பை, வயிறு நிறைய‌ சாப்பிடக் கூடாது, அரை வயிறு உணவு, கால் பங்கு குடி நீர், கால் பங்கு வெற்றிடம்( இந்த வெற்றிடம் என்பது ஆகாயத்தில் காற்றில்லாமல் இருக்கும் இடம் அல்ல) அல்லது காற்றுக்கான இடம்  இவையே செரிமானத்திற்கு ஏற்றது என்பதும் நினைவுக்கு வருகிறது.


சில அரிய காணொளிகள் நமக்கு நல் அறிவைக் கொடுக்கின்றன. என்னதான் மிகப் பெரிய அறிவு சார்ந்தாராக தம்மை கருதுவார் இருந்தாலும் கற்றது கைம்மண் கல்லாதது உலகளவு...காணொளிகள் நிறைய செல்பேசியில் இடம் அடைத்து முடியாமல் போகிறது என்று சலித்துக் கொள்வார் கூட இது போன்ற காணொளிகளால் மேன்மை அடையலாம் பிறர்க்கும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து பரிமாறிக் கொள்ளலாம்.


அன்னப் பறவை நீரை விட்டு பாலை பருகும் என தமிழ் இலக்கியம் சொல்வது கற்பனை என்றாலும் கூட அதுபோலத்தான் நாம் கற்க வேண்டும், படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்பது அத்தியாவசியமானது என்கிறார்கள் இரமண மஹரிஷி போன்ற குருமார்கள்.


நல்லது

 நன்றி நண்பர்களே..


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


இன்டன்ஸிவ் கேர்:

Tuesday, October 25, 2022

பட்டாசு சத்தத்திடையே ஒரு பசு மரத்தாணி: கவிஞர் தணிகை

 பட்டாசு சத்தத்திடையே ஒரு பசு மரத்தாணி: கவிஞர் தணிகை



யானைப் போர் குன்றேறி பார்த்தது போல உயரமான இடத்தில் இருந்து நேற்று மாலை வாண/ வான வேடிக்கை பட்டாசு வெடிப்புகளை ஆபத்தின்றி அழகாக செலவின்றி  இரசித்தேன்.என்னதான் முயன்றாலும் மனிதம் இயற்கையை வெல்ல முடியுமா?


பனிக்காலம் ஆரம்பித்து விட்டது.பாஸ்பரஸ், பொட்டாஷ்,சல்பர் இப்படி இரசாயனக் கலவையால் ஏற்பட்ட நச்சுப் புகைக் கூட்டம் மேல் ஏற முடியாமல் புவியின் மிகக் குறைந்த உயரத்திலேயே சுவாசத்துக்கு இடையூறானது.முகக் கவசம் அணிவது அவசியமானது. தலைக்கு தொப்பி கண்ணுக்கு கண்ணாடி எல்லாமே தேவைதான். தெருவெங்கும் சாலை எங்கும் ஒரே குப்பை. அதில் வேறு அமாவாசை எலுமிச்சைகளும், இப்போதுதான் சாலைகளில் ஆயுத பூஜைக்கு உடைத்த பூசணிக்காய்களின் நினைவு துடைத்து எறியும் முன்பே அடுத்த அலை...


கடந்த ஈராண்டாக கோவிட் 19 காரணமாக கொண்டாட தடையில் இருந்ததாலோ ஒரே வேடிக்கை மயம். பொருளாதாரக் கரிகள் நிறைய இந்த ஆண்டு பெருத்து விட்டன.என்னதான் அரசு காலை 6 மணி முதல் 7 வரை மாலை அல்லது இரவு 7 மணி முதல் 8 மணி வரை என்று எச்சரித்த போதும் அவரவர் விருப்பப் படி கொண்டாட்டம்.


இடையே குடும்பத்து உறுப்பினர் இறந்து போன குடும்பங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்ற நினைவும்...


என்ன செய்வது சிறு பிள்ளைகளை இதற்காக எல்லாம் கால நேரம் அனுசரிகாமல் வெடிக்கிறார் என்று கூர்ம சிறார் பள்ளிகளுக்கு கொண்டு சென்று அடைக்கவா முடியும்? பெரியவர்களே தங்கள் சுற்று வீட்டு இடங்களை விட்டு விட்டு வெளியில் சிறு நீர் கழிப்பதும், நாயை வெளிக்கு போகச் செய்வதுமான நாடாயிற்றே இது?


சட்டம் நீதி ஒழுங்கு யாவும் கடைப்பிடிக்காத நாட்டுக் கூட்டம் நம்ம கூட்டம் அதைக் கண்டுங்காணாது போய்க் கொண்டிருக்க வேண்டிய நிலை அரசுக்கு....


பறவைக் கூட்டமும், வீட்டு விலங்குகளும் இறகு விரிக்காமல் வாலை ஒட்ட சுருக்கிக் கொண்டன.


பெரியார் கூட ரஷியா சென்று இந்த சனியனைப் பார்த்து வாங்கி வந்து இங்கே பயன் படுத்தியதாகக் கேள்வி.


தொன்று தொட்டு நமைத் தொடரும் பழக்கத்தை எல்லாம் தொடரவேண்டிய நிர்பந்தம் இந்த அறிவியல் யுகத்துக்கு உலகுக்கு உண்டா? அதில் நமது நிலை என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம்? நாம் என்ன செய்து வருகிறோம்? தத்துவ அறிஞர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்லியது போல எல்லாமே கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் சென்று கொண்டிருக்கிறது...சிந்திப்போம்.


இனி அமெரிக்க ஐக்கிய குடியரசில் கூட நியூ யார்க் போன்ற நகரில் தீபாவளிக்கு அடுத்த ஆண்டு முதல் அரசு விடுமுறை .


தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூட இந்த தொழிலுக்கு மடைமாற்றம் செய்து இந்த தொழிலாளர்களுக்கு வேறு தொழிலுக்கு மாற்றி விட்டு விடாதிருப்பது...அவரது சராசரி அரசையே பிரதிபலிக்கிறது அல்லாமல் அவர் பட்டாசு விற்பனைக்கு மஹாராஷ்ட்ரா மும்பையில் பட்டாசு விற்பனை வேண்டி கோரிக்கை விட்டிருந்ததும் கவனிக்கப் பட வேண்டியதாயிற்று...


மது விற்பனை பல கோடிகள் எகிறி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்லி இருக்கின்றன‌


அந்தக் காலத்தில் போக்குவரத்து , தொடர்பு இடைவெளி இருந்த காரணத்தால் வாண வெடிகள் இறந்தார் வீடுகளில் சவம் எடுக்கும் போதும், அல்லது காரணங்களோடு வெடிக்கப் பட்டன...


தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கம் என்பதால் நாம் அனைத்தையுமே தொடரத்தான் வேண்டுமா?


நானும் ஒன்றும் யோக்யனல்ல...சிறு வயதில் ஏங்கி,இராணுவ வீரரான எனது மாமா எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத‌ T.M. கணேசன் தாரமங்களத்தில்  சின்னப்பம்பட்டியில் வாங்கி வந்த திரி சிறியதாக இருக்கும் யானை வெடிகளை வெடித்து அனுபவித்தவன் தான்... பட்டுத் திருந்தியவன் தான்...


ஆனால் அவை யாவும் காலக் கல்வியால் ஒதுக்கித் தள்ளப் பட்டு புரிதல், அறிதல் உணர்தல் நிகழ்ந்து எங்களது குடும்பம் இதில் இருந்து மீண்டு விட்டது...


இனிப்புகள், புதுத் துணி, பட்டாசு இவை யாவும் பழக்கம்...இல்லாதார் இருப்பாரைப் பார்த்து ஏங்க...அல்லது கடன் வாங்கி கடன்காரராகி...எல்லாம் வியாபார உத்திகள்...அதில் சினிமா வேறு ஒரு கேடு...தீபாவளி சினிமாக்கள் காலம் என்பது நல்ல வேளை மலையேறிவிட்டது...பண்டிகை இனாம் வேறு...நிரம்பி வழிந்த கடைகளுக்கான கூட்டம் போய் இனி மருத்துவ மனைகள் நிரம்பி வழியும்...


மேலும் கண்ணன் காலம் முடிந்து இன்று முதல் கந்தன் காலமாம் ... மாமனைப் போன்றே தாய் மாமனைப் போன்ற சாயல் கந்தனுக்கும் உண்டாம்... ஆண்டெல்லாம் திருவிழா காண்பது எல்லாம் வியா பாரமாக‌ பரமாக இல்லாமல் இருந்தால் சரி...


அடுத்து அறுவடைத் திருநாள்/ பொங்கல் ....திருவிழாக்கள் அவசியம்தான் ஆனால் அதில் கூட ஒரு நியதி வரையறை இருக்க வேண்டியதும் அவசியம்தான்...


நரகாசுரன் வதை பற்றியோ, பகவத்கீதை போர் முனை அறிவுரை போன்று நம்முள் எழும் தீய எண்ணங்களை நீக்கத்தான் என்பது பற்றியோ நான் இங்கு எதையுமே சொல்ல முனையவில்லை...


கடன் வாங்கும் திருவிழாக்கள் வேண்டாமே...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


இராமலிங்க வள்ளல் சொல்வது போல பசிதீர்த்தலும், ஜீவகாருண்ய ஒழுக்கமுமே நற்வழிகாட்டும் சமய நெறிகளாகட்டும்.




Friday, October 21, 2022

பழைய 5 ரூ தாளுக்கு 2 இலட்சம் இந்த செய்தி உண்மையா? கவிஞர் தணிகை.

இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் உள்ளதா? இலட்சக் கணக்கில் பணம் பெறலாம்




 பழைய 5 ரூ தாளுக்கு 2 இலட்சம் இந்த செய்தி உண்மையா? 


19.10.2022  தேதியில்  01.14 P.M ல் வெளி வந்து அது மறுபடியும்புதுப்பிக்கப் பட்ட செய்தியாக‌  20.10.2022 08.33 P.M  மணியிலும்தினமணியில் வந்த செய்தி இது.

இது போலியா? உண்மையா? வதந்தியா?

இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் உள்ளதா? இலட்சக் கணக்கில் பணம் பெறலாம் என்ற தலைப்பில் வந்துள்ள செய்தி இது.

அதாவது ட்ராக்டர் வயலில் உழுது கொண்டிருக்கும் படத்துடனான இந்திய 5 ரூபாய்த் தாள் "786" என்ற தொடரில் இருந்தால் அதற்கு குறைந்த பட்சம் ரூ.35,000 முதல் அதிக பட்சம் ரூ.2,00,000 வரை பெற முடியும் என அதிலும் நம்பகமான சில இணைய தளங்கள் வழியே பெற முடியும் எனச் செய்தி வந்திருக்கிறது

மத்திய ரிசர்வ் வங்கியின் சில அரிய வகை நோட்டுகளுக்கு இப்படி தொகை தருவதாக சில தனியார் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதாக செய்தி தெரிவிக்கிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் அது போன்ற இணைய தளங்கள் எவை?

நண்பர்கள் தெரியப் படுத்தவும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


செய்தி: தினமணி


 19.10.2022 தேதியில் தினமணியில் வந்த செய்தி இது.

இது போலியா? உண்மையா? வதந்தியா?


அப்படி இருக்கும் பட்சத்தில் அது போன்ற இணைய தளங்கள் எவை?

நண்பர்கள் தெரியப் படுத்தவும்.


Thursday, October 20, 2022

ஏன் இந்த மனிதர் மதம் கொண்டு அலைகிறார்கள்? கவிஞர் தணிகை

 ஏன் இந்த மனிதர் மதம் கொண்டு அலைகிறார்கள்? கவிஞர் தணிகை



தான், நான், கர்வம், ஆணவம், தலைக்கனம் இப்படி சில வேண்டாத  வார்த்தைகள் சில நேரம் ஒவ்வொரு நல்லவரிடமும் கூட. பல நேரம் நிறைய தராதரம் இல்லா மனிதரிடமும், எல்லா நேரமும் மதம் கொண்டு அலைவாரிடமும் திரிவாரிடமும். 


காரணம், பொருள் இன்றி நிற்கும் மேகம் மோதிக் கொள்கிறது அடேங்கப்பா எவ்வளவு பெரும் சக்தி, பொழிகிறது, தீப் பற்றுகிறது, இடி மின்னலாய் புவி நோக்கி இறங்குகிறது இடை சிக்கும் எந்த பருப்பொருளும், உயிரானாலும் தீய்ந்து போய் சிதைந்து போய், உருக்குலைந்து போக வேண்டியதுதான்... கோப மழை, புயல் , எரிமலை, நிலநடுக்கம்,இப்படி எண்ணிறந்த இயக்கங்கள் நிலம், நீர் நெருப்பு, காற்று ஆகாயம் சார்ந்து... இவை எல்லாம் பார்த்தும் இந்த மனிதம் தமை பெரும் சக்தியாய் எண்ணுவதில் நிறைய கேள்விகள்...விவேகானந்தா கூட ஒரு இடத்தில் இயற்கையை வெல்லும் ஆற்றல் மனிதர்க்குண்டு என்பார் ஆனால் அது எது வரை எந்த எல்லை வரை என்பதுதான் கேள்வி...


கண்ணால் காண முடியும் சிற்றுயிர்கள் அதன் இயக்கம், பசி, இனப்பெருக்கம்,ஏன் கண்ணால் காணமுடியாமலும்...


உணர்தல் ஒன்றுதான்...


மற்றபடி எல்லாவற்றையும் கடவுளாக பார்க்கும் பார்வை,கடவுள் இணையற்றவர், உனைப் போல் பிறரையும் நேசி, பிற உயிர்களையும் நேசி, உன் வினை உனைப் பற்றும், ஊழ் வினை, மரணம்,மரணமிலாப் பெரு வாழ்வு, மரணத்துக்கும் பின் உயிர் உலாவல்,இயற்கையை அழிக்காதே...இப்படி உயிர்களுக்கான தலையாய உயிரான மனிதத்துக்கு தேவையான தத்துவங்கள்....


அவை யாவுமே அவரவர் தனிப்பட்டு எண்ணிக் கொள்ள... தனியுரிமை,சுதந்திரம் தலையீடு, பொது இடங்கள்...இப்படி பாகுபடுத்தி வகைப்படுத்திக் கொள்ள வேண்டியது வளர்ச்சிதான்...மானசீகமானவை இதில் நிறைய...


மனிதம் வணங்கக் கற்றுக் கொண்டது...சிரிக்கிறது, சிந்திக்கிறது, அது நிறைய உயிரிகளிடம் இல்லை...


மற்றபடி இங்கே வணங்குதலுக்குண்டானவை யாவுமே குறியீடுதான், அடையாளம் தான், கடவுள் எனச் சொல்லும்  ஒரு வார்த்தை நமது பெயர்களைப் போல்தான்... ஆனால் அந்தப் பெயர் மட்டுமே நாம் அல்ல என்பது போல...அந்தப் பெயர் ஒன்றே அதான் ஆழம், அகலம், உயரம், யாவுமானவற்றை எல்லாம் விளக்கி விடமுடியாது விளக்கப் படுவதுமில்லை... யாவுமே வாழ்வில் வளமாக்கிக் கொள்ள வேண்டியது...


இது போல நிறைய விடைக்குள் கொண்டு வர முடியா நிறைய கேள்விகள் நிறைய நிறைய உண்டு...இந்தப் புதிர்கள் இந்தக் காலம் வரை விடுவிக்கப் படாமல்தான் போய்க் கொண்டு இருக்கிறது...நாமும் போய்க் கொண்டுதான் இருக்கிறோம்...


இல்லை என்ற கருத்தும் உலக மக்கள் தொகையில் அதிகம் உள்ளாரிடம் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன‌


சந்திப்போம், சிந்திப்போம்!

சேர்ந்து சிந்திப்பது பெரியதுதான், தனிப்பட்ட தேடல் சிறு பறவை விண்ணை வலம் வர ஆசைப்படுவது போன்றதுதான்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, October 14, 2022

ஞானம்;மெய்ஞ்ஞானம்,விஞ்ஞானம்,அஞ்ஞானம்: கவிஞர் தணிகை

 ஞானம்;மெய்ஞ்ஞானம்,விஞ்ஞானம்,அஞ்ஞானம்: கவிஞர் தணிகை















ஞானம்: பேரறிவு, பேராற்றலை இதை விஸ்டம் என்ற ஆங்கில சொல் குறிக்கிறது

          பொதுவாக எல்லாத் துறைகளிலுமே கரை காணமுடியா அறிவும் அதை மேலும் மேலும் பெருக்கிக்

          கொள்வாரையும் ஞானி எனச் சொல்லலாம்.

           ஆனால் அப்படி எல்லாத் துறைகளிலுமே பேரறிவு படைத்த மனிதர் உண்டா?


மெய்ஞ்ஞானம்: மெய் என்றால் 1. உடல் 2. உண்மை என்ற பொருள் உண்டு தமிழில்

                 உடலைக் கடந்து பார்க்கும் அறிவாற்றலை கட உள் மெய்ஞ்ஞானிகள் பெறுகின்றார்

                 உடல், உயிர்கள், உலகு, பிரபஞ்சம், பற்றி எல்லாம் மெய்ஞ்ஞானிகள் அறிந்துள்ளனர்.


விஞ்ஞானம்: விஞ்ஞானிகள் உலகுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் பயன்படும் வண்ணம் தமது

              கண்டுபிடிப்புகளை அர்ப்பணிக்கின்றனர்.அவர்கள் சொல் செயல் எண்ணமெல்லாம் அந்த ஒரு

              பொருள் பற்றியே சிந்தித்து கருமமே கண்ணாகி உடல் பொருள் ஆவி யாவற்றையும் அதற்காக‌

              செலவு செய்து மானிடத்துக்கு சேவயாற்றுகின்றனர்.


              கேட்டுக் கொண்டே இருப்பதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை, பதில் ஏற்கெனவே இருக்கிறது

              அதற்கான சரியான கேள்வி கேட்கப்படும்போதே அதற்குண்டான‌ பதில் கிடைக்கும் என்கிறார்கள்

              அறிவியல் ஞானிகள்.


              கூகுள் தேடலில் கூட எவராவது பதிவு செய்து வைத்திருந்தாலும் நாம் கேட்கும் சரியான கேள்வி

              இருந்தால் மட்டுமே அதற்குரிய பதில் கிடைப்பதை நாம் கவனிக்கலாம்.


அஞ்ஞானம்: பொதுவாகவே சரியான தேவையான அறிவைப் பெறுமுன்பே அதைப்பற்றி தாம் எல்லாம் 

              தெரிந்ததாக எண்ணிக் கொண்டு அதைப் பற்றி பிதற்றுவது உளறுவது...அனேகமாக இந்த‌

              பிரிவில் தாம் நாம் பெரும்பாலும் இருக்கிறோம் என எண்ணுகிறோம்...


ஏன் எனில்: இராமலிங்க வள்ளலார் போன்றவர்கள் கூட நாயினும் கடையேன், ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருள்வாய் அருட்பெருஞ்சோதி என்று சொல்லியதைக் கவனிக்கும் போது அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Wednesday, October 12, 2022

விண்ணில் மட்டுமல்ல மண்ணிலும் சொல்லொணா விந்தைகள்: கவிஞர் தணிகை

 விண்ணில் மட்டுமல்ல மண்ணிலும் சொல்லொணா விந்தைகள்: கவிஞர் தணிகை



உங்கள் நேரம் மிக முக்கியம். சுருக்கமாக... பபுள் நெபுலா...பபுள்: வாயுக் குமிழ்

நாற்பது இலட்சம் ஆண்டுகள் பழையதான 7,100 ஒளியாண்டு தொலைவில் ஒரு நெபுலா வாயுக் கோளத்தை நாசா விண்வெளியகம் தமது ஹப்புள் தொலை நோக்கி வழியாக கண்டறிந்துள்ளது அரிய செய்தி என்றால் அது நமது சூரிய விண்மீனை விட 45 மடங்கு பெரியது என்றும் சுமார் ஒன்றிலிருந்து இரண்டு கோடி ஆண்டுகளில் அது சூப்பர் நோவாவாக மாறி விடும் என்பது விண்ணியல் அறிவியலில் ஒரு விந்தை. இது நேற்றைய செய்தி.


தவளையின் சத்தத்திற்கும் மழை வருவதற்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? நான் தொடர்ந்து வருகிறேன் சுமார் குறைந்தது 8 மணி நேரத்திலிருந்து 24 மணிக்குள் மழை வந்தே விடுகிறது. இப்போது வானிலை ஆய்வு மையங்களும் சரியாகவே கணித்து சொல்கின்றன அது வேறு.


நுணலுந்தன் வாயால் கெடும்...பழமொழி, குறள் கூட இருப்பதாக நினைவு. ஆனால் பாம்புக்கு காது கேட்காது என்கிற அறிவியல் தவளையின் சத்தம் இனைவிழைச்சிக்காகவே தமது கலவிக்காக பெண் தவளைகளை மழைக்காலத்தில் கார்காலத்தில் அழைப்பதே இந்த சத்தம் என்கிறது... அதற்கும் மழைக்கும் தொடர்பில்லை என்கிறது


பல்லிகள் கூட இனவிழைச்சிக்கே கத்துவதாக செய்தி...ஆனால் இவை மனித வாழ்வில் சிலவற்றை முன் கூட்டியே கட்டியங் கூறுகின்றன என்பதை மறுக்க முடியவில்லை...



தோகை விரித்தாடும் மயில் கூட அப்படித்தான்...இணையை அழைக்கத்தான்...மேகம் கண்டல்ல...


நிறைய அறிவியலில் புலப்படா அல்லது இன்னும் அறிவியலில் அறியப் படா இயற்கை உயிரி நிகழ்வுகள் பூமியில்  நிறைய  உண்டு...மறுபடியும் தலைப்பைச் சொல்லி முடிக்க வேண்டியதாகிறது....விண்ணில் மட்டுமல்ல மண்ணிலும் எண்ணிலடங்கா விந்தைகள்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, October 6, 2022

உலகம் விரைவாக‌ அழிகிறதா? அதன் ஆயுள் குறைகிறதா? கவிஞர் தணிகை

 உலகம் அழிகிறதா? அதன் ஆயுள் குறைகிறதா? கவிஞர் தணிகை



உலகம் அழிகிறதா? மனித மாண்புகள் குறைகிறதே என படிக்கும் உங்களுக்கு எல்லாம் கனமில்லா ஒரு லேசான சிறு பதிவு செய்ய அவா. அதைப் பற்றி சில நாட்களாகவே எண்ண ஓட்டம்.


கடந்த செவ்வாய் அதாவது 04.010.2022 சூரியனில் ஒரு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் அந்த வெடிப்பின் மின்காந்தப் புயல் அல்லது அதன் விளைவலைகள் விண்வெளியில் பூமி சார்ந்தவற்றை பாதிக்கவும் கூடும் என்ற ஒரு அறிவியல் செய்தி.... அதை பின்னுக்குத் தள்ளி விட்டது.


ஆனால் அது பற்றி எல்லாம் நான் எழுதவே எண்ணவில்லை

எதற்காக எழுதுகிறீர்? என்ற ஒரு கேள்வியை சந்தித்துள்ளேன்.


செயற்கை கருவூட்டல் வழியே இரட்டை குழந்தை பிறப்பு அதிகம் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் உள்ளன‌

செயற்கை கருவூட்டல் அறிவியியலில் ஒரு விந்தையான மிக்க இலாபமுடைய வியாபாரம்

ஏன் செயற்கை பிரசவம் கூட....


எல்.ஜி.பி.டி( LGBT) ஓரின சேர்க்கை திருமண நிகழ்வுகளுக்கு நிறைய நாடுகளில் சட்டமும் நீதியும் அங்கீகாரம் அனுமதி அளித்து அதற்கான வெளிப்படையான மக்கள் திரள்வு ஆங்காங்கே நடந்தபடி இருக்கின்றன.

ஒரு தாயின் வயிற்றில் பிரசவத்தின் போது வெளிப்பட்ட இரட்டை குழந்தைகள் இரண்டும் இரு வேறு தந்தைகளுடையது என அறிவியிலில் டி.என்.ஏ D.N.A மூலக்கூறு இயல் ஆவணப் படுத்த அறிவியல் முன்னேறி இருக்க அந்த  தாயும் மகிழ்வுடன் ஒரே பெற்றவரே அதை வளர்க்க சம்மதித்திருக்கிறார் என கூறுகிறார்

பெற்றோர் என்றால் தமிழில் தாய், தந்தை என்றே பொருள். ஆனால் ஆங்கிலத்தில் "சிங்கிள் பேரன்ட்" SINGLE PARENT என்ற ஒரு சொற்றொடர் பிரபலமாகி விட்டது.


இன்ஸ்டன்ட் லிவிங் INSTANT LIVING என்ற ஆங்கில வார்த்தை அதை விட பிரபலம்.லிவிங் டுகெதர் LIVING TOGETHER என்ற வார்த்தையை இது வேகமாக கடந்து பிரபலமடைந்து வருகிறது. ஆக  பொறுப்புகளை ஏற்கும் மனப்பக்குவம் குறைந்து வருகிற தலைமுறையை புவி சந்தித்து வருகிறது. ஒத்துப் போகா எண்ணங்கள் ஒன்றை ஒன்று வெட்டிக் கொண்டு முந்திச் செல்ல முயல்கின்றன.


அறிவியல் மிகா காலத்தில் மருத்துவ செறிவின்மை காரணமாக இறப்புகள் நிறைய நிகழ்ந்தன என்பது உண்மைதான்...

ஆனால் இரசாயன கலப்பில்லா உணவு கிடைத்தது. முறையாக வாழ்ந்த மனிதர் நெடுங்காலம் வாழ்ந்தனர்.

இயற்கையை மனிதம் அதிகம் நேசித்தது.


இரவு பகல் பாகுபாட்டில் இரண்டறக் கலந்திருந்தது.


24 மணி சுழற்சி, இரவையும் பகலாக்கும் தற்கால வளர்ச்சி...


என்னதான் காமத்தேடல் வேட்டைகள் இரைகள் இருந்த போதும் தந்தை எவர் என்ற அடையாளம் இயற்கையோடு தொடர்புடையதாகவே இருந்தது பெண் ஆண் உறவு ஒன்றுக்கொன்று தேவை என்றுதான் உலகம் மனிதம் உயிர்கள் இருந்தன....


அடிப்படை தொலைந்து வருகிறது... 


ஆனாலும் நேற்று சென்ற நள்ளிரவிலும் நல்ல மழை ஒரு உழவு அல்லது ஒரு வள்ளம் ( நாலு படி அளவு ) அல்லது எங்கள் உரல் கல் குழி எல்லாம் நிரம்பி வழியுமளவு நல்ல மழை பெய்துள்ளது நேற்று கூட கிராமம் சார்ந்த மனிதர் மழையைக் காணோம் என்று சொன்ன போது... இயற்கை அது அப்படியேதான் ...நிலம், நீர்,நெருப்பு, காற்று , ஆகாயம் யாவும்...


மனித குல வரலாறில் பெண் வழிச் சமுதாயமே முன்னர் தோன்றியதாக வரலாறு சொல்கிறது.

அழியும் போது சுழற்சி முறையில்  அதே போல வந்து விடுமோ என்னவோ?


தம் வீட்டு சுவர், புல் பூண்டை விட மற்ற உயிர்கள் மனித உயிர் உட்பட யாவுமே தாழ்வே, அவை பற்றி கவலை கொள்ள ஏதுமில்லை என்ற போக்கு, தமது எல்லையைக் காத்துக் கொண்டு பொது இடங்களை ஆக்ரமிக்கும் போக்கு அவற்றை அழிக்கும்  அதன் ஆர்வம்...சுருக்கமாகச் சொன்னால் சுயநலம் மற்றும் பொதுநலத்துடன் இயையா போக்கு



மொத்தத்தில் நோபெல் இன்னும் இன்றும் வழங்கப்பட்டிருக்கும் காலக் கட்டத்தில் குடும்பம் என்ற அமைப்பில் இருந்து மனிதம் வெளியேறி வருவதை கட்டுகள் வெட்டி எறியப் படுவதை கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது...


வட்டம் நல்லதாக இருந்த போதும் அதை விட்டு வெளியேறித் துடித்து வரும் இன்றைய தலைமுறை எதைத் தேடி என்ன செய்யப் போகிறது என்று தெரியாமல் தமது விதைகளை விதைப்பது அவசியம் என்ற நோக்கம் ஏதும் ,(எல்லாம் ) இல்லாமல் பயணம் செல்ல ஆரம்பித்து விட்டது. அதற்கேற்ற படியான அரசியல், ஆட்சி, கட்சி,விலைவாசி, பொருளாதாரம் இப்படி எல்லாத் துறைகளுமே ....


பொய்களை நம்பும் போக்கு...மெய்களை விட்டுத் தள்ளும் போக்கும்


சொர்க்கம் என்பது மாயை, பொய் பிம்பம் என்று சொன்ன விவேகானந்தரும், கவலையற்றிருத்தலே முக்தி கவலைப்படுதலே நரகம் என்ற பாரதியின் தத்துவங்கள்  பிழையாகாது. ஆனால் இவை தவறாக பொருள் கொள்ளுமளவு இவர்கள் அதைப் பற்றி படித்து அறிந்தவர்களாகவுமில்லை...புதுமைப் பித்தன், மகாத்மா,கலாம், தெரஸா  இப்படி இவர் போல எதையும் செய்து விடவும் முடியாது என்பதை ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொள்கிறேன்.


என்னால் இந்தப் பதிவு எதற்கு என்று கேள்விகள் எனக்குள்ளேயே...இருப்பினும் கால்தடத்தை பதிக்கிறேன். காலத்தைப் பதிவு செய்துள்ளேன் என் சிறு நகக் கீறலாக...


எந்த துறையிலுமே மிக சிறப்பான சாதனை புரிந்ததாக தெரியவில்லை...ஆனால் அவற்றை எல்லாம் தொட்டிருக்கிறேன் என்ற சிறு நிம்மதி, ஒரு தொடு புரிதல்,  எனக்குள் இருக்கிறது, இலக்கியம், அரசியல், ஆன்மீகம்(தியானம்) , குடும்பம், பொருளாதாரம், அறிவியல், அன்றாட வாழ்க்கை , சேவை அதன் பொறுப்புகள் இப்படி...

வணக்கங்களும் நன்றிகளும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Thursday, September 29, 2022

நல்ல நேரம் /சுப வேளை‍ கெட்ட நேரம்/ அசுப வேளை உண்மையா? கவிஞர் தணிகை

 நல்ல நேரம் /சுப வேளை‍ கெட்ட நேரம்/ அசுப வேளை உண்மையா? கவிஞர் தணிகை



நேற்று விட்டுப் போனதன் ஒரு சிறு தொடர் பதிவு இது.வியாழக் கிழமை குரு வாரத்தின் வணக்கங்களுடன்.(வாரம் என்பதை நாளின் பெயருடன் சேர்த்து சொல்வது தெலுங்கு ஸ்டைல்) அவர்கள் ஆதி வாரம், சோமவாரம், மங்கல வாரம், புத வாரம், குரு வாரம் சுக்ர வாரம், சனி வாரம் என்றே நாட்களைக் குறிப்பதைக் கவனித்திருக்கிறேன். வடக்கு ஸ்டைலும் கூட. இங்கு திருவள்ளுவர் ஆண்டு என ஆகும் போது 60 ஆண்டுகள் மறுபடியும் சுழல் செய்வதில்லை.


எங்கள் வீட்டில் கூட தந்தையும் தாயும் தமிழ் என்ற போதிலும் கூட தந்தை சோமவாரம் என்றே திங்கள்கிழமையைக் குறித்துப் பேசியதை அவர் ஆயுள் முடிந்து சுமார் 40 ஆண்டுகள் அருகே ஆன போதும் கூட நினைவில் கொள்ள முடிகிறது.



பொதுவாக கோள்கள் பெயரே நாட்களுக்கு இருக்கிறது. திங்கள் உப கோள். 


சரி இப்போது கருப்பொருள் இந்தப் பதிவுக்கு: நல்ல நேரம் கெட்ட நேரம் பற்றி ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களா? அப்படி உண்டா? 60 ஆண்டுகளில் அவர்கள் முடித்து விட்டு மறுபடியும் ஆண்டின் பெயரை  முதலில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்...அப்படித்தான் ஆரம்பித்து இருக்கிறார்கள் பஞ்ச அங்கத்தின் படி... நல்ல நாள் , கெட்ட நாள், கரி நாள்,மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள், சம நோக்கு நாள் பிறப்பின் அடிப்படையில் எல்லா மனிதரையும்  27 நட்சத்திரம் 12 இராசிகள்,அந்த 12 இராசிகளையும் தினமும் 3 ஆக பிரித்தல் இப்படி பிறப்பு அதன் குறிப்பு ஜாதகம், (ஏன் இன்னும் ஆழமாகப் போகும் போது தாயும் தந்தையும் கூடி இருக்கும் நாட்கள் அதன் அடிப்படையில் கருவுறுதல், இணைதல் நாட்கள் அதன் பலா பலன்கள்) அனுதினமும் ப்ரம்ம முகூர்த்த நேரம் அதிகாலை 4.30 முதல் 6 வரை...அப்போது ஓசோன் படரும் நேரம்.


  அடிப்படையில் நாட்கள், வளர் பிறை, தேய்பிறை, அமாவாசை, பௌர்ணமி,(நிலவின் பிறைத் தோற்ற‌ மாற்றம் கடலில் ஓத ஏற்றம் ஓத இறக்கம் எல்லாம் ஏற்படுவது அறிவியலும் சொல்லும் ஏற்றுக் கொள்ளும் உண்மை)அப்போது இறப்புகள் நடப்பவையும் உண்டு... பட்சி சாஸ்திரம், பறவை வலம் இடம் போதல்,கௌளி சொல், பூனை இடம் வலம் போதல், இப்படி நிறைய சகுனங்கள்...அறிகுறிகள் யாவும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 


உப கோள் திங்களின் தோற்ற மாற்றத்திற்கே விளைவுகள் இருக்கின்றன என்னும் போது கோள்கள்,பூமி, சூரியன், நட்சத்திர பயணங்கள், வேகம் எல்லாம் கூட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டிய அத்தாட்சியாய் நிலவு இருக்கிறது. எனவே சூரிய தசை/திசை, சந்திர திசை,செவ்வாய் திசை, புதன் திசை, குரு திசை, சுக்ர திசை,சனி திசை, இராகு திசை, கேது திசை ( இராகு கேது சாயா கிரகமாம் அவை கிரகம் என்ற ஆதாரம் இல்லை ஆனால் அவை பாதிப்புகள் அதிகம் ஏன் அவை பின்னோக்கி பயணிக்கின்றன என்பன எல்லாம் கேள்விகள்) என மனித ஆயுளை ஆள்வதாகவும் அதில் புத்தி, அந்தரம், கரணம் எல்லாம் வருகின்றன...எட்டாம் இடத்து அஷ்டமத்துச் சனி, ஏழரைச் சனி இப்படி நிறைய நிறைய...


 அதில் தசா இருப்புக் கணக்குகள், நான் திருமணப் பொருத்தம் பார்க்கும் காலக் கட்டத்தில் தான் சோதிடம் பற்றி சிறிது கற்க ஆரம்பித்தேன்,திருமணப் பொருத்தம் பார்ப்பதிலும் எண் கணிதம் சோதிட முறைகளில் பெயர் வைத்தலில் வல்லமை வந்துவிட்டவர்களில் நானும் ஒருவனாகி விட்டேன்... அதில் செவ்வாய் தோசம், பரிகாரம், நிவர்த்தி, களத்திர தோசம், இராகு கேது இப்படி போய்க் கொண்டே இருக்கின்றன... ஆனால் காந்தர்வ விவாகம் என்றால் எதுவும் தேவையில்லையாம்...ஏன் எனில் அது பெண்ணைக் கவர்ந்து கொண்டு சென்று செய்து கொள்வதால்... 


கார்த்தி, சூரியா வின் தந்தை சிவகுமார் அவரின்  தந்தை ஒரு நல்ல ஆசிரியாக இருந்தாராம் அவர் எழுதி வைத்த குறிப்பு மிகத் துல்லியமாக இருந்தது என்றும் அவர் இவர் குழந்தையாக இருந்த போதே இறந்து விட்டார் என்பதையும் அவர் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஒரு முறை பகிர்ந்து கொண்டதை நானும் கேட்டேன். சரியான சோதிடக் கணிப்பு சரியாக துல்லியமான நிலைப்பாட்டை விளைவை சொல்கிறது என்பது அவரது நிலைப்பாடாகவும் அன்றைய பேச்சில் வெளிப்பட்டது.


மந்திரம் கால் மதி முக்கால்...அல்லது  எல்லாம் விதிப்பயன்,தலையில் அப்படிதான் எழுதி இருக்கிறது தலை விதி, என்ன தான் விதி என்றாலும் முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்...


அதில் இராகு, குளிகை, எமகண்டம் இப்படியும், சுப முகூர்த்தம், நொடி, வினாடி, நாழிகை, முகூர்த்தம் , அமிர்தம், சோரம், மரண யோகம், சூலம் இப்படி நிறைய போய்க் கொண்டே இருக்கிறது... குளிகை என்ற குளிர்ந்த நேரத்தில் மட்டும் வீட்டில் இறந்தாரை காடு நோக்கி கொண்டு செல்வதில்லை...


கலாம் அஷ்டமியில் பதவி ஏற்ற போது பூமி சூரியனை சுற்றும் எல்லா நாட்களுமே எனக்கு நல்ல நாட்கள் என்பது நினைவிலாடுகிறது.


எல்லாவற்றையும் மீறி கடவுள், இறை,தெய்வம் என்ற ஒன்று இருந்தால் நாட்கள் எல்லாம் நல்ல நாட்கள் தாமே உயிருள்ள நாட்கள் எல்லாம் நமக்கு நல்லவைதானே? பின் ஏன் இத்தனை குறிப்புகள்? கடவுளையே கட்டி விடுவதாகவும், மூலஸ்தானத்தில் கருவறையில் கடவுளுக்கு மனிதர்கள் உயிர் கொடுப்பதாகவும்,கடவுள்களுக்கும் ஜாதகம், பிறந்த குறிப்புகள் உள்ளதாகவும் சொல்லி வருகிறார்கள்... அஷ்டமி எனில் கிருஷ்ணனை வணங்குவதும், நவமி என்றால் அம்பிகை அல்லது துர்கை வழிபாடும்..இப்படியே போய்க் கொண்டே இருக்கிறது...கண்ணதாசன் கூட தமது அர்த்தமுள்ள இந்து மதத்தில் பூனை வலம் இடம் பற்றி எல்லாம் பேசுகிறார்.


விவிலியத்தில் ஒரு இடத்தில் மனிதர் கையால் கட்டிய கோயிலில் கடவுள் குடியிருப்பதில்லை என்ற குறிப்பு உள்ளது.


முகமதியத்தில் அல்லாஹு அக்பர், அல்லாவே இணையற்றவர் என்று ஓதப்படுகிறது...இரமலிங்கர் கூட கடவுள் இணையற்றவர் என்று குறிப்பிடுகிறார்...ஒப்பிட்டுப் பார்க்க சில சேர்க்கைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.அவர்களும் நிலவை வைத்தே எல்லா நாட்கணக்கு, திருவிழாக்கணக்கும் கொள்கிறார்கள்



வலது, இடது, இடது கையால் சிலர் வாங்குவது, செய்வது இல்லை...அது பீச்சாங் கை ஆயி கழுவுவதால் என்கிறார்கள்...


ஆனால் நாடி சுத்தி தமிழ் முறைப்படி டாய்லட் சோப்பை கழிவகத்தில் நிரந்தரமாக வைத்து ஆசன வாயைக் கழுவுதல் முதல், உள்ளங்கையைக் கழுவுதல்,மலம் மலக்குடலில் சேராமல் முழுதுமாக வழித்தெடுத்து சுத்தம் செய்து கொள்ள வழிகாட்டி தமிழ் முறைகளில் உள்ளவை. எனவே இடது வலது என்ற நிலை சரியா?



ஏன் எனில் இரு கையையும் பயன்படுத்தி பணி செய்வது, ஏன் காந்தி கூட இருகையாலும் எழுதி இருக்கிறார் என்ற குறிப்புகள் உள்ளன...அது உடலில் இரு பக்க உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு நல்ல விளைவைத் தருகின்றன‌


மேலும் பகிர்ந்து கொள்வோம்


இன்றைக்கு நண்பர்களுக்கு முன் எனது கேள்விகள் இவை...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Wednesday, September 28, 2022

சிக்கலான சில கேள்விகளுடன் எனது இந்த புதனின் காலை வணக்கம்: கவிஞர் தணிகை

 


சிக்கலான சில கேள்விகளுடன் எனது இந்த புதனின் காலை வணக்கம்: கவிஞர் தணிகை

உடலை இழந்த பிறகும் உயிர் ஆவியாக இருக்கிறதா?

இருக்கிறது என்ற எனது அனுபவத்தின் பதில் பலரால் மறுக்கப் படலாம்
ஆனால் அப்படிப்பட்ட‌ 3 நபர்களிடம் நான் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன். சுமார் 38 ஆண்டுகளுக்கும் மேல் தியானப் பயிற்சியில் இருந்து வருகிறேன் எனக்கு உண்மையைத் திரித்து சொல்லி எவரையும் திசை திருப்பும் எண்ணம் ஏதும் இல்லை என்ற நிலையில் இதை உரைக்கிறேன். இதை அறிவியலோ அல்லது அது பற்றி நம்ப மறுக்கும் எண்ணமுடையோர் மறுக்கலாம் அது அவர்கள் நிலைப்பாடு. அதை நாம் ஒன்றும் குறை சொல்ல வழி இல்லை.

பிற உயிர்களின் அழிவும் ஏன் மற்ற ஜீவராசிகளின் இன அழிவும்
மக்கள் தொகைப் பெருக்கமும் என்ற தொடர்பு பற்றி என்ன தெளிவு இருக்கிறது?


புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய்
பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி, முனிவராய், தேவராய் செல்லா நின்ற 
இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான் இன்று உன் பொன்னடிகள் கண்டு வீடுற்றேன்
   ....திருவாசகம்....மாணிக்க வாசகர்...இவரின் வயது 32 என்கிறார்கள்


மறுபிறப்பு என்ற ஒன்று இருக்கிறதா?

உடலை இழந்த உயிர்கள் எவ்வளவு காலம் ஆவி நிலையில் இருக்கின்றன? அவை எங்கு சென்று மறைகின்றன?மறு பிறப்பு என்ற ஒன்று இருக்கிறதா? இராமானுஜர் தமது மறுபிறப்பு பற்றி முன்னரே சொல்லி இருக்கிறார். அவர் ராமானுஜராக 120 ஆண்டுகளும், மணவாள மாமுனிவராக 80 ஆண்டுகளாகவுமிருந்திருக்கிறார் என்று அவரே கூறியதாக அவர் சார்ந்த ஆன்மீக ஏடுகள் குறிப்பிட்டுள்ளன.

கணியன் பூங்குன்றனார் முதல் கௌதம புத்தர் வரை ஏன் மற்றும் அறிவியல் யாவும் சொல்கிறது: வினை பற்றி(யே) கடவுள் பற்றி அல்ல...

மரணம் பற்றி மரணத்துக்கும் பின் பற்றி எந்த மதங்களாலும் ஏன் அறிவியலாலும் கூட அறுதி இட்டு இன்னும் எதையும் கண்டறிந்து சொல்ல முடியவில்லை.
மரணமிலாப் பெருவாழ்வு பற்றி பல ஞானிகளும் பேசியிருக்கின்றனர்.

இரவும் இருளும் இருந்த போதும் சூரியன் இருக்கிறது
பகலும் வெளிச்சமும் இருக்கிற போதும் விண்மீன்கள்  இருக்கிறது
எல்லாம் தோற்றம்...மறைவு...காட்சி, காட்சிகளின் நீட்சி...

எத்தனையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமையும்  உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம் தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் எனத் தேர்ந்தேன்
அந்த வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ!
 என்கிறார் இராமலிங்கர் ...ஏழைகள் பசி தீர்த்தலே ஜீவகாருண்ய ஒழுக்கம் எனச் சொல்லும் 
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளும் அருட்பெருஞ்சோதி....என்னும் இராமலிங்கர் சுமார் 50 ஆண்டுகள்... வாழ்ந்தது பூமியில்.

1967ல் பாராளுமன்றத்தில் அறிஞர் அண்ணா முதல் கன்னிப் பேச்சிலேயே நாங்கள் வடக்கில் புகழ் பெற்றார் பெயரை எல்லாம் எங்கள் சாலைகள், பாதைகள், வழிகள், போன்றவற்றுக்கு எல்லாம் சூட்டி ஏன் நினைவாலயங்கள் எல்லாம் வைத்து பாராட்டுகிறோம் ஆனால் எங்கள் பெரியோரை அப்படி வடக்கே இருப்பார் கொண்டாடுகிறீர்களா?  என்றார்.... அந்த நிலையே இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்று சொல்லலாம்.

திருவள்ளுவர், பாரதி, இராமலிங்கர் பற்றி எல்லாம் நினைவுக்கு வந்தது...பாரதியை தாகூரை விட வலிமையான கவி என கு.அழகிரிசாமி  ஏன் இப்போதுள்ள சாருநிவேதிதா போன்ற முற்கால எழுத்தாளர் முதல் தற்கால எழுத்தாளர் வரை குறிப்பிடுகின்றனர்...ஆனால் பாரதிக்கு சோற்றுப் பஞ்சம் பசி,பட்டினி,பிணி...தாகூருக்கு நோபெல்... பெரும் புகழ்...நாம் எங்கு பிறக்கிறோம் என்பதில் கூட நிறைய தீர்மானங்கள் இருக்கின்றன.

கோவையில் நடந்ததாக‌ ஒரு நபர் ஒரு காணொளிக் காட்சியை பகிர்ந்திருந்தார். தலையில் காசு வைத்து ஆசி வழங்கிய பின் அந்த நபர் தமது பணப்பையை தாமாக எடுத்துக் கொடுத்து விட்டார் என்று...அது ஒரு பிரபலமாகி இருக்கும் காணொளிக் காட்சி...அது போன்று செல்வத்தை இழந்த அனுபவம் எனக்கும் உண்டு... தோற்றத்துக்கு, களப்பணிக்கு வெயில் மறைப்புக்கு என தொப்பி அணிந்து வந்த நான் அதிலிருந்து எப்போதுமே தொடர்ந்து தலைக்கு தொப்பி, அணிய அரம்பித்து விட்டேன்...அந்தக் காலத்தில் பேருந்து இல்லாக் காலத்தில் இரயில் அல்லது கால் நடை பயணம் நமது பெரியோர் கையில் ஒரு தடி, தலைக்கு உருமாலை, கையில் நீருக்கு என ஒரு திருகாணி செம்பு வைத்திருந்தனர். நாம் ஒரு தண்ணீர் பாட்டல், கையில் ஒரு குடை,தலைக்கு ஒரு தொப்பி அணிவதுகூட நல்லதே...

செய்வினை,பில்லி , சூனியம், மந்திரம், மாந்தீரிகம், எல்லாம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்...?

இப்படி நிறைய பேச வேண்டிய பேசு பொருள்கள்  நிறைய இருக்கின்றன‌

சிற்பி கொ.வேலாயுதம், விடியல் கு.கருணாநிதி, நூல் வழிச்சாலை நாகச் சந்திரன், குருசூரியப்ரகாஷ் குருசாமி நாம் மறையும் முன் நம்மால் முடிந்ததை நமது நாட்டுக்கும் வீட்டுக்கும் செய்ய வேண்டியது அவசியம். அதே போல சில கேள்விகளுக்கான பதிலை கண்டு கொள்ளும் ஆர்வமும் தெளிவடைய முடியுமா என்ற முயற்சியும் அவசியம் தான்... நீங்கள் எல்லாம் அறிவார்ந்து சிந்திக்கிறீர்கள், கருத்துகளை பகிர்ந்து கொள்கிறீர்கள் எனவே இது பற்றியும் பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும் சில படிகள் படிப்பார் முன்னேற்றம் பெற...
 நன்றிகளுடன்...



அத்தேவர் தேவர் அவர் தேவர் என்றிங்கு
பொய்த் தேவுப் பேசி புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாது பற்றற நான் பற்றி நின்று
மெய்த் தேவர் தேவுக்கே  சென்றூதாய் கோத்தும்பி.. 

( கல் ஏன் மலர் ஏன் கனிந்த நல் அன்பே பூஜை என்ற 
நல்லோர் பொல்லா எனையும் நாடுவரோ பைங்கிளியே
சினம் அடக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே 
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...தாயுமானவர் பராபரக்கண்ணி.

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர் பூஜை கொள்ள வாராய் பராபரமே!

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனதென்றவரவரை கூத்தாட்டும்
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே...

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே...
 ‍‍‍ திருமூலர்

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...திருமூலர்

மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே...அகத்தியர்

அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை எல்லா நூல்களிலுமே மனோ நிக்ரஹமே வழி என்று சொல்லப் பட்டிருபதால் அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை...இரமண மஹரிஷி...

நினைவென்ற ஒன்றை உரித்துப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்று இல்லை...இரமணர்.)

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




Sunday, September 25, 2022

பென்ஷன்' வாங்காத ஒரே எம்.பி.,

 


ஒரு முன்னாள் எம்.பி.,யால், ராஜ்யசபா தலைவருக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த முன்னாள் எம்.பி., ஜோதி. வழக்கறிஞரான இவர், ஜெயலலிதாவின் வழக்குகளை முன்னின்று நடத்தி, பல வழக்குகளில் வெற்றியும் பெற்றவர்.பின் சசிகலா, ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரச்னையால் தி.மு.க.,வில் இணைந்து, இப்போது அரசியலிலிருந்து ஒதுங்கி வக்கீல் தொழில் செய்து வருகிறார்.

பென்ஷன், இலவச ரயில் பயணம் போன்ற சலுகைகளை உயர்த்த வேண்டும் என ஓய்வு பெற்ற எம்.பி.,க்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஜோதி, தன் எம்.பி., பதவிக்கான ஓய்வு ஊதியத்தை வாங்க மறுத்துவிட்டார். அதோடு அவருக்கு கிடைக்கும் ரயில் பயண சலுகை, மருத்துவ சலுகைகள் எதையுமே அவர் பெற்றுக் கொள்ளவில்லை.இது, ராஜ்யசபா அலுவலகத்தில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஜோதியின் பென்ஷன் பணம் அதிகமாக சேர்ந்துள்ளது. இதை என்ன செய்வது என அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தை ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரிடம் தெரிவித்தனர்.ஆச்சரியப்பட்ட தன்கர், இந்தியாவிலேயே ஜோதி ஒருவர் தான் பென்ஷன் வாங்காத முன்னாள் எம்.பி., என பாராட்டியுள்ளார். இதற்கு தீர்வு என்ன என இவர் கேட்க, இந்த பணத்தை அரசிடம் வழங்க ராஜ்யசபாவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.

thanks: Dinamalar 25.09.2022

இப்படியும் வெகு சில அரிய மனிதர்கள் இருக்கிறார்கள் . சுயநலத்தை தியாகம் செய்து நாட்டுக்கு விட்டுக் கொடுக்கும் போக்கு நாட்டுக்கு பணியாற்ற/பணியாற்றியதற்கு ஓய்வூதியம் எதற்கு என்று சொல்லும் போக்கு ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளிடம் வந்து விட்டாலே அதிலிருந்து நல்ல விடியல் வரலாம். இவர் இராஜ்ய சபாவின் உறுப்பினராக இருந்திருக்கிறார். சிலர் ஊதியம் வாங்காமலே கூட பணியாற்ற முன் வரலாம். ஏன் எனில் அவ்வளவு நல்ல நிலையில் இருந்தபடியே அரசியல் பதவியில் இருக்கிறார்கள்....ஊதியம் இல்லாமல் இருப்பார்க்கே அரசியல் பிரதிநிதியாக இருக்கலாம் என்ற ஒரு நிலை வந்தால் எப்படி இருக்கும் என யோசிக்கலாம். அது போன்ற காலமும் வரலாம். வரவேண்டும். அதாவது மக்களுக்கான பணியாற்றும் பராமரிப்பு செலவன்றி தனியாக அவர்களுக்கு ஊதியம் என்ற ஒன்றே இல்லை என்ற நிலை என்பதை சிந்திக்கலாம்.
சுதந்திரப் போர்த் தியாகிகள்  இப்படி எதையும்  பிரதிபலனாக  பெற மறுத்த செய்திகள் இருக்கின்றன‌

போற்றுகிறோம்.
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


Wednesday, September 21, 2022

எழுது அதை விடுவதாயில்லை...கவிஞர் தணிகை

 கால் நூற்றாண்டுக்கும் மேல்

காமம் பற்றி தெரிய காத்திருந்தேன்



அரை நூற்றாண்டுக்கும் மேல்

அன்பு பற்றி அறிந்து கொள்ள‌

முயன்றிருக்கிறேன்...


வாழ்க்கைப் புத்தகத்தின் பல பேரதிசய‌ ஏடுகள்

விரியும் போது மட்டுமே

புலப்படுகின்றன‌


நான் என் சிறந்த இறகுகளுடன்

மீண்டு(ம்) வருவேன்

என எவருமே நம்பவில்லை


திட்டமிடா ஒரு வாழ்வில்

நிர்பந்தம் எனை எழுதிச் செல்ல‌

எனக்கு(ம்) எந்த நம்பிக்கையும் இல்லை...


அட நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்

உயிர்ப்புடன் தான் இருக்கிறேன்...


எழுதுவதை விடுவதாயில்லை

எழுது அதை விடுவதாயில்லை...



           மறுபடியும் பூக்கும் வரை

                கவிஞர் தணிகை

பல் சுவைப் பாடங்கள்: கவிஞர் தணிகை

 காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்கு கத்துக் குடுத்தது யாருங்க?

பராசக்தி பாடல்



அது பகிர்ந்து மற்ற தம் இனத்தையும் அழைத்தே உண்ணும் ....


காக்கை குருவி எங்கள் ஜாதி...பாரதி...


தானிய மணிகளை பறவைக் கூட்டத்துக்கு இறைத்து விட்டு பட்டினி கிடந்ததாக பாரதி வாழ்விலுண்டு,


நிறைய பேர் தீனியும் குடி நீரும் காக்கை, குருவி, கிளிகள், புறாக்கள் என வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


எனது நினைவுக்கு எட்டிய வரையில் என்னால் முடிந்த அளவு செய்து  வருகிறேன் பல்லாண்டுகளாக.


காக்கா வளர்க்கிறார் என்று எனை சொன்னதும் உண்டு, உணவைக் கையிலேயே வாங்கி அவை உண்டு செல்வதுமுண்டு.


அதெல்லாம் பழைய கதையாக‌


இப்போது காகங்கள் சப்பாத்தி , பூரி என்றால் பார்த்து இறங்கி போட்டி போட்டுக் கொண்டு எடுத்துக் கொள்கின்றன மற்ற காகங்களுக்கு கிடைக்காமலே அழைக்காமலே மூக்கு நிறைய வாய் நிறைய தாம் ஒன்றேகூட‌....


அதுவே தோசை, இட்டிலி, உப்புமா போன்ற உணவுவகைகளை வந்து பார்த்து விட்டு அப்பால் பறந்தோடி விடுவதை நான் பார்த்து வருகிறேன்...காக்கைகளுக்கும் இனிசுலின் சுரப்பி...நீரிழிவு வியாதி இருக்குமோ...இல்லை இல்லை இவற்றை வைத்திருந்து பின்னால் உண்ண இந்த வகை உணவு ஏற்றதாக இருக்கிறது போலும்...


கூடு கட்ட கம்பி தேடும் காகங்கள்...இந்த உணவை ஒரு வாயும் நீர் ஒரு வாயும் எடுத்து உண்ணுவதைக் காண்கிறேன்


உடனே அழைத்தவுடன் வந்தாலும் வராவிட்டாலும் போடுவதுடன் நம் கடமை முடிந்தது அவை வரும்போது வரட்டும் எடுக்கும் போது எடுத்துக் கொள்ளட்டும் என நிலைகளும் வந்து விட்டன...


எனவே இந்தப் பதிவு மூலம் நான் மனிதம் பற்றி எதையுமே குறிப்பிட விரும்பவில்லை...


மீன்களுக்கு கொண்டு செல்லும் மதிய உணவை ஏன் அதற்காகவே பிரட் போன்ற உணவுகளை வாங்கிக் கொண்டுவந்து போடும் நண்பர் ஒருவரையும் நான் கொண்டதுண்டு.


மயில்கள் நிறைய பெருகி விட்டன... நாங்கள் வாழும் பகுதிகளில், பணி புரிந்த பகுதிகளிலும்...


பன்றிகள் செடி , கொடிகள், புற்களை மேய்ந்து வருவதைக் கண்டு வருகிறேஎன்... எங்கள் ஊரில்.

பசுக்கள்,மாடுகள் காகிதத்தை நகர்புறச் சாலைகளில் உண்டு வருவதையும் கண்டு வருகிறேன்..


மறுபடியும் பூக்கும் வரை

                கவிஞர் தணிகை


Tuesday, September 13, 2022

தெய்வம் என்று சொல்லும்: கவிஞர் தணிகை

 தெய்வம் என்று சொல்லும்: கவிஞர் தணிகை



சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கும் முன் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில்

இலண்டனில் உள்ள தலைமை நீதி மன்றம்


சர் ஆர்தர் தாமஸ் காட்டன் குற்றவாளிக் கூண்டில்.


தலைமை நீதிபதி டேனியல் கேட்கிறார் அரசுத் தலைமை வழக்கறிஞரிடம்:

"இவரின் குற்றம் என்ன?"


இவர் நமது இங்கிலாந்து அரசின் சார்பாக இந்தியா அனுப்பப் பட்டவர், நீர் வளப் பொறியாளர்.

நமது அரசுக்கு பெரும் செலவு வைத்து நமது அரசுடன் ஒத்துழைக்காது இருந்திருக்கிறார்

இந்தியாவின் நீர் வளத் தந்தை ஆகி விட்டார்.


தலைமை நீதிபதி: தங்களின் விளக்கம் என்ன காட்டன் அவர்களே:

சரி ஆர்தர் தாமஸ் காட்டன் பதில்: 

நீங்கள் நமது நாட்டின் அரசுக்கு மகத்துவம் தேடுகிறீர், 

நானோ மானிடத்துக்கு மகத்துவம் தேடினேன்.


குற்றவாளியே தமது அரசுக்கு துரோகம் இழைத்ததை ஒத்துக் கொள்வதால் 

அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும்  30,000 பவுண்ட் அபராதமும் கட்ட தீர்ப்பளிக்கிறேன்.


வெள்ளை ஆங்கிலேயே அரசு யாரையுமே விசாரணையின்றி தண்டித்ததே இல்லை.


1947 இந்தியாவிடமிருந்து வெள்ளை அரசு ஓட்டம் பிடித்தது. 

இந்தியாவின் நீர் வளத் தந்தையான  சர்.ஆர்தர் தாமஸ்  காட்டன் கோதாவரி ஆற்றங்கரையில்,காவிரி கல்லணையில்,இன்னும் பல்வேறு நீர்நிலைகளில் இந்தியாவில் பல இடங்களில்...

 இன்றும் என்றும் நின்று மாலை மரியாதைகளுடன்  சிரித்தபடி இருக்கிறார்.


 மறுபடியும் பூக்கும் வரை

 கவிஞர் தணிகை.

Monday, September 12, 2022

மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் 3 கி.மீ ஓடிச் சென்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்: கவிஞர் தணிகை

 



மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் 3 கி.மீ ஓடிச் சென்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்: கவிஞர் தணிகை



பெங்களூர் மணிப்பால் மருத்துவ மனையில் இரப்பை குடல் சிறப்புப் பிரிவின் மருத்துவரான கோவிந்த் நந்தகுமார் சர்ஜாபூரில் உள்ள மணிப்பால் மருத்துவ மனைக்கு ஒரு அவசர சிகிச்சை செய்ய செல்லும் போது வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டார். அது ஒரு அவசர லேப்ராஸ்கோபிக்  பித்தப் பை அறுவை சிகிச்சை. 


10 நிமிடம் காத்திருந்தும் வாகன வரிசை சிறிதும் அசையவில்லை. கூகுள் மேப்ஸ் நெரிசல் காரணமாக 45 நிமிடம் ஆகும் எனக் குறிப்பிட‌


காரிலிருந்து இறங்கி ஓடி 3 கி.மீ தொலைவைக் கடந்து மருத்துவமனை சென்று வெற்றிகரமாக தமது அறுவை சிகிச்சையை செய்து முடித்திருக்கிறார்.


தாம் உடற்பயிற்சி தினமும் செய்து வருவதால் 3 கீ.மீ ஓடி வருவது எனக்கு எளிதாக இருந்தது. எனவே குறித்த  நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு வர முடிந்தது என்கிறார். மேலும் அறிவோம் பாராட்டுவோம் இது போன்ற அரிய நல்ல மனிதர்களை நன்றி. வணக்கம்.


நன்றி: புதிய தலைமுறை.12.09.22


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



Thursday, September 8, 2022

வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்

 

                                            வாழ்வாங்கு வாழ   வாழ்த்துகள்

 

     பவித்ரா B.E;B.Ed,                                                      K..கிரிநாத் ME

     மென் பொறியாளர்                                                 IT ANALYST TCS

     SILICON VALLEY BANK                                            BANGALORE

 

 


                       நாள்: வெள்ளி 09.09. 2022:காலை 6 மணி முதல் 7.25

                                பிரசன்ன விநாயகர் திருக்கோயில்

                        ஜி.வி. கலையரங்க வரவேற்பு உடுமலைப் பேட்டை

                        தாரமங்களம் செங்குந்தர் திருமண மண்டப வரவேற்பு

:                           17.09.22 நண்பகல் 12 மணி முதல் 15 வரை


                                          இன்னும் மாறாமல் இருக்கும்

                                                 இந்த வீட்டில் பிறந்த

                                       பெண்குழந்தை ஹேமலதா

                                      பெற்ற இரு செல்வங்களுள்

                                            மூத்தவள் பவித்ரா.

 

                                     மாவட்ட அளவில் கல்வியில்

                                           முன்னிருந்து பூத்தவள்

                                     மதிப்பெண் அதிகம் பெற்ற

                                                  மதிப் பெண்

 

                                                 கலாம் கால் பதித்த

                                                       எம்..டியில்

                                              மெரிட்டில் இடம் பெற்று

                                             பொறியியல் படித்தவர்



                                                                      K.கிரிநாத்

                                                   கரம் பிடிக்கும் இந்நாளில்

                                                   நினைவுகளின் ஊர்வலம்

                                                           நிழலின் பயணம்

                                                    நிஜங்களின் பா(ர்)வை

 

                             திருமணத்தில் கலந்து கொள்ளாமைக்கு

                                         இடும் வாய்ப்பந்தலா இது?

                                       இல்லை வாய்ப்பு பந்தல்!

 

                                             ஹேமலதா கரம் பிடித்த

                                              குட்டி () பழனிவேல்

                                            எனது இளைய சகோதரர்

                                                     என்பதை விட

                                    கயிலாய நாதர் ஆலயத்தில்

                             நான் எனது கவிதையை விவரிக்க

                                         கேட்டிருந்த சிறுவர்

 

                                                இன்று ஊர் போற்றும்

                                                    நல்லாசிரியர்

                                                      தம்பதிகள்

                                                நல்வாழ்வின்

                                               அடையாளம்.

 

                             மகன் வாங்கிய பரிசுத் தட்டிலும்

                        இவர்கள் வழங்கிய அன்புத் தட்டிலும்

                                இன்று உணவருந்துகிறேன்.

 

                                                          தம்பதிகள்

                                                 வாழ்வாங்கு வாழ

                              குடும்பத்துடன் வாழ்த்துகிறேன்.

 

                                                கவிஞர் தணிகை

                                                .சண்முகவடிவு

                                              ..ரா.சு. மணியம்.