Monday, October 30, 2023

அம்பத்தூர் முதல் அமெரிக்கா வரை: கவிஞர் தணிகை

 கடந்த சில நாட்களாக நாட்டில் அல்லது உலகில் நடந்தேறி வரும் சம்பவங்கள் மிகவும் உற்று நோக்கி கவனிக்க‌த் தக்கவை சாதாரணமாக எல்லா செய்திகளையும் போல புறந் தள்ளி விட்டு செல்லக் கூடியவனவாய் இல்லை. அமைதியாக இருக்க முடியவில்லை.



1. அம்பத்தூரில் ஆய்த பூஜைக்காக இரு சார இந்திய வட மாநில இளைஞர் கூட்டம் மோதிக் கொள்வதும் அதைத் தடுக்கச் சென்ற அல்லது சமாதனம் செய்யச் சென்ற காவல் துறையினரை அந்தக் கூட்டத்தினர் ஓட ஓடத் துரத்தி அடித்ததும் அதன் பின் உடனே அல்லது விரைவாக 33 பேர் காவல் துறையினரின் கட்டுப் பாட்டில் எடுத்ததும்...


ஒவ்வொரு தனி மனிதச் செயலும் நாட்டின் அல்லது உலகின் ஒட்டு மொத்த நன்மை தீமைகளுக்கு வித்தாகிறது 


மகாத்மா காவலரையும், இராணுவத்தினரையும் அவரவர் கடமையைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


மக்களின் எண்ணமே அரசு , அரசின் எண்ணமே காவல் துறை அந்தத் துறைக்கே இது போன்ற நிலை என்றால் பிற துறைகள் பற்றி சொல்லவே வேண்டாம்.


மகாத்மாவின் இராமராஜ்ஜியக் கனவிலும், கம்யூனிலும் காவல் துறைக்கு வேலை இல்லை. ஆனால் அது போன்ற வானமே தொடு தூர ஆட்சி வரும் வரை காவல் துறை இருந்து தான் ஆக வேண்டும்.


2. கேரளத்தின் வழிபாட்டுத் தலத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்தவர் தமது பக்க நியாயம் பற்றி விளக்குவதான காணொலி...இழந்து போன ஒரு மனித உயிர்க்கும்,காயம் பட்ட பலருக்கும் நீதியாக அமைந்து விடப் போவதில்லை.


3. இஸ்ரேல் பாலஸ்தீனிய யுத்தம், ரஷ்யா உக்ரைன் போன்ற போர்கள் சொல்லொணா மனித குலத்தின் மேல் நடத்தப் படும் தாக்குதல்கள் உயிர்சேதங்கள், பொருட் சேதங்கள், பெட்ரோலியப் பொருட்கள் மேல் தாக்க அதன் விலை ஏற்றம்


4. அமெரிக்காவிலும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு மனிதர் பலரைக் கொன்ற பின் பிணமாகக் கிடந்ததாகச் செய்தி.


பொதுவாக உலகும் மாந்தர்களும் முக்கியமாக அதிக மக்கள் தொகை உடைய இந்தியா போன்ற நாட்டு மக்களும் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி மிக விரைவாக நகர்ந்து வருகிறார்கள் அதன் விளைவுகளே யாவும்.அப்படி செல்லும் போது 3 தலைமுறைகளில் குலம் அழிந்து விடும் என்று விவேகனந்தா போன்ற ஆன்ம நேயர்கள் கருதி எச்சரித்துள்ளனர்.


இவற்றை எல்லாம் அபாயச் சின்னங்களாகவே கருத வேண்டும், இவை சில சம்பவங்களே பெரும்பாலும் நாடும் மக்களும் உலகும் அமைதியாகத் தானே சென்று கொண்டிருக்கிறது....சேலம் கோட்டை மாரியம்மன் குட முழுக்குத் திருவிழாவில் முகமதிய நண்பர்கள் குடிநீர் போத்தல்களை அனைவர்க்கும் வழங்கி நெஞ்சை நெகிழ வைத்தார்களே அதுவும் சம்பவம் தானே செய்திதானே என சமாதானப் படுத்திக் கொள்ளக் கூடாது. சமாதனப் படுத்திக் கொள்ளவும் முடியாது.


இதில் மாநிலம், மத்தி, உலகு என்றவாறெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வழி இல்லை. ஆட்சி முறைகளில் சரியான அணுகுமுறை இல்லை என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. சாதாரண மனித உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற கருத்தே நிலைப்படுகிறது. விசாகப் பட்டினம்  ரயில் விபத்து உட்பட... காவல்துறையினரும் குடும்பம் என்ற அமைப்பின் அங்கங்கள் தானே, ஆட்சி அமைப்பின் கருவிகள் தாமே. BE PEACE DON'T BE AS A PIECE

what is the use of UNO ...?

கருத்துகள் வெளிப்பட‌

எண்ணங்கள் தெளிவாக‌

தியானம்




மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

கொசுக்களும் உயிர்கள்தாம் ஆனால் அவற்றை....


Monday, October 16, 2023

மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்: கவிஞர் தணிகை(எ)தணிகாசலம் சுவாமிகள்.

 மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்: கவிஞர் தணிகை



இல்லை என்றும் சொல்லலாம் இருக்கிறது என்றும் எண்ணிச் சொல்லலாம் எண்ணிக் கொள்ளலாம் அது எல்லா இடங்களிலும் வியாபித்து நீக்கமற நிறைந்து கிடக்கிறது என்பார் .


பொங்கு பல சமயமெனும் நதிகளெலாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப்... பொங்கி ஓங்கும் கங்கு கரை காணாத கடலே...எங்கும் கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர் தங்க நிழல் பரப்பி மயற் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச் செங்குமுதம் மலர வரு மதியே எல்லாம் செய வல்ல கடவுளே தேவ தேவே என்பார் இராமலிங்கர்


அத்தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன் பொய்த் தேவுப் பேசி புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாது பற்றற நான் பற்றி நின்ற மெய்த் தேவர் தேவுக்கே சென்றூதாய் கோத்தும்பி...


விவேகானந்தர் சொல்லியபடி கிணற்றுத் தவளை உவமைகளுடன்,எல்லா மதங்களும் நதிகளே...


வறுமையும். பிணிகளும், பஞ்சமும், பசியும் பட்டினியும் இன்னும் தீராமலே இருக்கையில் இயற்கையில் இயல்பில்


தானாக சாகும் வாய்ப்பு தவறாத உயிர்களை மின்சாரம், குடி நீர் உணவின்றி தவிக்க விடுவதும், இரக்கமின்றி கொன்று குவிப்பதுமாக மனித இனம் மல்லுக் கட்டிக் கொண்டு மனித குலம் அபாயகரமாக சென்று கொண்டிருக்கும் காலக் கட்டம்.


இன்றும் நோபெல்தான் உயர்ந்த மனிதகுலப் பரிசென்கிறார், அதை நிறுவிய ஆல்ப்ரட் நோபெல் தாம் டைனமைட் வெடிமருந்தைக் கண்டறிந்த போது அது பாறைகளைத் தகர்க்கும் வெடிமருந்து அது பலனளிக்கும் உயிர்களுக்கு என்றே கருத்துப் பதிவு செய்தார்.


ஆனால் சொல்லொணா கொடுமைகள்,,, பார்க்கவும் முடியா காட்சிகள்...நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்...


எந்நிலையில் இருந்தாலும் எவர் செய்தாலும் எவர் காரணமாக இருந்த போதும் வன்முறை தீர்வாகாது. எனவே தான் காந்தி மகாத்மா போன்றோர் தமிழர் நெறியில் வள்ளுவத்தில் சுட்டிய படி இன்னா செய்தாரை ஒறுத்தல்....என்று தனி மனித வாழ்வுக்கும்  வழி காட்டினார்....ஆனால் இன்று இனங்கள் ஒன்றுக்கொன்று அழித்துக் கொள்வதும், நாடு ஒன்றுக்கொன்று  அழித்துக் கொள்வதுமாக  சொல்லத் தரமன்று. சொல்வதில் தர்மம் என்று....


சமயத் தலைவர்களும், நாட்டின் தலைவர்களும் இதை எல்லாம் தடுக்கும் கடமையில் உள்ளார் அனைவரும் வாளாவிருக்கின்றனர். ஐ.நா சபை  என்பது வெறும் பேருடன் குறுகிக் கிடக்கிறது.


இந்த நேரத்தில் ஈனஸ்வரத்துடன் பிராத்தனை செய்வதன்றி என்போன்றோர்க்கு வழி இல்லை...மனித குலம்  இது போன்ற அழிவு அத்தனைக்கும் ஆணி வேராக விளங்கும் (அதிலிருந்து ஆரம்பிக்கும்) மதம், இன பேதம் ஒழிந்து வாழ்வாங்கு வாழ இயற்கையை பிரார்த்திப்போம்.


எம் மதம் எம் இறை என்ப உயிர்த்திரள்

அம்மதம் என்றருள்வாய் அருட் பெருஞ்ஜோதி...


சாதியும் மதமும் சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதி....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை. என்கிற தணிகாசல சுவாமிகள்.


Sunday, October 8, 2023

விசித்ராவும் பவா செல்லத்துரையும் பிக்பாஸ் நடப்பில் : கவிஞர் தணிகை

விசித்ராவும் பவா செல்லத்துரையும் பிக்பாஸ் நடப்பில் : கவிஞர் தணிகை.



 பவாவை ஒரு அறிவு ஜீவி என்று நினைக்கும்படி ஊடகவழி செய்திகள் இருந்தது இப்போது பிக்பாஸ் வழியே அந்த பிம்பங்கள் உடைய சாதாரண மனிதரை விட கீழ் இறக்கப் பட்டுள்ளார் எச்சில் துப்புவதை திருத்திக் கொள்ள மாட்டேன் என்றதன் மூலம். இவரது துணைவியாரே மலையாள மொழி நூலை தமிழ்படுத்தியவர் சரி அது படிக்காதவராக இருந்தால் எப்படி நடந்திருக்கும்?

 படிப்பு அவசியமில்லை, கையெழுத்து தெரிந்தார் நாட்டில் 30 சதம்தான் இருப்பர் அதனால் தவறில்லை என பொறுப்பில்லாமல் பேசி இருக்கிறார். மேலும் பாரதியாரும், புதுமைப் பித்தனும் கூட மெத்தப் படித்தாரில்லை ஆனால் அவர்களை தமிழ் கூறும் உலகம் தவிர்க்கவே முடியாது என்றார். ஆனால் பவா ஒன்றை மறந்து விட்டார் அவர்களை படிக்க வேண்டுமானாலும் பொதுவான படிப்பறிவு தேவைதான் என்பதை.அது முறையான கல்வியானாலும் சரி முறைசாராக் கல்வியானாலும் சரி. ஆர்வம் + முயற்சி இருந்தால்மட்டுமே அவர்களை அல்லது இலக்கியத்தை அனுபவிக்க முடியும். கதை சொல்லிகளுக்கு வேலையே இல்லை. அவரவர் படிக்க ஆரம்பிக்கும் போது.

 மேலும் விசித்ரா போன்ற முனைவர் பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கானவர்(5000அ15000) பேர் முன் கதை சொல்லி இருக்கிறேன். என எள்ளி நகையாட முயற்சிக்கிறார். படிக்க வேண்டும் என்று சொன்ன ஒரு கருத்தை எதிர்ப்பதாக எண்ணி. கதை படிப்பதும் கேட்பதும் அவரவர் விருப்பம். ஆனால் அவை யாவுமே உணவு உடை உறையுள் தேவைக்கடுத்துதான் . இலக்கியம் இன்னும் தமிழ் சார்ந்து சோறு போடுவதில்லை.முயற்சி நடந்தபடி உள்ளது அவற்றுக்கு முக்கியத்துவம் வேண்டி.

அதே பாரதியும் புதுமைப் பித்தனும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள் எப்படி துயரப்பட்டு வீழ்ந்தார்கள் என்பதையும் கதைசொல்வார் கவனிக்க வேண்டும். விசித்ராவை அவரது நிலையை அனைவரும் பாராட்ட வேண்டிய அவசியம் உள்ளது. படிக்க வேண்டும் என்று சொன்னதில் தவறு ஏதுமில்லை. தலைமுறை இடைவெளி என்பதெல்லாம் இல்லை. தாத்தாவின் மகன் அப்பாவின் மகன் மகன், அப்பத்தா,அம்மம்மா, பாட்டி மகள் அம்மா மகள் மகள் என்ற மனிதத் தொடர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அது மறுபடியும் எண்ணும் எழுத்தும் இல்லாத நாகரீகமில்லாத காட்டு மிராண்டித் தனத்திற்கே திரும்பி சென்று விட முடியாது. கூடாது. 

கமல் ஏதோ இருதரப்பையும் இணைத்தபடி பேசி ஒட்டும் வேலையை செய்ய முயல்கிறார். ஆனால் அப்பட்டமாகத் தெரிந்தது பவாவின் தோல்வியும் அழுதபடி இருந்தாலும் விசித்ராவின் வெற்றியும்.

 படிக்காமலே ஒரு பட்டறையில் சேர்ந்த படிக்காத பையன் ஒருவன் கூட மெக்கானிக் வேலை கற்றுக் கொண்டு சோத்துக்கு வழி தேடிக் கொள்ள முடியும் ஆனால் அந்த நிலையைத்தான் உலகம் எப்போதும் ஆதரிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி. சமுதாய அக்கறை உள்ளோரை எல்லாம் இதே போல அவமானப் படுத்திக் கொண்டே இருங்கள் விளங்கிடும்....மேலும் காட்சி ஊடகம் தான் வாழ்க்கை என்ற போக்கை வாழவேண்டிய நெறியுடனான சமுதாயத்தில் ஊற்றி ஊற்றி கெடுத்துக் கொண்டே இருக்காதீர்கள். 

 உண்மைதான்: நன்ற்றாற்றலுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந்தாற்றாக் கடை. 
 மறுபடியும் பூக்கும் வரை 
கவிஞர் தணிகை.

hamas and Israel problem, 
cauvery water issue
iran life losses
russia and ukrain war everything is after this only
so our opinion also necessary to add with it.

Saturday, October 7, 2023

வாட்ஸ் அப் தளங்களில் வருபவை பகிர்பவை யாவும் உண்மையல்ல: கவிஞர் தணிகை

 வாட்ஸ் அப் தளங்களில் வருபவை பகிர்பவை யாவும் உண்மையல்ல: கவிஞர் தணிகை



1.ரீல் விடுகிறார்கள். ரியலாக பகிர்வதைவிட.(TRY TO POST AND SHARE REAL NOT ADD REELS)

2.எது உண்மை எது பொய் என பிரித்தறியத் தெரியாதார்க்கு இவை பேரிடர் தரும். WASTE OF TIME


3.செய்தி ஊடகங்கள், அரசியல், சினிமா மற்றும் தொலைக்காட்சி அதன் தொடர்கள் யாவற்றிலும் இடம் பெறும் பெரும்பாலானவர்கள் வல்லுனர்கள் அல்ல. பள்ளிகள்  சென்று படிப்பதை கை விட்டவர்கள்.


4. எழுதுவது, படிப்பதை மற்றும்  தாய் மொழியில் கையெழுத்திடுவது தெரிவது கூட தேவையற்றது என வாய்வீச்சு பேசி வருகிறார்கள்.


6. ஊடகத்தை பயன்படுத்தும் அல்லது ஊடகம் பயன்படுத்தும் எல்லாருமே அண்ணாவாகவும், கருணாநிதிகளாகவும், காமராசர்களாகவும், எம்.ஜி.ஆர்களாகவும். ஜெயலலிதாக்களாகவும் ஆகி விட முடியாது.


7.திரைத் துறை மற்றும் தொலைக்காட்சித் தொடர் வியாபாரங்கள் மிகவும் உச்சத்தில் சென்று கொண்டிருப்பது அபாயகரமானது. எல்லாமே என்.எஸ்.கே ஆகவும் எம்.ஆர். ராதாவாகவும், பட்டுக் கோட்டையாகவும் இருக்க வழி இல்லை.


8. எதிர் வரும் இளந்தலைமுறை போதையில் இருந்து மீண்டாக வேண்டிய நிர்பந்தம் இருக்கையில் நமது கதாநாயகர்கள் வன்முறை நாயகர்களாக போலிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொழிலில் முகம் தெரிந்து விட்டால் ஒரு நாளைக்கு சுமார் 15,000 ரூபாய் வருவாய் ஈட்ட முடிகிறது என அதன் பக்கம் சாய்ந்து வரும் இளம் பட்டாளம் அதிக பார்வையாளர்களைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டும் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் கை கோர்த்து வரும் நிலையில் மேலும்அதிலும் கேரளத்து பைங்கிளிகள் ஆதிக்கத்துடன் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்... என தமிழ் கூறும் நல்லுலகம் சீரழிந்து வருகிறது. தொழில்கள் நசிந்து வருகின்றன‌


9. மஞ்சள் தூளில் பல் துலக்க சொல்வது பல் காறையை போக்கவில்லை மாறாக பல் வண்ணம் பற்றி கவலைப் படாதார்க்கு ஒரு கிருமி நாசினியாக பயன்படலாம்.


10. ரவையில் குலோப் ஜாமூன் செய்யச் சொல்வது சரிவரவில்லை என ஒரு இளம் பெண் கூவியிருக்கிறார்.


10. கறிவேப்பிலை அதிகாலை வெறும் வயிற்றில் உண்பது பெருமருந்து என்றார் தமிழருவி மணியன் ஆனால் அது பக்க விளைவை ஏற்படுத்தி உடல் சூட்டை வயிற்றுச் சூட்டை பெருக்க காரணியானது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.


11. சிவகுமார் போன்றோர் நல்லபடியாக ஆக்க பூர்வமான செய்திகளைச் சொல்கின்றனர். அதை எவரும் கேட்க இல்லை. அவர் பல்லில் காபி பட்டே 65 ஆண்டுகள் ஆகியது என்கிறார் மற்ற நல்ல பழக்க வழக்கங்கள் உடைய 81 வயது  திரையுலக மார்க்கண்டேயன் கெட்ட பழக்கம் ஏதுமில்லை தன்னிடம் என கட்டியங் கூறுகிறார்.

WHATS APP SHARING ARE MOSTLY FAKE AND  REPEATED: KAVIGNAR THANIGAI

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை






Thursday, October 5, 2023

இராமலிங்க வள்ளலார்: கவிஞர் தணிகை

 இராமலிங்க வள்ளலார்: கவிஞர் தணிகை



200 ஆம் ஆண்டு வருவிக்கை நாள் இன்று என்று இராமலிங்க வள்ளலார் பற்றிய பிறந்த நாளைக் குறிப்பிடுகிறார்கள்.


தனிப்பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி.


ஜீவகாருண்யம் பசி தீர்த்தல் மனிதநேயத்தின் கடமை என வடலூர் அணையா அடுப்பும் ஜோதியும்.


நாம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மகாத்மா காந்தி, இரவீந்த்ர நாத் தாகூர்,அம்பேத்கார் போன்றோரை கொண்டாடும் அளவுக்கு அவர்கள் அதாவது வடக்கு மாநிலத்தார் மகாக் கவி பாரதியையும்,இராமலிங்க வள்ளலாரையும், பெரியாரையும் கொண்டாடுகிறார்களா என்று வடக்கே நகர்ந்து பாருங்கள் ஏன் யாம் இதைக் குறிப்பிடுகிறேன் எனத் தெளிவாகத் தெரியும்.எனது இளமையில் ஆந்திரா(பிரிவு படாத போது) கர்நாடகா, ம.பி,ஒரிஸ்ஸா, தலைநகர் புது டில்லி வரை வாழ்ந்ததன் அடிப்படையில்  இதை மொழிந்துள்ளேன்.


தினமும் எனது நினைவகத்தில் உள்ள சில வரிகளை அவர் தந்ததை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.


அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும் வலைக்குட்படும் பொருளே

அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

அன்பெனும் கரத்தமர்ந்த அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிய கடலே

அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே

அம்பெனும் பர சிவமே!


பெற்ற தாய் தனை மகமறந்தாலும்

பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பதுவே மறந்தாலும்

நற்றவத்துள்ளிருந்தோங்கும் நமசிவாயத்தை

நான் மறவேனே.


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 

உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமை மிகு நினது புகழ் பேச வேண்டும்

பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்

மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்

உனை மறவாதிருக்க வேண்டும்

மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்

நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்...


சாதியும் மதமும் சமயமும் பொய் என‌

ஆதியில் உணர்த்திய‌ அருட் பெருஞ்ஜோதி

எம் மதம் எம் இறை என்ப உயிர்த் திரள்

அம் மதம் என்றருள் அருட் பெருஞ் ஜோதி

நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்

ஆயினும் அருளிய அருட் பெருஞ் ஜோதி.


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி

உள்ளே ஒத்துரிமையாய்  உடையவராய் உவக்கின்றார் யாவரவர்

உளம்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம்

எனத் தேர்ந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட‌

என் சிந்தை மிக விழைந்ததாலோ!.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Wednesday, October 4, 2023

திருப்பூர் குமரனின் ஊர் திருப்பூர் அல்ல: கவிஞர் தணிகை

 திருப்பூர் குமரனின் ஊர் திருப்பூர் அல்ல: கவிஞர் தணிகை



கொடி காத்த குமரன் என்றும் திருப்பூர் குமரன் என்றும் அழைக்கப்படும் குமாரசாமி சென்னிமலையில் பிறந்து வாழ்ந்தவர்.சுமார் 28 ஆண்டுகள் வாழ்ந்து சரித்திரப் புகழ் பெற்றவர்.எனது இளமையில் தினமணி தீபாவளி மலர் ஒன்றில் முதன் முதலாக இவரின் ஊர் திருப்பூர் அல்ல என்பதும் இவர் பற்றிய நல்ல கருத்துகளையும் வெளியிட்டிருந்ததை படிக்க நேர்ந்தது. அது முதல் எல்லா சந்திப்புக் கூட்டங்களிலும் அதை நான் எனது உரை வீச்சில் குறிப்பிடத் தவறுவதேயில்லை.


 நெசவாளர் குடும்பம். ஒரு திருமணத்திற்கு மொய் ரூ.1 வீதம் ஒரே நேரத்தில் வந்த‌ எட்டு திருமணத்திற்கு மொய் ரூபாய் எட்டை வைக்க வழியின்றிப் போனதால் துக்கத்தோடும், வெட்கத்தோடும் அவமானமாகி விடுமே என்று கூச்சம் தாங்காமல் இரவோடு இரவாக வீட்டைக் காலி செய்து கொண்டு சென்னிமலையில் இருந்து திருப்பூர் வந்து குடியேறுகிறார்.அதன் பின் நடந்ததை நாடறியும் உலகறியும்.


கல்வி என்பது கற்றுக் கொள்ள,கற்றுக் கொள்வதை வாழ்வில் பயன்படுத்த.


1904 அக்டோபர் 4 முதல் 1932 சனவரி 11 வரை வாழ்ந்த இவர் வாழ்வு எனக்கு படிப்பினைத் தர 1991 ஜனவரி 21 அன்று அல்ல அதற்கும் முன்பிருந்தே திட்டமிட்டிருந்ததை அன்று முதல் அமல்படுத்தினேன்  எங்கள் குடும்பத்தில்.அதைப் படித்தது முதல் எங்கள் குடும்பத்திலும் நிலவி வந்த அந்த தீய பழக்கத்திலிருந்து எங்கள் குடும்பத்தை விடுவித்து விட்டேன்.


அதாவது வரதட்சணைக் கொடுமை போன்றதே இந்த மொய் கலாச்சாரமும். எனவே மொய் வாங்குவதில்லை வைப்பதுமில்லை என்ற நெறிக்குள் வந்து விட்டேன். எனது தங்கை மணம் முதல் அதை அமல்படுத்தி பல்லாண்டுகளாக பயணம் வந்து விட்டேன். இன்றைக்கு அந்த நெறியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. என்னால் முடிந்தால் சிறு அன்பளிப்புகள் செய்து விட்டு நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.அல்லது எனது புத்தகங்களின் அன்பளிப்புகள் தாம் வாழ்த்துகளுடன்.


சீட்டுப் பணத்தை ஏமாற்றிச் செல்கிறார்கள் என்ற காரணத்தால் எனது தாயையும் சீட்டு போன்றவை அவசியமில்லை எனக் கட்டுப் படுத்தி விட்டேன். அவற்றை நடத்துவதும் கட்டுவதுமில்லை.


இன்சூரன்ஸ்  ....வாழ்வுக் காப்புறுதி அவசியமில்லை என்று காந்தியம் சொல்வதால் அதையும் நாங்கள் செய்து கொள்வதில்லை


எங்கள் வாழ்வில் பெரிதாக சேமிப்பு என்று ஏதுமில்லை, சிக்கனம் தான் சேமிப்பு.


திருப்பூர் குமரனின் நாளில் இதை எல்லாம் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது, இவர் மட்டுமல்ல சுப்ரமண்ய சிவா பிறந்த நாளும் இன்றைய தினத்தில்...மகாக் கவி பாரதி, சிவா, செக்கிழுத்த செம்மல் போன்றோர் ஒரு குழுவாக பெரு நட்புடன் விடுதலைப் போராட்டத்தில் பாடுபட்டு தங்கள் வாழ்க்கையுடன் தங்கள் உடலையும் குடும்ப வாழ்க்கையையும் வேதனைப் படுத்திக் கொண்ட‌வரலாறு என் போன்றோருடன் இன்னும் வாழ்கிறது.

நூற்றாண்டுகள் கடந்தும் இவை வாழும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.