Monday, September 25, 2017

இதைப் படித்தால் அவர்கள் புத்திசாலிகளாகத் தெரிகிறதே: கவிஞர் தணிகை

இதைப் படித்தால் அவர்கள் புத்திசாலிகளாகத் தெரிகிறதே: கவிஞர் தணிகை


Related image
பயணிகள் ரயிலில் சமோசா விற்கும் ஒருவர் ஒரு சராசரி நாளில் குறைந்தது 3000 சமோசா விற்று ஒரு சமோசாவுக்கு ரூ ஒன்றை கூலியாக சம்பாதித்து தினமும் குறைந்தது 3000 ரூபாய் உதியம் பெறுவதாகவும் ஞாயிறுகளில் அது 5000 ஆகி விடுவதாகவும் ஆக மாதம் ஒன்றுக்கு சராசரி ஒரு இலட்சம் எந்த ஜி.எஸ்.டி வரியும் இல்லாமலே ஊதியம் கிடைத்து விடுவதாகவும்,,, படித்த நன்றாக ஆடை அணிந்த அலுவலகப் பணிக்குப் போகும் சராசரி மனிதெரல்லாம் இவர் முன் எம்மாத்திரம் பொருளாதரத்தில் என...


Image result for samosa seller in train



முதலில் முதல் இல்லாமலே சமோசாவை எடுத்து வந்து விற்பதும்...விற்ற‌

அந்தப் பணத்தையும் விற்றுமுடித்த பின் சென்று கட்ட வேண்டியது என்றும் அதிலிருந்து ஒரு சமோசாவுக்கு ஒரு ரூபாய் வருவாய் கிடைக்கும் என்ற முதல் இல்லாத வியாபாரமாகவும்...




நிறைய வங்கி இருப்பு, நிறைய சொத்து சுகம் உள்ளது அந்த அழுக்கு ஆடைக்குள் என ஒரு மின்னஞ்சல் நண்பரால அனுப்பப் பட்டிருந்தது..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, September 22, 2017

சுற்றுச்சூழலுக்கிசைந்த உயிரியல் உலை

அறிவியல் கதிர் 
சுற்றுச்சூழலுக்கிசைந்த உயிரியல் உலை
பேராசிரியர் கே. ராஜு
Image result for waste water cleaning plant at pondicherry
Image result for waste water cleaning plant at pondicherry

     புதுச்சேரி ஒரு அழகான, சுத்தமான, அமைதியான சுற்றுலா செல்வதற்கேற்ற இடம். பிரான்ஸ் தேசத்தின் காலனியாக இருந்ததால் அந்நாட்டு கட்டடக்கலை, பண்பாட்டுக் கூறுகளின் மிச்சசொச்சங்கள் உள்ள இடம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.ஏ. அப்பாஸி ஓர் எளிமையான, அதிக செலவில்லாத ஆனால் செயல்திறன் மிக்க கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை வடிவமைத்துள்ளார். அதன் பெயர் ஷெஃப்ரால் (Sheet Flow Root Level or SHEFROL) உயிரியல் உலை. ஒரு தரமான கழிவுநீர் சுத்திகரிக்கும் ஆலையின் விலை சுமார் 50 லட்சம். ஆனால் ஷெஃப்ராலின் விலை 20,000 ரூபாய் மட்டுமே. 
     கழிவு நீரில் உள்ள ரசாயனங்கள், நோய்க்கிருமிகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றை உறிஞ்சி எடுக்க நீர்த்தாவரங்களைப் பயன்படுத்துவதால் இது ஒரு பசுமைத் தொழில்நுட்பம். நான்கு இலைகள் உள்ள தீவனப்புல் (clover), பதுமராகம் (water hyacinth) ஆகிய இரு நீர்த்தாவரங்களும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் கழிவு நீரைச் சுத்தப்படுத்தும் இயற்கைக் கருவிகளாக செயல்படுகின்றன. சுத்தப்படுத்தும் கருவியில் உள்ள குழிகள் மற்றும் நீர்வழிப் பாதைகளுக்கு மேல் நீர் ஊடுருவமுடியாத தகடுகள் பொருத்தப்படுகின்றன. தகடுகளுக்கு மேல் வளர்க்கப்படும் நீர்த்தாவரங்களுக்கு ஊடாக கழிவு நீர் மெல்ல ஓட விடப்படுகிறது. கழிவு நீரில் உள்ள நச்சுகள் அகற்றப்பட்டு,  சுத்திகரிக்கப்பட்ட பிறகு விளைநிலங்கள், தோட்டங்களில் உள்ள பயிர்களுக்குப் பாய்ச்சப்படுகிறது.
     தாவர வேர்கள், தண்ணீர், நுண்ணுயிரிகள் ஆகியவற்றிடையே உள்ள நெருங்கிய தொடர்பின் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்குள் கழிவுநீர் சுத்திகரிப்பில் 80 சதவீதம் முடிந்துவிடுகிறது. இதே அளவு சுத்திகரிப்பை அடைய மற்ற முறைகளில் 2 நாட்கள்  அல்லது அதற்கு மேலேயே கூட ஆகும்.
     சுத்திகரிக்கும் பணியை சோதித்து அறிந்த பிறகு 2005-ம் ஆண்டிலேயே பேராசிரியர் அப்பாஸி, அவருடன் பணிபுரியும் எஸ்.கஜலட்சுமி, தஸ்நீம் அப்பாஸ் ஆகிய இருவர் இணைந்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாதிரி ஆலையை அமைத்துவிட்டனர். 2011-ம் ஆண்டில் உயிரியல் தொழில்நுட்பத் துறையிலிருந்து நிதியுதவி கிடைத்தது. மூவரும் காப்புரிமைக்குப் பதிவு செய்துவிட்டு இந்தியக் காப்புரிமை அலுவலகத்தின் அதிகாரபூர்வ இதழில் தங்களது கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையை வெளியிட்டனர்.  
     2014-ம் ஆண்டில் உதவிப் பேராசிரியர் தஸ்நீம் அப்பாஸின் வழிகாட்டுதலில் புதுச்சேரி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் அஷ்ரஃப் பட்  தன்னுடைய ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக சின்ன காலாபெட்டில் ஒரு ஷெஃப்ரால் ஆலையை நிறுவினார். ஷெஃப்ரால் ஆலையை நிறுவுவது எளிது எனவும் பராமரிப்புச் செலவு குறைவுதான் எனவும் அவர் நிரூபித்தார்.  நமது தேவைக்கேற்றவாறு அதன் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும் முடியும். 10000 லிட்டர்கள் கொள்ளளவு உள்ள அந்த ஆலையில் 38 வீடுகளிலிருந்து கழிவு நீர் சேர்க்கப்பட்டது. கழிவு நீரைச் சுத்திகரிப்பதற்கு ஆறு மணி நேரத்தை மட்டுமே ஆலை எடுத்துக் கொள்கிறது. சுத்திகரிப்பதற்கு வேறு வேதியியல் பொருட்கள் எதையும் பயன்படுத்தத் தேவையில்லை. இடவமைப்பையும் (topography) புவி ஈர்ப்பு விசையையும் வைத்து ஆலை செயல்படுவதால் நீரை இறைக்க வேண்டிய தேவை எழுவதில்லை. இந்த எளிமையான ஆலையை நமது விருப்பப்படி நிறுவலாம்.. வேண்டாமெனில் எடுத்துவிடலாம்.
     ஷெஃப்ரால் ஆலையைக் கண்டுபிடித்தவர்கள் கழிவு நீரிலிருந்து அசுத்தங்களை அகற்றுவதற்கு சுற்றுச்சூழலுக்கு இசைவான இந்த முறையை இந்தியாவெங்கிலும் பல கிராமங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். கட்டணம் ஏதுமின்றி உதவி செய்யவும் காத்திருக்கின்றனர். பொதுவாக பல பகுதிகளில் கிடைக்கும்  நீர்த்தாவரங்களின் பட்டியலையும் அவர்கள் தயாரித்துள்ளனர்.
     தமிழ்நாட்டில் செயல்படும் சர்வம் (Sarvam) என்ற அரசுசாரா அமைப்பு மாநிலத்தின் பல கிராமங்களில் ஷெஃப்ரால் ஆலையை நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பல ஐரோப்பிய, மத்தியக்கிழக்கு நாடுகள் தங்கள் நாடுகளில் ஷெஃப்ரால் ஆலையை நிறுவ முன்வந்துள்ள செய்தி நமக்கு உற்சாகமூட்டுகிறது.

Sunday, September 17, 2017

இது ஒரு வியாதிக் காலம்: கவிஞர் தணிகை

இது ஒரு வியாதிக் காலம்: கவிஞர் தணிகை
Related image


வானம் மழையும் மப்பும் மந்தாரமாகவே இருக்கிறது. பூமியின் ஈரம் காயவில்லை.கொசுக்கள் ஏகமாக பெருகிவிட்டன.நிறைய சிறுவர் சிறுமிகளும், பெரியவர்களும் மாண்டுவிட்டனர் செய்தியாக வெளித்தெரியாமலே. நீர் இல்லை நீர் இல்லை என குடிக்கவே நீர் இல்லா நிலை மாறி இப்போது மழை வெள்ளமாக இல்லாமல் நிலத்தடி நீர் பெருகாமல் இந்த சிறு மழை நோய்க்கிருமிகளை பரவ வசதி அளித்து மக்களை நோகடித்து சாகடித்துக் கொண்டிருக்கிறது.

பல்லாண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற வியாதிகளின் காலம் வந்து மாந்தர்க்கு ஊறு செய்து பலவீனமாக இருக்கும் உடலை எடுத்து கசக்கிப் போட்டு உயிரைப் பறித்துச் சென்று விடுகிறது. எல்லா இடங்களிலும் சோகம் தவழ்ந்தாலும் திருவிழாக்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கின்றன.

முதலில் விநாயக சதுர்த்தி என்பார்கள், அப்புறம் சரஸ்வதி பூஜை அதன் பிறகு தீபாவளி அதன் பிறகு ஆங்கிலப் புத்தாண்டு இப்படி சொல்லிகொண்டே போவார்கள் மேலும் நடப்பதை எல்லாம் மறக்க மறைக்க தொலைக்காட்சிகளில் எல்லாம் மக்களை ஒரு ஆழ்மன அடிமைகளாக சீரியல் தொடர்கள், சிறுபிள்ளைகளை வைத்தும் நல்ல வருவாய் ஈட்டும் தொலைக்காட்சிகள்...

ஆனால் கொசுவை நம் நாட்டில் இன்னும் பெருக வைத்துக் கொண்டே இருக்கிறார்கள் சுத்தமில்லை, எமது சேலம் புதிய பெண் மாவட்ட ஆட்சித்தலைவரைக் கண்டிருக்கிறது அவராவது புகை மூட்டத்தை மது நாற்றத்தை பொதுக் கழிப்பிட அசிங்கங்களை குப்பைக் கூள நாற்றங்களைப் போக்க ஏதும் செய்வாராக ...

முன்னால் சிக்குன் குனியா என்று வந்தது, அதன் பிறகு டெங்கு, அதன் முன் எலிக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் இப்படி எதெல்லாம் இருக்கிறதோ அதன் பேரில் எல்லாம் எவ்வளவு அறிவியல் முன்னேறிய போதும் இந்த நாட்டிலிருந்து கொத்துக் கொத்தாக மக்களை அள்ளிச் செல்லும் இந்த வியாதிகளிலிருந்து எல்லாம் மீட்க வழியே இல்லை.
இறந்தவர் வீட்டு சோகம் பற்றி எல்லாம் இருக்கும் எவருமே கவலைப்படுவதாய்த் தெரியவில்லை.

உலகம் அதன் போக்கில் போய்க் கொண்டே இருக்கிறது. அப்படியேதான் போகும் அதுதான் அதன் இயல்பு.

நான் சிறு வயது குழந்தையாக இருந்தபோதே இப்படித்தான் பஞ்சம் பசி பட்டினி பிணி என்று ஒரு முறை வந்தது என என் தாய் கூறுவார். அப்போது எவரும் நடக்க முடியாமல் தவழ்ந்து போகவேண்டி இருந்ததாம். ஏன் என் தாயே கூட அப்படி இருந்ததாக சொல்வார். அடுத்து சிக்குன் குனியாவே என் தாயின் மறைவுக்கு காரணமாக ஆயிற்று.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே கொஞ்சம் காலத்துக்கு ஒரு முறை இப்படிப்பட்ட கொடும் கொண்டு போகும் வியாதிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. வரும் முன் காக்கும் அமைப்புகள் எதுவுமே கொண்டு போகப்படும் உயிர்களை தடுத்து நிறுத்தியதாகத் தெரியவில்லை.

வெள்ளை அணுக்கள் சிவப்பு அணுக்கள் என்னும் இரத்த அணுக்கள் மிகவும் குறைந்து விடுவதாகவும் இதற்கு பப்பாளி இலைச்சாறும், நிலவேம்புக் குடிநீருமே தக்க உடனடி மருந்துவமாக சொல்லப்பட்டாலும் காலம் கடந்த வைத்தியத்தாலும் உரிய நேரத்தில் கவனம் எடுத்துக் கொள்ளாததாலும் தனியார் மருத்துவமனை நம்பிக்கையாலுமே பெரிய எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.


Related image

நீரில் காற்றிலேயே பாக்டீரியாக்கள் உருவாகி புழுக்களாகி, அவை கொசுக்களாக மாறி இரத்தம் உறிஞ்சுகின்றன. மேலும் ஒரு நோயாளியின் காற்றின் வெளிப்பாட்டு சுவாச அருகாமையே கூட அடுத்தவருக்கு இந்த நோயை பரப்பி விடுவதாகவும் கருத்துகள் இருக்கின்றன.

மிகவும் அபாயமான காலக் கட்டம். இந்த சூழலில்தான் பொதுக் கழிப்பகங்களும் பொது இடங்களிலும் மனிதக் கழிவுகள் இந்த ஈரத்தில் கிருமி பரப்பும் மையங்களாக விளங்கி வருகின்றன....குப்பை கூளங்கள், நாற்றம் பரப்பும் பொது இடங்கள்,,,பிளாஸ்டிக் பைகளின் நீக்க முடியா கழிவுச்சாக்கடைகள்... மனிதம் அறிவு பூர்வமாகப் பேசுவதோடு சரி...பொது இடத்தில் புகையை ஊதி அடுத்தவரை சுவாசிக்கச் செய்வதும், குடித்து விட்டு உமிழ்வதும்...பொது இடங்களில் எச்சில் உமிழ்வதும்...சொல்லத் தரமில்லா வாழ்க்கை இன்றைய தமிழகம் அனுபவித்து வரும் வேளையில் யார் ஆள்வது என்ற போட்டியில் ஜெவை இவர்கள் நல்லவராக்கி விட்டார்கள்.\

இந்நிலையில் பொது மக்களுக்கு தகவல் தொடர்பு சாதனத்திற்கு 15 சதம் வரி, சாப்பிடும் உணவுக்கு 40 ரூபாய்க்கு வாங்கிய உணவை ரூ.55க்கு வாங்கும் நிலை சாப்பிடும் சாப்பாட்டுக்கும் குடிக்கும் நீருக்கும் உண்டான அவல நிலையுடன் படித்த மாணவ இளையோர்க்கு மாதம் ஒன்றுக்கு பணி செய்தாலும் 2000 , எனச் சம்பளம், அந்த வேலையும் கூட கிடைக்காத சூழல்கள் இது நாடல்ல காடு சுடுகாடு என்ற நிலைக்கு மக்களின் வாழ்வு நிலை வந்து விட்டது. ...இனி காலம் எப்போது எப்படி மாறப்போகிறது என கொடுத்து வைத்தவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எப்போதும் பயிர்களை விட களைகளே வேகமாகவும் அதிகமாகவும்  வளர்ந்து விடுகின்றன. போல கிருமிகள்...பெருகி...அரசியல் மனிதம் என்றும்...


Monday, September 11, 2017

அவள்தான் தலைமகள்: கவிஞர் தணிகை

அவள்தான் தலைமகள்: கவிஞர் தணிகை
Related image



குழந்தைகளை அதனதன் போக்கிலேயே விட்டு விட வேண்டும். சின்னஞ்ச்சிறு குழந்தைகளை அடிக்கடி இடுப்பிலும், தோளிலும், மாரிலும் தூக்கி வைத்துக் கொள்ளக் கூடாது நமது சூடு அந்தக் குழந்தைகளுக்கு தேவையில்லை. அந்தக் பழக்கம் நல்லதல்ல. அவை இயல்பாக வளர்ந்தால் அவற்றுக்கு நல்லது . இது தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வேதமாக எமக்குக் கிடைத்த பாடம்.

பிள்ளையே பிறக்காது என்ற கணவன் மனைவிக்கு குழந்தை பிறந்தால் எத்தனை சந்தோசம் தரும். அந்த சந்தோசத்தை எமது பெற்றோர்க்கு தந்தவள் இந்த தலைமகள். பொதுவாகவே முதலில் பிறக்கும் குழந்தைகள் தமது தந்தையை கொண்டிருக்கும். இதை பல இடங்களிலும் பல குடும்பங்களிலும் காணலாம்.

அப்போதிருந்த 2 பைசா அளவு பிரிட்டானியா பிஸ்கட்கள் இருக்கும் அதை கெமிகல் ஸ்டோரில் டின் டின்னாக வாங்கி வைத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் வைத்து விடுவார்களாம். அதை எடுத்து தின்று கொண்டு குழந்தைகள் அமைதியாகவே இருக்குமாம்.

முதல் பிள்ளையின் செல்லம் எல்லாம் அடுத்த குழந்தை பிறந்து விட்டால் சற்று குறையவே ஆரம்பிக்கும். அதுவும் எங்கள் வீட்டில் 5 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள், அத்துடன் ஒரு ஆண் குழந்தை இறந்து விட்டதாகவும் செய்தி. மேலும் அந்தக் காலத்தில் எல்லாம் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் எல்லாம் வரவே இல்லை. ஆணுறை, பெண்ணுறை, கருக்கலைப்பு என்பதெல்லாம் இல்லவே இல்லை. ஆனாலும் குழந்தைகள் நிறைய இருப்பதையே விரும்பும் குடும்பம் நிறை காலம் அது. இவை அல்லாமல் இயல்பாகவும் இயற்கையாகவும் கூட சில கருக்கள் கலைந்து இருக்கலாம் என்பார் எனது மற்றொரு மூத்த சகோதரி.

எப்படி கமல் தமது சாருஹாசன், சந்திரஹாசன் போன்றோரை அப்பா என்னும் ஸ்தானத்தில் வைத்து அண்ணன்களைப் பார்க்க முடிகிறதோ அது போல குழந்தைகளின் தொடர்ச்சி எங்கள் குடும்பத்திலும். ஒரு பெண்ணுக்கு மணமுடிக்கும் வயதில் ஒரு பெண் குழந்தை அம்மாவுக்கு கைக்குழந்தையாக  இருந்தது என்பதெல்லாம் உண்மை. இதில் கூச்சமோ வெட்கப்படவோ தெரியாத காலம்.

நான் சொல்ல வந்ததை விட்டு விட்டேன். இப்படி அதிகம் குழந்தை பிறந்து இருக்கும் போது மூத்த செல்லக் குழந்தையின் நிலை என்னவாயிருக்கும் என எண்ணிப் பார்க்க முடிகிறதா? இயல்பாகவே அதன் நிலை அமைப்பு மாறி அதன் தோளுக்கு மற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் அக்கறையும் தாயிடமிருந்து மாறி இருக்கும்.இருந்தது.

எனக்கு எல்லாம் சிறு வயதில் எனது சகோதரிகள் குளிக்க வைத்த நினைவு இன்னும் எனது நெஞ்சை விட்டு அகலவே இல்லை. அப்படி என்னை குளிக்க வைத்தவள் ஆடை அணிவித்தவர்கள் இரண்டு பேர். அதில் இந்த அங்கமுத்தம்மாள் மூத்தவர்.

ஒரு முறை என்னை விட்டு விட்டு இந்த எனக்கு மூத்த 4 பெண்களும் புகைப்படம் அப்போதெல்லாம் அதன் பேர் என்ன போட்டோதானே? எடுக்க ஒரு ஸ்டுடியோவுக்கு என்னை அழைத்துச் செல்லாமல் ஏமாற்றி விட்டு சென்றது பொறுக்காமல் அவர்களுடன் ஓடிச் சென்று இரட்டை ஜடையுடன் அதன் ரிப்பன்களுடன் அடம் பிடித்து நின்று எடுத்த போட்டோ இன்றும் எனது வீட்டில் உள்ளது.

எதுக்கு இவ்வளவு கஷ்டம் அனுபவித்தாய் என ஒரு முறைக் கேட்டதற்கு: நம்மை அடுத்து இருப்பவர்கள் பெண்பிள்ளைகள். மூத்த பிள்ளையே விடுதலை, விவாகரத்து  வாங்கிக் கொண்டு வந்து விட்டால் அந்தக் குடும்பத்தில் எப்படி மற்றவர்க்கெல்லாம் திருமணம் நடக்கும், அது ஒரு தடையாகிவிடாதா என்று பொறுத்துக் கொண்டேன். வாழ்ந்தேன் என்றாள். அவள் அந்தக் காலத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவள். அதன் பின் ஆசிரியை பயிற்சிக்கு படிக்க அழைப்புக் கடிதம் வந்ததாகவும், நர்சிங் பயிற்சிக்கு எல்லாம் வந்ததாகவும் எல்லாம் சொல்வார்கள்...ஆனால் ஏன் அவற்றுக்கு எல்லாம் போகவில்லை என்பதுதான் இன்று வரை தெரியவில்லை. இனி மேல் நேற்று புதைகுழிக்குள் போனவள் வந்து சொல்லவா போகிறாள்?

கதர் நூல் நூற்று வீட்டில் ஒரு வருவாயை தம்மால் முடிந்த அளவு பெருக்குவார்கள் , பூ விற்பார்கள், கெமிகல் சென்று கோலப்பொடி. எடுத்து வருவாரகள், அரப்பு பறித்துஇடிப்பார்கள், இப்படி செய்யாத வேலை என்றெல்லாம் ஒன்றுமில்லை. எமக்கு குளிக்க வைப்பார்கள், துணியை எல்லாம் துவைத்துத் தருவார்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

காலம் எப்படி எல்லாம் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விடுகிறது பாருங்கள். திருமணமாகாத பெண்கள் அவர்கள் மட்டுமே சமைப்பார்கள். அம்மாவின் பயிற்சி அப்படி. எல்லாமே நன்றாகவே இருக்கும் அந்தக் காலத்தில் அவர்கள் செய்த சமையல் இன்னும் மணமாயிருக்கிறது. பள்ளி படித்த முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் மீதி ஆன பேப்பர் நோட்டுப் புத்தகம் எல்லாவற்றையும் அரைத்து பேப்பர் கூடை போட்டு வைப்பார்கள். குடத்தையும், சொம்பையும் கவிழ்த்து வைத்து அதன் மேல் ஈரமான அரைத்த பேப்பரை போட்டு காய்ந்தவுடன் எடுப்பார்கள் அற்புதமான கூடைகள் தயாராக இருக்கும் அதில் வெந்தய வாடையும் இருக்கும்.

அது அவ்வளவு |ஸ்ட்ராங்காக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நிலைக்கும் மேல் அவளைப் படிக்காமல் அவளுடன் மற்றொரு சகோதரியும் அவளுடன் 2 வயது வித்தியாசத்தில் ஏறத்தாழ இருவருக்குமே சம வயது என்பதால் சகோதரிகள் மட்டுமல்லாமல் தோழிகளாகவும் இருந்தனர்.

நாள் இப்படியே போய்க் கொண்டிருக்கிறதே என வீட்டிலேயே ஒரு கைத்தறி நெசவு நெய்ய காக்குழி கால் வைத்து பெடல் கட்டைகளை அழுத்தி மிதித்து தறி நெய்வார்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா அதற்காக ஒரு பூமியில் குழியாய் பள்ளம் செய்து அதன் மேல் ஒரு திண்ணையில் அமர்ந்து பணி செய்வார்கள். அதற்கு படமரம். அந்த சேலைத் துணி போன்றவற்றை நெய்ய நெய்ய சுருட்டிக் கொள்ளுமே அதுதான்...வாங்கியாகிவிட்டது...

ஆனால் பெண் பார்க்க வந்து விட்டார்கள். காக்குழியை மூடி விட்டார்கள். அதன் அடையாளம் ஒரு நைஸ் காறையை சிமென்ட் குறைவாக இட்ட சொரசொரப்பான காறை வேறுபாட்டை காண்பித்தபடி இருக்கும் அந்த தரை தளம்தான் அதன் மேல்தான் இன்று தியானம் அமர்ந்து கொண்டிருக்கிறேன்.

முடிவும் தேர்வும் சரியானதாக இல்லை. எனவே வீட்டார்  பெற்றோர் தயங்கிக் கொண்டிருக்கும்போது வெண்ணந்தூரில் கைத்தறி நெய்து வரும் அந்த மாப்பிள்ளையையே மணம் செய்து கொள்கிறேன் என தமது சித்தப்பாவிடம் தெரிவித்து விட்டாள். அதற்கும் காரணம் ஏதாவது வைத்திருந்திருப்பாள் என நினைக்கிறேன்.

அங்கு தறி நெய்யத்தான் கற்றுக் கொள்ளவில்லையே தவிர தார் சுத்தி, சமையல் செய்து என்ன என்ன வேலை செய்ய வேண்டுமோ எல்லாம் செய்து மாமனார், நாத்தனார் இப்படி அனைவர்க்கும் பணிவிடை செய்து மேட்டூரில் இருந்து வெண்ணந்தூர் என்ற ஊருக்கு மணமுடித்த இந்த அங்க முத்து செய்தாள்.

நிறைய முறை நிறைய சண்டைகள் சச்சரவுகள். வீட்டுக்கு வந்து சேர்ந்திருப்பாள். ஆனால் அதன் பின் ஒரு பஞ்சாயத்து நடக்கும் திரும்பிச் சென்றுவிடுவாள். முதலில் ஒரு பையன் குழந்தை பிறந்து இறந்து விட்டது.

மறுபடியும் ஒரு ஆண் குழந்தையும், 3 பெண் குழந்தைகளும் பெரியதாக மாறி அவளது அவல வாழ்க்கையை பறை சாற்றும் விதமாக...இன்றைய வளர்ச்சியிலும்...

ஒரு முறை அவர்கள் வீட்டுக்கு தேங்காய் வரிசை அதாங்க ஆடிச் சீர் வரிசை கொண்டு வருவதாக தகவல் சொல்லி விட்டு கொண்டு சென்றார்கள். எங்கள் வீட்டார். அவர்கள் வீட்டை பூட்டி விட்டு விளக்கை எல்லாம் அணைத்து விட்டு வேறு எங்கோ சென்று விட்டார்கள்...


அப்படிப்பட்ட குடும்பத்தார் அதன் பெரியோர் தமது முதுமையின் போது தாம் செய்த தவறுகளை எல்லாம் உணர்ந்து என்னிடம் ஓர் நாள் நான் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தபோது எல்லாம் நீங்கள் தாம் இந்தக் குடும்பத்துக்கு நன்மை செய்தீர்கள்,,. நாங்கள் அதை எல்லாம் கெடுத்து விட்டோம் என்று உண்மையை ஒப்புக் கொண்டார்கள். அவர்களுக்கு வயது முதிர்ந்த நிலையில் பாவ மன்னிப்பு.


அவர்களது மகனை 8 பிள்ளைகளை படிக்க வைத்த குடும்பம் பிள்ளையோடு பிள்ளையாக உங்கள் பேரனையும் அதாவது தமது பெண் வயிற்றுப் பேரனையும் கொடுங்கள் படிக்க வைத்து ஆளாக்குகிறோம் என்றதற்கு வேலைக்கு ஆள் அனுப்பும் அவர்கள் பக்கத்து பாஷையுடன் வருடம் ஒன்றுக்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்க அந்த முயற்சியை உதவியை செய்யாமலே நிறுத்திக் கொண்டது எம் குடும்பம்.

அந்தப் பெண் பிள்ளையின் காரணமாக எம் குடும்பத்தில் பிறந்த அவளை விட இளையோர் எல்லாம் தம்மால் முடிந்தளவு உதவி செய்து அந்தக் குடும்பத்து பிறப்புகளுக்கு எல்லாம் கூட நன்மை செய்திருக்கிறார்கள் காலம் காலமாக...

உடல் அளவிலும் உள்ளத்தளவிலும் பெரும் துன்பமடைந்தாலும் அந்த துன்பமடைந்த வாழ்க்கையே தம் விதி என வாழ்ந்து விட்டாள்... அடைந்த இன்பம் தமது கணவருடன் என்ன செய்தாலும் ஒற்றுமையாய் இருந்து பழகியதே..

மேலும் அவள் மட்டும் தாம் படித்த படிப்புக்கேற்ப ஒரு வேலைக்கு சென்றிருந்தால் குடும்பத்தின் தலைவிதியும் அவளுக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையும் வேறாயிருந்திருக்கும். முடிவும், தேர்வும் தப்பாகும்போது வாழ்வே தப்பாகிவிடுகிறது. எனவே தான் பெண்களின் வாழ்வை முள் மேல் போட்ட சேலை என்கிறார். சேலையை வேகமாக எடுத்தாலும், முள்ளை வேகமாக எடுத்தாலும் கிழிவதென்னவோ சேலைதான்.


மேலும் இப்படி சொல்லச் சொல்ல நிறையவே உண்டு. இருந்தாலும் இன்று இவ்வளவோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






Sunday, September 10, 2017

மழை, பயணம், அங்கமுத்து: கவிஞர் தணிகை

மழை, பயணம், அங்கமுத்து: கவிஞர் தணிகை

Related image


காகத்துடன் காகம் அணைந்தால் அதாவது அது ஆணும் பெண்ணும் (ஆண் காகமும் பெண் காகமும்)    சேர்வதை நாம் பார்த்தால் நமது நெருங்கிய உறவில் நமது குடும்பத்தில் ஒருவர் மரணம் நிகழும் . இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன் .உண்மை. இதனால் என்னை இடது இல்லை வலது என்று எவர் கருதினாலும் அது எனக்குப் பொருட்டில்லை நான் இடதும் வலதும் இணைந்த மனிதம்.பூவில் வண்டு கூடும் கண்டு போகும் கண்கள் மூடும் வேண்டுமானால் நமக்கு கவித்துவமாகத் தெரியலாம்.ஆனால் இது வேறு...


இது பற்றி எனது சகோதரி ஒருவர் வீட்டில் குடி இருந்த ஒரு பெண்மணி அவரது கணவர் மரணத்தின் போது என்னிடம் விரிவாக விளக்கிப் பேசினார். அது என்னுள் மறக்காமல் நன்கு பதிந்திருந்தது.

சில பல நாட்களுக்கும் முன்னால் வழக்கம்போல எனது சேவைப்பணிக்குச் செல்லும் பொருட்டு விடியற்காலை எழுந்து கடமைகளை செய்து வந்து பேருந்துக்குப் புறப்படும் முன் உண்ட சிற்றுண்டித் தட்டை கழுவி எடுத்து வ்ரும் முன் கவனித்தேன் எப்போதும் போல காகங்களுக்கு உணவிட்டே நான் உண்பது வழக்கம் என்பதால் நிறைய காகங்கள் கரைந்தன. அதில் எங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள கறிவேப்பிலை மரத்தின் கிளை மேல் ஒரு காகத்தின் மேல் அமர்ந்து மற்றொரு காகம் புணர்ந்தபடி இருந்தது. அது புனர்தல் இல்லை வெறும் சண்டைதான் என சமாதானப்படுத்திக் கொண்டேன் என்றாலும்  எனக்கு அந்தப் பெண்மணி சொல்லியது நினைவில் இருந்தது நமது குடும்பத்தில் நெருங்கிய உறவினர் அல்லது குடும்பத்தில் ஒருவர் இறக்க நேரிடும் என எண்ணினேன். பெரும்பாலும் எனது மூத்த சகோதரி அங்க முத்து சுமார் வயது 70 நோய் வாய்ப்பட்டிருந்தார் அவராகத் தான் இருக்கும் என எண்ணினேன்.

அவரது கதை நேற்று இரவு 7.30 மணியளவில் மூச்சடங்கி இன்றுடன் முடிந்தது. அதன் தொடர்ச்சிகள் பல உள்ளபோதும் எங்கள் குடும்பத்தில் ஒரு மூத்த பெண் , எமது பெற்றோருக்கு அடுத்த வரிசையில் நின்றவரின் மரணம் எங்களால் ஏற்றுக் கொள்ள முடிந்ததாய் இருந்த போதும், சற்று செரிக்க முடியாததாகவும் இருக்கிறது.

இந்தக் காகத்தின் அறிகுறி, அடையாளம் மட்டுமல்ல வீட்டில் எறும்பு புற்று பெரிதாக கட்டுவதும் கூட. அப்படித்தான் அப்போது மிகப்பெரிய அளவில் பூமியிலிருந்து தோட்டத்துப் பகுதியில் எழும்பியபடியே இருந்தது தாயை இழந்தோம் இப்போதும் கூட அது போல ஒரு எறும்புப் புற்று எழுந்தபடி இருந்தது எமது மூத்த சகோதரியை இழந்தோம்.

காரணம், பிணி ஆஸ்த்மா, மழை, ஈரக்கசிவு, சுற்றுச் சூழல் , தங்குமிடம், செய்த தொழில் வயது குடும்பப் பராமரிப்புகள் இப்படி இன்ன பிற.

அங்கமுத்து , மரகதம், செல்வம், இப்படிப்பட்ட பெயர்கள் ஆணுக்கும் வைக்கிறார்கள், பெண்ணுக்கும் வைக்கிறார்கள். அந்தக் காலத்தில் அப்படித்தான் இவை பொதுப்பேர்கள்.

இந்த அங்கமுத்தம்மாள் வாழ்வு மிகவும் கடினமானது. வங்கத்தின் சரத் சந்திரர் எழுதும் கதையில் வரும் பெண்போல படாத பாடு பட்டாள். எந்தவகையிலும் தமக்கு பொருத்தமில்லாத பணிகளை எல்லாம் செய்ய கற்றுக் கொண்டாள் தாம் கட்டிய கணவனின் சுகமே இவளுடைய சுகமாக வாழ்ந்து முடித்துக் கொண்டாள். தேர்வும், முடிவுகளும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் சரியாக அமையாவிட்டால் வாழ்வு மிகவும் கடினமானதாகவே இருக்கும் என்ற வாழ்வின் நிதர்சனம் இவருடையது.

அவரது வாழ்வின் கஷ்ட நஷ்டம் பற்றி எல்லாம் எழுதலாம் வேறொரு நாளில் அவை நெஞ்சுகச் செய்யும். எப்படியோ ஒரு வழியாக வாழ்வை நிறைவு செய்து வாழ்ந்த வாழ்வை உறுதி செய்து விட்டாள்.

சுருக்கமாக சொன்னால் மகாத்மா காந்தியின் தாய் புட்லிபாய் போல , மகாத்மாவின் மனைவி கஸ்தூரிபா போல தன்னை தாம் நினைக்கும் எண்ணத்துக்காக அல்லது தாம் எவருடன் வசிக்க விதிக்கப்பட்டதோ அவருக்காக அவரின் எண்ணத்துக்காக தம்மையே அர்ப்பணித்து தியாகம் செய்து முடிந்து போவது முடித்துக் கொள்வது போன்ற வாழ்க்கைதான் இவருடையதும்...

தொடர்வேன்...எப்போதாவது இவரது விரிவான கதையுடன்..

எனது கடைசி பங்களிப்பாக கடைசி சகோதரன் என்ற இரத்த பந்தத்துக்காக ஒரு பூ மாலை, ஒரு கடைசிக் கோடிச் சேலை, செலவளித்த முறைமைகளுக்கான ஒரு பங்கிடல் தொகையாக ஒரு ஆயிரம் ...அத்துடன் முடிந்ததா எங்களது உறவு?

இவரை அல்ல  கடைசியாக இவரின் உயிரற்ற உடலைப் பார்ப்பதற்காக புறப்பட்ட அதிகாலையிலும் மழையுடன் புறப்பட்டோம் எல்லாம் முடிந்து மழையுடன் வீடு திரும்பினோம்...பயணம்...சில மணி நேரம்...வாழ்வின் பயணம் 70 ஆண்டும் ஒரு சில நாளில்...



தொடர்வேன்...எப்போதாவது இவரது விரிவான கதையுடன்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, September 6, 2017

எனக்கு விடுமுறையும் ஓய்வும் இல்லை: கவிஞர் தணிகை



எனக்கு விடுமுறையும் ஓய்வும் இல்லை: கவிஞர் தணிகை

Image result for no leave and rest

நாய்க்கு ஒரு வேலையும் இருக்கிறது. நிற்பதற்கு பேருந்தில் நேரம் இருக்கிறது. நாய்க்கு வேலை இல்லை நிற்க நேரம் இல்லை என்ற பழமொழியை நினைவு படுத்திக் கொண்டுதான் எனது முதல் வரி. இராமலிங்க வள்ளலாரே தம்மை நாயேன் எனக் கூறி இருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம். மாத்திரை விழுங்கும் நாம் எல்லாம் எம் மாத்திரம். மாத்தறே எமாத்தறே... அரசுப் பணியில், ஏன் தனியார் பணியில் இருப்பார்க்கும் கூட விடுமுறையும் பணி ஓய்வும் உண்டு ஆனால் சேவையில் ஈடுபட ஆரம்பித்தார்க்கு ஓய்வும், விடுமுறையும் என்றும் இல்லை. என்றுமே தேவையுமில்லை.

நாய் வாலை நிமிர்த்தவே முடியாது. என்னதான் எங்க வீட்டு புழக்கடை நாயை நாம் நல்லபடியாக அனுசரித்து சென்றாலும் அதைச் சங்கிலியில் கட்டி வைத்தாலும் சங்கிலியில் கட்டி வைக்காமல் விடுதலை செய்தாலும் கிடைப்பதை எல்லாம் நார் நாராக பேப்பர் கிடைத்தாலும் சரி, துணியாக இருந்தாலும் சரி கிழி கிழியென்று கிழித்து, எல்லாவற்றையும் கீழே தள்ளி,  நாசம் பண்ணி வைத்து விடுகிறது. அதை அடித்தாலோ நமக்கு வலிக்கிறது.

ஆனால் அதற்கு எல்லா விவரமும் தெரிகிறது. குழாயில் தண்ணீர் வந்தால் சத்தமிட்டு அறிவித்து விடுகிறது எவராவது வண்டியில் வந்தால் நாமறியும் முன்னே  தயாராகி குரைக்க ஆரம்பித்து அறிவிப்பு செய்து விடுகிறது.

இதை எல்லாம் பார்த்தால் நாயும் பூனையும் மனிதரை விட விழிப்புணர்வு அறிவில் அதிகம் நுட்பம் உள்ளவை என்று விளங்குகிறது. பாம்பு கூட மிகவும் சுறுசுறுப்புடன் கூர்மையான அறிவுடன் இருக்கிறது என்பதை அதன் எதிரிகளான மனிதரைப் பார்த்து அவை ஓடிச் செல்வதைப் பார்க்கும்போது அறிய முடிகிறது. பறவை பற்றி சொல்லவே வேண்டாம். அவ்வளவு எச்சரிக்கை உணர்வும் சுறு சுறுப்பும்.

கண்ணுக்குத் தெரிகிறது எனச் சொல்லுமளவுதான் இருக்கிறது அந்த எறும்பு. அதைப் பிய்யெறும்பு என்று சொல்வார்கள் .சிட்டெறும்பை விட மிகச் சிறிது. ஆனால் கடிக்கிறது. அதற்கு ஒரு வயிறு, செரிமான உறுப்புகள், தலை , கண்  கை கால்கள் இதெல்லாம் இருக்கிறதா என உருப்பெருக்கி கொண்டுதான் பார்க்க முடியும் அது போல கொசுவும். இந்த மழைக்காலத்தில் எப்படி எல்லாம் வியாதிகள் மனித குலம் மடியத்தான்.

இவைக்கெல்லாம் ஓய்வு இல்லை. அட நமக்கும்தான்.

இந்தக் கல்லூரிப் பணிக்கு சேர்ந்ததிலிருந்து நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் விடுமுறை என்று விட்டாலே அதற்கும் முன் ஏதாவது பணிகள்  வந்து முன் கூட்டியே காத்திருக்கின்றன. அதைத்தான் சொன்னேன் எனக்கு விடுமுறையும் ஓய்வும் கிடையாது என. நான் எடுத்துக் கொண்டிருக்கும் பணிகள் அப்படி. சேவைக்கு எங்காவது எப்போதாவது ஓய்வு கிடைக்கப் போகிறதா என்ன...எழுதுவது படிப்பது பிறர்க்கு நன்மை செய்வது என வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்து விட்டால் அவர்க்கு விடுமுறையோ பணி ஓய்வு என்பதோ இருப்பதற்கான வழிகளே இல்லை.

தியானம், நடைப்பயிற்சி, என கழிக்கலாம் என்றிருந்தால் போயே ஆக வேண்டிய பெரிய காரியம் அதாங்கா உயிர் நீத்தாரை கடைசியாக போய் பார்க்க வேண்டிய வேலை வந்து நின்றிருக்கும். அதற்கு சென்று விட்டாலே எல்லா நினைவுகளும் எட்டிப் பார்க்க, நிலையாமை எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடும்

Image result for no leave and rest

அத்தோடு நமது குடும்பப் படமும் ஓட ஆரம்பித்து வாழ்வின் இன்றைய நிலை நேற்றைய நிலை நாளைய விளைவுகள் அதன் விலைகள் எல்லாமே வந்து சேர்ந்து கொள்ள சில  இரவுகளில் உறக்கமே பிடிக்காமல் விடியும். நாய்க்கு வேலையும் இருக்கிறது...உறங்கவும் நேரமிருக்க உறக்கம் தான் வரவு வைக்காமல் நாள் கணக்கை வரவில் செலவில் வைத்துக் கொள்ளும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, September 4, 2017

திருமண வாழ்த்து

Dr. Vinothini B.D.S                             04.09.2017                                        R.Suresh B.Tech.
                                                              6.15 -7.15.a.m

பறவைகளில் விலங்குகளில்
ஆண் இனம் தான் அழகு
பெண் இனத்தைக் கவர்ந்து கொள்ள

மாந்தரில் அது மாறுபட்டு
பெண் இனமே அழகு
அது இயற்கையில் எழில் பொலிவாக
ஆண் இனத்தை பின் தொடர வைக்க

ஆனால் வாழ்வைத் தொடர்ந்து வைக்க
குணமே அழகு,பெண்மயில் அழகு
உண்மையில் அழகு மாந்தரில் நீ!

 Image result for peacock

நீ ஆர் . சுரேஷ் கைப்பற்றும் இந்த நேரம்
ஓர் உன்னதமான காலை உன் வாழ்வில்
முற்றிலும் உனக்கு உன் பெற்றோர் வைத்த பேர்
பொருந்தும் வினோதினி வெற்றிகள் பல பெற்றிட
கற்றவை கொண்டு மானிடம் பயனுற்றிட
மனித சங்கிலியின் தொடர்ச்சி அறாமல்

காலமெலாம் கற்றிட கற்றவை கற்பித்திட..

Related image

நானும் இந்த அருமையான வேளையில்
உன்னுடன் இருக்கிறேன்
எண்ண அலைகளுக்கு ஆற்றல் உண்டு
என்பது உண்மையாயின் இப்போது 
எழுத்துகளால் நான் கோர்க்கும் வாழ்த்து
இப்போதும் எப்போதும் உனை வந்து வாழ்த்தும்


Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


    

Sunday, September 3, 2017

NEET நீட் எனது சில சந்தேகங்களும் பார்வைகளும்: கவிஞர் தணிகை

நீட் எனது சில சந்தேகங்களும் பார்வைகளும்:கவிஞர்  தணிகை.

Image result for anitha died on neet

நீட் தேர்வு பற்றி கட்சி கட்டிக் கொண்டு இரு வேறு தரப்புகள் சரிதான் சரியில்லை என நாடெங்கும் வாதப் பிரதி வாதங்கள் போய்க் கொண்டிருக்கின்ற நிலையில் எனக்கும் குழப்பம் அது சரியா இல்லையா என அதை அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டே எழுதும் இப்போதைக்கு என்னுள் எழும் எண்ண அலைகளைப் பொறுத்து எழுதி முடிவதற்குள் அது முடிவுக்கு வரச் செய்யும் என்ற நம்பிக்கையில் மட்டுமே எனக்கு நானே ரியலைஸ்...உணர்ந்து தெரிந்து கொள்ள மட்டுமே இந்த பதிவு.( அதை நீங்களே படித்துக் கொள்ளலாமே இங்கு ஏன் எழுத வேண்டும் என்ற ஒரு குரலும் எனக்கு கேட்கிறது.)


தமிழ் நாட்டில் மட்டும்தான் எதிர்க்கிறார்கள் என்ற கேள்விக்கு அனில் சடகோபன் என்னும் பேராசிரியர் இவர் நாடு முழுதும் நீட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருபவர், சென்னையில் தமிழ் நாடு தான் கல்வி விழிப்புணர்வு பெற்றுள்ளது எனவே இந்த மாநிலம்தான் நாட்டுக்கே இந்த கேள்விகேட்டு வழி நடத்துகிறது என்றும் எப்படி வட கிழக்கு மாகாணமான அஸ்ஸாம் மாணவனும் டில்லி மாணவனும் ஒரே தேர்வை எழுதி ஒப்பிட்டு மதிப்பெண் அடிப்படியில் தீர்மானிப்பது ? அது சரியா? என்றும் கேள்வி எழுப்புகிறார். இவர் கேள்வி மிகச் சரியாக இருப்பதைப் பார்க்கும்போது நீட் தவறு என்றுதான் தோன்றுகிறது.மேலும் இவர் சொல்வது: இது அமெரிக்கா போன்ற நாடுகளின் கூட்டு சதி, இந்த நாட்டில் சுகாதாரத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கப்  பார்க்கும் முயற்சியின் விளைவே இந்த நீட் தேர்வு. ஏன் எனில் ஏழைகள் மருத்துவரானால், அல்லது உள்ளூர் மாணவர் மருத்துவரானால் அந்த அந்த இடங்களுக்கு பிரதேசங்களுக்கு பயன்படுவார் ஆனால் இந்த நீட் தேர்வில் தேறிய அனைவருமே பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இவர்கள் மருத்துவத்தை ஒரு வியாபாரமாகவே கருதி இலாபம் சம்பாதிப்பதையே தமது நோக்கமாகக் கொள்வார்கள் என்றும் சொல்கிறார்.

தமிழ் நாட்டில் கட்சிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு சுயநலத்தின் அடிப்படையில் அரசியல் பண்ணப் பார்க்கிறார்கள். இந்த நீட் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இவர்களும் இவர்கள் கட்சி சார்ந்தாரும் இவரது உறவினர்களும் இவரது பினாமிகளும் தான் தனியார் கல்லூரி நடத்தி வருகிறார்கள் அதில் கல்லா கட்டவே நீட் வேண்டாம் என அடம் பிடிக்கிறார்கள். நீட் அடிப்படையில் எடுக்கும்போது அவ்வளவு பணம் பெயராது அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வில் தேறிய மாணவர் மட்டுமே உள்ளே அதுவும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்துடன் மட்டுமே உள்ளே வருவார்கள் .
Image result for anitha died on neet


இந்த இறந்து போன பெண்ணும் கால் நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்தான், இவரது படித்த தனியார் பள்ளியில் (ஆம் இவரது பத்தாம் வகுப்பு மார்க் 478க்காக இவரது மேனிலைக் கல்வியை கட்டணமின்றி கொடுக்க இந்த தனியார் பள்ளி இவரை தம் பள்ளியில் சேர்த்துக் கொண்டு கல்வி கொடுக்க தர்மம் செய்ய முன் வந்ததாக தகவல்) மேனிலைக் கல்வியில் ப்ளஸ் டூவில் முதலாண்டை சரியாக கற்றுக் கொடுக்காத விளைவுதான் இவர் நீட் தேர்வில் தேறாததன் காரணம். அந்தப் பள்ளிகளை அரசே நடத்துமாறு கேட்க வேண்டியதுதானே, மேலும் எந்த பள்ளியிலுமே ப்ளஸ் டூவின் முதலாமாண்டை சரியாக நடத்தாதபோது அதை ஒழுங்காக நடத்த நிர்பந்தம் ஏற்படுத்துவதுதானே அதற்கு இந்த கட்சிகள் ஏன் கூட்டு சேரவில்லை அதைக் கேட்க ஏன் முன் வரவில்லை? அப்போது எங்கே போனார்கள்?
Image result for anitha died on neet


ஆம் எனக்குத் தெரிந்த ஒரு தனியார் ஆங்கிலப்பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய மாவட்ட அளவில் முதல் 3ஆம் மாணவராக வந்த  முன்னால் மாணவர் கூட மருத்துவப் படிப்பில் இடம் பெற்று முதலாம் ஆண்டு முதாலாம் செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்தார் காரணம் ப்ளஸ் டூ பாடங்களில் முதலாம் ஆண்டு படிப்பை அந்தப் பள்ளி நடத்தாததும், அந்த மாணவர் படிக்காததும் என்பது நானறிந்த உண்மை கூட . இது போன்ற விவரங்களை ஒரு பள்ளி தாளாளாராய் இருக்கும் பி.ஜே.பி நண்பர் சொல்கிறார் அதையும் நம்மால் மறுக்க முடியவில்லை. இவரது வாதம் நீட் தேர்வு சரியனது தான் என்கிறாஅர்.

ஆனால் பொதுவாகப் பார்க்கும்போது ராம நாதபுரம், போன்ற உள் கடைக்கோடி  மாவட்டங்களிலும் கிராமப் புறங்களிலும் படித்து வரும் மாணவரும் சென்னையில் ஒரு சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்து நீட் எழுதும் மாணவரையும் நாம் ஒப்பிடவே முடியாதுதான்.

இந்தியாவில் எல்லாமே குழப்பமாக இருக்கிறது. ஒரு கல்வியில் தெளிவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு அணுகுமுறைகள்  தமிழ் வழியில் கல்வி முறைகள் படித்த நம்மையே குழப்பும் விதமாக. எங்கே கிராமத்தில் இருக்கும் ஒரு கூலித் தொழிலாளிப் பாமரன் அதை புரிந்து கொள்ள முடியும்  தம் பிள்ளைகளை அப்படி படிக்க வைக்க முடியும்?

ஒரு பக்கம் சி.பி.எஸ்.இ படிப்பவர்தான், ஜே.ஈ.ஈ தேர்வாணையம்தாம் இந்த தேர்வு முறைக்கு ஏற்று விளங்குகிறது அந்தப் பிள்ளைகள்தாம் தேறமுடியும் என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவு. மெட்ரிக் பள்ளி, மாநில அரசுப் பள்ளிகள், அதிலும் ஆங்கில தமிழ் வழிக் கல்வி முறைகள், சமச்சீர்க் கல்வி, மத்திய அரசின் நேரடிப் பார்வையில் உள்ள கல்வி கற்றுக் கொடுக்கும் பள்ளிகள், வொகேஷனல் தொழில் சார்ந்த படிப்புடன் கற்றுக் கொடுக்கும் பள்ளிகள். இன்னும் எனக்குத் தெரியாத பள்ளி முறைகள் நிறைய ஏன் சைனீஸ் பள்ளி என மிலிட்டரிக்கு ஆபீசர் உருவாக்கும் பள்ளி இப்படியாக....
Image result for anitha died on neet


இதெல்லாம் இப்போதுதான் கற்றல் கேட்டல் வழிக் கல்வி முறைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன எனச் சொல்லும் மாநில துவக்க வழிக் கல்விக் கொள்கைகள்...ஆனால் இவை யாவுமே ஆங்கில மெக்காலே கல்வி முறைக்குள் மாண்டிச்சேரி பள்ளிகள் முறைக்குள், ஒரு பள்ளியில் கண்ணைக் கட்டிக் கொண்டு பயிலும் முறைகள் ஒரு பள்ளியில் ஒரு மிலிட்டரிக்காரர் பிள்ளை தமது முடியை ஒண்ட வெட்டி வந்தார் என அவருக்கு தண்டனை, இன்னொரு பள்ளியில் ஒண்ட முடியை வெட்டி வரவில்லை என உடற்கல்வி ஆசிரியரும் தமிழாசிரியர்களும், தலைமை ஆசிரியர் கட்டளையின் பேரில் அடித்து வெயிலில் முட்டியிடச் சொல்வதும் அதைக் கண்ட பெற்றோர்கள் வெகுண்டெழுந்து பள்ளி மேல் படை எடுப்பதும்

என்ன கல்வி முறைகளா மானிடா...எத்தனை பிரிவுகள்...கொஞ்சமோ பிரிவினகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப...

மனிதரை உருவாக்குவதே கல்வி என்பார் மகாத்மா, வினோபா கல்வி சிந்தனையும் காம்ராஜ் கல்வியை விற்பது என்பது தாய்ப்பாலை விற்பதற்குச் சமம் என்பார்.

இந்த தனியார் பள்ளிகள் அனைத்துமே அரசு முறைப்பள்ளிகளாகவேண்டும். அங்கே ஒரே சீரான ஒரே முறையிலான அனைவர்க்கும்,ஆம் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் உடல் உழைப்புக் கல்வி, அறிவியல் ஆற்றல் சொல்லி பொருட்களை கண்டு பிடிக்கும் கல்வி, நாட்டுப் பற்றுடன் ஆன கல்வி, பொது இடங்களில் சாலை விதிகளை கற்றுக் கொடுத்து நீதிபோதனை செய்யும் கல்வி, இப்படி கல்வி முறைகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு அவரவர் மொழியில் கற்கலாம் அவரவர் மொழியில் தேர்வு எழுதலாம், தேர்வுக்கான வினாத் தாள் அவரவர் மொழியில் ஆனால் அனைத்து கேள்விகளும் ஒரேமாதிரி கேட்கப்படும் என்ற பொதுக் கல்வியை எட்ட ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு அப்புறம் தான் இந்த நீட்டு மடக்கு எல்லாம் வந்திருக்க வேண்டும். ஒரே வினாத்தாள் மட்டுமே நாடெங்கும் கொடுக்கப்பட்டால் தான் அது நுழைவுத் தேர்வு இல்லாவிட்டால் அது ஏமாற்றே.

நாடு முழுதும் ஒரே கல்வி என்பது தவறான கொள்கையல்ல. ஆனால் இந்த நாடானது பல்வேறுபட்ட மதம், கலாச்சாரம், நாகரீகம், மொழி, பிரதேசம், ஆறுகள் இப்படி வேறுபட்டுக் கிடக்கும்போது இந்த நீட் நாடு முழுக்க ஒன்றுதான் என்று பொதுவான தேர்வை நடத்தும் முன் அரசு அதைப்பற்றி நிறைய கொள்கை முடிவெடுக்கும் முன் கல்வி சிந்தனையாளரை வைத்து முன் தாயாரிப்புகள் செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ் படித்தவர் அந்த அந்த வட்டார மொழியை சில ஆண்டு கற்றுக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் போய் தமது பணிச் சேவையை செய்வது வேறு...அப்படி மருத்துவர் எல்லாம் செய்ய முடியாது....

இங்கு கிராம சேவை செய்யவே எந்த மருத்துவரும் தயாராய் இல்லாத போது மொழியறிவே இல்லாத ஒரு மருத்துவர் ஒரு குக்கிராமம் சென்று நோயாளிகளுக்கு எப்படி சேவை செய்வார் என்று நாம் எதிர்பார்க்க முடியும் அனைவருமே அன்னை தெரஸாவாக முடிவதில்லையே... இதை எல்லாம் பார்க்கும்போது மருத்துவம் சுகாதாரத்தை தனியார் மயம் செய்ய அனில் சடகோபன் சொல்வது சரியாக இருக்குமோ என்றே தோன்றுகிறது.

ஜப்பானில் சீனாவில் தமது தாய் மொழிக் கல்வியில் பயின்றவர்களே உலக அளவில் முன் நிற்கும்போது, இந்த ஆங்கிலம் இல்லை என்றால்  எதுவுமே இல்லை என்ற மனப்பான்மையுடன் இருக்கும் இங்கு இருக்கும் மருத்துவ படிப்பு எப்படி கீழ் இறங்கி சேவை செய்ய முடியும்? நானறிந்த ஒரு மருத்துவர் ஏழையாய் இருந்து படித்தவர் இவர் கை எழுத்து போடுவதற்கே காசு வாங்கிக் கொண்டுதான் போடுவார் அது அட்டஸ்டடு கை எழுத்து ஆக இருந்தாலும், எல்லாம் 50 , 100 வாங்கினால் கன்சல்ட்டிங் பீஸே 150தான் உள்ளூரீலேயே வாங்குவார் இன்று மாடான மாடி கோடான கோடிக்கதிபதி. அவர் ஒரு எம்.டி.

வீடும் கேடும் உயர வளர்ந்து  கொண்டே இருக்கும்போது

இந்த நீட் பற்றி மிக கவனமாக ஆராய வேண்டி உள்ளது. இது எதையும் கவனத்தில் கொள்ளாது உச்ச நீதிமன்றம் அமல் படுத்தியே தீருவது மாற்று தீர்வு ஏதுமில்லை என ஒரே தீர்ப்பை ஒரே போடாக போட்டு விட்டது. அதை எவருமே இப்போது மதிப்பதில்லை கர்நாடகாக் காரர்கள் தண்ணீர் தரவேண்டிய உத்தரவை தூக்கி எறிந்தது போல, ஜல்லிக்கட்டில் தமிழகம் தூக்கி எறிந்தது போல இப்போதும் கட்சிகள் தூக்கி எறிவது போல...என்றாலும் அவர்கள் அந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்வதுதானே அமல்படுத்துவதாய் நிற்கிறது,... அலுவலக ரீதியாய். ஆனால் பொதுநல ரீதியில் பூஜ்யமாய்.

பொருளாதார அடிப்படையில் செல்லாமல் இந்த நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டு முடிந்த பின்னும் இன்னும் ரிசர்வேசன் தேவையா என்று ஒரு பக்கமும், தேவைதான் என்று மறுபக்கமும் வாதம் பிரதிவாதம் இருப்பது போல... இந்த நீட்டும்.

அனைத்துக்கும் இந்த கேடு கெட்ட அரசும் அரசியலும் தாம் காரனம். இவர்கள் சரியாக சுயநலப் பிசாசுகளாய் இல்லாதிருந்திருந்தால் இந்த நாட்டில் பொருளாதார அடிப்படையில் எல்லாவற்றையும் நிர்ணயிக்குமளவு நாடு முன்னேறியிருக்கும். இன்னும் சாதி வாக்கூ வங்கி, மக்களுக்கு வாக்கூ கேட்கும்போது பணம், அதை மறுக்காத மாறாத மக்கள் குணம் என...இப்படியே நாட்டை நாறடித்து விட்டு நாசமாக்கி விட்டு விளம்பரம் தேடிக்கொள்ள சசிபெருமள் பாடைக்கு இருபக்கமும் தோள் கொடுத்து தூக்குவார்கள், இப்போது அனிதா அனிதா என்பார்கள் இன்னும் அது மறந்து அடுத்த ஒரு அசம்பாவிதம் நடக்கும் வரை..

கலைஞர் கருணாநிதி சமச்சீர் கல்வி என்று தனியார் பள்ளிகளை ஒரு கட்டுக்குக் கொண்டு வரலாம் என்று முயற்சி செய்வதற்குள் அவரை ஆட்சியை விட்டுத் தூக்கி அம்மாவைக் கொண்டு வந்தார்கள் இன்றும் என்றும் அம்மா ஆட்சிதான் நிரந்தர முதல்வர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்... பேடி கேடி ஆட்சி முறை வழிகளில் எல்லாம் நடக்கும் எதுவும் நடக்கும்...

நீட் தேர்வையே ரத்து செய்திருக்க வேண்டும் எப்போது ஒரு மாநிலத்தில் ஒரு கேள்வி வினாத்தாள், மறு மாநிலங்களில் வேறு மாதிரியான வினாத் தாள்கள் என்னும்போதே, அந்த தேர்வு எழுதும் மாணவ மாணவியரை  எல்லாரையும் ஒரே மாதிரியாக நடத்தாமல் கை வெட்டு, முடி வெட்டு, ஆடை மாற்று, கடிகாரம் கழட்டு, ஆடை கழற்று என்னும் போது அமைதியான சூழல் அமைதிப் பூங்காவாகத் தானே இந்த தமிழகம் இருந்தது நிர்பயா ஒரு பெண்ணுக்காக டில்லி மாநகர் கொதித்தெழ, இந்த தமிழ் மண்ணில் கிராமத்தில் ஆயிரம் ஆயிரம் அக்கிரமங்கள் நடந்தேறியபோதும் அவரவர் வேலையை அவரவர் பார்க்கவே நேரம் இல்லையே...அதன் பின் நாடு எப்படி இருக்கும்?

எனவே தயாரிப்புக்கென்று எல்லா மாநிலத்துக்கும் கால அளவு வரையறை செய்யப்பட்டு அனைவர்க்கும் நாடு முழுதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கை கல்வி முறைகளுடன் அவரவர் மொழி சார்ந்து ஒரே வினாத் தாள் கொடுத்து தேர்வு எழுத வைத்திருந்தால் மட்டுமே இந்த நீட், நேஷனல் எலிஜிபிலிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட் சரி....அல்லாதவரை இது வரை எலியும் பூனையும் புலியும் புல்லுக் கட்டும் மனிதருமான விளையாட்டு போன்றதுதான் ஏமாந்தால் எல்லாம்தான் செய்வங்க இந்த நாட்டில் திருமா பேரைச் சொல்லிக் கொண்டு பிறந்த நாளுக்கு  நன்கொடை தரவில்லை என ஒரு கடைக்கார இளைஞர்களை ஒரு சிலர் அடிப்பதாக ஒரு வீடியோ படம் வாட்ஸ் ஆப்பில் உலவுகிறதே அது நிஜம்தானா? நியாயம் தானா? இங்கு ஒப்பந்தாரராய் பெரும் கம்பெனிகளில் எல்லாம் இருப்பது கட்சிக்காரர்கள் மட்டுமே அல்லது அவரது ஆதரவு பெற்றொர் மட்டுமே என்பது உண்மைதானா? அவரது பினாமிகளுக்குள்ளே பொருளாதார மோதல்கள் எல்லாம் வருவது வருகிறது என்பதெல்லாம் உண்மைதானா?  அதனால் கட்சிகள் பிளவு சேர்க்கை எல்லாம் என்பது உண்மைதானா?

எல்லாம் சுயநலம் , இலஞ்சம் ஊழல் எல்லாவற்றுக்கும் அடிப்படை சுயநலம்.

சுயநலம் பொது நலம் அல்லது பிறர் நலம் என்ற இரண்டுக்கும் ஒரு நூல் இழை வேறுபாடு ஆனால் விளைவுகளோ கடல் அளவு, உலகளவு...
நான் இப்படித்தான் பார்க்கிறேன் நீட்டையும் மடக்கையும், மோடி ஜல்லிக்கட்டு போல இதை சமாளிக்க உத்திகள் கையாண்டார் , ஆனால் நீட் விடயத்தில் உச்ச நீதிமன்றம் கை விரித்துவிட்டது. பிரதமர் சீனாவுடன் நல்லுறவு பேண பிரிக்ஸ் மாநாட்டுக்கு சீனாவுக்கு போய்விட்டார் இங்கு அனிதா ஆனா என்ன போனா என்ன...

ஒரு நாள் வரும் மும்பையில் சிவசேனாக்காரர்கள் மற்ற மாநிலக்காரர்களை எல்லாம் விரட்டுவது போல மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்லிக்க் கொண்டு இந்த இந்திய மண்ணிலும் வடக்கத்தியரை தெற்கத்தியரும், இந்திக்காரரை தமிழ்க்காரரும் விரட்டி விரட்டி அடிப்பார்கள். அந்த நிலை வரும் வரை இந்த அரசும் அரசியலும் விடாது போலும் அரசின் மேல் துவேஷம் பாராட்டமுடியாது ஒருவருக்கொருவர் சகோதரராய் இருப்பார் மேல் அந்த வெறியும் கோபமும் துவேசமும் அறியாதாராய் இருப்பார் பாராட்டுவார் பாருங்கள் இங்கிலாந்து போல, அமெரிக்கா போல, அரபு நாடுகள் போல, ஆஸ்திரேலியா போல அதுவரை விடாது கருப்பு..ஐ மீன் அதுவரை விடாது அரசு, அரசியல், உச்ச நீதிமன்றம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.