Saturday, June 30, 2018

வாழ்க வாழ்க மணப்பெண்ணே நீ காலமெல்லாம்... கவிஞர் தணிகை

  உஷார்
Image result for beautiful trees in the world

 நீ ஒரு சிறுமியாக‌
என் வீட்டுள் புகுந்தாய்!

அன்று முதல் என்னுள்
நான் உன்னுள்

பசுமையாக நினைவிருக்கிறது
அந்த நாள் நேற்று நீ வந்தது போல‌
ஆனால் 20 ஆண்டுக்கும் மேலா ஓடிவிட்டது?

இன்று அவர்கள்
உன்னுடன் இருக்கிறார்கள்

நான் இல்லை ஏன் எனில்
உள்ளிருப்பது
வெளியே தெரியாதென்பதால்
Image result for beautiful trees in the world
 நீ இன்று புது வாயில் முன் நிற்கிறாய்

அது நாங்கள் ஏற்கெனவே கண்டதுதான்
ஆனாலும் உனக்கிது புதிதே எனவே...
உடன் நாங்களும் இருந்து வழி அனுப்ப வேண்டிய
கடமை உள்ளதுதான்...

ஆனால் அதற்கு எனக்கு வழி இல்லை

"மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்பார்
இங்கு மனமிருக்கிறது
மார்க்கம் தான் இல்லை"
Image result for beautiful trees in the world
இன்று மணப்பெண்ணாய்
நாளை முதல் அவர்கள் குடும்ப விளக்காய்!

என்றாலும்
நீ
எங்கள்
"சுடராக"
குடும்ப விளக்காக குலம் விளங்க‌
வாழ்வின் தொடரில் வண்ண மிகு
காலப் பெட்டகம்
ஏந்த‌

பவன்குமார்
கரம் பற்றி
புவனமெங்கும் வாழ்த்த வாழும்

உன்னை என்றும் வாழ்த்தும்

எங்கள் வாழ்த்துகள்
Related image
அன்புடன்
கவிஞர் தணிகை
த.சண்முகவடிவு
த.க.ரா.சு. மணியம்.

02 07 18 ஜே.எஸ்.ஆர் கல்யாண மண்டபம்
ஜம்பகாதமா  சுவாமி கோயில் பேன்னர் கட்டா பெங்களூர்.













Thursday, June 28, 2018

நாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை

Image may contain: 3 people, people smiling

 நாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை

விடியல் நண்பர்கள் குழு கடந்த 24 ஜூன் 2018ல் என்னை அழைத்து நட்புச்சூரியன், வாழ்வியல் வழிகாட்டி என்ற நினைவுப்பரிசை வழங்கிய அதே நாளில்  "புறம் கட உள் பார்க்க, புறம் கட கடவுள் பார்க்க" என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரை வீச்சுக்காக ஒரு நினைவுப்பரிசை வழங்கினார்கள் . அது எங்களது கல்லூரி நண்பர் மட்டுமல்ல எங்களது ஊர்க்கார நண்பர் நாகா எழுதி வெளியிட்டுள்ள "நூலிலிருந்து"  கை ராட்டை காந்தி, பாரதி, பகத் சிங் புத்தக அடுக்கு அட்டைப்படத்துடன் 288 பக்க நூலை பரிசாக அளித்தார்கள். இது கோவை பி.எஸ்.ஜி கல்லூரி வளாகத்தில் எமது நண்பர்கள் முன்னிலையில் நாஞ்சில் நாடன் அவர்களை வைத்து வெளியிடும்போது இதன் விலை ரூ.150 என 20 நூல்களை வாங்கிய எனதருமை நண்பர் விடியல் குகன் என்னிடமும் கொண்டு வந்து ஒரு பிரதியை சேர்த்தி இருக்கிறார். இதன்  விலை ரூ.200 ஆகும். முதல் பதிப்பு ஜூன் 2018.

இதை பாலமலை முகாமில் கிடைத்த நேர இடைவேளையில் படித்து முடித்துவிட்டேன்.

1992 என நினைக்கிறேன். எனது முதல் புத்தகம் "மறுபடியும் பூக்கும் " என்ற கவிதை நூலை முறைப்படி மேட்டூர் தமிழ் சங்கம்  கோ.பெ.நாராயணசாமி, தமிழருவி மணியன், கோனூர் பெருமாள், சிந்தனையாளர் அர்த்தனாரி (இதில் பின் சொன்ன இருவரும் இப்போது இந்த மண்ணில் இல்லை.) ஆகியோர் முன்னிலையில் வெளியிடும்போது, எனக்கும் சொந்த மண்ணுக்கும் நிறைய பிடி விட்டுப் போயிருந்தது, இந்தியா எங்கும் சுற்றி மலை மலையாக காடு காடாக நாடு நாடாக சுற்றித் திரிந்து ஏராளமான அனுபவம் கற்று ஆனால் எல்லாத் தொடர்பையும் அற்று இருந்ததால், இதே நாகா அதாவது நாகச் சந்திரன் இந்த நண்பர், ஓ. தணிகை என்பது நீங்கள்தானா? என வியப்பெய்தினார். என்னுடன் தன் மேலுணர்வற்று வந்து பேசி மகிழ்ந்தார்.

அதன் பின் மறுபடியும் பல்லாண்டு ஓடிய பின் இவர் பெரிய மனிதராக மாறிய பின் தமது குடும்பத்தாருடன் கரூரில் விடியல் நண்பர்கள்  முதல் சந்திப்பில் அதாவது கடந்த ஆண்டில் 11.06.2017ல் எனது உரை அப்போது: "நெட்டை மரங்களென நின்றார்" ...அன்று மற்றும் எனது 3 நூல்களை தமது பெண் ஸ்ருதி மூலம் வாங்கிக் கொண்டார்.

ஸ்ருதி அப்போதே மிகவும் பண்பட்ட நிலையில் இருந்தார். மிக அரிய பெண்களுள் அவர் ஒருவராக இருப்பார். அவர் பேரில் இப்போது ஒரு பதிப்பகத்தை கோவை 641 014ல்  துவங்கி தமது முதல் நூலான "நூலிலிருந்து" என்ற ஒரு அனுபவச் செறிவான நூலை  நூலிழை அறுந்து போகாமல் அழகான ஆடையாக‌ வழங்கியிருக்கிறார்.இவருடைய அலைபேசி: 91 98422 06002 மற்றும் 91 98422 04002. இவருக்கும் எம் குடும்பத்தாருக்கும் இடையே உள்ள இன்னொரு ஒற்றுமை இரு சாரருமே நெசவு அல்லது நெசவாளிக் குடும்பம் சார்ந்தாரே. நான் சொல்வது ஒரே குலம் சாதி என்ற பொருளில் சொல்லப்படுவதல்ல என்பதை எனது ப‌

ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு புத்தகத்தையாவது இந்த சமூகத்தை நோக்கி வழங்கிச் செல்ல வேண்டும் எனச் சொல்வார் ஆன்றோர். இவர் இப்போது ஆரம்பித்திருக்கிறார்.இனிமேல் இவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு புத்தகம் படிக்கும்போதும்,ஒரு  திரைப்படம் பார்க்கும்போதும் நாமும் நாயக நாயகி பாவத்திலிருந்தே துய்ப்பதால் நமக்கு அது ஒரு இலயிப்பை ஏற்படுத்தி விடுகிறது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நிலை.

அப்படி இந்த நூலை நான் எந்த இடையூறும் இன்றி முழுதாக வீட்டில் இருந்தாலும் கூட படித்திருக்க மாட்டேன்.  அதற்கேற்ற சூழல் கால அளவு பாலமலை முகாமில் எனக்கு கிடைத்ததால் அனேகமாக ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன். மேலும் அதில் எனதுருவமும் அதிகமாகத் தெரிந்தது பகத் சிங், பாரதி, , காந்தி ஆகியோரைத் தொட்டுச் செல்லும்போது.

48 கட்டுரை அல்லது சிறு சிறு கட்டுகளாக இந்த நூலைக் கட்டி இருக்கிறார். அச்சுப்பிழையை கண்டுபிடிக்க இன்னொரு முறை படிக்கலாமா என யோசித்திருக்கிறேன்...அவ்வளவு நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கிறது.

அடியேனும், விடியல் குகனும், கல்லூரிப் பருவத்தில் விடியல் என்ற கையெழுத்துப் பிரதி எழுத ஆரம்பித்த போது இவரும் ஒரு பிரதியை ஆரம்பித்து நடத்தினார். மேலும் எமது கல்லூரியும் எங்களை எல்லாம் இணைத்து ஒரு அச்சுப்பத்திரிகை கொண்டு வந்ததாக நினைவு. அதற்காக ஒரு போட்டி வைத்து அதில் எனது "உழைப்பு" என்ற கவிதை முதல் பரிசுக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்தக் கவிதையை கல்லூரி நிர்வாக பத்திரிகை குழுவினர்க்கு விடியல் குகன் அவர்களே கொண்டு சேர்த்தார் என்பதையும் என்னால் இப்போதும் நினைவு கூர முடிகிறது.

தொழில் சார்ந்தும், இலக்கிய ஆர்வம், பொதுவெளிக்காகவும் நிறைய மனிதர்களுடன் சேர்ந்து பழகியிருப்பதும் அதில் ஒர் நாகரீகம் மிளிர்வதையும் நிறைய அதற்காக பயணங்கள் மேற்கொண்டிருப்பதையும் இவர் தமது எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

வாட்ஸ் ஆப்...கட்செவித் திரட்சி ....மூலம் நூல்களைப் பற்றி இவர் நிறைய ஆய்வு செய்து அனைவரிடமும் அந்த நூல்களின் அழகை கொண்டு சேர்ப்பதாக நண்பர்கள் கூறினர். படித்தேன் சில பலவற்றை. நன்றாகவே இருந்தது.

இது பற்றி, இவர் பற்றி தமிழ் இந்து நாளேடும், ஆனந்த விகடன் நூலும் சிறப்பு வெளியீடுகள் செய்திருக்கின்றன.

நிறைய நல்ல நடப்புகள், நல்ல நட்புகள், நல்ல குறிப்புகள், நல்ல மனிதர்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள்... நிறைய புத்தகம் பற்றியும் பிரபலங்கள் அவர் தம் உழைப்பு பற்றியும் பேசுகிறார்.

இந்த நூலை இவரின் துணைவிக்கு, மகளுக்கு, தாய்க்கு, பெற்றவர்க்கு இப்படி எல்லாம் சமர்ப்பணம் செய்வதன்றி இவருடன் படித்த அந்த மூன்றாண்டு  கல்லூரியின் அனைத்து தோழர்களுக்கும் சமர்ப்பித்ததிலிருந்து இவரின் நட்பு பாராட்டுதல் எவ்வளவு என விளங்குகிறது . எனவே அதில் நானும் ஒருவனாகி இருக்கிறேன்.

நூல் நல்ல அடையாளப் பதிவாக விளங்க நண்பர் மேலும் மேலும் வெற்றிக் கனிகளை ஈட்ட மேலும் அரிய கவன ஈர்ப்பு கருத்துகளை மக்கள் மேன்மைக்காக பகிர்ந்து கொள்ள மனமுவந்து பாராட்டி வாழ்த்துகிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Saturday, June 23, 2018

பாலமலையில் பல் மருத்துவர்களும் நானும்: கவிஞர் தணிகை

பாலமலையில் பல் மருத்துவர்களும் நானும்: கவிஞர் தணிகை



Related image
Prof.Dr.J.Baby John M.D.S
Principal
Vinayaka missions
Sankarachariyar Dental college.
SALEM. TAMIL NADU.






Image may contain: 1 person, standing, outdoor and nature

தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் கல்லூரி மாணவர்களுக்கான‌ கோடை உறைவிடப் பயிற்சியின் கீழ் ஜூன் 11 முதல் ஜுலை 11 வரை விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல்மருத்துவக் கல்லூரியின் 20 பல் மருத்துவர்களை 5 பிரிவுகளாக அதாவது ஒரு முறைக்கு 4 மருத்துவர்களை  அழைத்து சென்று பாலமலை மேல் உள்ள‌ கிராமங்களுக்கான முகாமை நடத்தி வருகிறோம்.
https://www.facebook.com/tanigaiezhilan/videos/1925722917479072/
Image may contain: 3 people, outdoor

மிகவும் எளிதில் அடைய முடியாத பகுதி சேலம் மாவட்டத்திலேயே மிகவும் பின் தங்கிய பகுதி. செய்தி தொடர்பு ஊடகங்கள் பெரும்பாலான கிராமங்களை எட்டாத பகுதி. பெரிய குளம் , திம்மம்பொதி போன்ற மலையின் அந்தப்பக்க கிராமங்களில் இன்னும் மின் வசதியே சென்றடையவே இல்லை

நிலை இப்படி இருக்கும்போது...கண்ணாமூச்சி, செட்டியூர், குருவரெட்டியூர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் இருந்து இந்த மலையை எட்ட முடியும்.
Image may contain: 1 person
கண்ணாமூச்சி, குருவரெட்டியூர் பகுதிகளில் இருந்து இந்த மலைக்கிராமங்களுக்குச் செல்ல சிறப்பு ஏற்பாட்டுடன் உள்ள மலை மேல் ஏறும் ஜீப்கள் நமக்கு போக்குவரத்து உதவிகளை செய்து வருகின்றன. செல்லும்  தூரத்தைப் பொறுத்து கிராம மக்களுக்கு ரூபாய் 30 முதல் 50 ரூபாய் தலைக்கு வாங்கிக் கொண்டு இளம் வயதுடைய ஓட்டுனர்கள் இந்த ஜீப் பயணச் சேவையை செய்து வருகின்றனர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாகனத்தின் ஸ்டேரிங் வீலுடன்.

Image may contain: 5 people, people standing and outdoor

ஏன் எனில் சாலை அவ்வளவு மோசம். கரணம் தப்பினால் மரணம் நிகழுமோ என்னவோ ஆனால் ஜீப் கரணம் போடாவிட்டாலும் , சாய்ந்து படுத்துக் கொள்வதென்னவோ நிச்சயம் நடக்கும்.ஆனால் அத்தனை வளைவு, சறுக்கல் குண்டும் குழியிலும் இந்த இளைஞர்கள் அநாயசமாக நம்மை கொண்டு சேர்க்கின்றனர், கொண்டு வந்து கீழ் இறக்கியும் விடுகின்றனர்

இந்த சாலை வசதியும் கூட நூறு நாள் வேலை வாய்ப்பு செய்யும் நபர்கள் மூலமே செய்யப்பட்டதாக செய்திகள் உள்ளன. இன்னும் ஆங்காங்கே அந்த மண் சாலைகளில் குறுக்கே பெயர்க்க முடியாத பெயர்த்து எடுக்கப்படாத மரங்களும் பாறைகளும் கூட இருக்கின்றன.

கடந்த பார்த்திபன் எம்.எல்.ஏஆக இருந்த காலக் கட்டத்தில் இந்த சாலை போடப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.... மாவட்ட வன அலுவலர்  சுகிர்தராஜ் கோயில் பிச்சை  என்பார் அப்போது  சிறப்பு கவனம் எடுத்து இந்த சாலை வசதியில் நாட்டம் கொண்டு செய்ய வைத்ததாகவும் செய்திகள் உலவுகின்றன.

Image may contain: one or more people, people standing, tree, sky, mountain, outdoor and nature

ஆனால் உங்களுக்கு எல்லாம் ஒரு செய்தி சொல்கிறேன்: நான் 1986ல் இந்த மலைக்கு ஒரு தன்னார்வலராக சென்று அரசு அனுமதியுடன் மக்கள் தொகை கணக்கெடுக்கும்போதெல்லாம் செட்டியூர் என்ற இடத்தில் இருந்து கால்நடையாகவே ஏறித்தான் சென்றேன். அப்போதெல்லாம் எந்த சாலை வசதியுமே கிடையாது...வெறும் காட்டுத்தடம், கொடித்தடம் தான்.
Image may contain: one or more people, people standing, sky, tree, grass, mountain, outdoor and nature
அதிலேயே நான் எல்லா கிராமங்களுக்கும் திம்மம்பொதி, நாகம்பொதி, பெரியகுளம் வரை கூட சென்று திரும்பியது உண்மைதான் .அங்கு மலை மேல் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கினேன். அப்போதிருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கதுரை, கோட்டாட்சியர் மலையாளம் ஆகியோரின் அறிவுரையாக கீழே வருவாய் அலுவலர்க்காக இருக்கும் அரசுக் குடியிருப்பில் தங்கிக் கொள்க என்பதையும் மீறி.

அப்போதெல்லாம் முதல் கிராமம் கெம்மம்பட்டி, அதன் பின் இராமன்பட்டி. வரும். இப்போது ஜீப் சென்றடையும் முதல் சந்திப்பாக சுண்டைக்காடு, புல்லாம்பட்டி கிராமம் வந்து நிற்கிறது. ஆனால் இப்போதும் இராமன்பட்டிதான் அரசு உயர்நிலைப்பள்ளி அதுவும் மலைவாசிகளுக்கான உறைவிடப்பள்ளி...இதில் படித்த 9 பத்தாம் வகுப்பு படித்த பிள்ளைகள் அனைவருமே தேறிவிட்டனர் இந்த கல்வி ஆண்டில் என்பது எனது எண்ணத்திற்கிடையே முந்திரிக் கொட்டையாக முந்தி வரும் செய்தி.
Image may contain: 1 person, standing and outdoor
அந்த இராமன்பட்டி மட்டுமே பெரிய ஊர். அதாவது சுமார் 100 வீடுகள் இருக்கலாம் எனத் தோராயமாகச் சொல்லலாம். அங்குதான் அரசின் சுகாதார துணை மையமும் உள்ளது. அந்த மையத்தில் பணி செய்த ரூபி என்ற செவிலியர் தொடர்ந்து 5 ஆண்டுகளாக அங்கு தங்கி பணி புரிந்து இரு முறை மாவட்ட ஆட்சியர் விருது பெற்றிருக்கிறார். நாங்கள் எங்கள் மருத்துவக் குழுவினர் இரு முறை அவருடன் சந்திக்க நேர்ந்தது.
Image may contain: 3 people, people smiling
அவர் அளித்த அனுமதி பேரில் சாலையோரம் இருந்த அந்த துணை சுகாதாரமையச்  சுவரில் எமது மருத்துவர்கள் முதல் குழு குப்பைக் கூள நிர்வாகம் பற்றி சித்திரங்களை ஓவியமாக வரைந்து சொல்லாமல் தமது கருத்துகளை பதிவு செய்தனர்.

அந்த மலை மேல் சுமார் 30 கிராமங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் எல்லாமே விரவிக் கிடக்கும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் வீடுகள் உள்ளன. மொத்தம் மக்கள் தொகை 4347 என்ற புள்ளி விவரம் கிடைத்தது.
Image may contain: 1 person, smiling, sitting
பெரும்பாலும் இன்னும் எவருமே படித்தவர்களாக இல்லை. இராமன் பட்டியின் துணைத் தலைமை ஆசிரியரை வைத்தே முதல் குழுவினர் பேஸ்ட் பிரஸ் எல்லாம் கொடுத்து பல் துலக்கல் பற்றிய விழிப்புணர்வை ஊட்டினர் துவக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மறு நாளில் குப்புசாமி தலைமை ஆசிரியரும் சேர்ந்து கொள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் இணைந்து இராமன்பட்டி முதல் கெம்மம்பட்டி வரை அணிவகுத்து சுத்தம் சுகாதாரம், குப்பையை கண்ட இடங்களில் போடக்கூடது, கழிக்காதே திறந்த இடத்தில் மலம் கழிக்காதே, பெண்களை படிக்கவை, சிறுவர் சிறுமியரை வேலைக்கனுப்பாதே போன்ற முழக்கமிட்டு அனைவரும் ஊர் மக்கள் எல்லாம் வியந்து பார்க்க ஊர்வலம் சென்றனர்.
Image may contain: one or more people, outdoor and water
முதல் குழுவை விட இரண்டாம் மருத்துவக் குழுவினர் ஒரு படி மேல் சென்று இவர்கள் செய்த பணிகளையும் செய்தும் அதற்கும் மேல் புல்லாம்பட்டி. நமங்காடு ஆகிய ஊர்களிலும், மற்றும் இரண்டு பெரிய பள்ளிகளான இராமன்பட்டி, கடுக்கா மரத்துக்காடு ஆகிய ஊர்களிலும்  வெட்ட வெளியில் எச்சில் துப்பல், மலம் கழித்தல், சிறு நீர் கழித்தல் எவ்வளவு சுகாதாரக் கேடானது என்பதை விளக்கும் திரைப்படத்தை ஒவ்வொரு ஊரிலும் சுமார் அரை மணி நேரம் ஒலி ஒளிபரப்பி விளக்கிப் பேசினர்

Image may contain: one or more people, people standing, tree, outdoor and nature

மேலும் கடுக்கா மரத்துக் காடு தலைமை ஆசிரியர் மாதேசன், ஆசிரியர் பவளக்கொடி ஆகியோரின் ஒத்துழைப்புடன் பள்ளிச் சுவரில் படம் வரைந்தும், பள்ளியில் திரைப்படம் காண்பித்தும், பற்பசை, பல் துலக்கி ஆகியவ்ற்றைக் கொடுத்து சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர்.
Image may contain: 2 people, people standing
அது மட்டுமல்லாமல் இவர்களின் பேச்சைக் கேட்ட 3 பேர் தங்களது பற்களின் பிரச்சனையை புல்லாம்பட்டியில் அமைந்துள்ள விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் தொலைதூரத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பல் மருத்துவ மையத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.நமது மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சையும் அளித்தனர்.

அது மட்டுமின்றி காடு கழனி, வீடு வாசல் ஆகியவற்றில் இருந்த அத்தனை மனிதர்க்கும் சுத்தம் சுகாதாரம், வெட்ட வெளியில் மலம் கழித்தலின் தீமை, சிறுநீர், உமிழ் நீர் கண்ட இடங்களில் துப்புவதால் நேரும் கேடு பற்றி விளக்கிக் கூறப்பட்டது. மேலும் பெண்களின்  மாதவிடாய், சேனிட்டர் நாப்கின்கள்,எய்ட்ஸ், பாலியல் நோய் பற்றிய அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

Image may contain: 2 people, people on stage, people standing and indoor

நிறைய உபசரிப்புகள் வேறு..மா, பலா, வாழை , விளாம்பழம், சிறு நெல்லி இப்படி ஏகப்பட்ட கனி வர்க்கங்களை நமது மருத்துவர்கள்  உண்டு மகிழ்ந்த அனுபவத்தை அந்த பாலமலை மண் அளித்தது.

Image may contain: one or more people and crowd

இத்தனைக்கும் எங்களுக்கு படுக்க படுக்கை, தங்க இடம், உணவு தயாரித்தளிக்கும் பாங்கு ஆகியவற்றை  புள்ளாம்பட்டியில் ஆசீர்வாத இயக்கம் என்ற நிறுவனம் நடத்தும் தேவாலய இடம் சேர்ந்த குடியிருப்பே எமக்கு அளிக்க மனங்கோணாமல் அதில் ஊழியம் செய்து வரும் யுவராஜ் மற்றும் அவரின் துணைவி ஜெயலலிதாவும்  செய்து வருகின்றனர். நல்ல வசதி. அந்த மலைப்பாங்கான இடத்தில் அப்படி தூய்மையான சுத்தம் சுகாதாரமான ஓய்வறைகளும் எங்களுக்கு கிடைத்தது இயற்கையின் கொடையே.  Mr..சாமிதாஸ், Mr.ஆல்பர்ட் and Pushparaj, Blessing Youth Mission ஆகியோர் இதன் நிர்வாகிகளாக விளங்குகின்றனர்.அவர்க்கும் எமது நன்றிகள் உரித்தாகும்.
Image may contain: outdoor
மேலும் இந்த முகாம்களை பாலமலையில் நடத்துவது என்றும், என்னையே அதற்கான பொறுப்பான அலுவலராக நோடல் ஆபிசராகவும் நியமித்து அந்த மருத்துவக் குழுவினரை வழி நடத்துவதென்றும் என்னைப் பணித்த விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்: பேராசிரியர் மருத்துவர். ஜா.பேபிஜான் எம்.டி.எஸ்  அவர்களுக்கே நன்றிகள் உரித்தாகும்.
Image may contain: 2 people, people smiling, people standing and people dancing

மேலும் கல்லூரியின் பல் மருத்துவ சமுதாயத்துறையின் தலைவர்  மருத்துவர் என்.சரவணன் எம்.டி எஸ் அவர்களும் இந்த முகாம் நடைபெற தமது வழிகாட்டுதல்களையும், தமது துறையின் அத்தனை ஒத்துழைப்பையும் நல்கி வருவது பாராட்டத்தக்கது.

மேலும் இந்த 20 மருத்துவர்களை அவரவர் துறைகளிலிருந்தும் இந்த முகாம் நாட்களில் பணி விடுவிப்பு செய்து முகாமில் ஆர்வத்துடன் ஈடுபட வைத்தமைக்கும் எல்லா துறைத் தலைவர்களுக்கும் சிறப்பாக மாணவர்களின் பொறுப்பு சார்ந்த துணை முதல்வர் பேராசிரியர் மருத்துவர் சுரேஷ்குமார் ஆகியோருக்கும் நன்றி உரித்தாகிறது.

Image may contain: one or more people, people standing and indoor

 மதிப்பிற்குரிய கவின் கோகுல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உதவியாக இருக்கும் மத்திய அரசின் மாவட்ட ஊக்குனராக     என்னோடு வாட்ஸ் அப்பில் இணைந்து நடக்கும் செயல்களை பகிர்ந்து கொண்டு வாழ்த்தி மகிழ்கிறார் மேலும் இந்த பாலமலையில் அரசுத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் அந்த அந்த ஊர்களுக்கு சென்றடையாமல் இராமன்பட்டியில் ஒரு வெட்ட வெளியிலேயே வைக்கப்பட்டு கை கழுவி விடப்பட்டுள்ளன.

இந்த செய்தியை, இந்த புகைப்படங்களை அவர்க்கும் பகிர்ந்து கொண்டுள்ளோம்.

மேலும் அரசின் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பெரும்பாலான கழிவறைகள், ஓய்வறைகள் திட்டத்தின் இலக்கான கழிவறையாக பயன்பாட்டில் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. முடிந்தவரை அவற்றை பயன்பாட்டிற்கானதாக செய்ய நாமும் முயன்று வருகிறோம்.
Image may contain: one or more people, hat, sunglasses, tree, selfie, sky, outdoor and closeup
S. Thanikachalam
Nodal Officer: Summer Internship Training Program 2018:
Camp and Public Relations Officer.
VINAYAKA MISSIONS SANKARACHARIYAR DENTAL COLLEGE
SALEM.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

விடியல் நண்பர்கள் குழுவின் 3 ஆம் சந்திப்பு: கவிஞர் தணிகை.

விடியல் நண்பர்கள் குழுவின் 3 ஆம் சந்திப்பு: கவிஞர் தணிகை.

Related image


கடந்த ஆண்டிலிருந்து இந்த குழுவை ஒருங்கிணைத்து நடத்தி வருபவரும் எனது நண்பருமான விடியல் குகன் நாளை மூன்றாம் சந்திப்புக்கு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.ஜி.எஸ் மீட்டிங் ஹாலில் ஏற்பாடு செய்துள்ளார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த சந்திப்பில் நமது நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வருகை தரும்படி கேட்டுக் கொள்கிறார். இந்த சந்திப்பில் எனது உரை:" புறம் கட உள் பார்க்க, புறம் கட கடவுள் பார்க்க" என்ற தலைப்பில் இடம் பெற உள்ளது.

1978 ஆம் ஆண்டில் இருந்தே விடியல் என்ற கை எழுத்துப் பிரதியுடன் ஆரம்பமானது இதன் விதை. அதன் பின் அச்சுப் பிரதியுடன் சிறிது காலம் நடைபெற்றது.

அதன் விழுதாய் முதல் சந்திப்பு கரூரில் 11/06.2017ல்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போது : "நெட்டை மரங்களென நின்றார்" என்ற தலைப்பில் எனது உரை வீச்சு இடம்பெற்றது அத்துடன் ஆடல் பாடல் என நிறைய நிகழ்வுகள் ஏன் ஒரு படிக்க பொருளாதாரச் சிக்கலில் இருந்த ஒரு ஏழை மாணவருக்கும் கல்லூரியில் மேல் படிப்பு படிக்க உடனடியாக‌ நிதி திரட்டி கொடுக்கப்பட்டது.

Related image

19 05. 2018ல் பழனி ராயல் பார்க் ஹோட்டலில் முதலாண்டை விட மிகவும் சிறப்பாகவே சுமார் 70  தேர்வு செய்யப்பட்ட நண்பர்களுடன் இந்த சந்திப்பு நடந்தது....பல்வேறுபட்ட பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னையிலிருந்தும் கூட நண்பர்கள் வந்து கலந்து கொண்டிருந்தனர். தங்குமிடம் ஏற்பாடுகளும், மாலை பழனி முருகன் கோவிலுக்கு கம்பி வட ஊர்தியில் அழைத்துச் செல்லப்பட்டு முருகனின் இராஜ தரிசனம்  தங்க ரதம் இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டு அனைவர்க்கும் பழனி பிரசாதம் வேறு வழங்கப்பட்டன எல்லாம் ஒரு பைசா எங்களது செலவின்றி. மறு நாள் அனைவரும் கொடைக்கானல் சென்றனர் நண்பர்கள் அனைவரும். என்னைத்தவிர சென்னை போன்ற வெகு தூரம் செல்ல வேண்டிய நண்பர்கள் தவிர... இந்த சந்திப்பின் போது ஆத்மாலயா என்ற ஆதரவற்ற மலை வாழ் மக்கள் பிரிவைச் சார்ந்த பெண்களுக்கும் அந்த தயானந்த சரஸ்வதி ஆரம்பித்து வைத்து நடந்து வரும் உறைவிடத்துக்கும் பத்தாயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டது. இது அந்தப் பெண்களின் எதிர்காலத்துக்கும் மேற்படிப்புக்கும்  உதவி வரும் அமைப்பாகும்.

இந்த நிகழ்வில் எனது உரை வீச்சு:" உடல் வளர்ப்போம், உயிர் வளர்ப்போம்" என்ற தலைப்பில் நிகழ்ந்தது.

மேலும் பட்டிமன்றம், விழிப்புணர்வு பாடல்கள், இப்படி பல பிரிவுகளிலும் பங்கு பெற்ற அனைவர்க்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. வினாடி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது...
மிகச் சிறப்பான ஏற்பாடுகள்...உணவு பற்றிய கவலை எல்லாம் இல்லாமல். பத்தியச் சாப்பாட்டுக்காரன் இந்த ஒரு நிகழ்வில் எனது பிடிவாதத்தை விட்டு விட்டு பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர் என்ற குறளுக்குகேற்ப கலந்து கொண்டு உண்டு வருகிறேன் எனது உடல் நலத்தையும் புறக்கணித்து இந்த நிகழ்வில் எனது பெரு நட்புக்காக பல மணிகள் கடந்து செல்கிறேன்.
Related image


வாழ்வு இயல் வழிகாட்டி என என்னை முதலில் இந்த அவையில் அழைத்திருக்கிறார்கள்...



இந்த நிகழ்வுகளில் எனது புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டு எனக்கு உதவியாய் அமைகின்றன. மேலும் கடந்த பழனி சந்திப்பில் இதுவரை வெளிச்சம் படாதிருந்த கால்நடை மருத்துவர் மறைந்த வாசவய்யா அவர்கள் எழுதி வெளியிடப்படாமல் இருந்த "வாய் இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும்" என்ற நூலும் வெளியிடப்பட்டது. அந்த நூலை விடியல் குகன் வெளியிட நீதிமன்ற நடுவர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்....


,

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




Saturday, June 16, 2018

BEST WISHES YOU DOCTOR RAJESH B.D.S. FROM KAVIGNAR THANIGAI.

                       17 ஜூன் 2018.

 டாக்டர் ராஜேஸ் பி.டி.எஸ்             டாக்டர் ஸ்ரீநிதி பி.டி.எஸ்

ஒரு நினைவு கூரத்தக்க நிகழ்வு
இரு காதல் இதயங்கள்
மூன்று முடிச்சு...
Related image

அங்கீகாரத்துடன் இணைக்கும் இனிய திருவிழாவில் நானும் இருக்கிறேன்

ஏ.பி.கல்யாண மண்டபம் கோல்ட்வின்ஸ், அவினாசி ரோடு கோவை.

டாக்டர் ராஜேஸ் எங்க ஊர்க்கார நல்ல இளைஞர்
இவரை ஈராண்டாக அறிந்தேன் நல்ல விளையாட்டு வீரர்
முகாம்களில் சளைக்காமல் பணி புரிபவர்
இந்த மணத்துக்கு நேரடியாக செல்ல முடியாமை
எனது இயலாமை பற்றிய சாட்சியம்
Related image
இவரின் அழைப்பிதழே இந்த மணத்தின் நேச விளக்கம்
தேர்ந்து பார்த்து பார்த்து வியந்து சேர்ந்து பார்த்த‌
அழகோவியமாய் வித விதமான இதழ்கள்...
திருமண அழைப்பிதழ்கள்

ஒன்று பிரித்துப் பார்க்கும் இதயமாக‌
மற்றொன்று நட்புக்கென்ற தங்க இதழ்களாக
மற்றொன்று குடும்பத்தின் அருவியாக‌
எப்படிக் கொண்டாட வேண்டுமென்றுத் தெரிந்திருக்கிறது
ஒரு மணத்தை திருமணத்தை இருமன இணைப்பை....

சிறப்பு நிகழ்வுகள் எப்போதாவதுதான் வருகின்றன‌
அதனால் வரமுடியாமையை ஏற்கமுடியாதது என்கிறார்
கவித்துவமாய் அழைப்பிதழிலேயே விளையாடி இருக்கிறார்
எண்ணமனைத்தையும் குழைத்து வண்ணமிழைத்திருக்கிறார்.

பல் மருத்துவர்கள் ராஜேஸ் மற்றும் ஸ்ரீ நிதி வாழ்வில்
என்றும் இணைபிரியா வாழ்வும் கை கோர்த்துக் கொள்கிறது
என்றும் இனி பல தலைமுறை வாழ வாழ்த்த‌
வாரிசுகளை வருக வருக என வரவேற்கும்

கவிஞர் தணிகை....


Image result for flower trees

HAPPY WEDDING GREETINGS TO P.LAVANYA....FROM KAVIGNAR THANIGAI.

                                 மண விழா
P. இலாவண்யா                            R.ஜெயப்பிரகாஷ்.

ஊனத்தூர் ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருக்கோயில்  ஆத்தூர் வட்டம்.

                                17 06 2018


Related image


என்னால் போக முடியாத தூரமல்ல இருந்தாலும் எப்படி
ஒரே நேரத்தில் பல இடங்களில் நான் காட்சி கொடுக்க முடியும்
நான் கடவுள் அல்லவே...

என்றாலும் ஆங்காங்கே இருக்க நான் ஆசைப்படுகிறேன் ஓர்
கடவுளைப்போல...

இலாவண்யாவை நான் சந்தித்தேன் ஈராண்டுக்கும் முன்
அது ஓர் வெண்ணிற ஆடை அணிந்த சிட்டு
முதலில் என்னிடம் அதிகம் பேசாத நைட்டிங்கேல்
வேம்படிதாள அரசு மருத்துவமனையின் நாடி நரம்புகளாக

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நோயாளிகள்
குவியும் முக்கிய மையம் அது...சேலம்
மாவட்டத்தின் வட்டார மருத்துவமனை
வாரமிருமுறை அங்கு சென்று பார்த்திருக்கிறேன்
Related image
 செவிலியர் என்பார், தாதியர் என்பார்
 சிஸ்டர் என்பார், பேர் என்னவோ இருக்கட்டும்
 பணி செய்யும்போது பார்த்திருக்கிறேன்
 பாராட்டியும் பேசியிருக்கிறேன்...ஏன் தேன்.

அவருக்கும் பொறியாளர் ஆர்.ஜெயப்பிர்காஷ்
அவருக்கும் திருமணவிழா ஒருமிப்புத் திருவிழா
இவ்வினிய நாளில் எனது எண்ண அலைகளை
அவர்கள் பின்னால் அனுப்பவே இந்தப் பதிவு...

வாழட்டும் வாழ்வாங்கு பேர் சொல்லி
மனிதகுலத்துக்கு செய்த சேவையின்
புனித பணியின் பேறு அவர்களை
என்றும் காக்கும்...வாழ்த்தும்
Image result for flower trees

என்றும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Friday, June 15, 2018

காலா உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் எந்தன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்: மகாக் கவி பாரதியார்...

https://youtu.be/AWrb6CW6iZU
https://www.youtube.com/watch?v=AWrb6CW6iZU


Nana patekar.jpgKaala Poster.jpg


காலா உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் எந்தன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்: மகாக் கவி பாரதியார்...

இப்படி எழுதியவரை தனக்குப் பிரியம் என்று நினைத்துக் கொண்டு வாடிக்கையாக‌ அதற்கு பழம் கரும்பு, தேங்காய் கொடுத்த போதிலும் அந்தக் கோயில் யானை பிடித்து இழுத்துப் போட்டு காலால் மிதிக்க அதுவே காரணமாகி படுத்த படுக்கையாகி மகாக் கவி மரணம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

எனக்கு காலா பற்றி எழுதத் தோன்றவேயில்லை. அதே சமயம் அதை விட்டு விடவும் தோன்றவில்லை.முண்டோகபநிசத்தில் நசிகேதன் யமனை இறப்பின் இரகசியம், யமன் என்பவன் யார் யார் எனக் கேட்டுக் கொண்டே இருப்பதாக கதை சென்று கொண்டே இருக்கும்...

அப்படிப்பட்ட இரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. சொல்லப்போனால் இதில் ஒன்றுமே இல்லை...பா. இரஞ்சித் பற்றி குறை சொல்லி விட்டால் எனது நண்பர் ஒருவர் வேறு கோவித்துக் கொள்வார்.

கரிகாலன் கட்டிய கல்லணையின் சரித்திரம் உலகறியும்...சர் ஆர்தர் காட்டனே இந்திய நீர்ப்பாசனத்தந்தையே கண்டு வியந்தது....அந்தப் பேரை இவர்கள் அசுத்தப்படுத்தி விட்டார்கள்.

நாயகன் கொஞ்சம்,கரிகாலன் கால் தீக்கிரையான கதையிலிருந்து கொஞ்சம் என எந்த சொந்தக் கதையோட்டமும் இழையோடாமல் எப்போதும் கூட்டம் கூட்டமாக எல்லோரையும் நிற்க வைத்து காட்சிகள்... மராட்டியர்கள் தேசத்தில் மும்பை தாராவியில் தமிழர்கள் தலைவனாக காலாவும் மராட்டிய மாநில செல்வாக்கு படைத்தவராக ஹரிதாதாவும் மோதுவதான கதை. உண்மையில் வில்லனான நானே படேகருக்கு கதாநாயகனுக்குரிய எல்லா தகுதிகளும் இருப்பதாக மஹாராஷ்ட்ரா மற்றும் பீஹார் மக்கள் தமரது வறுமையை தீர்க்கும் வள்ளலாக இவரை கருதுவதற்கான அடிப்படை செயல்பாட்டிற்கான தர்ம காரியங்களை இவர் நிறைய செய்திருக்கிறார் ஏன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையைக் கூட அப்படியே தர்மம் செய்துவிட்டதாகவும் இவர் பால் மிக்க அபிமானத்துடன் இருக்கிறார்கள் என்பதும் செய்திகள்.

நானா படேகர் படத்தில் வந்த பிறகுதான் கொஞ்சமாவது பார்க்க முடிகிறது.
காலா என்கிற கரிகாலன் என்கிற பாத்திர வேடம்  ஏற்ற இந்த ரஜினிகாந்த் கையை அசைத்தாலே போதும் எல்லாம் தூர தள்ளி விழுகிறார்கள்...

அவர் பார்த்தாலே எல்லாம் பறந்து விட வேண்டும் என எதிர்பார்க்கும் இரசிகர் கூட்டம்...உண்மையிலேயே இவர் நடிக்க வேண்டியதே இல்லை, வந்து நின்றாலே போதும் என படத்தை ஓட்டி வசூல் எடுக்கவும் நினைக்கிறார்கள், வசூல் எடுத்து விட்டார்கள் என்றும் கேள்வி.

பேசாமல் இவர் ஆறிலிருந்து அறுபது வரை போன்ற கதையம்சம் உள்ள படங்களை இப்போது நினைவில் கொண்டு செயல்படுவது சிறப்பு. மகிழ்ச்சி.
பா.இரஞ்சித், தனுஷ், ரஜினிகாந்த் அனைவரது முயற்சியுமே பாராட்டும்படி இல்லை....

இவரைக் காப்பாற்றுவதில் உயிரிழப்பதாக வரும் மகனாக நடித்திருக்கும் நபர் மிக நன்றாக செய்திருக்கிறார். நல்ல பாடி பில்டர். அவருக்கு வாய்ப்புகள் இனி அதிகம் வரும்.

சமுத்திரக்கனி வீணடிக்கப்பட்டிருக்கிறார். இது போன்ற குடிகார பாத்திரங்கள் அவரின் எதிர்கால வளர்ச்சிக்குத் தடையே...

ஈஸ்வரி ராவ்,ஹுமா குரேசி நன்றாக நடித்திருக்கின்றனர் உதவாத பெரிய பட்ஜெட் படத்தில்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

ஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்: கவிஞர் தணிகை

ஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்: கவிஞர் தணிகை

Madras High Court

நீதி ஆளுக்கு ஆள் நீதிபதிகளுக்கே வேறுபட்டு மூன்றாம் நீதிபதியின் கருத்துக்கு விடப்படுகின்றபோது அந்த சட்டம் நீதியில் அந்த நாட்டின் ஆளுமையில் போலித்தனம் இருப்பது சொல்லாமலே விளங்குகிறது. சட்டமும் நீதியும் ஆளுக்கு ஆள், ஆட்சிக்கு ஆட்சி, கட்சிக்கு கட்சி வேறுபடும்போது அது எப்படி அனைவருக்கும் பொதுவான முக்கியமாக ஏழைகளைக் காக்கின்ற அல்லது கீழ்த்தட்டில் உழல்கின்ற மக்களின் வாழ்வுத் தரத்தை மேம்படுத்தி நாட்டை நாட்டு மக்களை சமப்படுத்துகின்ற சட்டமாக எப்படி இருக்க முடியும்?

Madras High Court

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று இந்த நாட்டின் சட்டமும் நீதியும் சொன்னதுதானே...

பணத்தின் நீதி மட்டும் அப்படியே நிற்கிறது பாதாளம் மட்டும் பாயும் என்பது நிரூபணமாகி....
 பணம் தான் தேவைப்படுகிறது பிணத்தை அரசு மருத்துவமனையின் பிணவறையிலிருந்து கடைசிக் காரியத்திற்காக மீட்டுக் கொடுக்கும்போதும்...

மற்றபடி அரசியலும் , நீதியும், நாட்டின் சட்டத்தின் மாண்புகளும் கைகோர்த்து கூட்டணி சேர்ந்து நிற்பதும் அப்பட்டமாக தெரிகிறது.

குன்ஹா செய்த நீதியை இழிவுபடுத்தி அவரை இழிவு படுத்தினார்கள் பின் அதுவே சரி எனச் சொல்வதற்குள் ஒரு கட்சித் தலைவரை இயற்கையின் நீதியே தண்டித்து விட்டது....

Madras High Court

ஒரு தந்தை ஒரு தனயனை முத்தமிட்ட படத்தை தமிழகமெங்கும் ஒட்டி ஒரு கட்சி பொதுவுடமைத் தத்துவத்தை கேலி செய்து வருகிறது...

ஒரு தேர்தல் நடக்கும்வரை , ஒரு தலைவர் மரிக்கும் வரை ஒரு சட்டம் நீதியை நீதிமன்றங்கள் தள்ளிப் போட வழிகாட்டுகிறது எனில் அந்த நீதிமன்றங்களும் அந்தப் பாராளுமன்றங்களும் யாருக்காக எதற்காக எப்படி இயங்குகின்றன என்பதைச் சொல்ல எந்த சட்டமும் படித்திருக்க வேண்டியத் தேவையில்லை எந்த நீதி நிலைநாட்டப்படுகிறது என்பதுபற்றியும் சொல்லத் தேவையே இல்லை..

எல்லாம் ஏடுகளிலும் சொற்களிலும் இருக்கின்றன நடைமுறைக்கு வரவேண்டும் என எதிர்பார்த்து எழுதி வைக்கப்பட்ட யாவும்...

அந்தக் காகிதங்கள் அந்த எழுத்துகள் எல்லாம் எதற்கு எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை வைத்துப் பார்த்தால் தெரியும்....மேலை நாடுகளில் கழிவை சுத்தம் செய்ய சில காகிதங்கள் பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தல் போல... இந்த சட்டப்புத்தகத்தின் காகிதங்களும் எழுத்துகளும் ஒரு பயனுமின்றி...

Madras High Court

சட்டம் படித்தார்க்கு வேலை கிடைக்கும், வழக்கறிஞர், வழக்குரைஞர், அரசுப்பிரதிநிதி, நோட்டரி, நீதிபதி இப்படி எல்லாம்...அதுவும் ஒரு துறை அந்தத் துறை மற்ற எல்லாத்துறைகளையும் விட உயர்ந்தது என்று சொல்லிக் கொன்டிருந்தது எல்லாம் எவ்வளவு தவறானது எனக் கண்கூடாக காண்பிக்க, அரசியல் துறை அதை எப்படி மாற்றிக் காண்பித்திருக்கிறது என்பதைக் கண் கூடாகவே கண்டு கொண்டிருக்கிறோம்.

சட்டசபை நிகழ்வில் சட்டம் நுழையக்கூடாது என்கிறார் ஒரு தலமை நீதிபதி, சபாநாயகர் செய்த நீதி சரி இல்லை என்கிறார் அந்த தலமை நீதிபதியின் கீழ் பணி புரியும் மற்றொரு உயர் நீதிமன்ற நீதிபதி...ஆக தாமதிக்க எப்படி எல்லாம் வழி செய்யலாம் என்ற ஆராய்ச்சியின் வழியாக இந்த நீதி வழங்கப்பட்டிருப்பதாகவே பாமரர்கள் கருதுகின்றனர்.

Madras High Court

எப்படி நீதி வழங்கி இருந்தாலும் ஜெவுக்கு வழங்கிய நீதிபோல உச்ச நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கின்றதே அதனால் இன்னும் 3 ஆண்டுக்கு அல்லது மத்திய பாராளுமன்றத் தேர்தல் வரும் கால அளவுக்கு உள்ளாவது எடப்பாடி பழனிசாமி முதல்வர் அரசு எப்படியும் பயமின்றி காலம் தள்ளலாம் போராடினால் சுட்டுத் தள்ளலாம் எவருமே கேட்க முடியாது இந்த நாட்டின் சட்டமும் நீதியும், அரசும் கட்சிகளும் அப்படி...நினைவில் கொள்ளுங்கள் தலைப்பை ஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்...இது ஒரு பழமொழிதானே...புதுமை செய்யும் நாட்டுக்கு இதெல்லாம் பொருந்துமா என்ன? அது அவாரிய நாட்டுப் பழமொழி....இது பாரத நாட்டின் ஒரு மொழி.
Madras High Court


கடைசியாக ஒரு கோரிக்கை தமிழக அரசுக்கு: கண்ணகி சிலையை கடற்கரையிலிருந்து அம்மா அரசு அகற்றியது போல சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறதால் என்பது போல இது போன்ற நீதிக்கெல்லாம் நெருடலை ஏற்படுத்தும் மெட்ராஸ் உயர் நீதிமன்ற வாயிலில் உள்ள மனுநீதிச் சோழன் சிலையை எடுத்து விடலாம்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, June 3, 2018

ஹூ ஆர் யூ? கவிஞர் தணிகை

ஹூ ஆர் யூ? கவிஞர் தணிகை
 Image result for who are you meaning in tamil

ஹூ ஆர் யூ?

ரஜினி காந்த்

ஹூ ஆர் யூ?

சிவாஜி ராவ் கெய்க்வாட்

ஹூ ஆர் யூ?

கண்டக்டர்...பெங்களூர்

ஹூ ஆர் யூ?

அழகிய பெண்களை  பேருந்தின் படியில் ஏறவிடாமல்  முன்னும் பின்னும் விசில் ஊதி கலாய்த்த அதே சிவாஜி ராவ்.

ஹூ ஆர் யூ?

பாலச் சந்தர் சிவாஜி என தமிழ் திரை உலகில் இன்னொரு பேர் வேண்டாம் என பேர் வைத்ததால் ரஜினிகாந்த்

ஹூ ஆர் யூ?
அபூர்வ ராகங்கள் முதல் படத்தில் பாலச் சந்தரால் வந்தவன்

Related image
ஹூ ஆர் யூ?
மெட்ராஸ் பில்ம் இன்ஸ்ட்டிடியூட் மாணவன்

ஹூ ஆர் யூ?
மயிலு அம்மா குருவம்மா கூட நல்லாதான் இருப்பா என்று வசனம் பேசி வில்லனானவன்

இது எப்படி இருக்கு? பரட்டை கவுத்திட்டியே பரட்டை எனக் கவுண்டமணியால் வாழ்த்தப்பட்டவன்

ஹூ ஆர் யூ?
சிகரெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைல் என்று காட்டி தமிழக விடலைகளை ஏமாற்றியவன்

ஹூ ஆர் யூ?
நிறைய படங்களில் ஓய்வின்றி நடித்து பைத்திய நிலைக்கு சென்று
தியானம் பண்ணி திரும்பியவன்

ஹூ ஆர் யூ?
லதா ரஜினிகாந்த் உன்னை மணப்பதாக சொல்லி மணந்ததால்
தமிழ்நாட்டு மாப்பிள்ளையான வன்

ஹூ ஆர் யூ?

வைரமுத்தால் வடக்கே போகலாமா என்று நாடாள வா மன்னவா என பாடல் எழுதப்பட்ட வன்

ஹூ ஆர் யூ?
நோ, இப்படி சீன் வைத்தால் நடிக்க முடியாது என்னை கமல்னு நெனச்சீங்களா என காட்சியை இயக்குனர்களிடம் மாற்றித் தரச் சொன்னவன்

ஹூ ஆர் யூ?
கமலை விட குறைவாக சம்பளம் வாங்கியவன் நாளடைவில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகன்

ஹூ ஆர் யூ?
தனது சினிமா வரும்போதெல்லாம் அரசியல் டானிக் டையலாக் பேசி படத்தை ஓட வைத்துக் கொள்பவன்

ஹூ ஆர் யூ?
போயஸ் கார்டனின் ஜெ இருக்கும் வரை அவரை எதிர்க்க முடியாமல் பெட்டிப் பாம்பாக இருந்தவன்.

ஹூ ஆர் யூ?
லாஸ் வேகாஸ் சென்று தமிழகத்தில் சம்பாதித்த காசை சூதாடி தோற்றவன்.

ஹூ ஆர் யூ?
மதுவுக்கு எதிராக எதையும் செய்யாத ஒத்துழைப்பாளன்

ஹூ ஆர் யூ?
 செயற்கை பல் கட்டி வரியும் வருவாயும் கணக்கில் காட்டாமல்
நடித்துக் கொண்டிருக்கும் போலி ..

ஹூ ஆர் யூ?
இமயமலைக்கு மனச் சோர்வுக்கு மருந்துக்கு செல்பவன்

ஹூ ஆர் யூ?
போராட்டம் போராட்டம்னா தமிழ்நாடே சுடுகாடா மாறிடும்

எனது டையலாக் எப்பூடி?

ஹூ ஆர் யூ?
போலீஸை அடிக்கக் கூடாது

தீவிரவாதிகள் , கலகக்காரர்கள் 100 வது நாள் ஊடுருவி கலவரம் செய்து விட்டார்கள்

...அதை சொல்ல நீ யார்ரா?

ஹூ ஆர் யூ?

உயிரைக் கொடுத்து போராடறவங்களை தீவிர வாதிகள்னு சொல்ல‌
ஹூ ஆர் யூ?

போலீஸ் செய்தது , அரசு செய்தது, சரி என்ற பேச
 ஹூ ஆர் யூ?
இதை எல்லாம் சொல்ல நீ யார்ரா?

தியாகியா,
பொதுநல வாதியா?
கிராமங்களுக்கு சென்று சேவை செய்தவனா
எவன்டா இப்படி பேச‌
உனக்கு அதிகாரம் கொடுத்தது

ஹூ ஆர் யூ?
Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.