Thursday, November 29, 2018

டூ பாய்ண்ட் ஓ ....ஓ ?!போடு: கவிஞர் தணிகை

டூ பாய்ண்ட் ஓ ....ஓ போடு: கவிஞர் தணிகை


Image result for 2.0

சேலத்தில் கெடா வெட்டினார்கள், ஆத்தூரில் கேக் வெட்டினார்கள், நாகையில் யானை முன் வர ஊர்வலமாய் வந்தார்கள்...பால் ஊற்றி அபிடேகம் செய்தார்கள்....பத்தாயிரத்து 300 தியேட்டர்களில் வெளியீடு...அந்த மகத்தான நாள் வந்தது....உங்களால் நான் , உங்களுக்காக நான்...உங்கள் உப்பைத் தின்று வளர்ந்தவன் , ஐ ம் தி ஒன்லி ஒன்....

இதெல்லாம் டூ பாய்ண்ட் ஓ பற்றி ஒரு மாலை தினசரியில் வந்த் தகவல்கள்...மேலும் தமிழ் ராக்கர்ஸ் ஹெச் டி பிரிண்டில் படம் வெளியான 3 மணி நேரத்துக்குள்ளாகவே இணையத்தில் வெளியிட்டு விட்டது என்றும்...

550 கோடி பொருட் செலவில் தூக்க முடியாத ட்ரஸ் எல்லாம் தூக்க வைத்து 67 வயது மனிதரை 4 வேடம் ஏற்கச் சொல்லி படத்தை ஓட்டி விடுவார்கள் என்றும் செய்திகள்.

அக்சய குமார் வேடம் பறவைகளின் நண்பனாக இருந்து செல்போன் கேடுகளுக்கு எதிராகப் போராடுவதாக அதை ரீ லோடட் சிட்டி எதிர்த்து அழிப்பதாக‌

கதையே இல்லாமல் சைண்டிபிக் பிக்சனாக  வெறும் கிராபிக்ஸ் அதிசயக் காட்சிகளை எல்லாம் காட்டி பிரமிக்க வைத்து ஆங்கிலப் படங்களே அண்ணாந்து பார்க்க வைக்கிற படம்,  பாகுபலி பக்கத்தில் நிற்க முடியாது என்று எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்...

இப்படியே பேசினால் இவரும் அடுத்த எம்.ஜி.ஆராக கட்சி நடத்தி ஆட்சி அமைத்து விடுவாரோ என்று இவரது இரசிகர்கள் கருத...

ஆனால் அவரோ சினிமாவை நல்ல விதமாக ஓட்டி பேர் எடுத்துக் கொள்ளலாம் என நகர்ந்தபடி இருக்க....எமி ஜாக்சனை டூ பீஸில் காண்பித்தும், எல்லாமே ரோபாதான் என்று சொல்லியும் வசீகரன் மனிதராக இருப்பவன் அதை எப்படி எதை வைத்து வெல்கிறான் என்பதே இந்தக் கதையின் கரு.

குழந்தைகள் பெரியவர்கள் எல்லாம் வியந்து பார்க்கலாம் ஒரு சினிமாவாக...சினிமாவை சினிமாவாகப் பார்க்கலாம் பாருங்கள்...ஆனால் அதை விட மித மிஞ்சிய கற்பனை எல்லாம் வேண்டாம்.

சங்கரின் கற்பனை பிரம்மாண்டமாக திரையில். ஆனால் இந்தப் படத்தை வெளியிட சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. சாதாரண தியேட்டர்களில் வெளியிடுவதில் பயனில்லை...

இந்தப்படத்தில் பெறும் ஊதியத்தை கஜாவுக்கு கொடுப்பார்களா இதில் ஈடுபட்டுள்ளவர்கள்...எல்லாம் வியாபாரம்...வெற்றி தோல்வி இப்படித்தான்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, November 26, 2018

அவர்கள் காற்றைப் போன்றவர்கள்: கவிஞர் தணிகை

அன்பு நண்பர்க்கு:
Image result for mentally disordered persons in roadsides

வணக்கம்.

1.ஒரு முறை மகன் மணியத்தின் விளையாட்டுச் சீருடை செட் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று எங்கள் ஊரில் சக்குண்ணி டைலர் கடை இருந்த இடத்தில் இருக்கும் ஒரு மனநிலை பிறழ்ந்த ஒரு மனிதருக்கு (அவர் எப்போதும் கரிய ஆடையில் இரு கைகளும் இரு பை மூட்டை தாங்க இங்கிருந்து மேட்டூருக்கும் மேட்டூரில் இருந்து எங்கள் ஊருக்கும் பயணம் செய்து வருபவர்தாம் சாலைகளில் பார்த்திருக்கலாம்...அவர் உள்ளூர்க்காரர்தாம் நாவிதத் தொழிலை மேற்கொண்டிருந்தது அவர் குடும்பம். ஆனால் அவரது சகோதரர்கள் எல்லாம் கெமிகல், மில் ஊழியராக நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள் .இவரும் பள்ளி இறுதி வரை படித்ததாக இவருடன் கற்றவர் கூறுவர்). அவருக்கு கொடுக்க முனைந்தேன்...உடனே அவர் உடனே என்னை அவமானபடுத்தி, கொடுக்க வந்துட்டா, இவன் கொடுத்தா நான் போடுவனா? என்று வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்....அதை ஒரு பொது இடத்தில் வைத்து விட்டு வந்து விட்டேன் சற்று ஒதுக்குப் புறமான இடமும் கூட மறு நாள் அதைக் காணவில்லை எவரோ எடுத்துக் கொண்டு சென்று இருப்பர்.

2. டாக்டர் மனோஜ்கிருஷ்ணன் மால்கோ மருத்துவரின் வகுப்புத் தோழி என்ற ஒரு வதந்தியும் உண்டு.  ஒரு மன நிலை பிறழ்ந்த பெண் இங்கே சுற்றித்திரிபவர்.அவருக்கு மனோஜ்கிருஷ்ணன் உணவுப் பொட்டலங்கள் கொடுப்ப்தாகவும் செய்தி. நாங்கள் அப்துல் கலாம் இயக்கம் என்ற இயக்கத்தின் வழி சில நல்ல சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இவரை சந்தித்து மாற்ற முனைந்தோம்...ஆனால் நாங்கள் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்களை அவர் பெற்றதோடு சரி...அந்த முயற்சியும் முனை மழுங்கியது.

அவர் ஒரு பலகாரக் கடையில் சென்று நிற்பார். உடனே அந்தப் பெண் இரண்டு வடை எடுத்துக் கொடுப்பார். வாங்கிக் கொண்டு சென்று விடுவதைக் கண் கொண்டு பார்த்திருக்கிறேன்

3. சக்தி தியேட்டர் நிறுத்தத்தில் ரத்தினவேலு என்னும் டீக்கடைக்காரரிடம் ஒரு ஆண் அனேகமாக அவர் பிராமண இனத்தாராக இருக்கலாம் வந்து அங்கே டீக்கடையில் ஒரு டீ இரண்டு வடை வாங்கி இலவசமாகத் தின்று விட்டு, நாங்கள் உங்களை ஒரு ஹோமில் சேர்த்து விடுகிறோம் வருகிறீரா என்றதற்கு எடுத்தார் ஒரு ஓட்டம்...

..இது போன்று நிறைய பேர் நமது ஊருக்கு வரக் காரணம் சேலத்துக்கும் மேட்டூருக்கும் ரயில் தொடர்பு ஏறுபட்டதும்.

5. எங்களது ஊரில் ஒரு பெண் கெட்ட வார்த்தை பேசிக் கொண்டு திரிவார், ஆனால் சாப்பாடு எல்லாம் வாங்கிச் சாப்பிடுவதில் படு கெட்டி. குளிக்காமல் கொள்ளாமல் ஒரே இடத்தில் நாற்றமெடுக்கும் உடலுடன் ஆனால் அங்கங்கே சென்று கொண்டே இருப்பார். நமது பார்வையில் படுவார்.

6. இப்படிப்பட்ட ஒரு பெண்ணை குளிக்க வைத்து படுபாவிப்பயல்கள் வன்புணர்வு செய்ததாகவும் கேள்வி....அதன் பின் அவரை நகமெல்லாம்பிடுங்கி நாக்கெல்லாம் துண்டித்ததாகவும் பேச்சு அடிபட்டது.

7. லோகநாதன் என்னும் சுடர் ஒளி கண்பார்வையற்றோர்க்கும், குழந்தைகளுக்கும் விடுதி நடத்துபவர் ஒரு காலக்கட்டத்தில் எனக்கும் எனது நண்பர் முரளிதரன் என்னும் கெமிகல் கம்பெனி நடத்தியபடி கெமிகல் வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்த எனது நண்பர் ஒருவர்க்கும் தொடர்பில் இருந்தவர்.Loganathan வைத்தீஸ்வரா பள்ளியில் நுழை வாயிலில் சிறு பெட்டிக்கடை நடத்தி வந்தவர். அவருக்கும் பார்வைக்குறைபாடு கொஞ்சம் அப்போது இருந்தமையாலும் blind school அவர்களின் தொடர்பில் இருந்தமையாலும்...அது போன்ற பணிகளில் ஈடுபட அடிப்படைப் பணிக‌ளில் ஈடுபடும்போது எனது பங்கு பணியும் அதில் உண்டு. ஆரம்ப காலத்தில் அந்த நிறுவனத்திற்கு நான் ஆலோசகர்...பங்களித்ததும் உண்டு. ஆனால் அதில் முழுதும் என்னால் ஈடுபட முடியாது  என்று ஆரம்பத்திலேயே சொல்லி அவரை ஈடுபட வைத்ததும் என் நினைவில் இப்போதும்..

அந்த விடுதியில் இருக்கும் பார்வை இழந்தவர் ஒருவர் ஒயர் சேர் பின்னி சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு இது என்ன கடை, இது என்ன கடை என்று கேட்டு மதுபானக் கடையைத் தேடிக் குடித்துவருவதையும், ரயிலில் சொல்லி வைத்தாற்போல ஒரு கால் துண்டான நபரும், ஒரு குருடரும் பிச்சை எடுக்க தினமும் மேட்டூரிலிருந்து சேலம் வருவதும், சேலத்தில் இருந்து மேட்டூர் போவதுமாக இருந்து வருவதையும் கண்டதுண்டு....

8. பல ஆண்டுகள் நானும் எனது நட்பும் உறவும் வட்டமும் அவ்வப்போது இணைந்தும் பிரிந்ததுமான அவர்களுடன் நான் தொடர்ந்து பல்லாண்டுகள் கிறிஸ்மஸ் நள்ளிரவில் சுமார் 12 மணியளவில் சாலையோரம் படுத்துறங்கும் அனாதைப் பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கி வந்தேன்.ஒரு முறை 2000 ஆண்டு... எவரும் உடன் வராததால்.தனியாக‌ சென்று போர்வை எல்லாம் கொடுத்து விட்டு திரும்புகையில்தான் கீழே வாகனத்துடன் விழுந்து எனக்கு இடது கை மூட்டு எலும்பு இடம் பெயர்ந்தது இரு சக்கர வாகனத்தில் திரும்பும்போது ஒரு மண்டபப் பணிக்காக ஜல்லிக் கொட்டி அதை சாலை முழுதும் விரவிக் கிடந்ததை கூட்டி குவிக்காததால் அதன் மேல் எனது வண்டி செல்ல... அப்போது மணி இரவு. 2 மணி இருக்கும். அப்போதிருந்து அந்தப் பணியை விட்டு விட்டேன்.

9. கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த ஒரு காலக்கட்டத்தில் பிச்சைக்காரர் மறு வாழ்வு நிதி என்று திரட்டி அவர்களுக்கு விடுதி உணவு வசதி யாவும் செய்து தர முயன்றார். செய்தார். முயற்சி தோற்றது. இப்போதிருக்கும் உழவர் சந்தை, சமத்துவ புரம் அளவு கூட அல்லாமல் அது படு தோல்வி அடைந்தது.

10. பொன்னியின் செல்வன் கல்கி எழுதியது அதில் ஒரு மந்தாகினி என்னும் ஒரு கேரக்டர் வரும் ஊமைச்செவிடு...ஆனால் அவள் நல்லவள்...பொன்னியில் செல்வன் என்னும் இராஜைராஜ சோழன் என்னும் அருள்மொழி வர்மனை காவிரியில் மூழ்க இருந்தபோது குழந்தையாக இருந்தபோது காப்பாற்றுவாள்...அவளைக் காற்று மாதிரி யாரும் பிடிக்கவும் முடியாது கட்டுப்படுத்தவும் முடியாது எங்கு இருக்கிறாள் எங்கூ செல்கிறாள் என்பதை எல்லாம் எவருமே சொல்லவோ கணிக்கவோ முடியாது என்பார்கள்

11. அது போலத்தான் இவர்கள் யாவரும், காற்றைப் போன்றவர்கள்... இவர்களை...ஒரு இடத்தில் பிடித்து வைக்க முடியாது... சில ஹோம்களில் வன்முறையும், அதில் நம்ப முடியாத கதைகள் போன்ற உண்மைகளும் இருக்கின்றன அதில் எல்லாம் நுழைந்து மீண்டு வர அதற்காகவே நம் வாழ்வு சென்றாலும் போதாது.. ...உங்கள் நண்பர்கள் அல்லது நான் ஆரம்பத்தில் செய்தது போல ஒருவர் நினைவு நாள், ஒருவர் பிறந்த நாள் வருகிறது இவர்கள் அந்த  ஹோம் செல்கிறோம் அதை செய்தோம், இதை செய்தோம் என்பதெல்லாம் அவரவர்க்கு ஆறுதல் தேடிக்கொண்டு இது போன்ற  மனிதர்க்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோம் என்று பெறும் நிறைவுக்காக...

12. உண்மையில் இதன் அடிப்படைக் கோளாறு குடும்பம் என்ற மாபெரும் புகழ்பெற்ற இந்தியக் கட்டமைவு குலைந்து அதன் அடையாளங்களாக ஆங்காங்கே திரியும் இவர்கள்... அதன் உச்சியில் அரசின் ஆளுமை அற்ற அலட்சியம். எனவே நாம் இந்த குடும்ப அமைப்புக்கு சீர்பட ஏதாவது செய்வதும் அல்லது கோணாத கோல் என்னும் அபிராம பட்டர் சொல்லும் நல்லாட்சி புரிய ஏற்பட ஏதாவது செய்வதுமே இது போன்ற பிரச்சனைகளுக்கு குறைந்த பட்சம் ஒரு தீர்வு ஏற்பட கொஞ்சம் அருகே அல்லது இந்த பணியை ஒரு செ.மீ. அல்லது மி.மீ முன்னெடுத்துச் செல்வதுமாகும்... அது பல்லாயிரம் கி.மீ தள்ளி இருக்கிறது என்பது வேறு...அதில் ஒரு சிறு பொறி பற்றி காட்டுத் தீயானால் பல்லாயிரம் கி.மீ தொலைவு கூட ஒரு நாளில் எட்டி விட முடியும் என்பதெல்லாம் சிதையா நம்பிக்கைகள்...

13. சில நேரங்களில் இதில் ஈடுபடும் நமக்கும் கூட பெரும் தொல்லைகள் கூட உற்பத்தி ஆவதும் உண்டு...
Image result for mentally disordered persons in roadsides
எனவே இதில் எல்லாம் ஈடுபடுமளவு இப்போது காலச் சூழல் இல்லை. wqe need a team to take of these kinds of difficult works.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


Saturday, November 24, 2018

ஏண்டா இப்படி அடிச்சிக்கிட்டே சாகறீங்க: கவிஞர் தணிகை

ஏண்டா இப்படி அடிச்சிக்கிட்டே சாகறீங்க: கவிஞர் தணிகை

Related image


குத்திக் கொல்லவாடா இவ்வளவு பெரிய கல்லூரியில் காலடி எடுத்து வைத்தீர்கள்? குத்துப் பட்டு சாகவாடா இவ்வளவு பெரிய கல்லூரிக்கு சென்று சேர்ந்தீர்கள்...

கடந்த வாரத்தில் கோவை மலுமிச்சம்பட்டி இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஒரு முதலாமாண்டு மாணவரை மற்ற 3 மாணவர்கள் போய் கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார்கள் என்ற செய்தி இன்றைய மாணவ சமுதாயத்தின் பால் அக்கறை கொண்டுள்ள என் போன்றோர்க்கு வயிற்றில் அமிலத்தை அள்ளி பூசியது போல் தாக்கியது.

அந்த 3 பேருமே 18 வயது கூட இன்னும் நிறையாத பாலகர்கள்...எனவே அவர்கள் சிறுவர்களுக்கான அரசின் கூர்ம சிறார்பள்ளியில் கொன்டு சென்று வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் கூடுதல் செய்தி.

அவன் என்னடா பெரிய இவனா? என்று கேட்டதுதான் காரணமாம்... பெரியவன் என்று நிரூபிக்க இந்த மடையர்களுக்கு கத்தியும் கொலையும் தாம் தோன்றியிருக்கிறது...இது இன்றைய சமுதாயத்தின் அவலத்தின் அடையாளம்

பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தாம் தங்க முக்கோணவழியில் ஒரு நாட்டை அதன் வழிப்போக்கை சரிசெய்ய முடியும் என கலாம் 2020 என்றெல்லாம் கனவு கண்டு கண்களை மூடினார். ஒரு நட்டைக் கூட கழட்ட முடியாது...ஒரு மண்ணுக்கும் இங்கு வழியில்லை.

முளைத்து 3 இலை கூட விடவில்லை என்பதற்குள் இதற்கெல்லாம் போதை மருந்துகள், மது, புகை , வன்முறை இப்படி ஏகப்பட்ட ஊறல்கள்...இத்தனைக்கும் ஒரு வகுப்பு சரியாக வரவில்லை என்றாலும் கல்லூரியில் இருந்து தகவல் வீட்டுக்கு அனுப்பப் படும் சூழல்கள் இருக்கின்றன‌
Image result for hindustan college coimbatore
பணம் பணம் ஒன்றே குறிக்கோள் என அரசும், தனியார்களும், எதைபற்றியுமே துளியும் அக்கறையின்றி எதிர் வரும் சமுதாயத்தை அதன் வளர்ச்சியை கணக்கில் கொள்ளாது ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதன் முடிவு அதன் பிரதிபலிப்புகள் யாவுமே..

நானறிந்த கல்லூரியில் ஒரு பெண் ஒரே காலக்கட்டத்தில் இரு மாணவர்களைக் காதலிக்கிறாள் என ஒரு மாணவன் மது அருந்தி விட்டு அவளை அடித்திருக்கிறான் ... கல்லூரி என்னடா ஏதடா என கேள்வி கேட்கப் போனால் அவன் விஷமருந்தி விடுவானாம்...வாழ்வு என்றால் என்ன, இன்னும் காலம் எவ்வளவு, உலகம் என்றால் என்ன, பிரச்ச்னை எல்லாம் எப்படி சமையல் எரிவாயு ஆயிரத்துக்கும் மேல் போய்விட்டதே நாடு நல்ல தலைவரைக் கேட்கிறதே, வாக்களிக்க இன்னும் பணமும், மதுவும், பிரியாணியும் கேட்பவர்கள் இருக்கிறார்களே, மக்கள் நல்ல முறையில் இணையாமல் சாதி,இனம், மொழி, நிறம், மதம் இவை எல்லாம் பிரித்தாளும் சூழலும் சூழ்ச்சியுமாய் இருக்கிறதே , தனியார்மயம், தாராளமயம், உலகமயம், கார்ப்ரேட் சதி எல்லாம் இருக்கிறதே இதைப்பற்றி எல்லாம் நினைக்க நேரம் இல்லையே...இவை எல்லாம் பற்றி அறியாமல் இவர்கள் இந்த இளையவர்கள். போகும் பாதை இந்தியாவில் ஏன் தமிழகத்தில் அந்துவானக்காடாக சென்று மிருகங்களுக்கு பலியாவது போல போய்க் கொண்டிருக்கிறதே... அதற்கு நாங்களும் முடிந்தவரை கவுன்சிலிங் செய்தும் ஏன் இவற்றை எல்லாம் தடுக்க முடியாமல் இவை மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கின்றன? . பருவக் கோளாறு இளம்பருவக் கோளாறு...அத்துடன் போதையின் தடம்... நாங்களும் அந்தவழியில் தானே வந்து வாழ்ந்து வருகிறோம்....

இன்று ஒரு செய்தி என்னவெனில் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட்டம் ஆடிய சிறுவர்களுக்குள் சண்டை வர அதை பெற்றோர் கையில் எடுத்து உடன் துப்பாக்கியுடன் குண்டுகள் முழங்க சண்டை 6 உயிர்களைக் குடித்திருக்கிறதாம்.

எல்லாவற்றிலுமே தான் என்னும் அகங்காகரம், ஆணவம். அடுத்தவரைப் பற்றிய சிந்தனை இல்லா வாழ்க்கை , ஒத்துப் போகும் தன்மை குறைந்து வருவதையே காட்டி வருகிறது.

விளைவுகள் உயிர்ப்பலிகள்...கோவை சம்பவத்தில் ஈடுபட்ட 4 குடும்பங்கள் இனி விருத்திக்கு வர முடியுமா?? எல்லாம் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகளை மட்டுமே கொண்டிருக்கும் மைக்ரோ லெவல் குடும்பங்கள்...

தமிழக நீதிமன்றம் விலையில்லா அரிசி கொடுப்பதால் சோம்பேறித்தனமும், வேலை செய்ய வடக்கு மாநிலங்களிலிருந்தும் ஆள் வரவேண்டி இருக்கிறதே என இனி உண்மையிலேயே தேவையான வறுமைக் கோட்டிற்கு பின் தங்கிய குடும்பங்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்க வேண்டும் எனச் சொல்லியுள்ளதாக அறிகிறோம். அது போல எவருக்கு மதுவிற்பனை செய்வது என வரையறை செய்து விடலாம் அல்லது மதுக்கடைகளை முதலில் மூடச் சொல்லலாமே....

இயற்கைப் பேரிடரில் கஜா  போன்ற புயல்களால் உயிர்களுக்கு இன்னல் ஏற்படும் இந்நிலையை சரி செய்யவே அரசுகளால் மக்களால் முடியாத போது மனிதர்களின் இந்த வெறி பிடித்த செயல்களை எல்லாம் எப்படி  தடுக்க முடியும் எனில் இது உடனே ரெடிமேட் உப்மா போல முடியாது...நாட்பட காலத்தைக் கணக்கில் கொண்டு திட்டமிட்டு கல்வித்துறை மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் சார்ந்து சேர்ந்து நல்ல முன்மாதிரிகளை அடையாளம் சொல்லி வளர்த்தெடுக்கும் கடமையை சரியாகச் செய்தாக வேண்டும்...இல்லையேல் அமெரிக்கா போல ஆய்தத்துடன் அலைவார்கள் தேவையற்ற உயிர்கள் பலியாகும்...

அரசியல் கட்சி என்கிறீர்கள், அரசு என்கிறீர்கள், கட்சி என்கிறீர்கள், சாதி என்கிறீர்கள், மதம் என்கிறீர்கள்... எல்லாவற்றையும் வைத்து சேர்ந்து நின்று அனைவரையும் வாழ வைக்கப்பாருங்கள்...சாகடிக்கப் பார்க்காதீர்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, November 21, 2018

வரலாறு காணாத சமையல் எரிவாயு விலை ஏற்றம் 982.50 ரூ.: கவிஞர் தணிகை

வரலாறு காணாத சமையல் எரிவாயு விலை ஏற்றம் 982.50 ரூ.: கவிஞர் தணிகைImage result for don't give your even one vote to rulers of india and present tamil nadu

மோடி சர்காரை ரிலையன்ஸ் அம்பானிகளும் இன்ஃபோஸிஸ் நாராயணசாமிகளும், ஆடிட்டர் குருமூர்த்திகளும் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்... பிரதமர் மோடி, வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்ஸை ஒரு சீட் கூட  வரவிடாமல் செய்யுங்கள் என மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். பொன் ராதாகிருஷ்ணன் கேரளாவில் பேருந்தில்  அய்யப்பன் கோவிலுக்கு செல்வதை தரக்குறைவாக நினைக்கிறார்.

இவர்கள் யாவரும் சொல்வதெல்லாம் மோடி சர்கார் ஏழைகளுக்கான சர்கார் அல்ல என்பதையே...

அவரவர் பணத்தையே வங்கியில் போடவைத்து நாள் கணக்கில் இரவு பகல் என்று பாராமல் காத்திருக்க வைத்த அந்த ஒரு நிகழ்வே போதும் இந்த சர்காருக்கு ஒரு வாக்கும் கூட போடக் கூடாதுதான். ஒரு வாக்கும் கூட விழக்கூடாதுதான்...
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
இப்போதும் கூட நாட்டின் மிகப்பெரும் வங்கியான ஸ்டேட் பாங்க் மக்கள் தம் பணத்தை எடுக்க ஒரு நாளுக்கு இருபதாயிரம் மட்டுமே என வரையறை செய்து வைத்துள்ளது...எவர் பணத்தை எவர் ஆளுமை செய்கிறார் என்ற காரணத்தைப் பாருங்கள் அதற்கேற்ப செயல்படுங்கள்...

விஜய் மல்லையாவின் பங்களாவை ஏலம் விட்டு கொடுத்த கடனை மீட்க‌ முடியாத இந்த ஸ்டேட் பாங்க், ஏழை மாணவர்கள் படிக்க பெற்ற கடனை ரிலையன்ஸ் நிறுவனம் வைத்து வசூலிக்க முயன்றதே இது போன்ற காரணங்களே போதும் அரசும் அதன் அமைப்புகளும் எந்தப் பக்கம் இருக்கிறது எனச் சொல்லி அடையாளம் காட்ட...
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
மிக வளர்ந்த நாடான பிரான்ஸில் கூட பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையேற்றம் கண்டனமாய் நாடெங்கும் ரோடெங்கு எதிரொலிக்கிறது ஆனால் இங்கு மக்கள் சாதி, கட்சி, அமைப்பு, மதம் ஆகியவற்றால் ஒருங்கிணைய முடியா அளவில் பிரித்தாளப்படுகிறார்கள்...

பிரச்சனையின் அடித்தளம், முதுகுத் தண்டு என்னதான் என உணர் முடியா அளவில் இளைஞர்கள் சினிமா, மீ டூ, மது, காதல் , உணர்ச்சி வசம் என பேதலித்துக் கிடக்கிறார்கள் வாழ்வதாக வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏர் இந்தியா நிறுவனம் நட்டத்தில் இயங்கிக் கொண்டு பெட்ரோலை கடனாக பெற்றுத் தர வேண்டிக்கொண்டிருக்கிறது பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து அரசிடம் கோரிக்கை வைத்து  ஆனால் இங்கு பேருந்து கட்டணம் நினைத்தபடி உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது...

ஏர் இந்தியாவின் கட்டணம் உயர்த்தப்பட்டால் மேட்டுக்குடிகள் பாதிக்கும், பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் ஏழை எளியோர்தானே பாதிக்கப்படுகிறார் எனவே இப்படித்தான் அப்படித்தான் என்றுமே அரசுகள் ...

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் 5 நாளாகியும் சோறு, குடி நீர், மின்சாரம் இல்லாமல் கொடைக்கானல் எல்லாம் தீவாகி விட்டதாக செய்திகள் இருந்தும் அந்த பாராளுமன்றப் பிரதிநிதிகளும், சட்டமன்றப் பிரதிநிதியும் தொகுதி பக்கம் கால் வைக்காமல் சேவை செய்து வருவதாக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். மேலும்  இதில் தமிழக முதல்வர் ஜீ பூம்பா என்றவுடன் எல்லாம் மின்கம்பங்களை நட்டுவிட முடியாது என்கிறார் எல்லாமே சினிமாத்தனமாகிவிட்டன...

போர்க்கால அடிப்படையில் புயல் நிவாரணப்பணிகள் நடைபெறவில்லை. உயிர்காக்க அறிவுப்புகள் உரியமுறையில் கிடைத்தவுடன் எதிர்க்கட்சித்தலைவர், மக்கள் நீதி மையத் தலைவர், மறுமலர்ச்சி தி.மு.க தலைவர் மற்றும் அனைவருமே புயல் நிவாரண நடவடிக்கைகளை பாராட்டினர் ஆனால் உண்மை நிலவரம் தெரிய வர வெட்கமாகப் போய்விட்டது அப்படிப் பேசியமைக்கு ஏன் எனில் உண்மைச் செய்திகள் தாமதமாகவே வெளிவருகின்றன..ஊடகம் யாவும் கூட சரியான செய்திகளை தரவில்லை...கேரளப் புயலுக்கு கொண்டு வெள்ள நிவாரணத்துக்கும் கொண்டு கொட்டியவர்கள் இப்போது பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்...சொற்போர் நடந்து வருகின்றன வேலைகளை செய்வதை விட்டு விட்டு, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதாக...
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
ஒரு வாக்கு கூட இவர்களுக்கு எல்லாம் போடக்கூடாது....

அவ்வளவு பொறுக்க முடியாத விலைவாசி ஏற்றத்தில் மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள்...தேர்தல் பக்கம் வரக்கூடிய இந்தக் காலக்கட்டத்திலும் இதைப்பற்றி எல்லாம் எவருக்கும் துளியும் கவலை இல்லை...எனவே...

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் கூட வரக்கூடாது என்று சொல்லும் பிரதமர் வார்த்தையைப் போல சொல்ல வேண்டுமெனில் மோடி சர்கார் மற்றும் ஆளும் தரப்பினர் இவர்கள் எவருக்குமே ஒரு வாக்கு கூட விழக்கூடாது..
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, November 17, 2018

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல் ஒரு கோடு பற்றி பேசியே ஆக வேண்டும்: கவிஞர் தணிகை

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல் ஒரு கோடு பற்றி பேசியே ஆக வேண்டும்: கவிஞர் தணிகை

Image result for pariyerum perumal


3.5 கோடி செலவில் எடுக்கப்பட்டு செப்.28 ல் வெளியிடப்பட்ட இந்தப் படத்தைப்பற்றி ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்து அது எனக்காக பல நாட்கள் காத்திருந்தும் நேரமின்மையால் பார்க்க முடியாமலே இருந்து இரண்டு நாட்களுக்கும் முன் மழையின் காரணமாக கல்லூரி விடுமுறை விட்டதால் பார்த்தேன்...இரசித்தேன் என்றெல்லாம் சொல்லக் கூடாடத சமூக அவலத்தை அலசும் படம். இதைப் பற்றி இவ்வளவு காலதாமதத்திற்கும் பின் எழுத வேண்டுமா என இரண்டு நாட்கள் தள்ளிப் போட்ட பிறகும் அதை எழுதியே ஆக வேண்டும் என எனது எண்ணம் நெருடிக்கொண்டே இருந்ததால் இதை எழுதியே ஆக வேண்டி இருக்கிறது.


பா.இரஞ்சித் ரஜினி காந்தை வைத்து இரண்டு படம் எடுத்தவுடன் அவரும் பெரும் முதலாளியாகி இந்தப் படத்தின் தயாரிப்பாளாராகி 3. 5 கோடி செலவு செய்துள்ளார். இப்படித்தான் சங்கர் மற்றும் இன்ன பிற பிரபல இயக்குனர்களும் பெரிய பட்ஜெட் படங்கள் அவர்கள் செய்து கொண்டே தமது இளையவர்களுக்கு சிறிய பட்ஜெட் படத்தை எடுக்கும் வாய்ப்பைத் தந்து ஒரு கல்லில் சில மாங்காய்களை அடித்து விடுகிறார்கள்.

இந்த அரசியல், சினிமா இவை இரண்டுமே இவர்கள் கை முதல் இல்லாமலேயே அடுத்தவர் முதலை வைத்தே இவர்களை பணக்காரராகவும் பிரபலமடைந்தவர்களாகவும் மாற்றி விடுகிறது ஓரிரு சினிமா படங்கள் வெற்றி அடைந்தாலே போதுமானதாக இருக்கிறது.

எனவே இவர்கள் உண்மையிலேயே இது போன்ற கொள்கை நிறைவேறுதலுக்காக செய்ய முயற்சியை செய்து முனைகிறார்களா? அல்லது வியாபரத்தில் மூழ்கி திசை மாறி விடுகிறார்களா என்பதெல்லாம் இவர்கள் வாழ்வை முழுதும் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் அம்சங்கள்

சரி படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால்: பாருங்கள். பார்த்து விடுங்கள். கௌரவக் கொலைகள், ரயில் ரோட்டில் கிடக்கும் உடல்கள் , காதல் சாதி பற்றிய பதிவை மனதை நிலை குலைய வைக்குமளவு உண்மையை சரியாக பதிய வைக்க காட்சிகள் எல்லாம் பிசிறில்லாமல் தெளிவாக விளக்கிச் சொல்கிறது ...சொல்கிறது இல்லை காட்டுகிறது.

முதலில் கருப்பி என்ற நாய், அத்துடன் மற்ற நாய்கள் அந்த புலியங்குளம் என்ற ஊர் அதில் ஒரு குட்டை அதில் நாய்களிக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே இருந்து சாதிய மோதல்களுடன் கதை ஆரம்பிக்கிறது...நன்றாக திட்டமிடப்பட்டு உழைத்து உருவாக்கிய கதை திரைக்கதை  அமைப்பு, சமுதாய மேடுபள்ளங்களின் தாக்கத்துடன் அதை நிரவி சமப்படுத்தும் முயற்சியில் அம்பேத்கரின் பங்கு பணி பற்றி கதை பின்னிப் பிணைந்து செல்கிறது.

கதிர், ஆனந்தி அதாவது பெரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல்: மேல் ஒரு கோடு அதாவது படித்து வருபவரான அவருக்கும் ஜோ என்னும்  ஜோதி மஹாலட்சுமி என்ற இருவர் வாழ்வைப் பற்றியும் முக்கியமாக கதை சுழன்றலும் இதில் பரியானின் தந்தையாக வரும் பெண் பிள்ளை வேடத்தில் வரும் கூத்துக் கலைஞரான வண்ணாரப் பேட்டை தங்கராஜ் என்பவரும், கராத்தே வெங்கடேசன் என்பவர் செய்துள்ள தாத்தா மேஸ்திரி ரோலும் மிக‌வும் கன கச்சிதமாக அமைந்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்குனர் படத்தின் பாத்திரத்துக்கு நடிகரைத் தேர்வு செய்யும் பணியில் மிகவும் சரியாக தேர்வு செய்து இருக்கிறார். இது படமாக இல்லாமல் வாழ்வை படம் பிடித்து நாம் கண்ணில் காண முடியாத இது வரை யூகித்து மட்டுமே அறிந்து வந்தவற்றை காட்சிப்படுத்துகிறது...

நீச்சல் அடிக்கும் சிறுவனை கொல்வது, பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்யும் இளைஞரைக் கொல்வது, பெண்ணை மொட்டை அடிப்பது, அடிபட்டுக் கிடக்கும் பெண்ணைக் கொன்று தூக்கில் இட்டு தூக்கிட்டு தற்கொலை செய்வதாக  வெளியில் காட்டத் திட்டமிட்டு செயல்படுவது, எவருக்கும் சந்தேகம் இன்றி இயல்பான சாவாக இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்படுவது, அதன் செய்திகள் கடைசியாக பரியானிடம் தோற்ற பின் அவராகவே ரயில் முன் துணிச்சலுடன் அமர்ந்து சாவை ஏற்றுக் கொள்வது...பணத்துகாக இல்லை குலத்துக்காக இதை எல்லாம் செய்வது என்று சொல்வது இப்படி அந்த கராத்தே வெங்கடேசன் பெரியவரின் ரோல் மிகவும் பொருத்தமாக உள்ளது. எங்கிருந்துதான் இப்படி புதிய வில்லன்கள் புறப்படுகிறார்களோ...இவர் இனி நிறைய படங்களில் காணப்படுவார் என்று சொன்னால் மிகையாகாது.


Related image

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை எப்படி எல்லாம் கேலி கொடுமை எல்லாம் செய்ய முடியுமோ அப்படி செய்வதை வலுவாக பரியானின்தந்தையின்   வேட்டியை கழட்டி ஓடவிடுவது...இதெல்லாம் அனைவரையும் பாதிக்கும் விஷயங்கள்...

மேலும் நீரை பரியானும், மேஸ்திரி இருவருமே நீரை எடுத்து மோந்து குடிக்காமல் அப்படியே வாய் வைத்துக் குடிப்பது...நாயை வைத்து மிகையாகச் சொல்லப்படுகிறதோ என முன்பகுதியில் தோன்றினாலும் பின் பகுதி அந்தக் காட்சிகளின் தேவையை உணர்த்தி விடுகிறது.

பரியான் ஜோவை காதலிக்கிறானா இல்லையா என்று வெளிப்பாடே இல்லாதபோதும் அதைச் சுற்றி ஜோவின் குடும்பம் அவனை நிர்மூலமாக்கி, அவமானப்படுத்தி சின்னா பின்னமாக்கிவிட  அவன் அதிலிருந்து எப்படி மீள்கிறன் என்ன நினைக்கிறான் என்பதை எல்லாம் சொல்லி கதைக்கு கிளைமாக்ஸ் சொல்ல்ப்பட்ட விதம் மிகவும் நன்றாக அமைந்திருக்கிறது.

நல்ல உழைப்பைக் காண்பிக்கிறது... இது போன்ற படங்கள் சமுதாயத்தின் அடிப்படைத் தேவைகள் தாம் சாதி என்ற இல்லாத ஒரு கோட்டை அழிக்க...கேட்டை ஒழிக்க...

என்னதான் ஆனாலும் பெரியார், அம்பேத்கார் போன்றோர் முயன்றாலும் இதெல்லாம் அழியவே இல்லை பாருங்கள்...யோகிபாபு  தோழமை ஓரளவு எடுபடுகிறது... பல் குத்தும் காட்சிகள் வகுப்பறையில் ஏற்றுக் கொள்வ்தாக இல்லை ஆங்கில அறிவு கல்விக்கு அவசியமா எனப் படம் கேட்டிருக்கிறது...

மாரிமுத்து நல்ல தகப்பன் வேடம்...வைரமுத்துக்கு ஆதரவாக அவர் என்ன பெண்பிள்ளையைத்தானே அழைத்தார் ஆணை அழைத்திருந்தால் தான் அது அசிங்கம் அவமானம் என்று பேசியவர்...

கல்லூரி சுற்றியே கல்வி பற்றியே சட்டம் ஒழுங்கு நாடு சமுதாயம் என்றே படம் கொஞ்சம் கூட விறு விறுப்பு குறையாமல் படம் சொல்லப்பட்டது இயக்குனரின் வெற்றி...இல்லை யெனில் படம் ஒரு ஆவணப்படம் மாதிரியே அமைந்திருக்கும் சாதி ஒழிப்புக்கான சிறந்த படமாகத் தேர்வு செய்து இதற்கு வரி விலக்கு கொடுத்து அனைவர்க்கும் போய்ச் சேர எலலா ஊர்களிலும் திரையிட அரசு ஆவன செய்யலாம்.
Image result for pariyerum perumal
மொத்தத்தில் இந்தப் படம் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Thursday, November 15, 2018

காட்சிப் பிழைகள்: கவிஞர் தணிகை

காட்சிப் பிழைகள்: கவிஞர் தணிகை


Map of Govt General HospitalImage

நல்லா தெரிஞ்சவங்கள ஒக்கார வைச்சிருக்கணும், என்றது அந்த ஜி.ஹெச்சில் பார்மஸி ஜன்னலுக்கு வெளியிலிருந்த கூட்டத்தில் இரு குரல்...கணினி முன் சுகன் அமர்ந்திருந்தார். அவர் தம்மை இன்னும் அவன் என்றே சொல்லிக் கொண்டிருந்தார் ஆனால் அவரது வயது அம்பதுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அவரை அவர் என்றுதான் மற்றவர்கள் அழைக்கலானார்கள்.

பார்மசியில் கம்பவுண்டர் ராஜேந்திரன் சற்று காது மந்தமனாவர்... மேலும் அவரால் ஒரேயடியாக வரும் கூட்டத்தை சமாளிக்கவும் முடியாது. திணறுவார். மேலும் அவர் கணினியைக் கையாளும் முறையைப் பார்த்தால் நொறுக்கித் தள்ளுவார் விசைப்பலகையின் எழுத்துகள் என்ன பாவம் செய்ததோ என்றே தோன்றும்...ஆனால் சுகன் மென்மையாகவே கையாள்வார். எனவே கணினி அதைப் புரிந்து கொண்டு சில நேரம் ஒத்துழைக்காது அந்த ஆள்மாறாட்டத்தை ஏற்க முடியாமல்...எண்களின் பக்கம் இருக்கும் ஜீரோவை மென்மையாக அழுத்தினால் எழுத்துப் பதியாது...அந்தளவு ராஜேந்திரன் அந்த எழுத்தை நொக்கி இருந்தார். இப்போதும் அதை அப்படித்தான் ஓங்கி ஓங்கி அடிப்பார்.

அந்த ஜீரோவை அதிகமாக அழுத்த பிடிக்காமல் விசைப்பலகையின் எழுத்து வரிசையில் உள்ள‌ ஜீரோவை பயன்படுத்துவார் சுகன்...இதெல்லாம் அந்த கணினிக்கு அத்துபடி எனவே அந்த அரசு மருத்துவமனையின் கணினி  அவ்வப்போது நொண்டியடித்து படுத்துக் கொள்ளும். ரெவரஷ் செய்ய் வேண்டியதிருக்கும் அல்லது பாஸ்வேர்ட்,ஐ.டி எல்லாம் கேட்கும். ராஜேந்திரன் கம்பவுண்டர் ட்ரிபுள் ஜீரோ  என்பதை மூனு ஜீரோ என்பார் உடனே சுகன் அதை எண் 3 என நினைத்துக் கொண்டு 3 அடித்து அதன் பின் ஜீரோ சேர்ப்பார் அது மேலும் தவறைக் காண்பிக்க, அதன் பின் தாம் ராஜேந்திரன் சொன்னது ஜீரோ ஜீரோ ஜீரோ என்ற மூன்று ஜீரோக்கள் என்பதே அவருக்கும் புரிந்தது...

இப்படி சிக்கல் நேரும்போது வெளியிருக்கும் கூட்டத்தில் சில பேர் பேசிய பேச்சுதான் முன் சொன்னவை...

ஆனால் அடுத்த நாளே அதை எல்லாம் புரிந்து கொண்டு ராஜேந்திரன் கம்பவுண்டருக்கு மிக அதிகமான கூட்டம் குவியும்போதெல்லாம் சுகன் உதவியை மறுக்காமல் மறைக்காமல் செய்தார். கணினி கைக்கு வந்தது பிரிண்டரும் ஒத்துழைத்தது.

அது மட்டுமல்ல ஓ.பியில் அதிகம் மக்கள் வந்து காத்துக் கிடந்து இருப்பதைப் பார்த்தால் இவருக்கு வருத்தமாகவும் அனுதாபமாய் இருக்க
அங்கேயும் சென்று அவர்களுக்கும் அனுமதிச் சீட்டு ஓ.பி மற்றும் பின் நெம்பர் போட்டு அடித்துக் கொடுப்பார், மேலும் இன் பேஷண்ட் சீட்டும் கூட போட்டுக் கொடுப்பார். இப்படி அவரால் அந்த மருத்துவமனையில் என்ன என்ன முடிகிறதோ அதை எல்லாம் செய்வார்... எனவே அவரது சேவை மனப்பாங்கைப்பார்க்கும் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் இப்படி அனைவர்க்கும் அவரைப் பிடிக்கும் அவர் வரும் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் அவரது வருகை அந்த அரசு மருத்துவமனையில் அவரது செயல்பாடுகள் களை கட்டும்.

கொஞ்சமும் கூச்சப்படாமல் அறிவிப்புப் பலகைகள் இருந்தபோதும் அங்குள்ள மக்களுக்கு அறிவிப்பு செய்வார் பல் மருத்துவ சிறப்பு மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள் சென்று பார்த்துக் கொள்ளவும் என கூட்டத்தில் அறிவிப்பார் அவருக்குத் தோன்றும் தமது சிறிய வயதில் : ஈயம் பித்தாளை பேரிச்சம்பழகேரிகை என ஒருவன் பழைய பொருட்களுக்கு பேரிச்சம் பழம் கொடுத்து விட்டு சைக்கிளில் சென்று கொண்டே கத்திக் கொண்டே பொவது போல் இந்தப் பல் வாய், ஈறு தொடர்பாக ஸ்பெசலிஸ்ட் வந்திருக்கின்றனர் எனவே பார்த்துக் கொள்க என்பார்...பெரும்பாலும் நிறைய நாட்களில் பெரும்பாலான நோயாளிகள் சட்டையே செய்ய மாட்டார்கள்

ஆனால் தேவையானவர் வந்து அவரால் பெரும்பலனடைவார்கள். பல் எடுத்துக் கொள்வது முதல் அந்தக் கல்லூரிக்குச் சென்றால் இந்த மருத்துவமனை வாயிலாக வந்து கல்லூரிக்கு வருவார்க்கு நிறைய தொகை குறைப்பும், முழு இலவசமும் இருக்கின்றன என்பதை அவர் சொல்லக் கேட்டு பயன்படுத்துவாரும் உண்டு.

கல்லூரியில் அவரது பணி குறிப்பிடத்தக்க பணி. அது மட்டுமல்ல வழக்கமான முகாம்கள் இந்த அரசு மருத்துவமனையில் வாரத்தில் இரண்டு நாட்கள், அன்பு மருத்துவமனை என்ற மனவளர்ச்சி குன்றிய ஹோமில் ஒர் நாள் என்றும் மாதத்தில் ஒரு நாள் ஞாயிறு பாலமலையில் முகாம் அதல்லாமல் சிறப்பு பள்ளி, கல்லூரி மற்றும் சமூக நிறுவனங்களின் முகாம்கள் என்ற சேவை முகாம் நிறைய செய்து வருவதுடன் கல்லூரியில் மக்கள் குறைதீர்ப்பது, பொதுமக்கள் தொடர்பு அலுவலராக இருப்பது, வரவேற்பில் இருந்து வருவாரைக் கவனிப்பது இப்படி பல பணிகள் அவருக்கு

அது போலத்தான் அந்த அரசு மருத்துவ மனைக்கு வருவதும், அங்குள்ள மருத்துவர்கள் தலைமை மருத்துவர் நவீன், குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன், கண் மருத்துவர் ராஜன் என்னும் ராஜேந்திரன், லதா என்னும் மகப்பேறு மருத்த்துவர், சித்த மருத்துவர் வெற்றி வேந்தன், அவரது உதவியாளர் வேங்கட்டம்மாள், நர்ஸ் திருநிறை, பொற்கொடி மற்றும் உள்ள நர்ஸ்கள், பார்மஸிஸ்ட் சீனிவாசன், அலுவலக உதவியாளர்: வடிவேல், பிற நோய் கண்டறியும் கவுன்சிலர் பழனிசாமி அவர் உதவியாளர், உதவியாளர் தாஸ், அம்பிகாபதி இப்படி அனைவருமே அவருக்கு பிடித்தமானவராக அவர்களுக்கும் அவர் பிடித்தமானவராக சேவை அவர்களை எல்லாம் ஒன்றிணைத்தது. சேலம் போன்ற இடங்களில் இருந்து கூட அந்த வேம்படிதாளம் அரசு மருத்துவமனைக்கு மக்கள் வந்தனர் சிகிச்சை நல்ல முறையிலும் மருந்துகள் விரைவாகவும் கிடைக்கிறது என..

 தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா 1968 லும் மரகதம் சந்திரசேகர் 1953 லும் இந்த மருத்துவமனைக்கு வருகை புரிந்து கட்டடங்களை திறந்து வைத்துள்ளனர் அதன் கல்வெட்டுகளும் புகைப்படங்களும் இன்னும் உள்ளன‌

இந்த மருத்துவ மனைக்குத்தான் முதலில் மருத்துவ மற்றும் சுகாதார இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்கள் எல்லாம் முதலில் வருவார்கள்...மேலும் இந்த மருத்துவ மனை மாவட்ட அளவில் இரண்டு நல்ல தலையாய பரிசைப் பெற்றிருக்கிறது சிறந்த சேவைக்காகவும் இதன் தலைமை மருத்துவரின் செயல்பாட்டுக்காகவும்...


இதை ஆரம்பத்தில் வேம்படிதாளத்தில் பிரதானமாக இருக்கும் செட்டியார்கள் சமூகம் சார்ந்த‌  நிறைய பேர் பெரிதும் பங்கெடுத்துக் கட்டி இதை அரசுக்கு ஒப்படைத்துள்ளனர்.

இந்த மருத்துவ மனையில்தாம் சுகன் சேவை செய்ய வரும்போது அது அவரது பணி அல்ல என்னும் போதும் மக்களுக்கு தம்மால ஆன அத்தனை பணிகளையும் செய்த போதும் மக்கள் அவரைப் பற்றித் தெரியாமல் அப்படி பேசியது அவை...

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு...

வள்ளுவன் வாக்கு பொய்யாவதில்லை என்பதற்கேற்ப...அதற்காக எல்லாம் சுகன் இப்போது எவரிடமும் சண்டைக்கு போவதில்லை...அவரவர் எண்ணம் அவரவருடன்...அவர்களாகவே புரிந்து கொள்ளும்போதுதான் நன்றாக இருக்கும். அடுத்தவர் சொல்லி எல்லாம் புரிய வைக்கவே முடியாதபடி சமூக அமைப்பு மாறிவிட்டது..

குடிகாரர்கள் தேவைப்பட்டால் மிரட்டிப் பிச்சைக் கேட்டு வருகின்றனர். குடிகாரர் கை ஏந்தும்போது கூட பாவம் என்று பிச்சையிடும் ஒரு புரியாத கூட்டம் இன்னும் இருக்கிறது...

பிச்சை எடுத்தாவது படி...

படித்து வேலைக்கு வந்த பின் பிச்சை எடுக்காதே

என்று சகாயம் ஐ.ஏ.எஸ். இலஞ்சம் வாங்குவதைப் பற்றி எழுதி வைத்திருப்பது இன்று கண்ணில் பட்ட நல்ல வாசகம்...இன்னும் இலஞ்சம் வாங்கி நிறைய பேர் பிடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்...அவர்களுக்கு பணி நீக்கம் செய்வதுதான் சரியான பாடமாக இருக்கும் அதை அரசு செய்யுமா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, November 13, 2018

வட சென்னை: கவிஞர் தணிகை

வட சென்னை: கவிஞர் தணிகை

Image result for Vada Chennai

தனுஷ் தயாரித்து வெற்றி மாறன் இயக்கிய வட சென்னை அமீர், சமுத்திரக்கனி,கிஷோர் , ஆண்ட்ரியா கூட்டணியுடன் வெற்றி பெற்றுவிட்டது.
இது போன்று உண்மையில் நடந்து வருகிறது. ஊருக்கு எதிராக பணத்துக்காக விலை போகும்  தலைமைக்கு அடுத்து இருக்கும் துணைத்தலைமைகள் நாட்டை கூறு போட்டு எப்படி விற்று விடுகின்றன. எப்படி விற்று வருகின்றன என்பதை அடி வேராக  இந்த நாட்டின் வேர்க்கரையான்களாக இருப்பதை படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்கள்.

தலைமை நல்லவராக இருந்தால் அவரை எப்படி தமது சொந்த நலனுக்காக அப்புறப்படுத்தி அந்த நிலையை இரண்டாம் நிலையில் இருந்து கொண்டு அவரது காலை சுற்றுகிறவர்களே அவர்கள் காலை வாரி அந்த நிலையை அடைகிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது எந்த நல்லதையும் ஒரு துரோகம் தானே வீழ்த்துகிறது அது ஜூலியஸ் சீசரின் யூ டூ புரூடஸ் சேக்ஸ்பியரின் நாடகமானாலும் ...இந்தப் படத்தில் தலைவனாக இருக்கும் இராஜனை அவனுக்கு அடுத்த நிலையில் இருந்து வந்த குணா சமுத்திரக் கனி, செந்தில் என்னும் கிசோர்,டேனியல் பாலாஜியும் உடன் இருக்கிறார் இருந்தும் அதை தடுக்க முடியாத கையாலாகத ஆனால் செய்வது தவறு என்ற உணர்தலுடன்...அந்தக் காட்சி அந்தப் படத்தில் ஒரு வலுவான அறைதலாக நிகழ்கிறது. மற்றபடி தனுஷ் வழக்கப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் என்னும் நடிகையை காதலிக்கிறார், முத்தம் கொடுக்கிறார், கல்யாணமும் செய்து கொள்கிறார். ஜெயிலுக்குப் போகிறார் செந்தில் என்னும் கிஷோரைக் குத்துகிறார் இப்படி வன்முறையுடன், பேட்டை ரவுடி சாம்ராஜ்யத்தில் கேரம் பிளேயராக...
ஆடுகளம் படத்தில் ஒரு தேசிய விருதை தனுஷ் பெற இதே கூட்டணி காரணமாக இருந்தது.
Image result for Vada Chennai
படம் இயல்பாக மீனவக் குப்பம், சேரிப் பகுதிகளில் நாம் நடைபெறும் வாழ்வை கண் கூடாக பார்ப்பது போல படமாக்கப்பட்டு கதையாக சொல்லப்பட்டிருக்கிறது.

எங்கள் ஊர் எங்கள் வீட்டுப் புழக்கடையில் ஓடிக் கொண்டிருக்கும் கெம்ப்ளாஸ்ட் கழிவு நீர் கூட குழாய்களில் பூமிக்குள் பதித்து செல்ல வேண்டியதை எப்படி அப்படியே நன்னீர் ஓடையில் விட்டு ஊரை மண்ணை நிலத்தடி நீரைக் கெடுத்தார்களோ தலைமையும் முன்னணியினரும். அதே போல அந்த ஊருக்கும் காலி செய்யச் சொல்லி பணக்கார நபர்களின் அச்சுறுத்தல் அதை எதிர்க்கும் ராஜன் என்பவராக‌ அமீர்

அவரது வாரிசாக அன்பு என்ற நபராக தனுஷ். இடையில் கிசோர், சமுத்திரக்கனி, துரோகிகளாக...தம்பியாக டேனியல் பாலாஜி நல்லவராக வழக்கத்துக்கு மாறாக.. வழக்கம் போல இராதாரவி அரசியல் வாதியாக.

ஆன்ட்ரியா தமிழில் ஒரு மறுக்க முடியாத நடிகையாக உருவாகி வருகிறார். எந்த வேடம் கொடுத்தாலும் அத்துடன் தன்னை பிணைத்துக் கொள்கிறார் அது விஸ்வரூபம் இரண்டின் சண்டை செய்யும் வேடமாக இருந்தாலும் சரி, பச்சைக்கிளி முத்துச் சர மனைவியானாலும் சரி இதில் கணவன் ராஜனுக்காக பழி வாங்கும் வேடத்தில் சமுத்திரக்கனி என்னும் குணாவை மணந்து கொண்டு சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பவராக...ஐஸ்வர்யா ராஜேஸ் மிகவும் இயல்பாக காதல் செய்வதும், திருமணம் செய்து கொள்வதுமாக தமக்குக் கிடைத்த ரோலை சரியாகச் செய்திருக்கிறார்

அன்பின் எழுச்சி வட சென்னை இரண்டாம் பாகமாக தொடரும் என்று சொல்கிறார்கள்
Image result for Vada Chennai
முடிந்தால் ஒரு முறை பார்த்து விடுங்கள்...

வார்த்தைகள் வசனங்கள் யாவும் அப்படியே புழங்க வைக்கப்பட்டுள்ளன...மேட்டுக் குடிகளுக்கு அவை பிடிக்காது...கெட்ட வார்த்தை என்பவை கேட்ட வார்த்தைதானே...அதாவது சிறுவர் சிறுமியாக இருப்போர் அவரைச் சுற்றி எவர் பேசினாலும் கேட்டு அதை பயன்படுத்துவதுதானே கெட்ட வார்த்தையாக...அதையே சொன்னேன் கேட்ட வார்த்தைதானே கெட்ட வார்த்தை என வருகிறது என்று...
Image result for Vada Chennai
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, November 12, 2018

மரண தண்டனை கொடுங்கள் மனிதப் பதர்களுக்கு: கவிஞர் தணிகை

மரண தண்டனை கொடுங்கள் மனிதப் பதர்களுக்கு: கவிஞர் தணிகை

Image result for harur rape case


அஹிம்சா மூர்த்தியான மகாத்மா கூட கற்பழிக்க வரும் மிருகத்தை எந்த ஆயுதம் வேண்டுமானாலும் எடுத்து வேட்டையாடலாம் என்ற பொருள்படும்படி கம்பு, நகம், ஏன் எந்தவித ஆய்தம் கொண்டு வேண்டுமானாலும் தாக்கலாம் எனச் சொல்லி உள்ளது இப்போது நினைவுக்கு.

அவரை இந்த நாட்டின் தேசப்பிதா என்று சொல்வது உண்மையானால் அரூர் கற்பழிப்பு வழக்கில் அந்த பெண் சாகக் காரணமான அந்த பதர்களுக்கு மரண தண்டனை அளிப்பதுதான் இனி இது போல் சம்பவம் நடவாதிருக்க ஒரு முன் உதாரணமாக இருக்கும்

சாதி, கட்சி, அரசியல், மதுபோதை, அத்துடன் அபின் கஞ்சா பான்பராக் போன்ற லாகிரி வஸ்துக்கள்,இலஞ்சம், ஊடகம் ,செல்பேசி நெட் கலாச்சாரம் போன்ற யாவுமே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம். மேலும் பெற்றோர் நட்பு உறவு சமூக அமைப்பு யாவும் கூட பின் வருவனவாகும்

அரசு நிர்வாகம் அதன் அமைப்புகள் யாவுமே இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை சரியாக நிர்வகிக்க வேண்டுமானால் அதில் பணிபுரியும் அங்கங்கள் யாவும் சட்டம் ஒழுங்கை சாதிய , இலஞ்ச இலாவண்ய, மதுபோதைக்கு உள்ளடங்கியதாய் மாறக் கூடாது.

இங்கு அந்த சிறு பெண்ணை கற்பழித்த இரண்டு பேரில் ஒருவரின் அம்மா சந்து கடை எனப்படும் கள்ள மது விற்ப‌னையாளர் என்றும் அவரின் தொடர்பால்தான் ஆரம்பத்தில் அந்த வழக்கை கற்பழிக்கப்பட்டு மரணமடைந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரை எடுத்துக் கொள்ளாமல் அந்த இரண்டு விடலைகளையும் தப்பிக்க விட்டது என்றும்

மேலும் அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து ரூ. 4000 பெற்றுக் கொண்டும் அது கற்பழிப்புக் கேஸ் அல்ல என்றும் மேலும்  2000 பணம் கேட்டதாகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கொடுத்த வாக்குமூலம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் மருத்துவமனையில் கூட அது கற்பழிப்பு இல்லை என்றே அரசு மருத்துவமனையில் காவல்துறை ஸ்டேட்மென்ட் கொடுத்ததாகவும் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆக இந்த வழக்கில் சாதிய மேலாண்மை, மதுவின் ஆதிக்கம், இலஞ்ச இலாவண்யம் எல்லாமே விளையாடி தலை தூக்கியுள்ளன. எனவே தொடர்புடைய இருவரின் தலையை தூக்கி விடுவதில் தவறு இல்லை. மேலும் இந்த வழக்கை புகாராகக் கூட பதிவு செய்யாமல் இழுத்தடித்த அந்த காவலரை உடனடியாக பணி நீக்கம் செய்வதுதான் சரியான நீதியாக இருக்கும்.

இதற்கெல்லாம் விசாரணை வாய்தா எனப் போய் கடைசியில் ஒன்றுமில்லை என வாடிக்கையாக விட்டு விடுவது போல விட்டு விடுவது நாட்டை நாடாக வைத்திருக்காது.

பஞ்சாப்பில் ஒரு கர்ப்பிணிப் பெண் புகைக்கக் கூடாது என்று சொன்ன ஒரே காரணத்துக்காக அந்த புகைத்தவரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த வழக்கிலும் கடுமையான தண்டனையாக தலை வாங்கும் தண்டனைதான் பொருத்தமானதாக இருக்கும்.

பொது இடங்களில் மது அருந்தக் கூடாது, புகைக்கக் கூடாது என்பதெல்லாம் வெறும் ஏட்டளவில் உதட்டளவில் சட்ட ரீதியாக இல்லாமல் அமல் படுத்தாமல்
Image result for harur rape case
2020 கலாம் நாடு நல்ல நாடாக இருக்கும்...

இதே டில்லியில் நடந்திருந்தால் உடனே உலகே அர்ப்பரித்து அனைவருக்கும் தெரிய ஆடு ஆடு என்று ஆடியிருப்பார்கள்...இங்கே தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த அரூர் சம்பவம் இனி எங்கும் நடவாதிருக்க எல்லா அமைப்பு முறைகளையும் சரி செய்தாக வேண்டும் கல்வி உட்பட...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, November 11, 2018

விஜயகுமாராம் SBI அக்கவுண்டில் ஆதார் கார்டை லிங்க் செய்ய வேண்டுமாம்: கவிஞர் தணிகை.

Related image

சற்று முன்னர் இரண்டு 50 மதியம் மணி இருக்கும் ஒரு பிஎஸ்என்எல் எண்களில்அழைப்பு வந்தது +916200381972 பேசியவர் விஜயகுமார் என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இருந்து பேசுகிறேன் என்றும் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கேட்டார் எனது வாயில் இருந்து கெட்ட வார்த்தை தான் வந்தது உடனே 23 விநாடிகளில் அவர் தமது அழைப்பை துண்டித்துக் கொண்டார் இது குறித்து புகார் தெரிவிக்க வேண்டும் எனில் காவல் நிலையத்தையும் பிஎஸ்என்எல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கஸ்டமர்கேர் கூறியது இன்று விடுமுறை என்பதால் பி எஸ் என் எல் அலுவலகத்தையும் 
Mobile Number+916200381972
Operator NameReliance Jio
Operator CodeRJ
AreaBihar
Area CodeBR
Services Area CoveredState of Bihar and State of Jharkhand
Possible SignalingGSM


 பி எஸ் என் எல் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ள வழி இல்லை காவல் நிலையத்துக்கு இந்த புகாரை அனுப்பவும் நமக்கு பொருத்தமாகத் தோன்றவில்லை திரும்பவும் அந்த எண்ணி மறுபடியும் மறுபடியும் அழைத்தேன் அந்த எண்ணில் இருந்து வரும் அந்த எண் எங்கிருந்து வந்திருக்கிறது என்ற ரிலையன்ஸ் ஜியோ ரிலையன்ஸ் ஜியோ ஆபரேட்டர் கோடு ஆர் ஜே ஏரியா பீகார் ஏரியா கோட் BR services area covered state of Bihar and state of Jharkhand possible signalling GSM similar mobile numbers 6200409202;6200560395;6200451600;6200015078;6200686925;6200801624;6200750582;6200379094;6200846299 நான் வெகுஜன தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு அலுவலராக ஒரு சமூக சேவகராக இருப்பதால் எனக்கு வரும் எல்லா அழைப்பையும் நான் புதிய எண்களாக இருந்தாலும் துண்டிக்காமல் அழைப்புகளை ஏற்க அதனால் வந்த விளைவுகள் இவை இதுபோன்ற
எண்களை    முடக்க அரசு பிஎஸ்என்எல் நிறுவனங்களும் மற்ற தொலைபேசி நிறுவனங்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதுதான் கேள்வி அதுமட்டுமல்லாமல் நீங்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக இந்த பதிவை நான் செய்கிறேன் நன்றி வணக்கம்
Comments
Tanigai Ezhilan Maniam இதுபோன்ற எங்களை என்பதற்கு மாறாக இது போன்ற எண்களை மொபைல் நம்பர்களை என்று இருக்க வேண்டும்

I spoke with Google play G board and Transformed this message as typed and posted it fb and whats app and copied and posting here...It is really helpful. thanks Google.

marubadiiyumpookkum.blogspot.com
கவிஞர் தணிகை.

ஆரோக்யப் பட்டை: ஹெல்த் பேண்ட்: கவிஞர் தணிகை

ஆரோக்யப் பட்டை: ஹெல்த் பேண்ட்: கவிஞர் தணிகை

Image result for lenovo health band

நேரம், நாள், நிமிடம், காட்டி கடிகாரமாக, இதயத் துடிப்பைக் காட்டுகிறது நிமிடத்திற்கு இத்தனை என இதயத்துடிப்பு அளவு காட்டியாக, எத்தனை காலடி எடுத்து வைத்துள்ளோம் என எண்ணிகை காட்டுகிறது, எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோம் என தொலைவைக் குறித்துக் காட்டுகிறது, எத்தனை கலோரிகள் நாம் உண்ட உணவு இந்த இயக்கத்தால் செலவளிக்கப்பட்டிருக்கிறது என்று காட்டுகிறது...எவருடைய அழைப்பு நமக்கு வருகிறது, வந்திருக்கிறது என செல்பேசியை எடுத்துப் பார்க்காமலே அந்த எண்ணை நமது கைக்கட்டிய இந்த ஹெல்த் பேண்டே காட்டிக் கொடுக்கிறது, இவற்றையும் விட நமது உறக்கம் ஆழ்ந்த உறக்கமா அல்லவா எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதையும், தேவைப்பட்டால் அதற்கான செயலியை இணைத்துக் கொண்டால் நமது செல்பேசியை இந்த வார்ப்பட்டையுடன் இணைத்து அமைத்துக் கொண்டால் சர்க்கரை அளவு கூடப் பார்க்கலாம் என்கிறார்கள்...ஆனால் இந்த கடைசியில் சொன்னது தவிர மீதமுள்ளது அனைத்தையும் நான் பயன்படுத்தி வருகிறேன் இந்த ஹெல்த் பேண்ட்  (கை வளையம் ) மூலம்.

இதை விளம்பரத்துக்காக நான் பதிவாக இடவில்லை. இதன் பயன்பாடு அனைத்து வயதினர்க்கும் தரப்பினர்க்கும் அவசியத் தேவை என்றே
சொல்கிறேன்.

எனக்கு எனது தங்கை மகள் குடும்பத்தார் எனது நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஹெல்த் கான்சியஸ் பார்த்து மகிழ்ந்து அவர்கள் டென்மார்க்கில் இரண்டாண்டு இருந்தமையின் நினைவாக அங்கிருந்து வாங்க ஆர்டர் செய்து இங்கு வந்து வாங்கிக் கொடுத்தார்கள். அது முதல் இன்னும் அதிகமான ஆர்வத்துடன் எனதூ நடைப்பயிற்சியை மேற்கொண்டு எவை எவை எந்த அளவில் இருக்கிறது என்று பார்த்துக் கொள்ள ஆரம்பித்து விட்டேன்.

எனக்கு கிடைத்தது லெனோவா, இதை ஆரம்பத்தில் பட்டையைக் கழற்றி மின்னூட்டம் சார்ஜ் செய்ய சற்று சிரமப்பட்டேன் ஆனால் இப்போது பழகிவிட்டது ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரத்துக்குப் போதுமானதாக இருக்கிறது. எம்.ஐ. கம்பெனியில் அப்படியே அந்த வார்ப்பட்டையிலிருந்து வாட்ச் போன்ற அந்த செட்டை சுலபமாகக் கழட்டி எளிமையாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கிறது.

இதன் ஆற்றலையும் மனித ஆற்றலையும் கண்டு வியக்கிறேன். நல்லவற்றிற்கு பயன்படுத்தும்போதுதான் அறிவியல் இன்னும் பொலிவைப் பெறுகிறது..

நன்றி
அறிவியல் ஆக்கபூர்வமான பொருட்களுக்கும் அதை வடிவமைத்தார்க்கும் எனது தங்கை மகள் மற்றும் அவரின் கணவர்க்கும் இந்த பொருளை பயன்படுத்தும் வாய்ப்பை எனக்கு நல்கியமைக்கு.
இதை சரியாக செட்டிங் செய்து கொடுத்த டாக்டர் சஜித் அவர்களுக்கும்



இவண்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

சிறு குறிஞ்சி அல்லது சிறு குறிஞ்சான் சர்க்கரை நோய்க்கு அருமருந்து : கவிஞர் தணிகை

சிறு குறிஞ்சி அல்லது சிறு குறிஞ்சான்: கவிஞர் தணிகை




சர்க்கரை அல்லது நீரிழிவு வியாதிக்கு என பல மருந்துகள் உண்டு. அதன் பயன்பாட்டைப் பொறுத்து. விவேகான‌ந்தரே இந்த நீரிழிவு வியாதியால் பாதிக்கப்பட்டவர்தாம். மாத்திரை,ஊசி என ஆங்கில அல்லது அலோபதி மருந்துக்கு அடிமையானால் மீட்சி பெறவே வழியில்லை.

1. உணவை நன்கு மென்று அரைத்து உமிழ் நீருடன் கலந்து மெதுவாக உண்ணப் பழகுதலே இந்த வியாதியை முதலில் தடுக்கும் முறையாகும்.

2. இந்த நீரிழிவு நோய் இருவகைப்படும் அவை மற்ற நோய்களுக்கு அடிப்படையாய் அமையும் எனவே சர்க்கரை நோய் என்னும் இந்தப் பேய் பிசாசை அரக்கனை அண்ட விடக்கூடாது என்பார். ஆனாலும் இவை நாம் உண்ணும் உணவு, உடற்பயிற்சியின்மை, இனிசுலின் சுரக்காமை அல்லது பரம்பரை வழிகளில் வந்தே தீருகிற நோய்.

3. இவை பற்றி மிக நுட்பமாக, நுணுக்கமாக சொல்ல இந்தப் பதிவு முயற்சிக்கவில்லை ஆனால் அவற்றை வருமுன்னே தடுக்க, அல்லது அதை கட்டுப் படுத்த உதவிடும் எளிய செலவில்லா மருந்துகளைப் பற்றி மட்டுமே நானறிந்த வரை சொல்ல முயல்கிறது.

4. காலையில் எழுந்தவுடன் முதல் நாட்களில் ஊறவைக்கப்பட்ட நீர் இறுத்த வெந்தயம் முளையுடன் அத்துடன் கருஞ்சீரகம் வெறும் வயிற்றில் உண்பது,

5. ஆவாரம் மொட்டுகளை வெறும் வாயில் போட்டு மென்று உண்பது,அல்லது பறித்து வந்து வெயிலில் காயவைத்து இடித்துப் பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்பளர் வெந்நீரில் வைத்த் ஒரு ஸ்பூன்  அந்தப் பொடியைப் போட்டு கலக்கி குடித்து விடுவது...

6. இனிசுலின் என்னும் கையகல இலை ஒன்றை தினமும் சாப்பிடுவது...அதிலிருந்து நல்ல சாறு வரும்...சிலருக்கு ஒவ்வாமையும் செய்யும்

7. மேற் சொன்ன இவை அத்தனையும் நாக்கை ருசியின்றி செய்துவிடும் உணவை உண்பதிலிருந்து அதன் அளவிலிருந்து குறைத்துவிடும்...

8. எல்லாவற்றுக்கும் மேலாக : சிறு குறிஞ்சி எனப்படும் இந்தப் படத்தில் உள்ள இலைகளை வெறும் வயிற்றில் மென்று தின்று விட்டால் உங்கள் சர்க்கரையின் அளவு அரோகரா...மருத்துவரே வியந்து விடுவார். அப்படி சர்க்கரை குறைந்து போகும்போது மிட்டாய் வைத்துக் கொண்டு நீங்கள் சாப்பிடும் போக்கே வருமளவு அடியோடு சர்க்கரையைக் குறைத்து விடும் வல்லமை இந்த இலைகளுக்கு உண்டு...

இதைச் சாப்பிட்டால் நாக்கு, தொண்டை, வாய் முழுதுமே சுவை உணர்வு அறவே அற்றுவிடுகிறது. நீரைக் குடித்தாலும் நீரின் சுவை தெரிவதில்லை. எதைச் சாப்பிட்டாலும் அது சுவையற்ற் மண்ணை உண்பது போல மாறிவிடுகிறது.  இது போன்ற ஒரு மருந்தை எத்தனைக் குட்டிக்கரணம் போட்டாலும் அலோபதியால் உண்டுபண்ணவே முடியாது.

ஒரு நாள் நான் ஒரு இலையை சாப்பிட்டுவிட்டு வந்து விட்டேன் மாலை நடைப்பயிற்சியின் போது, எனது வீட்டில் அன்று பார்த்து இரவு உணவாக‌ அப்பம், தேங்காய்ப்பால் ஏன்டா அந்த இலையை வாயில் போட்டோம் என்று நொந்து போகுமளவு ருசியின்றி ஆகிவிட்டது...சில நேரம் இப்படியும் ஆகிவிடும் எனவே சாப்பிட்டபிறகு இதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தோன்றுவதுண்டு.
இந்த சிறு குறிஞ்சியைத்தான் காய வைத்துப் பொடி செய்து பெரும்பாலான நாட்டு வைத்தியர்கள் பாக்கெட் செய்து சர்க்கரை நோய்க்கு மருந்து எனக் கொடுக்கிறார்கள்.
Image may contain: plant and nature
நல்ல பெருங் கொடியாக வீட்டுக் கூரை மேல் ஏறி எல்லாம் எங்கும் படர்ந்து விடும் தாவரம் இது...கொஞ்சம் மறுபடியும் காலையில் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு அதன் விளைவாகவே இதைப்பற்றி இங்கு பதிவு செய்திருக்கிறேன்...

9. உடலுக்குப் போதுமான அளவு உடற்பயிற்சி அவசியம் இருந்தே தீர வேண்டும் இல்லாவிட்டால் நாம் அன்றாடம் நமது சர்க்கரை மிகுவதையும் கண்கூடாக உடலின் இயக்கம் பற்றி அக்கறை உடையார் எளிதில் அறிய முடியும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, November 10, 2018

தஞ்சைப் பெரிய கோவில் மூலவர் கோபுரம் வேறுபட்ட‌ ஸ்டைல்: கவிஞர் தணிகை

 கட்டடக் கலை யுக்தியில் தஞ்சைப் பெரிய கோவில் மூலவர் கோபுரம் பாராட்ட வேண்டிய வேறுபட்ட‌ ஸ்டைல்: கவிஞர் தணிகை


Related image

பல கோவில்கள் சென்று பார்த்திருக்கிறேன். 3 கோவில் நிர்மாணித்தலிலும் பங்கு கொண்டிருக்கிறேன். அக்காலம் முதல் இக்காலம் வரை எல்லாமே இராஜ கோபுரம் என முகப்பு வாயிலை மட்டுமே பிரம்மாண்டமாக நிர்மாணித்திருப்பார். ஆனால் இராஜ இராஜ சோழன் சுமார் ஆயிரத்து பத்துகளில் கட்டிய பெரு உடையார் ஆலயம் மட்டும் முகப்பு வாயில்கள் இராஜ இராஜன் வாயில், கேரளாந்தகன் வாயில் இப்படி முன் வாயில் அல்லது முகப்பு வாயில்கள் சிறியதாக இருக்க...பெரு உடையார் என்னும் சிவலிங்கம் குடி கொண்டிருக்கும் மூலவர் ஆலையம் மட்டும் மிகவும் அற்புதமாக எல்லாக் கோவில் வடிவத்திலிருந்தும் வேறுபட்டு மிகவும் பெரிய உயரமாக அற்புதமாக‌ அமைக்கப்பட்டிருக்கிறது கவனிக்கத்தக்கது.... கலையில் இது ஒரு இராஜ கலை.

எப்போதும் வாயில் காவலர்களை விட மன்னருக்குத்தானே மதிப்பதிகம், அப்படிப் பார்க்கும்போது இந்த முறை தான் மிகவும் உயர்ந்தது. அப்படி இருக்க ஏன் பெரும்பாலன கோவில்களில் முகப்பு கோபுரத்தை மட்டும் அவ்வளவு பெரிதாகவும் மூலவர் சன்னதி இருக்கும் கோபுரத்தை மிகவும் சிறியதாகவும் வடிவமைத்துள்ளனர்....இதுவிவாதத்துக்குரிய பொருள். இதில் இராஜ இராஜ சோழன் விதி விலக்கு....
Related image

சர்கார் விஜய் படத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இலவசமாகக் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை மட்டும் ஏன் நெருப்பில் இடுவதாகக் காண்பிக்கவில்லை என்றும் கேட்கிறார்கள். சரியான கேள்வி. ஒரு வேளை அது சரியாக இன்னும் ஓடிக்கொண்டிருப்பதாலா? அல்லது அந்த மிக்ஸியும் கிரைன்டரும் சரியாக இயங்காததாலா? சன் டிவி குழுமம் தயாரித்த படம், முருகதாஸ் இயக்கம்...அவர்கள் சொன்னபடிதான் நடிகர்கள் ஆட முடியும்...ஆம் அவர்களின் கைப்புனைவுதானே இந்த பொம்மைகள்...விஜய்...கோக் விளம்பரத்துக்கு வந்து பல கோடி ஊதியம் பெற்றவர் என்பது கூட உண்மைதான்...ஆனாலும் இந்த படத்தை வைத்து ஆட்சியாளர்கள் இவ்வளவு வன்மம் ஏன் கொள்கிறார்கள் அது யோசிக்கத்தக்கது...கமலின் விஸ்வரூபம் விருமாண்டி, அது போல பல படங்களிலிருந்தே இதை அரசும், அமைப்புகளும் சினிமாவை அதன் போக்கிலிருந்து மாற்ற வைக்க முயல்கின்றன...அவை தமது இருப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடுமோ என்ற அஞ்சுதல்கள் இருக்கின்றன.

கடந்த நாள் ஒரு பேருந்தின் பயணத்தில் ஒரு பள்ளிச் சிறுவன் கேட்க மற்றொருவன் சொல்கிறான்: டவுன்லோட் செய்துவிட்டேன் இன்னும் பார்ப்பதுதான் பாக்கி, அதெல்லாம் ஓடாது...எல்லாம் இப்படியே பார்த்துவிடலாம் என்கிறான்...ஆக தொழில் நுட்பம் மலிந்து விட்டது...சினிமாவை சினிமாவாகவும் கலையை கலையாகவும் அரசியலை இவை யாவற்றையும் உள்ளடக்கியதாகவும் காணக் கற்றுக் கொள்ளவும் ஏழை எளிய மக்களுக்கு உண்மையில் உழைப்பவர் ஆனால் முதலில் உண்மையை சேவையை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்...கன்டய்னர் லாரி பற்றி எல்லாம் சொன்னால் விட முடியுமா ?

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: இவை இரண்டும் நான் எனது முன் பதிவுகளில் சொல்ல மறந்த செய்திகள். அவசரகதியில் அப்படியே தட்டச்சு செய்து பதிவு இடும் முறையை பயன்படுத்துவதால் நேரும் முக்கிய மறதிகள் இவை....


Friday, November 9, 2018

தணிகை'ஸ் டே அவுட் வித் மணியம்: கவிஞர் தணிகை

தணிகை'ஸ் டே அவுட் வித் மணியம்: கவிஞர் தணிகை
Image may contain: one or more people, people standing, sky and outdoor



24 மணி நேரத்தில் திருவரங்கம், தஞ்சைப் பெரிய கோயில்,ஆலங்குளம் குரு கோயில் சென்று மீண்ட்து பற்றிய ஒரு பதிவு.

08.11.18 இரவு 2 மணிக்கு அலாரம் வைத்து எங்கள் வீட்டின் மூவரும் எழுந்தோம். அன்று மணியத்தின் நட்சத்திரமான விசாகம் வியாழக்கிழமையில் வருவதுடன் கந்த சஷ்டி விழா ஆரம்ப நாள் அது இது என அன்று எப்படியும் ஆலங்குடி குரு கோயிலுக்கு அவரை அழைத்து செல்ல வேண்டும் என முன்பே திட்டம். கல்லூரியில் அந்த வியாழன் வெள்ளி விடுமுறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணியமும் கல்லூரி விடுமுறை எனவே தோதாக வாய்ப்பு அமைந்தது. உடல் தாங்குமா அவ்வளவு தூரப் பயணத்துக்கு என்றெல்லாம் யோசிக்கவே இல்லை...
Image may contain: Vignesh, beard, selfie, sunglasses, closeup and outdoor
இரவு 2 மணிக்கு எழுந்து குடிநீரை குடித்தும் உடல் ஒத்துழைக்காமல் மலம் கழிப்பதில் முழுக்கத் திருப்தி இல்லை. உடல் என்பது ஒரு இயல்பான எந்திரத்தில் உடற்கூறுகளின் பழகிப்போன ஆதிக்கத்தின் செயல்பாடுகள்தாமே...

சுமார் 3.15 மணிக்கு முதல் பேருந்தை மேட்டூரில் இருந்து சேலம் செல்ல பிடித்து விடத் திட்டம். ஆனால் 4 மணி அளவில் சண்முகம் சில நொடிகள் தாமதித்திருந்தாலும் ஓடியிருக்கும் அதில் ஓடி ஏறிக் கொண்டோம். ஆனால் குஞ்சாண்டியூரில் அந்த ஓட்டுனர், நடத்துனர்,மற்றும் ஒரு இளைஞர் யாவரும் தேநீர் அருந்த நிறுத்திவிட்டனர். 2 கி.மீ தொலைவு கூட இருக்காது நாம் ஏறிய இடத்திலிருந்து...

Image may contain: one or more people and outdoor

பேருந்து புறப்பட்டது: சிறிது நேரத்தில் மிகவும் காலியாக இருந்த பேருந்தில் ஏகக் கூட்டம் இருக்கையில் இடமின்றி அனைவரும் நின்று பயணம் செய்ய பேருந்து நிரம்பிவிட்டது...காரணம் மேச்சேரி, ஓமலூர் போன்ற இடங்களுக்கும் சேலம் ஐந்துவழிச்சாலையில் கம்மங்கூழ், கேழ்வரகுக்கூழ் விற்பாரின் பாத்திரங்களுடன்...ஆக நாம் எழுமுன்னே ஒரு உலகம் இயங்க ஆரம்பித்து விடுகிறது என்ற பார்வை கிடைத்தது. மேலும் அவர்கள் எத்தனை மணிக்கு விழித்திருந்தால் இதை எல்லாம் செய்து முடித்து வந்திருப்பர் என யோசிக்க வைத்தது. அதே போல இந்த காய்கறி விற்பனையை சில்லறை விற்பனைக்கு வாங்கி வருவாரும்...

Image may contain: Vignesh, motorcycle and outdoor

 பேருந்து நிலையம் தீபாவளிப் பண்டிகைக்காக ஜவகர் மில்லில் பாதி மார்க்கம் மாற்றப்பட்டது இன்னும் ஒன்றுபடுத்தப்படவில்லை என்ற செய்தியும் ஆனால் அதற்குள்ளாகவேஅந்த பேருந்து நிலையத்திலேயே ஒன் டூ ஒன் என ஒரு திருச்சி பேருந்து, நடத்துனர் இல்லா பேருந்துதான்...அவர் ஏறும் இடத்திலேயே தம் வேலையை முடித்துக் கொண்டு கீழ் இறங்கி விட ஓட்டுனர் சுமார் 3 அல்லது மூனறை மணிக்குள்ளாக நம்மை திருச்சிக்கு கொண்டு சென்று விடுவது இப்போதைய பேருந்துப் போக்குவரத்தின் முன்னேற்றம்...ஆனால் கட்டணம் சாதரணமாக ரூ. 95 என்றால் இதில் 135 ரூபாய்.

சுமார் எட்டே முக்கால் மணிக்கே திருச்சியை எட்ட ஆரம்பித்து விட்டது. உடனே ஒரு சிறிய மனக்கணக்கு உள்ளே...நமது இலக்கும் நோக்கமும் ஆலங்குடி செல்வது என்றாலும் ஏன் அருகருகே இருக்கும் திருவரங்கத்தையும், தஞ்சைப் பெரிய கோவிலையும் போகும்போதே அல்லது வரும்போதோ இணைத்துக் கொள்ளக் கூடாது என சலனம். எல்லாம் போகிற வருகிற வழிதானே என்று... எனவே திருவரங்கம் செல்வதற்கான சுங்கச் சாவடி...டோல்கேட் நிறுட்த்தத்தில் திருச்சியில் இறங்கி நகரப் பேருந்தைப் பிடித்து திருவரங்கம் செல்ல புறப்பட்டோம்.

Image may contain: 1 person, sky, motorcycle and outdoor

பள்ளிச் சிறுவன் ஒருவன் இந்த பேருந்து போகும், நிறைய பேருந்துகள் இருக்கின்றன என வழிகாட்ட அந்தப் பேருந்தில் ஏகக் கூட்டம், இருந்தாலும் ஏறிக் கொண்டோம். பள்ளிப் பிள்ளைகளுடன் பள்ளிப் பிள்ளைகளாகவே...அனைவர்க்கும் சரியான சில்லறை கொடுத்த அந்த நடத்துனர் எங்களது மீதச் சில்லறை 6 ரூபாயை மட்டும் கடைசிவரை நாங்கள் கேட்டு வாங்கிக் கொள்ளும் வரை கொடுப்பதை ஒத்திப் போட்டார் என்பது மிகத் தெளிவாகவே தெரிந்தது. அந்நிய அசலூர்க்கார பயணி என்றும், சுற்றுலா பார்க்க வருவார்தாமே இருக்கட்டுமே என விட்டுவிடுவார் என்றுமாகவும் இருக்கக்கூடும். அவரே பள்ளிப் பிள்ளைகளை படிக்கட்டில் நின்று பயணம் செய்வதைத் தடுக்க, எனக்கு சர்க்கரை இரத்த அழுத்தம் ஏற்பட்டு விடக்கூடாதே என்றுதான் பார்க்கிறேன் கத்தி கத்தி அதைக் கொண்டு வந்து விடுவீர்கள் போலிருக்கிறதே என ஜாலியாக உரையாடிக் கொண்டிருந்தார்.

திருவரங்கம் கோவில் உலகின் மாபெரும் கோவில் திருப்பதியை விட மிகவும் பெரியது....ஆனால் உலகின் வெளி நாட்டுப் பயணிகள் எல்லாம் வந்து செல்லும் நிலையிருந்தும் ஓய்வறை அல்லது கழிப்பறைகள் சரியாக இல்லை... இலவசக் கழிப்பறை மிகவும் சிறிதாக சில அறை மட்டும் அதுவும் எல்லா இடங்களிலும் நீர் ஓடிக்கொண்டிருக்க....அன்று கொஞ்சம் மழைவேறு வானம் வேறு பிசு பிசுவெனச் சிறு தூறல் போட்டுக் கொண்டிருக்க கேட்கவே வேண்டாம் சொல்ல முடியவில்லை...அதையே ஏம்பா பேசிக் கொண்டிருக்கிறீர், நினைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என மகன் தேற்றினார்....

Image may contain: plant, tree and outdoor

இது இங்கு மட்டுமல்ல இனி தொடர்ந்து சொல்லப் போகும் செல்லப்போகும் அத்தனை இடங்களிலும் நிலை கேலிக்குரிய கேவலமான கவலைக்குரியதாகவே இருக்கிறது. இந்த நாட்டில் சுதந்திர நாட்டில் 70 ஆண்டுக்கும் மேலான சுதந்திர நாட்டில் இந்நிலை இப்படி இருக்கிற ஒரே காரணத்துக்காக தமிழக முதல்வரையும், இந்தியப் பிரதமரையும் பதவி இறக்கக் கோரலாம்...யார் இதை எல்லாம் முதலில் ஒழுங்காக சுகாதார முறையில் எந்த துர்நாற்றமும் இல்லா பேருந்து சந்திப்புகளையும் நிறுத்தம் மற்றும் ரயில் சந்திப்புகளையும் கொண்டு வந்து சேர்க்க முனைகிறார்களோ அவர்களையே நம்மை ஆளும் தலைமயாக ஏற்கலாம்...

பைகளை பாதுகாக்க, திருவரங்கத்தில் காசு, ஆனால் இந்த சிறு நீர்க் கொட்டகைக்கும், காலணி வைக்கவும் காசு நீங்களாகப் பார்த்துக் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். கட்டாயமில்லை. இலவசமே..மேலும் அன்னதானம் வேறு உண்டாம்...அதை எப்படி என நான் பரிசீலிக்கவில்லை.
வெளியே ஒரு தளர்ந்த யானையும் உள்ளே ஒரு வளர்ந்த யானையும்...ஆசி வழங்க பெரும் கூடம்...அந்த திருவரங்கத்தின் எல்லா இடங்களிலும் இரு சக்கர வாகனங்கள் குறுக்கும் நெடுக்கும் சென்று கொண்டிருக்கின்றன. இதை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். பாத சாரிகள் சாரி சாரியாக செல்லும் இடங்களில் எல்லாம் இப்படி வாகனத்தில் திமிராக பூணுலுடன் வெறும் உடலுடன் இந்த மனிதர்களின் ஆதிக்கம்...மேலும் இந்த கோவில் நிலத்தை ஆக்ரமித்த கடை, வீடுகள், வணிகத்தலங்களின் ஆதிக்கம்...மாபெரும் ஆலயமும் அதன் சுற்றுப்  புறமும் மிகவும் மோசமாகவே...பராமரிப்புகளில் உள்ளன.\

50 ரூ 250 ரூ கட்டணம் மற்றும் இலவச தரிசனங்கள்...பள்ளி கொண்ட பெருமானை தரிசிக்க... உடன் இராமானுஜர் ஆலயம், சக்க்ரத்தாழ்வார் ஆலயம் ...இந்த இரண்டைப் பார்த்து கருடாழ்வாரை பார்த்து அதன் பின் மூலவர் தரிசனத்துக்காக‌ நாங்கள் 50 ரூ கட்டண வழியில் செல்ல முயன்றோம்... ஆனால் அதை உடனே திறந்து அனுமதிக்கவில்லை. கூட்டம் சேர்த்து, வரிசையில் வரச் செய்து மவுசு கூட்டுகிறார்களாம்... சுமார் ஒருமணி நேரத்துக்கும் பிறகு பாவலா எல்லாம் செய்து முடித்து திறந்து அனுமதிச் சீட்டை வழங்கினார்கள்..Image may contain: people standing, sky and outdoor

அங்கே ஒரு மணி நேரத்துக்கும் மேல் விரயம்.... உள்ளே நீண்ட வரிசைக்கும் பின் ஒரு இடத்தில் இலவசமாக வந்தோரும் கட்டணம் கட்டிப் பார்க்க வந்தோரும் கலந்து செல்ல வைக்கப்படுகின்றனர்.. மூலவர் இருக்கும் இடத்தில் ஒரு பிராணி என்னை அப்படியும் இப்படியும் பிடித்து ஆட்டி சும்மா வரக்கூடாது, தீபாவளிக்கு அல்வா கொண்டு வரலாமோல்லியோ என தள்ளி தள்ளி பெண்கள் மேல் தள்ளி விட்டு விடும்போலிருக்க... நான் அந்தப் பக்கமெல்லாம் பெண்கள் இருக்கிறார்களே நீங்கள் இப்படி செய்கிறீரே நியாயமா என்று கேட்டு வந்தேன்...மகன் அவனை சும்மாவா விட்டீர்,ஒரு அறை அறைந்திருக்க வேண்டாமா என்றான், இல்லை மகனே அது சரியில்லை நமது பிரதிநிதித்துவத்தை , மறுப்பை வெளியிட முறைகள் உண்டு...அதை வன்முறையாக்கி செய்தியாகி செய்தியாக்கி பலருக்கும் தொந்தரவாகிவிடக்க்கூடாது இல்லையே அதன் பின் அந்த மன நலம் குன்றியோரை மன நலம் குன்றியோர் என்பதற்கு மாறாக நம்மை மனநலம் குன்றியவர் என்று முத்திரை குத்தி விடுவார் ஊடகம் யாவும். எனவே எச்சரிக்கயாக கையாள வேண்டும் எனப் புத்தி கூறினேன். பெரியார் பணி நிறைவடையவே இல்லி போலிருக்கிறதே.. சொன்னால் எனது நண்பர்கள் அங்கே எல்லாம் நீங்கள் எதற்கு சார் போகிறீர் என்பார்கள்...விடுங்கள்...

வெளிவந்து கொண்டு சென்றிருந்த  சப்பாத்தியை உண்ண ஆரம்பித்தோம் ...ஒரு அமரும் மண்டபத்தில்...சற்று நேரத்தில் செவ்வரி ஆடை உடுத்திய ஒரு நபர் வந்து உணவு கேட்டார் அப்போது நாங்கள் தொடாமல் மீதமிருந்த ஒரு சப்பாத்தியை எடுத்து சட்னி கொடுத்து சாப்பிடுங்கள் என்றோம், உடனே அவர் இவ்வளவு தானா வேண்டாம் என்றார், போதாது என்றால் பாருஙக்ள் அங்கே, அன்னதானம் கொடுக்கிறார்கள், தயிர் சாதம், புளி சாதம் எல்லாம் போய் வாங்கிச் சாப்பிடுங்கள் என்றோம், அதுவும் வேண்டாம் காசு கொடுங்கள் என்றார் இல்லை என்று மறுத்து விட்டோம்...

உடனே அங்கிருந்து கிளம்பி சத்திரம் பேருந்து நிலையம் சென்று...அங்கே இங்கே என அலைந்து உடனே தஞ்சை போன்ற வாகனங்கள் சோன மீனா சினிமாத் தியேட்டர் அருகே தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்ளது என்றார்கள்...தஞ்சைக்கு அங்கிருந்து ரூ. 43. கட்டணம். ஆனால் அந்த ஒன் டூ ஒன் பேருந்தும் அப்படித்தான் நடத்துனர் தம் பணியை அங்கேயே முடித்து கீழ் இறங்கிக் கொள்ள ஓட்டுனர் எங்கும் நிறுத்தாமல் கொண்டு சென்று தஞ்சை புதிய பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடுகிறார்.

பொதுவாகவே எந்த பேருந்துமே எந்த மாவட்டத்திலுமே, அது சேலம் திருச்சி தஞ்சை எங்குமே பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் சுலபமாக மறு பேருந்தைப் பிடித்து ஏறுவதற்கான வசதியுடன் சென்று கடைசி இடத்தில் நிறுத்தப்படுவதில்லை.. அது மட்டுமல்ல அதனால் பயணிகளுக்கு ஏற்படும் கூடுதல் கட்டண இழப்பை பற்றியும் அரசு சிறு துளியும் அக்கறை எடுத்துக் கொள்வதாக இல்லை. அன்று வெள்ளை, இன்று கொள்ளையோ கொள்ளை...கேட்டால் பெட்ரோ, டீசல் விலை அதிகம் போக்குவரத்து, வங்கி, பி.எஸ்.என்.எல்,ஆசிரியர் எல்லாருமே மாத ஊதியம் கோரிக்கை நிறைவேறாமல் போராடுகிறார்கள் என சாக்கு...இந்த போக்குவரத்து, பெட்ரோல் டீசல் விலை போன்ற மிக அதிக பட்ச பாராமுகத்துக்காகவே இந்த அரசுகள் தம்மால் மேலாண்மை செய்ய இலாயக்கு இல்லை என பதவி விலகலாம்... ஏன் எனில் அந்த பழைய பேருந்து நிலையம், புதுப் பேருந்து நிலையம் என மாறி மாறிச் செல்வதற்கே குறைந்த பட்சம் ரூ.. 5 முதல் 12 வரை கூட கட்டணமாகக் கொடுக்க வேண்டி இருக்கிறது இது சாதாரண கட்டணத்திற்கும் கூடுதலாக அரசு ஏற்படுத்தி உள்ள சுமை...
அதில் வேறு நல்ல வசூல்,
Image may contain: one or more people, people standing, sky and outdoor


தஞ்சை புதிய பேருந்து நிறுத்தத்தில் கொஞ்சம் சுடு நிலக்கடலை வாங்கிக் கொண்டு எப்படி இராஜ இராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் ஆலைய்த்துக்கு செல்வது என விசாரித்தோம். ஒரு நடத்துனர் கும்ப்கோணம் வண்டியில் நடத்துனரைக் கேட்டு ஏறிக் கொள்ளுங்கள் கடைசியில் ஏறிக் கொள்ளச் சொல்வார் என்றார். ஆனால் அவர் எமது வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவே இல்லை...

அவ்வளவு பெரிய சரித்திரப் புகழ் வாய்ந்த தலத்துக்கு பேருந்து வசதி சரியாக செய்து தரப்படவில்லை. பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து இடம் கேட்டு நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. எந்த பேருந்திலுமே அதன் பேர் எழுதப்படவில்லை...என்னய்யா தமிழ் வாழும் எங்கே சரித்திரப் பேர் விளங்கும்?

அங்கே சென்றால் வெளி நாட்டு சில சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டி விளக்கிக் கொண்டிருந்தார் சுமார் ஒரு மணி இருக்கும்...ஈரம் எங்கும்...வழிநடையில் போட்டிருந்த காலடிப் பாய் நச நச வென கால் வைக்க முடியமல் இருந்தது...காலணி, பைகள் வாங்கி வைப்போர் கவனமாக காசு சம்பாதிப்பதில் குறியாக இருந்தனரே தவிர வழியில் சகதியாக வெறும் காலில் அந்த நீரை மிதித்து செல்லும் பயணிகளுக்கு என்ன நேர்ந்தால் தமக்கென்ன என வாழாவிருந்தார்கள். காலணிகளையும் பைகளையும் கொடுத்து 15 ரூ கட்டணம் கொடுத்து விட்டு...ஏராளமான ஸ்பேஸ் கொடுத்து கட்டப்பட்டிருந்த அந்த பெரிய கோவிலின் பரப்பை நுகர்ந்தோம்.விஸ்தீரணம் அளந்தோம். பெரு முயற்சியைப் பாராட்ட அளவே வேண்டாம். ஏன் எனில் இராஜ இராஜன் தம்மை இளமையில் பட்டம் கட்டி முடி சூட்டிக் கொள்ள அழைத்தபோது,,,கரிகாலன் போல,விஜயாலயன் போல என தமது பாரம்பரியத்தில் பரம்பரையில் ஆண்ட முன்னவர்கள் செய்த சாதனையில் நான் சிறிதும் செய்யாதபோது அந்த முடி எனக்கு எப்படி உரியதாகும் அது போல சாதிப்பேன் அதன் பின் முடி ஏற்பேன் என சொல்லியதாக மிக நீண்ட உரை செய்ததாக சரித்திரக் குறிப்புகள் உண்டு. அது போல கரிகாலனின் கல்லணைக்குப் பிறகு சோழர்களின் பேர் சொல்ல மாபெரும் அடையாளச் சின்னத்தை உருவாக்கி மறையாமல் விளங்கி இருக்கிறார். உள் பிரகாரத்தில் உள்ள ஒவ்வொரு தூணும், நந்தியும், மேல் விமானக் கல்லும் அந்த சோழர் கால சிற்பக்கலையின் பேருதராணங்களாக விளங்குகின்றன.

அங்கும் நாங்கள் அறிந்த வரை எங்குமே ஓய்வறைகள் எனப்படும் கழிவறைகள் காணப்படவே இல்லை. இதை எல்லாம் என்றுதான் எவர் அரசுதான் எந்த தமிழக அரசுதான் கண்டு கொண்டு பிரச்சனையை தீர்க்குமோ தெரியவில்லை...

நேரம் ஒரு மணி என்பதால் எல்லா சிவாலயங்களுமே பனிரெண்டுக்கு மூலவரின் சன்னதிகள் மூடப்பட்டால் நாலுமணிக்குத்தான் திறக்கப்படுகின்றன...அதன் பின் இரவு எட்டு, எட்டரை ஏன் ஆலங்குடி அபாயசகாயேஸ்வரர் சன்னதி குரு கோயில் ஒன்பது மணி வரை திறந்தே இருக்கிறது என்பதெல்லாம் செய்திகள்...

மூல விக்கிரகத்தை பார்க்காமல் வரக்கூடாது பார்க்காமல் வந்து விட்டால் சரியில்லை என்ற நம்பிக்கைகள் பக்தரிடம் உண்டு...அப்படி பார்க்காத மூலவரை மறுபடியும் சென்று பார்த்தே ஆகவேண்டும் என்ற நம்பிக்கையை வித்தை விதைத்துவிட்டனர். எனவே 4 மணி வரை என்ன செய்வது என உடனே பையை காலணிகளை பெற்றுக் கொண்டு... ஆலங்குடி செல்வது பற்றி விசாரித்தோம்.

கும்பகோணம் ஏன் செல்கிறீர் வேண்டாம், மாறாக தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் செல்லுங்கள் அங்கு  கும்பகோணம் செல்ல போகும் பேருந்து அதன் வழியாகவே செல்லும் அதில் ஏறி நீடாமங்கலத்திலிருந்து ஆலங்குளம்  செல்வது தொலைவு, நேரம் எல்லாம் குறைவு என்ற செய்தி நன்றாகவே இருந்தது...

Image may contain: one or more people and closeup

பழைய பேருந்து நிலையம் தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் செல்ல விசாரித்தால் அட இப்போதுதான் ஒரு வண்டி சென்றது, ஒன்னும் கவலை வேண்டாம், நீங்கள் சாந்தப்பிள்ளைக் கடை என்று ஒரு நிறுத்தம் உள்ளது அங்கு சென்று அதன் வழியே திருவாரூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் போன்ற எந்த வண்டி வந்தாலும் ஏறிக் கொள்க் நீடாமங்கலம் செல்லலாமெ என்றார்கள்...சுமார் ஒன்னரை மணி நேரம் காத்திருந்தது விரயம். விசாரித்தால் அரசுப் பேருந்துகள் பல நிறுத்தப்பட்டிருக்கும்...தனியார் பேருந்துதான் தீபாவளி முடிந்ததும் வழக்கப்படி இயங்கும் என்றார்கள்...

மிகவும் சோதனை...ஆட்டோ ,இல்லை என்றால் ஓலா வாடகைக்கார் பார்க்கலாமா என்றெல்லாம் எண்ண அலைகள்...நாங்கள் நெடு நேரம் பேருந்துக்கு அந்த நிறுத்தத்தில் இருந்ததைப் பார்த்த ஒரு அம்மன் சீருடையில் மாடர்ன் ட்ரஸ் அணிந்த  பெண் ஒருவர் நெம்பர் தருகிறேன் ஒரு போன் பண்ணித் தருகிறீர்களா பேசவேண்டும் என்றார்...நாங்கள் இசைவளிக்கவில்லை...

நேரம் மூனறைக்கும் மேல் ஆக திட்டத்தை மறுபரிசில்னை செய்து மறுபடியும் தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மறுபடியும் தஞ்சைப் பெரிய கோவில் செல்ல பை, காலணிகளை மறுபடியும் ஒரு 15 ரூபாய் செலுத்தி விட்டு, மூலவர் சன்னதி நடை திறக்க சென்று கூட்டத்தில் சேர்ந்து வரிசையாக சென்று நாலுமணி சுமாருக்கு மூலவர் அறை திரைச்சீலை விலக்கப்பட பார்த்துவிட்டு...அதே ஓட்டத்தில் சுமார் 5 மணி சுமாருக்கு பழைய பேருந்தில் நீடாமங்கலம் நகரப் பேருந்து ஓன்றை தேடிக் கண்டு கொண்டு, அதில் நபருக்கு 19 ரூ. கட்டணம். பேருந்து செல்கிறது சென்று கொண்டே இருக்கிறது சுமார் 6 மணிக்குள் நீடாமங்கலம் அண்ணா பிரிவு சாலையில் கொண்டு இறக்கி விட்டனர். அதன் பின் அங்கிருந்து கும்ப கோணம் வண்டிக்கு சில நிமிடங்கள் காத்திருப்பு...அதுவே எமக்கு பெரிய வலி...ஏன் எனில் சரியான நேரத்துக்கு போய்ச் சேர்வோமா, சினிமாவில் கிளைமாக்ஸ் போல நெக் அன்ட் நெக் ஆக கடைசி நேரத்திலாவது சென்று அந்த ஆலங்குள குரு கோவிலுக்கு செல்ல முடியுமா என்றெல்லாம் பதை பதைப்பு. பதற்றம்.

அங்கு 7 ரூ கட்டணம் நபருக்கு. ஒன்பது மணி வரை கோவில் உண்டு என்ற செய்தி...கை கால் கழுவிக் கொண்டு இரண்டு நெய் டப்பா வாங்கிச் சென்று விளக்கில் விட்டு விட்டு, குரு மற்றும் அபாய சகாயேஸ்வரரை வணங்கிவிட்டு வெளிவரும்போது சுமார் 7 மணிதான் இருக்கும்...இலக்கும் நோக்கமும் நிறைவேறிவிட்டது... மகன் ஒரு மண் சிம்னி அகல் விளக்கை நினைவாக வாங்கிக் கொண்டான் அவனது சேமிப்பிலிருந்து. என்னிடம் கொடுத்த காசை வாங்க மறுத்து...
Image may contain: Vignesh, outdoor
அதன் பின் பேருந்து நிறுத்தம் சென்று ஓடி அங்கு அப்போதுதான் வந்த பேருந்து ஒன்றில் நீடாமங்களம் வரை என ஏறிக் கொண்டோம்...அந்த தனியார் பேருந்தில் நான் அமர்ந்த இருக்கைக்கு முன் இருக்கையில் கடைசியில் ஒரு  ஒட்டியிருந்த தகரம் ஆணிட் விழுந்து  தகரம் வெளி நீட்டியபடி பயணிகள் கையை காலை கிழிக்கும் நிலையில் இருக்க் என்னுடன் அமர்ந்திருந்த இரு பயணிகளும்,,,அது 3 பேரு அமரும் பக்கம் பேருந்தில்...அது பற்றி பேசிக் கொண்டனர். நான் இறங்கும்போது அந்த பார்வைக்கு ஏழமையாகத் தெரிந்த அந்த நடத்துனர் உதவியாளரிடம் அந்த தகரத்தைப் பற்றிக் காண்பித்து ஒரு ஆணி வைத்து அடித்து விடுங்கள், வரும் பயணிகளுக்கு இடையூறாய் அமைந்து காயம் ஏற்ப்டுத்தி விடக்கூடும் என எச்சரித்து விட்டு,...மனம் உவந்து எனக்குச் சேரவேண்டிய ஒரு ரூபாயை அந்த நபர் நேர்மையாக உங்களுக்குத் தர வேண்டும் என்று சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என மனதுள்ளேயே ஆமோதித்துவிட்டு கீழே இறங்கி...தஞ்சைப் பேருந்து நிலையம் நோக்கி செல்லக் காத்திருந்தேன்...
Image may contain: outdoor
அங்கிருந்த ஒரு நபர் எர்ணாகுளம் கோவை வண்டி கூட போகும் அட விட்டு விட்டீரே என்றார் அந்த வண்டி சென்றுவிட்டது நாங்கள் அது போகுமா என அறியும் முன்னே...அவர் இங்கு தெர்மல் நிலையத்தில் எங்கள் ஊரில் பெரு சரக்கு ஊர்தி ஓட்டியதாகவும், சாம்பல் லோடு என்றும், காவிரியில் பாலத்தருகே வாகனம் நிறுத்தி விட்டு குளித்ததையும், அதன் பிறகு பால் வண்டி ஓட்டியதையும் அதன் பிறகு சொந்த ஊருக்கே வந்து செட்டில் ஆகியிருப்பதாகவும் உபயோகமாக தகவல் தந்தார்...ரயில்வே கேட் போடப்பட்டதால் கொஞ்ச நேரம் வாகனம் ஏதும் வரவில்லை...

சாப்பிடலாமா என்றால் அதற்கும் முடிவு செய்ய முடியாத நிலை. அதன் பின் தஞ்சை புதிய பேருந்து நிலையத்துக்கு ஒரு தனியார் பேருந்து வந்து எம்மை ஏற்றிக் கொண்டது...தஞ்சை புதிய பேருந்து நிலையம் செல்லும்போது சுமார் இரவு 9 மணி... வசந்த பவனம் பேருந்து நிலைய உணவகத்தில் ஒரு தோசையும் வெங்கயாய ஊத்தப்பம் ஆகியவை உண்டு உண்ணா நோன்பை முடித்து விட்டு...மறுபடியும் வாகனம் தேடினோம்...ஒரு படுத்துறங்கிச் செல்லும் பேருந்துஅதில் டிக்கட் இல்லை. முழுதும் நிரம்பியதாக சொல்ல, மறுபடியும் திருச்சி நோக்கி பயணம்...அதன் பின் அங்கிருந்து சேலம் வரும்போது 2.20 இருக்கும் அதன் பின் மேட்டூர் வந்தோம் விடியல் 4 மணிக்குள்.
Image may contain: people standing, sky and outdoor


ஆக 8.11.18 அதிகாலை 4 மணிக்கு பயணம் ஆரம்பித்து ( எழுந்தது 2 மணி ஆனாலும்) 9.11.18 அதிகாலைக்கு எமது பயணம் முடிந்தது... மறுபடியும் மேட்டூர் உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் வந்து காய்கறி வாங்க என திரும்பும் பேருந்திலும் பெண்கள் அந்நேரத்தில் ஏறி வர ஆரம்பித்திருந்தனர். நமது உலகம் வேறு..ஆனால் அவர்கள் உலகம் அன்றாடம் அப்படித்தான் நடந்து வருகிறது...திருவரங்கம், தஞ்சைப் பெரிய கோவில், ஆலங்குடி குரு ஆலயம் என சென்று வந்து விட்டோம் சுமார் 24 மணிக்குள்...தயாரிப்புக்கென 2 மணி எனவே...26 மணிநேரம்...இப்படித்தான் சென்றது...அமருமிடத்தில் குந்துபுறத்துக்கு நிறைய தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டும், மூல வியாதி குதத்தை தாக்காத வண்ணமும் நிறைய நீர் குடித்தும் ஓய்வு எடுத்தும் சாதாரண வேலை நாளுக்குத் திரும்ப வேண்டும்..

Image may contain: 1 person, sunglasses, sky and outdoor


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.