Thursday, June 25, 2026

கர்மா VS இயற்கை: கவிஞர் தணிகை

 கர்மா VS இயற்கை: கவிஞர் தணிகை





சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் பகிர்ந்தார் கர்மா பற்றி முக நூலில். அதன் அதிர்வலைகள் இன்னும் இருப்பதால் அது பற்றி நமது பதிவும்...


புத்தர் சொல்லிச் சென்றது: வினை தொடரும் என்பது

கணியன் பூங்குன்றனார்: நன்மையும் தீமையும் பிறர் தர வாரா...

இயற்பியல் கோட்பாடு: ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு  வகையில் வெளித் தோன்றும்...


மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது கர்மா என்பது வினைப் பயன். தொடரும் ஒரு வினைச் செயல்.(வினை என்பது செயல் என்பதாக எடுத்துக் கொள்ளப் பட வேண்டியதாகிறது பொதுவானது அது இதிலிருந்து விலகி நிற்கிறது இலக்கணப்படி. எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது தொடர் ஓட்டம் இருக்கிறது இதனுள்.


இது வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது பழமொழி போல்   போன்று(ம்) தோன்றும் எக்காலத்திற்குமான மொழி.விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா (வேறா) முளைக்கும் என்றும் ஒரு சொல்லடை உள்ளது.


அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்களிலிருந்து அடுத்தவருடன் நமக்கேற்படும் அனுபவங்கள் வரை இவை அடங்கும்


சரி மனிதர்க்குத் தான் கர்மா, எல்லாமா என்றால் அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.விலங்கு போராடி உணவைப் பெறுகிறது அடுத்த விலங்கைக் கொன்று...பறவைகள் உணவைத் தேடிப் பெறுகின்றன, சில வகை விலங்கைப் போலவும் கொன்று தின்கின்றன.இந்த வாழ்வா சாவா போராட்டம் அனு தினமும் தொடரவே செய்கிறது...


எங்களது வாழ்விலேயே ஒரு மனிதர் வேட்டியைப் போட்டு தாண்டிவிட்டார் தன் மூத்தவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட வீட்டுப் பணத்தை இல்லையென்று சொல்லி, முதுமையில் கால்களை இழந்து மிகவும் வேதனை அனுபவித்ததை கண்கூடாக யாம் கண்டதுண்டு.


அறம், தர்மம், நீதி, நியதி, யமம் இப்படி எல்லாம் இருக்கிறது என்பாரும் இல்லை என்பாரும் இங்கு உண்டு. கடவுள் கட உள் கடந்து பார் கர்மா இருக்கலாம், கடவுள் இருக்கிறதோ இல்லையோ கர்மா இருக்கலாம்.


இது போல் எண்ணிலடங்கா நிகழ்வுகள் மனித வாழ்வில் இருக்கலாம், இருக்கும்...ஆனால் எம் கேள்வி எல்லாம் அதல்ல...


ஒரு திரைப் படத்தில் வண்ணத்துப் பூச்சியின் சிறகசைவுக்கும், சுனாமிக்கும் தொடர்பிருக்கிறது என்ற ஒரு கருத்தை சொன்னார்கள்...எப்படி என்பதை முழுதுமாக விரித்துப் பார்த்தால் அஞ்ஞானமும், விஞ்ஞானமும், மெய்ஞானமும் இருக்கும்.இருக்கலாம்.


பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், புயல், காற்றின் சீற்றங்கள்,போர்கள், மனிதப் பிழைகள், அறச்சீற்றங்கள், மறைச்சீற்றங்கள், அணு வெடிப்புகள், ஆயுதக் கலாச்சாரங்கள், வேதியல் நிகழ்வுகள் வேதியியல் விபத்துகள் இப்படி பல இயற்கை மற்றும் செயற்கை நிகழ்வுகள் பூமியை அலைக்கழிக்க, உயிர்கள் அழிவு ஒரு புறம்,ஆக்கம் உணர்ச்சியால் ஒரு புறம் இருக்க‌ பூமிக்கே ஒரு ஆயுள், விண்மீனான சூரியனுக்கும் ஒரு ஆயுள் என விண்ணியல் விரிந்தபடி இருக்க இதில் மனிதர்களும் கர்மாவும் இயற்கையில் இருக்கிறதா என்பதை நாம் கலந்துரையாடி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமாகிறது.


 வாயேஜர்1,2 வேறு நிறைய விண்ணியல் புள்ளி விவரங்களைத் தந்த படி சென்று கொண்டே இருக்கிறதாம் ...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Tuesday, June 23, 2026

இறையின் தடங்கள் இயற்கையின் வடங்கள்

 இறையின் தடங்கள் இயற்கையின் வடங்கள்



சிவனின் கால்களா?

சக்தியின் கைகளா?

விஷ்ணுவின் தோள்களா?

பிர்மாவின் கண்களா?

புத்தரின் கொள்கையா?

சமணரின் பிள்ளைகளா?

யேசுவின் பாசமா?

அல்லாவின் நேசமா?

நாபிக் கமலத்தின் ஓமா?(OHM...)


ஐம்பூதங்களின் வழியே


அன்பரின் மனமே

ஆருயிர்த் தவமே!


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Thursday, June 18, 2026

வோஜின்யா பாட்டி செல்லம்: கவிஞர் தணிகை

 வோஜின்யா பாட்டி செல்லம்: கவிஞர் தணிகை



அம்மா செல்லம், அப்பா செல்லம், தாத்தா செல்லம் இங்கே ஒரு பாட்டி செல்லம் உலகின் பார்வையைப்  பெற்றிருக்கிறது.துக்கப் பட்டு, துயரப் பட்டு, துன்பப் பட்டு, சித்ரவதைப் படும்போதெல்லாம் தமது பாட்டியிடம் ஆறுதல் தேடிய ஒரு மனிதம் இன்று புகழ் பெற்ற கதைதான் இது.


கேப்வெர்டி இந்த நாட்டை நாம் கேள்விப் பட்டிருக்கவே வாய்ப்பில்லை,1975 ஆம் ஆண்டில் தான் போர்ச்சுகல் நாட்டிடம் இருந்து சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை பெற்ற ஒர் ஆப்பிரிக்க‌ தீவுக் கூட்ட நாட்டிலிருந்து இந்த வோஜின்யா என்ற 40 வயது மனிதன் ( பெயர்:ஜோஸிமர் ஜோஸ் எவரோ டயஸ்) ஸ்பெயின் என்ற நாட்டு கால் பந்து அணியின் 7 கோல்களை தடுத்தாடி அந்த மேட்ச்சை சமன் செய்யும் வரை.எல்லோரும் ஸ்பெயின் தாம் வெல்லப் போகிறது என்று கருதிய நிலையில் ஒரு பெரும் கால் பந்து வீரர் உருவானதாக கால்பந்து விளையாட்டு உலகே கொண்டாடும் இந்த வோஜின்யா என்ற பாட்டி செல்லம் 7 கோல்களை விழாமல் காப்பாற்றி தமது நாட்டுக்கும், தமது அணிக்கும் தமக்கும் பெருமை சேர்த்துக் கொண்டுள்ளார்.


இந்த தடுப்பாட்டத்துக்கும் பின் இவரை கோடிக்கணக்கான நபர்கள் சமூக வலை தளங்களில் பின் பற்றுவோராகி இருக்கின்றார்கள்.இவரது பெயரே பாட்டி செல்லம் என்று செல்லாமாக அழைக்கப் படுகிறதாம் இவரை அறிந்தவர்களால்.


இவரே இந்த அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். 40 வயதில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வயதில் இந்த மனிதர் மெஸ்ஸி போன்றோர் அர்ஜென்டினாவுக்காக ஹேட்ரிக் கோல் போட்டு வெற்றி பெற வைத்ததை எல்லாம் பின்னுக்குத் தள்ளி புகழ் அடைந்திருக்கிறார் தமது முதல் ஆட்டத்திலேயே பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு முன் தடுத்தாடி 7 கோல்களை தடுத்து வெற்றி தோல்வி இன்றி ஆடி முடித்ததற்காக.


அட நம்ம டிடி( DD Sports )ஸ்போர்ட்ஸ் கூட இதை நேரலையில் ஒலி ஒளிபரப்பு செய்கிறதாமே...


இனி விடக்கூடாது . பார்த்தாக வேண்டும்...


தனி மனித சாதனைகள் உலகைப் பேச வைக்கும், சில தனி மனித சோதனைகள் உலகையே கூச வைக்கும்.I am noting about our wold crisis between Iran and U.S....

மகாத்மா ஒரு அம்மா செல்லம் உங்களுக்குத் தெரியுமா? அம்மாவுக்காகவே அசைவ உணவைத் தவிர்த்து, பெண்சேரலை  வெளி நாடு செல்கையில் தவிர்த்து,உண்மையையே பேசி சத்யவானாக மகாத்மாவாக‌ உருமாறினார். எனவே செல்லங்கள் சாதனை செய்வார்கள்...

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Wednesday, June 17, 2026

மனித குலத்தின் நீட்சி வாயேஜர் விண்கலம்: கவிஞர் தணிகை

 நன்றி:

பிபிசி உலக சேவை


ஃபெர்னான்டோ துவார்டே

'மனித குலத்தின் மிகப்பெரிய சாதனை' - சூரியக் குடும்பம் பற்றிய பார்வையை மாற்றிய வாயேஜர் விண்கலம்


1977-ஆம் ஆண்டு நாசா விண்ணில் செலுத்திய இரட்டை விண்கலங்களில் ஒன்றான வாயேஜர் 1 விண்கலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பூமியில் இருந்து ஓர் ஒளி நாளைக் கடந்திருக்கும். ஒளி நாள் என்பது ஒரு நாளில் ஒளி பயணிக்கும் தூரம், அதாவது கிட்டத்தட்ட 26 பில்லியன் கிலோமீட்டர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தப் பொருளை விடவும் நீண்ட தூரத்தை வாயேஜர் 1 கடந்துவிட்டது. அதன் மைலேஜை விடவும் அந்த விண்கலத்தில் இருந்து தற்போதும் நாசாவுக்கு தகவல் வந்து கொண்டிருப்பது தான் அசாத்தியமானதாக உள்ளது.

ஐந்து ஆண்டுகள் நிலைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட வாயேஜர் 1 மற்றும் 2 விண்கலங்கள் விண்வெளியில் 50 ஆண்டுகள் கழித்தும் செயல்பாட்டில் உள்ளன.

அவை வானியலாளர்களுக்குப் பிரபஞ்சம் பற்றிய விலைமதிப்பில்லாத தகவல்களை வழங்கி கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் தொன்மையானதாக கருதப்படும் தொழில்நுட்பத்தில் இயங்கி வருவது தான் ஆச்சரியத்தின் உச்சம்.

"உங்கள் காரைத் திறப்பதற்கான ரிமோட் சாவியில் இருக்கின்ற அளவிலான நினைவகம் தான் வாயேஜரில் உள்ள கணினியில் இருக்கின்றன," என்று வாயேஜர் திட்டத்தின் தற்போதைய விஞ்ஞானியான முனைவர் லின்டா ஸ்பில்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பண்டைய கிரேக்கர்கள் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் பற்றி அறிந்திருந்தனர். ஆனால் அவை வெறும் ஒளிப் புள்ளிகளாக இருந்தன," என்கிறார் எழுத்தாளரும் விண்வெளி ஆய்வாளருமான ஏமி ஷிரா தெய்டெல்.

ஆனால் வாயேஜர் திட்டத்தால் நாம் கிரகங்கள் பற்றி தெளிவற்ற எண்ணத்தில் இருந்து அனைத்து வகுப்பறையில் இருக்கக்கூடிய பரிச்சயமான வரைபடங்கள் என்கிற நிலைக்கு வந்தோம் என்று அவர் தெரிவிக்கிறார்.

வெளிப்புற கிரகங்களுக்கான நாசாவின் முதல் திட்டமான பயோனியர் 10 (Pioneer) 1973-ஆம் ஆண்டு வியாழன் கிரகத்துக்கு அருகே சென்றது. அதன் மூலம் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்கள் இடையேயான சிறுகோள் பட்டையை வெற்றிகரமாகக் கடந்து மில்லியன் கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் பூமியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அதன் அடுத்த திட்டமான பயோனியர் 11 ஆறு ஆண்டுகள் கழித்து சனி கிரகம் அருகே சென்றது.

வாயேஜர்களுடன் ஒப்பிடுகையில் இந்த இரண்டு திட்டமும் மிகவும் எளிமையானவை.வாயேஜரின் பிரமாண்ட பயணத்துக்கு மாற்றாக வெளிப்புற கிரகங்களில் இரண்டுக்குச் செல்லும் எளிய திட்டம் முன்வைக்கப்பட்டது.

எனினும் திரை மறைவில் செயல்பட்ட விஞ்ஞானிகள் வாயேஜர்கள் அதனையும் கடந்து செல்வதற்காகத் தயார்படுத்தி வந்தனர்.

"அதிகாரப்பூர்வமாக வியாழன் மற்றும் சனி கிரகத்துக்கான ஐந்து ஆண்டு திட்டமாக வடிவமைத்தோம். ஆனாலும் தேவைப்படும் பட்சத்தில் சிறிது காலம் கூடுதலாக நிலைத்திருக்கும் விதத்தில் அதனை வடிவமைத்தோம்," என ஒப்புக்கொள்கிறார் வாயேஜர் திட்டத்தில் தற்போதும் பணியாற்றும் வானியற்பியலாளரான முனைவர் ஆலன் கம்மிங்ஸ்.

ஒரே மாதிரியான விண்கலங்களாக தயாரிக்கப்பட்ட இவற்றில் வாயேஜர் 2 ஆகஸ்ட் 1977-இல் விண்ணில் செலுத்தப்பட்டது. அதற்கு அடுத்த மாதம் வாயேஜர் 1 விண்ணில் செலுத்தப்பட்டது. இரு வெவ்வேறு பாதைகளில் அந்த விண்கலங்கள் சென்றன, வாயேஜர் 1 அதன் இரட்டை விண்கலத்தை அந்த ஆண்டின் இறுதியில் முந்தியது.

புதிய உலகங்களைக் காண்பித்த வாயேஜர்

இறுதியில் இந்தத் திட்டங்களே அதன் மதிப்பை எழுத ஆரம்பித்தன. நமது சுற்றத்தைப் பற்றி தங்களுக்கு தெரிந்தது என வானியற்பியலாளர்கள் நினைத்தவற்றை வாயேஜர் மாற்றி எழுத தொடங்கியபோது உலகமே வியந்து பார்த்தது.

உதாரணமாக வாயேஜர் 1 முதல்முறையாக பூமிக்கு வெளியே முதல் செயல்பாட்டில் இருக்கும் எரிமலையை வியாழன் கிரகத்தின் நிலவான லோவில் (Moon lo) கண்டறிந்தது. அது வியாழன் கிரகத்தில் மின்னலையும் பதிவு செய்தது. நமது கிரகத்துக்கு வெளியே இது பதிவு செய்யப்படுவது முதல்முறை.

வாயேஜர் 2-இல் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்கள், வியாழன் கிரகத்தின் இன்னொரு நிலவான யுரோப்பாவின் பிளவுபட்ட பனிப்படலத்தின் கீழ் ஒரு திரவ நீர்ப் பெருங்கடல் இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டியது. இது இந்நாள் வரை அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என வானியலாளர்களை வியாழனின் நிலவான லோவை முதலில் கண்டதை கம்மிங்ஸ் நினைவில் வைத்துள்ளார். அது அவரை மெய்சிலிர்க்க வைத்தது.

"நான் அப்போது வளாகத்தில் இருந்தேன். ஒரு காணொளி பதிவு வந்திருந்தது," என அவர் நினைவுகூர்கிறார்.

மேலும், "அங்கு லோ அதன் முழு மகிமையுடன் அங்கு இடம்பெற்றிருந்தது. என்னால் அதை நம்ப முடியவில்லை. நமது நிலா மிகவும் சாம்பல் நிறத்தில் சுவாரஸ்யமற்றதாக உள்ளது. நிலவுகளில் இவ்வளவு பன்மைத்துவம் இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை." என்றும் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தொடங்கிய நான்கு ஆண்டுகளில் யுரேனஸ் மற்றும் நெப்ட்யூனை அடையும் முதல் விண்கலமாக வாயேஜர் 2 இருக்கும் என நாசா முடிவெடுத்திருந்தது. 1986 மற்றும் 1989-இல் அருகே செல்வதன் மூலம் பிரமாண்ட சுற்றுலா முடிவுக்கு வரும் எனக் கருதப்பட்டது.

'வெளிர் நீலப் புள்ளி'

வாயேஜர்கள் ஒரு விதமான புத்தாக்கத் திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையுடன் தங்களின் இலக்குகளை அடைந்தன.

ஸ்லிங்ஷாட் உத்திகள் என அழைக்கப்பட்ட முறை ஒவ்வொரு கிரகத்தின் புவியீர்ப்பைப் பயன்படுத்தி திசைவேகம் பெற்று அடுத்த இலக்கை அடைவதற்காக திசையை மாற்ற அனுமதித்தது. இது நெப்ட்யூனை அடைவதற்கான பயண நேரத்தை 30 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைத்தது.

இந்தத் திட்டங்களில் ப்ளுடோனியம் சார்ந்த அணுக்கரு மின்கலங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை ஒவ்வொரு ஆண்டும் 4 வாட் ஆற்றலை இழந்துவந்தன. பெரும்பாலான அறிவியல் கருவிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

படக்குறிப்பு,இந்த வெளிர் நீலப் புள்ளி என்பது 1990-இல் வாயேஜர் 1 பூமியை எடுத்த புகழ்பெற்ற புகைப்படம் ஆகும். அதன் 30வது ஆண்டான 2020-இல் இந்தப் புகைப்படம் நாசாவால் வெளியிடப்பட்டது.

1990-இல் வாயேஜரின் கேமரா நிறுத்தப்படுவதற்கு முன்பாக, அது நெப்ட்யூனைக் கடந்திருந்த சூழலில் திரும்பி பூமியை புகைப்படம் எடுத்தது.

விண்வெளியின் பரந்த வெளியில் ஒரு சிறிய வெளிர் நீலப் புள்ளியாக பூமி அதில் தெரிந்தது.

அது மறைந்த வானியலாளரான கார்ல் சாகனின் எண்ணமாக இருந்தது.

"இந்த வெளிர் நீலப் புள்ளி தான் இதுநாள் வரையில் வாழ்ந்த மனிதர்கள், இதுநாள் வரையில் நீங்கள் அறிந்த மனிதர்கள்," என கார்ல் சாகன் கூறியதாக ஸ்பில்கர் நினைவுகூர்கிறார். நமது கிரகத்தை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வையும் அவர் குறிப்பிடுகிறார்.

விண்மீன்களுக்கு இடையிலான வெளி (இன்டர்ஸ்டெல்லார் வெளி)

2012-இல் ஹீலியோஸ்பியர் என்று அழைக்கப்படும் சூரிய மண்டல வெளியின் வெளிப்புறத்தை விட்டுவிலகி இன்டர்ஸ்டெல்லார் வெளிக்குள் நுழைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாக வாயேஜர் 1 மாறியது. அதன் இரட்டை விண்கலம் ஆறு ஆண்டுகள் கழித்து அதனை பின்தொடர்ந்தது.

இரண்டும் காந்தப்புலங்களைப் போல பூமிக்கு தரவுகளை தற்போதும் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னதாக விண்ணில் ஆராயப்படாத பிராந்தியத்தில் இருந்து புதிய தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

"தற்போது இன்டர்ஸ்டெல்லார் மீடியத்தில் நேரடி அவதானிப்புகளை மேற்கொண்டு வரும் ஒரே கருவியாக வாயேஜர் இருக்கிறது," என்கிறார் வாயேஜரின் தற்போதைய ஆய்வில் வேலை செய்து வரும் முனைவர் பில் குர்த்.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/JPL

படக்குறிப்பு,1981-இல் சனி கிரகத்துக்கு அருகில் சென்ற வாயேஜர் 2 விண்கலம் அதன் மோதிரங்களைப் புகைப்படம் பிடித்தது.

"பெருங்கடல் என்பது யாது என்பதை அறிந்துகொள்ள பெருங்கடலில் உங்களுடைய பாதங்களை ஈரமாக்குவதைவிட சிறந்தது எதுவும் இருக்க முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

2030 வாக்கிலும் இரண்டு விண்கலன்களும் குறைந்தபட்சம் ஒரு அறிவியல் கருவியை இயக்கிக் கொண்டிருக்கும் என நாசா கணித்துள்ளது.

"இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்ய முயற்சிப்போம்," என உறுதிகூர்கிறார் ஸ்பில்கர். "நாங்கள் ஆஃப் பட்டனை அழுத்தமாட்டோம். மாறாக அதற்கான நேரம் எப்போது என்பதை வாயேஜரே முடிவெடுக்க விடுவோம்." என்றார்.

ஒரு 'வியக்கத்தக்க கண்டுபிடிப்பு'

"மனித குலத்தின் தேடலின் மிகப்பெரிய சாதனையை வாயேஜர் பிரதிபலிக்கிறது. இது உண்மையில் பிரபஞ்சத்தில் தன்னுடைய இடத்தைப் புரிந்துகொள்ள மனிதகுலம் மேற்கொண்ட சாகசம்," என்கிறார் குர்த்.

வெளிப்புற கிரகங்கள் நாம் உண்மையாக நினைத்ததைப் போல எளிமையானவை இல்லையென்று வாயேஜர் காண்பித்ததாகவும் அதன்மூலம் அடுத்தடுத்த திட்டங்களுக்கான வழியை உருவாக்கியதாகவும் அவர் நம்புகிறார்.

நாசாவில் யுரோப்பா க்ளிப்பர் விண்கலம் வியாழன் கிரகத்தில் நிலவான யுரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்கலமாக ஜூஸ் அதன் இலக்கான வியாழன் கிரகத்தின் நிலவுகளை 2031-இல் அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாயேஜரின் திட்டங்கள் பூமிக்குத் தகவல்களை திருப்பி அனுப்புவது மட்டுமில்லை.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

ஒவ்வொன்றிலும் 12 இன்ச் நீளமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் உள்ளன. அதில் பூமியில் உள்ள மக்கள் 55 மொழிகளில் தெரிவித்த வாழ்த்துகள், 115 புகைப்படங்கள் மற்றும் நமது கிரகத்தின் வெவ்வேறு பிராந்தியங்கள் மற்றும் காலகட்டங்களின் இடி மற்று இசை போன்ற ஒலிகளும் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் சாத்தியமான வேற்றுகிரகவாசிகளால் அந்த விண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மனிதகுலம் பற்றிய அறிமுகக் கடிதமாக இருக்க வேண்டும் என்பதற்கான இந்தத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது இதர புத்திசாலி உயிரினங்களுக்கு "ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பாக" இருக்கும் என்கிறார் ஸ்பில்கர். "அவர்கள் திரும்பி வந்து பூமி எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்." என்று அவர் தெரிவித்தார்.

"தங்கத்தால் உருவாக்கப்பட்ட அந்தப் பதிவு பில்லியன் கணக்கான ஆண்டுகள் தாக்குப்பிடித்து மனிதகுலத்தைத் தாண்டியும் நிலைத்திருக்கலாம்," என்கிறார் அவர்.

ஒருவேளை வேற்றுகிரகவாசிகள் வாயேஜரைக் கண்டடைந்தால் அதில் விநோதமான செய்தி ஒன்றையும் காணலாம்.

1970களில் கம்மிங்ஸஸால் தான் உருவாக்க உதவிய உபகரணம் ஒன்றில் அவரது பெயரின் முதல் எழுத்துக்களை பொறிக்கின்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"அது அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது என்னை அவர்களால் என்ன செய்ய முடியும்," என நகைப்புடன் கூறி முடித்தார்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Saturday, June 6, 2026

முடியவே முடியாது என்ற களங்களில்தான் நம் வெற்றியே: கவிஞர் தணிகை.

 நார்வே செஸ், பிரக்ஞானந்தா, புலியின் குகையிலேயே ...Anand Mahindra


நன்றி: 

பிபிசி தமிழ்.



இந்தப் பக்கம் வைபவ், அந்தப் பக்கம் பிரக்ஞானந்தா ஒன்னும் சொல்லிக்கவே முடியலை போங்க... மிக்க மகிழ்ச்சி. இந்த மாதம் புது மாதம், நல்லா விளையாடுவே...தாய்

நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமரை வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா முதன் முறையாக இந்த தொடரில் சாம்பியன் ஆனார்.

அலிரேசா ஃபிரோஸ்ஜாவை வென்று வெஸ்லி சோ இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பிரக்ஞானந்தா தனது இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றிருக்காவிட்டால் வெஸ்லி சோ சாம்பியன் ஆகியிருப்பார். ஃபிரோஸ்ஜா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

நடப்பு உலக சாம்பியனான இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு தமிழக வீரர் குகேஷை வீழ்த்தியதன் மூலம் நார்வேயைச் சேர்ந்த முன்னணி வீரர் மேக்னஸ் கார்ல்சன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

நார்வே செஸ் தொடரில் ஒரு கட்டத்தில் பிரக்ஞானந்தா ஆறாம் இடத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார். அதாவது, ஆறாம் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வெஸ்லி சோவை (11.5)விடவும் பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகள் பின்தங்கியிருந்தார்.அதன் பிறகு தான் விளையாடிய 4 போட்டிகளிலும் கிளாசிக்கல் ஆட்டங்களில் வெற்றி பெற்று 12-க்கு 12 என்ற வகையில் முழுமையான புள்ளிகளை பிரக்ஞானந்தா வென்றார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 18 புள்ளிகள் சேர்த்த அவர் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார். கடைசி சுற்றுக்கு முன்பு வரையிலும் முதலிடத்தில் இருந்த வெஸ்லி சோவை விட இறுதியில் அவர் ஒரு புள்ளி அதிகம் பெற்று மகுடம் சூடினார்.

இறுதிச் சுற்றில் ஒரே ஒரு ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்தும் கிளாசிக்கல் செஸ் முறையிலேயே தீர்மானிக்கப்பட்டன. வெஸ்லி சோ தனது கிளாசிக்கல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால், பிரக்ஞானந்தாவுக்குப் பதிலாக அவரே பட்டத்தை வென்றிருப்பார்; ஆனால் அவரால் 'ஆர்மகெடன்' (armageddon) சுற்றில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. .

ஆறாவது சுற்றில் வெஸ்லி சோவிடம் தோல்வியடைந்த போது, முதலிடத்தில் இருந்தவரை விட 5.5 புள்ளிகள் பின்தங்கி கடைசி இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா, அதன்பிசாம்பியன் பட்டம் வென்ற பிறகு பேசிய அவர், "நான் செஸ் விளையாட மட்டுமே விரும்பினேன். ஆனால் எப்படியோ அனைத்தும் எனக்குச் சாதகமாக அமைந்தன. நான் அதிக கட்டுப்பாட்டுடன் விளையாடத் தொடங்கியதாக உணர்கிறேன்; அது எப்போதும் ஒரு நல்ல விஷயமாகும்." என்றார்.

பிரக்ஞானந்தா வேகமாக விளையாட முயன்றாலும், தன் தாயின் நம்பிக்கையையும் கொண்டிருந்தார்.

"அலிரேசாவுடனான ஆட்டத்துக்கு முன், ஜூன் ஒன்றாம் தேதி நான் என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், 'இது ஒரு புதிய மாதம், நீ நன்றாக விளையாடுவாய்!' என்று கூறினார். அம்மா எப்போதும் சொல்லும் வழக்கமான விஷயங்களில் இதுவும் ஒன்று; ஆனால் அதன் பிறகு நான் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்றேன். அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்!" என்றார் பிரக்ஞானந்தா.

அதன் பிறகு நடந்த அனைத்துமே செஸ் உலகில் வியக்கத்தக்க ஒன்று. ஃபிரோஸ்ஜா, மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் மற்றும் கீமர் ஆகியோரை பிரக்ஞானந்தா கிளாசிக்கல் ஆட்டங்களில் அடுத்தடுத்து வீழ்த்தினார். மீண்டு வந்து சாம்பியனானது வியக்கத்தக்கது.

பிரக்ஞானந்தாவுக்கு கார்ல்சன் புகழாரம்

பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றது குறித்துப் பேசிய மேக்னஸ் கார்ல்சன், " இது நம்ப முடியாத ஒன்று! மிக முக்கியமான தருணத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதற்கான (clutch) ஒரு சிறந்த உதாரணம் இது. இதேபோன்றதொரு சிறப்பான ஆட்டத்தை என்னாலும் வெளிப்படுத்தியிருக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது; ஆனால் உண்மையில் இது வியக்கத்தக்கது. அவர் ஒரு அற்புதமான போராளி; அதற்கான பலனை அவர் பெறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது." என்று புகழாரம் சூட்டினார்.

மறுபடியும் பூக்கும் வரை

 கவிஞர் தணிகை




Saturday, May 30, 2026

வைபவ் சூரிய வன்சி வரலாற்று நாயகன்: கவிஞர் தணிகை

 வைபவ் சூரிய வன்சி வரலாற்று நாயகன்: கவிஞர் தணிகை




உலகமே கொண்டாடுகிறது, நாமும் கொண்டாடுவோமே. கவாஸ்கர், விஸ்வநாத், கபில்தேவ் போன்ற கனவான்கள் ஆட்டத்தை கேட்டு, பார்த்து இரசித்து அது தொடர வழியில்லாமல் பின் எம்.எஸ்.தோனி வழியாக ஒரு ஆர்வம் ஏற்பட்டு இப்போது மட்டைப் பந்து விளையாட்டைப் பார்க்க ஈர்ப்பு வருகிறதெனில் அது இந்த 15 வயதேயான பால் முகம் கூட மறையாத இந்த வைபவ் சூரிய வன்சியின் ஆட்டம் தான். பார்ப்பது ஒரு வைபவம்தான் இவர் விளையாடுகிறார் என்றாலே அது வைபவம் தான்.


நேற்றும் குஜராத் டைட்டனை வென்று இறுதி ஆட்டத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வென்றெடுப்பார் என எதிர் பார்த்தேன். அது நடக்கவில்லை. அது தான் மட்டைப் பந்தின் தனித்துவம். நாம் எதிர்பார்க்கிறபடி எல்லாம் இந்த விளையாட்டு நடக்காது.


இந்த விளையாட்டை 10 ஓவருக்குள் கொண்டு வர வேண்டும் என வெகு காலத்திற்கு முன்பிருந்தே எழுதியிருக்கிறேன்.


துளி கூட கர்வம் இல்லாமல் எல்லா பந்தையுமே கோட்டுக்கு வெளியே அடித்துப் பார்க்க வேண்டும் என்ற முடிவிலேயே விளையாடுகிறார். பயமறியா இந்த இளம் கன்று. கிறிஸ் காயல் போன்ற மாபெரும் நெடிய உருவமே இவரை ரன் மெஷின் எனும் போது நாம் என்ன சொல்லிதான் பாராட்டி புகழ வேண்டும் எனத் தோன்றவில்லை.


அவருக்கு தமிழ் தெரியாது என்றாலும் நமது ஆவலை வெளிப்படுத்திக் கொண்டு விட்டேன். அவர் தமது வாழ்நாளில் டான் பிராட்மேன் போன்றோரின் சாதனைகளை எல்லாம் முறியடிப்பார், மேலும் இன்னும் சுமார் 20 அல்லது 30 ஆண்டுகள் வரை கூட‌ இவரால் விளையாட முடியும் என நம்புகிறேன்.


வாழ்க...வைபவ் சூரியவன்சி...இவர் விளையாட்டைப் பார்ப்பதே ஒரு இன்பம்.

நன்றி.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Sunday, May 24, 2026

மியாஜகி: கவிஞர் தணிகை

 மியாஜகி: கவிஞர் தணிகை



மியாஜகி ஒரு மாம்பழ வகை. இது ஜப்பான் நாட்டில் இருந்து உலகெங்கும் பரவியுள்ள அரிய இரகம். இது சரியான ஒரு மாம்பழப் பருவ காலம்(சீசன்). அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் கனிகளை ருசித்து விடும் மனிதர்கள் கொடுத்து வைத்தவர்கள். பலாப் பழம் சுவைக்க அறுத்து கிலோ கணக்கில் விற்கப்படுகிறது சுளைகளாக...நீண்ட நாள் கழித்து ரஸ்தாளி வாழைப் பழங்களைக் கண்டேன் பெரிய அளவு ஒன்றின் விலை ரூ.10 என்று அது இயற்கை விளைவா அல்லது உரத்தின் விளைவாய் கட்டி கட்டியாய் இருக்குமா என இனி தான் பார்க்க வேண்டும் 5 பழம் மட்டும் வாங்கி வைத்துள்ளேன் இன்னும் முழுதாக பழுக்க வில்லை... தேன் வாழை, பூ வாழை போன்ற பழங்களை குடல் புண் உபாதை உள்ளவர்  உண்ணும் போது வயிறு மேலும் வேதனை செய்யும் என்பதையும் நினைவில் கொள்க.


நிறைய மாம்பழ விளைச்சல், நிறைய விலையாகாமல் அல்லது தரமில்லாமல் கீழே கொட்டுப் பட்டு வரும் நிலை பார்க்கிறேன் நடைப்பயிற்சிக்கு செல்லும் வழித் தோட்டங்களில்.நல்லவேளை ஒரு முக்கியமான வியாபாரி கடந்த காலத்தில் கடந்த ஆண்டில் மாம்பழம் விற்று கெட்ட பேரை சம்பாதித்துக் கொண்ட எங்கள் நடைப்பயிற்சி தோழர் ஒருவர் இந்த வருடம் மாம்பழம் விற்காமல் தான் உண்டு தன் தொழில் வேலை உண்டு என நல்ல பேரை எடுத்திருக்கிறார். விலை கிலோ 28 எனச் சொல்லப்பட்டாலும் இங்கே எல்லாம் கிலோ தோட்டக்காரர்களே ரூ. 50க்கு என விற்பனை செய்கிறார்கள்.


இந்த மியாஜகி மாம்பழம் ஒரு கிலோ ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் மேலாம். ஒரிஸ்ஸாவில் மல்க்கங்கிரி பகுதியில் (இந்திரா காந்தி பேசிய கடைசிக் கூட்டம் இந்த ஊரில் தாம் நடந்தது.) ஒரு ஆர்வமிக்க விவசாயி ஒரு சமூக சேவகர் வழங்கிய மரக்கன்றை பல வருடங்களாக அக்கறையுடன் சிரமப்பட்டு வளர்த்து இப்போது கனி கொடுக்க ஆரம்பிக்க அதன் மதிப்பு கருதி 24 மணியும் உறங்காமல் கூட பாதுகாத்து வருகிறாராம் திருட்டு போகாமல்.


ஆனால் பாருங்கள் ஒரு வேடிக்கை இந்தப் பழத்தை இவ்வளவு காசு கொடுத்து யார் வாங்குவார்கள்? இந்தியாவில் இங்கு எவரும் வாங்க வழி இல்லை என்பதால் சாதரணமான பழம் போல் போய் விடுமோ என்ற கவலை அவருக்கு... அப்படி என்னதான் அந்தப் பழத்தில் இருக்கிறது அவ்வளவு விலை கொடுக்குமளவு அதன் தரம் நீங்களும் தேடிப்பாருங்கள்  இணையத்திலாவது...



நாய் பெற்ற தெங்கம்பழம்

சூரிய  முட்டை என்ற ஒரு பேரும் உண்டு. EGG OF THE SUN

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.