ரைட்டர் சினிமா விமர்சனம்:கவிஞர் தணிகை
எனது மடலேற்றுக் கட்டு , என்ன புரிகிறதா? தன் முகவரி உடைய கடிதத் தாள் கற்றையில் லட்டர் பேடில் ,,ஆங்கிலத்தில் பொயட், ரைட்டர், ப்ரீலேன்ஸ் ஜர்னலிஸ்ட் கம் சோசியல் ஆக்டிவிஸ்ட்(POET,WRITER,FREELANCE JOURNALIST CUM SOCIAL ACTIVIST) என்று எனது உருவம் மற்றும் காந்தி உருவத்தை அச்சடித்து தந்தார் அந்த நண்பர் அவர் தாம் இந்த வலைப்பூவையும் ஆரம்பித்து தந்தார் அதை எல்லாம் மறப்பதே இல்லை.
ரைட்டர் என்றால், எழுத்தாளர் என்றும் சொல்லலாம், எழுதும் பணி புரிபவர் என்றும் பொருள் இருக்கிறது அதுவும் காவல் நிலையங்களில் அந்த பெயர் தொழிலாக முன் வரிசையில் நிற்கிறது. இப்போதெல்லாம் சினிமா பார்ப்பதில் ஆர்வம் நாட்டம் இல்லை. அது பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டு பேசுவதுமில்லை. சிறை பார்க்க வேண்டும் என நினைத்தேன்,மேலும் வெளி நாட்டு நண்பர் ஊருக்கு வந்திருந்த போது பராசக்தி படத்துக்கு அழைக்கலாம் என்று இருந்து சார் தியேட்டருக்கு எல்லாம் வர விரும்ப மாட்டார் என விட்டு விட்டதாகவும் கூறினார்.
இப்போதெல்லாம் சினிமா பார்ப்பதில்லை நேரம் குறைவு மற்றபடி அவை விரயம் என்றே தோன்றுவதால் செல்வதால்.
ஏன் எனில் ரஜினிகாந்த், கமல், ஏன் இளையராஜா போன்றோர் கூட மது அருந்தும் மானிடர்தாம் என்பது அறிய முடிந்ததால் அவர்கள் தேவர்கள் அனுப்பி வைத்த தூதர்களாக எண்ணி இருந்ததும் உண்டு வெளித்தோற்றத்தை வைத்து அண்ணாந்து பார்த்தபடி...மதுவுக்கு எதிரான போராட்ட களம் கண்ட தோற்றுப் போன காந்திய சிந்தையானர்களில் நானும் ஒருவன்.
1980களில் தொட்டதெல்லாம் கவிதைத்தெறிப்பு என்னிடம் கண்ட எனது தோழர்களும், நண்பர்க்ளும் ஏன் காந்த காந்திய மூத்த இயக்கத் தோழர்களும் கூட சினிமாத் துறைக்குச் செல்லுங்கள் மிகப் பிரபலமான பெரிய ஆளாய் வருவீர் என்பார்கள்...நல்ல வேளை நான் அந்த தவறை செய்யவில்லை. எனது இலக்கு நோக்கி நல்லபடியாக நகர்ந்திருக்கிறேன். என்னால் முடிந்தளவு நாட்டுக்கும் வீட்டுக்கும் செய்து விட்டதாகவே எண்ணுகிறேன்.
இப்போது ஒரு செய்தி பார்த்தேன் சிவாஜி ராவ் கெய்க்வாட் அவர்கள் 45 பவுன் எடுத்து உரியவரிடம் சேர்த்த அந்த பெண் துப்புரவுத் தொழிலாளியை அவர் தம் குடும்பத்தை அழைத்து கட்டி அணைத்து அளவளாவி 2 பவுன் செயினை பரிசளித்ததாக, முதல்வரும் ஒரு இலட்சம் கொடுத்துள்ளார் அது அரசியல் தளம். மற்றபடி ரஜினிகாந்த் என்னும் சிவஜி ராவ் கெய்க்வாட் அவர்களுக்கு விஜய் தேவலை அந்த ஒரே ஒரு விடயத்தில் துணிந்து அரசியலுக்கு தம் நலத்தை பின்னுக்குத் தள்ளி வந்து விட்டதால். மற்றபடி அவருக்குத் அந்தத் தகுதி, அரசியல் எல்லாம் தெரியுமா என்றால் எல்லாம் மைனஸ்.
கடந்த ஞாயிறு அன்று எண்ணுகிறேன், கலர் தொலைக்காட்சி channel , கலைஞர் மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது அளித்த அதே தொலைக்காட்சியில்...அதை சிறிது நேரம் நேர்படப் பேசு மற்றும் சிறகடிக்க ஆசைக்காக பயன்படுத்தி வருகிறோம் இணைய வலைதளச் செலவு நீங்கலாக அதற்கு வேறு 130 ரூ செலவு மாதம்...
அதில் சிறிது நேரம் சமுத்திரக் கனி நடித்து, ஜேக்கப் இயக்கி பா இரஞ்சித் தயாரித்த இந்த ரைட்டர் படம். ஒர் சேனலை விளம்பரம் விரும்பாமல் மாற்றி பார்க்க...ஓடிக்கொண்டிருந்ததை விட்டு வெளி வராமல் மனம் தைத்தது.பார்த்து முடிக்கும் போது மணி 11.30 இரவு ஆகி இருந்த்து உறக்கம் குறைந்தது.அப்புறம் தேடலில் அந்தப் படம் 2021லேயே வெளி வந்த படம் அதை யூ ட்யூப் சேனலிலேயே இலவசமாகக் காணலாம் என்றும் தெரிந்தது
எந்தத் துறையையுமே ஒட்டு மொத்தமாக நாம் கெட்டது, நல்லது என பார்க்க முடியாது பொதுவாகவே மனிதர்களுக்குரிய தனித் தன்மையுடன் மட்டுமே எவற்றையும் பார்க்க வேண்டும் என்பதற்கேற்ப இந்த சமுத்திரக் கனி ரைட்டர் கேரக்டர் மிக அருமை. படம் மிக இயல்பாக வந்திருக்கிறது ஆர்ப்பாட்டம் துளியின்றி. அதனால் எவரும் அதிகம் பார்த்திருக்க மாட்டார் என்றே எண்ணுகிறேன். வசூல் பற்றியும் வெற்றி தோல்வி பற்றியும் இந்தப் படம் பெற்றி பெரிதான செய்தி ஏதுமில்லை.
என்ன இது அநியாயம் ஒரு கல்லூரி மாணவனைப் பிடித்து காரணமில்லாமலே சிறையிலடைத்து என்கவுண்டரும் செய்கிறார்களே, என்று பார்க்கப் போனால் அதில் காவல்துறையினரின் தற்கொலை மரணங்கள் பற்றி தமது முனைவர் படிப்புக்காக ஆய்வு செய்யும் மாணவராக அவர் தேடப்பட்ட குற்றவாளி போல சித்தரிக்கப் பட்டு கொலை செய்யப் படுகிறார். அதில் ஒரு நியாயமான சாதுவான இந்த தங்கராஜ் என்னும் சமுத்திரக் கனி ரோல் எப்படி அதை அணுகுகிறது என்பதே படம்...வலையில் அகப்பட்ட எலி போல் காவல் துறைப் பணியில் சிக்கிய இந்த கேரக்டர் அல்லாடுகிறது ஒரு நீதியும் செய்து முடிக்கிறது. எல்லாமே இயல்பாக இருக்கிறது அதிகம், குறைவு என்பதெல்லாம் இல்லை.
முடிந்தால் ஒரு முறை பாருங்கள். மிக நல்ல படம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.