எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் பூலோக மன்னர்: கவிஞர் தணிகை
இரு பெரும் சம்பவங்கள் மனக்குளத்தை பாதிப்புக்குள்ளாக்கி விட்டன.பூமி திரும்பி வர முடியாத ஊறு விளைவுகளுடன் பயணம் செய்த படி இருக்கிறது. அதன் பயணத்தில் இன்னும் பாதி கால அளவே பாக்கி இருக்கிறது.
உடல் சொல்லொணா அதிசய அமைப்புகளுடன் இயங்கி வருகிறது அதன் இயக்கம் (உயிர்) இருக்கும் வரை.
52% இந்த வாக்களிப்பு மூலம் வந்த தலைவன் வேண்டாம் என்று சொன்ன பிறகும் அமெரிக்காவின் துணைத்தலைமையும், மந்திரிசபையும் முடிவுக்கு வந்தாலன்றி அந்த இரத்தக் காட்டேறி காட்டுமிராண்டித் தனமான தலைமையை மாற்ற வழி இல்லையாம்.அது அந்த நாட்டின் சட்ட திட்டம். அது பூமிப் பந்தையே ஒரு புரட்டு புரட்டிக் கொண்டிருக்கிறது.
அரசுப் பணி, ஆட்சி அதிகாரம் என்பதில் எல்லாம் மக்களுக்கு என்று சொல்லப் பட்டாலும் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள் இருக்கிறது.
சாத்தான் குளம் தீர்ப்பை அனைவரும் பாராட்டி வருகையில் அதில் ஒளிந்துள்ள அந்த குற்றவாளிகள் எனச் சொல்லப்பட்ட இரைகளைப் பார்க்காமலேயே சிறைக்கு கொண்டு சென்று ரிமான்ட் செய்க எனக் கருத்தளித்த அரசு மருத்துவரின் பொறுப்பின்மையையும், சரியாக பணி புரியாமையையும், பார்க்காமலேயே கொரானா எனப் பயமுறுத்தி பார்க்க விடாமலேயே அந்த நீதிபதியையும் குழப்பி இரைகளை சிறைக்கு கொண்டு சென்ற போது அதன் மேல் கவனம் செலுத்தி தமது பணியை ஒழுங்காக பணி செய்யாத மாஜிஸ்ட்ரேட் மற்றும் அதிலிருந்து தொடங்கி இந்த சம்பவம் உடல் நலக் குறைவால் ஏற்பட்டது காய்ச்சலால் ஏற்பட்டது என மாநிலம் ஆண்ட முதல் மந்திரி வரை அப்படிப் பட்ட அரசுகளைத் தோற்றுவிக்கும் மக்கள் இன்ன பிற தேர்தல் ஆணையம், நீதி, நிர்வாகம் சார்ந்த அமைப்புகள் வரை யாவுமே கறைபட்டதாகவே இருப்பதை இது போன்ற நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. அனைவரையும் தண்டிப்பதென்றால் யார் தாம் இவர்களை எல்லாம் தண்டிப்பது...சிந்தித்தபடி கேட்டுப் பாருங்கள்...
அதில் ஜான் மைக்கேல் டி குன்ஹா போன்று பாரதி தாசன், மற்றும் முத்துக் குமரன் நீதிபதிகள் இந்த தற்போதைய 5 ஆண்டு 9 மாத வழக்கில் பெருமை பெற்றுள்ளார்கள். ரேவதி போன்ற காவலர்கள் உண்மையைச் சொல்லத் தான் முடிந்ததே அல்லாமல் சம்பவத்தை தடுக்க முடியவில்லை அப்பேர்ப்பட்ட அமைப்பு.அவர்கள் கொண்டு சென்ற சிறை மருத்துவர் தம் பணியை நிறைவு செய்து மருத்துவ மனையில் அனுமதிக்கச் சொல்லி அறிவுறுத்தி அவரது செம்மையை உறுதி செய்தும் இருக்கிறார்.
இதற்கு மேலும் இவர்களுக்கு உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற மேல் முறையீடுகள் தேவையா ? தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப் பட்ட, மறைக்கப் பட்ட நீதி என ஒருபுறம் சொல்லி நீதியின் நேர்மையை பாராட்டிக் கொண்டு மறுபுறம் அதற்கு அடி வெட்டு வெட்டிக் கொண்டிருக்கும் அமைப்புகள் அதில் வேறு அம்பேத்கார் நீதியைக் குறை சொல்லும்...
எனவே நமது கருத்து யாதெனில் ஒருவர் எப்படிப்பட்ட பதவி, அதிகார அமைப்புகளில் இருந்த போதும் அவரவர் செயல்கள் தாம் அவர்களுக்கு மதிப்பு கூட்டுவதாக இருக்க வேண்டுமேயன்றி பதவிகள் அல்ல.எனவே மக்கள் என்ற வட்டத்தில் அனைவரும் அடக்கம். எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை ஆம் எல்லோரும் பூலோக மன்னர். பட்டத்துக்கும் பதவிக்கும் எப்படி வேண்டுமானாலும் வந்து விடுகிறார்கள். பாவிகள்.
அந்த நிலையை,பதவிகளில் இருந்தாலே அவர்கள் பெரியோர்,அமைப்புகளில் இருந்தாலே அவர்கள் உயர்ந்தோர், தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டாலே அவர்கள் கடவுள் என்ற கருத்தை மக்கள் கொண்டு மாந்தர்களை மதிக்கும் வரை எதுவுமே நடக்கும் இப் புவியில்.
அரசுப் பணியில் இருந்து விட்டாலே அரசுப் பணிக்கு சென்று விட்டாலே அவர்கள் மக்கள் அல்ல அந்த வட்டத்தில் வருவோர் அல்ல என்ற கோடுகள் இருக்கும் வரை எந்தக் கேடுகளும் தொடரும் இதற்கு மாநிலமோ, நாடோ, உலகோ விலக்கல்ல. புவியின் பரப்பு என்ன செய்யும்?ஆள்வோர் செயல் அல்லவா யாவும்?
காவல் நிலையமா? கொலைக் களமா?
காவல் துறை நண்பனா? பகைவனா?
காவல் துறை பாதுகாக்கவா? பாதகம் செய்யவா?
எதைச் சொல்லி நாம் நமது இளந் தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பது?
உன்னையே நீ அறிவாய்! உண்மையை யார் அறிவார்?
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.