Wednesday, April 8, 2026

எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் பூலோக மன்னர்: கவிஞர் தணிகை

 


எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் பூலோக மன்னர்: கவிஞர் தணிகை


இரு பெரும் சம்பவங்கள் மனக்குளத்தை பாதிப்புக்குள்ளாக்கி விட்டன.பூமி திரும்பி வர முடியாத ஊறு விளைவுகளுடன் பயணம் செய்த படி இருக்கிறது. அதன் பயணத்தில் இன்னும் பாதி கால‌ அளவே பாக்கி இருக்கிறது.


உடல் சொல்லொணா அதிசய அமைப்புகளுடன் இயங்கி வருகிறது அதன் இயக்கம் (உயிர்) இருக்கும் வரை.


52% இந்த  வாக்களிப்பு மூலம் வந்த தலைவன் வேண்டாம் என்று சொன்ன பிறகும் அமெரிக்காவின் துணைத்தலைமையும், மந்திரிசபையும் முடிவுக்கு வந்தாலன்றி அந்த இரத்தக் காட்டேறி காட்டுமிராண்டித் தனமான தலைமையை மாற்ற வழி இல்லையாம்.அது அந்த நாட்டின் சட்ட திட்டம். அது பூமிப் பந்தையே ஒரு புரட்டு புரட்டிக் கொண்டிருக்கிறது.


அரசுப் பணி, ஆட்சி அதிகாரம் என்பதில் எல்லாம் மக்களுக்கு என்று சொல்லப் பட்டாலும் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள் இருக்கிறது.


சாத்தான் குளம் தீர்ப்பை அனைவரும் பாராட்டி வருகையில் அதில் ஒளிந்துள்ள அந்த குற்றவாளிகள் எனச் சொல்லப்பட்ட இரைகளைப் பார்க்காமலேயே சிறைக்கு கொண்டு சென்று ரிமான்ட் செய்க எனக் கருத்தளித்த அரசு மருத்துவரின் பொறுப்பின்மையையும், சரியாக பணி புரியாமையையும், பார்க்காமலேயே கொரானா எனப் பயமுறுத்தி பார்க்க விடாமலேயே அந்த நீதிபதியையும் குழப்பி இரைகளை சிறைக்கு கொண்டு சென்ற போது அதன் மேல் கவனம் செலுத்தி தமது பணியை ஒழுங்காக பணி செய்யாத மாஜிஸ்ட்ரேட் மற்றும் அதிலிருந்து தொடங்கி இந்த சம்பவம் உடல் நலக் குறைவால் ஏற்பட்டது காய்ச்சலால் ஏற்பட்டது என மாநிலம் ஆண்ட முதல் மந்திரி வரை அப்படிப் பட்ட அரசுகளைத் தோற்றுவிக்கும் மக்கள் இன்ன பிற தேர்தல் ஆணையம், நீதி, நிர்வாகம் சார்ந்த அமைப்புகள் வரை யாவுமே கறைபட்டதாகவே இருப்பதை இது போன்ற நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. அனைவரையும் தண்டிப்பதென்றால் யார் தாம் இவர்களை எல்லாம் தண்டிப்பது...சிந்தித்தபடி கேட்டுப் பாருங்கள்...


அதில் ஜான் மைக்கேல் டி குன்ஹா போன்று பாரதி தாசன், மற்றும் முத்துக் குமரன் நீதிபதிகள் இந்த தற்போதைய 5 ஆண்டு 9 மாத வழக்கில் பெருமை பெற்றுள்ளார்கள். ரேவதி போன்ற காவலர்கள் உண்மையைச் சொல்லத் தான் முடிந்ததே அல்லாமல் சம்பவத்தை தடுக்க முடியவில்லை அப்பேர்ப்பட்ட அமைப்பு.அவர்கள் கொண்டு சென்ற சிறை மருத்துவர் தம் பணியை நிறைவு செய்து மருத்துவ மனையில் அனுமதிக்கச் சொல்லி அறிவுறுத்தி அவரது செம்மையை உறுதி செய்தும் இருக்கிறார்.


இதற்கு மேலும் இவர்களுக்கு உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற மேல் முறையீடுகள் தேவையா ? தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப் பட்ட, மறைக்கப் பட்ட நீதி என ஒருபுறம் சொல்லி நீதியின் நேர்மையை பாராட்டிக் கொண்டு மறுபுறம் அதற்கு அடி வெட்டு வெட்டிக் கொண்டிருக்கும் அமைப்புகள் அதில் வேறு அம்பேத்கார் நீதியைக் குறை சொல்லும்...


எனவே நமது கருத்து யாதெனில் ஒருவர் எப்படிப்பட்ட பதவி, அதிகார அமைப்புகளில் இருந்த போதும் அவரவர் செயல்கள் தாம் அவர்களுக்கு மதிப்பு கூட்டுவதாக இருக்க வேண்டுமேயன்றி பதவிகள் அல்ல.எனவே மக்கள் என்ற வட்டத்தில் அனைவரும் அடக்கம். எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை ஆம் எல்லோரும் பூலோக மன்னர். பட்டத்துக்கும் பதவிக்கும் எப்படி வேண்டுமானாலும் வந்து விடுகிறார்கள். பாவிகள்.


அந்த நிலையை,பதவிகளில் இருந்தாலே அவர்கள் பெரியோர்,அமைப்புகளில் இருந்தாலே அவர்கள் உயர்ந்தோர், தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டாலே அவர்கள் கடவுள் என்ற‌ கருத்தை மக்கள் கொண்டு மாந்தர்களை மதிக்கும் வரை எதுவுமே நடக்கும் இப் புவியில்.


அரசுப் பணியில் இருந்து விட்டாலே அரசுப் பணிக்கு சென்று விட்டாலே அவர்கள் மக்கள் அல்ல அந்த வட்டத்தில் வருவோர் அல்ல என்ற கோடுகள் இருக்கும் வரை எந்தக் கேடுகளும் தொடரும் இதற்கு மாநிலமோ, நாடோ, உலகோ விலக்கல்ல. புவியின் பரப்பு என்ன செய்யும்?ஆள்வோர் செயல் அல்லவா யாவும்?


காவல் நிலையமா? கொலைக் களமா?

காவல் துறை நண்பனா? பகைவனா?

காவல் துறை பாதுகாக்கவா? பாதகம் செய்யவா?


எதைச் சொல்லி நாம் நமது இளந் தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பது?



உன்னையே நீ அறிவாய்! உண்மையை யார் அறிவார்?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Monday, March 30, 2026

ஆனந்த விகடனில் நாகசந்திரனின் மேட்டூர் அணை ஓசை: கவிஞர் தணிகை

 ஆனந்த விகடனில் நாகசந்திரனின் மேட்டூர் அணை ஓசை: கவிஞர் தணிகை



அன்பு நண்பர் தோழர் நாகு என பெயர் சுருக்கம் உடைய நாகசந்திரன் மேட்டூரை சொந்த ஊராக கொண்டவர். அந்த தாம் பிறந்த ஊருக்கு தமது வாழ்நாளின் அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணி மிக்க முயற்சியுடன் சென்னை ஆவணக் காப்பகத்தில் எல்லாம் தேடல் நடத்தி ஒரு தொடரை அணை ஓசை என வியழக்கிழமைகளில் வெளிவருமாறு பல வாரங்களாக செய்து வருகிறார், நல்ல புள்ளி விவரங்கள், கட்டுரை மிக முக்கியமான ஆவணமாகும் மேட்டூர் அணை அல்லது ஸ்டேன்லி அணை பற்றி தேடல் நடத்துவோர்க்கு எதிர்காலத்தில்.


ஆனந்த விகடனின் இணையப் பக்கத்தில் அந்தப் பதிவு பெறும் இடத்திற்கு சென்று தமது கருத்துகளை பதிவு செய்யச் சொல்லுகிறார். ஆனால் பாருங்கள் நாகு அதில் சற்று சிரமம் இருப்பதாக எனக்குப் பட்டது எனவே இந்தப் பதிவு.


இவர் கல்லூரி கால நண்பர், எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லா மனிதர். நெசவுத் தொழிலை அடிப்படையாக வைத்த குடும்பத்தின் வாரிசு இப்போது இந்த நூல்களையும் நெய்து பார்க்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே சில  நூல்களையும் செய்துள்ளார்.


கல்கியின் அலை ஓசை போல இந்த நாகுவின் அணை ஓசையும் என்றும் சுவாசிக்கட்டும் புகழ் பெறட்டும்!


வாழ்த்துகள் அன்பரே. ஆசிகள்.வாழ்க வளர்க.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, March 23, 2026

MAR.23.2026 பிறந்த நாள் கொண்டாட்டம் இரத்து: கவிஞர் தணிகை

 பிறந்த நாள் கொண்டாட்டம் இரத்து: கவிஞர் தணிகை


மார்ச்:22 உலக தண்ணீர் தினம், மார்ச்:23 பகத்சிங் நினைவு தினம் மற்றும் தணிகை தினம்.



ஒன்றுமறியா அப்பாவிக் குழ‌ந்தைகள் ஈரான் பள்ளியில் கொன்று குவிக்கப் பட்ட ஈனச் செயல் புரிந்த மனித குலத்தின் அற்ப நிகழ்வுகள், உலகே அபாய விளைவுகள் சந்தித்து வரும் வேளையில் தனி மனித கொண்டாட்டத்திற்கு ஒரு தேவையுமே இருப்பதாகத் தெரியவில்லை.


அட இத பார்ரா, கவிஞர் (தணிகை) கூட தமது 65 ஆம் வயதில் அடி எடுத்து விட்டாரே என்று அவரே ஆச்சரியப் பட வேண்டியதிருக்கிறது ஏன் எனில் அது ஒரு தனிப்பட்ட விசை, சமூகத்தின் நல்லொழுக்க நல்வழிக்கு வித்திடும் விதை.

வணங்குவது, நன்றி தெரிவிப்பது, சிறப்பு செய்வது யாவுமே எளிமையே

இந்த நாளின் ஒரு சிறு கூறாக பிறப்பித்த சுப்ரமணிய (முதலியார்) ஊருக்குள் அப்படிச் சொல்லித்தான் வழக்கம் அதை சாதியக் குறியீடாக கொள்ளத் தேவையில்லை, அவருக்கும் தெய்வானை(தெவானை) அம்மாவுக்கும் இந்த நாளில் அஞ்சலி மற்றும் நன்றி செலுத்த வேண்டியிருப்பதை குறியிடவே இந்தப் பதிவு.மற்றபடி மேற்கத்திய கலாச்சார மூழ்குதலில் கேக் வெட்டி எப்போதுமே கொண்டாடிய நிகழ்வெல்லாம் அவரிடம் இல்லை, அவர் விரும்புவதில்லை. தந்தை தமது 65 ஆம் வயதில் உயிர் நீத்து இயற்கை எய்த, தாயுடன் அவர் அதன் பின் 20 ஆண்டு வாழ்ந்து அதன் பின் 2006ல் அவரும் விடைபெற்றுச் சென்று விட‌ அதன் பின்கூட 20 ஆண்டுகள் ஓடி விட்டன. எனவே குறிப்பிடப் பட வேண்டிய வாழ்வு அவர் வாழ்வில் 1986,2006,இப்போது 2026.


இந்த நாளில் உலகு மீண்டும் அமைதி அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தமது 42 ஆம்  ஆண்டு தியான வாழ்வில் இதுவும் ஒரு நாள் அவ்வளவே என்று முடித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. நல் மழைப் பொழிவு இருக்கட்டும், புவியெலாம் விளைச்சல் பெருகி இந்தக் கொடும்பாவிகள் எல்லாம் சாகட்டும் கொல்லை/கொள்ளை மழை பேயட்டும் என்று வேண்டி விடை பெற வேண்டிய தருணத்தில் உலகெலாம் எல்லா பொருட்களும் விலை ஏறி மக்களுக்கு கடும் பஞ்சத்தை இந்த நாசகாரப் பேய்கள் ஏற்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் மக்களுக்கு மத்தியில் நிலவுவதை இயற்கை சீர் செய்யும் என்று நம்புவோமாக!


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Friday, March 20, 2026

மழை நேற்று நள்ளிரவில் இரண்டாம் கோடை மழை 19/20.03.2026 :கவிஞர் தணிகை

 மழை  நேற்று நள்ளிரவில் இரண்டாம் கோடை மழை 19/20.03.2026 :கவிஞர் தணிகை



நானும் விவசாயிதான்.தம்பி கார்த்தி வெள்ளையன் சொன்ன மாதிரி களை எல்லாம் பிடுங்கினால் அந்த செடிகள் பரப்பிலேயே இட்டு விடுகிறேன் அப்போது நீர் ஆவியாவது தடுத்து, நீர் தேவையைக் குறைத்து நமது நீர் கொடுக்க வேண்டிய பணியை சற்று மெத்தனப் படுத்தலாம் என்ற யோசனை நன்றாக இருந்ததால் அப்படியே செய்துள்ளேன்.


மேலும் சாம்பல் பை நிறைய சேர்த்து நம்மாழ்வார் மற்றும் இந்த தம்பி சொன்ன மாதிரி கோலம் போடும் தகரத் குப்பியின் வாயில் வைத்து தெளிக்கிறேன் அதனால் அந்த துவாரங்களில் இருந்து நன்கு வீசப்படும் சாம்பல் எரு பயனளிக்கிறது. கை கொண்டு வீசினாலும் நன்றாகவே பரப்பப் படுகிறது.


எனது தியான வாழ்வுக்கு இது 42 ஆம் ஆண்டு. சில பல நாட்களாக கடும் கோடை, எனவே வேண்டாம் என்கிற அளவு மழை பொழிவு வேண்டு(ம்) என எமது தியான மைய சுவர் எழுத்துகளிலும் தியான நேரத்திலும் பிரார்த்தனை வைத்தோம், காக்கா ஒக்கார பனம்பழம் விழுந்த கதை என்று வைத்துக் கொண்டாலும் சரி 

...ஆனாலும் மற்றொரு ஆசிரியையின் தந்தை படுத்த படுக்கையாய் மரண விளிம்பில் இருந்த போது அந்த உயிர் பட்ட வேதனை சகிக்காது விரைவில் செல்ல வேண்டும் என கடந்த அமாவாசை நாட்களில் இரு முறை தியானத்தில் பிரார்த்தனையில் வைத்தோம் அதுவும் நடந்தது. அட வேற யாரும் சொல்லலைன்னாலும் நாம்பளாவது நம்ம பெருமையை சொல்லி வைப்போமே... ஆக 2 பிரார்த்தனைகள் இது வரை பலித்து விட்டது.


வயது முதிர முதிர மழையின் பெருமை, ஆவல், மகத்துவம் எல்லாம் தெரிந்து மகிழ்வு, சிறப்பு, நன்றி என்று சொல்லத் தோன்றுகிறது. கொண்டாடத் தோன்றுகிறது.நேற்று முன் தினம் இரவில் இரண்டு உழவு அல்லது இரண்டு வள்ளம் பெய்தது பேசு பொருளானது.


ஆனால் நேற்று நள்ளிரவு 11.57க்கு ஆரம்பித்தது பாருங்கள் ஒரு ஊழித்தாண்டவக் காற்று அதிசயமாக இரண்டு வாழை வைத்திருக்கிறேன் அந்தக் குலை வாழை எல்லாம் பிய்த்து தலையாட்டி தூக்கி விசிறி எறியப் போகிறேன்  பார் என சுழட்டி சுழட்டி அப்படி ஒரு பெரும் காற்று.ஆனால் நள்ளிரவில் தாம். எவருக்குமே தொல்லையில்லாமல் தாம், கண்ணாடி ஜன்னல்களை மூடினால், ஊய், ஊய் என எதற்கு மூடினாய் என ஒரே சத்தம் வேறு....


அது மட்டுமல்ல அது பெரும் மழையை இந்தக் கோடையில் இரண்டாம் முறையாக பெய்ய வைத்து விட்டது. விவசாயிகளுக்கு பெரும் கொண்டாட்டம் எனக்கும் தான்.


எனது துணைவியார் வண்டி நிறுத்தும் இடத்தில் இருந்த கோலப்பொடி எல்லாம் நனைந்து விட்டது,துணி மிதி அடிகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டது,கடலை மாவுக் கிண்ணத்தை தூக்கி விசிறி வேறு இடத்தில் வைத்து அதில் நீர் நிரப்பி விட்டது,காய வைத்திருந்த துணிகளை எல்லாம் நனைத்து தூக்கி எறிந்து விட்டதே.... இப்படி அவருக்கு ஆயிரம் கவலை


அவரவரக்கு ஆயிரம் கவலை ஆனால் மழையும் நீரும் அத்தனையும் நீக்கும்.


நிலத்தடி நீர் பெருகும், தாவரங்கள் செழிக்கும், புவிச் சூடு தணியும் எமக்கு பெரு மகிழ்வு...நேற்று அடித்த வெயில் உணர்த்தியது இன்று இரவுக்குள் மழைப் பொலிவு இருக்கும் என...அது பொய்க்கவில்லை. இயற்கை பொய்ப்பதில்லை, மனிதர்கள்தாம்....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Tuesday, March 17, 2026

மனித மாண்புகளுக்காக விருதுகள் கொடுக்கப் படுவதில்லை: கவிஞர் தணிகை

 மனித மாண்புகளுக்காக விருதுகள் கொடுக்கப் படுவதில்லை: கவிஞர் தணிகை



வைரமுத்து...ஞானபீடம்,தமிழ்செல்வன்...சாகித்ய அகாடமி, அகிலன்,சின்மயி,ஜெயமோகன் 


வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது கொடுக்கப் பட்டதற்கு தமிழ் கூறும் நல்லுலகத்திலிருந்தே விமர்சனங்கள் வந்து விட்டன.சின்மயி ஒரு பக்கம், ஜெயமோகன் ஒரு கோடி பரிசையே அறிவித்து தமது மாறுபட்ட நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.அத்தோடு போய் சேர்ந்து விட்ட அகிலன் கூட அதற்கு தகுதியானவர் அல்ல என பேசப்படுகிறது.ஆட்களை வைத்து காய் நகர்த்தி பெற்று விடுகிறார்கள் என்ற குற்றச் சாட்டு வேறு.


தமிழ்செல்வன் பற்றி எதிர்மறை விமர்சனம் நானறிந்த வரை சாகித்ய அகடமி விருது பற்றி வரவில்லை.


எனக்கு சொல்லத் தோன்றியது என்ன எனில் பெரும்பாலும் எழுத்தாளர்கள், பிரபலமான கவிஞர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பலஹீனமானவர்களே.குறைபாடு உள்ளவர்களே. மனித மாண்பு என ஆய்ந்தால் ஒன்று அவர்கள் ஏதோ ஒரு போதை அல்லது மதுவுக்கு தம்மை இழந்து போனவர்களாக இருந்து சென்று விடுகிறார்கள்


கண்ணதாசன் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. ஆனால் அவர் எளிமையான எழுத்துகள் காலம் கடந்து நின்று அவர் பேர் சொல்கின்றன. நா.முத்துக் குமார் உட்பட மது வேட்கை கொண்டிருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். வைரமுத்து சின்மயி புகை எப்போதும் தீக் கங்குகளைக் கொண்டதாகவே இருக்கிறது.


அவர்களை எழுத்தாளர்களை கவிஞர்களை காலம் வீழ்த்திய பின்னும் அவர்கள் எழுத்துகள் இருக்கின்றன. எனவே மனித மாண்புகளை வைத்து இது போன்ற விருதுகள் கொடுக்கப் படுவதில்லை அவர்கள் எழுத்துக்களுக்கே என்பது எனது தாழ்மையான கருத்து.


உண்மையில் சொல்லப் போனால் வைரமுத்து ஒரு பள்ளி நிகழ்வில் நான் நேரிடையாகக் கண்டது: அவர் புத்தகம் வாங்க வில்லை என வேறு புத்தகத்தில் கையெழுத்து கேட்ட பள்ளிச் சிறுவனுக்கு போட மாட்டேன் எனச் சொன்னவர்தான் இன்று அவரது விருதை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும், தமிழ் மண்ணுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சமர்ப்பித்துள்ளார். எல்லாம் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் சென்று விட்டால் வியாபார மயம்தான் உலகெலம் பெட்ரோலாக இருந்தாலும், நூல்களாக இருந்த போதும்...


என்னைப் பற்றி ஒரு உயர் சிந்தனையாளர் சொல்வார், கவிஞர் என்றால் இவர் எல்லாரையும் போன்ற கவிஞர் அல்ல எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர், தொட்டால் சுடும் நெருப்பு வார்த்தைகள் எரிமலை வெடிப்பு என்றெல்லாம் சொல்வார்


மதுவைக் குடித்து விட்டு மகத்துவமான சமுதாயத்திற்காக மாறுபாட்டிற்காக வாள் வீசுகிறேன் என்பதே வெறும் வாய் வீச்சே...அது யாராக இருந்த போதும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Monday, March 16, 2026

மீச்சிறு உயிர்களும் மாபெரும் சர்வதேச சர்வாதிகாரமும்: கவிஞர் தணிகை

 மீச்சிறு உயிர்களும் மாபெரும் சர்வதேச சர்வாதிகாரமும்: கவிஞர் தணிகை



மருத்துவர் P. வெள்ளையன் R.H.M.P ஒரு ஹோமியோபதி பதிவு பெற்ற மருத்துவர், பதிவு எண்:13406. தலையெலாம் வெள்ளை நரை உடன் குழந்தை உள்ளம் அவர் இந்தக் கீழ் காணும் ஒரு பாடலை பதிவு செய்ய வேண்டுகோள் வைத்தார் அவருக்காக இந்தப் பதிவு:


எறும்புகளின் ஓய்வில்லா உழைப்பு, அதன் ஒற்றுமை மற்றும் மனிதர்களின் இன்றைய நிலை பற்றிய இந்தப் பாடலை எழுதியதாக சொல்கிறார்.


சின்ன சின்ன எறும்பு(ம்)கூட 

சும்மா சும்மா இருக்குதா?

அது சோம்பேறியா தூங்கிக் கிடந்து

பொழுதை வீணாக் கழிக்கிதா?   (சின்ன)


தேடித் தேடி இறையைத் தேடி

ஓடி ஓடி அலையிது...

கெடைச்ச இறையைப் பத்திரமா

தன் இருப்பிடத்தில் சேர்த்துதா(ன்)

ஒன்னு சேர்ந்து தின்னுது

ஒற்றுமையா வாழுது.... மனித‌

இனத்தில் பேதம் வந்து....இன்னைக்கு

அது மாறிப் போச்சே பாரது    ( சின்ன)


இம்மாம் பெரிய உடம்பிருந்தும்

சும்மாத் தின்னு கொழுக்கறையே‍   அட

கொழுத்த உடம்பை இளைக்க வைக்க 

மருந்து இப்ப எடுக்கறையே!


மழை வெள்ளம் வரும் பின்னே

தெரிஞ்சு அதை முன்னே...எறும்புகள்

தம் சின்னஞ்சிறு செல்லங்களை

மேடான இடம்தேடி அங்கே பாதுகாப்பு பண்ணுது

இந்த எச்சரிக்கை இல்லா மனித வாழ்வில்

எத்தனையோ துன்பம் நேருது  (சின்ன)

    மரு. வெள்ளையன் R.H.M.P


வல்லரசுகள் எப்போதும் ஏதாவதொரு வடிவத்தில் சர்வாதிகாரம் செய்து வருகின்றன உலகையே ஆட்டி வைக்கின்றன. இங்கிலாந்து ஏகாதிபத்தியம், ஜெர்மன்ஹிட்லர்+இத்தாலி முசோலினி, அதன் பின் அமெரிக்கா ஏன் சீனாகூட கொரானாக் காலத்தில்...இப்போது மறுபடியும் அமெரிக்கா...உலகிலேயே அமெரிக்காதான் அதிக எண்ணெய் தயாரிப்பு முதல் நாடாம். இந்தியா  எண்ணெய் நுகர்வில் முதல் நாடு. எங்கே எண்ணெய் வாங்க வேண்டும் என்று அண்ணன் தான் தீர்மானிக்கிறான். அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்து,கனடா,வெனிசுலா,(ஈராக்), ஈரான்,இப்படி எல்லா நாடுகளையும் மிரட்டி வருவது பற்றி அச்சுறுத்துவது பற்றி ஆளுகைக்கு கீழ் கொண்டு வருவது பற்றி எந்த நாடும் தலைவரும் ஐ.நாவும் வாய் திறக்க மறுக்கின்றன.அடி பணிய மறுத்த ஸ்வீடன்,மற்றும் யூசுப் மலாலா நோபெல் பெற்ற சிறுமி விதி விலக்கு.


 இந்திய தமிழ் நாட்டில் டொனல்ட் ட்ரம்புக்கு யாரோ ஒரு நபர் ஒரு கோவில் கட்டியதாக எப்போதோ படித்த நினைவு.செய்தி கடந்த நினைவு .அவர் அவரது நாட்டிலேயே பாலியல் புகாருக்காக‌ தண்டிக்கப் பட்டதோடு மட்டுமல்ல இழப்பீடையும் வழங்கி வழக்கிலிருந்து வெளி வந்தவர் என்பது அனைவரும் ஏன் உலகறிந்ததே. அவர் நோபெல் கேட்டார் ஏன் கொடுக்கப் பட வில்லை என்பதை உங்கள் வசமே விட்டு வைக்கிறேன்.எப்ஸ்டீன் விவகாரத்தில் பில்கேட்ஸ் தமது அறக்கட்டளை ஊழியர்களிடம் பொது மன்னிப்பு கோரிய செய்திகளும் குறிப்பிடத் தக்கதே.


எவர் எந்த இடத்தில் இருந்த போதும் அவரவர் தனிப் பட்ட குணாதிசயங்களே அவர் பேர் சொல்லும்


ஆப்ரஹாம் லிங்கனே இந்த மக்களாட்சி என்றால் என்ன என்பதை மொழிந்தார், கென்னடி போன்றோரும் கூட உயிர்த் தியாகம் செய்தனர். அந்த நாடு இந்திய நாட்டுக்கும் முன்பே இரு நூற்றாண்டுக்கும் முன்பே இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றிருந்தது.


மக்களாட்சி, ஜனநாயகம் , மக்களால் மக்களுக்காக, மக்களுடைய ஆட்சி என்று சொல்லப் படுவது பற்றிய முரண்கள் உலகெங்கும் எங்கெங்கும்...



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

p.s:செவ்வாய்,நிலா மட்டுமல்ல எத்தனை கிரகத்தில் கால் வைத்தாலும் வாழ்க்கை நடத்தினாலும் அதை நாசம் பண்ணிவிடவேத் துடித்துக் கொண்டிருக்கும் மனித இனத்தின் பேராசை.


 


Thursday, March 5, 2026

காவிரி முதல் தேம்ஸ் வரை ஒரு வாழ்வின் பயணம்: கவிஞர் தணிகை

 காவிரிக் கரையில் பிறந்து வளர்ந்து இணைந்து தேம்ஸ் நதிக்கரையில் வாழப் போகும் தம்பதியர்க்கு:

மண வாழ்த்து

மணமகள்:                                                மணமகன்:

Dr. B. நந்தினி B.D.S.                  Er.V.அருண் ப்ரசாந்த்  B.E,M.S

07. & 08.03.2026         S.M.மஹால் கரிகாலன் நகர்   மேட்டூர் 4.

 

சில நல்லுறவுகள் தாமே வந்து வாழ்வில்

இணைந்து கொள்ளும்

கணக்கிலா தொலைவு வரை ஈடு இணையின்றி

விட்டு விடாமல் படர்ந்து செல்லும்...

 

இணைதல் என்பது செடி கொடிகளிலும்

பறவை விலங்குகளிடமும் கூட

இன்றியமையாத் தேவை


 

ஆனால் உயிர்களின் உச்சம் மனிதம்!

 

அதில் இணைதல் என்பது தேவ இரகசியம்

தேவையின் அதிசயம் சேவையின் அவசியம்

 

அப்படி இங்கிணையும் Dr.B. நந்தினி B.D.S

Er.V. அருண்ப்ரசாந்த் B.E,M.S

இணையர்க்கு

இந்த வாழ்வின் திருப்பு முனையில்

சாட்சிய வேள்வி சாகரத்தில் எனது வார்த்தைகளும்...

 

பாலச்சந்திரன் சாந்தி தம்பதியரின் அருந்தவப் புதல்வி

நந்தினியுடன் அருண் ப்ரசாந்த் ஒன்றிணையும் வாழ்வின்

இந் நன்னாளில்

என்றுமே எம் குடும்பத்தின் வாழ்த்துகள் நிலைத்து நிற்கும்

இவண்:

சு.தணிகை

.சண்முகவடிவு

..ரா.சு. மணியம் B.E,