Wednesday, February 11, 2026

CINEMA சினிமா சினிமா: கவிஞர் தணிகை

 சினிமா சினிமா: கவிஞர் தணிகை



ஆக்கபூர்வமாக வாழ்வில் சாதிப்பார் பெரும்பாலும் சினிமா பார்க்காதாராகவே இருப்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வருகிறேன். பெரும் ஞானிகள், விஞ்ஞானிகள், நிர்வாகிகள்,சாதனை புரிந்தோர் இப்படி எல்லாம் இருப்பார் சினிமா பார்ப்பதில்லை என்றே சொல்கிறார்கள், என்னிடம் என் தனிப்பட்ட கேள்விக்கு பதிலாக தெரிவித்தார்கள். அப்படியும் சினிமா வேண்டுமெனில் இப்போதெல்லாம் நேரம் குறைவாக சில பல நிமிடங்களில் சொல்ல வேண்டியதை சொல்லி விடும் திரைப்படங்கள் நிறைய வந்து விட்டன. சில நாட்களுக்கும் முன் 22 நிமிடத்துக்குள் ஒரு குறும்படம் ஒரு 3 மணி நேர சினிமாவின் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததை சிறுமியர் கடத்தல் ,பாலியல் குற்றம் போன்றவற்றை சிறப்பாக சொல்லி இருந்ததைக் கவனிக்க முடிந்தது.


சினிமா கூட ஒரு போதையாகவே இருப்பதை நான் தனிப்பட்ட முறையில் என் கருத்தாக வைக்கிறேன்.ஆவதும், ஆனதும் சினிமாவாகவே, அது ஒரு தவிர்க்க முடியா சக்தியாக,அது ஒரு தொழிலாக இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒரு நிறைவான வென்றெடுக்க வேண்டிய சமுதாயக் கட்டமைவுக்கு போதை, மது,சூதாட்டம்,சிறுவர் கடத்தல்கள்,பாலியல் குற்றங்கள்,கட்டுப்பாடில்லா இணையத் தேடல்களும் சுதந்திரமும்,சினிமாவும் கூட‌பெரும் தடைகளே. தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றமும் நாட்டின் வளர்ச்சியும் கூட இதனால் பாதிப்படைகின்றன.


வரலாற்று முக்கியத்துவம் மிக்க, காந்தி,(அட்டன்பரோ இயக்கியது) ஸிண்ட்லர்ஸ் லிஸ்ட்,குழந்தைகள் பெரிதும் விரும்பும் டைனசோர் போன்ற படங்கள் தவிர, வரலாற்று ஆவணப் படங்கள்,தவிர‌ வணிக நோக்கில் வன்முறையைப் பரப்பும் படங்கள் இருக்கக் கூடாது, அதுவும் பல மணி நேரம் இருக்கக் கூடாது பெரும்பாலான மனிதர்களின் நேரத்தைக் கொல்வதாக இருக்கக் கூடாது.ஆக்க பூர்வமாக மனிதர் இருக்கும் போது இயங்கும் போது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது நடக்கும்,


 ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வில் கிடைத்த வாய்ப்பு என்பார் நேரத்தை மிக அரியதான சக்தியாக இழந்தால் அதைப் பெற முடியாத வாய்ப்பாக நினைக்கிறார்கள். பொருளை இழந்தாலும் திரும்ப பெற்று விட முடியும்.நேரத்தை இழந்தால் அதைத் திரும்ப பெற வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அதை எல்லாம் கேட்ட பின் நான் எவ்வளவு நேரத்தை இப்படி இழந்து விட்டேன் என நினக்கும் போதே எனது குற்ற உணர்வு எனை மென்று தின்கிறது, அவ்வளவு படங்கள் பார்த்திருக்கிறேன் என் வாழ்வில் இளைமையில் இருந்து, ஏன் சிறுவனாக இருக்கும்போதிருந்தே சினிமா, சினிமா என்றே பார்த்து அழிந்திருக்கிறேன். இல்லையேல் இன்னும் கூட சிகரத்தொடல்களுக்கு சென்றிருக்கலாமோ என காலங் கடந்த பின் தோன்றுகிறது.


இதை எல்லாம் சாவின் அருகே அருகே செல்லும் மனிதர்கள் அனைவர்க்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. எவன் கேட்கப் போகிறான்? யார் படிக்கப் போகிறார்? எவர் இதை பின் பற்றப் போகிறார்? என்றெல்லாம் நினைக்கலாம்.

 கியூபாவின் தொலைக்காட்சி அந்த நாட்டின் விவசாயம், விளையாட்டு,மக்களுக்குப் பயன்படும் கருத்துகள் தவிர வேறு எதையும் ஒளி பரப்புவுதில்லை. ஒளிபரப்ப வில்லை. எனவே அந்த சிறு நாட்டை வல்லரசுகள் எல்லாம் விழுங்கப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை மேலும் அதன் கட்டமைவில் பெரும் பங்கு வகித்த அதன் தலைமைக்கு செய்த கொலை முயற்சி பலிக்கவே இல்லை. சிங்கப்பூர் கூட நல்ல கட்டமைவில். ஏன் இப்போதிருக்கும் அரேபிய நாடுகள் எல்லாம் இது போன்ற நிலை வழியில் பயணம் செய்ய முயன்று வருகின்றன.


அவை எல்லாம் சிறிய நாடுகள் இந்தியா பெரிய நாடு என்பார்க்கு, ரஷியாவும் சீனாவும் முன் நிற்கின்றன.இஸ்ரேலின் ஒவ்வொரு இளைஞரும் அந்த நாட்டின் கட்டமைவுக்கு உறுதுணையாக இருப்பதை செய்திகள் தெரிவிக்கின்றன.கட்டுப்பாடு அவசியம் ஒவ்வொரு தனிமனிதர்க்கும், ஏன் சமூக மாற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும்.


சொல்லத் தோன்றியதை சொல்லி விட்டேன் மிகச் சுருக்கமாக‌

பிறகு உங்கள் விருப்பம்.


1897ல்(PATENTED)developed between 1889 and 1892,  தாமஸ் ஆல்வா எடிசன் மூவி கேமிராவை ஆக்கபூர்வமான விடயங்களுக்குப் பயன்படுத்தவே கண்டு பிடித்தார் வெடிமருந்தை ஆல்ப்ரட் நோபெல் கண்டறிந்தது போல ஆனால் அவை எல்லாமே காலத்தால் மனிதர்களால் எதிர்மறையாகவே பயன்படுத்துவது அவர்கள் கண்டிருந்தால் இதை எல்லாம் கண்டறியாமலே விட்டிருக்கலாமே என நமது ஜி.டி நாயுடு போல வேதனைப் பட்டிருக்கவும் கூடும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, February 9, 2026

மலையும் மடுவும் இலையும் நதியும் சருகும் விறகும்: கவிஞர் தணிகை

 மிஸ்டர் கி: கவிஞர் தணிகை



ஒன்று

கர்வத்தின் சிகரத்தில் ஏறி நிற்கிறாய்

இல்லை

அதல பாதாளத்தில் 

அனைவரின் கால்களிலும் விழுந்து

புழுவாய்த் துடிக்கிறாய்


அட உனக்கு(ம்) கொம்புகள் இல்லை

இங்கே  எண்ணிப் பார்

எனது எழுத்துகளில்

எத்தனை கொம்புகள் என்று,,,


   மறுபடியும் பூக்கும் வரை

   கவிஞர் தணிகை

CRICKETகிரிக்கெட் விளையாட்டு (உலகளாவிய வியாபாரம்) 10 ஓவர் போதுமே: கவிஞர் தணிகை

 கிரிக்கெட் விளையாட்டு (உலகளாவிய வியாபாரம்) 10 ஓவர் போதுமே: கவிஞர் தணிகை



நீண்ட காலத்துக்கும் முன்பே கிரிக்கெட் (மட்டைப் பந்து) 10 ஓவரே போதும், டி20,50 ஓவர், டெஸ்ட் பார்ம் எல்லாம் சுருக்கப் பட்டு 10 ஓவரிலேயே கூட முடித்துக் கொள்ளலாம்,முடித்துக் கொள்ள வேண்டும் அது மற்ற விளையாட்டுக்களைப் போல என்று நமது கருத்தை வலை தளத்தில் வேர்ட்பிரஸ்ஸில் நாம் எழுதிக் கொண்டிருந்த போதே முன் வைத்தோம். குறைந்த பட்சம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நம் நாட்டிலாவது.


மாலை முழுதும் விளையாட்டு என்றான் பாரதி. ஒவ்வொரு நாளும் நாளின் ஒரு பகுதியான நேரத்தில் தாம் விளையாட்டு அவசியமாக இடம் பெற வேண்டும். நாள் முழுதும், சினிமா, விளையாட்டு என்பவை தவறான வாழ்வின் முறை.


உடற்பயிற்சிக்கான விளையாட்டுகளாகப் பார்க்கப் படும் இந்த விளையாட்டில் முதிர்ச்சி பெறும் நபர்கள் வேண்டுமானால் தம் வாழ்வை அதற்காகவே அர்ப்பணிக்கட்டும், ஆனால் உலகின் பெரும்பாலான மனிதர்கள் அப்படி முழுநேரமும் அதில் ஈடுபட அவசியமில்லை. வியாபாரிகள் பெரும் முதலீடுகளை வைத்து அதிலிருந்து பெரும் பொருள் ஈட்டி வருவது யாவரும் அறிந்ததே.அரசியல் இதில் துளியும் இருக்கவே கூடாது.


விளையாடுவோரில் 3 பிரிவு, சம்பள வேறுபாடுகள்,அரசியல், அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதார் அதைக் கைகொண்டுவிடுவது இப்படி நிறைய அதில் குறைபாடுகள் உள்ளன. கபில்தேவ், தோனி போன்றோர் மட்டுமே அல்லது நிரூபித்த நபர்கள் மட்டுமே அதை மேலாண்மை செய்ய வேண்டும்...


வைபவ் சூரிய வன்சி போன்ற சிறுவர்கள் வயது காரணமாக இல்லாமல் தேசிய முதன்மை அணியில் இணைக்கப் பட்டு நிரூபிக்கப் படாத வீரர்கள் எல்லாம் அப்புறப் படுத்தப் பட வேண்டும்.


கைப்பந்து/வாலிபால், கூடைப் பந்து/பேஸ்கட் பால், கால் பந்து/ஃபுட் பால் கபடி,தட கள விளையாட்டுகள்,பூப்பந்து, இறகுப் பந்து இப்படி எல்லா விளையாட்டுகளுமே சில மணி நேரங்களே இருக்க, சில மணிகளுக்குள் முடிந்து விட, கிரிக்கெட் மட்டும் பல மணி நேரங்களை ஏன் நாள் கணக்கைக் கூட எடுத்து விழுங்கி வருவது குறைக்கப் பட வேண்டும். அதற்கு 10 ஓவர் மட்டுமே நடத்தப் படும் விளையாட்டுகள் அவசியம். எல்லாருடைய முக்கியமாக‌ இளையோரின் உழைப்பை எடுத்து உறிஞ்சுவது  தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.


பொதுவாக கிரிக்கெட் என்பது வெள்ளைக்கார இங்கிலாந்து நாட்டவரால் குளிர் காலத்தில் தம் உடலை பயிற்சி செய்து கொண்டு வெம்மைப் படுத்திக் கொள்ள ஏற்படுத்திய விளையாட்டு.அதை விளையாடட்டும் தவறில்லை அவருடைய பாட்டல்/மதுக்குடுவைக் கலாச்சாரத்தோடு இதையும் சேர்த்துக் கொள்வது தவறு.


10 ஓவர் எனும் போது நேரம் நிறைய சேமிக்கப் படும், ஒவ்வொரு ஓவரும் மிக முக்கியம்.(ஒரு ஓவருக்கு 10 பந்துகள் கூட எடுத்துக் கொள்ளட்டும் தவறில்லை).ஆனால் ஒரு ஓவரில் ஒரு விளையாட்டு ஓவர் இடம் பெறச் செய்ய வேண்டும், அதாவது ஒரு ஓவருக்குள் அந்த மட்டை பிடிக்கும் வீரர் அவுட் ஆகவில்லை என்றாலும் அடுத்த ஓவருக்கு அடுத்த வீரரே வந்து மட்டை பிடிக்க வேண்டும்.எனவே எல்லா வீரர்களும் பந்து வீசுவதும், அடித்து விளையாடுவதிலும் பயிற்சி பெற்றாக வேண்டும். ஒரு வீரர் அவுட் ஆகிவிட்டால் மற்ற வீரர் வந்து ஆடலாம் மொத்தத்தில் 10 ஓவர்கள் 10 விக்கெட்டுகள்.அந்தக் காலம் வருவது வெகு தூரத்தில் இல்லை. இப்போது டி 20 மற்ற கிரிக்கெட் வடிவங்களை எல்லாம் எடுத்து விழுங்கி பிரபலம் அடைந்தது போல இதுவும் ஒரு நாள் நடக்கும் பாருங்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, February 8, 2026

RAJYA SABHA KAMAL HAASAN'S MAIDEN SPEECH:ராஜ்யசபாவில் கமல்ஹாசனின் கன்னிப் பேச்சு: கவிஞர் தணிகை

 ராஜ்யசபாவில் கமல்ஹாசனின் கன்னிப் பேச்சு: கவிஞர் தணிகை



திரை உலக ஞானி என்றழைக்கப் படும் கமல்ஹாசனின் ராஜ்யசபா பேச்சை புரியவில்லை என்று ஒரு சார்பான நபர்களும், ஊடகங்களும் சொல்லி இருப்பதை பேசி வருவதைக் கவனித்தீர்களா? அறிவிலிகளுக்குப் புரியாது அறிவு இருப்பார்க்கு அது நன்கு புரிகிறது. அதில் புரியாதது ஏதுமில்லை. ஏன் எனில் ராஜ்யசபா என்பது மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை உறுப்பினர்களின் தேர்தல் மூலம் அல்லது கட்சிகளின் சார்பாக போதுமான வாக்குகள் பெற்ற‌ அறிவாளிகள் அல்லது கலைஞர்கள் அல்லது படிப்பாளிகள், படைப்பாளிகள் போன்றோரைக் கொண்டது. பேரறிஞர் அண்ணா பேசியதை  அங்கில உரையை புத்தகமாகப் படித்த நினைவுகளில் இந்தப் பதிவு செய்யவும் எனக்கு அவா.


அவர் (கமல்) ஒரு  நல்ல கவிஞரும் கூட. எனவே தமது கவிதை மூலம் அறம் பாடியிருக்கிறார் இது அனைவர்க்கும் புரியாது வாழ்க ஒழிக என்ற கூச்சல் மட்டுமே இடுவோர்க்கு. ஏன் எனில் வீழ்க வளமுடன், தமிழ் படித்தால் திருடவும், பிச்சை எடுக்கவும் முடியாது என்றெல்லாம் தமது ஆற்றாமையை சொல்லாடி இருக்கிறார்.சுமார் ஏறத் தாழ 12 நிமிடத்துக்கு சற்றேறக் குறைய பேசியதை அடியேனும் கவனித்தேன். ஆங்கிலத்திலும், தமிழிலும் தமது பணியை செவ்வனே செய்திருப்பதாகவே கருதுகிறேன். முடிந்தால் வாய்ப்பிருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.


சட்ட மன்றங்களிலும்கூட‌  யாம் சிறுவயதில் கண்டதுண்டுM.L.C எம்.எல்.சி என ஒரு மேலவைப் பிரதிநிதித்துவம், மேலவை இப்போதெல்லாம் கலைத்து வெகு காலம் ஆகிவிட்டது. அவை எல்லாம் பொது மனிதர்க்கு, படிப்பார்க்கு, படைப்பார்க்கு என இருந்தது. அதெல்லாம் கூடத் தேவையில்லை என விட்டு விட்டார்கள்.


ஒரு நாடு எப்படி இருக்கிறது என்பதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதே சான்று. அந்த ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தால் அந்த மக்கள் எப்படிப் பட்டவர்களாக இருந்து இவர்களை எல்லாம் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதும் புரியும்.


மக்கள் எவ்வழி மன்னர் அவ்வழி, மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி. சாக்ரடீஸ் கிரேக்க தேசத்தில் கி.மு 300 முதல் 400களிலேயே எப்படி இந்த மக்களாட்சி தத்துவம், வாக்கெடுப்பு முறை மூலமே மரணம் தழுவினார் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அறிஞர்களுக்கு எப்போதுமே அது விதி. ஆனால் காலத்தை மிஞ்சி சரித்திரம் சொல்லும் அவர் பேர்களை அதுவும் ஒரு விதி.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு: WITH THE  CONSIDERATION  OF IN FORMALLY சரியாக பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யாத ஒரு நபர் இவ்வளவு பெரிய ஏணியில் ஏறி இருக்கிறார் என்பதில் இருந்து அவரது உழைப்பை  அவரது திறத்தை நாம் கணித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.Don't try to be neglect it.







Saturday, February 7, 2026

கோழி பாலு (எ) பிகே BK பிராய்லர்ஸ் பாலச்சந்திரன்: கவிஞர் தணிகை

 கோழி பாலு (எ) பிகே BK பிராய்லர்ஸ் பாலச்சந்திரன்: கவிஞர் தணிகை




நம்ப முடியாதவை எவ்வளவோ இருக்கின்றன.நடந்து விடுகின்றன. ஓர் அந்தி சாய்ந்த வேளை, கிராமியப் பகுதி மலையடிவாரத்தில் வேறு ஊருக்கு சென்று விட்டு நமது நாயகன் கால் நடைப் பயணமாக  விரைவாக ஊர் திரும்புகையில் இருட்டில் காலை ஒரு பாம்பின் மேல் வைத்து  விட்டதை உணர்கிறான் கால் பாதத்தின் அடியில் பாம்பு அதுவும் படம் எடுத்து கொண்டு தலை தூக்கி நிற்கிறது, இவனை ஏதும் செய்யவில்லை. இவன் அதிர்ச்சியில் உறைந்து போய் மெதுவாக பதற்றம் உள் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் அசையாமல் கீழிருந்த தனது வேட்டியை கைகளால் உயரத் தூக்கி ஏற்றிக் கட்டியபடி மெதுவாக அசையாமல் அசங்காமல் காலை நகர்த்திக் கொள்ள அந்த நாகம் இவனைத் தீண்டாமல் சென்று விடுகிறது. அதனால் தாம் அதன் பேர் நல்ல பாம்பு. 


இது கதை அல்ல உண்மைச் சம்பவம் இதை மறு நாளில் எனைப் பார்த்து பகிர்ந்து கொண்டார் நான் இன்று  உயிருடன் இருப்பதே பெரும் பேறு,என்னாலேயே இதை நம்ப முடியவில்லை என பெரும் வியப்புடன் கூறி இப்படி ஒன்று நடந்து விட்டது என விவரிக்கும் போதே என்ன உணர்வு என அறிய முடியாமலேயே இன்ப அதிர்ச்சி மறு நாள் காலை வரை குறையாமல் இருந்ததை அப்படியே சொன்னார்.  அந்த உண்மைச் சம்பவத்தின் நாயகன் பாலச் சந்திரன். அதன் பின் இவர் வாழ்வே மிகுந்த செல்வாக்கு மிக்கதாக மாறியுள்ளதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறேன்.


கோழி பாலு எனச் செல்லமாக என்னால் அழைத்து வரப் படும் பாலச் சந்திரன் மங்கிய கீச்சுக் குரல். நல்ல செயல்வீரர்,மென்மையான குணம் ஆனால் வீரியமுள்ள போர்க்குணமும் கொண்ட நல்ல விவசாயி.அடிப்படையில் இவர் விவசாயி நிலக்கிழார் ஆனாலும் இப்போது பல ஆண்டுகளாக BK பிகே பிராய்லரின் உரிமையாளர்.பெரிதாக படிப்பு ஒன்றும் இல்லை. ஆனால் மகனை எம்.எஸ்M.S பிரான்ஸில் படிக்க வைத்து வருகிறார். பெண் ஒரு பல் மருத்துவர்B.D.S இலண்டன் என்.ஆர்.ஐக்கு மணம் செய்து வைக்கிறார்.


ஒரு காளி கோவிலை தமது விவசாய நிலத்தின் சாலையோரத்தில் கட்டி பராமரிப்பு செய்து வணங்கி வருகிறார், மேலும் பாடம் போடுவதுமுண்டு.இவர் ஈனத்தொழில் புரிவதுதான் இவருக்கு ஏற்றது என இவரது குடும்ப சோதிடர் சொன்னதைப் பின் பற்றி கோழி வெட்டி இறைச்சி கடைக்கு சொந்தக்காரராக இந்தப் பகுதியில் பிரபலமடையக் காரணம் கோழி, காடை, முட்டை போன்றவை எல்லாக் கடைகளையும் விடவும் இவர் கடையில் 5 அல்லது 10 எப்போதுமே  விலைக் குறைவு என்பதுவும் மேலும் எடை நாணயம் போன்றவை.


வாரமொருமுறை வெகுதூரம் தமது சொந்த TEMPO வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்று பழநி அருகே சென்றேன், ஊத்துக்குளி சென்றேன்,என்று ஏதோ ஒரு தொலை தூர குக்கிராமங்களுக்கெல்லாம் சென்று பறவைகளை டெம்போ நிறைய  வாங்கி வந்து விற்று கை கண்டு விட்டார்.


இவர் நிலை கண்டு இவருக்கு பெண் கொடுக்க மாட்டேன் என்ற இவரது மாமனார் குடும்பம் தேடி வந்து பெண்ணளித்து குடும்பமாக்கிய கதையில் சோதிடம் பங்கு வகித்தது அதை அவரது சோதிடர் அப்படியே சொன்னதாக சொல்வதிலிருந்து அதைக் கேட்பார் மனதில் கூட சோதிடத்தின் மேல் ஒரு நம்பிக்கை வந்து நிற்கும்.


மொத்தத்தில் வளமான பாலு, பலமான பாலு, விவசாயத்தை நம்பி வீண்போகாத பாலு குடும்பத்தை சிறக்க வைத்தும் பிள்ளைகளை வளமுடன் வாழவைக்கும் வழிகள் கண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார். கல்வி ஒரு பொருட்டல்ல  முழு முயற்சியே  வாழ்வின் முன்னேற்றத்திற்கு முழு முதல் காரணம் என. என்றாலும் இவருக்கு இவரது முன்னோர் வைத்து சென்றுள்ள நிலமகள் அத்தனைக்கும் ஆதாரம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

 பி.கு:‍ இத்தனைக்கும் அடியேன் 40 ஆண்டுக்கும் மேலான‌ தியானப் பயிற்சியிலும், இராமலிங்க வள்ளலார் பற்றும் , சைவ‌ நெறிமுறைகளைப் பின்பற்றும் முயற்சியில் இருந்தாலும் இந்த கசாப்புக் கடைக்கார விவசாயியும் நானும் நல்ல நண்பர்கள்.


Friday, February 6, 2026

செந்தில் குமாரும் செந்தில் முருகனும்: கவிஞர் தணிகை

 செந்தில் குமாரும் செந்தில் முருகனும்: கவிஞர் தணிகை



மேலை நாட்டுக்கு சென்று விட்ட ஒரு ஜென்டில்மேனும் அவருடன் ஒரே கல்லூரியில் படித்த மூத்த தோழரும் எனது நண்பர்களானார்கள்.


செந்தில் குமார் என்னும் செந்தில் எப்படி என்னுடன் நெருங்கினார் என்பதே என் நினைவில் இல்லை. ஆனால் அவருடைய் செயல்பாடுகளும் அளவான சொற்களும் அவரை ஒரு இனிய நபராகவே என்னுள் வைத்திருக்கிறது இனி(யன்), கனி (மொழி) என்ற தீந்தமிழ் சாற்றுப் பெயர் பாரம்பரியப் பெயர் தொடர்ச்சிகளுடன்...


எனது திருமண நாளும் இவருடைய திருமண நாளும் ஒன்றாகும் ஒவ்வொரு ஆண்டும் தவறாத வாழ்த்தை கோர்ப்பது அவரது இயல்புக்கு சான்றாகும். அவர் வாங்கிக் கொடுத்த 2 தொப்பிகள் நினைவு பறை சாற்ற‌

ஒரு முறை முடக்கு அறுத்தான் கீரையை தொடர்ந்து உண்ண (பச்சையாகவே) உடலில் சிறு கொப்புளங்கள் ஊசி முனை அளவு உண்டானதை கிள்ளியதால் அவை பெருத்தன பிரச்சனை உண்டு பண்ண அறுவை சிகிச்ச்சை செய்யுமளவு சென்று அவற்றை மருத்துவம் பார்க்க உடன் இருந்து இவர் செய்தது உதவி.


மூத்த இனியனை இலண்டனில் முதிர் நிலை கல்வி பயிலவும், இளைய கனியை விருப்பம்போல படிக்க வைப்பதும் அவரின் தகுதி . எல்லோருடனும் நல்நட்பு பாராட்டியே உயர்ந்தோரில் இவரையும் நாம் சேர்த்துக்  கொள்ளலாம். நாங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய் ஆட்களா? எங்களைப் பற்றி எல்லாம் எழுதுவீர்களா? என்றார் பதிலாக எமது கணக்கில் நல்லவர், கெட்டவர் தாம் பெரியவர் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லியதால் விளைந்த பதிவு இது...


இவர்தாம் தமது சீனியர் என செந்தில் முருகன் என்னும் சமூக ஆர்வலரை தமது கல்லூரியில் படித்தவர் என்று அறிமுகப் படுத்தினார். அது முதல் இவரை பல நிகழ்வுகளில் இவரை சந்தித்தேன். இவர் நடத்திய நிகழ்வுகளிலும் பங்கு கொண்டேன்.


கெட்டதே பார்க்கத் தெரியாத மனிதம். எல்லாத் தரப்பு மனிதரிடையேயும் சென்று நல்லதை முன் மொழிந்து இருக்கும் இடத்தை இனியதாக்கத் தெரிந்த மானிடம். 


இவர்கள் இருவர்க்கும் இந்தப் பதிவின் மூலம் நன்றி


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


 

Thursday, February 5, 2026

திருவில்லிப் புத்தூர் இரத்தின வேல் அய்யா: கவிஞர் தணிகை

 திருவில்லிப் புத்தூர் இரத்தின வேல் அய்யா: கவிஞர் தணிகை



அரிய இந்த மனிதரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இணையத்தில், வலை தளத்தில், முக நூலில் கிடைத்த ஓர் நல் முத்து.இவர் மாதிரி இணையத்தை நல்லதுக்குப் பயன் படுத்தி வரும் நாயகன் எவருமே இல்லை எனச் சொல்லலாம். பெரியவர், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர்.நிறைய அறிவார் சார்புடைய சபைத் தொடர்பு. இவர் போன்ற மனிதரைக் காண்பதரிதிலும் அரிதே.


எல்லாரையுமே மகள், மகன், என்று அழைத்துக் கொண்டு, எல்லோரிடமும் அன்பு மழை எப்போதும் பொழிந்து கொண்டு சூல் கொண்டு உயிர் மேகமாய் வாழ்ந்து வரும் ஒரு ஆற்றல் மிக்க மனிதர்.சொல்லை விட செயலை விரும்பும் செயல் வீரர்.மென்மையான மேன்மையான செயல்பாட்டாளர் பொறுமை நிதானத்துக்கு சொந்தக்காரர் அவர் நீடூழி வாழ இந்தப் பதிவு வாழ்த்துகிறது. முதுமை அல்ல இவருடன் இருப்பது நிறைய அனுபவத்துடனான இளமை.


நானறிந்த வரை எதையுமே, எவரையுமே இவர் புறம் தள்ளுவதே இல்லை. ஆண்டாள் உற்சவம் திருவில்லிப் புத்தூரிலிருந்து இவர் உலகெலாம் தொடர்பேற்படுத்திக் கொள்வதைக் காண முடிகிறது, சிவகாசியில் ஒரு தீப்பெட்டி உற்பத்தித் தொழில் செய்வதாக அறிந்தேன். இவரின் வாரிசுகள் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். நாங்கள் இது வரை நேரில் சந்தித்ததே இல்லாத போதிலும் மிகவும் அணுக்கமான நண்பர்களாகவே இருக்கிறோம் எப்போதும்.


இவர் வழியாக சில புதிய‌ புத்தகங்கள் எனக்கு கிடைத்தன. அவை பற்றி எனது வலைப்பூவில் எழுதினேன்.எனது நூல்களையும் வாங்கி என்னைப் பெருமைப் படுத்தினார். வெளியே சொல்லக் கூடாது என்று என்னிடம் உறுதி மொழி வாங்கியபடி எனக்கு சில முறை எனது முக்கியமான கட்டங்களில் எனது மகனின் கல்விச் செலவுக்கு உதவிய மாமனிதர்.


சுஜாதா தமது இரத்தம் ஒரே நிறம் நாவலுக்கு இவரிடம் ஆதாரங்கள் பெற்றமை பற்றியும், அவர் எழுதிய கடிதத்தையும் பெருமையாகக் கூறுவார். அவருக்கு சுஜாதாவுக்கு நான் எனது நூல்களை அனுப்பி வந்தமை பற்றியும் அவர் எனை எனது பேரை ஒரு நூலில் (சிறு கதை நாவலில்) கதையின் நாயகனாக வைத்தது பற்றியும், கலாம் எனக்கு எழுதியிருந்தது பற்றி எல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  அவர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டமையின் போது ஏற்பட்ட இடைவெளியைக் கூட ஏன் உங்களைக் காணவில்லை என்பதற்கு பதிலாக‌ குறிப்பிட்டிருந்தார்.


இவரது விலாச அட்டையில் இவரது தர்மபத்தினி துணைவியுடன் இருப்பது எப்போதும் எம் கண்களில் நிற்கிறது. நட்பு என்பதும், அன்பு என்பதும் உலகின் எந்த மூலையிருந்தாலும் மலர்வதே மணம் பரப்ப, மனிதம் மனித நேயம் எப்போதும் உயிர்ப்புடன்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.