தமிழ் வழிச் சமுதாயத்தின் ஒரு கேட்காத குரல்: கவிஞர் தணிகை
இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது இருபது நூற்றாண்டுகள் அல்லது அதற்கும் மேலான ஆண்டுகள்...நூல்கள்...திரித்தவை...
விலங்குகள், பறவை இனத்திற்கு ஒலி உண்டு ஆனால் மொழி இன்றி... ஆனால் அவற்றின் சோகம், மகிழ்வு,யாவும் அவற்றின் உணர்வுடனான ஒலி வெளிப்பாட்டுடன்...
மனிதம் மொழி வழி வாழ்கிறது உயர்கிறது உன்னதம் தொடுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னே தமிழில் திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதிணெண்கீழ்க்கணக்கு நூல்கள்,காவியங்கள், காப்பியங்கள்,... முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என சங்கம் வளர்த்த தமிழ் அதன் பின் மிகவும் பிற்காலத்தில் விவிலிய மறை, குரான் தர்ஜமா, பகவத் கீதை போன்ற எல்லா மதம் சார்ந்த நூல்களிலுமே நல்ல தமிழ் காண முடியும்.
இடை இடையே சித்தர்களும் யோகிகளும் சிந்தனையின் ஞானியரும் பன்னிரு ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் எப்படி எல்லாம் போட்டி பொறாமைகளிடையே தமிழ் வளர்க்க பாடல் இயற்றினார்கள் என்பதெல்லாம் வரலாறு.
மகாத்மா காந்தி அஹிம்சை தேடும் போது ரஸ்கின் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்று சொல்ல, டால்ஸ்டாயிடம் அஹிம்சை என்பதை எங்கிருந்து கற்றீர் எனக் கேட்கும் போது அது தமிழ் கொடுத்த கொடை, திருக்குறளில் "இன்னா செய்தாரை...ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்தல்...தமிழகத்தின் சீதனம் என்றறிந்து தமிழ் கற்றே தீர்வது என ஒரு ஆசிரியரை நியமித்துக் கொண்டு தமிழ் கற்கிறார், மதுரை வந்து மேலாடை துறக்கிறார்.
மகாத்மாவிற்கு உலகெலாம் நல்ல அங்கீகாரம் இருந்தது.
கல்லணை, தஞ்சைப் பெரிய கோயில் என தமிழ் வளர்த்த தொழில் நுட்ப சான்றுகள் எண்ணிறந்தன...என்றும் கொண்டாடப் பட வேண்டியவையாய்...மேலும் ராஜேந்திர சோழனால் கடல் கடந்து சென்ற கோலாகலம் எல்லாம் சொல்லி மாளா. அவ்வளவு யானைப்படையின் யானைகள், அவ்வளவு நாவாய்கள்...
சரி இரண்டாயிரம் அதன் பின் சரிந்து ஒரு கட்டத்தில் நம் முன்னோர் படிப்பறிவற்றவராக போய் விட்டனர். இப்போது மூன்றாம் முன் தலைமுறை முதல் படிப்பை நுகர ஆரம்பித்த இந்த இனத்துக்காக மொழிக்காக சுதந்திரப் போர் தியாகிகளைப் போல் தம்மை விதைத்தவர் நிறைய...
வெடி மருந்தும் , தோட்டாவும், துப்பாக்கி, பீரங்கி, டாங்குகள், அணு ஆய்தம், இரசாயன ஆயுதம் போன்றவற்றை ஐரோப்பியர் கண்டுபிடித்தலால் உலகப் போர்களால் உலகு கெட்டது...அறிவியல் நம்மை வசதி படைத்தவர்களாகச் செய்துள்ளது ஆனால் வாழ்வைக்கிறதா என்றால் அதெல்லாம் கலந்துரையாடி விவாதித்து முடிவுகள் எட்டப்பட வேண்டியதாகிறது. அனால் அவர்கள் விஞ்சி விட்டார்கள் காலனி ஆதிக்கம் நமை மிஞ்சி விட்டது.
இப்போது ஒரு கலவையாக அவர்களோடு கலந்து பயணம் செய்து வருகிறோம். மொழியறிவு அழிந்து வருகிறது. உலகமயம், தனியார் மயம், தாரளமயம் என....
எது நன்மை பயக்காதோ அவற்றை எல்லாம் பின் பற்ற ஆரம்பித்திருக்கிறோம்...இனி யாம் சொல்ல இப்போதைக்கு ஒன்றுமில்லை, எல்லைக்கு வந்து விட்டோம்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை