Sunday, April 29, 2018

உண்மையிலேயே நான் குற்றவாளியா? - சிறையிலிருந்து மரு. கபீல் கான்

கோரக்பூர் மருத்துவமனையின் துயரம்: மரு. கபீல் சிறையில் இருந்து எழுதியுள்ள கடிதம்...

உண்மையிலேயே நான் குற்றவாளியா? -  சிறையிலிருந்து மரு. கபீல் கான்

உண்மையிலேயே நான் குற்றவாளியா? -  சிறையிலிருந்து மரு. கபீல் கான்
கோரக்பூர் மருத்துவமனையின் துயரம்: மரு. கபீல் சிறையில் இருந்து எழுதியுள்ள கடிதம்...
(கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-11 நடுப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் உத்திரபிரதேச பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பரிதாபமாக 30 உயிரிழந்த துயரமான வேளையில் உயிருக்கு ஆபத்தான பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற விடாது போராடியதால் "ஹீரோ" என பொதுமக்களால் போற்றப்பட்டவர் மரு. காபீல் அகமது கான் ....
இந்நிலையில் குறித்த குழந்தைகளின் உயிர் இழப்பு - ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் காரணமாக அங்குள்ள அதிகாரிகளால் காட்டப்பட்ட அவர் மீது குற்றச் சதித்திட்டம் - 120B, கொலை செய்ய முயற்சி 308 மற்றும் அரசின் பொதுத்துறையின் பொது ஊழியர் மீதான மக்களின் நம்பிக்கையை சீரழித்தது போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து செப்டம்பர் 2 ஆம் திகதி கைது செய்து கோரக்பூரில் சிறையில் அடைத்தனர்.
கடந்த 8 மாதங்களாக கோரக்பூரில் சிறையில் உள்ளவருக்கு அவர் கீழ் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் ஏதொரு விளக்கத்தையும் செவியுறாது ஒரு காரணத்திற்காகவோ அல்லது மற்ற சொல்லப்படாத காரணத்தால் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
தனது கைதானது அநியாயமானது என்பதை ஆதாரபூர்வமாக குறித்த இளம் மருத்துவர் சிறையில் இருந்து எழுதியுள்ள 10 பக்கக் கடிதத்தில் ஊடகத்திற்கு விளக்கியுள்ளார்.)
அந்த ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கணமும் என் கண்கள் முன்னால் நடப்பதைப் போல் இன்னும் உயிரோடு இருக்கிறது. 8 மாதங்கள் தாங்கொணாத சித்திரவதைக்கு பிறகு, பார்வைக்கு பின்னால் அவமானம் அடைந்தபோதும் சில நேரங்களில், என்னை நானே கேட்கிறேன், " உண்மையில் நான் குற்றவாளியா ...? " பதில் என் இதயத்தில் இருந்து வெளியே மேல்தோன்றும் - ஆம் உறுதியாக நான் குற்றவாளி இல்லை ...
அந்த தருணத்தில் அந்த நொடியில் அந்த வாட்ஸாப் செய்தி கிடைத்த துயரமான அந்த 10 ஆகஸ்ட் 2017 நள்ளிரவில் நான் எல்லாவற்றையும் செய்தேன். ஒரு மருத்துவராக, ஒரு தந்தையாக, ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக செய்ய முடிந்ததை / செய்ய வேண்டியதை எல்லாம் செய்தேன்.
திரவ ஆக்ஸிஜன் திடீரென நிறுத்தப்பட்டதால் ஆபத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் நான் காப்பாற்ற முயன்றேன்.
ஆக்ஸிஜனின் பற்றாக்குறையால் இறக்கும் அந்த அப்பாவி பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற என் நிலையில் என்னால் முடிந்ததை செய்தேன். நான் சோர்வுறாமல் அனைவரையும் அழைத்தேன், நான் மன்றாடினேன், நான் பேசினேன், நான் ஓடினேன், ஓட்டிச் சொன்னேன், நான் கட்டளையிட்டேன், நான் கதறி அழுதேன், நான் ஆறுதல் அடைந்தேன், நான் ஆலோசனை சொன்னேன், நான் செலவு செய்தேன், நான் கடன் வாங்கினேன், நான் அழுதேன். மனித நேயத்தால் சாத்தியபடுத்தக்கூடிய அனைத்தையும் நான் செய்தேன்.
நான் துறையின் தலைவரை அழைத்தேன். என் சக மருத்துவ ஊழியர்களை, BRD முதல்வரை, தற்காலிக நியமன முதல்வரை, கோரக்பூர் மாவட்ட நீதிபதியை, கோரக்பூர் மாவட்ட மக்கள் சுகாதார நலன் கூடுதல் இயக்குனரை, கோரக்பூர் CMS மருத்துவ & மருத்துவ சேவைகளுக்கான மையத்தை, BRD மருத்துவ & மருத்துவ சேவைகளுக்கான மையத்தை அழைத்து ஆக்ஸிஜனை வழங்குவதில் திடீரென்று ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை மற்றும் திடீரென ஏற்படும் ஆபத்து காரணமாக குழந்தைகளின் உயிர்கள் எப்படி ஆபத்தில் உள்ளன என்பதையும் அவர்களுக்கு தெரிவித்தேன். (நான் அனைத்து தொலைபேசி அழைப்பு பதிவுகளையும் சேமித்து வைத்துள்ளேன்.)
மோடி கேஸ் ஏஜென்சி , பாலாஜி கேஸ் ஏஜென்சி , இம்பீரியல் கேஸ் ஏஜென்சி, மயூர் ஏஸ் கேஸ் ஏஜென்சி உள்ளிட்ட கேஸ் ஏஜென்சிகளை - BRD மருத்துவக் கல்லூரியைச் சுற்றிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிடமும் - நூற்றுக்கணக்கான அப்பாவி குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றுவதற்காக ஜம்போ சிலிண்டர்களுக்கு தங்களின் தொடர்பு எண்களை ஏற்பாடு செய்த பிறகு ஆக்ஸிஜன் விநியோகங்களை கேட்டு நான் மன்றாடி வேண்டினேன்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்திற்கு நான் அவர்களிடம் முன்பணம் கொடுத்தேன், மீதமுள்ள தொகையைச் செலுத்த உறுதியும் அளித்தேன். (திரவ ஆக்ஸிஜன் தொட்டிகள் வரும் வரை நாங்கள் நாளொன்றுக்கு 250 உருளைகளை ஏற்பாடு செய்தோம். ஒரு ஜம்போ சிலிண்டர் விலை ரூ. 216 /-)
நான் ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு, அதாவது 100 வது வார்டில் இருந்து 12 வது அவசர வார்டுக்கு ஓட்டப்பந்தய வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தேன். ஆக்ஸிஜன் வழங்கல் நிலையிலிருந்து தடையற்ற ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.
அருகிலுள்ள மருத்துவமனைகளில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்றுவர நானே என்னுடைய காரை ஒட்டி சென்றேன். என்னுடைய கார் அதற்கு போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த போது, உடனடியாக நான் இந்திய அரசின் மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான சிறப்பு சேவை பணியகத்திற்கு (SSB - Seema Suraksha Bal) விரைந்து சென்றேன், அங்கே அதன் டி.ஐ. ஜி அவர்களை சந்தித்து முன்னெப்பொழுதுமில்லாத இந்த துயரமான நிலைமையை குறித்து அவரிடம் விளக்கினேன். அவர்களின் பதில் மிக விரைவாகவும் ஆதரவளிப்பதாகவும் இருந்தது.
BRD யில் இருந்து காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஆக்ஸிஜன் ஏஜென்சியிடம் கொண்டு செல்லவும் அங்கே சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் நிரப்பி மீண்டும் அதை மருத்துவ பயன்பாட்டிற்காக BRD க்கு கொண்டு வரவும் சிறப்பு சேவை பணியகம் ஒரு பெரிய டிரக் & படையினர் அடங்கிய குழு ஒன்றை ஏற்பாடு செய்து தந்தது
அவர்கள் தொடர்ச்சியாக 48 மணி நேரம் பணிபுரிந்தனர். ஓயாத கடமையாற்றிய அவர்களது பணி எங்களை ஊக்குவித்தது.நான் SSB யை வணங்குகிறேன் மேலும் அவர்களின் தக்க நேரத்து உதவிக்காக நான் அவர்களுக்கு மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.
ஜெய்_ஹிந்த்
நான் என் இளைய / மூத்த மருத்துவர்களிடம் பேசினேன், நான் என் சக ஊழியர்களிடம்,"பீதி அடையாதீர்கள்... மனச்சோர்வு கொள்ளாதீர்கள்... தங்களது குழந்தைகளுக்காக மனசோர்வில் நம்மிடம் கோபம் கொள்ளும் பெற்றோருடன் எக்காரணம் கொண்டும் கோபம் கொள்ளாதீர்கள்... நீங்கள் யாரும் ஓய்வு எடுக்கவேக் கூடாது. ஒவ்வொரு குழந்தையின் உயிரும் முக்கியம், அந்த பிஞ்சு உயிர்களின் வாழ்க்கையை காப்பாற்ற திறம்பட சிகிச்சையளிப்பதற்காக நாம் ஒரு குழுவாக கடமையாற்ற வேண்டும். " என உத்தரவிட்டிருந்தேன்.
தங்களது குழந்தைகளை இழந்த பெற்றோர்களின் துயரங்களை கண்டு நான் சொல்லொணாத வருத்தத்தை கொண்டேன். தங்களின் குழந்தைகளை இழந்தபின் மனம் உடைந்த நிலையில் கோபமடைந்த அந்த கஷ்டமான பெற்றோரிடம் நான் நிலவரத்தை விவரித்தேன். மருத்துவமனை மேற்கொண்ட பணிகளை கூறினேன். ஆலோசனை செய்தேன். அங்கே அப்பொழுது நிலவரம் மிகவும் குழப்பமாக இருந்தது.
நான் அவர்களுக்கு விளக்கினேன் - திரவ ஆக்ஸிஜன் O2 தீர்ந்துவிட்டது... ஆனால் நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு ஜம்போ சிலிண்டர்களை கொள்முதல் செய்துக்கொண்டிருப்பதை அவர்களுக்கு விளக்கினேன்.
எல்லோரும் உயிர்களை காப்பாற்ற கவனம் செலுத்த வேண்டும் என நான் இறைஞ்சினேன்... அழுதேன் / கதறினேன்.
நான் அழுதேன், ஆக்ஸிஜன் சப்ளையர்களுக்குக் கட்டணம் செலுத்தாத "நிர்வாகத் தோல்வி" மூலம் உருவாக்கப்பட்ட ஓர் பெரும் அழிவைப் பார்த்து உண்மையில் மருத்துவக் குழுவில் உள்ள அனைவருக்கும் அழுவதைத் தவிர்த்து வேறெதுவும் செய்ய முடியாத நிலை - ஒரு பயங்கரமான இருள் சூழ்நிலையை விளைவித்தது.
13-08-2017 அன்று 1:30 மணியளவில் திரவ ஆக்ஸிஜன் தொட்டிகள் BRD வரும் வரை நாங்கள் முயற்சி செய்வதை நிறுத்தவில்லை.
ஆனால், 13-08-2017 அன்று உத்திரபிரதேச முதல்வர் யோகிஜீ மகராஜ் அடுத்த நாள் காலை வந்தபோது என் வாழ்க்கை தலைகீழாக மாறியது.
அவர் கேட்டார் : எனவே நீதான் அந்த மரு.காபீல் !? நீ தான் சிலிண்டர்களை ஏற்பாடு செய்தது ?
நான் போயிருந்தேன் - ஆம் ஐயா...
அவர் மிகுந்த கோபம் மிக்கவராக என்னை பார்த்து கேட்டார் - அப்படின்னா சிலிண்டர்களை ஏற்பாடு செய்து நீ ஹீரோவா ஆயிடுவ...? இரு ...! நான் அதை கவனிக்கிறேன் ...
யோகிஜீ கோபமாக இருந்ததற்கு காரணம் ... இந்த சம்பவம் ஊடகங்களில் எப்படி வந்தது... நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றேன், அந்த இரவில் எந்த ஊடகவியலாளருக்கும் நான் இது குறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை. முன்னதாகவே அன்றைய இரவு அவர்கள் அங்கேயே இருந்தனர்.
அதை தொடர்ந்து காவல்துறையினர் என் வீட்டிற்கு வர தொடங்கினர் - படுகொலை அச்சுறுத்தல், சித்திரவதை செய்தல் என எனது குடும்பத்தை சித்திரவதை செய்தனர்.
அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என மக்கள் என்னிடம் எச்சரிக்கை தெரிவித்தனர். என் குடும்பம், என் அம்மா, என் மனைவி, என் குழந்தைகள் மிகவும் அச்ச உணர்வில் இருந்தார்கள் அதனை விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.
என் குடும்பத்தை அவமானம், துன்பம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவதற்கு நான் சரணடைந்தேன் - நான் தவறொன்றும் செய்ததில்லை என்பதால் நிச்சயமாக நான் நீதியை பெற வேண்டும்.
ஆனால் டிசம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் ஓடின. ஹோலி வந்தது, தசரா வந்தது, கிறிஸ்துமஸ் போனது, புத்தாண்டு வந்தது, தீபாவளி வந்தது - ஒவ்வொரு தேதியும் - டேரீக் பாத் தெய்வ்ஹ் (தேதியிட்ட தேதிகள் கழித்தது ) பிணை எடுப்பர் என நம்பிய நாட்கள் கழிந்தன. பின்னர் நீதித்துறை மேலும் அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். (அவர்கள் கூட அதை ஒப்புக்கொண்டனர்.)
ஒரு தடுப்பு முகாமில் கட்டாந்தரையில் 150 க்கும் மேற்பட்ட சிறைவாசிகளுடன் இரவில் மில்லியன் கணக்கான கொசுக்களுடனும் பகலில் ஆயிரக்கணக்கான ஈக்களுடனும் தூங்கிக்கொண்டிருக்கிறேன். உண்டு உணவை விழுங்குவதற்கு முயற்சி செய்து, வயலில் குளிக்க அரை நிர்வாணமாகவும், உடைந்த கதவு கொண்ட ஒரு கழிப்பறைக்குள் உட்கார்ந்து கழிக்கிறேன். ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் என் குடும்பத்தை சந்திக்க காத்திருக்கிறேன்.
வாழ்க்கையே நரகமாக எனக்கு மட்டுமல்ல என் முழு குடும்பத்திற்கும் சேர்த்தே துன்பகரமானதாக உள்ளது. பொலிஸ் நிலையத்திலிருந்து நீதிமன்றம் வரை கோரக்பூரிலிருந்து அலாகாபாத் வரை நீதிக்கான நம்பிக்கையில் ஒரு தூணிலிருந்து மற்றொன்றை இயக்க வேண்டியிருந்தது - ஆனால் அனைத்தும் வீண்.
என் மகளுடைய முதல் பிறந்தநாளைக் கூட நான் அவளோடு இருந்து கொண்டாட முடியவில்லை இப்பொழுது அவளுக்கு 1 வயது 7 பழைய மாதங்களாகிறது. கூடுதலாக ஒரு குழந்தை மருத்துவர் என்ற வகையில் எனக்கு அது மிகவும் வேதனையாக இருக்கிறது, தனது குழந்தையை தவழ்வதை வளர்வதை சிரிப்பதை பார்க்க ஆவலுடன் இருக்கும் என்னை இதயமற்ற நிலைக்கு தள்ளுகிறது. இதயத்தை அது நொறுக்குகிறது.
ஒரு குழந்தை மருத்துவராக, ஒரு குழந்தை வளர்ப்பின் மிக முக்கியமான பொழுதுகளை குறித்து நான் இதுவரை கூறியவைகளில் நடைபயில தொடங்கியது, மழலை மொழி பேசுவது ஓடுவது ஆடுவது என என் குழந்தை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது.
எனவே இப்போது மீண்டும் அந்த கேள்வி என்னை வருத்துகிறது - நான் உண்மையில் குற்றவாளியா ? இல்லை... இல்லை... இல்லைவே இல்லை ...
நான் ஆகஸ்ட் 10, 2017 அன்று விடுமுறையில் இருந்தேன். (என் துறையின் தலைமை மூலம் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டது). ஆனாலும், நான் என் கடமைகளைச் செய்ய விரைந்தேன் - அது தான் தவறா ?
கோரக்பூர் துயரம் என்பது உயர் அதிகார மட்டத்தின் மொத்த நிர்வாகத் தோல்வி ஆகும், அவர்கள் அந்த மட்டத்தின் தன்மையை உணரவில்லை என்பதோடு தங்களை காப்பாற்ற எங்களை பலிக்கடாவாக்கி சிறைக் கதவுகளுக்கு பின்னால் நிறுத்திவிட்டு அதன் மூலமாக உண்மையை கோரக்பூர் சிறைச்சாலையில் உள்ளே இருத்தி வைக்க எண்ணுகின்றனர்.
100 படுக்கைகள் கொண்ட கடுமையான மூளையழற்சி சிண்ட்ரோம் (AEH) வார்டு என்ற பிரிவின் துணைத் தலைவராகவும், BRD இன் துணைத் தலைவராகவும் எனக்கு தலைமை பதவி தந்தார்கள். இங்கு நான் ஒரு இளநிலை மருத்துவராகவே இருந்தேன். 08-08-2016 அன்று தான் ஒரு நிரந்தர ஊழியர் கூட ஆனேன். என்.ஆர்.ஹெச்எம்யில் நோடல் அதிகாரியாகவும், குழந்தை மருத்துவ பிரிவில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தேன். என் முழு வேலையும் மாணவர்களுக்கு கற்பிப்பதும், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதும் ஆகும். எனக்கும் திரவ ஆக்ஸிஜன் / ஜம்போ சிலிண்டர்கள் வாங்க / டெண்டர் எடுக்க / ஆர்டர் குடுக்க / பராமரிப்பு / சப்ளை / கட்டணம் செலுத்தம் விஷயங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
ரூ.68 இலட்சம் புஷ்பா சேல்ஸ் நிறுவனத்தில் இருந்து நிலுவைத்தொகையை திரும்பச் செலுத்துமாறு 14 முறை நினைவூட்டப்பட்டபோதும், அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த மாவட்ட கலெக்டர், DM கோரக்பூர் (மருத்துவக்கல்விக்கான பொது இயக்குனர்), டி.ஜி.எம்.இ. மருத்துவக் கல்விக்கான பொது தலைவர் போன்றோர்தான் உண்மையான குற்றவாளிகள்.
புஷ்பா சேல்ஸ் (the official supplier) திரவ திரவ ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தினால் , அதற்க்கு நான் எவ்வாறு பொறுப்பாளியாக முடியும் ?
மருத்துவத் துறைக்கு தொடர்பில்லாதவர்கள் கூட 'மருத்துவர்களுடைய வேலை என்பதானது சிகிச்சை செய்வது தானேயொழிய ஆக்ஸிஜனை வாங்குவதில்லை' என்று சொல்ல முடியும் .
மணீஷ் பண்டாரி (புஷ்பா விற்பனை இயக்குனர்) ஜாமீன் பெற்றபோது, நாங்களும் அதே வெளிச்சம் எங்கள் மீதும் இப்போது பாய்ந்து நீதி கிடைக்கும் என் குடும்பத்துடன் வாழ மறுபடியும் முடியும் என்றும் மீண்டும் மருத்துவ சேவை செய்ய முடியும் என நம்பி இருக்கிறேன்.
ஆனால் இல்லை - நாங்கள் இன்னும் காத்துக்கொண்டே இருக்கிறோம்
உச்ச நீதிமன்றம் கூறுகிறது - பிணை என்பது உரிமை, சிறை என்பது விதிவிலக்கு. இது நீதி கருச்சிதைவுற்றதற்கான ஒரு உன்னதமான உதாரணம்.
நான் நம்புகிறேன் நேரம் வரும் நான் விடுபடுவேன் சுதந்திரமாக என் குடும்பத்தாரோடு என் மகளோடு இருப்பேன். உண்மை எப்போதும் நீடித்திருக்கும். நீதி வழங்கப்படும்.
இப்படிக்கு,
என்ன செய்வது என்று அறியாத ...
ஒரு உதவியற்ற, மனம் உடைந்த தந்தை, கணவன், சகோதரன், மகன் & நண்பர்
மரு. கபீல் கான் 
18-04-2018

தமிழில் மொழியாக்கம் : செம்பியன்

Friday, April 27, 2018

ஜெ படமும், 11 எம்.எல் .ஏ வழக்கு தீர்ப்பும்: கவிஞர் தணிகை

ஜெ படமும், 11 எம்.எல் .ஏ வழக்கு தீர்ப்பும்: கவிஞர் தணிகை


Related image


உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெவின் படம் தமிழகத்தின் சட்டசபையில் இடம் பெற்றிருப்பது  அதை நீக்க தேவையில்லை எனத் தீர்ப்பளித்தன் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்திருக்கிறது....

மேலும் சொல்லப் போனால் இது போல தமிழக அரசு முப்பதினாயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இருப்பதாகவும் வட்ட மேஜை என்னும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் பற்றிய விவாத மேடையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் பேசி புள்ளி விவரம் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை இழு இழு என ஊழல் இலஞ்சத்தால் இழு இழு என இழுத்து விட்டு இந்திய நீதி கடைசியில் ஜெ வின் மரணத்துக்கும் பிறகு வழக்குக்கு தீர்ப்பளித்து அதில் முதல் குற்றவாளிக்கு சட்டசபையில் படம் வைத்து ஆட்சீ நடத்துவது எவ்வளவு நீதி நேர்மையானது என்று உணருமளவு நமது குடி மக்களுக்கு நேரமில்லை...

மேலும்  அந்த 11 எம்.எல்.ஏ சட்டசபையில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட வழக்கிலும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அவை  உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட இருப்பது யாவுமே மக்களை எல்லாம் மடமையாக்குவது, தாமதிக்கப்பட்ட நீதியும் தீர்ப்பும் மறுக்கப்பட்ட நீதி என்று
என்றுதானே மானிட நீதி சொல்கிறது.

அதன் படி எல்லாம் பார்த்தால் ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வர் ஆகி இருப்பதும் எவ்வளவு தவறான செயல் என்பதை இந்த சட்டம் நீதி எல்லாம் சொல்லவில்லையா?  இந்த எடப்பாடி அரசு தற்காலிக வெற்றிகளை இது போன்ற தீர்ப்பை   சாதகமாக‌         பெற்றிருப்பது  எல்லாம் பார்க்கும்போது... மக்களிடம் நீதியின் மேல் கொஞ்ச நஞ்சம் இருக்கும் மதிப்பும் மரியாதையும் குழி நோண்டி ஆழத்தில் அழுத்தி அழுத்தி மேலும் ஆழத்தில் கொண்டு போய் ஆழ்த்தி இருக்கிறது என்பதை எவருமே மறுக்க முடியாது....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை. 

Monday, April 23, 2018

ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி: கவிஞர் தணிகை

ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி: கவிஞர் தணிகை

Related image


அது ஒரு உலக அளவிலான சேவை நிறுவனம். மணி அதில் கம்யூனிட்டி ஆர்கனைசர் ஆப் ரூரல் என்விரான்மென்ட் ஆபிசர்.அது பயிற்சிக்காலம். பதிவு அலுவலகம் புது டில்லியிலும், தேசிய மத்திய அலுவலகம் போபாலிலும். ஆந்திராவிலும் அதன் கிளைகள் 12 மாவட்டங்களில் வேரோடி இருந்தன. அதில் ஒன்று கம்மம் மாவட்டம் பிரிவு. ஹெட்கோட்டர் கம்மம் அங்கு தலைமை நிர்வாக அலுவலகம் அமைந்திருந்தது.

 அங்கு தான் ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியை சந்தித்தான். மாநிலங்கள் வேறாக இருந்தபோதும் நல்ல தோழமை நட்பு. இன்றையமையா உதவி. அவர் நெல்லூர். பெற்றோரை விட்டுப் பிரிந்து இங்கு சேவை செய்ய வழக்கறிஞராக வந்தவருக்கு, நீதிமன்றங்கள், காவல் நிலையங்கல் எல்லாம் நல்ல தொடர்பு. மணி பல மாநிலங்களுக்கும் மாறுதலாகி பயிற்சி முடிந்து திட்ட அலுவலராகி உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி...தீபக் மிஸ்ரா அல்ல...அவருடன் எல்லாம் கலந்து கொண்ட காலத்தில்...நெல்லூர் ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி மறக்காமல் திருமணப் அழைப்பிதழ் அனுப்பி அழைத்தது வரை இவர்கள் நட்பு அப்படியே இருந்தது.. .என் இன்னும் சொல்லப்போனால் அந்த நிறுவனத்திலிருந்து மணி விலகும் வரை என்றும் கூட சொல்லலாம்...

Related image
ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்தி அங்கிருந்த ஒரு லீகல் செல்லில் லாயர். ஆள் குள்ளையாக, கறுப்பாக‌ கட்டையாக இருப்பார். படு சுறு சுறுப்பு. சிகரெட்டும் கையுமாகவே பார்க்கலாம். வயது இருந்தால் 30க்குள் இருக்கும்.  பிரதிக்கட்டணா அதாங்க பூ ஒன்று புயலானது என தமிழில் விஜய்சாந்தி நடித்து பிரபலமானதே அந்தப் படம் அப்போது ஆந்திராவில்... அப்போது இரண்டு மாநிலமாக பிரியாத...என்.டி.ஆரை கடவுளாக வணங்கிய ஆந்திரா...சிவபார்வதியை கல்லூரி பேராசிரியையை பேரன் பேத்தி எடுத்த பின்னாலும் கூட இருவரும் மணந்து கொண்ட போதும் கூட கடவுள் கடவுள்தாம்... ஆந்திராவில் சினிமா மோகம் எப்போதும் அதிகமோ அதிகம் தான்...

அந்தப் பிரதிக்கட்டணா படத்தில் அந்த தாடி வைத்த ஜெய்ஜாண்டிக்கான வில்லன் ஒரு பைஜாமா குர்தா ஒரே கலரில் அணிந்திருப்பார்..அதாவது கோல்டு, பிங்க், இப்படிப்பட்ட லைட் கலரில்...அதை அப்படியே ஸ்ரீ ராமச் சந்திரமூர்த்தியான‌ இவர் அணிவார் தோளில் ஒரு சால் வேறு அதே கலரில் காலில் ஒரு ஷீ...ஊருக்குள் சென்றால் எல்லாம் இவரையே பார்ப்பார்கள்...கறுத்த மூஞ்சி கட்டை குட்டை விரல் பற்றி எல்லாம் இவர் கவலைப் படவே மாட்டார்.... பணம் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லை. பணத்துக்கும் பஞ்சம் இல்லை போல் இருக்கும்.

சரண்ராஜ் கூட அப்படிப்பட்ட ஒரு படத்தில் இருந்து வில்லனாக நடிகராக நட்சத்திரமாகத் தோன்றியவர்தாம் அந்தக் காலக் கட்டத்தில்...


Image result for prathighatana telugu movie

அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மணிக்கு  ப்ரண்ட் இன் டீட் இஸ் ப்ரண்ட் இன் நீட் என்பதற்கு ஏற்ப நிறைய உதவிகள்...தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் ஆபிசர் என ...அதில் இரண்டு மட்டும் இங்கே...ஒன்று ஒரு முறை கம்மம் மமதா ஹோட்டல் அது இப்போது இருக்கிறதோ என்னவோ...சாப்பிட்டு விட்டு மடக்கும் குளிர் கண்ணாடி ஒன்றை மறந்து வைத்து விட்டு வந்து விட்டார்... திரும்ப போய்ப் பார்த்தால் காணோம். ஹோட்டல் முதலாளியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் சொன்ன சிறிது நேரத்தில் உள்ளூர் காவல்நிலையத்தின் காவல் துறை உதவி ஆய்வாளருக்கு போன் செய்து அரை மணி நேரத்தில் கண்ணாடி கைக்கு வந்து சேர்ந்த மாயத்தை செய்தவர்...

மணியால் ஒரு திருட்டு டிரைவரை வேலையை விட்டு நிறுவன அலுவலகம் அனுப்ப, அதற்கு பழி தீர்க்க அந்த திருட்டு டிரைவர் பேர் சத்யம்...இவன் எப்போது அந்த ஊர் வருவான் அவனைப் போட்டுத் தள்ளலாம் என கத்தியுடன் திரிய அவன் இவன் சாப்பிட சென்றால் கூட பின் தொடர்வதை அறிந்த மணி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் சொல்ல மறுபடியும் காவல் உதவி ஆய்வாளர்கள் தொடர்பால் சத்யத்தைப் பிடித்து மிரட்டி மணிக்கு நேர இருந்த ஆபத்தை நீக்கினார் ஸ்ரீ ராமச் சந்திரமூர்த்தி... எப்படி அப்படி எல்லாம் உதவியிருப்பார்.

ஒரு வேளை ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு இயல்பாகவே உதவும் குணம் உண்டா அல்லது பின் வரும் சம்பவத்துக்கு பிராயச் சித்த உதவியாக அவர் மணிக்கு சில பல உதவிகள் செய்திருக்கக் கூடுமோ...

அது மணி அந்த நிறுவனத்தில் போய்ச் சேர்ந்த புதிது. மத்திய அலுவலகத்திலிருது கம்மம் அலுவலகம் செல்கிறார். அலுவலகப் பணியாக ஒரிஸ்ஸா செல்ல வேண்டியவர் இடையில்..

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. அப்போது மணி மாலை 6 இருக்கும். இருள் கவிந்து இரவு வரும் நேரம். மணி ஒரிஸ்ஸா தனது களப்பணித் திட்டத்திற்கு செல்லும் முன் கம்மம் வழி என்பதால் அங்கு சென்று தங்கி விட்டு மறு நாள் கிளம்பலாம் என அங்கு சென்றார்.

அப்போது அவனிடம்  முன்பே அலுவலகத்தை விசாரித்தபடியே ஆஸ்திரேலியா அல்லது நெதர்லாந்தை சேர்ந்த ஒரு அயல் நாட்டுப்  பெண் இளைமையும், அழகும் உடன்..வேறு யாரும் இல்லா தனி...என்னுடன் கேட்டு எனைப் பிடித்தபடி அவளும் அந்த அலுவலகம் வந்தாள். அதெல்லாம் அங்கு சகஜம்...

மணி, அந்தப் பெண், ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி...மூவர்தாம்...அவ்வளவு பெரிய அலுவலகத்தில்...
மணி ப்ளீஸ் நீ கொஞ்சம் எனக்கு வாய்ப்பு கொடேன், வெளியே சென்று ஒரு சினிமா பார்த்து விட்டு வாயேன், அல்லது ஒரு மணி நேரம் கழித்து வாயேன் ப்ளீஸ் எனக் கெஞ்சினான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி..

மணி வெளியே சென்று விட்டார். காலம் கடந்த பின் மறுபடியும் அலுவலகம் வந்தார் தங்கிக் கொண்டார். மறு நாள் ஒரிஸ்ஸா சென்றார்.

ஸ்ரீராமச் சந்திரமூர்த்திக்கென தங்குவதற்கென அந்த அலுவலகத்தில் ஒரு அறை  எப்போதும் உண்டு...அந்த அறைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த அயல் நாட்டு அழகு மங்கை , எளிதாக இயல்பாக நட்புறவுடன் பேசி நடந்து கொண்ட அந்த மங்கை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி...இருவர் மட்டுமே அந்த அலுவலகத்தில் அந்த நேரத்தில் அங்கு இருந்தனர்...ஆங்கில மொழி உதவி வேண்டும்... இருவருக்கும் அது ஒன்றே பொது தொடர்பு... மேலும் ஆண் பெண் என்ற இருபால் கவர்தல்...இருவரின் இளமை...அதற்கு மேல் கற்பனை செல்ல வழி இல்லை.. அந்தப் பெண் இரவிருந்து மறு நாள் காலை செல்ல வேண்டிய இட சென்றாரா....அல்லது அன்றே சென்றுவிட்டாரா என்பதெல்லாம் மணிக்கு நினைவில்லை...

ஆனால் ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்தி எப்போதும் நினைக்க நல்ல நண்பராகவே இருக்கிறார். அந்தப் பெண்...முகம் மறந்து போன அந்தப் பெண் எந்த நாட்டிலோ...என்ன ஊரிலோ, என்ன பேரிலோ...எல்லாம் ஒரு நேரம்...அதைத்தான் ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் எனச் சொல்லி இருக்க வேண்டும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

புத்தரைப் போல ஒர் நாள்: கவிஞர் தணிகை

புத்தரைப் போல ஒர் நாள்: கவிஞர் தணிகை
Related image


இரண்டு நாளுக்கும் மேல் ஆகிவிட்டது வீட்டை விட்டு வெளி சென்று.சற்றேறக்குறைய போக வர 2 கி.மீக்கும் மேல் இருக்கும்.நடந்தேன் குடையும் தலைமேல் தொப்பியுமாக... சரியான 11 மணி வெயில்

அது ஒரு சிறு தொழில் நகரத்தின் வழி. ஒரு வேப்பமரத்தினடியில் ஒரு ஆணும் பெண்ணும் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்...அட, இது போல வேப்பங்கொட்டைகளுக்காக கீழ் விழுந்து கிடக்கும் வேப்பம் பழங்களைப் பொறுக்குவதைப் பார்த்து எவ்வளவு நாளாகிறது...அருகே சென்றால் தான் தெரிகிறது அது ஓர் சிறு பட்டறை தொழில் புரியும் இடம், அனேகமாக வெல்டிங் செய்யும் இடமாகவும் இருக்கலாம். வாயிலில் கதவு மூடப்பட்டிருந்தது. இவர்கள் பொறுக்கியது கீழே புழுதி மண்ணில் விழுந்து கிடந்த ஆணிகளை... வேப்பமரத்தை அண்ணாந்துப் பார்த்தேன் அதில் பழங்கள் ஏதும் இல்லை..இப்போதுதான் பச்சையாக இலைகள் இருந்தன.

எனைக் கடந்து ஒரு சரக்குந்து சென்றது வெகு வேகமாக... சரியாக ரயில் பாலத்தினடியில் எந்த வண்டியும்  செல்லாத பாலத்தின் பக்கம் நிறுத்திக் கொண்டார்கள் எதிரே வந்த இருசக்கர மொபைக்கும் அந்த வண்டி அருகே மிக நெருங்கி சென்றது. அந்த வண்டி பின்னால் ஆங்கில எழுத்துகள் கேஎஸ்பி என ..முன்னால் பேரை நான் சரியாக கவனிக்கவில்லை...அந்த முன்று எழுத்துகளில் ஆங்கில ஜே இருந்ததாக நினைவு..

திரும்பி வருகையில் அந்த டேங்கர் லாரியின் மூடியைத் திறக்க முயன்று மேல் ஒருவன்...என்னைப் பார்த்தவுடன் நிறுத்திக் கொண்டான். நான் ஒன்றும் செய்ய மாட்டேன் நீ நடத்துவதை நடத்து என மனதுக்குள் பேசியபடி மறுபடியும் அவனை அந்தக் காட்சியைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்...ஆக்சிட் திருடி ட்யூப் வைத்து அந்த பைக் பேர்வழி கொண்டு வந்த கேனில் இறக்கிக் கொண்டிருக்கிறார்கள் என பார்க்காமலே எனக்க்குப் புரிந்தது அதைப் பார்த்தும் உறுதி செய்து கொண்டேன். எவ்வளவு கன கச்சிதமாக அந்த இடத்தில் நிறுத்தி அந்த திருட்டு வேலையை செய்து கொள்கிறார்கள்...

திரும்பி வருகையில் அந்த ஆணி பொறுக்கிய பெண்ணும், அந்த சும்மா அவளுடன் நின்று கொண்டிருந்த ஆணும்...ஆணியை இரகம்  வாரியாக பிரித்து கூறு போட்டு சேர்த்தபடி இருந்தனர். ஒரு வேளை இதை விற்றால்தான் மதியம் சோறு என்றும் கூட இருக்கலாம்.


பாலத்தடியில் விநாயகரும், அம்மனும் வீற்றிருந்தார்கள்...எல்லா இந்துக் கடவுள்களும், இந்த விநாயகர், ரெண்டுப் பெண்டாட்டிக்கார முருகன்,அவனது தாய்,தந்தை சக்தி, சிவன், திருமால், இப்படி அவர்கள் அனைவருமே அந்த முகமதிய அல்லா கடவுளுக்கு ஆசிஃபா சித்ரவதையில், கொடுங்கொலைக்கு பதில் சொல்லியாக வேண்டியபடி நிலை ஏற்பட்டுவிட்டதே என எண்ணம் என்னுள் துளிர்விட்டது...

அந்தப் பாதையில் இருக்கும் இந்த சினிமா தியேட்டரை என்னவாக்குவது எனத் தெரியாமல் இன்னும் வீம்புக்கு தி புரொடக்டர் என்னும் ஆங்கிலப் படம் காட்டுவதாக சினிமா போஸ்டர் சொல்லியது... கதவுகள் திறந்து கிடந்தன...

புதிதாக சில ஜோதிட நிலையங்களும், கடைகளும்,பியூட்டி பார்லர்களும், பெட்டிக்கடை போல இன்னும் சில எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர்களின் புது போர்டுகளும் காட்சி அளித்தன... அதில் ஒரு மூடப்பட்ட ஜோதிட நிலையத்தில் பேரே வித்தியாசமாக இருக்க...விதி இருந்தால் நீ என்னிடம் இங்கு வந்துதான் ஆக வேண்டும் என ஒரு வாசகம் மிரட்டியது, தமிழனாயிருந்தால் ஷேர் செய் என்னும் வாட்ஸ் அப் செய்தி போல, மனிதராய் இருந்தால் கை தட்டு எனத் தம் பேச்சுக்கு மிரட்டி கேட்டு கை தட்டல் பெரும் முயற்சிக்கும் அசிங்கம் போல...

15.03. 2018ல் கால் வலி என ஒரு ஊசி போடச் சென்று மறைந்து போன சுசீலாவின் தே.மு.தி.க  மேற்கு மாவட்ட கிளை போட்ட ஒரு அடிக்கு ஒரு அடி நோட்டீஸ் வழி எங்கும் ஒட்டியிருந்தது...இன்னும் கிழிபடாமலே, உதிராமலே...

அதில் ஒன்று அம்மா முகத்தின் மேலே ஒட்டப்பட்டிருந்தது...எடப்பாடி கீழே ஏதோ எழுதியதன் அருகே அத்தனை பற்களையும் காட்டியபடி இருந்தார். உண்மையிலேயே அந்த சுசீலா நேரில் இருப்பதை விட இருந்ததை விட அந்த கருப்பு போட்டோ போட்ட‌  போஸ்டரில் நன்றாக சிரித்தபடியே தத்ரூபமாக உண்மை சொரூபமாக சரியான முறையில் இருந்தார். அவரது வீடு எது என அடையாளம் தெரியாமல் இருந்தது...

எதை எழுதினாலும் எனக்கு ஒரு முறை படித்துக் காண்பியேன் எனச் சொன்ன அப்பு முதலியாரின் வீடு இல்லை இல்லை பங்களா அவரில்லாமல் அப்படியே இருந்தது. எனது எழுத்துகளை பெரும்பாலும் வடிவமைத்துக் கொடுத்த செல்வன் பிரஸ் வெறும் பேரை மட்டும் சுவரில் வைத்துக் கொண்டிருந்தது.. மணியை செல்வன் பிரஸ் பணி முடிந்ததா போய்ப் பார்டா என்றால் சைக்கிள் இருந்தும் பல முறை போப்பா எத்தனை முறை போய் பார்ப்பது என சலித்துக் கொண்டது எல்லாம் நினைவுக்கு வந்தது...

அந்த தோழர்.ம.துரைசாமி, அவரது துணைவி, அவரது மகன் செல்வன் என்னும் நாகராஜ் அவரது குடும்பம் இருக்கும் சுவடே இல்லை. எல்லாம் வாடைகைக்கு விட்டு விட்டு வேறு எங்கோ சென்னையோ, பெங்களூரோ, வெளிநாடோ சென்று விட்டார்கள்...

நான் எழுதியதை அழித்திருக்க மாட்டார்கள் என இருந்தேன் பொதுமுனைய போர்டில்... புவி தினம் ஏப்ரல் 22..என்பதில் பு காணோம் மேலும் வேண்டுமென்றே கை வைத்தே கடைசி எழுத்துக்கும் முதல் என்பதில் இடை எழுத்தான த வை அழித்து முல் என அர்த்தமற்றதாக மாற்றுவதாக எண்ணி அர்த்தமற்ற செயல்களைப் புரிந்திருந்தார்கள் எவரோ, சிறுவரோ, கொழுப்பு எடுத்த நபரோ...

எங்கோ ஒரு கிளைப் பாதையில் இருந்து ஒரு உடன்பிறப்பு இரு சக்கர வாகனத்தில் வருவது போல இருந்தது அது அவரோ, வேறு எவரோ, நான் அந்தக் கிளைப்பாதையையும் கடந்து நேர்வழியில் மேட்டில் ஏறி சென்று கொண்டிருக்கிறேன் இலக்கு நோக்கி...

உலகு கை நழுவி, கால் நழுவி போய்க் கொண்டே இருக்கிறது. இப்போது நான் உணர்வது போல ஒவ்வொருவரும் ஒரு நாள் உணர்வார்கள்...எல்லாம் என்னால் கட்ட முடியாத பெரும் கட்டடங்களாய் மாறி இருக்கின்றன..என்னை விட சிறியவர்கள் வாழ வந்தவர்கள் எலலம் மாபெரும் கட்டட சாதனைகள் புரிந்திருக்க, நான் எனது இளமையைப் போலவே இப்போதும் தனியே நடந்தபடி இருக்கிறேன்... அதில் ஒரு கடையில் கொச்சையாகிப் போன பழம் நட்பு ஒன்றும் எனது பார்வைச் சூடு தாங்கமாட்டாமல் தலையை அப்புறம் திருப்பி பார்த்தபடியே இருந்தது...அதனுடன் தான் எத்தனை சுற்றல், எத்தனை திரிதல், எத்தனை அலைதல்....

Image result for buddha images


உறங்கும் போது மரணம் மிக இயல்பானதாக ஒரு பழுத்த இலை உதிர்வது போல இருக்க வேண்டும் என்கிறார்கள் வலி இல்லா நிறைவாக..



புவி எங்கும் காற்று நிறைந்திருக்கிறது. அதில் இருந்து சிறு அளவு தனக்கென எடுத்து சுவாசிக்க முடியாமல் உறுப்புகள் , உடற்கருவிகள் பயனற்று, பலனற்று போக...செயல்புரிந்த புலன்கள் மந்தமாகி  பழதாகி, பழமாகி இற்று சிதைந்து, மாற்றவே முடியாமல் செயல்பாடுகளை எல்லாம் நிறுத்தும் முன் ஒரு சவத்தின் ஊர்வலம் அதுவே சிவத்தின் வலம்...என்கிறார்கள்

இருந்தும் இல்லாதிருப்பது போல...என்கிறார்கள் யோகியை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, April 21, 2018

சேலம் கோட்டத்தின் செயல்பாடுகளில் மேட்டூர் சேலம் பயணிகள் ரயில் புறக்கணிப்பு ஏன்?: கவிஞர் தணிகை

சேலம் கோட்டத்தின் செயல்பாடுகளில் மேட்டூர் சேலம் பயணிகள் ரயில் புறக்கணிப்பு ஏன்?: கவிஞர் தணிகை


Image result for salem to mettur train


20.04.2018 அன்று மாலை சேலத்திலிருந்து மேட்டூருக்கு 5.30 மணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் ரயில் எண்: 56102 ரத்து செய்யப்பட்டது . இது குறித்து துணை மேலாளர் வணிகத்தை தொடர்புகொண்டேன் அவரோ போடிக்கவுண்டன்பட்டி(பெயர் மறந்து விட்டது: ஒரு வேளை போடி நாயக்கன்பட்டியோ!) பால வேலைகள் பணி நடந்து கொண்டிருக்கிறது. அந்த கிராமத்தை சேலத்துடன் இணைக்க நடக்கிறது இந்தப் பணி. பொறுத்துக் கொள்ளுங்கள் நாளை அதாவது இன்று முதல் ரயில் ரெகுலராக இருக்கும் என்றார்.

ஆனால் அந்த ஊர் சேலம் ஜங்சன் அருகே அதாவது மேட்டூர் சேலம் ரயில்வே இருப்புப் பாதைக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதது. சேலம் சந்திப்பில் மேட்டூர் செல்ல வேண்டிய ரயிலும் நின்று கொண்டிருக்கிறது...ஆனால் காரணம் வேறு. காரியம் வேறு.

சேலம் சந்திப்புக்கு அருகே நடைபெறும் இந்தப் பணியின் காரணம் காட்டி நினைத்தால் அல்லது நினைத்தபோதெல்லாம் ஊருக்கு இளைத்தவன் ஆண்டி என்ற இழி மொழிப்படி மேட்டூர் பயணிகள் ரயிலையே குறி வைத்து நிறுத்தி வைத்து விடுகிறார்கள்.

இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி அடிக்கடி இந்த ரயிலைத்தான் நிறுத்தி வைக்கிறார்கள். மேலும் கோவை விரைவு வண்டி வரும் வரை அது எவ்வளவு தாமதமானாலும் காத்திருக்க வைப்பது , நிறைய நபர்கள் இறங்குகிறார்கள் எனத் தெரிந்தபோதும் வண்டிப் பெட்டிகளை சிக்னல் அருகே கூட விரைவாக நகர்த்துவது, அதுவே ரெயில்வே ஊழியர்கள் என்றால் அவர்களுக்கு வேண்டும்படி மாற்றிக் கொள்வது...ரயில் மக்களுக்காகவா? மக்கள் ரயிலுக்காகவா? எந்த காலவரம்பும் இல்லாமல் உதவாத நேரத்தில் இதன் நேரத்தை வைத்திருப்பது...காலையில் மேட்டூரில் இருந்து 9மணிக்கு பக்கமாக சேலத்துக்கு எடுப்பது...இதை எல்லாம் பார்த்தால் மேட்டூர் சேலம் பஸ் ஓனர்கள் நன்கு கவனித்து வருகிறார்களோ என்று சந்தேகம் எழாமல் இல்லை....
Image result for salem to mettur train

எல்லாவகையிலும் சூது செய்து இந்த பயணிகள் ரயிலை நிறுத்தி விடலாம் என ரயில்வே நிர்வாகம் எண்ணி இருக்கிறதோ என்னவோ? மாதா மாதம் பாஸ் அல்லது சீசன் டிக்கட் எடுத்தவர்களின் நிலை என்ன? பேருந்து கட்டண உயர்வின் காரணமாக மிக நன்றாக மக்களும் ரயில் பயணம் நோக்கி  திரும்பி வரும் இந்தக் காலக் கட்டத்தில் இந்த ரயிலுக்கும் இதில் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள மக்களுக்கும் வாழ்க்கையில் இவ்வளவு இடையூறு செய்து விட்டு...வெண்ணிற உடையுடன் ஒரு சாரி சொல்லி விட்டால் கடமை முடிந்தது அவ்வளவுதானே....

இன்று ஹன்ஸ்ராஜ்வர்மா கோட்ட மேலாளருக்கு பதிலாக சுப்பாராவ் என்றவர் பொறுப்பேற்கிறார்...எப்படி இருக்கிறது இவரது மேலாண்மை என பொறுத்திருந்து பார்க்கலாம்.
Image result for salem to mettur train
பொறுப்பில்லாத நிர்வாகம், பொறுப்பில்லாத ஆட்சி, கட்சிகள், மக்கள்...

நின்று கொண்டிருக்கும் ரயிலில் வந்து அசுத்தம் செய்து விட்டு தமது தேவையை முடித்துக் கொண்டு அசுத்தம் சுத்தம் பற்றி எல்லாம் கவலைப்படாத பல வகைப்பட்ட மக்கள், நீர் வசதி சமயத்தில் செய்து வைக்காத ரயில் நிர்வாகம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, April 19, 2018

அவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை.

 அவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை.

Image result for asibaa kasmir raped 8 year old child



மேட்டூர் பயணிகள் ரயிலில் ஏறி அமர சிவப்பு நிற ஈரலைத் துண்டையும் இரு தோள்களில் மாட்டும் பையையும் வைத்து விட்டு வெளியில் வந்த கொஞ்ச நேரத்தில் சீட் மேல் போட்டிருந்த துண்டைக் காணோம்.

அப்போதுதான் அந்த கடைசிக் கம்பார்ட்மென்டில் ஏறியிருந்த 3 பெருங்கூட்டுப் பெண்களில் இருவர் படுத்துக் கொண்டிருந்தனர் ரயில் சீட்களில், இரண்டு சிறுவர் சிறுமிகள்...ஆண் ஒருவர்...

அவர்களைக் கேட்டால் அவர்கள் நாங்கள் பார்க்கவில்லை என எல்லாருமே ஒரே  மாதிரி குரலில் கூறினர்....நான் விடாமல் தீவிரமாகத் தேட ஆரம்பித்து வாய்க்குள் முணகலாக திட்ட ஆரம்பித்த நேரத்தில் ஆரம்பத்தில் பார்க்கவே இல்லை, நாங்கள் எடுக்கவே இல்லை என்றவர்கள்...என்ன தோன்றியதோ எங்கள் துண்டு மாதிரியே இருந்தது என எடுத்து வைத்துக் கொண்டோம் என பையிலிருந்த துண்டை எடுத்துக் கொடுத்தார்கள்...உடனே அதை இன்று துவைக்க ஊறவைத்திருக்கிறேன். நாளைதான் அதை துவைக்க வேண்டும்.

அந்த குடும்பத்து சிறுவன் ஓடி ஆடிக் கொண்டிருந்தான், நல்ல வேளை விழவில்லை எங்கும். ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே படியருகே எல்லாம் சென்றான் நான் என்னையறியாமல் கத்தி எச்சரிக்கை செய்தேன்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் அந்த சிறுமி வாந்தி எடுக்க ஆரம்பித்தாள் அந்த வாந்தியை நீர் கொண்டு கழுவி விடாமல் ரயிலின் இரண்டு ஓய்வறைகளிலுமே அசுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள்..அதைப் பற்றி எந்தக்கவலையுமே சுத்தப்படுத்தல் பற்றி அவர்களுக்கு இல்லை.

அவர்கள் பேச்சும், நடையும், ஏன் இன்னும் இவர்கள் இப்படியே இருக்கிறார்கள் ஏன் இவர்களுக்கு தூய்மை பற்றி சிந்தனை இன்னும் வரவே இல்லை... இந்த திருட்டுக் குணம் அல்லது பொய் சொல்லும் போக்கு எல்லாம் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கிறது...

நான் இவர்களுக்காக பல்லாண்டு காலம் சேவை செய்தேன்...எல்லாரும் செய்திருக்கிறார்கள்...


Image result for asibaa kasmir raped 8 year old child

அதே போல அந்த காஷ்மீரக் காடுகளில் திர்ந்த அசிபா கதை...கால்கள் முறிக்கப்ப்ட்டு மாத்திரை கொடுக்கப்பட்டு, முதுகெலும்பு ஒடிக்கப்பட்டு, தலையில் கற்களை போட்டு அந்த உடலை தூக்கி எறிந்து இறுதியாக நல்லடக்கத்துக்கும் வழி தராமல் துரத்தி அடித்து...தேசியக் கொடியை பிடித்து...காவலர்கள் என்று போர்வை போர்த்தி,...அரசு ஊழியர்கள் எனப் பாசாங்கு செய்து இந்து என்ற மதமாச்சரியம் செய்து....விலங்கையும் விட கேவலமான பொல்லாங்கு செய்து கோவில் இவர்களுக்கு எல்லாம் ஒரு கேடு, சாமி ஒரு பாடு என...இவர்கள் எல்லாம் ஏன் இன்னும் இப்படியே இருக்கிறார்கள்?

தினசரிகளில் ஒன்றிரண்டு செய்திகளாவது தினமும்...சொந்த தாத்தாவே பேத்தியை 6 வயது பேத்தியை என்றெல்லாம். அந்தக் கிழவனுக்கும் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டு தண்டனையாம்..
Image result for asibaa kasmir raped 8 year old child



என்னடா நடக்குது நாட்டுல? இது நாடா வெறும் காடா? நாதி இல்லையாடா கேட்க என்னடா ஒங்களுக்கு மதம் போட்டுக் கிழிக்குது...

வேலை படிப்பு எல்லாவற்றிலும் இட வசதி...இப்படியாக 70 ஆண்டுக்கும் மேலாக செய்தும்...ஏன் இவர்கள் எல்லாம் இப்படியே இருக்கிறார்கள்...ஆய்வு செய்ய வேண்டிய நிலை...ஐநாவில் இதுவரை இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் எழுபத்தி ஏழாயிரம் பேர் என்று கணக்கு கொடுத்துவிட்டு அந்த நபர் அழுகையை நிறுத்த முடியவில்லை என வீடியோ காண்பிக்கிறாது...பாக்கிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை எல்லாம் குற்றம் சொல்ல இந்தியாவுக்குத் தகுதி இருக்கிறதா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, April 18, 2018

இரு மன இணைப்பிற்கு ஒரு திருமண வாழ்த்து:கவிஞர் தணிகை

                   இரு மன இணைப்பிற்கு ஒரு திருமண வாழ்த்து

நாள்: 20. 04. 2018                        இடம்:வசந்தம் திருமண மண்டபம்
நேரம்: 7.30  9.00                          மேற்கு மாம்பலம்.சென்னை.

மணமகன்: ச. பரத் எம்.டி.எஸ்           மணமகள்:ரம்யா(எ)அபூர்வா எம்.டி.



Related image





Related image




நேர்மையின் இலக்கணம்
பரதன் எனச் சொல்லும் இராமாயணம்...

இனி டாக்டர் பரத்தின் பேச்செலாம் ஒளிரும் இந்த ரம்யாயாணம்.
அரிதான இந்த அபூர்வமான மருத்துவர்கள் சேர்க்கையில்
எனது எழுத்துகள் என்ற பூக்களுக்கு நாராகிறது இவரின் பண்பு

பரத் ஒரு அடக்கமான அழகு
அழகான அடக்கம்.

ஒரு கால் மணம் என்று சென்னையிலும்
மறு கால் வரவேற்பு என புனேவிலும் வைக்கும் வாமணன்

இவர்களின் சேர்க்கைக்கு சாட்சியாய் யாவும் நிற்கிறது
இயற்கையின் எல்லாம் ஒளிர்கிறது...

இவர்களின் புத்தம் புது வாழ்வுக்கு
ஒரு பூச்சொரிதல் நிகழ்வாக எனது வார்த்தைகளும்
வலம் வருகிறது.. வாழ்வாங்கு வாழ , பதினாறும் பெற்று பெரு வாழ்வாக‌

Related image





என்றும்
வாழ்க

கன்றுகள் புவியினைக் கீறி உங்களது புகழைக் கூற

வாழ்த்துகள்
அன்புடன்

Image result for rose flower paths to new married couples


கவிஞர் தணிகை
த.சண்முகவடிவு
த.க.ரா.சு.மணியம்.

Tuesday, April 17, 2018

டாக்டர் வாசவய்யா எழுதிய‌ வாய் இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும்: கவிஞர் தணிகை

 டாக்டர் வாசவய்யா எழுதிய‌ வாய் இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும்: கவிஞர் தணிகை
Image result for veterinary science


கால்நடை மருத்துவர் டாக்டர் வி. வாசவய்யா அவர்கள் எழுதி  2010 ல் வெளியிட்ட வாய்  இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும் என்ற நூலை நான்  பொது மக்கள் தொடர்பு அலுவலராக இருந்து வரும் பல் மருத்துவக் கல்லூரியின் துணை   முதல்வரும் பேராசிரியருமான டாக்டர். வா. சுரேஷ்குமார் வழங்கி படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்.

நான் எப்போதுமே ஆர்வத்துடன் ஒரே முச்சில் ஒரு புத்தகம் படிக்க அவாவுறுகிறேன் என்றாலே அந்தப் புத்தகம் நல்ல நடையில் நல்ல சமூகப் பயன்பாட்டுடன் சொல்லப்பட்டிருக்கிறது  என்றே பொருள்.

இணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் வாசவய்யா  இந்த நூலை  தமது காலப் பதிவாக தந்துள்ளார்.  ஒரு வயதான மூதாட்டி காக்கா தூக்கிக் கொண்டு வந்து தவறிப் போட்ட கோழிக்குஞ்சை காப்பாற்றச் சொல்லி  வேண்டுகோள் கொடுத்ததை துச்சமென கருதாமல் உயிராக கருதி மருத்துவ சிகிச்சை கொடுத்தது முதல் பல்வேறுபட்ட சூழலில் பல்வேறுபட்ட கோழி ,பறவை, கால்நடைகள் யானை உட்பட சிகிச்சை அளித்தவரை மட்டுமல்லாமல் கிண்டி அறிவியல் பூங்காவில் பல் வேறுபட்ட மிருகங்கள் சிங்கங்கள் முதல்  சிற்றுயிர்கள் வரை தம்மால் உயிருதவி பெற்றதையெல்லாம் மறக்காமல் பதிவு செய்துள்ளார் மனிதர் என்னும் பெருந்தன்மையுடன்.

இத்தனைக்கும் அடித்தளம் அவரின் அம்மா போட்ட பிள்ளையார் சுழியே என்றும் தெரிவித்துள்ளார். அவரின் அம்மாவே, அவர் என்ன மேல் படிப்பு படிக்கலாம் என்று கேட்டதற்கு : வாயில்லா ஜீவன்களுக்கு மருத்துவ சேவை செய்யும் படிப்பைப் படி என்றாராம்.

அந்தப் படிப்பை அவர் தேர்வு செய்து படித்ததும் அதன் மூலம் கால் நடை மருத்துவரான பின் அவரின் வாழ்க்கை போன பயணமும் மிகவும் சுவாரஸ்யமானவையும் ருசிகரமாயும் அவருடைய எண்ணத்தை எழுத்தாக்கி நமக்கெல்லாம் தந்து  இருக்கிறார்.
Image result for hen and animals


உயர்ந்த அனுபவம், செறிந்த கருத்துகள், தேர்ந்த வெளிப்பாட்டுடன் உண்மை உள்ளீடாக அமையும் எந்தப் படைப்பும் வணங்கத் தக்கதாகிவிடுகிறது. அதில் இயற்கை குடி கொண்டு விடுவதால்... உன்னத நிலை அடைந்து விடுகிறது.

பல்வேறுபட்ட ஊர்களில் பல்வேறுபட்ட அனுபவங்கள்...நட்டத்தில் இயங்கிய அரசுக் கோழிப்பண்ணையை முன் மாதிரியான இலாபத்துடன் இயங்கும் அரசுக் கோழிப்பண்ணையாக்கியது, மேலும் அரசாங்கத்தின் கெடுபிடி மீறி செய்யும் நல்ல செயல்கள், இலஞ்சம் ஊழல், அரசியல் பம்மாத்துகளை எல்லாம் மீறி செய்யும் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நல்ல முறையில் நியாயமாக விளக்குகிறார்.

இவர் இந்த புத்தகத்தை இன்னும் நல்ல முறையில் விரிவாகச் செய்து செதுக்கி இருந்தால் கால்நடைக் கல்லூரி பல்கலைக் கழகங்களுக்கு பாடமாகவே வைத்திருக்கலாம்.

Image result for good ground work to uplift society


இது போல அடித்தட்டில் களப்பணியாளராக இருந்து நியாயமாக நேரமையாக  செயல்புரிவோர்தாம் நல்ல ஆட்சி அதிகாரத்தில் இருந்திருப்பின் நல்ல பணிகளை செய்து மக்களுக்கு அற்புதமான நற்செயல்களை புரிய ஒரு காரணமாக அமைந்திருக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத கருத்து.

கால்நடைகள் எப்படி உணர்வு பூர்வமானவை என்பதை இவரது பசுவும் பஸ்ஸும் என்ற அத்தியாயத்தில் காணலாம். இது நீதி மன்றம், வழக்கு என்று கூட போனதாகவும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி உள்ளார். தனது கன்றுகுட்டியை இடித்து விடுமோ என்று இந்தப் பசு பஸ்ஸை சென்று முட்டி விடுகிறது அதனால் அதற்கு கொம்பு வளைந்து விடுகிறது. பசுவுக்கு நட்ட ஈடு தருவதா பஸ்ஸுக்கு நட்ட ஈடு தருவதா என்று நீதிபதிகள் தீர்ப்பு சொல்லப் புகும்போதுதான் அந்த உண்மை வெளிவருகிறது. அதாவது பேருந்து பசுவை இடிக்கவில்லை, பசுதான் போய் பேருந்தை இடித்திருக்கிறது என்று...

கால் நடைகளுக்கு சேவை செய்த இவரது இலட்சியம் இலக்கு இளைஞர்கள்  உள்ளத்து உறுதியுடன் நாட்டை மாற்றுவார்கள் என்பதே...

நூலின் விலை 60 , பக்கம்: 80. மூங்கில் பதிப்பகம், 82, கூலண்ணன் தெரு கம்பம் 625516. அச்சிட்டோர்: வைகை பிரிண்டர்ஸ் மதுரை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, April 15, 2018

சில மழைத் துளிகள்: கவிஞர் தணிகை

சில மழைத் துளிகள்: கவிஞர் தணிகை


Related image


எங்கு பார்த்தாலும் ஏமாற்று, வஞ்சகம், பொய், வன்முறை, கடத்தல், அரசியல் புலைத்தனம், சிறுமி வன்புணர்ச்சி, நீர்ப் பங்கீட்டுக்கு எதிர் வினைகள்,மத்திய மாநில அரசுகளின் கையாலாகாத் தனம்... இப்படி சொல்லொணாத் துயரங்களும், துன்பங்களும் தலைவிரித்தாடுகையில் கொடும் கோடையின் தாக்கமும் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்து சேர்ந்து விட்ட நிலையில்...

அண்மைக் காலத்தில் சில செய்திகள் நல்லனவற்றையும் காண நேர்ந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாக: அவற்றுள் சில:

Image may contain: Vaa Manikandan, eyeglasses

வா . மணிகண்டன் என்னும் முக நூல் நண்பர் தம் வழியே சுமார் அரை கோடி வந்ததாகவும் அதை அப்படியே ஏழை எளிய தேவைப்படுவார்க்கு திருப்பி விட்டதாகவும் அதன் கணக்குகளை அப்படியே கொடுக்க எந்தவித கடினமும் இல்லை அப்படியே பாஸ்புக்கின் கணக்கை காட்டி விட்டேன்.. என மிக எளிமையாக சொல்லி இருக்கிறார். அதுதான் சரியான கணக்கு.

அப்படிப்பட்ட நபர்கள் தாம் நமது சமூகத்தின் தற்போதைய தேவைகள். எனகும் கூட அது போன்று செய்யவேண்டும் என்ற உந்துதல் இருந்தது உண்மை ஆனால் எனது வட்டம் வேறு வழி சென்று கொண்டிருக்கிறது...

அட நம்ம 21 காமன்வெல்த் கோல்ட் கோஸ்ட்  2018ன் விளையாட்டுகளில் இந்தியா 26 தங்கப்பதக்கங்களுடன்  66 மொத்தப் பதக்கம் பெற்று ஆஸ்திரேலியா , இங்கிலாந்து போன்ற வல்லரசுகளுக்கும் அடுத்து  3 ம் இடத்துக்கு வந்துள்ளது 71 நாடுகள் பங்கேற்றதில் கனடா போன்ற நாடுகள்  இந்தியாவுக்குப் பின் வர....
Image may contain: 2 people
வழக்கமாக ரத்னவேல் அய்யா திருவில்லிப்புத்தூர் தமது சேவையை வயது ஒரு பொருட்டின்றி ஒருங்கிணைப்பு செய்து வருவதும்...


சினிமா புதிய தமிழ் சினிமாக்கள் வராமல் நிறுத்தப்பட்டதும், ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கு எதிரான ஒரு இயக்கம் ஏற்பட்டதும்... அது தமிழகத்துள் விளையாட்டு அரங்கத்துள் நடக்கக் கூடாது என்றதும்...

பாடகர் சீனிவாசன், பாலாஜி, ஸ்ரீக்காந்த் போன்றோருக்கு அது பிடிக்காமல் போனால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்? ஐ.பி.எல் போன்ற வியாபார நோக்கத்துடன் நடத்தப்படும் விளையாட்டுகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என லலித் மோடிக் காலத்திலேயே நமது பதிவுகள் வந்திருப்பதை என்னை நினைவில் வைத்திருப்பார் மறந்திருக்க முடியாது..

நாம்  20 ஓவர் மேட்சை விட 10 ஓவர் மேட்ச் ஆடுங்கள் என எழுதி இருந்ததையும் நினைவு படுத்திப் பார்ப்பார்க்கு தெரியும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, April 14, 2018

சேலத்து விளம்பி: கவிஞர் தணிகை

சேலத்து விளம்பி: கவிஞர் தணிகை

Related image


தமிழ் ஆண்டுகளில் இது முப்பத்தி இரண்டாம் ஆண்டாக வருகிறதாம் இந்த விளம்பி ஆண்டு. விளம்பல் என்றால் சொல்லியதைச் சொல்லல், அல்லது சொல்லுதல் பிறர் எழுதியதன் மேல் மேலும் மேலும் திரும்பத் திரும்ப எழுதல் என்ற பொருள்படும்.

நேற்று சேலத்தை சேலம் சந்திப்பு முதல் கன்னங்குறிச்சி வரை சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சேலம் வெகுவாக வளர்ந்திருக்கிறது. எல்லா இடங்களிலும் பெரும் கூட்டம்.

கட்டடங்கள் மாறி இருக்கின்றன. ஆனால் கன்னங்குறிச்சிக்கு சுமார் 10 அல்லது 10.30 மணிவரைதாம் பேருந்து தொடர்பில் இருக்கிறதாம். அதே கோவிலைச் சுற்றித்தான் பேருந்து வந்து நிற்கிறது. கோவிலைச் சுற்றி பயணிகள் காத்திருப்போர் அமர என ஸ்டீல் நாற்காலிகள் இருக்கைகளாக போடப்பட்டிருக்கிறது நல்ல வசதி...

மதுவிலக்கு எம்.எல்.ஏ  வேட்பாளராக எங்களால் நிறுத்தப்பட்டு சுமார் எண்ணூறு சொச்சம் வாக்குகளைப் பெற்று கட்டிய இருப்புத் தொகையை இழந்து போனாலும் எமக்கு அதுவும் ஒரு வெற்றிதான்...சசிபெருமாள் உயிரை விட்டு புகழ் பெறுமுன்பே இந்த  பரீட்சையை நாங்கள் நிகழ்த்தி இருந்தோம்...அந்த எம்.எல்.ஏ வேட்பாளரான சின்ன பையன் அவர் 70 வயதுக்கும் மேல் வாழ்ந்த பெரிய மனிதர்...உண்மையான காமராஜர் வாரிசுதாம் எங்களைப் பொறுத்தவரை கன்னங்குறிச்சி என்றால் அது சின்னபையன் தான். சின்னபையன் இல்லா கன்னங்குறிச்சிக்கு நான் சென்றது சில வாரங்களுக்கு முன் இடுப்பு சேர்க்கை எலும்பை செயற்கையாக வைத்து அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் எனது மூத்த சகோதரி ஒருவரைப் பார்க்கும் பொருட்டுதாம்.

சின்ன பையன் கதர் வேட்டி, கதர் சட்டை காலில் செருப்பில்லாமல் ஓடி ஆடித்திரிந்த ஒர் குடும்பமில்லா கட்டை பிரம்மசாரி, கைப்பந்து பயிற்சியாளர் வேறு அவருக்காக அவர் கோரிக்கைக்காக அவர் வேண்டுதலுக்காக பல முறை பல்வேறு சம்பவங்களில் அவர் ஊர் சென்று நான் உரையாற்றி இருக்கிறேன். அவருக்கு எனது பேச்சு என்றால் அவ்வளவு பிடிக்கும்.

எனது சகோதரி ஓய்வெடுக்க என்று இருந்த வீட்டில் அவரை கவனித்து பாதுகாத்து வரும் ஒரு மங்கை அவர் தமது மகளுக்காக ஒரு சிறு நீரகத்தை பரிசளித்தவர், மேலும் மகளின் சரி இல்லாத குடும்ப நிலைக்காக மாதா மாதம் தனது கணவரின் மறைவுக்காக கிடைத்து வரும் ஓய்வூதியத் தொகையிலிருந்து சுமார் பத்தாயிரம் மாதம் வழங்கி வாழ வைத்து வருபவர்... என அவரைப்பற்றி நிறைய தகவல்கள்.

அஸ்தம்பட்டியில் கொஞ்சம் பழங்கள் வாங்கலாம் என கடை தேடி ஒரு சிறிய கடையைப் பிடித்து வாங்கிக் கொண்டேன் அங்கே விலை அதிகமாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன்.... சாத்துகுடி 3, ஆரஞ்சு 3, ஆப்பிள் 3 எல்லாம் சேர்ந்தே ரூஉ: 180...
Image result for selam and tamil new year
கொண்டு சென்றதை சகோதரிக்கு கொடுத்து விட்டு, தேறுதல் சொல்லிவிட்டு திரும்பி கன்னங்குறிச்சி கோவிலிலிருந்தே பேருந்து ஏறிக் கொண்டேன். நகர பேருந்து நிலையம் நோக்கி.

அங்கொரு கடையில் சித்திரக் கனிக்கென சிறிய அளவில் அதாவது மகனும் வெளியூரில், இருப்பதால் வழக்கமாக செய்வதை காரணமாகக் கொண்டு சிறிய அளவில் செய்யலாம் என விலை கேட்டால் ஆப்பிள் கிலோ விலை ரூஉ.180 ஆம் கிலோ. எடையும் தெளிவாக நமக்கு வாங்குவார்க்கு தெரியாதபடியே இருக்கிறது. அரை கிலோ போதும் என்றால் 3 பழம் கொடுத்து அது முக்கால் கிலோ என 130 ரூ எடுத்துக் கொண்டார். சாத்துகுடி, ஆரஞ்சு ஆகிய பழங்களும் சிறிய அளவில் இருந்த போதிலும் அதுவும் 180, 170 எனச் சொன்னதால் வாங்க மறுத்து, பிளாஸ்டிக் பை வேண்டாம் எனச் சொல்லி அந்த 3 பழங்களை எனது அலுவலகப் பையிலேயே வைத்துக் கொண்டு திரும்பினேன். அவருக்கு இல்லையே அஸ்தம்பட்டியில் ஒரு கடைக்காரர் ஆரஞ்சு கிலோ ரூஉ `100 என்றும், சாத்துகுடி ரூஉ. 80 என்றும் தான் சொன்னார்கள்...இப்படி விற்றால் வாங்குவார் , வேலை செய்வார் அவ்வளவுதான் எனச் சொல்லி விட்டு வர முற்படுகையில் மற்றொருவர் வந்து பழங்கள் விலை கேட்க என் முன்னாலே அந்தப் பக்கம் விலை ரூஉ.180, இந்தப்பக்கம் ரூஉ. 170 என்கிறார், ஒருவேளை ஆளைப்பார்த்து அவர் உடை பார்த்து விலை சொல்பவராய் இருக்கிறாரோ..இவர் போன்றவர்க்கெல்லாம் ஒரு அழுக்கு வேட்டி கட்டித்தான் கடைக்கே போய் இருக்க வேண்டும் போலிருக்கிறதே...என அந்த மனிதன் எவ்வளவு போலியாக நம்மை ஏமாற்றுகிறான் எனத் தெரிந்தபடியே நொந்தபடியே வந்தேன்.

சற்று நகரப் பேருந்து உள் வந்ததும் ஒரு அம்மாவும் , மகனும் சிறிய அளவில் ஒரு தட்டத்தில் பெரும் சாத்துகுடிபழங்களையும் ஆரஞ்சு பழங்களையும் கிலோ ரூஉ: 80, மற்றும் 100 என்று அஸ்தம்பட்டிக் கடைக்காரர் சொன்ன அதே விலையை சொன்னார்கள்...அங்கும் பிளாஸ்டிக் பை வேண்டாம் எனச் சொல்லி...அது எரித்துவிடலாம் எனச் சொன்ன அவர்களுக்கு அது எரித்தாலும் சுவாசிக்க கேடுதாம் என்று சொல்லி விட்டு.. வாங்கிக் கொண்டேன்.

அந்த அஸ்தம்பட்டி கடைக்காரர் எவ்வளவு நியாயமாக விற்பனை செய்தார் ஏன் இந்த நகரப் பேருந்து நிலையம் வெளியே இந்த கடைக்காரர் இவ்வளவு அழிய விலை சொல்கிறார் என எண்ணப் பொருமல்...வீட்டில் வந்து பார்த்தால்...அந்த 3 ஆப்பிள் பழங்களில் ஒன்று அழுகிய பழம். மாற்றி கொடுத்திருக்கிறார்...ஆக அந்த நன்றாக இருந்த இருக்கும் என நினைத்து வரும் 2 பழங்களுக்கு ரூ. 130 ரூ  நல்ல வியாபாரம். குலம் விளங்குமா?

இதற்காகத்தான் நான் எப்போதும் பழங்கள் எல்லாம் வாங்க முற்படுவதேஇல்லை. என்றாலும் சில நேரங்களில் இப்படித்தான் மறுபடியும் ,மறுபடியும் நேர்ந்து விடுகின்றன....

சரவணா பேக்கரீஸ் வந்து ஒரு  டப்பாவில் அடைத்து 12 ஆம் தேதியிட்ட கீ பிஸ்கட் (வெண்ணெய் பிஸ்கட் வாயில் வைத்தாலே கரையுமே அதுதான்) அதுவும்  இரண்டு  மில்க் கேக் வாங்கி அதற்கு மோடி சர்க்காரால் போடப்பட்ட ஜி.எஸ்.டி வரியை 14 ரூபாயும் சேர்த்து கட்டி விட்டு...

மோடியும் அந்த பாழாய்ப்போன திருட்டு எண்ண வியாபாரியாய் இருந்த  அந்த நபரையும் சபித்துக்கொண்டே எனது விளம்பி ஆண்டு அல்ல அல்ல சித்திரைப் பிறப்பை சித்திரக்கனியை இந்த ஆண்டும் நகர்த்தி விட்டேன்...

ஏழைக்கெல்லாம் இனி நியாயமாக சம்பாதித்து வாழ்க்கையை நகர்த்துவார்க்கு எல்லாம் எந்த திருவிழாவும் இல்லை...ஆமாம் தை தமிழ் ஆண்டு பிறப்பா...சித்திரையா ஜெவா, மு.கவா...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, April 8, 2018

திரும்பி வராக் காலமும் திரும்பக் கிடைக்கா அந்த உலகும் : கவிஞர் தணிகை

திரும்பி வராக் காலமும் திரும்பக் கிடைக்கா அந்த உலகும் : கவிஞர் தணிகை

பன்றி மேய்க்கும் அந்த மனிதன் தலைமுடிக்கு ஈயம் என்றுதான் அவன் சொன்னது, அதாவது அலுமினியப் பாத்திரம் தருவதாக வீடு வீடாக வீதி வீதியாக கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தான். இப்போதுமா இந்த வியாபாரம் இருக்கிறது?
Image result for no time returns no world reverse

எனது நினைவின் வீச்சு விரிந்தது.

அரை நூற்றாண்டு ஓடிவிட்டது.

இதே வீடு, இதே சந்து ...வீட்டில் அம்மாவுடன் 6 பெண்கள் , கெம்ப்ளாஸ்ட் கழிவு நீர் நன்னீர் ஓடையில் வழி அனுப்பப் பட்டதால் முடி எல்லாம் கொட்டுகிறது என ...நீண்ட கூந்தலில் இருந்து உதிரும் தலைமுடியை எடுத்து பத்திரமாக ஒரு மஞ்சப் பையிலும், ராட்டையில் நூல் நூற்று அதற்காக வாங்கிய கதர்ப் பையிலும் போட்டு நிறைய வைத்திருப்பார்கள்.

ஒரு நாள் சவுரி கட்ட என இந்தப் பெண்கள் வருவார்கள்...அன்று முழுதும் வெகுவான வேடிக்கையாக இருக்கும். வாயெல்லாம் வெற்றிலை எச்சில் வழிந்தோட... வீட்டில் சேர்த்து வைத்திருந்த தந்த சொந்த முடியில் சவுரி கட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

இடையில் அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும், நீராகாரம், அதாவது கம்பங் கூழ், களி கரைத்தது, அல்லது நெல்லஞ்சோற்று நீர் ஊறுகாயுடன் அவர்களுக்கு கொடுக்கப்படும்.

அந்த சவுரிகளை கட்டி முடிக்க கொடுக்கும் கூலியில் இதெல்லாம் அடங்காது.

என் அம்மா கூட சிறியதாக நைஸாக ஒரு சவுரியை வைத்து கட்டி சிறியதாக ஒரு குடுமியிப் போட்டிருப்பார்கள். பெரிய பெரிய சவுரி எல்லாம் நல்ல விலைக்கு விற்பனையும் நடக்கும். உடன் அக்கம் பக்கம் பெண்கள் எல்லாம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சவுரி கட்டிக் கொள்ள வருவார்கள், அல்லது சவுரி வாங்க வருவார்கள்...


இது உதிர்ந்து விட்ட ரோமம், நெடுஞ்செழியன் அம்மா ஜெ கதை அல்ல...

வளையல் போட என்று இலட்சுமி என்று ஒரு அம்மா வயதுடைய ஒரு பெண் வருவார் ஒரே கூத்தும் கும்மாளமாயும் இருக்கும், அவளே இவளே, அடியே என்றுதான் பேசுவார் கொஞ்சம் முன்னால் துருத்திய பற்கள் மேல் தெரு சுப்ரமணிய சாமி கோவில் வீதி....அதுவே அப்போது மிகத் தொலவில் இருப்பதாகத் தோன்றும்...இப்போது நினைத்தால் அது மிக அருகே இருப்பதாகத் தோன்றுகிறது அங்கேதான் அவர்கள் வீடு....ஆனால் வீடு தேடி வந்து வளையல் போடுவார்...

கண்ணாடி வளையல், ரப்பர் வளையல் என்று விதவிதமாக உயர உயரமான வட்ட வடிவ அட்டைகளில் போட்டு நிற்க வைத்து  கூடை நிறையக் கொண்டு வருவார் அதிலும் கட்டுக் கட்டி கூடை நிறைய வளையல் கட்டுகளும், விலை உயர்வு என அட்டைப்பேட்டிகளிலும் செட் வளையல்கள் இருக்கும்...அதின் உச்சமாக நான் ஹைதராபாத்தில் தலைமை இடத்தில் பணிபுரியும்போது ஹைட்ராபேட் பேங்கல்ஸ் என்று மிகவும் பிரபலமான வளையல்கள் எல்லாம் வாங்கி வந்தது வரை....நினைவுதான்...

ஆனால்...அந்தக் காலத்தில் இலட்சுமி அம்மா அவளும் எங்க வீட்டுப் பெண்கள் போல சிவந்த நிற ராசிப் பெண் தாம். சிவப்பு நிறம் என்றாலே அழகு என்று நம்புகிறார்கள் இன்னும் இந்தியாவில்...அந்த நம்பிக்கையை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிய முடியவில்லை அல்லவா...எங்கள் வீட்டிலும் 5 அழகிய பெண்கள்...அழகில் குறைச்சல் என்றால் அது நாங்க 3 பசங்களாகத்தான் இருக்க வேண்டும்..அதிலும் நான் கடைசிப் பையன். எனக்கும் ஜடை போட்டு, நடு வகிடு எடுத்து அழகு பார்த்த குடும்பம் என்னுடையது...அவ்வளவு நீண்ட முடியிருக்கும் எனக்கும்...

எப்போது பார்த்தாலும் ஏதாவது விசேஷம் இருக்கும், யாராவது ஒரு பெண் வயதுக்கு வந்திருப்பது, ஒருவர்க்கு மணம் நிச்சயம், ஒருவர்க்கு திருமணம், ஒருவர் முழுகாமல் இருக்கும் வளைகாப்பு, ஒருவர்க்கு பிள்ளைப் பிரசவம் என எப்படியும் அடிக்கடி ஒரு விஷேசம் வைபவம் வந்து கொண்டே இருக்கும். அல்லது ஆடி 18, தீபாவளி, பொங்கல் என திருவிழாக்கள்...எல்லாமே பெண்கள் அதன் அலங்காரங்கள் என்று பேர் சொல்லத்தானே...

இந்த இலட்சுமி அம்மா வளையல்காரி வளையல் போட்டு விட்டால் அது மறுமுறை அழைத்து போடும் வரை பொலிவு குறையாமல் இருக்கும்... அக்கம் பக்கம் வீட்டுக்காரப் பெண்டு பிள்ளைகள், உறவினர் பெண்கள் எல்லாம் வந்து வளையல் போட்டுக் கொள்வார்கள்.... ஏன் பிரேமா டீச்சர், விஜயா அக்கா, வேடர்பட்டியிலிருந்து சிதம்பரத்தை மணமுடித்து எங்கள் குடும்பத்தோடு ஐக்கியமாக இருந்த தேவகி எல்லாம் கூட வளையல் அணிந்து கொள்ள இந்த வீட்டுக்குத்தான் வருவார்கள்...இவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது இல்லை...

Related image


அவரைப் (இலட்சுமி அம்மா செட்டியார் இனத்தை சேர்ந்தார் என நினைக்கிறேன்) பொறுத்த வரையிலும் கூட காசு வாங்குவது கொடுப்பது பெரும் வர்த்தகமாக இப்போது நினைத்தாலும் நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது அது தான் பிரதானம் என்றிருந்தாலும் அந்த நடைமுறை...அந்த அன்னியோன்யம் அந்த குடும்பப் பாங்கு...இதெல்லாம் தான் முன்னே நினைவில் நிற்கிறது... நிறைய காசு பணத்துக்கு வளையல் வாங்கப்பட்டிருக்கிறது...இப்போது அதன் தேவை எல்லாம் தங்கத்தில் இருந்தாலும் நல்ல முக்கியமான குடும்பத் தேவைக்கு  திருவிழாக்களுக்கு வளையல் இடம்பெறுவது என்பது மட்டும் ஒரு அடையாளமாக இருக்கிறது...

தயிர்க்காரி அல்லது மோர் விற்கும் அந்த சிவந்த நிறப் பெண்ணும் பொட்டனேரி அது மேச்சேரி அருகே இருக்கிறது...அங்கிருந்து வருவார்...மோர் தயிர் விற்று முடித்து வீட்டில் கொஞ்சம் அமர்ந்து அப்படி என்னதான் இருக்குமோ முதலியார் வீட்டம்மா, அதன் பெண்டு பிள்ளைகள்  எனப்  பார்க்காமல் போகவே மாட்டாள்...அவர் எல்லாம் இப்போது இருக்க வாய்ப்பே இல்லை...ஆனால் அவரின் உருவம் அப்படியே தக தக என நினைவில் நின்ற போதும் அவரின் பேர் கூட மறந்து விட்டது...


Image result for milk and butter milk curd

பால்கார ஐத்தா இவர் மாநிறம், வெற்றிலை, புகையிலை போடும் கறை படிந்த பற்கள்,,, புற்று நோய் வந்த பிறகு முடி கொட்டி முடி உதிர்ந்து விட்ட நிலையில் கூந்தலில் முடி குறைவாகவே இருக்கும்... தண்ணீர் கலக்காமல் அவ்வளவு அருமையாக பால் கொண்டு வந்து தவறாமல் ஊற்றுவார், குடும்பத்தோடு அவ்வளவு நெருக்கம், ஒட்டுதல் , தாய் பிள்ளைகளாகவே பழகினர், எப்படி இந்த அந்நிய மக்களோடு எல்லாம் அவ்வளவு ஒட்டுதல் இருந்தது , எப்படி அப்படி ஒரு சொந்தங்கள் எல்லாம் உண்டாயிருந்தது என்று இன்று நினைத்தாலும் நம்ப அரிதாக இருக்கிறாது.

 இவரது கணவரை அவ்வளவு அருமையாக கவனித்துக் கொண்டார்...அவள் தம்மை கவனிக்காமல் விட்டு சீக்கிரமாகவே போய்ச் சேர்ந்து விட்டாள். அவள் கணவன் சரியான கில்லாடி அவள் இறந்த பிறகு வெளியே எங்குமே ஒரு வார்த்தை கூடப் பேசாமல்  ஊமாண்டி (ஊமையாண்டி)   போல இருந்த அவன் சரியான அமுக்கன், இன்னொரு பொண்டாட்டி கட்டி இன்று வரை வசதி வாய்ப்போடு வாழ்ந்து வருகிறான்..

அடுத்து கட்டில் கடைக்காரி இந்த அம்மா பேரும் இலட்சுமிதான்...ஒரு சிறிய கட்டில் போட்டு அதில் சில பாட்டில் மூடிகளில் மிட்டாய், முறுக்கு, போன்ற தின்பண்டங்கள், குச்சிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றையும் பருவகாலங்களில் பனங்கிழங்கு போன்றவற்றையும் வேகவைத்து விற்பனை செய்தவர், எப்படியோ ஒரு சாலை போன்ற வீட்டிலேயே காலம் தள்ளி வெகு காலம் வாழ்ந்தார். அந்த கட்டில் கடையில் தாமும் சாப்பிட்டு, தமது மில்லில் வேலை செய்த மகன் குடும்பத்துக்கும் மருமகள் சரியில்லை, மகனை அடித்து விடுகிறார் என கதை கதையாகச் சொல்லிக் கொண்டே தமது செலவுக்குப் போக மீதி ஆகும் காசை தமது மகனுக்கு கொடுத்து உதவுவார்...அவரும் இப்போது இல்லை...ஏன் எனது தாய் தெய்வானை போயே 12 வருடம் ஆகிவிட்டதே...

ஏன் ஆண்டியப்பன் நாவிதர், முடி திருத்தும் கடைக்காரரின் வயதான தந்தை வீட்டுக்கு வந்து பசங்க எங்கள் மூவருக்கும், தந்தைக்கும் முடி திருத்திச் செல்வது அப்போது வழக்கம்...அப்போதிருந்த மரத்தடிகளும் அதன் அடியில் அமர்ந்து முடி வெட்டிக் கொண்டதும், முடி வெட்டும்போது சுருள் சுருளான மயிர்க்கற்றைகளும், முன்பக்கம் தோள்பட்டை இறங்கி நேராக இறங்கும் கால்சட்டையின் நாடாக்களும் பின் முதுகில் ஆங்கில எக்ஸ் X வடிவத்திலான பட்டை செல்வதும் பசுமயான இனிமையான நினைவோட்டம்...

நாளடைவில் அவர் பெரியவர் வராததால், மகன் ஆண்டியப்பன் கடையில் முடி திருத்த எனச் சென்று...சாண்டில்யன் கதை குமுதம், தமிழ்வாணன் கல்கண்டு போன்றவற்றை போட்டி போட்டு படிக்க ஆரம்பித்து, அது ஆனந்த விகடன், கல்கி, குங்குமம், மங்கையர் மலர், தினமணி கதிர் , என வளர்ந்து நிறைய நிறைய எழுத்தாளர்கள்  நிறைய நூலகங்கள், நிறைய மொழிபெயர்ப்புகள், நிறைய நாடுகளின் உலகின் பிரபஞ்ச அளவிலான தொடர்புகளுடன் பரிச்சயமாகி...தொடர்பாகி,,,இன்று அடியவனே....11 நூல்கள்... கொடுத்த நிறைவில்...

அப்போது கிருஷ்ணனும், குட்டியும் ம்க்கூம், பேப்பர் படிக்கத்தான் இங்க வர, முடி வெட்டவோ, டீ சாப்பிடவோ இங்க வர மாட்ட...என அப்போதே என்னுடன் சிலர் சலித்துக் கொள்வார்கள்...என்ன செய்வது நன்றாக முடி  வெட்டுவோர்   அல்லது அவரவர் எங்கு விருப்பமிருக்கிறதோ அல்லது எங்கு மிகவும் நீட்டாக சுற்றுப்புறம் விரும்பும்படியாக இருக்கிறதோ அங்கேதானே அல்லது வீட்டில் பெற்றோர் எங்கு செல்லச் சொல்கிறாரோ அங்கேதானே சென்று முடி வெட்டிக் கொள்ள முடியும் அன்றைய நாளில்...அதேபோல இன்று வரை டீ, காபி அருந்தும் வழக்கம் இன்று வரை கூட என்னிடம் இல்லை என்று சொல்லலாம் என்று பார்த்தால் அவர்கள் இருவரும் இன்று இல்லை...

அவர்களின் தலைமுறைகள் அவ்வப்போது நம்முடன் தொடர்பில் உள்ளார்கள்...ஜெராக்ஸ் காபி எடுத்து கொடுப்பார்களாக...திருமண நிகழ்வில், விழாக்களில் நாகஸ்வரம்  வாசித்து மிக முன்னேறிய அளவில் நாடெல்லாம் தெரியுமாறு பிரபலமாயும் இருக்கிறார்கள்...அவர்களிடம் எல்லாம் இது பற்றி சொல்ல முடியாது...சொல்ல அவசியமும் இல்லை... சொல்ல வேண்டியதும் இல்லை.

Image result for milk and butter milk curd

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Thursday, April 5, 2018

கமலுக்கும் எனக்கும் உள்ள மையப்புள்ளிகள்: கவிஞர் தணிகை

கமலுக்கும் எனக்கும் உள்ள மையப்புள்ளிகள்: கவிஞர் தணிகை
Image result for kamal at trichy meeting train travel



1. 8 கிராமங்களை தத்து எடுத்து அதில் முன்னேற்றப்பணிகளை செய்து அவற்றை முன் மாதிரியாகக் கொண்டு தமது சேவைப்பணிகளை தொடரவிருப்பதாக சொல்லி இருக்கிறார்.

நான் சுமார் 10 ஆண்டுகள் கிராமிய  முன்னேற்றத்திற்காக‌  இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களிலும் எளிதில் எட்ட முடியாத கிராமங்களில் தங்கி பயிற்சி எடுத்து தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைவாழ்மக்களுக்கு பணிச்சேவை செய்து பெயர் பெற்றவன். தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், சேவைப் பிரிவைச் சார்ந்த மக்களோடு நானும் ஒருவராக நின்று சேவயாற்றி உடல் பிணி பல பெற்றவன்.

2. கமல் ஹாசன் அப்துல்கலாம் பிறந்த இடத்திலிருந்து தமது அரசியல் பயணத்தை துவக்கினார்.


Image result for apj memorial place


எனக்கும் அப்துல் கலாம் குடியரசு தலைவராக விளங்கும்போதே ராஷ்ட்ரபதி பவனிலிருந்து கடிதம் எழுதியுள்ளார், அவரை 3 முறை பார்த்திருக்கிறேன். எனது புத்தகங்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன.
Related image

எனவே இருவரும் மதிக்கும் மாமனிதராக அப்துல் கலாம் உள்ளார்.

3. நேற்று திருச்சி மாநாட்டில் தமது உரையின் போது...கமல் ஹாசன்  தமது ரயில் பயணம் பற்றி பேசும்போது காந்தி ரயில் பயணத்தின் வழிதான் நாட்டின் நாடித் துடிப்பை உணர்ந்ததாகவும் எனவே தாமும் காந்தியின் வழியில் ரயில் பயணத்தை மேற்கொண்டதாகவும், மேலும் 48 பேர் 48 காரில் பயணம் வருவதை விட இது பாதுகாப்பு ஏற்பாட்டை மிகவும் குறைவாக  செய்து கொள்ள ஏற்றதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

காந்தி எழுதிய 60000 பக்கங்களையும் படித்தவன் என்ற முறையிலும், மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் இணைப்பில் உள்ள வள்ளியம்மாள் கல்வி நிறுவனத்தில் காந்திய நூல் வழிக்கல்விக்கான முதல் பரிசைப் பெற்றவன் என்பதாலும், காந்திய கிராமியப் பல்கலைக் கழகம் காந்தி கிராமத்தின் பயிற்சி பெற்றவன் என்ற முறையிலும்,  நானும் எனது நண்பர் ச.மே.சிற்பி ஆகியோரும் இணைந்து நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற இயக்கங்கள் நடத்தி: சின்னபையன், சசிபெருமாள் (ஆம் அந்த மது விலக்குப் போராளியாகி இறந்த அதே சசிபெருமாள்தாம்) போன்ற நல்ல காந்திய மனிதர்கள் உருவாக பயிற்சி அளித்து உறுதுணையாக நின்றதாலும்...

இப்போது வாழ்வின் தேவை கருதி தினமும் ரயிலில் பயணம் செய்து கல்லூரி சென்று வருகிறேன் என்பதாலும்..


இதுவரை கமல்ஹாசன் வெளிப்படுத்திய 3 புள்ளிகள் எமக்கும் அவருக்கும் மையப்புள்ளிகளாக இருக்கின்றன...இனி எதிர் வரும் காலங்களிலும் நிறைய இது போன்ற மொட்டவிழ்தல்கள் நிகழும் என்றே நம்புகிறேன்...

அலை நீளம் ஒத்துப் போகிறது..கமல்ஹாசன் கவர்ச்சி காட்டி ஏதும் பேசவில்லை களப்பணியாளராகவே மாறிக் கொண்டிருக்கிறார். எனவே அவர் போன்றோர் மேலும் மேலும் வாய்ப்புகளின் போது வெளித்தெரிவார்கள், மிளிர்வார்கள் என்றே நம்புகிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.