Saturday, October 31, 2020

நீ தான் உலகம்....கவிஞர் தணிகை.

 இயற்கையை இயற்கையின் இயல்புடனே இரசிக்க வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்தால் இரசிக்க முடியாது. அது மட்டுமல்ல மனிதர்க்கு வேண்டுமென்ற கோணத்துடன் மட்டுமே இயற்கையை பயன்படுத்திக் கொள்ளவும் கூடாது.



திருவண்ணாமலையின் கிரி வலம் இரத்து

தாரமங்களம் கையிலாய நாதர் ஆலயத்தில் அண்ணாபிசேகம் மக்கள் கூடத் தடை.

 சிறு சிறு கோவில்கள் எல்லாம் அண்ணாபிசேகம் செய்தன. சோறு கண்ட இடம் சொர்க்கமாமே...அதாவது சோற்று அலங்காரத்துடன் இருக்கும் சிவத்தைக் கண்டவர்க்கு சொர்க்கம் உண்டாம்.


அது அப்படி என்றால் விவிலியம், முகமதியம், புத்தம், ஜைனம்,போன்ற மதங்கள் எல்லாம் என்ன சொல்லும்? ஏன் அதே வைணவம், கௌமாரம், சௌரம், காணபத்யம், சக்தேயம் எல்லாம் என்ன சொல்லும்?



எல்லாம் இரண்டுள் அடக்கம். அதாவது உடல் உயிர். உடல் சக்தி உயிர் சிவம்.

எனவேதாம் திருமூலர் போன்றோர் உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!


கட உள் கடவுள்...


புளூ மூன்  பார்க்க புறப்பட்டேன். நிலா நான் பார்க்க புறப்பட்டு கிழக்கு நோக்கி முன்னேறியதைப் பார்த்து பயந்து ஓடி ஒளிந்து கொண்டதோ...

கருப்பு ரெட்டியூர் சென்று மேடு ஏறும் போது மஞ்சள் நிலா பெரு வட்டமாக கீழ் வானில்.

முழு நிலவும், சூரியனும் உதிப்பது கிழக்கில் இருந்துதானே.



துணைவியை அழைத்து அருகிருக்கும் வீட்டு மாடி ஏறி கீழ் வானில் மஞ்சள் நிலா காணச் சொன்னேன் செல்பேசியில்

துணி துவைத்துக் கொண்டிருக்கிறேன்...சிவா குடும்பம் பேசியபடி இருக்கிறார்கள்...தொந்தரவு செய்யாதீர் , நான் பார்த்துக் கொள்கிறேன்...



தங்கையை அழைத்தேன், மாடியில் நடமாடிக் கொண்டே பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். புளூமூன் என்றால் ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலாக் காட்சி வருவதுதானே...(அதில் என்ன என்பது போன்ற பதிலுடன்)



எனக்கு என்னவோ மிக அற்புதமான நாளாக நேரமாக இருந்தது. அந்த நேரத்துக்காகவே இரவில் டார்ச் விளக்கை எடுக்காமலே கூட நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தேன்.



காண்பதெல்லாம் காணும் காட்சி எல்லாம் மகிழ்வாக இருந்தது. விளக்கில் இருந்து பரவும் கதிர், மின் கம்பம் மேல் செடிகொடிகளின் நிழல்,பாலத்தின் மேல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்...ஒரு வீட்டில் சண்டை, வாகனங்கள் எல்லாம் அதி வேகமாக விரைந்து கொண்டிருக்க நான் சிறிது நேரம் அந்த சாலையோர பாலச்சுவர் மேல் அமர்ந்தபடி இருந்தேன்...எல்லாம் ஏன் இந்த அளவு வேகமாக இருக்கிறார்கள்...காலத்தை நேரத்தை இயற்கையை இரசிக்க சிறிது நேரம் ஒதுக்குவார்களா?

நிலா காய்கிறது நிதம் தேய்கிறது யாரும் இரசிக்க வில்லையே...என் கண்கள் மட்டும் அதைக் காணும்...

பொருளின்றி போகலாம் பொருள் செலவின்றி போகலாம் உங்களுள் இருப்பதுதானே சாந்தி, மகிழ்வு, நிம்மதி யாவுமே...

நீ தான் உலகம்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.






Thursday, October 15, 2020

OCTOBER 15

 அறிவொளியாய் அப்துல் கலாம்

அப்துல் கலாம் 89 வது பிறந்த நாள் கவிதை
அக்டோபர் 15.











காலம் புறம் தள்ள முடியா பெயர் கலாம்
காலப் புத்தகத்தில் கலாமின் பக்கத்தை படிக்காமல்
ஒதுக்கி விட்டு அடுத்த பக்கத்திற்கு செல்லவே முடியாது
ஏனெனில் அது காலத்தால் அழிக்க முடியாத கவிதை
அறிவின் இலக்கணம், இலட்சியச் சிகரம் தொட்ட கதை.

அன்றும் இன்றும் என்றும் இந்தியாவின்
மக்கள் குடியரசுத் தலைவர்(என்றால் அது கலாம் மட்டுமே)

அக்டோபர் 2ல் மகாத்மா காந்திக்கு 151 வது பிறந்த நாள்
விழா கண்டோம்.
அக்டோபர் 15ல் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமுக்கு
89 வது பிறந்த நாள் விழா காண்கிறோம்.

காந்தியும் கலாமும் ஒன்றுதான் என முன்னுரைத்தேன்
என் கவிதை வரலாற்றுப் பதிவுகளில்

இந்து மதச் சின்ன குத்து விளக்கை
கிறித்தவ மதச் சின்ன மெழுகுவர்த்தியால்
முகமதிய அப்துல் கலாம் ஏற்றுகிறேன் என்ற போது
அவர் காந்தியானார்.
மத நல்லிணக்கமே இந்த தேசத்தின் மகாத்மியம் என்ற‌ வழியில்.

அமெரிக்கப் பாதுகாவலர்கள் இவர் காலணியின் உள்ளுறை முதல்
ஆடை வரை ஒரு முறையல்ல  இரு முறை துகிலுரிந்த போதும்.போதும்
சிரித்தபடியே அவர் பணியை அவர் செய்கிறார் என
காந்தியின் சகிப்புத் தன்மையுடன் ஒன்றி இவரும் மகாத்மாவானார்.

எனவே காந்தியும் கலாமும் ஒன்றுதான்
நமக்கென்றும் கண்கள் இரண்டுதான்
காட்சி ஒன்றுதான்.
இருவருமே இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே வழிகாட்டிகள்

அரை நிர்வாணப் பக்கிரி என்ற வின்ஸ்டன் சர்ச்சிலை விட‌
அறிவாளி காந்தி, எனது ஆடையையும் சேர்த்து
நீ அணிந்திருக்கிறாய் என்று சொன்ன போது
வின்ஸ்டன் சர்ச்சிலை விட அறிவாளியானாலும் காந்தி
அரை நிர்வாணப் பக்கிரியாகவே சாகும் வரை வாழ்ந்தார்.

பொக்ரான் அணுவெடிப்பால்  அமெரிக்க அண்ணனை
அண்ணாந்து பார்க்க வைத்தார் இந்தியாவை
எதற்கும் அசராத‌ கலாம்

மேடைகளீல் கால் மேல் காலிட்டு ஒருபோதும் அமராத கலாம்
எளிமைக்கோர் அடையாளம்
கவிஞர் நிற்கக் கூடாது நாற்காலியில் அமருங்கள் அமருங்கள்
எனும் மக்கள் தலைவன் அற்புதக் கலைஞன்
அவரை நமது நாடு இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்
மேம்பட்டிருக்கலாம்.

பிழைப்புக்காக விமானியாக முயன்று தோற்றவர்
உழைப்பினால் நாட்டின் முப்படைகளுக்கும் தளபதியாகி
சரித்திரமானார் சரித்திரமானாலும் இந்தியாவின் தரித்திரம் போக்க‌
எண்ணியபடியே பள்ளிக் குழந்தைகளிடையே சங்கமமானார்.

டிசம்பர் 28 2002ல் இராமமூர்த்தி நகரில் நிம்ஸ் பள்ளியில்
 எனது நதிகள் இணைப்புக் கவிதை புகழ்க் கொடி நாட்டியது
அதற்காக கன நீராய் இருந்த நான் வேண்டுகோளின் படி
மிக இலேசாயிருந்தேன் அது போலவே இன்றும்....

அன்று நதிகள் இணைந்தால் மின் சார மீன் பிடிக்கலாம்
பயிர்களை வானம் பார்க்காது வளர்க்கலாம்
குடிநீரை பாக்கெட்டிலும் பாட்டிலிலும் அடைக்காதிருக்கலாம்
இந்தியத் தலைமுறைகளை இனி வரும் பரம்பரையில்
அமெரிக்கருக்கும் சீனருக்கும் முன் வைக்கலாம்
என்றெல்லாம் வேண்டிய கவிதை கண்ட
பொறியாளர் சி. மணி மேடையென்றும் பாராமல்
ஆணென்றும் கருதாமல் எனக்கிட்ட முத்தம்
அன்று கூச்சமாக இருந்தது இன்று ஏக்கமாக இருக்கிறது
அவர் மறைந்து விட்ட போதும் என்னுள் மறையாதிருக்கிறது
அந்த அன்பின் மொழி...

கலாம் தோல்விக்கு தோல்வி கொடுத்தவர்
சவால் வாய்ப்பென்பவர் கலாம் ஒரு முழுமை பெற்ற அறிவொளி
அன்பின் சுடர் இது போன்ற அறிவாளிகளிடம் மட்டுமே
அவ்வளவு எளிமை வரும்...




நாட்டில் இலஞ்ச ஒழிப்பு எண்ணம் செயலாக மாற வேண்டும்
அத்தகைய குடும்பங்கள் பெருகப் பெருக இலஞ்ச் ஔஉழல்
நாட்டில் ஒழியுயும் என எனைத் தனியாக நின்று போராடுவதை
தடுத்து புத்தி புகட்டியவர்...அவர் தம் கடித்தத்தின் முதல் வரியை
தம் கைப்பட எழுதி ஆரம்பித்திருந்தார் அந்த ஒரு கடிதம்
எனக்கு ஒரு உத்வேக முகவரி தந்தது. டிசம்பர் 23 2004 முதல்.
அப்போது அவர் குடியரசுத் தலைவர் நானோர் அடித்தட்டுத் தொண்டன்

எனது நூல்கள் அவரின் கைகளிலும் தவழ்ந்ததையும்
என் கைகளில் தவழ்ந்த புதல்வர் அவரின் ஒளியை
விவரமறியாத போது ஒரு முறையும்
விவரமறிந்த போது மறு முறையும் உணர்ந்தான்
அடுத்த ஆணிடில் நமது கலாமெனும் கால ஒளி
கவிதை மொழி அறிவொளி நம்மிடமிருந்தெலாம் உதிர்ந்தது
செய்தி கேட்ட அகிலமெ அதிர்ந்தது

ஆட்டோ ஸ்டேன்ட்களிலும் ஆங்காங்கே மூலை முடுக்குகளிலும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகெங்கும் ஒலித்த குரல்
அவருக்குப் பிடித்தமான திருக்குறள் போல எங்கெங்கும்....

யாரையுமே வெறுத்து ஒதுக்கி ஏசாத குணம்
எதிர்த்துப் பேசாத இனம்.
பெற்றோர் ஆசிரியர் மாணவர் சேர்ந்த தங்க முக்கோணமே
நற்சமுதாயக் கட்டமைக்க வழி என்ற பாதை அமைத்தவர்

யாரையும் குறை சொல்வதை விட இருள் காட்டிலும்
ஒரு விளக்காக இருங்கள் ஒளி விளக்கு ஒரு விளக்கு
திருவிளக்கு எண்ணற்றா தீபங்களாகி
அறிவொளியாக சுடர் விட்டு நாடெங்கும் பரவட்டும்
நல்லோர் மணம் பரப்பட்டும் அல்லவை தேய அறம் பெருகட்டும்

மாணவர்களின் முக்கிய இலக்கணம் கேள்வி கேட்பதே என்றவர்
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் அதுவே அடித்தளம் என்று வென்றவர்.
வாரத்தின் 5 நாட்களை சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்காக உழையுங்கள்
மற்ற 2 நாட்களையும் நாட்டு முன்னேற்றத்திற்காக விதையுங்கள்
என்ற இலக்கணம் வகுத்தவர் தம் சீடர்களுக்கு



ஓய்வு என்பதற்கு மாற்றாக வேறு ஓர் ஆக்கபூர்வ உழைப்பை
விதைத்து மடை மாற்றம் செய்து பாருங்கள் என விழிகாட்டி
வழி காட்டியவர்
சுருங்கச் சொல்கிறேன்:
கலாம் ஒரு நல்ல மாணவர், கலாம் ஒரு உயர்ந்த ஆசிரியர்
கலாம் ஒரு உன்னதத் தலைவர், கலாம் ஒரு மனிதச் சிகர‌ம்
கலாம் ஒரு பிழையிலா மொழி கலாம் ஒரு விலையிலா வழி
கலாம் நமது வாழ்வில் என்றும் சுடர் விடும் அறிவொளி...

                       என்றென்றும்
                      அன்புடன்
  தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்திற்காக‌
                      கவிஞர் சு. தணிகை....



Thursday, October 8, 2020

ஓசூர் திருப்பூர் ஆகிறதா? கவிஞர் தணிகை

 ஓசூர் திருப்பூர் ஆகிறதா? கவிஞர் தணிகை

Hosur - Wikipedia

திருப்பூர் ஒரு பனியன் தயாரிப்பு பின்னலாடையில்  உலகளாவிய புகழ் பெற்ற நகராக இருந்தது மட்டுமல்ல குற்றப் பின்னணியிலும் தமிழகத்திலேயே முன்னணியில் இருந்தது. ஒரு காலம்.
 அது போல ஓசூரும் இருக்கிறது தொழில் வளர்ச்சிப் பின்னணியில் முன்னேறும் நகரில் எல்லாம் குற்றமும் பெருகி வருகிறது என்பதை செய்திகள் மற்றும் நடைமுறை வாழ்வுகள் தெரிவிக்கின்றன.

 புதிதாக அங்கு பணிக்குச் செல்லும் இளைஞர்களை வழிமறித்து தனியாகச் செல்பவர்களிடம் உள்ள பொருட்களை பிடுங்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் இயல்பாகி விட்டன.

ஒரு உண்மைச் சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்:

வெளியூரிலிருந்து ஒரு தற்காலிக பணியாளராக சில இளைஞர்கள் ஒரு  தொழிற்சாலையில் சேர்க்கப் படுகின்றனர். அதற்காக அந்த இளைஞர்கள் அளவை மீறிய வாடகையையும் முன் தொகையையும் கொடுத்து வீட்டை ஏற்பாடு செய்து தங்கி பணிக்குச் செல்ல ஆரம்பிக்கின்றனர்.

வந்தியத் தேவன் நம்ம கதாநாயகனும் அப்படித்தான் சபரியுடன் அங்கு சென்ற புதிது.

இச்சூழ்நிலையில் ஒரு நாள் அதிகாலை வந்தியத் தேவன் அதிகாலை 5 மணி சுமாருக்கு எழுந்து கதவைத் திறந்து சற்று காற்று வாங்கி விட்டு மாடி முதல் தளத்தில் அவருடைய அறை இருந்ததால் சற்றே கதவைத் தாளிடாமல் சாத்தி விட்டு கழிப்பறைக்குச் செல்லலாம் என சற்று நடக்கிறார்.

இவரின் இன்னொரு அறைப் பங்காளரும் நண்பருமான  சபரி தூங்கிக் கொண்டிருக்க, கதவு சற்று திறக்கப் படுகிறது...நாம் நமது ஆவியுலக நடப்பை எடுத்துக் கொண்டு ஆவிகள் வந்து கதவைத் திறந்ததோ என கற்பனைக்குச் செல்ல வேண்டாம்...ஏன் எனில் இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டபோது கதவு சற்று திறந்தது என்னும் போது ஒரு வேளை காற்று வேகமாக அடித்து திறந்திருக்கலோமே என்றும் சிந்தித்தேன்...

ஆனால் கதவைத் திறந்தது ஒரு சிவப்பு பொட்டு எல்லாம் வைத்துக் கொண்டிருந்த ஒரு நபர்...அறையில் கழிப்பறைக்குச் செல்லலாம் என சென்ற  வந்தியத் தேவன் திரும்பி வந்து என்ன யார் என கேட்க...அந்த விடியற்காலை ஐந்தரை மணியளவில்: தண்ணீர் கேன் போட வந்தேன் என அந்த நபர் சொல்லித் தடுமாற, என்ன இந்நேரத்தில் தண்ணீர் கேனா, எனக் கேட்க  நாங்கள் கேட்கவில்லையே என்று சொல்ல வந்த அந்த விடியல் கால அழையா விருந்தாளி திணறியபடி உளறிக் கொண்டே இவர் ஒவ்வொரு அடியாய் கேட்டுக் கொண்டே முன்னே வர அவர் பேசிக் கொண்டே பின் செல்ல...இவர் நிலையை உணர்ந்து கொண்டு அவரைப் பிடிக்க ஆவலுற்ற வண்ணம் விரைவாக நடக்க அவரோ ஓட ஆரம்பிக்க,

 உடனே வந்தியத் தேவன் திருடன், திருடன் எனக் கூச்சலிட அந்நேரத்தில் கீழ் தரைத் தளத்தில் பணிக்குச் செல்ல தயாராகி தனது இரு சக்கர வாகனத்தை இறக்கிக் கொண்டிருந்தவர் இந்த திருடன் ஓடி வருவதைப் பார்த்து காலை விட அவன் குப்புற விழுந்தடித்து முகமெல்லாம் காயம் பட்டதாக அந்நேரத்தில் தேநீர்க்கடையில் வெளியே தேநீர் அருந்த அமர்ந்திருந்தவர் சொல்லி இருக்குமளவு எழுந்தோடி தப்பித்து சென்றிருக்கிறான்...

ஆனால் அவனுக்கு நல்ல அடி முகமெல்லாம் என பார்த்தவர்கள் சொல்கிறார்கள்...

வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரிப்பு ...

;;;;;வந்தியத் தேவன். சொல்லக் கேட்டது


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


Wednesday, October 7, 2020

முகக் கவசம்: கவிஞர் தணிகை

 முகக் கவசம்: கவிஞர் தணிகை






ஒருவர் தனது முகக் கவசத்தை எடுத்து முகத்தின் வேர்வை அனைத்தையும் துடைத்துக் கொண்டார் மறுபடியும் போட்டுக் கொண்டார் கழட்டி கால்சட்டை பையில் சுருட்டி வைத்துக் கொண்டார். மறுபடியும் சிறிது நேரம் கழித்து அணிந்து கொண்டார் மறுபடியும் கழட்டி முகத்தை அதனால் துடைத்தார். மறுபடியும் போட்டுக் கொண்டார். இது பேருந்தில் பயணத்தின் போது காண நேர்ந்தது. எனக்கு இரத்த அழுத்தம் சற்று கூடியது.


மற்றும் சிலர் முகக் கவசம் அணியச் சொல்கிறார்களே என காதில் மாட்டிக்  கொண்டு வாயை, முகத்தை , நாசியை மூடாமல் தாடையை மட்டும் மூடியபடி இருக்கின்றனர். எதற்காக அணியச் சொல்கிறார்கள் என்ற பொருள் தெரியாமல்..


இன்னும் சிலர் ஒரு முறை பயன்படுத்திய முகக் கவசத்தையே தூக்கி எறியும் வகையில் பயன்பாடு உள்ளதை மறுபடியும் சில நாட்கள் அதையே அணிந்திருக்கிறார்கள் இத்தனைக்கும் அவர்களைப் பார்த்தால் படிப்பறிவு உள்ளவர் போலும் தெரிகிறது.


இன்னும் சிலர் அழுக்கான துணியால் ஆன முகக் கவசத்தை நீரால் சுத்தம் செய்யாமல் அப்படியே போட்டுக் கொண்டு வருகிறார்கள் பொது இடங்களில் ...இது போன்ற பாதிப்புகள் மட்டுமே இந்த பதிவுக்கு காரணமாகின்றது


இன்னும் சிலர் அதை அணியாமல் யாராவது சொன்னால் அல்லது பொது இடங்களில் பேருந்து நடத்துனர் அல்லது அக்கம் பக்கம் யாராவது சொன்னால் அதற்காக அல்லது சொல்லி விடுகிறார்களே என அதற்காக அணிகிறார்கள்...ஆனால் அருகே வந்து தனது உரிமையை நிலை நாட்டி தாமும் அமர பேருந்துக் கட்டணம் கொடுத்துள்ளோம் ஏன் நின்று கொண்டு வரவேண்டும் என்ற ஆளுமை செய்ய மட்டும் மறப்பதில்லை.


சிலரோ துண்டைக்  கட்டியும் கட்டாமலும், சிலரோ கைக்குட்டையை கட்டியும் கட்டாமலும் சிலரோ சேலை முந்தானையை எடுத்து வாயை யாராவது பார்க்கும் போது பொத்தியும் பொத்தாமலும்....


அதிலும் சில பெண்கள் அதைப் பற்றி கவலை இன்றி இருக்கிறார்கள்.


இவை இப்படி ஒரு பக்கம் என்றால் சிலர் நடைப் பயிற்சி செய்யும் போதும் மெல்லோட்டம் ஓடும் போதும், உடற்பயிற்சியும் செய்யும் போதும் அணிந்து மிகவும் பயந்து போய் புரியாமல் இருக்கிறார்கள். 


அதை எப்போது எப்படி அணிய வேண்டும் என ஒரு வகுப்பு எடுத்து அதன் பின் இந்த மக்களைப் பயிற்றுவித்து தயார் செய்தால் தேவலாம். சில தொடர்பு வழி சாதனங்களிலும், ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் சொல்கிறார்கள் ஆனால் நமது மக்கள் கேட்பதாக இல்லை.


உலக சுகாதார நிறுவனம் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அணியத் தேவையில்லை எனப் படித்த நினைவு...மேலும் உடற்பயிற்சி செய்யும் போதும் நடைப்பயிற்சி செய்யும் போதும் அணிய அவசியமில்லை. அது தேவையற்ற ஆபத்துகளை பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். அப்படி  ஓடிக் கொண்டே ஒருவர் முகக் கவசத்தை அணிந்து இறந்ததாக செய்தி இருக்கிறது. 


நேற்று கூட அறிவியல் சார்ந்து அனைத்து நாடுகளையும் இணைத்து ஒரு அடிப்படையான செய்தி வந்திருந்தது. ஏரோசெல் என்று காற்றிலேயே இந்த வைரஸ் பரவுவது என்று சொல்வது உண்மைதான் என உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது 34 விஞ்ஞானிகள் 234 புள்ளி விவரங்கள் அடிப்படையில் அதை இந்த உண்மைசெய்தி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது அவை சில மணி நேரங்கள் கூட உயிர்ப்போடு இருந்து பரவ வாய்ப்பிருக்கிறது என்றும் செய்தி இருக்கிறது


எனவே முகக் கவசம் அணிவது எப்படி அணிவது எப்போதெல்லாம் அணிவது இவை எல்லாம் மிகவும் அறிந்து கொள்ளப் பட வேண்டியதுதான். பொது இடங்களில் முகக் கவசம் இன்றி சென்று வருதல் மிகவும் ஆபத்தானது இன்றையக் காலக் கட்டத்தில் மேலும் கிருமி நாசினியை சானிட்டைசர் கொண்டு உள்ளங்கைகளை அடிக்கடி தூய்மைப் படுத்திக் கொள்வதும் வெளியே சென்று வீடு திரும்பும் போது குளியல் எடுப்பதும் அவசியமே. இதை எல்லாம் நமது தமிழ் மரபில் சொல்லி வந்தார்கள் அதை எல்லாம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய காலம் இது. மேலும் மூச்சுப் பயிற்சி, நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கும் உணவு வகை, வாழ்வு முறை அவசியம்...


முகக் கவசம் அணியாது வருவார்க்கு அபராதம் என அரசு சொல்லியது...பொது இடங்களில் உமிழ் நீர் துப்புவது அபராதம் என்றெல்லாம் சொல்லிய அரசு அது பற்றி ஏதும் கண்டு கொள்ளவே இல்லை.  பொது இடங்களில் புகை பிடிப்பது தவறு அபராதம் விதிப்போம் என்றகதைதான். மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர் மேல் எடுக்கும் நடவடிக்கை போலவே இந்த உயிர் ஆபத்துக் காலத்திலும் அரசு ஏனோ தானோ என மக்கள் கைகளிலேயே அவர்கள் பொறுப்பைக் கொடுத்து இருக்கிறது அவர்களும் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இருக்கும் காலக் கட்டத்தின் பாதுகாப்பற்ற நிலையை உணராமலேயே...


மாஸ்க் என்ற ஆங்கில திரைப் படத்தில் ஜிம் கேரி அசத்தி இருப்பார். மாஸ்க் என்றால் முகக் கவசம்....சரி முகக் கவசம் அணியாமலே முகத்திற்கு கவசம் அணிந்து கொண்டு உணர்வலைகளை வெளிக்காட்டாமல் இருப்பது மனித இனத்துக்கு கைவந்த கலையாகிவிட்ட்டது. அதன் பேர் நாகரீகம் என்றும் அந்த மனிதரே விலங்கினத்திலிருந்து மாறுபட்டவர் என்கிறோம்...


அதுபோன்ற மாஸ்க் பற்றி நாம் பேசவில்லை. சில முகங்கள் முகக் கவசம் அணிந்தபோதுதான் பார்க்க நன்றாக இருக்கிறது முகக் கவசம் உண்மையிலேயே அவர்களை அழகாக்கி விடுகிறது

சில முகங்கள் முகக் கவசத்திற்கு உள் இருக்கும் முகத்தை காணத் தூண்டி விடுகிறது.

சில முகங்கள் முகக் கவசம் ஏன் அணிந்துள்ளார்கள் இல்லையென்றால் அவர்களை நன்றாக பார்க்க முடியுமே என்று ஆவலைத் தூண்டியும் விடுகிறது.


கிராமங்களின் இடைவெளி இன்னும் அந்த அளவு கொடுமையாக மாறவில்லை...



தூயக் காற்றை சுவாசிப்போம்

எச்சரிக்கை உணர்வைக் கடைப்பிடிப்போம்

நீண்ட நாள் வாழ்வோம் கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பை நழுவ விடாமல் என்று சொல்லி முகக் கவசத்துடன்  இந்தப் பதிவுடன் முடிக்கிறேன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Friday, October 2, 2020

தமிழ் நாடு அன்பு வழி அறப் பணி மன்றம் காந்தி 151 வது பிறந்த நாள் விழா: கவிஞர் தணிகை

 தமிழ் நாடு அன்பு வழி அறப் பணி மன்றம் காந்தி 151 வது பிறந்த நாள் விழா: கவிஞர் தணிகை



02.10.2020 இன்று தமிழ் நாடு அன்பு வழி அறப் பணி மன்ற காந்தி 151 வது விழா சிறப்பாக காணொலி காட்சி ஜூம் வழியே நடைபெற்றது காலை 10 மணி முதல் மதியம் 1.45 மணி வரை.


இதன் நிறுவனர் கொ.வேலாயுதம் குரல் வழி ஆசியுடன் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னியின் செல்வன் முத்து ஐ.ஏ.எஸ் தேசிய பாதுகாப்புத் துறை தகவல் அலுவலர் தமிழ் நாடு மற்றும் புதுவை மாநிலம் கலந்து கொண்டு அறம் செய விரும்பு என்ற தலைப்பில் தமது சிறப்புரையை செய்தார்.



கடந்த சில மாதங்களாகவே பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப் பட்டன. அதன் முடிவுகள் அறிவிக்கப் பட்டு பரிசுக்குரியவர்களை நிகழ்வில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறுவர்கள் பேசினார்கள், பாடினார்கள். அத்துடன் பால் போஸ் தமது வழக்கமான பாடல்களை  பாடி உற்சாகப் படுத்தினார்.


நிகழ்ச்சியை அன்னபூரணி லெனின் கண்ணன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார் அதற்கு ஒரு துணையாக அமெரிக்க ஏழுமலை தொழில் நுட்ப இயக்குனராக இருந்து ஜூம் காணொலிக் காட்சியை சிறப்பாக நடத்தினார். அமரக்குந்தி விஸ்வநாதன் நிகழ்வை கோர்வைப் படுத்தினார்.


துவக்க உரையாற்றினார் இதன் கொள்கை நெறி வழிகாட்டியும் சிறப்பு ஆலோசகருமான விடியல் குகன்,மாநிலத்தலைவர் அறிவியல் அறிஞர் சுகுமாறன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்

நிம்ஸ் ராமலிங்கம் செயலாளர் அவர்கள் மன்றங்களை திறந்து வைத்து அத்துடன் வரவேற்புரையாற்றினார்.

 இன்ன பிற மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் சுமார் 80 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். பங்கு பெற்றனர்.பிரதிநிதித்துவம் செய்தனர். வாழ்த்துரை வழங்கினர்.



எனக்கு அன்பு வழி ஆக்க உரை வழங்கப் பட்டிருந்தது:

ஹத்ராஸ், பல்ராம்பூர், திருப்பூர் ஆகிய இடங்களில் பெண்களின் உரிமை களவாடப் பட்டு பிணக்குழியில் தள்ளும் பட்டுக் கொண்டு இருக்கும் போது கிராம சபைக் கூட்டங்கள் கோவிட் 19 என்ற காரணத்தால் நடத்தப் படாத காலக் கட்டத்தில் இந்த 151 வது காந்தி பிறந்த நாளை தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றம் சார்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம்


இந்த நான் அணிந்திருக்கும் மேல் சட்டை40 ஆண்டுகள் பழமையானது அது போல இந்த மன்றம் புதியதல்ல இதன் பின் 40 ஆண்டுகளின் விழுப்புண் ஒளிந்து கிடக்கிறது எப்படி ஒரு குழந்தை கருவுற்ற காலத்தில் இருந்து அதன் ஆயுள் துவங்குகிறது என அறிவியல் சொல்கிறதோ அப்படிப் பட்ட ஒரு கரு உருவான காலம் இந்த மன்றத்தின் பின்னும் இருக்கிறது.


இதன் இலக்கு: கூச்சப் பட வேண்டியதில்லை சொல்வதற்கு ஒன்று: மனித மல மேலாண்மை அதாவது மனிதக் கழிவு மேலாண்மை இரண்டு எல்லா உயிர்களின் பசி தீர்த்தல் அல்லது எல்லா உயிர்க்கும் உணவளித்தல் என திருவள்ளுவர், காந்தி ,அம்பேத்கர், காமராஜ், பாரதி  வள்ளலார், தெரஸா, கலாம் போன்றோரின் நற்பணிகளை தொடர வைக்கும் ஒரு ஒளி விளக்காக இருக்கும் என பொருள் படும்படி தெரஸாவின் ஆகாய விமானத்தின் போது நோபெல் பரிசு பெறச் செல்லும் போது இலவச பயணத்திற்கு அனுமதி அளித்ததற்கு பிரதியாக‌ விமானத்தின் ஓய்வறைகளை அதாவது கழிவறைகளை சுத்தம் செய்கிறேன் என்று கேட்டதும், மனிதக் கழிவை அப்புறப் படுத்தும் கரங்களையே கடவுளின் கரங்களை விட அதிகம் நேசிப்பேன் என்றதும்



காந்தியின் ஸ்மேட்ஸ் என்ற ஜெயிலர் இவரை மலம் கழிக்க விடாமல் தமது காலணியால் எட்டி உதைத்து சீக்கிரம் சீக்கிரம் என்றவர்க்கு சிறை வாழ்வில் சுய தொழில் கற்றுக் கொண்டு அதிலும் காலணி தைக்க கற்றுக் கொண்டு முதல் காலணியை அந்த ஸ்மேட்ஸ் என்ற வெள்ளைக்காரருக்கு அன்பளிப்பு செய்த நிகழ்வால் அவர் மனம் மாறி இங்கிலாந்து சென்று அந்தக் காலணிகளை அணியாது தமது பூஜையறையில் வைத்து பூஜித்த  நிகழ்வையும்


காமராசரின் விருதுப் பட்டி வீட்டின் முன் போடப்பட்ட பொதுக் குடி நீர்க் குழாய் தாய்க்கு எதிராக அப்புறப் படுத்தி முதல்வரான காமராசர் உத்திரவிட்ட‌ நிகழ்வையும்,...

திருப்பூர் குமரன் சென்னிமலையிலிருந்து இரவோடு இரவாக திருப்பூர் ஏன் குடியேறினார் அதன் பின் சரித்திரமானார் என்ற நிகழ்வையும்...அவர் திருமணத்திற்கு ஒரே நாளில் 8 ரூபாய் மொய் வைக்க அவமானப் பட்டுக் கொண்டு வந்த ஒரு நெசவுக் குடும்பம் சார்ந்தவர் என்ற செய்தி குறிப்பிட்டு



இந்த 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை  காந்தி, சாஸ்திரி , காமராசர், திருப்பூர் குமரன்  வள்ளலார் என்ற மாமனிதங்களை ஏன் காலக் குறிப்பில் ஏற்றி இருக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டி...


இன்றைய இளைஞர்கள் புகை , மது, போதை , இலஞ்ச ஊழல் சாதி மத இன மொழி நிற நாடு என் பிரிந்து சக்தி தெரியாமல் கிடக்கிறார்கள் அவர்களை இந்த மன்றம் பயன்படுத்த இணைக்கட்டும்...

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை

ஆகாறு அளவிட்டிதாயினுங் கேடில்லை 

போகாறு அகலாக் கடை என்று

வருவாய் குறைவாக இருந்தாலும் அதற்கேற்ப செலவை செய்தால் மனிதம் மேம்படும், இன்றைய இளைஞர்களை வரதட்சிணை மற்றும் மொய் போன்ற பிணிகளிலிருந்து முதலில் வெளி வர விழிப்புணர்வு கொடுக்க இந்த  மன்றம் உதவட்டும் என்றும் 


அனைவரும் தனிப்பட்ட பெயருக்கே அவரவர் பெயர் இடம் பெற வேண்டுமென்றே பொதுச் சேவைக்கு வருவோர் எல்லாம் ஆசைப்படுகிறோம். ஆனால் இயக்கம் அதை விட தனி மனித மகத்துவங்களை எல்லாம் விடப் பெரியது அப்படி இயக்கப் பணிகளை எடுத்துக் கொள்ளும் போதுதான் இயக்கமானது செழித்து வளரும் மேலும் நல் இலக்கு நோக்கி இலகுவாக பீடு நடை போடும் என்றும் குறிப்பிட்டேன்



மேலும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல நீங்கள் யார் என்றால் பெயரிலேயே சாதி, மத, மொழி, நிற அடையாளங்கள் நாடு பிரிவினை போன்ற எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு மனிதம் என்ற மொழி மலரும் போது மட்டுமே மனிதம் மேம்படும் என்றும் எனவேதான் எனது மகன் மணியம் என்ற பேரை ஆங்கிலத்தில் மேன் ஐ எம் என்று வருவதாக வைத்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டேன்.



அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்பு தோல் போர்த்த உடம்பு


என்ற குறள்களையும் கோர்த்து காலம் கணக்கை வைத்து மிகவும் சுருக்கமாக மிக நிறைவாக முடித்து சிறப்பு பேச்சாளருக்கு வழி விட்டேன்...



இந்த காந்தி பிறந்த நாள் நிகழ்வை முன் வைத்து குறும் பட போட்டியை விடியல் குகன் நடத்தி முதல் பரிசு ஆயிரம் இரண்டாம் பரிசு 750 என்றும் மூன்றாம் பரிசை 500 என்றும் வழங்கி இருந்தது மிகவும் மறக்க வொண்ண குறிப்பிட வேண்டிய நிகழ்வாகும்....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


ஒரு கவிதையாய் நுழைந்தேன்: கவிஞர் தணிகை

 ஒரு கவிதையாய் நுழைந்தேன்: கவிஞர் தணிகை



கடந்த 01.10.2020 அன்று வினாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் ஆசிரிய வார விழாவின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வாய் சுகாதாரம் + ஆசிரியர் + பல் மருத்துவர்கள் சமுதாயப் பங்கீடு என்ற இலக்குடன் பள்ளி ஆசிரியர்களுக்கான‌ ஒரு கவிதைப் போட்டியை நடத்தியது.


                                               Dean Prof.Dr. Baby John VMSDC

கவிதை என்பது உணர்ச்சியை சொல்வது, மேலும் வார்த்தைகளை அழகுறச் சொல்வது என்ற அடிப்படையில் என்ன தான் இருந்தாலும் கவிதை கவிதைதான் க=சிறந்த விதை...விதைதான். கருத்தை விதைப்பதுதான். 


என்னை பொது உறவு அலுவலர் என்ற முறையிலும் ஒரு கவிஞர் என்ற முறையிலும் சிறுவர் பல் மருத்துவத் துறையின் தலைவர் மற்றும்  அசோசியேட் டீனாக இருக்கும் பேராசிரியர் சுரேஷ் குமார் அவர்கள் கவிதைப் போட்டியின் முடிவை அறிவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் செய்திருந்தார்.


அதன் தொடர்ச்சியாக வந்திருந்த கவிதைகளை எழுதிய கவிஞர்களின் வரிகளை நினைவு கூரும் விதமாக பரிசு அளிப்பு விழா நடைபெறும் அன்று ஜூம் காணொலி வழிக் காட்சி சந்திப்பில் எனது கருத்துகளை இடம் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்காக எனது பகிர்தல்கள் அன்று ஜூம் காணொலி வழிக் காட்சி வழியே பல பேராசிரியர்களையும் ஆசிரியப் பெருமக்களையும் மற்றும் மருத்துவர்களையும் சென்றடைந்தது.


Associate Dean.Prof.Dr.Suresh kumar is in Right.


முடியவே முடியாது என்ற களங்களில் தான்

என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது

காலக் காற்றில் பூக்கள் உதிரிந்து விட்டாலும்

செடி காத்திருக்கிறது

அது மறுபடியும் பூக்கும் என்று

முப்பதாண்டுக்கும் முன்பே எழுதியிருந்தேன்

அதன் இலக்கணமாக கடந்த ஐந்தாண்டாக‌

எங்கள் கல்லூரியின் முதல்வரைப் பார்க்கிறேன்

மிகையில்லை பொய்யில்லை வெறும் புகழ்ச்சியுமில்லை

 

இந்த வாய்ப்பு தந்த எங்கள் கல்லூரி டீன் பேராசிரியர் பேபிஜான் அவர்களுக்கும்

எனை நண்பராகவே அணுகி, நட்பு பாராட்டி வரும்

இணை டீன்( டீன் என்ற சொல்லுக்கு சரியான தமிழ் சொல் கிடைத்தால் கூறுங்கள்)

அசோசியேட் டீன் துறைத் தலைவர் பேராசிரியர் சுரேஷ்குமார் அவர்களுக்கும்

பேராசிரியர் வினோலா, ஆசிரியர்கள் கிருத்திகா, நந்தினி, பிரதீப் டேனியல் கைன்னஸ், சாந்தரூபன் ஆகியோர்க்கும் முதுநிலை பயின்று வரும் மருத்துவர்கள் ஒரிஸ்ஸா கார்கி, ஸ்டேசி ஆகியோர்க்கும்

முன் களப் பணியாளர்களுக்கும் 

இந்தப் போட்டிகளில் பங்கு பெற்ற ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வணக்கங்கள்





ஒரு நல்ல கவிதையின் படிக வரிகள்

மனதை விட்டகலாது

ஒரு சிறந்த விதை மண்ணுக்குள்ளேயே மக்காது அது போல‌

இந்த போட்டிக்கு வந்திருந்த கவிதைகள் யாவுமே

சிறப்பாக இருந்ததுடன் முடிவை சொல்வது சவாலான பணியாகவே 

இருந்தது போட்டியின் பரிசுக்குரிய இட நிர்ணயம் என்பது எளிதாக இல்லை.


கற்களின் வழியே உருவங்கள் தெரிகின்றது

  சிலைகளுள் கடவுள் உருவங்கள் தெரிகின்றது

சொற்களின் வழியே அருவங்கள் தெரிகின்றது

பற்களின் வழியே உடல் நலம் பொழிகின்றது

நற்கலைகளுக்கு வழிகாட்டியாய் கல்லூரி பணி விரிகின்றது

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் 

பல் மருத்துவக் கல்லூரியின் நற்பணி விரிகின்றது

அது ஆசிரியர்களையும் மாணவச் சிறார்களையும் 

அன்பால் பிணைக்கின்றது ஆவலுறச் செய்கின்றது 



இந்த ஆறாம் எண் சிறுவர் பல் மருத்துவத் துறை

அரும் பணியாற்றி பல் பிணி போக்கி

பொங்கி அழும் குழந்தைக்கும் ஆறுதல் மொழியால் தேற்றி

நோய் வரு முன் காக்கும் சிறப்புடன்

சேய்களைக் காக்கும் தாய் வழிப் பொறுப்புடன்

இந்தக் கருணை மழையின் ஒரு துளியாய் நானும்

இன்று

இங்கு


சில கவிதைச் சாரல்களை கவி ஊறிய தேறல்களை

உங்களுடன் சேர்ந்து தெளித்துக் கொள்கிறேன்

தெளிந்து பகிர்ந்து கொள்கிறேன்


ஒரு கவிஞர்: சிரிப்பின் பின்னே சிதறிக் கிடக்கும் பற்களின் அருமை

யாருக்கும் புரிவதில்லை என்கிறார்.

உண்மைதான் பல்லுக்கு பத்து துறை பற்றுதலைக் கண்டேன் கல்லூரியில்


ஆலங்குச்சி வாழ்வைத் தொடங்கி விஞ்ஞானத்துடன்  விதவிதமான‌

தூரிகைகள் 3 நிமிடம் மட்டுமே என அறிவியலையும் 

வாழ்வின் நெறியையும் இணைக்கிறார் இன்னொருவர்

(  காலையும் இரவும்  3 நிமிடம் மட்டுமே பல் துலக்க வேண்டும்)


செடியில் பூக்கும் மலரை விட நொடியில் பூக்கும்

உன் சிரிப்புக்கு விலைதான் உண்டோ?

பொக்கை வாயில் வெட்கம் கலந்த புன்னகை 

என மற்றொருவர் மழைக்கும் மழலைக்கும்

மகுடம் சூட்டுகிறார் மலரை விட மழலை அழகு என‌

இது எனக்கு காந்தியையும் குழந்தையையும் ஒரு சேர வைக்கும்

பார்வையைத் தந்து நிற்கிறது.


பல்லை கூழாங்கல் அழகுவமை செய்கிறார் ஒருவர்

பல் சிந்தனை எனும் தீபமேற்றி வாய் சுகாதாரம்

விழிப்புறச் செய்கிறார் மற்றொரு ஆசிரியர் அல்ல அல்ல கவிஞர்


முகத்துக்கு அழகு பல் என்றவர்

சொல்லையும் பல்லையும் இணைக்கிறார்

தம் வைரச் சொல்லாலே!


எப்படி எனில் சுவத்து ருசிக்க நா(க்கு) பேசவும் அவசியம்

கடித்து அரைக்கப் பல் அவசியம் பேசவும் அவசியம்

ஆனால் நா மென்மை பல் வன்மை

மென்மையும் வன்மையும் இணைத்து

உண்மை செய்திருக்கிறார் பெண்மைக்கும் ஆண்மைக்கும்

பாலமிடுவது போல ஆனால் பல்லின் பலம் சொல்லி

பலனையும் பலத்தையும் பெருமை பாடி இருக்கிறார்


வாய்த் தாய் பெற்றெடுத்த வளமிகு குழந்தைகள் 32

யாவும் இறைவன் தந்த இயற்கைத் தந்தங்கள் எனும் ஒருவர்

பல் தேய்த்தலிலும் அழகை காணும் ஒருவரோ

சொத்தை இல்லா பல்லே அழகு என்கிறார்


எல்லாவற்றையும் விட ஒரே வரியில் உன்னதப் படி ஏறுகிறார்

ஆசிரியர் தாய் அன்பிற்கும் கண்டிப்புக்கும் அவளே தாய்

அவளே ஆசிரியர் என்று...தாய் வேறு ஆசிரியர் வேறல்ல‌

என்று கற்பிதம் செய்கிறவர் ஒன்றாகி நிற்கிறார் கவிஞரும் ஆசிரியருமாய்


உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் கற்றுத் தந்த ஆசான்

உயிருள்ள மெய்யைப் பற்றி கற்றுத் தந்த ஆசான்

கற்றுக் கொண்ட மெய்யுறுப்பில் பற்கள் முக்கியம் தானே

என்கிறார் என்னே ஒரு கருத்துச் செறிவான உயிரோட்ட ஒப்புமை


உங்கள் யாவரையும் வணங்குகிறோம்

பள்ளி விட்டதும் வீடு நோக்கி பிள்ளைகள் ஓடுவது மாறி இனி

வீட்டை விட்டு பள்ளிக்கு பிள்ளைகள் விரைந்தோடி வரும்

உங்கள் தாய்மை கண்டு ஆசிரியப் பணி மேன்மை கண்டு

அந்தக் காலம் விரைவில் வரும் என்ற நம்புதலோடு

HERE ARE SOME HONEY DROPS IN ENGLISH:

1. Sensitive teacher is like a sensitive teeth

    Be smile to every one be sensitive to every one


2. Without talent we can't teach

    With out teeth  we can't teach

3. Face is the index of the mind

    But a Smile is the index of the face

    Dental care by the words tutors

    Decides the destiny of the modern makers

    what a vision and Future out look!


4. One Rhyme says:

     Taking too many choclates

     Will give you cavities

     Jaani jaani yes ma

     Telling lies no ma

  It remembers the popular Rhymes

5. A teachers planting seeds of knowledge

    I like to plant of yours teeth

   In this sense teacher acting as a Dentist

   Dentists acting as Teachers


6. When my parent tell me to do my home work

    My teacher taught me importance of hard work

   Education can give me success

  I cannot achieve this with out my teachers

 As I Grow older, I will be get teachers new

So; learning never ends.

Here through this Golden words we are clearly understood

The importance of Education for ever

7. Your Teeth are unique to you

    Just like your fingerprint...

   Yes it is very truthful scientific coined words

   even Forensic Department is considering

   Finger prints, Teeth (bites and presses symptoms) and 

  Retina are proofs even to Twins to differentiate 

 in criminal procedures.


8. Twice in a day in the morning and at the night

    Brush: up and down up and down

   It symbolically refers to me To remembering

  Up and down of our life journey


9. I do have a cavity this candy has their own Gravity

   What a Rhyming...cavity and Gravity...

10. Don't often eat chocolate, don't don't don't with mothers care

Here I conclude this happiest occasion with memories.

   



கவிஞர் தணிகை


நன்றி சொல்வது நாட்டுக்கு மரபு

மரபை வெல்வது எங்களின் புதிய வரவு

வார்த்தைகளை இதயத்தில் பதித்துக் கொள்வோம்

வெறும் ஏடுகளிலும் சொற்களிலும் 

புதைத்துவிடாமல்...

புதைத்தாலும் அது செடியாய் வளர்ந்து

மறுபடியும் பூக்கும்



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை