Sunday, January 31, 2016

வாழ்க நீர் எம் இணைய நேயரே!

வாழ்க நீர் எம் இணைய நேயரே!




இருப்போர்
இல்லார்க்கு உதவிட‌
இல்லார் இருப்போராகி
மறுபடியும்

இல்லார்க்கு
சங்கிலித் தொடராய்
உதவிகள் தொடர‌

இல்லார்க்கு உதவி
செய்கிறோம் என்ற‌
தட(ய)மின்றி

புதிதாய்ப் புறப்பட்டு
உதவுகிற இனம் உதயம்!

எழுதப்படாத சட்டம் கொண்டு
எழுதுகிறது புது வரலாறு!

 அரசு, அதிகாரம்,
கட்சி, கொடிகள் தேவையின்றி

இணையத்தில் இணைந்து
முக நூலில் பதிந்து
சாதி,மத பேதமின்றி
சாதிக்கிற மனத்தின் மணம்

இலக்கு நோக்கி நகர்கிறது
இலட்சியம் கொண்டு
சாவுக்கும் பின்னும் வாழ்கிற
தத்துவ‌ நெறியுடன் வாழ்(த்து)கிறது.

வாழ்க நீர்
எம் இணைய நேயராய்!
என்றும் வாழ்ந்திட,வாழ்த்திட‌
இணைந்திட வாரீர்...



 மறுபடியும் பூக்கும் வரை
  ‍கவிஞர் தணிகை.

Saturday, January 30, 2016

மிக அருகே வருகிறாய்

மிக அருகே வருகிறாய்
மிக தொலைவும் செல்கிறாய்

எதிர்பாரத பரிசை கொடுக்கிறாய்
எதிர்பாராதபோது
எடுத்தும் கொள்கிறாய் காணாது

தொலைந்தும் போகிறாய்
தொலைத்தும் விடுகிறாய்

காலம் தம் பேரை
நம்முடன் எழுதிக் கொண்டிருக்க...

 

மன்மத அம்பு

காதலுக்கும் காமத்திற்கும் கண் இல்லை
கண் இல்லாமலும் காதலும் காமமும் காண்..

மன்மத வம்பு...