Saturday, June 27, 2020

உண்மைக் கதை எண்:பதினா று16.ரௌத்ரம் பழகு.

உண்மைக் கதை எண்:பதினாறு: 16.ரௌத்ரம் பழகு.


bharathiyar rowthiram pazhagu song Mp4 HD Video WapWon

சரியாக ஆண்டு நினைவில்லை. அனேகமாக 1988 வாக்கில் இருக்கும் என எண்ணுகிறேன். எனது விதவைச் சகோதரிக்கு 3 பெண் குழந்தைகள் அதிலும் கடைசிக் குழந்தை மன வளர்ச்சி குன்றியது. எனைப்பற்றி அறிந்தார்க்கு இவை எல்லாம் முன்பே தெரியும். எனவே அதை நான் திருப்பி எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

அவர்கள் குடும்பத்தை நாங்களே அழைத்து வந்து உருவாக்க முனையும்போது அவர்களுக்கு ஏதாவது தொழில் உருவாக்கித் தரும் திட்டத்தில்( ஏன் எனில் அவர் சத்துணவு அமைப்பாளர் போன்ற பணிக்கெல்லாம் போக விரும்பவில்லை) ஒரு சிறிய பெட்டிக் கடை அதிலேயே ஆடை தைக்கும் ஒரு தையல் எந்திரம் எல்லாம் போட்டு சாலையோரத்தில் வாடகைக்கு ஒரு தெரிந்தவரின் கடையைப் பிடித்து ஏற்பாடு செய்தோம்.

அது எமது போதாத காலம் அந்த ஊரின் பக்கம் அப்போது செழிப்பாக இல்லை. ஆனால் பக்கத்தில் ஒரு அசைவ உணவு தயாரிக்கும் டிபன் கடை இருந்தது. அந்தக் கடையில் இரவில் நல்ல வியாபாரம். அதெல்லாம் இந்த கதையில் பெரிய விடயமல்ல.

அடியேன் அப்போது சேலம் மாவட்ட மலை வாழ் மக்களுக்கு திட்ட அலுவலராக இருந்தேன் மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு மாவட்ட அலுவலக அலுவலகர்கள் எல்லாமே ஓரளவுக்கு எனது தொடர்பில் இருந்தனர் முகாம் நடத்துவது மக்களுக்கு நன்மை செய்வது என்ற நல்ல பேர் என்னுடன் இருந்ததால்.

அப்போது மாவட்ட ஆட்சியராக எம்.எப். ஃபாரூக்கி ஐ.ஏ.எஸ் என்னை வெகுவாக மதிப்பார். காரில் ஏறி விட்டாலும் என்னைப் பார்த்து நிறுத்தி என்னை விசாரிக்காமல் கிளம்ப மாட்டார்....

ஐசரிவேலன் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) எங்கள் பக்கத்து எஸ்.ஐ.காவல் துறை துணை ஆய்வாளர். இவர் காவல் நிலையத்துக்கும் பின்பே/ பின்புறமே ஒரு வீட்டில் குடியிருந்த போது இவரது மனைவி எரிந்தார் இறந்தார் . அது பற்றி எல்லாம் எந்த மேல் விவரம் எல்லாம் எவருக்கும் தெரியாது. ஆனால் இந்த சம்பவம் நடந்தது பற்றி அனைவர்க்கும் தெரியும்.

இவர் நன்றாக ஆள் வாட்ட சாட்டமாக கருப்பாக ஒரு நீலக் கலர் புல்லட்டில் வருவதை இன்றும் எனது மனக்கண் முன் வந்து நிறுத்த முடிகிறது. இவர் எனது சகோதரிக்கு வாழ்வாதாரத்திற்காக வைத்து சோதனை முறையில் நடத்தப் பட்ட கடையின் மாலை நேர அசைவ உணவுக் கடை அருகே அதாவது சாலையின் மறுபுறம் கடையின் எதிர் புறம் நின்றபடி அங்கிருந்தே விரல் சொடுக்கி அந்தக் கடையில் இருந்து டிபனை வாங்கிச் செல்வது வழக்கம்தான் கவனித்திருக்கிறோம். மேலும் அதற்கு அவர் விலை கொடுத்தாரா இல்லையா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது நாமறியோம். இன்று நினைவில்லை.

இப்படி செய்து கொண்டிருந்த அவர் ஒரு நாள் திடீரென சாலையின் அப்புறம் இருந்து கொண்டே எங்கள் சகோதரியை அழைத்து வெற்றிலை பாக்கு(ம்) வேண்டும் என்று கேட்டதாக அறிந்தேன். அப்போது நான் உள்ளூரில் இல்லை. வெளியூரில் இருந்து ஊர் திரும்பிய நான் இதைக் கேள்விப்பட்டதும் எங்கிருந்து வந்ததோ அந்த ரௌத்ரம்...

Rowthiram pazhagu thamizha @rowthiram_pazhagu_thamizha Instagram ...

உடனே எனது இரு சக்கர வாகனத்தில் ஏறி காவல் நிலையம் சென்றடைந்தேன். மணி சுமார்  10.00 am இருக்கலாம். அப்போது அவர் அங்கு காவல் நிலையத்தில் தான் இருந்தார். ஆங்கிலத்தில் (கவனிக்கவும் ஒரு வார்த்தை கூட தமிழ்க் கலப்பின்றி தமிழ்க் கவிஞராகிய நான் தமிழைப் பேசாமல்) சரமாரியாக மிகவும் சத்தமாக திட்ட ஆரம்பித்தேன் அதன் சாரம்: நீ என்ன பெரிய பிடுங்கியா? ஒரு விதவைப் பெண் குடும்பம் பிழைக்க ஒரு சிறு பிழைப்புக்காக ஒரு கடை வைத்துக் கொடுத்தால் அவ்வளவு இளக்காரமாகப் போய்விட்டதா? தொலைத்து விடுவேன் ஜாக்ரதை...என என்ன என்ன தோன்றியதோ எல்லாம் திட்டித் தீர்த்து விட்டு அந்த மனிதன் பேசவில்லை. I have not given any chance and time to  reply நான் பேசி முடித்து எனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

அதிலிருந்து அந்த மனிதன் தமது போக்கை மாற்றிக் கொண்டார். அந்த செயலை செய்யவில்லை. மேலும் தாமதமான இரவு நேரத்திலும் கூட அந்த மனிதரும் நானு ஒரே பேருந்தில் சேலம் முதல் எனது ஊர் வரை எல்லாம் கூட approximately 45 km பயணம் செய்திருக்கிறோம். எந்த சில்மிசமும் செய்ய முயலவில்லை. அப்படி ஏதாவது இருந்திருந்தால் அவர் அந்த நிலையத்தில் பணி புரிய முடியாமல் அல்லது அவரை எங்கு எல்லாம் எப்படி எல்லாம் சிக்க வைக்க முடியுமோ அதை எல்லாம் செய்திருக்க முடியும். ஆனால் அதற்கெல்லாம் அவசியமில்லாது போயிற்று.

இன்று நினைக்கவும் கூட அது எல்லாம் வியப்பாகவே இருக்கிறது. இப்போது கூட அதை எல்லாம் just like that  என்னால் செய்ய முடியுமா என்றுத் தெரியவில்லை.
pazhagu hashtag on Instagram
மேலும் அந்த சம்பவம் பற்றி அக்கம் பக்கம் கடைக்காரர் மற்றும் ஊரில் உள்ளோர் எங்களுக்கு கடையை வாடகைக்கு கொடுத்தோர் எல்லா மனிதர்களும் பேசி வந்தனர் எனது நடவடிக்கை பற்றி... ஆனால் அந்தக் கடை சரியாக ஊதியம் ஈட்டித் தராததால் 3 மாதத்திலேயே அந்தக் கடையைக் காலி செய்து கொடுத்து விட்டேன் அது வேறு...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Education and employment-Introduction

Friday, June 26, 2020

காகிதப் புலி அரச மரமும் மனிதமாகாத மாக்களும் : கவிஞர் தணிகை

காகிதப் புலி அரச மரமும் மனிதமாகாத மாக்களும் : கவிஞர் தணிகை
Arasamaram Pillayar: Lord Ganapathi - YouTube


இந்த நாட்டில் விதிகளும், சட்டங்களையும் எவருமே பெரும்பாலும் மதிப்பதில்லை. அது மட்டுமல்ல அப்படி மதித்து ஒழுகுவாரை எல்லாம் பைத்தியக்காரராக எண்ணி எள்ளி நகையாடப் படுகிறார்கள். கோவிட் 19 வைரஸ் காலத்தில் அன்றாடம் நான் பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதனால் நடப்பு நாட்களில் என்ன என்ன நடந்து வருகிறது என்பதை என்னால் கவனிக்க முடிகிறது.

பெரும்பாலான மக்கள் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள்...
நடந்தவற்றில் சிலவற்றைப் பதிவு செய்கிறேன். 1. அதிகாலை மணி 6 தான் . ஒரு பெண் வயது 50 வயது முதல் 55க்குள் இருக்கும் என நினைக்கிறேன். நான் பேருந்துக்கு நிற்கும் இடத்தில் அதிகாலை வந்து நீளமான தலை மயிற்றை உருவி எடுத்துக்  கொண்டே வெளக்கமாறு கட்டுடன் இருந்ததை வைத்து விட்டு என்னுடன் பேச்சு கொடுத்தார் வண்டி வந்தால் சொல்லுங்கள் என்றார். ஜலகண்டாபுரத்துக்கு செல்ல வேண்டும் வெள்ளிக்கிழமை கொஞ்சம் வியாபாரம் ஆகும். ஆனால் பேருந்துக்காரர்களே இதற்கு 200 ரூ வாங்கிக் கொள்கிறார்கள் அந்தளவா எனக்கு விற்பனை நடக்கிறது என்றார். கொஞ்ச நேரத்தில் அவர் கொஞ்சம் உடைந்து சாய்ந்த நிலையில் கால் ஒன்றுடன் இருக்கும் பேருந்து நிறுத்த நிழற்கூட்த்தின் பின் ஒளிவு மறைவில்லாமல் இருக்கும் இடம் சென்று போய் யார் இருக்கிறார் இல்லை என்றெல்லாம் பொருட்படுத்தாமல் சிறுநீர் கழிக்க ஆரம்பித்து விட்டார். ஒதுங்கி நமது அரச மரத்தடிக்கு நகர்ந்து நின்று கொண்டேன்.

  நான் செல்ல வேண்டிய பேருந்து வந்தது....நான் அதில் ஏறத் தயாரானேன்...அந்த வண்டி அந்தப் பெண் செல்ல வேண்டிய பேருந்தாக‌ இல்லாததால் நான் பின்னால் வரும் என்றதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் நான் மறுபடியும் ஏம்மா இப்படி இங்கேயேவா சிறுநீர் கழிப்பது என்று கேட்டதையும் இரண்டு முறையும் காதிலேயே போட்டுக் கொள்ளாதது போல வேறு எதையோ கேட்பது போலவே கேட்டுக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் அத்தனை படிப்பறிவு இருப்பதாகத் தெரியவில்லை.

 2. பேருந்து புறப்பட்டது 15 கி.மீ தள்ளிய உடன் ஒரு முக்கிய நிறுத்தம் மறுபடியும் அடுத்த 15 கி.மீ தூரத்தில் அடுத்த முக்கிய நிறுத்தம். வேறு பேருந்து இல்லாததால் அதில் வழக்கம் போல நிற்கும்படியான கூட்டம். என்னதான் நடத்துனர் சொன்னபோதும் எவரும் கண்டு கொள்ளவே இல்லை. 3 சீட்டுக்கு இருவர், இரண்டு இருக்கைக்கு ஒருவர் என்பதெல்லாம் இல்லை. அனைவரும் ஏறி வழக்கம் போல அமர்ந்து கொண்டனர். நின்றபடியே பயணம் செய்தனர். சமூக இடைவெளி அரசின் அறிவுப்புகள் எல்லாம் விதிகள், சட்டங்கள் எல்லாம் காணப்படவேயில்லை.  மேலும் இருக்கையில் ஒரு டிக் மார்க் இருந்ததும் எந்த வகையிலும் பயன்படவில்லை

முடிந்தவரை நான் அரசின் கொள்கையை பின் பற்ற பார்த்தேன் ஒரு நபர் வந்தார் அவர் கொத்து வேலை செய்வார் போலும் அவருடன் சிலர். எவரும் முகக் கவசம் அணியவில்லை. முக்கியமாக அவர் அணியவில்லை. என்னை நகர்ந்து அமரக் கேட்டார். நான் நடத்துனரைக் கேளுங்கள் என்றேன். அதெல்லாம் இல்லை எல்லாரும் அமர்ந்து தானே இருக்கிறார்கள் இங்கே மட்டும் என்ன என எதிரும் புதிருமானோம். நான் அவரை முகக் கவசம் எங்கே முதலில் போடுங்கள் முகக் கவசம் போடாதாரை பேருந்தில் ஏற்றவே கூடாது இப்போது நான் ஆரம்பித்தால் பேருந்து உரிய இடத்துக்கே போய்ச் சேராது என்று அறிவுறுத்தினேன். உடனே சில பெண்குரல்களும், இந்த நபரும் எல்லாம் தலையில் எழுதி இருக்கிறது விதிப்படிதான் நடக்கும், எவருக்கு எப்போது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்படித்தான் என பேச ஆரம்பித்தனர்...பாரதியின் வரிகள் என்னுள் ஓடின...பொருளாதார சமப்படுத்தலையும் கூட மனிதரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையற்றார், இவர் கண்டு நான் சிரிப்பதா அழுவதா, நெஞ்சு பொறுக்குதிலையே என்றபடி முகக் கவசம் அணிந்து கொண்டு அமரச் சொல்லி அனுமதித்தேன். சேலம் தலைமை மருத்துவமனையிலும் மேட்டூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார் எல்லாம் யார் நோயாளிகள் இல்லையா எனக் கேட்டு விட்டு இந்த கோவிட்...19 வைரஸ் கூட விதிப்படிதான் தொற்றும் என நினைத்தபடி இருக்கும் இந்த மனிதர்களுக்கு எப்படித்தான் புரிய வைக்கப் போகிறோம் என அமைதியடைந்தேன்.

நடத்துனரும் வந்து 3 இருக்கையில் இருவர்தாம். அமர்ந்திருப்பார் அனுமதித்தால் ஒருவர்க்கொருவர் அனுசரித்தால் பிரச்சனையில்லை. அனுமதிக்கவில்லையென்றால் பேசாமல் இருக்க வேண்டியதுதான் என அவர் பேசி அவர் தரப்பு நியாயத்தை சொல்லியதைக் கூட விடாமல் இந்த நபர் பேசியபடியே இருக்க, நான் அவரை நடத்துனர் பேசட்டும் கொஞ்சம் கேள் என்றேன்...
What is the significance of the Peepal tree in Indian Culture? - Quora
அதன் பின் மடித்துக் கட்டியுள்ள வேட்டியை இறக்கி இருக்கையில் அமர் என்றேன்... மேலும் இந்த நடவடிக்கையில் இவர்களை எல்லாம் விட அரசாங்கம் என்ன செய்கிறது? என் போன்றோரை நடத்துனர் ஓட்டுனர் போன்றோரை பணி செய்ய வைத்து இது போன்று வரும் மக்களை எல்லாம் கட்டுப் படுத்தும் படி அல்லது அவர்க்கு வசதி செய்து தரும்படி கூட்டம் ஒரே பேருந்தில் தொற்றாமல் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக ஏன் பேருந்தை ஒன்றன் பின்னாக ஒன்றை அனுப்ப வில்லை. எல்லாம் பொருளாதாரம்.

திருமழிசை தினசரி சந்தையில் வாங்குவார் இன்றி கொட்டிக் கிடந்த காய்கறிகளை உடனடியாக காய்கறி தேவைப்படும் விலை அதிகமுள்ள மாவட்டங்களுக்கு ஒரு அரசாங்கம் நினைத்தால் விநியோகிக்க முடியாதா?

இது கட்டட வேலை, மரவேலை, போன்று பணிகளுக்கு செல்லும் நபர்களுக்கு இது போன்ற காலங்களிலாவது 5 அல்லது 10 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள ஊர்களில் அவர்களே நடந்தோ சைக்கிளிலோ சென்று பணி புரிய ஏற்பாடு செய்து பேருந்தின் கூட்டத்தை அதிக அத்தியாவசியம் உள்ள மருத்துவ பணியாளர்கள் போன்றோர் பயன்படுத்த வசதியாக மாற்ற முடியாதா?

நூறு நாள் திட்டம் இருநூறு நாள் திட்டம் என்ற திட்டம் வந்த பின் விவசாயத்துக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி தமிழகத்தில் விவசாயம் குட்டிச் சுவராகிவிட்டது அதை ஒரு அரசின் துறை பொறுப்பேற்று அந்த அந்த ஊர்களில் உள்ள விவசாயப் பணியாளர்கள் மற்றும் விவசாயம் செய்ய முற்படுவோர்க்கு எத்தனை பேர் தேவை அன்றாடம் அதற்கு அரசு எவ்வளவு பங்கீடு தரமுடியும் குறைந்த பட்ச கூலியாக விவசாய நிலமுடையோர் எவ்வளவு தரவேண்டியது என நிர்ணயம் செய்து தர முடியாதா?

மக்களை எடுத்துக் கொண்டால் நேற்று ஒரு பேருந்திலிருந்து இறங்கும்போது சற்று வயதான பெண் கழுத்தில் வெள்ளை மணி ஏழமை தெரிகிறது உடன் ஒரு கனமான பை, படியில் இறங்க அவர் முற்படுகையில் அவரிடம் அவருக்கு நல்லது செய்வதாக எண்ணி அம்மா நீ இறங்கும் முன் நான் இறங்கி விடுகிறேன் நீ சுதாரித்து இறங்க சற்று நேரம் கிடைக்கும் என்றேன். அது அவருக்கு பிடிக்கவில்லை நீயே முன்னால் இறங்கு நீதான் விழாமல் இறங்குவாய், நாங்கள் எல்லாம் விழுந்து விடுவோம்  என அவர் முணகியதிலிருந்து தெரிந்து கொண்டேன்... ஆக சக மனிதர்க்கு ஒருவர்க்கொருவர் எவருமே உதவி செய்யும் மனப்பாங்கு வெகுவாக குறைந்த காலத்தில் இவர் எதற்காக சொல்கிறார் என்ன செய்கிறார் என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியா மனிதர்கள் இருக்கும் காலக் கட்டம் வந்து விட்டது. அப்போது பழங்குடி இன மக்கள் புதிய நபர்களைக் காணும்போது நம்பிக்கையற்று இருப்பார்களே அது போல...

What is the significance of the Peepal tree in Indian Culture? - Quora
எமது ஊரில் வாகனம் தொடர்ந்து வந்து போகும் பாதை, ஒரு கல்லூரி மாணவன் சிறார்களை சேர்த்துக் கொண்டு எப்போதும் மட்டைப் பந்து, சிறகுப் பந்து போன்றவற்றை விளையாடி வருகிறார்கள். ஒரு நாள் எங்கள் வீட்டில் வந்து பந்து விழுந்தபோது அதைக் கண்டிக்க அதுதான் நேரம் என வாகனம் போக்குவரத்து நடைபெறும் இடத்தில் இப்படி செய்யலாமா ஒதுக்குப் புறமாக, காலியாக இருக்கும் இடத்தை இதற்கு பயன்படுத்தி விளையாடலாமே, உங்கள் பெற்றோர் எல்லாம் இப்படி சொல்லவில்லையா? ஏதாவது வாகனம் ஓட்டுபவர் வந்து இடித்துவிட்டால் என்னடா செய்வீர்கள் என்று கேட்டதன் விளைவு அந்த விடலைப் பயல் ஜாடை மாடையாக கிரிக்கெட் மட்டையை சுழட்டிக் காண்பிப்பது அடித்து விடுவானாம், டேய் போடுங்கடா பந்தை நேரா அடிக்கிறேன் பாரு என்பதும், காலைத் தூக்கி செருப்பைக் காட்டுவதுமாக செய்துவர எங்கள் வீட்டிலோ அதெல்லாம் வேண்டாங்க அவங்க வீட்டில் தெரிந்து தான் எல்லாம் நடக்கிறது  அங்குள்ள அந்த பிள்ளைகளின் பெற்றோரே கூட வந்து இரசித்து வருகின்றனர் இந்த விளையாட்ட எல்லாம் என கட்டுப் படுத்த ஆரம்பித்துள்ளனர். இது போன்ற மனிதர்களுடன் தாம் நான் வாழவேண்டி இருக்கிறது...
What is the significance of the Peepal tree in Indian Culture? - Quora
இந்த நிலையில் கோவில்பட்டி சம்பவம் நினைவு வரத்தான் செய்கிறது...சட்டமும், நீதியும், அரசின் துறைகளும் பல லட்சங்களைக் கொடுக்கலாம் உயிர்களைக் கொண்டுவர முடியாதே. இங்கு சட்டம் நீதி அரசு எல்லாமே இருக்கிறது ஆனால் அதை எல்லாம் மீறுகின்ற கூட்டம் எண்ணிக்கை கூடி வருகிறதே...இந்த சட்டம் நீதி அரசு எல்லாமே சாட்சி கொடுத்தால் நிரூபித்தால்  நஷ்ட ஈடு மற்றும் தண்டனை வாங்கித் தருகிறோம் என்றுதான் சொல்கிறதே தவிர இது போன்ற கொடுமைகள் நிகழாமல் தடுக்க வரும் முன் காக்க ஒன்றுமே செய்ய முடியவில்லையே...இலஞ்சம், மது மதம், சாதி, இனம் ,மொழி இப்படி எந்தவித காரணமாகவும் இருக்கட்டும் யாவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்து மனிதம் காக்க வேண்டுமே... எனக்கு ஏனோ George Floyd ப்ளாய்ட் கழுத்தில் கால் வைத்து கொல்லப்பட்ட கறுப்பு இன மனிதனின் நினைவையும் இங்கு மறுக்க முடியவில்லை...

 இந்த சட்டமுறைமைகள் முடிவதற்குள்ளாகவே ஆண்டுகள் பல ஆகிவிடுகிறதே...தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதி என்றும் சொல்லப்படுகிறதே... குற்றம் இழைத்தவர்க்கு நிரூபிக்கப் பட்டால் தண்டனை என்பது மட்டுமே இழைக்கப் பட்ட அநீதிக்கு தீர்வாகாது... அதே போல சட்டத்தை எப்படி எல்லாம் அவரவர் பக்கம் நீதியின்றி நியாயமின்றி திருப்ப என்ன என்ன வெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு சொல்லித் தர அரசின் துறைகள் பெரிதும் பயன்படுகின்றனவே...அதில் எல்லாம் சுயநலம் ஒளிந்து கிடக்கின்றனவே... சட்டம் என்பது தவறு செய்வாரை சரி செய்யும் முகமாக இல்லாமல் பல நேரம் அவருக்குத் துணை போகும்படியாக அல்லவா இருக்கிறது? என்னதான் இருந்தாலும் அவர்கள் காவல் பணி செய்வாரை எதிர்த்தே பேசியிருந்தாலும் தகாத வார்த்தை பேசியிருந்தாலும், செல்பேசி இலஞ்சம் என்றெல்லாம் பேசப்படுகிறது அவை எல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் சக மனிதரை எப்படி அய்யா இப்படி துன்புறுத்திக் கொல்ல மனம் வந்தது? நாம் மனிதமா மனிதமாகி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டது என்கிறார்களே அதெல்லாம் வெறும் பொய்தானா? சட்டமும் நீதியும் அரசும் அதன் துறைகளும் இந்தத் துணிச்சலை எப்படி உங்களுக்கு கொடுத்தது புதிராகவே நாங்கள் எல்லாம் விளங்காமலே வாழ்ந்து வருகிறோம்.
இலஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என்று இந்தியச் சட்டம் சொல்கிறதே...மதுக் கலாச்சாரம் மாபெரும் அநீதி என்றும் மனித குலத்தின் பெரும் எதிரி என்றும் மகாத்மாக்களால் சொல்லப் பட்டுள்ளேதே அவர்கள் வழிதான் ஆள்கிறோம் என அவர்கள் பேர் சொல்லியே ஆள்பவர்கள் ஆள்வதாகச் சொல்லிக் கொள்கிறார்களே அதெல்லாம் வேறா நான் குழப்பத்தில் இருக்கிறேன்...குழப்பமான மனது கேள்வி எழுப்பும், கேள்வி எழுப்பும் சிந்தனை உண்மையைக் கண்டறியும்.
How the Buddha Got His Face – DNyuz
வரு முன் காக்க என்ன இங்கு இருக்கிறது? யோசிப்போம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






Wednesday, June 24, 2020

அரச மரத்தின் ஆட்சி: கவிஞர் தணிகை

அரச மரத்தின் ஆட்சி: கவிஞர் தணிகை

BTM Layout Bus Stop,BTM LAYOUT 2ND STAGE | Mapio.net


அதுவும் அந்தக் காலத்தில் இருந்து அங்கேயே நின்று கொண்டுதான் இருக்கிறது. இவன் இப்போதுதான் அதனுடன் பேச ஆரம்பித்துள்ளான். மிகப் பெரியதாக வளர்ந்து மேலிருந்து நூல் விட்டுக் கொண்டிருந்தது.

இதை விடப் பெரிய வேம்புடன் இணைந்ததை தினமும் இவன் வீட்டிலிருந்து பெரும்பாலும் இவன் மட்டுமல்ல சகோதர சகோதரிகள் எல்லாருமே ஒர் சொம்பு நீரைக் கொண்டு சென்று காலையில் அதனடியில் இருந்த பிள்ளையாருக்கு ஊற்றி விட்டுத்தான் சாப்பிட்டு பள்ளி செல்லவே கிளம்புவார்கள்...

ஊருக்கே மாபெரும் அரசாயிருந்த அதை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி காய்ந்தது என்று வேர் எடுத்து அதன் பின் மறுபடியும் மேல் காய்ந்து விட்டது என வெட்டி இப்படியே அதை முழுதாக முடித்துவிட்டார்கள் இனி எப்படி வளர்த்தாலும் அவ்வளவு பெரிய அரசைக் காணவே முடியாது. இப்போது ஒரு காங்கிரீட் கூட்டில் அந்தப் பிள்ளையாரும்...

அதற்கும் பின் இந்தப் பேருந்து நிலையத்தில் இருக்கும் இந்த அரசு தான் மாபெரும் அரசாக விளங்குகிறது. இவனது தந்தை, தாய், சகோதரிகள் என அனைவரையும் பார்த்தது. இவனையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது

இவன் இப்போதுதான் விடியற்காலையில் இதனடியில் இருந்து தினமும் தனது வாழ்வின் தேடலை ஆரம்பிக்கிறான்
சில நிமிடம் சில நாட்கள் பல நிமிடம் இத்துடன் சேர்ந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். பேருந்து வரும் வரைதான்...

இவன் ஒரு சொல் பொறுக்காதவன்...வார்த்தைக்கு முக்கியம் தருபவன் அதன் கனம் உணர்ந்தவன்...எனவே இதற்கு தெரியாமலேயே இவன் வாழ்வில் பல கதைகள் நிகழ்ந்து விட்டன. இவன் வெற்றி அடைந்த கதைகளையே இது வரை எழுதி இருக்கிறான். தோல்வி அடைந்த ஊரே கூடி எதிர்த்து இவனைத் தோற்கடித்த கதை மற்றும் எதிரிகள் இவனை காவல் நிலையத்தில் சிக்க வைக்க முயன்ற கதை பற்றி எல்லாம் இவன் எழுதவே ஆரம்பிக்கவில்லை. அதனிடையே மறுபடியும் இவனிடம் கதைகள் வந்து சேர்ந்து கொள்கின்றன. பிரச்சினையில் இவன் ஆதவன்...

இப்போது தனது உருவத்தை வெளிக்காட்டாமல் ஒரு குறிக்கோள் நிறைவேறட்டும் என தவ வாழ்க்கை போல போவதும் வருவதுமாக இருக்கிறான். அதனிடையேதான் இந்த அரசும்...ஒரு நாள் இவனும் இல்லாது போவான் ஆனால் இது இருக்கும்....
Pipal Leaves Font - Illustration - Free Transparent PNG Download ...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, June 21, 2020

பெண்குயின் பெங்குவின் அல்ல: கவிஞர் தணிகை

பெண்குயின் பெங்குவின் அல்ல: கவிஞர் தணிகை
Penguins (2019) - IMDb

பெங்குவின் பறவை பார்ப்பதற்கும் அழகானது அதுவும் சீல் வால்ரஸ் போன்ற கடல் வாழ் பறவை விலங்கு போன்றவை மனிதரோடு நட்பு பாராட்டுபவை என்றும் அறிவியல் சொல்கிறது

அதற்கும் இதற்கும் தொடர்பில்லை
From Telugu?
இந்த பெண் குயின் எதற்காக எடுக்கப் பட்டது ஏன் எடுக்கப் பட்டது என்ன நோக்கத்தில் எடுக்கப்பட்டது என்ற விவரம் கூடத் தெரியாத நேரத்தை விரயமாக்கும் ஒரு சினிமா

படம் எடுத்து முடித்த பின் இவர்கள் எல்லாம் போட்டுப் பார்த்து அனைவரையும் பார்க்க வைக்கிறார்களா என்பது கூட தெரியாத அளவு மோசமான சினிமாவாக இருக்கிறது

எடுத்தவர்களுக்கு காசு பிறர் உழைப்பு வேஸ்ட். பார்ப்பவர்க்கு நேரம் வேஸ்ட்.

இதைப் பற்றி வேறு ஒன்றுமே சொல்வதற்கில்லை

சார்லி சாப்ளின் ஒரு புகழ் பெற்ற மேதை சினிமாக் கலைஞர் அவர் பேரையும் சேர்த்து வைத்து இழுக்கடைய வைத்து விட்டார்களே....
Savithri actress

கீர்த்தி சுரேஷ் வேறு முழுகாமல் இருப்பதாக கேரக்டர். அத்துடன் அவர்தாம் துப்பு துலக்குகிறார். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை.

எதிர் பார்த்து படம் பார்க்க அமர்ந்து விடாதீர். இப்போதெல்லாம் டெலிகிராம் என்பதில் சுலபமாக டவுன் லோட் ஆகி அனைவரும் பார்த்து விடுகிறார்களாமே...சினிமாத் தியேட்டரே இல்லாமல் சினிமா ரிலீஸ் என்பது ஒரு நல்ல முன்னேற்றம் தான். ஆனால் அதற்காக இது போன்ற படங்களை எல்லாம் இவ்வளவு விளம்பரம் கொடுத்து செலவு செய்து செய்ய அவசியமே இல்லை. இயக்குனரும் தயாரிப்பாளரும் வருத்தப் படுவார்கள் எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

பொன் மகள் வந்தாள் மறுபடியும் ஒரு முறை பார்க்கலாம் இதைப் பார்ப்பதற்கு பதிலாக.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Thursday, June 11, 2020

உடலில் வைத்துப் பார்க்காத‌ தெர்மோ மீட்டர் அளவு சரியாக இருக்காதாமே: கவிஞர் தணிகை

உடலில் வைத்துப் பார்க்காத‌ தெர்மோ மீட்டர் அளவு சரியாக இருக்காதாமே: கவிஞர் தணிகை

Dr Trust (Usa) Waterproof Flexible Tip Digital Thermometer (White ...

1. சோதிப்பவர்கள் சோதிக்க வேண்டியவர்களின் வாயில் நாக்கின் அடியில் வைத்து பார்க்கும் பழைய முறையிலான தெர்மாமீட்டரை 3 நிமிடம் வைத்து பார்ப்பதும்

2. கம்மக் கட்டையில் அதாவது கைக்கும் உடலுக்கும் இடையே அந்தப் பகுதியை இணைக்கும் இடத்தில் வைத்து 4 நிமிடம் கழித்து எடுத்துப் பார்ப்பதும்

3. குதத்தில் வைத்தாலும் 3 நிமிடம் வைத்து எடுக்கும் வெப்பநிலையே அந்த உடலைப் பற்றிய உண்மையான வெப்ப  நிலையை சொல்லும் என்றும்
Digital Infrared Thermometer Temperature Gun Contact-Less (Pack of ...
மற்றபடி இப்போது பெரும்பாலும் சீனாவிலிருந்து தருவித்து உடலைத் தொடாமல் நெற்றி முன் காற்றில் வைத்து எடுத்துப் பார்க்கும் வெப்ப நிலை அதுவும் ஒரு வினாடி ஒரு பொத்தானை அமுக்கிப் பார்க்கும் முறை மூலம் அந்த உடலின் வெப்பநிலையின் அளவு சரியானதாக அதாவது துல்லியமானதாக இருக்காது என்பதை மருத்துவர்களும் மருத்துவ அறிவியலும் சொல்கிறது தெளிவாக...

அப்படி இருக்கும் போது சுற்றுச் சூழல் இருக்கும் வெப்பநிலை பற்றியே இந்த நான் கான்டக்ட் தெர்மோ துப்பாக்கி சுட்டு மனித உடல் வெப்பநிலையை அறிவது சரியானதாக இல்லை என்பதை அறிந்தபோதும் ஏன் இப்படி நடந்து வருகிறது?

எல்லாமே வியாபார யுக்தியோ? இறந்து கொண்டிருக்கும் மனிதரிடம் இருந்து பிடுங்கும் முயற்சியோ என்று கேட்பதில் நியாயம் இருப்பதாகவேத் தோன்றுகிறது

இதற்கு பெரும்பாலும் சீனாவின் கருவிகளே பயன்படுகின்றன. அதையும் பார்த்து சரியாகத் தேர்வு செய்து வாங்கி இருக்கா விட்டால் அடிக்கடி ஒர் முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பொருள்களாகவே போய் வாங்கியோர்க்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது என்பதை குறிப்பிடத்தான் வேண்டும்.
Laica Contactless thermometer - Digital Thermometer | Alzashop.com
இது போல கொசு அடிக்க வாங்கிய வலை பேட்கள் மின்னூட்டம் செய்து திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம் என்றது சிறிது நாட்களிலேயே அதன் பயன்பாடு இழந்து செயல்படாத நிலையை அடைந்து விடுவதை பல முறை வாங்கி ஏமாந்த அனுபவித்ததும் பொருள் விரயமானதும் எனக்கு நினைவுக்கு வருகிறது.
24 Energy Mosquito Bat at Rs 185/piece | Old Town | Bhubaneswar ...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, June 6, 2020

சமூக இடைவெளி: கவிஞர் தணிகை

சமூக இடைவெளி: கவிஞர் தணிகை
Tamil Nadu introduces cashless ticketing system in government ...

பொதுப் போக்கு வரத்து ஆரம்ப நாட்களில் இருந்து நான் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளேன். முதல் பேருந்தில் இடம் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் அது சேலம் நோக்கி செல்லும் பேருந்து முதல் நாள் மிகவும் ஒழுங்காக இயங்கியது52 பயணிகள் கொண்ட பேருந்தில் 31 அல்லது 32 பயணிகள் சமூக இடைவெளியுடன் ஏற்றப்பட்டு அமரவைக்கப்பட்டனர்.

இருவர் அமரும் இருக்கையில் ஒருவரும்,மூவர் அமரும் இருக்கையில் இருவரும், முகக் கவசம் அணிந்திருக்கிறார்களா என்றும் பார்க்கப்பட்டு சரியாக இயங்கி வந்தது.சேலத்தில் இருந்து இயக்கப் பட்ட ஈரோடு செல்லும் பேருந்தில் உடல் சூடு சோதிக்கப் பட்டு கைகளுக்கு சேனிட்டைசர் கூட வழங்கப்பட்டது நாம் இந்தியாவில் இருக்கிறோமா என்ற வியப்பும் அரசு சொல்வதைக் கேட்டு அதன்படி மக்களும் ஒத்தழைக்க வேண்டும் என்ற கருத்தை முன் மொழிவதாகவும் இருந்தது.

2 ஆம் தேதி அதே போல இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் ஓமலூரில் இருந்து சேலத்திற்கு பேருந்து காலையில் இருந்து இன்னும் துவக்கப்படவில்லை என சுமார் 45 பேர்களுடன் பயணம் செய்தது...மனிதாபிமானம் பற்றி எல்லாம் ஒரு போக்குவரத்து ஊழியர் பயணத்துக்கு கட்டணமின்றி பயணம் செய்து கொண்டிருந்த அவர் இடம் விடாத இருக்கை நிற்பார்க்கு அளிக்காத சமூக இடைவெளி பின் பற்றும் அரசுக் கட்டளையைப் பின் பற்ற நினைக்கும் பயணிகள் பற்றி தனியார் பேருந்தில் ஏறுபவர்கள் எல்லாம் அரசு பேருந்தில் ஏறுகிறார்கள் தனியாரில் வேலை செய்கிறார்கள்...போட்டோ எடுத்து அனுப்புகிறார்களாம் என மிகவும் பெரிய சமூகப் பொறுப்பாளராக பேசியபடி வந்தார். அவர் பெண்கள், மற்றும் மாணவர்களுக்கு ஆதரவாக இயங்குபவராம்...அரசுப் பணியில் இருந்தபடி வீடு கட்ட கடனுதவி பற்றி எல்லாம் பேசியபடி இருந்தார்  அவர் ஊதியம் எவ்வளவு எனக் கேட்க ஆரம்பித்து இந்த அபாயமான காலக் கட்டடத்தில் விவாதப் போக்கை தவிர்த்தேன்...

கூட்டம் அதிகமாக ஏறுவதைப் பார்த்தவுடன் அவரே கொஞ்சம் குறைத்து ஏற்றுங்கள் என நடத்துனரைக் கேட்டுக் கொண்டார் அவரின் மனிதாபிமானம் அப்போது எங்கே போயிற்று எனத் தெரியவில்லை. அவர் மற்றும் ஒரு நாள் வழக்கமாக வரும் ஒரு நோயாளியாய் வரும் ஒரு கணவனுக்கும் அவரை அழைத்து வரும் மனைவிக்கும் இடம் அளியுங்கள் என அடுத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் எழுந்து இடமளிக்கவில்லை. சேவை என்பது தன்னிலிருந்து எழுவது ஆரம்பிப்பது என்பதை அவர் அறியாமல் வெறும் வாய்ச் சொல் வீரர் என்பதை அறிந்து கொண்டேன்

அவர் கிடக்கிறார் நாம் நமது கதைக்கு வருவோம்..03.06.2020 அன்று புதன் கிழமையாம் திருமண முகூர்த்த நாளாம் முதல் பேருந்தில் இடம் எங்களுக்கு இல்லை. சரி என பயந்து கொண்டே எப்படியும் இன்று அலுவலக கல்லூரியின் நேரத்துக்குள் போகமுடியாதே என  அடுத்த பேருந்து அதாவது ஒரு பேருந்துக்கும் இரண்டாம் பேருந்துக்கும் இடையே அரை மணி நேரம் வித்தியாசம். நல்ல வேளை அதில் இடம் கிடைத்தது ஆனால் செல்லும் வழி எல்லாம் அந்த ஓட்டுனரும் நடத்துனரும் இருக்கும் பயணிகளை எல்லாம் ஏற்றிக் கொண்டனர்.

ஓட்டுனர், நடத்துனர் பொறுத்த வரை இந்த சட்ட அமல் முறைகள் மாறி விடுகின்றன. சிலர் சமூக இடைவெளி, முகக் கவசம் போன்றவை கடைப் பிடித்து அரசு சொல்லியிருப்பதை அனுசரிக்கின்றனர். சிலர் அதைக் காற்றில் பறக்க விட்டு தான் தோன்றித் தனமாக இயங்கி வருகின்றனர் அபாயம் அறியாமல்.

Image may contain: one or more people, people sitting and indoor

அடுத்த இரண்டு நாட்களும் கூட அப்படித்தான் விருப்பப் படி நடத்துனர்கள் நடந்து வருகின்றனர். இதற்கு எல்லாம்  அடிப்படைக் காரணம் அரசு சொல்லியது போல இயங்காததும் போதுமான அளவு பேருந்துகளை இயக்காததும்... ஒரே ஒரு நல்லது என்ன வெனில் கட்டணம் உயர்த்தப் படாததுதான். ஆனால் பேருந்துகளின் இயக்கம் போதுமானதாக இல்லாத காரணத்தால் பயணிகள் எந்த சமூக இடைவெளியும் பின் பற்றுவதில்லை

ஒரு நாள் மதியம் சேலத்தில் மேட்டூர் வர ஒரு பேருந்தும் பேருந்து நிலையத்தில் இல்லை. காலியாக வெறிச்சோடிக் காணப்பட்டது...சிறிது நேரத்தில் ஒரு பேருந்து வர கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஏறி விட எல்லாம் ஏறிய பின் ஓட்டுனர் பின்னால் உடனே ஒரு பேருந்து இருக்கிறது நிற்பாரெல்லாம் அதில் ஏறிக் கொள்ளுங்கள் என்றார். அதை முன் கூட்டியே 2 பேருந்துகள் இருக்கின்றன ஏறுபவர் பொறுமையாக ஏறுங்கள் எல்லாருக்கும் இடம் இருக்கிறது என்று சொல்லி இருந்தால் என் போன்றோர் எல்லாம் பொறுமை காத்திருப்போம்.
Image may contain: one or more people, people sitting and indoor


வெயிலின் கொடுமை வீட்டுக்குப் போய்ச் சேரவேண்டுமே என்ற ஆதங்கம் அனைவரும் அரசின் அறிவிப்புகளை புறக்கணிக்கிறார்கள்...அரசு போதுமான பேருந்துகளை இயக்காமல் வேடிக்கை காட்டுகிறது. பெரும்பாலும் அரசை மட்டுமே குறை சொல்ல வேண்டியிருக்கிறது. போதுமான ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பணியில் இருக்கிறார்கள்...ஆனால் அவர்களை பயன்படுத்தி நிறைய பேருந்துகளை அரசு செலவாகிறதெ நட்டமாகிறதே எரிபொருள், ஓட்டுனர் நடத்துனர் ஊதியம், வண்டி தேய்மானம் எல்லாவற்றையும் கணக்குப் பார்த்து குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளை அதிகப்படுத்தாமலே இருக்கிறது. முதல் நாளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து இருக்கும் என்ற விதி காற்றில் பறக்க விடப்பட்டு சுமார் 7.30 மணிக்கே கடைசி பேருந்து என அனைவரையும் ஒரே பேருந்தில் அடைத்து பயணம் செய்ய வைத்து விட்டது.


மேலும் ஒரே நாள் நள்ளிரவில் பணமதிப்பை இழக்க வைத்த மத்திய அரசும், மதுவை மாநிலமெங்கும் உச்ச நீதிமன்றம் வரை சென்று  ஓடவைக்கும் மாநில அரசும் இந்த முக்கியமான தேவையான நேரத்தில் தனியார் பேருந்து முதலாளிகள் ஏற்கெனவே ஓவர் லோடு செய்து சம்பாதித்த அவர்களை ஒரு மிரட்டு மிரட்டி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்ரிப்கள் ஓட்டவில்லை எனில் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்றால் ஓரளவு இந்த இடரைத் தடுக்கலாம்.அவர்களும் ஓட்டுவார்கள்.ஆனால் இது தனியார் முதலாளிகளின் ராஜ்யம்.அதனால் ஆனால் இவர்களுக்கு மனிதர்களைப் பற்றி எல்லாம் அக்கறை இல்லை. ஏன் அந்த ஓமலூர் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் வரை இயக்கப் பட வேண்டிய பேருந்துகள் இயக்கவில்லை என்ன காரணம் என கேட்டு பிரச்சனையைத் தீர்த்து பணியை முடங்காமல் செயல்படுத்தும் அரசோ அரசு அலுவலர்களோ ஏன் அந்த நேரத்தில் செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் இருந்து மக்களுக்கு துன்பம் ஏற்படுத்துகின்றனர் என்பதெல்லாம் கேட்கக் கூடாத கேள்விகள்...அதன் பிறகு அரசு அலுவலர்கள் எல்லாம் கோவித்துக் கொள்வார்கள்...அரசியல் பிரமுகர்கள், அரசின் மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் குறி வைப்பார்கள் கேள்வி கேட்பாரைப் பார்த்து. கேள்விதான் கேட்கக் கூடாது ஆயிற்றே இந்த அரசுகளின் முன்...

மக்கள் குரல் ஒரு புறம் கோவிட் 19லும் மற்றொரு புறம் அரசின் ஆளுமையிலும் ஒடுங்கிப் போகட்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பதினைந்து: உண்மைக் கதை 15.இரத்தினச் சுருக்கம்: கவிஞர் தணிகை

பதினைந்து: உண்மைக் கதை 15.இரத்தினச் சுருக்கம்: கவிஞர் தணிகை

Odisha: Temples of Bhubaneswar - Outlook Traveller

ஒரிஸ்ஸாவில் வைக்கோல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த ட்ரக் லாரி ஒன்று மின் கம்பி உரசித் தீப்பற்றி எரிந்தது அதன் ஓட்டுனர் மணிமுத்து {பெயர் மாற்றப்பட்டுள்ளது} எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்.எனது சகோதரர் ஒருவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர்.அவர்கள் நாலு பேர் சமவயதுக்காரர்கள் இனத்தின் 4 பேரும் நாலு வருணத்தை சார்ந்தார்...அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் எங்கள் வீட்டில் இருந்தது.அதில் 2 பேர் இல்லை இரண்டு பேர் இன்னும் இருக்கிறார்கள். சரி நாம் கதைக்கு வருவோம்

ஒரே பொது சந்து கூட உண்டு எங்கள் வீட்டுக்கும் அவர்கள் வீட்டுக்கும். இறந்த அவரைப் பொறுத்தவரை என்னிட்ம் நல்ல மரியாதையாகவே நடந்து கொள்வார். அவருக்கு இளமையில் ஒர் பெண் வடிவிலான அதிர்ஷ்டம் கூட இருந்தது. ஆனால் அவர் அதை நழுவ விட்டார் என்றே சொல்ல வேண்டும். அதை எல்லாம் விளக்கினால் அது ஒரு கிளைக்கதை உபக் கதை. அது நீளம் எனவே அது வேண்டாம் நமக்கு.

அவருக்கு மணமாகி 2 குழந்தைகள் ஒரு ஆண் ஒரு பெண். மிக சிறுவராக இருக்கும்போதே இந்த அகால மரணம் விபத்து வடிவில். அந்த லாரி சென்னையைச் சார்ந்த ஒரு சேட்டு குடும்பம் சார்ந்தது...தகவல் தெரிவிக்கப்பட்டது அவர் ஒரே மகன் அவருக்கு 2 அக்கா ஒரு தங்கை உண்டு. எல்லாம் முடிந்தது.
Met. Centre,Bhubaneswar
அந்த லாரி ஓனர் மிகவும் நல்லவர் மாதம் ஒரு தொகையை எவ்வளவு என்று இப்போது நினைவில்லை. இந்த கதை நடந்தது 1990 வாக்கில் இருக்கும். அந்தக் குடும்பத்துக்கு பராமரிப்புச் செலவுக்காக கொடுத்து வந்தார் அவருக்கும் எனக்கும் மட்டுமே தொடர்பு அதுவும் தொலைபேசியில் மட்டுமே. எங்கள் வீட்டில் மட்டுமே அப்போது தொலைபேசி வசதி இருந்தது.மேலும் 25 காசு கொடுத்து ஒரு உள்நாட்டுத் தபால்...இன்லேன்ட் லட்டரில் எழுதிக் கொடுப்பேன். எந்தப் பிரச்சனையாய் இருந்தாலும் அந்த நபர் மிகவும் கனிவுடன் நடந்து கொண்டதை அந்தக் குடும்பம் மறந்திருக்கலாம். நான் இன்னும் மறக்கவில்லை. அவர் முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை.
The Temple City of Bhubaneswar, Odisha - Nativeplanet
அது மட்டுமல்ல இந்த இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் இவர்களுக்குரிய தொகை சேரவேண்டிய வழக்கு ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரில் நடக்க ஆரம்பித்தது. அங்குள்ள ஒரு வழக்கறிஞர் அவரும் நல்ல பண்பாளராக இருந்தார். எனது ஆங்கில அறிவு நான் சிறிது காலம் ஒரிஸ்ஸாவில் காளிமேளா என்ற இடத்தில் கோராப்புட் மாவட்டத்தில்  இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாநிலத்தில் மாவட்டத்தில் வட்டத்தில் பணி புரிந்த அறிமுகம் அவரையும் என் தொடர்பை மேம்படுத்த உதவியது.

ஆங்கிலத்தில் தொலைபேசி உரையாடல் மற்றும் தபால் வழியில் அலுவலக செயல்பாடுகள். அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் ஒரே ஒரு முறை மட்டும் நீதிமன்றத்திற்கு வந்தால் போதும் அதன் பின் அவர்களுக்கு வரவேண்டிய தொகையை வாங்கித் தருகிறோம் என்றபடியே  ஓரிரு ஆண்டுகள் கழிந்த பின்னே இவர்கள் ஒரிஸ்ஸா சென்றார்கள் சென்னை வழியே. வழக்கப்படி போக்குவரத்து செலவை அந்த சென்னையின் சேட்டு லாரி ஓனர் ஏற்றுக் கொண்டார். ரயிலில் சென்று வந்தார்கள்...இவர்களுக்கு வந்து சேர வேண்டிய ஒரு மிகப்பெரும் தொகை வந்து சேர்ந்தது. அதுவும் நினைவில்லை. இப்போது எவ்வளவு என்று...

இப்படிப்பட்ட சோகம் நிகழ்ந்து விட்டதே என்று அந்தக் குடும்பத்திற்கு எங்களால் ஆன உதவியை தயங்காமல் செய்து என செய்து வந்தேன். அதன் ஒரு பகுதியே அவர்களுக்கு சிரமம் அளிக்காமல் தபால் வழி தொலைபேசி வழியில் அந்த வழக்கை நடத்திக் கொடுத்து முடித்து வைத்ததும் பேச்சு வார்த்தை நடத்தியது எல்லாம் அடியேன் தான்
வேறு எவருக்கும் அந்தக் குடும்பத்தில் போதிய படிப்பறிவும் இல்லை. அவர் பெண்ணுக்கும் பையனுக்கும் பள்ளி சென்று வந்தவுடன் மேலும் விடுமுறைகளில் தனி வகுப்பு இலவசமாக மற்றவர்களுக்கு எடுப்பது போலவே எடுத்தேன். ஆனால் அந்த இருவருமே படித்து நல்ல நிலையில் வரவேண்டும் என விரும்பினேன். ஆனால் இருவருமே படிக்க முடியவில்லை என இயலாமையை வெளிப்படுத்தினர். அதிலும் அந்தப் பையன் என்றால் சம்மணமிட்டு அமர்ந்தால் கால் எல்லாம் பிடித்துக் கொண்டு மடிந்து போகிறது என்றான்.

அவன் அவனது அப்பாவைப் போன்ற நல்ல நிறம். நல்ல உயர்ம் கூட....நன்றாக வருவான் என நினைத்தோம். அவன் ஒர் மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். அது கூட நல்லப் பணிதான் நன்றாகச் செய் என அறிவுரை செய்தேன். அதையும் அவன் கேட்கவில்லை...ஏன் எனில் இப்போது நானறிந்த வினோத் என்னும் 22 வயது இளைஞர் ஒருவர் சேலம் ஐந்து வழிச்சாலை அருகே ஒரு பீடாக் கடைக்கு பணிக்கு மேட்டூரில் இருந்து செல்கிறார் அவரது சம்பளம் மாதம் 13 ஆயிரம் அத்துடன் வாரா வாரம் பேட்டா 3 ஆயிரம் எனவே எல்லாம் சேர்த்தால் மாதம் 25 ஆயிரம் ஊதியம்{போக்குவரத்துக்கும் தந்து விடுவதாகச் சொல்கிறான் ஆனால் அது எந்தளவு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை ஏன் எனில் போக்குவர்த்துக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ரூ70 ஆகும்} எனது கல்லூரியில் பணிபுரியும் புதிதாக சேர்ந்த மருத்துவருக்கும் கூட அந்த அளவு ஊதியம் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்...

அதை அடுத்து அந்த மளிகைக் கடையில் இருந்து வெளிவந்தவன் அதே லாரித் தொழில் செய்ய ஆரம்பித்து லாரி ஓட்டுனர் ஆனான் உடன் எல்லாம் வளர...கெட்ட பழக்கங்களும்தான்...அதன் பின் குடும்பம் குழந்தைகள் என்றெல்லாம் ஆனது. அது பற்றியும் அவனது சகோதரி பற்றியும் நிறைய எழுத முடியாது. ஏன் எனில் வம்பு வளர்ப்பது நமது நோக்கமல்ல என்பதால்.

இந்த நான் பார்த்த குழந்தையாய் இருந்த இளைஞன் வளர்ந்த பிறகு நான் சுவரில் எழுதுவதை எல்லாம் மது அருந்தி விட்டு கேலி செய்வதும், வேண்டுமென்றே வம்புக்கிழுப்பதும், தரமற்ற நபர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை அவன் அல்லது அவர்கள் குடும்பத்துக்கு வேண்டும்போது பயன்படுத்திக் கொள்வதும் மற்ற நேரங்களில் என்னுடன் பகைமை பாராட்டுவதாகவும் இருந்தான்.

ஒரு முறை 2000 ஆண்டின் போது எனது இடது கை மூட்டு எலும்பு கிறிஸ்மஸ் இரவில் அனாதை சாலையோரப் பிச்சைக்காரர்களுக்கு போர்வை அளித்து நள்ளிரவில் திரும்புகையில் எனது வீட்டருகே இருக்கும் ஒரு திருமண மண்டப கட்டட வேலை நடந்து வரும்போது சரியாக சாலையிலிருந்து வேலை முடிந்து ஒதுக்கப் படாதிருந்த ஜல்லிக் கற்களில் எனது இரு சக்கர வாகனம் சறுக்கி விட விலகி இருந்தது.. அப்போது அதற்கு மாதக் கணக்கில் நல்லாம்பட்டியில் 3 கட்டு கட்ட வேண்டியதிருந்தது. அப்போதுதான் தாரமங்களத்தில் விசுவின் அரட்டை அரங்கில் கலந்து கொண்டு விசுவுடன் அறிமுகமானேன்.

அதே காலக் கட்டத்தில் எப்போதும் வீட்டிலேயே இருக்க முடியாமையால்...மாலை வேளையில் வழக்கம்போல் அகிக்கட்டுடன் நடைப்பயிற்சி ஒரு முனியப்பன் கோவில் படிக்கட்டில். அந்த பாறைக் கல் படிக்கட்டு 108 இருக்கும் ஒரு முறை ஏறி இறங்குவது போல 12 முறை ஏறி இறங்குவேன். அப்போது எனது வயது 38.மகன் மணியம் 2 வயது கைக்குழந்தை.

Placing Faith in God During Tough Times — Kim Fredrickson, MFT
அப்படி ஒரு நாள் ஏறி இறங்கி வருகையில் இந்தப் பையனும் அவனது கூட இன்னொருவனும் மது அருந்திவிட்டு என்னை வம்பு செய்து சண்டைக்கு அழைத்தனர். என்னை அவர்கள் தாக்க வேண்டுமென்பது திட்டமாம். அப்போது என்னை நன்கறிந்த அந்த கிராமத்தின் முனியப்பன் கோயிலில் அருகே உள்ள வீட்டின் பழனிச்சாமி என்னும் ஒரு விவசாயி, ஆடு மேய்ப்பவர், காலையில் சிட்கோ தொழிற்பேட்டையில் விறகு உடைக்கும் வேலை நல்ல வலுவான ஆசாமி அதன் பின் என் நண்பராகவே அவர்கள் குடும்பம் சகோதரர்கள் எல்லாம் மாறிப்போனார்கள்...

அவர் என்னடா சத்தம்ம் என வந்தவர் அந்தப் பையன்கள் இருவரையும் வாங்கடா பார்க்கலாம் என அழைக்க ஆரம்பித்தார் இந்த குடிகாரப் பையன்கள் ஓட ஆரம்பித்து விட்டனர் எனக்கு ஒரு உறுதுணையாக அந்த நண்பர் வந்ததும். அந்த நண்பர் அதன் பிறகு எனது வீட்டிலேயே கழனீ தண்ணீர் எடுப்பாராக வந்ததும் அதன் பின் ஈரோட்டில் துண்டு போட்டு அவர்கள் பையன்கள் எல்லாம் மூட்டை தூக்கும் பிரிவில் நிறைய சம்பாதித்து வீடு வாசல் என வாங்கி நன்றாக பிழைத்து வருவதும் அவர் ஊருக்குப் போகும்போதும் வரும்போதும் எனைப் பார்த்து பகிர்ந்து கொண்டதில் நானறிந்த செய்தி...மேலும் அவர் கழனி தண்ணீர் எடுத்த ஒரு சில்வர் குடத்தைக் கூட எங்கள் வீட்டிலிருந்து எடுக்காமல் அது வெகு நாளாக எங்கள் வீட்டுக் கொய்யா மரத்தடியிலேயே கிடந்தது.

நான் திரும்பி வீடு வந்ததும் முதன் முதலாக‌ அந்தப் பையன் உடன் வந்தவனின் வீட்டுக்கு சென்றேன் அவன் பெற்றோரைப் பார்த்து செய்தி சொல்லி என்ன செய்தான் பாருங்கள் உங்கள் பிள்ளை என விடயத்தை தெரிவித்தேன் அந்த பையனின் பெரியம்மா ஏண்டா அவர் எவ்வளவு பெரிய மனிதர், அவரிடம் சென்று வம்பு செய்தீர்களா என்னடா ஆச்சு உங்களுக்கு என சரியாக கொடுத்தார் அந்தப் பையன் அதிலிருந்து என்னிடம் எப்போதுமே வம்பு வைத்துக் கொள்ளாத அளவு.

அதை அடுத்து பக்கத்து வீட்டுக்கு சென்று நடந்ததை விவரித்தேன். வா, வாடா என்னை இப்போது அடி..எனது ஒரு கை கட்டுதான் போடப்பட்டுள்ளது என்றேன். கதைவைத் தட்டினேன். கதவை தாழிட்டு சாத்தியபடி உள்ளே இருந்த அவன் வெளியே வரவேயில்லை....அப்போது எனது சார்பாக எனது பக்கத்து வீட்டில் அப்போது குடியிருந்த வைரவேல் என்னும் எனது பங்காளி சித்தப்பா ஒருவரும் உடன் வந்து அந்த அநியாயத்தை தட்டிக் கேட்க உதவினார்.

அதைப் போல பல முறைகள் மதுவின் பிடியாலும் காழ்ப்புணர்ச்சியாலும் அந்தப் பையன்  எதையும் தட்டிக் கேட்பவன் நான் என்ற முறையாலும் வளர்த்த கடா முட்ட வருவது போல சுவரில் எழுதும் இரு நாளுக்கொரு செய்தியை எல்லாம் படித்துவிட்டு சண்டைக்கு வந்து கொண்டே இருந்தான்...அவன் இப்போது மனைவி குழந்தை குடும்பம் என வேறு ஊரில் வசித்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். பார்த்தும் பல வருடங்கள் ஆகின்றன‌

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

இது போல வளர்த்தக் கிடா முட்ட வந்த கதைகளும், உண்மைக் கதைகளில் இன்னும் உண்டு. மேலும் சமூக மேம்பாட்டு ஆலோசனைப் பணிகளிலும் வெற்றி தோல்வி அனுபவங்களின் கதைகள் இன்னும் உண்டு. அவை சமயம் கிடைக்கும் போது மறுபடியும் பூக்கும்..