Saturday, May 13, 2017

ஓ.பன்னீர் செல்வம் சேலம் வந்திருந்தாக...கவிஞர் தணிகை

ஓ.பன்னீர் செல்வம் சேலம் வந்திருந்தாக...கவிஞர் தணிகை

Image result for panneer selvam vs edappadi


எங்க மேட்டூர் எம்.எல்.ஏ வாக்கு கேக்கக் கூட புதிய தலைமுறையின் மோதும் வேட்பாளர்களும் கணிக்கும் வாக்களர்களும் நிகழ்ச்சிக்கும் கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது வாராத செம்மலை எம்.எல்.ஏ வந்திருந்தாக,கே.பி. முனுசாமி வந்திருந்தாக, நத்தம் விஸ்வநாதன் வந்திருந்தாக இந்நாள் முதல்வராக முடியாத 3 முறை முன்னால் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வந்திர்ந்தாக...

சேலம் போஸ் மைதானத்தில் இவர்களுக்கும் நிறைய கூட்டம் என்று பேச்சு.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ என்று எல்லாரையும் மறக்காம புகழ்ந்தாக..இருக்கும் கலைஞரின் சூழ்ச்சி கயமை பற்றி பேசினாக...எல்லாரும் இங்கு வந்திருங்க இல்லாம விளங்காத போயிராதீக, வீணாகப் போயிருவீங்க ஆனால் நாங்க ஆட்சி கலைய ஒரு நாளும் துரோகம் செய்ய மாட்டோம் என்று பேச்சு இருந்தது. ஆனால் ஊராட்சித் தேர்தல் நடைபெறுமுன் பொதுத் தேர்தல் வந்து விடும் என்று சொன்னதற்கு அந்தப் பிரிவினர் அதாங்க எடப்பாடி அணி ஏகமாக வசை மாறி பொழிவதாகவும் தூற்றினாக‌

ஒரு எம்.எல்.ஏ வோடு இருந்த எம்.ஜி.ஆர் 3 முறை ஆட்சியைக் கைப்பற்றவில்லையா அது போல எங்களிடம் இருக்கும் மக்கள் செல்வாக்கு எங்களையும் ஆட்சியை பிடிக்க வைக்கும். வெறும்27 இலட்சம் இருந்த தொண்டரை ஒன்னரை கோடி அம்மா ஆக்கி விட்டாக என்றும் சொன்னாங்க..

எப்படியோ ஸ்டாலினை வர விடக்கூடாமல் பன்னீர் செய்து விடுவாரோ என்ற பேச்சும் அடிபடுகிறது.

ஜெ தெய்வம்: 10,500 சேலை,750 ஜோடி செருப்பு, 500 வைன் கிளாஸ், 2 கோடி பெறுமான வைரம்,1250 கிலோ சில்வர், சுமார் 22 கிலோ தங்கம் இதை எல்லாம் யாரும் அனுபவக்காமல் அதல்லாமல் 103 பல் நூற்றுக்கணக்கான கோடி சொத்துக்கள் ஒவ்வொன்றும். பாழாப் போக சொத்து சேர்த்த கட்சியின் சூப்பர் தலைவி, நிரந்தர முதல்வர்...தெய்வமாம்

சசி: லெஸ்பியன் தோழி என்று விமர்சிக்கப்படும் அவருக்குத் துணை போன குடும்பம் இன்று தண்டனையில் ஆனால் இறந்த மனிதர்கள் புனிதர்களாகிவிடுவதால் ஜெ தெய்வம்தான்.

எம்.ஜி.ஆர்: புனிதர்

கலைஞர் : குடும்பம் காக்க வந்த தலைவர், சிறுபான்மையினர்க்கு நாயகர்

ஆட்சிபுரிவோர் அயோக்யர் என்ற பெரியார் இவர்களின் முதல் தலைவராம்...

இரண்டாண்டுகள் கூட நிறையாமல் காலமான அறிஞர் அண்ணா கூட இவர்களுக்கு அவ்வளவு தேவையில்லை ஏன் எனில் ஆரம்பித்து வைத்தார் அவ்வளவுதானே இந்தக் கட்சியில் பதவிக்கு வரமுடியாததால் ஓ.பி.எஸ் நியாயம் பேசுகிறார், நீதி சொல்கிறார், சட்டம் பேசுகிறார் சேகர் குப்தாவின் ஆப்த நண்பர்....

எல்லாருக்குமே கூட்டம் கூடுது, ஓ.பி.எஸ் நினைச்சா ஸ்டாலினுக்கு வேர்க்குது

இவங்க எல்லாம் தெய்வம்னா, காமராஜ், கக்கன், ஜீவா, அண்ணா இவங்க எல்லாம் யாரு, பொழைக்கத் தெரியாத ஆட்சியாளர்களா? தலைவர்களா?

மக்களுக்கு இவர்கள் பின்னால் செல்ல கூசவில்லை?
நமக்கு இதைப் பேசவும் கூசுகிறது....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment