Monday, May 29, 2017

செம்மலை எம்.எல்.ஏவை அரசின் மேட்டூர் அணை தூர் வரும் நிகழ்ச்சிக்கு அழைக்காததது தமிழக அரசின் குற்றமே: கவிஞர் தணிகை

செம்மலை எம்.எல்.ஏவை அரசின் மேட்டூர் அணை தூர் வரும் நிகழ்ச்சிக்கு அழைக்காததது தமிழக அரசின் குற்றமே: கவிஞர் தணிகை
Related image


நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் அவர்களே.

இது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் காட்டிக் கொள்ள சிறு பிள்ளை விளையாட்டு அல்ல. பள்ளிக் குழந்தைகள் தான் இப்படி சிறு வயதில் சண்டையிட்டுக் கொள்ளும் பின் சேர்ந்து கொள்ளும்.

இது தமிழக அரசாக இருந்தால் தற்போதைய எம்.எல்.ஏ வான செம்மலையை அரசின் விழாவுக்கு அழைக்காதிருந்தது பெரும் குற்றமே. இதற்கு தமிழக முதல்வர், அமைச்சரவை, தலமைச் செயலர், முதன்மைச் செயலர் யாவருமே ஆம் யாவருமே மாவட்ட ஆட்சித் தலைவர், தொகுதி எம்.பி, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் யாவருமே பொறுப்பேற்க வேண்டும்

ஆனால் இது எடப்பாடி பழனிசாமியின் அரசாக இருக்கிறது. எனவேதான் தமது மூத்த கட்சியின் பிரமுகரும் தற்போதைய மாற்று அணியில் இருக்கும் எதிரியாகக் கருதும் செம்மலை எம்.எல்.ஏவை அழைக்காதிருந்து இருக்கிறது/

Image result for thiruvilayadal


அவரும்‍_ செம்மலை எம்.எல்.ஏவும் அரசு அலுவலர்கள் பேச்சைக் கேட்டேன், அவர்கள் சொன்னபடி போகாமல் இருந்து கொண்டேன் என தாம் தொகுதியின் எம்.எல்.ஏ என்ற பொறுப்பை மறந்து போகமல் இருந்து பேசி இருக்கிறார். மேலும் போனால் அவமானம் வரும் என்று போகாமல் இருந்தேன் என்கிறார். இது உங்களுடைய உறவின் நட்பின் குடும்ப நிகழ்வல்ல, இது அரசு விழா 83 ஆண்டுகளாக எவரும் செய்யாத பணியை தமிழக அரசு மேட்டூர் அணையை தூர் வாரும் பணியை செய்யத் தலைபட்டிருக்கிறது. எனவே அவமானம் வந்தாலும் வரட்டுமே என கலந்து கொள்ளாதது எம்.எல்.ஏவின் தவறுதான்.

அழைக்காதது அரசின்  தவறைக் காட்ட அழைத்திருந்து போகாமல் இருப்பதும் போய் வருவதும் அவரவர் உரிமை. ஆனால் அழைக்க வேண்டியது அரசின் கடமை, ஒரே கட்சியில் இருந்து கொண்டு இப்படி இருப்பார்கள் பாராளுமன்ற உறுப்பினர் அன்பு மணியை அழைத்தார்களா என்றும் தெரியவில்லை.

நிறைய மந்திரிமார்கள் என கலந்து கொள்ளும் விழாவில் செம்மலை எம்.எல்.ஏவுக்கு அநீது இழைக்கப்பட்டிருக்கிறது. இவர் எம்.ஜி.ஆர் சீட் தரவில்லை என்பதற்காக சுயேட்சையாக நின்று வென்று மறுபடியும் கட்சியில் சேர்ந்து எம்.ஜி.ஆரால் மந்திரி ஆனவர், எம்.பியாக இருந்தவர், ஜெவால் தற்காலிக சபாநாயகராக இருந்தவர் ...எல்லாம் இப்படித்தான் அரசியலில்

இவரை விட ஜுனியரான எடப்பாடி இப்படி முதல்வராக இருக்கும்போது பெருந்தன்மையுடன் அழைத்திருக்க வேண்டும், பெறும் தன்மையில் எல்லாம் பங்கு கிடைக்கவில்லை என போராடும் எம்.ஏல் ஏக்களை சந்தித்த இவர் இவரையும் சந்தித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் பெருமை இன்னும் உயர்ந்திருக்கும்.

முதல்வர் என்னும் பந்தா இந்த முறை அதிகம் சேலம் 5 ரோடு சாலையில் இருந்ததாகவும் மற்ற வாகனங்களை எல்லாம் சுமார் 2 மணி நேரம் இவர் வருவதற்காக தாமதம் செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன‌

ஜெவின் விண்ணளவு அளந்த நிரந்தர முதல்வர் இடமே போன இடம் தெரியவில்லை எடப்பாடியார், ஜெவின் நேரடி வாரிசு, நிரந்தர முதல்வர் என்றெல்லாம் போஸ்டர்கள் இம்முறையில் இருக்கின்றன. வாழ்த்துகள். ஆனால் எதுவும் நிலைக்கும் வண்ணம், எல்லாரிடமும் நல்ல பேர் வாங்கும் வண்ணம் எடப்பாடி பழனிசாமி அரசு எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
Related image


வண்டல் மண்ணை ட்ராக்டர்களில் விவசாயிகளுக்கு விலையின்றி வழங்குவதால் ஒரு துளி சிறு துளி மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் இந்நிலையை மேலும் வளர்த்துக் கொள்ளாமல், தக்கவைத்துக் கொள்ளாமல் இது போன்ற சிறு சிறு விஷயங்களில் எல்லாம் கௌரவம் பார்த்துக் கொண்டு பேரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். முதல்வரே.

ஆனால் இந்த செம்மலை எம்.எல்.ஏவுக்கும் வேண்டும் ஏன் எனில் புதிய தலைமுறை தொலைக்காட்சி தேர்தல் நேரத்தில் ,மோதும் வேட்பாளர்களும் கணிக்கும் வாக்களர்களும் என்ற நிகழ்ச்சிக்கு எவ்வளவு நேரம் அழைத்தும் இவரது இருக்கை காலியாகவே இருந்தது . அவர் அப்போது வந்து அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவே இல்லை.

இப்போது மேட்டூரில் நடைபெற்ற சரித்திரப் புகழ் வாய்ந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவே இல்லை அரசு விழாவுக்கு, இவரும் பொறுப்புணர்ந்து போய் கலந்து கொள்ளவே இல்லை.

இவற்றை எல்லாம் நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இந்தப் பதிவின் மூலம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

3 comments:

  1. செம்மலை எம்.எல்.ஏவை அரசின் மேட்டூர் அணை தூர் வரும் நிகழ்ச்சிக்கு அழைக்காததது தமிழக அரசின் குற்றமே: கவிஞர் தணிகை - இங்குள்ள அரசியல்வாதிகள் கேரள அரசியல்வாதிகளிடம் பாடம் கற்க வேண்டும். அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete