Thursday, March 31, 2016

தமிழ் இந்துவே நீயே இப்படிச் செய்யலாமா? ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கு: கவிஞர் தணிகை.

தமிழ் இந்துவே நீயே இப்படிச் செய்யலாமா? ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கு: கவிஞர் தணிகை.




ஒரே நாள் நாளிதழில் 31.03.16 தமிழ் இந்துவில் ஜெ. சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: அன்பழகன் தரப்பு வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு என்றும் அடுத்து இன்னொரு பக்கத்தில் , ஜெயலலிதா தரப்பு ஆட்சேபணையை நிரா‍‍கரித்து, திமுக பொதுச்செயலாள‌ர் அன்பழகன் தரப்பு சுருக்கமாக இறுதிவாதத்தை முன் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது என்றும் வெளியிட்டுள்ளது.முரண்பாடாக இருக்கிறது.

மாறாக ஆரம்பம் முதல் மறுபடியும் உங்கள் தரப்பை தெரிவிக்க வேண்டியதில்லை புதிதாக ஏதாவது கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றுஅன்பழகன் தரப்புக்கு நீதிபதிகள் சொன்னதை எடுப்பாக போட்டிருந்தால் போதுமே

ஒரு செய்தி காலை 9.33க்கு மற்றொரு செய்தி 12.32இந்திய நேரப்படி வெளியிடப்பட்டு 2.47(14.47) பி.எம் மணிக்கு தகவல் உறுதி செய்யப்பட்டது. மேலும் இதை எழுதிய  வினோத் தம் கருத்தாக‌ கருதப்படுகிறது என:ஜெயலலிதாவுக்கு சாதகம்:

இதற்கிடையில், சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் தரப்பு வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது, வழக்கில் ஜெயலலிதாவுக்கு சாதகமான போக்கே என்று கருதப்படுகிறது.என்றும் தமது கருத்தாக வெளிப்படுத்துகிறார்.

கிரிக்கெட் வர்ணனையின் போது நடப்பதை அப்படியே சொல்லாமல் இவர்களாக சேர்த்து இந்த நேரத்தில் இன்னும் சில விக்கெட் விழ வேண்டியது அவசியம் என வீணாய்ப் போன வர்ணனையாளர்கள் சேர்த்து சொல்வது போல...

தமிழ் இந்து ஆசிரியர் அசோகன் மிக நல்ல ஆசிரியராக காட்சியளிக்கிறார். தங்கர் பச்சான் போன்றோர் தமிழ் இந்துவை புகழ்ந்து தள்ளுகிறார்கள். கேட்டால் இது ஆசிரியர் கருத்தல்ல, எழுதிய கட்டுரையாளர் கருத்து என சொல்லி விட்டுப் போவது சுலபம்.

பொதுவாகவே நாளாக காலம் செல்லச் செல்ல இந்த ஊடகவியலாளர்கள் நெறிகெட்டுப் போவதை சில பதிவுகள் அப்பட்டமாக காண்பிக்கின்றன.ஹர்திக் பாண்டியா ஒரு மாடல் அழகியை துரத்துகிறார் என்று போடுகிறார்கள் . செய்தி பார்த்தால் இருவரும் காதலர்கள் ஒன்று சேர்ந்து பொது இடங்களுக்கு செல்கிறார்களாம் அதன் மொழிதான் இது...

அன்பழகன் வாதத்தை எழுதி முன் வையுங்கள் என சொல்லியதை எப்படி எல்லாம் திருப்புகிறார்கள் பாருங்கள்.



 ஒரு கேள்விக்குறியை, ஒரு ஆச்சரியத்தை, ஒரு வியப்பை, ஒரு திடீர் செய்தியை கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்க எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என முயற்சி செய்து வருவது கேலிக்குரியதாகிவிட்ட ஊடகங்களின் போக்கு மாற்றப்பட வேண்டியது.

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சில ஊடகங்கள் யுவராஜ் விஜய்காந்த் மறைவிலிருந்து யாரோலோ இயக்கப்படுகிறார் என்று சொன்னதையும் சிறுதாவூர் பங்களாவுக்கு 10 லாரிகள் சென்றதையும் மறு நாளில் அவை காணாமல் போனதாகவும் செய்திகளைச் சொல்லி அவை தேர்தல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதும் முக நூல் போன்ற ஊடகங்கள் தமிழ் முரசு என்னும் பத்திரிகை செய்தியாக மன்னார்குடி பள்ளியில் பெரும் எண்ணிக்கையிலான இந்திய பண நோட்டுக்கட்டுகள் எல்லாம் 500, 1000 இருந்ததை படங்களுடன் வெளியிட்டிருந்ததையும் பாராட்ட வேண்டும்.



தமிழகத் தேர்தல் தலைமை அலுவலர் ராஜேஷ் லக்கானி சொல்வது போல உண்மையிலேயே முதல்வர் தொடர்புடைய பங்களாக்களை சோதித்து அறிந்து செய்திகளை நாடெங்கும் கொண்டுவருவாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.



ஊடகம் சரியாக இருந்தால் இருந்திருந்தால் இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மது போன்ற பெரும்பிரச்சனைகளுக்கு முடிவு கட்டப்பட்டு குடிநீர், மருத்துவம், போன்ற தேவையான வசதிகள் நாடெங்கும் கிடைத்திருக்கும். ஊடகம் அரசுடனும், அரசின் கைப்பாவைகளான அரசுஅலுவலர்களுடன் கூட்டு சதியில் பெரும்பாலும் அமுங்கிக் கிடக்கிறது என்பதும் உண்மைதான்.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.





No comments:

Post a Comment