Friday, March 4, 2016

மறையா வாழ்த்து இறையருள் சேர்த்து.

04. 03.2016- 5 மணி அதிகாலையில்- அஞ்சல் 06.03.2016க்கு
திருமண வாழ்த்து மடல் பிரபு சுபா பிரபு ஆகும் நேரத்திற்கு

--------------------------------------------------------------------------------------------





நான்
உன்னில் இருக்கிறது
என்னுள் இருக்கிறது

நாமாகி விடும்போது
யாவும் மலர்கிறது.


https://www.facebook.com/prabhu.pavi.5/videos/1652766054963121/




சுபம் பிரபு(வுக்கு)
சுகம் பிரபு(வுக்கு)
எல்லாம் அதிலிருந்தே!





நான்
உன்னில் இருக்கிறேன்
நீ என்னுள் இருக்கிறாய்

நீங்கள் என்னுடனும்
நான் உங்களுடனும்

ஆனால்
நீ,, நான், கமல், கலாம்
மகாத்மா,அன்னை தெரஸா
பாரதி போன்றோர்

வெகு காலம் கழிந்து
பின் பிறந்திருக்க வேண்டும்
முன் பிறந்ததினால்
இந்திய சமுதாயம்
நம்முடன் ஒட்டாமல் இருக்கிறது.

என்றாலும்
அதை நாம்
முன்னெடுத்துச் செல்லும்
கடமையிலிருந்து  தவறி விழ வில்லை.





என்னதான் எத்தனை துறைகளில்தான்
இந்தியா உலகின் முன் நின்றாலும்
விண்ணதிர முழங்கினாலும்
இன்னும்
எண்ணிலடங்காத் துறைகளில்
பின்னேதான் நிற்கிறது.
வெட்கித் தலை குனிய...

3 வயது சிறுமி
73 வயது தாத்தாவால்
வன்புணர்ச்சி செய்யப்படும்
வக்கிரங்களுடன்
அதுவும் தமிழ் மண்ணில் கூட

எனவே சமூகத்தின் காவலராய்
முன்னோடிகளாய்
நற் பெற்றோராவீர்
நல் ஆசான்களாவீர்
நற் பிள்ளைகள் அளிப்பீர்
வழி நெடுக செல்வீர் பிரியாமலே!




நம் பின் சமுதாயம் வழி நடக்கும்.





என்னிடம் பொருள் இல்லை
பண மொய்களில்
பொருள் ஒன்றும் இல்லை

எனவே
கலாமை, கவிதையை
பரிசளிக்கிறேன்
காலமெல்லாம்
எங்களை பயிராக்கு
உங்கள் பேரப்பிள்ளைகளுக்குள்ளும்
எங்களை உயிராக்கு!



எனது கவித்துளி(ர்)களுடன்
எனது ஆனந்தக் கண்ணீர்த் துளிகளும்
துளிர்க்க

நிறைய எழுதத்  துடிக்கிறேன்
என்றும் என்றும்
உன்னுள்,உங்களுள் நிறைய நிறைய...

எனது சில புத்தகங்கள்
ஏற்கெனவே உன்னிடம் இருக்கிறது
 என்றும் எழுதிக் கொண்டிருக்கும்
புதிய புத்தகமாக
என்றும் நான் இருக்கிறேன்
இன்றும் நான் இருக்கிறேன்
இன்னும் நான் இருக்கிறேன்
படி,என்னை முழுதாகப் படி...



என்றும் வாழ்த்துகளுடன்
அன்புடன் கவிஞர் சு. தணிகை
ஒருங்கிணைப்பாளர்
அ.பெ.ஜெ.அப்துல் கலாம் மக்கள் சேவை இயக்கம்
த.க.ரா.சு.மணியம், சண்முக வடிவு  குடும்பத்தார்

மற்றும்
நண்பர்கள்: கார்த்தி தங்கவேல்,பவர் பழனி,
தியாகு கவுன்சிலர், சுரேஷ் கவுன்சிலர்
சக்தி வேல் ஒப்பந்ததாரர்- ஜிந்தால்
விஜய் பாலு -ஸ்பைடர் கிராபிக்ஸ்
மா.பாலாஜிT.N.E.B, லோகு சரவண்,T.N.E.B.
சித்து ராஜ் - சுந்தரம் நிதி நிறுவனம்
மதியழகன் பிளாஸ்டிக்ஸ்.
பெரியவர் பெருமாள்கவுண்டர் மற்றும் பலர்.




மறையா வாழ்த்து இறையருள் சேர்த்து.


பி.கு: மணமக்கள் இருவருமே காவலர்கள் கருத்தொருமித்து.மனமுவந்து,பெற்றோர் அனுமதிக்க மணக்கோலம் பூணுகின்றனர் அவர்களுக்கு இந்த வாழ்த்து .மண நிகழிடம்: கூடுதுறை பவானி.வரவேற்பு மணமகன் இல்லம் கோம்பூரான் காடு. மேட்டூர் அணை.
மண நாள் ஏற்கெனவே குறிப்பிட்டபடி: 06.03.2016.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment