Saturday, March 26, 2016

வைகோவின் சீற்றமும் சிங்கத்தின் ஏமாற்றமும்: கவிஞர் தணிகை.

வைகோவின் சீற்றமும் சிங்கத்தின் ஏமாற்றமும்: கவிஞர் தணிகை.
தமிழகத்தின் தேர்தல் களம் திக்கற்ற நிலையில் இருக்க விஜய்காந்த் கூட்டணி என்று பெயர் மாற்றம் பெற்ற மக்கள் நலக் கூட்டணி ஏதோ சாதித்து விட்டது போல் மிதப்பில் இருக்கிறது அவர்கள் கூட்டணியின் தலைவர் மிதப்பில் இருப்பது போலவே...

தி.மு.க , அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு அடுத்து இந்தக் கூட்டணியில் உள்ளக் கட்சிகள்  3 ஆம் இடத்துக்கு வர வாய்ப்புள்ளது என்ற போதிலும் இந்தக் கூட்டணியில் உள்ளவர்கள் அவர்கள் கட்சியின் சின்னங்களில்தான் நிற்க விருக்கிறார்கள். மேலும் இது தொகுதி உடன்பாடுதான். 

இந்நிலையில் தமது  எம்.பி.ஏ படித்த மகன் துரை வையாபுரி சிகரெட் விற்பனை முகவராக இருப்பது நியாயமானதுதான் எனப் பேசும் வைகோ விஜய்காந்தை தமது அணிக்கு இழுத்தது ஏதோ கலைஞரை வெற்றி கொண்டது போல பேசப்பட்டுள்ளது முத்தரசன் போன்றவர்கள் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்றெல்லாம் புகழ்ந்துள்ளார் பொதுக் கூட்ட மேடையில்.

வைகோவும் விமான நிலையத்தில் தி.மு.க பேரம் பேசியதாவும் 80 தொகுதிகளும், 500 கோடி இந்தியப் பணத்தையும் கால் தூசாக மதித்து விஜய்காந்த் தமது அணிக்கு வந்திருப்பது மிகபெரும் மறுமலர்ச்சியாக வைகோ குறிப்பிட்டுள்ளார். எல்லாமே எல்லாக் கட்சியுமே பேரம் பேசிக் கொண்டுதான் இருக்கிறது. மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இவை யாவும் புரியும். தெரியுமென்ற போதிலும் இப்போது வெட்ட வெளிச்சமாக இது போன்ற சம்பவங்கள் கட்சித் தலைவர்களால் பேசப்படுவது தற்போதைய தமிழக அரசியல் இருக்கும் நிலையைத் தெளிவாக காண்பிக்கிறது.இது குறித்து வழக்கு மன்றம் வரை இந்த துண்டு சீட்டு விவகாரம்,அல்லது பத்திரிகையில் வந்த செய்தி விவகாரம், வைகோ பேசிய விவகாரம் சென்று கொண்டு இருக்கிறது. 

இந்த  மக்கள் நலக் கூட்ட‌ணியுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்திருப்பது  அதன் பரிதாப நிலையை உணர்த்துகிறது. உண்மையில் சொல்லப் போனால் இது போன்ற தி.மு.க, அ.இ.அ.தி.மு.க போன்ற அணிக்கு மாற்றாக வைகோ, விசிக, விஜய்காந்த் போன்றோர் இல்லாமல் இவர்கள்தான் 3 ஆம் அணியாக மாற்று அணியாக இருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும்.எவ்வளவு வாக்கு குறைவாக பெற்று வருகிற போதிலும்.

இந்த விஷியத்தில் பா.ம.கவை அதன் முடிவை நாம் பாராட்டலாம். அதன் முடிவு தேர்தலுக்கும் பின் அதற்கு எத்தகைய முடிவை தந்த போதும் அது அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.தனியான பலம் என்ன என்பதும் அவர்களுக்கு உணர்த்தப்படும்

ஆனால் வைகோ, விசிக, விஜய்காந்த் அணிகள் எந்த கொள்கையும் இல்லாமல் ஊழலற்ற, மதுவிலக்கு அரசைக் கொண்டு வரும் அணி
 என்று சொன்னாலும் அதன் முதல்வர் வேட்பாளரே பொதுக்கூட்டத்திற்கு வரும்போதும் கூட தள்ளாடுபவராக காணப்படுகிறார். சினிமா, மது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் அதே மாயை விசிக, வைகோ போன்றவரால் ஏற்கப் படலாம். ஆனால் இந்திய பொதுவுடமைக் கட்சிகளால் ஏற்கப் பட்டிருப்பது அதன் துர்லபம். அதன் சாபக் கேடு. அதன் வக்கின்மையைக் காட்டி விட்டது.

இந்நிலையில் வைகோவை பாலிமர் தொலைகாட்சியில் பேட்டியில் நீங்கள் அம்மாவிடம் 1500 கோடி வாங்கிக்கொண்டுதான் விஜய்காந்தை தி.மு.கவிடம் இருந்து பிரித்து மக்கள் நலக் கூட்டணியுடன் இணைத்திருப்பதாகவும் இது ஆளும் கட்சி மீண்டும் வர செய்த வேலைதானே என்ற கேள்வி எழுப்பப் பட்டதும், பேட்டியை இத்துடன் முடித்துக் கொண்டேன் என கர்ஜனை சிங்கம் வாய்மூடி மௌனியாக வெளியேறுகிறது. இது அரசியல் நாகரீகமாக எடுத்துக் கொள்வதா? அல்லது இதைப்பற்றி எல்லாம் வெளியே பேசக் கூடாது என குற்றத்தை மறைப்பதா?





யார் வேண்டுமானாலும் யார் மேல் வேண்டுமானாலும் எதைப் பேசினாலும் உண்மையா பொய்யா என பிரித்து பார்க்க முடியா அளவு அரசியல் மிக மோசமான நிலை. ட்ராபிக் இராமசாமி நான் தான் விஜய்காந்த் இந்நிலை எடுக்க காரணம் என்கிறார். வைகோ தாம் கலைஞரை இந்த விஷியத்தில் வெற்றி கொண்டதாக கருதுகிறார் இதெல்லாம் தேர்தல் முடிவு அறிவிப்பில் உண்மையான வெற்றி எது என்பதை காட்டத்தான் போகிறது...

கடந்த இரண்டு தேர்தலில் மீறினாலும் இந்தக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து 20%க்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது.தேர்தல் வாக்கு வங்கி அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. மக்கள் அலை எப்படி அடிக்கிறதோ அப்படித்தான் .அப்படியே வாக்கு வங்கி அடிப்படையில்  வாக்குகள் விழுந்தாலும் வெற்றி எல்லாம் பெற இந்த அணிக்கு வாய்ப்பே இல்லை. எவருக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் ஒரு வேளை இந்தக் குதிரைகளுக்கும் மதிப்பு வரலாம்.

2006:
 தேமுதிக‌ பெற்ற வாக்குகள்: 8.38%
சி.பி.ஐ பெற்ற வாக்குகள் 1.61%
சி.பி.ஐ எம். 2.65%
விசிக  1.29%
ம.தி.மு.க பெற்றவை: 5.98%

2011:
 தேமுதிக‌ பெற்ற வாக்குகள்: 7.88%
சிபிஐ: 1.97%
சிபிஐ எம்: 2.41%
விசிக : 1.51%
மதிமுக ...தேர்தலில் நிற்கவேயில்லை

இந்நிலையில் 2016ல் அதிக வாக்கு சதவீதத்துக்காக தேர்தல் ஆணையம் முயற்சிகள் செய்து வருகிறது. புது வாக்குகள் பல இலட்சங்களும் சேர்ந்திருக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் நிறைய மாற்றங்கள் புதிர்கள், வியப்புகள் காத்திருக்கின்றன. பார்ப்போம் பொறுத்திருந்து பார்ப்போமே!

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment