Tuesday, March 29, 2016

சொல்லத் தோணுது தங்கர் பச்சான்:கவிஞர் தணிகை

சொல்லத் தோணுது தங்கர் பச்சான்:கவிஞர் தணிகை
சொல்லத் தோணுது நூல் வெளியீட்டு விழாவின் 7 காணொளிகளையும் கண்டு வியந்தேன். முனைவர் வெங்கடாஜலம், முன்னால் நீதிபதி சந்துரு,பழனி பெரியசாமி,இந்து அசோகன்,சகாயம் ஐ.ஏ.எஸ் மற்றும் தங்கர் பச்சான் ஆகியோரின் உரை ஒரு அரிய விருந்து.

மேட்டூர் குறிஞ்சி வந்திருந்தபோது நாம் பார்க்க முடியவில்லையே என்ற குறையை இந்த கணினி இணைய வசதிகள் போக்கி விட்டன.இந்த புத்தகத்தின் இடம் பெற்ற பல கட்டுரைகளுக்கு இந்து நாளிதழில் வந்த போதே எனது கருத்துப் பின்னோட்டங்களை இட்டு வந்துள்ளேன்.

ஒத்த கருத்துடன் உங்கள் குழுவினர் அனைவருடனும் அடியேனும் ஒன்று படுவதை உணர முடிகிறது. அதன் சான்றாக நேற்று எமது பதிவில் இடம் பெற்ற தராதரமில்லாத மக்கள்,கட்சி, அரசியல் நாடு நிர்வாகம் என்ற பதிவையும் உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.அது உங்கள் நிகழ்வை பார்க்கும் முன் எழுதிய பதிவு.எனவே நாட்டு அக்கறை உள்ளோர் அனைவருமே ஒரே அலை நீளத்தில் சிந்திக்கிறோம் என்று புரிகிறது. எல்லாரிடமும் அந்த தாக்கம் இருக்கிறது. ஆனால் இணைதல் வேண்டும்.

பார்க்காதார் இருந்தால் இந்த காணொளிகளை காணுங்கள் அவசியம் இந்த நூலையும் வாங்கி படியுங்கள். அது தமிழ் மண்ணுக்கு நல்லது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment