Thursday, October 31, 2019

மத்திய அரசு மக்களுக்கான அரசாக இருந்தால் அதைச் செய்யும்.:கவிஞர் தணிகை.

ஸ்விஸ் வங்கி இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை இந்திய அரசுக்கு கொடுத்த பின்னும் அதை ஏன் இந்திய அரசு வெளியிடாமல் காங்கிரஸ் காலத்தில் இருந்து பி.ஜே.பி காலம் வரை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வெளியிடுவதால் என்ன நாடே குடி முழுகி விடப் போகிறதா ?

Image result for swiss bank indian list

இரவுடன் இரவாக பணத் தாள்களை செல்லாததாக்கியதை விட‌
Image result for swiss bank indian list"
ஜி.எஸ்.டி என சேவைக்கெல்லாம் வரி போட்டு தீட்டுவதை விட‌

கார்ப்ரேட், மாபெரும் பண முதலைகளுக்கு வங்கி மூலம் படியளந்த ஏழைகளின் வங்கி டெபாசிட் பணத்தை வாராக்கடன் என்று உலகின் மாபெரும் பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்ததை விட‌
Image result for swiss bank indian list"
இவற்றை எல்லாம் விடவா அந்தப் பட்டியிலின் வெளியீடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடப் போகிறது

மத்திய அரசு மக்களுக்கான அரசாக இருந்தால் அதைச் செய்யும்.
Image result for swiss bank indian list"
இத்தனைக்கும் இது போன்ற செய்திகள் ஊடகங்களில் புரள ஆரம்பித்தவுடன் அந்த வங்கியின் முதலீட்டாளர்கள் பெரும்பாலான இந்தியர் பணத்தை வழித்து எடுத்துக் கொண்டதாகவும் தமது கணக்கை மூடி விட்டதாகவும், அதில் அந்த அளவு பணத்தை விட்டு வைக்க வில்லையென்றும் செய்திகள் ஊடாடி வருகையில்
Image result for swiss bank indian list"
இப்போது அந்த ஸ்விஸ் அரசு ஸ்விஸ் வங்கியில் இந்திய முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பணக்கணக்கை இந்திய அரசுக்கு தந்த பின்னும் ஊழலே செய்யாத அரசு என மார்தட்டிக் கொள்ளும் அரசு ஏன் இந்த பெயர்ப் பட்டியலை இன்னும் வெளியிட மறுத்து இரகசியம் காக்கிறது...

வெளியிடும் என நம்புவோமாக அந்த 15 இலட்சத்தை இந்திய குடிமக்களின் வங்கிக் கணக்கில் போடுவோம் எனச் சொன்னது போலவே.

Image result for swiss bank indian list

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment