Saturday, October 12, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள் :7.சசிபெருமாளை செதுக்கிய சிற்பி கொ.வேலாயுதம் எம்.எஸ்.சி: கவிஞர் தணிகை.

 என் நட்பின் நனி சிறந்தவர்கள் :7.சசிபெருமாளை செதுக்கிய சிற்பி கொ.வேலாயுதம் எம்.எஸ்.சி: கவிஞர் தணிகை.
Image result for marubadiyumpookkum.blogspot.com


காந்தியவாதி என்று ஊடகம் எல்லாம் கொண்டாடியதே செல்பேசி டவர் மேல் ஏறி மதுவிலக்கு வேண்டும் என உயிர் பிரிந்ததே அந்த சசிபெருமாளை உருவாக்கியதில் பெரும்பணி இந்த சிற்பி என பின்னாளில் தன்னை அழைத்துக் கொண்ட நேரு யுவக்கேந்திரத்தின் சேலம் ஒருங்கிணைப்பாளராகவும் அதன் பின் இந்தியாவின் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் பணி புரிந்து ஓய்வு பெற்ற கே.வேலாயுதம் அவர்களுக்கு. எனக்கும் அவருக்கும் 12 13 வயதுக்கு இடைவெளியிருக்கும் மிஸ்டர் வேலாயுதம் என்ற எனது சகோதர நண்பர்க்கு.

நான் நேரு யுவக் கேந்திராவில் என்னை தேசிய சேவைத் தொண்டராக இணைத்துக் கொண்ட  போது அவர் அங்கே ஒருங்கிணைப்பாளர் சேலம் மாவட்டத்துக்கு. அது 1983 என நினைவு.அப்போதெல்லாம் என்னை எவருமே வேலைக்குப் போகாதிருந்ததால் மதிக்கவே மாட்டார்கள். ஆனால் இந்த மனிதர் என்னை அங்கீகரித்ததில் முதல் மனிதராக இருந்தார். எனவேதான் எனது முதல் நூலான மறுபடியும் பூக்கும் நூலுக்கு முதல் அங்கீகாரம் என்ற அவரது முன்னுரையை  வாங்கிப் போட்டு வெளியிட்டேன் அது தவிர அவர் தவிர எனது புத்தகங்களுக்கு அணிந்துரை வேறு எவரிடமும் எப்போதும் வாங்கிப் போட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் துணைவியார் திருமதி. மருத்துவர் வள்ளி வேலாயுதம் எம்.டி (மகப்பேறு மருத்துவர்) எனது தாய்க்கும்  எனது துணைவிக்கும் மருத்துவ சேவை செய்ததை எனது பரம்பரை நினைவு கூறும்.

அவர்கள் குடும்பத்தில் எனது நண்பர் தவிர அனைவரும் அதாவது இரண்டு மகன்கள் இரண்டு மருமகள்கள் மற்றும் எனது சகோதரியான  வள்ளி வேலாயுதம்  அவர்களையும் சேர்த்து 5 மருத்துவர்கள். அவரது குடும்பம் ஒரு சிசுருதர் குடும்பம் என அவரது மூத்த மகன் விமல் திருமணத்தின் போது வாழ்த்தைக் கோர்த்திருந்தது இன்றும் என் நினைவுடன்.

சசி பெருமாள் ஒரு தீவிரவாதியாய் இலஞ்சம் கேட்டார் என்பதற்காக ஒரு அரசுப் பணியில் இருந்த மருத்துவர் ஒருவரை காலணியால் தாக்கி விட்டார் என்பதற்காக அந்த தருணத்தில் எங்கள் குடும்பத்தினர் அடைந்தது ஒரு தர்ம சங்கடமான நிலை. அதை எப்படியோ தாண்டி வந்து விட்டது. அப்போது சசி பெருமாள் ஒரு நெசவுத் தொழிலாளி. ஆனால் கிடைக்கும் வருவாய்க்குள் குடும்பம் நடத்தும் ஒரு எளியவர், சசிக்குமார் என்னும் நண்பருடன் தோழமை காட்டி அவர் பேரை தன்னுடன் சேர்த்து பெருமாளை சசிபெருமாள் ஆக்கிக் கொண்டவர். அவரை நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம் என்ற இயக்கத்துக்கு தலைவர் ஆக்கி நாட்டுக்குரிய பணிகளை கையில் எடுத்து வந்தோம்.

நான் சேர்ந்த புதிதில் எனது ஆளுமை, பேச்சுத் திறன் ஆனவை எல்லாம் அனைவர்க்கும் பிடித்துப் போக சசி பெருமாள் வீட்டருகே அதாவது இளம்பிள்ளையில் உள்ள மேட்டுக்காட்டில் முதல் முதலில் ஒரு கூட்டம் போட்டோம் அது முதல் சசி எனது இரசிகர் அது முதல் அந்த இயக்கத்தில் நிறைய தோழமை சேர்ந்த பயணம். அது காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம் என்றான போதும், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்றான போதும்... ஆக 1983 முதல் இன்று வரை அந்த நட்பு வட்டம் பிரிந்து போகவில்லை. அ. தமிழரசு, ராஜாகிருஷ்ணன், ராமலிங்கம், செம்முனி அதன் பின் வந்த மணி, ஷேக்ஸ்பியர், அருணாச்சலம், கண்ணன் காசாம்பாள், ஜமுனா ராணி, பீபி ஜான், ராஜா  இப்படியே தலைவர்களும் தொண்டர்களும் வந்து கொண்டே போய்க் கொண்டே இருக்க... நானும் எனது சகோதர நண்பர் கொ.வேலாயுதமும் அப்படியே இயக்கம் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் எங்கள் நட்பு இன்னும் தொடர்ந்தபடியே இருப்பது  இயல்பாக இருக்கிறது.

நிறைய இடங்களில் முரண்பட்டு சண்டையிட்டு வார்த்தையாடி வந்திருக்கிறேன் என்றாலும் அது இயக்கம் இது குடும்பம் என நாங்கள் இருக்கிறோம். வேலாயுதம் எவரையும் புண்படுத்தும் நடைமுறையே தெரியாதவர். எனவே அனைவரையும் நம்புவார் பெரும்பாலும் ஏமாறுவார். நான் எவர் தவறு செய்த போதும் அப்படியே அப்போதே அதைச் சுட்டிக் காட்டி வெளுத்து வாங்கி விடுவேன்.

நானும் அவரும் முதல் சந்திப்பு என ஏற்பட்டதே ஒரு போட்டி வழியாகத்தான். அது குடும்பநலத்துறையின் போட்டியை நேரு யுவக்கேந்திரா இடத்தில் நடத்தினார்கள். நானும் ஒரு போட்டியாளன். பேச்சுப்போட்டி. ஏற்கெனவே முடிவு செய்தது போல் இரண்டு பெண்ணுக்கு கொடுத்தார்கள். எனக்கு கொடுக்க வேண்டிய பரிசு கொடுக்கப்படவில்லை உடனே அங்கே தகராறு. ராஜா அப்போது யாரெனவே தெரியாது அவர் என் பக்கம் சேர்ந்து கொண்டு ஏக களேபரம். ராஜா என்னுடைய பேச்சை இடது சாரியாக இருக்கிறது என்றே இவருக்கு மறுக்கப்பட்டது நியாயமில்லை என்று வேலாயுதத்திடமும் சொன்னார்.

அன்று அந்தப் பேச்சுப் போட்டியில் எனக்கு பரிசு கிடைக்கவில்லை ஆனால் அதை எல்லாம் விடப் பெரிய பரிசாக வேலாயுதம் என்ற நண்பர் கிடைத்தார் இது வரை அதாவது 1983களில் ஆரம்பித்த இந்த நட்பு 36 ஆண்டுக்கும் மேலாக நீடிக்கும் நட்பு  பரிசுக்கான விதையின் பரிசை அன்றே இயற்கை  எனக்காகக் கொடுத்திருந்தது அப்போதெல்லாம் எனது மூடக் கண்ணுக்கு புலப்படவே இல்லை.
Image result for marubadiyumpookkum.blogspot.com
எத்தனை முகாம்களில் நானும் அவருடம் ஒரே இடத்தில் உண்டு , உறங்கி ஒரு நல்ல தலைமைக்கேற்ற தளபதியாகி  அதை எல்லாம் சொல்ல முடியாது போங்க....ஒரே இரவுக்குள் போக வேண்டிய நிர்பந்தம் வந்தால் அப்படியே சென்று மறு நாள் காலைக்குள் திரும்பி விடும் முகாம் பாதிக்காத அவரின் நேர்மையக் கண்டு நான் வியந்து பார்த்திருக்கிறேன்.

ஒரு புத்தாண்டின்போது முகாமில் இருந்தபோது சரியாக 12.01 மணி நள்ளிரவில் அனைவரும் சேர்ந்திருக்கும்போது ஆர்வமிகுதியுடன் அன்றைய இளஞரான தணிகை எழிலன் ஹேப்பி நியூ இயர் எனக் கத்தியபோது கூட தலைமை என்ற முறையில் அவர் என்னை கடிந்து கொள்ளாதது எனக்கு இன்றும் கூட நினைவில் இருக்கிறது.

தளபதியாக இருந்தவன் நிறைய தருணங்களில் தலைமையேற்று நிறைய கூட்டங்களை நடத்தவும் நேரு யுவக் கேந்திராவின் நேர்முகத்தேர்வை நடத்திடவும் சம வாய்ப்புகள் ஏற்படச் செய்தவர்.

மிக்க பொறுமைசாலி அவருக்கு அவரது நண்பர் என்ற போர்வையில் துரோகம் செய்வாரைக்கூட மன்னிக்கும் குணம் கொண்டவர் நான் வெகுண்டு எழும்போதெல்லாம் ஏன் தம்பி, இறைவன் மேல் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்று கேட்பார்.

அடுத்த ஒரு அண்ணா பாரம்பரியம் உண்டாகி இந்த நாட்டை திராவிட பாரம்பரியத்திடம் இருந்து கூட மீட்டு தியாக பாரம்பரியத்துடன் சிறந்த ஆட்சியைத் தர முடியும் என நிரூபிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. காரணம் எங்களிடம் கவர்ச்சி , பொருளாதாரம், ஒருவர்க்கு ஒரு பாதிப்பு ஏற்படும்போது அனைவரும் இணைந்து அவர்க்கு தக்க துணையாகி உறுதுணையாகாமை, ஊடகத்தின் பார்வைக்கு விளம்பரமாகாமை, துணிச்சலுடன் அனைவரும் சிறைக்கு சென்று போராட முனையாமை அதாவது சட்டமீறல் நடத்தி இயக்கத்தை வலுப்படுத்த முடியாமை போன்றவதாம்.
Image result for marubadiyumpookkum.blogspot.com
மற்றபடி அவரவர் கைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம்பணம் போட்டு போட்டு இயக்கம் நடத்த அவரவர் வீடுகள் ஒத்துழையாமை, அனைவர்க்கும் வேறு வேறு பொறுப்புகள் இருந்தமை இப்படி நிறைய சொல்லலாம். ஆனால் அத்தனையையும் மீறி நிறைய செய்தோம்.

பணி முகாம்கள், நிறைய வீடுகள் கட்டிக் கொடுத்தது, உறிஞ்சிக் குழிகள் அமைத்துக் கொடுத்தது பாதைகள் அமைத்தது, பள்ளிக் கல்லூரிகளில்  இலட்சக்கணக்கில் மரங்கள் நட்டு பராமரித்து பெரியவை ஆக்கியது, மது,போதை, எதிரான போராட்டஙக்ள், ஹோகனக்கல் கூட்டுக் குடி நீர் திட்டத்திற்காக முதன் முதலாக போராடியது, முதன் முதலாக எங்கள் இயக்கத்தினரும் பெண்களுமே சிறை சென்றது, காவிரி நீர் பட்டினிப் போராட்டங்களாக சேலம் மாவட்ட்ட ஆட்சியர் வளாகம் முன் போராடியது அப்ப்போது வெளிப்பட்ட எனது பேச்சை சிறு கையேடாக்கி நதி நீர் இணைப்புக்கான முயற்சியாக்கி நாடெங்கும் விநியோகித்தது

வேலாயுதம் பாடினால் பெண்கள் எல்லாம் அழ ஆரம்பித்து விடுவார்கள் அப்படி பாடுவார். அவர் குரல் பாட ஏற்றது. ஆனால் பேசுவதற்கு எனது குரல் என்றானது. எரி தீபங்கள் என்ற தலைப்புடன் ஒரு சிறு பாடல் புத்தகம், சில  ஒலிப்பேழைகள் அப்போதே போட்ட நினைவுகள்... அதில் ஒன்று:

நெருப்பு ஊர்வலங்கள் நாங்கள் சூரிய தோரணங்கள்
ஆலையில் தொழிலாளர்கள் வயல் வெளியில் விவசாய மக்கள், கடல் அலையில் மீனவர்கள்  உழைத்து உயிர் வாழும் தோழர்கள்....என்ற பொருள்பட இருக்கும். இப்போது மட்டுமல்ல எப்போதும் அவை பொருந்தும்

கைகளை நீட்டி உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள்.பாரதி பாடல்களை தூக்கிப் பிடிப்பார்கள்.  பாரத சமுதாயம் பாரத சமுதாயம் பாடல் அனைவர்க்கும் மனப்பாடமாக தெரியும் வண்ணம் அத்தனை முறை பாடியிருப்பார்கள்...

பீட்டர் அல்போன்ஸ், ஆடிட்டர் சுரேஷ்(மறைந்த), குட்டப்பட்டி நாராயணன்,  போன்ற  பிரபலங்கள் எல்லாம் அங்கே எனக்கு அறிமுகமானார்கள் க.ராசாராம், அவரது மூத்த சகோதரர் ஜெயசீலன், மற்றும் எனக்கு பேர் வாங்கிக் கொடுத்த முதல் முகாமுக்கு வந்த தெய்வத்திரு முத்து அருணகிரி ராஜ் எம்.டி அப்போது அவர் சேலம் மாவட்ட மருத்துவ அலுவலர். இப்படி நல்ல நல்ல நபர்கள்  உடன் நான் பணிபுரியக் காரணம் கோ.வேலாயுதம்.

மேலும் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.எ.ப் பாருக்கியை காண இருவரும் போவோம், அரசியல் நெடி இல்லாத போது அவர் எங்களை நல்லபடியாக வரவேற்பார் அப்படி இருக்கும்போது அவர் அப்புறம் பார்க்கலாம் என திருப்பி விடுவார் ஆனால் அதைக்கூட நாங்கள் பொறுத்துக் கொள்ளமல் காத்திருந்து பார்த்து விட்டே திரும்பிய அனுபவம் எல்லாம் அப்போது நிகழ்ந்தது.

ஒருவரை அது எவ்வளவு பெரியவராக இருந்தபோதும் எவருக்காவது உதவித் தேவைப்பட்டால் அவரை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் கூடத் தயங்கவே மாட்டார். இருவரும் அனைவரையும் அனைத்தையும் அப்படியே நம்புவராக இருந்து நிறைய ஏமாந்த அனுபவமும் உண்டு.

நீண்ட நாட்கள் பேருந்தில் மட்டுமே பயணம். பெரிய பந்தா பேர்வழி எல்லாம் இல்லை. சின்னபையன் என்பவரை மதுவிலக்கு வேட்பாளராக சேலம் வடக்கு தொகுதியில் நிறுத்தி வெறும் எண்ணூற்று  பதினாறு வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றும் எங்கள் கொள்கையை கைவிடவில்லை. கையெழுத்து வேட்டையில் இறங்கி இலட்சக்கணக்கான கையொப்பங்கள் பெற்று அரசுக்கு அனுப்பி வைத்தோ. பயனில்லை அது வேறு.

சின்ன பையன், இல்லை சசிபெருமாள் இல்லை, பொறியாளர் மணி இல்லை. இப்படி எங்கள் தியாக திருவிளக்குகள் எல்லாம் இல்லை.

இப்போது வேலாயுதம் 70 வயதை மீறி நினைவுப் பிறழ்தல் அடிக்கடி நேர பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார் சென்னையில்.
Image result for marubadiyumpookkum.blogspot.com
அப்போது சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அவரும் இவருக்கு எழுதினார் என்றே நினைவும்
அச்சமில்லை, என்ற அச்சுப் பிரதி ஒன்றை நடத்தியதாக நினைவும். மேலும் மக்கள் கலைப்பண்பாட்டுக் கழகம், நடத்தி இன்குலாப் அறிமுகத்துடன் கவியரங்கம் நடத்தினோம். அதிலும் கவிதை அவருடன் செய்ய இவர் என்னைப் பணித்தார்.

அது ஒரு வசந்த காலம் தான்...கசந்த காலமாக அது எப்போதுமே இருக்காது...
அவருக்குள்ளும் எனக்குள்ளும் அவரும் நானும் இருந்த காலத்தை காலம் வெகுவாக விழுங்கி விட்டது நினைவிருப்பதும் இல்லாமல் போகாமல் இருக்க இப்போது பதிவு செய்திருக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment