Saturday, December 31, 2016

ஒன்றே குலம் ஒருவனே தேவன்:‍ அம்மாவே தெய்வம்: கவிஞர் தணிகை

ஒன்றே குலம் ஒருவனே தேவன்:‍ அம்மாவே தெய்வம்: கவிஞர் தணிகை

Image result for periyar anna


கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் திராவிடர் கழகம் சுய மரியாதைக் கட்சியிடமிருந்து பிரிந்தது,அவை எல்லாமே காங்கிரஸ் கட்சியுள் இருந்தன ஒரு காலத்தில்.மணியம்மை வந்த பின் கண்ணீர்த் துளிகள் என பெரியாரால் பரிகாசம் செய்யப் பட்ட அண்ணாவும் தம்பிகளும் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் தலையாய கொள்கை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் தம்பிகளாய் மக்கள் சேவையே மகேசன் சேவை என தேர்தலில் பங்கெடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர். காமராசரை பின் தள்ளி.

Related image

இந்த நாட்டுக்கு ஒரு சாபக் கேடு அது தமிழகம் மாநிலம், இந்திய மத்தியம் இரண்டுக்குமே நல்லவர்கள், மக்கள் சிந்தனை உள்ளார் அதிக ஆயுளுடன் ஆண்டது கிடையாது. அங்கே லால் பகதூர், இங்கே அறிஞர் அண்ணா.குறுகிய கால நல்ல ஆட்சியாளர்கள்.

கலைஞர் எம்.ஜி.ஆரை துணைக்கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன் போன்றவர் வரிசையில் அடுத்திருந்தவர் ஆட்சிக் கட்டில் ஏறி விட்டார் முதல்வராக... இன்னும் உயிர் வாழ்கிறார் நிறைய பேரை எடுத்து விழுங்கி விட்டு ஆயுள் 94ம் கடக்க...இவர் குயுக்தியில் அன்றைய தி.மு.கழக பொருளாளர் நட்சத்திர அந்தஸ்தில் இருந்த எம்.ஜி.ஆரை துணைக்கொண்டு முதல்வராகிறார் அதிலிருந்து தமிழகத்திற்கு பிடித்தது சனி.

ஒரு குடும்ப ஆட்சி, அவர் குடும்பமே கட்சி, தலைவர் இல்லாத கழகத்திற்கு தலிவர், செயலாளர், பொருளார் அல்லாமே அவருடைய குடும்பத்துள் இருக்க வேண்டுமென எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்குகிறார் வைகோவை நீக்கியது போல...எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்குடன் உருவெடுக்கிறார் அவர் இருக்கும் வரை கலைஞர் இருக்கும் இடம் கட்சியில் மட்டும் தெரிய பொது வாழ்க்கை அதாவது ஆட்சி அந்தஸ்து ஏதும் இல்லாமல் இலக்கியப் பணி கலைப்பணி சன்டிவியின் மாலைகளிடம் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார். அவருக்கு பல குடும்பங்கள் எனவே பொழுதெல்லாம் நன்றாகவே போகிறது.

அவருக்கும் பின் ஸ்டாலினை உருவாக்கி, அடம் பிடிக்கும் அழகிரியிடம் சமாதானம் செய்ய முடியாமல் இன்னும் தலிவராகவே இருக்கிறார். மக்கல் இவர் முதல்வராக இருக்கும்போது உயிர் பிரிவார் என எதிர்பார்க்க, இவர் தி.மு.க தலீவராகவே இருந்து வரும் ஆண்டுகளில் சென்றடைவார்.ஒரு ஸ்லிப்: இவர் முதல்வராக இருந்தபோதே கடைசி இரண்டாண்டு அல்லது ஓராண்டு ஸ்டாலினை முதல்வராக்கி அழகு பார்த்திருக்கலாம்.ஆனால் இன்னும் ஸ்டாலின் தம் மகனே ஆனாலும் பதவியை விட்டுத் தரத் தயாரில்லை. ஆவியானாலும் அவரது ஆவி தி.மு.க தலைமைப் பதவியை விடவே விடாது...ஆனால் அறிஞர் அண்ணா பெரியார் மட்டுமே இயக்கத்துக்கு தலைவர் என இருக்கையை காலியாகவே வைத்து பொதுச்செயலாளர் பதவியை மட்டுமே ஏற்பதாகச் சொன்னார் ஒரு குரு மரியாதை...அதிலிருந்து அந்த பாணியுடன் அ.இ.அ.தி.மு.க....எம்.ஜி.ஆருடன்...

நிலை இப்படி இருக்க எம்.ஜி.ஆரின் லீலைகளை அறிந்த அம்மணி, கொ.ப.செவாக உள் புகுந்து போராடி வென்று எடுத்து அடுத்துள்ளவரை, உதவி செய்தாரை எல்லாம் களை எடுத்து.களம் கொண்டு என்றும் தெய்வம், நிரந்தர முதல்வர் என்றெல்லாம் சொல்லப் பட்டு, புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதாவாக பெட்டியில் இட்டு எம்.ஜி.ஆர் சமாதி அருகே பெட்டியில் வைக்கப் பட்ட ஜெ முதலவராக இருந்து மறைந்தார்

ஆனால் அவருக்கு கால்கள் இருந்தனவா , பல் பிடுங்கப்பட்டதா, அவரது பிணத்தை தோண்டி எடுக்கவா, நோண்டி எடுக்கவா என்றெல்லாம் பட்டி மண்டபங்களும், எம்.ஜி.ஆர் கழகத்தை கட்டிக் காத்த அம்மா ஜெவா, சின்னம்மா வி.கே.சசி சிறந்தவரா என கருத்தரங்கங்களும், மேலும் பல வழக்குகள் போடப்பட்டாலும் அவை முதல்வராகி விட்டால் நெருங்க முடியாது நொறுக்கி விடலாம் என முதல்வராக அவரே என கட்சி, குடிகார மக்கலால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் விரும்ப...

அந்த 75 நாட்கள் என மர்ம முடிச்சுகள் நிறைந்த வரலாற்றுப் புத்தகங்கள் இன்னும் சில காலத்தில் கைக்கு கிடைக்கலாம். இவர் தமிழக அரசுப் பள்ளிப்பாடப் புத்தகத்தில் அச்சடித்த சில கலைஞரின் வாசகத்தை நினைவுறுத்தும் இடங்களை எல்லாம் அடித்து மாற்றி, எடுத்து கிழித்து, பக்கங்களை மாற்றி ஒட்டி, இன்னும் எப்படி எல்லாமோ செய்தவர், எங்கு பார்த்தாலும் அம்மா மயம் எனச் சொல்ல வைத்தவர்...கட்டப்பட்ட சட்டசபையை ஏற்காமல் அறிஞர் அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக்க வழக்கு அரசு சார்பாக நடத்தி...

ரெயில் நிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் அடி மட்ட அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள், ஐ மீன் எம்.ஜி.ஆர், ஜெ இரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள் இது உட்கட்சி சனநாயகமின்றி நடக்கிறது என...

எந்தக் காலத்தில் அந்தக் கட்சியில் சனநாயகம் இருந்தது? எம்.ஜி.ஆர் காலத்திலா, அம்மா ஜெ காலத்திலா, அப்படி இருந்தால்: மாநிலம் எங்கும் உள்ள கிளைகளில் எல்லாம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறைக்கு விடப்பட்டல்லவா பொதுச் செயலாளர் தேர்வு செய்யப் பட்டிருக்கக் கூடும், எல்லாம் நியமனமே, கட்சி பொதுச் செயலாளர் ஆக 5 ஆண்டு உறுப்பினர் ஆக இருக்க வேண்டுமாமே...ஊ ஹூம் அதெல்லாம் உங்களுக்கு அம்மாவுக்கு, சின்ன அம்மாவுக்கு அதெல்லாம் தேவையில்லை....

செல்வியை அம்மா என்றார்கள், 60 வயதுடைய சசியை இப்போது சின்னம்மா என்று சொல்லிவிட்டார்கள். இப்படி எல்லாம் வாய்ப்புகள் இருக்க, நாங்கள் ஐ மீன் நாங்கள் என்றால் சசி பெருமாள், வேலாயுதம், தணிகை ,செம்முனி, இராமலிங்கம், சின்ன பையன், மணி போன்ற இயக்க வரலாறு உள்ள நாங்கள் எல்லாம் வாழ்நாளை சேவை, மக்கட் பணி, மதுவிலக்கு, கிராம முன்னேற்றம், ஆக்கபூர்வமான வளர்ச்சி, காந்திய வழியில் ஊருக்குப் பத்து பேர் இயக்க, நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பம் என்றெல்லாம் விரயம் செய்து விட்டோமா?

29 வயதிலிருந்து அம்மாவுடன் இருந்து தற்போது 54 வயதாகும் சின்னம்மா கட்சியின் பொதுச்செயலாளர், பொன்னையன் , செம்மலை, எல்லாம் மோடியின் கீழ் இருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோசி, ராஜ்நாத் சிங் போல...எளிய வழி, சுலபமான வழி ...

கட்சியில் எப்படி மேல போகணும் எப்படி கட்சியை வளர்க்கணும்னு தெரியுனும்னா அது சசியின் வழி தனி வழி ....அடிச்சதய்யா யோகம்...இனிமே பார்க்கலாம் தமிழகத்தின் நல்லாட்சியை பொற்கால மாட்சியை...ரஜினி காந்த் படம் வருகையில் அடிக்கும் ஸ்டன்ட் போல...நல்ல நல்ல திருப்பங்கள், விருப்பங்கள்...


Related image

ஒன்றே குலம் ஒருவனே தேவன், மக்கள் சேவையே மகேசன் சேவை, அம்மாவே தெய்வம், அம்மாவே நிரந்தர முதல்வர் போய் சின்னம்மாவே தெய்வம், சின்னம்மாவே நிரந்தர முதல்வர் , யானை மாலை போட்டது போய், சிங்கம் கண்டு ஒடுங்க..சின்னம்மா ஜிந்தாபாத். நமக்கென்ன ஓ.பி ஆண்டால் என்ன சின்னம்மா ...என்ன...மோடி ஆட்சி, மோடி மஸ்தான் ஆட்சி,....இதோ பாருங்கள் கூட்டமே பாம்புக்கும் கீரிக்கும் சண்டை உடப் போறேன்..பாருங்க..பாருங்க...நல்லா பாருங்க....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. Replies
    1. 1.Sasikala Natarajan (born 1954) is a close confidante of Jayalalithaa,

      2.Born 29 January 1956
      Thiruthuraipoondi
      Tamil Nadu, India.

      yes you are right..I will correct myself.But some confusion in wiki also.

      Delete