Tuesday, December 20, 2016

மேட்டூர் அணையின் காவிரி நீர் அளவு பெரிதும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: கவிஞர் தணிகை

மேட்டூர் அணையின் காவிரி நீர் அளவு பெரிதும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: கவிஞர் தணிகை

Image result for mettur dam  is drying with out water


அனைவரும் அறிந்ததே தமிழகத்தின் குடி நீரின் அமுத சுரபி, தஞ்சை விளை நிலங்களின் பாசன அட்சய பாத்திரமான மேட்டூர் அணையின் காவிரி நீர் அளவு  38 அடிக்கும் கீழ் இறங்கி வருகிறது. இது பெரிதும் மனித வாழ்வின் ஆதாரத்தின் மேல் கேள்வி எழுப்பவும் கவலையூட்டவும் செய்யும் செய்தி.

இதைப் பற்றி எல்லாம் எவரும் நினையாமல் சசிகலா புராணம், பாடிக் கொண்டே இருக்கின்றனர். ஆளும் கட்சியினர்.

128 அடி கொள்ளளவு உள்ள அணையில் 38 அடி, இந்தப் பனிக்காலத்தில் குளிர் காலத்தில் இனி மழை பெய்ய வாய்ப்புகள் மிகவும் குறைவு. கர்நாடகா கொள்ளேகால், மைசூர், கூர்க் போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் மழை ஏற்பட்டு பெரு மழை ஏற்பட்டு அந்த மழை நீர் அருவி வடிந்தால் இங்கு வந்தால் மட்டுமே அணைக்கு நீர். அல்லது கர்நாடகா அரசு மத்திய அரசு, நடுவர் மன்றம், நீதிமன்றம் உத்தரவுக்கிணங்க ஏதாவது நீர்ப் பங்கீடு அளித்தால் உண்டு.

Image result for mettur dam  is drying with out water

இல்லையேல் குடிக்கவும் நீர் இல்லாமல் மிக வறட்சி ஏற்படும், காடு, கழனி, மாடு கன்று கால்நடைகள் பறவைகள் பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம்...

இயற்கையே பார்த்து கருணை கூர்ந்து மாறுதல் செய்தால் உண்டு.
இல்லாவிட்டால் இந்தக் குளிர் காலம் மாறுவதற்குள்ளேயே நாம் வரலாறு காணாத வறண்ட அணையை வெற்று நிலத்தை சேறும் சகதியுமான அணைக்குள் நீரில் மூழ்கி இருந்த நிலப்பிரதேசத்தை காண்பது உறுதி.

இயற்கை அன்னையே மனித குலத்தை தமிழினத்தைக் காப்பாற்று. நீராகி உறுதுணையாகி துன்பம் நீக்கி கரை காட்டு. வழி காட்டு. மேல் ஏற்று.

பாராளுமன்றத்துக்கு வாஸ்து சரி இல்லை என்கிறார்கள், தமிழகத்துக்கும் வாஸ்து சரியில்லையோ, எங்கள் வீடு வீதியில் கடைசி வீடு அது போல நம் தமிழ் நாடு இந்தியாவில் கடைசி மாநிலம். மேல் இருந்து நீர் வரவில்லை எனில் இயறக்யே தஞ்சம். அதுவும் இல்லையெனில் மாபெரும் பஞ்சமே மிஞ்சும்.  இதில் பொருளாதாரப் பற்றாக்குறையை மோடி கொண்டு வந்துள்ளது எல்லா மாநிலைத்தையும் விட தமிழகத்தையே அதிகம் பாதிக்கும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: