Saturday, November 30, 2019

இசையமைப்பாளர் இளையராஜாவும் பிரதமர் நரேந்திர மோடியும் இப்படி பண்ண‌லாமா? கவிஞர் தணிகை

இசையமைப்பாளர் இளையராஜாவும்  பிரதமர் நரேந்திர மோடியும் இப்படி பண்ண‌லாமா? கவிஞர் தணிகை

Image result for modi and ilayarajaImage result for modi and ilayaraja"

பிரசாத் ஸ்டுடியோவில் இசை அமைக்க இடம் இது வரை இளையராஜாவுக்கு இருந்ததாகவும் இப்போது அந்த இடம் அவர்களுக்கே தேவைப்படுகிறது என அவரை காலி செய்யச் சொல்லியதாகவும் அதற்கு அவருக்கு ஆதரவாக பாரதிராஜா மற்றும் திரைப்படம் சார்ந்தவர் அங்கே சென்று அதை மறுத்து முதலில் பேசி அதன் பின் பேச்சு வார்த்தையில் போதிய கால அவகாசம் தந்து வெளியேறச் சொல்லலாமே என்றுதான் கேட்கிறோம் என்றெல்லாம் ஊடகச் செய்திகள்...ஊடகத்தை முதலில் எந்த அளவு நம்புவது என்றே நம்மால் முடிவுக்கு வர முடியாது ஏன் எனில் ஊடகங்களின் நிலை எல்லாம் அப்படி உரு மாறியுள்ளது.

என்றாலும் அந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் இளையராஜா அன்னக்கிளி மூலம் சினிமாவில் பிரவேசித்த ஆண்டு 1976 அது முதல் சுமார் 40 ஆண்டுக்கும் மேலாக இந்த துறையில் கொடி கட்டி பறப்பவர் தனக்கென ஒரு ஸ்டுடியோவை ஏற்படுத்திக் கொள்ளாமல் ப்ராசாத் விட்டு விட்டார் என்பதற்காக அதிலேயே இருந்து விடலாம் என கடைசி வரை நினைத்தது எப்படி நியாயமாக இருக்கும், நீதி, தர்மம் என்று பார்த்தாலும் உரியவர்கள் கேட்கும்போது வெளியேறித்தானே ஆக வேண்டும். அதுதானே சரியாக இருக்கும்.

அதற்கு  மாறாக அவர் வெளியேறாமல் அதற்கு சப்பைக் கட்ட ஒரு குழுவினரும் போய் தவறுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். உழுபவனுக்கு நிலம் சொந்தம், குடியிருப்பவனுக்கு வீடு சொந்தம், அனுபவிப்பார்க்கு சொத்து  சொந்தம் என்ற கதையாகவே இது இருக்கிறது. மேலும் இப்போது வடநாட்டு இந்தியர்கள் தமிழ் நாட்டில் குடியேறி தமிழ் நாட்டு இளையவர்களின் வேலை வாய்ப்பை பறித்து தமிழ் நாடு என்பது எங்கள் சொந்தம் என்று சொல்ல வழிவகை செய்ய மத்திய அரசும் மாநில அரசும் செய்து வரும் தகிடு தத்தம் போன்றது இந்தக் கதையும்.

இசை ஞானி இவரது பாடல் மேடையில் பாடுவதற்கே ராயல்டி கேட்டவர், அதிலும் முக்கியமாக வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்க்கு கிடைக்கும் பொருளாதார  நலன்களில் தனது பாடல் இருக்குமனால் அதற்கு தனக்கும் பங்கு உண்டு எனக் கேட்டவர்,

இவர் ஏன் இவருக்கும் பின்னால் வந்தவர்கள் எல்லாம் தமக்காக ஸ்டுடியோ ஏற்படுத்திக் கொண்டு இசை அமைத்து வரும்போது இதிலேயே இருந்து வந்தார் என்பதை தெரிந்து கொள்ளும்போதே வியப்பாக இருக்கிறது கேட்கவே. இவர் படங்களுக்கெல்லாம் இலவசமாகவே இசையும் பாடலும் செய்கிறாரோ...வருவாய் மிகவும் குறைவோ என்றெல்லாம் கேட்கலாம் ஆனால் அது அவர் திறம், அவர் களம். அதெல்லாம் சரிதான். ஆனால் இந்த செய்தி நெருடலாகவும் முரணாகவும் உள்ளது. ஏன் எனில் சொந்தக்காரர் சொன்னால் தனக்கே அந்த இடம் வேண்டுமென்றால் இவர் வெளியேறிவிடுவதுதான் நமக்கு தெரிந்த நியாயம்.

அடுத்த நமது நாட்டின் மன்கி பாத் தலைவரும் நள்ளிரவில் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து நாட்டையே டிஜிட்டல் மயமாகவும் பொருளாதார உதயமாகவும் மாற்றி படித்த படிக்காத இளையவர் யாவருக்கும் தொழில் வாய்ப்பு கொடுத்து பிரமாதமாக நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் ....பாரதம் என ஏன் இன்னும் சொல்லாமல் இந்தியா என்று சொல்லி வருகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்திய வம்சாவளியினரை தமிழ்க் குடிமக்களை இலட்சக்கணக்காக படுகொலை செய்த ஒரு இனத்தின் பிரதமரை வரவேற்று 3228 கோடி பணத்தை வாரி இறைத்திருக்கிறார். அந்த நாட்டை முன்னேற்றுகிறாராம். இந்த நாட்டை ஒழித்துக் கட்டி.

வைகோ ஒருவர்தாம் எதிர்க்குரல் கொடுத்திருக்கிறார்.
அந்த புத்தமதம் சார்ந்த அந்த புத்தமதக் கருத்துகளுக்கு எதிரான இலங்கை அதிபர் வரவு இந்திய நாட்டுக்கு நட்டம்.அவர்களுக்கு இலாபம்.கேட்டால் உலக ராஜாங்க முறைகள் சொல்லப்படும், சீனாவின் பால் சாராமல் இருக்க இந்தியா இப்படி செய்கிறது மேலும் அவர் பதவி ஏற்றதும் இந்தியாதானே முதலில் வந்தார் என்றெல்லாம்

இந்தியாவின் ஒன்னேமுக்கால் கோடி பேர் வெளி நாட்டில் சென்று வேலை செய்து கொண்டு வந்து கொட்டும் பணத்தைக் கூட விட்டு விடாமல் வரி கட்டிய இந்திய பணத்தை ஜி.எஸ்.டி மூலம் வசூலான பணத்தை, ஏழை எளியவர்கள் பணத்தை எல்லாம் வாரி வாரி கார்ப்ரேட் முதலாளிகளுக்கு வங்கிக் கடன் என்ற பேரில் கொடுத்து விட்டு திவால் செய்வது, அந்நிய நாடுகளுக்கு வாரி விடுவது, வெளிநாட்டு மண்ணிலேயே வாழ்ந்து விடலாம் என பறந்துகொண்டே இருப்பது ...சொந்த மண்ணுக்கு சூன்யம் அந்நிய மண்ணுக்கு மான்யம் என்றபடி நாட்டை வழி நடத்துகிறீரே தாழ்த்தப்பட்ட இனம், ஒதுக்கப்பட்ட இனம், மிகவும் பிற்படுத்தப் பட்ட இனம், பொருளாதாரத்தில் நலிவடைந்தார் ஒதுக்கீடு என பிற்படுத்தப்பட்ட இனத்து படித்த இளைஞர்களின் வாழ்வை கேள்விக் குறியாக்கும் இந்த பிரதமரின் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் குடும்பத்துக்கு இழப்பீடு தர சட்டத்தில் இடம் இல்லையாம்.

விலைவாசி பொருள்களை வாசிக்கவும் வாங்கிட யோசிக்கவும் விடாமல் சுவாசிக்கும் காற்றுக்கும் முதல் தேவைப்படும் நாடாக முதலாளிகளின் நாடாகவே மாறிட மிக அருமையான ஆட்சி...உங்கள் ஆட்சிதான் பிரதமரே...  இது ஒரு வரிகட்டும் குடிமகன் ஒரு நாட்டின் தலைவனுக்கு தெரிவிக்கும் ஆதங்கம் அவ்வளவுதான். எவருமே இதில் உண்மை இல்லை என்றால் வந்து கலந்து பேசலாம்.
Image result for modi and ilayaraja"
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, November 29, 2019

24.11.19ல் பாலமலையில் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை

24.11.19ல் பாலமலையில் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை

Image may contain: 1 personImage may contain: one or more people, outdoor and nature


கடந்த ஞாயிறு 24.11.19 அன்று எங்களது 12 பேர் கொண்ட மருத்துவக் குழுவினருடன் பாலமலைக்கு மருத்துவ முகாம் நடத்த சென்றிருந்தோம்.அதில் சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் குழுவினருடன் எங்களது சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்த முகாமை பொது உறவு அலுவலர் பி.ஆர்.ஓ என்ற முறையிலும் பாலமலையுடன் 34 ஆண்டுகள் தொடர்புடையவன் என்ற முறையிலும் அடியேன் ஒருங்கிணைப்பு செய்து நடத்தினேன். இந்த முகாமிற்கு பாலமலையில் உறுதுணையாக இளைஞர் ஆசீர் வாத இயக்கம் என்ற சேவை நிறுவனமும் தனது  பங்கு பணியை சிறப்பாக யுவராஜ் திருமதி யுவராஜ் ஆகியோரை வைத்து நடத்திட துணை புரிந்தது.
Image may contain: 2 people, people sitting
சேலம் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர் பேபிஜான் இந்த மருத்துவ முகாமை நடத்திட முன் மொழிந்து முடுக்கி விட்டுக் கொண்டே இருந்தார் அதற்கு வழிமொழிதலுடன் சமூக பல் மருத்துவத் துறையின் பேராசிரியர் மருத்துவர் என். சரவணன் அவர்களும் ஒத்துழைப்பு செய்தார்.
Image may contain: one or more people and people sittingImage may contain: 1 person, sitting and closeup
மருத்துவக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் மருத்துவர் சண்முகம் மற்றும் சமூக மருத்துவத் துறைத் தலைவர் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் அந்தக் கல்லூரியின் மருத்துவர் ரூபேஷ், அங்கயற்கண்ணி, மற்றும் மருத்துவர்களும்  பல் மருத்துவக் கல்லூரியின் ஸ்ரீநாத், ராம்குமார் ஆகிய மருத்துவர்களும் பேரார்வத்துடன் வந்து முகாமை நடத்திக் கொடுத்தனர்.
Image may contain: one or more people and people sittingImage may contain: one or more people and people sitting
அது பெருமழைக்காலம் என்பதாலும், பெரும்பாலான மக்கள் கீழே கூலி வேலைக்கு சென்றுவிட்டதாலும், முறையான அறிவிப்பு இருந்த போதிலும் சுமார் 50க்குள்ளான பாலமலை கிராம மக்களே வந்திருந்து பயன்பெற்றனர் என்ற போதிலும் அந்த மலைக்குச் சென்று தொலை தூரப் பணித் திட்டம் சார்பாக மாதம் தோறும் இந்த மருத்துவ முகாமை நாலாம் ஞாயிறுகளில் செய்துவரும் பல்மருத்துவக் கல்லூரியின் பணிகளில் முதன் முறையாக சேவையில் மருத்துவக் கல்லூரியும் இணைந்து செயல் பட்டதும் இனி வரும் காலங்களில் செயல் பட இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
Image may contain: one or more people and people standing

முதலில் அன்றைய தினத்தில் பாலமலையில் ஏறுவதே பெரும்பாடாகியது. தனி மலையேறும் ஜீப்பில் அனைவரும் சென்றோம். அதற்கு முன் ஒரு ஜீப் மரத்தில் மோதியதால் பாதை தடைபட்டிருந்ததை  பெருரக வாகனங்கள் தலையிட்டு அவற்றை எடுத்து விட்டு சரி செய்து அதன் பின் சென்றோம். இந்த செய்தியை முதலில் சொல்லி இருந்தால் எமது மருத்துவர்கள் பயந்து விடுவார் எனச் சொல்லவே இல்லை. மறுபடியும் இறங்கும்போதும் அந்த மண்பாதை செப்பனிடும் பணி நடந்ததால் வன இலாகா சங்கிலி இட்டு பாதையை தடுத்திருந்தது வாகன போக்குவரத்து நடைபெறாமல்.
Image may contain: one or more people and people sitting
நாங்கள் முகாமை நடத்தி விட்டு வந்த பின் மருத்துவர்கள் அவசரப்பட்டு சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தனர். மேல் ஏறி வந்த மலையிலேயே தங்கி பணி புரியும் விருது பெற்ற நர்ஸ் இனி வாகனப் போக்கு வரத்து இரவு 7 மணிக்கு மேல் இருக்கலாம் என தாம் கேள்விப்பட்ட தகவலை பரிமாறினார்.
Image may contain: one or more people and people sitting
நல்ல வேளை அப்படி எல்லாம் இல்லாமல் நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்த ஜீப் மறுபடியும் வந்து எங்களை ஏற்றிக் கொண்டு கீழ் இறக்கிவிட்டது. சாலை தார் சாலையாக அரசு ஆணை திட்டம் எல்லாம் வந்து விட்டது இன்னும் 6 மாதத்திலிருந்து ஒரு ஆண்டுக்குள் இந்த சாலை வசதி மேம்படலாம் என்ற வாய் வழிச் செய்தியும் கிடைத்தது.
Image may contain: one or more people and outdoor
அங்கே சென்றுவிட்டால் இணையம், தகவல் தொடர்பெல்லாம் இருக்காது. சுண்டக் காடு என்னும் இடம் வந்தால் மட்டும் சில பி.எஸ்.என்.எல் போன்ற இணைப்புகள் கிடைக்கலாம். அல்லது அதுவும் கிடைக்காமலும் போகலாம்.
Image may contain: one or more people, people sitting and indoor
மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 3924 அடி உயரத்தில் இருக்கிறது என்பதாலும் அங்கே சிறு சிறு கிராமங்களாக 20க்கும் மேல் இருப்பதாலும் சுமார் மக்கள் தொகை 4000க்கும் மேல் இருப்பதாலும் அந்த மலையை அந்த பாலமலை வருவாய்க் கிராமத்தை தவிர்க்க முடியாமல் பணிகளைச் செய்ய வேண்டி இருக்கிறதே என அரசு செய்தும் செய்யாமலும் இருக்கிறது.
Image may contain: one or more people, people sitting and phone
அப்படிப்பட்ட இடத்தில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி ஒரு சேட்டிலைட் மையத்தை ஏற்படுத்தி மருத்துவ உதவிகளை தேவைப்படுவார்க்கு கொண்டு சேர்த்து வருவது மனிதகுல சேவையன்றி வேறில்லை. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய மக்கள்தாம் சாதி என்றும், மதம் என்றும் கட்சி என்றும் பிரிந்து போய் ஒன்று சேராமல்  முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ ? என பாழ்பட்டுக் கிடக்கிறார்கள் இன்றைய எல்லா கிராமங்களிலும் போய்ச் சேரவேண்டிய நன்மைகளுக்கு முட்டுக் கட்டை போடுவது எல்லாப் பக்கங்களிலும் வழக்கமாக இருக்கிறது ஆனால் அதே நேரத்தில் தீய பழக்கங்கள் தவறாமல் சென்றடைந்து மனித குலத்தையே நாசம் செய்து வருகிறது.
Image may contain: one or more people, people sitting, table and indoor
நிலை தேற வேண்டி மனித குலம் மேம்பட வேண்டி எம்மாலானதை செய்கிறோம் நம்மாலானதை செய்வோம் என்ற நம்பிக்கையுடன்.
Image may contain: 3 people, people smiling, people sitting, sunglasses and closeup
என்றும்
Image may contain: one or more people and people sittingImage may contain: 2 people, people sitting
மறுபடியும் பூக்கும் வரை

உங்கள்

கவிஞர் தணிகை. 
Image may contain: one or more people and people sittingImage may contain: outdoor and nature

Monday, November 25, 2019

ஒரு துளி உண்மையில் பேரொளி மயம்

ஒரு துளி உண்மையில் பேரொளி மயம்

Image result for one small drop of truth expands as universe"

இல்லாததால் நீ
இன்னும்
அழகாய்த் தெரிகிறாய்!

மேகமாய் அலைகிறேன்

மேடு பள்ளம் இல்லை
மேற்கு கிழக்கு இல்லை

உலகின் மாயம்
உயிரின்  நியாயம்...

   மறுபடியும் பூக்கும் வரை
      கவிஞர் தணிகை.

Friday, November 22, 2019

வார்த்தைகளின் கனம்: கவிஞர் தணிகை

வார்த்தைகளின் கனம்: கவிஞர் தணிகை

Image result for strength of uttering words"

வாளை விட எழுத்துக்கு வலிமை அதிகம். எழுத்துகளை விட நல்ல சொற்களுக்கு அதுவும் மேடையில் எழுச்சி ஊட்டும் பேச்சாக வெளிப்படும் சொற்களுக்கு அதிக வலிமையுண்டு. சொற்களே பெரும்பாலும் உறவுகள் நட்பிடையே பிரிவையும் ஒட்டுதலையும் ஏற்படுத்துகின்றன.

சில சமயங்களில் சொற்களை சொல்லாமல் விடுவதாலும் அந்த சொல்லாமல் விடப்பட்ட சொற்களும் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன மௌனமாக இருந்த போதும்.

பொதுவாகவே சொற்களை அதன் வேர்களிலிருந்து, அதன் பிறப்பிலிருந்து அதன் பிறப்பிடத்திலிருந்து அதாவது அதன் பின் உள்ள எண்ண அடித்தளம் என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்வதிலிருந்து முடிவுகள் மேற்கொள்ளப் படும்போது அவை ஒரு போதும் பிசகுவதில்லை.

 தக்க வேளையில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம் என்கிறது விவிலியம். விவிலியத்தின் மேல் அட்டையில் , வார்த்தை கடவுளாயிருந்தார் என்ற யோவானின் வசனம் நமது மொழியில் சொன்னால் வார்த்தை இடம் பெற்றிருக்கிறது.

முகமதியத்தில் கூட வார்த்தைக்கு பெருமதிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அதை ஓதுவது பெரும் பணியாய் வைக்கப்பட்டிருக்கிறது.

பகவத் கீதையில் மட்டுமல்ல எல்லா வாழ்க்கை வழிகளிலுமே வார்த்தைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

என்றாலும் முகமதியர்கள், கிறித்தவர்கள் வார்த்தைக்கு அளிக்கும் மதிப்பை விட பல தெய்வ வழிபாட்டைக் கையாள்வோர் வார்த்தைகளை அவ்வளவாக மதிப்பதில்லை. ஆனால் குருமார்கள், சித்தர்கள், ஞானிகள், தவசீலர்கள் துறவிகள் அனைவருமே சொல்லிய வார்த்தைகளை பதியவைக்க கல்வெட்டுகள், புத்தகங்கள், கோவில்கள் என பயனபடுத்தியவை வரலாறாக உள்ளன.

புத்தர் பிறர் கூறும் நீச வார்த்தைகள் தன் மேல் பொழிவதாக இருந்த போதும் அவை தம் மேல் படாதவை என உதறி சென்றுவிட்டால் கோபம் என்ற உணர்வலைகளில் சிக்க வழியே இல்லை என்கிறார். ஆனால் எல்லா நேரங்களிலுமே அப்படி மனிதர்கள் இயங்க முடிவதில்லை. புத்தமும், ஜைனமும் கற்க வேண்டியவைதான்.

என்றாலும் எல்லாவற்றிலும் முரண் இருக்கிறது. ஜைனம் உயிர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது என சாலையெங்கும் பெருக்கிக் கொண்டு போவதும், மூச்சுக் காற்றால் கூட சுவாசத்தில் இருக்கும் உயிரணுக்கள் மடிந்துவிடக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகின்றன. பூண்டு, வெங்காயம் போன்றவற்றையும் மசாலாப் பொருட்களையும் கூட உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் உழவு நடக்க வேண்டுமானால் களைகள் பிடுங்கி எறியப்பட வேண்டும். கொசுக்களை அழிக்க வில்லையென்றால் நிறைய வியாதிகள் பரவி மனிதகுலத்திற்கே கேடாய் முடியும்...இப்படி எல்லாமே ஒன்றுக் கொன்று முரண்கள்.

 ஒருவர் எதைச் சொல்லி இருந்தாலும் அதை பிறரிடம் சொல்ல வேண்டியதை மட்டுமே சொல்லி சொல்லக் கூடாததை சொல்லாமல் விடக்கூடிய அறிவு என்பது அனைவர்க்கும் வாய்ப்பதில்லை. அப்படிப்பட்ட அறிவு மிக்காரையே  நாம் ஞானிகள் என்று சொல்லி விடலாம்.

யாகாராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர்
சொல்லி ழுக்குப் பட்டு.
 என்ற குறள் சொல்வது போல யாரிடமும் வார்த்தைகள் கட்டுப்பாட்டுடன் இருப்பது பொறுமையை கற்றுக் கொடுக்கும் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும்.

வார்த்தைகள் சில உறவுகளை ஆயுள் வரை பிரித்தே வைத்திருக்கின்றன. தூதாகப் போய் வருவார்க்கு உரிய இலக்கணமாக நிறைய சொல்லப்படுகின்றன. ஆனால் அதை எல்லாம் அறிந்து செய்வார் எவரும் இல்லை. இராமாயணத்தில் அனுமன் ஒரு நல்ல தூதனாக விவரிக்கப்படுகிறார். அவரை சொல்லில் செல்வன் அழைக்கிறார்கள். முருகனின் தூதராக வீரபாகு என்னும் கதாபாத்திரம் சொல்லப்படுகிறது.

சொற்களின் கனம் தாளாமல் நிறைய வாழ்க்கை சீர் கெட்டுப் போயிருக்கிறது. அழிக்கப்பட்டிருக்கிறது. ஏன் காதல் என்பதெல்லாம் கூட சேரமுடியா வாழ்வின் கரையோரம் சென்று ஒதுங்கி காணாமல் போயிருக்கிறது.

வார்த்தைகளை மதிக்கக் கற்றுக் கொள்வோமே!.

அதே போல கொடுத்த வாக்குறுதிகளை, வார்த்தைகளை தவறாமல் காப்பாற்றக் கற்றுக் கொள்வேமே...மனிதம் மலரட்டும் அதனுள் கடவுள் உணர்வெலாம் செழிக்கட்டும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Wednesday, November 20, 2019

சாக்குண்ணி என்னும் எனது சீடர் வயது 96: கவிஞர் தணிகை

சாக்குண்ணி என்னும் எனது சீடர் வயது 96: கவிஞர் தணிகை

Image result for big banyan tree"


மனிதர் குடையை ஊன்றிக் கொண்டே மெல்ல மெல்ல நடந்து என்னை நாடி வருவார். அவருக்கு முதலில் நான் செய்து கொடுத்ததை நீண்ட தாளில் முழுதுமாக அச்சடித்து அந்த மின்னகரம் முழுதுமே விநியோகித்தார். அது ஒரு கலைக்கல்லூரி இல்லாத நகரில் அது பற்றி பேசவும், பெரியவர் சிறியவர் என்ற வயது வித்தியாசக் குறைபாடான பண்பாடு கலாச்சார விதிமீறல்களை சுட்டிக் காட்டுவதாகவும் சமுதாய அமைப்பு, குடும்ப நட்பு உறவுகளை செம்மைப்படுத்தி நட்புறவுடன் விளங்கவும் தமது குரலை மட்டுமல்ல அது போன்ற கருத்தொருமித்த பலரின் கருத்தையும் பிரதிபலிப்பதாய் அந்த காலத்தில் அனைவரிடமும் அது ஒரு பேசு பொருளானது.



 அது மட்டுமல்ல அடுத்த முறை நான் அவருக்காக எழுதிய அதாவது அவர் சொல்ல விரும்பியதை பெரிதாக்கி எழுதிக் கொடுத்ததை தையல் கலைஞன் என்ற அவர்களது நூலில் வெளியானது என கொண்டு வந்து காண்பித்தார்.

அதை அடுத்து சில சில சிறு சிறு கையால் எழுதப்பட்ட தப்பும் தவறுமான பிரதிகளைக் நுணுக்கி நுணிக்கி எழுதிக் கொண்டு வந்து படித்துப் பாருங்கள் கருத்தை சொல்லுங்கள், அதை சீர் செய்து எழுதித் தாருங்கள் என எழுதி எடுத்துச் செல்வார்.

அவர் ஆர்வத்தில் நல்ல இளைஞராக இருந்தார். அவரது மகன்களும் மகள்களும் ஆசிரியப் பணி, மேலாண்மைப் பணி போன்றவற்றில் பணி செய்து ஓய்வடையும் நிலையில் இருந்தனர். அவரது துணைவியார் ஏற்கெனவே மறைந்து விட்டார்.

தோட்டவேலை செய்வது, படிப்பது, நடந்தே என்னை வந்து பார்ப்பது அதன் பின் செல்லும்போது எவருடைய இரு சக்கர வாகனத்திலாவது அவரைக் கொண்டு அவரது வீட்டில் விடச் செய்வது இப்படியாக காலத்தை பயன்படுத்தி வந்தார்.

அவரது புதல்வர்களுள் கூட ஒரிருவர் இவருக்கும் முன்னே விபத்திலும், உடல் நலக் குறைவென்றும் மறைந்து விட்டனர். தனது பிள்ளைச் செல்வம் இல்லா தம்பதி புதல்வரைப் பற்றி பேசும்போது கோழி இணைவது போல இணைந்தால் எப்படி பிள்ளை பிறக்கும்,கலவியை உரிய பலத்தோடு செய்ய வேண்டுமல்லவா என அப்பட்டமாகப் பேசுவார்.

அவர் சொல்வதற்கேற்ப அவருக்கு பல பெண் மகவுகளும், பல ஆண்மக்களும் இருந்தனர். அவர் வெறும் ஊசி நூலுடன் மட்டுமே வந்தாரை வாழ்வைக்கும் தமிழகத்தில் குடியேறிய கதையைச் சொல்வார்.

அதன் பின் கையால் தைத்து, தையல் இயந்தரத்தில் தைக்க ஆரம்பித்து, அதன் பின் அவரின் கீழ் சில தையல் கலைஞர்களை பணிக்கமர்த்தி, அதன் பின் சிறிய ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி அதன் வருவாயில் அவருடைய பிள்ளைகளை எல்லாம் நல்ல ஒரு பொருளாதார நிலையை எட்டும் வண்ணம் பணி பெறச் செய்து குடும்பமாக்கி விட்டார்.

அவர் மொழியும் மதமும் மாநிலமும் வேறு என்ற போதும் இந்த மண்ணிலேயே வேர் விட்டார் பூத்துக் குலுங்கினார், காய் கனிகளுடன் நிறைய பெரிய பரப்புகளுடன் விரிந்து பரந்த மரமானார். ஒரு மரம் பல விதைகள் பல மரங்கள் பல பறவைகள் பல குடும்பங்கள்....


அதல்லாமல் ஒரு சொந்த வீடும் கட்டி விட்டார். அதில் தான் சில தினங்களுக்கும்  முன் அவர் வாழ்வு நிறைவடைந்தது. அது ஒரு நிறைவான வாழ்வு. வருத்தப் பட ஏதுமில்லை என்பதே எனது எண்ணம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Friday, November 15, 2019

ஒத்த செருப்பு (7) ராதாகிருஷ்ணன் பார்த்திபன்: கவிஞர் தணிகை

ஒத்த செருப்பு (7) ராதாகிருஷ்ணன் பார்த்திபன்: கவிஞர் தணிகை

Image result for otha seruppu"


ஒத்த செருப்பு என்ற ஒரு படம் வந்ததும் போனதையும் கவனித்தீர்களா? ராதாகிருஷ்ணன் பார்த்திபனை சினிமா என்னும் செல்லுலாய்ட் உலகில் காலம் எல்லாம் நிறுத்தி தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாய் இருக்கும் என்பதை பதிவு செய்ய வேண்டும் என்றே இந்தப் பதிவை எனது வலைப்பூவில் ஏற்றி வைக்கிறேன்.

இந்தப் படத்தை ஒரு முறை சினிமா என்ற ஊடகம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது ஒரே முகத்தை வைத்து மட்டுமே சுமார் ஒன்னே முக்கால் மணி நேரத்தை எப்படி தொய்வில்லாமல் பார்க்க வைக்க முயற்சி எடுத்திருக்கிறார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

அவரே எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்து மிக அரிய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். கமல், ரஜினி போன்றோர் பாராட்டிய நிலையில்  கமலை வைத்து நடிக்க வைத்து எடுக்கலாம் என்ற முயற்சி கை கூடா நிலையில் அவரே நடித்து வெளியிட்டிருக்கிறார்.

இப்படி வேறு எந்த படமாவது ஒரே நடிகரை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இதில் இவர் மிகவும் லாவகமாக அநாயசமாக இவருக்கே உரிய சட்டையர் எனப்படும் முறையில் அரசை வெளுத்து வாங்கியிருக்கிறார்.

நீதி என்பதும் சட்டம் என்பதும் இந்தியாவில் பணம் படைத்தவர்களுக்கே என்றும், ஏழைகளை மட்டுமே அவை தண்டிக்கவும் தடைப்படுத்தவும் செய்யும் என்பதை நீக்கமற தெளிவுற விளக்கி இருக்கிறார்.

காவல்துறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் ஒரு கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாசிலாமணியின் வாக்குமூலம் மட்டுமே இந்த சினிமா. இதில் அரசியல், காவல்துறை, ஊழல், கட்சிகள்,மனித உறவுகள், அதை பாதிக்கும் நாகரீக கலாச்சாரம், பணத்தின் ஊடுருவல் எல்லாமே நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது பார்த்திபனின் சினிமா அறிவு ஏந்திய அட்சய பாத்திரமாகி இருக்கிறது இந்தப் படம்.

போதும் போதும் இந்த ஒரே படம் கூட போதும் இனி தமிழ் சினிமா என்பது ஒன்றிருக்கும் வரை இவரது பேரும் இடம் பெற மிக எளிமையான கதையை கொண்டு சொல்லி இருக்கிறார். ஒரு கொலை மற்றொரு கொலையை எப்படி லீட் செய்கிறது என்பதை எல்லாம் நன்றாக இரசிக்க முடிகிறது.

இந்தப் படம் இவரது சொந்த அனுபவத்திலிருந்தும் பிரதிபலிப்பாக இருக்கிறது அப்படி அனுபவித்து செய்திருக்கிறார் குரல் ஒலிகளும் பின்ணணி இசையும் படத்திற்கு பலம்.

பார்க்காதிருந்தால் அவசியம் பார்க்க வேண்டும் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இப்படியும் விரியும் என்பதை தெரிந்து கொள்ள அறிந்து சொல்ல...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை முடிவிலிருந்து மறுபடியும் மேல் கோர்ட் ஆகியவை கொண்டு சென்று பணம் படைத்தவர்களால் நடத்தி முடிவை மாற்ற முடியும் அல்லது தண்டனையிலிருந்து தப்பி நீதியை தள்ளி வைக்க முடியும் என்ற பார்வையும் கோணங்களும் உண்டு. ஆனால் இந்தப் படத்தில் ஒரு மனிதன் தவறு செய்தவர்களை தனி மனித நீதி மூலம் தண்டிக்கிறார். மேலும் சிறையிலிருந்து விடுபடவும் செய்கிறார். மாசிலாமணி ராதாகிருஷ்ணன் பார்த்திபன். முயற்சி உங்களின் முயற்சி வென்றிருக்கிறது.உங்களின் இந்த படைப்பு சினிமா உலகில் உங்களின் சாதனைதான் சந்தேகமே இல்லை.



Friday, November 8, 2019

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்: கவிஞர் தணிகை

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்: கவிஞர் தணிகை

Image result for feminism"

அன்றும் வழக்கம் போல் ஆறு மணி இருபத்தைந்து நிமிடத்தில் வந்த பேருந்தை சரியாகப் பிடித்தேன். முன் வரிசை இருக்கைகளில் ஒருவர் இருவர் என பல இருக்கைகளை மங்கையர் ஆக்ரமித்திருந்தனர். அவர்கள் இருந்த இருக்கைகள் எல்லாவற்றிலுமே ஒரு இருக்கை, இரண்டு இருக்கை இப்படியாக காலியாகவே இருந்தன.

பின்னால் சென்று அமர்ந்தவன், மேச்சேரி வந்ததும் பலர் இறங்கிய உடன் பின்னால் அமர்ந்தால் முதுகு வலி வருகிறதே என முன் உள்ள இருக்கையில் அமர முயன்றேன்

ஒரு இருக்கையில் இருந்த ஐ.டி.ஐ மாணவர் மேச்சேரியில் இறங்க அந்த இருக்கையிலும் ஒரெ பெண் நடுவே பையை வைத்தபடி  நகர்ந்து கொண்டு இடம் கொடும்மா என்றதற்கு பெண்கள் வரட்டுமே என்றார். பெண்கள் இருக்கைகள் பல காலியாக இருக்கிறது ஓருவர் அல்லது இருவர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் அங்கு சென்று அமருங்கள் நாங்கள் ஆண்கள் அமர்ந்துகொள்கிறோம் என்றேன். கடைசி வரை அந்த இருக்கைக்கான பெண்கள் வரவே இல்லை என்பது வேறு.

அவர் எழுந்த பாடுமில்லை அவரது  தெரிந்த பெண் அவருக்கு முன் வரச் சொல்லியும் இவர் சென்ற பாடில்லை. இவருக்காக அவர் ஜன்னல் இருக்கையை விட்ட பாடுமில்லை. முன் இருக்கைகள் காலியுடன் இருப்பதைக் காட்டி சென்று முன் அமருங்கள் எனச் சொல்லி விட...அவர் வாந்தி வரும் எனவே ஜன்னல் இருக்கையே வேண்டும் எனச் சொல்ல அப்படியே அமர்ந்திருக்க பையை நடுவில் வைத்து அமர்ந்து விட்டேன்

அதே போல ஏறிய உடன் அமர்ந்திருத்த இடத்தில் இணை இருக்கையில் இருந்தவர் பின்னால் இருந்த ஆண்மகனை கண்ணாடியை சாத்துங்கள் என்றார் நானும் அவரும் குளிர் காற்றுக்காக சொல்கிறாரோ என்று உன் பக்க கண்ணாடிதாம்மா திறந்திருக்கிறது. அவர் பக்கம் சாத்தி தானே இருக்கிறது என்றோம் விவரம் அறியாமல்.
Image result for feminism"
பிறகு சொன்னார் வாந்தி வரும் அதுதான் என்றார். அப்படியானால் நீ பின்னால் போகவேண்டியதுதானே என்றால் அவர் அந்த இடத்தை விட்டு அகல்வதாக இல்லை.

ஏதோ தேர்வு எழுதுகிற பெண்கள் கையில் பாடப் புத்தகங்கள் வேறு...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இளம்பிள்ளை பேருந்து நிலைய பொதுக் கழிப்பகங்களின் நிலை: கவிஞர் தணிகை

இளம்பிள்ளை பேருந்து நிலைய பொதுக் கழிப்பகங்களின் நிலை: கவிஞர் தணிகை

Image may contain: 8 people, people standing
தூய்மை பாரதத் திட்டத்தில் நாடே தூய்மை அடைந்து விட்டது என வெளி நாடுகளில் சென்று முழங்கி வருகிறார் நாட்டின் பிரதமர். நேற்று எனது சேவைப்பணியின் ஒரு பகுதியாக வேம்படிதாளத்தில் உள்ள அரசு மருத்துவ மனையில் வாரம் இரு முறை இயங்கி வந்த எமது வினாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக்  கல்லூரியின் பல் மருத்துவப் பிரிவு நவீன வசதிகளுடன் அரசு  ஆணையுடன் செப்டம்பர் முதல் தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரை இயங்கி வருகிறது என்ற அறிவிப்பு துண்டு அறிக்கையை எடுத்துக் கொண்டு இளம்பிள்ளை வரை சென்று விநியோகித்து வந்தேன் பொது உறவு அலுவலர் என்ற முறையில்.
Image may contain: one or more people and people sitting
ஏற்கெனவே கடந்த செவ்வாய்க்கிழமை அச்சடித்த 1000 துண்டு அறிக்கையில் பாதியை காக்கா பாளையம் திருவளிப்பட்டி சந்தை மற்றும் பள்ளி, ஊருக்குள் எனவும் வேம்படிதாளம் பகுதியிலும் கொஞ்சம் விநியோகித்திருந்தேன்.
Image may contain: 3 people, people standing
எனவே மறுபாதியுடன் சென்று நேற்று விநியோகித்தேன். அதல்ல இங்கு சொல்லப் புகுவது. இளம்பிள்ளை சென்று விநியோகம் செய்யும்போது அதிகாலை 4 மணிக்கே எனது நாட்கள் துவங்கி விடுவதாலும் காலையில் நிறைய குடிநீர் அருந்தும் பழக்கம் இருப்பதாலும் சுமார் 10 மணிக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.
Image may contain: one or more people and people sitting

எமது கல்லூரி வாகனத்தின் ஓட்டுனர் வினோத், சார், இங்கெல்லாம் ஒன்றுமில்லை பேருந்து நிலையம் தான் செல்ல வேண்டும் என்றார். அப்படியே துண்டறிக்கையை கடைவீதியில் கொடுத்துக் கொண்டு, அதன் அருமை பெருமையை  தெரியாதவர்க்கு எடுத்து சொல்லியபடி பேருந்து நிலையத்தை அடைந்தேன் . சிறு நீர் கழிக்க சென்றேன்.

அதிர்ச்சி பேரதிர்ச்சி காத்திருந்தது. இளம்பிள்ளை மிகவும் பெரிய ஊர், அதில் வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கையும் ஏன் வருமான வரிச் சோதனையைக் கூட மத்திய அரசு நடத்தும் அளவில் நிறுவனங்கள் பல உள்ள இடம். நிறுவனங்கள் இடம் பெற்று இருக்கும்  பெரும் முதலாளிகளும் பெரு நிறுவனங்களும், பெரு வியாபாரங்களும் இருக்கும் இடம். பெரிய ஊர்.
Image may contain: one or more people, people walking and outdoor
ஏன் எனது நண்பர் அழகிரி போன்றோர் ஆண்டில் ஆறுமாதம் சீனாவில் இருப்பவர் கூட இங்கு வியாபார நிமித்தம், கொடுக்கல் வாங்கல் என இளம்பிள்ளைக்கு வியாபார நிமித்தம், பேமென்ட் விஷயமாக வந்தேன் எனச் சொல்லி வந்து இடையே எனைச் சந்தித்தது சென்றதுண்டு.  அவர் சொன்னதைக் கேட்டதுண்டு.
Image may contain: 2 people, people smiling, people sitting
 இந்தியாவை விட பெரு நாடான சீனாவில் சாலையோரங்களில் நெடுஞ்சாலை எங்குமே கழிப்பிடங்களூம் ஓய்வறைகளும் மிகவும் தூய்மையாக இலவசமாகக் கிடைக்கின்றன.ஒருவர் சென்றவுடன் பின்னாலேயே அதை சுத்தம் செய்பவரும் வந்து சுத்தம் செய்து அவ்வளவு பளிங்கு போல பராமரிப்பு செய்து பயன்படுத்த மனமகிழ்வை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாக பேசியது நினைவுக்கு வர...இப்போது மறுபடியும் இளம்பிள்ளைக்கு வருவோம்
Image may contain: 1 person, standing and flowerImage may contain: 1 person, standing
அங்கிருந்து மருத்துவர்கள் கூட நிறைய எங்கள் கல்லூரியில் படித்து வருகிறார்கள் பணியிலும் இருக்கிறார்கள்.

1. அப்படிப்பட்ட இடத்தின் பேருந்து நிலையம் சொல்லிக் கொள்ளுமளவு இல்லை. அதைக் கூட விட்டு விடலாம்.

2. சிறுநீர் கழிக்கும் இடமும், கழிவறையும் புகவும் நாதியின்றி
உண்மையில் அங்கு சென்று சிறு நீர் கழிக்க முயன்று கடவுளை நினைத்தபடியே கழிக்க வேண்டியதாயிற்று... உண்மையான நரகு என்பதும் நகர நரகல் என்பதும் நரகமும் அங்குள்ளது. புழுக்கள் ஓடி நெளிகின்றன. சுத்தம் செய்ய நீர் இணைப்போ வசதியோ ஏதும் இல்லை.  ஒரு பக்கம் கழிப்புத் தொட்டியில் காய்ந்து கிடக்க  திரும்பி பார்க்கவே முடியவில்லை. அந்த ஏரியா எங்கும் கால் வைக்கவும் இடமின்றி மனதும் நமது எண்ணமும், உடலும் உயிரும் கூசும்படியாக எண்ணவும் முடியாமல் மயிர்க்கூச்செறியும்படியான ஒரு சொல்லில் சொல்ல முடியா அசிங்க சுரங்கமாய் வார்த்தையில் சொல்ல முடியாமல் இருப்பதுவே அதன் காட்சியாய் விரிகிறது.( அதை புகைப்படம் எடுக்க நான் முயலவும் இல்லை)
Image may contain: 1 person
நமது இளம்பிள்ளை பெருத்த தன வியாபாரிகளுக்கும், பேருராட்சிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் பேர் போன ஊராய் இப்படிப்பட்ட கேடு கெட்ட‌ பெருமை பறை சாற்றி வருகிறது.

எவரிடமாவது கொடுத்தால் அவர்களாவது ஒரு நல்ல வழி செய்து அவர்கள் பேரைக் கூட போட்டுக் கொள்ளச் சொல்லலாமே அரசால் முடியவில்லை என்றால்...
Image may contain: 1 person, standing and indoor
இந்த இலட்சணத்தில் தூய்மை பாரதத் திட்டம் நாட்டை மிகவும் சுத்தம்  செய்துவிட்டதாக இந்தியாவின் பிரதமரின் பெருமை பேசும் பேச்சு வேறு...வேறு எதில் சிரிக்கத் தோன்றுகிறது என்றனர் நண்பர்கள்...ஆனால் என்னால் சிரிக்க முடியவில்லை. வேதனையும் ரௌத்ரமும் பொங்கு வருகிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, November 6, 2019

5 நிமிடத்தில் பேருந்துக்கு பழுதான டயர் ட்யூப் மாற்றப்பட்டது: கவிஞர் தணிகை.

5 நிமிடத்தில் பேருந்துக்கு பழுதான டயர் ட்யூப் மாற்றப்பட்டது:
கவிஞர் தணிகை.

Image result for recent tyre change to heavy vehicle"

அன்று காலை முதலே எனக்கு போக்குவரத்தில் பிரச்சனை. வழக்கமாக வரும் எங்கள் கல்லூரி பேருந்து வரவில்லை. சகோதர நிறுவனத்தின் பேருந்தில் அலுவலர்கள்  அனுமதி இல்லாமல் நாங்கள் ஏற்றிச் செல்ல மாட்டோம் என ஓட்டுனர் பிடிவாதம் பிடித்து என்னதான் சமாதானம் கூறினாலும் ஏற்க மறுத்து ஏறி உள் சென்ற என்னையும் இன்னும் இரு மாணவர்களையும் இறக்கி விட்டு விட்டார்கள்.

அப்போது எங்கள் பிரச்சனையைக் கேட்ட ஏ.ஓ எங்களை காரில் கல்லூரிக்கு அழைத்துச் சென்று உரிய நேரத்தில் சேர்ப்பித்தார்.  ஆக காலைப் பிரச்சனை ஒரு வழியாக முடிந்தது.

மாலை அல்ல மதியம் சுமார் 4 மணி: பேருந்து நிலையத்தில் நண்பர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் இறக்கி விட எதிரில் வந்து கொண்டிருந்த மஞ்சள் நிறப் பேருந்தில் இடம் இருக்கவே ஏறிக் கொண்டேன். அந்த நேரத்தில் புறப்படும் பேருந்துகள் எல்லாம் பேருந்து நிலையத்திலேயே இருக்கை இல்லாமல் நிறைந்துவிடுவதால் நான் கேட்டுக் கொண்டு ஏறுவது வழக்கம். அந்த பேருந்துகளும் அதன் நடத்துனர்களும் கூட பழக்கப்பட்ட முகங்களாகிவிட்டன.

எனவே எதிரில் வந்த பேருந்தில் இடம் இருந்ததால ஏறிவிட்டேன். அந்த பேருந்து தனியார் பேருந்து என்பதாலும் அதன் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காது. இருந்த போதிலும். என்ன செய்வது வேறு வழி...வீடு சேர்ந்ததும் பையை தூக்கி கடாசிவிட்டு குளித்து விட்டு நடைப்பயிற்சிக்கு செல்ல வேண்டுவதுதான் எனது மாலையின் குறிக்கோள்.

பேருந்து ஓமலூரி பாலத்தில் ஏறும்போது பெரும் சத்தம். காற்று வெளிக்கிளம்ப பேருந்தை அதன் அருகே இருந்த பஞ்சர் கடையில் அருகே ஓரம் கட்டினர்.

உள்ளே திட்டியபடி காசை திரும்ப வாங்கிக் கொண்டு வேறு பேருந்து வந்தால் ஏறிக் கொள்ளலாம் என யோசனை செய்தவாறு கீழ் இறங்கி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

ஒரு சிறு விடலைப் பயலைப் போல் இருந்த ஒரு சிறுவன் ஜாக்கியை எடுத்துக் கொண்டு வந்தான் . பின்னால் உள் சக்கரத்தின் டயரில் தான் வேலை. பேருந்துக்கு ஜாக்கி போட்டான். அதற்குள் மேலிருந்து ஒரு மாற்று டயர் கீழ் இறக்கப் பட்டது. ஏற்கெனவே அந்த பேருந்தே மாற்றுப் பேருந்துதான் அந்த மாற்றுப் பேருந்துக்கு வேறு டயர் மாற்றும் நிலை.

ஜாக்கி போட்ட பின் நடத்துனர் பயணிகளை கீழ் இறங்குவோர் கீழ் இருக்கவும் உள்ளே அமர்ந்திருப்பார் அங்கேயே இருக்கவும் அறிவித்தார். பையன் பீரங்கியை எடுத்து வந்து சுட்டான் ஒரு சத்தம். எல்லா போல்ட் நட்டுகளும் கழன்று இருந்தன. எல்லாம் காற்றின் மின் மயம். உடனே அந்த டயர் சக்கரத்தை கழட்டி வேறு எடுத்து மாட்டினார் ஒரே நெம்புதான் உள் ஏறிக் கொள்ள மறுபடியும் ஒரு பீரங்கியின் சுடல்...பட பட வென எல்லா நெட் போல்ட்களும் டைட் செய்யப்பட்டன.

அட வண்டி 5லிருந்து 10 நிமிடத்தில் மறுபடியும் தயாராகிவிட்டது. பேராச்சிரியம்.

முன் சென்ற 3 வண்டிகளையும் மீறி வேகம் எடுத்து உரிய நேரத்தில் கொண்டு சென்றுச் சேர்த்த வேகம் மயிர்க்கூச்செரியும் வேகம் . பேருந்து பறப்பதாக பெண்குரல்...மயிரிழை மோதினாலும் இருசக்கர வாகனங்கள் பறந்து விடும்...தனியார் மோகம்...விளைவு அபாயம்....

Image result for recent tyre change to heavy vehicle bus"


ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எத்தனை உயிர்கள் சேதமாகுமோ...ஆனால் பஞ்சர் போட்ட கால அளவு மிகவும் மிச்சம். அந்தக் காலத்தில் கடப்பாரை போட்டு ஏறி நின்று பேருந்தை தயாராக்க போல்ட் நெட் போட வீலை மாற்ற அரை நாளே செய்து விடுவதை அறிவியல் 5 நிமிடங்களில் முடித்துவிட்டது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, November 3, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள் 9. ஆவின் செல்வராஜ் மின்னியல்: கவிஞர் தணிகை.



என் நட்பின் நனி சிறந்தவர்கள் 9. ஆவின் செல்வராஜ் மின்னியல்: கவிஞர் தணிகை.

Image result for aavin selvaraj"

உயரம் குறைவான அடிக்கடி வாய் விட்டு சிரிக்கும் சுபாவம் உடைய தொப்பையுடன் இருந்த இளைஞர்.இவர் மூலம் தான் நான் செம்பண்ணன் போன்றோரை  அறிமுகம் செய்து கொண்டது...இவர் அப்போதே சிகரெட் புகைக்கும் வழக்கத்தில் இருந்தார். இப்போதும் அந்தப் பழக்கம் நீடிக்கிறதா என்பது தெரியவில்லை. கையில் ஒரு ஸ்டீல் செயின் போட்ட வாட்ச் வலது கையில் கட்டி இருப்பார். சிவாஜி கணேசன் சில படங்களில் இருப்பது போல.

இவர் இளங்கோ, செம்பண்ணன், சுந்தரம், மதியழகன், இவர்களுடன் நான் தாரையில் சில இரண்டாம் ஆட்டக் காட்சிகள் பார்த்த நினைவு இப்போதும் இருக்கிறது.

இவர் ஒரு பேப்பர்  அரியர் என நினைக்கிறேன் பின்னர் முடித்து சேலம் ஆவின் நிறுவனத்தில் உதவிப் பொறியாளர் என்ற பணியில் அமர்ந்து விட்டதையும் அவர் மூலமே அறிந்தேன்.
இவரது தந்தை செங்குந்தர் மகாஜன மேல் நிலைப்பள்ளியில் எழுத்தர் பணி. எப்போதும் வெள்ளை உடையில் இருப்பார் கண்ணாடி போட்ட உருவம் இப்போதும் எனது கண்ணில் இருந்து மறையவில்லை
Image result for tharamangalam kailasanathar temple images"
அந்தப் பள்ளிக்கு எனது மாமா (அக்காள் கணவர் ஓய்வு பெற்ற ஒழுக்கமுடைய ராணுவ வீரர்) அண்ணா உணவகம் என தாரையில் நடத்தி வந்தபோது மிலிட்டிரிக்காரர் ஓட்டல் என்றும் சொல்வார்கள்...இவரது வளர்ப்புத் தந்தை பெயர் அண்ணாமலை என்பதாலும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் தாரைக்கும் பெருந்தொடர்பு இருந்ததாலும் தனது உணவகத்துக்கு அண்ணா ஓட்டல் என்று பேர் வைத்து நடத்தி வந்தார். அந்த வளர்ப்புத் தந்தையான அண்ணாமலை என்ற பெரியவர் செங்குந்தர் பள்ளியின் தாளாளராகவும் இருந்தார். அந்தப் பள்ளியின் தேசிய மாணவர் படை வாரம் ஒரு முறை நடக்கும் வகுப்புகளுக்கு சிற்றுண்டி எங்களது மாமா கடையில் இருந்துதான் போகும். அதன் பில்லை செட்டில் செய்ய வருவார் இவனது தந்தையாகவே இருக்கும்.கொண்டு வந்து தந்து விட்டுப் போவார்கள். மாமா சென்றெல்லாம் கேட்கவே மாட்டார்.

செம்பண்ணன் மட்டுமல்ல என் வாழ்வில் திசை திருப்பக் காரணமாக இருந்த நபரையும் அறிமுகப்படுத்தியவன் இவன் தான். என்னுள் இருந்து என்னை எழுப்ப, என்னைக் கிளர்ந்தெழச் செய்ய‌, என்னை மலரச் செய்யக் காரணமாக இருந்தவன். எனவே இவனை மறக்கவும் முடியாது. இவனைப் பற்றி எழுத மறுக்கவும் முடியாது. பல்வேறுபட்ட காரணங்களால் நான் வெளிப்படையாக ஏதாவது எழுதி அது பல்வேறுபட்ட முரண்களை தோற்றுவித்து விடுமோ என்றே பல முறை எழுதலாமா வேண்டாமா என்று  சிந்தித்து சிந்தித்து இவனைப்பற்றி எழுதாமல் மிகவும் தாமதமாக்கி விட்டேன்.

 இவனது சகோதரர் அவரும் ஏதோ கல்லூரியில் படித்து முடித்தவர்தாம் தாரை எண் கோண வடிவ தாமரை இதழ் வடிவ குளத்தின் அருகே அண்ணா சிலை அருகே ஒரு பெட்டிக் கடை வைத்திருந்தார்கள். அதில் மாடுகளுக்கான கயிறு எல்லாம் முன்னால் தொங்க வைத்திருப்பார்கள்...
Image result for tharamangalam kailasanathar temple images"
இவனை நான் அங்கு பார்க்கப் போகும்போது சில சமயம் கடையில் இருந்து அவனது மூத்த சகோதரர் வந்து கடையில் அமர்ந்து மாற்றிக் கொண்டு விடுவிப்பார். அதன் பின் நாங்கள் பெரும்பாலும் ஒரு நடைப்பயிற்சி அல்லது கைலாய நாதர் ஆலயம் சென்று அங்குள்ள நீண்ட பிரகாரத்தில் நண்பர்கள் வட்டம் அனைவரும் வந்து அமர்ந்து பேசிக் களித்துக் கொண்டிருப்போம்.

இப்போது இவர் எனது வாட்ஸ் ஆப் வட்டத்துள் இருக்கிறார்.

காற்று இருப்பது தெரிவதில்லை. ஆனால் இருக்கிறது அது இல்லையெனில் நாம் இல்லை. அது போல சில பேர் இருக்கிறார்கள். வெளித் தெரிய மாட்டார்கள். ஆனால் அடிப்படையாய் வேரைப்போல சில உறவுகளுக்கு அவர்கள் தாம் காரணமாக இருந்திருப்பார்கள். அப்படி வேர் போன்ற நட்பு இந்த கட்டையன் செல்வராஜ் நட்பும் எனக்கு.

அவனையும் எனது வாழ்வையும் மறந்து விடவே முடியாது. எனது வாழ்வை அசை போட்டுப் பார்த்தால் அதில் இவனால் மாற்றி அமைக்கப்பட்ட இரு வழியும் என்னுள் எனக்குத் தெரியும் .ஆனால் எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது .சொல்லில் விட முடியாது

ஏன் எனில் அப்படி சொல்லி விட்டால் : வார்த்தைகள்தான் ஆதாரம் உறவுக்கும் பிரிவுக்கும் என்ற எனது அடுத்த  பதிவு பற்றி இப்போதே சொன்னதாகிவிடும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு:  பால் போல  தூய்மையுடன் வெள்ளை உள்ளத்தோடு கலகலப்பாக சிரித்து அப்பட்டமாகப் பேசித்திரிந்த இவன் ஆவின் பால் நிறுவனத்தில் பணி பெற்று இருந்தது கூட இவனுக்கு மிகப் பொருத்தமானதே. இப்போது பணி ஒய்வை நெருங்கி இருப்பான் என்றே எண்ணுகிறேன்.