Friday, September 30, 2016

கும்கி பிரபு சாலமனின் தொடரி: கவிஞர் தணிகை

கும்கி பிரபு சாலமனின் தொடரி: கவிஞர் தணிகை


 சொல்லியே ஆக வேண்டும். தொடரி என்ற பெயர் வித்தியாசமாக வைக்கப்பட்டு இருக்கிறது. தூய தமிழில் வாழ்க.
Image result for thodari

தினமும் சேலம் சந்திப்பில் பயணிகள் ரயில் நின்றவுடன் ரயில் பெட்டியிலிருந்து எஞ்சினை பிரித்தெடுப்பதைப் பார்த்து வருவதால் இந்தக் கதை என்னுள் அதன் தோல்வியை அதாவது கடைசியில் படம் கிளைமாக்ஸில் தனுஷ் செய்யும் இந்த எஞ்சின் பெட்டியிலிருந்து பிரிக்கும் வேலையை முதலில் முடித்திருந்தால் படத்துக்கு ஸ்கோப் கதை படம் ஏதும் இல்லாமலே போயிருக்கும் எனவே பொறுத்துக் கொண்டு பார்த்தேன்.

அடுத்த படம் தோனி வந்து விட்ட பிறகு 22 செப்டம்பரில் வெளி வந்த தொடரி பற்றி நான் எழுத வேண்டியுள்ளது. ஏன் எனில் முதல் நாள் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு தூக்கம் தள்ள நேற்று மீதியுள்ள ஒரு மணி 47 நிமிடப் படத்தையும் பார்த்து விட்டதால்...

இப்போதெல்லாம் யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள் சரியாக சொல்லி விடுகிறார்கள். இந்தப் படம் முதல் அரை பாகம் பார்க்க முடியவில்லை என்பது உண்மைதான்.

தம்பி இராமைய்யா சோபிக்கத் தவறிவிட்டார் இந்த படத்தில்.கீர்த்தி என்ற பெண் வாயைக் கிழித்து அழுவது பார்க்க முடியவில்லை.அதிகமாக நடித்திருப்பது காரணமாக இருக்கலாம்.

தனுஷ் பற்றி சொல்ல ஒன்றுமில்லை; படம் படு செயற்கையாக இருக்கிறது. இராதா ரவி பரவாயில்லை . கொடுத்த வேடத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.

சின்னி ஜெயந்த் ஏதோ பெரிய இடைவெளிக்கும் பிறகு பெரிய அளவில் பிரேக் கொடுக்க கதை எதிர்பார்ப்பு ஏற்படுத்தி கடைசியில் புஸ் ஆகிவிடுகிறது.

வெங்கடேஷ் இயக்குனர் வழக்கப்படி குதிக்கிறார். கணேஷ் வெங்கட்ராமனுக்கும் சொல்லிக் கொள்ளுமளவு பெரிய அளவில் ஒன்றும் ஸ்கோப் இல்லை.

நன்றாக இருப்பது அரசு, அமைச்சரை தீவிரவாதிகள் கடத்தி விட்டார்கள் என நினைத்து அந்த லூசுப் பெண்ணை பெரிய பெண் தீவிர வாதியாக கருதுவது, மீடியா முடிவது, மீடியாவில் பட்டமன்ற
இராஜா, மற்றும் தமிழறிஞரை கலாய்க்கும் செல்பேசி உரையாடல் நல்ல நகைச்சுவை...

மேலும் நல்லவையாக சொல்ல வேண்டுமென்றால், படம் அரை இறுதிக்கும் பிறகு இடைவேளைக்கும் பிறகு நல்ல வேகம். ஆங்கில படத்தில் தான் இதுவரை இது போன்ற கதை தேர்வு இருக்கும். இது இப்போது பிரபு சாலமன் படம் மூலம் தமிழுக்கும் வந்து விட்டது.

பெரிய சாதனைப் படமாக இது விளங்காது. மேலும் இந்த படத்தின் நீளம் சுமார் சற்றேறக் குறைய 3 மணி அதாவது 13 நிமிடம் குறைவாக 167 நிமிடம். பழைய படத்தைப் போல மறுபடியும் 3 மணிக்கும் மேல் படம் தந்து அனைவரையும் வெறுப்பேற்றி விடலாம் என்ற எண்ணம் தலைதூக்க விட்டிருக்கும் படம்.

ஆங்கில படத்தைப் போல செய்ய நினைத்தவர்கள், அதன் நேர அனுசரிப்பையும் கவனத்தில் கொண்டிருக்கலாம், பாலம் உடைவதும் கடைசியில் ரயில் நின்று காதலன் காதலி சேர்வதையும் நல்ல முறையில் படம் எடுத்திருப்பதற்கு பாராட்டுகள்.

மீடியா வரும் காட்சிகள் பெரும்பாலும் நல்ல காட்சிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

மற்றபடி பேன்ட்ரி ரயில் சமையல் பெரிய அளவில் இரசிக்கும்படியாக இல்லை. தனுஷ் ஒரு பூச்சியாக அவ்வளவாக ஒட்ட வில்லை. அதற்கு வேறு பொருத்தமாக எவரையாவது தேர்வு செய்திருக்கலாம்.

இராதா ரவி, காவலுக்கு வரும் காவல் துறை எப்படியோ பார்த்து முடித்து விட்டாயிற்று. அடுத்து தோனியை பார்க்க முயற்சிக்கிறேன் உங்களுக்காக. முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனால் முழு வெற்றி பெற முடியவில்லை கும்கி பிரபு சாலமன்.

இசை பெரிய அளவில் பாதிப்பேற்படுத்தவில்லை இமான். மற்றபடி வசனம் நன்றாக இருக்கிறது டெலிவரி சரியாக இல்லாததால் அதுவும் எடுபடவில்லை.சண்டைக்காட்சிகள் கூட சொல்லும்படியில்லை. அவசரகதியில் ரயில்வேகத்தில் எடுத்திருப்பார் போலும். துரிதகதியில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது ஒரு ரயிலை வைத்து கஷ்டப்பட்டு முயற்சி செய்திருக்கின்றனர். ஒரு முறை பார்க்கலாம்.

Image result for thodari


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, September 28, 2016

ஆண்டவன் கட்டளை: கவிஞர் தணிகை.

ஆண்டவன் கட்டளை: கவிஞர் தணிகை.


Image result for aandavan kattalai 2016

1. மதுக் குடி விருந்து எதுவும் இல்லாது படம் எடுத்ததற்காகவும்
2. சண்டைக்காட்சிகள் வன்முறை இல்லாததற்காகவும்
3. கதை ஓடிக்கோண்டே நிறைய நிகழ்வுகளால் பின்னப்பட்டிருப்பதற்காகவும்
4. கோர்ட் சீன்கள்,போலி சான்றிதழ் இயக்கங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் போன்றவை தத்ரூபமாக சினிமாத்தனம் இல்லாமல் இருந்ததற்காகவும்

5. வசனம் நன்றாக எழுதப்பட்டு சடையர் என்பார்களே அது போன்ற சாடல்களுடன் நகைச்சுவை கலந்த தாக்குதல்களுடன் எழுதப்பட்டிருப்பதற்காவும் இந்த படத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

நல்ல டீம் ஒர்க். காக்கா முட்டைக்கு பிறகு  இது ஒரு நல்ல முயற்சி மணிகண்டனுக்கு அவருடன் அன்புச் செழியன், அருள் செழியன் அனுச்சரன் , கே ஆகியோர் தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளனர்.

நிறைய நிகழ்வுகள். எனவே கதையாக அந்தக் காலத்தில் சொல்வது போல சொல்லவே முடியாது. படம் பார்த்தால் மட்டுமே எல்லாம் விளக்கும் விளங்கும்.

நல்ல கதை நல்ல படமாக மாறும் என்பது இந்த இளைஞர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பாடல்கள் அவ்வளவு பிரபலமாகவில்லை. அது தேவையுமில்லை இந்த படத்துக்கு. மற்றபடி பின்னணி இசையில் ஒன்றும் குறைவில்லை. யார் அந்த கே(ஆங்கில எழுத்து) இசை அமைப்பாளர் என்பது தெரியவில்லை.

செப்டம்பர் 23 இங்கு நம் நாட்டில் வெளியிட்டிருக்க செப்டம்பர் 29ல் உலகெங்கும் வெளிநாடுகளில் வெளியிடுவதாக செய்திகள்

பன்னி மூஞ்சா வாடா வா என்பார்களே அந்த நடிகர் தோற்றத்தில் சினிமா இல்லை கதையில் பாத்திரத்தில் என அந்த குதிரைக்கார நடிகரைப் போல பிரகாசித்துள்ளார். அந்த வினோதினி வைத்தியநாதன் ஜூனியர் வக்கீல் என்ன ஒரு டைமிங்க் காமெடி, அவர் மட்டுமல்ல‌ சில காட்சிகள் மட்டுமே வரும் கார்மேகக் குழலி அதாங்க ரீத்தா சிங் கதாநாயகியின் தாய் பாத்திரம் கூட கன கச்சிதமாக பொருந்தியுள்ளது. கோர்ட் சீன் பின்னி எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் கூட இது சினிமா சூட்டிங்கிற்காக நடந்தது என்பது தெரியாமல்.

ரீத்தா சிங் கார்மேகக் குழலியின் பத்திரிகை நிருபர் பாத்திரமும், அவர் விஜய் சேதுபதியை வார்த்தைகளால் சொல்லாமல் நேசிப்பதை உணர்வுக் குவியலாய் முகத்தை நடிக்க வைத்திருப்பதை நன்கு உணர முடிகிற நுட்பமான நடிப்பு.

விஜய் சேதுபதி காலம் போலும். இப்போதுதான் தர்மதுரையில் ஒரு ஹிட் கொடுத்தார். இப்போது இதில். ஆண்டவன் கட்டளை என்ற உடன் ஏதோ ஆளும் கட்சிக்காரர்கள் கட்டளை விளையாடப் போகிறது என்று எதிர்பார்த்தால் இது உண்மை, பொய் கலந்த சட்ட நெளிவு சுளிவுகளை, சட்டத்தின் ஓட்டைகளை, நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதற்காக இளைஞர்கள் செய்யும் மாய்மாலத்தை, வெளிநாட்டு தூதரகங்களை, வெளி நாட்டுக்கு செல்லும் ஆவலுடன் இருக்கும் இளைஞர்களுக்கு ஏற்படும் இன்னல்களை சுருக்கமாக சொல்லி நிறைய கதை முடிச்சுகளை நிறைய கருக்களை  சொல்லி விட்டு அடுத்து அடுத்து வீடு மாறுவது போல சென்று கொண்டே இருக்கிறது. போலியான கை எழுத்து போட்டு பாஸ்போட் பிராடாக பெறுவது முதல்....பணம் செலவு பண்ணி வெளி நாட்டுக்கு சென்று ஏமாறுவது வரை...

இலங்கை அகதி பாத்திரம் கடைசியாக தனது மனைவி மக்களை சேதுபதியிடம் பார்த்தால் சொல்லுங்கள் என பரிதாபப் பட வைத்து உச்சிக்கு எடுத்துச் செல்கிறது ஊமையாக நடிப்பது செயற்கையாக போலித்தனமாக பிரதிபலிக்க வைத்து உண்மையான குட்டை உடைக்கிறது கால் முடமில்லாமலே முடமாக நடித்து பிச்சை எடுப்பார் போல.

விஜய் சேதுபதி இளைஞராக நடிக்கிறார்...அது இன்னும் கொஞ்ச காலம்தான் தாங்கும் என நினைக்கிறேன். வயதுக்குத் தகுந்த ரோலில் நடித்தால் இன்னும் சூப்பர் ஹிட் கொடுக்கலாம்.

Image result for aandavan kattalai 2016


ஆனால் இவரைப் பற்றி சிறப்பாக சொல்ல பெரிதாக ஏதுமில்லை என்றாலும் இவரின் படங்கள் இயல்பாக இருப்பதால் வெற்றி பெறுகின்றன என்பது இவருக்கு பிளஸ் பாயின்ட்.

வேலையில்லா இளைஞர் போலிக் கை எழுத்துகளுடன், போலியாக மணமாகியதாக ஒரு பெண் பேரை விசா வாங்க  இலண்டன் செல்ல மேற்கொள்ளும் முயற்சியில் தமது நண்பர் எப்படி வெற்றி பெற்று துன்பப் படுகிறார், இவர் தோல்வியடைந்து எப்படி தப்பிக்கிறார் என்பது கதை தப்பிப்பதுடன் தமது வாழ்க்கைத் துணையை எப்படி திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பதற்கு இந்த ஆண்டவன் கட்டளை பிரிந்து போகிறோம் எனச் சொல்லி சொல்லி சேர்ந்து வாழ இயற்கை போடும் அழகான முடிச்சுகளை போட்டு காந்தியையும் கார்மேகக் குழலியையும் இணைக்கும் கதை.

ரித்திகா சிங்க் நல்ல மெறுகேற்றம் இறுதிச் சுற்றுக்கும் பிறகு. நாசருக்கு மறுபடியும் ஒரு அல்வா சாப்பிடுவது போன்ற நல்ல பாத்திரம். வில்லனாக பெரும்பாலும் நடித்த இந்த நடிகர் இப்போது நல்ல குணச் சித்திர நடிகராகவே மிக நீண்ட காலமாக தமிழ் சினிமா இவரை பயன்படுத்த ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல ஆரோக்யமான நிலை. இராமைய்யா போல. சிங்கம் புலிக்கு சொல்லும்படியான பெரிய ரோல் இல்லை. உடம்பும் ஊதிக் கொண்டிருப்பது தெரிகிறது.
Image result for aandavan kattalai 2016



3 மாசமா ஒரே வேலையில் இருக்கிறாள், என கார்மேகக் குழலியை இவங்க அம்மா பாராட்டுவது போல பாராட்டுகிறார் பாருங்கள் வசனத்தை எடிட்டிங்கை காட்சி அமைப்புகளை நன்றாக செதுக்கியுள்ளார்கள். நன்றாக இரசிக்க முடிகிறது. இரவு 11.11 மணிக்கு பார்த்து முடித்தேன்

Image result for aandavan kattalai 2016

மறுபடியும் பூக்கும் தளம் இந்த படத்திற்கு 55+  மதிப்பெண் தருகிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, September 26, 2016

வாழ்க்கை இலக்கியத்தில்: கவிஞர் தணிகை.

வாழ்க்கை இலக்கியத்தில்: கவிஞர் தணிகை.

Image result for famous world leaders collage


உணவகத்தில் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வயிறு கழுவிய ‍ஹோசிமின் வியட்நாமின் விதியை மாற்றினார் இருள் பாறைகளில் எதிரிகளுக்கு பயந்து படுத்துறங்கி, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா..ஆப்ரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், நேரு, லெனின் சாக்ரடீஸ் இப்படி வாழ்ந்தாரைப் பற்றி நேற்றைய இலக்கிய பயணத்தில் குறிப்பிட மறந்திருந்தேன் காரணம் காலம் எல்லாவற்றையும் சுருக்கச் சொல்லி விடுகிறது.

முள்ளும் மலரும் எழுதிய உமா சந்திரன் பேர் சமயத்தில் நினைவுக்கு எட்டவில்லை கொஞ்ச நேரம். அந்த புத்தகத்தை எவ்வளவு இலயித்துப் படித்திருப்பேன் ஆனால் இந்த தருணத்தில் அது எங்கே? மகேந்திரன்  சினிமா இயக்குனர் அதில் உள்ள காளி பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ரஜினியை வைத்து படம் எடுத்து வெற்றி ஈட்டி விட்டார். ஆனால் அந்தக் கதையும் 2 பாகங்கள் என நினைக்கிறேன். அது இந்த படத்தில் கொஞ்சம் தான் தொடப் பட்டிருந்தது. சினிமாவை விட மிக நீண்ட கதை அதில் காளி ஒரு வில்லன் .

பல நாடுகளையும் அதன் விதிகளையும் மாற்றி எழுதிய நாயகர்கள் பலர் பற்றியும் படித்து இருக்கிறேன் எனினும் இப்போது பசுமையாக நினைவில் இருக்கும் ‍‍ஹோசிமின் ஓர் ஏழை எளிய மனிதர் எப்படி ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றினார் என நினைத்தால் அது நினைவுக்கு எட்டாமலே இருக்கும்.
Image result for famous world leaders collage


பிடல் காஸ்ட்ரோவும் சேவும் மிக நல்ல நண்பர்கள். ஆனால் பிடலை பிடித்த நண்பர் சே அவர் அளித்த நிதி மந்திரி மற்றும் பணப் பரிவர்த்தக பொறுப்பையும் உதறி விட்டு இறக்கச் செல்கிறார் மறு போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு. பிடல் ஏராளமான முறை கியூபா கிளர்ச்சியில் மரணம் வரை சென்று உயிர் பிழைத்த அதிசயங்களும், அதன் பின் அரசாளும்போது அமெரிக்காவில் கொல்ல அனுப்பப் பட்ட சம்பவங்களில் இருந்து தப்பிய அதிசயங்களும் நம்ப முடியாதவையே....அவர் உயிருடன் இன்னும் இருப்பது அதற்கெலாம் சான்று.

அவரை இலங்கை  தமிழ்ப் போராளிகளை ஆதரிக்காதவர் என எனது நண்பர் ஒருவர் குற்றம் சொல்வார், தெரஸாவை தீவிரவாதிகள் கொடுத்த பணத்தைக் கூட வாங்கிக் கொண்டு செலவு செய்தார் என குற்றம் சொல்வதைப் போல...

தெரஸாவின் வாழ்க்கை வரலாற்றையும், கலாமின் வாழ்க்கையையும் நாம் எப்படி மறக்க முடியும். காந்தி பற்றி எழுதினால் இந்த பதிவு போதாது. பெர்னாட்சா எழுதிய பக்கங்கள் 15000 என்றும்  அவர் ஒரு அறிஞர் என்றும் சொல்வார், ஆனால் காந்தி எழுதிய பக்கங்களோ 60,000 இவரை வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்ந்த காலத்தில் உலகை எல்லாம் ஆள முழுத் தகுதி உடையவர்  யார் என்ற பட்டியல் பார்க்க உலகு விரும்பிய போது அதில் முதல் பேராய் மகாத்மாவையே உலக மாந்தர் தேர்ந்தெடுத்ததான சான்றுகள் உண்டு. 24 மணி நேரம் போதாத மனிதர் ஒரு நாளுக்கு. அத்தனை துறைகள். ஆனால் ஒரு எளிய மனிதர்க்கும் தவறாமல் தம் கைப்பட எழுத முனைந்தவர், பத்திரிகை நடத்தியவர், ஆஸ்ரமம் நடத்தியவர், இராட்டை நூல் நூற்பது, சமையல் செய்வது, நாட்டுக்கு போராட்ட முறையிலான உத்தி தருவது , பஜனைக்கும் பிரார்த்தனைக்கும் நேரம் ஒதுக்குவது, சிகிச்சை முறைகளுக்கு நேரம்
ஒதுக்குவது இப்படி சொல்லிக் கொண்டே போகும் வாழ்க்கை வரலாறுக்கு சொந்தமானவர் இவர் என்றால்

Image result for famous world leaders collage


நேருவின் வாழ்க்கை வரலாறு சாதரணமானதல்ல. மார்ட்டின் லூதர் கிங் உரையை இணையத்தில் புகழ் வாய்ந்த உரைகளை கேட்டுப் பாருங்கள் உங்களது உள் நாடி எழுந்து நிற்கும்.

லெனின், சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அவர் தம் துணைகள் ஜென்னி, குரூப்ஸ்கயா காதல் வெற்றிகள் பொருளாதாரத் தோல்விகள்...சார்லி சாப்ளின், மைக்கேல் ஜாக்ஸன், பட்டாம்பூச்சி  பாப்பிலோன் என்ற ஒரு ஜெயில் கைதியின் வரலாறு, முகமது அலியின் ஓடிக் கொண்டே இருப்பேன் வாழ்க்கை வரலாறு, அறிஞர் அண்ணாவின் ராஜ்யசபா உரை மற்றும் அவரின் அரிய நூல்கள், பேச்சுத் தொகுப்புகள்,

Image result for famous world leaders collage

தமிழ் இலக்கிய வழியில் வந்த நூல்களும் அதை சார்ந்த கதைகளும்.. இப்படி இன்னும் என்னதான் எப்படிதான் சொல்வது
அவ்வப்போது நினவை எட்டிப் பிடிக்கும்போது எனது நினைவுக் கீற்றலைகளுடன் மீண்டும் மீண்டும் உங்களை இந்த பதிவு சந்திக்கும் என நம்புகிறேன்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, September 25, 2016

இளமைக்கால இலக்கியங்கள்: கவிஞர் தணிகை

இளமைக்கால இலக்கியங்கள்: கவிஞர் தணிகை

Image result for tamil writers

எனைப் பாதிப்புக்குட்படுத்திய இப்போது என் நினைவுக்கு எட்டியவரை எனது மலை மறைவுப் பிரதேசத்தில் உள்ள இருட் குகைக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன். ஆனால் அதில் தான் எவ்வளவு வெளிச்சம்.

எனது நண்பர் ஒருவர் எனை  கிளறி விட்டார். நீறு பூத்த நெருப்பை கிளறி விட அது கனன்று கொண்டே இந்த பதிவாகிறது.அவர் சாதரணமாக ஒரு கேள்வி கேட்டு விட்டு போய் விடுகிறார். ஆனால் அவருக்கு உரிய பதிலை தருவதில் திருப்தியடையா எனது எண்ண ஊற்றுகள் தீயின் நாட்டியங்கள் எழுந்து ஆடவும் ஓடவும் ஆரம்பித்து விடுகின்றன. அந்த திருப்தி அடையா பதிலுடன் இருவரும் இரு வேறு வாழ்வில் பிரிந்து போய் விடுகிறோம் என்றாலும் இந்த எழுத்துகள்  பொதுவாக எங்களுக்குள்
பாலம் இடும் நம்பிக்கை எனக்குண்டு. இனி சூரியக் கீற்றுக்குள்..
மெல்லிய ஒளி ஊடுருவலுக்குள்...என்னால் முழுதாக சொல்ல முடியுமா என்ற நம்பிக்கை இல்லாதபோதும்...

Image result for tamil writers

அவர் கேட்டது இலக்கியம் பற்றி எந்த எழுத்தாளர்களை படித்திருக்கிறீர் என்பது பற்றி, சாண்டில்யன் , கல்கி , பாலகுமாரன் எல்லாம் படித்திருக்கிறீரா என்பது பற்றி...

நான் அவருக்கு சொல்ல விரும்பிய பதில் மீதமிருப்பது இப்படி ஆரம்பிப்பதாக இருந்தது...அதற்குள் நாங்கள் அவரவர் வாழ்வுக்குள் புகுந்து கொண்டோம்...நீங்கள் மாக்ஸிம் கார்கியின் தாய், லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு , கார்ல் மார்க்ஸின் டாஸ் கேபிடல், தமிழில் சொன்னால் மூலதனம், காந்தி வழி நூல்களின் 17 நூல் தொகுப்பு, சரத் சந்திரரைப் அழாமல் படிக்க முயல்வது... ஹிட்லரின் மெய்ன் கெம்ப் இதை எல்லாம் செய்து பாருங்கள்...என ஆரம்பிக்கலாம் என இருந்தேன்.உலகுக்கே மூலதனம் என்ற அரிய கம்யூனிச தத்துவம் வழங்கிய கார்ல் மார்க்ஸின் மனைவிக்கு போதிய ஊட்டச் சத்து உணவின்றி ஏன் உணவே இன்றி பச்சிளம் குழந்தைக்கு பாலுக்கு பதிலாக தாயின் மார்பிலிருந்து இரத்தம் வந்ததையும் தெரிந்து கொள்ளுங்கள் என ஆரம்பிக்கலாம் என இருந்தேன்....தாய் எழுதிய மாக்ஸிம் கார்க்கி நெடுவழிப்பாதையில் ஒரு பெண்ணுக்கு அந்த பெண்ணின் எதிர்ப்பிற்கிடையே பிரசவம் பார்த்த அனுபவத்தை எல்லாம் பகிர்ந்து கொள்ள விரும்பினேn.
Image result for tamil writers


இதை எல்லாம் எங்கிருந்து ஆரம்பித்தேன் எனில் எனக்கு குரல் வளம் அதிகம் நன்றாக தமிழில் உச்சரிப்பும் இருக்கும் ஆசிரியப் பெருமக்கள் என்னைக் கொண்டாடுவார்கள்....எனவே எனது வயது இருந்தால் 7 அல்லது 8 இருக்கும்..இரண்டாம் வகுப்பு, அல்லது 3 ஆம் வகுப்பு படிக்கும்போதிருந்து வெளிப் படிப்பு ,கதைகள், கவிதைகள், கட்டுரைகள் படிக்க ஆரம்பித்து விட்டேன்.பிறருக்கு கடிதம் எழுதித் தருவது, பிறருக்கு வரும் கடிதத்தை பிரித்து படித்துக் காண்பிப்பது எல்லாம் இருந்தது.ஒரு புத்தகம் ஆரம்பித்தால் அதை முன் அட்டை முதல் கடைசி அட்டை வரை முடிக்கும் வரை வேறு எதிலும் எண்ணம் இலயிக்காது. உணவு, உறக்கம் எல்லாமே அதற்கு இரண்டாம் பட்சம்தான். பாடப் புத்தகங்களிடையே நூல்களை வைத்துக் கொண்டு வீட்டுக் தெரியாமல் படித்த அனுபவங்கள் எல்லாம் இரவில் உண்டு. அம்மாவுக்கு படிக்கத் தெரியாது அப்பா வந்து அதை எல்லாம் பார்க்க வாய்ப்பில்லை என்ற நினைப்பு.ஆனாலும் நிறைய முறை மாட்டிக் கொண்டதுண்டு, தொந்தரவு இருக்கக் கூடாது என எமது வீட்டில் பின்னாளீருந்த புளியமரம், பூவரச மரத்தின் மேல் எல்லாம் அமர்ந்து கொண்டு படித்த அனுபவம் உண்டு.

எது முன் பின் எனத் தெரியாது, எனது தந்தை சுப்ரமணியம் அவர்கள் குமுதம், கல்கண்டு வாங்கி வந்தார் சந்தாதாரராக சில காலம் என நினைக்கிறேன். அதன் பிறகு வறுமையின் காரணமாக அவரால் வாங்க முடியவில்லை. ஆண்டியப்பன் என்னும் ஒரு சிகை அலங்காரக் கடை அல்லது முடி திருத்தக் கடை...பக்கத்தில் ஒரு டைலர் கடை அது எம்.ஜி.ஆர் மன்றமாகவும் செயல்பட்டது அந்த டைலர் பெயர் சுந்தரம்.

இந்த ஆண்டியப்பனின் தந்தை கொஞ்ச காலம் எங்களது வீட்டுக்கே வந்து எங்கள் வீட்டின் ஆண் மக்கள் அல்லது சிறுவர்களாகிய எங்களுக்கு எங்கள் செடிப்பக்கம் (வீட்டின் பின் புறம் புழக்கடை அல்லது தோட்டம் என்றும் சொல்லலாம்) முடி திருத்தம் செய்துவிடுவார். அது கொஞ்ச காலம் தொடர்ந்தது. அதன் பின் ஆண்டியப்பன் கடைக்கு சென்று முடி திருத்தம் செய்து கொள்ள வேண்டியதானது...இதெல்லாம் நடந்த காலம்1968லிருந்து ஆரம்பமாகி இருக்கலாம்...

Image result for tamil writers

அப்போதெல்லாம் தினத்தந்தி பேப்பரும் டீக்கடையும் நாட்டின் தலை எழுத்தை பெரும்பாலும் நிர்ணயித்தன. பொது வாழ்வும் அரசியல் வாழ்வும், நாட்டு நடப்புகளும், ஊரின் முக்கிய சமாச்சாரங்களும் அங்குதான் பெரும்பாலும் அலசப்பட்டன. டீ, குடிக்காமலே தினத்தந்தி செய்தித் தாளை படி படி என்று படித்து சிந்துபாத் கன்னித்தீவை முடியாமலே விட்டது போல படிக்க டீக்கடைக்காரர், சில முடி திருத்தக் கடைக்காரர்களிடம் சலிப்புடன் பேச்சு வாங்கியதும் உண்டு, கட்டிங் பண்றதுக்கு வேற கடைக்கு போறது, பேப்பர் மட்டும் இங்க படிக்க வருவதா? டீ குடிப்பதில்லை பேப்பர் மட்டும் படிக்க வந்து விடுகிறாய் என்பது போல இதெல்லாம் அவ்வப்போதே பெற்ற சிராய்ப்புகள்.

நாம் மத்தியப் பகுதிக்குள் வருவோம்...ஆண்டியப்பன் கடையில் குமுதமும் கல்கண்டும் வாரம் வாரம் தவறாமல் வாங்குவார்.அப்போது இவை பெரும்பாலும் ஞாயிறுகளில் வாரம் தோறும் வரும் என்று சொன்னாலும், சனிக்கிழமை ஏன் சில சமயம் வெள்ளிக் கிழமை மாலைகளில் கூட கடைக்கு வந்து விடும். வரும் பையனிடம் குமுதம் கல்கண்டு கொடுத்தனுப்பவும் என்ற துண்டுச் சீட்டுடன் புத்தகக் கடைக்காரர் எனச் சொல்லப்படும் பீடாக் கடைக்காரரிடம் கொண்டு சென்று கொடுத்து புத்தகங்களை வாங்கி வரும்போதே வழியில் படித்துக் கொண்டே வந்து முதல் ஆளாக படித்து முடித்து விடுவதுண்டு. அதில் தண்டபாணிக்கும் எனக்கும் சில காலம் போட்டி நிலவியதும் உண்டு. (அந்த கல்கண்டின் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கும் எனக்கும் கடிதத் தொடர்பு எல்லாம் ஏற்பட்டது வேறு கதை.)

Image result for tamil writer sandilyan and kalki


Image result for tamil writer sandilyan and kalki

Image result for tamil writer sandilyan and kalki

அங்கிருந்து ஆரம்பித்தது சாண்டில்யன் கதை, அது இரத்தனம் ஓவிய ஆசிரியர் வழியாக வாரத்தின் 2 ஓவிய வகுப்பில் ஒரு வகுப்பு ஓவியம் ஒரு வகுப்பு கதை...அதுவும் கடல் புறாவும், யவனராணியும்...அப்போது ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு வரை வந்திருந்தோம் என எண்ணுகிறோம். எனவேதான் என் போன்றோர்க்கு ஓவியமே வரவில்லை. கதை புகுந்து கொண்டது.

சாண்டில்யனை  அதாவது இரங்க பாஷ்யம் அய்யங்கார் என்ற சாண்டில்யன் சரித்திரக் கதைகள் யாவற்றையும் முதலில் படித்தேன்,இவரை விட யாரால் எழுத முடியும் அப்படி ஒரு கிக் இருக்கும் எனவே அந்த போதை கல்கி  ‍(ரா.கிருஷ்ணமூர்த்தி)பற்றிய அடுத்த நூலைத் தந்தது அவருடைய நூலை எல்லாம் வாசித்த பிறகு பொன்னியின் செல்வனும் , சிவகாமியின் சபதமும், தியாக பூமியும்  அலை ஓசை, பார்த்திபன் கனவு என அவரது நூல்கள் வேறு ஸ்டைலில் இருப்பது தெரிந்தது...சாண்டில்யன் நூல்களின் ஒரு பாலுணர்வு மயக்கம், கிறக்கம், ஒரு தூண்டு உணர்வு படிப்பாரை மாய வெளிகளில் இட்டுச் செல்ல...கல்கி தென்றலாக மெல்லிய நீரோட்டமாக எந்த வித முடுக்கமும் இன்றி சற்று ஆன்மீகம் கலந்த தெய்வாம்சம் நிறைந்த இயற்கையோடு இயைந்த வாசமாகவே எழுத்துகளை உணர வைத்தார்.

அகிலன், தீபம், நா. பார்த்தசாரதி, இந்திரா பார்த்த சாரதி, கோவி மணிசேகரன், அரு.இராமநாதன், இராஜாஜி,என சரித்திர நூல்கள் எனத் தெரிந்த என்னை சமூக நாவல்கள் எழுத்தாளர்கள் இலஷ்மி,சுஜாதா (இவருக்கு நான்  பெங்களூரில் பெல் நிறுவன விலாசத்துக்கு எனது நூல் வெளியிடும்போதெல்லாம் தவறாமல் அனுப்பியதுண்டு ஒரு சிறு நாவலில் ஒரு நாயக பாத்திரத்துக்கு தணிகை என்ற பெயரை சூட்டியிருந்தார்),ஜெயகாந்தன், ‍ இவரது சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் எனக்கு பள்ளியில் முதல் பரிசாக 1978ல் கொடுக்கப்பட்டது, புதுமைப் பித்தனின் சிறு கதைகள் அனைத்தும் அடங்கிய ஒரே தொகுப்பு தமிழ் இலக்கிய உலகத்துக்கே ஒரு கொடை. அது என் கைக்கும் வந்து சென்றது...மகாக் கவி பாரதியை, நாம் கவிதைக்கு சொன்னால் புதுமைப்பித்தன் தான் சிறுகதை நாயகன்...பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை, நாமக்கல் கவிஞர் , முதல் மு.மேத்தா, வைரமுத்து அப்துல் ரஹ்மான்,
Image result for tamil writers


சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள்...கு. அழகிரிசாமி, தி.ஜா.ரா என்னும் தி.ஜானகி ராமன்,இராஜம் கிருஷ்ணன், வாசந்தி, இந்துமதி, சிவசங்கரி,கரிச்சான் குஞ்சு, மௌனி,நீல பத்மநாபன்,புஷ்பா தங்கதுரை என்னும் ஸ்ரீ வேணுகோபாலன்,ராகி ரங்கராஜன், கு.ப.இராஜகோபாலன்,சு.சமுத்ரம்,க.ந.சுப்ரமணியம்,ஆதவன், கண்ணதாசன், வல்லிக் கண்ணன், எம்.எஸ்.உதய மூர்த்தி,டாக்டர் மு.வ,அசோகமித்ரன்,பாலகுமாரன், லா.ச.ரா, கி.ரா என்னும் கி.இராஜநாரயணன்,அனுராதா இரமணன், இரமணி சந்திரன்,பெரியார்,சா.கந்தசாமி,பிரபஞ்சன்,விக்ரமன், இப்படி கிடைத்த கதை மாந்தர்களையும் கதை எழுதிய எழுத்தாளர்களையும் கட்ந்து கொண்டே இருந்தேன். up to A.P.J.Abdul kalam...

Image result for tamil writers

பிரம்மராஜன் ஊட்டி இவர் வரவில்லை என நினைக்கிறேன், ஜெயமோகன், சாருநிவேதிதா, விக்ரமாதித்தியன் போன்றோருடன் ஒகேனக்கல் கவிதைப் பட்டறையில் கலந்து கொண்டு ஒரு நாளில் அவர்கள் போதை கலப்பு பிடிக்காமல் இரண்டாம் நாள் பட்டறைக்கு போகவே இல்லை. இன்குலாப் போன்ற மக்கள் நாடித்துடிப்பை உணர்ந்த உணர்த்திய கவிஞருடன் கவியரங்கம் செய்துள்ளேன்...

இப்படி தமிழ் எழுத்தாளர்களின் சகவாசம் நிறைய கடந்து  நிறைய பேர்கள் விடுபட்டு இருக்கும் ஆனால் அவை மறுபடியும் தீண்டப்படும்போது நினைவுக்கு தீனி போடும்...அடுத்து மலையாளம், வங்க, குஜராத்திய, இலக்கிய வரிசையில், தாகூர், சரத் சந்திரர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, மலையாளத்தில் மலையாற்றூர் இராமகிருஷ்ணன்,வாசுதேவன் நாயர்,வைக்கம் முகமது பஷீர்,குஞ்சுண்ணி,

இதை அடுத்து மேலை நாட்டு இலக்கிய வரிசை முக்கியமாக உடையாத சோவியத் சோசலிச நாட்டின் ஏராளமான புத்தக வரிசைகள்,அதை எல்லாம் விட சோவியத் நாடு ஆங்கில பதிப்பு, தமிழ் பதிப்பு இரண்டுமே என்னுடன் தொடர்பிலிருந்தது...அந்த கூட்டாட்சிச் குடியரசை யெல்ட்சின் உடைக்கும் வரை கோர்பச்சேவ் அதிபராக இருக்கும் வரை எனக்கு அது சந்தா அடிப்படையில் வந்து கொண்டேதான் இருந்தது. அப்போது சென்னையிலிருந்து தபாலில் வந்து சேரும்...அப்போது சோவியத் நாட்டின் புத்தகப் பிரிவு சென்னையிலிருந்தும் செயல்பாட்டில் இருந்தது. எனவே எப்படிப் பார்த்தாலும் சோவியத் நாடும் இரஷியாவும் இன்னும் எனக்கு சோவியத் லேன்ட் அனுப்பாத கடன் பட்டிருக்கிறது.அலெக்ஸாண்டர் புஷ்கின்,விளாட்மிர் நப்கோவ்,மைக்கேல் புல்காவ், கதைகள் விடுபட்ட வரிசையில் அவாரிய நாட்டு பழமொழிகளும் அடக்கம்.

ஆங்கில இலக்கியத்தில் சேக்ஸ்பியரிலிருந்து, அலிஸ்டர் மாக்லீன், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வேலஸ், சிட்னி செல்டன், நமது ஆர் கே நாரயன், கமலா தேவி, கமலா மார்கண்டேயா, சேதன் பகத், நான்ஸி ப்ரைடே.. இப்படி ஒரு பக்கம்..பொதுவாக‌ சொல்லப் போனால் புதுசாம்பள்ளி, கருமலைக்கூடல், மால்கோ, இப்படி நூலகங்களின் வரிசை எல்லாம் முடித்து சேலம் மத்திய நூலகம் வரை சென்று கொண்டிருந்தது.

அது மட்டுமல்லாமல் மால்கோ நூலகத்தில், ரீடர்ஸ் டைஜஸ்ட், இந்தியா டுடே, ஆங்கிலம் மற்றும் தமிழ்,  மாதந்திர, வாரந்திர, இருவாரத்துக்கொருமுறை  வாரத்துக்கொருமுறை வரும் அத்தனை புத்தகங்களும் அது அப்போது குங்குமம், தாய், ஆனந்த விகடன், கல்கி , சினிமா எக்ஸ்பிரஸ், மங்கயர் மலர், இப்படி போய்க் கொண்டே இருக்கும் இதன் முடிவில் பகவத் கீதை, பைபிள், குரான், ஜைனம், புத்தம், ஜென் , ஜே.கே, ரஜினீஷ், இராமகிருஸ்ணர், விவேகாநந்தர், இரமணர், அரவிந்தர்  இப்படி ஆன்மீக நூல்களுடன் பயணம்...

Image result for tamil writers

இப்போது நினைவுக்கு எட்டியவரை இந்த பதிவு சொல்கிறது இதை மீறி மேலும் செல்லும்... வாய்ப்பிருந்தால் பதிவோம்...

எனக்கு சீடராக 93 வயதை நிரம்பிய ஒரு மலையாள நண்பர் தமிழில் எழுத முயற்சி செய்தவர் உண்டு அவரை நீண்ட நாளுக்கும் பிறகு இன்று சந்திக்கும் நிகழ்வு இருப்பதால் இன்று இதற்கும் மேல் எழுதும் ஆர்வத்தை கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டிய நிலை. these are recorded apart from kamba raamayanam, thirukkural, epics,Raamaayanam, Mahabaratham,silappathikaaram, manimekalai, and other litreatures in tamil.It includes Malayala Manorama and  all books related with universe and space science study about Gali Galilio,Newton,Iynsteen ,up to our venki Ramakrishnan...

ஒவ்வொரு அசைவிலும் ஒரு மாறுதல் நிகழ்கிறது...

மறுபடியும் பூக்கும் வரை


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, September 23, 2016

கோபாலபுரம் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்: கவிஞர் தணிகை

கோபாலபுரம் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்: கவிஞர் தணிகை


Image result for manjavadi kanavai near karur

கடந்த வாரத்தில் ஒரு நாள், மறக்க முடியாத திருநாள்,அது 19.09.2016 திங்கள் என்றும் மங்காத தங்கத் திங்கள் அது. கல்லூரியிலிருந்து சுமார் 68 கி.மீ தொலைவுப் பயணம். அரூர் செல்லும் வழி மஞ்சவாடிக் கணவாய்ப் பாதை முன்பு போல் இல்லை. பெரும்பகுதி கரைத்து விட்டார்கள். என்றாலும் அந்த காடுகளும் வானரக் குரங்குகளும் அப்படியேதான் இருக்கின்றன வெளியில் போக்குவரத்துப் பாதையில் இருந்து பார்ப்பதற்கு. உள்ளே எப்படி இருக்கிறது எனத் தெரியாத போதும்



அன்பு நண்பர் செம்முனி இமாலயன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் தாளாளர், நிறுவனர் மற்றும் இதன் முதல்வர் பொறுப்புகளில் இருந்து சளைக்காமல் பம்பரமாக சுழன்று வருகிறார். இந்த முகாமை அவர் நடத்தி அது முடிந்த கையுடன் பள்ளி மாணவ மாணவியர்க்கு அவர் விடாமல் தேர்வை எழுதச் சொல்லி நடத்திய விதத்தில் இருந்தே அவரின் பொறுப்புணர்வை நாம் புரிந்து கொள்ள முடியும்



பாதை எங்கும் நல்ல வரவேற்பு போஸ்டர்கள், பள்ளி மாணவர்கள் வேறு வரிசையாக நின்று வரவேற்றதுடன், பாதைக்காக சுண்ணாம்புக் கோடுகள் போடப்பட்டு ஒழுங்கமைவைக் காட்டியது.

முன்னால் அமைச்சரும் இந்நாள் பாப்பிரெட்டிப் பட்டி சட்ட மன்ற உறுப்பினர் பி. பழனியப்பனை குத்து விளக்கேற்றி துவக்க அழைத்திருந்தார். ஆனால் அவர் சென்னைக்கு சென்று விட்டதால் அவர் தவிர அரூர் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் சி. தென்னரசு, அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொருளாளர் சி. சின்னதுரை, ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பல்வேறுபட்ட போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளிப்பிள்ளைகளுக்கு முகாம் விழாவில் பரிசுகள் வழங்கப் பட்டன.

கல்லூரியின் கைதேர்ந்த 20 மருத்துவர்கள் சுமார் 600 மாணவ மாணவியர்கள் எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை படிப்பவர்கள் இந்த முகாமில் பற் பரிசோதனை செய்யப் பட்டனர். மேலும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தொழிலாளர்கள், மற்றும் ஊர்ப் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செம்முனி பெரிய அளவில் போஸ்டர்கள் அடித்து ஆங்காங்கே மாபெரும் கட்டணமில்லாத பல் மருத்துவ முகாம் என்று ஒட்டியிருந்ததுடன் செய்தி நோட்டீஸ்களையும் விநியோகித்திருந்தார்.

பல் மருத்துவக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர். என் சரவணன் இந்த முகாமில் பல் ஆரோக்யம் மற்றும் பல் பாதுகாப்பு விரிவுரை செய்தார்.

எனது நிறைவுரையில் பெற்றோர், ஆசிரியர், பள்ளிப் பிள்ளைகள் பற்றிய கலாமின் தங்க முக்கோணமே சமுதாயப் பிணிகளுக்கான தீர்வு என்பதையும்,அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தி மாமனிதமாகுங்கள் என சிறிய மனிதர்களை ஊக்கப்படுத்தினேன்.

நான் இந்த இடத்தில் நிற்கிறேன் எனில் அதற்கு இரண்டு பேர் காரணம், ஒன்று என்னையும் செம்முனியையும் ஒரே களத்தில் இணைத்த சிற்பி.கொ.வேலாயுதம் இரண்டு, பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மதிப்பிற்குரிய ஜா.பேபி ஜான்,இருவரும் இல்லை எனில் நான் இங்கு வந்து உங்கள் முன் வந்து நின்று கொண்டிருக்க முடியாது என சுருக்கமாகக் குறிப்பிட்டேன்.

முகாம் நடைபெற கல்லூரியின் முதல்வர் ஜே.பேபி ஜான் அவர்கள் கொடுத்த அனுமதியும் ஊக்கமும் என்னை மேலும் மேலும் சிறந்த பணிகளை செய்ய வைக்கும் என நம்புகிறேன்.

அந்த முகாமில் கலந்து கொண்டாரில் முக்கியமாக‌ உடனே மருத்துவம் தேவைப்படுவார் என சுமார் 150 மாணவர்கள் அடங்கிய பட்டியலையும் பள்ளித் தாளாளரிடம் வழங்கினோம்.

வந்திருந்த அனைத்து விருந்தினர்க்கும் சைவைம் மற்றும் அசைவ உணவு வழங்கிய ஏற்பாடு சிறப்பாக இருந்தது.



பள்ளி சார்பாக அனைவரையும் வரவேற்ற செம்முனியின் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் ஏற்கெனவே நானும் எனது நண்பருமான‌ நீதிபதி   கருணாநிதியுடன் சென்று பள்ளிப் பிள்ளைகளுக்கு அறிவுரை மொழிந்தது இன்னும் நினைவிலிருந்து மறையவே இல்லை என்னும்போது இந்த முகாமும் என்றும் நினைவிருக்கும் வண்ணம் சிறந்திருந்து.

பள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியப் பெருமக்களும் ஒழுக்கம் காத்து இந்த முகாமுக்கு முழு மனதோடு ஒத்துழைத்த விதத்தை மறக்கவே முடியாது.

மறக்க முடியாத ஒரு நல்ல முகாம். வந்திருந்த விருந்தினர் அனைவர்க்கும் பகவத் கீதை நினைவுப் பரிசாக வழங்கி அனைவர்க்கும் விலை மதிப்பு மிக்க பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டன.



Image result for manjavadi kanavai near karur


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.







Wednesday, September 21, 2016

காவிரியின் புதல்வர்கள்:கவிஞர் தணிகை

காவிரியின் புதல்வர்கள்:கவிஞர் தணிகை

Image result for kaveri river map and flows

காவிரி நதி ஏறத் தாழ 800 கி.மீ ஓடி வருவதில் 64 கி.மீ தமிழக கர்நாடக எல்லைகள் இரண்டுக்கும் பொதுவாகும் பாயும் நதி 320 கி.மீ கர்நாடகாவிலும் 416 கி.மீ தமிழகத்திலும் பாய்ந்தோடி பூம்புகாரில் கடலில் கலக்கிற செய்திகள் உண்டு. அது பற்றி அல்ல இந்த பதிவு

ஒரு குடும்பத்தில் ஒரு தாய்க்கு பிள்ளைகள் பலர் இருக்கக் கூடும். அதில் மூத்த பிள்ளை அதிக நாள் பெற்றோருடன் இல்லாமல் மணம் முடித்ததும் வெளியேறிவிடுவார் குடும்பம் விட்டு. இளைய பிள்ளைகளை தேற்றி விடும் வரை அந்த பெற்றோரின் அந்த தாயின் கவனம் முழுதும் இளைய பிள்ளைகள் பால் இருக்கும் என்பது இயற்கை.

காவிரித் தாயும் அப்படித்தான்.கர்நாடக மைந்தர்களுக்கும் தமிழ்நாட்டினர்க்கும். இந்நிலையில் நதிகள், பெருநதிகள் அங்கு அதிகம் தமிழ் நாட்டுக்கு காவிரியை விட்டால் கதி இல்லை. அங்கு அணைகளும் அதிகம். இங்கு மேட்டூர் அணையை விட்டால் வேறு பெரும் அணை இல்லை.

இந்நிலையில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் இன்னும் 4 வாரங்களில் காவிரி நதி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நல்ல செய்தி . ஆனால் கர்நாடகாவில் மறுபடியும் கலவரம் ஆரம்பித்து விட்டது.

Image result for kaveri river map and flows


எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்  பதவி விலகத் தயாராக இருப்பதாக செய்திகள். சித்தாரமையா அரசுக்கு இன்னும் 2018 மே மாதம் வரை காலக்கெடு இருப்பதை குறி வைத்து பி.ஜே.பி கலவரத்தில் ஈடுபட்டு அந்த அரசை குலைக்கப் பார்க்கிறது அல்லது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க நினைப்பதன் பேயாட்டம்தான் இந்த
காவிரி நதி நீர்ப் பிரச்சனையும் தமிழர்களுக்கு எதிரான சதியும்.

இந்நிலையில் பிரதமராக பதவியில் இருந்த ஒரு தூங்கு மூஞ்சி தேவகவுடாவும் அவரது உதவாத கட்சி எம்.எல்.ஏக்களும் இராஜினாமா செய்ய இருப்பதாகவும் செய்தி. இவனை எல்லாம் பிரதமராக வைத்த இந்த நாடு உருப்படும் என்கிறீர்கள்?

எல்லாமே அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு அவர் தம் அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைத்தபடி...

தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தப் பட்டு அதிலிருந்து பயணிகள் நடந்து சென்று எல்லை கடந்து கர்நாடகா பேருந்துகள் ஏறி சென்று வருவதாக செய்தி.Image result for wind up karnataka govt



ஒரு அறையில் பணியில் இருந்தபடி ஒன்றாக இருக்கும் இளைஞர்களை வீடு புகுந்து தாக்கி இருக்கிற செய்திகள், நாளை காலை நீ என் கண்ணில் பட்டால் உயிர் உடலில் தங்காது என கத்தியைக் காட்டி மிரட்ட, காலில் விழுந்து பயந்து வேலையை விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தமிழகம் வந்து சேர்ந்த இளைஞர்கள் கதைகள் எல்லாம் கதையாக அல்ல பெரும் சோகமாக உலவி வர இந்த நாட்டு குடிமக்கள் எந்தவித சட்ட ,நீதி முறைகளுக்கும் தர்ம பரிபாலன முறைகளுக்கும் வெளியிருந்து அநீதி செய்து வருகிறார்கள்.Like muslims and Hindu riots of Pakistan and Indians at that time of partisan   of our Independence.,making lot of disturbance to public life due to firing vehicles and affecting day to day peaceful life.


ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்லும் இந்தியனின் அடிப்படைச் சட்டத்துக்கே ஊறு விளைந்திருக்கிறது. மேலும் ஒரு இடத்திலிருந்து பிழைப்புக்கக சென்றவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கால்.

இது இந்திய அரசியல் அமைப்புக்கும், நீதிக்கும், அரசமைப்பு சட்ட திட்டங்களுக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது எனவே இந்த பதர்கள் எல்லாம் விலகும் முன் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வருவது தேவையான ஒன்று. ஆனால் எந்த கட்சிக்கும் சாதகமாக இல்லாமல் 2018 மே மாதம் வரை அந்த ஆட்சி தொடர வேண்டுவதும் அவசியம்.

அப்படி எல்லாம் நடந்து விட்டால் இவர்கள் கொட்டம் அடங்கும், அடங்காவிட்டால் இவர்கள் கொட்டம் அடக்கப்பட வேண்டும். நதி நீரை இணைக்கலாம் என்று எழுதினால் உடனே ஒருவர் அது சாத்தியமான திட்டம் அல்ல என மறு மொழி சொல்கிறார். முடியாதது என்பது எதுவுமே இல்லை. செய்ய வேண்டிய நபர்கள் எவருமே அதைச் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதுதான் இந்த நாட்டின் அரசியல் மாறாத விதி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Saturday, September 17, 2016

ஒரு பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாம் கர்நாடகா காவிரி பிரச்சனையில் சென்று மாற்றலாமே!: கவிஞர் தணிகை

ஒரு பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாம் கர்நாடகா காவிரி பிரச்சனையில் சென்று மாற்றலாமே!: கவிஞர் தணிகை

Image result for bangalore cauvery issue


பெங்களூருவுக்கு பந்த்லூரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பந்த்லூர் தீ தனக்குத் தானே வைத்துக் கொண்டது.கால் ஓயும் வரை உன் சாம்ராஜ்ஜியம்தான். ஒரே பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாமே தமிழனை எல்லாம் ஏமாற்றுவோர். மாற்றுவோர்க்கு மதிப்பில்லை.... முதல் குற்றவாளி டில்லியில், இரண்டாம் குற்றவாளி சென்னையில், மற்ற குற்றவாளிகள் யாவரும் நம்மருகே...அரசியல் என்ற பிரிவினைச் சக்தி  சதி தீ எல்லா ஒற்றுமையையும் எடுத்து விழுங்கி எரித்து முடித்துக் கொண்டிருக்கிறது.

அங்கிருந்த தமிழர் எல்லாம் இங்கு வந்து விட்டார். வர முடியாத தமிழர் எல்லாம் வீடடங்கி கூடடங்கி வாழ்வதாக செத்துக் கொண்டிருக்க, மாண்டியாத் தமிழரை எல்லாம் ஒருங்கிணைத்த அரசியல் சக்திகள் அவர்களை தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழர்க்கு எதிராகவும் கோஷம் போட வைத்திருக்கின்றன.


Image result for bangalore cauvery issue

அங்கு மாநிலத்தில் தனக்குத் தானே வைத்துக் கொண்ட தீயால் எல்லாப் பணியும் தமிழர் இல்லாததால் முடங்கிப் போய்க் கிடக்கின்றன. 100 பிணங்களுக்கும் மேல் எடுத்து அடக்கம் செய்ய, எரியூட்டாமல் கிடக்கின்றன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் எந்தப் பணியும் நடைபெறாமல் ஆள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கின்றன. 9 வது மாடி ஏறி பணி செய்யும் மென்பொருள் பணியாளரைக் கூட எங்க தண்ணீ இருந்ததால் தானே நீங்க வேலை செய்ய வந்தீர் எனத் துரத்திய கன்னட மக்கள் அந்தப் பணியை எப்படி செய்யப் போகிறார்கள் தெரியாமல் என விழித்துக் கிடக்கிறார்கள்.

என்றாலும் அம்மா திருமண மண்டபம் கட்ட, கட்சியில் 90,000 பேருக்கு மேலானவர்களை சேர்க்க வாய் திறக்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் அடையாளம் செய்ய வாய் மூடியே சாதிக்கிறார்கள். கர்நாடகத்தில் மேலைக்கோட்டையில் பிறந்தவர், பார்ப்பன அக்ர‍ஹாரத்தில் சிறையில் இருந்த பயம் இன்னும் போகவில்லை இவருக்கு, மேலும் இவருக்கும் கர்நாடகத்திற்கும், ஆந்திராவுக்கும், மோடிக்கும் நிறைய பங்குப் பணிகள் உள்ளன இன்னும் சில வாரங்களில் வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கின் தீர்ப்பு வேறு உச்ச நீதிமன்றத்தால் சொல்லப் பட இருக்கிறது.

எனவே ஆளும் கட்சி பள்ளியை கல்வி நிலையங்களை, மத்திய மாநில அலுவலகங்களை அரசுப் போக்குவரத்தை வெற்றிகரமாக காவல்துறைப் பாதுகாப்புடன் நடத்தியதாக சொல்லும், எதிர்க்கட்சிகள் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதாக சொல்லும். எப்படிப்பார்த்தாலும் பாதிக்கப் பட்ட தமிழர்களின் குரல் கூட சரியாக வெளிப் படுத்த முடியாத ஆட்சி தமிழர் அல்லாத ஆட்சி மாட்சி. மதுபானப் பிரியர்களால் தேர்தல் முடிவு நிர்ணயக்கப்பட்டதால் கிடைத்த பரிசு அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம், கொல்லலாம். அதுதான் ஜனநாயகம்.

இந்திய நதிகளை இணைத்தால் அது இது போன்ற பிரச்சனைக்கு தீர்வாகும். எனவே அது பற்றி செய்வார் முதல் குற்றவாளியாக டில்லியில் இருக்கிறார். தமிழ் நாட்டை ஆண்டபடி தமிழை தமிழரை குளறுபடி செய்ய வேண்டிய, செய்த மாண்புமிகுக்கள் இரண்டாம் குற்றாவாளியாக சென்னையில் இருக்கிறார். நாங்கள் காவிரிக் கரையில் இருக்கிறோம் காலம் காலமாக. தாய்க்கெல்லாம் தாயாக அந்த நீர்த் தாயைப் பார்த்தபடி. எங்களது கருத்துகளை எல்லாம் கேட்க நாதியின்றி...மற்றோர் எல்லாம் கட்சிப்பணிகளில் சலியாது உழைக்கிறார்.

ஒரு பந்தால் உலகை மாற்றுவோம், மயிரைக் கட்டுவோம், வெட்டுவோம் என்ற புடுங்கிகள் எல்லாம் சேர்ந்து இந்தக் காவிரி விவகாரத்தில் எல்லாம் சென்று தீராத பிரச்சனையாக காலம் காலமாக அணையாமல் கொழுந்து விட்டு எரிந்தபடி தீர்க்கமுடியாமல் இருக்கும் இந்தப் பிரச்சனையை எல்லாம் தீர்க்கலாமே...இவர்கள் மாற்றுவோர் இல்லை ஏமாற்றுவோர்.இவனும் கர்நாடகாவில் இருந்து இங்கு வந்து தஞ்சம் புகுந்த மலையை, மண்ணை, காற்றை வஞ்சித்து தமிழரை ஏமாற்றிப் பிழைப்பவன் தான்...

இது போல நிறைய பேர் இந்த மண்ணில் இருந்து கொண்டு தழிழரை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சாமி, பூதம் என பயமுறுத்திக் கொண்டு..இந்தப் பெரியார் நினைவு நாளில் இதை பதிவு செய்வதில் அடையாளமாகட்டும் இந்தப் பதிவு.

கர்நாடகாவில் நடக்கும் இந்த வெறியாட்டம் ருத்ரவடிவம், செயலற்ற தமிழ் வடிவம் சிவம். ஆனால் இதன் பின்னணியில் வறுமையும், ஏழ்மையும் அறியாமையும் இருக்கிறது என்கிறார்கள் அறிவு சார்ந்தோர். இது இனவெறி மட்டுமல்ல, எமது வளத்தை, எனது வாய்ப்பை, எனது அறியாமையை பக்கத்து மாநிலத்தான் வந்து பிடுங்கிக் கொண்டு நல்லா வாழ்கிறான். நான் இன்னும் இப்படியே இருக்கிறேன் என்ற அவனது ஆற்றாமையை இந்த அரசியல் பித்தலாட்டக்காரர்கள் கட்சி பேதம் கொண்டு கன்னடிகா தமிழர் என்று தூண்டி விட்டு அரசியல் இலாபம் தேடி எதிர்வரும் சட்ட சபையில் இடம் பிடித்து ஆள நினைக்கும் போட்டியே இதன் வெளிப்பாடு என்ற ஒரு கணிப்பு இருக்கிறது.

பொருளாதாரத் தீர்வு மூலம் நதி நீர்ப் பங்கீடு மூலம், நதி நீர் இணைப்பு மூலம் ஆட்சியாளர்கள் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும் இத்தனை காலமும் இவர்கள் இத்தனை உயிர்கள், இழப்புகள் நடந்த பின்னும் அப்படியே சட்டை செய்யாமல் இருக்கிறார்கள். ஏன் அப்போதுதான் அவர்கள் பிழைப்பு நடக்கும் என்றுதான்.
Image result for bangalore cauvery issue




எனவே உண்மையான எதிரிகள் இந்த இனவெறியர்கள் அல்ல, அதன் பின் மறைந்து கிடக்கும் அவர்களை அப்படி பிர்த்தாளும் சூழ்ச்சியுள் சிக்க வைத்திருக்கும் அரசியல் சக்திகளே, மேலும் ஆளும் கட்சிகளே. அதன் தலைவர்களே.

ஒரு தலைமை தான் எதையும் செய்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிறது. ஒரு தலைமை அதை எப்போதும் ஆதரிக்கிறது இது மக்களுக்கான ஆட்சி அல்ல, அவர்களுக்கான ஆட்சி.

இதைப் புரிந்து கொண்டார் ஒன்று எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும், அல்லது எதிலுமே ஈடுபடக்கூடாது. இதற்காக விக்னேஷ் போன்ற உயிர்கள் போவது இந்த நாட்டுக்கு இன்னும் பேரிழப்பே.


முதல்வர் அம்மா பள்ளிக்கு, அலுவலகத்துக்கு, கல்லூரிக்கு செல்லுங்கள் என்றார் பாதுகாப்பு உண்டு என்று, என் வீட்டு அம்மா போகக் கூடாது என்றார், காவிரித்தாயை அதன் நீரைப் பருகியே பாதி ஆயுள் வாழ்ந்தவன் என்ற நன்றிக் கடனுடன் எங்கும் போகாமல் இருந்து விட்டேன்.

அம்மா மேல் மருவத்தூர், அப்பன் ஈஷா, வேதாத்திரி குழுமம், அம்மா அமிர்தானந்த மயி, ரவி சங்கர், பதஞ்சலிகாரு எல்லா சாமிகளும் அம்மாக்களும் சேர்ந்து காலம் காலமாக இருந்து வரும் இந்தப் பிரச்சனையை தீர்த்தால் நானும் அவர்களுடன் சென்று தியானம் செய்ய அமர்ந்து கொள்வேன்...
Image result for bangalore cauvery issue

பெங்களூரு நல்ல திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்று எப்போதும் எனக்குப் பிடிக்கும் இப்போது அதை பந்த்லூரு என்றழைக்கிறார்கள்...பிடிக்காத மனிதத் தன்மை அற்ற காட்டுமிராண்டித்தனமான கட்டடங்களாக காட்சி கொடுத்து கசப்பாகி விட்டது எனக்கு...

பொதுவாகவே மேற்கு வங்க (பங்க்ளாக்கள்) வங்காளிகள், கேரளத்து மலையாளிகள்,தமிழகத்தின் தமிழர்கள், இந்தியாவில் எல்லா மாநிலத்தவரையும் விட கொஞ்சம் முன்னணியில் உள்ளவர்கள்தான். அறிவை நம்புவார் வன்முறையை கையில் எடுப்பதில்லை. அடி வாங்கலாம் ஆனால் வெல்வது அறிவுள்ளவர்களாகவே இருப்பார்கள். உடல் வலுவை நம்பி செயல்படுவார் உடல்வலு இருக்கும் மட்டுமே செயல்பட முடியும், அறிவு நம்பிகள் அறிவை இறுதி வரை பயன்படுத்தலாம்...


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Friday, September 16, 2016

இலட்சுமாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் மருத்துவக் கல்லூரியின் பற்பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை

இலட்சுமாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் மருத்துவக் கல்லூரியின் பற்பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை




14.09.2016 அன்று புதன் கிழமை அன்று எமது முகாம் வாகனத்தில் சுமார் 9.30 மணி அளவில் புறப்பட்டோம். ஓட்டுனர் பொறுப்பு வாய்ந்த பாலமுருகன். எமது சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவு கடந்தோம். இலட்சுமாயூர் நடுநிலைப்பள்ளி வந்தது.

கல்லூரி வாகனம் சேலம் ரயில் நிலைய சந்திப்பு கடந்து வழியில் இருமருங்கும் பூக்கள் பூத்த மரங்கள் வரவேற்க சுகமான பயணம், சேலம் உருக்காலை, தோப்பூர் மின் கட்ட நிலையம் (கிரிட்) எல்லாம் தாண்டி அணைமேட்டு வளைவில் தாரமங்கலம் திரும்பு முன் இந்த இலட்சுமாயூர் நம்மை அதனுடன் இணைக்கிறது.

நகரிய சாலையிலிருந்து சில நொடிகளிலேயே திடீரென ஒரு கிராமிய மணம், கிராமத்தில் நடுநிலைப்பள்ளி 2 இடங்களிலே இடவசதிக்காக பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.



முன்னால் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரும் தற்போதைய இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான பழனிவேல் அய்யா அவர்கள் அனைவரையும் கரம் கூப்பி பள்ளியின் உள் அழைத்தார். வாகனமும் உள் நிறுத்தப் பட்டது.




உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.முத்து அவர்கள் மேட்டூரில் இருந்து வருவதாகச் சொன்னார்கள் தொடக்க விழாவிற்கு. பின் பணிச் சுமையின் காரணமாக அவரால் வர இயலாமல் போனது.

நாங்கள் சுமார் 10 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு சென்று  சென்ற உடனே ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகள் முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர் வரை சுமார் 350 பேரை பார்க்க ஆரம்பித்து பற் பரிசோதனை செய்து மற்றும் பற் பாதுகாப்பு பற்றி தனித்தனியாக அறிவுரை கொடுக்க ஆரம்பித்திருந்தோம்.



பள்ளியின் மாணவ மாணவியர் பட்டியல் மிக நேர்த்தியாக தலைமை ஆசிரியர் அறிவுறுத்தலின் படி ஆசிரியர்களால் தயார் செய்யப் பட்டு எம்மிடம் அளிக்கப் பட்டிருந்தது அந்த முகாம் பணிகளை சுலபமாக்கியது

பள்ளி நல்ல சுத்தமான முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறது. எல்லா மாணவர்களுக்குமே தனியார் பள்ளியை ஒத்த அளவில் நல்ல கவனம் செலுத்தப் பட்டு அடையாள அட்டையுடன் மாணவர்கள் நேர்த்தியாக இருந்தனர். மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்ற இந்த தலைமை ஆசிரியர் தேசிய அளவில் நல்லாசிரியர் விருது பெறும் நாள் அதிக தொலைவில் இல்லை என்றே  தோன்றுகிறது.

முகாமில் கலந்து கொண்டு பணி புரிந்த எங்கள் மருத்துவ குழுவினர்க்கு காபி, பிஸ்கட்கள் வழங்கப் பட்டன.

முகாம் நிறைவு செய்ய அனைத்து மாணவர்களையும் மைதானத்தில் கூட்டி அமரச் செய்து பல் பாதுகாப்பு, பற்சுத்தம் , பராமரிப்பு குறித்து எமது மருத்துவ குழுவை சார்ந்த மரு.துர்கா மற்றும் பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.



தலைமை ஆசிரியரும், நாங்களும் சேவைப்பணியில் பங்கு கொண்டமைக்கு நன்றி பரிமாறிக் கொண்டோம்.எல்லா ஆசிரிய பெருமக்களும் முகாமில் மகிழ்வுடன் பங்கு கொண்டு பாராட்டை பெற்றனர். அதற்கு முன் அவசியம் பற்சிகிச்சை செய்ய வேண்டிய பள்ளி மாணவர்களின் தேர்வுப் பட்டியல் கொண்ட 34 பேரின் பேர்கள் அடங்கியதை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தோம்.

தேவையேற்பட்டால் பெற்றோர் அனுமதியுடன் எப்போதும் மருத்துவ சிகிச்சைக்கு எமது மருத்துவக் கல்லூரிக்கு வருக என நல்வரவு கூறி, அரசினர் பள்ளி மாணவ மாணவியர்க்கு (12 வயதுக்குட்பட்டோர்க்கு) இலவச மருத்துவ சிகிச்சை தருகிறோம் என்பதையும் கல்லூரி முதல்வர், பேராசிரியர் ஜா.பேபிஜான், மற்றும் சமுதாயத் துறை மருத்துவர். என். சரவணன் அவர்களின் ஒப்புதல் பெற்று நீங்கள் அனைத்து சிகிச்சை பெற வேண்டிய மாணவர்களின் வருகையை ஒருங்கிணைத்தால் எமது வாகனத்திலேயே  வந்து அழைத்து சென்று மருத்துவம் செய்து கொண்டு வந்து விட்டுச் செல்லவும் தயார் என்பதையும் குறிப்பிட்டோம். முகாம் மிகவும் இனிதே நிறைவேறியது. திருப்தியுடன் கல்லூரி திரும்பி விட்டோம் மதியம் 1 மணிக்குள்.



இந்த அரிய முகாமுக்கு எங்களுக்கு அனுமதி வழங்கிய விநாயகா மிசன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்.பேராசிரியர். ஜா.பேபி ஜான் அவர்களுக்கும் வழி நடைப்படுத்திய சமுதாய மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர். என் சரவணன் அவர்களுக்கும் தமிழக கல்வித் துறை சேலம் மாவட்ட முதனமைக் கல்வி அலுவலர்,மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகிய அனைவர்க்கும் அந்த இளம் பிஞ்சுகளின் சார்பாக எமது  நன்றி உரித்தாகும்.

அறிக்கை சமர்ப்பித்தல்: முகாமை ஒருங்கிணைத்த முகாம் அலுவலர்: சு. தணிகாசலம்.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

Tuesday, September 13, 2016

ஏன்டா இன்னும் திருந்தவே மாட்டீங்களாடா காட்டுமிராண்டிகளே?:கவிஞர் தணிகை

ஏன்டா இன்னும் திருந்தவே மாட்டீங்களாடா காட்டுமிராண்டிகளே?:கவிஞர் தணிகை
Image result for season of karnataka cauvery issue



உங்களை எப்படி ஒரு தாயும் தந்தையும் பெற்றார்களோ அப்படித்தானேடா அவனையும் ஒரு தாயும் தந்தையும் பெற்றிருப்பார்கள்? எப்படி எதற்காக ஒரு தனியாக சிக்கிக்கொண்டதற்காக அந்த மனிதனை அவமானப்படுத்தி, அடித்து, துன்புறுத்தி,மண்டியிட வைத்து உங்களுக்கு ஆதரவாக கோஷமிட வைத்தீர்கள்? எதற்காக எவன் போட்ட முதலோ அந்த வாகனத்துக்கு தீ வைக்கிறீர்கள்?

ஒரு மாநில அரசின் போக்குவரத்து வாகனத்துக்கு தீ வைக்கிறீர்கள், இனக் கலவரம், என மனித இனத்தையே அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்...வள்ளுவர் சொன்னபடி: தோன்றின் புகழொடு தோன்றுக... என்னும் படி நீங்கள் எல்லாம் தோன்றாமலே இருந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும்.  அதுக்கு ஒரு நடிகை வேறு அவர் கவர்ச்சியாக நடித்து அந்த கன்னட நாட்டுக்கு பெரும் தொண்டு செய்வதாகவும் கேள்வி..அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு மேலும் தூண்டியிருக்கிறார். நீங்கள் எல்லாம் மனிதக்கருவிலிருந்து, மனிதக் கர்ப்பத்திலிருந்து, மனிதச் சூலிலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள், ஆனால் உங்களை அழிக்க நாங்களும் எழுந்தால் அது வன்முறையாகிடும்.

சோனாக் கல்லூரியில் படிக்கும் கர்நாடகா கன்னட‌ மாணவப் பூம்பிஞ்சுகளில் 4 எனதருகே ஒரே பேருந்தில் நான் 5 ரோட்டில் இறங்கிக் கொள்கிறேன் நீங்கள் அமர்ந்து பயணிக்கலாம் என சக பயணியாய், சக உயிராய், சக மனிதராய் வாழ்க்கைப் பயணம் செய்து கொண்டிருந்தோம். எதை நம்பி ஒரு மனிதன் ஒரு மாநிலம் விட்டு மறு மாநிலம் பயணம் செய்கிறான்? படிப்பிற்காக, பிழைப்பிற்காக, வாழ்க்கைக்காக அங்கிருக்கும் மண்ணின் மைந்தர்கள் அத்தனை பேரும் உறுதுணையாக வாழ உதவுவார் என்ற தார்மீக நம்பிக்கை அடிப்படையில்தானே?

Image result for season of karnataka cauvery issue

எல்லாம் தேவையில்லாத காரணத்திற்காக உங்களைப் போல வெகுண்டு எழ ஆரம்பித்தால் பூமியில் எந்த மனிதருமே வீட்டை விட்டு வேறு எங்குமே போக முடியாது...மேலும் எந்த வீட்டிலும் நிம்மதியாக வாழ முடியாது...எந்த அரசுமே நிர்வாகம், ஆட்சி புரிய முடியாது...

செப்.20 வரை நீர் விடுவதை தடுத்து நிறுத்த உங்களால் முடியாது. ஆனால் வாகனத்தை, தீக்கிரையாக்க முடியும், தனியாக மாட்டிக் கொள்ளும் மனிதரை மண்டியிட வைக்க முடியும், அடிக்க முடியும், அறைய முடியும், உதைக்க முடியும், பின்னந்தலையில் ஓங்கி ஓங்கி அடிக்க முடியும், நீங்கள் சொல்லும் கோஷத்தை உயிருக்கு பயந்து சொல்ல முடியும்... நீரை பகிர்ந்து அளிக்க வேண்டிய கடமை இருந்த முதல்வர் வீட்டையும் கல்லெறிந்து தாக்கியுள்ளீர்கள், துப்பாக்கி சூட்டுக்கும் பலியாகி... அண்டை மாநில அரசுக்கு சொந்தமான , அத்தியாவசிய பணிக்கு வந்த வாகனங்களை எரித்தபடி, வீட்டைக் கொளுத்தியபடி.., இருக்கும் பதர்களே நீங்கள் செய்வது மனித இனத்திற்கே பெருத்த அவமானம்.

Image result for season of karnataka cauvery issue

நீங்கள் மனிதராய் இருப்பதற்கே தகுதி மட்டுமல்ல அருகதையற்றவர்கள்

சேலம் மாவட்டத்தில் பிறந்த மாரியப்பன் தங்கவேல் பெங்களூர்க்காரராக பயிற்சி ஏற்று பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக உயரம் தாண்டி நடப்பு அமெரிக்க சாம்பியனையும் வென்று முதல் பரிசு எட்டிய செய்தி காதிலிருந்து மறையுமுன்னே இந்த கர்நாடகா மாண்டியா மாவட்டத்துக்காரர்களின் இழி செயல்கள்....

உடனே அமெரிக்கா தமது குடிமகன்களை  அங்கு சுற்றுலா செல்வதிலிருந்து தள்ளி நில்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.இப்படி இருந்தால் எந்த ஆட்சி எந்த நிர்வாகம், எந்த மாநில மத்திய அரசுகள் ஆள முடியும், மிருகங்கள் இவை இதை குண்டாந்தடி கொண்டு தாக்குங்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள் என துணை நிலை இராணுவத்தை 1000 பேரை அனுப்பி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுமளவு....அவமானச் சின்னமாகி விட்ட நீங்கள் என்றுதான் திருந்துவது? வட்டாள் நாகராஜ் போன்ற மனித இனத்துரோகிகளும், தற்போது எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு மனித சகோதரர்களுள் ஒருவரை ஒருவர் எந்த காரணத்தையுமே அடிப்படை இல்லாமல் தூண்டி விட்டு நெருப்பு பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் பதர்களே உங்களை அந்த நெருப்பு  பற்றவே பற்றாதா? உங்களை அந்த நெருப்பு பற்றுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? உங்கள் உயிர் மட்டும் என்ன என்றும் நிரந்தரம் என்ற பட்டியலில் இடப்பட்டு உனது பெற்றவரால் உருவாக்கப்பட்டதா?
Image result for season of karnataka cauvery issue

இந்த நாட்டில் மத, மொழி, இன, சாதிய எல்லைக்கோடுகள், மாநில எல்லைக்கோடுகள் எல்லாம் மறையும் தலைமுறையில் வாழ்கிறீர் என்பதை மறந்து விடாதீர், மேலும் கணியன் பூங்குன்றனார் சொன்னபடி அதை ஐ.நாவில் கலாம் பேசியபடி நாமெல்லாம் உலக மாந்தர்கள்...நாட்டின் எல்லைக்கோடுகள் கூட நம்மை பிரித்து குறுக்கி சிறுத்துப் போகச் செய்யக் கூடாது..

காக்கைக் குருவி எங்கள் சாதி
நீள் காடும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்கக் நோக்கக் களியாட்டம்

என்ற பாரதியின் வரிகளின் படி வரிகளைப் படி, அந்த பாரதிக்கும், திருவள்ளுவருக்கும் நீங்கள் திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தால் அப்படியேதான் இருப்பீர். உங்களிடம் எப்போதும் மாறுதல் வரவே போவதில்லை...
Image result for season of karnataka cauvery issue


முதலில் நதி நீரை இணையுங்கள்: தேர்தலின் போது மட்டும் வாய்ப்பந்தல் போடாதீர்கள்...எல்லாப் பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும் மனிதம் குறைந்தபட்சம் இந்தியன் அனைவரும் என்ற உணர்வுக்காவது வந்து இணைவான்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, September 11, 2016

பாலுணர்வு தோன்றுவதில்லை ; கவிஞர் தணிகை.

களத்து மேட்டில் சேலையை சரி செய்து கொண்டிருக்கும்
பெண்ணைப் பார்த்தால்
பாலுணர்வு தோன்றவில்லை

பெற்ற குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கும்
தாயைப் பார்த்தால்
பாலுணர்வு தோன்றுவதில்லை

நீச்சல் உடையுடன் நீரில் போட்டியிடும்
நங்கை பார்த்தாலும்
பாலுணர்வு தோன்றுவதில்லை

ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டலில்
ஒட்டிய ஆடை அணிந்து தடகளத்தில் ஓடும்
விளையாட்டு வீராங்கனைகளைப் பார்த்தாலும்
பாலுணர்வு தோன்றுவதில்லை

டென்னிஸ் வீராங்கனைகள் ஆடை நகர்தலிலும்
உள்ளாடை தெரிதலிலும் கூட‌
பாலுணர்வு தெரிவதில்லை
காமம் கொப்பளிப்பதில்லை

பீச் பால் விளையாட்டில்
இரண்டு பீஸ் ஆடையுடன் ஆடுவதைப்
பார்த்தாலும் பாலுணர்வு தோன்றுவதில்லை
Image result for sexual urge and barbarism


ஆடை நழுவ அயர்ந்து உறங்கும்
பெண்களைப் பார்க்கும்போதும்
பாலுணர்வு தோன்றுவதில்லை

நிலவொளியிலும் கதிர் வெயிலிலும்
கடமை செய்யப் புறப்படும்
கடமை செய்து புறப்படும்
பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்களைக்
கண்ட போதும்
பாலுணர்வு தோன்றுவதில்லை...

பாலுணர்வு என்பது
நினைவுக் கீற்றில்
நீட்டல் மடக்கலில்
அற்புதமாவதும் அற்பமாவதுமாக...

நீங்கள் பார்க்கும் பார்வையில்
நினைக்கும் நினைப்பில்
மதுவின் போதையில்
எல்லாம் இருக்கிறது

மனிதமே நேராகட்டும்
அறிவு கூராகட்டும்
(கர்நாடகா மொழி வெறியர்
காவிரிக்கு சொந்தம் கொண்டாடும்
இன வெறியர் )
காட்டுமிராண்டித் தனம் விட்டு
நாகரீகமாகட்டும்...


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பாலுணர்வு தோன்றுவதில்லை ; கவிஞர் தணிகை.

இருமுகன்: அகிலன் லவ்: கவிஞர் தணிகை

இருமுகன்: அகிலன் லவ்: கவிஞர் தணிகை


Image result for irumugan

அறிவியல் கதையாக சொல்லி எடுக்கப்பட்ட பொழுது போக்குப் படம்.அகிலன் லவ் என்ற இரு வேடங்கள் விக்ரமுக்கு. நயந்தாராவுக்கு ரோல் ஏதுமில்லை எனச் சொல்லி விடக் கூடாது என இறந்தவரை புத்துயிர்ப்பு ஊட்டி கதைக்கு ஒத்துழைப்பு நல்கும் பாத்திரமாக்கியுள்ளனர்.

திட்டமிட்டு இளைஞர்களை குறி வைத்து எடுக்கப் பட்ட படம். ஜென்டிலாக இருக்கிறது . கதை ஸ்பீட் என்னும் ஆஸ்த்மாவில் மூச்சு விடச் சிரமப்படுவோர்க்கு உதவும் இன்‍ஹேலரில் 5 நிமிட அசுர சக்தி தரும் மருந்து நிரப்பப் பட்டு அதன் சுவாசம் மூளையையும், உடலையும் அடுத்த 5 நிமிடம் எந்திர வேகத்துடன் சக்தி படைத்ததாக மாற்றி விடும் கதை.

இதை பெரும் அழிவு சக்தியாக்க நினைக்கும் லவ் என்னும் திரு நங்கை பாத்திர வில்லத்தன‌ விக்ரமிடமிருந்து அகிலன் என்னும் இந்திய உளவுத் துறை இடைநீக்கம் செய்யப்பட்ட உளவாளி எப்படி பிடுங்கி எறிந்து உலகை அழிவு சக்தியிலிருந்து காக்கிறார் என்னும் கதை

15000 இன்‍ஹேலருடன் புறப்படும் கப்பலை நிறுத்த இன்னும் 20 நிமிடமே இருக்கிறது என்னும்போது நாயகனும் நாயகியும் செயல்படுகிறார்கள் அதை தடுத்து நிறுத்த...

முள்ளை முள்ளால் எடு என்பது போல லவ் கண்டு பிடித்து பயன்படுத்தும் அதே ஸ்பீட் மருந்தை பயன்படுத்தி லவ் வில்லத்தனத்துக்கு அகிலனும் மீராவும் எப்படி முடிவு கட்டுகிறார்கள் என்பது கதை. உடன் போனஸாக இறந்ததாக நினைக்கும் இவர் மனைவி மீரா நயன் தாரா ரோசியாக லவ் என்னும் இந்த திருநங்கையிடம் எப்படி பணி புரிகிறார் இவருக்கும் இந்த மருந்து எப்படி பலனளிக்கிறது என்பதையும் தெளிவாக சொல்லும் சைன்டிபிக் பிக்சன் ...அறிவியல் கதை

வில்லனாக இருக்கும் திருநங்கை லவ் விக்ரம் வேடம் அறிவை அதிகம் பயன்படுத்தி குறுக்கு வழியில் யாவற்றையும் எளிதில் அடைகிறது. நாயகன் அகிலன் மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டு இலக்கை  நோக்கி நகர்கிறார்.

அப்ரூவராக மாறுவதாக சொல்லும் அது யார் பாலாவா அவர் நிறைய படம் நகர வழியை திசை திருப்பி வில்லன் லவ்விடமிருந்து கட்சி மாறுவதும் கதையை நகர்த்த வழிகாட்டுவதும் கொஞ்சம் அளவுக்கதிகமாக நீளமாகவே உள்ளது. நம்புவதற்கு முயற்சி செய்யுமளவு.

மற்றபடி நாசர் பாத்திரம் சிறிய அளவில் கதைக்கு உறுதுணையாகவும், தம்பி ராமைய்யா முத்தைய்யா மலேசியன் போலீசாக வழக்கப்படியாக அசத்தலாகவும் கதைக்கும் பட நகர்தலுக்கும் கிளு கிளுப்பூட்டி சிரிக்கச் செய்து பாராட்டும்படியாகவும் உள்ளது.

நித்யா மேனன் ஆயுசியாக கேஸ் ஆபிசராக நன்றாக செய்திருக்கிறார். இசையும் பாடல்களும் சுமார். பின்னணி இசை நன்றாக இருக்கிறது ஹாரிஸ் ஜெயராஜ். மொத்தத்தில் ஆனந்த் சங்கரையும் தயாரிப்பாளர் சிபு தமீன் ஆகியோரை ரிஸ்க் எடுத்து இந்த படத்தை எடுத்தமைக்காகவும் அவர்களின் முயற்சிக்காகவும் பாராட்டலாம்

மர்ம மனிதன் என்ற பேரில் காஜல் அகர்வால், பிந்து மாதவி ஆகியோரை வைத்தும் வேறு வேறு தயாரிப்பு கம்பெனிகளுடன் ஆரம்பிக்கப் பட்ட இந்தப் படம், லடாக், காஷ்மீர், சென்னை , மலேசியா ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. கால மாற்றத்தில் நடிகர்கள் நடிகைகள் மாறி, தயாரிப்பு கம்பெனிகள் மாறி விக்ரம் மட்டும் மாறாமல் நல்ல விதமாகவே வெளிவந்து முதல் இரண்டு நாள்களில் 10 கோடி வசூலை எட்டியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

லவ் திருநங்கை பாத்திர விக்ரம் ஆண்களை விரும்பும் பாத்திரம். நிறைய ஸ்கோப் இருந்த இந்த வேடம் திருநங்கை பாத்திரத்தில் அதிகம் கவனம், டச் பாவனை செய்யப்படவில்லை என்பது தெரிகிறது.

கமலை பின் தொடர்கிறார் விக்ரம் என்று சொல்ல வைக்கிறது. கொஞ்சம் எந்திரன் கொஞ்சம் விஸ்வரூபம் சாயல் தெரிகிறது இருந்தாலும் அவ்வளவு மோசமில்லை. பார்க்க முடிகிற படமாகவே இருக்கிறது கதை கொஞ்சம் அறிவியல் கதையாக இருந்தாலும் சினிமாடிக்காக இருந்தாலும் பார்க்கும்படியாகவே இருக்கிறது.

விக்ரம், நயன் தாரா முகத்தில் முதுமை நன்கு தெரிகிறது என்னதான் மேக் அப் செய்த போதும், மகளுக்கு திருமணம் செய்யும் விக்ரமும்,பழகிப் பழகி பார்த்து சலித்துப் போன நயன் தாராவுக்கும் மாற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Image result for irumugan

2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2016 செப்.8ல் வெளியாகும் வரை நிறைய மாறுதல்களை சந்தித்து படத்தை வெளிவரச் செய்ததும், இந்த அளவாவது பார்க்கும்படியாக வைத்திருப்பதும், முதல் இரு நாளிலேயே 10 கோடி வசூலை ஈட்டியதும் வெற்றிதான்.

தற்போதைய படங்களில் இருக்கும் தேவையற்ற காட்சிகள் மதுபோதை வழியும் காட்சிகள் இல்லாதது நல்லதுதான்.

வில்லன் லவ் விக்ரம், கதாநாயகன் அகிலன் விக்ரம் என போட்டி போட்டுக் கொண்டு ஸ்பீட் மருந்தை உட்கொண்டு  கலக்குமாறு காட்சிகள் அமைத்து ஆளாளுக்கு கொஞ்ச நேர நகர்த்தல் கதை செய்திருப்பது அறிவியலை மீறிய செயற்கை கலந்த திரைக்கதையைக் காட்டுகிறது.

சினிமாவாக பொழுது போக்காக பார்க்கலாம். 50 மதிப்பெண் நூற்றுக்கு  கொடுக்கலாம். ஆனால் விக்ரமின் லவ் ரோல் அவ்வளவு எதிர் பார்த்தபடியாக நாயகன் அகிலன் பாத்திரத்துக்கு கான்ட்ராவாக சோபிக்கவில்லை. அந்த ல்வ் ரோலில் இன்னும் கவனம் செலுத்தி செம்மைப்படுத்தி இருக்கலாம். ஆனாக் கதை நகர்தலில் பாதிப்பு இல்லை. பாவம் இதற்கே ஆண்டுகள் 2 க்கும் மேல் ஓடி விட்டது என்னும்போது அதில் ஏதாவது செய்ய முயற்சி செய்திருந்தால் மேலும் மெருகேற்ற முயன்றிருந்தால் இன்னும் காலம் அதிகம் சென்றிருக்கலாம் வெளியீட்டிற்கு. இவர்கள் கால்சீட் எல்லாம் வேறு கிடைக்க வேண்டுமே....

Image result for irumugan


ரெமோவில் சிவ கார்த்திகேயனுக்கு பெண் வேடம் நர்ஸாக நன்கு பொருந்துவதாக இருப்பதாக  ஆ ரம்பக் கட்ட புகைப்படங்கள் உள்ளன.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, September 10, 2016

சேலம் மாவட்டத்தின் தங்க மகன் மாரியப்பன் தங்கவேலுவும் தங்கத்தாரகைத் தாய் சரோஜாவும் : கவிஞர் தணிகை

சேலம் மாவட்டத்தின் தங்க  மகன் மாரியப்பன் தங்கவேலுவும் தங்கத்தாரகைத்  தாய் சரோஜாவும் : கவிஞர் தணிகை

Image result for mariappan thangavelu and his mother saroja


காலை மதுபோதை பேருந்து ஓட்டுனரால் 5 வயதில் இழந்த இந்த தங்க வேல் இன்று இந்த 21ஆம் வயதில் சரித்திரத்தில் தமது பெயரை தக்க வைத்துக் கொண்டார். தாய் சரோஜாவின் தியாகம் பயிற்சியாளர் பெங்களூரு சத்யநாரயணா ஆகிய அனைவரையும் தங்கவேலையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இது போன்ற எத்தனையோ வைரங்கள் நமது இந்திய மண்ணில் இருக்கின்றன. வெளியே பளிச்சிட ஆரம்பித்த பின் தான் இந்த உலகும் ஏற்றுக் கொண்ட பிறகுதான் இந்த இந்திய மண் கோடிகளாய் கொட்டிக் கொடுக்கிறது.

அதற்கும் முன் எத்தனை துன்பங்கள்? எத்தனை அவலங்கள், கணவன் விட்டுப் பிரிந்த பின் நாலு சகோதரர்கள் ஒரு சகோதரியுடன் வாழ்ந்த இந்த காலை பேருந்துக்கு பலி கொடுத்த தங்கவேலு இந்திய நாட்டின் ஒலிம்பிக் அவமானத்தை துடைத்தெறிந்து இந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கம் உயரத் தாண்டுதலில் பெற்றதன் மூலம் ஒரு காலாக ஆகி விட்டார்.
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் தாய் சரோஜா. இவர் பெரியவடகம்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சைக்கிளில் சென்று காய்கறி விற்பனை செய்து வருகிறார்.


சரோஜா இவரின் தாய் கூலி வேலை பார்த்து செங்கல் தூக்கி அதன் பின் காய்கறி விற்று செய்யாத தியாகம் எல்லாம் செய்து ஆண் வருவாய் ஈட்டுவார் இல்லாத குடும்பத்தில் தியாக தீபம் ஏற்றி இன்று இந்தியப் புகழ் பந்தம் ஏந்தி உலகெங்கும் சுடர் விட வைத்து விட்டார் இந்த பதக்கத்தை பெற்றதன் மூலம்.

இளைஞர்களே இது நமக்கெல்லாம் ஒரு பாடம். கிரிக்கெட்டை விட்டு வெளியே வாருங்கள். இந்த உருப்படியில்லா அரசு உங்களை எல்லாம் உருவாக்கும் என நினைக்காமல் இப்படி தியாகம் செய்து சாதித்து காட்டுங்கள் அதன் பின் உலகே உங்கள் பின் நிற்கும்

எமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்வு. எமது ஊர்க்கார, சேலம் மாவட்டத்தை சார்ந்த தீவட்டிப்பட்டியை அடுத்த பெரிய வடுகம்பட்டியை சார்ந்த சிறிய கிராமத்தை சார்ந்த இந்த இளைஞரை ஈன்று நாடே திரும்பிப் பார்க்கிறது.

அது மட்டுமல்ல இந்த உயரத் தாண்டலில் 3 பதக்கங்களில் 2 இந்தியாவுக்கே .தங்கமும், வெண்கலமும். இது ஒரு புதிய சாதனை.

ஆனால் பாருங்கள் நண்பர்களே இன்று ஜலகண்டாபுரத்து பள்ளி மாணவர் அதிலும் முதல் மதிப்பெண் நிலையில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர் மாதிரித் தேர்வு எழுதிய தாளைக் காணவில்லை என ஆசிரியை இப்படித்தான் நீ முதல் மதிப்பெண் பெறுகிறாயா எனக் கேட்ட கேள்விதாளாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் மற்றொரு செய்தி...

அரசுகளே முதலில் இனி உங்கள் அமைப்பை மாற்றிக் கொண்டு திறமை எங்கிருக்கிறதோ அங்கு கீழ் இறங்கி வரக் கற்றுக் கொள்ளுங்கள் உங்க ஒலிம்பிக் கமிட்டி முதல் வேலையாய் இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள இது போன்ற வைரங்களை தத்து எடுக்கட்டும். அதன் பின் ஒலிம்பிக்கில் நமக்கு இடம் இல்லாமல் போகவே போகாது.

இந்த தங்கவேல் கூட இந்தியாவில்  2 மீ உயரம் தாண்டிய சாதனை எல்லாம் உண்டாம். இப்போது 1.89ல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

என்ன சொல்லி வாழ்த்த என்றே விளங்கவில்லை...இந்த மாபெரும் மகிழ்வில் பங்கு கொள்ளவெ இந்த பதிவு.
 அந்த தங்க மகனை ஈன்று பெருந்தியாகம் செய்த அந்த சரோஜா என்ற தாய்க்கும் நாம் நமது ஈடில்லா வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறோம். இனி நாம் பேசும் பேச்சில் எழுதும் எழுத்தில் இந்த சரித்திர நாயகனின் சாதனையும் இடம் பெறும் என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.

அருணிமா சின்‍ஹா செய்தது போல இதுவும் ஒரு அருஞ்சாதனை.
கால் இல்லாதவரால் நிகழ்த்தப் பட்ட சாதனை. அந்த உயிர் பட்ட பாட்டுக்கு ஏற்றுக் கொண்ட வேதனைக்கு வலிக்கு. இடைவிடாத பயிற்சியின் போது தாங்கிக் கொண்ட துன்பத்துக்கு ஒரு அற்புத பரிசு. முயற்சிக்கு  பலனாக வேறு எவரும் எட்ட முடியாத உயரம் சிகரம், இந்த இந்திய நாயகனின் பயணம்.

Image result for mariappan thangavelu and his mother saroja



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, September 8, 2016

குற்றமே தண்டனை: கவிஞர் தணிகை

குற்றமே தண்டனை: கவிஞர் தணிகை


Image result for kutrame thandanai length of movie


ஆங்கில பனிஷ்மென்ட் தமிழில் குற்றமே தண்டனை ஆகி இருக்கிறது. நன்றாக இருக்கிறது என்றும் சொல்லும்படியாக...காக்கா முட்டை எடுத்த மணிகண்டன் முதலில் இந்தப் படத்தை எடுத்தாலும் இது இப்போது செப்டம்பர் 2ல் இந்த ஆண்டுதான் வெளி வந்துள்ளது.

படமாகவே தெரியவில்லை இதுதான் இந்த படத்துக்கு கிடைத்த வெற்றி. யதார்த்தமாக அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் கதாபாத்திரங்கள் இயல்பாக வாழ்ந்துள்ளனர் இந்த சினிமாவில்.

விதார்த்  ரவி என்ற பாத்திரத்துடன் பின்னப் பட்ட கதை எனவே வேறு எந்த நடிகருமே இதில் பெரிதாகத் தெரியவில்லை அது நாசர் , ரகுமான் இருந்தபோதிலும். ஏன் எனில் கதைக்கு வலுவான அடித்தளம் உள்ளதால்.

சுமார் 1மணி 35 நிமிடம் இருக்கும் இந்தப் படத்தில் பாடல்களுக்கோ, மற்ற நடிகர் நடிகைகளுக்கோ அதிகம் வேலை இல்லாத படம். அதிகம் வேலை தராத படம்.

பார்வை நிரந்தரமாக இருண்டு குருடாக போய்க் கொண்டிருக்கும் ரவிக்கு அலுவலகத் தோழியும் உண்டு. குடி இருக்கும் இடத்தில் எதிரில் ஒரு பெண் கொலை செய்யப் பட, அவள் ரவிக்கு தெரிந்த நபராக இருக்க கொலை செய்த நபர்கள் ரகுமான் வீட்டில் முதலில் 3 இலட்சத்து 72 ஆயிரம் பெறுகிறார். அதுதான் அவரது கண் ஆபரேஷனுக்கு தேவையான பணம் என்று கண் மருத்துவ மனையில் ஒரு மருத்துவர் தெரிவிக்கிறார்.

எனவே ரகுமானிடம் இருந்து பெறும் அந்தப் பணம் போதவில்லை.ஏன் எனில் முதலில் சொன்ன கணக்கு தவறு..நீங்கள் 4 இலட்சத்துக்கும் மேல் கட்ட வேண்டும் எனச் சொல்ல இப்போது அந்த அதிகபடியான பணத்தையும் அந்த கொலைகார ரகுமானிடம் இருந்தே கேட்க முனைகிறார். ஆனால் ரகுமான் பிடி கொடுக்க மறுத்து விட...

இந்த கொலை குறித்த விசாரணை இவரது வீடருகே நடக்கும்போது காவலரிடம் அங்கு வந்து சென்ற பணக்கார இளைஞர் ஒருவரை அடையாளம் காட்ட அந்தக் குடும்பத்திலிருந்து மேலும் மேலும் பணத்தை பெற முயல்கிறார்.

இதனிடையே இவரது பார்வை மேலும் மங்கி வருகிறது. இவர்மேல் பரிதாபம் கொண்ட இவரது தோழி இவருக்கு பலவகையிலும் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்கிறார்.

இதனிடையே இவனை தற்செயலாக ஒரு சாலையில் கண்ட அந்த மருத்துவர் , இவருக்கு பார்வை வரும் எனச் சொன்னதே பொய். இவருக்கு அந்த வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நோய் அது. என்றும் மருத்துவமனைக்கு வருவாய் சேர்க்கவே அந்தப் பொய் சொல்ல வேண்டியதாயிற்று எனச் சொல்கிறார்.

கண் மருத்துவத்துக்கு கொலையை மறைத்து தாம் பெற்ற பணம் பயனாகதது மட்டுமல்ல...சட்டம் நீதி ஆகியவற்றிலிருந்தெல்லாம் தப்பி விடலாம் ஆனால் இயற்கையிடமிருந்து மனச் சாட்சியிடமிருந்து தாம் செய்யும் குற்றமே தண்டனைதானே என்ற கேள்வியுடன் படத்திலிருந்து அதன் கேள்வியிலிருந்து வெளியேறுகிறோம்.

நமது குடிகார மதுபான நண்பர்களுக்கு எல்லாம் இதெல்லாம் சுஜுபி பா...

நல்ல படம் பார்க்க வேண்டிய படம் . நான் தியேட்டரில் பார்க்க விரும்பிய எவரும் தொந்தரவு தராமல் பார்க்க விரும்பிய படம். ஆனால் தியேட்டர் பிரிண்ட் போல ஆன்லைனில் பார்த்தேன் சமயங்களில் வசனம் சற்று விளங்காமலே...ஆனால் உள்ளீடு நன்றாக தெரிந்ததால் செரித்துக் கொண்டு பார்க்க முடிந்த படம்.

இதற்கு 60 மதிப்பெண் நூற்றுக்கு தாரளமாக வழங்கலாம். ஆனால் நமது தமிழ் இரசிகர்களுக்கு இதெல்லாம் பிடிக்குமோ என்னவோ?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.