Wednesday, December 30, 2020

ரஜினிகாந்த் என்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட்: கவிஞர் தணிகை

 ரஜினிகாந்த் என்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட்: கவிஞர் தணிகை








தமிழ் நாட்டு அரசியல் மேகங்கள் கலையத் துவங்கி விட்டன. 70 வயது சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பாலச்சந்தரால் ரஜினிகாந்த் என்னும் பெயர் சூட்டப் பட்ட தமிழ் படங்களின் ஸ்டைல் மன்னன் தனது உண்மையை நிலையை உணர்ந்து சரியான முடிவை எடுத்திருக்கிறார்.


எவ்வித நிர்பந்தத்துக்கும் அடிபணியாமல் தனது மனித மாண்புகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இல்லையேல் இவர் பெரிய ஏமாற்றம் பெற்றிருப்பார். இவரது சகோதரர் தமிழருவி மணியன் குஷ்பு போன்றோர் மட்டுமல்ல இவரது ரசிகர் கூட்டமும் இவர் பெரிதாக ஏமாற்றி விட்டதாக சொன்னாலும் ஆன்மீகவாதிகளுக்கு புற உலக காட்சிகளை எல்லாம் தாண்டி பின் நடப்பதை பார்க்கும் ஆற்றல் உண்டு.


எனவே ரஜினிகாந்த் முடிவு அவரையும் அவரை உண்மையாகவே நேசிக்கும் குடும்பத்தார்க்கும் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நல்ல முடிவுதான்.




இன்றைய தேர்தல் களம், அரசியல் கட்சிகள், அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் எல்லாமே இந்திய அரசியலை கேலிக்கூத்தாக்கி மத்தியில் ஆளும் ஆட்சி மாநிலக் கோட்பாடுகளை தகர்த்து வந்து கொண்டிருக்கும் சூழலில் இவர் முதலில் பலிகடா ஆகாமல் இருப்பதும் அவர் மொழியில் சொல்லிய படி இவரை நம்பியோரை இவர் பலிகடாக்காளாக ஆக்காமல் இருப்பதும் பாராட்டத் தக்கதே!


இனி இவர் எந்தப் பக்கம் என தனது ஆதரவைக் கூட சொல்லாமல் இருப்பது மேலும் நல்லது.

அரசியல் அல்லாமல் தம்மால் ஆன சமூக சேவையை செய்து வரப் போவதாக சொல்லி உள்ளது

நல்லதே.


இவருக்கு பத்ம பூசன், பத்ம விபூசன் போன்ற விருதுகள் அன்னை தெரஸா போன்றோர் செய்த சேவைக்காக எல்லாம்  வழங்கப் பட்டது போல வழங்கப் பட்டதல்ல.  இவர் ஓர் மாஸ் ஹீரோ இவரிடம் பெரிய கூட்டம் இருக்கிறது என்ற காரணத்தால் மட்டுமே. இவர் இப்போதுதான் விழித்துக் கொண்டுள்ளார். மாயையில் மூழ்கி சேதமடையாமல் தனக்கு உண்டான பேரை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மேலும் ஒவ்வொரு படம் வரும் போதும் தேவைக்காகவோ உணர்ச்சி வசத்தாலோ, கனவுகளுடனோ பிறர் எழுதிய வசனத்தை பேசியது உண்டு. ஆனால் எல்லாப் படங்களுமே இவருக்கு முழு வெற்றி தந்ததில்லை. இந்த செயல்பாட்டை தந்திரம், யுக்தி, சுயநலம் என்ற கோணத்தில் எல்லாம் விமர்சித்தார்கள். 


என்றாலும் கூட தமிழக மக்களுக்கு நேர்மையாக நடந்திருக்கிறார் தனது நிலையை விளக்கி. 


பாரத ரத்னா நிறைய பேருக்கு வழங்கப் பட்டிருந்தாலும் அதிலும் தரம் உண்டு. ஆட்சியை  வாய்ப்புகளால் பதவி ஏறி எவர் நடத்தினாலும் அதிலும் தரம் உண்டு.  கமல்ஹாசன், விஜய்காந்த் போன்றோர் சினிமாத் துறையில் இருந்து கிளம்பியோர் இன்னும் அரசியல் தேர்தல் களத்தில் உள்ளனர்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Sunday, December 27, 2020

டாஸ்மாக் மது பான விற்பனை பற்றி ஒரு விசாரணை ஆணையம் அமைத்தால் என்ன? கவிஞர் தணிகை

 டாஸ்மாக் மது பான விற்பனை பற்றி ஒரு விசாரணை ஆணையம் அமைத்தால் என்ன? கவிஞர் தணிகை



உண்மையிலேயே செய்தி ஊடகப் பிரிவில் மது விற்பனை பற்றி தமிழக அரசு மதுபானக் கடைகளின் விற்பனை பற்றி கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் சரியானதுதானா?


இந்த மதுபானக் கடைகளில்  பணிபுரியும் ஊழியர்களின் வருவாய்க்கு அதிகமான சொத்துகள் பற்றி அரசு ஒரு வெள்ளை அறிக்கை தர முடியுமா?



பொதுவாகவே மதுப்புட்டிகளுக்கு நமது குடிமகன்களிடம் உரிய விலைக்கும் மேல் ஐந்து பத்து ரூபாய் அதிகம் வாங்குவது என்கிற செய்தி உறுதியானதா? அது விற்பனையாளர்களின் தனிப் பட்ட பாக்கெட்டுகளுக்கு செல்வது என்பது உண்மையா?


அன்றாடம் கடையை மூடி கணக்கெடுத்து பூட்டி வரும்போது நன்றாக விற்பனையாகும் சரக்குகள் பில் போட்டு வெளி எடுத்துச் செல்லப் பட்டு கள்ளச் சந்தையில் மதிப்பை விட அதிகமாக விற்பனை செய்யப் பட்டு அந்த அதிகபடியான பணம் தனிப்பட்ட விற்பனையாளர்களின் பாக்கெட்டுக்கு போகிறது என்ற செய்தி எல்லாம் சரி பார்க்கப் படுமா?



மேற்பாரவையாளர்கள் எல்லாம் கோடிக்கும் மேலும், விற்பனையாளர் எல்லாம் பல இலட்சங்களிலும் பணம், பொருள், சொத்துகள் இருப்பதும் சேர்த்து வருவதும் சரியான செய்தியா?


இந்த ஊற்றில் ஆரம்பம் கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை கோடிக்கணக்கில் பணக்கற்றைகளின் விரிப்புகள் சென்றபடி இருக்கின்றன என்பது சரியான செய்தியா?



ஆளும் கட்சி, பிரதான எதிர்கட்சி இரண்டும் தான் இந்த மது ஆலைகள், உரிமம், விற்பனை, டென்டர் போன்றவற்றில் ஈடுபட்டு பெரும்பயன் பெறும் பயன் அடைந்து வருகின்றன இவை அரசின் கணக்கில் இருந்து பெருத்த வேறுபாட்டு இடைவெளியுடன் இருக்கின்றன‌


எனவே தான் மதுவிலக்கை அமலாக்க, டாஸ்மாக்கை மூட மறுத்து வருவதும் அது பெரிய தேர்தல் சக்தியாக உருப் பெற்று வருவதுமாக இருக்கின்றன என்பதும் ஆய்வுக்குரிய செய்தியாக இருக்கிற படியால்....


ஜெ இறப்பு பற்றி ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்த கதை தொடர்ந்து இன்னும் முடிவு சொல்லாதது போல அல்லாமல்


சூரப்பா அண்ணா பல்கலையின் துணை வேந்தரின் நிலை பற்றி விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்தது போல அல்லாமல்



உண்மையான மக்கள் சக்தி விரயமாகப் போவது பற்றி


ஒரு விசாரணை ஆணையம் அமைத்து மக்களை அவர் சக்தியை  உணர வைக்க, உண்மையிலேயே மக்களின் பணம் மதுவிற்கு எவ்வளவு பாய்கிறது? பாய்ந்து செல்லும் பணம் குவியல்  எங்கே பயனாகிறது? அதன் பயன் உண்மையிலேயே அனைத்து வருவாய் விவரங்களும் அரசுக்கேதான் அரசு சொல்வது போல மதுவிற்பனை வருவாயில் தான் அரசு இயங்குகிறது என்பது பற்றி எல்லாம் ஆராய்ந்து அறிக்கை தர முற்படுமா?



பத்திரிகை ஊடகங்கள் கூட இதில் உள்ள ஊடுருவி உள்ள செய்தியை வெளிக் கொண்டு வரலாம் உண்மையிலேயே மக்களுக்கான பணி செய்வதாக இருந்தால்....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Friday, December 25, 2020

காலை வணக்கம்: மக்களுக்காக சட்டமா சட்டத்திற்காக மக்களா? கவிஞர் தணிகை

 இது எனது காலை வணக்கம்: மக்களுக்காக சட்டமா சட்டத்திற்காக மக்களா? கவிஞர் தணிகை



சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காக சட்டமா? ஒரு மாதம் ஆகிறது எமது பஞ்சாப் மற்றும் சில மாநிலம் சார்ந்த ஒரு கோடிக்கும் மேலான விவசாய சகோதர‌ மக்கள் அங்கே தில்லியில் 3.6 சென்டிகிரேட் இருக்கும் பனிப் பொழுதுகளில் தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


ஒர் காலக் கட்டத்தில் கணக்கு வழக்கு காண்பிப்பதற்காக மக்கள் நலப் பணிகளை செய்வதா? அல்லது அந்த மக்கள் நலப் பணிகள் செய்த சான்றுகளை வழங்க கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வேண்டுமா?  என்று கேட்டுக் கொண்டிருந்தோம் அதே போல நிறைய கேள்விகள் உண்டு...


கோழியா முட்டையா முதலில் எது? என்பது போன்ற கேள்விகள் நிறைய நானிலத்தில்...


மத்திய அரசு பிரதமர் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றம் பாராளுமன்றம் போன்ற நாட்டின் உச்ச அமைப்புகள் வேடிக்கை பார்த்த படி இருக்கின்றன.


மந்திரி சொல்கிறார். பேச்சு வார்த்தைக்கு அவர்கள் சம்மதித்து இருக்கிறார்கள். அவர்களில் சட்டத்தை திரும்பப் பெறும் கோரிக்கை எல்லாம் இல்லை எனக் கூசாமல் பொய் பேசுகிறார். மற்றும் சில விஷச் செடிகள் அங்கே போராடுவார் எல்லாமே விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் இடைத்தரகர் தாம் விவசாயிகளே அல்ல எனக் கூசாமல் பேசுகிறார்கள்.அம்பானிகளும் அதானிகளும் பெரும் கிடங்குகள் ஏற்படுத்தி காத்திருக்கின்றன‌ நிரம்ப பொருட்களை இருப்பு வைத்த பொருட்களை தக்க நேரத்தில் விற்பனை செய்து மேலும் மேலும் உயரம் சென்று வாழ வழி செய்து காத்திருப்பதாக செய்திகள் இருக்கின்றன.


என்ன நாடா இது?  சட்டத்தை திரும்ப பெற்றால் அரசின் நிறுவனத்திற்கு மிகக் கேடான முன் உதாரணம் ஏற்பட்டு விடும் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். தேர்தலில் மறைமுகமாக உச்ச பதவியை கட்சிகள் மூலம் மட்டுமே தீர்மானம் செய்து எடுத்துக் கொண்டவர்கள் பெரு நிறுவன முதலாளிகளின் வேலைக்காரர்களாகவே போய்விட்டார்கள் மக்களின் வேலைக்காரர்களாக இருக்க வேண்டியவர்கள்.



அய்யாக்கண்ணு போன்றோர் அங்கே சென்று போராட்டக் களத்தில் கலந்து கொள்ள முடியாமல் தடுத்து திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறோம் என்ற ஊடக செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். இன்றைய காலக் கட்டத்தில் ஊடகங்கள் எல்லாம் இந்த செய்தியை முடிந்தவரை பெரிதாக்காமல் அரசு எப்படி எல்லாம் அந்தப் போராட்ட உத்திகளை காயடித்து வீரியத்தை குறைக்கச் செய்து நீர்த்துப் போகச் செய்வது என்பது போன்ற தவறான விளையாட்டுகளைப் பற்றி எல்லாம் அதிகம் வெளிப்படுத்தாமலே வாளாவிருக்கிறது.


தமிழக முதல்வர் தூத்துக்குடி 12 பேர் துப்பாக்கி சூட்டை எட்டிப் பார்த்து கூட பாதிக்கப் பட்டார்க்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் போகாமல் இருந்தது போல பிரதமர் தலைநகரில் போராடும் கோடிக்கணக்கான மக்களை எட்டிப் பார்க்காமல் இருக்கிறார். 



ஆனால் பொற்கோவிலில் சென்று பிரார்த்தனை செய்கிறார்.

பொற்கோவிலில் சென்று பிரார்த்தனை செய்வதை விட விவசாயப் பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்றுவதையே இயற்கை அதிகம் நேசிக்கும் என்று சிறிய உண்மையைக் கூட உணராத தலைவர்கள் தாம் நமது ஆட்சி அமைப்பில் உச்சத்தில் அமர்ந்து நமை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். நாமும் நமது வாழ்வை அதன் நலத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றமானது ஒரு நிதி சேர்த்து அங்கே பயணம் சென்று கலந்து கொண்டால் அதில் நானும் கலந்து கொண்டு எனது உயிரையும் பணயம் வைக்கத் தயாராக இருக்கிறேன்.அது மட்டுமல்லாமல் ஏன் அந்த போராட்டத்தில் மற்ற ஒத்துழைப்பாளர்கள் சென்று கலந்து கொள்வது தடுக்கப் படுகிறது என உச்ச நீதிமன்றம் வரை செல்லுமாறு ஒரு வழக்கை பதிவை செய்ய வேண்டியதும் சரியான நடவடிக்கைதான். கொரானா 19 புதிய உருக்கள் எடுத்து உலகெலாம் பரவும் இந்தக் காலக்கட்டத்தில் அந்த கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் மக்கள் பற்றி நாடும் நாட்டு மக்களும் சொரணை இன்றி வாழ்ந்து வருவது நமக்கெலாம் இழுக்கு.


இந்த நாட்டில் எனது ஒரு நண்பர் சொல்வது போல மக்கள் எல்லாம் குற்றவாளிகளாக இருப்பதற்கான தளங்களே விரிக்கப் படுகின்றன. இலஞ்சம் வாங்குவாரை பிடித்து செய்தியாக்குவதை விட இலஞ்சம் கொடுப்பாரைத் தான் முதலில் நாடும் சட்டமும் கவனிக்க வேண்டும். ஏன் எனில் ஒரு சட்டம் போடப் படும்போதே அதை எப்படி மீறுவது என்பதை சாமனியனுக்கு கற்றுக் கொடுத்து அதிலும் புறம்பான வருவாயை ஈட்டி விடுகிற ஆற்றல் உள்ள அரசியல் பின்னணி உள்ள அரசு அலுவலர்களும் பொது நாட்டு நலம் பற்றிய அக்கறை சிறு துளியும் இல்லாத மக்களே இந்த நாட்டின் ஜனநாயகத்தின் தூண்களாய் நிரம்பிக் கிடக்கிறார்கள்.


பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை, மின் துறை, இப்படி இருக்கும் எல்லாத் துறைகளுமே ஊழலின் ஊற்றுக்கண்களாகவே விளங்குகிறது என்பதை தமிழகத்தின் ஆளும் கட்சிகளாக  கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக இருந்த கட்சிகள் ஒன்றை ஒன்று ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் குற்றம் சாட்டி வருவதை நாம் கவனிக்கும் போது இது என்ன அரசியல், என்ன தேர்தல் என்றெல்லாம் இயல்பாக கேட்கவே தோன்றுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


 

Sunday, December 20, 2020

பாவக் கதைகள்: Netfilix cinema: கவிஞர் தணிகை.

 பாவக் கதைகள்: பார்க்காதீர்கள்: கவிஞர் தணிகை

??????????????.....

மனசை கசக்கிப் பிழிந்து மிகவும் பாதிப்படைய வைத்து தூங்க விடாமல் செய்து விடுகிறது.

இந்தப் படத்தில் சொல்லப் பட்ட 4 கதைகளும் இனி கதையோடே போய் விட்டால் பரவாயில்லை.சமூகத்தில் நேற்று கூட ஒரு சிறுமி வன்புணர்ச்சி பற்றிய ஒரு செய்தி வந்திருந்த நிலையில் இந்தப் படங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.



பார்க்காதீர் என்றால் தான் நம்ம ஆட்கள் பார்ப்பார்கள்.  அதில் என்ன அப்படிப் பட்ட பாவங்களை பதிவு செய்திருக்கிறார்கள் எனில்


1. ஒரு திருநங்கை சமூகத்தால் வதம்

2. ஒரு சிறுமியின் வன்புணர்ச்சியும் அதிலும் அவளது அண்ணனது கல்லூரித் தோழன் ஒருவனே ஈடுபடுவதும் அவனை ஆண்குறியை அறுத்து பலி வாங்குவதும், அந்த வான்மகளை ஆனந்த யாழை மீட்டுகிறாள் பாடி பெற்றோர் தேற்றுவதும்...


3. இரட்டைப் பிறவி அஞ்சலிகளின் தந்தை ஆணவக் கொலையில் ஈடுபட்டு ஒரு விஷத் தாயோ... ஆம் அப்படித்தான் அந்தக் குட்டையனை அழைக்க வேண்டும் அவனை தோற்கடித்து ஒரு அஞ்சலி மீள்வதும்...ஒரு அஞ்சலி அவர் விரும்பிய கார் ஓட்டுனர் இருவரும் பலி செய்யப் படுவதும்


4. ப்ரகாஷ் ராஜ் அப்படி ஒரு குரூரமான அமைதியான வில்லத்தனம் செய்வதும், நடிகை சாய் பல்லவி முழுகாது குழந்தையை வயிற்றில் வைத்திருக்கும் தாயாக இருந்து இரத்த வாந்தி எடுத்து கருக் கலைந்து போவதும் தான் இறப்பதுமாக...





அரை மணி நேரம் என 4 கதைகள் என இரண்டு மணி நேரத்துக்கு ஒரே டைட்டில்: பாவக் கதைகள் என.உண்மையிலேயே இவை பாவக் கதைகள் தாம்.


கண்ண தாசன் சொல்வாரே அது போல உலகெலாம் மதுவிலக்கு வேண்டும் அதற்கு தான் ஒருவனே எல்லா மதுவையும் குடித்து விட வேண்டும் என்பது போல‌

மதுவால் சீரழியும் ஒருவர் மதுவின் தீமை பற்றி விளக்குவதுமான  தகுதி உள்ளது என்ற‌ கண்ணோட்டத்தில் இந்த பாவக் கதைகள் எடுத்து உள்ளார்கள். ஒரு வேளை இது போன்ற படங்கள் மாறுதல் விளைக்குமா நம் சமூகத்தில் என.



அதெல்லாம் வேலைக்காகாது நண்பர்களே:

மொத்தத்தில் இளகிய நெஞ்சுள்ளவர் எவரும் இந்தப் படத்தை இலவசமாக காட்டினாலும் பார்க்காதிருப்பதே நல்லது

மனசு கெட்டுப் போகிறது. 11 மணி வரை இரவில் பார்த்த இந்த குறு நாவல் கதைகள் எனை உறக்கம் வராமல் செய்து 3 மணிக்கே எழுந்து உடல்நிலை பாதிப்பேற்படுத்தி விட்டது...


குறு நாவல்களை படிக்காமல் பார்க்கலாம் என இதன் தயாரிப்புகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதும், இதற்கு அதிகம் பொருட் செலவில்லாமலே ஒவ்வொரு 2 மணி நேரக் கதையையும் அரை மணி நேரத்தில் கொடுத்ததில் இவர்களின் வெற்றி 20 ஓவர் மேட்ச் போல ...இந்தியா வரலாற்றுப் பதிவில் இடம் பெற, 36 ரன்னுக்கு ஆல் அவுட் ஆஸ்திரேலியாவிடம்...ஆனது போல நாமும் இந்தப் படத்தால் ஒரேயடியாக அவுட் ஆகி விடுகிறோம்.


வாழ்த்து சொல்வதா? வேண்டாமா? கருப்பொருள் தொந்தரவு செய்கிறது. எடுத்த விதம் வாழ்த்த சொல்கிறது.


கௌதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்காரா, விக்னேஷ் சிவன் என இயக்குனர்கள் 3 மணி நேர சினிமாவுக்கு விடை கொடுத்து விட்டு அரை மணி நேரத்துக்கொரு முறை இடை வெளி விட்டு கூட ஒவ்வொரு கதையாக பார்க்கலாம். சினிமா வடிவங்கள் மாறி வருகின்றன. இது போன்ற சினிமா பற்றிய மாயைகள் மறைய நிறைய இது போன்ற படங்கள் வர வேண்டும். சில்லுக் கருப்பட்டி போல இதுவும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

மறுபடியும் ஒரு வெற்றிக் கதை: கவிஞர் தணிகை

 மறுபடியும் ஒரு வெற்றிக் கதை: கவிஞர் தணிகை



மிகச் சுருக்கமாகவே சொல்ல விழைகிறேன். நான் வாழ்வின் மூன்றாம் சுற்றில் இருக்கிறேன். போராடியே வாழ்வில் பெரும் பகுதி கடந்து விட்டது. இப்போது கடந்த வாரத்தில் தமிழக மின் வாரியம் தனியார்மயம் ஆகாது என அந்த துறை சார்ந்த அமைச்சர் அறிக்கை. இந்த வாரத்தில் உதவியாளர்கள்,(ஹெல்பர்) ஒயர்மேன்(மின் கம்பி பணியாளர்கள்) ஆகியோர் இனி நேரடி நியமனம் இல்லை. தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் அமல். இப்படியாக....மத்திய அரசின் ஆளுகை, மேலாண்மை,அறிவுறுத்தல் , வலியுறுத்தல் மாநிலம் செயல்படும் அவலம் தொடர்கிறது நிர்பந்தங்களுடன் அதற்கு எந்த துறையும் விலக்கில்லை. எனக்கு நிதி வாய்ப்பிருந்தால் விவசாயிகள்  போர்க் கடலுடன் சென்று கலந்து சிறுதுளியாக கலந்து கொள்ள எண்ணம் உண்டு.


சரி இப்போது ஏன் மின் துறை பற்றி கதைக்கிறேன் என நீங்கள் கேட்பது புரிகிறது. எங்கள் வீட்டுக்கு மின் பிரச்சனை நிறைய உண்டு. வாக்குக்கு காசு வாங்குவது போல எல்லாம் எல்லாம்... ஆனால் அதில் நாங்கள் ஒரு வீடு அடங்க மறுப்பதால் எங்களுக்கு எல்லாமே பிரச்சனை ஒரு வரியில் சொல்வதானால் அவ்வளவுதான்.



அடிக்கடி மின்சாரம் துண்டாகி...பிரச்சனையாகும். அடிக்கடி நாங்கள் போராடி இந்த ஊரில் இட வசதி கட்டடத்துடன் அமைத்துக் கொடுத்த வாடகையில்லாமல் இலவசமாக இயங்கி வரும் உதவி மின் பொறியாளர் பராமரிப்பும் இயக்கமும் அலுவலகத்தை நாங்கள் முற்றுகை இட நேரிடும். நோட்டிலும் எழுத நேரிடும் இணைப்பை (ப்யூஸ் போட ) சரி செய்ய... மேலும் அடிக்கடி அறிவிப்பு இல்லாமலே சரக் சரக் என மின் துண்டு நிகழ்ந்து மின் சாதனப் பொருட்கள் பயனிழந்து போவதைப் பற்றி எல்லாம் சொல்லப் புக வில்லை.


உங்கள் மின் கம்பியை மாற்றுக என எங்கள் அக்கப் போர் பொறுக்க மாட்டாமல் சொல்லி விட்டார் மின் வடப் பணியாளர்(லைன் மேன்) இவர் அலம்பல் அதிகம். இவரிலிருந்து மேல் இருப்பார் வரை எல்லாரும் நல்லவரே. ஆனால் மக்கள் சரியில்லை தங்களது தேவையை விரைவாகச் சரி செய்து கொள்ள இவர்களுக்கு கொடுத்து கொடுத்து பழக்கி விட்டனர். வாங்குவதை விட கொடுப்பதுதான் முதல் குற்றம் என இவர்களை எல்லாம் தண்டிப்பதாக இருந்தால் நாட்டின் குடிமக்கள் அனைவருமே குற்றவாளிகள் எனச் சொல்ல நேரிடும் சில விதி விலக்குகள் தவிர. டாஸ்மார்க் குடியால் 50 சதம் கெட்டது போலத்தான் இதுவும், அதனால் தாம் சொன்னோம் வாக்கு வியாபாரம் பற்றியும்...


நாங்கள் குறிப்பாக எங்களது குடும்பம் போராட்ட குணம் படைத்தது. ஆரம்பத்தில் இருந்தே நான்50 ஆண்டுக்கும் மேல் அரை நூற்றாண்டுகளாக மதுவுக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் எதிர்ப்புடன்  இயங்கி வருகிறேன். நிறைய நேரங்களில் தனியாகவே...அதன் எதிரொலி, பின் விளைவுகள் பாதிப்புகள் என் வாழ்வில் நிறைய உண்டு. உறவின் வெறுப்புகளும், நட்பின் விரிசல்களும் எனக்கு உண்டு.


இப்போது பக்கத்து வீடு கட்டுகிறேன் என ஏற்பாடு. பழைய தலைமுறையில் எனது தந்தை அவரது சகோதரருக்கு கட்டிக் கொடுத்து ஏமாந்த கதை ஏமாற்றிய கதை வேறு அது நமது கதையின் கருப்பொருள் இல்லை. 



அவர்கள் இடத்தின் மேல் செல்லும் எங்களது மும்முனை இணைப்பை நான் எடுத்து வழி மாற்றி அவர்களுக்கு வசதி செய்து கொடுக்கிறேன் என ஏற்று மின் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தேன். வீட்டருகிருக்கும் ஒரு கம்பத்தில் மின் எங்கள் மின் இணைப்பை மாற்றித் தரச் சொல்லி மாதக் கணக்கில் கோரிக்கை வாய் மொழி, எழுத்து வழி இப்படியாக.ஊ ஹூம்...கிணற்றில் போட்ட கல். நான் தொலைக்காட்சியில் பேசியவற்றை, வானொலியில் பேசியவற்றை, ஊடகத்தில் பத்திரிகையில் எனது செய்திகள் வெளிவந்தததைப் பற்றி எல்லாம் அதிக ஆண்டுகள் ஆனதால் உலகு எனை அத்துடன் எல்லாம் சேர்க்காமல், இப்போது ஊடக வெளிச்சம் பெறுவாரை பெருமையுடன் பேசிடும் நாட்களில் நான் எனது காலத்தை நினைத்துப் பார்க்க நேரிட...


அது போல எனது போராட்ட முறைகளுக்கு மாறாக...காலம் போதியவை கொடுத்துப் பார்த்தேன்... கடைசியாக மின் வாரியத்திற்கு புகார் எழுத்துவடிவத்தில் கொடுத்தேன். மேலும் பங்கஜ் குமார் மிஸ்ரா ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நிலை விளக்கி ஒரு மின்னஞ்சல் புகார் செய்தேன் ஒரு நாள் தாமதமான இரவில். இவர்தாம் மின் துறையை தனியார் மயமாக்குவதில் மும்முரமாய் இருக்கும் மின் துறைத் தலைவர் என எனது உள்ளூர் தோழர் ஒருவர் கூறினார். அதெல்லாம் வேறு. இவர் எடுத்த நடவடிக்கை மறு நாள் காலையில் இருந்தே துவங்கியது. மின்னல் போன்ற நடவடிக்கை.


பின் கண்காணிப்பு பொறியாளர் செயல் பொறியாளர்க்கு எழுதிய கடிதம்  எனக்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு இருக்கிறது என எனக்கும் அந்த செய்தி தெரிவிக்கும் கடிதம் அனுப்பப் பட்டு குறை தீர்த்து பிரச்சனை அதாவது இரு கம்பத்துக்கு இடையே இரு கம்பிகள் 72 அடி அல்லது சுமார் 22 மீ நீட்டிக்கப் பட்டு இணைப்பை மாற்றித் தர வேண்டியது நடைபெறும் நிறைவேறும் என...


தலைமைப் பணியாளர் முடியாது என்றார், ஆனால் உதவி மின் பொறியாளர் முடியும் என்று முடித்து வைக்க காரணமானார். இடையில் லைன்மேனுக்கும் என் மேல் வருத்தமே. இவன் என்னடா இப்படி பண்ணி இருக்கிறான் என...



நான் உதவி மின் பொறியாளர் வசம் பேசும்போது குறிப்பிட்டேன். நான் இப்படிப்  பட்டவன் தான் . எவ்வளவு நாள் பார்ப்பது பொறுப்பது கேட்பது வேறு வழி இல்லை நிர்பந்தம் எனை இப்படிச் செய்யத் தூண்டியுள்ளது. மற்றபடி எனக்கு யாருக்கும் எந்த தொந்தரவும் தர எண்ணமில்லை என.... முக தாட்சண்யம் எனக்கும் உண்டு. மனிதர்கள் எனக்கும் வேண்டும் என்றுதான்...


ஆனாலும் இந்த மனிதர்கள் ஏன் இப்படிப் போனார்கள்?

போராடத் தயாராக இல்லாமல்

தமது வாய்ப்பும் வரும் என வரிசையில் காத்திருக்க முடியாமல்

காலத்துடன் காத்திருக்க முடியாமல்

நேர்மை , உண்மை இல்லாமல்

சரியான ஆட்சி, சரியான ஆளுமை, சரியான மனிதர்க்குரிய குணாம்சங்கள் ஏதுமின்றி

இந்த மனிதர்கள் ஏன் இப்படி ஆகிப் போனார்கள்?


அதே துறையில் பணி புரிந்து வருவாரும், பணியில் இருந்து ஓய்வு பெற்றோரும் கூட காலப் போக்கில் முக்கிய நீரோட்டத்திலேயே எதிர் நீச்சல் ஏதுமின்றி அரசு எப்படி மக்களை குற்றவாளிகளாகவே வைக்க வலை அமைக்கிறது என எனது உள்ளூர் தோழர் சொல்வதற்கு ஏற்ப இரையாகிறார்கள் என்பதையும் கொடுத்து கொடுத்து பணியாளர்களை, வேலையாட்களை, சேவகர்களை, எப்படி எஜமானர்களாக்கி விடுகிறார்கள் என்பதுவே எனது கேள்வி...



இவை என்று நேராவது...அப்படி நேரானால் மட்டுமே நல்லாட்சி பற்றி எல்லாம் எவருமே சிந்திக்க நினைக்க துளிர்கள் முளை விட ஆரம்பிக்கும்...இல்லையேல் இப்படியே எம் போன்றோர் எல்லாம் போராடிப் போராடியே நாங்களும் வேதனைப் பட்டு எமை வாழ்வில் ஏற்றுக் கொண்ட சுற்றம் சூழத்திற்கும் இந்த துன்பப் பகிர்வை அளித்துக் கொண்டே சென்று சேர வேண்டியதுதான்...



ஒருவர் சொன்னார்

உங்களைப் போல ஒருவராவது வேண்டும் என,

மற்றொருவர்

உங்கள் சேவை மகாத்மா, அன்னை தெரஸா போன்றது என‌

இன்று மற்றொருவர்

உங்கள் எழுத்துகளும், வாழ்வும் ஒரேமாதிரியானதுதான். நீங்கள் மாமனிதர் சார் என....


இந்த ஊக்கமும் உற்சாகமும் அந்திமக் காலத்தில் நாவில் விழும் சிறு தேன் துளிகளாக இருப்பது தவிர எம் போன்றோர்க்கு வாழ்வு மாறப் போவதில்லை. இன்னும் நாங்கள் அசிங்கம் பிடித்த மனிதர்களுடன் தாம் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது அன்றாடம் அப்படிப்பட்டவர்களுடன் தாம் வாழ வேண்டியுமிருக்கிறது.


இந்த வெற்றியால் எனக்கு மகிழ்வே இல்லை. ஒரு பிரச்சனை மிக அதிகபட்ச உச்சத்திற்கு எல்லாம் செல்லாமல் முடிந்ததே என்ற ஒரு நிம்மதி அவ்வளவுதான். அதன் பகிர்வே இந்தப் பதிவும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, December 18, 2020

தலைமைப் பண்பு: தலைமை: கவிஞர் தணிகை

 தலைமைப் பண்பு: தலைமை: கவிஞர் தணிகை



1. சேக் தாவுத்,2,செந்தமிழ்த் தேனீ,3. ரம்யா அசோக்,4. இளம் பேச்சாளர் ராஜி.

தலைமைப்  பண்பு என்றவுடன் அப்துல் கலாம் என்ற தீபத்தை அணையாமல் காத்து வெளிக்காட்டிய விக்ரம் சாராபாய் இந்திய இஸ்ரோ குழுவினர் முதல் திட்டத்தில் தோல்வியை சந்தித்த போது தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு அந்த தோல்விக்கு தாமே காரணம் என்றதும் மிஷன் வெற்றி பெற்றதும் கலாமை முன்னிறுத்தி ஊடகத்தினருடன் கலந்துரையாட வைத்ததும் முதல் குறிப்பாக நினைவில் நிற்கிறது.(பேராசிரியர் சதீஸ் தவான் is right here it is not டாக்டர் விக்ரம் அம்பாலால் சாராபாய் எனக் குறிப்பிட்டது தவறு...பேராசிரியர் சதீஸ் தவான் என்பதே சரி...))

இங்கு இந்த தமிழ் நாடு அன்பு வழி நற்பணி மன்றத்தின் பயிற்சிக்கான பாடத்திட்டத் தயாரிப்புக்கான 4 குழுவினருள் எமக்கு தலைமைப் பண்பு என்ற பாடத் தயாரிப்பு வழங்கப் பட்டிருப்பது எமக்கெலாம் பெருமை மிகு மகிழ்வே காலத்தின் பதிவே.

இதன் தலைமை ஏற்று இருக்கும் கவிஞர் தணிகையாகிய அடியேனும் எமது குழுவில் மிகவும் இளையோராகிய இளம் பேச்சாளர் ராஜி அவர்களை முன்னிருத்தி இந்த பாடத் திட்டத்திற்கான தலைமைப் பண்பு என்ற தலைப்புக்கான பாடத் திட்ட வடிவை சமர்ப்பிக்கலாம்  என முடிவெடித்து அவர் மூலம் எங்கள் குழுவின் சார்பாக சமர்ப்பிக்கிறோம்.

உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை காலச் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் இடம் பெறாதவர்கள் பற்றியும் இந்தக் காலக் கட்டத்தில் நினைத்துப் பார்க்கிறோம் எங்கள் தலைப்பை ஒட்டி எண்ணிறந்த தலைவர்களின் பெயர்களும் அவர்களின் குணாம்சங்களும் குறை நிறைகளும் எஙகள் மனதில் பெரும்புனலாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

அலெக்ஸாண்டர் உலகையே வெல்ல எத்தனித்து கையில் ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை என்று தனது உயிரற்ற உடலை எடுத்துச்  செல்லும் போது தனது கரத்தை வெளியில் காண்பிக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற தனது இறுதி விருப்பத்தை வெளிப்படுத்தியதாக வரலாறு சொல்கிறது.

ஆங்கிலேயர் உலகையே தனது குள்ள நரித் தந்திரத்தின் மூலம் வளைத்து விடலாம் என மனப் பால் கொண்டிருந்தனர் அவர்கள் பேராசையும் மண்ணாய்ப் போனது என்பதை உலக சரித்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறது.








அக்பர் (பள்ளி சென்று பாடம் பயிலாதவர்)

3ஆம் வகுப்பு வரை படித்தவர் ஆண்ட காலம் பொற்கலாம் என்று சரித்திரத்தில் நாம் படித்து வந்தோம்காமராசரும் தமிழகத்தை ஆண்ட காலம் மிகவும் முக்கியமானது எனக் கருதப் படுகிறதுஅவர் படிக்காத மேதை என்று புகழப் படுகிறார்

சித்தார்த்தர் என்னும் இளவரசர் கௌதம புத்தராகி ஞானம் பெற்று மனித குலத்தின் துன்பம் எல்லாம் தீர ஆசையே அழிவுக்கு காரணம் என்ற ஞானோபதோசேத்தை வழங்கி துறவின் வழி சென்றார்.உயரிய அறிவு சிகரம் எட்டுவதையே ஞானம் எனலாம் மனித குலம் அப்படிப் பட்ட நிலையை எட்டுவது என்பது இலக்கு என்றான போதும் பசி வந்திடப் பற்றும் பறந்து போம் என்ற பழமொழிக்கேற்ப உடற் பசியா அறிவுப் பசியா என்று கேட்கும் போது உடற்பசி தீர்த்தலே முன் வந்து நிற்கிறது இங்கு நாம் சொல்லப் புகுவது வயிற்றுப் பசி . உண்மையில் உடற்பசி என்பதும் கூட உணர்வுப் பசியாக‌ வந்து விட்டால் அறிவுப் பசி அல்லது அறிவு என்பதும் பின்னுக்குத் தள்ளப் படுவது என்பது காமத்தில்.

காமம் என்பது அறிவை சிதைக்கிறது எனவே அதைக் கைவிட்ட ஞானிகளும் உண்டு,அதை அளவாகப் பயன்படுத்தி மனித குலத்துக்கு புதிய பிறப்பென புதிய ஆக்கபூர்வமான‌ சக்தியாக மாற்றி மனித குலத்தின் துன்பம் துயர் தீர்க்க மனித சக்தியாக மாற்றி புனிதம் தேட வேண்டும் என முயன்ற தலைவர்களும் உண்டு மகாத்மா காந்தியின் காமத்தின் வழி விளைந்த அதன் வழி விழைந்த அதை ஆற்றொழுக்குப் படுத்திய அதிலிருந்து மீண்ட அத்தியாயங்கள் மனிதர்கள் கற்க பாடமாகும்.

தலைவர் அல்லது தலைமைப் பண்பு என்பது எவ்வாறு இருக்க வேண்டும்ஆள்வது அதாவது மக்களுக்கான நல் வாழ்வைத் தர நிர்வாகம் செய்வது

உழைப்பது என்பது மட்டுமே ஒரு தலைவருடைய வேலையாக ஏன் இருக்க வேண்டும்?




ஏன் என்றால் விண்வெளிபூமிஉயிர்களின் தோற்றம்மனித குல வரலாறு என்பதையெல்லாம் கவனிக்க ஆரம்பித்தால் உயிர்கள் என்றான பின் பசி என்பது மனிதரை மட்டுமல்ல உயிர்களை எல்லாம் வாட்டும் ஒரு இன்றியமையாத் தேவையாகிறதுஎனவேதாம் இதை பசிப் பிணி என்றார் ஆன்றோர்எனவேதாம் பசிப் பிணி தீர்த்தலையே தமது தலையானப் பணியாக இராமலிங்க வள்ளலார் என்ற புனிதர் தமது புனிதப் பணியாகவும் முதற் பணியாகவும் ஏற்றுக் கொண்டு பசிப் பிணி தீர வடலூரில் அணையா அடுப்பு ஏற்படுத்தி நாடிச் செல்லும் அனைவர்க்கும் உணவு வழங்கி அருட் பெரும் ஜோதி தனிப்பெருங் கருணை என்றும் வாடிய பயிரைக் கண்டபோதெலாம் மனம் மிக வாடினேன் என்று மனிதத்தின் சிகரம் ஏறி உச்சியில் வீற்றிருக்கிறார்அதையே தமது முதல் குறிக்கோளாக தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றமும் கொண்டிருக்கிறது என்பதை நாம் சொல்லாமல் மேற் செல்ல முடியாது.






Earth provides enough to satisfy every man's needs, but not every man's greed.” Mahatma…

புவியில் உள்ள அனைத்து உயிர்களின் தேவைக்கும் பூமியில் போதுமான வளம் இருக்கிறது ஆனால் பேராசைக்கு எந்த கிரகத்தில் குடியேறினாலும் அவை யாவும் போதாது. (இது மகாத்மா முன் சொன்ன வார்த்தைகளின் புது வடிவம்)




ஆக தலைமைப் பண்பு என்பதில் புவி உயிர்க்கெலாம் பசி தீர்த்தல் என்பதோடு மட்டும் 

தலைவரின் உழைப்பும் பணியும் தீர்ந்து விடாது,அதற்காக உயிர்களை நெறிப் படுத்தல்

 வேண்டியதும் அவசியம்அதற்கு முதலில் தலையாய உயிரான மனித உயிர்களை 

னித குலத்தை அதற்கேற்றவாறான அடிப்படைத் தளத்தில் ஏற்றியாக வேண்டும்அப்ப

டிப் பட்ட செயல்பாடுகளின் போது குற்றம் செய்வாரை தண்டிப்பதும் அதன் மூலம் மறு

படியும் குற்றம் நேராதபடி சமுதாய அமைப்பு குலையாத படியும் பார்த்துக் கொள்ளல்

 அவசியம்எனவே அந்த தலைவரே முதலில் அதற்கேற்றவாறான நெறியாளராக இரு

க்க வேண்டியது அதி அவசியம்அப்போதுதான் சரியான தொண்டர் படை ஏற்பட வழி 

பிறக்கும் இல்லாவிட்டால் குண்டர் படை ஏற்படும்ராஜிவ்காந்தி சதைத் துகளாக மனித

 வெடிகுண்டால் பிய்த்தெறியப் பட்ட பின்,இந்திரா சீக்கியரால்  பாதுகாவலராய் இருந்

தே சுடப்பட்ட

பின்,

 காந்தியின் சௌரி சௌரா கலவர அமைதிப்படுத்த முயன்ற‌ கதைஇந்திய சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட இந்து முஸ்லீம் வேற்றுமைக் கலவரங்கள்,அதை அமைதிப்படுத்த காந்தியாரின் நவகாளி யாத்திரைஇப்படி பல் வேறுபட்ட காரணங்களால் ஏதோ ஒரு காரணத்தால் மனித குலம் அழிக்கப் படும் குண்டர் படையால்.

அதன் பேர் உலகப் போராய் இருக்கலாம்அமெரிக்காவின் இரட்டைக் கோபுர அழிப்பாய் இருக்கலாம்ஈழத்து இனப் படுகொலையாக இருக்கலாம்,சீனத்து தியானன்மென் போராட்ட அடக்குமுறையாக இருக்கலாம் அல்லது ஜப்பானின் நேரந்தவறாமையைக் கடைப்பிடிக்க பள்ளியின் இரும்புக் கிராதி உள்ளே வர முயன்ற பூம்பஞ்சுக் குழந்தையின் சிறு உயிராய் இருக்கலாம்கும்பகோணத்து பள்ளியின் தீ விபத்தாய் இருக்கலாம்பஞ்சாப் படுகொலையாக இருக்கலாம் அல்லது பல்வேறுபட்ட உயிர்க் கொள்ளை போகும் விபத்துகளாய் இருக்கலாம் இப்படி பல்வேறுபட்ட வடிவங்களில் அவை நடக்கும் அவற்றுக்கு எல்லாம் பின்னால் தலைமை தாங்கும் மூளையின் வெறித்தனம் இருக்கும்ஆனால் இதில் எல்லாம் தொன்று தொட்டு மடிவதும் மாய்வதும் கோடிக்கணக்கான‌ அப்பாவி மனித உயிர்களே...




 ஆல்ப்ரட் நோபெல் வெடிமருந்தைக் கண்டு பிடித்தது முதலில் ஆக்கபூர்வமான பணிகளுக்கு மட்டுமே என்றார் இப்போது அமைதிக்கான நோபெல் பரிசு கொடுக்கப் படும் போதும் உலகெங்கும் அமைதியும் அறப்பணியும் இல்லாமல் உலகெங்கும் உயிர்கள் குடிக்க நீர் இன்றிஉண்ண உணவின்றிஉடுக்க உடையின்றிபிணிக்கு மருந்தின்றிஇளையோர்க்கு கல்வியின்றி வேலையின்றி,அடிப்படைத் தேவையைக் கூட நிறைவு செய்து கொள்ள முடியாமல் கொலைகொள்ளைபசிபஞ்சம்பட்டினி,மதுபுகை,போதை ,எனத் தாறுமாறாக போய்க் கொண்டிருக்கின்றன பல் வேறுபட்ட பாதைகளில்.

ஆனால் எல்லா நாடுகளிலும் மக்களாட்சி முறை என்ற பேரில் கட்சிகளும் ஆட்சிகளும்

 தலைவர்களும் இருப்பதாக பேர் இருக்கின்றன.மன்னராட்சியும்பிரபுத்துவ ஆட்சியும்முதலாளித்துவ ஆட்சியும் மறைந்துவிட்டன எனச் சொல்லப் படுகின்றனஆக ஒரு சரி

யான மக்களாட்சி முறையை ஏற்படுத்த

வேண்டிய நெறி ஒரு தலைமைப் பண்பு இருப்பார்க்கு எல்லாவற்றையும் விட தலையாய பணியாகி விடுகிறது.

தலைமைப் பண்பு அல்லது ஒரு தலைவருக்கு என்ன என்ன பணிகள் என இது வரைக் குறிப்பிட்டிருக்கிறோம் எனில்

1.உயிர்களின் உறு பசிப் பிணி தீர்த்தல்

 2. மக்களை அறநெறிப் படுத்தல். 3. அதற்கான தொண்டர் படையை உருவாக்குதல். 4. உண்மையான மக்களாட்சிநிர்வாகம்ஆகியவற்றை ஏற்படுத்தல் ,

5. அது மட்டுமல்ல எல்லாருக்கும் சம வாய்ப்புகள் ஏற்படும் வண்ணம் பொருளாதார முறைகளை வகுத்தெடுத்தல் சம வாய்ப்புகளை உண்டாக்கித் தருதல் ஆகியவற்றை இப்போதைக்குச் சொல்லலாம்.

இது போன்ற முயற்சிகளுக்காகவே சோசலிசம்கம்யூனிசம் போன்ற தத்துவங்களும் ஏற்பட்டனஏன் ஆன்மீகம் எல்லாவித கட்சிமதம் , போன்ற  அமைப்பு வழிகளிலுமே மனிதர்களின் துன்பம் துயர் துடைத்தலே இலக்கு என சொல்லப் பட்டு துவங்கப்பட்டு இலக்கு நோக்கி போகாமலே பயணம் செய்து கொண்டுள்ளனபிறகு ஏன் அந்த இலக்கை தொட முடியவில்லை...மறுபடியும் நாம் சுழற்சியின் தொட்ட இடத்திற்கே வரலாம்நல்ல தலைவர் இல்லாமையும்நல்ல தலைமைப் பண்பு உள்ள நல்ல தலைமைகள் ஏற்படாமையும் அல்லது கிடைக்காமையும் அல்லது அப்படிப்பட்ட தலைமைகள் இருப்பதை மக்கள் கூட்டம் தெரிந்து புரிந்து உணர்ந்து அவர் பின் அணி திரளாமையும்

மக்கள் சாதாரணமாக ஒரு தலைமையின் பின் அணி திரளமாட்டார்கள்.

இது இன்று நேற்றல்லசாக்ரடீஸ் காலத்தில் இருந்தே மக்களது வாக்கு என்பது அவர் சாக வேண்டுமா உயிருடன் விட்டு விடலமா என்ற வாக்கு எடுப்பு நடத்திய காலத்தில் இருந்தே வாக்கு எடுப்பு அவருக்கு எதிராக இருந்ததாலேயே அவர் நஞ்சுக் கோப்பையை சீடர்களின் விருப்பத்துக்கும் மாறாக ஏந்தி உயிரை மாய்த்துக் கொண்டார்.' காமராசர் என்னும் மாமனிதரும் வாக்களிப்பு முறையில் தோற்கடிக்கப் பட்டவர்தான்.

சரி அதனால் என்ன  தோற்றவர்கள் எல்லாம் சரியான தலைவர்கள் இல்லையா? வென்றவர்கள் அனைவருமே சரியான தலைவர்கள்தாமா? ஒரு தலைவர் தன்னுடைய வாழ்நாளில் தேர்தலில் தோற்றதே இல்லை. ஆனால் அவர் பேர் பின் அவர் பேரப் பிள்ளைகள் தலைமை ஏற்றிருந்தும் அந்தக் கட்சி ஏன் பின்னடைந்து கொண்டே இருக்கிறது என்பதெல்லாம் பேசப் பட வேண்டியவைதாம். அவர் நாம் இலக்கணப் படுத்த வேண்டும் என்ற தலைமைப் பண்புடன் இல்லை. ஆனாலும் அவர் பின் ஒரு மாபெரும் கூட்டம் இருக்கிறது. கூட்டம் என்பதற்கும் மக்கள் என்பதற்கும் மாக்கள் என்பதற்கும் வேற்றுமைகள் நிறைய உள்ளன. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது மன்னராட்சி பழமொழி. மக்கள் எவ்வழி ஆள்வோர் அவ்வழி இது மக்களாட்சி புது மொழி. இங்கு நமது பாடம் மக்களைப் பற்றி சொல்வதல்ல தலைமைப் பண்பு என்று தலைமையைப் பற்றி சொல்வது எனவே தலைப்பை ஒட்டியே செல்ல முயல்வோம்.

சரி அப்படி  எனில் தலைவர்களே இது வரை உலக வரலாற்றில் தோன்றவே இல்லையே என்றால் எண்ணிலடங்கா தலைவர்கள் தோன்றியுள்ளனர். உலகைத் திருத்தும் உத்தமர்கள் அவதரித்துள்ளனர்.  தேசத் தலைவர்கள் வழி நடத்தியுள்ளனர். எந்த நாட்டுக்கும் இல்லாத சிறப்பாய் உலகுக்கே ஒரு உன்னத வழியில் காந்தி தேசம் அஹிம்சை சத்யம் சத்யாக்ரகம் என்ற வழிகளால் உயிர்ப்புற்று சுதந்திரம் அடைந்தது. அதற்கு தியாகம் செய்த கோடிக்கணக்கான தலைவர்கள் வரலாற்றில் நிறையப் பக்கங்கள் தேடி எடுக்க முடியாமலே காலத்தின் இயற்கையோடு கரைந்து போயின. அவர்கள் பேர் ஊர் விலாசம் தெரியாத போயினும் அவர்கள் செய்த இலட்சியப் பணி நம்முடன் இன்றும் சுடர் விடுகிறது.

சில தலவர்களை மட்டும் தொட்டுச் செல்வோம்இந்தியாவின் மகாத்மா காந்திஅப்துல் கலாம் ,அன்னை  தெரஸா அமெரிக்காவின்அப்ரஹாம் லிங்கன்வாஷிங்டன்கென்னடிமார்ட்டின் லூதர் கிங்,ரசியாவின் லெனின்,அந்த கம்யூனிச தத்துவம் தந்த ஜெர்மனியில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்த  கார்ல் மார்க்ஸ்ஏங்கெல்ஸ்கிரேக்கத்தின் சாக்ரடீஸ்.,வியாட்நாமின் ஹோசிமின்சீனத்தின் மாவோ,க்யூபாவின் பிடல் காஸ்ட்ரோ ,சேகுவாரா,துருக்கியின் கமால் பாஷாஅறிவியல் விஞ்ஞானி கலிலியோ.சிங்கப்பூரின் லீ குவான் யூ,ஜப்பானின் அஹிகிட்டோஇப்படி முக்கியமாக நாடாண்ட தலைமைகளில் இருந்து பல்வேறு பட்ட துறைகளில் உலகை திருத்திய உத்தமர்கள் ஏராளம்...அவை எல்லாம் சொல்லில் சொல்லி மாளாது...

சரி நாம் நல்ல தலமைப் பண்பு என்று சொல்வது எவற்றை எல்லாம் என்றால்:

தற்போதைய காலத்துக்கும் தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்திற்கும் ஏற்றவராக இருக்க வேண்டுமெனில்:

1. புகைக்காதவராக புகையிலையை பயன்படுத்தாதவராக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அது அவரை அவரது உடலை மட்டுமல்ல அதனால் அவரது குடும்பத்தை ஏன் பொது இடங்களில் பயன்படுத்துவதால் காற்று வெளியை பொதுச் சுற்றுச் சூழலைக் கெடுப்பதால்  அவர் நல்ல தலைமைப் பண்புடன் இருப்பவராக ஏற்றல் முடியாது...

2.மது அருந்தாதவராக இருத்தல் வேண்டும்அப்படி மது அருந்துவோராக இருந்தால் அந்த அரக்கன் அவரை மட்டுமல்ல அவரது குடும்பநாடு அனைத்தையுமே நரகமாக்கி விடுவான்மதுவுக்கு எதிராக போராட வேண்டும் ஏன் எனில் மது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது சமுதாய பின்னடைவுக்கும் சமுதாய தீமைகளுக்கும் ஆணிவேராக இருப்பதால்.

3. போதைப் பொருட்கள்குட்கா பான் பராக் பான் மசாலா:போன்றவை உட்படஇவற்றின் பயன்பாட்டை ஏற்காதவராகவும் இதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாதாராகவும் இருக்க வேண்டும். (கஞ்சாஅபின்எல்.எஸ்.டி போதை மாத்திரைகள்மார்ஜ்வானா,போதை மருந்துகள்போன்ற எந்த வடிவத்தில்இருந்தாலும் )

மேற்சொன்ன 3 மனித அழிவுகளில் ஏதாவது ஒன்றிலும் விற்பனையிலும்உபயோகிப்

பதற்கு உதவியாகவும் இந்தப் பயன்பாட்டில்  பிறரை ஊக்குவிப்பதல் போன்றவற்றிலும்

 இதற்கான ஆலைகள் உடைமையாக வைத்திருப்பதிலும்அல்லது பணி புரிவதிலும் 

ருந்தாலும் அவர் நல்ல தலைமைப் பண்பு இருப்பார் என்று ஏற்க முடியாது இப்போது நா

ம் சொன்னதைல் நிறைய எதிர்க் கட்சிகளும் ஆளும் கட்சிகளும் அதன் தலைவர்களும்

 தலைமைகளும் நல்ல தலைமையின் கீழ் வர வழியே இல்லை.அவர்களிடம் தலை

மைப்  பண்பு இல்லை என்பதும் தெள்ளென விளங்கி இருக்கும்இவர்கள் எல்லாம் சமு

தாயத் துரோகிகளாக கருதப் படல் வேண்டும்சமுதாயக் கிருமிகளாகசமுதாயக் 

ளைகளாவார்கள்

இவர்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்பது இதன் கருத்தல்ல..இவர்களிடம் இருக்கும் தீய வழக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது என்ற காரணத்தால் இவர்களிடம் இருக்கும் பழக்கத்தை துரத்தி அடிக்க ஆவன செய்தாக வேண்டும்இவர்கள் இந்தப் பழக்க வழக்கத்தில் இருப்பார் ஒருக்காலும் தலைமைப் பண்பாளராக இருக்க முடியாது...அவர்களை தலைவர்களாகவும் ஏற்பதற்கில்லை ஏற்கவும் கூடாது.அது என்னதான் பெரிய எழுத்தாளராயும்இலக்கியவாதியாயும்கலைஞராகவும் இருந்து உலகெலாம் அவரது படைப்பைக் கொண்டாடிய போதும் அவரை கலைஞராகவேண்டுமானால் எடுத்துக் கொள்ளட்டும் இவ்வுலகு ஆனால் தலைவராக எடுத்துக் கொள்ளவே கூடாது.

4. இலஞ்சம் வாங்குவாராகவோ கொடுப்பாராகவோ இருக்கக் கூடாதுஇந்த இலஞ்ச ஊழல் நாட்டின் தீர்க்க முடியா எல்லாத் துறைகளிலும் இருக்கும் பெரும் பிணி...இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்பது உண்மையானதாக இருக்க வேண்டுமெனில் முதல் விதியாக இதைக் கொள்ள வேண்டும்இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற சொற்களை நினைவில் கொள்வோம்.இப்படி நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவாலும் சொல்லாலும் செயலாலும் ஈடுபடுவார் நல்ல தலைமைப் பண்புக்கேற்றார் அல்ல.

5. அமைப்பை ஒருங்கிணைப்பவராகவும்உழைப்பு என்று வந்தால் முதல் பணியாளராகவும்தியாகத்தில் முதல் நபராகவும் இருப்பாராக வேண்டும்..இராணுவத்தில் இருக்கும் கேப்டன் போல போர்க்களத்தில் முதலில் நின்று களப்பலியாக துணிச்சல் உடையாராக வேண்டும் திருப்பூர் குமரன் போல... 

அனைவரையும் காட்டிக் கொடுத்து பலிகடாக்களாக்கி தாம் தப்பித்துப் போகிறவராய் இருக்கவே கூடாது.

6.  நான் ஏற்கெனவே குறிப்பிட்டு சொன்னது போல வெற்றி  புகழ் என்று வந்தவுடன் தனது தலையையும் தோளையும் நீட்டுபவராகவும்  தோல்வி இகழ்ச்சி வரும்போது மற்றவரைக் காரணம் எனச் சுட்டாமல் தோல்வியை தாங்குவாராகவும் வெற்றிக்கு தாம் காரணமல்ல என வெற்றி வரும்போது தமது இளையோரைத் தூக்கி விடுவாராக இருத்தல் வேண்டும்.

7. இதனை இவன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற குறளுக்கேற்ப இந்தப் பணியை இவர் செய்வார் என தெரிந்து தெளிந்து அவரை அந்தப் பணிக்கு நியமிக்கும் ஆற்றல் பெற்றவராகவும் அடுத்தவருக்கு வரும் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாதவராகவும் அதை தடுப்பாராகவும் இருத்தல் கூடாது.

8. காலம் இடம் அறிந்து செயல்படுவாராக இருத்தல் அவசியம்ஏன் எனில் முகமது பின் துக்ளக் நல்ல அறிவாளி என்றாலும் அவரது தலைநகர் மாற்றம் தோல்வியில் முடிய இது போன்ற காலம் அறிந்து இடமறிந்து செயல்படாமை காரணமாயிற்று என்கிறது சரித்திரம்...அனைவரின் அங்கீகாரம் பெற வேண்டியதும் அந்தப் பணி வெற்றி பெற அவசியம்.

9. சரியான தூதாக கம்பன் இராமயணத்தில் அனுமனை சுட்டிக் காட்டுவது போல எங்கு அனுப்புவதானாலும் தேர்ந்து அனுப்பவும் வேண்டும்...

10. தம்மை விட இயக்கத்தின் நன்மையும் பேரும் பெரிது என உருவாக்கம் தெரிய வேண்டும்எமது தோழர் சசிபெருமாள் இந்த ஒழுக்கக் கட்டமைவில் உள் அடங்காத நிலை இதைச் சொல்ல காரணம்அவர் எமது இயக்கத்தை தமது ஊடகச் செய்தியின்போதும் அவரின் செயல்பாடுகளின் போதும் ஒருபோதும் குறிப்பிடவில்லை என்பதும் அதை அவரின் மேல் எப்போதும் வலியுறுத்தி வந்தவன் என்ற உரிமையில் இங்கே பதிவிட வேண்டியது எனது கடமையாகிறது ஏன் எனில் அவரை அடுத்து இயக்கம் வலிமைபெற வழித்தோன்றல்கள் தொடர அவை வழி வகுக்கும் என்பதால்..

11. தனி மனித மகாத்மியம் எவ்வளவு பெரியதாக இருந்த போதும் இயக்கம் மற்றும் அதன் முறைமைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் அடக்கமுடைமை வேண்டும் அது சரியான தலைமைப் பண்பாக இருக்கும்.

12. சுற்றுச் சூழல் ஆர்வலராகவும்மரம் நடுதல்இயற்கை இரசிகராகவும்இருந்தால் அவருக்கு நிலம் நீர் நெருப்புகாற்று ஆகாயம் ஆகியவற்றின் அருமை தெரியும் அற்புதம் புரியும் இல்லாதார் தலைமப் பண்பு இல்லாதாரே...

13. புதிய நவீன கலைகள் கற்கும் ஆர்வம் உள்ளவராயும்கணினிப் பயிற்சி உள்ளவராயும் இருந்தால் மட்டுமே நடப்பு உலகிலும் வரும் காலத்திற்கேற்றவாறும் தாக்குப் பிடிக்க முடியும்..

14. கல்வி கலைகளில் தேர்ச்சி மிக்காராகவும்நூல் பல கற்பாராகவும் இருக்கும் போது அந்த அனுபவங்கள் அவர் அறிவைச் செறிவூட்டி சமுதாயத்தை பல படிகள் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சேர்க்க முடியும்

15. அந்த அந்தக் காலக் கட்டத்தில் மாறிக் கொண்டிருக்கும் செய்திகளுக்கு செவி சாய்த்து எது சரி எது தவறு எது பொய் எது மெய் என்று தேர்ந்து கண்ணோட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்கால‌ நடப்புகள் பற்றி அறிந்தவராயும் அதில் நாட்டமுடையாராகவும் இருத்தல் வேண்டும்.

16. யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு அமைதியாகச்  செவியுற்று அதை நடுநிலையுடன் அணுகி சகிப்புத் தன்மை கொண்டு எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறியும் அறிவு கொண்டாராய் இருத்தல் வேண்டும்.

17. ஆண் பெண் மூன்றாம் பால் இன பேதமின்றி அனைவரையும் சமமாக பாவித்து மகளிருக்கு எல்லா துறைகளிலும் எல்லா நிலைகளிலும் சம பங்கு 50 சதவீதம் பகிர பாடுபடுவாராய் இருத்தல் வேண்டும்.

18. நதி நீரை இணைத்து நாட்டில் நீர்ப் பஞ்சம் ஏற்படாது உலகில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் நெஞ்சமுடையாராக இருக்க வேண்டும்.

19.  ஏழை எளியார்க்கும் கீழ்தட்டு மக்களுக்கும் கல்விவேலைவாய்ப்புகுடி நீர்மருத்துவம் , சுகாதார மற்றும் கழிப்பிட‌ வசதிகளும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் எண்ணமுள்ளவராயும் அதில் வேறுபட்ட கருத்து இல்லாராக  இருக்க வேண்டும்.

20. நாட்டின் நல்ல திட்டங்களை நிறைவேற்ற எடுத்துக் காட்டாக : ஒர் முறை பயன்பாட்டுக்கான நெகிழியை தடுத்தல்மதுவை ஒழித்தல்புகைத்தலை தடுத்தல்பொது இடங்களில் புகைத்தல்உமிழ்தல் போன்றவற்றை முளையிலேயே வேருடன் கெல்லி எறியும் எண்ண ஆற்றல் உள்ளவராயும் அதற்கு போராடத் தயாரானவராகவும் இருத்தல் வேண்டும்...

21. புகை மது போன்ற உற்பத்தி தொழிலகத்தையே உரிமம் இல்லாமல் செய்வாராகவும்ஆபத்து உள்ள தொழில்களான பட்டாசு போன்ற  தொழில் செய்வாரை மடை மாற்றம் செய்ய ஆர்வமுடையாராகவும் செயல்பாட்டாளராகவும் இருக்க வேண்டும்ஏன் எனில் கொள்வார் இல்லையேல் கொடுப்பார் இல்லை என்பது ஆன்றோர் வாக்குஆனால் இங்கு இவை இருப்பதால் கொடுப்பார் இருப்பதால் கொள்கிறார்கள் என்பது பொருள் முதல் வாதம் இரண்டிலுமே மனிதர் கெட்ட வழிக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதால் மேதமை இருப்பார் சொன்னால் திருந்துவார்சிற்றறிவு மிக்கார் இல்லாது போனால் மட்டுமே திருந்துவார்குழந்தை மனம் அடம்  பிடிக்கும் குரங்கு மனமும் தறி கெட்டுப் போகும்அவற்றை எல்லாம் நெறிப்படுத்தும் கடமை தலைமைப் பண்பாளர்க்கு உண்டுமொத்தத்தில் கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற நிலையை இராமலிங்கர் சொன்னது போல நாமும் சொல்லாமல் இருந்தால் நல்லதே..

22. ஆடை அணிகலன்களில் ஆடம்பரங்களில் அக்கறை இல்லாராகவும்தோற்றப் பொலிவுக்காக போலிப் பூச்சுகளை பூசிக்கொள்ளாதவராகவும் பொய்களாகவும் போலிகளாகவும் தோன்றுதல் இல்லாராகவும் இருக்க வேண்டும்.




23.  உடல் ஓம்பும்முறைகளில் நாட்டமுடையாராகவும்உடற்பயிற்சிதியானம்யோகா போன்றவற்றில் ஈடுபாடு உள்ளாராகவும் இருந்தால் மட்டுமே நீண்ட ஆயுள் ,நிலைத்த செயல்பாடுவழிகாட்டல் எல்லாம் தோன்ற வழி வகுக்கும் எனவே அவற்றில் மனம் செலுத்துவாராக இருக்க வேண்டும்.

24. பெண் வழிச் சேர்க்கை ஆண் வழிச் சேர்க்கையில் ஒரு கட்டுப் பாட்டு நெறியையும்சமூக நெறிகளுடனான ஒழுக்க முறைகள் கடைப்பிடிப்பாராகவும் இருத்தல் அவசியம்.

25. இயற்கைக்கு மாறான ஆண் பெண்ஆண் ஆண் பெண் பெண் போன்ற இனச் சேர்க்கைகள் எல்லாம் மனித மாண்புகளுக்கு அப்பாற்பட்டவை என்ற உணர்வுடையாளராக இருந்து அதன் பால் வழிகாட்டுவாராக இருக்க வேண்டும்

26. பாலியில் கல்விஅளவுக்கு மிஞ்சினால் நஞ்சுநவீன அறிவியல் புடைக்க வைக்கும் செல்பேசி கலாச்சாரம்நீலப்படம் ஆபாசப் படம் போன்றவைகளில் இருந்து இளைய சமூகத்தை நல்வழிப் படுத்துவாராக அக்கறை கொள்வாராக இருத்தல் வேண்டும்.

27. தலைமைப் பண்பின் கீழ் நாம் என்ன நினைக்கிறோம் எனில்கொள்வார் இல்லையேல் கொடுப்பார் இல்லை என்ற அடிப்படையில் புலால் மறுத்தல் அல்லது மரக்கறி உணவை ஏற்பதும் விவசாயத் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்து அதை மேம்படுத்துவதும் தலையாய பணி என்கிறோம்.

28. பெப்ஸி கொக்கோ கோலா போன்ற பானங்கள் இல்லாமல் செய்து மாறாக இளநீர்பதநீர் , நீசத் தண்ணீர் பழஞ்சோறு போன்றவற்றை உருவாக்குதல் நல்ல பண்பாக இருக்க சிறு தானியப் பயிர்களை மறுபடியும் கொண்டு வந்தால் பரவலாக்கினால் உயிரின் கால நீட்சி அதிகமாகும் எனவே அதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

29. மொத்தத்தில் கைத்தொழில்களான நெசவுகிராமியத் தொழில்கள்போன்றவற்றை ஊக்குவிக்க வேன்டும்கிராமியச் சேவையும்கிராமியச் சார்பும் , கிராமியச் சமுதாயமும் உருவாக பாடுபடுபவராய் இருக்க வேண்டும்.

30. நாட்டின் பின் தங்கிய கிராமத்திற்கென தமது உழைப்பை நல்கியவராக  நல்குவதில் ஆர்வமுள்ளாராக இருத்தல் வேண்டும்.

31. நாட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாரின் குடும்பங்கள் பற்றி அக்கறை கொள்வாராக இருத்தல் வேண்டும்.

32.கொள்கை ரீதியாக தோழர்களோமக்களோ நியாயமான கோரிக்கைகளுக்கு பாடுபடும்போது துணை நிற்பாராய் இருக்க வேண்டும்.. இயக்கத்தை அதன் பின் அணி திரளச் செய்ய வேண்டும்.

33. தர்மச் சிந்தனையுடன் இருத்தல் வேண்டும்.

34. போராட்டங்களைக் கையில் எடுப்பதில் தயங்காதாராகவும் தேவையான அறிவு சார்ந்த விவாதங்களில் கலந்து கொள்வதுடன் அதை நேர்மறையாக அணுகுவதுடன் ஒருங்கிணைப்பு போக்கில் சார்புடையாராக இல்லாமலும் தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நபர்களைத் தேர்வு செய்யாமல் அவரவர் தகுதி திறமைக்கேற்ப அவர்களை முன்னிறுத்தி இயகக்த்தை மேற்செலுத்துவாராகவும் இருக்க வேண்டும்.



35. இவை எல்லாம் மீறியதாக வள்ளுவர் வழியில் சொல்லப் போனால்அவை அஞ்சாமைஇனியவை கூறல்இன்னா செய்யாமைஈகை,உழவு,ஊக்கம் உடைமை,ஒற்றாடல்கள்ளாமைகள்ளுண்ணாமை,கூடா நட்பு,கொடுங்கோன்மைகொல்லாமை,சிற்றினம் சேராமைசான்றாண்மைசூதுசெங்கோன்மை செய்ந்நன்றி அரிதல்,சொல்வன்மைதவம்தீ நட்புநடுவு நிலைமைநாட்டுப் பற்றுபயனில சொல்லாமை,புலால் மறுத்தல்,புறங்கூறாமைபெரியாரைத் துணைக்கோடல்இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

  36.மக்களை சிறு சேமிப்பு போன்ற நல்ல பழக்க வழக்கங்களில் ஊக்குவிக்கவும்,  இளையோர்குழந்தைகள்ஆண்கள் ,பெண்கள்கிராம சபை போன்றவற்றை உருவாக்குபவராக இருக்க வேண்டும்அதன் வழியே செயல்பாடுகளை கொண்டு செலுத்த வழி வகை செய்வாராக இருக்க வேண்டும்.

37. தேர்தல் முறைகளில் மாற்றம் செய்ய சமுதாய அமைப்பை மாற்றி அமைக்க முயல்வாராக இருக்க வேண்டும்.எடுத்துக் காட்டாகவிகிதாசார வாக்கெடுப்பு முறைதேர்வு செய்யப் பட்டார் சரி இல்ல எனில் திரும்ப அழைக்கும் முறை ,நல்ல மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க மக்களை ஒருங்கிணைக்கும் கலை போன்றவற்றில் முயற்சிநாட்டம்ஈடுபாடுவிடாமுயறி உடையாராய் இருத்தல் வேண்டும்.

38. தியான வழிகளில் சொல்வது போல:

   1. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதிருக்க வேண்டும்

     ( கொசுக்களைக் கொல்லுதல் கூட பாவம்...ஆனால் கொசு இல்லாமல் சுத்தமாக சுற்றுப் புறத்தை வைத்திருப்பது பாவமில்லையே)

   2. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிறர் பொருள் மேல் ஆசைப்படாதிருத்தல்

   3. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பூரணமான உண்மையைக் கடைப்பிடித்தல்

   4. பிரமசாரிய விரதம் காத்தல்

   5. பிறரிடமிருந்து எதுவும் ஏற்றுக் கொள்ளாதிருத்தல்...

இவையும் ஒரு சிறந்த தலைமப் பண்புக்கான அடக்கமான அழகான பண்புகளாகும்சத்தியம் நேர்மைநம்பிக்கை  விடாமுயற்சிஅஹிம்சைசத்யாக்கிரகம் ஆகியவை ஏற்பவராக இருக்க வேண்டும்.

39.மகாத்மா டால்ஸ்டாயிடம்ரஸ்கினிடம்குருதேவ் ரவீந்தரநாத்திடம்கோபால கிருஷ்ண கோகலேவிடம் இப்படி யாவரிடமும் கற்றது நமது தமிழ் இடத்தில் இருந்தல்லவா...

40.பொய்யாமை பொய்யாமையாற்றின் அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று

மனத்துக் கண் மாசிலன் ஆதால் அனைத்தறன்

ஆகுல நிர பிற...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று....

பகுத்துண்டு பல்லுயிர்  ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை...

 தன்னல மறுப்பு/தியாகம்
விடாமுயற்சி
பிடிவாதமின்மை
எங்கிருந்து கிடைத்திடினும் ஏற்புடையதெனின் ஏற்றுக் கொள்ளல்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு....

மறுபடியும் பூக்கும் வரை
'கவிஞர் தணிகை