Saturday, June 29, 2019

செல்பேசியின் அழைப்பு மரணத்துக்கு அழைத்துச் சென்ற நிஜம்: கவிஞர் தணிகை

செல்பேசியின் அழைப்பு மரணத்துக்கு அழைத்துச் சென்ற நிஜம்: கவிஞர் தணிகை
Related image


செல்பேசியின் அழைப்பு தடம் மாற்றி மரணத்திற்கு இட்டுச் சென்ற கதையல்ல நிஜம். + TNEB NEWS

நேற்று தமிழ் நாடு சேலம் மாவட்டம் ஒட்டுப்பள்ளம் அருகே வீரக்கல் பகுதியில் ஒரு மின் மாற்றி அதாங்க ட்ரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்பை சரி செய்யச் சென்ற ஒரு நபர் பலி ஆகி இருக்கிறார். இவர் ஒரு மின் பணியாளர் அல்ல.

கிராமங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

இவர் சுமார் 15 ஆண்டுகளாக இதெல்லாம் செய்து வரும் பயிற்சி உடையவர்தாம் என்கிறார்கள்.

ஆனால் அன்று என்ன நடந்தது.

இவர் தண்ணீர் வண்டி ஓட்டி அனைவர்க்கும் தண்ணீர் சப்ளை செய்பவராம். அதுமட்டுமல்லாமல் காடு கழனிகள் உண்டு.

3 பெண் குழந்தைகள்....முதலாமவரை சென்னை ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனத்தில் இரண்டு நாளுக்கும் முன் தான் சேர்த்தி விட்டு வந்தாரம்.

இரண்டாம் எண் ஒரு கலைக்கல்லூரியிலும் மூன்றாம் பெண் மால்கோ பள்ளியிலும் படிக்க வைத்து வந்திருக்கிறார்.

கிணற்றிலிருந்து நீர் எடுக்க மின்சாரம் இல்லை. மின்சார இலாகாவிற்கு போன்செய்து பார்த்திருக்கிறார் என்றும் அவர்கள் அங்கு வந்து சேர நேரம் பிடிக்கும் என்று சொன்னதாகவும்

உடனே இவர் சென்றிருக்கிறார் லிவரை போட்டு திருகி மின்சார முனையத்தை நிறுத்தி வைத்தாரா என்று தெரிவதற்குள் ஒரு செல்பேசி அழைப்பு எடுத்து பேசி இருக்கிறார்.

 பேசிவிட்டு லிவரை போட்டு ட்ரான்ஸ்பார்மரை ஆப் நிலைக்கு கொண்டு சென்றாரா இல்லையா என்று நினைவில்லாமலே ஆப் செய்யாமலே  மேல் ஏறி பீஸ் போட முயன்றிருக்க ஹெவி லைன்  தாக்க இறப்பு நேர்ந்திருக்கிறது

இது போல கிராமங்களில் நடப்பது தமிழ் நாடு மின் வாரியத்துக்கு அவமானமில்லையா..,
 அதே போல நான்  நடைப்பயிற்சி செய்யும் சாலையில் பெரும்பாலும் 3 இடங்களில் சாலை விளக்கை நான் தான் போட்டு வருகிறேன்.

இருள் அடர்ந்த போதிலும் எவரும் போடுவதாக இல்லை.

அடுத்து இன்னொரு செய்தியாக வாட்ஸ் ஆப்பில் உலவியது மின்சார வாரியத்திற்கு மின் இணைப்பு சீராக்கச் சொல்லி புகார் அளித்து 6 மணி நேரம் ஆகியபிறகும் கிராமத்தில் மின் இணைப்பு சீராக்கப்பட வில்லை எனில் 50 ரூ அபராதமாக மின் தடப்பணியாளரிடமிருந்து LINE MAN வசூலிக்கப்பட்டு உங்கள் மின் கணக்கில் அளிக்கப்பட்டு உங்கள் மின் கட்டணத்திலிருந்து கழிக்கப்படும் என்ற விதி பற்றி கீழே:

 உங்கள் பணம் உங்களுக்கே எப்படி? டி.என்.ஈ.பி. TNEB

மின் வாரிய விதி எண் 21ன் படி நமது வீட்டிலோ அலுவலகத்திலோ மின் இணைப்பு பழுது ஏற்பட்டு சம்பந்தப்பட்ட மின் வார்ய அலுவலகத்தில் உள்ள புகார் ஏட்டில் 10 இலக்க இணைப்பு எண் எழுதி வைத்தால்

நம்து வீடு மாநகரப் பகுதிக்குள் இருந்தால்  1 மணி நேரத்திற்குள்ளாகவும் நகராட்சி பகுதியெனில் 3 மணி நேரத்துக்குள்ளாகவும் கிராமப் பகுதியெனில் 6 மணி நேரத்திற்குள்ளாகவும், கிராம பகுதியெனில் 6 மணி நேரத்திறுள்ளாகவும் வந்து சரி செய்திட வேண்டும் இல்லையென்றால் தாமதிக்கும் ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் 50 ரூ வீதம் அதிகபட்ச 2000 ரூ வரை நமக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
அத்தொகை நமக்கு பணமாகவோ, காசோலையாகவோ வழங்கப்பட மாட்டாது நமது மின் கட்டண தொகையி கழிக்கப்படும்.

இதற்கான இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட மின்  கம்பியாள் ...லைன்மேன் அவரது மேலதிகாரி அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து நம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

உங்கள் பணம் உங்களுக்கே...எப்படி ... TAMIL NADU ELECTRICITY DISTRIBUTION  STANDARDS  OF PERFORMANCE REGULATIONS  RULE NO: 21 DSPR...
தமிழ் நாடு மின்சாரப் பகிர்மானச் செயல் திறத் செந்தரங்களுக்கான ஒழுங்கு முறை விதிகள் படியான விதி ரெகுலேசன் 21 ஆப் டி எஸ் பி ஆர் ஆகும் இந்த விதி முறை எவருக்கும் தெரியாததனால் பயன்படுத்தி இழப்பு கேட்பதில்லை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பேட்டரி வாங்காதே: கவிஞர் தணிகை

பேட்டரி வாங்காதே: கவிஞர் தணிகை

Image result for again bloom


என்ன செய்தாலும் அந்த வார்த்தையே வென்று விடுகிறது. எதைச் செய்தாலும் அதை நம்மால் வெல்ல முடிவதில்லை மேலும் இழப்பும் பாதிப்பும் எதிர்மறை அனுபவிப்பும் நமக்கு பாடம் புகட்டுபவையாக அமைகின்றன அதன் எதிரொளியாகவே இந்தப் பதிவும்.

எனது முன்னைய பதிவை படித்தவர்களுக்கு இந்த பதிவு மேலும் மதிப்பு கூட்டி புரியும். ஏற்கெனவே பேட்டரி வாங்காதே என்ற துணைத் தலைப்புடன் சொல் ஓசை இல்லாமலே என்ற ஒரு பதிவை இட்டிருந்தோம்.

அதில் மறு  பகுதியில் பேட்டரி வாங்காதே என்பதையும் மீறி நான் பேட்டரி வாங்கினேன் . ஆனால் இந்த புதிய பேட்டரி யூ.பி.எஸ் பேட்டரிதான் பழையதை விட விலையும் சக்தியும் அதிகம் என்ற போதிலும் அதை அவர்கள் சொன்னபடி மின்னூட்டம் 8 மணி நேரத்துக்கும் அதிகமாகவே கொடுத்து இயக்கி வருகிறேன்.  புதன் கிழமை மாற்றிக் கொடுத்தார் அந்த இளைஞர். ஆக சுமார் ஆயிரம் ரூபாய் முதலிட்டு அந்த பிரச்சினையை அதாவது

மின்சாரம் தடைப்படும்போது ஒரு5 நிமிடம் இருந்தாலும் போதும் சிஸ்டத்தை தடங்கலின்றி நிறுத்தி சட் டவுன் செய்து விடலாம் என்பதற்கே இதைச் செய்தபோதும் ...
Image result for again bloom
புதிய பேட்டரியின் நிலையும் அதே பழைய விளைவையே ஏற்படுத்துவதை இன்று மின்சாரம் தடைப்பட்டபோது தெரிந்து கொள்ள முடிந்தது.

இன்டர் நெட் வலை தரும் மோடத்திற்கு மின்சாரத்தை கொடுத்தபடி அது பணி புரிந்து கொண்டிருக்க சி.பி.யூவில் மேல் அணைந்து அணைந்து எரியும் சிவப்பு பிலின்க் லைட் அணைந்து மானிட்டரும் அப்படியே ப்ரீஸ் ஆகி அதை சரியாக சட்டவுன் செய்ய முடியவில்லை.

சி.பி.யூவில் சில்வர் பட்டனுடன் இருக்கும் பெரிய ஆன் ஆப் அழுத்தும் மெயின் சுவிட்ச் லைட் எரிந்தபடியே இருக்கிறது இருந்தாலும் அதை ஆன் ஆப் செய்ய முடியவைல்லை.

யூ.பி.எஸ் எரிந்தபடி இருக்க அதை ஆப் செய்தே சிஸ்டத்தை நிறுத்த முடிவதால் சரியாக சிஸ்டம் ஆப் செய்யாததால். மறுபடியும் சிஸ்டம் ஆன் செய்யும்போது வழக்கமாக சரியாக ஆன் செய்ய முடியாமல் சிஸ்டம் சரியாக சட்டவுன் செய்யவில்லை எனவே 30 செகண்ட் எடுத்துக் கொண்டு ஆன் ஆகிறது

இதில் எனது கணிப்பு தவறாகி, அந்த  பேட்டரி வாங்காதே என்ற வார்த்தை நிரூபணமாகி பலித்து விட்டது. எனவே பேட்டரி வாங்காமலே இருந்திருக்கலாம் அந்த பழைய பேட்டரியே அதன் வேலையை சரியாகவே செய்திருக்கும் போலிருக்கிறது.

வார்த்தையை மீறியதால் ஆயிரம் ரூபாய் வேஸ்ட் ஆகியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை....இயற்கை தந்த வார்த்தையே மறுபடியும் வென்றதற்கு இது சரியான சான்று

Image result for again bloom

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

சொல் ஓசை இல்லாமலே: கவிஞர் தணிகை

சொல் ஓசை இல்லாமலே: கவிஞர் தணிகை

Image result for words without sounds esp


அடுத்தவன் போட்ட தாளத்துக்கெல்லாம் ஆடாதே என்று ஒரு கட்டளை அன்று ஒரு நாள் விடியலில் கிடைத்தது. என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே...காலையில் மணி 6. 25க்குள் பேருந்தில் ஏறி பயணம். கணேஷ் வந்திருந்தான் பெயர் மாற்றப்பட்டுள்ளது...அவனது சொந்தக் கதை சோகக் கதையை சொன்னான். யாரும் எவருக்கும் படி அளக்க முடியாது. சொந்தக் காலில் நின்று பழகு. எவர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே. நீயே சிந்தித்து ஒரு முடிவு எடுத்து விட்டால் பின் வாங்காதே. என்றெல்லாம் அறிவுரை அவனுக்கு. அதுதான் நமக்கு கை வந்த கலை ஆயிற்றே.

சொல்கிறவர் எவரும் சோறிடப்போவதில்லை பசிக்கு, இருக்க இடம் அளிக்கபோவதில்லை பின் ஏன் எவராவது எதையாவது சொல்லி விடப் போகிறார்களோ சொல்லி விடுகிறார்களோ என்ற கவலையெல்லாம் பட வேண்டும் நீ உழைக்கிறாய் நீ வாழ்கிறாய்...பிறர் சொல் பற்றிய கவலை நீக்கு என்றெல்லாம் கூறினேன்

அதுதானோ அந்த அடுத்தவன் போட்ட தாளத்துக்கு எல்லாம் ஆடாதே என்பது என எனக்குள் கேட்டுக் கொண்டேன்.

 தர்மபுரி டாக்டர் தீன தயாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வந்து வணக்கங்கள்  பரிமாறிக் கொண்டோம். 5 வழிச்சாலை சென்னை சில்க்ஸ் வரை அப்படியே இருக்க ரிலையன்ஸ் வாசலை மெய்யனூர் சாலைக்கு மாற்றிக் கொள்ள அங்கிருந்து மேல் பை பாஸ் பாலம் அந்த கீழ் செல்லும் 5 வழிச் சாலையை 4 வழியாக்கி விட்டது.

நாங்கள் இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த ரத்னாவின் கேட்டில் பையை மாட்டிக் கொண்டு சில நிமிடங்கள் அங்கே நிற்பது வழக்கம் எங்கள் கல்லூரி பேருந்து வரும் வரை. தீனதயாள் வந்த உடன் பையிலிருந்து ஒரு டைரி மில்க் சாக்லெட் எடுத்து நேற்று எனது பிறந்த நாள் எனக் கொடுத்தார். பரவாயில்லையே நேற்று போன பிறந்த நாளுக்கு இன்று நினைவு வைத்து ஞாயிறு பார்க்காமல் திங்களில் சாக்லெட் தருகிறாரே என இரசித்துக் கொண்டே அவர் கொடுத்த சாக்லெட்டை பையில் போட்டுக் கொண்டேன் வாயில் போடாமல்.
Image result for words without sounds esp
அடுத்து கண்ணுக்கு பவர் கண்ணாடி போடவேண்டியது பற்றி பேச்சு வந்தது. உடனே அவர் லென்ஸ்கார்ட் பற்றி எல்லாம் பேசி ஒரு கண்ணாடி வாங்கினால் ஒரு கண்ணாடி இலவசம், ரொம்ப விலை மலிவாகவும் நன்றாகவும் இருக்கும் அங்கேயே போங்கள் என்று ஆன்லைன் பார்த்து விலாசம் எல்லாம் சொன்னார்....எனக்குள் இருந்த சிக்கன மனிதர் விழித்துக் கொன்டார் எங்கே போனால் குறைவாக இருக்குமோ அங்கேயே செல்லலாமே...

30 ஆண்டுகளுக்கு முன் தொடர்பிலிருந்த பழைய பேருந்து நிலைய கீதா ஆப்டிகல்ஸ் போகலாமா, லென்சோமம் ஜங்ஷன் வழியில் ஐந்து வழிச்சாலை வழியில் போகலாமா அல்லது பார்க்கலாம் லென்ஸ்கார்ட் போகலாம் என கண்ணனை (பேர் மாற்றப்பட்டுள்ளது) கல்லூரி முடிந்ததும் விடச் சொன்னேன் அந்த ஐந்து தியேட்டருக்கும் எதிரில் இருந்த கடை நோக்கி விட்டார். மழை பிடித்துக் கொள்ள சிறிது நேரம் கழித்து கடை நோக்கி சென்றேன்

மெம்பர் சிப் சேர ரூ. 600 வேண்டுமாம். அப்ப்போதுதான் அப்படி ஒரு கண்ணாடி வாங்கினால் இன்னொரு கண்ணாடியாம். சாதாரணமாகவே இரண்டாயிரம் அதற்கும் மேலும் சொன்னாள் அந்தப் பெண். மேலும் எனது பழைய பிரேமில் கண்ணாடி போட்டுத் தரமுடியாது என்றும் சொன்னாள் கடையில் எவரும் இல்லை ஆன்லைனில் அப்பாய்ன்மென்ட் வேறு வாங்கிக் கொள்ளலாம் என பீற்றல் வேறு. நான் சும்மா ஆன்லைன் வை பை கல்லூரியில் இருந்ததால் மதியம் என்று போட்டு வைத்தேன் பதில் ஏதும் இல்லை.

தீன தயாள் என்ற பேர் மறந்துவிட்டது போனில் இருந்து நினைவு படுத்தி எடுத்து நீங்கள் லென்ஸோ கார்ட்டில் உறுப்பினரா எனக் கேட்டேன் இல்லை என்றார்.அங்குள்ள நிலை பற்றி விளக்கினேன். சரி சார் விட்டு விடுங்கள் சார் என்றார்.
Related image
அங்கிருந்து மத்திய பேருந்து எந்தப் பக்கம் எனக் கேட்டு வந்து பேருந்து / ஏறி  வீடு வந்து சேர்ந்தேன். அன்று முடிந்தது நடைப்பயிற்சி கோவிந்தோ..

மறு நாள் பேட்டரி வாங்காதே... சொல் ஓசை இல்லாமலே...

எனது டெஸ்க் டாப் யு.பி.எஸ் பேட்டரி வாங்கும் திட்டம் முனைப்பில் இருந்த எனக்கு அன்றைய கட்டளை ....அதையும் பார்க்கலாமே. சில நேரங்களில் நான் மீறல் செய்வதுண்டு. அன்றும் அப்படித்தான்.

முதலில் லென்ஸோமம் கடை சென்று கண்ணாடி செய்யச் சொல்லி அதே பிரேமில் போட்டுத் தருவதாக பேசி முடிக்கப்பட்டு முன் பணம் ரூ.500ம் கொடுத்து விட்டு அடுத்து பக்கத்து கடையில் சென்று டாட்டா லோ சோடியம் சால்ட்  இரண்டு கிலோ வாங்கிக் கொண்டு அப்படியே 5 வழிச் சாலை நோக்கி நடராஜா சர்வீஸ், ரிலையன்ஸ் கார்ட் வழி சென்று வாங்கலாம்தான் ஆனால் அது மிகுந்த நேரம் பிடிக்கும் சில ரூபாய்கள் மீதி ஆகும்...ஆனால் ரிலையன்ஸ் வேண்டாம் என்று ஜெயம் என்ற டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வாங்கிக் கொண்டு தூக்கிக் கொண்டு 5 ரோடு அருகே போகும்போதே ஒரு மாதேஸ்வரன் மலை பேருந்து புறப்பாட்டில் ஓடி இருந்தால் ஏறி இருக்கலாம் வேண்டாம் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்க நினைக்க அது போய்விட்டது. ஏறி இருந்தால் தெரிந்திருக்கும் இருக்கை இருப்பதும் இல்லாததும் வெளி இருந்து பார்க்க இருக்க இருக்கும் போலவே தோன்றியது அவ்வளவு மக்கள் நெருக்கமின்றி..

பேட்டரி கடைக்குச் சென்று பேட்டரி கேட்டேன் ரெல் இல்லை ஸ்டாக், வந்ததா எனக் கேட்டபடியே...எத்தனை பேட்டரி வேண்டும் என்றார்கள் நான் ஒரு சிறு தொழில் அதிபராக இருப்பது போல அட வீட்டுக்க்குத்தான் ஒன்றுதான் என்றேன்

இது அதை விட நல்ல பேட்டரி என எக்ஸைட் ஒன்றைக் கொடுத்தார்கள் அது முன் சொன்னதை விட சுமார் 125 ரூ விலை அதிகம் கூட கனமும் கூட‌. வருடா வருடம் 100 ரூபாய்க்கும் மேல் ஏற்றிக் கொண்டுதான் இருக்கிறீர், 6 மாதம் வாரன்டி என்கிறீர், ஒரு வருடத்துக்கு ஒரு பேட்டரி ஆகிக் கொண்டுதான் இருக்கிறது. கரண்ட் பட்டென போக இது சட்டென்று போய்விட...மானிட்டர் சி.பியு போவிடக்கூடாதே என்றுதான் வாங்கி விட வேண்டி இருக்கிறது எப்படி சார்ஜ் ஏற்றுவது எப்படி நீண்ட நாள் தக்க வைப்பது எனப் பேசியபடி இருக்க...மழை பிடித்துக் கொண்டது...மழை விட்டவுடன் போகலாம் உள்ளே சென்று உட்காருங்கள் சார் என்றார்கள் அங்கு பணி செய்த எல்லாருமே ஒரே கருத்தொருமிப்பில்.

இப்போதெல்லாம் காலை சிறிது நேரம் வை பை ஆன் செய்தபடி, மாலை கொஞ்ச நேரம் என டெஸ்க் டாப்பின் நேரம் சுருங்கி விட்டது. கடமை கடமை.

அடிக்கடி கரண்ட் திடீர் திடீர் என கட் எனவே பேட்டரி தாங்காமல் சிறிது நேரம் கூட பேட்டரி பேக் அப் இல்லாமல் பயமாகிவிடுகிறது எது போகுமோ எப்படி போகுமோ..எப்படி இவற்றை தக்க வைப்பது என...

 நினைவோடிக்கொண்டிருந்தது...மழை வெளியில் நிற்காமல்

சுமார் ஒன்னரை மணி நேரம் இரண்டு இரண்டு கடையாக பேருந்து நிலையம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.

கன மழை. சாலை எங்கும் முழங்கால் அளவு  நீர்த் தேக்கம். வாகனங்கள் சாதாரணமாக கடந்து செல்ல வழியின்றி...

எப்படி போவது...விழித்தபடி...நான் வேறு நடந்து சென்று பேருந்து நிலையம் போவதற்காக சாலையின் அந்தப் பக்கம் போய்விட்டேன். நகர முடியவில்லை.
Related image
ஒரு மொத்த வியாபார செருப்புக் கடை... முகமதியர்கள் இளைஞர்கள் சிலர்...அடைக்கலமாக நிற்க இடமளித்தார்கள். இன்னொரு 3 பேரும் முகமதியர்கள் கணவன், மனைவி, மகள் ஒரே வாகனத்தில் நிறைய பொருட்களுடன் அவர்களும் அங்கே  வாகனத்தை நிறுத்தி உள்ளே நிற்க வர,அவர்களுக்கு உள்ளே இருக்கை எடுத்துப் போட்டு அமர வைத்தார்கள்...பின் சிரித்தபடி விடைகொடுத்தார்கள். நானும் மனிதன் தாண்டா...என்னிடமும் குரான் இருப்பதை நான் அவர்களிடம் சொல்ல வில்லை எனது மையம் வேறிடத்தில் இருந்தது. ஷூ பாலிஸ் ஒன்று கேட்டேன். பக்கத்துக் கடையில் உள்ளது என்றார்கள் அதை வாங்கிக் கொண்டு முன்னேற முடியாமல் ஒரு நகரப் பேருந்தில் நனைந்தபடி ஷூ உள் எல்லாம் தண்ணீர் ஏற சாக்ஸ் எல்லாம் நனைந்து ஷூ உள் எல்லாம் தண்ணீர் நிறைய எப்படியோ ஏறி பேருந்து நிலையம் சேர்ந்து பேருந்தில் ஏறும்போது மணி மாலை 6.40 என பேருந்தின் கடிகாரம் நேரம் காட்ட அன்று வீடு வர சுமார் இரவு 8 மணி.. ஆஆக அன்று பேட்டரி வாங்காமல் வேறு நாள் ஒன்றில் கூட வாங்கி இருக்கலாம்...பையில் ஒரே கனம். மழையில் வேரு நனைய விடக் கூடாது...ஆஹா என்னா அனுபவம்... என்ன்ன வார்த்தைகள்... அது எப்போதும் வெல்கிறது. எது...இயற்கைதான்.

நமது கணினிமெக்கானிக்கை வரச் சொன்னேன். தாரையில் இருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள் வந்தார். அன்று முழுதும் பழைய பேட்டரியை சார்ஜ் செய்ததால் யு.பி.எஸ் சூடாகி இருந்தது. பேட்டரி  சற்று சத்தம் செய்தது..இல்லை இல்லை பேட்டரி போய் விட்டதுதான். இல்லையெனில் வெடிப்பது போல் இருக்கும் என்றபடி மாற்றிக் கொடுத்தார்.

அவர் கேட்டதைக் கொடுத்தேன்...சிலருக்கு எல்லாம் குறை வைக்கக் கூடாது என... பேட்டரி அதுவும் ட்ரை செல் ....உலர் மின்னூட்ட பேட்டரி என்ற தொழில் நுட்பம் உண்மையிலேயே இந்தியாவில் இன்னும் முன்னேறவில்லையா...அப்படி எல்லாம் சொல்லி நுகர்வோரை (ஏ)மாற்றி வருகிறாரகளா...ஏற்கெனவே ஒரு ட்ரை செல் பேட்டரி வைத்த குழல் விளக்கு மின்சாரம் இல்லாதபோது மின்னூட்டம் பெற்று வெளிச்சம் தரும் என்றதும் ஒரு வருடம்தான் இயங்கியது அதன் பின் அதற்கு பேட்டரி வாங்க சலித்துப் போயே அதை எடுத்து மூலையில் போட்டது நினைவுக்கு வந்தது...

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பி.கு: எந்த பேட்டரி ஆனாலும் முழுதாக ட்ரை ஆகிய பின்னால் சார்ஜ் போட்டால்தான் அதிகம் நீடிக்கும் அதிக நாள் நீடிக்கும் அதற்கு ஏற்ப இரண்டு மூன்று முறை முழுதாக ட்ரை செய்து காலி ஆக்கி சார்ஜ் போடுக என்றார் ஒரு நபர். அது சரிதான் ஆனால் அது எப்போது முழுதும் ட்ரை வடிகிறது என்றுதான் எப்படி தெரிந்து கொள்வது...எப்போதும் எனது யு.பி.எஸ் ஒரே மாதிரிதான் ஒரே லைட்டில் தான் இருக்கும். அணையாமல் எரியும் பயன்படுத்தும்போது . சும்மா இருக்கும்போது அணைந்து அணைந்தபடிதான் எரியும் சில பேட்டரிகளில் லைட்கள் இரண்டு இருக்கும்....அதில் காண்பிக்கும் பேட்டரியில் சார்ஜ் இருக்கிறதா எவ்வளவு இருக்கிறது என்பதை...








Sunday, June 23, 2019

கிரிக்கெட்: இந்தியா ஆப்கனிஸ்தானை ஏமாற்றி விட்டது: கவிஞர் தணிகை

கிரிக்கெட்: இந்தியா ஆப்கனிஸ்தானை ஏமாற்றி விட்டது: கவிஞர் தணிகை

Image result for mohammad sami


கிரிக்கெட் விளையாட்டிற்காக நாள் கணக்கில் செலவளிப்பதை விட்டு விட்டு 10 ஓவர் மேட்ச் ஆரம்பித்து நேரத்தை சேமிக்கலாம் வெற்றி தோல்வியையும் நிர்ணயிக்கலாம்

அதிலும் இங்கிலாந்து போன்ற நாட்டில் உலகக் கோப்பை விளையாட்டுகளை மழைக்கிடையில் நடத்தி டக் ஒர்த் லூயிஸ் மெத்தேட் என்பதும் விளையாடாமலேயே பாயின்ட்களை ஆளுக்கொன்றாக மறுபடியும் விளையாட வைக்காமலேயே பிரித்து கொடுப்பதெல்லாம்... இதெல்லாம் தெளிவான வியாபார உத்தியே

ஆப்கானிஸ்தான் விளையாட்டு வீரர்கள் முதிர்ச்சி இல்லாத 18 வயது இளைஞர்கள் இந்திய அணியில் உலகக் கோப்பையை வென்ற அணியின் காப்டன் அவரின் அனுபவமும் வயதும் 30க்கும் மேல்...அடுத்து இங்கு  உலகின் நெம்பர் ஒன் பௌலர், உலகின் முன்னணி பேட்ஸ்மேன் இப்படி எல்லாம் இருந்து கொண்டு ஆடுவதை இவர்களோடு நாம் ஆடவேண்டுமா என அசட்டையாக அவுட்டாகி அதன் பின் இழுத்துப் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது இந்திய அணி.. இருந்தாலும் இந்திய அணி அவர்களிடம் திணறி ஆம் திணறி திக்கித் திணறி விட்டால் போதும் என வெற்றி பெற்றிருக்கிறது முகமது சமியால் . மேலும் ஆப்கானிஸ்தான் தான் விளையாடிய 6 போட்டியிலும் இந்தியாவில் இழந்ததையும் சேர்த்து தோல்வி அடைந்திருக்கிறது. இந்த அணியிடம் இந்தியா தோல்வியடையாதது இரசிகர்கள் செய்த புண்ணியமாம்.

டி ஆர் மெத்தெட் என அவுட்டா இல்லையா என்பதற்கு கேட்க அணிக்கு வாய்பும், பவர் ப்ளே என்பதும் இன்ன பிற விதிகளும் நாளுக்கு நாள் நவீனப்படுத்தியபடியே...

அங்கே பார்த்தால் ஒரு அம்மா பும்ரா வீசும் ஒவ்வொரு பந்துக்கும் கடவுளை பிரார்த்திதபடியே இருக்கிறார் அவர் இந்திய கோச் அவர்களின் மனைவியாம் இதை எல்லாம் வர்ணனையாளர் தெரிவிக்கிறார் காட்டுகிறார்கள் தொலைக்காட்சியில்.

இந்திய ரசிகர்கள் எங்கே மேட்ச் நடந்தாலும் கோடிக்கணக்கான இரசிகர்களாய் இறைந்து கிடைக்கிறார்கள்...

ஆக 20 ஓவர் மேட்ச், டெஸ்ட் போட்டிகள் கவர்ச்சி இழக்க, ஒன்டே மேட்ச் இப்படி வந்து பிரிமியர் லீக் இப்படி ஆகி...

இனி மேட்ச் 10 ஓவர்களுக்கும் மேல் இருக்கக் கூடாது

அது ஒவ்வொரு அணிக்கும் பத்து ஓவர் மட்டுமே பௌலிங், அதில் ஒவ்வொரு 6 பந்துக்கும்  அல்லது ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பேட்ஸ்மேன் அடுத்த ஓவருக்கு அடுத்த பேட்ஸ் மேன், அவுட் ஆனாலும் ஆகாவிட்டாலும் போய்விட வேண்டும் புது ஓவருக்கு புது பேட்ஸ்மேன் வரவேண்டும்...இப்படி ஒரு மேட்ச் நடத்தி அதன் ரன்கள் அடிப்படையில் வெற்றி தோல்வியை நிர்ணயித்து விட்டு போய்விட்டால் அது விளையாட்டாக இருக்கும் எவருடைய நாளும் விரயம் ஆகாது கால் பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போல...

கிரிக்கெட் ஒரு ஏமாற்று விளையாட்டு அதில் இப்போது நிறைய வியாபார உத்திகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஒரு சில நிமிடங்களில் நீர் வடிந்து உடனே மேட்ச் நடத்த அறிவியல் நீர் உலர்த்தி முறை அறிமுகப்படுத்தி விட்டார்களாம். எல்லாம் பெரிய வியாபாரம் இது விளையாட்டே அல்ல...

இப்படி எல்லாம் இருக்கும்போது கிரிக்கெட் தோன்றிய நாடான இங்கிலாந்து அவர்கள் ஓய்வாக இருக்கும்போது விளையாட ஆரம்பித்த விளையாட்டை இந்தியாவில் எல்லாரும் மாட்டிக் கொண்டு கல்வி, சட்டம், மருத்துவம்,இப்படி ஆங்கில மோகத்திலேயே போய்க் கொண்டு இருக்கிறோம்.
Image result for wife mohammed shami

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Saturday, June 22, 2019

நல்ல பேர் வரும் கூடவே கெட்ட பேரும்...எனவே: கவிஞர் தணிகை

நல்ல பேர் வரும் கூடவே கெட்ட பேரும்...எனவே: கவிஞர் தணிகை

Image result for jeyamohan

ஜெமோவும் புளிச்ச மாவும் பற்றிய பதிவுகளை நிறைய பார்த்தேன். அது தேவையா என்ற கேள்விகளைக் கொண்டிருக்கிறது இந்தப் பதிவு. பிரபலமானவர்களின் தவறுகளும், குறைபாடுகளும் உலகுக்கு பளிச்சென ஒரு வெள்ளை நிற சுவரில் கரும்புள்ளியாகத் தெரியும் இதைப்பற்றி குறள் கூட சொல்லி உள்ளது.

இந்த செய்தியை நானும் செய்தித்தாளைப் பார்த்தவுடன் இப்படி இந்தப் பதிவர்கள் செய்வார்கள் என எதிர் பார்த்தேன் அவரை எதிரியாகப்பார்த்து பதிவிட்டதையும் பார்த்தேன். நானும் கூட சூட்டோடு சூடாக இவர்களுக்கு முன்பாகவே நிறைய வருகையாளரை எனது வலைப்பூவிற்கு வரவழைக்க எழுதியிருக்க முடியும். ஆனால் அவை அற்பமானவை என்பதை நான் தெரிந்திருந்ததால் அப்படி எல்லாம் எழுத முனைவதில்லை. எழுதவில்லை

எனைப் பொறுத்தவரை தனிமனித துதிபாடல்கள் கூட மன்னிக்கப்படலாம் ஆனால் தனிமனிதம் பற்றிய இழிவான பார்வையும் அதன் பதிவுகளும் அவசியமா என்பதுதான் கேள்வி.
Image result for jeyamohan attacked
 சுஜாதா,பாலகுமாரனுக்கும் பிறகு அதிகம் எழுதும்  சினிமாவுக்கு எல்லாம்  இயக்குனர் சங்கருடன் சேர்ந்து பணி புரியும் எழுத்தாளர்,  அதை எல்லாம் கூட நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை அது அவரின் தனி மனித முன்னேற்றத்தில் இருக்கிறது. அதெல்லாம் தாண்டி ...

குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்  என்ற குறளில் சொல்வது போல...இங்கு எவரின் தவறு இருக்கிறது என்பதைப் பற்றி தீர விசாரித்து தெரிந்து கொள்ளாமலேயே பல பதிவுகள் பேசியுள்ளன.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்

என்னும் குறளுக்கேற்ப எந்த நிலத்தில் என்ன பயிர் விளையும் என்பதை அதன் முளை காட்டுவது போல ஒருவர் என்ன மாதிரியானவர் என்பதை அவர் பேசும் மொழிமூலம் அறிந்து கொள்ளலாம். அதையும் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.

ஜெமோ நூல்கள் முழுதும் நான் படித்தவனில்லை. சில படித்த நினைவுண்டு.

எல்லாரும் மனிதர்கள்தாம் சுஜாதா முதல் பாலகுமாரன் ஜெமோ எல்லாமே மனிதர்கள்தாம்

அவர் கன்னியாகுமரி என்பதும், அவர் கேரள மலையாள இலக்கியம் மற்றும் தமிழிலும் நிறைய எழுதியுள்ளார் என்பதும் பத்மஸ்ரீ மறுத்தவர் என்பதும் அதன் பின் நான் அவர் பற்றித் தெரிந்து கொண்டவை.

அதன் முன் நாஞ்சில் நாடன் போன்றோர் இவருடைய தூண்டு உணர்வால் இவருக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் 15 ஆண்டுக்கும் மேலானாலும் தன்னை விட வயதில் சிறிய ஜெமோவை ‍‍‍‍  முன்னிலைப்படுத்தி  தனக்கு சாகித்ய அகாடமி கிடைக்குமளவிற்கு தனது எழுத்துகளை தரத்தை முன்னேற்ற ஜெமோ கொடுத்த ஊக்கம் காரணம் என்றும் தான் முன்னேறியது எவ்வாறு என எழுதிய‌ அவரது கட்டுரையை படித்ததுண்டு. ஒரு வேளை இருவரும் ஒரே மாவட்டம் இவர்களது ஒரு சுலபமான சந்திப்புக்கு காரணமாக இருக்கலாம்

நாஞ்சில் நாடனுக்கு மது அருந்திய/அருந்தும் பழக்கம் உண்டு என்பதை அவரது எழுத்து மூலம் அறிந்தேன். ஜெமோவுக்கு இருக்கிறதா என்று உறுதியாகத்தெரியவில்லை அல்லது இவர்கள் எல்லாம் சேர்ந்து அருந்தியது பற்றி படித்ததை நானும் மறந்தும் இருக்கலாம்.

வீட்டின் முறைமைகள் சிற்றுண்டிக்கு மாவை கடையில் வாங்கும் பழக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது. மற்றபடி அவர் சொல்லும் விதமாகவே இப்போது நல்ல மனிதர்கள் குடிகாரர் மத்தியில் உலவும் நிலையே பார்வதி புரத்தில் மட்டுமல்ல நிறைய இடங்களில் நிலவுகிறது. எனவே அது போன்ற இடங்களில் மாறுபட்ட குணாதிசயம் உள்ளவர்கள் புழங்குவது சிரமம்தான்.

ஜெமோ போன்றோர் சென்னைக்கு இதற்குள் குடி பெயர்ந்திருக்க வேண்டும். இன்னும் கடல் சங்கமத்திலேயே இருப்பதில் இவர் சுகம் காண்கிறார்போலும். சென்னையில் இப்போது தண்ணீர் இல்லாதிருப்பது வேறு ...

மாவு புளித்துவிட்டது வேண்டாம் என்ற தர்க்கத்தில் மாவை தூக்கிப் போட்டதற்கு வீடுவரை வந்து மிரட்டப் பட்டிருக்கிறார் என அவரே சொல்லி இருப்பதுடன், அந்தக் கடை அருகிலேயே  அடித்து தள்ளப்பட்டிருக்கிறார். இவற்றை அவரே சொல்லி இருக்கிறார் காணொளி மூலம் அரசு மருத்துவ மனையின் படுக்கையில் அமர்ந்தபடி.

இதெல்லாம் நடப்பதுதான் ஏமாந்தவர் என்று தெரிந்தால் எல்லாமே இந்த சமூகத்தில் நடக்கும்.. பொதுவாகவே இடைத்தரகு எனப்படும் வியாபார உலகத்தில் நாம் இயங்குகிறோமென்பதை நாம் அப்படி ஒரு பிரச்சனையில் சிக்கும்போதுதான் உணரமுடியும்.  இவர் மாவை கடையில் வாங்க வேண்டுமா என்பதுதான் எனது கேள்வியே...

Image result for jeyamohan pulicha maavu


நான் இது போன்ற பல பிரச்சனைகளை நிறைய சந்தித்ததுண்டு...எனவே என்னால் ஓரளவு பிரச்சனை எப்படி போயிருக்கும் என்று கிடைத்த செய்திகளிலிருந்து கிரகிக்க முடிகிறது.

பொதுவாகவே இலக்கியவாதிகள் யதார்த்தமான நடைமுறை உலகோடு ஒத்துப் போகமுடியாது என்பது உண்மைதான். அப்படி இருந்தால்தாம் அவர்கள் இலக்கியவாதிகளாகவும், சமுதாய மேம்பாட்டு சிந்தனை படைத்தவர்களாகவும் இருக்கவே முடியும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை




Friday, June 21, 2019

நதி நீரை நாட்டின் நிலத்தை அரசு பொதுவுடமையாக்குவதும் நல்லதுதான்: கவிஞர் தணிகை

 நதி நீரை நாட்டின் நிலத்தை அரசு பொதுவுடமையாக்குவதும் நல்லதுதான்: கவிஞர் தணிகை

Image result for rajasthan yoga day

பிரதமர் வழிகாட்டும் 5 ஆம் உலக யோகாதினம் நல்லதுதான்.

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது போல வாரம் ஒரு நாள்  பள்ளிகளில் பாடம் யோகா பற்றி பயிற்றுவிப்பதும் நல்லதுதான்

நாட்டின்  நதிகளை அதன் நீரை அரசுடைமையாக்கி தனியார் ஆலைகளை அதிலிருந்து நீக்கி யாவர்க்கும் பொதுவுடமை ஆக்குவது அதை விட நல்லதுதான்.

நாட்டின் நிலத்தை தேசிய உடமை ஆக்குவதும் தனியார் அவற்றின் பால் உரிமை கொண்டாடுவதையும் நீக்கி அனைத்து மக்களுக்கும் உரிமையாக்கி தொழில் பல உருவாக்கி வேலைவாய்ப்பை உருவாக்குவதும் அதை விட நல்லதுதான்.

மனித நலம் யாவுமே உணவின் வளத்தில் இருக்கிறது.

உணவை காய்கறிகள் பழங்கள் போன்றவற்றிற்கு யோகா மாற்றச் சொல்லும் இயற்கை முறைக்கு போகச் சொல்லும் அடிப்படையில் இந்தியாவில் அனைவர்க்கும் உணவு உடை, உறையுளை உத்தரவாதமாக்கும் திட்டங்கள் யாவற்றிலும் நலலதுதான்.

பிரதமர், குடியரசுத் தலைவர், மந்திரி பிரதானிகளுக்கு 2100 கோடி செலவில் பாதுகாப்பு தனி விமானம் தயாரிப்பும் வசதியும் செய்து வரும் வேளையில்
யோகா தினம் நல்லதுதான்.

 ராஜஸ்தானில்  தார் பாலைவனத்தில்   நமது இராணுவ வீரர்கள் யோகா தினம் கொண்டாடுவதும்

 ஜக்கி வாசுதேவ் ஈஸா நிறுவனர் முப்படைகளுக்கும் யோகா தினத்தில் பயிற்சி அளித்ததும் செய்திகள் யாவும் வருவதும் நல்லதுதான்.

கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் யாவும் எளிமையாக அனைவர்க்கும் கிடைக்க சமமாக கிடைக்க தேர்தல் கட்சி ஆட்சி முறைகள் ஒழுங்கமைய அரசு பாடுபடல் நல்லதுதான்.

இன்னும் இலஞ்சம் வாங்கிய தாசில்தாரும் ஜீப்டிரைவரும் கைது செய்யப்படும் செய்தியும் எல்லாம் ஆன் லைனில் சுலபம் என்று சொல்லியபடியே பழைய இலஞ்ச இலாவண்ய முறைகள் மாறாமல் மனிதரும் இந்திய ஆட்சியும் நிர்வாகமும் செயல்பட்டு வருவதும் நல்லது அல்லதுதான்...
Image result for rajasthan yoga day



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, June 20, 2019

ஒரே நாடு ஒரே தேர்தல்: கவிஞர் தணிகை.

ஒரே நாடு ஒரே தேர்தல்: கவிஞர் தணிகை.

Image result for one country one election


நாடாளுமன்றத் தேர்தலையும் சட்ட மன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்திட ஆலோசனைக் கூட்டம் மத்திய அரசால் நடத்தப்பட்டுள்ளது. வரவேற்கத்தக்கது. இதில் கலந்து கொள்ளாத சில எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை மக்கள் சார் அக்கறை இல்லாதது. அதை யார் நடத்தினால் என்ன அது மக்களுக்கான ஒரு திட்டம் நாடு சார்ந்த நல் விளைவை ஏற்படுத்தும் திட்டம் அதற்கு அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும் என்ற நிலையில் அனைத்துக் கட்சிகளும் சபாநாயகரை எதிர்ப்பின்றி கொண்டு வந்தது போல கொண்டு வந்திருக்க வேண்டும். அதுதாய் நாட்டின்ன் மேல் அதன் மக்கள் பால் உள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாய் அமைந்திருக்கும்.

அதை விட்டு விட்டு அதில் எல்லாம் அரசியல் பார்த்துக் கொண்டு கலந்து கொள்ளாமல் விட்டவர்கள் மக்கள் சக்திக்கு எதிராக அடையாளம் காணப்பட வேண்டியவர்கள்தான். இந்த அம்சத்தைப் பொறுத்தவரை.

தெலுங்கான முதல்வர் தாம் கலந்து கொள்ள வில்லை என்றாலும் அதற்கு தமது பிரதிநிதியை அனுப்பி தமது நிலையை உறுதிப்படுத்தி பதிவு செய்துகொண்டது மாதிரியாவது அனைத்துக் கட்சிகளும் செய்திருக்க வேண்டும்.

மமதா, ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு போன்றோர்தாம் அதில் கலந்து கொள்ள முக்கியமாகச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எல்லாம் கலந்து கொள்ளச் செல்லாதது சரியான போக்கும் அல்ல‌

மேலும் இது குறித்து ஒரு ஆய்வுக் குழுவை அமைப்பதாக பிரதமர் செய்திருப்பதும் அந்த கூட்டம் மகாத்மாவின் 150 வது பிறந்த நாள், நாட்டின் 75 வது சுதந்திர தினம் பற்றி எல்லாம் கலந்தாலோசிக்கப்பட்டது என்ற செய்திகள் வந்துள்ளன.

மேலும் அ.இ.அ.தி.மு.க சார்பில் அமைச்சர் சண்முகம் மற்றும் நவநீதகிருஷ்ணன் எம்.பி ஆகியோர் கலந்து கொள்ளச் சென்றதாகவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதும்....இன்று துணை முதல்வர் நிதி வரவு செலவுக் கூட்டத்திற்கு சென்று மந்திரிகளை சந்திக்கவும் டில்லி செல்வதாகவும் செய்திகள்...ஏன் இதையே அந்தக் கூட்டத்திலும் கலந்து கொண்டு கையோடு இந்த நிகழ்வையும் இணைத்திருந்தால் அது தமிழக அரசுக்கு  நல்ல பேரை விளைத்து வலு சேர்த்திருக்குமே ...அது பற்றி எல்லாம் எவரும் அக்கறை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. எப்படியானாலும் அதிலும் அரசியல் கலந்திருக்கிறது

மேலும் இந்த சட்ட திருத்தம் வர அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இரு பாராளுமன்ற சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்றும் இருக்கிற படியால் இவை எல்லாம் நாட்டுக்குத் தேவை என்னும்போது அனைவரும் ஆதரிப்பதுதான் சரி.

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் மக்களுக்கான திட்டத்தில் கலக்குவது போலவும் மந்திரிகளுக்கு 30 மாதங்கள் கெடு வைத்திருப்பது போலவும்

இதைப் பற்றி எல்லாம் நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம் அல்லது காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம் அல்லது தமிழக இலட்சியக் குடும்பங்கள் தேர்தல் சீர்திருத்தம், திரும்பவும் அழைக்கும் உரிமை பற்றி எல்லாம் 1980களில் இருந்தே எழுதியும் பேசியும் பிரச்சாரம் செய்தும் வலியுறுத்தி வந்தது.

தேர்தல் மாறுதல்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் இருந்தாவது நல்ல மாறுதல்கள் மக்களுக்கு நிகழட்டுமே...

இது பற்றி 2002ல் அத்வானி மன்மோகன் காங்கிரஸ் அரசிடம் கொண்டு சென்று போதிய ஆதரவு இல்லாமல் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் நிலவுகின்றன‌

ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற ஏன் ஊராட்சி மன்ற தேர்தலையும் கூட சேர்ந்து நடத்திட வகை செய்யவேண்டும் ஏன் எனில் அப்போதுதான் ஒரு நிலையான ஆட்சியை மக்களுக்கான ஆட்சியைக் கொண்டு சேர்க்க உண்மையான அரசியல் ஆர்வலர்களால் ஈடுபட முடியும் அது மட்டுமல்லாமல் அப்படி அவர்கள் செயல்பட வில்லை எனில் அவர்களை திரும்பப் பெறும் அல்லது திரும்ப அழைக்கவும் வகை செய்யப்படவேண்டும்

இப்படிப் பிரித்து பிரித்து தனித்தனியாக நடத்திக் கொண்டே இருந்தால் தான் அந்த தேர்தல்களில் எல்லாம் மக்களை  சந்திக்கிறோம் என்று சொல்லி ஊழலின் ஊற்றுக் கண்கள் கூட்டணி சாதிய வாக்கு வங்கி போன்றவற்றில் கவனம் செலுத்தவும் ஒரேயடியாக எல்லா இடத்திலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்று பயம் கொண்டே இவர்கள் தவிர்த்து வருகிறார்கள்.


Image result for one country one election

இதே போல மூன்றுக்கு இரண்டு பங்கு மெஜாரிட்டி இருசபையிலும் காட்டி நதி நீர் இணைப்பையும் செய்து முடிக்கும் அரசே நாட்டுக்கான அரசாக அமையும்.

நீரில்லாக் கோடையில் எங்கள் வீட்டின் கெம்ப்ளாஸ்ட் இரசாயன நீர் விட்டு ஊரை நிலத்தடி நீரை நிலத்தைக் கெடுத்த கழிவு நீர் ஓடையருகே குடி இருப்பார் சர்வே எண் சொல்லுங்கள் என நேற்று ஊராட்சி மன்ற ஊழியர்களோடு சிலர் வந்து கேட்டனர். அரசுக்கு இது ஏற்கெனவே உள்ள புள்ளிவிவரம். எந்த வித முன்னறிவிப்புமின்றி இப்படி நில அளவை எண் கேட்டால் அதை யார் நினைவில் வைத்து சொல்லிவிட முடியும்...இப்படி திடீர் திடீர் என கண்ணாமூச்சு ஆடாமல் புள்ளிவிவரம் சேர்க்க வருவார் தாங்கள் யார் என்று சொல்லி, எதற்காக இந்த புள்ளிவிவரம் சேகரம் என்று சொன்னால் எல்லா மனிதர்களுமே உரிய கால அளவு கொடுத்தால் எல்லா புள்ளி விவரமும் தரவும் முடியும் திட்டங்களும் நிறைவேற்றவும் முடியும்.

அப்படித்தான் இந்த ஒரே நாடு ஒரே தேர்தலும். எல்லா நேரங்களிலும் மாற்றி மாற்றி தேர்தல் தேர்தல் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் நாட்டில் எந்தப் பணிதான் நடக்க முடியும்...பாராளுமன்றத் தேர்தல் இப்போதுதான் முடிந்தது இப்போது ஊராட்சி மன்றத் தேர்தல் வருகிறது இது முடிந்த கொஞ்ச காலத்தில் சட்ட மன்றத் தேர்தல் என்பார்கள் இப்படியே 5 ஆண்டு சுழற்சிக்குள் 3 தேர்தலும் மக்களை சுழலில் ஆழ்த்தி நாட்டை குழப்பத்திலேயே கொண்டு சென்று விடுகின்றன. அதை எல்லாம் எடுத்து கூட்டுறவு சங்க தேர்தல் என்பார், தொழிற்சங்கத்தேர்தல் என்பார் இப்படி மக்களாட்சி தத்துவம் நாராக கிழிபடுவதை விட தேர்தல் எல்லாம் முடித்து வைக்கப்பட்டு திட்டத்தின் அடிப்படையில் மக்களுக்கு என்ன பணி நிறைவேற்றப்படுகின்றன என்ற ஆய்வுப் பணியின் அடிப்படையில் மறு தேர்தல்கள் வர அவகாசாம் இருக்கும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, June 19, 2019

இன்றைய தேவை தண்ணீர் அதை உருவாக்கும் தலைமைகள்: கவிஞர் தணிகை

தண்ணீர் பிரச்சனை: சிங்கப்பூர் நீரின்றி தவித்தபோது என்ன செய்தது தெரியுமா?

நீரின்றி தவித்த போது சிங்கப்பூர் என்ன செய்தது தெரியுமா?

1965ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுப்பதற்கு முன்பும் சரி, பின்னும் சரி தனது ஒட்டுமொத்த தண்ணீர் தேவைக்கும் சிங்கப்பூர் மலேசியாவையே நம்பியிருந்தது.
ஆம், இயற்கையாக பெரியளவில் நன்னீர் ஆதாரமே இல்லாத சிங்கப்பூரின் முதல் நீர்த்தேக்கமே 1868ஆம் ஆண்டுதான் மெக்ரிச்சியில் கட்டப்பட்டது. இருப்பினும், தனது நன்னீர் தேவையை உள்ளூரிலேயே நிரப்ப முடியாததால், 1927ஆம் ஆண்டிலிருந்தே மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நீர் இறக்குமதி செய்யப்பட்டதாக மீடியா கார்ப் செய்தித்தளம் தெரிவிக்கிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, உள்ளூர் நீர்த்தேக்கத்திலுள்ள தண்ணீரும், இறக்குமதி செய்யப்பட்ட தண்ணீரும் சிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்த நிலையில், தற்போது 'நான்கு தேசிய குழாய்கள்' எனும் திட்டத்தின் அடிப்படையில் கூடுதலாக இரண்டு திட்டங்கள் சேர்க்கப்பட்டு அந்நாட்டின் நீர் மேலாண்மை திட்டடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

1. உள்ளூர் நீர்த்தேக்கங்கள்:

நீரின்றி தவித்த போது சிங்கப்பூர் என்ன செய்தது தெரியுமா?படத்தின் காப்புரிமைCHRIS MCGRATH
சிங்கப்பூரின் மொத்த நிலப்பரப்பான 722.5 சதுர கிலோ மீட்டரில் மூன்றில் இரண்டு பகுதி நிலப்பரப்பு நீர்ப்பிடிப்புக்கு உகந்ததாக உள்ளதாக அந்நாட்டு அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, சிங்கப்பூர் முழுவதுமுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழைநீரை தக்க முறையில் சேகரித்து வைப்பதற்கு அந்நாடு முழுவதும் 17 நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பெரும்பகுதி நகர்ப்புற பகுதியாக இருந்தாலும், அங்குள்ள கட்டடங்கள், வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகள் உள்ளடங்கிய விரிவான கட்டமைப்பின் மூலம் பெறப்படும் மழைநீர் நீர்த்தேக்கங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு பல்வேறு கட்ட சுத்திகரிப்புக்கு பின்னர் மக்களின் குடிநீர் தேவைக்கு வழங்கப்படுகிறது.

2. இறக்குமதி செய்யப்படும் தண்ணீர்

சிங்கப்பூர் - மலேசிய இடையிலான 1962ஆம் ஆண்டு தண்ணீர் ஒப்பந்தத்தின்படி, மலேசியாவிலுள்ள ஜோகூர் ஆற்றிலிருந்து தினமும் 250 மில்லியன் கேலன் வரையிலான தண்ணீரை சிங்கப்பூர் பெற முடியும். 2061ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தம் முடிவடைவதற்குள், உள்நாட்டின் நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு சிங்கப்பூர் முயற்சித்து வருகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு திட்டங்களும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வந்தாலும், அவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை மேற்கொண்டு வருவதாக கூறும் சிங்கப்பூர் அரசு, கீழ்க்காணும் இருவேறு தண்ணீர் திட்டங்களை நீண்டகால ஆராய்ச்சிகளுக்கு பிறகு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

3. புதுநீர்

நீரின்றி தவித்த போது சிங்கப்பூர் என்ன செய்தது தெரியுமா?படத்தின் காப்புரிமைROSLAN RAHMAN
பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்துவதேயே சிங்கப்பூரில் புதுநீர் என்று அழைக்கின்றனர். பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் திட்டத்திற்கான முயற்சி 1970களில் தொடங்கப்பட்டாலும், அதிக செலவீனத்தின் காரணமாக சுமார் இருபது ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் 2000ஆவது ஆண்டு புத்துயிர் கொடுக்கப்பட்ட இத்திட்டம் சிங்கப்பூர் அரசின் பொதுப் பயனீட்டு கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு, பல சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது.
2003ஆம் ஆண்டு முதல் கட்டமாக பெடோக் மற்றும் க்ராஞ்சி ஆகிய இரண்டு இடங்களில் மொத்தமாக ஒரு நாளைக்கு 10,000 கியூபிக் மீட்டர்கள் தண்ணீரை சுத்திகரிக்கும் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரில் ஐந்து புதுநீர் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
அதாவது, சிங்கப்பூரின் வீடுகள் முதல் பல்வேறு இடங்களில் பெறப்படும் பயன்படுத்தப்பட்ட நீரானது நேரடியாக புதுநீர் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, நுண் வடிகட்டல், சவ்வூடு பரவல், புற ஊதா கிருமிநாசம் ஆகிய உயர் தொழில்நுட்ப செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு தூய நீராக பெறப்படுகிறது.
இவ்வாறு பெறப்படும் நீர் 1,50,000க்கும் அதிகமான அறிவியல் சோதனைகளில் நற்சான்று பெற்று, அனைத்துலக குடிநீர் தரங்களை பூர்த்தி செய்துள்ளது. இவை பெரும்பாலும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே அளிக்கப்பட்டாலும், இதை குடிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று சிங்கப்பூர் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் இன்றைய ஒட்டுமொத்த தண்ணீர் தேவையில் 40 சதவீதம் வரை நிறைவேற்றும் புதுநீரை, 2060ஆம் ஆண்டுக்குள் 55 சதவீதம் வரை நீடிப்பதற்கான முயற்சிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

4. சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர்

நீரின்றி தவித்த போது சிங்கப்பூர் என்ன செய்தது தெரியுமா?படத்தின் காப்புரிமைFACEBOOK
சிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நான்கு திட்டங்களிலேயே கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம்தான் அதிக செலவுமிக்கதாக உள்ளதாக அந்நாட்டு அரசின் திட்ட விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட கடல்நீரை பெறுவதற்கு இயக்கப்பட வேண்டிய இயந்திரங்கள் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்தவே இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரின் தண்ணீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இதன் திறனை 2060ஆம் ஆண்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு அதே சதவீதத்தை தக்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தற்போது கட்டப்பட்டு வரும் இரண்டு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கூறிய நான்கு வழிமுறைகள் தவிர்த்து, தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, சிங்கப்பூரிலுள்ள ஒவ்வொரு தனிநபரும் 2030ஆம் ஆண்டுக்குள் தினசரி 140 லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

விழிப்புணர்வு

நீரின்றி தவித்த போது சிங்கப்பூர் என்ன செய்தது தெரியுமா?படத்தின் காப்புரிமைFACEBOOK
சிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2000 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஏழு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டதாகவும், வரும் 2021ஆம் ஆண்டுக்குள் மேலும் நான்கு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாகவும் சிங்கப்பூர் அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வை அந்நாட்டு அரசு பள்ளி முதல் கல்லூரி வரை பயிற்றுவிப்பதாக கூறுகிறார் சிங்கப்பூரை சேர்ந்த இளங்கலை கல்லூரி மாணவி அஷ்வினி செல்வராஜ்.
"சிங்கப்பூரில் ஒன்றாம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு தண்ணீரின் அவசியம் குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. அதாவது, பள்ளியில் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து பாடம் எடுக்கப்படுகிறது என்றால் மாணவர்களை அருகிலுள்ள நீர்த்தேக்கம்/ சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றிற்கு அழைத்து சென்று நேரடி விளக்கம் அளிக்கப்படுகிறது.
சிறுவயதிலேயே தண்ணீரின் அவசியத்தை நமக்கு புரியும் மொழியில் கற்பிப்பதால் அது மனதில் ஆழப் பதிந்து, இயல்பு வாழ்க்கையில் செயற்படுத்துவதற்கு தூண்டுகிறது" என்று கூறுகிறார்.
சிங்கப்பூரில் இல்லாத வளத்தை ஏற்படுத்தி மக்கள் இயல்பாக வாழும்போது, அனைத்து வளமும் இருக்கும் தமிழ்நாட்டில் அதை பாதுகாக்காதது வருத்தமளிப்பதாக கூறுகிறார் அஷ்வினி.
"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமுமே சிங்கப்பூர்தான். எனது சிறுவயதில் காலியாக பார்த்த பல இடங்களில் இன்று நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நீர்நிலையை ஒட்டிய மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படுவதோடு, தொலைக்காட்சிகள், வானொலி உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக காட்சியளித்த அணைகள் நீரின்றி வறண்டு காணப்படுவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
இதுமட்டுமின்றி, பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் தண்ணீர் ஆதாரத்திற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருவதாக சிங்கப்பூர் அரசு கூறுகிறது. ஆனால், தண்ணீரின் அவசியம், மேலாண்மை போன்ற அடிப்படை விடயங்களிலேயே சறுக்கும் தமிழ்நாட்டை அதிதீவிர நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே மீட்டெடுக்க முடியும்.
பிற செய்திகள்:
தமிழ் இந்து
சிங்கப்பூர்
பி பி சி
19/6/2019

Tuesday, June 18, 2019

இது மனித குலத்தின் ஒரு நுட்பமான கூறு: கவிஞர் தணிகை

இது மனித குலத்தின் ஒரு நுட்பமான கூறு: கவிஞர் தணிகை

Related image


நான் ஒன்றும் துறவியோ ஞானியோ அல்ல. ஆனாலும் அவ்வப்போது மானுட சக்திக்கு மீறிய ஒரு ஓசையற்ற ஒலி ஒன்று என்னை வழி நடத்துவதை அவ்வப்போது குறிப்பிடுவதுண்டு. உடனே மன நிலை பற்றி எல்லாம் பேச ஒன்றுமில்லை. நான் தியான வழிப் பாதையில் சுமார் 34 ஆண்டுகளாக உள் புகுந்து பயணம் சென்று கொண்டிருப்பவன். அதாவது 1985 ஜனவரி 5 முதல்.

நேற்று எடுத்துக்காட்டாக இரண்டு விடயங்கள். சில சமயம் அவற்றையும் நான் மீறிச் செல்வதுமுண்டு அதனால் கிடைக்கும் பாதிப்பை விளைவு அனுபவமாக எடுத்துக் கொள்வதுமுண்டு.

ஒன்று: புரை நீக்கு அறுவை சிகிச்சை முடித்து சரியாக ஒரு வாரம் ஆன நிலையில் பணிக்குச் சென்றிருந்தேன். அதற்கான பேருந்தின் பயணம் சுமார் 100 நிமிடம் வரை இருக்கும் போக வர சுமார் 3 மணிகள் ஆகலாம். அது மட்டுமின்றி  மிக கடுமையான வெயில். எனது பணி இருப்பிடத்தில் எனது வரவேற்பு மேசையுடனான இருக்கை திறந்த வெளியில் இருப்பது போல் காற்றின் போக்கில் தூசும், மண் துகள்களும் எளிதில் அடையும் வண்ணமே இருக்கும். இதை எல்லாம் மீறி சொட்டு மருந்தை எடுத்துக் கொண்டு அங்கேயே சில சொட்டுகள் விட்டுக் கொண்டு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். இதனிடையே வழக்கமாக வேம்படிதாள அரசு மருத்துவமனைக்கு செவ்வாய், வியாழன்களில் வழக்கமாக செல்லும் முகாமையும் அடியேன் தான் ஒருங்கிணைப்பு செய்வது வழக்கம். கண் மருத்துவரும் அறுவை சிகிச்சை செய்து பத்து நாள் ஆகிவிட்டதா என்று கேட்டார் இல்லை என்றேன்.

அவரின் அறிவுரையை பெற்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சுமார் இரண்டு கி.மீ நண்பர் சந்திரனுடன் சென்றுவிட்டு வரும்போது அந்த பேருந்து  நிறுத்தத்தில் சாதாரணமாக நிற்காத பேருந்துகளிடம் மன்றாடிவிட்டு ஒரு நகர் புற பேருந்து மூலம் வந்து சேர்ந்தேன். மதியம் சுமார் 12 மணியளவிற்கு முன்பே : ஒருவாரம் லீவு போடப் போறே...என ஒரு வாசகம் வந்திருந்தது.எனக்குள்ளிருந்தா எனக்கு வெளியிலிருந்தா மரு.கிரிஜா ஆதித்யா கேட்ட கேள்விக்கு அதாவது இவை எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது என்று கேட்டுப் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு பதில் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை. தெளிவாகவும் இல்லை. ஆனால் எனக்கு வெளியிலிருந்தும் கிடைக்கிறது என்பது மட்டும் தெளிவாகச் சொல்ல முடிகிறது

பொதுவாகவே நான் எவரின் சொல் பேச்சையுமே கேட்காதவன். கல்லூரி சென்றவுடன் சிலர் எப்போது அறுவை சிகிச்சை நடந்தது...,ஏன் இன்னும் கொஞ்ச நாள் ஓய்விலிருக்கலாமே...உடனே ஏன் வரவேண்டும் என்ற கருத்துகளை தெரிவித்தபடியே இருந்தனர்.

அதற்கேற்றாற் போல ஒரு மூத்த மருத்துவப் பேராசிரியர்: நீங்கள் பணி புரிவது மருத்துவமனை சார்ந்த பகுதி எனவே கிருமித் தொற்று ஏற்படுவது எளிது இப்படி ஏன் அவசரமாக வர வேண்டும் போங்கள் சார் இன்னும் ஒரு வாரம் லீவு போட்டு விட்டு நன்றாக ஓய்வெடுத்து விட்டு வாருங்கள் சார் என்றார் அவர் சொல்லியது ஏற்புடயதாகவே இருக்க மறுக்க முடியவில்லை.

ஆக அடுத்து மகனிடம் பேசும்போதும் கூட முடிவெடுக்காமலேயே இப்படி நிலை இருக்கும்போல இருக்கிறதே என்று உறுதிப்படுத்தாமலேயே சொன்னேன்.

இவைக்கேற்றாற்போல மதியம் 2 மணி சுமாருக்கு கண் எரிச்சல் ஆரம்பித்தது. அது மருத்துவர் ஒருவர் ஏ.சி. காரில் என்னைக் கொண்டுவந்து குரங்குச் சாவடியில் இறக்கும் வரை நீடித்து நான் செய்தது சரிதான் என்று சற்றேறக் குறைய இருந்த தீர்மானத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

ஆக அடுத்த செய்ய வேண்டியது ஒரு வடிவத்துக்கு வந்தது. முதல்வர் இல்லா நிலையில் அவர் வந்த பின் சொல்லி விட்டு விடுமுறை எடுத்துக் கொள்ளலாமே என்ற கல்லூரி நிர்வாகி ஒருவரின் சொல்லையும் கடந்து செல்ல வேண்டிய நிலையில் அதைக் கவனத்துடன் பரிசீலித்து அவற்றுக்கு செய்ய வேண்டிய முறைகளை செய்து மருத்துவ விடுப்பை எடுத்துக் கொண்டேன்

அதாவது அந்த முடிவு என்னால் எடுக்கப் பட்டது அல்ல என்ற போதிலும்... அது ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்தது... அதன் வழியே நான் வந்த வண்ணமே இருக்கிறேன் இது இன்று நேற்றா அல்ல பல்லாண்டுகளாக இப்படித்தான்...

சரி அதை விடுங்கள் அதே நாளில் நேற்று வீடு வந்து சுமார் 5 மணிக்கு பேருந்தில் தான் வந்து சேர்ந்தேன்.

சரி ஐந்து மணிக்கு வந்து விட்டோமே வழக்கமாக போகும் நடைப்பயிற்சிக்கு செல்வோமே என்று நினைக்கும்போதே: போவாதரா....(போகாதே என்ற பொருள்): என்று ஒரு சொல் தடுக்கி விட...சிறிது நேரம் தியானக் களம் புகுந்து அமைதியாக அமர்ந்து அந்த நேரத்தைக் கடத்த ஆரம்பித்தேன்.


Related image

ஏன் எனில் என் வாழ்வில் தியானமும், நடைப்பயிற்சியும் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. ஒன்று உடல் நலத்துக்கு மேலும் மாலை அந்த நேரத்தில் எங்கள் வீட்டில் என்னை மட்டுமே தேடி வந்து கொசுக்களிடமிருது தப்பிக்க மாலையில் அவசியம் நான் நடைப்பயிற்சிக்கு கிராமிய சாலைகளில் சென்று வருவேன் அதற்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆகிவிடும்.

இப்படி இருப்பதை ரத்து செய்துவிட்டு வீட்டில் இருக்கும் நேரத்தில் மூத்த சகோதரியின் மகன் வெளியூரிலிருந்து எனை வந்து பார்க்க வந்திருந்தார். அவரும் வரப் போகிறேன் என்று சொல்லாமலும், நானும் இருக்கிறேன் என்று சொல்லாமலும் இந்த சந்திப்பை நிகழ்த்த அந்த இயற்கையான வார்த்தை ஏற்பாடு செய்திருந்தது...நான் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தால் நான் இல்லாத நேரத்தில் எம்.ஜி.ஆர் ஆம் அவரது தாய்தந்தை இவரது முதல் எழுத்தைச் சேர்த்தால் அதுதான்...நமது எம்.ஜி.ஆர் எமாந்திருப்பார் அவருக்கு ஒரு ஏமாற்றம் அல்லது காத்திருக்க வேண்டிய சூழல் நிகழ்ந்திருக்கும்.

இவை இரண்டும் அடுத்தவரைப் பொறுத்துப் பார்க்க சிறிய சிறிய அற்ப விடயமாகத் தோன்றலாம். ஆனால் இந்த நுட்பமான செய்திகள் வாழ்வின் இருள் பயணத்தின் போது நல்ல ஒளிப்புள்ளிகளாக விளங்கி என்னை வழி நடத்தி வருவதை என்னால் உறுதியாக கூற முடிகிறது. எனவே பல சமயங்களில் பலரும் இவன் எப்படி இயங்குகிறான் புதிராக இருக்கிறதே என்று எனது தீர்மானங்களில் குழம்புவார்கள்...நான் இயங்கினால் தானே...நான் இயக்கப்படுகிறேன் என்று சொல்வதுதானே பொருந்தும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, June 15, 2019

தமிழ் நாடு தேர்வாணையத்தின் புதிய அரசிதழ் வெளியீடு: கவிஞர் தணிகை

தமிழ் நாடு தேர்வாணையத்தின் புதிய அரசிதழ் வெளியீடு: கவிஞர் தணிகை


Image result for is it truly on merit basis?

கடந்த முறையை விட இந்த முறை ஆன் லைனில் விண்ணப்பம் செய்வது மிகவும் எளிதாக சுலபமாக பயன்படுத்துவோரின் தோழமையுடன் இந்த செயல்பாட்டை வடிவைமத்துள்ளார்கள். அதற்காக பெரிதும் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

ஒவ்வொரு முறையும் மிகத் தெளிவாக கொடுக்கும் தகவல்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள் என திரும்பத் திரும்ப கேட்டு விவரம் அளித்து தவறுகள் நேராமல் மிகவும் அருமையாக பக்கங்களை திறந்து விண்ணப்பத்தை விவரங்களை உள்ளீட்டு பெட்டிகளுக்குள் தர வாய்ப்பு தந்திருக்கிறார்கள்.

மேலும் முதல் முறை நிரந்தரமாக பதிவு செய்து கொண்டவர்க்கு சில முறைகள் அதாவது ஊனமுற்றோர், பட்டியலிடப்பட்ட இனம், முன்னால் இராணுவத்தினர் ஏன் வழக்கத்துக்கு மாறாக பிற்படுத்தப்பட்ட இனத்தார்க்கும் கூட மூன்று முறை இலவசமாக கட்டணம் கட்டாமலேயே இந்த தேர்வுகளை எழுத அனுமதித்துள்ளார்கள்.

எல்லாம் சரிதான் இப்போது செப். 1 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தேர்வு அவரவர்கள் தாலுக்கா அளவில் இருக்கும் மையங்களில் எழுத வாய்ப்பு மேலும் இந்த முறை விண்ணப்பிக்க‌ ஜூலை 14 வரை விண்ணப்பிக்க‌ கடைசி நாள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 6400 பணியிடங்களுக்கு நடக்கும் இந்த தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்க்கு வயது 21 நிறைவடைந்திருக்க வேண்டும் ஜூலை 1 2019 அன்று எனக் குறிப்பிட்டுள்ளனர். மற்றபடி சுருக்கெழுத்து, தட்டெழுத்து, சர்வேயர் ட்ராப்ட்மேன் பயிற்சி பெற்றவர் தவிர பொதுவாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இளநிலை உதவியாளர்கள். பில் கலெக்டர்கள் போன்றவற்றில் உள்ளன.

ஒரு முறை நிரந்தரமாகப் பதிவு செய்து விட்டாலே 5 ஆண்டுகள் வரை அந்த பதிவை வைத்தே எளிமையாக விவரங்கள் அளித்து விண்ணப்பிக்கலாம் ஆனால் வேலை கிடைக்குமா என்பது பற்றி எவருமே உறுதி சொல்ல முடிவதில்லை.

ஏன் எனில் மெரிட் அடிப்படையில் இருந்தாலும் தமிழக அரசுப் பதவிகளுக்கு ஒரு செல்வாக்கு தேவைப்படுகிறது என பொது நீரோட்டம் நிலவுகிறது ஆனால் இதற்கு ஆதாரம் கேட்பார்கள். எவரும் ஆதாரத்துடன் இப்போது எந்த தவறையும் செய்வதில்லை. செய்ய அனுமதிப்பதுமில்லை.

ஊடகம் நேற்றைய தினம்கூட ஆளும் கட்சி அவசர அவசிய கூட்டம் பற்றிக் காணொளி மற்றும் செய்தி தரும்போது இரு கோஷ்டிகளும் எதிரும் புதிருமாக பேசிக் கொண்டன அதில் வருவாய் வரும் முக்கியமான 3 துறைகளுமே இ.பி.எஸ் முதல்வர் அணியிடம் உள்ளதாக் ஓ.பி.எஸ் அணி குற்றம் சாட்டியதாக செய்திகளைத் தெரிவித்தனர். வருவாய் என்றால் எப்படி சாலை, பாலம் , மற்றும் அரசுப் பணிகளை நிறைவேற்றித் தரும் ஒப்பந்ததாரர்களிடம் பெறும் வேலையை ஒப்படைப்பதற்காக பெறும் தொகை, பணியை ஏனோ தானோவென்று செய்து விட்டு அதில் அடிக்கும் தொகை மாறாக இப்படி பணி நிரந்தரம், பணி, மாறுதல் இதற்கெல்லாம் என ஒரு ரேட் இப்படி கைமாற்றுவார்க்கே மிக எளிதாக வேலைவாய்ப்புகள் இருப்பதாக பரவலாக பேச்சுகள் நிலவி வருகின்றன.

இது எந்த அளவு உண்மையோ பொய்யோ ஆனால் ரயில்வே சர்வீஸ் கமிஷனை விட த.நா.தேர்வாணையத்தின் அணுகுமுறை மாநில அளவில் அது நாடு தழுவிய அளவில் என்பதால் தமிழக இளையவரை மற்ற மாநிலத்துக்கு சென்று எழுதச் சொல்லுமளவு சித்ரவதை எல்லாம் இல்லாமல் நடத்துகிறார் என்பது மட்டுமே இதைப்பற்றி நாம் கருத்தில் கொள்ளும் மென்முகம்.
Image result for is it truly on merit basis?


மற்றபடி பணி வாய்ப்பு பற்றி எல்லாம் எதைப்பற்றியும் சொல்வதற்கில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Friday, June 14, 2019

மேட்டூர் ரயில் என்னாயிற்று? பவானி தொப்பூர் நெடுஞ்சாலை என்ன ஆயிற்று? கவிஞர் தணிகை

மேட்டூர் ரயில் என்னாயிற்று? பவானி தொப்பூர் நெடுஞ்சாலை என்ன ஆயிற்று? கவிஞர் தணிகை

Image result for salem to mettur train cancelled?

கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் சேலத்திலிருந்து மேட்டூர் 5 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலை ரத்து செய்தார்கள் மறுபடியும் அந்த ரயிலை ஓட்டவே இல்லை.

வெறும் கூத்துக்கு மீசை வைப்பது போல காலை சேலத்திலிருந்து எடுத்து வந்து மேட்டூரில் பகல் முழுதும் நிறுத்தி விட்டு இரவு 7 மணிக்கு மேட்டூர் ரயில்வே நிலையத்தில் நிறுத்த இடம் இல்லாதது போல சேலத்துக்கு கொண்டு சென்று நிறுத்தி வருகிறார்கள். சரியான அரசியல் பம்மாத்து.

இதைப் பற்றி புகார் ஏதும் வரவில்லை என்கிறார்கள். ஆனால் எந்தவித புகாரையும் மேலே அனுப்ப மறுக்கிறார்கள் என்பதுவே உண்மை. மேல் அனுப்பினாலும் எந்தவித பொறுப்பான வினையாற்றுவதும் இல்லை என்பதெல்லாம் வேறு விடயங்கள்

மாநில வருவாய்த்துறைக்கே பிப்ரவரி 7 ஆம் தேதி வாக்கில் ஆன்லைனில் கொடுத்த புகாருக்கு உங்கள் புகார் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற பதில் நேற்று அதாவது ஜூன் 13ல் கிடைத்திருக்கிறது. இவ்வளவு விரைவாக அரசுப்பணி நடந்து வருகிறது. ஜெ உடல் நலக்குறைவால் அரசு ஸ்தம்பித்த்ததுபோல  ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தவித்துக் கொண்டிருக்கவே நேரம் போதவில்லை ஆட்சியாளர்களுக்கு.

இந்நிலையில் ரயில்வே பற்றி சொல்லவே வேண்டாம்.

இதில் பெருத்த அரசியல் மோசடி இருக்கிறது. எல்லா தனியார் பேருந்துகளும் சேலம் பேருந்து நிறுத்தத்திலேயே ஓவர் லோடாக ஸ்டேன்டிங்கில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. இது பற்றிய ஒரு செய்தியை புதிய தலைமுறை தனியார் தொலைக்காட்சி கூட கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒளிபரப்பியது அந்தக் காணொளியின் எனது உரை வீச்சு இடம் பெற்றிருந்தது அது முன்னால் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கொ.க.மணி மற்றும் இப்போதைய சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் முன்னிலையில் இடம் பெற்றிருந்தது.

அதுவும் அரசு பேருந்தை விட தனியார் பேருந்துகளுக்கு எதற்கிந்த மௌஸ் எதற்கிந்த கிராக்கி என்றுதான் தெரியவில்லை. கேட்டால் ஒரு விவசாயி சொல்கிறார் சில நகர பேருந்துகளின் கட்டணத்தை விட இந்த தனியார் பேருந்துகளின் கட்டணம் ஓரிரு ரூபாய் குறைவு என்கிறார். எனவே 15 கி.மீ போவதற்கும் கூட நகர பேருந்தில் ஏறுவதை விட இந்த நெருக்கியடிக்கும் தனியார் பேருந்தில் ஏறி வருகிறார்கள். பின்னால் அரசு நகரப் பேருந்து காலியாக வரும்போதும்

Image result for thoppur to bhavani new highway map


மேட்டூருக்கு நேரடியான புக்கிங்க் வசதி சென்னையில் இருந்து இல்லை சேலம் வரைதான் என்பதும் ஆம்னி சொகுசு பேருந்துகளில் என்பதும் அடிக்கடி சென்னை சென்றுவருவார் பகிர்ந்து தரும் செய்திகள்.

சரி இதுதான் இப்படி என்றால் தொப்பூர் முதல் பவானி வரை தேசிய நெடுஞ்சாலை ஆக்கப்படும் 4 வழிப் பாதையாகும் என்று நிதின் கட்காரி அடிக்கல் நாட்டியதாக எல்லாம் செய்திகள் வந்து ஆண்டுகள் சில ஓடினாலும் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் உள்ளது.

அப்போதைய மத்திய மாநில நெடுஞ்சாலைத் துறைகள் சாலையோரத்து கடை முதலாளிகளிடம் பெரும் தொகை பெற்றுக் கொண்டு அந்த திட்டத்தை அப்படியே இருக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்ற ஆதாரம் இல்லா செய்திகளாக சொற்கள் உலவி வருகின்றன.

எதற்கும் ஆதாரம் வேண்டுமே...ஆதாரம் இல்லாமல் தேர்தல் நிதி 500 கோடி  வாங்கினாலும் தொண்டர்களே கேட்பார்களே நீங்கள் பார்த்தீர்களா எப்படிச் சொல்கிறீர் அதற்கான ஆதாரம் உண்டா என்றெல்லாம்...எனவே இயற்கையும் காலமும் அதற்கான ஆதாரங்களை தோண்டி எடுத்து தண்டனையாய் மாற்றித் தரும் வரை இவர்களை எல்லாம் தண்டிக்க மனித அமைப்புகளுக்குள் வழி இல்லை...

தற்போது சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பியும், தர்மபுரி எம்.பி. மரு. செந்தில்குமார் அவர்களும் இதற்கு எல்லாம் வழி செய்தால் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக வாக்களித்த மக்கள் மகிழ்வார்கள்.
Related image




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, June 13, 2019

கண்களைக் கவனியுங்கள்: கவிஞர் தணிகை

கண்களைக் கவனியுங்கள்: கவிஞர் தணிகை


Image result for eyes cataract symptoms and operations


Image result for eyes cataract symptoms

மின்னல் கேந்திரங்கள் உன் விழிகள் மெய் ஞானப் புறப்பாடு உன் மௌனப் புன்னகை என்று எழுதினேன் உருப்படி இல்லாமப் போச்சு.

சத்தமில்லாமலே பேச முடியும் அன்பிருந்தால்
யுத்தமில்லாமலே ஜெயிக்க முடியும் அன்பிருந்தால்

அதுவும் உருப்படாமதான் போச்சு.

பொதுவாகவே ஒருவர் கண்களைப் பார்த்து பேசினால் அவர் உண்மை சொல்கிறாரா பொய் பேசுகிறாரா என்று கண்டறிந்து கொள்ளலாம் என்பார்கள். இப்போது அதெல்லாம் செல்லுபடியகா அளவில் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள் வந்துவிட்டார்கள் துளியும் எதையும் கண்களிலோ முகத்திலோ காட்டாமலே வித்தை காட்ட எல்லாம் தெரிந்து கொண்டு விட்டது மனித குலம்.

முகத்தையும் கண்களையுமே பார்த்து பழக்கப்பட்ட நல்ல குணம் எல்லாரிடமும் காணப்படுவதில்லை.

ஆனால் எண் ஜான் உடலுக்கு சிரசே பிரதானம், சிரசுக்கு கண்களே பிரதானம் அல்லது காவல் என்ற பழமொழி சில வடமொழி கலந்த வார்த்தைகளுடன் உண்டு.

கண்களற்ற ,மாற்றுத் திறனாளிகள் எல்லாம் எப்படி பிழைக்கிறார்கள் என்று நாம் சிந்திக்க நேரமற்று பறந்து கொண்டிருக்கிறோம்.

முதலில் கண்களில் நரை போல திரை விழுவதையும் தடுக்க முடியாது என்கிறார் கண் மருத்துவர்.

Image result for eyes cataract symptoms and operations


தாய்க்கு இந்நிலை வந்தபோது சாய்பாபா ட்ரஸ்ட் மூலம் இலவசமாக செய்கிறார்கள் கண்புரை நீக்கு அறுவை சிகிச்சை அவருக்கு தனியாக டோக்கன் எடுத்து வைத்து விடுகிறோம் அழைத்து வாருங்கள் என்றார்கள். 10 பேரை சுமந்த தாய்க்கு இலவசமாகச் செய்வது சரியென அப்போதும் படவில்லை இப்போது கூட இலவசமாகச் செய்வது சரியெனப்படவில்லை அறுவை நீக்கு சிகிச்சை புரை நீக்கி செய்வது அதன் பின் லென்ஸ் வைப்பது இரண்டுமே முக்கியமானவை.

என்னதான் சினரேரீயா மார்ட்டிமா என்ற ஜெர்மன் இம்போர்ட்டட் ஹோமியோ மருந்தை வாங்கி 3 வருடம் தொடர்ந்து இடைவிடாமல் விட்டாலும் வளரும் புரை வளர்ந்தே இருந்தது. அதை எல்லாம் நம்பாமலிருப்பதே நல்லது.

வேண்டுமானால் உடல் சூட்டை தணிக்க எண்ணெய்க் குளியல் குளிப்பது, கண்களுக்கு தூய எண்ணெய் என்றால் விட்டுக் கொள்வது...இதைக் கூட வேண்டாம் என்பது ஆங்கில மருத்துவம்.

சரி கதைக்கு வருகிறேன் அம்மாவை அழகாக அழைத்துச் சென்று நகரின் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் அப்போது 1980கள் என நினைக்கிறேன் அப்போதே பல்லாயிரம் செலவு செய்து நல்ல லென்ஸ் வைத்து அறுவை சிகிச்சை செய்து காரில் அழைத்து வந்து வீடு சேர்ந்து அவரை சொட்டு மருந்து எல்லாம் சரியாக இட்டு பராமரித்துக் காத்தேன்.

இரண்டாம் கண்ணுக்கு செய்யவில்லை...கண்ணாடி போடுவது எழுதுவதற்கு அல்லது படிப்பதற்காக என்றால் போட்டுக் கொள்ளலாம் என்றார்கள்...அது அவர்க்குத் தேவைப்படவில்லை.

எனது காலம் வந்தது...விடு விடு என ஓடி 5 ஆம் வகுப்பு வரை என்னுடன் உடன் படித்த பூபதிக் குடும்பத்தாரின் முத்துசாமி அறக்கட்டளை நடத்திய முகாமில் கலந்து கொண்டு உடனே செய்ய வேண்டும் புறப்பட்டு வாருங்கள் என்ற உடன் சாப்பிட்டு இரண்டு போர்வை மட்டும் எடுத்துக் கொண்டு சேலம் சென்று அரவிந்த் கண் மருத்துவ மனையில் இலவசமாக செய்து கொண்டேன்.

அப்போதுதான் தெரிந்தது அது மிகவும் கீழ் தட்டு ஏழை மக்களுக்காக நடத்துவது என்று. நல்ல லென்ஸாக வைக்க முடியுமா நான் அதற்கான செலவை தந்துவிடுகிறேன் என்றதற்கு மறுத்துவிட்டார்கள்...அந்த லென்ஸ் வைத்ததில் எனக்குத் திருப்தி இல்லை. ஏதோ ஒளி இல்லாமல் போவதற்கு பதிலாக ஒளி கொடுத்த புண்ணியம். அந்த அறக்கட்டளை, அந்த மருத்துவமனை மற்றும் பார்வை இழப்போர் சங்கம் ஆகியவை சார...

ஏன் இந்த நாட்டில் நல்ல மருத்துவம் நல்ல கல்வி, நல்ல விளையாட்டு, நல்ல உணவு, நல்ல உடை, நல்ல உறைவிடம் கீழ் தட்டு மக்களுக்கு இன்னும் சென்று சேராமலேயே இருக்கிறது என அவ்வப்போது சிந்திப்பேன். முடியரசு, அடிமை வாழ்வு, கல்வியின்மை, ஆங்கிலக் காலனி ஆதிக்கம், கிறித்தவ அனுசரணைப்பள்ளிகள் கல்வி...அதன் விளவாக இந்தியாவில் தொடரும் ஆட்சிகள்...

அப்போதே நான் முடிவு செய்து கொண்டேன் அடுத்த முறை நல்ல முறையில் செய்து கொள்ள வேண்டுமென.

அதே போல இனி வருவதை படியுங்கள் அதுதான் முக்கியம்:

அதாவது கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்து புரை நீக்குவத் என்பதற்கும் லென்ஸ் வைப்பதற்கும் ஆகும் கால அளவு வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அதற்குரிய தயாரிப்பு செய்வதற்கும் அதை அடுத்து பின் மருத்துவம் தொடர்வதற்கும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறை கவனிப்பு அதை நோயாளி பின் பற்றுவது இவற்றில் தாம் முழு வெற்றியே அடங்கி இருக்கிறது.

Image result for vinayaka mission hospital salem

வினாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரியில் லேசர் முறையில் மிகவும் அருமையாக இந்த அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்து விடுகிறார்கள். இப்போது இதன் தலைவர் பிரகாசம் முன்பு இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவராகவும் சேலம் மாவட்ட மற்றும் துணை இயக்குனர் மருத்துவ மனையிலும் பணிபுரிந்த புகழ் பெற்ற மருத்துவர்

கண் துறைக்கு பேராசிரியர். மருத்துவர். எழில் வேந்தன் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். அதில் மரு.ஜெயப் பிரகாஷ் போன்ற புகழ் பெற்ற மருத்துவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.



எனக்கு ஏற்கெனவே இலவசமாக அரவிந்த் கண் மருத்துவ மனையில் இலவசமாக செய்த நினைவு இப்போது நல்லபடியாக செய்து கொள்ள முடிவெடுக்க உதவியது.

மருத்துவரை கலந்தாலோசித்தேன் முன் மருந்துகள் கொடுத்து அதை ஒரு சில நாட்கள் விட்டு வரச் சொன்னார். லென்ஸை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அதில் பல வகை ரூ. 5000 முதல் 60,000 வரை கூட இருக்கிறதாம். பல வகைகளில்.

அதை நமது சக்திக்கேற்றவைகையில் நமக்குப் பொருத்தமானதாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  நான் மிகவும் உயரச் செல்லாமல் மிகவும் தாழ்நிலையில் அல்லாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு நடுத்தர விலையில் தேர்வு செய்து கொண்டேன். ரூ. 32,000க்கு மல்டி லேட்டரல் லென்ஸ் எல்லாம் கூட உண்டாம்.

5000 பேசிக் ஃபோல்டபள் லென்ஸ்
7000 அஸ்பெரிக் ஃபோல்டபள் லென்ஸ்
10,000 ஹைட்ரோபோபிக் லென்ஸ்
15,000 இண்டியன் ஹைட்ரோபோபிக் எல்லோ லென்ஸ்
20,000 இம்போர்ட்டட் ஹைட்ரோபோபிக் அக்கர்லிக் யெல்லோ லென்ஸ்

இப்படி பல வகை உண்டாம். எல்லாம் டாக்டர் சொன்னதுதான்.

அதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் போவது நன்றாக இருக்கும் என அறிவுரை கிடத்தது. எனவே நான் பணி செய்யும் கல்லூரியின் சகோதர மருத்துவக் கல்லூரியில் சென்று உள் நோயாளியாக பதிந்து கொண்டு  ஒரு நல்ல லென்ஸைத் தேர்வு செய்து கொண்டு  ஆமாம் முன் சொன்னது போல உள் நோயாளியாக சேர்ந்தவுடன் ஒரு டி.ட்டி போடுகிறார்கள் சில முறை சொட்டு மருந்து விடுகிறார்கள். அதன் பின் பின் தொடையில் அல்லது குந்துபுறத்திலொரு  ஊசி. அதன் பின் நேராக அறுவை சிகிச்சை அரங்கம் மிகவும் எளிதாக பதினைந்து நிமிடத்தில் அதாவது மதியம் 12.45க்கு உள் சென்றேன் ஒருமணிக்குள் லேசர் கதிர்கள் மூலம் அந்த புரை நீக்கப்பட்டு புரை நீக்கப்பட்டு விட்டது சார், இப்போது லென்ஸ் வைக்கிறோம் என்று வைத்து விட்டார் மருத்துவர்.  ஒரு ப்ளாஸ்டர் போட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு இரண்டு மணிக்கு கட்டையும் பிரித்து கண்ணாடி போட்டுக் கொள்ளச் சொல்லி விட்டார்கள். லென்ஸ்க்கும் மேற்கொண்டு தோராயமாக ஒரு ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவாகி இருக்கும். ஆனால் இதன் மதிப்பு வெளியில் செய்து கொள்ளும் போது ரூபாய் 40,000க்கும் மேல் ஆகிவிடும் என்று எனது மருத்துவர் கூறியது நூற்றுக்கு நூறு சரியே. இந்த முகாம் அலுவலரும் பொது உறவு அலுவலரையும் ஒரு முகாம் நோயாளியாக வைத்து மருத்துவம் பார்த்த அந்த மருத்துவ மனைக்கும் அதன் நிர்வாகமான விநாயகா மிஷன் கல்விக் குழுமத்திற்கும் எனது நினைவறிதலும் நன்றியறிதலும் எப்போதும் உண்டு. மேலும் அதற்கான மருத்துவ விடுப்புடன் அனுமதி அளித்த எங்கள் கல்லூரி முதல்வர் பேரா.மரு.பேபிஜான் அவர்களுக்கும்தான்.

 கண் துறைத் தலைவர் மரு.எழில் வேந்தனும், மரு. ஜெபியும் குழந்தைகளுக்கு சொல்வது போல சொட்டு மருந்து விடுவது பற்றி விளக்கிச் சொல்கிறார்கள் கண்ணாடி தலை மேலிருந்து போடுங்கள், ஒரு வாரம் தலைக்கு குளிக்காதீர்கள், சொட்டு மருந்து: 6, சொட்டு மருந்து 4, சொட்டு மருந்து 3 என தினமும் பிரித்துக் கொடுத்திருந்தார்கள். சொட்டு மருந்தின் குப்பியின் முனை படாமல் கை படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...கண்களில் எக்காரணம் கொண்டும் கை வைக்காதீர்கள்.... எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா

நான் சொல்வது என்ன வெனில் மிகவும் தாமதமாக முதிர் நிலையில் முதிய வயதில் செய்து கொள்வதை விட உடலில் சத்து இருக்கும்போதே இதை செய்து கொள்வது மிகவும் எளிதானது. பிறர் உதவி கூட அவசியமில்லாமல் போய்விடுகிறது.

நான் கட்டைப் பிரித்ததும் கண்ணாடி போட்டுக் கொண்டு மருத்துவக் கல்லூரியிலிருந்து இரண்டு பேருந்து மாறி ஊருக்கு வீட்டுக்கு பேருந்திலேயே வந்து சேர்ந்து அது முதல் அவர்கள் சொன்ன சொட்டு மருந்து மாத்திரைகளை அப்படியே செய்து வருகிறேன். கண்களை இப்போது திறந்து  பார்த்தால் மிகவும் வெளிச்சமாக இருக்கிறது. அறிவியலை மருத்துவ அறிவியலை, வியக்காமல் இருக்க முடியாது இதற்கு உதவிய அத்தனை பேரையும் நான் நினைக்காமல் இருக்கவும் முடியாது...

இவ்வளவு வெளிச்சத்தையும் விட்டு விட்டு அந்த மூடு மந்திரத் திரையில்தானா இத்தனை நாட்களை கழித்து விட்டேன்...

ஆனால் இதற்கு முதல்வர் காப்புறுதித் திட்டம் புரை நீக்கு அறுவை சிகிச்சைக்கு இல்லை,மேலும் ஏதாவது காப்புறுதித்திட்டம் நீங்கள் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தால் அது பலனளிக்கலாம். ஆனால் குரூப் காப்புறுதித் திட்டம் எல்லாம் பலனளிக்காது நமக்கு பொருளாதார உதவி புரியாது என்பதும் எனக்குக் கிடைத்த கூடுதல் தகவல்கள். அனைத்தும் உங்களிடம் பகிர்ந்துள்ளேன். உங்களக்கு எவருக்காவது உதவக்கூடும் என்ற நம்பிக்கையில். எனக்கு உதவியவர்கள் போல உங்களுக்கும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில்

மறுபடியும் பூக்கும் வரை\
கவிஞர் தணிகை.




Wednesday, June 12, 2019

வாழ்வெனும் நதி போகும் போக்கில் (அ) போகிற போக்கில்: கவிஞர் தணிகை.

இடைவிடாமல் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தது காற்று நடைப்பயிற்சி முழுவதுமே அதைக் கவனித்தபடியே சென்று கொண்டிருந்தேன்.தானாக பேசிக் கொண்டே இருந்தால் பைத்தியம் என்பார்கள், இயற்கைக்கு மாறான அறிவியல் ஆக்கபூர்வமாக கொண்டு வந்த அக்கபோர்: வாகனசாரிகளும் தானாகவே பேசியபடியே சென்று கொண்டிருந்தார்கள்.அறிவியல் நிறைய பைத்தியங்களை அடையாளம் காட்டியபடி இருக்கின்றன. செல்பேசி உலகம். வாகனத்தில் கலகம்....
Related image



அவர் எனக்கு புதிதான அறிமுகம் என்பதால் அவர் கால அட்டவணை எல்லாம் எனக்குத் தெரியாது ஆனாலும் அவர் மிகவும் பணிகள் அதிகம் உள்ளவர் என்று அறிய முடிந்தது. ஒர் நாள் மதுரை சென்று வந்தேன் என்றார் மற்றொரு நாள் கோவை சென்று வந்தேன் என்றார். எப்படி இருந்தாலும் இவர் போன்றவர்கள் தமது அன்றாட வேலை நாட்களை விடாமல் செய்து கொண்டே இருக்கின்றனர் அத்தனை பரபரப்பான சூழலிலும்.

மாலை வேறு  மாநகர் சார்ந்த மருத்துவமனைக்கு இவரது பணி நடைபெறுகிறது. கல்லூரியில் பேராசிரியர் பணி . இவரிடம் தான் நான் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளத் தீர்மானித்திருந்தேன். நாளும் தோராயமாகக் குறிக்கப்பட்ட நிலையில் அது குறித்து முன் ஏற்பாடுகளுக்கான ஆவன செய்யும் பொருட்டு திடீரென ஒரு நாள் என்னை அழைத்து மாலை மாநகர மருத்துவ மனைக்கு ஒருமுறை வாருங்கள் சில பரிசோதனைகள் இருக்கின்றன என்றார். ஏற்கெனவே சில தேவையான பரிசோதனைகள்  மருத்துவக் கல்லூரி சார்ந்த வளாகத்திலும் நடைபெற்றிருந்தன‌

உடனே இவரது அழைப்பை வரப்ரசாதமாக ஏற்று வந்து விடுகிறேன் என உறுதி அளித்தேன். அவரும் உங்களுக்காக எப்போதும் வருவதை விட நான் முன் கூட்டியே சுமார் 6 மணிக்கே கூட வந்து விடுகிறேன் என்றார். எனது நிலையை அறிந்த மருத்துவர்.

3. 30 மதியம் கல்லூரி முடிந்து பேருந்து சுமார் 4.15 மணிக்கு எடுக்கப்பட நானும் அத்துடன் என்னை பயணத்தில் இணைத்துக் கொண்டேன். பழைய பேருந்து நிலையம் சென்று அதன் பிறகு கொஞ்சம் நடந்தால் அந்த மருத்துவமனையை சென்றடைந்து விடலாம் என்பதால்.

பேருந்து ஓட்டுனர் சந்திரன் , சார் அமருங்கள் சார், நான் கடைசியில் பேருந்தை சென்று நிறுத்தி விட்டு எனது இரு சக்கர வாகனத்திலேயே கொண்டு வந்து விட்டு விடுகிறேன் என்றார். மறுக்க முடியவில்லை. அவருடன் இணைத்துக் கொண்டேன் கடைசி பயணியான ஒரு பயிற்சி மருத்துவர் இறங்கிக் கொண்டது பேருந்து அதன் நிறுத்தம் சென்று நிறுத்தப்பட்டது மிகக் குறைவான இடத்தில் 6 பேருந்து நிறுத்துகிறார்கள் மாதமானால் ஒன்றுமில்லா சிறு இடமே பல்லாயிரம் ஊதியத்தை பெற்றுத் தந்துவிடுகிற நகர் புறச் சூழல். வியப்பாக இருந்தது.

ஏக்கர் கணக்கில் வைத்துக் கொண்டு விவசாயமும் செய்ய முடியாமல் வேறு ஒன்றும் செய்ய முடியாமல் வள்ளுவர் சொல்லியபடி நிலம் என்னும் நல்லாள் ஊடிவிட எத்தனையோ நிலம் இருக்க...

சரியாக இரு சக்கர வாகனத்தில் என்னை அந்த மருத்துவமனையில் பேருந்து ஓட்டுனர் சந்திரன் ...இளைஞர் கொண்டு விடும்போது சரியாக மணி 5. 30 இருக்கும். அப்போதிருந்து காத்திருக்க ஆரம்பித்தேன். காத்திருந்தேன் என்பதை விட அந்த இடத்தில் என்னை ஐக்யப்படுத்திக் கொண்டிருந்தேன். கோவில் போன்ற இடம். நீள் பாதை விநாயகர் சிலை. அதைச் சுற்றி இறைவணக்க சூழ்நிலை. சில பெண்கள் இரு ஆண்கள் அனேகமாக அவர்கள் அந்த இடத்தை கவனித்துக் கொண்டிருந்ததைக் கவனிக்கும்போது கொஞ்சம் வேறுபாடு தெரிந்தது.அதற்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போல‌

அவரா 7. 30 மணிக்குத் தான் வருவார் என்றார்கள்.அமருங்கள் என்றார்கள்.  சுமார் 6 மணியாக பத்து நிமிடம் ஆனதும் காத்திருக்கிறேன் என்றேன் அங்குதான் அய்யா வந்து கொண்டிருக்கிறேன் என சரியாக 6. 30 மணிக்கே வந்து விட்டார் எனக்காக. எப்போதும் 7. 30 மணிக்குத்தான் வருவார் என்று சொல்லப்பட்ட மதிப்பிற்குரிய மருத்துவர். மதுரை சென்று வந்தேன் என்றார்.

அதற்கும் முன்பே அவரின் உதவியாளர் வந்திருந்தார். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார் மற்றொருவர். அப்படியே செய்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோதே மருத்துவர் வந்துவிட்டார். பரிசோதனைகள் முடிந்து அறுவை சிகிச்சைக்கான திட்டமிடல் நடந்தது. பின் தொடர்ந்து அனுசரிக்க வேண்டிய முறைகளும் குறிப்பிடப்பட்டு மருந்துகளும் தரப்பட்டன.

Image result for perennial river like life

மொத்தம் 780 ரூபாய் ஆகிவிட்டது. நான் எப்போதும் தேவையில்லாமல் ரொக்கத்தை பாக்கெட்டில் வைத்துக் கொள்வதுமில்லை. பணப்பை அதாவது மணிப்பர்ஸ் என்னிடம் இருக்காது. அது அந்த மாநகரம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடத்தால்.  வீட்டுக்கு கல்லூரிக்கு கல்லூரியிலிருந்து வீட்டுக்கு அதற்கு பயணத்துக்குத் தேவையான பணத்தை மட்டுமே எடுத்துச் செல்பவன்.கார்ட் போன்றவையும் வைத்திருக்கமாட்டேன். செல்பேசியையே அங்கே இங்கே வைத்துவிட்டு அட காணோமே என்று தொலைந்து விடுமோ என்ற பயத்தில் தேடும்போதே அது இருக்குமோ இருக்காதோ என பதற்றம் எல்லாம் உண்டு ஆதலால் கார்ட், பணம் ஏதும் அதிகம் எதற்குமே எடுத்துச் செல்லாதவன் என்பதால்...நானும் கட்டணம் ஏதும் எடுத்துவர வேண்டுமா எனக் கேட்கவில்லை. அவரும் ஏதும் சொல்லவில்லை. அப்படித் தெரிந்திருந்தால் கல்லூரியில் எவரிடமிருந்தாவது வாங்கிச் சென்றிருக்கலாம்.

எனக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது . அன்றுதான் நூல் விற்ற காசில் திருப்பதி போகும் ஒரு உண்மையான உழைப்பாளிக்கு எனது சார்பாக 50 ரூபாய் கொடுத்திருந்தேன். அதெல்லாம் போக என்னிடம் ரூ. 520 தான் இருந்தது.

அந்த 20ரூ எடுத்துக் கொண்டு இவ்வளவுதான் இருக்கிறது என அந்த 500ரூபாயைக் கொடுத்தேன்,  எனது நிலையை உணர்ந்த அந்த உதவியாளர் அவரிடமிருந்து இரண்டு பத்து ரூபாய் தாள்களை கொடுத்தார். ஒன்று போதும் என்றேன். கையில் உள்ள 20 அத்துடன் அந்த பத்து.( மீதம் உள்ள ரூ.300ஐ மறுபடியும் மருத்துவரிடம் சேர்ப்பித்து விடுகிறேன் என்றேன் அவ்வாறே சேர்த்தேன் அதெல்லாம் வேறு கதை). இப்போது அந்த நாள் கதைக்கு மட்டும் வாருங்கள். எனக்கு நினைவில்லை நான் எங்கிருக்கிறேன் என்பது கூட. எனது பயணத்துக்கு வழக்கம்போல ரூ. 30 போதும் என நினைத்திருக்கிறேன். நல்லவேளை எதற்கும் இருக்கட்டும் தேவைப்படும் இதையும் வைத்துக் கொள்ளுங்கள் என அந்த இரு பத்து ரூபாயை கொடுத்தார். என்னிடம் இருந்த ரூ. 20 உடன் இந்த இருபதும். ஆனால் நான் பழைய நகரப் பேருந்து நிலையத்திற்கு முதலில் மருத்துவ மனையிலிருந்து வரவேண்டும் அதற்கு ஆட்டோ என்றால் ரூ. 10 பங்கிட்டுக் கொள்ளும் ஆட்டோ என்றால், பேருந்து என்றால் ரூ. 7 இருக்கும் என்றார்  அப்போது பெருமழையில் நனையாமல் ஒரு பலகாரக் கடையின் முன் உள்ள ஒரு பெரிய துணிக்குடையின் கீழ் ஒதுங்கி சிறிது நேரம் கழித்த பின் அங்கிருந்த ஒரு பெரியவர்.

ஆக அப்போதுதான் எனக்கு உறைத்தது. நான் அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும், அதன் பின் அங்கிருந்து புதிய மத்திய பேருந்து நிலையம் சென்று அதன் பின் எனது ஊருக்கு 30 ரூபாய் பயணத்தில் செல்ல வேண்டும் என்பதே. ஆக எப்படியும் தேவை 50 ரூபாய். என்னிடம் இருப்பது ரூபாய் 40 மட்டுமே. பெருமழை வளைத்து வளைத்து எவரையும் அசைய விடாமல் பிடித்துக் கொண்டது.
Image result for perennial river like life
 வந்தியத் தேவனைப் போல பெரும் துணிச்சல் கொண்ட நான் சற்று யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் எனில் மழை இல்லை என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானலும் நடந்து சென்றுவிடுவேன் சமாளித்துவிடுவேன் என்ற தெம்புடன் இருக்கும் என்னை இயற்கை பார்த்து எள்ளி நகையாடியது. எப்போதும் செல்பேசியில் அந்த உறையில் ஆபத்து அவசரத்துக்காக வைத்து இருக்கும் வழிப்பயணத்துக்கான சிறு தொகையும் கூட இல்லை. செல்பேசி மருந்துகள் ஆகியவற்றை எடுத்து பையில் போட்டுக் கொண்டேன் மழை விடட்டும் ஓடிவிடலாம் என்று மழை விட்ட பாடில்லை.
Related image
இந்த மாநகரத்தில் என்ன யாரிடம் எப்படி உதவி பெற...அது இழுக்கு. இஞ்சினியர் மணி உயிருடன் இல்லை, சிற்பி வேலாயுதம்  சென்னை வாழ்க்கைக்கு மாறி விட்டார் யாரிடம் உதவி பெற முடியும்... அமைதியாக இருந்தேன். அந்த சம்பவம் நடந்த மறு நாள் உறங்கப் படுக்கையில் இருந்தவனுக்கு ஒரு நினைவு கையில் எழுதிய புத்தகம் ஒன்றோ இரண்டோ இருந்ததே அதைக் கூட நமது  அப்துல் கலாம் பாணியில் விற்று விட்டு வந்திருக்கலாமே என்று யோசனையும்

நான் வை ப்வை வசதி தவிர செல்போனில் நெட் கார்ட் ஏதும் போடாதவன் இல்லை என்றால் கூகுள் பே மூலம் கூட நண்பர் வழி பெற்றிருக்கலோமோ அந்த நேரத்தில் நாம் கூப்பிடும் நபர் உடனடியான செயல்பாட்டில் இருக்க வேண்டுமே.... ஏ.டி.எம் இருந்தாலும் கூட மழை விட வேண்டும் அதைத் தேடி அது இருக்கும் தேடிச் செல்ல வேண்டும் இதெல்லாம் உபரி நினைவுகள்...

இதற்கெல்லாம் மாறாக இரவின் ஓட்டமும், மழையின் பாட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க அந்தப் பெரியவர் டவுன் பஸ் என்றால் இந்தப் பக்கம் , அப்புறம் ஏன் டவுன் பஸ் எல்லாம் அந்தப் பக்கம் இருந்து வருகின்றன என்ற எனது கேள்விக்கு டவுன் பஸ்ஸில் போவதென்றால் அங்கே செல்ல வேண்டும், நடந்து செல்ல வேண்டுமெனில் இப்படியே போகலாம் என்றார்.

எப்போது...1980.. 90 களில் அந்தப் பக்கம் போனதில் பாதி நினைவு வந்துவிட எடுத்தேன் எனது குதிரையை அதன் பேர் நடராஜா பஸ் சர்வீஸ். நகர பேருந்து நிலையம் வந்து அந்த உதவியாளர் கொடுத்து இரு பத்துகளில் ஒரு பத்தை எடுத்து அனுமதிச் சீட்டைப்பெற்றேன். அதில் வேறு ஒரு நோட்டு சற்று கறை படிந்திருந்ததால் அதை பேருந்து நடத்துனர்கள் வாங்கிக் கொள்வார்களா  மாட்டார்களா என்ற சந்தேகம் முடிவுக்கு வந்தது.

அடுத்து மாநகரப் பேருந்து நிலையம் அடுத்து இருந்த 30 ரூபாயும் இருக்கிறதா இல்லையா என இரு முறை உறுதிப் படுத்தியபடி ஊருக்கு அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன் மணி 9.30 ஆகிவிட்டது எல்லா ஊர்களிலும் மழை, எங்கள் ஊரிலும், ஆனால் வழி எங்கும் மின்சாரம் இருந்தது. எங்களது ஊரில் ஒரே இருள்...மழையின் நாட்டியம் நன்கு அரங்கேறி இருந்தது. சம்சாரம் தொலைபேசி இணைப்பை எல்லாம் விலக்கி வைத்து கணினிக்கு எல்லாம் போர்வை போர்த்தி பாதுகாத்து வைத்திருந்தார். எனது சட்டைப் பையில் மீதம் சில்லறை காசுகள் ரூ. 4 இருந்தது என நினைக்கிறேன்.

மற்றவர்களுக்கு என்றால் ஏதாவது செய்ய வேண்டுமெனில் எனது கை மிகவும் பயனளிப்பதாகவும், அதுவே எனக்கே நான் செய்து கொள்வதாக இருந்தால் எது எடுத்தாலும் ஏனிந்த போராட்டமாகவே இருக்கிறது என பல முறை எண்ணி எண்ணி வருத்தமுற்றிருக்கிறேன். தரித்திரமும் பொருளாதார இடையுறல்களும் என்னதான் முயன்றாலும் என்னை பின் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கின்றனவோ... சரியான திட்டமிடலும் முன் கூட்டியே முடிவெடுக்கும் திறனும் இல்லாமல் எது வந்தாலும் எது நடந்தாலும் அதன் பின்னேயே சென்று வாழும் நிலைதான் என்னிடம் எப்போதும்...அது பிறவிச் சுபாவமாகவே இருக்கிறது

அடுத்து இருக்கும் சூழலில் மெய் மறக்கும் நிலை...அடுத்து என்ன வரப்போகிறது அதை எப்படி சமாளிக்கவேண்டும் அதிலிருந்து எப்படி மீண்டு மேல் உயர வேண்டும் என்ற எண்ணமே துளியும் வருவதில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

வாழ்வெனும் நதி போகும் போக்கில் (அ) போகிற போக்கில்: கவிஞர் தணிகை.
Image result for perennial river like life


Tuesday, June 11, 2019

இளங்கோவனை என்றும் மறவாத 3 ஆண்டுகளுடன் : கவிஞர் தணிகை

                 திரு மண வாழ்த்து மடல் அவிழ்தல்


Image result for marriage greetings flower foot paths



இராமலட்சுமி மஹால் கோவை     நாள் 13.06.2019

Image result for marriage greetings flower foot paths



இ.மனோஜ் அரவிந்த் பி.டெக், எம்பிஏ     எஸ். மோனிசா எம்.ஈ.
Image result for best wishes married images

இளங்கோ என்ற பெயர்                 மன்னன் பதவிக்கு
எப்போதும்                                          அண்ணனுக்கு
மேல் ஏறி வந்து விடுகிறது              வழிவிட்டு ஒதுங்கியபோதும்..,
*****************************************************************************

குறும்பும், போக்கிரித்தனமும்         என்றாலும் பொறுப்புடன்
நிறை விளையாட்டு                             அரசனாகும் இளவரசுகள்
என்றும் இளவரசுகளுக்கு                   உனைப்போல‌
**************************************************************************

மகன் "மனோஜ் அரவிந்த்"           ஆனந்தியுடன் உன் வாழ்வு
மோனிசாவை...உன்                       ஆனந்தத்தில்
மருமகளாக                                       கரைபுரண்டோடிடும்
கைப்பற்றிக் கொண்டு வரும்         ஜீவ நதியாகும்
காலத்தில்                                          "ஸ்ருதியுடன்"
***************************************************************************

அந்த அழகிய                                   நானும்
நதிக்கரையோரத்தில்                  வேடிக்கை பார்க்கிறேன்
காலம் காலமாய்                           வேடிக்கையாக‌
நிரூபணமாய் நின்று                    ஆனாலும்....
**************************************************************************

அவசியமிலாத                                 அழகுடன் மணம் வீசுகிறது
என் போன்றோரைக் கூட             அவை என்றும் வாழ‌       
மிக அவசியமானதாய்                   என்றும் தொடர‌
நினைக்கும்                                         என்றும் வாழ்த்துகள்
அழகிய மனம் உனது                      என்று கூறிடும்...

                       கவிஞர் தணிகை சண்முகவடிவு
                                          விக்னேஷ்
Image result for marriage greetings flower foot paths