Wednesday, May 27, 2020

14 உண்மையின் கதை பதினாலு: கவிஞர் தணிகை

14 உண்மையின் கதை பதினாலு: கவிஞர் தணிகை


give and take meaning in relationship Archives | organicgenius
. அவர் எனது சகோதரியின் வீட்டுக்கு குடி வந்தார். பக்கத்து வீடும் கூட. எனவே பழக வேண்டிய நிலை. அவர் காவல் துறையில் துணைக் காவல் ஆய்வாளராக உள்ளூர் காவல் நிலையத்தில் பணி புரியவே அங்கு வந்து சேர்ந்திருந்தார். அவர் ஏன் காவல் துறையிலும் இலஞ்ச ஊழல் இடம் பெற என்ன காரணம், அதற்கு மேலிடமும் எப்படி ஒரு அடிப்படையாக இருக்கிறது என்பது பற்றி எல்லாம் பொதுவாக பேசுவார் அதன் மின் கட்டணம், கைதிக்கு வாங்கித் தரும் உணவு , போக்குவரத்து, உயர் அதிகாரிகள் வரும்போது ஏற்படும் செலவினங்கள் அதற்கு அரசு தரும் குறைவான பணப் படிகள் போன்றவை பற்றி எல்லாம் பேச ஆரம்பித்திருந்தோம். நான் அப்போதும் காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கத்தில் மரம் நட்டுக் கொண்டும் அழைக்கும் இடத்திற்கு சென்று உரை வீச்சு நிகழ்த்திக் கொண்டும் இருந்தேன். அதன் அழைப்பிதழ் கூட அவருக்கு அளித்த நினைவு உண்டு.

அவர் அங்கு வரும்போது இருவராக இருந்தனர் கணவர் மனைவி என. நாளடைவில் மனைவி தலைப்பிரசவத்துக்காக ஊருக்கு சென்றிருந்தார். எனது தாய் தெய்வா வயது முதியவர். எனவே அவ்வப்போது அவரிடம் எதார்த்தமாக குழந்தை பிறந்து விட்டதா என விசாரிப்பார்.

அதற்கு அவர் சாலையில் தூளி கட்டி எல்லாம் பிரசவம் பார்ப்பவர் இல்லையா அம்மா? பாருங்க உரல், அம்மி ஆகியவற்றை கல்லால் செய்பவர் ஊர் விட்டு ஊர் மாறி மரத்தடியிலேயே காலம் கழிக்கின்றனர் அவர் பெண்டு பிள்ளைகளுக்கு எல்லாம்
மரத்தடியிலேயே பிரசவம் அந்தக் குழந்தைகள் நன்றாக இல்லையா என வேடிக்கையாக அல்லது குதர்க்கமாகப் பேசுவார்.

எனக்கும் கூட இலஞ்ச இலாவண்யமின்றி ஒரு சிறு வரவு செலவில் நிகழ்ந்த ஒரு வேண்டா வெறுப்பான நிகழ்வை முடித்து வைக்க உதவினார். அப்போது காவல் நிலையத்தில் என்னை அதற்காக காத்திருக்க வைத்த போது எனது தாய் எனக்கு குடல்புண் எல்லாம் உண்டு நேர நேரத்துக்கு சாப்பிட வேண்டும் கொஞ்சம் சீக்கிரம் அனுப்பி வையுங்கள் என்றெல்லாம் சொன்னார்.

அடுத்து சிறிது நாட்கள் கழித்து குழந்தையும் கையுமாக அவரின் மனைவி ஊர் வந்து வீடு வந்து சேர்ந்தார். ஆண்குழந்தை கைக் குழந்தை. முதலில் அவரது மனைவி சாதாரணமாகக் கூட அல்ல எதற்குமே வெளியே வந்து பேச மாட்டார். அவர்கள் குடும்பத்துக்கு கடைக்கு எல்லாம் செல்ல அருகிருந்த ஒரு அஞ்சலை என்ற முதிய வயது பெண் துணை செய்வார்.

அப்படி இருந்த காலக் கட்டத்தில் ஒரு நாள் இரவு சுமார் 9.30 மணிக்கும் மேல் 10 மணி கூட இருக்கலாம். அவர்கள் வீட்டில் இருந்து கடுமையான அடிக்கும் சத்தம்.அலறும் சத்தம் , ஏண்டி அப்படி சொன்ன? ஏண்டி அப்படி செஞ்ச‌ எனக் கேட்டுக் கேட்டு பல முறை அதையே கேட்டு பெல்ட் மற்றும் கைகளாலும் அந்த நபர் அவரது மனவியை அடித்து துவைத்துக் கொண்டிருந்தார். சத்தம் வெளியே கேட்க ஆரம்பித்து விட்டது.

நான் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடைபெறப் போகிறது அதற்குள் தடுக்க வேண்டும் என பதை பதைத்தேன். நான் போய் இடையுற்றால் உனக்கென்னடா போடா என மரியாதைக் குறைவாகப் பேசிவிட்டால் என்ன செய்வது என்று வேறு குழப்பம். அவருக்கும் மதுப் பழக்கம் இருக்கலாமோ என்ற சந்தேகமும் இருந்தது.

எனவே நைஸாக எனது தாயை அனுப்பி அம்மா நீ சென்று பேச்சுக் கொடு அதன் பின் நான் வந்து விடுகிறேன் என அனுப்பினேன் அம்மா வயதானவர் என்ற முறையில் அவரை ஏதும் அவமானப்படுத்த வாய்ப்பில்லை  எனப் பேசச் செய்தேன். அது நல்லபடியாக முடிந்தது. அம்மாவும் சென்று ஆரம்பித்தார் நானும் என்ன சார் ஸ்டேசனில் கைதியை அடிப்பது போல மாட்டை அடிப்பது போல இப்படி அடிக்கிறீர் ஏதாவது படாத இடத்தில் பட்டு ஏதாவது ஆகிவிடப் போகிறது எனத் தடுத்தோம் அந்தக் கதவு திறந்த வாய்ப்பில் அந்த அடி வாங்கிய மனைவி அடி தாங்க மாட்டாமல் உடனே ஓட ஆரம்பித்து விட்டார். சுமார் 100 அல்லது 200 மீட்டர் அந்த இரவிலும் சென்று இருப்பார் அந்தக் கைக் குழந்தையை எடுத்துக் கொண்டு சென்றாரா இல்லையா என்பதும் இப்போது மறந்து விட்டது.

நான் எனது துணைவியை சென்று அந்த இரவில் எங்கு போவார் என ஓடித் தடுத்து அழைத்து வரச் சொன்னேன். நிலைமை கட்டுக்குள் அடக்கப்பட்டது. அன்று மேலும் ஏதாவது நிகழ்ந்திருந்தால் அந்த பிள்ளைத் தாய்ச்சிப் பெண் இறந்தே கூட போயிருப்பார். அந்த ஆபத்து எங்களால் தவிர்க்கப் பட்டது.

அதன் பின் அவர் வேறு காவல் நிலையத்துக்கு மாறுதல் ஆகி இடை நீக்கம் செய்யப் பட்டு சேலத்தில் ஒரு வேல் கண்காணிப்பாளராக இருந்து அவரிடம் நிறைய பணிச் சிக்கல் ஏற்பட்டதாகவும் உடலளவில் காயங்களுடன் வந்திருந்தார் வாகனத்தில் இருந்து விழுந்து விட்டதாகவும் கூறினார். ஆனால் எம் குடும்பத்தோடு நல்லுறவு பாராட்டினார்.

இதே போல  முதுகலை பட்டம் பெற்ற பெருமைக்குரிய மற்றும் ஒரு காவல் ஆய்வாளர் மகனும் எனது மகனும் சிறு வயதில் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். அவரது துணைவியார் மிக நல்லவர் என்று பேர் பெற்றிருந்தார். ஆனால் கொஞ்ச நாளில் அவர் மனைவி எரிக்கப்பட்டிருந்தார் என கொடுமையான செய்த் ஒன்று காதில் விழுந்தது.
Meaning of steemit ...... just give and take
அதே போல காவல் துறை பணி புரிவோரில் பல அல்லது சில குடும்பங்கள் ஆகிவிட்ட கதையும் நாளானாலும் என் நெஞ்சில் மறவாது இருக்கிறது ஏன் என்றுதான் எனக்கும் விளங்க வில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, May 22, 2020

பதிமூன்று: ஏழுமலை இரண்டாம் பகுதி: உண்மைக் கதை 13. கவிஞர் தணிகை

சாலையில் நாய்களும்
வரும்
கவனமாய் இரு மகனே!

வாழ்க்கையில்
வஞ்சனையும் சூதும் தொடரும்
புரிந்து கொள் மகனே!

வேகம் தேவைதான்
அதை விட முக்கியம்
விவேகம் மகனே!

நல்லவரை ஒரு போதும்
காலம்
கை தவற விடாது மகனே!

பணம்
பைத்தியக்காரத் தனம்...

அதற்காக
எல்லாவற்றையும் விட்டு விடவும் முடியாது
எல்லாவற்றையும்  விட்டு விடவும் கூடாது  மகனே!

எல்லாமே சொல்வார்
பணம் பத்தும் செய்யும்
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்றெல்லாம்
பணம் கொஞ்சம் கொஞ்சமாய் நமது
மனிதாபிமானத்தை கொன்று
கடைசியில் நம்மையும் கொல்லும்

பசி வந்திடப் பத்தும் {பற்றும்} பறந்திடும் என்பார்
பசி வந்தால் தான் வறுமை புரியும்
ஏழ்மை தெரியும்
எல்லாம் எதற்கென்று ?

நல்லவரை
காலம் ஒரு போதும் கை   விடாது மகனே!

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை





பதிமூன்று: ஏழுமலை இரண்டாம் பகுதி: உண்மைக் கதை 13. கவிஞர் தணிகை

சென்ட்ரல் வங்கியில் இருந்து அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. இன்னும் இரண்டு மாதங்களில் பணம் கட்ட வில்லை எனில் அடமானமாக வைக்கப்பட்டுள்ள வீடு அதாவது அவர்கள் கடை வைத்துள்ள வீடு ஏலத்திற்கு விடப்படும் என்று...ஏன் எனில் கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால் வாங்கிய இலட்சக்கணக்கான பணம் திரும்பக் கிடைக்குமா என்ற கோணத்தில். விசாரித்துப் பார்த்ததில் அந்த ஏழுமலை வாங்கிய அல்லது வைத்திருந்த எல்லா சொத்துக்குமே முதல் வாரிசு அவனது மனைவியின் பெயரும் இரண்டாம் வாரிசு என அந்த குழந்தை பெயரும் மூன்றாவதாகவே அவனின் தாய் முழு நிலா பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

ஏழுமலையின் கொலைக்கும் பிறகு அந்த வீதியில் நடப்பதற்கே மன அமைதி இல்லை. என்ன இருந்தாலும் அவன் என்னிடம் பயின்ற மாணவனாயிற்றே. ஆனால் அந்த வீதி வழியாகவே எதற்கெடுத்தாலும் எங்கள் வீட்டிலிருந்து சாலையை நாங்கள் சென்றடைந்தாக வேண்டும். போகும் போதும் வரும்போதும் வருத்தமாகவே இருந்தது
இப்படி கூட நடக்குமா என நடந்த பின்னும் நம்பும்படியாக இல்லாதிருந்தது. சிறு கைக்குழந்தையை எடுத்துக் கொண்ட அவன் மனைவி அவளது பெற்றோர் இருப்பிடம் வனவாசி சென்றுவிபக்க‌ட்டார்.

அவனது பெற்றோர் என்னிடம் ஒன்று நாங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது பஞ்சம் பிழைக்க குமாரபாளையம் செல்ல வேண்டியதுதான் என மிக சோகத்தில் நம்மையும் ஆழ்த்தினர். கவலைப் படாதீர் எனத்  தேற்ற முடியவில்லை. இருந்தாலும் நாங்கள் இருக்கிறோம் அப்படி ஒன்றும் உங்களுக்கு நேர்ந்து விடாமல் எங்களால் ஆனதை செய்வோம் என ஆறுதல் கூறினேன்.

நல்லா கவனியுங்கள் இங்கிருந்துதான் கதை ஆரம்பம். பொது வாழ்வில் ஈடுபடுவோர் எப்படி எல்லாம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அடி பட இடி படப் போகிறார் என்பதை...

செயலில் இறங்கத் தீர்மானித்தேன். எந்த நீதிமன்றத்திற்கு சென்றிருந்தாலும், காவல் நிலையத்துக்கு சென்றிருந்தாலும் முடியாத மிக அரிய செயல்பாடுகளை காந்திய முறையில் நான் செய்த முடித்த கதை இது.
அவனின் இரு சக்கர வாகனத்தை விற்கலாம் எனத் தீர்மானித்தேன். செத்துப் போனவன் வாகனம் என எங்கே சொன்னாலும் வேண்டாம் என்றார்கள். ஹீரோ ஹோண்டா புதிதாகவே இருந்தது.
எனது பக்கத்து ஊரில் இருந்த சகோதரிக்கு தெரிந்த ஒருவர் வந்து பார்ப்பதாகச் சொன்னார். அவர் வந்து பார்த்தார்
அவரிடம் என்னைப் பற்றியும் எனது சகோதரி பற்றியும் அறிந்திருந்ததால் ஒரு விலை நிர்ணயம் செய்தேன் . வண்டியின் ஆர்.சி புத்தகம் அவனது மனைவி குடும்பத்திடம் இருந்தது. இவர்கள் பலரை வைத்தும் பல முறைக் கேட்டுப் பார்த்த போதும் அதை அவர்கள் எவரிடமும் கொடுக்காத நிலை இருந்ததாகச் சொன்னார்கள்.

சரி வாருங்கள் நான் கேட்டுப் பார்க்கிறேன். என்னுடன் வருவார் எவருமே பேசக் கூடாது. என்னைத் தவிர வேறு
எவருமே பேசக்கூடாது என எங்கள் ஊரிலேயே உறுதி மொழி வாங்கிக் கொண்டேன். அப்படி இருந்தால் நான் வருகிறேன் இல்லாவிட்டால் வரவில்லை என்றேன். ஒத்துக் கொண்டார்கள். அன்று எனக்கு சிறிது காய்ச்சல் கூட. மதிய உணவும் இன்னும் அருந்தவில்லை. சிறு குழந்தையாய் இருந்த மகனுக்கு மறு நாள் கணக்குப் பரீட்சை அவன் பள்ளியில் அவன் முதல் மாணவனாக விளங்குபவன்.அது அந்த நிலையின் இறுதித் தேர்வு. இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு சிவம் மற்றும் அவரது உறவினர் என ஒரு குழு எனது தலைமையில் வனவாசி புறப்பட்டோம்.

நான் சொல்லியது போலவே எனைவிட வயதில் மூத்தோர் பலர் இருந்த போதும் எவருமே வாய் திறக்க வில்லை. நான் பக்குவமாகப் பேசினேன். நடந்த சம்பவத்தை மாற்ற முடியாது ஆனால் இனி நடக்க இருக்கும் சம்பவத்தையாவது சுமூகமாக முடிப்போம். நீங்கள் கவலைப் படாதீர். வண்டி ஆர்.சி.புக்கை கொடுங்கள் எதை விற்றாலும் உங்களுக்கு சம பங்கு பிரித்துக் கொடுக்கப் படும் என உத்தரவாதம் அளித்தேன். நீங்கள் கேட்பதற்காக கொடுக்கிறோம் நீங்கள் இவ்வளவு எடுத்துக் கட்டிக் கொண்டு செய்கிறீர் ஒரு நாள் பாருங்கள் உங்களையே அவர்கள் எப்படி கேவலப் படுத்தப் போகிறார்கள் என்று அந்தப் பெண்ணின் தந்தை ஒரு வார்த்தையை சொல்லி அந்த ஆர்.சி புத்தகத்தைக் கொடுத்தார்.

நான் வண்டியை எனது சகோதரிக்குத் தெரிந்த பக்கத்து ஊர்க்காரர் சேலம் கேம்ப் காரர் ஒருவருக்கு விலை பேசி விற்றேன். பதினையாயிரம் கிடைத்தது. அதை இரண்டாகப் பிரித்தேன். இரு சாரர்க்கும் 7,500 என.இந்த 7,500 வைத்து சென்ட்ரல் வங்கிக்கு இரு தவணைக் கட்டி வாய்தா வாங்கிக் கொண்டோம்.{தொகை மதிப்பு மாறி இருக்கலாம் அது பதினையாயிரமா 22000மா என்பது நினைவில்லை காலம் நிறைய சென்று விட்டதால் மொத்தத்தில் மொத்த மதிப்பில் இரு குடும்பத்துக்கும் சரி பாதி} சற்று காலம் தாழ்த்தி எப்படியும் உங்கள் கடனைக் கட்டி விடுவோம் என உறுதி அளித்து வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கையோ அல்லது ஏலமோ விட்டு விடாதீர் எனக் கேட்டுக் கொண்டேன்.

அடுத்து கையில் இருந்த ஏழுமலையின் மனைவி வீட்டுக்கு கொடுக்க வேண்டிய பணம் 7,500 ஐ வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லி எனது வீட்டின் லேன்ட் லைன் பி.எஸ்.என்.எல் தான்...தகவல் கொடுத்தேன். நீங்களே கொண்டு வந்து கொடுத்து விடுங்கள் என்றனர். அய்யா உங்கள் வீட்டில் 3 மகன்கள் உள்ளனர். பயம் வேண்டாம் நானாயிற்று எனை நம்புங்கள் எதுவும் நடக்காது எனத் தேற்றிய பின் அன்று மாலை அந்த ஏழுமலையின் மனைவியின் சகோதரர் ஒருவர் வந்து பணத்தை வாங்கிச் சென்றார்.

அவர் வாங்கிச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் வண்டியை வாங்கிச் சென்றவர் வண்டியைக் கொண்டு வந்து
எனது வீட்டில் நிறுத்தி விட்டு, எனக்கு வண்டி வேண்டாம் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்றார்.அவரின் காரணம்: வண்டி அடிபட்டிருக்கிறது, அதற்கு இன்சூரன்ஸ் கட்ட வில்லை என்றெல்லாம் காரணம். அடக் கடவுளே நான் என்ன செய்வேன் என ஒரு புறம் வீட்டிற்கு 2 தவணைக் கடன் கட்டியாகிவிட்டது
மறுபுறம் ஏழுமலையின் மனைவிக் குடும்பத்துக்கும் கொடுத்தாகிவிட்டது இப்போது இப்படி வண்டியைக் கொண்டு வந்து எனது வீட்டில் நிறுத்தினால் என்ன செய்வது என யோசித்து எனது தம்பி முறையிலான உறவுக்காரப் பையனை அழைத்து அவன் மெக்கானிக் பட்டறை லாரிக்கு நடத்தி வருபவர்கள்...இந்த வண்டியில் என்ன பிரச்சனை ஏதும் இருக்கிறதா என சோதித்துப் பார்த்து இவருக்கு கொடுக்கவும் என்றேன். வண்டியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என அவர் சொல்லி நம்பிக்கை அளித்தார் வாங்கியவர்க்கு.

மேலும் இன்சூரன்ஸ் பணம் 1500 நான் இருபக்கமும் வாங்கித் தருகிறேன் என இருவரையும் அழைத்து 750 ரூ வாங்கி கொடுத்து இதைக் கட்டிக் கொள்ளுங்கள் கட்டாத காலத்திற்கு சிறு அபராதம் இருக்கும் அதையும் சேலத்தில் அந்த இன்சூரன்ஸ் ஆபிசில் பணி செய்யும் ஒரு தெரிந்த நபரிடம் பேசி இராசியாக்கிக் கொள்ளலாம் என்று தைரியம் அளித்து அனுப்பி வைத்தேன்.

இதே போல அந்த நிலத்தையும் விற்று ஈடு செய்து விடுங்களேன் என இரு பக்கமும் கோரிக்கை வைத்தனர். அந்தப் பையன் காரியம் காவிரியாற்றங்கரையில் செய்து திரும்பியபோது. கவலைப்படாதீர் என்னால் முடிந்ததை செய்து கொடுக்கிறேன் என பாங்காக கூறினேன். அந்தப் பெண் வீட்டில் கொடுத்த கட்டில் மெத்தை  பீரோ போன்றவை எல்லாம் என்ன எனக் கேட்டதற்கு இவர்கள் எல்லாம் ஒரு வருட நினைவு நாளுக்கும் பிறகு கொடுக்கிறோம் வருடாந்திரம் கும்பிட்டு என்றார்கள்...

அதையும் சொல்லி விட்டேன். ஒரு குடும்பமும் இன்னொரு குடும்பமும் பகை. பேசிக் கொள்வதில்லை. பெரும்பாலும் அந்தக் குடும்பத்துக்கு எங்கள் வீட்டு லேன்ட் லைனில் இருந்துதான் எனது செலவில் தான் பேசினேன். இரு பக்கமும் எந்த பைசாவும் செலவே வைக்க வில்லை.

அடுத்து தெரிந்தவரிடம் எல்லாம் சொன்னோம் அவன் வாங்கிய நிலத்தை விற்பதற்கு. சில அரசியல் பிரமுகர் எல்லாம் கூட குறைந்த விலையில் கிடைக்குமா வாங்கிக் கொள்ளலாமா என்றெல்லாம் கேட்பதாக சிவம் குடும்பத்தார் கூறினார்கள்...

விற்பனை செய்தால் அதில் வீட்டை வங்கியிலிருந்து மீட்கக் கட்ட வேண்டிய பணத்தைக் கட்டி விட்டு மீதிப்பணத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறோம் என்று பெண் வீட்டாரிடமும் கூறி இருந்தேன். காலச் சூழலில் என்னுடன் பள்ளி இறுதி வகுப்பு படித்த நண்பர் அரங்கன் ஒருவர் அவர் பட்டு நெசவு வியாபாரம் செழிப்பான நபர் அவர்கள் வீட்டருகே இந்த நிலம் இருப்பதால் வாங்கிக் கொள்வதாக ஒரு இடைத்தரகரை வைத்து அணுகிக் கொண்டிருந்தார். எவரும் இடையில் தேவையில்லை. எந்த வில்லங்கமும் இல்லை நீ துணிந்து வாங்கலாம் என துணிச்சல் கொடுத்து வாங்க சம்மதிக்க வைத்தேன். பட்டா இருக்கிறது நிலத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை.. பட்டா வேண்டுமெனில் நீ அரசை அணுகி வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் என்றும் கூறினேன்.

சரி என ஒரு முன்பணமும் கொடுத்தார். கிரயம் செய்து கொள்ளும் நாளில் முழுப்பணமும் கொடுப்பதாக கூறினார்.
இந்நிலையில் கிரயம் செய்வதற்கான நாள் குறிக்கப்பட்டது. அன்று காலை ஏழுமலையின் தந்தை சிவம் வந்து எங்கள் வீட்டில் நீல நிற நீல்கமல் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சேரின் கால் ஒடிந்தது. சேர் உடைந்தது...என்ன எனக் கேட்டேன்...
இல்லை இந்தக் கிரயம் வேண்டாம்... இதன் பின் நாங்கள் அந்த வீட்டில் வாடகைக்கு குடி இருப்பது போலாகிவிடும் எனச் சொல்கிறார்கள். என்றார்கள்...அதை யார் சொன்னது எனக் கேட்டதற்கு: மகள் என்றார்கள்...அந்த ஏழுமலையின் மூத்த சகோதரி ஏழுமலையின் விதவை மனைவி  பெற்றோர் இருக்கும் வீட்டருகே தான் இவர் இருக்கும் வீடும் இருக்கிறது என்பதால் சற்று பெண்களின் குசலத்தால் இந்த பெரிய செயல்பாட்டுக்கே இடர் வந்து விடும் போலிருக்க‌

அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது. காத்துக் கொண்டிருந்த காலம் கனியும்போது இன்று கிரயம் எனச் செல்லும்போது இப்படி எல்லாம் பின் வாங்கக் கூடாது என ஆறுதல் சொல்லி அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு காவிரி ஆற்றங்கரையில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்றோம். பணத்தை வாங்கி முதலில் வங்கியில் கட்டி விட்டு மீதம் உள்ள தொகையை எடுத்து வரச் சொன்னேன். வீடு மீட்கப்பட்டது. மீதம் உள்ள பணம் ஏழுமலையின் மனவி குடும்பத்துக்கு கொடுக்கப்பட்டும் விட்டது. நிலம் விற்பனை முடிந்தது. அரங்கன் வாங்கியவன் சார்பாக எனக்கு பத்திரப்பதிவுக்கு நேரம் ஆகிறதே என்ற நிலையில் ஒரு வேளை மதிய உணவு கடையில் வாங்கி அளிக்கப்பட்டது அது மட்டுமே இலவசமாக இந்த முயற்சியில் நான் வாங்கிக் கொண்டது.  பீரோ கட்டில் மெத்தை எல்லாம் முதலாண்டு வருடாந்திரம் முடிந்த பின் தருவதாக ஏழுமலையின் வீட்டில் சொல்லி இருக்க அவர்களும் சரி எனச் சென்று விட்டனர்.

எல்லாம் முடிந்து விட்டது. மிகவும் நிம்மதியாக அனைவரும் கையொப்பமிட நிலம் கைமாறிவிட்டது. சிக்கல் தீர்ந்து விட்டது. எந்த நீதிமன்றத்திலும் காவல் நிலையத்திலும் முடியாத குடும்பச் சிக்கல் வழக்கை மிக நல்ல முறையில் கையாண்ட திருப்தியில் நான் இருக்க...உங்களுக்கு ஒரு வேளையாவது எனது கையால் சோறு சமைத்து போட வேண்டும் என ஏழுமலையின் தாய் முழுநிலா சொன்னதுண்டு...அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அம்மா நான் பத்தியச் சாப்பாட்டுக் காரன் என்று அதற்கு மறுமொழியும் சொல்லிய நினைவு.

ஒரு நாள் எனது இல்லத்தரசி கடைக்கு செல்லும்போது ஏழுமலையின் தந்தை சிவம் முழுநிலாவை இடித்து பேசிக் கொண்டிருந்த பேச்சை மெதுவாகப் பேசச் சொன்னதாகவும்,ஜாடையாக‌ நாங்கள் இவர்கள் பேச்சை நிலையை எல்லாம் கேட்டு இவர்கள் மருமகள் வீட்டில் சொல்லி விடுவதாகவும் பேச்சு அடிபட ஆரம்பித்திருந்தது.எங்களுக்கு அதில் ஏதோ இலாபம் வந்து விடுவது போல . இந்தப் பெரும் பிரச்சனையை முடிக்க எங்கள் வீட்டு தொலை பேசிக்கு ஆன செலவைக் கூட நாங்கள் இவர்களிடம் பெறாமல் எங்கள் செலவில் எல்லாம் செய்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்து முடித்து வாழ வைத்ததற்கு எனக்கு கிடைத்த பரிசு அவச் சொல்தான்.

நான் ஏற்கெனவே எனது இல்லத்தரசியிடம் சொல்லி இருந்தேன். போதும் இவர்களுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்தாகிவிட்டது இனி இவர்களிடம் நாம் அதிகம் நட்பு பாராட்டும் முறை எல்லாம் கூடாது எனச் சொல்லி இருந்தேன் போதும் பட்டதெல்லாம் என்பதற்காக.

அந்தக் கதை அப்படியே பலித்தது. அதன் பின் அவர்களுக்கும் எங்களுக்கும் பேச்சு வார்த்தை என்பதே இல்லாது போனது. அந்தப் பெரிய மனுசன் பேச்சைக் கேட்டு எங்கள் சொத்து முழுதும் போய்விட்டது. நிறைய பணத்தை கொடுத்து விட்டார்கள் என்றெல்லாம் அந்த சோறாக்கிப் போடுவேன் என்ற முழுநிலா பேச்சாட்டத்தில் ஈடுபட்டதெல்லாம் தெரிந்தது. அவர்களுக்குத் தெரியவில்லை. நடைமுறை. அல்லது தெரிந்தே அப்படியா என்பதும் புரியவில்லை. அவர்கள் இப்போதும் இருக்கும் வீடு கடை தனிவகுப்பு நடத்தும் வாடகை எல்லாம் நான் வங்கியில் இருந்து மீட்டதால் வந்தது என்பதும்,,,எல்லாவற்றிற்கும் அவரது மகன் அவனது மனைவிதான் முதல் வாரிசாகப் போட்டிருந்தான் இரண்டாம் வாரிசாக குழந்தை மூன்றாம் வாரிசாகவே இந்த முழு நிலா தாய் என்ற நிலையில் இருந்தார் என்பது...

அதை எல்லாம் ஏற்கெனவே எல்லா டாக்குமென்ட்களிலும் தஸ்தாவேஜிகளிலும் உறுதிப் பத்திரங்களிலும் கண்டதனால் நான் எடுத்த முடிவு மிகச் சிறந்ததாக இருந்தது. ஏன் எனில் எந்த சூழ்நிலையிலாவது முதல் வாரிசான அவரது மனைவி கையொப்பமிட்டு அங்கீகரிக்காமல் இருந்திருந்தால் அந்த சொத்தையும் விற்பனை செய்திருக்கவும் முடிந்திருக்காது அந்த வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த வீட்டையும் மீட்டிருக்கவே முடியாது.குடி முழுகி இருக்கும். இவர்கள் சொன்னபடியே தூக்கில் கூட தொங்கி இருக்கலாம். எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதற்கேற்ப மாறிப் போனார்கள். இத்தனைக்கும் இவர்கள் வங்கிக் கடன் போக நான் ஏழுமலையின் வீட்டிற்கு கொடுத்தது குறைந்த தொகைதான்...வீட்டையும் இவர்கள் பக்கமிருந்த யாரும் உரிமை கோரவில்லை. இவர்கள்தாம் வைத்துள்ளனர்.

அந்த விதவைப் பெண் யாரையோ மறுபடியும் திருமணம் செய்து கொண்டாள் என்றும் இல்லை இல்லை அப்படி எல்லாம் இல்லை என்றெல்லாம் செய்திகள்...எங்களுக்கும் சிவம் குடும்பத்துக்குமான உறவு எத்தனை ஆண்டுகள் பாரம்பரியமிக்கது...இவர்கள் சொல்லித்தானே இவர்கள் மருமகள் குடும்பமே தெரியும் நாங்கள் அவர்களுக்கு இவர்களைப் பற்றி சொல்லி எங்களுக்கு என்ன ஆகப்போகிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சந்தேகப் பேயில் இவர்கள் மூழ்கியதும் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு வாழ்ந்து எங்களது நல்லுறவை இழந்ததும் அவர்களின் வாழ்வில் போக்கு.

எனது சகோதரர் ஒருவர் வீடு கட்டும்போது சாக்கடை மேல் கல் போட்டு அதில் லாரி லோடு இறக்க பயன்படுத்துவதால் கழிவு நீர் மேல் ஏறி வருகிறது அதை நீங்கள் கேட்டு முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றவர்கள் இவர்கள் இதை ஏன் நீங்களே கேட்டிருக்கலாமே...மேலும் சிறிது காலம் அந்த வீடு கட்டி முடிக்கும் வரையில் பொறுத்துக் கொள்ளுங்கள் சரியாகிவிடும் என பாம்பும் அடியாமல் தடியும் ஒடியாமல் பதில் சொல்லி இருவரின் பகையையும் சரி செய்தோம். இப்போது இவர்கள் எல்லாம் உறவில் இருப்பதும் ஆனால் அவர்கள் வாழ்வாதாரத்தையே காப்பாற்றிக் கொடுத்த நாங்கள் அவர்களுடன் பேச்சு வார்த்தை கொள்ளாதிருப்பதும் இவர்களைப் பற்றி இவர்கள் பெண் கொடுத்த சம்பந்தி இவர்கள் பற்றி நீங்கள் பின்னால் அறிவீர் என்ற சொல் சரியாகி விட்டதும்....இதன் மூலம் அறியப்படுவது சொல்லப்படுவது யாதெனில் பொது நலவாதி வெகுஜன விரோதி என்பது

மேலும் வருடாந்திரம் கும்புடுகிறோம் என வெற்றிலைப் பாக்கு எல்லாம் வைத்து வருவோர்க்கு எல்லாம் விருந்து அளித்து விருந்துண்டு செல்கையில் வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை எல்லாம் கொடுத்ததை எல்லாம் என்னால் சகிக்க முடியவில்லை. வெட்டுண்ட மகனுக்கு இவர்கள் எல்லாம் இப்படி செய்கிறார்களே என்று. இதற்கெல்லாம் அடிப்படையாக குடும்பத்தைக்  கெடுக்கும் சில குடும்பம் இல்லா பெண்கள் இருக்கிறார்களே அவர்களின் பேச்சை இவர்கள் கேட்டிருப்பதும் ஒரு காரணம் என்றெல்லாம் அறிய முடிந்தது.

நான் இன்றும் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் முதலாளிகளாக இருக்கிறார்கள். வீடு அவர்களுடைய சொத்தாகவே இருக்கிறது. அவர்கள் காலத்துக்கும் பின் அவர்கள் மகள் அதன் சொந்தமாக்கிக் கொண்டு குடிகார சமுதாயத்துடன் குடும்பத்துடன் நன்றாக வாழ்வாராக... நமது வாழ்த்துகள் தாம் என்றும் எவர்க்கும் உண்டே...அடுத்து மற்றும் சில உண்மைக் கதைகளுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அன்பு மகனுக்கு:மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

சாலையில் நாய்களும்
வரும்
கவனமாய் செல் மகனே!

வாழ்க்கையில்
வஞ்சனையும் சூதும் தொடரும்
புரிந்து  வாழ் மகனே!

வேகம் தேவைதான்
அதை விட முக்கியம்
விவேகம் மகனே!

நல்லவரை ஒரு போதும்
காலம்
கை தவற விடாது மகனே!

பணம்
பைத்தியக்காரத் தனம்...

அதற்காக
எல்லாவற்றையும் விட்டு விடவும் முடியாது
எல்லாவற்றையும்  விட்டு விடவும் கூடாது  மகனே!

எல்லாமே சொல்வார்
பணம் பத்தும் செய்யும்
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்றெல்லாம்
பணம் கொஞ்சம் கொஞ்சமாய் நமது
மனிதாபிமானத்தை கொன்று
கடைசியில் நம்மையும் கொல்லும் மகனே!

பசி வந்திடப் பத்தும் {பற்றும்} பறந்திடும் என்பார்
பசி வந்தால் தான் வறுமை புரியும்
ஏழ்மை தெரியும்
எல்லாம் எதற்கென்று ?
அறிவாய்!

நல்லவரை
காலம் ஒரு போதும் தவற விடாது மகனே!

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

அன்பு மகனுக்கு:

பனிரென்டு: உண்மையின் கதை 12. கவிஞர் தணிகை

: உண்மையின் கதை 12. கவிஞர் தணிகை
Not what you want, but what you need - The Economic Times
ஏதோ ஒரு முடிவை வாழ்வு எட்டி விட்டதாகவே தோன்றுகிறது எனவே சொல்ல
 வேண்டியது நிறைய உள்ளதே அதை எப்படி எப்போது எவ்வளவு அவசரமாக
 சொல்லப் போகிறோம் என்ற கவலை எனக்குள் தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த கதாநாயகன் என்னில் மிகவும் இளையவன்,ஏழுமலை என்று இவன்
பேரை வைத்துக் கொள்வோம்.நான் எனது இளமையில் சின்னஞ்சிறியார்க்கு
 எங்கள் வீட்டின் ஒரு சிறு அறையில் இலவச தனிவகுப்பு நடத்தி வந்தேன்
அதிலும் நான் பிரபலம். அப்போது அதை நண்பர் வேலாயுதம் போன்றோர்
கூட இந்த நாட்டில் ஒரு கட்டணம் இல்லாவிட்டால் அதற்கு முக்கியத்துவம்
இல்லாது போய்விடும். எனவே நீங்கள் அந்த தனி வகுப்புகளுக்கு
ஒரு கட்டணம் வைக்கலாம் என்றும் சொல்லியது எனது நினைவில்....ஆனால்
 அதை எனது காலத்துக்கும் பின் எனது தங்கை இப்போது தலைமை
ஆசிரியர் தக்க வைத்து கொஞ்ச காலம் பின் அவரும் விட்டு விட்டார்

ஏழுமலையின் குடும்பம் எனது குடும்பத்துக்கு மிகவும் அந்நியோன்யமான
 குடும்பம். வருடத்துக்கும் வேண்டிய மளிகைப் பொருட்களை எங்களுக்காக
 அந்த போக்குவரத்து தொழிலில் இருந்ததால் செவ்வாய்ப்பேட்டை
மார்க்கெட்டிலிருந்து தருவித்து தருபவர்கள்...அது மட்டுமல்ல எனது தாயை
ஏழுமலையின் தந்தை சிவம் பேர் கொண்டவர் அண்ணி என்றே அழைப்பார்.
வண்டிக்கார அங்கப்ப ...என்ற அவர்களது குடும்பம் பாரம்பரியம் உள்ள
ஊருக்குள் காரியக்கார குடும்பம் எனப் பேர் பெற்றது...சேலத்திலிருந்து
 மாட்டு வண்டியில் சரக்கு ஏற்றி வந்து கடைக்கு இறக்கி வந்தவர்கள்
அதன் பின் லாரி என்றும் இருந்தது...அந்தக் குடும்பத்தில் 3 சகோதரக்
குடும்பங்கள் மற்றும் சகோதரிக் குடும்பங்கள்...முதல் மகனுக்கு 2 மகள் மகன்
இல்லை. இந்த சிவம் குடும்பத்தில் ஒர் மகன் ஏழுமலை மற்றும் அவன் அக்கா...
கடைசிக் குடும்பத்தில் சில மகன்கள்.மகள் இல்லை.

ஏழுமலை மேனிலைப் படிப்புக்கு வந்துவிட்டான். ஏழுலையின் குடும்பம்
மட்டுமல்ல அந்த ஊரில் பலருமே ஏதாவது பிரச்சனை என்றால் என்ன வந்து
கலந்து ஆலோசனை கேட்டுச் செல்வதும் செயல்படுவதும் வழக்கம்தான்
என்றாலும் ஏழுமலைக் குடும்பம் என்னைப் பயன்படுத்திக் கொண்டதற்கு
அளவே இல்லை. அதுவும் பிரச்சினை என்றால் ஓடி வருவார்கள்...நல்ல நிகழ்வு
நல்ல வளர்ச்சி என்றால் மறந்தும் விடுவார்கள், மறைத்தும் விடுவார்கள்...

சரி.விடயம் என்ன வெனில் மேனிலைப் பள்ளிக்கு ஏழுமலை சென்று
 வரும்போது இரண்டாம் ஆண்டு இறுதிப் பரிட்சைக்கு 3 மாதமே உள்ள
நிலையில் அவனது பெற்றோர் வந்து, தணி, பையன் மண்டபத்துக்கார
பையன்களோடு அவர்கள் வீட்டுக்கு எதிர் புறம் ஒரு சிறு திருமண மண்டபம்..
.அந்தப் பையன்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடியே படிக்காமல்
விட்டு விட்டான். நீதான் துணை என்று அழுதார்கள்.
சரி என்று அவனுக்கு அந்த 3 மாதத்தில் முடிந்தவரை பயிற்சி...கணக்கு மட்டும்
 வெளியில் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டேன்.

அறுநூற்று சொச்சம் மதிப்பெண் 1200க்குத்தான்  பெற்று தேறினான்.
வாசவி கல்லூரியில் விலங்கியல் படிப்பு கிடைத்தது 3 ஆண்டுகளும் படித்து
 முடித்தான்...மேனிலைப் படிப்பு முடிந்து தேர்வு பெற்றதும் அவனது பெற்றோர்
  ஒரு தாம்பாளத்தில் பழங்கள் வெற்றிலைப் பூவுடன் ஏதோ ஒரு தொகையுடன்
வந்து என்னை மரியாதை செய்ய விரும்பினார்கள். இல்லை இல்லை இதை
எல்லாம் எதிர்பார்த்து நான் செய்யவில்லை வேண்டாம் எனச் சொல்லி திருப்பி
எடுத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டேன்.

படிப்பை முடித்தவன் அவனது எதிர் வீட்டில் பேராசிரியர் அன்பழகன்
உறவினர் வீடு அது. அதில் ஒரு போர்சனில் தனி வகுப்பு மையம் ஆரம்பித்து
 விட்டான். முதலில் இலவசம் என்று சொல்லி அதன் பின் அந்த மையத்துக்கும்
தனி வகுப்பு மையாமாக கட்டணம் பெற்று மாற்றிக் கொண்டான் அதற்கும்
அவன் பேர்தாம்...குருவின் பாதையை வாழ்க்கையின் உத்தரவாத தொழிலாக
 எடுத்துக் கொண்டான்.

5 ஆண்டுக்குள் நல்ல வளர்ச்சி...எனது கணவனை இழந்த சகோதரி ஒருவரின்
 பெண் குழந்தைகள் இரண்டும் தனியார் பள்ளிகளில் ஆசிரியை பணி அதில்
 ஒருவர் மேனிலைப் பள்ளிகளின் மாணவர்களுக்கு இயற்பியல் வேதியியல்
 கற்றுக் கொடுக்கிறார் என அதைக் கூட நாங்கள் தனி வகுப்பு எடுக்கிறோம்
அவர்களும் எடுக்கலாமா என்று வந்து கேட்டார்கள்...இல்லைம்மா
அந்தப் பெண்கள் விரும்பி வந்து அவரிடமே படிக்கிறேன் என்று
 சொன்னவ்ர்க்கே எடுக்கிறார்கள். பெண் பிள்ளைகள் இன்று இருப்பார் நாளை
 கல்யாணம் என்றால் வேறு இடம் சென்று விடுவார்கள் அதை எல்லாம்
பொருட் படுத்த வேண்டாமே என்று ஆறுதல் செய்தேன் ஏழுமலைக் குடும்பத்து
க்கு இத்தனைக்கும் அந்த ஏழுமலையின் தந்தை அந்த பாரம்பரியத்
 தொழிலும்,தாய் ஒரு கடையையும் நடத்தி வந்தார்கள்...இவனும் தனி வகுப்பு
 மையம் மூலம் நன்றாக சம்பாதித்தான்.

அத்துடன் பக்கத்து ஊர் இராமன் நகர் என்ற ஊரில் இவனுக்கு முன்பிருந்தே
 மற்றொரு தனியார் வகுப்பு மையம் நடத்தி வந்தவர்க்கும் இவனுக்கும் கடும்
போட்டி அதிலும் சில முறை மத்யஸ்தம் செய்தேன்...மேலும் ஒரு முறை
 வனவாசி வங்கி ஒன்றில் கடனுதவி பெற்று ஹீரோ ஹோண்டா வாங்கினேன்..
.வாங்கும்போது சொல்ல வில்லை அதில் தவணை கட்டுவதில் சிக்கல்,
காசோலை போவதற்குள் அபராதம் அதிகம் வசூலிக்கிறார்கள் என்றபடி வந்து
 நின்றான். இப்படி வாகனம் எல்லாம் தவணை முறையில் வாங்கினால்
அப்படித்தான் இருக்கும் அதை முதலில் கட்டித் தொலை.இல்லையெனில்
 அது வளர்ந்து நிற்கும் உனக்கென்ன வருவாயா இல்லை என்று ஒரு
 நகையை வைத்து அதைக் கட்டியதாக அந்தக் கடனை முடித்ததாக நினவு.

5 ஆண்டுக்குள் வீட்டை வலுவாக மாடிகளுடன் மாற்றி அதிலும் மேல்
தனி வகுப்பு எடுக்க ஆரம்பித்தான். எதிரிலும் நடத்தினான் மேலும் இடம்
 போதவில்லை என மேலும் எங்கே யாரிடம் வாங்கலாம் இடம் என்றும்
 தேட ஆரம்பித்தபடியே... திருமணமும் முடித்து ஒரு ஆண்குழந்தைக்கும்
தகப்பன் ஆனான்.

5 ஆண்டுக்குள் அபார வளர்ச்சி. தனி வகுப்பு எடுக்க
 தனது கடை வைத்துள்ள வீட்டின் மேலே இரண்டு அடுக்கு மாடி 
தளத‌ங்கள், 
திருமணம், குழந்தை,தந்தைக்கு சேலத்தில் சரக்கு ஏற்றி இறக்கும்
 பணி, 
தாய்க்கு கடை வருமானம்,மேலும் இடம் போதாமல் எதிர் வீட்டிலும் 
உள்ள
 காலி அறைகளைப் வாடகைக்கு எடுத்தல் இப்படி இது எல்லாம் 
போதாமல் 
தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் தங்களது 
வீடு அப்பா 
மேல் இருந்ததை தனது பேருக்கு மாற்றி அதன் பேரில்
 சென்ட்ரல் பேங்க் 
லோன் போட்டு ஒரு ஏழெட்டு சென்ட் அல்லது 20 சென்ட் நிலம் காலி 
இடத்தை
 வாங்கிப் போட்டு விட்டான் குரு நகர் என்ற இடத்தில் தனி வகுப்பு எடுக்க 
பெரிய கட்டடமாய்க் கட்டி விடலாம் என்று.

இந்த சூழ்நிலையில் தனது வீட்டுக்கு அருகாமையில் பாகம்
 பிரிக்கப் பட்டு 
இருந்த தனது சித்தப்பா வீட்டையும் விலைக்கு கேட்க
 ஆரம்பித்திருந்தான்.
 ஏற்கெனவே சொல்லி இருந்தேன் அவனது சித்தப்பா வீட்டில் இவனது
 வயதையும் மீறிய இரு மூத்த சகோதரர்கள். லாரித் தொழில் செய்து வந்தனர்.
 ஏழுமலையின் சித்தப்பா சீக்கிரம் இயற்கை எய்தினார் அதற்கு நான் கூட 
மேட்டூர் சென்று அந்த துக்க நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன். 
ஏழுமலையின் அப்பா சிவம் தான் முன்னிருந்து கடைசிக் காரியங்களையும் 
சகோதரர்கள் சேர்ந்து செய்ததாக நினைவு.

Learning About "I Need You" vs. "I Want You" - The Good Men Project
அத்துடன் சிவம் கூட அடிக்கடி அந்த தம்பி மகன்களை அழைத்து
இன்னும் 
அத்துப் பிரச்சினை பொது சுவர் பிரச்சினை இருக்கிறது என்றெல்லாம் கேட்டு
 வந்தார் ஏன் எனில் இவர்கள் தந்தையின் பாத்தியதையில் இருந்த சொத்தை
 இவர்கள் 3 சகோதரர்க்கும் பிரிக்கும்போது நான் எனது கடமையை 
செய்ததாகவும் நினைவு.

சரி இனியும் கதையை வளர்த்த விரும்ப வில்லை. இது மிக நீண்ட 
கதை

குடும்பத்தார் எல்லாம் கூடி காவிரிக் கரை கல்வடங்கம் என்ற ஊரில்
 இது 
நெரிஞ்சிப்பேட்டை பூலாம்பட்டி இது போன்ற ஊர்கள் அருகே 
பாக்கியராஜ் 
பவுனு பவுனுதான் என்ற திரைப்படம் எடுத்து தோல்வியைத்
 தழுவியதே 
அந்த திரைப்படம் எடுத்த ஊர் அருகே உள்ளது

குடும்பம் எல்லாம் சேர்ந்து குல தெய்வம் கும்பிட கல்வடங்கத்தில்
 ஒன்று
 சேரப் போனார்கள்.
அன்றைய மாலை ஒரு தகவல் ஊர் வந்து சேர்ந்தது. ஏழுமலையை
 அவனது 
சித்தப்பா மகன் அதாவது அண்ணன் முறையில் இருந்த
 உடன் பிறவாச்
 சகோதரர் ஒருவர் அரிவாளால் கழுத்தில் வெட்டிக் கொன்று 
விட்டதாக.

இவன் ஓட ஒட அவன் துரத்திச் சென்று வெட்டியதாகவும் 
வெட்டப் பட்ட 
ஏழுமலை அந்த இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடி துடித்து 
இறந்ததாகவும் செய்தி. நாங்கள் எல்லாம் அது உண்மையா
 உண்மையாக 
இருக்குமா என்று நம்ப முடியாத செய்தி உண்மையாகவே இருந்தது.

மறு நாள் ஏழுமலையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கும் பிறகு 
வெண்மை 
நிறத்துணிகளால் போர்த்தப்பட்டு அவ்ர்களின் கடை வாசலில்
 வைத்து 
எடுத்துச் சென்று எரியூட்டப்பட்டது...

கதை நீளம் என்பதால் இந்த முதல் பாகம் இங்கு நிறுத்தப் படுகிறது...
இதன் இரண்டாம் பாகம் அடுத்த பதிவாக 

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு. இதன் பின் தாம் இந்தக் கதையின் முக்கியக் காட்சிகளின்
 அரங்கேற்றமே இருக்கிறது எனவே இதன் இரண்டாம் பகுதியை 
படிக்கத் தவறாதீர். தொடருங்கள்.





-

Sunday, May 17, 2020

பதினொன்று: உண்மைக் கதை 11. பூரண மதுவிலக்கு சாத்தியமா? கவிஞர் தணிகை

பதினொன்று: உண்மைக் கதை 11. கவிஞர் தணிகை
Bill passed to bring back total prohibition in Mizoram - The ...
பூரண மதுவிலக்கு சாத்தியமா என்ற கேள்வியை நண்பர் விடியல் குகன் கேட்ட கேள்விக்கு தொடர்புடைய உண்மைக் கதை இது. இதில் மது,இலஞ்சம்,தற்கொலை எல்லாமே இருக்கிறது. முடிந்தவரை கருப் பொருளின் தன்மை கருதி பெரிதும் சுருக்கித் தர விழைகிறேன்.

எங்கள் வீட்டுக்கு நாலைந்து வீடுகளுக்குத் தள்ளிய வீடு அவர்களுடையது.பள்ளிப் பருவத்திலிருந்தே அவர்களும் நானும் சேர்ந்தே படிக்க வில்லை எனினும் ஒரே பள்ளி அவர்கள் குடும்பத்திலும் எங்கள் குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்கள் பலர். அதில் நான் சொல்ல வருவது இந்த கதாநாயகனின் சகோதரர்கள் எல்லாம் எனக்கு பழக்கம். இந்தக் கதாநாயகன் பெயர் தங்கமகன் என்று வைத்துக்கொள்ளலாம் .இவர் இராணுவத்தில் பணி புரிந்து வருபவர். வயதில் எங்கள் வயதுக்கு சிறியவர். அப்போது மே.வங்க சிலுகுறியில் பணி செய்வதாக அறிந்தேன்

வழக்கம் போல அந்த ஆண்டும் இரு மாதங்கள் விடுமுறையில் வந்திருக்கிறார். அவரின் மகள் அப்போது சிறுமி இப்போது பருவ வயது எய்தி மங்கயாக இருக்கிறார். எனில் நீங்கள் இந்த சம்பவம் எப்போது நடந்திருக்கும் என ஒரு கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.நேற்று கூட அவர் இருசக்கர வாகனத்தில் நான் நடைப்பயிற்சிக்கு செல்லும் சாலையில் எதிரே வந்தவர் அவருடைய சகோதரருடன் என்னைக் கண்டு வணங்கித் தான் சென்றார்.

அன்று என்ன நடந்தது எனில் : இனி இது போல மதுவைக் குடித்து விட்டு வந்தால் நான் தீ வைத்துக் கொள்வேன் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் சேலை முந்தானையில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட அவரது மனைவி விளையாட்டாகப் பற்றிக் கொள்வேன் எனச் சொன்னது வினையாகி நிஜமாகவே நெருப்பு பிடிக்க கட்டியிருந்த சேலையின் ரகமும் துணை செய்ய அந்தப் பெண் எரிந்து கொண்டிருக்க இவனும் அதைத் தடுக்க முயன்று...வலது கையில் மணிக்கட்டு முதல் உள்ளங்கை மற்றும் விரல்கள் எல்லாம் தீக்காயமுமிருந்தது....

உயிருடன் துடித்துக் கொண்டிருந்த அவரது மனைவியை மேட்டூர் அரசு மருத்துவ மனையில் கொண்டு சேர்த்து காப்பற்ற முயல அங்கே சில நாள் பார்த்துவிட்டு இங்கே முடியாது என மாவட்ட மருத்துவ மனைக்கு அந்தப்பெண்ணைக் கொண்டு சென்றார்கள்...அங்கே அந்தப் பெண் இறந்துவிட்டாள்...

Campaign begins for total prohibition in Tamil Nadu - The Hindu

உடலை தர மறுத்துவிட்டார்கள்...தங்கமகன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டார் சில சாட்சிகளாக வேண்டும் என உள்ளூர் காவல் துறை ஆய்வாளர் அவர் மெத்தப் படித்ததாக அவரின் 3 முதுகலைப் படிப்பு சொல்லியது. அவர் அப்போதிருந்த சிலை வழக்கில் உச்சம் சென்ற நமது பொன் மாணிக்க வேல் அவர்களுக்கும் கூட உறவு முறை என்றும் சொல்லப்பட்டது. எனவே அவரைப் பற்றி ஏதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவே நான் முதல் முக்கிய பிரதான‌ சாட்சியாக இணைக்கப்பட்டேன். எனக்கும் எல்லா மனிதர்க்கும் நல்லது செய்ய வேண்டுமென்ற அவா எப்போதும் இருந்ததால் சம்மதித்தேன். மறுநாள் காவல் துறை வாகனத்தில் ஆய்வாளருடன் {அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டுமெனில் தனிப் பதிவு அவசியம்} சில அக்கம் பக்கத்து வீட்டாருடன் சென்றோம் சேலம்.

வருவாய்க் கோட்டாட்சியருடன் சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எல்லா அலுவலக நடைமுறைகளுக்கும் வளைந்து கொடுத்தோம். பிரதான சாட்சியான நான் அந்த தங்க மகன் இராணுவ வீரருக்கு அவரது மனைவியை கொல்லும் எண்ணம் ஏதும் இல்லை. இது தற்செயலாக நடந்த விபத்து. இனி உடலை வைத்து நாளை நேரத்தை விரயம் செய்து என்ன பயன் என்று பேசி உடலை மீட்டு வந்து உடனடியாக எரியூட்டினோம்.

அத்துடன் முடிந்தது நம்மை எதற்கும் கூப்பிட மாட்டார்கள் என்று இருந்தேன் ஆனால் அதன் பிறகுதான் கதையே ஆரம்பம் ஆயிற்று. உள்ளூர் காவல் துறையும் நீங்கள் தாம் நன்றாகப் பேசினீர் வருவாய்க் கோட்டாட்சியர் சந்திப்பில் என்றும் இந்த இராணுவ வீரனின் குடும்பமும் என்னை ஒவ்வொரு முறையிலும் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது. நானும் நம்மால் நல்லது நடந்தால் சரி என்று அழைக்கும் போதெல்லாம் சென்று எனது உதவியைச் செய்ய ஆரம்பித்தேன்.ஒருக் கட்டத்தில் அந்த ஆய்வாளர் கவுன்சிலிங் கொடுக்க காவல் நிலையம் அல்லது அவர்கள் இடம் வரமுடியுமா கைதிகளுக்கு கவுன்சிலிங் செய்ய என்றெல்லாம் கேட்க நான் எனது இருப்பிடம் அழைத்து வந்தால் மட்டும் செய்வேன் என மறுமொழி கூறியது இன்னும் நினைவில் இருக்கிறது.

இடையில் ஜீப் வாகனத்துக்கு டயர் மாற்றிக் கொள்ள என ஒரு தொகை வாங்கப் பட்டதை அந்த இராணுவ வீரர் தெரிவித்தார். அது தவிர வேறு என்ன என்ன வாங்கப் பட்டதோ கொடுக்கப் பட்டதோ  எனக்குத் தெரியாது. ஆனால் காவல் நிலையத்தில் விசாரணை தொடர்ந்தது...நான் நடந்த சம்பவம் உண்மைதான். ஆனால் அதை இவன் செய்ய முகாந்திரம் இல்லை என வலுவாக எனது தரப்பாக அந்தக் குடும்பத்துக்காக வாதாடினேன். காலப் போக்கில் விசாரணைகளுக்கும் பின் அந்த வழக்கிலிருந்து அந்த இராணுவ வீரர் விடுவிக்கப் பட்டார்.அப்போது நேரம் கிடைக்கும் போது ஏன் காவல் துறையில் இப்படிப் பட்ட இலஞ்சம் ஊழல் என்ற குறைபாடுகள் எல்லாம் நிகழ்கின்றன அதன் அடிப்படைக் காரணம் என்ன என்பது பற்றி எல்லாம் அந்த ஆய்வாளரும், ஏன் அதன் பின் மற்றொரு சம்பவத்தில் என்னுடன் மனந்திறந்து பேசிய ஒரு காவல் துறைத் துணை ஆய்வாளரும் விவரித்தனர்.

அதுமுதல் அந்தக் குடும்பத்தில் எந்த ஒரு அலுவலக காரியமாக இருந்தாலும் எடுத்துக் கொண்டு என்னை வந்து சந்திப்பதையே குறியாக இருந்தது அந்தக் குடும்பமே. அவரது தந்தையும் ஒரு இராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்று ஜோஸ்யக்காரர் என்று பேர் பெற்றவர். அவரும் அந்தக் குடும்பமும் என்னை வணங்க ஆரம்பித்திருந்தார்கள் எங்கே கண்டாலும்... என்னை விலக்காமல் எந்தக் காரியமும் செய்வது என்று அப்போது
இருந்த சிக்குன் குனியாவுக்கும்கூட அவர்கள் பாட்டி ஒருவர் சேலத்துக்காரர் குஞ்சிக் கருவாடு சமையலும் சுடுசோறும் மருந்து போல எனச் சொல்லி அதை எல்லாம் எனது தாய்க்கு பிடித்துப் போய் அவரது உடல் சுகாதாரம் குன்றக் காரணமானது எல்லாம் வேறு கதை... இது வரை நடந்ததெல்லாம் சரி... இனி ...

Do you agree that the Nagaland Liquor Total Prohibition Act, 1989 ...

ஒரு முறை என்னால் காப்பாற்றப் பட்ட அந்த இராணுவ வீரர் மது அருந்திய நிலையில் தனது இடுப்பில் லுங்கி கூட கழண்டுவிழுவது தெரியாமல் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு நானில்லாத போது வந்ததாக இதெல்லாம் சரியில்லை என எனது துணைவியார் கடிந்து கொண்டார். அதை அடுத்து மற்றொரு நாள் கையில் ஒரு முழு பாட்டில் மதுவோடு வந்து எங்கள் வீட்டு வாயில் நிலைப்படியில் கொண்டு வந்து வைத்தார்...அதன் பின்னணியில் அவருக்கு ஒரு அரசியல் கட்சி சார்ந்த நபர் தூண்டி இருக்கிறார் ,அவர் இந்த விடயத்தில் ஊரில் புகழ் பெற்று விட்டார். அவருக்கு மது என்றாலும் மதுக் குடியர் என்றாலும் பிடிக்காது வெறுப்பார் எனவே இந்த நபர் இப்படி போகும்போது ஏற்படும் முட்டுதலைக் கண்டு இரசிக்கலாம் எனக் கணக்கிட்டு இருந்ததாகவும் பின் அறிந்தேன். ஆனால் நான் அந்த இராணுவ வீரரிடம் நீ இப்படி எல்லாம் நடந்து கொள்வதை எவரும் விரும்ப மாட்டார்.

உங்கள் வணக்கமும் தேவையில்லை உங்கள் மரியாதையும் அவசியமில்லை. இனி இப்படி எல்லாம் எதற்காகவும் எங்கள் வீட்டுக்கு வரும் வேலையே இருக்கக் கூடாது எனக் கண்டித்து அந்த உறவை அத்துடன் துண்டித்து விட்டேன்.அதன் பின் அவர் கேரளத்துப் பெண் ஒருவரை மணந்ததும் அவரும் அவருடன் நில்லாமல் விலகிப் போனதும் பட்டும் படாமல் தெரிந்தது.


Canonising Gandhi made him a myth more than a man: Mark Tully ...
கற்பூர வளையத்துள் ஒரு மாநிலம் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என  தமிழக அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி சொல்லி மதுக்கடைகளைக் கொண்டு வந்ததாக ஒரு சர்ச்சை உண்டு. உண்மையில் எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு அமலாகவே இருந்தாலும் நமது பாதுகாப்பு முப்படைகள் பணிபுரிவார் எவர் அவரெல்லாம் நமது மாநிலங்களிலிருந்து சென்றவர்கள்தாமே...அவர்கள் வழியே அவர்களின் விடுமுறை, கல்யாணம், கருமாதி, விழாக்கள், நட்பு, உறவு இப்படி எப்போதும் மது பானம் வழிந்தபடியேதான் இருக்கின்றன என்பது உண்மை..

இப்படி இராணுவம் போன்ற பணிக்குச் சென்று விட்டும் மதுவுக்கு அடிமையாகாமல் மதுப்பழக்கம் இல்லாமல் மதுவைக் குடிக்காமல் வருவோர் விதி விலக்கானவர்களே....அப்படிப் பட்ட நபர்களையும் நாம் கணக்கில் கொண்டே ஆக வேண்டும்.

இதெல்லாம் சுய ஒழுக்கம், தனிமனித நெறி பால் தொடர்புடையதாக இருக்கிறது...தற்போதைய செய்திகளில் கூட மிலிட்டரி கேண்டீனில் எவ்வளவு கூட்டம் கூடி சமூக இடைவெளி இல்லாமல் மது விற்பனை எப்படி இருந்தது என்பதை ஊடகங்கள் காட்டின. அவர்களுக்கு என்று இலவச ஒதுக்கீடுகளும், கட்டணத் தள்ளுபடிகளிலும் எப்போதும் சரக்கு உண்டு. அது அவர்களுடன் மட்டும் போவதில்லை அங்கிருந்து அந்த மது என்னும் நச்சுத் திரவம் எல்லா இடங்களிலும் கூட கசிந்தோடியபடிதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை

இந்நிலையில் பூரண மதுவிலக்கை நாம் ஆரம்பிக்க வேண்டுமெனில் எப்படி எங்கே இருந்து ஆரம்பிப்பது என ஒரு அறிவார்ந்த சபை கொண்டு விவாதித்து முடிவுகள் எட்டப் பட வேண்டியது அவசியம். மேலும் இது போன்ற குடும்பம் எல்லாம் அமைதியாக மகிழ்வாக வாழவில்லை வாழ முடிவதுமில்லை என்பதையும் நீங்கள் ஒரு களப்பணி ஆய்வு செய்தால் கண்டு கொள்ள முடியும்.

Mahatma Gandhi: Many firsts and fasts began in Mumbai | Mumbai ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




Friday, May 15, 2020

பத்து உண்மைக் கதை 10. கவிஞர் தணிகை

பத்து உண்மைக் கதை 10. கவிஞர் தணிகை
Barriers to Justice and Support Services for Sexual Assault ...


மாநில அளவிலான கபாடிப் போட்டியை பகுடுப் பட்டு என்ற சிறிய ஊரில் பெரிய கல்ராயன் மலை ஊரில் நடத்தினேன்.மிகவும் பிரபலமான போட்டியில் கேடயத்தை முதல் பரிசு மற்றும் பரிசுகளை வழங்க சேலம் காவல்துறைக் கண்காணிப்பாளர் காசி விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்களை அழைத்திருந்தேன் வழக்கம் போல சிற்பி கொ.வேலாயுதம் போட்டிகளை துவக்கி வைத்திருந்தார்.

போட்டிகள் நிறைவெய்தும் நிலையில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டது போல அவருக்கு நினைவு படுத்த தொடர்பு கொள்ள முயன்றேன். அப்போதெல்லாம் செல்பேசி ஏன் தொலைபேசி வசதி கூட அந்தளவு இல்லை. நான் சொல்வது 1990 அல்லது ஓரிரண்டு ஆண்டு முன் பின்.

எனவே வழக்கம் போல தொலைபேசி வீட்டு சொந்தக்காரரிடமிருந்து தொடர்பு கொண்டபோதும் இயலாமையால் ஒயர்லஸ் இணைப்பில் மட்டுமே தொடர்பு கொண்டாக வேண்டிய நிலை. அப்படிப்பட்ட வசதி கருமந்துறைக் காவல் நிலையத்தில் மட்டுமே இருக்கிறது என்ற செய்தி உண்மையானது.அப்போது. இப்போது நிலை மாறி இருக்கலாம்

உதவியாளர்களை எல்லாம் நிகழ்ச்சியை பார்த்துக் கொள்ளச் செய்து விட்டு சற்று இறுதி ஆட்டம் நெருங்கும் தருவாயில் பகுடுப்பட்டிலிருந்து கருமந்துறை 5 முதல் 10 கி.மீ தூரம் இருக்கலாம். சென்று தொடர்பு கொள்ளலாம் எனச் சென்றேன்

பொதுவாகவே மாவட்ட அளவிலான பொறுப்பில் உள்ள ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் உள்ள நிர்வாகிகள் எல்லாத் துறைகளிலுமே எப்போதும் வேலைப் பளு அதிகம் உள்ளவர்கள்...மேலும் அவ்வப்போது மாநில அரசு தலைமையகத்தின் ஆணைக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளவர்கள்

எனவே தேதி எளிதில் கொடுக்க மாட்டார்கள் ஆராயாமல் எந்த நிகழ்வுக்கும். அவர்களிடம் நிகழ்வுக்கான தேதி வாங்குவதென்பது சற்று சிரமமானதுதான். மந்திரிகளிடம் கூட வாங்கி விடலாம். ஏன் எனில் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பு ஊடகம் பிரபலம் என்ற அளவீடுகள் இருப்பதால் அவர்கள் கூட வந்துவிடுவார்கள் ஆனால் இந்த மாவட்ட அலுவலர்கள் எப்போதும் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள்... நானும் பல மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்களை, இயக்குனர்களை சந்தித்து இருக்கிறேன்



அப்போது மாநகராகவில்லை சேலம். எனவே அதற்கென தனியாக ஆணையர் எல்லாம் இல்லை. எல்லாம் மாவட்ட பொறுப்பாளரிடமே பணிக் குவிப்பி மையமாகும். அப்படி சந்தித்தவர்களில் மிக முக்கியமான கண்காணிப்பாளர்களில் சிலர்: நாஞ்சில் குமரன்,பொன் மாணிக்கவேல்,காசி விஸ்வநாதன், விஜய்குமார் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்...இந்த பதிவுக்கு தொடர்புடையவர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.



அதில் சிலர் நாஞ்சில் குமரன் போன்றோர் வெளிப்படையாகவே நாங்கள் அவசரடியாக ஏதாவது சம்பவம் அல்லது கூட்டம் என்றால் கலந்து கொள்ள முடியாது போய்விடும் என எனக்கு அவரது அவசர நிலையிலும் அதாவது அப்போது தனது சீருடையை அணிந்தபடி மேல் ப்ளாப் பொத்தானை போட்டபடி விளக்கி அன்புடன் எங்களது அழைப்புக்கு கலந்து கொள்ள இயலாமையை மென்மையாக விளக்கியதும் உண்டு.

பொன்மாணிக்கவேல் அவர்களும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக தம்மால் மதுவிலக்கு கையெழுத்து சேகரிப்பில் கையொப்பம் எல்லாம் இட முடியாது என மறுத்தது பற்றி எல்லாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பேன் என நம்புகிறேன்.

கதைக்கு வருகிறேன்...காசி விஸ்வநாதன் வருவதாக நிகழ்ச்சியில் குறிப்பிட்டு அழைப்பிதழ் எல்லாம் போடப்பட்டு  விளையாட்டு நிறைவுக்கு வரும் நிலையிலும் சேலம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பு அலுவலகத்திலிருந்து எந்த தகவலும் இல்லை. எனவே நான் கருமந்துறை காவல்நிலையத்தை அணுகி கம்பி இல்லாத் தொலைபேசியில் பேசி நிலை அறியலாம் என முயன்றேன்.
Sexual Harassment Law in India and Constitutional Challenges ...
சென்றேன் காவல் நிலையம் விரிச்சோடி இருந்தது. எவரையும் அங்கு முன் பின் அலுவலக அறைகளில் கூட யாரும் இல்லை எனக்கோ புலி வாலைப் பிடித்த கதை. வருவதாகச் சொன்னோம் நீங்கள் அதற்குள் வேறு நபர்களை வைத்து பரிசளித்துவிட்டீர் என ராஜாங்க கோபத்துக்கும் ஆளாகக் கூடாது வருவதாகச் சொன்னவர் வரவில்லை எனத் தெரிந்து கொண்டால் நிகழ்வை தாமதமின்றி வன இலாகவினரை வைத்து முடித்து வைக்கலாம் என்றும் அவசர நிலை...

ஒவ்வொரு மூடப்பட்ட அறையாக திறந்து பார்க்கும்போது... அந்த காவல் நிலையம் முன் முகம் ஒரு மாதிரியும் உள் சென்றால் தங்கும் விடுதிகள் இருப்பது போன்று வரிசையாக அறைகளுமாக இருந்த நினைவு. அப்ப்போது இப்படி இப்போது நிலை மாறி இருக்கிறதோ என்னவோ...என்னடா இவ்வளவு பீடிகை போடுகிறான் என நினைக்கிறீர்கள்தானே...
ஆம் கடைசியாகப்பார்க்கலாம் என சார் சார் என அழைத்தபடி கடைசியாக ஒரு அறையைத் திறந்தால் அதில் முழுச் தலைச் சொட்டையுடன் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனித குலத்தின் தலையாய பணியை மேற்கொண்டிருந்தனர்....நான் அது போன்ற தருணத்தில் சிவ பூஜையில் கரடியாக நுழைந்திருக்கிறேன்...

அவர்தான் அந்த நிலையத்தின் காவல் துறைத் துணை ஆய்வாளர் என்பதும் அந்தப் பெண் ஏதோ அந்த நிலையத்தை தூய்மைப் பணி செய்யக் கூடிய மலைவாசிப் பெண்ணாகவும் இருந்தாள் என்பதையும் அறிந்து கொண்டேன் அதன் பின்

Sex and power - #MeToo, one year on | Leaders | The Economist

நல்ல வேளை அவர் என் மேல் கோபம் கொள்ளவில்லை. நிலையை விளக்கிச் சொன்னதும் ஒயர்லஸ் போனில் தொடர்பு கொண்டோம்...அவசர மாநில அரசின் தலைமை அழைப்பின் காரணமாக காவல் துறைக்கண்காணிப்பாளர் சென்னை சென்றுள்ளதாகவும் எந்த நேரத்திலும் வரலாம் என்றும் நிகழ்வு பற்றி நினைவு உள்ளது என்றும் ஆனால் இனிமேல் வந்து சேலத்தில் இருந்து கல்ராயன் மலை சுமார் ஒன்னரை மணி நேரத்துக்கும் மேல் இரண்டு மணி பயணம் செய்து நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

வேலை முடிந்தது நிகழ்வை எளிமையாக வன இலாகாவினர் வைத்து பரிசளித்து முடித்து விட்டேன். அது வேறு கதை இங்கு சொன்னது மது, இலஞ்சம் என்பதை அடுத்து அரசு எந்திரம் எப்படி பயன்படுத்தக் கூடாது எப்படி பயன்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிடவே...அந்த அதிர்ச்சி எனக்குள் இருந்தபடியே இருந்தது.

அதெல்லாம் ஒன்றுமில்லை அப்பனே...மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த உச்ச நிலை காவல் துறைத் தலைவர்களே அலுவலக பெரும் மேஜையில் பட்டப் பகலில் இது போன்ற தலையாயப் பணியில் ஈடுபட்டிருந்ததாக அந்தக் கால கழுகார் என நினைக்கிறேன் ஜூனியர் விகடனில் அப்போது அது மிக பிரபலம் அதில் எழுதி இருந்தன அது எந்தளவு உண்மையோ பொய்யோ என்று இருந்த போது...ஏன் இருக்கக் கூடாது இருக்கலாம் என்ற எண்ணம் இடம் கொடுக்க இது போன்ற நிகழ்வுகள் ஆதாரமாக விளங்கியது
Special report: Sexual harassment in workplaces in Pakistan ...
காட்டுப் புறம் கிராமப்புறம் இருக்கும் அப்போது கட்டாத கற்பாறை முனியப்பன் கோவிலில் ஒரு இளைஞரும் ஒரு யுவதியும் இந்த தலையாயப் பணியில் ஈடுபட்டதை நான் கண்டு பேரதிர்ச்சி அடைந்ததை அதன் பின் கோவில் குருக்கள் கோவில் கருவறையில் செய்து ஊடக்த்தில் பிரபலமாக விளங்கி அதெல்லாம் ஒன்னுமில்லை இது வேற என்பது போல் இதெல்லாம் வேற லெவல்... நாமதான் சும்மா இன்னும் நியதி நியமம் என்று பேசிக் கொண்டும் இயங்கிக் கொண்டு இருப்பதாகத் தோன்றுகிறது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு: இன்னும் சில உண்மைக் கதைகள் தொடர் உள்ளன. பகுதி 1 முதல் இந்த 10 ஆம் பகுதி வரை படித்தவர்கள் மேலும் படிப்பவர்கள் இந்த வலைப்பூவுக்கே வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் அது என்றும் நிலைக்கும். வாட்ஸ் ஆப் செயலியில் சில நாட்களில் மாயமாகிவிடும் என்பதால் எனது அன்பார்ந்தவர்களுக்கு இது ஒரு தேவையான வேண்டுகோளாக வைக்கிறேன். மேலும் எல்லாப் பகுதிகளையும் படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுமாகவும் நானே ஒவ்வொரு பதிவையும் உங்களுக்கும் உங்கள் கவனத்துக்கும் கொண்டு வந்தால் மட்டுமே படிப்போம் என்ற எண்ணத்தில் இருந்து கொஞ்சம் உங்களை எனக்காக தளர்த்திக் கொள்ளும்படியாகவும் வேண்டுகிறேன்.

Wednesday, May 13, 2020

ஒன்பது: உண்மைக் கதை 9 வேலிகளே பயிரை மேய்வதுதான்....: கவிஞர் தணிகை

ஒன்பது: உண்மைக் கதை 9 வேலிகளே பயிரை மேய்வதுதான்....: கவிஞர் தணிகை

See the source image

என்னடா இவன் ஒரே போக்கிலேயே எழுதிக் கொண்டிருக்கிறானே என்று உங்களுக்குத் தோன்றலாம். எல்லாம் நடந்த உண்மைகள். அதில் வெற்றியின் பக்கம், தோல்வியின் பக்கம், வெற்றி தோல்வி இரண்டுமே இல்லாத நடுநிலைப் பக்கம் என இவற்றைப் பார்த்துப் பிரிக்கலாம்.

இது நடந்தது 1987. முதன் முதலாக எனது மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆண்டுக் கணக்கில் நிதி வழங்கிய அந்த நிறுவனத் தலைவர் பேரில் ஒரு கபாடிப் போட்டியை நடத்தத் திட்டமிட்டேன். அது முதல் ஆண்டு என்பதால் சிறு துவக்கமாக இருக்கட்டும் என மலைமேல் உள்ள ஊர்களின் அணிக்கும் மட்டும் அழைப்பு விடுத்தோம்.

அப்படியும் பகுடுப் பட்டு என்ற ஊரின் சற்று வணிகத் தலமான சற்று பெரிய கல்ராயன் மலைக் கிராமங்களில் இருந்து சற்று முன்னேறிய ஊரின் இளைஞர்களும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து கலந்து கொண்டனர்.
கபடி இருக்கும் விளையாட்டுகளிலேயே ஒரு வீர விளையாட்டு. அதிலும் மலைவாழ்மக்கள் சற்று முரட்டு குணம் கொண்டவர்கள்...அதிலும் இளைஞர்களை சொல்லவே வேண்டாம்.

எனவே அடிதடி தகராறு பட்டுக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் அந்தப் பகுதிக்கு ஊரிய காவல் நிலையத்தில் ஒரு நாள் இரவும் பகலும் விளையாடப் படும் கபாடிப் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க காவலரை அனுப்புங்கள் என்றேன். என்ன இருந்தாலும் நமது பார்வையை விட காவலர் இருக்கிறார்கள் என்றால் சற்று அந்த மக்களும் இளைஞரும் கட்டுப் பாடாக இருப்பர் என்ற கருத்துடனே.

சரியாக நினைவில்லை...அப்போது 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. அந்த போட்டிகளே பின் நாட்களில் வளர்ந்து பகுடுப்பட்டு என்ற இடத்தில் நடத்தப்படும்போது மாநில அளவுக்கு விரிந்தது என்பதும் அதில் நான் விளையாட்டை நடத்திக் கொடுக்க அழைத்திருந்த இரண்டு உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவரை ஒரு இளைஞர் கன்னத்தில் அறைந்து விட்டார் என்பதும் இந்தப் பதிவுக்கு தேவையான செய்தி அல்ல...அது பற்றி அது குறித்த மற்றொரு குற்றம் நடந்த பதிவை எழுத முனையும்போது மேலும் மற்றொரு பதிவில் எழுதுகிறேன்..

எப்போதும் பகுடுப்பட்டு இளைஞர்க்கும் இந்த பெரிய கல்ராயன் மலை இளைஞர்க்கும் கபடியில் ஒரு அசுரத் தனமான போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருப்பது போல..... எனவே எனக்கு காவல்துறையின் ஒத்துழைப்பு அவசியம் தேவையாயிருந்தது.

அப்போது கீழே தும்பல் என்ற இட்த்தில் இருந்து காந்தி என்ற ஒரு நல்ல இளைஞர் வந்து நடுவராக இருந்து விளையாட்டை நடத்திக் கொடுத்தார். நல்ல கூட்டம். இரவிலும் மின்னொளி ஆயில் எஞ்சின் வைத்து மின்சாரம் இல்லாத ஊரில்...மக்கள் நன்றாக மகிழ்வுடன் போட்டிகளை கண்டு களித்தனர். இதெல்லாம் வேறு

கரியகோயில் காவல் நிலையத்தில் இருந்து ஒரே ஒரு காவலரை அனுப்பி இருந்தனர். அவர் நல்ல குண்டாக இருந்தார். அதிகம் பேசாதவராக. இருந்தார். அவரது போட்டோ கூட விளையாட்டுப் போட்டியை பதிவு செய்ய எடுத்த போட்டிகளில் இன்னும் இருக்கிறது. அதெல்லாம் ஆரம்ப காலம். போட்டிகள் போய்க் கொண்டிருந்தன. இரவு என்றுதான் நினைக்கிறேன் . போட்டி நடந்த விளையாட்டுத் திடல் முன்பாக ஒரு மேடை. அதன் பின் உள்ள ஒரு வீட்டில்  அந்த ஊரின் நபர்களுடன் ஒத்துழைப்புடன் சாராயம் வைத்து விற்பனை செய்து அதை அருந்துவோர் சென்று அருந்தி வருவதாகச் செய்தி கிடைத்ததும்

நான் இந்த காவலரை சற்று சென்று பாருங்கள் என செய்தி சொல்லி அனுப்பினே. சென்றவர் நான் எதிர்பார்த்திருந்த நேரத்தை விட அதிக நேரம் ஆகியும் காணாததால் என்ன ஆயிற்று என நானே பார்க்க அந்த வீட்டில் உள்ளே சென்று பார்த்தேன். அப்போது அவர் டம்பளரில் சாராயம் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார் மேலும் எனப் பார்த்தவுடன் மேலும் கீழும் அவரது காக்கி சட்டை மேல் எல்லாம் சிதறடித்தும் கொண்டது அதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்ன உணர்வில் இருந்தேன் என்றே அப்போதும் புரியவில்லை இப்போதும் அந்த கலவையான உணர்வு பற்றி விளங்கவில்லை ஆனால் அந்த சம்பவம் இன்னும் என் நினைவில் நேற்று நடந்தது போல் இருக்கிறது. இது ஒரு சிறிய விடயம்தான். ஆனால் இந்த விதை போன்றதை நீங்கள் விரித்து விருட்சமாக்கிப் பாருங்கள் இந்த நாட்டில் நடைபெறும் எல்லா அழிவுக்கும் அது ஆதாரமாக விரிவதைக் காணலாம்.

See the source image
மறுபடியும் அவரை அழைத்து வந்து விளையாட்டு நடக்கும் இடத்தில் நிறுத்தினேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Tuesday, May 12, 2020

எட்டு: உண்மைக் கதை 8.: கவிஞர் தணிகை

எட்டு: உண்மைக் கதை 8.: கவிஞர் தணிகை

Indian Judiciary: Delayed “Satyamev Jayate”?


முடவன் கோயில் தீர்த்தன் வந்திருந்தான். அது 1987 ஆம் ஆண்டிலிருந்து 1992க்குள் இருக்கலாம். சரியாக நினைவு படுத்த முடியவில்லை இப்போது. ஏன் எனில் ஏறத் தாழ 30 ஆண்டுக்கும் மேல் ஆகிறது இந்த நடப்புக்கு

சார் நாங்க யார் பேச்சை கேட்கிறது?
நீங்க காய்ச்ச வேண்டாம் என்கிறீர்
அவங்க காய்ச்ச சொல்லிக் கண்டிக்கிறார்கள், தண்டிக்கிறார்கள்


ஏன் என்ன நடந்தது தீர்த்தா...?

காய்ச்சினால் காய்ச்சாவிட்டாலும் எங்களுக்கு வர மாமூல் வந்திரணும்
எடு காசை என்றார்
ஏதும் இல்லையே சார் என்றேன்

அப்ப கையில போட்டிருக்கிற மோதிரத்தைக் கழட்டிக் கொடு
என கையில் இருந்த அரை பவுனா இல்லை ஒரு பவுனா என்பதும்( எனக்கு) மறந்து விட்டது
அதைக் கழட்டி வாங்கிக் கொண்டு போய்விட்டார் என்றான் தீர்த்தன்
 முடவன் கோயில் பெரிய கல்ராயன் மலையில். இது எப்போது நடந்தது எங்கு நடந்தது என்பது பற்றி எல்லாம் விசாரித்து விவரம் தெரிந்து கொண்டேன்.

இந்த பேச்சு வார்த்தையில் அவர்கள் என்றது காவலர்களை
கரிய கோயில் என்ற இடத்தில் ஒரு காவல் நிலையம் உள்ளது இன்றும்.
கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று வந்தான் தீர்த்தன் உண்மைதான். ஆனால் நாமெல்லாம் அங்கு சேவை புரிய ஆரம்பித்த காரணம் மற்றும் விளைவால் அவன் திருந்தி வாழ நினைத்தான். அவன் அப்போது காய்ச்சுவதில்லை அதனால்தான் அவனது மோதிரம் இப்போது காவலரால் பிடுங்கிச் செல்லப்பட்டிருக்கிறது மாமூலுக்கு பதிலாக. காவல் துறையினர் கையில் கிடைத்த பொருளை மீட்டுக் கொண்டு வருவதென்பது முதலை வாயில் போன இரையைப் போன்றது.

வெற்றிலை ஏறிய பற்கள்...பாமரன். உண்மையைப் பேசுவான். அவனுக்கு பெருமாள் என்ற திருமண வயதில் ஒரு எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிற மகனும் அதை அடுத்த சிறிய வயதில் பெண் பிள்ளையும் மற்றொரு சிறுவனும் குடும்பம். அவனது மனைவி மிகவும் ஒல்லியாக அவரும் எப்போதும் வெற்றிலை போட்டு காவி ஏறிய பற்களுடன் சிரித்துக் கொண்டே பேசுவார்.இன்னும் முகம் மறக்க வில்லை
satyamev Instagram posts - Gramho.com
சரி போ நீ அடுத்த திங்கள் வந்து எனை சந்தி என்று விடை கொடுத்தேன்.
அப்போதெல்லாம் தொலைபேசி வசதி வெகு அரிது
என்றாலும் எங்கள் அலுவலகம் வாடகைக்கு இருக்கும் வீட்டு சொந்தக்காரரிடம் தொலைபேசி வசதி உண்டு. அவரிடம் நிறைய நிலபுலம் வசதி வாய்ப்புகள் உண்டு என்பதால்.அவர் ஒரு சாலை போடும் ஒப்பந்ததாராகவும் இருந்ததாக நினைவு.

அவர் என்னிடம் எப்போதும் மென்முகம் காட்டுபவர். போன் ஏதாவது பேசுவதாயிருந்தால் ஒன்றும் தடை சொல்ல மாட்டார்
உடனே கரிய கோயில் காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டேன். அவன் நல்ல வேளை துணைக் காவல் ஆய்வாளரே காவல் நிலையத்தில் இருந்து தொலைபேசியை எடுத்து தொடர்பு கொண்டு பேசினார். நிலையை விளக்கினேன்...
गांधी जयंती पर माध्यामिक शिक्षा ...
அவர் உடனே நீங்கள் ஒன்றும் வரவேண்டாம்
நாங்களே உங்கள் அலுவலகம் வந்து தந்து விடுகிறோம் என உறுதி அளித்தார்.

அதே போல அந்தக் கரிய கோயில் செல்லும் ஒரே பேருந்து அது காலை ஒரு நடை மாலை ஒரு நடை மட்டுமே அங்கிருந்து சேலம் வரை இணைக்கும் . அந்தப் பேருந்தில் வந்து எங்கள் பகுடுப் பட்டு  அலுவலகம் வாசலில் நிறுத்தி ஒரே நிமிடத்தில் அந்த மோதிரத்தைக் கொடுத்து விட்டு அதே பேருந்தில் ஏறிப் போய்விட்டார்.

எங்கள் அலுவலகம் என்றால் பெரிதாக கற்பனை எல்லாம் செய்து கொள்ள வேண்டாம். ஒரு பெரிய அறை அதில் ஏழெட்டு  இரும்பு இருக்கைகள், ஒரு மடக்கு மேசை.பொது அலுவலகத்தையும் எனது தனிப் பயன்பாட்டையும் மறைக்க   ஒரு தடுப்புத் துணி ஸ்க்ரீன், நான் உண்ண அல்லது மற்றவற்றிற்கு மறைப்பாக...அலுவலக  அந்த மேசையில் ஒரு எழுதுகோல் வைக்கும் ஸ்டேன்ட் ஒரு பேட் ஒரு ஸ்கேல் இப்படி கொஞ்சம் எழுத பேப்பர், இங்க், சில பதிவேடுகள் ....அவ்வளவுதான். அது எங்களது களப் பணியக அலுவலகமாக இருந்தது அவ்வளவுதான். அதிலேயே ஒரு நாள் களப்பணி முடித்து திரும்பி படுக்கலாம் என மடக்கு பிளாஸ்டிக் நார் போட்ட கட்டிலை விரித்தால் அந்த மடிப்பில் இருந்து பெரிய நாகம் உறக்கம் எழுந்து புறப்பட்டதெல்லாம் வேறு கதை..
Shyam sunder (@Shyamsu13333995) | Twitter
ஆக மக்கள் சக்தி என்பக்கம் இருந்ததால் எல்லாம் எளிதாக நடந்தது. அதுவும் மக்களுக்காக நடந்தது. அந்த மோதிரம் தீர்த்தன் கைக்கு போனது என்பதையும் அவன் எவ்வளவு மகிழ்வடைந்திருப்பான் என்பதையும் நான் மேலும் சொல்லத்தான் வேண்டுமா...
The latest episode of Satyamev jayate and its significance in the ele…
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Monday, May 11, 2020

ஏழு: உண்மைக் கதை 7: கவிஞர் தணிகை

ஏழு: உண்மைக் கதை 7: கவிஞர் தணிகை

Drinking and driving... in Pakistan? | The World from PRX


வழக்கம் போல பாட்டாளி மக்கள் கட்சி தமது ஏதோ ஒரு காரணத்துக்காக பந்த் செய்தபடி இருந்த நாள். அப்போது.நான் வீட்டில் இருந்தேன். நிலை எப்படி இருக்கிறது என கவனிக்க அல்லது வெறும் சாலையில் நடக்க கைலி/லுங்கி கட்டியபடி சாலையில் செல்ல ஆரம்பித்தேன் என்னை அடையாளம் தெரிந்து கொண்ட ஒரு துணைக் காவல் ஆய்வாளர் சல்யூட் அடித்தார். எனக்கு எஸ்.ஐ சல்யூட அடிப்பது யார் எனப் பார்த்தால் சார் நான் இப்போது மேச்சேரி காவல் நிலையத்தில் எஸ்.ஐ...பதவி உயர்வு பெற்று வந்து பணியில் இருக்கிறேன் இன்று இங்கு பந்தோபஸ்து பணி என்றார். எனது நினைவு பின்னோக்கி ஓடியது.

அது 1990க்கும் 1991க்கும் இடைபட்ட காலம் என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. என்னைப் பேட்டி காண பெங்களூர் டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையிலிருந்து ஒரு குழு வந்திருந்தார்கள். அவர்களுக்கு வேண்டிய உணவு வசதி வாய்ப்புகளை அவர்கள் வசதிப்படி மிகவும் உயர் தரமாக செய்து கொடுத்தேன். அதில் வந்திருந்த அந்தக் குழுவின் தலைவர் பெயர் : ஸ்டீபன் என நினைக்கிறேன் குடும்பஸ்தர். இளைஞர்.

அப்போது கல்ராயன் மலையில் பெரிய கல்ராயன் மலையில் எனது மக்கள் பணி.மலைவாழ் மக்களுக்கானது. எனது குழுவில் சுமார் 25 இளைஞர்களுக்கும் மேல் பணி புரிந்து வந்தனர். அப்போதே நூற்றுக்கும் மேலான கிராமங்களில் சுருக்கமாகச் சொல்லப்போனால் எனது கொடி பறந்து கொண்டிருந்தது.

பெரும்பாலும் நடந்து செல்ல வேண்டிய நிலையில் இருந்ததால் இரவு, அதிகாலை, மாலை இப்படி கோடையின் வெயில் அல்லது வெயில் சுட்டெரிக்காத நேரத்தையே பயணத்துக்குப் பயன்படுத்துவது வழக்கம். எமது இளைஞர்கள் சொல்வார்கள் ,சார் ஷூ வை....காலணியை இழுத்துக் கட்டி விட்டார் என்றால் எங்களால் கூட போட்டி போட முடியாது அப்படி நடப்பார், நடந்து கொண்டே இருப்பார் ...எனப் பெருமையாக...

அப்படி ஒரு நாள் அதிகாலையிலேயே குன்னூர் கிராமத்தில் இருந்தோம். கிராம சபைக் கூட்டம். அப்படி அதிகாலை அல்லது இரவில் கிராமத்துக்கு செல்வதில் ஒரு பயன்பாடு மக்களை ஒருசேர ஊருக்குள் பார்க்கலாம்.நமது செய்தியை ஒரேயடியாக சேர்த்து விடலாம். இல்லையேல் அவர்கள் வேலை நேரத்தில் சென்றால் அவர்கள் அனைவருமே தனித்தனியாக காடு மேடுகளில் பிழைப்புக்காக சென்று விடுவார்கள்....
High and dry - Frontline
எனவே குன்னூரில் நாங்கள் இருந்த சமயத்தில் அடியனூரில் இருந்து அடியனூர் பொன்னுசாமி என்ற இளைஞர் ஏன் எனில் ஒவ்வொரு ஊரிலுமே பொன்னுசாமி என்ற பேர் இருக்கும் எங்கள் கிராமங்களிலேயே அடியனூர் பொன்னுசாமி, நாகலூர் பொன்னுசாமி, இப்படி இருப்பார்கள் எனவே ஊரை சேர்த்துக் கொள்வோம் பேருடன்....அங்கு வந்து எங்களிடம் ,சார் எனது அம்மாவை அவர் ஒரு சத்துணவு ஊழியர் ஓய்வு பெறும் வயதில் இருப்பவர் காவலர்கள் வந்து அடித்து சத்துணவுக் கூடத்தில் சிறை வைத்து இருக்கின்றனர் என தெரிவித்தார்...

குன்னூருக்கும் அடியனூருக்கும் நாலைந்து கிலோமீட்டர் இருக்கும் மண்சாலை இருமருங்கும் உண்ணி முள் செடி இருக்கும் புதராக....சரி வாருங்கள் என கிளம்பினோம் ....அங்கு சென்று பார்த்த போது இரண்டு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த ஒரு தலைமைக் காவலர், இரண்டு காவலர்கள், அவர்களுக்கு வழிகாட்ட வந்திருந்த கீழ் இருந்து அதாவது ஆத்தூர் மலையடிவாரத்தில் இருந்து வந்திருந்த இரண்டு நபர்கள் இருந்தனர். அதில் காவலர்கள் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு முழு பாட்டில் சாரயத்தை வைத்தபடி குடித்த படி இருந்தனர். இதுதான் நாங்கள் கண்ட முதற் கண்ணில் பட்ட காட்சி... எங்களைப் பார்த்தவுடன் குடிப்பதை நிறுத்தி விட்டு மது பாட்டில்களை ஒதுக்கி வைத்தனர்.

மெதுவாக ஆரம்பித்தோம்...என்ன சார் என்ன ஆச்சு, அந்த அம்மாவை ஏன் அடித்து சத்துணவுக் கூடத்தில் வைத்து இருக்கிறீர்களாமே....

அவங்க புருஷன் சாராயம் காய்ச்சுகிறான் எனப் புகார், அவனைத் தேடி வந்தால் அவனைப் பிடிக்க முடியவில்லை, எனவே அவன் மனைவியைப் பிடித்தால் தான் அவன் வருவான் என அதிகாமக எல்லாம் அடிக்கவில்லை...எனப் பிடித்து வைத்துள்ளோம் என்றார்கள்....

இதெல்லாம் சரியில்லை சார் என எங்கே அந்த அறையைத் திறங்கள் என்றோம் ,அந்த அம்மாள் பேச்சு மூச்சின்றி கிடந்தார்...
How the original inhabitants of Idukki were systematically ...
உடனே அனைவரையும் ஒரு கயிற்றுக் கட்டிலை எடுத்து வரச் சொல்லி அதில் போட்டு உடனே இவரைக் காப்பாற்ற வேண்டும் என விரைவு படுத்தினேன்...செய்வதனைத்தையும் பத்திரிகை குழுவினரும் கவனித்தபடி இருந்தனர்.

அங்கிருந்து பகுடுபட்டு வரவேண்டும் அங்கிருந்து கருமந்துறை அல்லது கீழ் உள்ள மருத்துவ மனைக்கு ஆத்தூர் அல்லது சேலம் கொண்டு வர வேண்டும்  இடையில் குன்னூரில் முதல் உதவி செய்து கொள்ளலாம் எனத் திட்டம். அங்கு குன்னூர் முக்கிய கிராமம் அங்குதான் நியாய விலைக்கடை ,பள்ளி, சிறு அஞ்சல் நிலையம், ஒரு செவிலியர் கொண்ட சிறு அரசு உதவி மருத்துவ மையம் எல்லாம் உண்டு...

அவர்கள் நாங்கள் எல்லாம் ஒரு கூட்டமாக அந்த அம்மாவை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். இடையில் நான் அந்த அம்மாவின் நாசியில் கை வைத்துப் பார்த்தேன் நன்றாக மூச்சு வந்து கொண்டுதான் இருந்தது...இவர்கள் காவலர்கள் அடித்திருந்தது உண்மைதான்...

சற்றேறக் குறைய கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்து குன்னூர் வரும் வழியில் உணர்ச்சி மயமான இளைஞர்கள் நாங்கள் இருக்கிறோம் என்ற மகாத் துணிச்சலில் அந்தக் காவலரை, தலைமைக் காவலரை,அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த அந்த இரு நபர்களையும் நையப் புடைக்க ஆரம்பித்தனர்....பக்கத்தில் இருந்த உண்ணி முட் செடியில் எல்லாம் இழுத்துப் போட்டு நான் தடுக்க முனைவதற்குள் சம்பவம் நிறைவேறிவிட்டது...அதில் தலைமைக் காவலருக்கு தலையில் வேறு அடி...இரத்தம் வர ஆரம்பித்து விட்டது

டேய் விட்டுடுங்கடா விட்டுடுங்கடா செத்துடப் போறாங்க எனத் தடுத்தேன்...ஒரு வாறு அடங்கினார்கள். அடக்கி விட்டேன்...குன்னூர் வந்தோம் காவலர்களுக்கு முதல் உதவியாக காயத்திற்கு ப்ளாஸ்டர் பற்று போடப்பட்டது...நமக்கு அந்த அம்மாவைக் காப்பாற்றுவதுதான் குறிக்கோள் . எனவே இருதரப்பையும் சமாதானப்படுத்தி இரு தரப்பும் இனி இதற்கு மேல் எந்த மேல் நடவடிக்கையும் எடுத்து விடக் கூடாது எனக் கேட்டுக் கொண்டேன்...

அந்த அம்மாவை விரைந்து அங்கிருந்து அடுத்த கட்டமாக கீழ் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். இந்தக் காவலர்களும் சென்றார்கள் பத்திரமாக...நாங்களும் பத்திரிகைக் குழுவினரும் கீழே வந்து விட்டோம் மலைச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு.
எனக்கு உள்ளூர பயம் காவலரையே கைவைத்து விட்டனரே என்ன ஆகப் போகிறதோ காவலர் வாகனத்தில் நிறைய காவலர் எல்லாம் வந்து ஊரைச் சூறையாடி விடுவார்களோ என்றெல்லாம் கனவு கற்பனை...

அந்த அம்மாள் நல்ல நிலையில் இருப்பதாகவும் , எனது பயத்திற்கேற்ப ஏதும் நடக்கவில்லை என்பதும் இரு தரப்புமே அமைதியாக இருந்தார்கள் என்பதும் நடந்த முடிவு....

அந்த தலைமைக் காவலரே எனக்கு சல்யூட் அடித்த துணைக் காவல் ஆய்வாளர் என்று சொல்லாமல் சொல்லி முடிக்கிறேன்














IAS officer caught taking Rs 12 lakh bribe in Thane
பொருள்: கள்ளச் சாராயம் காய்ச்சுங்கள் என காவல்துறைச் சொல்ல, நாங்கள் காய்ச்சக் கூடாது மதுவிற்கு அடிமையாக இருக்கக் கூடாது என மக்களுக்குச்  சொல்ல இரண்டுக்கும் இடையில் அந்த மலைவாழ் மக்கள் இருந்த நிலையில் நடந்த சம்பவம் இது....இவர்களுக்கு மாமூல் அதாவது சரியாக இலஞ்சம் சென்று சேரவில்லை என்பதற்காகவே மலை மேல் இந்த சம்பவம் நடந்தது.... இதன் தொடர்புடைய இலஞ்சம், மது என்பதான மற்றொரு சிறு கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.