Sunday, December 4, 2016

பணப் பரிவர்த்தனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முன்: கவிஞர் தணிகை

பணப் பரிவர்த்தனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முன்: கவிஞர் தணிகை


Image result for modi ke app

மோடியின் செயல் : அரசியல் வியாதிகள், பெருமுதலாளிகள் ஒரு அணியில் ஏமாற்றுகிற வர்க்கமாகவும் தமது ஊதியத்தைக் கூட பெற இயலாத நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மற்றும் ஒரு ஏமாறுகிற வர்க்கம் மற்றும் ஒரு அணியாக இந்திய மக்கள் கூட்டம் மாறி வருகிறது‍ இதை செய்திருப்பது மோடியின் சிந்தனையற்ற செயல். என்றாலும் இதை தொலை நோக்குப் பார்வையில் பார்த்தால் இந்தியாவில் வர்க்க பேதம் தோன்றுவதற்கான துளி அடையாளம் தென்படுகிறது. இது கண்கூடு.ஒரு கூட்டத்தில் மாட்டிக்கொண்ட பிஜேபி எம்.எல்.ஏ துவைத்து எடுக்கப் படுகிறார் காவல் துறையும் அடி வாங்குகிறது அவரை காக்க முனையும் பணியில்.

லெனின் சொல்வார்: கோடிக்கணக்கான மக்கள் இனியும் ஒரு நொடியும் பொறுக்க முடியாது என வெகுண்டு எழுவதுதான் புரட்சி என்பார்.

அதன் ஆரம்ப விதைகள் தூவப்படும் அறிகுறிதான் இந்த அம்பானி,அதானி,ஜிந்தால், ஸ்டெரிலைட்  பெருமுதாளிகளின் கைப்பாவையாக பிரதமர் மோடியின் செயல்பாடு.

பாரதிய ஸ்டேட் வங்கியின் கடனுதவி  வழங்கப்பட்ட பணத்தை ரிலையன்ஸ் வைத்து வாங்கிக் கொள்ளலாம் என ஒரு பக்கம், விஜய்மல்லையாவின் ஒரு சொத்தைக் கூட ஏலம் விட்டு அவரின் கடன் தொகையை வசூல் செய்ய முடியா நாட்டின் மாபெரும் வங்கி

அடுத்து சுப்ரமண்யம் சாமி சொல்வது போல வெளி நாடுகளில் உள்ள 70 இலட்சம் கோடி இந்தியப் பணத்தை கொண்டு வர ஒரு நடவடிக்கையும் உருப்படியாக செய்யாமல் ,இந்த பெருமுதலாளிகளிடம் வரவேண்டிய 7 இலட்சம் கோடியைப் பெற முனையாமல் இதை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமாம்.

இப்போது கள்ளப் பணத்தையும், கருப்புப் பணத்தையும் ஒழிக்க ரொக்கப் பணத்தை அதன் புழக்கத்தைக் குறைத்து கடைசியில் அழிக்க இந்தியாவின் சுமார் 100கோடி பேருக்கும் மேலானவர்களை தமது பணத்தை ஊதியத்தை அவர்கள் பெற முடியாமலே பிச்சைக்காரர்களாக அல்லாட வைத்திருக்கிறார் ஒரு நள்ளிரவிலே சொன்ன ஒரு வார்த்தை மூலம்.

அரசின் கணக்குபடி 14.6 இலட்சம் கோடி பணத்தில் 500, 1000 நோட்டுகளில் 9 இலட்சம் கோடி மதிப்புடைய நோட்டுகள் வந்து சேர்ந்து விட்டன. இன்னும் டிசம்பர் 30க்குள் 10% வரலாம் எப்படியும் இன்னும் 3.5 இலட்சம்கோடிகள் வராமலும் போகலாம் என கணக்கு உள்ளதாம்.

ஆனால் காரணமாகவே பணப்பற்றாக்குறை ஏற்படுத்தவே புது நோட்டுகளை குறைவாக அச்சடித்து வெளி அனுப்பி அனைவரையும் ரொக்கப் பணப் பரிவர்த்தனையிலிருந்து வெள்யேற்றி கணக்குகள் பரிமாற்றம், பிளாஸ்டிக் பணப் புழக்கம் போன்றவற்றில் ஈடுபட வைக்கவும் திட்டம்.இது ஒரு பேச்சு

ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த திட்டம் பலனளிக்காது என்றும் கருத்துகள் உள்ளன.

இந்நிலையில்: அடுத்து தங்கம் , ரியல் எஸ்டேட் எனப் பாயும் முன் பொருள் சேவை வரி ஜி எஸ் டி கூட்ச் அன்ட் சர்விஸ் டேக்ஸ் பற்றி குழப்பி வருகிறதாம்.
Image result for modi ke appImage result for modi ke app


இந்நிலையில்: 13,860 கோடி குஜராத்தில் அரசியல், மற்றும் பணக்காரர்களின் பணம் கணக்கை ஒருவர் தாமே வெளி இட்டிருக்க, அவரை ப் பிடித்திருக்கிறார்கள், ஏழுமலையான் இனி இந்த 1000 , 500 நோட்டே வேண்டாம் என மறுதலளித்திருக்கிறார். சேலத்து பி.ஜே.பி நாயகன் ஒருவனிடம் 20 இலட்சத்துக்கும் மேல் புது 2000 நோட்டுகள், பெங்களூரில் புது நோட்டுகள் 5 கோடி, பி.ஜே.பியில் மேற்கு வங்க பிரிவு வங்கியில் இந்த திட்டம் வருமுன்னே 2கோடியை இரவு 8 மணிக்கு வங்கிக் கணக்கில் வரவு வைத்திருக்க...
Image result for modi ke app


நான் ஒரு மக்கள் நலப் பணியாளர், தற்போது கூட ஒரு நிறுவனத்தில் சேவை செய்து வருகிறேன் குறைவான ஒரு ஊதியம் என் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது எனது மாதச் செலவுக்கு ஒரு வங்கியில். மாதத்தில் முதல் சனிக் கிழமைதான் எனக்கு விடுமுறை.

வங்கிக்கு சென்று பார்க்கிறேன், செக்புக் வேண்டுமானால் எழுதிக் கொடுத்துப் போங்கள் குறுஞ்செய்தி உங்கள் செல்பேசிக்கு வரும் வந்த பின் பெற்றுச் செல்க, அதற்கு முன் பணம் வேண்டுமெனில் காலை 7 மணிக்கு வந்தால் முதலில் வரும் 100 அல்லது 120 பேருக்கு டோக்கன் தருவோம் அவர்களுக்கு பணம் எங்களுக்கு தருவதை வைத்து 2,000 வரை பட்டுவடா செய்கிறோம் என்றனர். முன்பாக இருந்திருந்தால் எமது வல்லமையை சொல்லி பணம் பெற முயன்றிருப்பேன்.ஆனால் 27 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம், டாஸ்மாக்கில் வரும் பணச் சில்லறை எல்லாம் அரசியல் வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் மாலையில் பணமூட்டைகளாகி போக இந்த வங்கிப் பணியாளரும் உடந்தைதான்...எனவே இந்த நாட்டில் எங்குமே எதிலுமே பணக்காரனுக்கு ஒரு நீதி, ஏழைக்கொரு நீதி, வர்க்கம் இரண்டாகிறது நன்றாக எம் கண்களுக்குப்புலப்பட...எதுவும் பேசவில்லை வந்து சேர்ந்தேன்..

 எல்லாவற்றுக்கும் இனி சேவை வரி உண்டு அது அப்புறம் (இவனுங்க அப்பன் வீட்டுப் பணமல்லோ, எங்க உழைப்புடா உழைப்பு, நரிக்கு நாட்டமை,,, கேடுகெட்ட ஜனநாயகமும் ஓட்டு முறைகளும் இவர்களுக்கு வேலையில்லாதார்க்கு வேலை கிடைக்க வைக்க வக்கில்லை, செய்த வேலைக்கான பணத்தை இவர்கள் பிடித்து வைத்துக் கொண்டு அதை மாதம் கொஞ்சமாக தினம் கொஞ்சமாக வாரம் கொஞ்சமாக எடுத்துக் கொள்க என கட்டளை விதிப்பார்களாம்) ஏண்டா கட்டணத்தை எடுத்துக் கொண்டு வேலை செய்தால் அதுக்குப் பேர் சேவையாடா? சம்பளம் வாங்கிக் கொண்டு ஆள்கிறீரே அதற்கு பதவி ஒரு கேடா அதற்கு பேர் ஆட்சியாடா? மக்களின் வேலைக்காரர்தானே நீங்கள் எல்லாம். மக்களுக்கு  வேட்டு வைக்க பணக்கார முதலாளிகளிடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு ஆள்கிற ஆண்டவர்கள்... தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை எனில் சம்பளம் கொடுக்கும் முதலாளிகளுக்கு வேலைக்காரரை நீக்கி விட்டு வேறு வேலைக்காரரை நியமித்துக் கொள்ள அதிகாரம் உண்டுதானே?)


Related image

இவை எல்லாம் இப்படி இருக்க... சில புள்ளி விவரங்கள் எனக்கு கிடைத்தன அவற்றை தருகிறேன் அவற்றைப் படிக்கும் முன் மக்களே நிலை உணருங்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு: மக்கள் கொண்டு சென்று கோடிகளாய் கொட்டி சாலையில் உள்ள கடைகளை பாதுக்கச் சொன்னார்கள். பணத்தைப் பெற்ற கொஞ்சகாலம் வேலை நடைபெறவில்லை. அது தேர்தல் காலம். எல்லாம் முடிந்தது. இப்போது கடைகள் அத்து மீறல்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன..ஆனால் அதிலும் பாரபட்சம், கட்சிக்காரர், முதலாளிகள் என விதி மீறல்கள் எவருமே வீறு கொண்டு ஏன் என்று கேட்க இல்லாமல்...
Related image

ஒரு நாட்டில் ஒரு ராஜாவுக்கு மனைவி குழந்தைகள் இல்லை. ஊர் ஊரா சுற்றி வந்தார். ஆனால், அவர் மனதில் நிம்மதியே இல்லை!. அவர் வருத்தத்தோடு உள்ளதைப்பார்த்த மந்திரி, ' ராஜா ஏன் வருத்தமா இருக்கீங்க?' என்றான். அதற்கு ராஜா, நானும் எங்கெங்கோ போய் வர்றேன்; எனக்கு சந்தோசமே இல்லை; ஆனா, எங்கும் போகாமல் இங்கயே இருக்கிற மக்கள் எல்லாம் மனைவி, குழந்தை, குடும்பமுனு குதூகலமா இருக்காங்க. அதெல்லாம் பார்க்க பார்க்க மனசு பத்திகிட்டு எரியுது' என்றார். அதற்கு மந்திரி, 'அவர்கள் மகிழ்ச்சியை எல்லாம் பறித்து கண்ணீர்விட்டு கதற வைப்பது ரொம்ப சுலபம்' என்றார். ராஜா, 'அது எப்படி?' என்றார். 'அவுங்க கையில் பணம் இருப்பதுதான் அவர்கள் மகிழ்ச்சிக்கு காரணம். அந்த பணத்தை எல்லாம் செல்லாதுன்னு அறிவிச்சிட்டா பணம் பணமுன்னு அலைஞ்சே செத்துடுவாங்க!' என்றார் மந்திரி. 'பணத்தை ஏன் செல்லாதுன்னு அறிவிக்கிறீங்க என்று கேட்டா, என்ன சொல்றது' என்று ராஜா கேட்டார். வெளிநாட்டு சதி, உள்நாட்டு குழப்பன்னு ஏதாவது சொல்லி விடலாம்.' என்றார் மந்திரி. மகிழ்ச்சியான ராஜா மந்திரி ஆலோசனைபடி பணம் செல்லாது என்று அறிவித்தார். மக்கள் மகிழ்ச்சியை இழந்து நாயா பேயா அலைந்தனர். மக்கள் படும் கஷ்டத்தைப்பார்க்க பார்க்க ராஜாவுக்கு பயங்கர மகிழ்ச்சி ஏற்பட்டது. மனைவி, குழந்தை, குடும்பமுன்னு கும்மாளம் போட்டீங்கல்ல, எல்லாம் சாவுங்கடா!' என்று குலுங்கி குலுங்கி சிரித்து சிரித்து சிரித்து பைத்தியமானார். [11/21, 21:48] Another view on De Monetization* *Dr. K.C. Chakrabarty, Deputy Governor of the Reserve Bank of India from 2009 to 2014*, is not anti-Modi, anti-BJP person. He is explaining in simple, coherent language the social and economic impacts of Demonetization. Following are the excerpts: 1. The economic *benefit is less* and the *cost is more*. 2. I think (the Prime Minister) has not been properly briefed on the subject. 3. Currency *notes are not black money*, all currency notes are white money. 4. When it (the currency) reaches a *person who is not paying tax* it becomes black money. 5. When the currency reaches a *person who is paying tax it becomes white money.* 6. The process and the person are the culprit, but you are destroying the notes. 7. If the *process and people are not changed,* a person can use currency, gold, *other assets for black money generation.* 8. Government’s understanding is that [black] money is with the rich, whereas on the contrary more cash money is lying with the poor. 9. 90% of the poor’s *liquidity is in cash*, so (now) they have no cash. 10. All your trade and commerce is likely to be affected. 11. The total cost of replacing the notes will be Rs 10,000 or 15,000 crore. That is a *direct loss.* 12. Banks will be doing only this job for the next two months: exchanging the note, managing the cash, managing the crowds. People will be more busy with these things. All this will have an adverse effect on the economy. 13. There will be a *liquidity crunch,* volume of transactions will go down, sometimes it may totally collapse, depending on the situation. 14. *Inflation* will come down because *people have no money.* If you withdraw the money from the people all *prices will collapse*, but people will not be able to eat vegetables also. Prices are collapsing because medium of exchange is not there. 15. If the economic growth comes down, the government’s tax collection also comes down…. If a person goes with black money and spends it in the malls, restaurants or cinema hall then government gets a part of the tax. 16. Demonetisation is a very *blunt instrument* and it has to be used very judiciously and in a very very critical situation. Generally, in a normal situation it doesn’t give any results. [11/22, 11:03] ராமன்: அரசு கருப்பு பணத்தை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது நன்றே! ஆனால், சமூக நிலைகளை நன்குணர்ந்துச் சற்று நெகிழ்வான முறையில் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்! நமது சமூக அமைப்பு பணம் வாழ்க்கைக்கு அவசியம்; பணம் உள்ளவனே வெற்றியாளன்! ஆதலால், அதை எப்படியாவது தேடு என்றுதான் இவ்வளவு நாள் நமது சமூகம் சொல்லிக்கொடுத்து வந்தது! எல்லாவிலும் பணந்தான் தேவைப்பட்டது! எல்லாவையும் பணந்தான் தீர்மானித்தது! தேர்தலில் நின்று ஜெயிக்க பணம் தேவை என்பதிலிருந்து படிக்க, வேலை தேட, வீடுகட்ட, திருமணம் செய்ய என்ற எல்லாவிற்கும் பணம்தான் தேவையாக இருந்தது. பணம் வைத்து உள்ளவர்களை எல்லாம் திருடனைப்போல் நடத்தும் பா.ஜ.கட்சியனர் யாரும் தேர்தலில் பணம் செலவு செய்யவில்லையா? அவர்கள் செலவு செய்த பணமெல்லாம் கருப்பு பணமல்ல என்று உறுதியாக சொல்லமுடியுமா? ப.ஜ.கட்சியினர் தேர்தலுக்கு செலவு செய்ய பெரு முதலாளிகள் கொடுத்த பணமெல்லாம் கணக்கு காட்டப்பட்ட பணந்தானா? அவர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற உத்தமர்கள்தானா என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும்! இப்படியான சமூக சூழலில் எல்லோரும் பணத்தை தேடித்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள்! பணக்காரனைத்தான் உயர்ந்த மனிதனாக சமூகம் மதித்தது! ஆதலால், வாய்ப்புள்ளவர்கள் வாய்ப்புள்ள வழியிலெல்லாம் பணம் சம்பாதித்தார்கள்! இதனை சரியென்பதோ, தவறு என்பதோ இப்போது பயனற்றது! நடுதரவர்க்கத்தினர், மேல்தட்டு வர்க்கத்தினர் அப்படி இப்படி என்று கூடக்குறைய பணம் சம்பாதித்துதான் இருப்பார்கள்! அதில் பெரும்பகுதி கருப்புபணமாகத்தான் இருக்க
BJP MP BABUL SUPRIYO attacked by angry public Tod…: http://youtu.be/BwNHj9JDRC4
[11/26, 19:38] JKK: BJP MP Harsh Wardhan got Beaten up in Delhi by an…: http://youtu.be/3iE5gX83IxU
[11/27, 20:43] JKK: சேலம்: சேலம் அருகே பாஜக பிரமுகர் காரில் கொண்டு சென்ற 20.55 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
[11/29, 06:50] JKK: வழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கி விட்டு கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன்.இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர்,
" சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட் ஸ்வைப் பண்ண முடியல கேஷ் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க "

" ரெண்டாயிரம் நோட்டா இருக்கே அதையாவது வாங்கிக்குவீங்களா ? "

" சில்லற இருக்காது சார். 1500 ரூவாக்கு மேல பில் போடுற மாதிரி பர்ச்சேஸ் பண்ணா சேஞ்ச்க்கு ட்ரை பண்றேன். இல்லனா பொருட்கள அங்க வச்சிட்டு போங்க. ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க , சர்வர் ப்ராபளம் சால்வ் ஆச்சுன்னா வாங்கிட்டு போங்க "

எனக்கு பின்னால் நின்ற பெரியவர்,
" சார் என்கிட்ட பழைய 500 ரூவா நோட்டு இருக்கு அதையாவது வாங்கிக்குவீங்களா "

" இல்ல சார் அதெல்லாம் வாங்கமாட்டம்னு என்ட்ரன்ஸ்லேயே போர்டு வச்சிருக்கோமே பாக்கலியா "

மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ரிலையன்ஸ் திறந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.
இதில் சர்வரும் சரியாகி இருக்க வேண்டும். நாளை காலைத் தேவைக்கான சில அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் வேறு. வேறு ஏதேனும் கடையில் முயற்சிக்கலாம் என்றாலும், பத்து நாட்களாக கிடைக்காத சில்லறை இப்போது மட்டும் கிடைத்து விடவா போகிறது.

வீட்டுக்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு வழக்கமாக நான் அதிகம் செல்வதில்லை.
இருந்த போதிலும் ஒரு முறை அங்கும் முயற்சிக்கலாமே என்ற முடிவு செய்து அண்ணாச்சி கடைக்குச் சென்றேன்.

இரண்டாயிரம் விசயத்தை முதலில் சொன்னால் அண்ணாச்சி சில்லறை இல்லை என்று சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்தில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.

"ரெண்டாயிரத்துக்கெல்லாம் சில்றை இல்ல சார்.
வேண்ணா பழைய 500 ரூவா நோட்டுக்கூட குடுங்க வாங்கிக்கிறேன். "

" சரி பராவாயில்ல அண்ணாச்சி. எங்கிட்ட வேற பணம் இல்ல.
இந்தாங்க இந்த பொருள எடுத்துக்கங்க "

" ஏன் சார் அப்டி சொல்லுதிய ?
நீங்க மொதத்தெருல நாலாவது ப்ளாட்லதான இருக்கிய.வெள்ளம் வந்தப்பெல்லாம் எல்லாருக்கும் அங்க இங்கன்னு ஓடி ஒடி வேல செய்தியளே. இந்தாங்க பிடிங்க எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போங்க.அப்புறமா பணத்த குடுங்க.நீங்க என்ன எம் பணத்த குடுக்காம ஊரவிட்டா ஓடிப்போகப்போறிய. அவசர செலவுக்கு எதும் ரூவா வச்சிருக்கியளா ? நூறு எரநூறு வேணும்னா நா தரவா ? வாங்கிக்கங்க அப்புறமா குடுங்க சார் "

தயக்கத்துடனும் புன்னகையுடனும் அண்ணாச்சியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தவுடன் மொபைலுக்கு மெஸ்ஸேஜ் ஒன்று வரவே எடுத்துப்பார்த்தேன்
Thank you for using Debit Card ending xxxx for Rs.475.00 in CHENNAI at Reliance Fresh ...!

வாங்காத பொருளுக்கு என் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த Relaiance எங்கே !

வாங்கிய பொருளுக்கே பணம் வாங்காமல் கடன் கொடுத்த நம்மூர் அண்ணாச்சி எங்கே !..

*Relaiance கடைகளிலும், ஆன்லைனிலும் வெறும் வணிகமும், இலாப நோக்கமும் மட்டும்தான் இருக்கும்.!*

ஆனால் நம் மக்களின் கடைகளில் மட்டும்தான் வணிகம், இலாபம் தாண்டி, வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் இடையே ஒரு அன்பு கலந்த உயிரோட்டமான உணர்வுபூர்வமான உறவு இருக்கும் !
[11/29, 06:51] அருமை! கொஞ்ச காலத்திற்குபிறகு இதெல்லாம் அருங்காட்சியக பொருளாகிவிடும்! இனி உறவும் உணர்வும் போய்விடும்! நுகர்வும், வார்த்தை பகிர்வும்மட்டும் இருக்கும்!
[12/3, 21:43] குருடனை நம்பி ஒரு கூட்டம்....
1. முகேஷ் அம்பாணி தன் தொலை தொடர்பு நெட்ஒர்க் ஐ விரிவு படுத்தும் விதமாக கடந்த 2 வருடமாக அணைத்து இடங்களிலும் optic fibire கேபிள்கள் பதிக்கப்பட்டது....
2. ஜூலை5. டிஜிட்டல் இந்தியா என்று கொண்டாட்டம்...
3. செப்.4 jio சிம் விற்பனை துவக்கம்... அதற்க்கு விளம்பர Ambassador ஆக, அதன் விளம்பரங்கள் அனைத்திலும் மோடியின் படம்.
4. செப்.6 relaince ல் பணிபுரிந்த ஊர்ஜித் பட்டேல் RBI GOVERNER ஆக அறிவிப்பு...
5. NOV8. RS.500,1000ம் முடக்கம்
6. NOV15. கூட்டுறவு சங்கங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யமாட்டோம் என்று சொன்ன RBI, ரிலையன்ஸ் குழுமத்தின் BIGBAZZAR ல் DEBIT/CREDIT கார்டு ஸ்விப் செய்து RS.2000 பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு.
7.NOV்.25: கள்ளப்பணம் கருப்புபணத்துக்
கு என்று கூறப்பட்டது... அப்படியே டிஜிட்டல் கேஷ் என்று விளம்பரம்...
8.DEC1.. முகேஷ் அம்பாணி JIO சிம் இலவசங்களை 2017 மார்ச் 31 வரை நீட்டிப்பு.. மற்றும் JIO MONEY MERCHANT APP. என்கிற புதிய APP அறிமுகம்...( இதன் மூலம் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் மொபைல் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம்...) இவற்றை அறிவித்து விட்டு முகேஷ் அம்பானி மோடியின் 500, 1000 ஓழிப்புக்கு புகழாரம் சூட்டி, JIO சிம்மின் அடுத்த கட்ட பரிமாணத்தை எடுத்து சென்றது..
இப்பொழுது கொஞ்சம் யோசித்து ஒப்பிட்டு பாருங்கள் மோடியின் செயலையும், அதற்க்கு ஏற்றார் போல் பின் வரும் முகேஷ் அம்பானியின் செயலையும்....
இப்பொழுதும் உங்களுக்கு இந்த பணப்புழக்க தட்டுப்பாடு யாருக்காக உருவாக்கப்பட்டது என்பது புரியவில்லை என்றால் ........... ?
கடந்த 3 மாதத்திற்கு முன் நடந்த ஸ்பெக்ட்ரம்(2G,3G4G) ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட பணம் 14.5 லட்சம் கோடிகள்..... அதில் 4G க்கு மட்டும் எதிர் பார்க்கப்பட்டது 11 லட்சம் கோடிகள்... ஆனால் கிடைக்க பெற்றது வெறும். 65,870 கோடிகள் மட்டுமே, இதற்க்கு சொன்ன காரணம் யாரும் ஏலத்தில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பது... அதே 20

BJP MP BABUL SUPRIYO attacked by angry public Today 25th NOV
BJP MP from Asansol frozen punished the people of Babul Supriyo peers. The country is really changing Please Do subscribe for more.. About Eluts India ______...
youtube.com

No comments:

Post a Comment