Friday, January 28, 2022

தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி: கவிஞர் தணிகை

 ஒரு நல்ல செய்தி: கவிஞர் தணிகை



வணக்கம்


நீண்ட நாட்களாக என்னால் வலை தளத்தில் புகுந்து எதுவுமே செய்ய நேரமில்லை.காரணம் பல.எனது வலைப்பூவுக்கே சுமார் 2 மாதம் முடியும் தருவாயில் வந்து சேர்ந்திருக்கிறேன்.


வந்ததன் காரணம்:

நிலம் வாங்கி வீடு கட்டி அனுமதி பெற வேண்டிய நிர்பந்தத்தை வைத்துக் கொண்டு அதைப் பெற்றுத் தருகிறோம் என‌ நிறைய அரசியல் முன்னணியினர் ஏமாந்த மக்களிடம் இலட்சக் கணக்கில் களவாடிய வரலாற்றை மாற்றி அமைக்க தமிழக அரசு ஒரு புதிய  நிலைப்பாட்டை எடுத்த செய்தி படித்தேன்.


அதையே உங்களுக்கும் பகிர்கிறேன்...

இனி 1. இன்ஸ்டன்ட் (உடனுக்கு உடன்) 24 மணி நேரத்தில் போதிய ஆதாரங்களை சமர்பித்தால் 1000 சதுர அடிக்குள் இருந்தால் 14 நாட்கள் ஆய்ந்த பின் கொடுக்கப் படும் என்றும்

2. ஆட்டோ ... தானாக இயங்குதல் இந்த திட்டம் ஆயிரம்  சதுர அடிக்கும் மேல் 32 ஆயிரம் அடி வரை 30 நாளுக்குள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு கொடுக்கப் படும் அனுமதி என்றும்


3. மற்றொன்று 3. ரெகுலர்: இப்போது இருப்பது போல  தொடரும் என்றும் இவை யாவும் ஆன்லைன் விண்ணப்ப முறைகளில் நிர்ணயிக்க பணி நடைபெறுகிறது என்றும் அதே போல இன்னும் சிறிது காலத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் இருக்கின்றன.


மேலும் மின்சார இணைப்புக்கும் கூட தமிழில் என்ன என்ன ஆவணங்கள்  தேவைப்படுகிறது எப்படி இணைப்பை பெறுவது என்ற விளக்கங்களுடன் தமிழ் ஆன்லைன் வசதிகள் பயன்படுத்தப் படுவதாகவும் செய்திகள் இருக்கின்றன.


மேலும் வ.வு.சியை தெரியாது என்று ஒன்றிய அரசின் குடியரசு தின விழா ஊர்வலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்காத அலங்கார தமிழகத்தின் வாகனங்கள் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் பாதுகாப்புடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன இன்று அது எங்கள் கல்லூரி வழியாக கோவை சென்றடைந்திருக்கிறது. 


அனைவரும் பயன்பெறுக...

அனைவரும் பயன்பெறுக...


நன்றி

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.