Saturday, December 3, 2016

மாவீரன் கிட்டு சுசீந்தரன் தமிழ் சினிமா: விமர்சனம்: கவிஞர் தணிகை

மாவீரன் கிட்டு சுசீந்தரன் தமிழ் சினிமா: விமர்சனம்: கவிஞர் தணிகை

Image result for maaveeran kittu

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளில் தலைவராக இருந்த ஒருவரின் பேரை வைத்து இருக்கும் இந்தப் படம் நேற்று டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதைப் பற்றி சில நெருடல்கள் இருந்த போதும் பார்க்கலாம்.

சாதியப் பிரச்சனையை மையமாக வைத்து அதற்காக போராடும் பிரச்சாரப் படமாக வெளி வந்துள்ளது. இந்த சாதியப் பிரச்சனை சமுதாயப் பிரச்சனையாக இன்னும் இருக்கிறது ஆனால் எல்லா இடங்களிலும் இல்லை எனவே சிலருக்குத் தொடர்புடையதாக இல்லை எனினும் பலருக்கு இந்தப் படம் தொடர்புடையதாகவே இருக்கும் என்பதால் அதை வரவேற்கலாம் இப்போதும்...

சினிமாத்தனமாக ஆரம்பத்தில் சிமென்ட் பூசப்படாத பள்ளி கல்லூரி காதல் என்று ஆரம்பித்து ஆரம்பத்திலிருந்தே சாதிய வன்முறை எப்படி அழுத்தமாக விழுகிறது எனச் சொல்ல ஆரம்பிக்கிறது.

பாம்புகடித்த இடத்தை யாராவது கடித்து உறிஞ்சி வழக்கப்படி துப்புவார்களா என்று தமிழ்ப் பட எதிர்ப்பார்ப்புக்கு மாறாக தூக்கிக் கொண்டு தொடர் ஓட்டமாக ஓடுகிறார்கள் அன்று எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்து மறைந்த தினம் எனவே கல்லூரி விடுமுறை ஆதலால் பேருந்துகள் இல்லை என்றும் அது பழனி முருகன் கலைக்கல்லூரி என பழனி அருகே உள்ள கிராமத்திடை சொல்லப்பட்டிருப்பதான கதை. கடைசியில் கிட்டு அதாங்க நம்ம கதாநாயகன் விஷ்ணு விஷால் (கிருஷ்ணமூர்த்தி என்று பேர் சுருக்கம்) அந்த பாம்பு கொத்திய கல்லூரி மாணவியை தொட்டு தூக்கி காப்பாற்ற முனைந்ததற்காக தீண்டத் தகாதவன் எப்படி எங்கள் பெண்ணை எங்கள் சாதிப் பெண்ணைத் தொட்டுத் தூக்கலாம் என மிரட்டல்...இவர் தெரியாமல் பண்ணிட்டேன் மன்னிச்சிக்குங்க என விலகி பிரச்ச்னையை மேற்கொண்டு வெட்டு குத்து எனப் போக விடாமல் தாங்கிக் கொள்கிறார்.

Image result for maaveeran kittu

ஆனால் இந்தப் படம் முழுதுமே ஆர். பார்த்திபன் தோளில் தாங்கியே சொல்லப்பட்டிருக்கிறது.விஷ்ணு கடைசியில் தம் இன முன்னேற்றத்திற்காக தமது உயிரைக் கொடுத்து தியாகம் செய்து மாவீரன் ஆகி விடுகிறார் எனச் சுசீந்தரன் கதையை முடிவுக்கு கொண்டு வருகிறார்.

ஸ்ரீதிவ்யா அவருக்கு அளிக்கப் பட்ட பங்கை சரியாகவே செய்திருக்கிறார். ஆனால் இந்தப் படத்தின் மூலம் சுசீந்தரன் என்ன சொல்ல வருகிறார்,என்பதுதான் கேள்வி. இது போன்று தியாகம் தான் தாழ்த்தப்பட்ட இனத்தை மேலுக்கு கொண்டு வர முடியும் என்கிறாரா?அல்லது மேல்தட்டு மக்கள் செய்யும் சூழ்ச்சிக்கு எதிராக தாழ்த்தப் பட்ட இனமும் சூழ்ச்சி பொய் என்று எதிர் விளையாட்டு விளையாடி வெல்லலாம் என்கிறாரா? இவை தெளிவுபடுத்தப் படவில்லை.

இது சினிமா என்று சாதாரணமாக விட்டு விட்டால் இதை எல்லாம் பதிவு செய்ய அவசியமில்லை. ஆனால் சர்ச்சையும் விவாதமும்  செய்ய வேண்டிய படமாய் இருக்கிறது.

 ஆரம்பத்தில் செயற்கையாய் காட்சிகள் ரெடிமேடாய்  ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தாலும் போகப் போக இன்வால்வ் ஆக டெப்த் ஆக செல்கிறது. ஆனால் அந்ந கிட்டு பாத்திரம் சாகடிக்கப்பட்டிருக்காமலே இன்னும் சில நாட்கள் கழித்து திட்டமிட்டபடி வெற்றி அடைந்தவுடன் வெளித் தோன்றி இருக்கலாம். அல்லது காலம் கழிந்த பின்னே வெற்றி நாயகனாய் தோன்றி இருக்கலாம். எப்படியும் கலெக்டர் ஆவது தடையாக முடியாத கனவாகவே போய்விட்டது சின்ராசுக்கு.
Image result for maaveeran kittu


மொத்தத்தில் சாதிய வேறுபாடுகள் உள்ள வரையில் இது போன்ற படங்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கும் அதை நாமும் பார்த்து கொண்டுதான் இருக்க வேண்டும். சாதிய பிரச்சனை தனி மனித மேம்பாட்டுடன் சமுதாயப் பிரச்சனியாகவும் பின்னிக் கிடப்பதால்.

இளமியே பரவாயில்லை இறந்தும் வாழ்கிறார்கள், இருந்தவர் கதையை நாயகர் நாயகி பாவத்துடன் கை கால்கள் இழந்தும் இறப்பில் கலந்து ஒன்றாக இருந்து காதலுக்கு காதலருக்கு நன்மை செய்கிறார்கள் கடவுளாக இருந்து மதுரை வீரன் சாமி போல...ஜல்லிக் கட்டு நம்பிக்கைத் துரோகம் என..எங்கும் சூழ்ச்சி நம்பிக்கைத் துரோகம் என சினிமா நம்மை எல்லாம் நமது எண்ணத்தை எல்லாம் புகுந்து கெடுத்து விடும் போல நிறைய சினிமக்கள்



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு: ஆனால் இது போன்ற சினிமாக்கள் சாதிய உணர்வைத் தூண்ட பயன்படுகின்றதா சாதிய உணர்வை மக்களிடையே இருந்து அகற்ற பயன்படுமா என்ற இருப்பக்க கேள்விகள் எழாமல் இல்லை.





2 comments:

  1. ஆனால் இது போன்ற சினிமாக்கள் சாதிய உணர்வைத் தூண்ட பயன்படுகின்றதா சாதிய உணர்வை மக்களிடையே இருந்து அகற்ற பயன்படுமா என்ற இருப்பக்க கேள்விகள் எழாமல் இல்லை.
    உண்மைதான் இதுபோன்ற திரைப்படங்கள் பல நேரங்களில் சாதிய உணர்வுகளைத் தூண்டிவிடும் அபாயமும் உள்ளது
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. thanks sir for your feedback on this post. vanakkam.

    ReplyDelete