ஞானம்;மெய்ஞ்ஞானம்,விஞ்ஞானம்,அஞ்ஞானம்: கவிஞர் தணிகை
ஞானம்: பேரறிவு, பேராற்றலை இதை விஸ்டம் என்ற ஆங்கில சொல் குறிக்கிறது
பொதுவாக எல்லாத் துறைகளிலுமே கரை காணமுடியா அறிவும் அதை மேலும் மேலும் பெருக்கிக்
கொள்வாரையும் ஞானி எனச் சொல்லலாம்.
ஆனால் அப்படி எல்லாத் துறைகளிலுமே பேரறிவு படைத்த மனிதர் உண்டா?
மெய்ஞ்ஞானம்: மெய் என்றால் 1. உடல் 2. உண்மை என்ற பொருள் உண்டு தமிழில்
உடலைக் கடந்து பார்க்கும் அறிவாற்றலை கட உள் மெய்ஞ்ஞானிகள் பெறுகின்றார்
உடல், உயிர்கள், உலகு, பிரபஞ்சம், பற்றி எல்லாம் மெய்ஞ்ஞானிகள் அறிந்துள்ளனர்.
விஞ்ஞானம்: விஞ்ஞானிகள் உலகுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் பயன்படும் வண்ணம் தமது
கண்டுபிடிப்புகளை அர்ப்பணிக்கின்றனர்.அவர்கள் சொல் செயல் எண்ணமெல்லாம் அந்த ஒரு
பொருள் பற்றியே சிந்தித்து கருமமே கண்ணாகி உடல் பொருள் ஆவி யாவற்றையும் அதற்காக
செலவு செய்து மானிடத்துக்கு சேவயாற்றுகின்றனர்.
கேட்டுக் கொண்டே இருப்பதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை, பதில் ஏற்கெனவே இருக்கிறது
அதற்கான சரியான கேள்வி கேட்கப்படும்போதே அதற்குண்டான பதில் கிடைக்கும் என்கிறார்கள்
அறிவியல் ஞானிகள்.
கூகுள் தேடலில் கூட எவராவது பதிவு செய்து வைத்திருந்தாலும் நாம் கேட்கும் சரியான கேள்வி
இருந்தால் மட்டுமே அதற்குரிய பதில் கிடைப்பதை நாம் கவனிக்கலாம்.
அஞ்ஞானம்: பொதுவாகவே சரியான தேவையான அறிவைப் பெறுமுன்பே அதைப்பற்றி தாம் எல்லாம்
தெரிந்ததாக எண்ணிக் கொண்டு அதைப் பற்றி பிதற்றுவது உளறுவது...அனேகமாக இந்த
பிரிவில் தாம் நாம் பெரும்பாலும் இருக்கிறோம் என எண்ணுகிறோம்...
ஏன் எனில்: இராமலிங்க வள்ளலார் போன்றவர்கள் கூட நாயினும் கடையேன், ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருள்வாய் அருட்பெருஞ்சோதி என்று சொல்லியதைக் கவனிக்கும் போது அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment