Wednesday, October 12, 2022

விண்ணில் மட்டுமல்ல மண்ணிலும் சொல்லொணா விந்தைகள்: கவிஞர் தணிகை

 விண்ணில் மட்டுமல்ல மண்ணிலும் சொல்லொணா விந்தைகள்: கவிஞர் தணிகை



உங்கள் நேரம் மிக முக்கியம். சுருக்கமாக... பபுள் நெபுலா...பபுள்: வாயுக் குமிழ்

நாற்பது இலட்சம் ஆண்டுகள் பழையதான 7,100 ஒளியாண்டு தொலைவில் ஒரு நெபுலா வாயுக் கோளத்தை நாசா விண்வெளியகம் தமது ஹப்புள் தொலை நோக்கி வழியாக கண்டறிந்துள்ளது அரிய செய்தி என்றால் அது நமது சூரிய விண்மீனை விட 45 மடங்கு பெரியது என்றும் சுமார் ஒன்றிலிருந்து இரண்டு கோடி ஆண்டுகளில் அது சூப்பர் நோவாவாக மாறி விடும் என்பது விண்ணியல் அறிவியலில் ஒரு விந்தை. இது நேற்றைய செய்தி.


தவளையின் சத்தத்திற்கும் மழை வருவதற்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? நான் தொடர்ந்து வருகிறேன் சுமார் குறைந்தது 8 மணி நேரத்திலிருந்து 24 மணிக்குள் மழை வந்தே விடுகிறது. இப்போது வானிலை ஆய்வு மையங்களும் சரியாகவே கணித்து சொல்கின்றன அது வேறு.


நுணலுந்தன் வாயால் கெடும்...பழமொழி, குறள் கூட இருப்பதாக நினைவு. ஆனால் பாம்புக்கு காது கேட்காது என்கிற அறிவியல் தவளையின் சத்தம் இனைவிழைச்சிக்காகவே தமது கலவிக்காக பெண் தவளைகளை மழைக்காலத்தில் கார்காலத்தில் அழைப்பதே இந்த சத்தம் என்கிறது... அதற்கும் மழைக்கும் தொடர்பில்லை என்கிறது


பல்லிகள் கூட இனவிழைச்சிக்கே கத்துவதாக செய்தி...ஆனால் இவை மனித வாழ்வில் சிலவற்றை முன் கூட்டியே கட்டியங் கூறுகின்றன என்பதை மறுக்க முடியவில்லை...



தோகை விரித்தாடும் மயில் கூட அப்படித்தான்...இணையை அழைக்கத்தான்...மேகம் கண்டல்ல...


நிறைய அறிவியலில் புலப்படா அல்லது இன்னும் அறிவியலில் அறியப் படா இயற்கை உயிரி நிகழ்வுகள் பூமியில்  நிறைய  உண்டு...மறுபடியும் தலைப்பைச் சொல்லி முடிக்க வேண்டியதாகிறது....விண்ணில் மட்டுமல்ல மண்ணிலும் எண்ணிலடங்கா விந்தைகள்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment