Saturday, December 2, 2017

அண்ணாதுரை: சினிமா : கவிஞர் தணிகை

அண்ணாதுரை: சினிமா : கவிஞர் தணிகை


Image result for annadurai movie 2017

விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் எடிட்டிங்,இசை, தயாரிப்பு ஆகியவற்றில் பங்கு கொண்டு இரட்டை வேடங்களில் அண்ணாதுரை, தம்பிதுரையாக நடித்துள்ளார். என்றாலும் இது சலீம், பிச்சைக்காரன் அளவுக்கு சிறப்பாக இல்லை.யமன் , சைத்தான் அளவுக்கு அவ்வளவு கீழ் இறங்கியதாகவும் சொல்ல முடியாது.

அண்ணாதுரை, தம்பிதுரை, யின் அப்பாதுரையாக நீண்ட நாட்களுக்குப் பின் நளினிகாந்த் என்னும் நடிகருக்கு கண்ணியமான பாத்திரம் ஆனால் அமைதியான நடிக்க ஏதும் துணை செய்யாத வந்து போகும் பாத்திரம். படத்தில் வேறு எவருக்குமே வாய்ப்பு பெரிதாக இல்லாமல் விஜய் ஆண்டனி மட்டுமே பெரிதாக தெரிய வேண்டும் என்ற கதை அமைப்பு. ஏற்கெனவே சொன்ன மாதிரி இரட்டை வேடங்கள் வேறு.

மதுக் குடியின் தீமையைப் பற்றி மிகவும் அழுத்தமாக ஏதோ பதிவு செய்கிறார்கள் என்று பார்ப்பவர் சிந்திக்க ஆரம்பிக்கும்போது கதை அதை விட்டு வேறு தளத்துக்குள் சென்று விடுகிறது. அது கடைச்யில் தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்ந்து முடிவது என்று...

இதன் முன்னோட்டங்களில் எல்லாம் சொல்லியபடி இதுவரை வந்த தமிழ்ப் படங்களில் 50 படத்துக்குள் இதற்கும் இடம் என்றெல்லாம் எதிர்பார்ப்பு வார்த்தைகள் வீசப்பட்டு ஏமாற்றமாய் முடிந்திருக்கிறது.

மற்றபடி கதை திரைக்கதை வசனம் இயக்கமென சீனிவாசன் என்பவர் செய்திருக்கிறார். நிறைய மாற்றங்களை விஜய் ஆண்டனிக்காக கதையிலிருந்து மாற்றி செய்திருப்பதாக ஊகிக்கலாம்.

இயல்பான ஒளிப்பதிவை தில்ராஜ் என்னும் செந்தில் ராஜ் செய்திருக்கிறார். பெண்கள் காலை ஆறுமணி முதல் மாலை 6 மணி வரைதான் தனியே போகவேண்டும் இல்லையேல் உற்றாரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என ஒரு பெண்ணிடம் பேசி அவரை வன்முறையிலிருந்து காப்பாற்றுகிறார் அந்தப் பெண்ணோ பெண் காவலராகி இவரைக் காதலித்தவராய் இவரைக் கடைசியில் காப்பாற்றவும் எண்ணுகிறார் போலீஸ் என்கவுன்டரிலிருந்தும்...
மற்றொரு பியூட்டி பார்லர் வைத்திருக்கும் பெண்ணும் இந்த அண்ணாதுரையை நேசிக்கிறார், எஸ்தர் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டு பாரில் குடித்துக் கொண்டு இறந்து போன காதலிக்காக கல்லறையில் குடித்து விட்டு படுத்துக் கிடந்து கொண்டு, அதைக் கூட்டி சுத்தப்படுத்திக் கொண்டு, அதே நேரம் ஜவுளிக்கடை வைத்து சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் பிழைப்பதாக இருக்கும் அண்ணாதுரை மதுவை இன்னும் வேண்டும் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு மதுக்கடையில் மற்றொரு நபரை பிடித்துத் தள்ளி விட அவர் உடைந்த பாட்டில் மேல் விழுந்து சாவதாகவும் அதிலிருந்து இவரது தம்பியாக வரும் தம்பிதுரையின் வாழ்வும் பெற்றோர் வாழ்வும் மாறிப்போவதாகவும், நண்பர்க்காக பெற்ற கடனை அடைத்த பின்பும் வெறும் வெள்ளைத்தாளில் கை எழுத்து இட்டதை பெறாமல் வந்ததும், தம்பிக்கு பெண் பார்த்திருக்கும் வீட்டில் தம்பியைப் போலவே உடையும், சிகை அலங்காரமும், தாடியை குறைத்துக் கொண்டு சென்று பணத்தை பெற்று வருவதாகவும்

இப்படி எல்லாமே அதிக வலுவில்லாமல், பார்ப்பவரிடம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இட்டுக் கட்டிய கதையாகவே சினிமாவுக்காக எழுதிய கதையாகவே எந்தப் பக்கமும் நன்றாக இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியமல் எடுக்கப்பட்ட படம்.

இதை நன்றாக இருக்கிறது என்றோ நன்றாக இல்லை என்றோ சொல்ல முடியாதிருக்கும் படம்.

சுமார் ரகம். பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பெரிதான பாதிப்பை ஏதும் ஏற்படுத்திவிடாது.

40 மதிப்பெண் நூற்றுக்கு கொடுப்பதே பெரிது. ராதிகா சரத்குமார் தயாரிப்பில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.

அறிஞர் சி.என் அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுத்திருந்தாலும் அது இன்றைய சூழ்நிலைக்கு  மிகவும் நன்றாக பேரும் பெற்றிருக்கும் படம் நன்றாக ஓடி வசூலை அள்ளிக் குவித்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: