நானும் இன்குலாப்பை நினைத்துப் பார்க்கிறேன்: கவிஞர் தணிகை.

டிசம்பர் 1ல் கவிஞர் இன்குலாப் என்கிற சாகுல் ஹமீது மறைந்த முதன் நினைவு தினம் என்று நிறைய பதிவுகள் பாரதிக்கும் பின் ஒரு உண்மைக் கவி என....நானும் அவரும் சேலம் மக்கள் கலை பண்பாட்டுக் கழகத்திற்காக 90களில் ஒரு கவியரங்கம் செய்தோம். அவர் அதில் தலைமைக் கவிஞர்.
நான் நீதி என்னும் தலைப்பில் கவிதை செய்தேன். அது அளவிற்கு அதிகமாகவே இருந்ததாக சபை நினைக்குமளவு அமைந்திருந்தது. அதற்கு அவர் எப்போதும் நீதி அப்படித்தான் தம் தீர்ப்பை எழுதும் என்று சொல்லி என் பக்கம் சார்பாக பேசினார்.
மேலும் கவிஞர் என்றால் எப்போதும் கவிதை எழுதிக் கொண்டிருப்பவர் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது மக்களிடம் படித்தவர்களிடம் கூட அப்படி அல்ல....கவிஞராய் வாழ்வதுதான் வாழ்க்கை. கவிதையை எப்போதும் எழுதிக் கொண்டிருப்பது என்பதெல்லாம் கவிஞர்களின் அடையாளம் அல்ல என்று அந்தக் கூட்டத்தில் பேசியது இன்று வரை என் நினைவிலிருந்து அகலாமல் இருக்கிறது.
சூரியனைச் சுமப்பவர்கள் என்ற நூலை அவரின் நினைவாக அவர் எனக்களித்தது இன்று வரை என் நூலகத்தில் வீற்றிருக்கிறது. அதென்னவோ இந்தியாவில் மிக நல்ல நபர்களுக்கு எல்லாமே அங்கீகாரம் ஒன்று சரியாக கிடைப்பதில்லை, அல்லது அவர்கள் இறந்த பின் தாம் கிடைக்கிறது.
அவர் தம் மகன்களையே சரியாகப் படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டார் என்பதெல்லாம் செய்திகளாகின்றன இப்போது. அறிஞர்களை, நாட்டின் உண்மையான விதைகள் எப்போதுமே தியாகத் தொட்டிலில் ஏழ்மையின் கட்டிலிலேயே இருந்து மடிந்து விடுகின்றன...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
டிசம்பர் 1ல் கவிஞர் இன்குலாப் என்கிற சாகுல் ஹமீது மறைந்த முதன் நினைவு தினம் என்று நிறைய பதிவுகள் பாரதிக்கும் பின் ஒரு உண்மைக் கவி என....நானும் அவரும் சேலம் மக்கள் கலை பண்பாட்டுக் கழகத்திற்காக 90களில் ஒரு கவியரங்கம் செய்தோம். அவர் அதில் தலைமைக் கவிஞர்.
நான் நீதி என்னும் தலைப்பில் கவிதை செய்தேன். அது அளவிற்கு அதிகமாகவே இருந்ததாக சபை நினைக்குமளவு அமைந்திருந்தது. அதற்கு அவர் எப்போதும் நீதி அப்படித்தான் தம் தீர்ப்பை எழுதும் என்று சொல்லி என் பக்கம் சார்பாக பேசினார்.
மேலும் கவிஞர் என்றால் எப்போதும் கவிதை எழுதிக் கொண்டிருப்பவர் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது மக்களிடம் படித்தவர்களிடம் கூட அப்படி அல்ல....கவிஞராய் வாழ்வதுதான் வாழ்க்கை. கவிதையை எப்போதும் எழுதிக் கொண்டிருப்பது என்பதெல்லாம் கவிஞர்களின் அடையாளம் அல்ல என்று அந்தக் கூட்டத்தில் பேசியது இன்று வரை என் நினைவிலிருந்து அகலாமல் இருக்கிறது.
சூரியனைச் சுமப்பவர்கள் என்ற நூலை அவரின் நினைவாக அவர் எனக்களித்தது இன்று வரை என் நூலகத்தில் வீற்றிருக்கிறது. அதென்னவோ இந்தியாவில் மிக நல்ல நபர்களுக்கு எல்லாமே அங்கீகாரம் ஒன்று சரியாக கிடைப்பதில்லை, அல்லது அவர்கள் இறந்த பின் தாம் கிடைக்கிறது.
அவர் தம் மகன்களையே சரியாகப் படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டார் என்பதெல்லாம் செய்திகளாகின்றன இப்போது. அறிஞர்களை, நாட்டின் உண்மையான விதைகள் எப்போதுமே தியாகத் தொட்டிலில் ஏழ்மையின் கட்டிலிலேயே இருந்து மடிந்து விடுகின்றன...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
This comment has been removed by the author.
ReplyDeleteநானும் இன்குலாப்பை நினைத்துப் பார்க்கிறேன்: கவிஞர் தணிகை. - அஞ்சலி - நன்றி திரு Tanigai Ezhilan Maniam
ReplyDelete