Tuesday, July 12, 2016

விகடன் விதி விலக்கல்ல: கவிஞர் தணிகை.

விகடன் விதி விலக்கல்ல: கவிஞர் தணிகை.




முரண்பாடான பத்திரிகை தகவல்கள் படிப்பார்க்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். விகடன் நல்ல பத்திரிகைதான் ஆனால் அவசரடியான அறிக்கை தரும் முயற்சியில் அதுவும் தமது தகுதியை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பதற்கு பின் வரும் இந்த கோர்ட்டில் தந்தை மணி மாறனை அவரது மகன் வெட்டினார் என்ற செய்தி சான்றாகும்.

 ஒரு இடத்தில் மற்றொரு சீனியர் ‍ மூத்த வழக்கறிஞர் ஒருவரை மதியம் சந்தித்து விட்டு வரும் வேளையில் வெட்டப்பட்டார் என்கிறது. இன்னொரு இடத்தில் மதிய உணவு அருந்திய நிலையிலேயே வெட்டப்பட்டார் என்கிறது... இதில் எது சரி. எதுவோ ஒன்று மட்டுமே சரியாக இருக்க முடியும். எனவே மற்றொன்று தவறான தகவல்.

கிடைக்கும் தகவல்களை சரிபார்க்காமல் , ஏன் எழுதியதை படித்துப் பார்க்காமலே கூட இப்படி எல்லாம் பிரசுரிப்பது பத்திரிகை வெளியீட்டின் அவசர நிலை அள்ளித் தெளித்த கோலத்தை தெளிவாக காட்டுகிறது.

அப்படி இப்படி என்று இட்டுக் கட்டி விட்டு கடைசியில் வெட்டியவர் சிக்கிக் கொண்டார் அவர் அந்த வழக்கறிஞரின் மகன் என்றும் ஏதோ குடும்பப் பிரச்சனை என்றும் சொல்லி முடித்துள்ளது.

நா.பா.சே என்பவர் இந்த அறிக்கையை கொடுத்ததாக குறிப்பு உள்ளது. பத்திரிகை தகவல் தருவது யாவும் உண்மை என்ற காலம் மலையேறி வெகுகாலம் ஆகிறது. ஊடகத்தை உல்டா செய்து அரசுக் கட்டிலே அமைக்க முடியும் என்னும் போது இதெல்லாம் சுஜிபி என கபாலி சொல்வது காதில் விழுகிறது...

இனி செய்தியை கவனியுங்கள்

வெட்டப்பட்ட வழக்கறிஞர்...கேள்விக்குறியான சென்னை ஹைகோர்ட் பாதுகாப்பு !




சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் வழக்கறிஞராக இருப்பவர் மணிமாறன். இன்று (12.7.2016) பகல் 1.30 மணியளவில் வழக்கறிஞர்கள் சேம்பரில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரை பார்த்து விட்டு வர சென்ற போது, அங்கே சேம்பரில் வைத்தே சரமாரியாக வெட்டப்பட்டார்.
படுகாயமடைந்த அவரை நோக்கி, அங்கிருந்த சக வழக்கறிஞர்கள், கொலை முயற்சி ஆசாமியை நோக்கி குரல் கொடுத்தபடி ஓடிவரவே, அந்த இளைஞர் வழக்கறிஞர்களிடம் சிக்கிக் கொண்டார். அதன் பின் அவசர உதவிக்காக 108- ஐயும், போலீஸ் உதவிக்காக 100-ஐயும் வழக்கறிஞர்கள் தொடர்பு கொண்டனர்.ரத்தப் போக்கில் துடித்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் மணிமாறனை காப்பாற்ற ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின்   தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.

சென்னை ஹைகோர்ட்டில் போலீஸ்- வழக்கறிஞர்கள் மோதல் சம்பவத்திற்கு பிறகு கூடுதல் பாதுகாப்பு கொடுப்பது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோர்ட்டில் நீதிபதிகளின் சேம்பர், வழக்காடும் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சி.ஐ.எஸ்.எஃப் (மத்திய தொழிற் பாதுகாப்புப் படை) படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில், 24 மணி நேர பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர்.
சி.ஐ.எஸ்.எஃப் படையினர் நிற்கும்  பிரதானப் பகுதியைத் தவிர, மற்ற பகுதிகள் மாநில போலீசின் வழக்கமான பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டது. ஆவின் கேட், ஃபயர் சர்வீஸ் கேட் என்றழைக்கப்படும் பகுதிகளில் சென்னை சிட்டி போலீஸ் பாதுகாப்புப் பணியை மேற் கொண்டு வருகிறது.
ஃபயர் சர்வீஸ் கேட் எனப்படும் சென்னை போலீஸ் கண்காணிப்பில் உள்ள பகுதியில்தான் வழக்கறிஞர்கள் சங்க ஐந்துமாடி (சேம்பர்) கூடுதல் கட்டடம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் தான் மதிய உணவருந்திக் கொண்டிருந்த நிலையிலேயே வழக்கறிஞர் மணிமாறன்,  வெட்டப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், " கொலைமுயற்சியில் ஈடுபட்டவர், வழக்கறிஞரின் மகன் ராஜேஷ் என்று தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது" என்கிறார்கள்.
பட்டப் பகலில் கோர்ட்டிலேயே நடந்துள்ள இந்த சம்பவம், கோர்ட்டுக்கு வந்து போகும் அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பை மேலும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

-ந.பா.சே

No thanks to you vikatan.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment