Friday, May 20, 2016

பதவி ஏற்காமல் ராஜினாமா செய்வார்களா தி.மு.க அணியினர்? : கவிஞர் தணிகை

பதவி ஏற்காமல் ராஜினாமா  செய்வார்களா தி.மு.க அணியினர்? : கவிஞர் தணிகை




தேர்தலில் ஜெயித்த தி.மு.க அணியினர் அனைவருமே மறு தேர்தல் நடத்தக் கோரி பதவி ஏற்காமல் பணநாயகத் தேர்தல் எதிர்த்து போராடும் முகம் தங்கள் பதவியை உதறி எறிவார்களா?

உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்வார்களா?

தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு மறு தேர்தல் கோருவார்களா?

குடியரசுத் தலைவரிடம் சென்று முறையிடுவார்களா?

தமிழ் நாட்டில் ஒரு நல்ல அரசியல் விழிப்புணர்வுக்காக மறு தேர்தல் நடத்த மக்களிடம் சென்று மாநிலமெங்கும் போராட்டம் நடத்துவார்களா?

அரசு அலுவலகங்கள்,மாநில மத்திய அலுவலகங்களை முற்றுகை போராட்டம் நடத்துவார்களா? சசி பெருமாள் போல இலக்கு நோக்கி சாகும் வரை செல்வார்களா?



அதுவும் இன்னும் சில நாட்களிலே, அல்லது உடனே, அல்லது பதவி ஏற்பு வைபவத்துக்கு முன்பே இவர்களால் செய்ய முடியுமா?

அப்படி எல்லாம் செய்தால் நாட்டில் ஒரு அலை பரபரப்பு ஏற்படும். நாடே திரும்பி பார்க்கும், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம்,பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலவர் அலுவலகம் யாவுமே இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் எனச் செய்வார்களா? நினைத்தால் செய்ய முடியும். ஆனால்..

அதெல்லாம் இவர்களால் முடியாது.




ஏன் எனில் இவர்கள் இவ்வளவு தொகுதிகள் பெற்றதே பெரிது என்று எண்ணுகிறார்கள். எதிர்க்கட்சி அந்தஸ்தும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எம்.எல்.ஏ பதவியும் இவர்களுக்கு போதும்.

ஏன் எனில் இவர்களும் வாக்குக்கு பணம் கொடுத்துள்ளார்கள். சில இடங்களில் கொடுக்க வில்லை...கொடுக்காத இடங்களில் தோற்றுள்ளார்கள்.

எல்லாக் கட்சிகளுக்கும் இந்த தேர்தல் பல பாடங்களைக் கற்பித்துள்ள  நிலையில் தி.மு.க என்னும் பிரதான எதிர்க்கட்சிக்கும் நல்ல பாடம் கற்பித்துள்ளது.




பிரித்தாளும் சூழ்ச்சி அல்லது கொள்கையில் ஆளும் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது அதே சிங்கம் நாலு மாடுகள் கதைதான். நரிதான் யார் என்று தெரியவில்லை. ஆனால் திட்டம் வெற்றி அடைந்து விட்டது. அதுவே சரித்திரம் சாதனை என்றாகிவிட்டது. அதற்கு பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கோடி இந்திய பணம் அடித்தளம் ஆகியிருக்கிறது. இந்திய ஜனநாயகம் தமிழகத் தேர்தலில் மதுவுடனும், மாதுவுடனும், பணத்துடனும் போகத்துடனும் போதையுடனும் மடிந்து போய்விட்டது.

என்றுதான் எழுச்சி வருமோ? எமது குடிமகன்  கட்டிய லுங்கி இடுப்பில் இல்லாதிருப்பது அறியாமல் உள்ளாடை தெரிய உயிர் நிலை தெரிய தெருவிலும் சாலையிலும் குடித்து மயங்கிக் கிடக்கும் நிலை காட்சியில் இல்லாமல் போகுமோ? இயற்கை மக்கள் செய்யாததை செய்யட்டும்.

நடந்தது தேர்தலா? பணமே வாக்குக்கு கொடுக்கப்படவே இல்லையா?
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment