Wednesday, November 21, 2018

வரலாறு காணாத சமையல் எரிவாயு விலை ஏற்றம் 982.50 ரூ.: கவிஞர் தணிகை

வரலாறு காணாத சமையல் எரிவாயு விலை ஏற்றம் 982.50 ரூ.: கவிஞர் தணிகைImage result for don't give your even one vote to rulers of india and present tamil nadu

மோடி சர்காரை ரிலையன்ஸ் அம்பானிகளும் இன்ஃபோஸிஸ் நாராயணசாமிகளும், ஆடிட்டர் குருமூர்த்திகளும் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்... பிரதமர் மோடி, வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்ஸை ஒரு சீட் கூட  வரவிடாமல் செய்யுங்கள் என மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். பொன் ராதாகிருஷ்ணன் கேரளாவில் பேருந்தில்  அய்யப்பன் கோவிலுக்கு செல்வதை தரக்குறைவாக நினைக்கிறார்.

இவர்கள் யாவரும் சொல்வதெல்லாம் மோடி சர்கார் ஏழைகளுக்கான சர்கார் அல்ல என்பதையே...

அவரவர் பணத்தையே வங்கியில் போடவைத்து நாள் கணக்கில் இரவு பகல் என்று பாராமல் காத்திருக்க வைத்த அந்த ஒரு நிகழ்வே போதும் இந்த சர்காருக்கு ஒரு வாக்கும் கூட போடக் கூடாதுதான். ஒரு வாக்கும் கூட விழக்கூடாதுதான்...
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
இப்போதும் கூட நாட்டின் மிகப்பெரும் வங்கியான ஸ்டேட் பாங்க் மக்கள் தம் பணத்தை எடுக்க ஒரு நாளுக்கு இருபதாயிரம் மட்டுமே என வரையறை செய்து வைத்துள்ளது...எவர் பணத்தை எவர் ஆளுமை செய்கிறார் என்ற காரணத்தைப் பாருங்கள் அதற்கேற்ப செயல்படுங்கள்...

விஜய் மல்லையாவின் பங்களாவை ஏலம் விட்டு கொடுத்த கடனை மீட்க‌ முடியாத இந்த ஸ்டேட் பாங்க், ஏழை மாணவர்கள் படிக்க பெற்ற கடனை ரிலையன்ஸ் நிறுவனம் வைத்து வசூலிக்க முயன்றதே இது போன்ற காரணங்களே போதும் அரசும் அதன் அமைப்புகளும் எந்தப் பக்கம் இருக்கிறது எனச் சொல்லி அடையாளம் காட்ட...
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
மிக வளர்ந்த நாடான பிரான்ஸில் கூட பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையேற்றம் கண்டனமாய் நாடெங்கும் ரோடெங்கு எதிரொலிக்கிறது ஆனால் இங்கு மக்கள் சாதி, கட்சி, அமைப்பு, மதம் ஆகியவற்றால் ஒருங்கிணைய முடியா அளவில் பிரித்தாளப்படுகிறார்கள்...

பிரச்சனையின் அடித்தளம், முதுகுத் தண்டு என்னதான் என உணர் முடியா அளவில் இளைஞர்கள் சினிமா, மீ டூ, மது, காதல் , உணர்ச்சி வசம் என பேதலித்துக் கிடக்கிறார்கள் வாழ்வதாக வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏர் இந்தியா நிறுவனம் நட்டத்தில் இயங்கிக் கொண்டு பெட்ரோலை கடனாக பெற்றுத் தர வேண்டிக்கொண்டிருக்கிறது பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து அரசிடம் கோரிக்கை வைத்து  ஆனால் இங்கு பேருந்து கட்டணம் நினைத்தபடி உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது...

ஏர் இந்தியாவின் கட்டணம் உயர்த்தப்பட்டால் மேட்டுக்குடிகள் பாதிக்கும், பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் ஏழை எளியோர்தானே பாதிக்கப்படுகிறார் எனவே இப்படித்தான் அப்படித்தான் என்றுமே அரசுகள் ...

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் 5 நாளாகியும் சோறு, குடி நீர், மின்சாரம் இல்லாமல் கொடைக்கானல் எல்லாம் தீவாகி விட்டதாக செய்திகள் இருந்தும் அந்த பாராளுமன்றப் பிரதிநிதிகளும், சட்டமன்றப் பிரதிநிதியும் தொகுதி பக்கம் கால் வைக்காமல் சேவை செய்து வருவதாக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். மேலும்  இதில் தமிழக முதல்வர் ஜீ பூம்பா என்றவுடன் எல்லாம் மின்கம்பங்களை நட்டுவிட முடியாது என்கிறார் எல்லாமே சினிமாத்தனமாகிவிட்டன...

போர்க்கால அடிப்படையில் புயல் நிவாரணப்பணிகள் நடைபெறவில்லை. உயிர்காக்க அறிவுப்புகள் உரியமுறையில் கிடைத்தவுடன் எதிர்க்கட்சித்தலைவர், மக்கள் நீதி மையத் தலைவர், மறுமலர்ச்சி தி.மு.க தலைவர் மற்றும் அனைவருமே புயல் நிவாரண நடவடிக்கைகளை பாராட்டினர் ஆனால் உண்மை நிலவரம் தெரிய வர வெட்கமாகப் போய்விட்டது அப்படிப் பேசியமைக்கு ஏன் எனில் உண்மைச் செய்திகள் தாமதமாகவே வெளிவருகின்றன..ஊடகம் யாவும் கூட சரியான செய்திகளை தரவில்லை...கேரளப் புயலுக்கு கொண்டு வெள்ள நிவாரணத்துக்கும் கொண்டு கொட்டியவர்கள் இப்போது பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்...சொற்போர் நடந்து வருகின்றன வேலைகளை செய்வதை விட்டு விட்டு, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதாக...
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
ஒரு வாக்கு கூட இவர்களுக்கு எல்லாம் போடக்கூடாது....

அவ்வளவு பொறுக்க முடியாத விலைவாசி ஏற்றத்தில் மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள்...தேர்தல் பக்கம் வரக்கூடிய இந்தக் காலக்கட்டத்திலும் இதைப்பற்றி எல்லாம் எவருக்கும் துளியும் கவலை இல்லை...எனவே...

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் கூட வரக்கூடாது என்று சொல்லும் பிரதமர் வார்த்தையைப் போல சொல்ல வேண்டுமெனில் மோடி சர்கார் மற்றும் ஆளும் தரப்பினர் இவர்கள் எவருக்குமே ஒரு வாக்கு கூட விழக்கூடாது..
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment