Friday, November 2, 2018

சினிமா இயக்குனர் சங்கரின் தெனாவெட்டும் சிவகுமாரின் பெருமையும்: கவிஞர் தணிகை

சினிமா இயக்குனர் சங்கரின் தெனாவெட்டும் சிவகுமாரின் பெருமையும்: கவிஞர் தணிகை

Image result for sivakumar,kamalhasan,rajinikanth,sankar


கமல்ஹாசன் முதல்வராகும் கருத்துக் கணிப்பில் ரஜினியை முந்தி வாக்கு சதவீதம் வாங்கியுள்ள நிலையில் 2.0 வில் ஆர்னால்டை கூப்பிட்டேன்,கமலைக் கூப்பிட்டேன்,ஜாக்கிஜானைக் கூப்பிட்டேன்சில்வஸ்டர் ஸ்டால்லொனைக் கூப்பிட்டேன்,பென் கிங்ஸ்லீயைக் கூப்பிட்டேன், பெட்ரோல் டீசலைக் கூப்பிட்டேன்   ரஜினிக்கு வில்லனாக நடிக்க என்ற செய்திகளை எல்லாம் வரவைக்கிறார்கள்.

ரஜினியிடம் அப்படி என்னதான் கண்டாரோ இந்த சங்கர்....கையைக் காலைக் கூட ஆட்டாமலே, எந்திரத்தனமாக நடிக்கிறேன் என்ற பேரில் வெட்டி பந்தா,உதார் விட்டபடி நடித்தும் நடிக்காமல், படம் ஓடியும் ஓடாமல் இருந்தாலும் வெறும் விளம்பரத்தை வைத்தே காலம் தள்ளி, ஒரு காலத்தில் கமலுக்கு வில்லனாக நடித்த அதே நடிகருக்கு வில்லனாக நடிக்க வைக்கலாம் என்று கேட்டபோது நல்லவேளை சிவகுமார் செய்த தப்பை புவனா ஒரு கேள்விக்குறி மூலம் விட்டுக் கொடுத்த வாய்ப்பை கமல் செய்யவில்லை.

கமலும் வில்லனாக நடித்து வளர்ந்தவர்தான், மேலும் அதை எல்லாம் விட குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியாரிடமிருந்து நடிப்புக்கு சம்பளமாக காரையே பரிசாக வாங்கியவர், சினிமாத்துறையில் ரஜினிக்கு சீனியர், 50 ஆண்டுக்கும் மேல் நடித்து வரும் கலை ஞானி... அதெல்லாம் வேறு...


கிறுக்குத்தனம்,கிக்கிரித்தனம், வெறும் உதார் பேர்வழிகளை தூக்கிக் கொண்டாட என்று இருக்கும் கூட்டத்தையே நம்பி இன்னும் சங்கர் எத்தனை காலம்தாம் வண்டி ஓட்டப்போகிறார் என்றுதான் பார்ப்போமே...
Image result for sivakumar,kamalhasan,rajinikanth,sankar
காசுதானே, நடிப்புதானே, என சங்கரின் காசுக்கு பணிந்து அந்த ரோலை ஏற்று செய்திருந்தால் இன்று அவரின் Kamal இமேஜ் பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைந்திருக்கும்

நடக்கும் இதை எல்லாம் பார்க்கும்போது பாரதிய ஜனதாவின் ஒவ்வொரு நகர்வும் எல்லா தளங்களிலும் கணக்கிடப்பட்டு காய் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

சிவகுமார் நல்ல மனிதராக தட்டிவிட்ட செல்பேசியை 21 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கிக் கொடுத்து, பொதுவில் வருத்தமும், மன்னிப்பும் கோரி இருப்பது அவருக்கு பெருமைதான் சிறுமையில்லை. மேலும் அவரது நிலையை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மனிதர்க்கு தவறு செய்தல் இயல்பே...அதிலிருந்து மீளும் முறைகளில்தான் மறுபடியும் அவர்களுக்கு முத்திரை கிடைக்கிறது.
Image result for sivakumar,kamalhasan,rajinikanth,sankar
அந்த வகையில் சிவகுமார் தாம் ஒரு மிக நல்ல மனிதர் என்பதை நிரூபித்து விட்டார்  சங்கர் ஏதோ பெரிதாக செய்வதாகச் சொல்லி சிறுமையடையப்போகிறார்...

மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.

3 comments:

  1. உங்களை சங்கர் ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டார்போல இருக்கு! :(

    ReplyDelete
  2. உண்மைதான் சினிமா என்ற வழியில் ஆக்க பூர்வமான சக்தியை மாயா லோகத்துக்குள் கொண்டு செல்வது போல செய்வதால்...

    ReplyDelete
  3. Actually, in 16 vayathinile, Rajini (parattai) is the villain and Kamal (sappaani) is hero. However, both roles were appreciated by audience. It is debatable, who gained more popularity. Lot of people say "parattai" role was better than chappaani role.

    In ilamai oonjalaadukiRathu, same kind of situation. Kamal is the hero and rajini took up a role which is hard to define villain or a guest role. They both gained lot of praise, it is hard to say who gained more popularity.

    In ninaithaale inikkum as well.

    So, giving "villain role" to Rajini is more 'dangerous' than giving a "hero" role in a movie where both will appear on screen.

    People love to see Rajini as a villain even today. He might very well do it (just like chandramukhi "laka laka laka- villain" role.

    So, be careful what you wish for. Because Rajini can excel as a villain more than as a hero! It may be a worse situation for Kamal if Rajini was given villain as you wish. May be Shankar knows that. :)

    ReplyDelete