Friday, December 29, 2017

எனக்குப் பிடித்த ஐந்து:‍‍‍ ...கவிஞர் தணிகை.

எனக்குப் பிடித்த ஐந்து:‍‍‍

காற்று

இடத்தின் பேரை எழுதிச் செல்கிறது
வாசத்தால்
Related image
ஜீவன் ஓடிக் கொண்டிருக்கிறது
சுவாசத்தால்..

நீரின் ஒவ்வொரு துளியும் அமுதம்
அளவின்றி பிரளயமானால்
அதுவும்
எதுவும்
விஷம்


Image result for water from air


வடுவற்ற நிலம்
வஞ்சியின் முகமாக‌
காயம்படாத இதழாக‌

Related image


தீயின் தாகம்
தீராத பசியின் மோகம்

Image result for fire land

சொல்ல முடியாது சொல்லில்
விண்ணின் வியாபகம்...

  ...கவிஞர் தணிகை.


Image result for sky

2 comments: