Sunday, August 27, 2017

அரசே அறக்கட்டளைகளை எல்லாம் தடை செய்து அரசுடைமையாக்க வேண்டும்: கவிஞர் தணிகை

அரசே அறக்கட்டளைகளை எல்லாம் தடை செய்து அரசுடைமையாக்க வேண்டும்: கவிஞர் தணிகை
Image result for gurmeet ram rahim singh albums

31 பேர் இறப்பு 300 பேருக்கும் மேல் காயம், துப்பாக்கிகள்  குண்டுகள் எல்லாம் இந்த அமைப்பினரிடமிருந்து பறிமுதல்...இப்படியாக....


தேரா சச்சா சௌதா அமைப்பு பற்றியும் அதன் கடவுள் என்று சொல்லிக் கொண்ட நடிகர் குர்மீத் சிங் ராம் ரஹீமை பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் அல்லது அரபு நாடுகளில் செய்வது போல பொது இடத்தில் வைத்து தூக்கில் இட வேண்டும். இது போல் செய்தால்தான் மற்ற போலிசாமியார்கள் எல்லாம் அடங்குவார்கள். இவர்களை எல்லாம் அடக்கி நாட்டில் இருக்கும் கோடிக் கணக்கான கோடிகளை அரசு பொதுவுடமை ஆக்க வேண்டும்

இருக்கும் நீர் , நிலத்தையே பொது உடமை ஆக்கத் தெரியா அரசு இதை எங்கே செய்யப் போகிறது என்று கேட்கிறீர்களா? 2002ல் வாஜ்பேயிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் எழுதிய கடிதத்தின் விசாரணை முடிவுகளே இப்போதுதான் செயல்பட ஆரம்பித்திருக்கிறது எனில் நமது நீதியும் சட்டமும் எவ்வளவு வேகத்தில் செயல்படுகிறது என்பதை தெரிந்து புரிந்து கொள்ளுங்கள்

இப்படி இருக்கும்போது எப்படி ஒரு சாதாரண மனிதர் அல்லது எந்தவித வசதி வய்ப்புமே இல்லாத இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் மனிதர் நீதியை எட்டுவது? அம்பேத்காரின் சட்டம் பாய்வது அவ்வளவுதானா?

இந்த மனிதர் சீக்கிய பொற்கோவில் அதிகார பூர்வ அமைப்பில் இருந்து விலக்கப்பட்டவர், தம் பேரை பாருங்கள் எப்படி வைத்திருக்கிறார் என, ராம் என்று இந்துவாக, ரஹீம் என்று முகமதியமாக, குர்மீத் என்று சீக்கியராக கிறித்தவர் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் ப்ராங்க்ளின் என்று ஏதும் வைத்துக் கொள்ளாதது தெரிகிறது.

50 வயது கோடீஸ்வரன், நடிகர், பாடகர், இயக்குனர் டாடா சாஹேப் பால்கே  விருது பெற்றவர், மத்திய அரசின் இஜட் பிரிவு பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் உள்ள‌,இவர் தேரா சச்சா சௌதா அமைப்பின் 4 ? ஆம் தலைவர், இவர் பிறக்கும் முன்பே 5 ஆண்டுகளுக்கும் முன்பே இவர் இந்த அமைப்பின் தலைவர் ஆவார் என்று இவரது முன்னால் தலைவர் முன் கூட்டியே சொன்னாராம்.

இவரே இவரது ஆஸ்ரமப் பெண்களை எல்லாம் புணரவேண்டும் என சுமார் 400 ஆஸ்ரமத் தொடர்புள்ள ஆண்களை எல்லாம் ஆண்மை இழப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவைத்துள்ளாராம். அதிக பட்சம் 400க்கும் மேற்பட்ட ஆஸ்ரம பெண்களை எல்லாம் இவர் புணர்ந்துள்ளதாக தகவல். அந்தக் கடிதத்தில் எழுதியுள்ள பெண்கள் கேட்ட கேள்விக்கு ஏன் கிருஷ்ணன 360 கோபியர்களுடன் கூடிக் களிக்கவில்லையா அவரை கடவுள் என நீங்கள் வணங்கவில்லையா? என்று கேட்டாராம் , துப்பாக்கி, நீலப்படம், பாதாள அறை ஒவ்வொரு பெண்ணையும் மிரட்டியே ஆண்டுக் கணக்கில் உடலுறவு கொள்ள வைத்தாராம் இந்த சாமி. இவருக்கு வளர்ப்பு மகள் ஒரு நடிகை, அவருடன் காவ்ர் என்ற மனைவிக்கு 3 பெண்கள் ஒரு ஆண் குழந்தை. அவருக்கு காங்கிரஸ் பிரமுகரின் மகள் திருமண முடிப்பு. இப்படி செல்கிறது  இந்த மிருகத்தின் கதை.இங்கே இருக்கும் மேல் மருவத்தூர் அம்மாக்கள் மாதிரி, ஈஸாவின் மகளுக்கு  நல்ல மணமகன் வேண்டும் என்கிற மாதிரி இவர்கள் எல்லாமே சாதாரண மனிதர்கள் தான் இவர்கள் பின் ஏன் இவ்வளவு பைத்தியக்காரத்தனமான கூட்டம்> யமுனையின் கரையில் நடைபெற்ற கூட்டத்தின் மீறலுக்கு இன்னும் 5 கோடி ரூபாய் அபராதத் தொகையை வாழும் கலை ரவி சங்கர் நிறுவனம் கட்டி விட்டதா என்பது தெரியவில்லை. ஈஸாவுக்கும் வாழும் கலைக்கும் பிரதமர் கலந்து கொண்டது சரியா இது போன்ற கேள்விகளுக்கு பாரதிய ஜனதா கட்சியிடம் பதிலை எதிர்பார்க்க முடியாது. பிரதமர் அலுவலகம் மட்டுமே பதில் சொல்ல வேண்டும். சரி விடுங்கள் இந்த சீக்கிய இனத்திலிருந்து விலக்கப்பட்ட குர்மீத் கதைக்கு வருவோம்...

இவருக்கு கார் பைத்தியம் உண்டு. சுமார் 300 காருக்கு சொந்தக்காரராம்.சிர்ஸாவில் 700 ஏக்கருக்கும் மேல் நிலம் உண்டு. சுமார் 350 கிளைகள் உலகெங்கும். சீடர்கள் 5 கோடி பேர். எல்லாம் தாழ்ந்த சாதி மக்கள் மாக்கள். இவனிடம் இருக்கும் ஒரு காரின் விலை 16 கோடியிலிருந்து 18 கோடி வருகிறதாம்.

இவரை இது வரை எல்லா அரசும் ஆதரித்தே வந்துள்ளன அது காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா .இப்போது ஏன் எப்படி? விசாரணையும்  நாளை வெளிவர இருக்கும் தண்டனையும் இவரின் வாழ்வை பெரிதும் பாதிப்பன‌

அவன் வாழ்ந்துள்ளான் ஒரு சர்வாதிகாரம் படைத்த இராஜா போல. ஏகப்பட்ட சொத்து சுகங்களுடன், பெண்களுடன். இது மக்களாட்சி அல்ல எனச் சொல்லி காரணம் காட்டி... இவன் வரும் போகும் இடங்களில் எல்லாம் காட்சிப் பொருட்களாக எல்லாம் ஆடுகிறார்கள் ஆர்ப்பரிக்கிறார்கள் இவன் கடவுள் என்று சொல்லிக் கொள்வானாம்.

ஏன் எதற்கு இந்த கூட்டலும் நீட்டலும்...இவன் போன்ற பதர்கள் நடத்தும் அத்தனை அறக்கட்டளை, தன்னார்வ தொண்டு நிறுவனம் யாவற்றையுமே அனைத்தையுமே அது இவனுடையது அவனுடையது என்றெல்லாம் பாராமல் அனைவரது அமைப்புகளையும் அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை பொது உடமையாக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியே இல்லை இந்த முட்டாள்தனத்துக்கு எல்லாம் முடிவு கட்ட...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

5 comments:

  1. Replies
    1. if the Government for the people by the people of the people means definitely it will be happened...

      Delete
  2. அருமையான கட்டுரை. நன்றி.

    ReplyDelete
  3. thanks for your participation with this post sir. vanakkam.

    ReplyDelete