Wednesday, January 11, 2017

மோடி இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டா இத்தனை மனக்கோட்டை கட்டினார்? கவிஞர் தணிகை

மோடி இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டா இத்தனை மனக்கோட்டை கட்டினார்? கவிஞர் தணிகை

Related image


மோடி வங்கிகளை எல்லாம் மக்கள் பின்னால் ஓடி வரச் செய்ய இந்த திட்டம் கொண்டு வந்தாராம், 50 நாளில் நிலை சரியாக வில்லை என்றால் தற்கொலை செய்வாராம் தூக்கு இட்டுக்க் கொள்வாராம், இந்த திட்டம் தோற்றும் 50 நாள் ஆன பின்னும், மக்கள் வங்கி முன் பழியாய்க் கிடக்கும்போது...இப்போது அயல் நாட்டு வியாபாரிகளை  ஈர்க்க 3 டி டெமோகிராபி, டெமாக்ரஸி டிமான்ட் உள்ள இந்தியநாடு பெரும் முதலீடுகளுக்கு ஏற்ற இடம் எனப் பேசிக் கொண்டிருந்தார், ஜியோ அம்பானியை அடியோடி இந்தியாவை அள்ள விட்டு பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனத்தை காங்கிரஸ் கொன்றது போதாது என்று செத்த பாம்பை அடிப்பது போல அடித்துக் கொண்டு...


வங்கியில் கூட்டம் குறைந்த பாடில்லை. இன்று மறுபடியும் நான் பாரதீய ஸ்டேட் வங்கிக்கும் நிலவரித் திட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று வர நேர்ந்தது. அதை சுருக்கமாக சொல்கிறேன் . நாம் எப்போதும் சொந்த அனுபவம், உண்மைகளின் அடிப்படையிலேயே எதையும் எழுதுகிறோம். சேரிட்டி ஸ்டார்ட்ஸ் ஃப்ரம் ‍ஹோம் என்பது போல...

நிலவரித் திட்ட அலுவலகத்திற்கு சென்றேன் இன்றா வரச் சொல்லி இருக்கிறார்கள்,எனப் பார்த்து விட்டு சரி 11 மணிக்கு வாருங்கள் என ஒரு உதவியாளர் சொன்னார் அப்போது மணி 10.43. என்ன இன்னைக்கு வரச் சொல்லி இருக்கிறார், என்ன இன்னைக்கி எல்லாம் வரச் சொல்லி இருக்கிறார் என்று பேசியபடியே என்னை அனுப்பி வைக்க குறியாய் இருந்தார் அந்த கீழ் நிலை ஊழியர்.

அந்த நிலவரித் திட்ட வட்டாட்சியரின் கடிதத்தில் இருந்த நாள் குறித்த இடத்தில் இருந்த கோடுகள் 11.கோடு 1 கோடு 17 என்னும்படியாக இருந்தது கண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு மிகவும் சீரிய தன்மையுடன் தேவையான எல்லா ஆவணங்கள் மற்றும் நகல்களுடன் , குடிநீருடன் சென்று சேர்ந்தேன். ஒன்றும் பெரிய அளவில் கூட்டம் இல்லை

எப்போது இந்தக் கடிதம் கொடுத்தார்கள்? எந்த ஏரியா என்றெல்லாம் கேட்டார்கள் பதில் கொடுத்தேன்.

  சரி இன்னும் 11 மணி ஆகவில்லை அதனிடையில் வங்கிக்கு செல்லலாம் விண்ணப்ப படிவம் 60 கொடுப்பது பற்றி எல்லாம் விசாரித்தேன், அது பற்றி பெரிய அக்கறையோ விழிப்புணர்வோ இன்னும் அங்கு அவசியமாக எழவில்லை. காலம் போன கடைசியில் பிப்ரவரி 28 வரும்போது எல்லாம் பற பற வென பறப்பார்களோ? நடப்பு எப்படி என விசாரித்தேன், எந்த வித செயல்பாடுகளும் பெரிதாக இல்லை மோடியின் வீழ்ச்சி செயல்பாடு தவிர என்றார்கள். இன்னும் வரிசையில் நின்றவர்க்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. மற்றபடி பணம் போடவோ பணம் எடுக்கவோ எந்த இயந்திரமும் பணி செய்யவில்லை.
Image result for veerapandiya kattabomman statue


எப்போதும் வங்கி பாஸ் புத்தகத்திற்கு வரவு செலவு பதிவுகளை பிரிண்ட் செய்வது உள்ளே தமது வேலையை செய்யவில்லை, காரணம் ஊழியர் குறைவாகவும் காரணம் இருக்கலாம். வெளியே பாஸ் புத்தகத்தில் என்ட்ரி போட ஒரு வரிசை. அதற்கு ஒரு செக்யூரிட்டி என்ட்ரி போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். சலித்துக் கொண்டு. ஃஅங்கலாய்த்தபடி நிறைய பேருக்கு நிறைய என்ட்ரி போட வேண்டியதிருக்கிறதே என்று.. போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் அது அவரது வேலை, பணி என்பது என்று இருந்தும்

விவரம் அறிந்த என் போன்றார் தாமே என்ட்ரி போட்டுக் கொள்ள முடியும்,ஏன் கடந்த முறை நானே தான் போட்டுக் கொண்டேன்,எல்லாரும் ஏ.டி.எம் என்றானபின் வரவு செலவுக் குறிப்பை நெட் பேங்கிங் மொபைல் பேன்க்கிங் வழி தெரிந்தபடி இருக்க பாஸ்புக் என்ட்ரி போடுவது அரிதுதான் அதற்காக என்ன செய்ய முடியும் என நிலையை தெளிவுபடுத்தினேன் அவருக்கு.

மற்றொரு வங்கியில் இந்த மோடியின் செயல்பாடு ஆரம்பத்ததில் இருந்து அதாவது நவம்பர் 8 முதல் எந்த பாஸ்புக்குக்கும் என்ட்ரி போட்டுத் தருவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றனர்.

இது ஒரு நிலை வங்கியில்... நாம் நமது நிலவரித்திட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சரியாக 11 மணிக்கு அவர்கள் சொன்னபடி திரும்பினோம்
சொன்னவுடன் மற்றொரு ஊழியர் அனேகமாக அவரும் அலுவலக உதவியாளர், அட்டன்டர் அல்லது பியூன் என்ற நிலையில் இருப்பவர், போங்க போங்க இன்னைக்கு இல்லை நாளைக்குத்தான் என்றார், இன்று வரச்சொல்லி தபால் கொடுக்கப்பட்டு இருக்கிறது வட்டாட்சியர் பச்சை இங்கில் கையொப்பமிட்டு எனக் காண்பித்தேன்,

அட அது மாசம் இன்னைக்கு எங்க போட்டிருக்கு, ஓ.சி,யில் நாளைதான் போட்டது,  /1/17என்றுதானே மாதம் தானே உள்ளது தேதி எங்கே உள்ளது? இதில் போடவில்லையா என உடனே வாங்கி சரியாக கோடுகளுடன் இருந்த இடத்தில் டக்கென 12 என தேதி எனப் போட்டுவிட்டார்.

அதாவது இவர்கள் அலுவலகம் எனக்கு அனுப்பிய கடிதத்தில் தேதியைக் குறிப்பிடாமல் மறந்து விட்டு அலுவலக நகலில் மட்டும், ஓ சி..ஆபீஸ் காபி...12/ ஜனவரி 2017 எனக் குறிப்பிட்டுள்ளார், அதைப் பார்க்காமல் வட்டாட்சியரும் 06.01 17ல் தேதியிட்டு, கையெழுத்திட்டு கொடுக்கச் சொல்லி உள்ளார் .எங்கே இவரது தவறு வட்டாட்சியருக்கும் தெரிந்து விடுமோ என்று அவசரமாக சரி செய்துவிட்டு என்னை நாளைக்கு வா , தாசில்தார் இல்லை என துரும்பாக வெளியேறச் சொல்லுகிறார் என்னவோ அரசு அலுவலகம் இவன் அப்பன் வீட்டு சொத்து போல, தீவிர எண்ணம் தலைதூக்கியது, குடும்பம் இன்றைய நிலை எல்லாம் என்னை சாந்தப்படுத்தியது.

ஒன்று சிறை செல்ல வேண்டும் புத்தி புகட்டிவிட்டு, அல்லது கைகலப்பாக மாறி பிரச்சனை திசை திரும்பியாக வேண்டும் எனவே காந்தியவாதியாக பொறுத்துக் கொண்டு இன்று விடுமுறை எடுத்துக் கொண்டு இதற்காக வந்திருக்கிறேன், நீ செய்தது தானே தவறு என்ற என் பார்வையை நியாயத்தை புரிந்துகொண்ட ஒரு பெண் அலுவலர், எனது ஆவணங்கள், நான் ஏற்கெனவே இப்படி எல்லாம் நடக்கும் எனத் தெரிந்து துணைவியாரின் பேருக்கு கடிதம் எழுதிக் கொண்டு அவரே ஆவணங்களை எல்லாம் கொண்டு வருவார் சரி பார்த்து பட்டா வழங்கவும் என்றிருந்ததைப் படித்து விட்டு இது போதும் சார், நீங்கள் நாளை வரவேண்டாம், நீதிமன்ற வில்லை 2 ரூ மதிப்புக்கு மட்டும் ஒட்டி, அழைப்புக் கடிதத்தை நகல் எடுத்து அனுப்பி வையுங்கள் என்றார். ஒரிஜினல் எல்லாம் உள்ளது பார்ப்பதெல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள் என எல்லா ஆவணங்களை எல்லாம் காட்டத் தயாரானேன். இல்லை சார் வேண்டாம் என்றவர், நாளை வரும்போது ஒரிஜினல் எல்லாம் தேவையா என்று கேட்டதற்கு கொடுத்தனுப்புங்கள் என்றார்.

எங்களது உரையாடல் நிகழும்போதே மற்றொரு பெரியவர் வந்து கெஞ்சிக் கொண்டிருந்தார் அந்த சிறு அறையில் உள்ள சில டேபிள்களும் சில சேர்களும் காலி 3 இருக்கைகளில் மட்டும் அலுவலர்கள் இருந்தனர், இந்த வீணாய்ப்போன எடுபிடிகள் வெளியே சென்று விட்டனர்...

அந்தப் பெரியவரிடம் நீங்கள் அடிக்கடி போன் பண்ணிக் கேட்கிறீர்கள் என்றார்கள், அதற்கு அவர் மன்னித்துக் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் என இறைஞ்சிக் கொண்டிருந்தார், சரி போங்கள் என்றார்கள் அவர் வெயிலில் வந்தது சற்று சிரமமாக உள்ளது, பெஞ்சில் அமர்கிறேன் சற்று என அமர்ந்து கொண்டார்.... இப்போது வங்கிகளுக்கு மக்கள் ஓடி வரட்டும், பின்னால் வங்கிகள் எல்லாம் மக்கள் பின்னால் ஓடிவரும் பாருங்கள் என்ற மோடியின் திருவாசகம் ஒருவாசகம் எனது கண்ணில் காதில் தேனினும் இனிய கீதமாய் ஒலித்தது.

Image result for indian economy


இத்தனைக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட கட்சித் தலைவர் பத்திரிகைச் செய்தியில் பட்டா வழங்கல் பற்றியும் போட்டோவுடன் பட்டா தருவது பற்றியும் சிறப்பாக பேட்டி கொடுத்தது வெளி வந்தது சிரிப்பாக சிரிக்கிறது. அந்த அலுவலகம் இன்னும் 6 மாதமோ ஒரு வருசமோ இருக்கும் அதற்குள் இந்த பட்டா எல்லாம் கொடுக்கப்படுமா என பாமர மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனராம். அந்த வதந்தி வேறு உலவ விடுவது அந்த அலுவலகத்தில் பணி செய்யும் கீழ் மட்ட ஊழியர்களேதானாம்.


இந்தியா போன்ற ஒரு பெரிய  நாட்டின் ஒட்டு மொத்த சீர்பாடுகளில் இது போன்ற சிறிய பாதிப்புகள், தனிமனித இடர்ப்பாடுகள் இருக்கும்தான் என சிலர் சப்பைக் கட்டு கட்டலாம் அவனவன் சம்பாதிக்கும் பணத்திற்கு அவனவன் தேவைக்கு செலவு அளிக்க வழி இல்லாமல் இதெல்லாம் என்ன ஒரு தேசம் என்ன ஆட்சி...அதற்கு சரியான திட்டம் இடப்பட வேண்டுமல்லவா?துன்பங்களே தொடர்கதையானால் எவருக்குமே விரக்தி தானே வரும்..இத்தனைக்கும் மோடிக்கட்சிக்கு இடைத்தேர்தலில் இந்த பாதிப்புகளுக்கு இடம் இருக்காதாம்...இங்க இந்த நாட்டில எவனுமே வேலை செய்யத் தயாரில்லை திருட மட்டுமே தயாராக இருக்கிறான் அரசு அலுவலங்களில் அவனை வைத்துக் கொண்டு நல்லவர் அரசாண்டாலே கஷ்டம், மோடி போன்ற ஆட்கள் என்ன செய்ய முடியும்?

இப்படிப்பட்ட வங்கிகளையும், அரசு அலுவலகங்களையும் வைத்துக் கொண்டு தப்புக் கணக்கு போட்டு விட்டு கிராமங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த அறிவு கெட்ட மடையனோ சொன்னது போல அமெரிக்க நாட்டு பாணியில் அம்பானியிடம் பணம் பெற்று தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என நின்று ஜெயித்து விட்டு மக்களை எல்லாம் கொல்லாம கொல்கிறார்கள் இந்த ஆட்சி என்னும் பேய் அரசான்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் மூலம்...

ஆக மோடி வங்கிகளை எல்லாம் மக்கள் பின்னால் ஓடி வரச் செய்ய இந்த திட்டம் கொண்டு வந்தாராம், 50 நாளில் நிலை சரியாக வில்லை என்றால் தற்கொலை செய்வாராம் தூக்கு இட்டுக்க் கொள்வாராம், இந்த திட்டம் தோற்றும் 50 நாள் ஆன பின்னும், மக்கள் வங்கி முன் பழியாய்க் கிடக்கும்போது...இப்போது அயல் நாட்டு    வியாதிகளை   Sorry

வியாபாரிகளை  ஈர்க்க 3 டி டெமோகிராபி, டெமாக்ரஸி டிமான்ட் உள்ள இந்தியநாடு பெரும் முதலீடுகளுக்கு ஏற்ற இடம் எனப் பேசிக் கொண்டிருந்தார், ஜியோ அம்பானியை அடியோடி இந்தியாவை அள்ள விட்டு பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனத்தை காங்கிரஸ் கொன்றது போதாது என்று செத்த பாம்பை அடிப்பது போல அடித்துக் கொண்டு...

நீங்கள் எல்லாம் என்ன நாயா பேயா உங்களுக்கு எல்லாம் எதற்கு வாய்? ஒரு கேடாய்...இன்னும் ஏன் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஒருவர் முயற்சி செய்தாராம் கைது செய்யப்பட்டு விட்டாரம்
Image result for indian economy


ஜெய் பாரத மாதாகீ ஜே...
தண்ணி இல்லாமல் சாவோம் தமிழ் நாட்டுக்கும் சசி நாட்டுக்கும் ஜே..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
one day to decide about jallik kattu verdict.

Image result for indian economy

No comments:

Post a Comment