Wednesday, August 31, 2016

எல்லாப் பக்கங்களிலும் கூர்மையானது அஹிம்சை என்னும் ஆயுதம்: கவிஞர் தணிகை

எல்லாப் பக்கங்களிலும் கூர்மையானது அஹிம்சை என்னும் ஆயுதம்: கவிஞர் தணிகை

Image result for ahimsa is sword with all sharp corners

சேலத்திலிருந்து மேட்டூர் ரயில்வே நிலையம் வரை வரும் பயணிகள் ரயில் அது.மாலைப் பயணம்.

ஓமலூரில் ரயில்வே காவலர் ஒருவர் வருகிறார் என்றவுடன் நான் அமர்ந்திருந்த கடைசிப் பெட்டி காலியாகி அனைவரும் விழுந்தடித்த வண்ணம் குய்யோ முறையோ என அலறி அடித்தபடி ஓடி மறைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அனுமதிச் சீட்டு பெறாத கல்லூரி மாணவர்களும், அன்றாடம் பணிக்கு செல்லும் அலுவலர்களும் அடங்குவர். நாங்கள் எங்கள் பெட்டியில் 3 பேர் மட்டுமே அமர்ந்திருந்தோம். விதி விலக்கு.இப்படித்தான் நமது ஜனநாயகத்தில் ஆட்சியும் அரசியலும் தேர்தலும் கூட...

Image result for ahimsa is sword with all sharp corners

ஓடுகிற ரயிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக இருக்கட்டுமே என நான் கடைசிப் பெட்டியில் அமர்ந்து ஊர் நெருங்குகையில் மற்றவர்கள் போட்டியிடும் முன் முதலாவதாக வந்து கதவருகே நின்று கொண்டு பொறுமையாக படிகளில் இறங்கி உரிய வாய்ப்பு வந்ததும் வண்டி மெதுவாகியதும் இறங்கி விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சீசன் பாஸ் டிக்கட் மாதமுழுதும் பெற்று வைத்திருப்பவன்.

என்னுடன் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களையும் அப்படி மாதாந்திர பாஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் மாதம் முழுதும் ரூ. 185தான் செலவு. எத்தனை முறை வேண்டுமானால் ஒரு மாதத்தில் செல்லலாம் நல்லது என அறிவுரை பல முறை செய்துள்ளேன்.

ஆனால் இன்று நடந்தது என்னால் செரித்துக் கொள்ள முடியாதிருக்கிறது. என்னுடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்கள் தங்களது பாடத்தை பொறுப்பாக எழுதிக் கொண்டு வந்தனர். அவர்களுக்கு நன்றாக இடம் கொடுத்து எழுதுங்கள் ,என ஊக்குவித்து அவர்கள் பற்றி விசாரித்தேன் அவர்கள் மேட்டூர் சார்ந்த மாணவர்கள்.

Image result for ahimsa is sword with all sharp corners

ஆனால் மேட்டூர் வரவேண்டிய அவர்கள் ஓமலூரில் இறங்க ஆரம்பித்தனர். ஏன் எனக் கேட்டேன் எங்கள் சீனியர் இறங்கி விட்டார் எனவே நாங்களும் இறங்கிக் கொள்கிறோம் என விடு விடு வென இறங்கிக் கொண்டனர். அதன் பின் செக்கிங்க் வருகிறார் என எவரோ சொன்னதைக் கேட்டதும் அந்த பயணிகள் ரயில் பெரும்பாலும் காலி. அனைவரும் புகுந்து ஓடி மறைந்து விட்டனர். அந்தக் காவலர் என்னுடன் சேலத்தில் பேசி பரிச்சயமானவர்தான்.

ஆனால் அந்த இரு காவலர்களும் சேலம் சந்திப்பில் ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இரு நபர்களிடம் ரயில் பெட்டியில் உள் சென்றும் வெளியிலும் பணம் அதட்டி பெற்றதும் ,அதில் இவர் ஒருவர் வாங்குவதில்லை எனவும் குரல் கேட்டது.

அந்தக் காவலரில் ஒருவர்தான் இந்த ரயில் பயணிகள் சோதனையில் ஈடுபட்டவர், இந்த மாணவர்களுக்கு சிம்ம சொப்பனமாகி அனைவரும் இறங்கி ஓடக் காரணமானார்.

Image result for ahimsa is sword with all sharp corners

வீட்டிற்கு வந்ததும் சொன்னேன் நடந்ததை.அதில் என்ன தவறு? விஜய் மல்லைய்யா, லலித் மோடி,போன்றவரை விடவா இந்த பயணிகள் தவறு செய்தவர்கள்? அவர்களை எல்லாம் பிடிக்கத் துப்பில்லாத இந்த அரசு, இந்தக் கல்லூரி மாணவர்களை ஏன் இந்த ரயிலில் அனுமதிச் சீட்டு இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது? என்றது சரியான வாதமாகவே படுகிறது இல்லையா?

ஒரு புறம் தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு பயணம் செய்ய பாஸ், பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பாஸ் என்றெல்லாம் கொடுக்கும்போது இந்த ரயில் பயண இலவசத்தையும் கல்லூரி மாணவர்களுக்கு என்று தரலாம் அது நியாயம்தான்...

ஆனால் அதை ஒருங்கிணைத்து போராட்ட வடிவில் கேட்க வேண்டிய மாணவர்களே டிக்கட் வாங்காததற்காக விழுந்தடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்களே....என்ன சொல்ல...

Image result for ahimsa is sword with all sharp corners

காவலர் தனது கடமையை செய்வதை நாம் தவறு என்றும் சொல்ல முடியாது, அவர் நல்லவரா கெட்டவரா, இலஞ்சம் வாங்குகிறாரா என்பதை விட தனது பணியை செய்வதில் நாம் குறுக்கிடவும் கூடாது குற்றம் சொல்லவும் முடியாது...சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டுமானால்

ஆனால் உரிய அரசாங்கம் வேண்டிடும் மக்கள் போராட்டட்தை நாம் தவறு என்றும் சொல்ல முடியாது. அதற்கு குறுக்கிடும் சட்டம், காவல், நீதி யாவும் அப்புறப்படுத்தப்பட்டு மக்களுக்கான நல்ல சக்தியாக அதன் துணையாக அந்த சக்திகள் மாற்றப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கக் கூடாது.

Image result for ahimsa is sword with all sharp corners

சரி நமது பணி இந்த ரெயில்வே பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தோம் இந்த மாணவர்களிடை கையெழுத்து பெற்று பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் ரயில் நிறுத்த புதுசாம்பள்ளியில் கோரி, மேலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் தகவல் கொடுத்திருந்தோம் குறை தீர்க்கும் பிரிவுக்கு.

மேலும் சேலம் கோட்டம், தென்னக ரயில்வே சென்னை, ரயில்வே  மந்திரி அனைவருக்குமே தெரியப்படுத்தி இருந்தோம். அதன் பின் விளைவு இப்படித் தாக்கி இருக்குமோ?

ரயிலில் டிக்கட் வாங்காமல் பயணம் செய்வது தவறுதான். ஆனால் அதையே அரசு அனுமதித்தால் அது சரிதான். சும்மாதானே ரயில் வருகிறது அதில் அந்த பையன்கள் வந்தால் என்ன இந்த அரசுக்கு குடிமுழுகி விடும் எனப் பேசும் எனது துணைவியாரின் நேர்மை இந்த உலகத்தின் தற்காலம்.

ஆனால் நான் கேட்பதெல்லாம் எதிர்த்து கூட்டு சேர்ந்து உரிமையைப் போராடி வெல்வது அதற்கு நேர்மை, உண்மை, சத்தியம், இன்னும் தேகபலம் தாண்டிய ஆன்ம பலம் எல்லாம் வேண்டும். அதற்கு இவர்களுக்கு யார் சொல்லித் தருவது?
Image result for ahimsa is sword with all sharp corners


இவர்களின் பெற்றோர் தரும் போக்குவரத்துச் செலவை தவறான வழியில் பயன்படுத்த இந்த திருட்டு ரயில் ஏறுகிறார்களா? அல்லது இவை இவர்களின் பெற்றோருக்கு எல்லாம் தெரிந்தே நடக்கிறதா? நாம் இவர்களை நல்வழிப்படுத்தியாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்

நாம் சொல்வதை இவர்கள் கேட்பார்களா?
சமத்துவம் என்றும் நாத்திகம் என்று பேசிக்கொண்டு நாம் போகாத ராமேஸ்வரம் எல்லாம் போகிறவர்கள் எல்லாம் கூட இந்த திருட்டு வழியை சரி என உபயோகிக்க நமக்கே அறிவுரை எல்லாம் சொன்னதை நாம் கேட்டிருக்கிறோம். அவர்கள் மிக்க அறிவாளிகள் என்று எண்ணிக்கொண்டிருந்தாலும் அவர்கள் தேர்வு செய்யும் வழி தவறானதாகவே இருக்கிறது..

நாம் நாமகவே இருந்ததால் என்றும் இறுமாந்திருக்கிறோம். நம்மால் இப்படி பயந்து கொண்டு ஓடி ஒளிய முடியுமா? காவலர்கள் நம்மிடம் கேட்பதில்லை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது கேட்கும் கேள்விகளிலும் வரும் பதில்களிலிருந்துமே யார் எப்படி என...

அ‍ஹிம்சை என்னும் ஆய்தம் எல்லாப் பக்கங்களிலும் கூர்மையானது பிடிக்கத் தெரியாதவர் பிடித்தால் சசிபெருமாளைப் போல பாதியில் போக வேண்டியதுதான். ஆனால் நமக்கு இன்னும் நிறைய தூரம் போக வேண்டிய தேவையிருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment