Saturday, August 27, 2016

பல் மருத்துவம் மற்றும் பற் பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை.

பல் மருத்துவம் மற்றும் பற் பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை.




விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியும் சாத்தப்பாடி பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து மாபெரும் பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தியது.

முகாமில் கலைக் கல்லூரியின் செஞ்சிலுவை சங்கம், இளம் செஞ்சிலுவை சங்கம்,தேசிய சேவைத் திட்டம் ஆகிய இயக்கங்கள் முன் நின்றன.

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜா.பேபிஜான் அனுமதியுடன் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர் என்.சரவணன் வழி நடத்தினார்.



முகாமை பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஆண்டியப்பன் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார்.கலை அறிவியல் கல்லுரியின் முதல்வர் டாக்டர் வி.சிங்காரம் வரவேற்று நெறிப்படுத்தினார்.

முகாமை பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரியின் 1200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பற்பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனைகளும் முன்னேற்பாட்டு பரிந்துறைகளும் செய்யப்பட்டன.

பல் மருத்துவக் கல்லூரியின் சார்பாக 15 மருத்துவர்கள் மாணவ மாணவியர்க்கு  பற்பரிசோதனை செய்தனர்.

நிகழ்ச்சியை கலைக்கல்லூரியின் பேராசிரியர்களான தேசிய சேவைத் திட்ட அலுவலர்கள் கே.சரவணன், கோபால்,யு. சங்கரி,சவுந்தர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்ந்த வி. சத்யமூர்த்தி,சி. நந்தினி, ஆகியோர் திறம்பட நடத்தினர்.



பல் மருத்துவக் கல்லூரியின் முகாம் அலுவலர் சுப்ரமணியம் தணிகாசலம் முகாமிற்கு ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்.



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment