Tuesday, August 16, 2016

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் சுதந்திர தின விழா: கவிஞர் தணிகை

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் சுதந்திர தின விழா: கவிஞர் தணிகை




இந்தியக் குடியரசின் 70வது சுதந்திர தின விழா விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் இனிதே நடைபெற்றது.

இதில் பல் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள்(சி.ஆர்.ஐ) கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.பேபிஜான் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் தமது குழந்தைகளை நல்ல முறாஇயில் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் நல்ல இந்தியக் குடிமக்களாக வளர்க்க வேண்டும் என்றும் இலஞ்சம், ஊழல், சுரண்டல் போன்றவைக்கு அவர்கள் இரையாகாமல் நேர்மையாக வளர்க்கப்பட்டால் நல்ல சமுதாயம் அமையும் என்றும் சுதந்திர தினச் செய்தி வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் எல்லா மருத்துவர்களும் தமது கடமையில் தவறாமல் நெறி முறையிலிருந்து பிறழாமல் எல்லா நோயாளிகளையும் கவனித்து சேவையாற்றுதல் பற்றியும் வலியுறுத்தினார்.

விழாவில் வாய் மற்றும் தாடை பல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் ரீனா பேபிஜான், டாக்டர் சரவணன், டாக்டர் கண்ணன், டாக்டர் அருண் Doctor Naren, Doctor Thangavel,  and others with-நிர்வாக அலுவலர்கள் பாபு முரளிதரன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அனைத்துத் துறை  சார்ந்த மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.



டாக்டர் சாயிகணேஷ் அனைவர்க்கும் இனிப்பு வழங்கினார்.விழாவின் ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.

இது நமது பதிவில் வெளியாகும் ஒரு அறிக்கை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment