Monday, August 15, 2016

விருது வழங்கும் விழா இனிதே நிறைவேறியது: இந்திய சுதந்திரம் ‍ 70க்கு விடுதலையும் அடிமையும் பிப்டி பிப்டி.(50க்கு 50):கவிஞர் தணிகை.

விருது வழங்கும் விழா இனிதே நிறைவேறியது: இந்திய சுதந்திரம் ‍ 70க்கு விடுதலையும் அடிமையும் பிப்டி பிப்டி.(50க்கு 50):கவிஞர் தணிகை.




 உலகின் மக்கள் பெருக்கத்தில் முதல் நாடு, ராக்கெட் ஏவுகணையில்  , இலஞ்ச ஊழலில், சுரண்டிலில்,அசுத்தத்தில், வாழ்க்கைத் தரமின்மையில், மாசுபடுதலில், நகரமயமாதலில்,உடல் ஆரோக்கியமின்மையில்,கற்பழிப்பில் கொலை கொள்ளையில்,வேலை இல்லாத் திண்டாட்டத்தில் முன்னணியில் உள்ள நாட்டில் விளையாட்டில் மட்டும் என்றும் பின்னணியே.நமது பொருளாதார உதவி பெறும் பிஜி நாடெல்லாம் ஒரு தங்கமாவது ஒலிம்பிக்கில் பெற நாம் சைபராக இருக்கிறோம். நமது பிரதமர் மோடி விளையாட்டில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜமப்பா என்கிறார்.




ஒரு நாள் லீவு, ஒரு கோட்டை கொத்தளப் பேருரை,ஒரு விருதுவழங்கும் விழா ஆகியவற்றுடன் இன்றைய 70 ஆம் சுதந்திர தின விழாவும் இனிதே நிறைவு பெற்றது.

என்ன சுதந்திரம் இங்கு இருக்கிறது என்றே தெரியாமலே 70 ஆண்டு ஓடி விட்டது. முன் உள்ள கட்சிக்காரர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் ஏமாற்றத் தெரிந்தோர்க்கும் இருக்கும் சுதந்திரம் ஏழைக்குத்தான் இல்லவே இல்லை.

ரிலையன்ஸ் அம்பானிக்கு ஒன்னேகால் இலட்சம் கோடி கடன் வங்கி கொடுக்கும், லலித் மோடிகளை தெரிந்தே விட்டு விடும் நாடோடியாக வேறு நாட்டில் தங்கச் சொல்லி பாதுகாப்பளிக்கும்.

விஜய் மல்லையாக்களை தெரிந்தே விட்டு விட்டு வங்கிப் பணத்தை வசூல் செய்ய முடியாமல் அவன் சொத்தை சொத்தை ஏலம் விட்டு எவருமே எடுக்கவில்லை என்னும் அதே நாட்டின் மிகப்பெரும் தேசிய வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா கல்லூரியில் படிக்கும் இளைஞர்க்கு படிக்க கொடுத்த சில இலட்சங்களை ரிலையன்ஸ் போன்ற தனியார் கம்பெனிகளிடம் விட்டு வசூலிக்க வைக்கும்...கல்லூரிக்கு படிக்க கடன் வாங்கும்போது அது தேசிய வங்கி வசூலிக்க  ரிலையன்ஸா? அடியாளா? குண்டர் படையா?

என்ன நாடு இது? எத்தனை விவசாயிகள் நாசமுற்றனர்? எத்தனை தொழிலாளர்கள் மடிந்து போயினர்?ட்ராக்டருக்கு கடைசி தவணை கட்ட முடியாதவனை மயிரைப் பிடித்து அடித்து இழுத்துச் செல்லும் நாட்டில் கடன் வாங்கி விமானக் கம்பெனி நடத்தியவனை மயிரைக்கூட தொட முடியவில்லை என்பது உண்மைதானே?

எந்த எந்த துறையில் நாடு முன் இருக்கிறது ? எதில் எல்லாம் பின் இருக்கிறது? இதை எப்படி சீரமைப்பது முன்னேற்றுவது என இன்னுமா எமது நாடோள்வாருக்குத் தெரியவில்லை 70 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது எனும்போதும்...

யார் முன் இருக்கிறார்களோ அவர்களுக்கான நாடு, வசதி, வாய்ப்பாகவே நாட்டின் எல்லா வளங்களும், நலங்களும் போய் விடுகின்றன. போய் விட்டன. இங்கு இல்லை என்றுமே சமத்துவம்.

பல 5 ஆண்டுத் திட்டங்கள், வரி விதிப்புகள், எல்லாமே எதற்கென்று தெரியாமலே காலம் போய் விட்டது. இப்போதுதான் ரெயில்வே வரவு செலவுத் திட்டம் இப்போதுதான் நாட்டின் தேசிய வரவு செலவுத் திட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது என செய்திகள்.

நாட்டில் ஒரு ரயிலை உரிய காரணங்களோடு நிறுத்த வேண்டுமென்றால் கூட அதற்கு குடியரசுத் தலைவருக்கு, பிரதமருக்கு எழுத வேண்டிய நிலை , நாட்டின் தலைநகருக்கு உரிய துறை சார்ந்தவர்களுக்கு என்னதான் எழுதினாலும் அரசு அசைந்து கொடுப்பதாகத் தெரியாத அசையாத அசைந்து கொடுக்காத அருகதையற்ற மக்களுக்கு சேவை நினைக்காத அரசுகள்.

குடிமகன்களாக டாஸ்மாக் என அரசே மதுபானக் கடை நடத்தி மக்களை மாற்றும் நாடு ப்யூஸ் மானுஸ் போன்ற ஒரூ சாமானியன் அல்லது சமூகப்பணியாளன் ஏன் இதை இப்படி செய்யக் கூடாதா ? நில அளவை செய்து பாலம் கட்டக் கூடாதா என்றால் அதற்கு எதிராக, மக்களுக்கு அவர் தம் நலனுக்கு எதிராக பணி செய்ய வந்த எந்திரஙக்ளை இயங்க தடை செய்ய முயன்றால் அவருக்கு சிறை அடி, மேலும் அவரை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என அறிக்கைகள்




மதுவிலக்குப் போராளி சசி பெருமாள் போன்றோர் குடும்பத்துக்கு நிதி உதவி இலட்சங்களில் அடித்து வாயடக்கம், கோவன் போன்ற பாடகர்களுக்கு சிறை, ஊடகங்களை திசை திருப்பி தாம் நினைத்தை மதுபான அடிமைகளை வைத்து சிறிதளவு வாக்குகளை  அதிகம் பெற்று அரசை நிலை நிறுத்திக் கொள்ளும் அரசுகள்,இனி உச்ச நீதிமன்றம் தமிழக முதல்வருக்கு எதிரான தீர்ப்பு வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் வழங்கும் என்கிறீர்கள்?

 மேலும் ஆள்வோருக்கும், பணத்தை ஆள்வோருக்கும் எப்படி வேண்டுமானாலும் நாட்டின் நீதியை மாற்றிக் கொள்ளும் நியதிகள் இலாகவங்கள்...இதைத்தான் நாம் சுதந்திரம் என்கிறோமா? பேசுகிறோம் உறைக்கச் சொன்னால் இருக்கும் சுதந்திரம் பறிக்கப் பட்டு அடிமைநாடாக இந்தியா ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததாக மாறி விடும். நமக்கும் எமக்கும் உமக்கும் இதுதான் என்றும் இங்கு சுதந்திரம்....எனவேதான் சொன்னோம் சுதந்திரம் 70லிம் இந்த இந்தியாவில் விடுதலை 50% அடிமையாய் இருக்க வேண்டியது 50% என.



மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகளான, உணவு, உடை, குடிநீர், மருத்துவம், உறையுள் , சுகாதாரம் போன்றவை வந்து சேரவே இல்லை.

எந்த எந்த துறைக்கு எப்படி முன்னற்றப் பணி செய்து நாட்டை முன்னேற்றம் செய்வது என செய்யாத நாடு. அப்படி சிந்திப்பாரை கருவறுக்கும் நாடு.

தனித் தனியாக ஒவ்வொரு துறையை தேர்ந்து பணி செய்திருந்தாலும் இன்று எல்லாத் துறைகளுமே தன்னிறவடைந்திருக்கும். நாட்டு மக்களும் நலம் பெற்றிருக்கும் உலகின் உன்னத நாடாக முதல் நாடாக மாறியிருக்கும். அப்படிப் பட்ட தியாகம் செய்த நாடு இன்று இது வரை துரோகிகளால் சோரம் போய்க் கொண்டிருக்கிறது.

நதி நீர் இணைப்பு பற்றி வெறும் வாயளவில் பேசி காலம் கெடுத்து வருகின்றன. மோடி குஜராத்தை 3 முறை ஆண்டவர், இந்தியாவின் ஆண்டவர் என்றெல்லாம் சொன்னார்கள். இவர் இப்போது அதெல்லாம் சகஜமப்பா, இதெல்லாம் சகஜமப்பா என்று வெறும் வார்த்தையாடி வெறும் பட்டியலை சுதந்திர தின உரையாக வாய் வீசிக் கொண்டிருக்கிறார்.

இன்றைய நாளில் ஒன்றே மட்டும் நாம் எப்போதும் சொல்வது அது: முன்னால் குடியரசுத் தலைவரும் தத்துவ மேதையுமான டாக்டர்.எஸ். இராதாகிருஷ்ணன் சொன்னது:

கட்டுப்பாடு இல்லாத விடுதலையும்
ஒழுக்கமில்லாத சுதந்திரமும்
தியாகமில்லாத சாதனையும்

ஒரு போதும் நன்மை விளைக்காது.

THERE IS NO FREEDOM WITH OUT RESTRICTION
THERE IS NO INDEPENDENCE WITH OUT DISCIPLINE
THERE IS NO ACHIEVEMENTS WITH OUT SACRIFICE
   BY: DR. S.Radha Krishnan
   Philosopher and the then President Of India.

இந்த மேற்சொன்ன வார்த்தைகள் இந்தியாவுக்கு இன்னும் பொருந்த...நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டே இருக்கிறது என சொல்லிக் கொண்டே...சென்று கொண்டே...


மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment